அதனால் “திருப்பதி மகாத்மியம்” என்னும் இத்தொடரை எழுதுகிறேன்
” திருமலை திருப்பதி “
(சூதக மஹரிஷி தன் குருவான வியாசரை மனமார வேண்டிக்கொண்டு வேங்கடேச
பெருமானின் அவதார மஹிமையை கூறுகிறார், முனிவர்கள் அவர் கூறும் வேங்கடேச
மஹாத்மியத்தை பக்தி ஸ்ரத்தையோடு கேட்கின்றனர், நாமும் சற்றே செவி
மடுப்போமே)
Half Way Opening :-
நாரதர் தன்னுடைய தந்தையைப் பார்க்க பிரும்மலோகம் வந்தார், ஆம்
பிரும்மாவின் புதல்வர் நாரதர். நான்முகன் அமர்ந்திருக்க பக்கத்திலே
சரஸ்வதி தேவி வீணையில் சாமகானத்தை இசைத்துக்கொண்டிருந்தாள். இந்திரன்,
அஷ்டதிக் பாலகர்கள், சப்த ரிஷிகளும் ,சூரியன் முதலான கிரகங்களும் அங்கே
இருந்தனர். நாரதர் தந்தைக்கும் தாய் சரஸ்வதிக்கும் முதல் வணக்கத்தை
தெரிவித்து மற்ற அனைவரையும் வணங்கினார்.
ப்ரம்மன் தன்னுடைய புத்திரனான நாரதரிடம் நாரதா நீ மிகவும்
புத்திசாலி எப்படியும் எடுத்த காரியத்தை நிறைவேற்றுவதில் வல்லவன்,
கலியுகத்தில் ஸ்ரீமன் நாராயணன் அவதரிக்க மாட்டார், ஆகவே எப்படியாவது
நாராயணனை கலியுகத்திலே அவதரிக்கச் செய்யவேண்டும்,அது உம்மால்தான்
முடியும் உன்னால்தான் நடக்கவேண்டும் என்றார்.
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்னும் வாசகத்துக்கு ஏற்ப
பிரும்மதேவனின் வேண்டுகோளைக் கட்டளையாக ஏற்றுக்கொண்டு வணங்கிப்
புறப்பட்டார் நாரதர்.
நாரதர் தன்னுடைய வழக்கமான பாணியில் பணியை ஆரம்பித்தார். முதற்கட்டமாக
பல மஹரிஷிகள் ஒன்றாகக் கூடி புனிதமான கங்கைக் கரையில் ஒரு பெரும்
யாகத்தை செய்து கொண்டிருந்த இடத்துக்கு வந்து சேர்ந்தார், மஹரிஷிகளும்
நாரதருக்கு மரியாதை செய்து வரவேற்றனர். நாரதர் அவர் வேலையைத்
தொடங்கினார். ஆமாம் யாரை நோக்கி இந்த யாகத்தை நடத்திக்
கொண்டிருக்கிறீர்கள்? இந்த யாகம் நடத்தினால் எந்த தெய்வம் பலனளிக்கப்
போகிறது என்று உங்களுக்கு தெரியுமா? மும்மூர்த்திகளில் இந்த யாகத்தை
ஏற்றுக்கொள்ளத் தகுதியானவர் யார், ஏற்றுக்கொண்டு சாந்த குணத்தோடு
மோக்ஷம் அருளவல்ல தெய்வம் யார் என்று தெரியுமா? அதை முதலில் சோதித்து
தெரிந்துகொள்ளாமல் யாகம் செய்து என்ன பயன் என்று வினவினார்
மஹரிஷிகளுக்கும் அது நியாயமாகப் பட்டது, ஒரு சாரார் எல்லாம் வல்ல ஈசன்
சிவனே என்றனர், இன்னொரு சாரார் எங்கள் நாராயணனைத் தவிர வேறு யாருக்கு
அந்தத் தகுதி உள்ளது என்றனர், இன்னொரு சாரார் உலகையே படைக்கும்
ப்ரும்மதேவனுக்கு இருக்கும் தகுதியே மிகவும் பெரியது என்றும்
வாதிட்டனர், யாகத்தின்மேல் உள்ள அக்கறை குறைந்து சமயச்சண்டை
ஆரம்பமானது !
சமயச் சண்டை தொடங்கினாலே அங்கு இறைஉணர்வு குன்றிப்போய் அரசியல்
தலையெடுக்குமே, ஆளாளுக்கு விவாதத்தை தீவிரப்படுத்தினர்,ஒரு கட்டத்தில்
எந்த இறைவன் பெரியவன் என்னும் வாதம் மறைந்து எந்த மஹரிஷி பெரியவர்?
