வழக்கொழிந்த தமிழ்ச்சொற்கள் புழக்கத்திற்கு..!

3,124 views
Skip to first unread message

Suba.T.

unread,
Mar 23, 2015, 2:49:41 PM3/23/15
to மின்தமிழ், Subashini Tremmel

சிலரது நூல்களையும் கட்டுரைகளையும் வாசிக்கும் போது நான் வியந்து பார்ப்பது.. ஆகா.. எவ்வளவு சொல் வளமை. நாம் அடிக்கடி தெரிந்த சில சொற்களையே பயன்படுத்திக் கொண்டிருக்கின்றோமே என  என் இயலாமையை நினைத்து என்னையே கடிந்து கொள்வதுண்டு. பொதுவாக நல்ல இலக்கிய கட்டுரைகள், ஆய்வுகள், பக்தி இலக்கியங்கள் ஆகியன வாசிக்கும் போது இதே பிரமிப்பு எனக்கு வரும். 

பல தமிழ்ச்சொற்களைக் காலப் போக்கில் நாம் தெரிந்தோ தெரியாமலோ.. அறிந்தோ அறியாமலோ இழந்திருக்கின்றோம். பல வேற்று மொழிச் சொற்களை விரும்பியும் ஏற்றுக் கோண்டு அதனைத்தமிழ் மொழிப் பயன்பாட்டில் பயன்படுத்துதலில் மிகுந்த ஆர்வம் காட்டும் சமூகமாக மாறிக்கொண்டிருக்கின்றோம்.

இதனை நினைக்கும் போது அவ்வப்போது வழக்கத்தில் அதிக பயன்பாட்டில் இல்லாத, அல்லது முற்றிலும் பயன்பாட்டில் இல்லாத சில தமிழ்ச்சொற்களை நாம் எல்லோருமே அறிமுகப்படுத்தி அதனைப் பற்றி பதிந்து வரலாமே என எண்ணம் நேற்றே தோன்றியது. இங்கு தமிழ் அறிஞர்கள் பலர் இருக்கின்றீர்கள். ஒவ்வொரு நாளும் சில சொற்கள் என இங்கே பதிந்து வைக்கலாம். அதிகமான நீள பட்டியல் ஒரு பதிவில் எனத் தேவையில்லை. 4 அல்லது 5 சொற்கள் ஒரு பதிவில் போதும்.

தயவு செய்து இந்த இழையை வேறு ஆராய்ச்சிகளுக்கு மடை மாற்றிவிடவேண்டாம். இந்த இழையின் நோக்கத்தை உணர்ந்து எல்லோரும் தங்களால் முடிந்த வகையில்  நீங்கள் அறிந்த, வழக்கொழிந்த சொற்களை இங்கே பதிந்து வைக்கலாம்.

ஆரம்பித்து வைக்க நான் மூன்று சொற்களை பகிர்ந்து கொள்கின்றேன்.

1. ஓதுதல் - வாசித்தல் என்பது இதன் பொருள் என நினைக்கின்றேன். 

2. வானரம் - ஆண் குரங்கு. பொதுவாக வானரம் என்ரால் குரங்கு என்றே நினைத்திருந்தேன். அண்மையில் ஒரு பதிவினை வாசித்த போது தான் இது ஆண்குரங்கினைச் சுட்டும் சொல் என அறிந்தேன். அதேபோல பெண் குரங்கினைச் சுட்ட மந்தி எனும் சொல் இருப்பது அப்போதுதான் நினைவுக்கு வந்தது. ஆக வானரம் - மந்தி என் பிரித்து சொல்லாமல் குரங்கு எனப் பொதுவாகச் சொல்லும் பழக்கம் நமக்கு வந்து விட்டது என நினைக்கின்றேன்.

3.நித்திரை - தூக்கம். இலங்கைத்தமிழர்கள் இந்தச் சொல்லை அன்றாடப் பயன்பாட்டில் வைத்திருக்கின்றார்கள். ஆனால் சிறுகதைகளில் நாவல்களில் இச்சொல்லை விட தூக்கம் என்ற சொல்லையே பெரும்பாலும் நான் பார்க்கின்றேன். இது பயன்பாட்டில் வழக்கொழிந்து வருகின்றதோ.. கவிதையில் மட்டும் பயன்படுத்தப்படுகின்றதோ என்ற ஒரு எண்ணம் எனக்கு இருக்கின்றது.

சரி.. ஏனையோரும் தொடரலாமே.!

சுபா



--
Suba.T.
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

Anbu Jaya

unread,
Mar 23, 2015, 5:16:43 PM3/23/15
to mintamil, Subashini Tremmel
'க்ரியா'வின் தமிழ் அகராதியில் இப்படிப்பட்ட சொற்கள் பல இணைத்துள்ளார்கள்.
தசாப்தம் = பத்து ஆண்டுகள் (a decade). அருகிவரும் வழக்கில் இச்சொல் வருகிறது. இலங்கைத் தமிழர்கள் இச்சொல்லை பயன்படுத்துகின்றனர்.



அன்புடன்,
அன்பு ஜெயா


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

செல்வன்

unread,
Mar 23, 2015, 6:17:21 PM3/23/15
to mintamil
செங்கிருதம் தமிழுடன் எத்தனை வலிமையாக ஒன்றுபட்டுள்ளது என்பதை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை :-)

வானரம், நித்திரை என்பவை சமஸ்கிருத சொற்கள்...தமிழ் அத்தனை அழகாக அவற்றை உள்வாங்கியுள்ளது.

வானரம்- வனம் மற்றும் நரன் என்பதன் கூட்டுச்சொல்

நித்ரா- உறக்கம், நித்ராதேவி என ஒரு தேவதை உண்டு

செல்வன்

unread,
Mar 23, 2015, 6:20:18 PM3/23/15
to mintamil

Tthamizth Tthenee

unread,
Mar 23, 2015, 7:56:46 PM3/23/15
to mint...@googlegroups.com
வானரம்- வனம் மற்றும் நரன் என்பதன் கூட்டுச்சொல்

திரு  செல்வன்  அவர்களே

நரன்  என்றால்  மனிதன்

வால் + நரன்  =  வால்னரன்     அல்லது வானரம் 

என்று நினைக்கிறேன்

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net




N. Ganesan

unread,
Mar 23, 2015, 8:00:46 PM3/23/15
to mint...@googlegroups.com


On Monday, March 23, 2015 at 3:17:21 PM UTC-7, செல்வன் wrote:
செங்கிருதம் தமிழுடன் எத்தனை வலிமையாக ஒன்றுபட்டுள்ளது என்பதை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை :-)

வானரம், நித்திரை என்பவை சமஸ்கிருத சொற்கள்...தமிழ் அத்தனை அழகாக அவற்றை உள்வாங்கியுள்ளது.

வானரம்- வனம் மற்றும் நரன் என்பதன் கூட்டுச்சொல்

கடுவன் - மந்தி என்பன தமிழ்ச் சொற்கள்.

வானரம் - குரங்கின் இரு பாலுக்கும் பொது.

நா. கணேசன்
 

நித்ரா- உறக்கம், நித்ராதேவி என ஒரு தேவதை உண்டு

செல்வன்

unread,
Mar 23, 2015, 8:15:15 PM3/23/15
to mintamil
நன்றி தேனி ஐயா, கணேசர் ஐயா

இனி இழையில் சுபா கேட்டுகொண்டதுபோல்  இருவரும் ஆளுக்கு ஒரு வழக்கொழிந்த சொல்லை கொடுக்கும்படி கேட்டுகொள்கிறேன்

N. Ganesan

unread,
Mar 23, 2015, 8:18:11 PM3/23/15
to மின்தமிழ்
On Mon, Mar 23, 2015 at 5:14 PM, செல்வன் <hol...@gmail.com> wrote:
நன்றி தேனி ஐயா, கணேசர் ஐயா

இனி இழையில் சுபா கேட்டுகொண்டதுபோல்  இருவரும் ஆளுக்கு ஒரு வழக்கொழிந்த சொல்லை கொடுக்கும்படி கேட்டுகொள்கிறேன்

நூறு தருகிறேன்.

Megala Ramamourty

unread,
Mar 23, 2015, 8:25:48 PM3/23/15
to மின்தமிழ்
//வானரம் - குரங்கின் இரு பாலுக்கும் பொது.//
ஆம்...வானரம் என்பது குரங்கின் இருபாலுக்கும் பொதுவாகத்தான் பெரும்பாலும் வழக்கிலுள்ளது. வாலுள்ள குரங்கு, வாலில்லாக் குரங்கு இரண்டுக்குமே இது பொதுச்சொல் என்கிறது இணைய அகராதி.

ஆயினும், குற்றாலக்குறவஞ்சிப் பாடலொன்றில் ’வானரம்’ என்ற சொல் ஆண்குரங்கைக் குறிப்பதாய் வந்துள்ளதாகத் தோன்றுகிறது.

வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
    மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்...(அடடா... என்ன அழகான பாடல்!)

குறுந்தொகைப் பாடலொன்றில் ‘கலை’ என்ற சொல் ஆண் குரங்கை (கடுவனைக்) குறிப்பதாக வந்திருக்கக் காண்கிறேன்.

கருங்கண் தாக்கலை பெரும்பிறி துற்றேனக்
கைம்மை யுய்யாக் காமர் மந்தி...(குறுந் - 69)


அன்புடன்,
மேகலா

 

N. Ganesan

unread,
Mar 23, 2015, 8:38:39 PM3/23/15
to mint...@googlegroups.com, vallamai


On Monday, March 23, 2015 at 5:25:48 PM UTC-7, megala.ramamourty wrote:
//வானரம் - குரங்கின் இரு பாலுக்கும் பொது.//
ஆம்...வானரம் என்பது குரங்கின் இருபாலுக்கும் பொதுவாகத்தான் பெரும்பாலும் வழக்கிலுள்ளது. வாலுள்ள குரங்கு, வாலில்லாக் குரங்கு இரண்டுக்குமே இது பொதுச்சொல் என்கிறது இணைய அகராதி.

ஆயினும், குற்றாலக்குறவஞ்சிப் பாடலொன்றில் ’வானரம்’ என்ற சொல் ஆண்குரங்கைக் குறிப்பதாய் வந்துள்ளதாகத் தோன்றுகிறது.

வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
    மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்...(அடடா... என்ன அழகான பாடல்!)

குறுந்தொகைப் பாடலொன்றில் ‘கலை’ என்ற சொல் ஆண் குரங்கை (கடுவனைக்) குறிப்பதாக வந்திருக்கக் காண்கிறேன்.

கலை என்பது முசுவைக் குறிக்கும்.
கல்-/கர்- = கருப்பு.
கலைமா(ன்) = கிருஷ்ணமிருகம் = blackbuck.

அகநானூறு 241 பற்றி CTamil லிஸ்ட்டில் பேசியபோது,

இந்தியாவில் குரங்கின் இனங்கள் பற்றிச் சொன்னேன்.

நா. கணேசன்

 

கருங்கண் தாக்கலை பெரும்பிறி துற்றேனக்
கைம்மை யுய்யாக் காமர் மந்தி...(குறுந் - 69)


அன்புடன்,
மேகலா


Notes: 

kalai - refers to the stag of blackbuck. (kalaimAn2, is the vehicle of Durga in art and literature, and we know it is the black buck from Tamil sculptures). The stag in this Akam 241 poem is chasing after a mirage, that is what thetalaivi thinks of his pursuits, perhaps.

The pAlai-t-tiNai poem Akam 241under discussion is very similar in contents with the pAlai poem 151. Note the similarity of the poets' names as well. Same kalaimAn2 (blackbuck stag) appears in both and stands for the hero. Also, the talaivi < - > palli in 151 where as talaivi < > manti in 241.

Note that the "cemmuka manti" which is the female of the special bonnet macaques (macaca r. diluta. current range: extreme south of India). I think the cemmuka manti stands for the talaivi herself, the manti (female monkey) plays nellik kAy-s just like she is playing with kazaGku beans back home, with her heart being tossed up and down in the emotional times when he has gone off to far away places leaving her behind.

பொதிகைமலைச் செம்முக மந்தி (அரிய இனம்):



"துய்த்தலைச் செம்முக மந்தி” (அகம் 241). Even though this special bonnet monkey
(macaca r. diluta) is now restricted to extreme South, in Sangam times, its historic range could have included entire south India):



பனிவரை நிவந்த பாசிலைப் பலவின்
கனிகவர்ந் துண்ட கருவிரற் கடுவன்
செம்முக மந்தியொடு 
சிறந்துசேண் விளங்கி
மழைமிசை யறியா மால்வரை யடுக்கத்துக்
(புறநானூறு 200)

கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை
நிலஞ்சேர் மதரணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை இழைப்பொலிந்தாஅங்கு
அறாஅ அருநகை இனிது பெற்றிகுமே
(புறநானூறு பாடல் 378) 

கடுவன் 
முறியார் பெருங்கிளை அறிதல் அஞ்சிக் 
கறிவளர் அடுக்கத்தில் களவினில் புணர்ந்த 
செம்முக மந்தி செல்குறி கருங்கால் 
பொன்இணர் வேங்கைப் பூஞ்சினை
(நற்றிணை 151)

ஆடு மகள் நடந்த கொடும் புரி நோன் கயிற்று
அதவத் தீம் கனி அன்ன செம் முகத்
துய்த் தலை மந்தி வன் பறழ் தூங்க
(நற்றிணை 95)

வட்டக் கழங்கில் தாஅய்த் துய்த்தலைச்
செம்முக மந்தி 
ஆடும்
(அகநானூறு 241)

கருவிரற் செம்முக வெண்பற்சூன் மந்தி
பருவிரலாற் பைஞ்சுனைநீர் தூஉய்ப்-பெருவரைமேற்
றேன்றேவர்க் கொக்கு மலைநாட! வாரலோ
வான்றேவர் கொட்கும் வழி
(திணைமாலை நூற்றைம்பது)

சேற்றயல் மிளிர்வன கயலிள வாளை செருச்செய வோர்ப்பன செம்முக மந்தி
ஏற்றையொ 
டுழிதரும் எழில்திகழ் சாரல் இடைச்சுர மேவிய இவர்வண மென்னே. 
(சம்பந்தர், முதல் திருமுறை)

கைம்மகவேந்திக் கடுவனொடு ஊடிக்கழைபாய் வான்
செம்முக மந்தி கருவரையேறுஞ் சிராப்பள்ளி
(சம்பந்தர், திருமுறை)


Choice 2: ஊர்க்குரங்கு (அ) நாட்டுக்குரங்கு (macaca r. radiata): சினைக்காலத்திலும், பாலூட்டும் காலத்திலும் மந்திகளின் நிறம் சற்றுச் சிவப்பாயிருக்கும். They are called Bonnet moneys and endemic in south India. 












செம்முகக் குரங்கு (Rhesus macaque}:
http://en.wikipedia.org/wiki/Rhesus_macaque The rhesus monkeys are very, very rare in south India, but whether they existed in the South in sangam times is unknown. 
















To learn more, 
The special bonnet monkey (macaca r. diluta)
http://www.flickr.com/photos/anujnair/3500620860/
http://www.drkrishi.com/tag/macaca-diluta

Common bonnet monkey:
http://obiologoamador.blogspot.com/2010/10/macaco-de-barrete-macaca-radiata.html
http://www.treknature.com/gallery/Asia/India/photo228119.htm

The Bonnet Macaque Revisited: Ecology, Demography and Behaviour - Anindya Sinha
http://oldwww.wii.gov.in/envis/primates/page30.htm



------------------------
கலை மான் (Blackbuck stag): antilope cervicapra
http://en.wikipedia.org/wiki/Black_buck



கலைமான் (ஆண்) திருகுகொம்பு உடையது. பெண்மாண்களுக்குத் திருகுகொம்பு இல்லை (female blackbucks have little spikes only, if at all they show up.)





இந்தியாவிலே உருவான மான் குடும்பம் - கலைமான் (கிருஷ்ணமிருகம்).
ஆசியா வரைபடத்தில் உலகிலேயே இந்தியாவில் மட்டுமே கலைமான்
இயற்கையின் நன்கொடை.




இந்தியாவில் தோன்றி வாழும் மான்களில் இலக்கியங்களிலும் கலைச்சிற்பங்களிலும் முக்கிய இடம்பெறுவது கலைமான் ஆகும். கலை (கலைமான்), இரலை என்பன கருநிற மானாக விளங்கும் ஆண்பாலைக் குறிக்கும் பெயர்கள். இந்த வகை மான்களில் கருநிறத்தில் அல்லாமல் பழுப்பு நிறமாக பெண்ணினம் இருக்கும். ஆணும், பெண்ணும் சேர்த்துப் பொதுவாக இம் மானினத்தைப் புல்வாய் என்கிறோம்.

