ஆலமரம் >>> கல்லால மரம்

1,185 views
Skip to first unread message

N D Logasundaram

unread,
Jan 7, 2018, 7:27:11 AM1/7/18
to mintamil, vallamai, thamizayam, தமிழ் மன்றம், podhuvan sengai, Maravanpulavu K. Sachithananthan, Banukumar Rajendran, ara...@gmail.com, Vasudevan Letchumanan, SivaKumar, Seshadri Sridharan, muthum...@gmail.com, Raji M, Suresh Kumar
​​
தமிழ்நாட்டில் கல்மரங்கள் .......ஒரு சிறு குறிப்பு என்பதன் தொடராகவும் கொளளலாம்  
ஜெய்சங்கர்  ஜகந்நாதன் தன கருத்தை விரிவு படுத்தலாம் படம் முதலியவற்றுடன்
 
​​அன்பின் சிங்கனெஞ்சன் >>>>>>> ஆலமரம் >>> கல்லால மரம் 

இதுபற்றி  பல ஆண்டுகளுக்கு முன் ஓர் இழையில் வைத்திருந்த கருத்தையே மீண்டும் 
வைக்கின்றேன் அப்போது திரு நாக கனேசனார் மறுத்திருந்தது  இழை பெருகியது நினைவு 

ஆல்  எனும் சொல்லிற்கு நீர் எனபது பொருள் ஆலப்பாக்கம் ஆலந்துறை ஆலந்தூர் ஆலப்புழை
போன்று பற்பல இடப்பெயர் வழங்குகின்றதோ அங்கெல்லாம் நல்நீர் நிலை இருக்கும் ஆல் அமர்ந்தாள்
கோயில் எனும் ஓர் கோயில் இன்றும் பழமையான மயிலாப்பூ ஏரிக்கரையில் மேட்டின்மேல் தான் உள்ளது 
 ஆலமந்தா  கோயில் என்கின்றனர்  சரியானது ஆல் அமர்ந்தாள் (ஏரிக்கரையில் மேல் அமர்ந்தாள்) 
 ஆலமரத்தின் கீழே அமர்ந்தாள்  எனபதுஅல்ல  ஏனெனில்ஆல்  = நீர்  ஏரிக்கரையில் இருந்ததால் 
இப்படித்தான் மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள் எழுதியுள்ளார் ஆலங்கட்டி மழை ஆலவட்டம் 
(வா னத்தில் சூரியன் சந்திரை சுற்றி தோன்றும் நீர்த்துளி (மேக)  வட்டம் எனும் சொற்களில்
  ஆல்  நீரே  ஆவது அறிவீர் 

எப்போதும் நீர் மலிந்து நின்று மண் வாகு  மிக இளகியாதாக இருந்தால் அங்கும் வளரு ரம் தகுதி மரம்  தன
 பரிணாமக்கொள்கையால் அடி மரத்தினின்றும் தூரத்தயே தாங்கிப்பிடிக்க விழுது எனும் சினை யை வளர்த்து 
கொண்டுள்ளது இது ஓர் வகை ARIAL ROOTS தாழை ஆலாத்தி (mangrove) இவைகளுக்கும் ARIAL ROOTS  சாய்மான
மாக முட்டுக்கொடுத்து  தாங்கிப்பிடிக்க  தாங்கும்  வேர்கள் அடி  மரத்திலிருந்து  காற்றில் சென்று மண்ணி 
னைப் பற்றுவது அதாவது ஆலம்=நீர்  நடுவேயும் வளரும் மரம் ஆலமரம் ஆகியது

 இணையத்தில் காணப து எல்லாம் உண்மையல்ல பாருங்கள் ஓர் எடுத்துக்காட்டு யாரும் துனக்கு தெரிந்ததை
காய் கால் மூக்கு வாய் என வைத்து ஏழு தி விடலாம் படத்தில் கணபது  இது ஓர் ஆலமரமா? அரச மரம்தானே 

