கலைஞரின் புரட்சிச் சட்டம் - Puthiya ThalaimuRai

32 views
Skip to first unread message

Prakash Sugumaran

unread,
Jun 2, 2017, 2:55:28 AM6/2/17
to mintamil

பொதுவாழ்வில் ஈடுபட்டோர் மீதான லஞ்ச ஊழல் குற்றத்தடுப்பு மசோதாவை 12-02-1973 அன்று கலைஞர் கொண்டு வந்து, 05-04-1973 அன்று சட்டமன்றத்திலும், சட்ட மேலவையிலும் நிறைவேற்றினார். மசோதாவின் ஒவ்வொரு அங்கங்கமும் தீர்க்கமாகவும், திட்டவட்டமாகவும் அமைந்திருந்தன. இதன் அதிகார வரம்புக்குள் முன்னாள் – இந்நாள் முதல்வர்கள், அமைச்சர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், பஞ்சாயத்து தலைவர்கள் அடங்குவர். குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் 7 ஆண்டு சிறை தண்டனை. பொய்யாக குற்றம் சாட்டினால் 3 ஆண்டு சிறை. மாநில ஊழல் விவகாரங்கள் மாநில அளவிலேயே முடிந்து விட வேண்டும். மத்திய அரசின் தலையீடு இதில் இருக்கக்கூடாது.

இந்த சட்டத்தின் அடிப்படையில் நீதிபதி வெங்கடாத்ரி தலைமையில், ‘பொது வாழ்வில் ஈடுபட்டிருப்போர் மீதான ஊழல் புகார்களை விசாரிக்கும் ஆணையம்’, அமைக்கப்பட்டது.

அப்போதைய, ஜன சங்கத்தின் தலைவர்களில் ஒருவரான அத்வானி, ’லோக்பால் மசோதாவில் கூட பிரதமருக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில், மாநில முதலமைச்சரையும் அதிகார வரம்பில் கொண்டு வந்திருப்பது நேர்மையான விஷயம். மாநில உரிமைகளை பாதுகாப்பதுடன், ஊழலை ஒழிக்கும் வகையில் வரையறுக்கப்பட்டுள்ளது’, என்று இந்தச் சட்டத்தை பாராட்டினார்.


அந்த சட்டத்தின் மீதும், ஆணையத்தின் மீதும் நம்பிக்கை இல்லாத எம்.ஜி.ஆர்., இதனை ‘கருப்புச் சட்டம்’ என அறிவித்தார். பிறகு அவர் ஆட்சிக்கு வந்ததும் அந்த சட்டத்தையே திரும்பப்பெற்றார்.


மத்திய – மாநில அரசுகளின் அதிகாரங்களை தனித்தனியே பிரித்து, விரிவான ஆய்வு மேற்கொள்ள 1969 ஆம் ஆண்டு முன்னாள் நீதியரசர் ராஜமன்னார் தலைமையில் ஒரு கமிட்டியை கலைஞர் அமைத்தார். அந்தக் குழுவில் சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் ஏ.லட்சுமண முதலியார், உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சந்திரா ரெட்டி ஆகியோர் இடம்பெற்றனர். அந்தக் குழு பரிந்துரை செய்தவற்றையும், அதேபோல, ’முரசொலி’ மாறன் மற்றும் இரா.செழியன் குழு அளித்த கருத்துகளையும் இணைத்து, அமைச்சரவையில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது. மத்திய அரசின் அதிகார குவியல் – மாநில அரசின் அதிகாரப் பரவல் குறித்து தீர்மானிக்கப்பட்டது. எந்தெந்த அதிகாரம் யாரிடம் இருக்க வேண்டும், எவையெல்லாம் பொதுப்பட்டியலில் இருக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. அதனையடுத்து, 20-04-1974 அன்று சட்டமன்றத்தில் கலைஞர் மாநில சுயாட்சித்  தீர்மானம் நிறைவேற்றினார்.


ஆனால், பெரியண்ணனாக இருந்த மத்திய அரசு இந்தத் தீர்மானத்தை ஏற்கவில்லை.

அந்த திருத்தங்களை ஏற்றுக் கொண்டிருந்தால் கச்ச தீவை மத்திய அரசு எளிதில் இலங்கைக்கு தாரை வார்த்திருக்க முடியாது. மாநில அரசும் அதனை தடுக்க முடியாமல் திணற வேண்டியிருந்து இருக்காது.

