நடுகல் கல்வெட்டுகள் மீதான சொற்பொழிவு - தகவல்

21 views
Skip to first unread message

chithan yugamayini

unread,
Jun 9, 2009, 9:39:10 AM6/9/09
to மின்தமிழ்
வணக்கம்
அடையாறு தமிழ் சங்கம் முன்னெடுக்கும் மாதாந்திர க் கூட்டத்தில் இம்முறை,
சென்னை இந்திரா நகர் இளைஞர் விடுதியில் வைத்து, சனிக்கிழமை, 13-06-09
அன்று மாலை 6 மணிக்கு திரு. ர. பூங்குன்றன் நடுகல் கல்வெட்டுகள் என்கிற
தலைப்பில் உரையாற்றுகிறார். சென்னையில் உள்ள மிந்தமிழ் அன்பர்கள் கலந்து
கொள்ளலாம். சந்தேகம் இருப்பின் 9382708030 -ல் சித்தனைத் தொடர்பு
கொள்ளவும்
சித்தன்

நா.கண்ணன்

unread,
Jun 10, 2009, 12:23:28 AM6/10/09
to மின்தமிழ்
திரு. ர. பூங்குன்றன் நமக்கு வேண்டியவர்!
முதன் முதலாக அவரைப் பேரூர் தமிழ் கலைக்கல்லூரி நடத்திய கொங்குநாட்டுத்
தொல்லியல் கருத்தரங்கில் சந்தித்தேன்.
அதற்கு ஒரு வருடம் முன்தான் 'நொய்யலாற்று' தோல்லியல் சான்றுகளை
மடத்திலிருந்து ஆவணப்படுத்திக் கொண்டிருந்தேன்.
பூங்குன்றன் சான்றுகளுடன் நொய்யலாற்று களிமண் ஓடுகள் சங்கத்திற்கு
முந்தியது அல்லது சங்க காலத்தைச் சேர்ந்தது என்று பேசிக்கொண்டிருந்தார்.
அவரது கட்டுரையை வாங்கி அப்படியே நம் தளத்தில் பதிவு செய்தேன்.
அவர் மேலும் காட்சிக்குக் கொண்டுவந்திருந்த பல போட்டோக்களை என்னிடம்
மின்னாக்கம் செய்யக் கொடுத்தார்.
அவற்றுள் ஒன்றுதான் தமிழ் மரபு அறக்கட்டளையின் இலட்சினையாக உள்ளது. அது
சங்ககாலக்காதலர் நளினமுடன் நிற்கும் மோதிரப்பதிவு. ஒரு தங்க மோதிரத்துள்
இத்தனை அழகைக் கொண்டுவர முடியுமாவென வியந்தேன். மேலும் பல
மோதிரப்பதிவுகளை நம் முதுசொம் களஞ்சியத்தில் காணலாம்.
http://www.tamilheritage.org/old/monument/oodu/sangkam.html

அவரது அடையாறு பேச்சை பதிவு செய்து வெளியிட்டால் நல்லது.
'கடலோடி' நரசய்யா போன்ற பெரியவர்கள் இதற்கு உதவ வேண்டும்.
பூங்குன்றன் பேச்சு நிச்சயம் சுவாரசியமாக இருக்கும்.
அவரை மின்தமிழில் இணைத்துக் கொண்டால் இன்னும் நலம்!

நா.கண்ணன்

On Jun 9, 10:39 pm, chithan yugamayini <chithanka...@yahoo.co.in>
wrote:

kra narasiah

unread,
Jun 10, 2009, 12:48:22 AM6/10/09
to minT...@googlegroups.com
I have written about kodumanal in my book Kadal Vazhi Vanikam, where Noyyal figures! I thought the ring motif was given by Iravatham. Thats the motif for the book Iravathy got up in honour of Iravatham.
Noyyal north Bank had kodumanal and Wootz (actually this english word was derived from URUKKU in Tamil) iron was made there from the magnesite ore available in Chennimalai area.
This place was known from Augustus Caeser time.
I will attend the lecture.
Narasiah

--- On Tue, 6/9/09, நா.கண்ணன் <nka...@gmail.com> wrote:

நா.கண்ணன்

unread,
Jun 10, 2009, 5:08:46 AM6/10/09
to மின்தமிழ்
ஆம்! அந்த மோதிரத்தை முதலில் பார்த்தவர் ஐராவதம் என்று கேள்வி. நான்
மோதிரம் பார்ப்பதற்குள் அதை ஒரு ஷேக் வாங்கிக்கொண்டு போய்விட்டாராம்.
சொன்னார்கள். தமிழினி 2000 இலச்சினையும் இதுவே. ஆனால் அது கோட்டோவியமாக
இருக்கும். எனக்கு இம்மோதிரத்தின் அழகான போட்டோவைத் தந்தவர் பூங்குன்றன்.
அது தமிழக தொல்லியல் துறை சார்ந்தது என்பதால் சக சிப்பந்திகள் கொஞ்சம்
மறுப்புத் தெரிவித்தனர். ஆனால் பூங்குன்றன் நமது திட்டத்தின் திறம்
உணர்ந்து அவரிடமிருந்த அனைத்து போட்டோக்களையும் மின்னாக்கம் செய்யக்
கொடுத்தார். மிகவும் நல்ல மனிதர்.

க.>

On Jun 10, 1:48 pm, kra narasiah <naras...@yahoo.com> wrote:
> I have written about kodumanal in my book Kadal Vazhi Vanikam, where Noyyal figures! I thought the ring motif was given by Iravatham. Thats the motif for the book Iravathy got up in honour of Iravatham.Noyyal north Bank had kodumanal and Wootz (actually this english word was derived from URUKKU in Tamil) iron was made there from the magnesite ore available in Chennimalai area.This place was known from Augustus Caeser time.I will attend the lecture.
> Narasiah

N. Ganesan

unread,
Jun 10, 2009, 8:47:36 AM6/10/09
to மின்தமிழ்

On Jun 10, 4:08 am, நா.கண்ணன் <nkan...@gmail.com> wrote:
> ஆம்! அந்த மோதிரத்தை முதலில் பார்த்தவர் ஐராவதம் என்று கேள்வி. நான்
> மோதிரம் பார்ப்பதற்குள் அதை ஒரு ஷேக் வாங்கிக்கொண்டு போய்விட்டாராம்.
> சொன்னார்கள். தமிழினி 2000 இலச்சினையும் இதுவே. ஆனால் அது கோட்டோவியமாக
> இருக்கும். எனக்கு இம்மோதிரத்தின் அழகான போட்டோவைத் தந்தவர் பூங்குன்றன்.

குவெய்த் அரச குடும்ப சேய்க்களிடம் இருப்பதாக 10 ஆண்டு முன்
நாகசாமி சொன்னார்.

சதாம் உசேனிடம் போர் செய்து பிடிவாதமாக மீண்டும் குவைய்த் குறுநாடு
அமெரிக்காவால் உருவானது.
http://en.wikipedia.org/wiki/Gulf_War

அதன்பின் பிரிடிஷ் தொல்காப்பகத்தில் ஷேக்குகளின் தொகுப்பில்
(கலெக்‌ஷன்ஸ்) உள்ள முக்கியமானவற்றைக் காட்டினார்கள்.

கரூர்த் தமிழ்நாணயம் அங்கே காட்டப்பட்டது!

ஒவ்வொரு பருவமழைக் காலத்திற்குப் பின்னரும் இந்தியா முழுக்க
ஆற்றங்கரை, மணற்படுகைகள், ... காசுகள், சிறு சிற்பங்கள் வெளிப்படுகின்றன.
விளையாடு சிறார்கள் பொறுக்கி எடுத்து அந்தந்த ஊர் ஆசாரிமாரிடம் போகின்றன.
சிறந்தவை என்னவென்று பார்க்க பொற்கொல்லர்கள் - (சரித்திரம் தெரிந்தோர்
- நாணயவியல் அறிந்தோர்) விலை நிர்ணயம் ஆகிறது. பின்னர் எல்லாம்
மும்பை நாணய வணிகர்கள். பழமை, தரம், அருமை ... பற்றி விலை
படிப்படியாய் ஏறி ஐரோப்பா, அமெரிக்கா ... தனவந்தர்களிடமும்,
ம்யூஸியங்கலுக்கும்
விற்கப்படுகின்றன. சில இணையத்திலும் கூவி விற்கப்படுகின்றன :(

ஒரு நாட்டில் போர் என்றால் நஷ்டம் அதிகம். கம்போடியாவில்
தலையறுந்த ஹிந்து மற்றும் பௌத்த சிலைகள் லட்சக்கணக்கில் உண்டு.