Inline image 1 Inline image 2

ஆலமர வகையில் பலவிதம் உண்டு அத்தியும் அரசமரமும் ஓர் சாதி அவ்வளவே கம்படியா அங்கோர்வாட் 
கோயிலை லளைத்துள்ளது ஓர் வகை ஆலமரம் இதன் வகை வேறாகுமாம் நம்மூரிலும் சில பனை மரங்களை
 சுற்றி வளைத்துப்பிடித்து வளர்வதும் கண்டுள்ளோம் 

கல்லாடை என்றால் சிவந்த நிற ஆடை மடத்து சாமியார்கள் அணியும் ஆடை நிறம் ஏறக்குறைய சிவப்பு 
கல்லாடை புனைந்தருளும்  காபலியைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே" அப்பரடிகள் 
சிவன் கல்லாடை  அணிந்தவன் saffron robe  என்பது ஓர் தேவாரம் கல்லால் கீழிருந்தான் எனபதும் மற்றோர் தேவாரம்  

புவியியலிலேயே மிக்க வல்லவர் ஆகிய உங்களுக்கு நான் கா ட்டத்தேவையில்லை உலகத்தில் உள்ள மலைகளின்  
கற்கள் இயல்பாக்க காணும் நிறம் சிவப்பு பாசி படியாத நிலை அதாவது  பெரும்பாலும்  இதுவே தமிழில் கல் எனும்
 சொல்லால் குறிப்பி டப்படும்  கல்லாடை  எனும் சொல்லிலும் சிவந்த ஆடை எனத்தான் பொருள் அதே சிவந்த நிற
 பழம் காய்க்கும் மரமும் கல்லால மரம் ஆயது அவ்வளவே
 கல்லாறு என்ற இடத்தும் சிவந்த நீரை கொணரும் ஆறு ஆகும் காவிரி க்கு பொன்னி எனும் பெயருண்டு ஏனெனில்
 மழைபெய்த வுடன் வரும் புது வெள்ளம் பசும்பொன் ( மஞ்சளாக) காணப்பதால் வங்காளத்தில் காபேரி எனும்
 சொல்லிற்கு பொருள் மஞ்சள் நிறமாம் kABERI MUKHERJEE ஓர் பழம் வங்காள நடிகை  திபெத்திய மங்கோலியர்
 மஞ்சள் நிறத்தவர் சீனாவில்  ஓடும் ஓர் ஆற்றினுக்கு வெள்ளம் மஞ்சளாக காண்பதால் மஞ்சளாறு என்பதே பெயராம் 

ஆக கல்லாலமரம் என்றால் கல் எனும் சொல்லின் பொருள்வழி சிவந்த நிற  பழங்களைக்காய்க்கும் ஆலமரம் 
சிவந்த நிறம் அல்லாத  கல் கருங்கல் ஆயது கொண்டு அறிக செங்கல்லில் செம்மை என்பது பொருள்
செம்மொழி என்றால் சிவப்பு நிற  மொழி அல்ல 





 1918 களில் தி நகர் எனபுது நகரம்  அமைத்தனர் 1967-68 ல் அண்ணா அமைத்ததுபோல்  அதாவது 
இந்நாளைய தியாகராயநகர் அக்காலத்து பெரிய ஏரியாக இருந்தது இன்நாளைய அண்ணா
சாலை தான்  கிழக்கு கரை இன்றும் மாமபலத்தில் மேற்கு எரிக்கரைத்தெரு உள்ளது அது  மின்சாரரயில் தடம்
 மேற்கு அப்போது ஏரியின் மேல் கோடியில் கோடம்பாக்கம் மாமபலம் தொடர்வண்டிப்பாதை அமைத்தனர் 
 நீதிக்கட்சியாட்சிக்கு வந்தபோது முழு ஏரியையும் மக்கள் வாழு குடியிருப்பு பகுதியாக மாற்றினார் 
நடுவில் பூங்கா 3 கிளைகள் ஒன்று ஜெமினி னமற்றோன்று நேர் கிழக்கு மயிலை நோக்கி  3 வது நந்தனம் 
நோ க்கி இங்குள்ள 200 + தெருக்களின் பெயர்கள் யாவும் நீதிக்கட்சியினருடையதே 

நூ த லோ சு
மயிலை
ஊ 

2018-01-07 7:50 GMT+05:30 Singanenjam Sambandam <singa...@gmail.com>:
கல்லால மரம் பற்றி நான் ஏதும் அறியேன். ஓரிரு வரிகள் எழுதுங்கள். 

