இந்திய மொழிகளின் தாய் தமிழே !!! - பகுதி 7 - மாடு - பால் - வேளாண்மை

425 views
Skip to first unread message

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Sep 3, 2018, 7:21:14 AM9/3/18
to


இந்திய மொழிகளின் தாய் தமிழே !!! - பகுதி 7 - மாடு - பால் - வேளாண்மை


முன்னுரை:

இந்திய மொழிகளின் தாய் தமிழே - என்ற தொடர் ஆய்வுக் கட்டுரையின் முதல் ஆறு பகுதிகளில் மனித உடலின் புற உறுப்புக்கள், விலங்குகள், தீ, வெப்பம், சினம், சிவப்பு, ஒளி தொடர்பான பல தமிழ்ச்சொற்கள் பிற மொழிகளில் திரிந்து வழங்கும் விதங்களைப் பற்றி விரிவாகக் கண்டோம். ஆய்வுக் கட்டுரையின் ஏழாவது பகுதியான இதில், மாடுகள், பால் மற்றும் வேளாண்மை தொடர்பான தமிழ்ச்சொற்கள் பிறமொழிகளில் எவ்வாறெல்லாம் திரிந்து வழங்கப்படுகின்றன என்பதைப் பல சான்றுகளுடன் விரிவாகக் காணலாம்.

மாடுகளின் பொதுப்பெயர்கள்:

தமிழ் மொழியில் மாடுகளைக் குறிப்பதற்குப் பல பெயர்களைப் பயன்படுத்தி வருகிறோம். காளை, எருது, பகடு, ஏறு, ஆன், மூரி, கோட்டுமா, புகல்வி முதலான பெயர்களைக் கொண்டு ஆண்மாடுகளைக் குறிக்கிறோம். பசு, மாடு, பாண்டியம், ஆ, கோ, சேதா முதலான பெயர்களால் பெண் மாடுகளைக் குறிக்கிறோம். மாடுகளின் கூட்டத்தினைத் தொறு, ஆயம், ஆக்கள் போன்ற சொற்களால் குறிப்பது வழக்கம். மாடுகளுடன் தொடர்புடைய இத் தமிழ்ப் பெயர்கள் அனைத்தும் பிறமாநில மொழிகளில் எவ்வாறு திரிந்து வழங்கப்படுகின்றன என்பதைக் கீழே விரிவாகக் காணலாம்.

காளை >>> காள - மலையாளம்
எருது >>> யெத்து^ - தெலுங்கு
எருது >>> எத்து - கன்னடம்
எருது >>> வ்ருச~ >>> வ்ருச~ப^ - மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி, செங்கிருதம், மராத்தி, கு~ச்^ராத்தி, வங்காளம், பஞ்சாபி`, ஒரியா.
புகல்வி >>> புங்க~வ - செங்கிருதம், கு~ச்^ராத்தி, வங்காளம்
பாண்டியம் >>> ப^ரண்ட - செங்கிருதம்
மாடு >>> மாடா` - இந்தி
ஆன் + ஆயம் = ஆனாயம் >>> அக்^ன்ய - செங்கிருதம்
பகடு >>> வாக` (செங்கிருதம்) >>> வகி`ரகா - பஞ்சாபி`
பகடு >>> பா`கு`லேய >>> ப`கு`லா - செங்கிருதம்
மூரி >>> மூரி - மலையாளம்
மூரி >>> ஊரி >>> உச்`ரிய >>> உச்`ர - செங்கிருதம்
ஆ+மூரி = ஆமூரி >>> ஆம்ர >>> சா`ம்ர - வங்காளம்
ஆ+மூரி = ஆமூரி >>> ஆம்ர >>> எம்ரே - வங்காளம்
சேதா >>> ச`தா^ (பஞ்சாபி`) >>> ச`தி^, சா~த்`வல - செங்கிருதம்
கோட்டுமா >>> கோ~ட்டு^ - தெலுங்கு
ஆ >>> ஆவு - தெலுங்கு
ஆக்கள் >>> ஆக்களோ - கு~ச்^ராத்தி
ஆக்கள் >>> ஆக்களு - கன்னடம்
ஆயம் >>> கா~ய் - இந்தி, மராத்தி, கு~ச்^ராத்தி, வங்காளம், பஞ்சாபி`, ஒரியா.
தொறு >>> ச்`தூர >>> தூ^ர்ய - செங்கிருதம்

ஆண்மாடு:

ஆண்மாடுகளில் பொலியெருது / பொலிகாளை என்றொரு வகையுண்டு. இவற்றை உழவுத் தொழில் மற்றும் இழுவைத் தொழிலில் அதிகம் பயன்படுத்தாமல் மாடுகளின் இனப்பெருக்கத்திற்காகவே வளர்ப்பார்கள். நல்ல உடல் வலிமையுடன் கொழுத்திருக்கும் இம்மாடுகள் செழிப்புடன் பொலிந்து தோன்றும். தற்போது அரியானா மாநிலத்தைச் சேர்ந்த யுவராச்^ என்ற காளை மிகப் புகழ்பெற்றுள்ளது. காரணம், இதன் விந்தணுக்களின் விலை இந்திய ரூபாய் மதிப்பில் இரண்டு இலட்சத்திற்கும் மேல் என்பதால். இக்காளையின் விலை ரூபாய் 9.5 கோடிகளுக்கும் மேல் என்று விக்கிபீடி`யா கூறுகிறது. பொலிதல், நந்துதல் ஆகிய தமிழ்ச் சொற்கள் செழித்தல் / பெருகுதல் / மிகுதல் என்ற பொருளைத் தருபவை. இச்சொற்கள் பிறமாநில மொழிகளில் திரிந்து பயன்படும் விதங்களைக் கீழே காணலாம்.

பொலி >>> பை`ல் - இந்தி
பொலி >>> பே`ல - கு~ச்^ராத்தி
பொலியெருது >>> ப`லிவர்த` - செங்கிருதம், கு~ச்^ராத்தி, வங்காளம்
நந்து >>> நந்தி` >>> நந்தினி - மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி, செங்கிருதம், மராத்தி, கு~ச்^ராத்தி, வங்காளம், பஞ்சாபி`, ஒரியா.

பசுமாடுகளைக் காட்டிலும் காளைமாடுகள் உயரத்திலும் வலிமையிலும் பெரியவை. காளைமாடுகளின் உயரமான கூர்மையான கொம்புகள் உடல் சதையினைக் குத்திக் கிழிக்க வல்லவை. ஏறுதழுவுதலின்போது காளைமாடுகளின் கொம்புகளால் குத்தப்பட்டு ஆண்டுதோறும் உயிர்மாய்ப்போர் பலர். உயிரைத் துச்சமாகக் கருதிப் பாயும் வீரர்களை காளைமாடுகள் தமது கொம்புகளால் குத்தித் தூக்கி எறியும். சங்க இலக்கியம் இந்த மாடுபிடி வீரர்களைப் 'பொதுவர்' என்று கூறுகிறது. காளைமாடுகள் இந்தப் பொதுவர்களைத் தமது கொம்புகளால் குத்தித் தாக்குவதனைச் சாடுதல் என்ற சொல்லால் குறிப்பிடும் சில சங்கப் பாடல் வரிகள் கீழே சான்றாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

கொல் ஏறு சாட இருந்தார்க்கு எம் பல் இரும் - கலி 101
விடரி அம் கண்ணி பொதுவனை சாடி குடர் சொரிய குத்தி - கலி 101
கதன் அஞ்சான் பாய்ந்த பொதுவனை சாடி நுதி நுனை கோட்டால் குலைப்பதன் - கலி 101
நிரைபு மேற்சென்றாரை நீள் மருப்பு உற சாடி - கலி 105

மேற்கண்ட சான்றுகளில் இருந்து சாடுதல் என்பதற்குக் கொம்புகளால் குத்தித் தாக்குதல் என்ற பொருளும் இருப்பதனைப் புரிந்து கொள்ளலாம். சாடுதல் என்ற தமிழ்ச்சொல்லில் இருந்து சாடுதல் வினையைச் செய்யும் காளைமாட்டினைக் குறிக்கும் பெயர்ச்சொல் பிறமொழிகளில் எவ்வாறு உண்டானது என்று கீழே பார்க்கலாம்.

சாடு >>> சா`ண்ட்` - இந்தி, மராத்தி, ஒரியா
சாடு >>> சா`ண்ட` (கு~ச்^ராத்தி) >>> சா`ண (பஞ்சாபி`) >>> உக்சா`ண - செங்கிருதம்
சாடு >>> ச`ண்ட` - வங்காளம்

மாடுகளில் காளைமாடுகள் வலிமை மிக்கவை என்பதால் அவை வண்டி இழுக்கும் தொழிலுக்குப் பெரிதும் பயன்படுத்தப் படுகின்றன. ஒற்றைக்காளை வண்டி, இரட்டைக் காளைவண்டி என்று பாரத்தின் எடையினைப் பொறுத்து இருவிதமாகப் பயன்படுத்தப்படும். நிலத்தில் வாழும் விலங்குகளில் காளைமாடுகளைப் போலப் பெரும்பாரம் ஏற்றிய வண்டிகளைத் தளராமல் நெடுந்தூரம் இழுத்துச் செல்லும் வலிமை வேறு எந்த ஒரு விலங்கிற்கும் இல்லை என்றே சொல்லலாம். காளைமாடுகளைக் காட்டிலும் யானைகள் வலியவையாக இருந்தாலும் யானைகளை வளர்ப்பதும் அவற்றைத் தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து பாரமிழுக்கப் பயன்படுத்துவதும் கடினமான செயல் என்பதால் காளைமாடுகளே பலராலும் பெரிதும் பயன்படுத்தப் பட்டன. இப்படி வலிமைக்குப் பெயர் போன காளைமாடுகளைக் குறிக்க, வலிது என்ற சொல்லே பிறமாநில மொழிகளில் சற்று திரிந்து எப்படி வழங்கப்படுகின்றது என்று பாருங்கள்.