அதிலும், நெருக்கடி மாறி இயல்பு நிலை திரும்புவதற்குள் மாநிலத்தின் பட்டியலில் இருந்த கல்வி மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் சென்று விட்டது. தமிழக மீனவர்களுக்குத் தரப்பட்டிருந்த பாரம்பரிய உரிமைகள் ஒரு கடிதத்தில் திரும்பப் பெறப்பட்டது.

Innamburan S.Soundararajan

unread,
Jun 2, 2017, 7:15:33 AM6/2/17
to mintamil
இந்த விஷயத்தில் மேலும் பல நுட்பங்கள் உண்டு. திரு.கருணாநிதியின் லஞ்சம் பற்றிய அணுகுமுறையை சர்க்காரியா ரிப்போர்ட்டில் காணலாம். மேகும் சொன்னால் பொல்லாப்பு. லஞ்ச வாவண்ய விஷ விதை விதைத்தது அவர் தாம்.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Prakash Sugumaran

unread,
Jun 2, 2017, 11:25:18 AM6/2/17
to mintamil
//மேலும் பல நுட்பங்கள் உண்டு. திரு.கருணாநிதியின் லஞ்சம் பற்றிய அணுகுமுறையை சர்க்காரியா ரிப்போர்ட்டில் காணலாம். மேகும் சொன்னால் பொல்லாப்பு.//

’திருடனாய் பாத்து திருந்தாவிட்டால்’ கதை வேறு.

அதிகார திமிரால் வெளியிடப்பட்ட அப்படிப்பட்ட தகவல்களை வைத்து ஒருவரை கணக்கிட்டு விடக்கூடாது. நிரூபித்தார்களா?

லஞ்சம் வாங்காத அரசு அதிகாரி உண்டா? பொய் வழக்கு போடாத காவல்துறை உண்டா?

முதல்வர் அளவுக்கு.. இல்லை இப்போதெல்லாம் ஒருவன் கவுன்சிலரா ஆகிடுவான் என சந்தேகம் வந்தாலே அவன் அடுத்த 15 வருஷம் கோர்ட் - போலீஸ் ஸ்டேஷன் என்று அலையுமளவுக்கு பல வழக்குகள் வருகிறதே!

எம்ஜிஆர் ஆட்சியை பிடித்தவுடன் ஒரு காவல்துறை அதிகாரியை சந்தித்து. ‘இவர் மீது ஏதாவது ஒரு வழக்கை ஆதாரத்துடன் போட வேண்டுமே?’ என்றதும், அவர் சொன்னாராம். ‘அது ரொம்ப ஈசிங்க, யாரா இருந்தாலும் வீடு கட்டணும்னா சில பல விதிகளை மீறியே ஆகணும். கருணாநிதி வீடு கட்டியிருக்கார். ஒடனே போட்டுடலாம்’, என்றாராம்.

அதே எம்ஜிஆர் பெரும் தொகையை வாங்கிக்கொண்டு எந்த திட்டத்துக்கு கையெழுத்திடுவதானாலும், அதற்கு முன்னால், ‘அவரை பார்த்து விட்டு வாருங்கள், இல்லாட்டி பெரிய தொல்லையாகிடும்’, என்பாராம்.

வாட்ஸ் அப்பில் வெளியாகும் இதுபோன்ற தகவல்களுக்கும், அதிகார வெறியில் உருவாக்கப்பட்ட சர்க்காரியா கமிஷனுக்கும் வித்தியாசமே இல்லை.

இப்படி கொலை வெறியோடு அதிலும் குறிப்பாக, சர்வ வல்லமை பொருந்திய காங்கிரஸின் சர்வாதிகாரத்தை ஒடுக்கியவர் மீது என்ன வேண்டுமானாலும் வழக்கு போட முடியும். கமிஷன் அமைக்க முடியும். அறிக்கைகளை வெளியிடலாம்.

ஆனால், மறைந்த ஜெயலலிதா மீது தொடரப்பட்ட வழக்கு நிரூபிக்கப்பட்டது. அந்த வழக்கை அவர் எந்தளவு விஞ்ஞான ரீதியாக இழுத்தடித்தார் என்று வேண்டுமானால், நீதித்துறை சார்பில் ஒரு ஆய்வறிக்கை விடலாம்.

1991 வரையிலான திமுகவின் வரலாற்றில் பணம் பெரிய பங்கு வகித்திருக்கவில்லை என்பதே உண்மை.