ஆனால் , இது கல்மரமாக இருக்க வாய்ப்பில்லை. நம் நாட்டில் இதுவரை அறியப்பட்ட கல்மரங்கள் அனைத்துமே கிடைநிலையிலேயே கிடைத்திருக்கின்றன. அதிலும் கிளைகளுடன் எதுவுமே இல்லை. ஆதலின் கல்லால மரம் , கல்மரமாக இருக்க இயலாது.



2018-01-06 17:08 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:
நம் புராணங்கள் தட்சிணாமூர்த்தியை கல்லால மரத்தின் அடியிலிருந்து உபதேசிப்பதாகக் காட்டுகின்றன.
கல்லாலமரம் =???
நீங்கள் சொல்லும் கல்மரத்துடன் தொடர்புடையதா ?
தெரியவில்லை.
கண்மணி 

2018-01-06 11:55 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:
தெளிவு படுத்தியமைக்கு நன்றி திரு.சம்பந்தன் அவர்களே .
கண்மணி 

2018-01-06 8:58 GMT+05:30 Singanenjam Sambandam <singa...@gmail.com>:

நன்றி

சதுரகிரி, கரிவலம் வந்த நல்லூர், மதுரை, திருநெல்வேலி போன்ற திருக்கோவில்களின் இலிங்க வடிவங்கள் பற்றி அறிந்தேன் , மகிழ்ச்சி. இவையெல்லாம் கள்ளி, கடம்பம், மூங்கில் போன்ற மரங்களின் / புதர்களின் அடிப்பாகமாக இருக்க வாய்ப்புகள் உண்டு. ஆனால் இவை கல் மரங்கள் ஆகா.

Petrification எனும் நிகழ்வின் போதே மரம் கல்லாக மாறுகிறது.(Petra என்றல் கல் அல்லது பாறை என்று பொருள் -   Petra oleum (oil)) .கல்மரங்கள் படிவப்பாறைகளில் மட்டுமே உருவாகும். நீங்கள் குறிப்பிட்டுள்ள நான்கு இடங்களில் எந்த இடத்திலும் படிவப் பாறைகள் (Sedimentary rocks) இல்லை. எனவே இங்குள்ள இலிங்கங்கள் கல்மரங்கலாக இருக்க வாய்ப்பில்லை. மாறாக மரங்களின் / புதர்களின் அடிப்பாகமாக இருக்க வாய்ப்புகள் உண்டு.

Siliconisation என்பது தவறு. சிலிகா வேறு, சிலிகான் வேறு. சிலிசிஃபிகஷன் என்ற சொல் உண்டு ; ஆனால் அதன் பொருள் வேறு. கல்லாய் சமைதல் என்பதை Petrification என்றுதான் எழுத வேண்டும்.

வணக்கம். 

மாற்று கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.


2018-01-05 17:50 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:
திரு.சம்பந்தன் அவர்களிடம் தெளிவிற்காக கேட்கும் ஐயம் இது.
நம் கோயில்களில் உள்ள சுயம்பு லிங்கங்கள் ---மரங்களின் படிவங்கள் தானே ?கல்மயமான (siliconisation)மரத்துண்டுகள் வடிவத்தால் லிங்கமாக இருப்பின் அவை வழிபாட்டிற்குரியன என்பது  நம் பண்பாடு.அதனால் அவற்றைப் பற்றி புராணங்கள் தோன்றி விட்டன. 
எடுத்துக் காட்டாக ---சதுரகிரி மலையிலுள்ள மகாலிங்கம்
                                                      "சதுரகிரி மலையோரம் சாஞ்சிருக்கும் திருகுகள்ளி ----திருகுகள்ளிப் பூவெடுக்க திரிஞ்சேனடி சிலகாலம் "---சித்தர் பாடல் . 
அது மரத்துண்டின் படிவம் என்று புரிந்து பாடிய பாடல் தானே இது.
ஏனென்றால் ---மகாலிங்க மலைக்கு நேரில் சென்று பார்த்த போது தான் பாடலடியின் முழுப் பொருளும் புரிந்தது.அந்த லிங்கமே சாய்ந்து தான் உள்ளது.
அது சாய்ந்து வளர்ந்திருந்த ஒரு மரத்தின் படிவம்---அதை அவ்விடத்திலிருந்து நீக்கவும் முடியாது.---அதுகள்ளிமரத்தின்படிமம்என்றுஅனுமானித்திருந்தேன் 