எந்த மஹரிஷி சொன்னால் அனைவரும் தலைவணங்கவேண்டும் என்று விவாதம் திசை
திரும்பியது, சண்டை முற்றியது, அனைவருக்குமே சுயகௌரவம்தான் இறையை
விடப் பெரியது என்று தோன்றியது,
கூச்சலும் குழப்பமும் அவயைத் தள்ளிவைக்கும் அளவுக்கு போய்விட்டது, சரி
அவையைத் தள்ளி வைக்கலாம் யாகத்தையும் அல்லவா நிறுத்தி
தள்ளிவைக்கவேண்டும், அவை நடந்தாலும் நடக்காமல் இருந்தாலும் மக்களின்
நலன்கருதி செய்யும் யாகம் தடையில்லாமல் நடக்கவேண்டும் என்னும் எண்ணம்
கொண்ட நல்லவர்கள் அப்போது இருந்ததால் மக்கள் தப்பித்தனர், எப்போதும் தன்
நிலை இழக்காத சில பெரியவர்கள் அனைவரையும் அமைதியாக இருக்கச்சொல்லி
வேண்டிக்கொண்டு கலந்து ஆலோசித்து ஒரு நல்ல யோசனையைக் கூறினர்.
எந்த தெய்வத்திடம் சாந்த குணம் இருக்கிறதோ அந்த தெய்வத்தால் மட்டுமே
அமைதியான இனிமையான மோக்ஷத்தை அளிக்க முடியும், ஆகவே மும்மூர்த்திகளில்
சாந்த குணம் கொண்டவர் யாரென்று பரிசோதிப்போம், தகுதியானவரை நியமித்து
இந்த யாகத்தை அவருக்கு செய்து பலன் பெறுவோம் என்றனர், அனைவருக்கும்
அது சரியென்று மனதில்படவே ஒப்புக்கொண்டனர்,
அடுத்ததாக அப்படி மும்மூர்த்திகளையும் சோதிக்கும் திறன் கொண்டவர் யார்
என ஆராய்ந்து, நம் அனைவரிலும் இந்த செயலைச் செய்யத் தகுதியானவர்
பிருகு முனிவர் தான் என்று எல்லோரும் ஏகமனதாக ஒப்புக்கொண்டனர்.
பிருகு முனிவரும் மிகுந்த தயக்கத்துடன் ஒப்புக்கொண்டார்,
சரி இனி நம் வேலை எளிதே நிறைவேறும் என்னும் திருப்தியுடன் நாரதர்
புன்னகையுடன் நாராயண நாராயண என்று ஜபித்துக்கொண்டே ஆகாய மார்கமாக
செல்லத் தொடங்கினார் ஆமாம் அடுத்தடுத்து அவருக்கு வேலை இருக்கிறதே
அன்புடன்
தமிழ்த்தேனீ
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
--
திருப்பதி மகாத்மியம் பாகம் 4திருவேங்கடத்துக்கு சேஷாத்திரி என்னும் பெயர் எப்படி வந்தது ?
ஆதிசேஷன் சற்றே மனமிறங்கி தன் பிடியைத் தளர்த்தினான், இந்த நேரத்தை மிகச்சரியாக வாயுதேவன் உபயோகித்துக்கொண்டு அந்த ஆனந்த பர்வதத்தை தூக்கி எறிந்தார் தன் வலிமையால், வாயுதேவன் வெற்றி கண்டான், ஆனால் ஆதிசேஷனின் பிடியிலிருந்து தூக்கி எறியப்பட்டு பூலோகத்தில் இருந்த ஆதிவராக ஷேத்திரம் என்னும் இடத்தில் விழுந்தது.

| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
பாலமலை ரங்கநாதர் ஆலயம் பற்றிய தொகுப்பு.
எல்கே
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
அதனால்தான் முதலில் ஸ்ரீவாரி தீர்த்தக் குளத்தின் கரையில் உள்ள வராஹரை தரிசித்து பின்னரே வேங்கடவனைக் காணவேண்டும் என்னும் நியதி ஏற்பட்டது
பாகம் 7
வராக மூர்த்தியின் அருளால் நீ கிடைத்திருக்கிறாய்,
என்னை விட்டு இனி நீ பிரியக் கூடாது என்றாள் வகுளாதேவி
ஒரு முறை பட்ட அனுபவம் போலும், நாராயணம் மிகவும் மகிழ்வுற்றவராய் அம்மா என்று உங்களை அழைக்க நான் பாக்கியம் செய்திருக்கிறேன், நீங்கள்தான் என்னுடைய தாயார், உங்களை விட்டு நான் பிரியமாட்டேன் என்றார், மகிழ்ந்தாள் வகுளாதேவி, நாராயணன் தலையில் இருந்த காயத்துக்கு மூலிகைகளால் ஆன மருந்தை தடவி , கானகத்திலே இருந்து அவள் பறித்துக்கொண்டு வந்த கனிகளை அவனுக்கு ஊட்டி தாய்மையை ரசிக்க ஆரம்பித்தாள் வகுளாதேவி.