ஏறும் ஏற்றையும் ஒருத்தலும் களிறும்
சேவும் சேவலும் இரலையும் கலையும்
மோத்தையும் தகரும் உதளும் அப்பரும்
போத்தும் கண்டியும் கடுவனும் பிறவும்
யாத்த ஆண்பாற் பெயர் என மொழிப. 2
(தொல். பொருள். மரபியல்)

கல்-/கரு- ‘black' > கலை, இரலை (Cf. ஈரல்) - இரண்டும் கருமான் ஆகிய புல்வாய்-ஏறு ஆகும்.

கருமை நிறமல்லாத பெண்-புல்வாய்க்கு கரியபொருள் தரும் கலை அல்லது இரலை என்ற பெயர் பொருந்தாது அன்றோ? எனவே, ஆணும், பெண்ணும் சேர்த்துப் பொதுவாய் முழு இனத்தையும் குறிப்பிடப் புல்வாய் என்னும் சொல்லைத் தொல்காப்பியர் ஆளுகிறார். 

இரலையும் கலையும் புல்வாய்க்கு உரிய. 
(தொல். பொருள். மரபியல் 46)

துர்க்கை/கொற்றவை சிந்து சமவெளிக் காலத்திலிருந்து தொல்தமிழர் வணங்கும் தெய்வம்:
http://nganesan.blogspot.com/2008/01/eru-tazuval.html

கொற்றவையின் வாகனம் கலைமான் (Blackbuck stag) என்று தமிழ் இலக்கியமும் சிற்ப வரலாறும் காட்டிநிற்கிறது.


[Photo Courtesy: Dr. Michael Rabe, St. Xavier University, Chicago.
Durga with black antelope as vahana. From Chennai museum, originally from Tanjore district. Note that Durga sculptures with black antelope are found only in Tamil Nadu in India.]

சிலப்பதிகார வேட்டுவ வரியில், எயினர் மறக்குலப் பெண்ணான சாலினியைக் கொற்றவையாகக் கோலம் புனைந்து திரிதரு கோட்டுக் கலைமான் ஊர்தியில் ஏற்றுவது வர்ணிக்கப்பட்டுள்ளது.

வரிவளைக்கை வாளேந்தி மாமயிடற் செற்றுக்
கரிய திரிகோட்டுக் கலைமிசைமேல் நின்றாயால் (சிலம்பு)

சிவபெருமானின் கையில் கணிச்சி மழுவும், கலைமானும் (கருமான்) விளங்குகின்றன. தேவாரச் செய்யுள்களில் ”கையமரும் மழு நாகம் வீணை கலைமான் மறியேந்தி மெய்யமரும் பொடிப் பூசி”, “கலைமான் மறி ஏந்து கையா!” என்றும், ”கரியின் னுரியுங் கலைமான் மறியும் எரியும் மழுவும் உடையான் இடமாம்”, ”செய்யர் வெண்ணூலர் கருமான் மறிதுள்ளுங் 
கையர் கனைகழல் கட்டிய காலினர்” ”மைஞ்ஞிறமான்”...

சிவன் கிருஷ்ண அஜினம் அணிவது ஏன்? கையில் கலைமான் ஏந்துவது ஏன்?

Presence of 'Siva, S. Kramrsich, Princeton University press, pg. 338 
"The consecrating magic of the black antelope skin was vested in the black antelope, Rudra's victim. "Once upon a time the sacrifice escaped the gods, and having become a black antelope roamed about. The gods having thereupon found it, and stripped it of its skin" ('Satapatha Brahmana 1.1.4.1) [25]. 
[...] 
Even so it was the skin of the black antelope (kRSNaajina) that sanctified and was homologized with the brahman (KB 4.11). The gods flayed the animal; Rudra had shot it. 

Ironically though, by unerring logic, Rudra, who was excluded from the sacrifice, was the cause of the sacrificial, sanctifying magic emanating from the flayed skin of the black antelope, his victim. 

Ritually, the black antelope was the sacrifice. Mythically and ritually, Prajapati was the sacrifice. "With the sacrifice the gods sacrifice to the sacrifice" (Rgveda 10.90.16; VS 31.16; 'SB 10.2.2.2). The antelope was Prajapati and, from the beginning, Rudra's animal skin." 

பிரமனுக்கும் கலைமான் உரி உண்டு, சிவன் மனைவி கொற்றவை, பிரமனின் கலைமகள் இருவருக்கும் கலைமான் ஊர்தி. வட மொழியில் கலைமான் (கருமான்) க்ருஷ்ணமிருகம்
என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கருமான் = கிருஷ்ண மிருகம். ஈஸ்வரன் (பிரமனும்தான்) விரும்பி எப்போதும் அணிவது கிருஷ்ணமிருகம் எனப்படும் கலைமான் (கருமான்) தோலையே. சிவன், பிரம்மா சிலைகளில் யக்ஞோபவீதத்தில் கலைமான் தலை இருக்கும். 
பிரமன், சிவன் அணிவதால் அவர்கள் துணைவியர் கலைமகள், கொற்றவை இருவருக்கும் கருமான்/க்ருஷ்ணமிருகம் வாகனமும் ஆகும். ”கருமானின் உரியதளே உடையா வீக்கி” தேவாரம்.

காளமேகப் புலவர் சிவபிரானின் திருவீதி உலாவையும் - தமிழரின் 10 சாதிகளையும் சிலேடையாகப் பாடும் பலருமறிந்த செய்யுளில் கருமான் என்பது கம்மாளனுக்கும்,கலைமான் ஏற்றைக்குமாய் வருகிறது.

கட்டளைக் கலித்துறை

வாணியன் வாழ்த்திட வண்ணான் சுமக்க வடுகன்செட்டி
சேணியன் போற்றத் திரைப்பள்ளி முன்தொழத் தீங்கரும்பைக்
கோணியன் தாழக் கருமான் துகிலினைக் கொண்டணிந்த
வேணிய னாகிய தட்டான் புறப்பட்ட வேடிக்கையே! 

கலைமான் கறுப்பு நிறத்தினால் ஏற்பட்ட பெயர் என்று காட்ட மேலும் இரு விலங்குகளுக்கும் கலை என்ற பெயர் காட்டலாம். முசு (Tufted gray langur, லாங்கூலம்/நாங்கூழை) குரங்கில் விசேடமாக ஆணுக்கு கலை எனப் பெயர். முசு ஆங்கிலத்தில் Madras langur (or) Malabar langur எனப்படுகிறது. முசுவுக்கு மைம்முகன் என்ற பெயரை நிகண்டு கொடுக்கிறது. வடநாட்டில் இதற்கு நெருங்கிய உறவுடைய முசுவை ஹனுமான் குரங்கு என்கிறார்கள்.

http://www.birding.in/mammals/presbytes_01.htm
http://hannahz.hubpages.com/hub/7-Fun-Facts-on-the-Gray-Langur-Indias-Most-Widespread-Monkey










இந்துமகாசமுத்திரத்தை வாழிடமாகக் கொண்ட சுறா மீன்களுக்கும் கலை என்ற பெயர். கலைமான் போலவே பெரும்பகுதி கருமை காணலாம்.
http://en.wikipedia.org/wiki/Tiger_shark
http://www.ehow.com/info_8432415_types-sharks-indian-ocean.html 







shylaja

unread,
Mar 23, 2015, 8:45:22 PM3/23/15
to mintamil
2015-03-24 5:55 GMT+05:30 Megala Ramamourty <megala.r...@gmail.com>:
//வானரம் - குரங்கின் இரு பாலுக்கும் பொது.//
ஆம்...வானரம் என்பது குரங்கின் இருபாலுக்கும் பொதுவாகத்தான் பெரும்பாலும் வழக்கிலுள்ளது. வாலுள்ள குரங்கு, வாலில்லாக் குரங்கு இரண்டுக்குமே இது பொதுச்சொல் என்கிறது இணைய அகராதி.

ஆயினும், குற்றாலக்குறவஞ்சிப் பாடலொன்றில் ’வானரம்’ என்ற சொல் ஆண்குரங்கைக் குறிப்பதாய் வந்துள்ளதாகத் தோன்றுகிறது.

வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
    மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்...(அடடா... என்ன அழகான பாடல்!)>>.மிக அழகான பாடல்..  பள்ளிநாட்களில்  இந்தப்பாட்டுக்கு  அபிநயத்துடன் நடனம் சொல்லிக்கொடுத்தார்கள். கொஞ்சும் கெஞ்சும் என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப டக்கென்று முகபாவம் மாற்ற  அன்று  அந்த நடன ஆசிரியை சொல்லிக்கொடுத்ததை  நினைவுபடுத்திவிட்டீர்கள் மேகலா.

குறுந்தொகைப் பாடலொன்றில் ‘கலை’ என்ற சொல் ஆண் குரங்கை (கடுவனைக்) குறிப்பதாக வந்திருக்கக் காண்கிறேன்.

கருங்கண் தாக்கலை பெரும்பிறி துற்றேனக்
கைம்மை யுய்யாக் காமர் மந்தி...(குறுந் - 69)<,,>>>  கவி  என்றாலும் குரங்குதானே!!


அன்புடன்,
மேகலா

 
    




--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
 
அன்புடன்
ஷைலஜா

நலம்   வாழ எந்நாளும் வாழ்த்துங்கள்!!

Megala Ramamourty

unread,
Mar 23, 2015, 8:53:03 PM3/23/15
to மின்தமிழ்
//கவி  என்றாலும் குரங்குதானே!!//

ஆம்...ஷைலு. ஆனால் அது தமிழ்ச்சொல் அன்று. ’கபி’ எனும் வடமொழிச் சொல்லின் தமிழ் வடிவமே ’கவி’.

கபி - குரங்கு; கபிஸ்தலம் எனும் ஓர் ஊரே இருக்கிறது. அதன் தமிழாக்கம் ’குரங்காடுதுறை’ என நினைக்கிறேன். :-))

N. Ganesan

unread,
Mar 23, 2015, 8:56:23 PM3/23/15
to mint...@googlegroups.com, vallamai
On Monday, March 23, 2015 at 3:20:18 PM UTC-7, செல்வன் wrote:
நாகு - இளமை என்பதற்கான தமிழ்ச்சொல்


பெரும்பாணாற்றுப்படையிலும், புறநானூற்றிலும், திருமுருகாற்றுப்படையிலும் பலியாகும்
”விடை” என்பது ஆடு. அதனை ஊர்மன்றில் அறுத்து புலாச்சோறு செய்து ஊரார் உண்டு மகிழ்ந்தார்கள்
என்று பெரும்பாணாற்றுப்படையிலும், திருமுருகில் முருகனுக்கு கிடாய்ப் பொலி (பலி) தரப்பட்டது
என்றும் பார்க்கலாம். இவையெல்லாம், ஊரே மாட்டை வெட்டிச் சாப்பிட்டதல்ல. அப்படி சங்க
இலக்கியத்தில் அரசவை, திருக்கோவில்கள், ஆகோள் கொண்டபின் ஊர்மன்றத்தில் நடக்கும்
கொண்டாட்ட திருவிழா எல்லாவற்றிலும் ஆடு இல்லை, மாடுகளைக் கொன்று ஊரார் எல்லோரும்
உண்டார்கள் என்றால், மாடு அடித்து சாப்பிடும் வழக்கம் எப்போது மாறியது? என்று காட்டவேண்டும் அல்லவா?
சங்க காலத்திலும் அதன் பின்னரும் வேளிர்களும், வேளாளர்களும் சமூகத்தில் மாடு அடித்துப்
பலி இடுதலை நிறுத்திவிட்டார்கள் என்பது வரலாறு. 

அதே பெரும்பாணாற்றுப்படையிலே முல்லை நில இடைச்சியர் பெண்ணொருத்தி
நெய்க்கு விலையாக ஆணிப்பசும் பொன்னே கொடுத்தாலும் பெற்றுக்கொள்ளமாட்டாளாம்.
அதற்குப் பதிலாக நாகு இளம்கன்றுடன் உள்ள எருமையை வாங்கிக்கொள்வாளாம்.
அப்பொழுது பால்கறந்து ஊற்றி அவள் குலவணிகம் தழைக்கும் அல்லவா?

நெய் விலைக் கட்டிப் பசும் பொன் கொள்ளாள், 
எருமை நல் ஆன் கரு நாகு பெறூஉம் 
மடி வாய்க் கோவலர் குடிவயிற் சேப்பின், 

எருமை நல்லான் = நல்ல எருமைமாடு. அதன் கன்னங்கரிய கண்ணுக்குட்டி = கருநாகு
முல்லை நில ஆய்ச்சி பெறுவது. ஆயர்களுக்கும், ஆய்ச்சியர்க்கும் மாடுகள்
தெய்வம். பொன்னைத் தூசாக எண்ணுவர். கிருஷ்ணபிரான் ஆயன் தான்.
அவனோ, அவர் குலத்தாரோ மாடு பலிகொடுத்து மாட்டுக்கறி தின்றான் என்று சங்க இலக்கியத்திலோ,
மஹாபாரதத்திலோ உண்டா? இருந்தால் தாருங்கள்!

நா. கணேசன்

shylaja

unread,
Mar 23, 2015, 9:02:14 PM3/23/15
to mintamil, vallamai
தமிழ்மொழியின் தொன்மையைப்பற்றி விளங்கும் பாடலை அண்மையில் ஒரு தமிழ்ப்பாவலர் மூலமாய் தெரியவந்தது


வையம் ஈன்ற தொன்மக்கள் உளத்தினில்
கையினால் உரை காலம் இறந்திட
பைய நாவை அசைத்த பழந்தமிழ்....

சைகைமொழியிலிருந்து வாய்மொழிக்கு மனிதன் மாறியதும் பயன்படுத்திய முதல்மொழி தமிழ்தானாம்!

அகத்தியர் வளர்த்த தமிழுக்கு ராமர்பெருமானே வணங்கியதாய் கம்பராமாயணத்தில் ஒரு பாடல் உண்டு.

அகத்தியரை ராமன் வணங்கியதும் அவர் இப்படிக்கூறுவதாய் அமைந்தபாடல் இது.


நின்றவனை வந்த நெடியோன் அடிபணிந்தான்
அன்றவனும் அன்போடு தழீஇ அழுத கண்ணான்
நன்றுவர வென்று பல நல்லுரை பகர்ந்தான்
என்றுமுள தென்தமிழ் இயம்பிசை கொண்டான்.


கண்ணனின் சிறுவயது சேட்டைகளை பெரியாழ்வார் கூறும்போது,

எண்ணைக்குடத்தை உருட்டி
இளம்பிள்ளை கிள்ளி எழும்பிக்
கண்ணைப் புரட்டி விழித்து
கழகண்டு செய்யும்பிரானே!


விஷமம் என்னும் சொல்லைத்தவிர்த்து மிகவும் கவனமாய் கழகண்டு எனும் அழகான(வழக்கொழிந்துபோன) சொல்லை
பெரியாழ்வார் பிரயோகித்திருக்கிறார்.

அமிழ்தினும் இனிய தமிழ் வாழ்க! 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Oru Arizonan

unread,
Mar 23, 2015, 9:15:23 PM3/23/15
to mintamil
//வால் + நரன்  =  வால்னரன்     அல்லது வானரம் என்று நினைக்கிறேன்//

இச்சொல்லுக்கு வடமொழி விளக்கம் (விக்ரஹம் [சொல் பிரித்தல்] என்று வடமொழி இலக்கணத்தில் கூறுவார்கள்):  வனதே சாரதி இதி வானரஹ.  அதாவது, காடுகளில் வசிப்பவர்கள் என்பதால் வானரர்கள்.  ஒருவிதத்தில் பழங்குடி மக்கள் என்றும் கூறலாம்.  இன்னொரு விதத்தில் காடுகளில் திரியும் குரங்குகள் என்றும் கூறலாம்.  பொதுவாக வடமொழியில் குரங்குகள் என்ற பொருளில் கையாளப்படுகிறது.
--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

Oru Arizonan

unread,
Mar 23, 2015, 9:40:22 PM3/23/15
to mintamil
வழக்கொழிந்ததமிழ்ச் சொற்கள் என்று தலைப்பு இருப்பதால், தமிழில் வழக்கொழிந்த வடமொழிச் சொற்களைத் தராது, வழக்கொழிந்த தமிழ்ச் சொற்களையும், அதற்குப்பதிலாகக் கையாளப்படும்  மற்றமொழிச் சொற்களையும் தருகிறேன்.

வானரர்கள், மற்றும் இதர விலங்குகளைப்பற்றிய ஆராய்ச்சியைச் சாற்றி நிறுத்தி, இழையைத் திசை திருப்பாமல் இருப்போமாக.  இந்த விஷயத்தில் நான் வானரத்தைப் பற்றிய விளக்கம் கொடுத்துக்  குற்றம் செய்தவன் ஆகிறேன்.