கரிவலம் வந்த நல்லூரில் இருக்கும் சுயம்பு லிங்கம்---ராஜபாளையத்திலிருந்து சங்கரன்கோயில் செல்லும் வழியில் இவ்வூர் உள்ளது.
இந்த லிங்கத்தின் தனித்தன்மை என்னவென்றால் ---நெற்றிப் பகுதியில் வெண்மையாக பொட்டு வைத்தது போல் ---இயற்கையாக விளைந்திருக்கும் 

மீனாட்சி அம்மன் கோவிலில் இருக்கும் ஸ்வாமி சந்நிதியின் லிங்கம் ---கடம்பமரத்தின் படிவம் என்றுதானே கருதுகின்றனர் (ஏ .வி .ஜெயச்சந்திரன் -The Madurai Temple Complex)இந்த லிங்கத்தை அவ்விடத்திலிருந்து அகற்ற முடியாது என்பதால் தான் அதன் கருவறை சில நூறறாண்டுகள்  பூட்டப்பட்டு வெளியே உள்ள முதல் திருச்சுற்றில் ஒரு போலி லிங்கத்தை வைத்து ஏமாற்றி பிற சமயத்தாரிடம் இருந்து காப்பாற்றினர் .கடம்பவனக் காட்டில் கண்டுபிடிக்கப்பட்ட லிங்கம் என்று மதுரைத் தலபுராணம் கூறுகிறது.

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் உள்ள லிங்கம் ---மூங்கில் காட்டில் கண்டு வழிபடப்பட்ட லிங்கம்.---தலபுராணம் அப்படித்தானே சொல்கிறது

ஒருவேளை நீங்கள் சொல்லும் கல்மரங்களினின்று இவை வேறுபட்டவையா?.
கண்மணி 

2018-01-05 15:39 GMT+05:30 Singanenjam Sambandam <singa...@gmail.com>:

தமிழ்நாட்டில் கல்மரங்கள் .......ஒரு சிறு குறிப்பு

(பாகம்  – 1 : அரியலூர் – பெரம்பலூர் – திருச்சி பகுதி)

கல்மரம் என்பது ஒரு தொல்லுயிர் எச்சம் (FOSSIL). மரம் எப்படிக் கல்லாக மாறுகிறது ? சாதரணமாக மரம் மண்ணில் புதையுண்டு    போகும்போது, மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளால் அவை மட்கிப் போகும் வாய்ப்புகளே அதிகம். மாறாக, அந்த மரம் புதையுண்ட இடத்தில் மேலும் மேலும் படிவங்கள் படியும் போது அதனால் ஏற்படும் அழுத்தம் மற்றும் வெப்பம் காரணமாக மரம் தகன நிலைக்கு உட்பட்டு குமைந்துபோய் கரியாக மாறக்கூடும். நிலக்கரி, பழுப்பு நிலக்கரிப் படிவங்கள் இப்படித்தான் உருவாகியுள்ளன. இதனை CARBONAISATION அல்லது கரியாக மாறுதல் எனக் குறிப்பிடலாம். மூன்றாவதாக மண்ணில் புதைந்த மரம் மட்கிப்போகும் முன்பே  அந்த மரத்திலுள்ள செல்களின் இடைவெளிகளிலும், செல் அடுக்குகளின் இடைவெளிகளிலும் , நிலநீர் புகுந்து விடுகிறது. அந்த நீரில் கரைந்துள்ள சிலிகா அந்த இடைவெளிகளை ஆக்கிரமித்து தாவரப் பொருளான செல்லுலோசை இடமாற்றம் செய்து விடுகிறது. இந்த நிகழ்வின் போது மரத்தின் அமைப்பு உருக்குலையாமல் அப்படியே காப்பாற்றப் படுகிறது. மரம் கல்லாக சமையும் இந்நிகழ்வு “PETRIFICATION” (PETRA என்றால்  பாறை என்று பொருள்) என்று அழைக்கப்படுகிறது. நிலநீரில் கரைந்துள்ள கனிமங்களின் தன்மைக்கேற்ப கல் மரத்தின் நிறம் மாறுபடுகிறது.