வலிது >>> ப`லத` - செங்கிருதம், வங்காளம், பஞ்சாபி`, ஒரியா
வலிது >>> வலூ - மராத்தி

காளைமாடுகள் பூட்டிய வண்டிகளில் இரண்டு சக்கரங்கள் இருக்கும். இந்த சக்கரம் என்ற சொல்லை வடமொழி என்று தவறாகக் கூறுவார் பலர். அதைப்போல சக்தி என்ற சொல்லையும் வடமொழி என்றே தவறாகக் கருதுவார்கள். காரணம், அது சகடு என்ற தமிழ்ச்சொல்லின் திரிபுதான் என்பதை அறிந்திருக்க மாட்டார். மாட்டுவண்டியையும் அவ் வண்டியில் இருக்கும் ஆழிகளையும் குறிக்கும் சகடு என்ற தமிழ்ச்சொல்லானது பிறமாநில மொழிகளில் எப்படியெல்லாம் திரிந்து வண்டியின் சக்கரத்தினையும் வண்டியை இழுக்கும் காளைமாட்டினையும் வண்டியை இழுப்பதற்குத் தேவையான வலிமையையும் குறிக்கிறது என்பதைக் கீழே பார்க்கலாம். 

சகடு >>> சக்ர - பொருள்: வண்டிச் சக்கரம் - மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி, செங்கிருதம், மராத்தி, கு~ச்^ராத்தி, வங்காளம், பஞ்சாபி`, ஒரியா
சகடு >>> ச`க`ரி >>> ச~க்கரி >>> ச~க்வர - பொருள்: காளைமாடு - செங்கிருதம்.
சகடு >>> ச`க்தி - பொருள்: வலிமை, ஆற்றல் - மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி, செங்கிருதம், மராத்தி, கு~ச்^ராத்தி, வங்காளம், பஞ்சாபி`, ஒரியா

பெண்மாடு:

சக்தி என்ற சொல்லை வடமொழி என்று தவறாகக் கருதியதைப் போலவே, மாட்டினைக் குறிக்கும் கோ என்ற சொல்லையும் வடமொழி என்றே நினைப்பர். மாட்டினைக் குறிக்கும் கோ என்ற சொல் தூய தமிழ்ச்சொல்லே. சங்க இலக்கியங்களில் இச்சொல் தனித்து வழங்காமல் தொகைச்சொல்லாக வழங்கப்பட்ட காரணத்தினால் அதன் பொருளை அறியமாட்டாமல் போயிற்று எனலாம். சங்க இலக்கியத்தில் கோவலர் என்ற சொல் மாடுகளை ஓட்டும் ஆயர்களைக் குறித்து ஏராளமான பாடல்களில் வருகிறது. கீழே சில சான்றுகள் தரப்பட்டுள்ளன.

ஆர்கலி முனைஇய கொடுங்கோல் கோவலர் ஏறுடை இனநிரை வேறுபுலம் பரப்பி - நெடு 3
பல் ஆ தந்த கல்லா கோவலர் - நற் 364
ஆ பெயர் கோவலர் ஆம்பலொடு அளைஇ - அகம் 214
முல்லை கண்ணி பல் ஆன் கோவலர் - பதி 21

மேற்காணும் பாடல்களில் வரும் கோவலர் என்ற சொல்லானது உண்மையில் ஒரு தொகைச்சொல் ஆகும். அதாவது கோ, வலர் ஆகிய சொற்களின் தொகையே கோவலர் ஆகும். இதில் வலர் என்பது வலத்தல் தொழிலைச் செய்வோர் என்ற பொருள்படும். வலத்தல் என்பதற்குப் பல பொருட்களைக் கூறிய தமிழ் அகராதிகள் ஓட்டுதல் என்ற பொருளைக் கூறத் தவறிவிட்டன. வலத்தல் ஆகிய ஓட்டுதல் தொழிலைச் செய்வோரை வலவன் என்று இலக்கியங்கள் குறிப்பிடும். குதிரை(கள்) பூட்டிய தேரை ஓட்டும் தேரோட்டியினை வலவன் என்று கூறும் சங்க இலக்கியப் பாடல்கள் சிலவற்றைச் சான்றாகக் கீழே காணலாம்.