தமிழ்:
படிக்கிறேன், கற்கிறேன்:  ....பண்றேன் 
மயிர்:  முடி 


வடமொழி:
ஆண்டு:  வருஷம்
கையாளு:  உபயோகி 
சொல்:  வார்த்தை 
முன்னுக்கு வா:  ஜயி 
தோல்:  சருமம் 

ஆங்கிலச் சொற்கள்:
முக்காலி: ஸ்டூல்
திருப்புளி: ஸ்க்ரூ ட்ரைவர் 
சுத்தியல்: ஹாமர் 
மனக்குழப்பம், மனக்கவலை:  டென்ஷன்
உறுத்தல்: இரிட்டேஷன் 
வெறுப்பு: ஹேட்
முகம் கழுவி வருகிறேன்: ஃப்ரெஷ் ஆயிட்டு வரேன்.
நாவிதர், அம்பட்டர்:  ஹேர் ட்ரெசர் 
வண்ணார், சலவையாளி:  டோபி 
பள்ளிக்கூடம்: ஸ்கூல் 
பேனா:  பென் 
அரசியல்: பாலிடிக்ஸ் 
எதிர்காலம்:  ஃப்யூச்சர் 
தேதி: டேட் 
கண்கூடு: ரியாலிட்டி
மை, மசி :  இங்க் 
ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி:  சண்டே, மண்டே, ட்யூஸ்டே , வென்ஸ்டெ, தர்ஸ்டே, ஃப்ரைடே, சாட்டர்டே 

இன்னும் நூற்றுக்கணக்கில் உள்ளன.  இவை கடந்த முப்பது ஆண்டுகள் முன்னர்வரை நான் தமிழ்நாட்டில் உபயோகித்த சொற்கள்.  இவை காணாமலே போய்விட்டன.  இவற்றை ஒரு சிறிய புத்தகமாகவே போடலாம்.  அறுபது, எழுபது ஆண்டுகளுக்கு முன்பு, மாற்று மொழிச் சொற்களுக்கு என்ன தமிழ்ச் சொற்கள் என்று சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ஒரு நூலே வெளியிட்டது.  அப்பொழுது வடமொழி மற்றும் உருதுச் சொற்களின் தாக்கம் அதிகம் காணப்பட்டது.  கடந்த முப்பது ஆண்டுகளில் ஆங்கிலத்தின் தாக்கம் அதிகரித்திருக்கிறது என்பது கண்கூடு. 

வேந்தன் அரசு

unread,
Mar 23, 2015, 10:34:06 PM3/23/15
to vallamai, mintamil
கண்ணே கலைமானே என்று கண்ணதாசன் கடைசியாக எழுதிய பாடல் தவறோ
கண்ணே பிணைமானே என்று எழுதி இருக்கலாம்



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

shylaja

unread,
Mar 23, 2015, 10:38:45 PM3/23/15
to vallamai, mintamil
பந்தனை.............அசதி, களைப்பு

(//அந்தியம் போதிலரியுருவாகி அரியையழித்தவனை
பந்தனை தீரப்பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்று பாடுதுமே.//

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

shylaja

unread,
Mar 23, 2015, 10:41:03 PM3/23/15
to vallamai, mintamil
என்ன தவறு வேந்தரே புரியவில்லையே..

2015-03-24 8:04 GMT+05:30 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

தேமொழி

unread,
Mar 23, 2015, 11:03:16 PM3/23/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
கலை = ஆண்மான்
பிணை = பெண்மான்

வேந்தர் மிக நுட்பமாக ஆராய்து கவலைப்படுகிறார். 

பொருட்குற்றமாம். 

..... தேமொழி 




On Monday, March 23, 2015 at 7:41:03 PM UTC-7, shylaja wrote:
என்ன தவறு வேந்தரே புரியவில்லையே..
2015-03-24 8:04 GMT+05:30 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
கண்ணே கலைமானே என்று கண்ணதாசன் கடைசியாக எழுதிய பாடல் தவறோ
கண்ணே பிணைமானே என்று எழுதி இருக்கலாம்



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

shylaja

unread,
Mar 23, 2015, 11:07:48 PM3/23/15
to vallamai, mintamil
வேந்தர் அல்லவா  அதான்:):)

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

Pandiyaraja

unread,
Mar 23, 2015, 11:18:34 PM3/23/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
இறுவரை ஒரு அருமையான சங்கச் சொல். வரை என்றால் மலை. மலை ஓரிடத்தில் இற்றுப்போனால் எப்படி இருக்கும்? அப்படியே அதலபாதாளம். அதுதான் mountain CLIFF. இந்தக் Cliff என்பதற்கான அருமையான தமிழ்ச்சொல் இறுவரை.

இறுவரை (6)
இரும் கல் இகுப்பத்து இறுவரை சேராது - மலை 367
இறுவரை புரையுமாறு இரு கரை ஏமத்து - பரி 7/40
இறுவரை இழிதரும் பொன் மணி அருவியின் - பரி 13/3
இறுவரை வேங்கையின் ஒள் வீ சிதறி - கலி 41/11
இருள் தூங்கு இறுவரை ஊர்பு இழிபு ஆடும் - கலி 43/13
இறுவரை வீழ்நரின் நடுங்கி தெறுவர - அகம் 322/4

ப.பாண்டியராஜா


On Tuesday, March 24, 2015 at 8:37:48 AM UTC+5:30, shylaja wrote:
வேந்தர் அல்லவா  அதான்:):)
2015-03-24 8:33 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
கலை = ஆண்மான்
பிணை = பெண்மான்

வேந்தர் மிக நுட்பமாக ஆராய்து கவலைப்படுகிறார். 

பொருட்குற்றமாம். 

..... தேமொழி 




On Monday, March 23, 2015 at 7:41:03 PM UTC-7, shylaja wrote:
என்ன தவறு வேந்தரே புரியவில்லையே..
2015-03-24 8:04 GMT+05:30 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
கண்ணே கலைமானே என்று கண்ணதாசன் கடைசியாக எழுதிய பாடல் தவறோ
கண்ணே பிணைமானே என்று எழுதி இருக்கலாம்



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
 
அன்புடன்
ஷைலஜா

நலம்   வாழ எந்நாளும் வாழ்த்துங்கள்!!

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

கோதண்டராமன்

unread,
Mar 23, 2015, 11:58:22 PM3/23/15
to mint...@googlegroups.com
வம் என்ற சொல் வாருங்கள் என்ற பொருளில் தேவாரத்தில் பயன்படுத்தப் பட்டுள்ளது.
பழகும் தொண்டர் வம் அழகன் அன்னியூர்க்
குழகன் சேவடி தொழுது வாழ்மினே. [சம்பந்தர்- 1_96_2]
இறைவன் பால் மனம் ஒன்றிப் பழகும் தொண்டர்களே வாருங்கள் என்று பொருள் கொடுக்கப்பட்டுள்ளது.

N. Ganesan

unread,
Mar 24, 2015, 12:09:24 AM3/24/15
to mint...@googlegroups.com


On Monday, March 23, 2015 at 8:58:22 PM UTC-7, கோதண்டராமன் wrote:
வம் என்ற சொல் வாருங்கள் என்ற பொருளில் தேவாரத்தில் பயன்படுத்தப் பட்டுள்ளது.

வம்மின் < வருமின். சங்க இலக்கியத்தில் இருந்து இன்றும் இருக்கிறது.

ஆசை உண்டேல் வம்மின் - திருவருட்பா

நா. கணேசன்

சொ. வினைதீர்த்தான்

unread,
Mar 24, 2015, 12:37:51 AM3/24/15
to mintamil
சுணங்கன் - ஆண் நாய்.
முடுவல் - பெண்நாய்

யாரைக் காமன் துயர்செய்யான்?!!! (விவேகசிந்தாமணி)

உணங்கி யொருகால் முடமாகியொருகண் ணின்றிச் செவியிழந்து
வணங்கு நெடுவா லறுப்புண்டு மன்னு முதுகில் வயிறொட்டி
அணங்கு நலிய மூப்பெய்தி யகல்வா யோடு கழுத்தேந்திச்
சுணங்கன் முடுவல் பின்சென்றா லியாரைக் காமன் றுயர்செய்யான்?
------------------------------------------------------------------------------------------------------------------------------------------

எண்கு - ஆண்கரடி
பிணவு - பெண்கரடி
மணிமேகலையில் நாகர்களிடம் சிக்கிய சாதுவனை தலைவனிடம் அழைத்துச்செல்கிறார்கள். அவன் ஆண்கரடி பெண்கரடியுடன் அமர்ந்திருப்பதைப்போல கள்காய்ச்சுகிற நாற்றம், ஊனால் நாற்றமெடுத்த சூழலில் இருந்தானாம்.
“கள்அடு குழிசியும் கழிமுடை நாற்றமும்
வெள்என்பு உனங்கலும் விரவிய இருக்கையில்
எண்குதன் பிணவோடு இருந்ததுபோலப்
பெண்டுடன் இருந்த பெற்றி(!) நோக்கி

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

Dev Raj

unread,
Mar 24, 2015, 12:41:19 AM3/24/15
to mint...@googlegroups.com
https://groups.google.com/forum/?fromgroups=#!topic/mintamil/EoB3rkKHGTE%5B1-25%5D

இவுளி மறவன் - இவ்விழை சங்கம் தொட்டு நீடித்த பயன்பாட்டில்
இருந்து பின்னர் வழக்கொழிந்த பல சொற்களைத் தருகிறது


தேவ்

தேமொழி

unread,
Mar 24, 2015, 12:44:09 AM3/24/15
to mint...@googlegroups.com
  1. கங்குல் (இரவு) 
  2. ஏமம் (இரவு)
  3. கடிதல் (கோபம் கொள்ளுதல், அழித்தல்)
  4. வங்கம் (படகு)
  5. ஓடம் (படகு)
  6. படப்பை (தோட்டம்)
  7. முகை (மொட்டு, மொக்கு)
  8. படுநர் (உழைப்பாளி)
  9. பகடு (காளை)
  10. அசாவா (அயராத)
  11. அடுதல்  (சமைத்தல்)
  12. அடுக்களை (சமையலறை)

Pandiyaraja

unread,
Mar 24, 2015, 12:49:47 AM3/24/15
to mint...@googlegroups.com
1980-களில் நான் எழுதி, கலைக் கதிர் மாத இதழில் வெளிவந்த 'சங்க இலக்கியத்தில் சொல்லாக்கம்' என்ற கட்டுரையிலிருந்து.....

1. continuity என்பதனைத் தொடர்ச்சி என்று சொல்லலாம். கணிதத்தில் point of discontinuity என்ற ஒரு வழக்கு உண்டு. இதனைத் தொடர்ச்சியின்மைப்புள்ளி என்று நீட்டிமுழக்கிச் சொல்வார்கள். (இன்று எப்படியோ?). இதற்குச் சங்க இலக்கியத்தில் ஓர் அழகிய சொல் உண்டு.
வள்ளல்கள் நிறையக் கொடுத்த பரிசில்களினால் பாணர்கள் இடையறவின்றி உண்கிறார்களாம். There is no point of discontinuity in their food!!!
நல்குநர் ஒழித்த கூலிச் சில்பதம்
ஒடிவை இன்றி ஓம்பாது உண்டு - அகநானூறு 301:4,5

இங்கு ஒடிவை என்பது தொடர்சியின்றி முறிந்துபோவது. அதுதான் discontinuity. இது தொடர்ச்சி என்பதன் எதிர்ச்சொல்லாக இல்லாமல், ஒரு நேர்ச்சொல்லாகவே எதிர்மறயைக் குறிப்பது இதன் சிறப்பு.

ஒடிவுப்புள்ளி - point of discontinuity எனலாம்.

2. வேகம் என்பதை speed என்கிறோம். velocity? As a technical word, Speed is a scalar and velocity is a vector.  A vector has both magnitude and direction. எனவே velocity என்பதைத் திசைவேகம் என்கிறோம். (இதுவும் இன்று எப்படியோ?) இதற்கும் சங்க இலக்கியத்தில் ஓர் அழகிய சொல் உண்டு.
செஞ்ஞாயிற்றுச் செலவும் அஞ்ஞாயிற்றுப் பரிப்பும், பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும் என்று வரும் புறநானூற்றுப்பாடலில் (பாடல் 30) வரும் பரிப்பு என்ற சொல் இதற்குப் பொருந்தும் என நினைக்கிறேன். பரி என்பதற்கு ஓடு என்ற ஒரு பொருள் உண்டு. அதுவே பெயர்ச்சொல்லாக ஓட்டம் என்பதனையும் குறிக்கும். அதனைக் கலைச்சொல் ஆக்க்லாம். கலைச்சொல் என்பது ஒரு குறிப்பிட்ட பொருளை உட்பொதித்து வைத்த சொல்தானே! எனவே velocity -ஐப் பரிப்பு எனலாம்.

Dev Raj

unread,
Mar 24, 2015, 1:05:05 AM3/24/15
to mint...@googlegroups.com
On Monday, 23 March 2015 21:49:47 UTC-7, Pandiyaraja wrote:
செஞ்ஞாயிற்றுச் செலவும் அஞ்ஞாயிற்றுப் பரிப்பும், பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும் என்று வரும் புறநானூற்றுப்பாடலில் (பாடல் 30) வரும் பரிப்பு என்ற சொல் இதற்குப் பொருந்தும் என நினைக்கிறேன். பரி என்பதற்கு ஓடு என்ற ஒரு பொருள் உண்டு. அதுவே பெயர்ச்சொல்லாக ஓட்டம் என்பதனையும் குறிக்கும். அதனைக் கலைச்சொல் ஆக்கலாம். கலைச்சொல் என்பது ஒரு குறிப்பிட்ட பொருளை உட்பொதித்து வைத்த சொல்தானே! எனவே velocity -ஐப் பரிப்பு எனலாம்.
 

அருமை !


தேவ்

N. Ganesan

unread,
Mar 24, 2015, 6:52:05 AM3/24/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


On Monday, March 23, 2015 at 8:03:16 PM UTC-7, தேமொழி wrote:
கலை = ஆண்மான்
பிணை = பெண்மான்

வேந்தர் மிக நுட்பமாக ஆராய்து கவலைப்படுகிறார். 

பொருட்குற்றமாம். 

கலை என்பது முசுவைக் குறிக்கும்.
கல்-/கர்- = கருப்பு. கலைமா(ன்) = கிருஷ்ணமிருகம் = blackbuck.
ஆண் விலங்குகளே கறுப்பாய் இருப்பதால், கலை என்றால்
அவற்றிற்கு வரும்.

சினிமா பாடலாசிரியர்களுக்கு இந்த சொல்வேர் நுட்பம்
தெரிய வாய்ப்பில்லை. 

மேலும், இசைக்காகவோ, வேறுகாரணங்களுக்காகவோ
பால்மயங்கலாம்.

ஆண் மயில் தானே தோகை விரிக்கும்?

மாதவிப் பொன்மயிலாள் தோகை விரித்தாள்:

நா. கணேசன்
 

..... தேமொழி 




On Monday, March 23, 2015 at 7:41:03 PM UTC-7, shylaja wrote:
என்ன தவறு வேந்தரே புரியவில்லையே..
2015-03-24 8:04 GMT+05:30 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
கண்ணே கலைமானே என்று கண்ணதாசன் கடைசியாக எழுதிய பாடல் தவறோ
கண்ணே பிணைமானே என்று எழுதி இருக்கலாம்



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

Hari Krishnan

unread,
Mar 24, 2015, 7:03:54 AM3/24/15
to vallamai, mintamil

2015-03-24 16:22 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
சினிமா பாடலாசிரியர்களுக்கு இந்த சொல்வேர் நுட்பம்
தெரிய வாய்ப்பில்லை. 

மேலும், இசைக்காகவோ, வேறுகாரணங்களுக்காகவோ
பால்மயங்கலாம்.

ஆண் மயில் தானே தோகை விரிக்கும்?

மாதவிப் பொன்மயிலாள் தோகை விரித்தாள்:

நடிக்கும் மயில் என்ன வரும் நவ்விவிழியாரும்,
வடிக்கும் அயில் வீரரும், மயங்கினர் திரிந்தார்;
இடிக்கும் முரசக் குரலின், எங்கும் முரல் சங்கின்,
கொடிக்களின் உணர்ந்து, அரசர் கோ நகர் அடைந்தார். 

பால காண்டம், சந்திரசைலப் படலம்.

நவ்வி வீழ்ந்து என நாடக மயில் துயின்று என்ன 

கைகேயியைப் பற்றிய பிரபலமான மேற்கோள்.

‘பால் மயங்கலாம்’ என்று மனங்கனிந்து சொன்னீரோ, கம்பன் சினிமாக் கவிஞன் ஆகாமல் பிழைத்தானோ!  கண்ணே கலைமானே பாட்டை அளவுக்கு மேல நோண்டினவர் என்ன சொல்ல வரார்னு புரியல.  அடுத்தவங்கள முட்டாளடிக்கறதுல ஒரு சந்தோஷமோ!  இருக்கட்டும்.