//லஞ்ச வாவண்ய விஷ விதை விதைத்தது அவர் தாம்.//

5 ஆண்டு ஆட்சிக்கு வரும் அரசியல்வாதிகள் லஞ்ச லாவண்யத்தில் திளைப்பதற்குக் காரணமே.. 58 ஆண்டுகள் கேள்வி கேட்கவே ஆளில்லாமல், அயோக்கியத்தனம் செய்யும் எல்லா வழிகளையும் அறிந்து அதையே தொழிலாகக் கொண்டிருக்கும் அரசு அதிகாரிகள் தான்.

Innamburan S.Soundararajan

unread,
Jun 2, 2017, 9:20:17 PM6/2/17
to mintamil
லஞ்சம் வாங்காத அரசு அதிகாரி உண்டா? பொய் வழக்கு போடாத காவல்துறை உண்டா?

-காஷ்மீர் கலகக்காரர்கள் எறியும் கல்லை போன்ற இம்மாதிரியான பொத்தா, பொது prejudices விதண்டாவாதத்தின் பிரம்மாஸ்திரம். நாட்டு நடப்பை சீரமைப்பதற்கு தடை இவை. நீதியரசர் ஆய்வறிக்கையும் வாட்ஸ் அப்பும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள் வித்தியாசம். அரசு அதிகாரிகளும், காவல்துறையும் வேறு கிரகத்திலிருந்து வந்து குதித்தவர்கள் அல்ல. நமது சுற்றம். அவர்களில் ஆயிரக்கணக்காக கண்ணியமும், கறாரும், சேவையும் செய்தவர்கள் பலர். காவல் துறையில் ஃப்.வி.அருள், ஷெனாய், ஜனார்த்தன் ராவ், பிரமோஷனே வாங்காத சப் இன்ஸ்பெக்டர் சுப்ரமணிய பிள்ளை. மனைவி சமையல் வேலை செய்தால் தான் பசங்களை படிக்க வைக்கலாம் என்ரு அண்மையில் சென்னை கான்ஸ்டபிள் மாணிக்கம், சிலைதிருடு தடுக்கும். பொன்.மாணிக்கம், ஐ ஏ ஏஸ் சகாயம், ககன் தீப் சிங், கஜலக்ஷ்மி, காசு குவியும் துறையில் எலுமிச்சை பழ, கூட வாங்க மறுத்த அப்துல் லதீஃப். எண்ணற்றவர் உளர். 

இனி பேசி பயன் இல்லை.

nkantan r

unread,
Jun 3, 2017, 12:06:03 AM6/3/17
to மின்தமிழ்
மன்னிக்க வேண்டும்

விதை விதைத்தது பக்தவச்சலம் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில்;  (அரசியலில் சாதி பிரிவு, சாதி அடிப்படையிலான அரசியில் அரம்பித்ததும் அப்பொழுதே!)

முளைத்த செடியை வளர்த்தது கலைஞரின் முதல் 5 ஆண்டுகள்.

 

On Friday, June 2, 2017 at 4:45:33 PM UTC+5:30, இன்னம்பூரான் wrote:
இந்த விஷயத்தில் மேலும் பல நுட்பங்கள் உண்டு. திரு.கருணாநிதியின் லஞ்சம் பற்றிய அணுகுமுறையை சர்க்காரியா ரிப்போர்ட்டில் காணலாம். மேகும் சொன்னால் பொல்லாப்பு. லஞ்ச வாவண்ய விஷ விதை விதைத்தது அவர் தாம்.
2017-06-02 12:25 GMT+05:30 Prakash Sugumaran <praka...@gmail.com>:

பொதுவாழ்வில் ஈடுபட்டோர் மீதான லஞ்ச ஊழல் குற்றத்தடுப்பு மசோதாவை 12-02-1973 அன்று கலைஞர் கொண்டு வந்து, 05-04-1973 அன்று சட்டமன்றத்திலும், சட்ட மேலவையிலும் நிறைவேற்றினார். மசோதாவின் ஒவ்வொரு அங்கங்கமும் தீர்க்கமாகவும், திட்டவட்டமாகவும் அமைந்திருந்தன. இதன் அதிகார வரம்புக்குள் முன்னாள் – இந்நாள் முதல்வர்கள், அமைச்சர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், பஞ்சாயத்து தலைவர்கள் அடங்குவர். குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் 7 ஆண்டு சிறை தண்டனை. பொய்யாக குற்றம் சாட்டினால் 3 ஆண்டு சிறை. மாநில ஊழல் விவகாரங்கள் மாநில அளவிலேயே முடிந்து விட வேண்டும். மத்திய அரசின் தலையீடு இதில் இருக்கக்கூடாது.