வலவன் வண் தேர் இயக்க நீயும் - அகம் 340
வலவன் வள்பு ஆய்ந்து ஊர - நற் 11
நெடும் தேர் ஊர்-மதி வலவ - அகம் 244

மேற்காணும் பாடல்களில் வரும் வலவர் என்பது வலர் என்று சுருங்கியநிலையில், கோவலர் என்பது மாடுகளை ஓட்டும் ஆயர்களைக் குறிக்கப் பயன்பட்டுள்ளதில் இருந்து கோ என்ற சங்கத் தமிழ்ச் சொல்லானது மாடுகளைக் குறிக்கப் பயன்பட்டு வந்துள்ளதை தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். மாடுகளைக் குறிக்கும் கோ என்ற தமிழ்ச்சொல்லானது பிறமாநில மொழிகளில் திரிந்து பசுவைக் குறிக்கப் பயன்படும் விதங்களைக் கீழே காணலாம்.

கோ >>> கோ~வு (தெலுங்கு) >>> க~வ (செங்கிருதம்) >>> கா~வ் (பஞ்சாபி`) >>> கா~வடி`, கா~வலடி` - கு~ச்^ராத்தி
கோ >>> கோ~ - இந்தி, செங்கிருதம், கு~ச்^ராத்தி, மராத்தி, வங்காளம், பஞ்சாபி`, ஒரியா

பசு என்ற சொல்லானது தமிழ் உட்பட அனைத்து இந்திய மொழிகளிலும் மாடுகளைக் குறிக்கப் பயன்பட்டு வருகின்றது. பசு என்ற சொல்லையும் தமிழ் என்று அறியாது வடமொழி என்று பலர் தவறாக நினைக்கின்றனர். காரணம், பசு என்னும் சொல்லானது பயம் என்ற தமிழ்ச்சொல்லின் திரிபே என்று அறியாதது தான். பயம் என்ற தமிழ்ச் சொல்லுக்குப் பல பொருட்களைத் தமிழ் அகராதிகள் கூறியிருந்தாலும் பால் என்ற பொருளும் அதில் உண்டு. பயம் என்ற சொல்லானது பால் என்ற பொருளில் வரும் சங்கப் பாடல்வரிகள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பயநிரைக்கு எடுத்த மணி நீர் பத்தர் - நற் 92
படு மணி மிடற்ற பயநிரை ஆயம் - அகம் 54
பயநிரை சேர்ந்த பாழ் நாட்டு ஆங்கண் - அகம் 155
கன்று தன் பயமுலை மாந்த முன்றில் - குறு 225

மேற்பாடல்களில் வரும் பயநிரை என்பது பால்தரும் மாட்டுக் கூட்டத்தைக் குறித்து வந்துள்ளது. பயமுலை என்பது பால்கொண்ட முலை என்ற பொருளில் வந்துள்ளது. இவ்வாறு பல பாடல்களில் பால் என்னும் பொருளைக் குறித்து வரும் பயம் என்ற தமிழ்ச்சொல்லானது பிறமாநில பொழிகளில் சற்றே திரிந்து 'பால்தருவது' என்ற பொருளில் பெண்மாட்டினைக் குறிக்கக் கீழ்க்காணுமாறு பயன்படுகின்றது.

பயம் >>> பசு` - மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி, செங்கிருதம், மராத்தி, கு~ச்^ராத்தி, வங்காளம், பஞ்சாபி`, ஒரியா.
பயம் >>> பயச்`வினி - செங்கிருதம்

மாடுகளின் உணவு என்று எடுத்துக்கொண்டால், பசும்புல் தான் அவற்றின் முதன்மை உணவென்று அனைவரும் அறிவோம். மாடுகளின் முதன்மை உணவாகிய புல்லைக் குறிப்பதற்குப் பஞ்சாய், பைஞ்சாய், சாய், பதவு முதலான பல பெயர்கள் உண்டு. இவற்றில் பதவு என்பது சிறிய புல்வகையைக் குறிக்கும். பதவு ஆகிய புல்லை மாடுகள் உண்ட செய்திகளைக் கூறும் சில பாடல்கள் கீழே:

பதவு மேயல் அருந்து மதவு நடை நல் ஆன் - அகம் 14
தண் நறும் படு நீர் மாந்தி பதவு அருந்து - அகம் 139
பதவு மேயல் அருந்து துளங்கு இமில் நல் ஏறு - அகம் 341

புல் என்ற பொருளைத் தரும் பதவு என்ற தமிழ்ச்சொல்லைச் சற்றே திரித்து 'புல்லை உண்பது' எனும் பொருளில் மாட்டினைக் குறிப்பதற்குப் பிறமொழிகள் பயன்படுத்தும் விதங்களைக் கீழே காணலாம்.