--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

Innamburan S.Soundararajan

unread,
Mar 24, 2015, 7:43:54 AM3/24/15
to mintamil, vallamai
இந்த இழை தமிழ் மரபு கட்டளைக்கு முக்கியமான இழை. வருங்காலத்துக்கு உதவும். இதை பொறுப்புடன் வழி நடத்துவது பொது பணி. அங்கு போய் குரங்கு படங்கள் 'மானாவாரியாக'( இந்த சொல்லை கவனிக்கவும்.)நிரப்புவதில் யாருக்கு ஆதாயம்? மிக்க ஆவலுடன், செல்வன் செய்த மாதிரி, நானும் எழுத நினைத்தேன். சாண்றுக்கு கிரியா அகராதி, லிஃப்கோ அகராதி, லெகசிகன் எல்லாம் என் கண் முன்னால் அணி வகுத்து நிற்கின்றன. இந்த் இழை 'குருட்டாம்போக்கில்'( இந்த சொல்லை கவனிக்கவும்.) போவதால் எனகு சலிப்பு மிகுந்து விட்டது.

Hari Krishnan

unread,
Mar 24, 2015, 7:46:00 AM3/24/15
to mintamil, vallamai

2015-03-24 17:13 GMT+05:30 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>:
இந்த் இழை 'குருட்டாம்போக்கில்'( இந்த சொல்லை கவனிக்கவும்.) போவதால் எனகு சலிப்பு மிகுந்து விட்டது.

மன்னிக்கவும்.  இழைத் தலைப்பை கவனிக்கத் தவறிவிட்டேன்.  உங்களுடைய பங்களிப்பால் செழிப்பு பெருகட்டும்.

Innamburan S.Soundararajan

unread,
Mar 24, 2015, 8:05:35 AM3/24/15
to vall...@googlegroups.com, mintamil
புரிதலுக்கு நன்றி, திரு.ஹரிகி. மற்றவர்களும் புரிந்து கொண்டால் நான் 'ஆசுவாசப்படுத்திக்கொள்வேன்.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

Hari Krishnan

unread,
Mar 24, 2015, 8:15:42 AM3/24/15
to mintamil

2015-03-24 10:14 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
அசாவா (அயராத)

அருமை உடைத்தென்று அசாவாமைலேந்து பிடிச்சீங்களோ?  அசாவா என்று சொல்லே கிடையாது.  அசாவுதல், அயாவுதல் என்ற சொல்லை மூலமாக உடையது இந்த அசாவாமை.  

MURUGAVEL S

unread,
Mar 24, 2015, 11:08:44 AM3/24/15
to mint...@googlegroups.com
உங்களது பயனம் உங்கலோடு மட்டும், முடிந்துவிடாது மற்றவரும், நானும்,
தொடரலாமே. சு.மு. முருகவேல்
> --
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups
> "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to mintamil+u...@googlegroups.com.
> For more options, visit https://groups.google.com/d/optout.
>


--
சு.மு. முருகவேல் கைப்பேசி 9047106966 எனது தனி மின்னஞ்சல்
s.muru...@gmail.com 8903127255 உழைப்பே உயர்வு. வாழு
ம் காலத்தில் எலிமை வளிமை மகிழ்ச்சி என்றே வழவேண்டும். அன்புடன் சு.முருகவேல்
என் மரபனு தமிழர் வழி இல்லைய எ
ன்றால் மரணித்து மறுபடி பிறப்பேன் தமிழனாக......

Tthamizth Tthenee

unread,
Mar 24, 2015, 11:33:49 AM3/24/15
to mint...@googlegroups.com
​புழக்கடை     

பழைய  வீடுகளில்   வாசல்  ,   திண்ணை,  தாழ்வாரம்​,  முற்றம்,  அடுக்களை,  புழக்கடை போன்ற சொற்களைப்   பயன்படுத்துவார்கள்


உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள்    என்கிறாள்  ஆண்டாள்


வாவி என்றால்  கிணறு

கிணறு  என்னும் சொல்லே   இப்போதெல்லாம் வழக்கொழிந்து போய்விட்டது

ஏனென்றால்  கிணறே வழக்கொழிந்து போய்விட்டதே


ஏற்றம் ,கவலை,  போன்ற  சொற்களும்  வழக்கொழிந்து போய்விட்டன

அன்புடன்
தமிழ்த்தேனீ




அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net




கோதண்டராமன்

unread,
Mar 24, 2015, 11:39:40 AM3/24/15
to mint...@googlegroups.com
நான் சிறுவயதில் கேட்ட சொற்கள்-
தேச காலம் - நேரம்
கசாலை- சமையலறை
சிறு தாயார்- சித்தி
பிகுவாக- இறுக்கமாக tight
உரமாக- வலிமையாக
தர்வியாக- வலிமையின்றி
சோமன்- வேட்டி
உருமால்- துண்டு
சீசா, குப்பி- பாட்டில்
போணி-வாயகன்ற பாத்திரம்
குண்டு - வாய் குறுகலான பாத்திரம்
சதிர்-நாட்டியம்

Hari Krishnan

unread,
Mar 24, 2015, 11:45:23 AM3/24/15
to mintamil

2015-03-24 21:03 GMT+05:30 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:
வாவி என்றால்  கிணறு

கிணறு  என்னும் சொல்லே   இப்போதெல்லாம் வழக்கொழிந்து போய்விட்டது

ஏனென்றால்  கிணறே வழக்கொழிந்து போய்விட்டதே


மன்னிக்க வேண்டும்.  வாவி என்றால் சிறு குளம்.  (கேணி என்றாலும் சிறு குளம்தான்.)


உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் கூம்பின காண்

செங்கழுநீர்ப் பூவும் ஆம்பலும் பூத்தும் கூம்பியும் நடக்க வேண்டுமானால் அது கிணறாக இருந்தால் முடியாது.  குளமாக இருக்க வேண்டும்.  

வாவி vāvi

n. < vapī. 1. Tank, reservoir of water; 


என்பது லெக்சிகன்.  படிக்கட்டுகளுடன் கூடிய மிகப் பெரிய கிணறு என்றும் கருத இடமுண்டு.

Tthamizth Tthenee

unread,
Mar 24, 2015, 12:03:21 PM3/24/15
to mint...@googlegroups.com
ஹரிகியாரே  நலமா

வாவி என்று     ஆண்டாள் குறிப்பிடுவது  கிணறாகத்தானே இருக்க வேண்டும்

 ஏனென்றால் தோட்டத்து  வாவி என்றால்  குளமாக இருக்க வாய்ப்பில்லையே

ஒரு வேளை நீங்கள் சொல்வது போல  இப்படி இருக்கலாம்


 "என்பது லெக்சிகன்.  படிக்கட்டுகளுடன் கூடிய மிகப் பெரிய கிணறு என்றும் கருத இடமுண்டு."

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net




--

S NEELAKANTAN

unread,
Mar 24, 2015, 12:19:12 PM3/24/15
to mintamil
கொல்லை 
ரேழி (திண்ணை , நடை (ரேழி), தாழ்வாரம் (தாவாரம்)
மாட்டுக்கொட்டில் 
கழநீர் (கழுநீர்)
உமி - தவிடு  
தாலம் - தட்டம் 
போணி (பாத்திரம்)
ஆப்பை -அகப்பை 
முங்கி ( முங்கி குளித்தல் )

 திருச்செம்பூரான் 


--



 

Hari Krishnan

unread,
Mar 24, 2015, 12:20:32 PM3/24/15
to mintamil
2015-03-24 21:32 GMT+05:30 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:
ஹரிகியாரே  நலமா

நலமே 

வாவி என்று     ஆண்டாள் குறிப்பிடுவது  கிணறாகத்தானே இருக்க வேண்டும்

 
 ஏனென்றால் தோட்டத்து  வாவி என்றால்  குளமாக இருக்க வாய்ப்பில்லையே


தோட்டம் என்றால் நம்ம காலத்து அளவு கோல் இல்ல.  புழக்கடை தோட்டம் நல்லா ஒரு மூணு நாலு ஸிக்ஸ்டி ஃபார்ட்டி சைஸ் இருந்தாத்தான் ‘எருமைச் சிறுவீடு மேய்வான் பரந்தனகாண்’ அப்படின்னு டிஃபனுக்காக காலைல அத்தனை எருமைகளை அவிழ்த்து விட முடியும்.  கேணி, சிறு குளம் போன்றவை புழக்கடைக்கானவை.  குளிப்பதற்கானது குளம்.  குள் என்ற வேர்ச்சொல் (யையையோ.. வம்பா பூடும்!) உடையது குளம். திரு அல்லிக் கேணி-யில் உள்ளதைப் போல சிறுகுளம் வாவி அல்லது வாபி.

ஒரு வேளை நீங்கள் சொல்வது போல  இப்படி இருக்கலாம்
படிக்கட்டுகளுடன் கூடிய மிகப் பெரிய கிணறு என்றும் கருத இடமுண்டு."

கிண.று பெரிய கிணறாக இருந்தாலும், சதா இறைத்துக் கொண்டிருக்கும் அதிர்வுமிகு நீர்நிலையில் செங்கழுநீர்ப் பூவும் ஆம்பலும் பூக்குமா தெரியாது.  ராஜம் அக்கா ஸ்கேலைத் தேடிட்டிருக்கறதா கேள்வி!)

க்ருஷ்ணகுமார்

unread,
Mar 24, 2015, 12:50:15 PM3/24/15
to mint...@googlegroups.com

மடி = சோம்பல்

மிடி = வறுமை

Dev Raj

unread,
Mar 24, 2015, 1:14:47 PM3/24/15
to mint...@googlegroups.com
On Tuesday, 24 March 2015 08:45:23 UTC-7, Hari wrote:
வாவி என்றால் சிறு குளம்.  (கேணி என்றாலும் சிறு குளம்தான்.)
வாவி vāvi

n. < vapī. 1. Tank, reservoir of water; 

 
வாபி  - vApi 

 वापि [ vāpi ]  f. =  a pond

Megala Ramamourty

unread,
Mar 24, 2015, 1:18:33 PM3/24/15
to மின்தமிழ்
கிருஷ்ணகுமார் ஐயா,

மடி என்ற சொல்தான் எத்தனைப் பொருள்களில் கையாளப்படுகிறது பாருங்கள்!

மடி என்பது பெயர்ச்சொல்லாக வரும்போது சோம்பல், அத்தை மடி, மாட்டு மடி எனும் பல பொருள்கள்.
இதுவே வினைச்சொல்லாக வரும்போது மடிந்துபோ,  மடித்து வை எனும் பொருள்களில் வரக் காண்கிறோம்.

’தன் குடியை உயர்த்துவேன்’ என்று முயல்வோனுக்குத் தெய்வம் ஆடையை இறுகக் கட்டிக்கொண்டு வந்து துணை செய்யும் எனும் இடத்தில் வள்ளுவர் ‘மடிதற்று’ எனும் சொல்லைப் பயன்படுத்துகிறார்.
குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான் முந்துறும்.  இங்கே ’மடிதற்று’ என்பது ஆடையை இறுக(மடித்து)க்கட்டிக்கொண்டு என்று பொருள் தருகின்றது.

இவையல்லாமல் அந்தணர்கள் பயன்படுத்தும் ’மடி’க்குக் குளித்து முழுகிவிட்டுச் சுத்தமாக இருத்தல் என்ற பொருள்வேறு உண்டு.  :-)
 
Thanks for reminding this wonderful word at this moment sir!   :-))

அதுபோல் ’மிடி’ எனும் சொல்லுக்கு ’வறுமை’ என்பதல்லாமல் ’துன்பம்’ எனும் பொருளும் உண்டு!

அன்புடன்,
மேகலா



On Tue, Mar 24, 2015 at 12:50 PM, க்ருஷ்ணகுமார் <vraj...@gmail.com> wrote:

மடி = சோம்பல்

மிடி = வறுமை

Suba.T.

unread,
Mar 24, 2015, 2:23:40 PM3/24/15
to மின்தமிழ், Subashini Tremmel


2015-03-23 23:16 GMT+01:00 செல்வன் <hol...@gmail.com>:
செங்கிருதம் தமிழுடன் எத்தனை வலிமையாக ஒன்றுபட்டுள்ளது என்பதை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை :-)

வானரம், நித்திரை என்பவை சமஸ்கிருத சொற்கள்...தமிழ் அத்தனை அழகாக அவற்றை உள்வாங்கியுள்ளது.

​பரவாயில்லையேஇப்பட்க் கேட்டதால் எனக்கும் இச்சொற்கள் பற்றிய தெளிவு கிடைத்தது.

சுபா
 

Suba.T.

unread,
Mar 24, 2015, 2:24:49 PM3/24/15
to மின்தமிழ், Subashini Tremmel


2015-03-24 1:00 GMT+01:00 N. Ganesan <naa.g...@gmail.com>:


On Monday, March 23, 2015 at 3:17:21 PM UTC-7, செல்வன் wrote:
செங்கிருதம் தமிழுடன் எத்தனை வலிமையாக ஒன்றுபட்டுள்ளது என்பதை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை :-)

வானரம், நித்திரை என்பவை சமஸ்கிருத சொற்கள்...தமிழ் அத்தனை அழகாக அவற்றை உள்வாங்கியுள்ளது.

வானரம்- வனம் மற்றும் நரன் என்பதன் கூட்டுச்சொல்

கடுவன் - மந்தி என்பன தமிழ்ச் சொற்கள்.

வானரம் - குரங்கின் இரு பாலுக்கும் பொது.


​ஓ அருமை. 
​நன்றி

சுபா

Suba.T.

unread,
Mar 24, 2015, 2:26:38 PM3/24/15
to மின்தமிழ், Subashini Tremmel


2015-03-24 1:25 GMT+01:00 Megala Ramamourty <megala.r...@gmail.com>:
//வானரம் - குரங்கின் இரு பாலுக்கும் பொது.//
ஆம்...வானரம் என்பது குரங்கின் இருபாலுக்கும் பொதுவாகத்தான் பெரும்பாலும் வழக்கிலுள்ளது. வாலுள்ள குரங்கு, வாலில்லாக் குரங்கு இரண்டுக்குமே இது பொதுச்சொல் என்கிறது இணைய அகராதி.

ஆயினும், குற்றாலக்குறவஞ்சிப் பாடலொன்றில் ’வானரம்’ என்ற சொல் ஆண்குரங்கைக் குறிப்பதாய் வந்துள்ளதாகத் தோன்றுகிறது.

வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
    மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்...(அடடா... என்ன அழகான பாடல்!)

​கவிஞரும் என்னைப் போல குழம்பியிருப்பார் போல மேகலா..:-)

சுபா

Suba.T.

unread,
Mar 24, 2015, 2:29:23 PM3/24/15
to மின்தமிழ், Subashini Tremmel


2015-03-24 1:56 GMT+01:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
On Monday, March 23, 2015 at 3:20:18 PM UTC-7, செல்வன் wrote:
நாகு - இளமை என்பதற்கான தமிழ்ச்சொல்


பெரும்பாணாற்றுப்படையிலும், புறநானூற்றிலும், திருமுருகாற்றுப்படையிலும் பலியாகும்
”விடை” என்பது ஆடு. அதனை ஊர்மன்றில் அறுத்து புலாச்சோறு செய்து ஊரார் உண்டு மகிழ்ந்தார்கள்
என்று பெரும்பாணாற்றுப்படையிலும், திருமுருகில் முருகனுக்கு கிடாய்ப் பொலி (பலி) தரப்பட்டது
என்றும் பார்க்கலாம். இவையெல்லாம், ஊரே மாட்டை வெட்டிச் சாப்பிட்டதல்ல. அப்படி சங்க
இலக்கியத்தில் அரசவை, திருக்கோவில்கள், ஆகோள் கொண்டபின் ஊர்மன்றத்தில் நடக்கும்
கொண்டாட்ட திருவிழா எல்லாவற்றிலும் ஆடு இல்லை, மாடுகளைக் கொன்று ஊரார் எல்லோரும்
உண்டார்கள் என்றால், மாடு அடித்து சாப்பிடும் வழக்கம் எப்போது மாறியது? என்று காட்டவேண்டும் அல்லவா?
சங்க காலத்திலும் அதன் பின்னரும் வேளிர்களும், வேளாளர்களும் சமூகத்தில் மாடு அடித்துப்
பலி இடுதலை நிறுத்திவிட்டார்கள் என்பது வரலாறு. 

அதே பெரும்பாணாற்றுப்படையிலே முல்லை நில இடைச்சியர் பெண்ணொருத்தி
நெய்க்கு விலையாக ஆணிப்பசும் பொன்னே கொடுத்தாலும் பெற்றுக்கொள்ளமாட்டாளாம்.
அதற்குப் பதிலாக நாகு இளம்கன்றுடன் உள்ள எருமையை வாங்கிக்கொள்வாளாம்.
அப்பொழுது பால்கறந்து ஊற்றி அவள் குலவணிகம் தழைக்கும் அல்லவா?