கல்மரம் உள்ளிட்ட பலவகையான தொல்லுயிர் எச்சங்கள் அரியலூர், விருதாச்சலம், புதுச்சேரி, திருப்பெரும்புதூர், சிவகங்கை போன்ற பகுதிகளில் நெடுங்காலமாகவே  கிடைத்து வருகின்றன. நம் முன்னோர்கள் நிச்சயமாக இவற்றைக் கண்டிருப்பார்கள். ஆனால் இவற்றைப் பற்றியக் குறிப்புகள் நமக்குக் கிடைக்கவில்லை. அரியலூர் மாவட்டத்தில் வாரணவாசி என்று ஒரு கிராமம். வாரணம் என்றால் யானை; சோழ மன்னர்களின் யானைப்படை இங்கேதான் இருந்தது; அதனால்தான் இந்தப் பெயர் என்று சிலர் கருதுகிறார்கள் . மாறாக, வாரணம் என்றால் கடல்; கடலில் வாசம் செய்யும் உயிரினங்களின் படிமங்கள் இங்கே உள்ளதால் இது வாரணவாசி என்று அழைக்கப்படுகிறது என்பாரும் உளர். இதைத் தவிர இலக்கியங்களிலோ  அல்லது வரலாற்று செய்திகளிலோ தொல்லுயிர் எச்சங்கள் பற்றிய குறிப்புகள் இல்லை.

 1840 ஆம் ஆண்டி வெளிவந்த MADRAS JOURNAL OF LITERATURE AND SCIENCE (Vol: 12) எனும் இதழில், ‘Observations on the fossilised beds near Pondicherry and the district of South Arcot’ எனும் தலைப்பில் C.T, Kaye எனும் அறிஞர் எழுதியுள்ள கட்டுரையில் தன்னிடம் திருச்சி பகுதியிலிருந்து கிடைத்த கல்மரத்துண்டு ஒன்று இருப்பதாக மகிழ்சசியோடு குறிப்பிடுகிறார். இதுதான் இந்தப் பகுதியில் கிடைக்கும் கல்மரங்கள் பற்றிய முதல் பதிவு.

இந்திய புவியியல் துறை 1851 ஆம் ஆண்டு துவங்கப்பட்டாலும் ஏழு ஆண்டுகள் கழித்துதான் தமிழகத்தில் முறையான புவியியல் ஆய்வுகள்          துவங்கின. தொல்லுயிர் எச்சங்கள் அறியப்பட்ட பகுதிகளான புதுச்சேரி, விருதாச்சலம், அரியலூர் போன்ற பகுதிகளில் Henry Francis Branford அவர்களின் தலைமையின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இவரது ஆய்வறிக்கை இந்திய புவியியல் ஆய்வுத்துறையின் நினைவேடுகளில் (Memoirs of Geological Survey of India , Vol. IV 1862) வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில், சாரதாமங்களம், கருடமங்களம், ஆணைப்படி போன்ற பகுதிகளில் கல்மரத்துண்டுகள் கிடைப்பதாகக் குறிப்பிடும் Blandford, மழவை பகுதியில் சுமார் எட்டைரை அடி நீள கல்மரத்துண்டு ஒன்றைக் கண்டதாகவும் ஆனால் இது சுமார் 25 அடி நீளமும் மூன்றடி விட்டமும் கொண்ட  கல்மரத்தின் எஞ்சிய பகுதியே என்றும் எழுதியிருக்கிறார். தொடர்ந்து, வேறொரு பகுதியில் சுமார் 6௦ அடி  நீளமுள்ள கல்மரம் ஒன்றினைக் கண்டதாகவும் இவர் பதிவு செய்துள்ளார். இவர் குறிப்பிடும் இந்த 6௦ அடி நீளமுள்ள மரம் எங்கே உள்ளது என்று தெரியவில்ல.