பதவு >>> ப^த்`ர - செங்கிருதம், கு~ச்^ராத்தி
பதவு >>> பை`தே`கி` >>> வைதே`கி` - செங்கிருதம்

ஆடு, எருமைகளைக் காட்டிலும் பசுமாடுகளின் பால்மடியானது எப்போதும் சற்று பெருத்தே இருக்கும். பால் நிறைந்திருக்கும் மாடுகளின் மடிகளை நிரம்பகம் என்று கூறுவது வழக்கம். நிரம்பகம் என்பது நிரம்பு + அகம் என்று விரிந்து பால்நிரம்பிய மடியகம் என்ற பொருளைத் தருவதாகும். நிரம்பகம் என்ற தொகைச்சொல்லானது பிறமொழிகளில் எவ்வாறு திரிந்து பால்மடி கொண்ட மாடுகளைக் குறிக்கப் பயன்படுகின்றது என்று கீழே காணலாம்.

நிரம்பு + அகம் = நிரம்பகம் >>> நிலிம்பிகா >>> நிலிம்ப - செங்கிருதம்

தமிழில் கலித்தல் என்ற பழஞ்சொல்லுண்டு. இச்சொல்லுக்கு செழித்தல் / பெருகுதல் என்ற பொருளுமுண்டு. யாணர் என்ற சொல், வளம் அல்லது வருவாயைக் குறிப்பதாகும். கலியும் யாணரும் இணைந்து கலியாணர் என்ற சொல்லாகி 'செழித்துப் பெருகும் வருவாய்' / 'வருவாயைத் தரும் மாடு' என்ற பொருளில் பிற மொழிகளில் எப்படிப் பயன்படுத்தப் படுகின்றது என்று பாருங்கள்.

கலி+யாணர் = கலியாணர் >>> கல்யாண் = செழிப்பு - பன்மொழிகள்
கலி+யாணர் = கலியாணர் >>> கல்யாண் >>> கல்யாணி = பசுமாடு - மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி, செங்கிருதம், மராத்தி, கு~ச்^ராத்தி, வங்காளம், பஞ்சாபி`, ஒரியா.

மாடு என்றால் தமிழில் செல்வம் என்றொரு பொருளுண்டு. காரணம், மாடுகள் இருந்தாலே அங்கே உணவுக்கோ பொருள்வளத்திற்கோ குறைவிருக்காது. பசுமாட்டுக்குக் கல்யாணி என்ற பெயர் சூட்டப்பட்டதும் இவ்வகையில்தான்.

குழந்தைகளுக்குப் புகட்டப்படும் தாய்ப்பாலானது அமுதம் போல நன்மை பயப்பது. தாய்ப்பால் ஊறாத தாய்மார்கள் தமது பச்சிளம் குழந்தைகளுக்கு மாட்டுப்பாலினைப் புகட்டியே வளர்ப்பார்கள். இந்நிலையில் அக்குழந்தைக்கு இன்னொரு தாயாக விளங்குவது பசுமாடே ஆகும் அல்லவா?. இதனால் தான் பசுமாட்டினைத் 'தாயைப் போன்றது' என்ற பொருளில் மாத்ரு என்று வடமொழியில் அழைப்பர். இந்த மாத்ரு என்ற சொல்லானது மாதர் என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து தோன்றியதே ஆகும். அதாவது,

மாதர் >>> மாத்ரு - செங்கிருதம், இந்தி, வங்காளம், கு~ச்^ராத்தி, மராத்தி, பஞ்சாபி`, ஒரியா.

மாதர் என்ற தமிழ்ச்சொல்லுக்குப் பெண் என்று பொதுவான பொருளையே தமிழ் அகராதிகள் கூறியிருந்தாலும் திருமணமான பெண் /  குழந்தை பெற்றெடுத்த பெண்ணைக் குறிக்கவும் மாதர் என்ற சொல்லைக் கீழ்க்காணும் பாடல்வரிகளில் பயன்படுத்தி இருக்கின்றனர்.

மாதர் உண்கண் மகன் விளையாட - ஐங்கு. 406.
மடமொழி மாதர் மனைமாட்சியாள் - நால.39/2

மாதர் என்ற தமிழ்ச்சொல்லானது மாத்ரு என்ற வடமொழிச் சொல்லுக்கு மட்டுமின்றி, தாயைக் குறிக்கின்ற ஆங்கிலச் சொல்லான மதர் என்பதற்கும் மூலமாக அமைந்திருப்பது எண்ணி எண்ணி வியக்கத்தக்கதாய் உள்ளது. !!!