நெய் விலைக் கட்டிப் பசும் பொன் கொள்ளாள், 
எருமை நல் ஆன் கரு நாகு பெறூஉம் 
மடி வாய்க் கோவலர் குடிவயிற் சேப்பின், 

எருமை நல்லான் = நல்ல எருமைமாடு. அதன் கன்னங்கரிய கண்ணுக்குட்டி = கருநாகு
முல்லை நில ஆய்ச்சி பெறுவது. ஆயர்களுக்கும், ஆய்ச்சியர்க்கும் மாடுகள்
தெய்வம். பொன்னைத் தூசாக எண்ணுவர்.
ரசிக்கும் வகையில் அருமையான விளக்கம்.

சுபா


Suba.T.

unread,
Mar 24, 2015, 2:31:39 PM3/24/15
to மின்தமிழ், Subashini Tremmel


2015-03-24 2:40 GMT+01:00 Oru Arizonan <oruar...@gmail.com>:
வழக்கொழிந்ததமிழ்ச் சொற்கள் என்று தலைப்பு இருப்பதால், தமிழில் வழக்கொழிந்த வடமொழிச் சொற்களைத் தராது, வழக்கொழிந்த தமிழ்ச் சொற்களையும், அதற்குப்பதிலாகக் கையாளப்படும்  மற்றமொழிச் சொற்களையும் தருகிறேன்.

வானரர்கள், மற்றும் இதர விலங்குகளைப்பற்றிய ஆராய்ச்சியைச் சாற்றி நிறுத்தி, இழையைத் திசை திருப்பாமல் இருப்போமாக.  இந்த விஷயத்தில் நான் வானரத்தைப் பற்றிய விளக்கம் கொடுத்துக்  குற்றம் செய்தவன் ஆகிறேன்.

தமிழ்:
படிக்கிறேன், கற்கிறேன்:  ....பண்றேன் 
மயிர்:  முடி 


வடமொழி:
ஆண்டு:  வருஷம்
கையாளு:  உபயோகி 
சொல்:  வார்த்தை 
முன்னுக்கு வா:  ஜயி 
தோல்:  சருமம் 

ஆங்கிலச் சொற்கள்:
முக்காலி: ஸ்டூல்
திருப்புளி: ஸ்க்ரூ ட்ரைவர் 
சுத்தியல்: ஹாமர் 
மனக்குழப்பம், மனக்கவலை:  டென்ஷன்
உறுத்தல்: இரிட்டேஷன் 
வெறுப்பு: ஹேட்
முகம் கழுவி வருகிறேன்: ஃப்ரெஷ் ஆயிட்டு வரேன்.
நாவிதர், அம்பட்டர்:  ஹேர் ட்ரெசர் 
வண்ணார், சலவையாளி:  டோபி 
பள்ளிக்கூடம்: ஸ்கூல் 
பேனா:  பென் 
அரசியல்: பாலிடிக்ஸ் 
எதிர்காலம்:  ஃப்யூச்சர் 
தேதி: டேட் 
கண்கூடு: ரியாலிட்டி
மை, மசி :  இங்க் 
ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி:  சண்டே, மண்டே, ட்யூஸ்டே , வென்ஸ்டெ, தர்ஸ்டே, ஃப்ரைடே, சாட்டர்டே 

இன்னும் நூற்றுக்கணக்கில் உள்ளன.  இவை கடந்த முப்பது ஆண்டுகள் முன்னர்வரை நான் தமிழ்நாட்டில் உபயோகித்த சொற்கள்.  இவை காணாமலே போய்விட்டன.  இவற்றை ஒரு சிறிய புத்தகமாகவே போடலாம்.  அறுபது, எழுபது ஆண்டுகளுக்கு முன்பு, மாற்று மொழிச் சொற்களுக்கு என்ன தமிழ்ச் சொற்கள் என்று சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ஒரு நூலே வெளியிட்டது.  அப்பொழுது வடமொழி மற்றும் உருதுச் சொற்களின் தாக்கம் அதிகம் காணப்பட்டது.  கடந்த முப்பது ஆண்டுகளில் ஆங்கிலத்தின் தாக்கம் அதிகரித்திருக்கிறது என்பது கண்கூடு. 

​மிக அருமை. இத்தகைய முயற்சிகள் எனக்கும் பயனாக இருக்கும்.  தொடர்க.

சுபா

Suba.T.

unread,
Mar 24, 2015, 2:36:22 PM3/24/15
to மின்தமிழ், Subashini Tremmel
அடுக்களை என்பது பேச்சு வழக்கு என்று நினைத்திருந்தேன். இது தூய தமிழா? கட்டுரைகளில் பயன்படுத்தலாமா?

சுபா


Suba.T.

unread,
Mar 24, 2015, 2:38:56 PM3/24/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-03-24 5:49 GMT+01:00 Pandiyaraja <pipi...@gmail.com>:
1980-களில் நான் எழுதி, கலைக் கதிர் மாத இதழில் வெளிவந்த 'சங்க இலக்கியத்தில் சொல்லாக்கம்' என்ற கட்டுரையிலிருந்து.....

1. continuity என்பதனைத் தொடர்ச்சி என்று சொல்லலாம். கணிதத்தில் point of discontinuity என்ற ஒரு வழக்கு உண்டு. இதனைத் தொடர்ச்சியின்மைப்புள்ளி என்று நீட்டிமுழக்கிச் சொல்வார்கள். (இன்று எப்படியோ?). இதற்குச் சங்க இலக்கியத்தில் ஓர் அழகிய சொல் உண்டு.
வள்ளல்கள் நிறையக் கொடுத்த பரிசில்களினால் பாணர்கள் இடையறவின்றி உண்கிறார்களாம். There is no point of discontinuity in their food!!!
நல்குநர் ஒழித்த கூலிச் சில்பதம்
ஒடிவை இன்றி ஓம்பாது உண்டு - அகநானூறு 301:4,5

இங்கு ஒடிவை என்பது தொடர்சியின்றி முறிந்துபோவது. அதுதான் discontinuity. இது தொடர்ச்சி என்பதன் எதிர்ச்சொல்லாக இல்லாமல், ஒரு நேர்ச்சொல்லாகவே எதிர்மறயைக் குறிப்பது இதன் சிறப்பு.

ஒடிவுப்புள்ளி - point of discontinuity எனலாம்.

2. வேகம் என்பதை speed என்கிறோம். velocity? As a technical word, Speed is a scalar and velocity is a vector.  A vector has both magnitude and direction. எனவே velocity என்பதைத் திசைவேகம் என்கிறோம். (இதுவும் இன்று எப்படியோ?) இதற்கும் சங்க இலக்கியத்தில் ஓர் அழகிய சொல் உண்டு.
செஞ்ஞாயிற்றுச் செலவும் அஞ்ஞாயிற்றுப் பரிப்பும், பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும் என்று வரும் புறநானூற்றுப்பாடலில் (பாடல் 30) வரும் பரிப்பு என்ற சொல் இதற்குப் பொருந்தும் என நினைக்கிறேன். பரி என்பதற்கு ஓடு என்ற ஒரு பொருள் உண்டு. அதுவே பெயர்ச்சொல்லாக ஓட்டம் என்பதனையும் குறிக்கும். அதனைக் கலைச்சொல் ஆக்க்லாம். கலைச்சொல் என்பது ஒரு குறிப்பிட்ட பொருளை உட்பொதித்து வைத்த சொல்தானே! எனவே velocity -ஐப் பரிப்பு எனலாம்.


​ஒடிவை , பரிப்பு என்ற இரு முற்றிலும் எனக்குப் புதிய சொற்களைத் தெரிந்து கொண்டேன்.
​நன்றி

சுபா

தேமொழி

unread,
Mar 24, 2015, 2:39:12 PM3/24/15
to mint...@googlegroups.com
On Tuesday, March 24, 2015 at 5:15:42 AM UTC-7, Hari wrote:

2015-03-24 10:14 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
அசாவா (அயராத)

அருமை உடைத்தென்று அசாவாமைலேந்து பிடிச்சீங்களோ?  அசாவா என்று சொல்லே கிடையாது.  அசாவுதல், அயாவுதல் என்ற சொல்லை மூலமாக உடையது இந்த அசாவாமை.  



ஊனமுற்ற  ஐயூர் முடவனார் என்னும் புலவர் வண்டியிலேயே பயணம்  செய்யும் நிலையில் இருந்தாராம்.  அவர் தாமான் தோன்றிக்கோன் என்பவனிடம் சென்று ...

"கடுந்தேர் அள்ளற்கு அசாவா நோன்சுவல்
பகடே அத்தையான் வேண்டிவந் ததுவென"

எனது வண்டி சேற்றில் சிக்கிக் கொண்டால், அதைத் தளராமல் இழுத்துச் செல்லும் வலிய கழுத்தையுடைய காளை ஒன்றை நான் உன்னிடம் விரும்பி கேட்க வந்தேன்  என்று புலவர் சொல்லி முடிக்கும் முன்னரே  அவன் அவருக்குப் பற்பல காளைகளை பரிசாக மனம் உவந்தளித்ததாக  தாமான் தோன்றிக்கோனுடைய வள்ளல் தன்மையைப் போற்றிப் பாடும் புறநானூற்றுப் பாடலில் வருகிறது.

புறநானூற்று பாடல் 399
கடவுட்கும் தொடேன்!
பாடியவர்: ஐயூர் முடவனார்


..... தேமொழி

தேமொழி

unread,
Mar 24, 2015, 2:58:00 PM3/24/15
to mint...@googlegroups.com, ksuba...@gmail.com


On Tuesday, March 24, 2015 at 11:36:22 AM UTC-7, Suba.T. wrote:


அடுக்களை (சமையலறை)

அடுக்களை என்பது பேச்சு வழக்கு என்று நினைத்திருந்தேன். இது தூய தமிழா? கட்டுரைகளில் பயன்படுத்தலாமா?


மணிமேகலையில் சமையலறை என்ற பொருளில்தான் வருவதாகத் தெரிகிறது சுபா.

புகையுடைத் தாதலா லெனல் பொருந்தேது
வகையமை யடுக்களை போற்றிட் டாந்தம்

மணிமேகலை   ( பாடல் 29, வரி 61)
தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை



..... தேமொழி

Oru Arizonan

unread,
Mar 24, 2015, 5:09:21 PM3/24/15
to mintamil
கடந்த முப்பது ஆண்டுகளில் வழக்கொழிந்த சில தமிழ்ச்சொற்கள்:  சில இன்னும் எழுத்து வழக்கத்தில் இருக்கின்றன.

ஆங்கிலம்:

வெக்கை, வெப்பம்:  ஹாட் 
குளிர், தணிப்பு:  கோல்ட் 
தண்ணீர்:  வாட்டர் 
விடுதி:  ஹாஸ்டல் 
பழரசம், பழச்சாறு:  ஜூஸ் 
அரிப்பு:  இச்சிங் 
உடம்பு, உடல்:  பாடி 
சட்டை:  ஷர்ட் 
கொல்லை:  பேக்யார்ட் 
சுத்தம்:  கிளீன் 
தரை:  ஃப்ளோர் 
மாடி:  அப்ஸ்டேர்ஸ் 
கணக்கு:  மாத்ஸ் 
அறிவியல், விஞ்ஞானம்:  ஸயன்ஸ் 



--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

Innamburan S.Soundararajan

unread,
Mar 24, 2015, 7:47:54 PM3/24/15
to mintamil
குஜராத்தில் கலைசுவை பொருந்திய கிணறுகளை வாவ் என்பார்கள்.
சருவம், துரட்டி, திமிறு, தோர்த்து தெரியுமா?
இன்னம்பூரான்

N. Ganesan

unread,
Mar 24, 2015, 7:53:38 PM3/24/15
to mint...@googlegroups.com


On Tuesday, March 24, 2015 at 8:33:49 AM UTC-7, தமிழ்த்தேனீ wrote:

ஏற்றம் ,கவலை,  போன்ற  சொற்களும்  வழக்கொழிந்து போய்விட்டன


கமலை - பேச்சு வழக்கில் கவலை. 

Innamburan S.Soundararajan

unread,
Mar 24, 2015, 7:55:13 PM3/24/15
to mintamil
பழமை பேசி!

--

N. Ganesan

unread,
Mar 24, 2015, 8:08:56 PM3/24/15
to mint...@googlegroups.com, vallamai

On Tuesday, March 24, 2015 at 8:33:49 AM UTC-7, தமிழ்த்தேனீ wrote:

ஏற்றம் ,கவலை,  போன்ற  சொற்களும்  வழக்கொழிந்து போய்விட்டன


கமலை - பேச்சு வழக்கில் கவலை. 

இன்னுமோர் குறிப்பு. கோம்பை ... போன்ற சொற்களில்
கோம்- வேர் இயங்குவது. இதுவே, கோமளம்.
வெண்காலூர் நீதியரைசரால் பதவிநீங்கியுள்ள செயலலிதா அம்மையாரின்
ஒரு பெயர் கோமளவல்லி என்று கேள்வி.  

கோமளம் > கமலம் (வடமொழியில் அரைவிரிந்தத்தின் (= அரவிந்தத்தின்) 
ஒரு பெயர்). இது த்ராவிடம் என்பர் சம்ஸ்க்ருத அறிஞர்,

 கமலம் போல் மூங்கில், இரும்புத் தப்பை ஃப்ரேம் மேல்,
தோல் மூடிச் செய்யப்படுவது கமலை. பேச்சுவழக்கில்
கமலை கவலை இறைப்பது.

நா. கணேசன்

Dhivakar V

unread,
Mar 24, 2015, 10:52:29 PM3/24/15
to mint...@googlegroups.com

But in telugu Vaavi is called as bhaavi in general they meant our kinaRu

Sent from my Sony Xperia™ smartphone



---- Dev Raj wrote ----

Dhivakar V

unread,
Mar 24, 2015, 10:57:15 PM3/24/15
to mint...@googlegroups.com

Al is also for night time
Sinthamanigal
Allai pagal sey thiruvenkatathaanr @ Nammazhwar

Sent from my Sony Xperia™ smartphone



---- Suba.T. wrote ----

க்ருஷ்ணகுமார்

unread,
Mar 24, 2015, 11:54:16 PM3/24/15
to mint...@googlegroups.com
அன்புடை மேகலா அம்மை

மடியிலாது மடியை அழகாக விளக்கியமைக்கு பரிசு கொடுக்காதும் போய் விடலாமோ.

இந்த மடி மடி என்று எழுதிக்கொண்டிருந்த போது வள்ளல் அருணகிரிப்பெருமானுடன் கண்சிமிட்டும் முத்துக்குமரன் படம் முன்னால் தெரிந்தது. அவன் படம் முன்னால் தெரிகையில் அவன் திருநாமத்தின் மகிமை நினைவில் வந்தது.

முடியாப் பிறவிக் கடலிற் புகார்முழு துங்கெடுக்கு
   மிடியாற் படியில் விதனப் படார்வெற்றி வேற்பெருமாள்
      அடியார்க்கு நல்ல பெருமாள் அவுணர் குலமடங்கப்
         பொடியாக் கியபெரு மாள்திரு நாமம் புகல்பவரே.

அடியார்க்கு நல்ல பெருமாளின் திருநாமம் புகல்பவர்கள் வறுமை துன்பமெலாம் நீங்கி இம்மையில் மட்டுமா நலம் பெறுவர்.........பிறந்திறக்கும் வாழ்க்கைக் கடலிலும் உழல மாட்டார் என்று வள்ளல் அருணகிரிப்பெருமான் சொல்லுகிறார்.

பரிசு இனிக்கிறது தானே!

தேமொழி

unread,
Mar 25, 2015, 12:14:48 AM3/25/15
to mint...@googlegroups.com
'அல்'லும் பகலும் என்று இன்றும்தான்   சொல்கிறோமே 


..... தேமொழி 



On Tuesday, March 24, 2015 at 7:57:15 PM UTC-7, dhivakar wrote:

Al is also for night time
Sinthamanigal
Allai pagal sey thiruvenkatathaanr @ Nammazhwar

Sent from my Sony Xperia™ smartphone



---- Suba.T. wrote ----



2015-03-24 5:44 GMT+01:00 தேமொழி <jsthe...@gmail.com>:
  1. கங்குல் (இரவு) 
  2. ஏமம் (இரவு)
  3. கடிதல் (கோபம் கொள்ளுதல், அழித்தல்)
  4. வங்கம் (படகு)
  5. ஓடம் (படகு)
  6. படப்பை (தோட்டம்)
  7. முகை (மொட்டு, மொக்கு)
  8. படுநர் (உழைப்பாளி)
  9. பகடு (காளை)
  10. அசாவா (அயராத)
  11. அடுதல்  (சமைத்தல்)
  12. அடுக்களை (சமையலறை)

அடுக்களை என்பது பேச்சு வழக்கு என்று நினைத்திருந்தேன். இது தூய தமிழா? கட்டுரைகளில் பயன்படுத்தலாமா?