5 $ க்கு அறுத்தது 5 மில்லியன் $ விலைக்கும் போனது.
கிளீவ்லாந்து ம்யூசியம் கையில் தாமரைப் பூவேந்தும் பத்மபாணி
ஈசுவரனை (பொதியிலில் வீற்றிருப்பவன்? ஒருவகை தட்சிணாமுர்த்தி)
4 மில்லிஒன் $-க்கு வாங்கியது.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Jun 10, 2009, 8:52:19 AM6/10/09
to மின்தமிழ்

On Jun 10, 7:47 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> On Jun 10, 4:08 am, நா.கண்ணன் <nkan...@gmail.com> wrote:
>
> > ஆம்! அந்த மோதிரத்தை முதலில் பார்த்தவர் ஐராவதம் என்று கேள்வி. நான்
> > மோதிரம் பார்ப்பதற்குள் அதை ஒரு ஷேக் வாங்கிக்கொண்டு போய்விட்டாராம்.
> > சொன்னார்கள். தமிழினி 2000 இலச்சினையும் இதுவே. ஆனால் அது கோட்டோவியமாக
> > இருக்கும். எனக்கு இம்மோதிரத்தின் அழகான போட்டோவைத் தந்தவர் பூங்குன்றன்.
>
> குவெய்த் அரச குடும்ப சேய்க்களிடம் இருப்பதாக 10 ஆண்டு முன்
> நாகசாமி சொன்னார்.
>
> சதாம் உசேனிடம் போர் செய்து பிடிவாதமாக மீண்டும் குவைய்த் குறுநாடு

> அமெரிக்காவால் உருவானது.http://en.wikipedia.org/wiki/Gulf_War


>
> அதன்பின் பிரிடிஷ் தொல்காப்பகத்தில் ஷேக்குகளின் தொகுப்பில்
> (கலெக்‌ஷன்ஸ்) உள்ள முக்கியமானவற்றைக் காட்டினார்கள்.
>
> கரூர்த் தமிழ்நாணயம் அங்கே காட்டப்பட்டது!
>
> ஒவ்வொரு பருவமழைக் காலத்திற்குப் பின்னரும் இந்தியா முழுக்க
> ஆற்றங்கரை, மணற்படுகைகள், ... காசுகள், சிறு சிற்பங்கள் வெளிப்படுகின்றன.
> விளையாடு சிறார்கள் பொறுக்கி எடுத்து அந்தந்த ஊர் ஆசாரிமாரிடம் போகின்றன.
> சிறந்தவை என்னவென்று பார்க்க பொற்கொல்லர்கள் - (சரித்திரம் தெரிந்தோர்
> - நாணயவியல் அறிந்தோர்) விலை நிர்ணயம் ஆகிறது. பின்னர் எல்லாம்
> மும்பை நாணய வணிகர்கள். பழமை, தரம், அருமை ... பற்றி விலை
> படிப்படியாய் ஏறி ஐரோப்பா, அமெரிக்கா ... தனவந்தர்களிடமும்,
> ம்யூஸியங்கலுக்கும்
> விற்கப்படுகின்றன. சில இணையத்திலும் கூவி விற்கப்படுகின்றன :(
>

இசுலாமியர், முகலாயர் கலைகள், காசுகள், சாஷ் என்னும் பட்டுகள், ஆடைகள்,
சித்திரங்கள், ... எல்லாம் மத்திய கிழக்கு ஷேய்க்குகள் வாங்குவர்.

இப்பொழுது இந்திய கலை பௌத்த கலை என்றால் ஜப்பானிலும் விலைபோகிறது.
பங்களதேஷில் உள்ளது முழுக்க தோண்டி எடுக்கப்பட்டு விலையாகிறது.
இந்த வியாபாரங்களில் எல்லாம் அந்தந்த அரசாங்க மந்திரிகள், அதிகாரிகளும்
தொடர்புண்டு என்பர். சில பேர்களை என்னிடம் நாகசாமி சொல்லியுமிருக்கிறார்.

N. Ganesan

unread,
Jun 10, 2009, 10:04:33 AM6/10/09
to மின்தமிழ்

On Jun 9, 8:39 am, chithan yugamayini <chithanka...@yahoo.co.in>
wrote:


சித்தன்,

பூங்குன்றனை நான் கேட்டதாகக் கூறவும். 30/40 ஆண்டுகள்
கோவையில் வசிப்பவர். அவருக்குக் கல்வெட்டுகள், செப்பேடுகள்
அத்துபடி. பூங்குன்றன், வேதாச்சலம் (மதுரை), ... போன்றோரின்
அனுபவங்கள் பதிவு செய்யப்பட வேண்டியவை.
இன்றைய இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள், ..
தொடப்ர்புகொண்டு போட்டோக்களை வாங்கி,
அவர்கள் சொல்வதை எழுதி அவரிடமே காட்டிய பின்
இணையமேற்றலாம். 10,000 கணக்கில் சிற்பங்கள், ..
ஒளிப்படங்கள் வேதாச்சலம் போன்றோரிடம் இருக்கின்றன.