தேன் என்னும் தமிழ்ச்சொல்லுக்கு இனிமை, பூந்தேன், கள், சாறு, தேனீ உட்பட பல பொருட்களைத் தமிழ் அகராதிகள் கூறியிருக்கின்றன. ஆனால், தேன் என்ற சொல்லுக்குப் பால் என்ற பொருளைக் கூறாமல் விட்டுவிட்டன. பசுக்களில் இருந்து கறக்கப்பட்ட பாலை அப்படியே குடிக்கும்போது அது தேன் போல இனிமை மிக்கதாய் இருக்கும். அதேபாலைக் காய்ச்சினால் அதன் இனிமை குறைந்து சப்பென்றாகி விடும். சப்பென்று இருக்கும் காய்ச்சிய பாலைக் குழந்தைகள் குடிக்கமாட்டார்கள் என்பதால் அதனுடன் பூந்தேனைக் கலந்துக் குடிக்கக் கொடுப்பது சங்ககால வழக்கம். இதைப்பற்றிய பாடல்வரிகள் கீழே:

யானும் தாயும் மடுப்ப தேனொடு தீம்பால் உண்ணாள் - நற் 179
பாலொடு தேன் கலந்து அற்றே பணிமொழி - குறள்:1121.

தேன் என்ற சொல்லுக்குப் பால் என்ற பொருள் தமிழ் அகராதிகளில் இல்லை என்றாலும் கீழ்க்காணும் குறுந்தொகைப் பாடலில் பால் என்ற பொருளில் வருவதைக் காணமுடிகிறது.

நீர் நீடு ஆடின் கண்ணும் சிவக்கும்
ஆர்ந்தோர் வாயில் தேனும் புளிக்கும் - குறு.354

'நீண்ட நேரம் நீராடினால் கண்கள் சிவக்கும்; அதிகமாகக் குடித்தால் தேனும் புளிக்கும்' என்பது இப்பாடல் வரிகளின் பொருளாகும். இப்பாடலில் வரும் தேன் என்பதற்குப் பூந்தேன் என்ற அகராதிப் பொருள் பொருத்தமாகத் தோன்றவில்லை. காரணம், தேன் கெட்டியாய் இருப்பதால் அதனை நீரைப் போல யாராலும் குடிக்க முடியாது; கொஞ்சம் கொஞ்சமாக நக்கி உண்ணத்தான் முடியும். மேலும் தேனை அதிகமாக உண்ணவும் முடியாது; இனிப்பு மிகுதியால் திகட்டிவிடும்; திகட்டினாலும் தேன் ஒருபோதும் புளிப்புச்சுவை தராது. ஆனால் அதிகமாக உண்டால் தேனும் புளிக்கும் என்று பாடலில் கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து, இப்பாடலில் வரும் தேன் என்பது பூந்தேனாக இருக்க வாய்ப்பில்லை என்று உறுதியாகிறது.

மேற்பாடலில் வரும் தேன் என்பது பால் என்ற பொருளில்தான் வந்திருக்க வேண்டும். காரணம், பாலானது நீர்போல இருப்பதால் அதனை அதிகமாக உட்கொள்ள முடியும் என்பதுடன் தொடர்ந்து பாலைக் குடிக்கக் குடிக்க அதன் சுவை குன்றி லேசாகப் புளிப்பதைப் போலத் தோன்றும். இவ்வாறு தோன்றுவதற்கு அறிவியல் காரணம் உண்டு. பாலுண்ணும் குழந்தைகளின் நாக்கைப் பார்த்தால் அதன்மீது வெள்ளையாய் ஒரு படலம் காணப்படும். பாலில் உள்ள லேக்டோசு` என்னும் திணையானது நாக்கின் சுவையரும்புகளின்மீது தொடர்ந்து படிவதால் உண்டாகும் படலம் இது. தொடர்ந்து பாலைக் குடிக்கும்போது இப்படலமானது பாலின் சுவையை அறியவிடாமல் சுவையரும்புகளைத் தடுத்து விடும். இதனால் பாலின் சுவைகுன்றி லேசாகப் புளிப்பதைப் போலத் தோன்றுவதால் தொடர்ந்து குடிக்கும் விருப்பம் தடைபடுகிறது. பழகப் பழகப் பாலும் புளிக்கும் என்ற பழமொழி கூட இதன் அடிப்படையில் எழுந்ததே. இதிலிருந்து, இப்பாடலில் வரும் தேன் என்பது பூந்தேனைக் குறிக்காமல் பால் என்ற பொருளையே குறித்து வந்துள்ளது என்பதை உறுதி செய்யலாம்.