இந்த சட்டத்தின் அடிப்படையில் நீதிபதி வெங்கடாத்ரி தலைமையில், ‘பொது வாழ்வில் ஈடுபட்டிருப்போர் மீதான ஊழல் புகார்களை விசாரிக்கும் ஆணையம்’, அமைக்கப்பட்டது.

அப்போதைய, ஜன சங்கத்தின் தலைவர்களில் ஒருவரான அத்வானி, ’லோக்பால் மசோதாவில் கூட பிரதமருக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில், மாநில முதலமைச்சரையும் அதிகார வரம்பில் கொண்டு வந்திருப்பது நேர்மையான விஷயம். மாநில உரிமைகளை பாதுகாப்பதுடன், ஊழலை ஒழிக்கும் வகையில் வரையறுக்கப்பட்டுள்ளது’, என்று இந்தச் சட்டத்தை பாராட்டினார்.


அந்த சட்டத்தின் மீதும், ஆணையத்தின் மீதும் நம்பிக்கை இல்லாத எம்.ஜி.ஆர்., இதனை ‘கருப்புச் சட்டம்’ என அறிவித்தார். பிறகு அவர் ஆட்சிக்கு வந்ததும் அந்த சட்டத்தையே திரும்பப்பெற்றார்.


மத்திய – மாநில அரசுகளின் அதிகாரங்களை தனித்தனியே பிரித்து, விரிவான ஆய்வு மேற்கொள்ள 1969 ஆம் ஆண்டு முன்னாள் நீதியரசர் ராஜமன்னார் தலைமையில் ஒரு கமிட்டியை கலைஞர் அமைத்தார். அந்தக் குழுவில் சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் ஏ.லட்சுமண முதலியார், உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சந்திரா ரெட்டி ஆகியோர் இடம்பெற்றனர். அந்தக் குழு பரிந்துரை செய்தவற்றையும், அதேபோல, ’முரசொலி’ மாறன் மற்றும் இரா.செழியன் குழு அளித்த கருத்துகளையும் இணைத்து, அமைச்சரவையில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது. மத்திய அரசின் அதிகார குவியல் – மாநில அரசின் அதிகாரப் பரவல் குறித்து தீர்மானிக்கப்பட்டது. எந்தெந்த அதிகாரம் யாரிடம் இருக்க வேண்டும், எவையெல்லாம் பொதுப்பட்டியலில் இருக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. அதனையடுத்து, 20-04-1974 அன்று சட்டமன்றத்தில் கலைஞர் மாநில சுயாட்சித்  தீர்மானம் நிறைவேற்றினார்.


ஆனால், பெரியண்ணனாக இருந்த மத்திய அரசு இந்தத் தீர்மானத்தை ஏற்கவில்லை.

அந்த திருத்தங்களை ஏற்றுக் கொண்டிருந்தால் கச்ச தீவை மத்திய அரசு எளிதில் இலங்கைக்கு தாரை வார்த்திருக்க முடியாது. மாநில அரசும் அதனை தடுக்க முடியாமல் திணற வேண்டியிருந்து இருக்காது.

அதிலும், நெருக்கடி மாறி இயல்பு நிலை திரும்புவதற்குள் மாநிலத்தின் பட்டியலில் இருந்த கல்வி மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் சென்று விட்டது. தமிழக மீனவர்களுக்குத் தரப்பட்டிருந்த பாரம்பரிய உரிமைகள் ஒரு கடிதத்தில் திரும்பப் பெறப்பட்டது.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Innamburan S.Soundararajan

unread,
Jun 3, 2017, 1:59:53 AM6/3/17
to mintamil
விதை விதைத்தது பக்தவச்சலம் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில்;  (அரசியலில் சாதி பிரிவு, சாதி அடிப்படையிலான அரசியில் அரம்பித்ததும் அப்பொழுதே!) 