ஓய்வு பெற்றுவிட்டார்கள். அவர்கள் கணினிக்கு வரப்போவதில்லை.
பதிவை அவர்களிடம் நீண்டநாள் தொடர்புடன்
தொண்டுள்ளம் கொண்டோர்தான் ஆற்றமுடியும்.

------

கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் ஒரு கிராமத்து நதி
என்னும் கவிதை சாகித்திய அகாதமி பரிசு பெற்றது.
ஒரு கிராமத்து நதியில் சிற்பியின் சொந்த ஊர், ஆழியாறு போன்றன
விவரிக்கப்படுகின்றன. பாரதியார் பல்கலையின் தமிழ்த் துறைத்
தலைவராகப் பணியாற்றியவர் சிற்பி.
ரோமானியக் காசு போல, சேர மன்னன் வெளியிட்ட காசுகள் சிற்பி
தோட்டத்தில் கிடைத்தன. தொல்லியல் அறிஞர் ஆர். பூங்குன்றன்
பார்வையிட்டதைக் கவிதையாக அந்நூலில் வடித்திருக்கிறார்.

அக் காசு:
http://www.hinduonnet.com/fline/fl2013/stories/20030704000207100.htm

--------

ஒரு முறை தேவ் சமத்தூர் வாணவராயர்களைப் பற்றிக் கேட்டார்.
சங்கர் நல்ல architectural historian. சென்ற வாரம் திருமணம் ஆனது
- வேட்டைக்காரன்புதூர் முத்துமாணிக்க மாமன் பேர்த்தி.

ஒருமுறை ர. பூங்குன்றனை அழைத்துப்போய் சமத்தூர் அரண்மனை
பூஜை அறையில் உள்ள செப்பேட்டைப் படிக்க வைத்தோம்.
அதன் வாசகங்களைப் பிறகு தருகிறேனே.

சமத்தூர் அரண்மனை எஜமான் படத்தில் வரும். வாணர் குடி
பழைய ஒன்று. தமிழ் இலக்கியம் நெடுகக் குறிப்பிடப் படுகின்றனர்.
திருப்பதி பெருமாள் குலதெய்வம் அவர்களுக்கு,
காஞ்சியில் ஆண்டு, பாண்டிநாட்டில் பாண்டியரை வீழ்த்தினோர்.
மாவலி வாணன் கல்வெட்டு (கி.பி. 15-ஆம் நூற்றாண்டு)
ஸ்ரீ வில்லிபுத்தூரில் உள்ளது. பெருமாளே ஆண்டாளிடம்
மன்னிப்புக் கேட்டு எழுதும் பிரணய பத்திரிகை.
பாண்டிநாட்டில் ஆட்சி முடிய, பழனி வந்து தங்கி,
பாண்டியர் சேனாபதியாய் இருந்த கோப்பண்ண மன்றாடிகளிடம்
அபயமாகி சம்த்தூர் வந்து சேர்ந்து சில நூற்றாண்டுகள் ஆகிவிட்டன.

களந்தைக் கோப்பணன் சிங்களத்தை வென்ற பாண்டியப் படைகளுக்குத்
தலைமையாய் இருந்தான். “சிங்களர் பம்பிட, தென்னர் களிக்க ...”
என்று நாணிக்கண் புதைத்தல் ஒருதுறைக்கோவைச் செய்யுள் உண்டு.

அப் புரவிபாளையம் பற்றிய செய்தி, சங்கர் வாணவராயர்:
http://www.hinduonnet.com/thehindu/mp/2006/08/19/stories/2006081901740300.htm

வச்சணந்திமாலை களந்தைக் கோப்பணர்கள் ஆதரவில் உருவானது.
சேர நாட்டின் வரலாறாம் பதிற்றுப்பத்தைக் காப்பாற்றி உரை எழுதவைத்த
குடும்பம்,
உவேசா குறிப்பிட்டுள்ளார்.

அன்புடன்,
நா. கணேசன்

Chandra sekaran

unread,
Jun 10, 2009, 11:52:37 AM6/10/09
to minT...@googlegroups.com
சனிக்கிழமை, 13-06-09
> அன்று மாலை 6 மணிக்கு திரு. ர. பூங்குன்றன் நடுகல் கல்வெட்டுகள் என்கிற
> தலைப்பில் உரையாற்றுகிறார்.