சுபா


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Dev Raj

unread,
Mar 25, 2015, 12:23:18 AM3/25/15
to mint...@googlegroups.com
பிள்ளை - குட்டி, வீடு - வாசல்,காடு - கழனி, தோப்பு - துரவு என இல்வாழ்வோரின் 
உடைமைகளை இரட்டைகளாகச் சொல்வது வழக்கம்

துரவு - பெருங்கிணறு

பெரிய கிணற்றை ஒரே தாவாகத் தாண்டும் போட்டிகள்
இருந்திருக்கலாம்; கிணறு தாண்டுதலைத் துரவு தத்துதல்
என வைணவ நூல் ஒன்று கூறுகிறது .


கேணி, கிணறு, வாவி, துரவு என்ற சொற்கள் கிணற்றைக் குறிப்பன. இதில் துரவு என்பது அளவில் பெரிய, பாசனத்திற்குப் பயன்படும் கிணறு. இன்று கூட ஒருவரின் பொருளாதார நிலையைக் குறிக்க "தோட்டம் துரவு உள்ளவர்" என்ற வழக்குச் சொல் உள்ளது.

நட வாவி’ என்பதும் உள்ளது; படிக்கட்டுகளோடு ஒருவர் இறங்கிச்சென்று நீராடும்
நீர் நிலை என்று பொருள் கொண்டேன்; தவறாகவும் இருக்கலாம்


தேவ்

Hari Krishnan

unread,
Mar 25, 2015, 12:31:36 AM3/25/15
to mintamil

2015-03-25 9:53 GMT+05:30 Dev Raj <rde...@gmail.com>:
கேணி, கிணறு, வாவி, துரவு என்ற சொற்கள் கிணற்றைக் குறிப்பன.

திருவல்லிக்கேணியில் உள்ள கேணி எதைக் குறிக்கிறது?  அல்லி பூத்த கிணற்றையா?  என்னாங்க தேவ்!

இது பாரதியின் காணி நிலம் வேண்டும் பாட்டுக்கு நான் எழுதிய விளக்கக் கட்டுரையிலிருந்து (மிகப் பழையது)

===================
எல்லாவற்றையும் விட நாம் புரிந்து கொள்ளும் அழகைப் பாருங்கள்.  கேணி ஒன்று வேண்டும் என்று கேட்டானே (கேணியருகினிலே தென்னைமரம் கீற்றும் இளநீரும்.....)  கேணி என்றால் என்ன பொருள்?  கிணறு என்றா?  இந்தக் காட்சியைச் சித்திரமாகத் தீட்டி பாரதி நினைவகம் ஒன்றில் கிணறு வரைந்து, சகடை வரைந்து, கயிறு வரைந்து வைத்திருக்கிறார்கள்.   "உலகு இன்பக் கேணி" என்றெழுதின பாரதி, "துன்பக் கேணியிலே எங்கள் பெண்கள் அழுதசொல் கேட்டிருப்பாய் காற்றே" என்று ஃபிஜித் தீவு கரும்புத் தோட்டத்திலே தமிழ்ப் பெண்கள் நிலையைப் பற்றி காற்றை விசாரித்த பாரதி, கேணி என்றால் கிணறு என்ற பொருளிலா எழுதியிருப்பான்?    திருவல்லிக்கேணி என்றால் என்ன பொருள்?  திரு - அல்லிக் - கேணி.  அல்லி நிறைந்த குளம் என்றல்லவா பொருள்?   அவனுடைய மாளிகைக்குப் பக்கத்திலே ஒரு குளம் வேண்டும் என்றல்லவா கேட்டிருக்கிறான்?  பெரிதினும் பெரிது கேள் என்று புதிய ஆத்திசூடி பாடியவன் பின்னே எப்படிக் கேட்பானாம்?
===================

காணி நிலம் பற்றிப் பேச்சு இதில் வருவதால், காணி நிலம் வேண்டும் என்றால் என்ன பொருள்?  காணி என்றால் எவ்வளவு நிலம்? தெரிந்துதான் கேட்கிறேன்.  :)

Hari Krishnan

unread,
Mar 25, 2015, 12:37:32 AM3/25/15
to mintamil

2015-03-25 0:09 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
ஊனமுற்ற  ஐயூர் முடவனார் என்னும் புலவர் வண்டியிலேயே பயணம்  செய்யும் நிலையில் இருந்தாராம்.  அவர் தாமான் தோன்றிக்கோன் என்பவனிடம் சென்று ...

"கடுந்தேர் அள்ளற்கு அசாவா நோன்சுவல்
பகடே அத்தையான் வேண்டிவந் ததுவென"

லெக்சிகன் சொல்வது:

Searching the entire dictionary for அசாவா.

No words matching specified search term(s)

அசாவா(த) என்று ஈறுகெட்டதாக இருக்கலாம்.  யோசிக்க வேண்டும்.

தேமொழி

unread,
Mar 25, 2015, 12:54:43 AM3/25/15
to mint...@googlegroups.com
363. நெய்தல் - நற்றிணை
வியங்கொண்டு ஏகினை யாயின் எனையதூஉம்    
உறுவினைக் கசாவா உலைவில் கம்மியன் 

 வினைக்கு அசாவா உலைவு இல் 
தொழிலில் வருத்தமுறாத கெடுதலில்லாத


இந்த நற்றிணையும் ...அந்த புறநானூறு பாடல்கள் மட்டுமே தேடலில் மீண்டும் மீண்டும் வருகின்றன.


..... தேமொழி 

Dev Raj

unread,
Mar 25, 2015, 12:58:41 AM3/25/15
to mint...@googlegroups.com
2015-03-25 9:53 GMT+05:30 Dev Raj <rde...@gmail.com>:
கேணி, கிணறு, வாவி, துரவு என்ற சொற்கள் கிணற்றைக் குறிப்பன.

On Tuesday, 24 March 2015 21:31:36 UTC-7, Hari wrote:
திருவல்லிக்கேணியில் உள்ள கேணி எதைக் குறிக்கிறது?  அல்லி பூத்த கிணற்றையா?  

கேணி - வாவியை, குளத்தைக் குறிப்பதே; ஆனாலும் வட மாவட்டங்களில்
கிணற்றையே ‘கேணி’ என்று சொல்வது பெரும்பான்மை வழக்கம்


தேவ்

Dev Raj

unread,
Mar 25, 2015, 1:34:23 AM3/25/15
to mint...@googlegroups.com
கேணி - வாளி இறக்கி நீர் இறைக்கும் கிணறு எனும் பொருளில் ஒரு பின்னூட்டம்

நீங்க முடிச்சிட்டு என்ட அனுப்புங்க நானும் கேணில வாலி போட்டு தண்ணி இரச்சு 
ரொம்ப நாள் ஆகிடுச்சு!!!



தேவ்

N. Ganesan

unread,
Mar 25, 2015, 2:03:24 AM3/25/15
to mint...@googlegroups.com


On Tuesday, March 24, 2015 at 9:54:43 PM UTC-7, தேமொழி wrote:
363. நெய்தல் - நற்றிணை
வியங்கொண்டு ஏகினை யாயின் எனையதூஉம்    
உறுவினைக் கசாவா உலைவில் கம்மியன் 

 வினைக்கு அசாவா உலைவு இல் 
தொழிலில் வருத்தமுறாத கெடுதலில்லாத


இந்த நற்றிணையும் ...அந்த புறநானூறு பாடல்கள் மட்டுமே தேடலில் மீண்டும் மீண்டும் வருகின்றன.


(1) அசா acā , n. < அயா. Languor, faintness; தளர்ச்சி. அசாஅத்தா னுற்ற வருத்தம் (நாலடி. 201).

(2) அசாவிடு-தல் acā-viṭu-, v. intr. < அசா +. To rest; இளைப்பாறுதல். இரைதேர்ந்துண் டசாவி டூஉம் புள்ளினம் (கலித். 132, 3).

(3) அசாவு-தல் acāvu- , 5 v. intr. < அயாவு-. To droop, languish, grow slack; தளர்தல். அரு மை யுடைத்தென் றசாவாமை வேண்டும் (குறள், 611).

(4) அசா acā , n. < அயா. Distress; துன்பம். அரிவை புலம்பசா விடவே (குறுந். 338).

-------------------

சென்னைப் பேரகராதியில் கொடுத்துள்ளதுபோல் அசா < அயா என எனக்குத் தோன்றவில்லை.

39 Ta. acar (-v-, -nt-)

39 Ta. acar (-v-, -nt-) to become faint, drowsy; acarttu (acartti-) to cause to be drowsy or sluggish; acati drowsiness; acappu inattentiveness, absence of mind; acāvu (acāvi-) to droop, languish, grow slack; acā languor, faintness; acai (-v-, -nt-) to be weary, exhausted, grow feeble, walk or ride slowly; acaivu weariness, exhaustionañar (-v-, -nt-) to be lazy, slothful; n. mental distress, disease; ayar (-v-, -nt-) to lose consciousness (as in fainting, sleep, drunkenness), become weary, forget; (-pp-, -tt-) to forget; ayarcci, ayarti languor, faintness, forgetfulness; ayarppu, ayarvuforgetfulness; ayā languor, faintness; ayāvu (ayāvi-) to be distressed; añcal laziness, sloth. Ma. aśati drowsiness, forgetfulness; aśattu pōka to forget oneself; ayarkka to swoon, feel estranged, disagree; ayarcca fatigue, distress, affliction, forgetfulness; ayarti, ayarppu swoon, forgetfulness, discord. Ka. asur to feel disgusted, have an aversion or a dislike, be impatient; n. fatigue, faintness; asurusuru exhaustion; ayil, aylu bewilderment, madness; āsaṟ to be weary; n. weariness, fatigue, languor. Tu. ajakè idleness; ? āsarů thirst, that which slakes thirst. Te. asurusuru an onom. word to express weariness; anjali-gunjali fatigued, tired. DED(S) 41.

இதெல்லாம் அகைதல் > அசைதல் > அய(ர்)தல் என்று ஆகும்.

(1) உகு-(உகிரு) > உசிரு > உயிர்
(2) மொகளை(மொகளெ) > மொசளெ (கன்னடம்/தெலுகு)  போல, -க்- > -ச்-

நா. கணேசன்

Hari Krishnan

unread,
Mar 25, 2015, 2:04:26 AM3/25/15
to mintamil

2015-03-25 10:24 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
வினைக்கு அசாவா உலைவு இல் 
தொழிலில் வருத்தமுறாத கெடுதலில்லாத


இந்த நற்றிணையும் ...அந்த புறநானூறு பாடல்கள் மட்டுமே தேடலில் மீண்டும் மீண்டும் வருகின்றன.

அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்

என்ற திருக்குறளையும்,

வயாவும் வருத்தமும் ஈன்றக்கால் நோவும்
கவாஅன் மகற்கண்டு தாய்மறந் தா அங்கு
அசாஅத்தான் உற்ற வருத்தம் உசாஅத்தன்
கேளிரைக் காணக் கெடும்.

என்ற நாலடியாரையும் சேர்த்துக் கொள்ளலாம்.

அசாவா என்பது ஒரு முழுச் சொல்லாக இருந்தால் அது அகராதியில் இடம்பெற வேண்டுமல்லவா?  அதுவும் இது சங்க இலக்கியத்தில் பயில்கிறது.  தமிழ்ப் பேரகராதியோ பழந்தமிழ் இலக்கியத்துக்கென்றே ஆனது.

பேரகராதியின் அச்சு வடிவத்தில், அசா என்ற சொல்லுக்குத் தளர்ச்சி என்ற பொருள் தரப்பட்டிருக்கிறது.  எனவே (செய், செய்யா, செய்யாத என்பதைப் போல்) அசாவாத, அசாவாது என்று இருந்தால் அது தளர்ச்சியின்மையைக் குறிக்கும்.

அசாவாமை என்று குறளில் குறிப்பிடப்படுவதன் முழுவடிவம் அசாவுதல்.

தேமொழி

unread,
Mar 25, 2015, 2:59:56 AM3/25/15
to mint...@googlegroups.com
///
அசாவா என்பது ஒரு முழுச் சொல்லாக இருந்தால் அது அகராதியில் இடம்பெற வேண்டுமல்லவா?  அதுவும் இது சங்க இலக்கியத்தில் பயில்கிறது.  தமிழ்ப் பேரகராதியோ பழந்தமிழ் இலக்கியத்துக்கென்றே ஆனது.
///

கடுந்தேர் அள்ளற்கு அசாவா - வலிய தேராகிய வண்டி சேற்றில் அழுந்திய வழி அதற்குத் தளராத; 



உறு வினைக்கு அசாவா உலைவு இல் கம்மியன்
பொறி அறு பிணைக் கூட்டும் துறை மணல் கொண்டு
உறு வினைக்கு அசாவா உலைவு இல் கம்மியன் - எத்துணையளவேனும் தான் செய்யும் மிக்க கம்மத் தொழிலில் வருத்தமுறாத கெடுதலில்லாத கம்மியன்; 

இங்கு கவனிக்க வேண்டிடது...நான் சான்றுகள் கொடுத்துவிட்டேன் என்பதை...அதுவும் சுட்டிகளுடன் கொடுத்துவிட்டேன் என்பதை...

இலக்கியத்தில் இருந்து முழு வரிகளுடனும் ...
விளக்க உரையில் இருந்து விளக்கமும் எடுத்துக் கொடுத்துவிட்டேன்.

அகராதியில் போடாவிட்டால் அதற்கு அகராதிக்காரர்கள்தான்  பொறுப்பு 
(1) அசா  
(2) அசாவிடு-தல் 
(3) அசாவு-தல் 
(4) அசா 
என்று இவ்வளவு போட்டவர்கள் ஏன் 
(5) அசாவா = அயரா, தளரா, குறையா 
என்று போடவில்லை?

கடுந்தேர் அள்ளற்கு அசாவா - புறநானூற்று பாடல் 399
உறு வினைக்கு அசாவா -  363. நெய்தல் - நற்றிணை
என்று போடலாமே. 

அசா (தளர்ச்சி)
அசாவிடு-தல் (தளர்ச்சி நீக்குதல்)
அசாவு-தல் (தளர்தல்)
அசாவா (தளராத) என்றுதான் உரை எழுதியவர்களேதான் விளக்கமும் கொடுத்துள்ளார்களே 
இப்படி போட  என்னதான் தடை? எனக்குப் புரியவில்லை.
இதற்காக நான் அசாவா விவாதம் நடத்த விரும்பவில்லை 


..... தேமொழி 


Hari Krishnan

unread,
Mar 25, 2015, 4:05:54 AM3/25/15
to mintamil

2015-03-25 12:29 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
அசாவா (தளராத) என்றுதான் உரை எழுதியவர்களேதான் விளக்கமும் கொடுத்துள்ளார்களே 
இப்படி போட  என்னதான் தடை? எனக்குப் புரியவில்லை.
இதற்காக நான் அசாவா விவாதம் நடத்த விரும்பவில்லை 

நன்றி.

Nagarajan Vadivel

unread,
Mar 25, 2015, 5:06:38 AM3/25/15
to மின்தமிழ்

2015-03-24 0:19 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:
இதனை நினைக்கும் போது அவ்வப்போது வழக்கத்தில் அதிக பயன்பாட்டில் இல்லாத, அல்லது முற்றிலும் பயன்பாட்டில் இல்லாத சில தமிழ்ச்சொற்களை நாம் எல்லோருமே அறிமுகப்படுத்தி அதனைப் பற்றி பதிந்து வரலாமே என எண்ணம் நேற்றே தோன்றியது. இங்கு தமிழ் அறிஞர்கள் பலர் இருக்கின்றீர்கள். ஒவ்வொரு நாளும் சில சொற்கள் என இங்கே பதிந்து வைக்கலாம். அதிகமான நீள பட்டியல் ஒரு பதிவில் எனத் தேவையில்லை. 4 அல்லது 5 சொற்கள் ஒரு பதிவில் போதும்.