மேலே கண்டவாறு, பால் என்னும் பொருளைக் குறிக்கின்ற தேன் என்னும் தமிழ்ச்சொல்லில் இருந்து, பாலைத் தருவது என்ற பொருளில் பசுமாட்டினைக் குறிக்கும் பெயர்ச்சொல்லானது பிறமொழிகளில் தோன்றிப் பயன்படும் விதத்தினைக் கீழே காணலாம்.

தேன் >>> தே`னு - செங்கிருதம், இந்தி, கு~ச்^ராத்தி, மராத்தி, வங்காளம்.

பால் தொடர்புடைய பெயர்கள்:

பால் என்று எடுத்துக்கொண்டால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலும் அதிகம் பயன்படுத்துவது மாட்டுப்பால் தான். பாலைக் குறிப்பதற்குத் தமிழில் பால், பயம், அமுதம் முதலான பல பெயர்கள் உண்டு. இவற்றில் பயம் என்ற தமிழ்ச்சொல்லானது பால் என்ற பொருளில் சங்க இலக்கியங்களில் பயன்படுத்தப் பட்டதைச் சான்றுகளுடன் மேலே கண்டோம். இம்மூன்று தமிழ்ச் சொற்களும் பிறமாநில மொழிகளில் எவ்வாறு திரித்துப் பாலைக் குறிக்கப் பயன்படுத்தப் படுகின்றன என்று கீழே காணலாம்.

பால் >>> பாலு - மலையாளம், தெலுங்கு
பால் >>> கா`லு - கன்னடம்
அமுதம் >>> அம்ருத - கன்னடம்
பயம் >>> பய (கு~ச்^ராத்தி) >>> பயச்` - மலையாளம், கன்னடம், இந்தி, செங்கிருதம்.

பயம் என்ற தமிழ்ச்சொல் பயச என்று திரிந்து பால் என்ற பொருளில் பிறமொழிகளில் பயன்பட, அத் திரிசொல்லை வடசொல் என்று நினைத்த நாம் பாயசம் என்று தமிழ்ப்படுத்திப் பால்கலந்து செய்யப்படும் நீர்ம உணவினைக் குறிக்கப் பயன்படுத்தி வருகிறோம். இதிலிருந்து, பாயசம் என்னும் உணவுப் பெயருக்கும் பயம் என்ற தமிழ்ச்சொல்லே மூலம் என்பதை அறிந்துகொள்ளலாம்.

மாடுகளின் பால்தரும் மடியினைக் குறிக்க சுரை என்ற சங்கத் தமிழ்சொல் உண்டு. பால் சுரக்கும் இடம் என்ற பொருளில் சுரை என்ற சொல் மிகப் பொருத்தமாக அமைந்துள்ளது. இச்சொல்லைச் சற்றே திரித்துப் பாலைக் குறிப்பதற்கும் பால்தரும் பசுமாட்டைக் குறிப்பதற்கும் பிறமொழிகள் பயன்படுத்திக் கொள்ளும் விதங்களைக் கீழே காணலாம்.

சுரை >>> க்சீ~ர - மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி, செங்கிருதம், மராத்தி, கு~ச்^ராத்தி, வங்காளம், பஞ்சாபி`, ஒரியா.
சுரை >>> க்சீ~ர >>> கீரா, கீர் - இந்தி, கு~ச்^ராத்தி.
சுரை >>> சு`ரபி` (பசுமாடு) - செங்கிருதம்

சங்க இலக்கியத்தில் துருத்தி என்ற சொல்லுண்டு. தமிழ் இலக்கியங்கள் இச்சொல்லுக்குப் பல பொருட்களை உரைத்தாலும் உலையூது கருவி என்ற பொருளும் அவற்றில் உண்டு. காற்றை ஊதி உலைக்குள் செலுத்துவதற்காகச் சுருங்கி விரியும் வகையில் தோலினால் செய்யப்பட்ட பெரிய பையாகிய இதன் முனையில் நீண்ட காம்பு போன்ற அமைப்புகள் உண்டு. பசுமாடுகளின் பால்நிரம்பிய பெரிய மடியும் கிட்டத்தட்ட இந்த துருத்தியின் அமைப்பை ஒத்திருக்கும். அருகில் உள்ள படத்தில் மாடுகளின் மடியினையும் காற்றுத் துருத்தியினையும் ஒப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளது. இத் துருத்தியானது துதி என்றும் இலக்கியங்களில் வழங்கப்பெறும். வடிவ அமைப்பில் மட்டுமின்றி சொல் அமைப்பிலும்  ஒப்புமை உண்டு. இது எவ்வாறெனில், துருத்தி என்பது முன்னால் துருத்திக் கொண்டிருக்கும் தொந்தி வயிற்றையும் குறிக்கும் என்ற நிலையில், பசுக்களின் அடிவயிற்றில் இருந்து துருத்தியவாறு தொங்குகின்ற பால்நிறைந்த பெருத்த மடியினையும் துருத்தி என்ற சொல் குறிக்கும். இவ்வாறு, பசுக்களின் பால்மடியினைக் குறிப்பதான துருத்தி / துதி என்ற தமிழ்ச் சொல்லானது பிறமாநில மொழிகளில் கீழ்க்கண்டவாறு திரிந்து பாலைக் குறிக்கப் பயன்படுவதைக் காணலாம்.