கட்டாயம் கலந்து கொண்டு ஒலிப் பதிவு செய்கிறேன். படங்களும் இணைத்து சர்வரில் ஏற்றியபின் சுபா அவர்களுக்கு மடலிடுகிறேன்.

சந்திரா.

--
To save culture & heritage visit:
www.conserveheritage.org
http://templesrevival.blogspot.com
http://reachhistory.blogspot.com
join http://groups/yahoo.com/temple_cleaners

to do your bit to uplift the society visit
www.dreamindia2020.org

annamalai sugumaran

unread,
Jun 10, 2009, 12:48:51 PM6/10/09
to minT...@googlegroups.com

நானும் கலந்து கொள்ள  ஆவலுடன் இருக்கிறேன்.
  திரு .பூங்குன்றனின் பேச்சு மின் செய்தி மாலையில் விபரமான செய்தியாக இடம்பெறும்
நண்பர்களை காணவும் , மதிப்பு வாய்ந்த ஒரு பேச்சை கேட்க்கவும் , நானும் வர எண்ணி இருக்கிறேன் .
அன்புடன் ,
ஏ சுகுமாரன்



 

2009/6/10 Chandra sekaran <plastic...@gmail.com>




--
A.Sugumaran ,
PONDICHERRY INDIA
MOBILE 09345419948

இதுவரை இல்லாததை அடைய எண்ணினால்
இது வரை செய்யாததை செய்யவேண்டும் !

N. Ganesan

unread,
Jun 10, 2009, 3:51:49 PM6/10/09
to மின்தமிழ்

On Jun 10, 10:52 am, Chandra sekaran <plasticschan...@gmail.com>
wrote:


> > சனிக்கிழமை, 13-06-09
> > > அன்று மாலை 6 மணிக்கு திரு. ர. பூங்குன்றன் நடுகல் கல்வெட்டுகள் என்கிற
> > > தலைப்பில் உரையாற்றுகிறார்.
>
> கட்டாயம் கலந்து கொண்டு ஒலிப் பதிவு செய்கிறேன். படங்களும் இணைத்து சர்வரில்

சர்வரில் = வழங்கியில்

> ஏற்றியபின் சுபா அவர்களுக்கு மடலிடுகிறேன்.
>
> சந்திரா.
>
> --
> To save culture & heritage visit:www.conserveheritage.orghttp://templesrevival.blogspot.comhttp://reachhistory.blogspot.com

> joinhttp://groups/yahoo.com/temple_cleaners

Subashini Tremmel

unread,
Jun 12, 2009, 3:59:47 AM6/12/09
to minT...@googlegroups.com
உங்கள் ஆர்வத்திற்கு நன்றி சந்திரா. இவ்வகை உரைகளை நேரில் சென்று இந்த நிகழ்வில் பங்கு கொள்ள இயலாத பலரும் கேட்டு பயன்பெறும் வகையில் நமது வலையகத்தில் நாம் சேர்த்து வைக்க வேண்டும். சித்தன் அவர்களிடமும் இந்த பதிவு பற்றி சொல்லியிருக்கின்றேன்.  புகைப்படங்கள் எடுக்க முடிந்தால் (3 போதும்)  அதனையும் சேர்த்து எனக்கு அனுப்பிவையுங்கள்.
 
அன்புடன்
சுபா

 
2009/6/10 Chandra sekaran <plastic...@gmail.com>

chithan

unread,
Jun 12, 2009, 5:09:22 AM6/12/09
to மின்தமிழ்
வணக்கம் சுபா
நாள்தோறும் எனதார்வம் கூடிக்கொண்டே போகிறது. சுகுமாரன் அவர்களும்
வருவதாகவும் , இரவு சென்னையில் தங்கி மறுநாள் காலை யுகமாயினியின்
இலக்கியக் கூடலில் கலந்து கொள்ளுவதாகவும் தொலைபேசியில் தெரிவித்தார்.
நா.கணேசன் ஐயா சொன்னதை அவசியம் தெரிவிக்கிறேன்.சந்திரசேகரன் போன்ற
நண்பர்களை நேரில் காண்பதற்கான வாய்ப்பு.அல்ல்வா? மறவன்புலவு
சச்சிதானந்தன் ஐயாவும் வருவதாகக்கூறினார். அடையாறு தமிழ்ச் சங்கத்திற்கு
நன்றி
சித்தன்

Reply all
Reply to author
Forward
0 new messages