தயவு செய்து இந்த இழையை வேறு ஆராய்ச்சிகளுக்கு மடை மாற்றிவிடவேண்டாம்

​​வழக்கிலிருந்து மறந்துபோவதும் வழக்கிலிருந்து மறைந்துபோனதும் ஒன்றல்ல வேறு வேறானவை
பழையன கழிதலும் புதியன புகுதலும் இயல்பே
ஆராய்ச்சி என்பது காலப்போக்கில் மறைந்துபோன சொற்களைக் கண்டுபிடிப்பது என்று கருதினால் அந்த விளையாட்டுக்கு நான் தயார்

தொல்காப்பியர் தன் சூத்திரங்களில் சொல்லின் இடையே வருவதாகச் சில எழுத்துக்களைக் குறிப்பிடுவார்.  அந்த எழுத்துக்கள் அமைந்த சொற்கள் வழக்கில் இருந்து மறைந்திருப்பதாகத் தெரிகிறது



அவறைக் கண்டுபிடிப்பது எப்படி?
கிரந்தத் தமிழ் வரிவடிவம் அறிமுகப்படுத்துவதற்குமுன் தமிழில் சமஸ்கிரிதச் சொற்கள் எண்ணிக்கையில் அதிகம் இல்லாமல் இருந்ததன்றி சமஸ்கிரிதச் சொற்களைத் தத்பவ தத்சம  முறைகளில் தமிழ்ப்படுத்தியிருந்தனர்

எ.கா நம்மாழ்வாரின் திருவாய்மொழியிலிருந்து
​பற்பநாபன்
சிறீதரன்
இருடீகேசன்
விகிருதம்
இராக்கதன்
விடமம்
உருத்திரன்
இதுபோன்று சமஸ்கிரிதச் சொற்களுக்கான தமிழ்ச் சொற்களை அடையாளம் கண்டு பட்டியலிடலாமே

சமஸ்கிரித வழங்களைத் தமிழில் அறிமுகப்படுத்தி நிலைபெறச் செய்ய தொல்காப்பியச் சூத்திரங்களுக்கு அப்பால் என்ன புதிய சூத்திரங்களைப் பயன்படுத்தி சமஸ்கிர்தச் சொற்கள் தமிழில் புகுத்தப்பட்டது குறிப்பாகப் புத்தமித்திரர் மற்றும் பவனந்தி ஆகியோரின் பங்கு என்ன  என்பதும் அறியவேண்டியது இன்றியமையாதது

பானினியின் சமஸ்கிரித இலக்கணத்தைப்பின்பற்றாமல் ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியம் என்ற இலக்கண மரபு தமிழ்ச் சொற்கள் தோற்றம் மறைவுக்கு எந்ய அளவுக்கு காரணமாக இருந்திருக்ககூடும் என்பதையும் அறியவேண்டும்

சர்க்கரைச்சீமான்




Malarvizhi Mangay

unread,
Mar 25, 2015, 5:39:41 AM3/25/15
to mint...@googlegroups.com

திரு.நாகராசன் வடிவேல் அவர்களின் கருத்து ஏற்புடையது.முதலில் நானே தொடங்குகிறேன்.
வயவு உறுதல் என்றால் என்ன?
வள்எயிற்றுச் செந்நாய் வயவுஉறு
                                             ...பிணவிற்கு

      ஐங்குறுநூறு...பா..எண்..323

எல்லா பெண்டிர்க்கும் ஆட்படுங்காலத்து நேர்வது
எனக் கூறாமல் விலங்கு,பறவைக்குமான சொல்லாடல் இது எனும் போது
என்னே தமிழர்தம் ஆன்மநேயம்
என்று வியப்பு மேலிடுகிறது.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Prakash Sugumaran

unread,
Mar 25, 2015, 8:34:29 AM3/25/15
to mintamil
மேல் கழுவுதல் :

மேல் கழுவியாறேன் -) குளித்துவிட்டு வருகிறேன் ;

அசவு:

வேல முடிஞ்சி அசவ்வா உக்காந்திருக்கேன் -) பணி முடிந்து தளர்வாக அமர்ந்துள்ளேன்.

( ஓய்வு, அசதி போன்ற அர்த்தங்கள் இங்கு பொருந்தாது )

உதாரணம்: கால புடிச்சி கேணில தண்ணி எறச்சி, பாதி கெழனி நாத்த நட்டு முடிச்சி, இப்போதான் அசவ்வா உக்காந்திருக்கேன். அதுக்குள்ளே சீட்டாட்ட கூப்பிடற ??

மீண்டும் கடுமையான வேலை தொடர உள்ளது, இடையில் கொஞ்ச நேரம் உடலை தளர்வாக வைத்து கொண்டு இருக்கும் போது, நேரத்தை வீணடிக்க மறுக்க பயன்படுத்தப்படுகிறது.

கவனிக்க வேண்டியது,

வேலை முடிந்து இருந்தாலோ, உடல் அசதி, உடல் சோர்வு, மனச் சோர்வு அல்லது வேலை செய்வதில் சோம்பேறித்தனம் ஏற்பட்டு இருந்தாலோ ஓய்வு எடுப்பதாக அர்த்தம் கொள்ளலாம்.

நீண்ட நேரம் கடுமையான வேலைக்கு பிறகு, மீண்டும் உற்சாகத்துடன் பணியை தொடங்குவதற்கு முன் உடலை தயார்படுத்தும் வகையில், தளர்வு நிலையில் வைத்திருப்பதே அசவு. 


--
எஸ். ப்ரகாஷ்
prakash sugumaran

visit my Blog
http://thamizharkoodu.blogspot.com/
My Facebook
http://www.facebook.com/#!/prakashvlr
தமிழ்நாடு சுத்தலாம் வாங்க..
(tamilnadu travel guide)
http://www.tamilnadutravelguide.com/

க்ருஷ்ணகுமார்

unread,
Mar 25, 2015, 8:52:14 AM3/25/15
to mint...@googlegroups.com
அன்பின் ஸ்ரீ ப்ரகாஷ் சுகுமாரன்

நலமா? வாராது வந்த மாமணியாகவல்லவா தரிசனம் தருகிறீர்கள்.

குளிப்பதற்கு **மேல் கழுவுதல்** என்ற சொல் வட்டார வழக்குச் சொல்லா அல்லது தமிழ் நூற்களில் காணப்படும் சொல்லா  ஐயா?

இங்கயும் அப்பப்ப உங்கள் இடுகைகளைப் பகிரலாமே?

N. Ganesan

unread,
Mar 25, 2015, 8:56:28 AM3/25/15
to mint...@googlegroups.com, vallamai


On Tuesday, March 24, 2015 at 9:23:18 PM UTC-7, Dev Raj wrote:

நட வாவி’ என்பதும் உள்ளது; படிக்கட்டுகளோடு ஒருவர் இறங்கிச்சென்று நீராடும்
நீர் நிலை என்று பொருள் கொண்டேன்; தவறாகவும் இருக்கலாம்


தவறில்லை. 

நடைவாவி > நடவாவி. “stepwell"
திருமதி. சுபா விடியோ பதிந்த வெள்றை ஸ்வத்திக நடைவாவியை
தமிழில் ‘சோத்திக நடவாவி’ எனப் பெயர்.

நெல்வாயில் அரைத்துறை > அரத்துறை (தேவார தலம்)
அரை = அரைச மரம் (தொல்காப்பியம்) = அரச மரம். இதிலிருந்து
அரைசி, அரைசன், அரைசு > அரசி, அரசன், அரசு உருவாகிறது.

அரைவிரிந்த (பூ) > அரவிர்ந்த > அரவிந்தம் (என தமிழ்ச்சொல் வடமொழிச் சொல்லாய்
வடக்கே திரிபு ஏற்பட்டதும் காண்க).
இங்கே, அரை = ஆர். தாமரைப் பொகுள் (கர்ணிகம்) அரை/ஆரில் முடியும். கர்ணிகத்தில்/பொகுட்டில்
விரிவன இதழ்கள். அரவிந்தம் சொற்பிறப்பும், அரவிந்தப் பாவையான லக்‌ஷ்மியை
கோவலன் (க்ருஷ்ணன்) மனைவியாக கர்ணகீ (>கண்ணகி) தன் தமிழ்த்தேசிய நாவலில் ஹீரோ-ஹீரோயின்
ஆக்குகிறார் இளங்கோ அடிகள். அவரது சமண சமயத்தில் பலதார மணம் கண்டிக்கப்படுகிறது.
(உ-ம்: குறள்.) எனவே, கோவலன் பரத்தையர் உறவுகளுக்காக நாவலில் கொல்லப்படுகிறான்.

நா. கணேசன்
 

தேவ்

N. Ganesan

unread,
Mar 25, 2015, 9:00:00 AM3/25/15
to mint...@googlegroups.com


On Wednesday, March 25, 2015 at 5:52:14 AM UTC-7, க்ருஷ்ணகுமார் wrote:
அன்பின் ஸ்ரீ ப்ரகாஷ் சுகுமாரன்

நலமா? வாராது வந்த மாமணியாகவல்லவா தரிசனம் தருகிறீர்கள்.

குளிப்பதற்கு **மேல் கழுவுதல்** என்ற சொல் வட்டார வழக்குச் சொல்லா அல்லது தமிழ் நூற்களில் காணப்படும் சொல்லா  ஐயா?

கொங்கில் கேட்டிருப்பீர்கள். மேலுக்கு ஏன் ஒண்ணும் போடாமல் இருக்கிறய்?

மேல்- > மேனி. 
மேல்நன் > மேனன்/மேனோன்

Dhivakar V

unread,
Mar 25, 2015, 12:20:34 PM3/25/15
to mint...@googlegroups.com

You are right, somehow forgot this.

Sent from my Sony Xperia™ smartphone



---- தேமொழி wrote ----
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Venkatachalam Dotthathri

unread,
Mar 25, 2015, 1:04:44 PM3/25/15
to mintamil
தனயன் ஆண்பால்
க்ஷீரசமுத்ரராஜதனயாம்- திருமகளைக் குறிக்கிறது
வெ.சுப்பிரமணியன் ஓம்

Tthamizth Tthenee

unread,
Mar 25, 2015, 1:17:12 PM3/25/15
to mint...@googlegroups.com
​அம்மான் மங்கை  =   அம்மங்கா

அம்மான்  மகன் ​   அம்மான் சேய்    அம்மாஞ்சி

மாட்டுப் பெண்     மாற்றுப் பெண்   அல்லது மாற்றார் பெண்   

அத்தான்     அத்தை மகன்

உடன் பிறந்தான்   சகோதரன்

மூத்தாள்   கணவனின்   மூத்த  மனைவி

இளையாள்   கணவனின் இளைய    மனைவி


அன்புடன்
தமிழ்த்தேனீ





அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்

தமிழ்த்தேனீ

S NEELAKANTAN

unread,
Mar 25, 2015, 1:31:32 PM3/25/15
to mintamil
அத்தை மகள்  - அத்தங்கா 
மாமா மகள்  -  அம்மங்கா 
அத்தானின் மனைவி  -  அத்தாமன்னி 
அண்ணனின் மனைவி - மன்னி  / மைனி 
கிராம அதிகாரி  -  காரியக்காரன் / பார்வத்தியாயர் 
முடுக்கு - சந்து 
மச்சில் -  மாடி 
பெரை - சுவரில் அமைந்திருக்கும் ஷெல்ப் 

அன்புடன் 
திருச்செம்பூரான் (செம்பூர் நீலு )
 



 

Suba.T.

unread,
Mar 25, 2015, 2:24:14 PM3/25/15
to மின்தமிழ், Subashini Tremmel
இந்த இழை அற்புத களஞ்சியமாக வடிவெடுத்து வருவதில் அளவில்லாத  மகிழ்ச்சி அடைகின்றேன். எல்லோரது பங்களிப்பும் மனதிற்கு உற்சாகத்தை அளிக்கின்றது.

சுபா

2015-03-23 19:49 GMT+01:00 Suba.T. <ksuba...@gmail.com>:

சிலரது நூல்களையும் கட்டுரைகளையும் வாசிக்கும் போது நான் வியந்து பார்ப்பது.. ஆகா.. எவ்வளவு சொல் வளமை. நாம் அடிக்கடி தெரிந்த சில சொற்களையே பயன்படுத்திக் கொண்டிருக்கின்றோமே என  என் இயலாமையை நினைத்து என்னையே கடிந்து கொள்வதுண்டு. பொதுவாக நல்ல இலக்கிய கட்டுரைகள், ஆய்வுகள், பக்தி இலக்கியங்கள் ஆகியன வாசிக்கும் போது இதே பிரமிப்பு எனக்கு வரும். 

பல தமிழ்ச்சொற்களைக் காலப் போக்கில் நாம் தெரிந்தோ தெரியாமலோ.. அறிந்தோ அறியாமலோ இழந்திருக்கின்றோம். பல வேற்று மொழிச் சொற்களை விரும்பியும் ஏற்றுக் கோண்டு அதனைத்தமிழ் மொழிப் பயன்பாட்டில் பயன்படுத்துதலில் மிகுந்த ஆர்வம் காட்டும் சமூகமாக மாறிக்கொண்டிருக்கின்றோம்.

Megala Ramamourty

unread,
Mar 25, 2015, 5:13:25 PM3/25/15
to மின்தமிழ்
திசைகளைக் குறிக்கும் கிழக்கு மேற்கு என்ற சொற்களே இப்போது அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றிற்கீடான குணக்கு, குடக்கு போன்ற சொற்கள் வழக்கிழந்துவிட்டன.

குணக்கு - கிழக்கு. அதனால்தான் குணக்கிலிருந்து வீசும் காற்றைக் ’கொண்டல்’ என்று பெயரிட்டு அழைத்தனர் நம் முன்னோர்.

குடக்கு - மேற்கு.
உறையூரின்(?) மேற்குப்புறத்தில் அமைந்திருக்கும் இன்றைய  ’கும்பகோணத்தின்’ அன்றைய பெயர் ’குடந்தை’ என்பதாகும். (‘பொன்னியின் செல்வன் படித்தவர்களுக்கு குடந்தை ஜோதிடர் உடனே நினைவுக்கு வருவார்.)   :-))

குடத்தின் மூக்கு போன்ற அமைப்பில் கும்பகோண நகரத்தின் தோற்றமிருந்ததால் ‘குடமூக்கு’ என்றொரு பெயரும் அதற்கு உண்டு.  :-)

இவையெல்லாம் இப்போது பயன்பாட்டிலில்லை.

(”குடமூக்கு எனும் ஊருக்கு எப்படிப் போவது?” என்று யாரையாவது நாம் இப்போது விசாரித்தால் நம்மை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, ஒரு நமுட்டுச் சிரிப்போடு விலகிச் செல்வார்கள்.)  :-))

அன்புடன்,
மேகலா

Tthamizth Tthenee

unread,
Mar 25, 2015, 5:16:03 PM3/25/15
to mint...@googlegroups.com

கதிரவன் குணதிசை சிகரம் வந்தணைந்தான்
கன இருள் அகன்றது காளையம் பொழுதாய்
மது விருந்தொழுகின மாமலரெல்லாம்
வானவர் அரசர்கள் வந்து வந்து ஈண்டி
எதிர் திசை நிறைந்தனர் இவரொடும் புகுந்த
இருங்களித்தீட்டமும் பிடியொடும் முரசும்
அதிர் தலில் அலைக் கடல் போன்றுள தெங்கும்
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே!

-தொண்டரடிப்பொடி ஆழ்வார்


அன்புடன்

தமிழ்த்தேனீ


அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net




தேமொழி

unread,
Mar 25, 2015, 6:50:13 PM3/25/15
to mint...@googlegroups.com
On Wednesday, March 25, 2015 at 2:13:25 PM UTC-7, megala.ramamourty wrote:
திசைகளைக் குறிக்கும் கிழக்கு மேற்கு என்ற சொற்களே இப்போது அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றிற்கீடான குணக்கு, குடக்கு போன்ற சொற்கள் வழக்கிழந்துவிட்டன. 


நான் "குடதிசை மருங்கில்" என்ற கட்டுரைத் தொடர் ஒன்றில் அருங்காட்சியம் பற்றி வல்லமை இதழில் எழுதினேன் மேகலா. 
( அக்கட்டுரைக்காக அவ்வார வல்லமையாளராகவும்  தேர்ந்தெடுக்கப்பட்டேன்.   - https://groups.google.com/d/msg/mintamil/hqw09vp1RAc/11BZyhcEb3wJ )

அக்கட்டுரைகளை முன்னர் நான் மிந்தமிழிலும் பகிர்ந்து கொண்டேன். 


'குடதிசை'  மட்டுமல்ல  'மருங்கு' என்பதும் அதிகம் "பேச்சு வழக்கில்" இல்லாத ஒரு சொல் என்றே தோன்றுகிறது.


உங்களுடைய ஆடல் காணீரோ என்ற சிலப்பதிகாரக் கட்டுரையிலும் (http://www.vallamai.com/?p=55791) சில வார்த்தைகளைக் கண்டேன்.

"எழினி" என்ற திரையைக் குறிக்கும் சொல் ஒன்று சட்டென்று நினைவிற்கு வருகிறது இப்பொழுது. 

ஆனால் கட்டுரைகளை இவ்வளவு விரைவில் முடித்து விடுவீர்கள என நான் எதிர்பார்க்கவில்லை. அருமையாக இருதது. 

"என் செய்வது? ’All good things must (come to an) end’ என்பதே வாழ்க்கை நமக்குணர்த்தும் பாடமல்லவா? "

என்ற கட்டுரையின் இறுதி வரியையே பதிலாக எடுத்துக் கொள்ள வேண்டுமா? 

;-))

ஆனால், இனி இது போன்ற இலக்கியக் கட்டுரைகளைப் படிக்கும் பொழுது வழக்கொழிந்த பழந்தமிழ் சொற்களை என் கண்கள் தேடத் தொடங்கும் என நினைக்கிறேன். 

..... தேமொழி



On Wednesday, March 25, 2015 at 2:13:25 PM UTC-7, megala.ramamourty wrote:
திசைகளைக் குறிக்கும் கிழக்கு மேற்கு என்ற சொற்களே இப்போது அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றிற்கீடான குணக்கு, குடக்கு போன்ற சொற்கள் வழக்கிழந்துவிட்டன.