~பக்தவத்சலம் ஆட்சியிலேயே, இந்த குற்றச்சாட்டு சொல்லப்பட்டது. அப்போதே ஆய்வில் இது தி.முக.வின் துஷ்பிரசாரம் என்று அறியப்பட்டது. காங்கிரஸ் பரிசுத்த ஆவி அல்ல. ராஜாஜியே பி.டபிள்யூ.டியை தன்னுடைய விரோதி என்றார். ஆனால். லாடம் கட்டி மக்களை கறந்தது காஙிரஸ் ஆட்சிக்கு பிறகு.

Prakash Sugumaran

unread,
Jun 3, 2017, 2:28:16 AM6/3/17
to mintamil
காஷ்மீர் கலகக்காரர்கள் எறியும் கல்லை போன்ற இம்மாதிரியான பொத்தா, பொது prejudices விதண்டாவாதத்தின் பிரம்மாஸ்திரம்.

வீராணம் முறைகேடு என கலகக்காரர்கள் செய்வது போல!

நாட்டு நடப்பை சீரமைப்பதற்கு தடை இவை. நீதியரசர் ஆய்வறிக்கையும் வாட்ஸ் அப்பும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள் வித்தியாசம்.

இப்படி நடந்திருக்கலாம், அப்படி செய்திருக்கலாம் என்பது நீதியரசரின் பணியா? நடந்தது என்றால் ஆதாரம், இல்லையென்றால் நடக்கவில்லை. அவ்ளவுதான். இப்படிப்பட்ட அறிக்கை பிரம்மாஸ்திரங்களுக்கும் - வாட்ஸ்அப் அம்புகளுக்குமான செலவும் - அறிக்கைகளின் நீல-அகலங்களிலும் மட்டுமே மாறுபாடு உள்ளது.

அரசு அதிகாரிகளும், காவல்துறையும் வேறு கிரகத்திலிருந்து வந்து குதித்தவர்கள் அல்ல. நமது சுற்றம். அவர்களில் ஆயிரக்கணக்காக கண்ணியமும், கறாரும், சேவையும் செய்தவர்கள் பலர். காவல் துறையில் ஃப்.வி.அருள், ஷெனாய், ஜனார்த்தன் ராவ், பிரமோஷனே வாங்காத சப் இன்ஸ்பெக்டர் சுப்ரமணிய பிள்ளை. மனைவி சமையல் வேலை செய்தால் தான் பசங்களை படிக்க வைக்கலாம் என்ரு அண்மையில் சென்னை கான்ஸ்டபிள் மாணிக்கம், சிலைதிருடு தடுக்கும். பொன்.மாணிக்கம், ஐ ஏ ஏஸ் சகாயம், ககன் தீப் சிங், கஜலக்ஷ்மி, காசு குவியும் துறையில் எலுமிச்சை பழ, கூட வாங்க மறுத்த அப்துல் லதீஃப். எண்ணற்றவர் உளர்.

நல்லவர்களை அடையாளம் காட்டும் அதே நேரத்தில் தவறானவர்களையும் அடையாளம் காட்ட வேண்டும். விதி விலக்குகளை விதிகளாக எடுத்துக் கொள்ள முடியாதே!

Prakash Sugumaran

unread,
Jun 3, 2017, 2:29:53 AM6/3/17
to mintamil
தேசிய கட்சிகளின் மத்திய அதிகார துஷ்பிரயோகங்கள், துர் பிரச்சாரங்களை எல்லாம் எதிர்கொள்ள மாநில கட்சிகளும் சிலபல குறுக்கு வழிகளை கையாள்வது அரசியலில் சரியானதே.

ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் மத்திய அரசு வசூலிக்கும் மொத்த வரி வருவாயில் 48% திட்டங்களாக மாநிலத்துக்கு வருகின்றன. 52% மத்திய செலவாக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. மாநிலங்களின் நேரடி வருவாய் மூலம் அதன் செலவுகளை கூட ஈடுகட்ட முடியாமல் கடன் வாங்கும் நிலையில், மாநிலத்தில் நடைபெறும் ஊழல்கள் மத்தியில் நடைபெறும் ஊழல்களின் அளவில் 10% கூட இருக்க முடியாது.

ஆனால், மாநில அரசியல் கட்சிகள் மீது மட்டுமே தாக்குதல், ஊழல் பிரச்சாரங்கள் நடப்பது ஏன்? குறிப்பாக, எந்தவிதத்திலும் நிரூபிக்கப்படாத வீராணம் ஊழல் பிரச்சாரம்!
Reply all
Reply to author
Forward
0 new messages