இந்திய புவியியல் ஆய்வுத்துறைக்கு தலைமையேற்ற முதல் இந்தியர் எனும் பெருமை பெற்ற எம். எஸ். கிருஷ்ணன் தனது Geology of India and Burma (1942) எனும் நூலில் சாத்தனூரில் தான் கண்டுபிடித்த கல்மரம் 86 அடி நீளமும் 56  அங்குல விட்டமும் கொண்டிருந்ததாகக்  குறிப்பிடுகிறார். கருடமங்களம் கிராமத்திற்கு தென்கிழக்கே நிறைய கல்மரத்துண்டுகள் கிடைப்பதாக அவர் பதிவு செய்திருக்கிறார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு, சாத்தனூரில் இருந்து  சுமார் 17 கி.மீ. தூரத்தில் , திருச்சி மாவட்டம், லால்குடி தாலுக்காவில் தப்பை கிராமத்திற்கு வட கிழக்கே (வரகுப்பை கிராமத்திற்கு தெற்கே), 1.24 மீ.  நீளமும் 80 செ.மீ. விட்டமும் கொண்ட கல்மரம் ஒன்றை இந்திய புவியியல் ஆய்வுத்துறையைச் சேர்ந்த புவியியலாளர்கள்  கண்டு பிடித்திருக்கிறார்கள். இந்தப் பகுதி அரியலூரிலிருந்து 32 கி.மீ. தூரத்திலும், பெரம்பலூரிலிருந்து 38 கி.மீ. தூரத்திலும் உள்ளது.

இவையனைத்தும் பத்து கோடி ஆண்டுகளுக்கு முன் , கிரிடேஷியஸ் காலத்தில் வாழ்ந்த கனிதரா/ பூக்காத தாவர வகையை சார்ந்த CONIFER MARANGAL  குறிப்பிடத்தக்கது.

  கல்மரங்கள் மிக அரிதாக பூமியின் சில பகுதிகளில் மட்டுமே கிடைக்கின்றன. இவை பூமியின் வரலாற்றுப் புத்தகத்தின் ஏடுகள். இவற்றை முறையாக பாதுகாக்க வேண்டியது நமது கடமை.

 

 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Jaisankar Jaganathan

unread,
Jan 7, 2018, 7:59:10 AM1/7/18
to Vallamai, mintamil, thamizayam, தமிழ் மன்றம், podhuvan sengai, Maravanpulavu K. Sachithananthan, Banukumar Rajendran, ara...@gmail.com, Vasudevan Letchumanan, SivaKumar, Seshadri Sridharan, muthum...@gmail.com, Raji M, Suresh Kumar
லோகு சார்,

தஞ்சை அருகில் சில ஆலமர வகைகளை பார்த்திருக்கிறேன். அது கல் ஆல மரம் என்று பெயர். ஆலமர் செல்வன் என்னும் தென் திசை கடவுள் தட்சிணாமூர்த்தி அதன் கீழ் அமர்ந்து அத்வைத ஞானத்தை சனகாதி முனிவர்களுக்கு போதித்தாராம்

Virus-free. www.avast.com

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
regards,
jaisankar jaganathan

Singanenjam Sambandam

unread,
Jan 7, 2018, 9:29:24 AM1/7/18
to mint...@googlegroups.com
வணக்கம்  ஐயா......ஆலங்கட்டி, ஆலவட்டம் எல்லாமே நல்ல விளக்கங்கள். 

மாங்க்ரோவ் காடுகளை  அலையாத்திக் காடுகள் என்பர் ; தாங்கள் ஆல் ஆத்தி என்கிறீர்கள்.

கடலூரை ஒட்டியுள்ள பகுதியில் கல்லு வாய்க்கால் என்று ஒரு ஓடை .லேடரைட் பாறைகளால் ஆன கேப்பர்  மலையில் துவங்கி கிழக்கு நோக்கி பாயும் இதில் வெள்ளம் வரும்போது நீர் சிவந்த நிறத்தில் வரும்.

கல் எனும் சொல் சிவப்பு  எனும் பொருளில் வேறு எங்கு ஆளப்படுகிறது. தெளிவாக்குங்கள் . நன்றி.

Reply all
Reply to author
Forward
0 new messages