SOME QUESTIONS

20 views
Skip to first unread message

devoo

unread,
Aug 2, 2008, 10:31:29 PM8/2/08
to மின்தமிழ்
சான்று என்பது என்ன? சான்றோர் யார்? சான்றாண்மையின் அளவுகோல் என்ன?
இதற்கான விடையை அறிஞர் பெருமக்கள் தெளிவுபடுத்தினால்
பேருதவி செய்ததாக இருக்கும்.
பல குழுமங்கள், விவாத மேடைகள் இவற்றில் எழும் சர்ச்சைகள்
ஒழுங்கு படவும், முழுமை பெறவும் துணைபுரியும்.
ஒருங்குறி ஒத்துழைக்காவிடில் ஆங்கிலத்திலும் எழுதலாம்.
குழும உறுப்பினர் அனைவரும் பங்கு கொள்ளுதல் நன்று.
தேவ்

வேந்தன் அரசு

unread,
Aug 2, 2008, 11:00:06 PM8/2/08
to minT...@googlegroups.com


2008/8/2 devoo <rde...@gmail.com>

சான்று என்பது என்ன? சான்றோர் யார்?
 
எனக்கு இந்த ஐயம் உண்டு
 
சான்று என்பது சாட்சி என்ற பொருளிலும்  வரும். அப்படினா சான்றோர் என்பவர் சாட்சி சொல்பவரா?
 
சால்பு என்ற சொல்லில் இருந்தும் வந்திருக்கலாம்
 
 
1. கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு. 

2. குணநலம் சான்றோர் நலனே: பிறநலம்
எந்நலத்து உள்ளதூஉம் அன்று. 

3. அன்புநாண் ஓப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
ஐந்துசால்பு ஊன்றிய தூண். 

4. கொல்லா நலத்தது நோன்மை: பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு. 

5. ஆற்றுவார் ஆற்றல் பணிதல்: அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை. 

6. சால்பிற்குக் கட்டளை யாதெனில் தோல்வி
துலையல்லார் கண்ணும் கொளல். 

7. இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு? 

8. இன்மை ஒருவற்கு இளிவுஅன்று சால்புஎன்னும்
திண்மைஉண் டாகப் பெறின். 

9. ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி எனப்படு வார். 

10. சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலம்தான்
தாங்காது மன்னோ பொறை.

Hari Krishnan

unread,
Aug 2, 2008, 11:05:27 PM8/2/08
to minT...@googlegroups.com


2008/8/3 devoo <rde...@gmail.com>
ஒன்று செய்யலாம்.  சான்றோர் என்பதற்கு வகுக்கப்பட்டிருக்கும் இலக்கணங்களை பல்வேறு இலக்கியங்களிலிருந்து தொகுப்போம்.  எங்கெல்லாம் சான்றோர் என்று வருகிறதோ, அங்கெல்லாம் அவருக்குச் சொல்லப்பட்டிருக்கும் பண்பு நலன்கள் எவை என்பதைத் தொகுத்துக்கொண்டே வருவோம்.  'ஆன்றவிந்தடங்கிய' சான்றோர், தண்ணடை நல்கல் சான்றோர்க்கு கடனே என்றெல்லாம் வரும் இடங்களில் சான்றோர் என்பவர் யார் என்று சொல்லப்படுகிறது அல்லவா?  
 
முதலில் திருக்குறளில் (எனக்கு) நினைவுக்கு வரும் சில சான்றோர் இலக்கணங்களை எடுத்துக் கொள்ளலாம்.  
 
 
கேடும் பெருக்கமும் இல் அல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க்கு அணி
 
நெஞ்சம் கோடாமை உள்ளவர்கள் சான்றோர்.
 
சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்து ஒருபால்
கோடாமை சான்றோர்க்கு அணி
 
தராசுபோல நின்று, விருப்பு வெறுப்பின்றி, ஒருபக்கமாகச் சாயாமல் இருப்பவர் சான்றோர்.  (அப்படியானால், இரு பக்கமும் சம எடைகொண்ட பொருட்களை நிறுக்கும்போதுதான் அது சாத்தியம்.  ஒரு பக்கம் எடை அதிகம் உள்ள பொருளை நிறுக்கும்போது, ஒருபக்கம் கோடுவதே சான்றோர்க்கு அணி.  துலாக்கோல் உதாரணத்தை ஒப்புக் கொண்டால், இதையும் மனத்தில் கொள்ள வேண்டும்)
 
பிறன் மனை நோக்காத பேர் ஆண்மை சான்றோர்க்கு
அறன் ஒன்றோ ஆன்ற ஒழுக்கு
 
அடுத்தவன் பெண்டாட்டியை விரும்பாதவர்கள் சான்றோர்கள்.
 
 
மன நலம் நன்கு உடையர் ஆயினும் சான்றோர்க்கு
இன நலம் ஏமாப்பு உடைத்து
 
மனநலம் என்றால் என்ன, இனநலம் என்றால் என்ன?  டாக்டர் பட்டம் வாங்கியவர்கள் எல்லாம் நிறைந்திருக்கும் இந்தக் குழுவில் அப்படிப்பட்ட அறிஞர்கள் விளக்கவும் கொஞ்சம் இடமிருக்கட்டுமே.  அவர்களுக்கு இதையும் பின்வரும் குறட்பாக்களையும் விட்டுவிடுகிறேன்.
 
நட்பிற்கு உறுப்புக் கெழுதகைமை மற்று அதற்கு
உப்பு ஆதல் சான்றோர் கடன்
 
கழாஅக் கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல்
 
உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்
எண்ணப்பட வேண்டாதார்

ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என் மற்றுச்
சான்றோர் முகத்துக் களி
 
குண நலம் சான்றோர் நலனே பிற நலம்
எந்நலத்து உள்ளதூஉம் அன்று
 
அணி அன்றே நாண்உடைமை சான்றோர்க்கு அஃது இன்றேல்
பிணி அன்றே பீடு நடை
 
சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ்




--
அன்புடன்,
ஹரிகி.

வேந்தன் அரசு

unread,
Aug 2, 2008, 11:43:57 PM8/2/08
to minT...@googlegroups.com
ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும் தன்மகனை சான்றோன் என கேட்ட தாய்.

--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
Reply all
Reply to author
Forward
0 new messages