குணக்கு - கிழக்கு. அதனால்தான் குணக்கிலிருந்து வீசும் காற்றைக் ’கொண்டல்’ என்று பெயரிட்டு அழைத்தனர் நம் முன்னோர்.

குடக்கு - மேற்கு.
உறையூரின்(?) மேற்குப்புறத்தில் அமைந்திருக்கும் இன்றைய  ’கும்பகோணத்தின்’ அன்றைய பெயர் ’குடந்தை’ என்பதாகும். (‘பொன்னியின் செல்வன் படித்தவர்களுக்கு குடந்தை ஜோதிடர் உடனே நினைவுக்கு வருவார்.)   :-))

குடத்தின் மூக்கு போன்ற அமைப்பில் கும்பகோண நகரத்தின் தோற்றமிருந்ததால் ‘குடமூக்கு’ என்றொரு பெயரும் அதற்கு உண்டு.  :-)

இவையெல்லாம் இப்போது பயன்பாட்டிலில்லை.

(”குடமூக்கு எனும் ஊருக்கு எப்படிப் போவது?” என்று யாரையாவது நாம் இப்போது விசாரித்தால் நம்மை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, ஒரு நமுட்டுச் சிரிப்போடு விலகிச் செல்வார்கள்.)  :-))

அன்புடன்,
மேகலா


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

தேமொழி

unread,
Mar 25, 2015, 6:59:01 PM3/25/15
to mint...@googlegroups.com


On Wednesday, March 25, 2015 at 2:13:25 PM UTC-7, megala.ramamourty wrote:
திசைகளைக் குறிக்கும் கிழக்கு மேற்கு என்ற சொற்களே இப்போது அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றிற்கீடான குணக்கு, குடக்கு போன்ற சொற்கள் வழக்கிழந்துவிட்டன.

குணக்கு - கிழக்கு. அதனால்தான் குணக்கிலிருந்து வீசும் காற்றைக் ’கொண்டல்’ என்று பெயரிட்டு அழைத்தனர் நம் முன்னோர்.

குடக்கு - மேற்கு.
உறையூரின்(?) மேற்குப்புறத்தில் அமைந்திருக்கும் இன்றைய  ’கும்பகோணத்தின்’ அன்றைய பெயர் ’குடந்தை’ என்பதாகும். (‘பொன்னியின் செல்வன் படித்தவர்களுக்கு குடந்தை ஜோதிடர் உடனே நினைவுக்கு வருவார்.)   :-))

கேள்விக் குறி போட்டிருக்கிறீர்கள், காவிரிபூம்பட்டினத்திற்கு மேற்கே என்று இருந்திருக்கக் கூடுமோ ( பழையாறை கூட குடந்தைக்கு தெற்கில் அல்லவா இருக்கிறது) 

 

குடத்தின் மூக்கு போன்ற அமைப்பில் கும்பகோண நகரத்தின் தோற்றமிருந்ததால் ‘குடமூக்கு’ என்றொரு பெயரும் அதற்கு உண்டு.  :-)

இவையெல்லாம் இப்போது பயன்பாட்டிலில்லை.

(”குடமூக்கு எனும் ஊருக்கு எப்படிப் போவது?” என்று யாரையாவது நாம் இப்போது விசாரித்தால் நம்மை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, ஒரு நமுட்டுச் சிரிப்போடு விலகிச் செல்வார்கள்.)  :-))

அன்புடன்,
மேகலா


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Megala Ramamourty

unread,
Mar 25, 2015, 7:30:27 PM3/25/15
to மின்தமிழ்

//நான் "குடதிசை மருங்கில்" என்ற கட்டுரைத் தொடர் ஒன்றில் அருங்காட்சியம் பற்றி வல்லமை இதழில் எழுதினேன் மேகலா. //

அக்கட்டுரையை நான் நீங்கள் அன்று வல்லமையில் எழுதியபோதே சுடச்சுடப் படித்துவிட்டேன் தேமொழி. மிக அருமையான கட்டுரை அல்லவா அது! தேமொழியின் வல்லமையை அன்றே அறிந்துகொண்டேன்.  :-)

நிற்க. ’எழினி’ என்பது ’திரைச்சீலை'யைக் (curtain) குறிக்கும் (அழகான) தமிழ்ச்சொல்லாக முன்பு புழக்கத்தில் இருந்திருக்கின்றது தேமொழி.
எத்தனை வகையான எழினிகள் அன்று நாடக/நாட்டிய அரங்குகளில் பயன்பாட்டில் இருந்திருக்கின்றன என்பதை அறிந்தால் நம்மால் வியக்காமல் இருக்கமுடியாது.
(அதன் வகைகளையெல்லாம் இங்கு விளக்கி இவ்விழையை மடைமாற்றம் செய்யவிரும்பவில்லை. ’ஆடல் காணீரோ’ எனும் என் கட்டுரையைக் குழுமத்தில் வெளியிடும்போது அவை பற்றி எழுதுகிறேன்.)  :-))

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Mar 25, 2015, 10:08:08 PM3/25/15
to mint...@googlegroups.com


On Wednesday, March 25, 2015 at 10:04:44 AM UTC-7, V.dotthathri wrote:
தனயன் ஆண்பால்
க்ஷீரசமுத்ரராஜதனயாம்- திருமகளைக் குறிக்கிறது
வெ.சுப்பிரமணியன் ஓம்


மதுராபுரி நிலயே! மணி வலயே!
மலய த்வஜ ராஜ பாண்டிய தனயே!
 

Pandiyaraja

unread,
Mar 25, 2015, 11:25:07 PM3/25/15
to mint...@googlegroups.com
குடந்தையில் வரும் 'குட'  மேற்கைக் குறிப்பதல்ல. அதன் பெயரிலுள்ள கும்பம் என்பதன் தமிழ் குடம். இன்னும் சொல்லப்போனால் குடம் தான் கும்பம் என்று மாற்றப்பட்டிருக்கிறது. இன்னொன்றும் இது போல் உண்டு. மயிலாடுதுறை > மயில் > மயூரம். மாயூரம். இன்னும் பல இதுபோல் உண்டு என்பர்.
ப.பாண்டியராஜா


On Thursday, March 26, 2015 at 4:29:01 AM UTC+5:30, தேமொழி wrote:


On Wednesday, March 25, 2015 at 2:13:25 PM UTC-7, megala.ramamourty wrote:
திசைகளைக் குறிக்கும் கிழக்கு மேற்கு என்ற சொற்களே இப்போது அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றிற்கீடான குணக்கு, குடக்கு போன்ற சொற்கள் வழக்கிழந்துவிட்டன.

குணக்கு - கிழக்கு. அதனால்தான் குணக்கிலிருந்து வீசும் காற்றைக் ’கொண்டல்’ என்று பெயரிட்டு அழைத்தனர் நம் முன்னோர்.

குடக்கு - மேற்கு.
உறையூரின்(?) மேற்குப்புறத்தில் அமைந்திருக்கும் இன்றைய  ’கும்பகோணத்தின்’ அன்றைய பெயர் ’குடந்தை’ என்பதாகும். (‘பொன்னியின் செல்வன் படித்தவர்களுக்கு குடந்தை ஜோதிடர் உடனே நினைவுக்கு வருவார்.)   :-))

கேள்விக் குறி போட்டிருக்கிறீர்கள், காவிரிபூம்பட்டினத்திற்கு மேற்கே என்று இருந்திருக்கக் கூடுமோ ( பழையாறை கூட குடந்தைக்கு தெற்கில் அல்லவா இருக்கிறது) 

 

குடத்தின் மூக்கு போன்ற அமைப்பில் கும்பகோண நகரத்தின் தோற்றமிருந்ததால் ‘குடமூக்கு’ என்றொரு பெயரும் அதற்கு உண்டு.  :-)

இவையெல்லாம் இப்போது பயன்பாட்டிலில்லை.

(”குடமூக்கு எனும் ஊருக்கு எப்படிப் போவது?” என்று யாரையாவது நாம் இப்போது விசாரித்தால் நம்மை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, ஒரு நமுட்டுச் சிரிப்போடு விலகிச் செல்வார்கள்.)  :-))

அன்புடன்,
மேகலா


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

க்ருஷ்ணகுமார்

unread,
Mar 26, 2015, 12:29:28 AM3/26/15
to mint...@googlegroups.com
குடக்கு, குணக்கு.............. மேற்கு, கிழக்கு..........

சுக்ரீவனின் சில தூதர்கள் மேற்கு, கிழக்கு, வடக்கு எனத் தேடப்புகையில் எஞ்சியுள்ள தெற்குத் திசையில் செல்ல வேண்டியது சொல்லின் செல்வன் என வானரத் தலைவன் முடிவெடுத்து.............சமுத்திரத்தைத் தாண்டி குறிப்பிற் குறிகாணு மாருதி.......... அன்னையிருக்கும் அசோக வனமடைந்து........... ராமபிரானின் மோதிரத்தை அன்னையிடம் சமர்ப்பித்து......... அன்னை தந்த சூடாமணியை............ ராமபிரானுக்கு அளிக்கும் பேறு பெற்றது...............

சொல்லின் செல்வன் மாணிக்க கங்கையில் நீராடி கதிர்காமத்துரை கதிர்வேலனை வணங்கி அவன் அருளைப் பெற்றபடிக்கு என வள்ளல் அருணகிரிப்பெருமான் விதந்தோதுகிறார்.

குடக்குச் சிலதூதர் தேடுக
     வடக்குச் சிலதூதர் நாடுக
          குணக்குச் சிலதூதர் தேடுக ...... வெனமேவிக்

குறிப்பிற் குறிகாணு மாருதி
     யினித்தெற் கொருதூது போவது
          குறிப்பிற் குறிபோன போதிலும் ...... வரலாமோ

சந்தச் சுவையுடன் ராமாயணத்தை ஒருபுறமும் தமிழை மறு புறமும் வள்ளல் அருணகிரிப் பெருமான் அழகு படுத்துவது..............

கதிர்காமத்துரை கதிர்வேலனுக்கு ஹரஹரோஹரா

Geetha Sambasivam

unread,
Mar 26, 2015, 12:36:43 AM3/26/15
to மின்தமிழ்
ஒரு காலத்தில் அடுக்களை தான் பயன்பாட்டில் இருந்தது.  பின்னர் வந்ததே கிச்சன்! :) கூடம், தாழ்வாரம், முற்றம், பட்டாசாலை, சாப்பாட்டுக் கூடம், கல்யாணக் கூடம் என்றெல்லாம் உண்டு. எங்க ஊர்ப்பக்கம் புஞ்சைப் பயிர்கள் விளையும் நிலத்தைக் காடு என்பது உண்டு. 

2015-03-25 0:06 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:


  1.  

அடுக்களை என்பது பேச்சு வழக்கு என்று நினைத்திருந்தேன். இது தூய தமிழா? கட்டுரைகளில் பயன்படுத்தலாமா?

சுபா


Geetha Sambasivam

unread,
Mar 26, 2015, 12:40:51 AM3/26/15
to மின்தமிழ்
அதே போல் விடியற்காலையை மதுரைப்பக்கம் கருக்கல் என்பார்கள்.  மெல்ல நட என்பதற்கு "பைய, பைய நட" என்பார்கள். குழந்தைகளுக்கு விழும் சுளுக்கு "உரம் விழுதல்" எனப்படும். 

Geetha Sambasivam

unread,
Mar 26, 2015, 12:48:31 AM3/26/15
to மின்தமிழ்
இது குறித்து நான் முன்னர் எழுதிய பதிவு ஒன்றின் சுட்டி இங்கே!  



http://sivamgss.blogspot.in/2009/03/blog-post_6218.html  அங்கே செல்ல முடியாதவர்களுக்காக அதில் உள்ள சொற்களின் அருஞ்சொற்பொருளையும் கீழே கொடுத்துள்ளேன். 



அருஞ்சொற்பொருள் :)))))))))))



ஓங்கு தாங்கு = நல்ல வாட்டம், சாட்டமா

சீர் தட்டறது= வேற்று வாடை ஒத்துக்காமல் போவது

உறம் விழுதல்=கிட்டத் தட்ட சுளுக்கு மாதிரியானது

கூடம்= இப்போ ஹால்

பட்டாசாலை=ஓய்வெடுக்குமிடம், சாப்பிடுமிடம்

குலுக்கை= நெல் குதிர்

கேட் வாசல்
நடு செண்டர்
வாக்கப்பட்டு= வாழ்க்கைப் பட்டு

பிரியக்கால்=பிகு பண்ணுவது
வெள்ளென= விடிகாலை

எருக்கம் மிளாறு= எருக்கம் செடியின் தண்டு பாகம்

பெறத்தாலே = பின் பக்கம்
துட்டி =துக்கம்

கலாவலியான= கிண்டல் பேச்சுக்கள்
தியாலம்=மணி

உண்டக்கட்டி= சோற்றுருண்டை

ஊடால= இடையிலே, நடுவிலே

நிமிட்டாம்பழம் =கிள்ளுதல்,
கலரு குடிங்க
நீச்சுத் தண்ணி - நீராகாரம்
கேஸ் பெட்டி
உக்கி போடுதல்= தோப்புக்கரணம் போடுதல்
கம்மாய்= ஏரிக்கரை
சொணை கெட்டவன்=சுரணை இல்லாதவன்
உச்சி வெரிக்கிறது=மழை விட்டு வானம் வெளுத்தல்
திருப்பாட்டு=திட்டு 

அருவாக்கறது=தீர்ப்பது
தப்பாய் இருத்தல் = மிச்சம் இருந்தால்

பிழைச்சுக் கிடந்தா= நாளை  (இதைச் சிலர் பிச்சைக்காரனுக்கு என்றும் சொல்வதுண்டு.)  அதே போல் நான் சிறுமியாக இருக்கையில் வாசலில் வரும் பிச்சைக்காரர்கள் யாரும், பிச்சை என்று கேட்டுப் பார்த்தது இல்லை.  "சாதம் தப்பா இருந்தாப் போடுங்கம்மா!" என்றே கேட்பார்கள். 

 

Dev Raj

unread,
Mar 26, 2015, 1:31:17 AM3/26/15
to mint...@googlegroups.com
On Wednesday, 25 March 2015 14:13:25 UTC-7, megala.ramamourty wrote:
குடக்கு - மேற்கு. 
உறையூரின்(?) மேற்குப்புறத்தில் அமைந்திருக்கும் இன்றைய  ’கும்பகோணத்தின்’ அன்றைய பெயர் ’குடந்தை’ என்பதாகும். (‘பொன்னியின் செல்வன் படித்தவர்களுக்கு குடந்தை ஜோதிடர் உடனே நினைவுக்கு வருவார்.)   :-))


திருக்குடந்தை’ இன்றும் வைணவ வழக்கில் உள்ள பெயர்தான் 



தேவ்

கோதண்டராமன்

unread,
Mar 26, 2015, 1:40:14 AM3/26/15
to mint...@googlegroups.com
பொருந்தாது முரண்படுதல் என்ற பொருளில் முசுறுதல் என்ற சொல்லை சில தச்சர்கள் பயன்படுத்துகிறார்கள். ஜன்னல் கதவு முசிறிக்கிட்டு நிக்குது. கொஞ்சம் இழைச்சு விடு.

N. Ganesan

unread,
Mar 26, 2015, 1:53:14 AM3/26/15
to mint...@googlegroups.com


On Wednesday, March 25, 2015 at 10:40:14 PM UTC-7, கோதண்டராமன் wrote:
பொருந்தாது முரண்படுதல் என்ற பொருளில் முசுறுதல் என்ற சொல்லை சில தச்சர்கள் பயன்படுத்துகிறார்கள். ஜன்னல் கதவு முசிறிக்கிட்டு நிக்குது. கொஞ்சம் இழைச்சு விடு.

நன்றி ஐயா. கேள்விப்படாத சொல்லாட்சி.

முசுடு - முரணிக் கோபப்படுபவர். கடுகடுப்பாய் கடிக்கும் எறும்பு.
இவையும் ஞாபகத்துக்கு வருகின்றன.

நா. கணேசன் 

S NEELAKANTAN

unread,
Mar 26, 2015, 3:31:04 AM3/26/15
to mintamil
முசுடு என்ற வார்த்தை பேச்சுவழக்கில் பயன் படுத்துவது வழக்கம் 
"அவன் சரியான முசுடு " என்று முன் கோபப்படுபவனை சொல்வது வழக்கம் 

செம்பூர் நீலு 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--



 

Malarvizhi Mangay

unread,
Mar 26, 2015, 6:09:01 AM3/26/15
to mint...@googlegroups.com

தேமொழி அவர்களே,
ஒருமுக எழினி..ஒரு புறம் தள்ளுதல்.
இருமுக எழினி...இரு புறம் தள்ளுதல்.
கரந்துவரல் எழினி...மேடையில்
மறைந்துவரும் திரைச்சீலை.
இவற்றையும் உடன் உரைப்பது
கடப்பாடன்றோ.

It is loading more messages.
0 new messages