தாயின் மகிழ்ச்சியைக் கண்ட நாராயணன் தான் லக்ஷ்மியைப் பிரிந்து இருப்பதைக் கூறி அவள் மகிழ்ச்சியை கெடுக்க வேண்டாம் என்று நினைத்தவராய் வகுளாதேவியிடம் ஒன்றும் சொல்லாமல் மனதுக்குள்ளே கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்.
மஹாலக்ஷ்மி என்ன ஆனாள் என்று பார்க்கவேண்டுமே!
சேஷாத்திரி மலைக்கு அருகே இருந்த நாராயணபுரம் என்னும் பட்டிணத்தை தலைநகராகக் கொண்டு சந்திரவம்சத்தில் பிறந்த சுதர்மன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான். அவனுடைய மூத்த குமாரன் ஆகாசமன்னன், இளைய குமாரன் தொண்டைமான்,
ஆகாச மன்னனுக்கு முடி சூட்டிவிட்டு சுதர்மன் தவம் செய்ய கானகம் ஏகினான்.
ஆகாச மன்னனின் இல்லத்தரசிக்கு தரணிதேவி என்று பெயர்,
ஆகாசமன்னன் நல்லவன், தர்ம வழிப்படி நடப்பவன்நாட்டு மக்களை மிகவும் சுபிக்ஷமாக வைத்திருந்தான், அரணிதேவியும் தரும நெறி தவறாமல் வாழ்ந்திருந்தாள், நல்லவர்களுக்கு எப்போதுமே சோதனைகள் அதிகம் வரும் ,அதே போல அவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை.
பல தெய்வங்களை பூஜித்தனர், தான தருமங்கள் செய்தனர்
ஒரு நாள் ஆகாசமன்னன் ராஜ குரு சுகமாமுனிவரிடம்
மக்கள்பேறில்லாமல் நாங்கள் தவிக்கிறோமே இதற்கு ஏதேனும் பரிகாரம் சொல்லக் கூடாதா என்று வேண்டினான்.
அதற்கு ஆகாச மன்னா தசரதன் புத்திரன் வேண்டி புத்திரகாமேஷ்டி யாகம் செய்தான் ,நற்புத்திரர்களை அடைந்தான் ,அவ்வழியே நீங்களும் புத்திரகாமேஷ்டியாகம் செய்யுங்கள் உங்களுக்கும் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்றார்
சுக முனிவரின் யோசனைப்படியே ஆகாசமன்னன் புத்திரகாமேஷ்டியாகம் செய்ய ஆயத்தம் செய்தான், ஒரு குறிப்பிட்ட சுப வேளையில் யாகம் செய்யத் தேர்ந்தெடுத்த இடத்தில் தங்கத் ஏரினால் உழுதான், ஏர் எதன் மீதோ இடித்தது, மன்னன் பூமியில் எதன்மீது ஏர் இடிக்கிறது என்று பார்க்கையில் அங்கே ஒரு பெட்டி இருப்பதைக்கண்டு அந்தப் பெட்டியைத் திறந்தான் , ஆயிரம் இதழ் கொண்ட தாமரையும் ,அழகான ஒரு பெண்குழந்தையும் அதிலிருப்பதைக் கண்ட ஆகாச மன்னனின் கண்கள் வியப்பால் விரிந்தன,
அக்குழந்தையைக் கையிலெடுத்தபோது ஆகாசமன்னா நீ இக்குழந்தையை உன் பூர்வ ஜெனம புண்னியத்தினால் அடைந்திருக்கிறாய், இக்குழந்தையை வளர்க்கும் பாக்கியம் கிடைத்திருக்கிறது உனக்கு, இக்குழந்தையால் உங்கள் குலமே புனிதமடையும் என்று ஒரு அசரீரி கேட்டது
ஆயிரம் இதழ் கொண்ட தாமரையில் இருந்த குழந்தையாதலால் அக்குழந்தைக்கு பத்மாவதி அலர் மேல் மங்கை என்று நாமகரணம் சூட்டி மிகுந்த மகிழ்ச்சியுடன் வளர்த்துவந்தான்
நன்றி காளைராஜன் அவர்களே
தொடர்ந்து படியுங்கள்