துருத்தி >>> துதி >>> து`த^ (பஞ்சாபி`, ஒரியா) >>> தூ`த்^ - இந்தி, கு~ச்^ராத்தி, மராத்தி, வங்காளம்
துருத்தி >>> துதி >>> து`க்~த^ - மலையாளம், இந்தி, செங்கிருதம், மராத்தி.

வேளாண்மை தொடர்புடைய சொற்கள்:

பசுமாடுகள் பாலுக்காக வளர்க்கப்படுபவை என்றால் காளைமாடுகள் உழவுத் தொழிலுக்கும் இழுவைத் தொழிலுக்கும் பெரிதும் பயன்படுத்தப் படுகின்றன. இதில், மாடுகளின் இழுவைத் தொழில் சார்ந்த சொற்களைப் பற்றி மேலே கண்டோம். இங்கே, வேளாண்மை சார்ந்த சொற்களைப் பற்றிக் காணலாம். 

வேளாண்மைத் தொழிலைக் குறிக்கும் பல தமிழ்ச் சொற்களில் வேளாண்மை என்னும் சொல் உள்பட உழவு, செஞ்சால் முதலானவையும் அடங்கும். இம்மூன்று சொற்களும் பிறமாநில மொழிகளில் திரிந்து வேளாண்மை / ஏர் என்ற பொருளில் வழங்கும் விதங்களைக் கீழே காணலாம்.

வேளாண்மை >>> வெள்ளாய்ம - மலையாளம்
உழவு >>> உழுக, உழவ், உழல் - மலையாளம்
உழவு >>> உழுமெ - கன்னடம்
செஞ்சால் >>> செ^ஞ்சா`லி - கு~ச்^ராத்தி.

வேளாண்மை என்னும் உழவுத் தொழிலின் முதலும் அடிப்படையுமான வினையே ஏர் / கொழுவினைக் கொண்டு நிலத்தைக் கீறுவதுதான். கீறுதல் என்றும் கொழுதுதல் என்றும் அழைக்கப்படும் இவ்வினையைக் குறிக்கும் தமிழ்ச்சொற்கள் பிற மாநில மொழிகளில் சற்றே திரிந்து வேளாண்மையைக் குறிக்கப் பயன்படுத்தப் படுவதைக் கீழே பார்க்கலாம்.

கீறு >>> க்ருசி~ >>> க்ருசா`ண >>> கிரசா`னி >>> கர்ச`ன >>> ச`ங்கர்ச`ன
கொழுது >>> கோத்` >>> கேதி >>> கேதிபா`ரி, கேதிவாடி`
கொழுது >>> கோத்` >> சோ^த் >>> சோ^தாயி
கொழுது >>> குந்தல

சொல்வடிவம்        பேசப்படும் மொழிகள்

க்ருசி~               மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி,
                     செங்கிருதம், கு~ச்^ராத்தி, மராத்தி,
வங்காளம், பஞ்சாபி`, ஒரியா.
க்ருசா~ண            செங்கிருதம்
கிரசா`னி             பஞ்சாபி`
கர்ச`ன               கு~ச்^ராத்தி, வங்காளம், செங்கிருதம்
ச`ங்கர்`சன           இந்தி
கோத்`               இந்தி, மராத்தி, கு~ச்^ராத்தி
கேதி                 இந்தி, கு~ச்^ராத்தி, வங்காளம், பஞ்சாபி`.
கேதிபா`ரி, கேதிவாடி` இந்தி, பஞ்சாபி`, கு~ச்^ராத்தி
சோ^த்               இந்தி, ஒரியா
சோ^தாயி            இந்தி
குந்தல               செங்கிருதம், கு~ச்^ராத்தி

வேளாண்மை செய்யப்படும் வயல்நிலத்தினைக் குறிக்கக் கழனி, பழனம், செறு, ஞாங்கர் முதலான பல சொற்கள் தமிழில் உண்டு. இவற்றில் ஞாங்கர் என்ற சொல்லுக்கு வயல்நிலம் என்ற பொருளைக் காட்ட தமிழ் அகராதிகள் தவறிவிட்டாலும் இடம் என்ற பொருளைக் கூறியுள்ளன. ஆனால், கீழ்க்காணும் பாடல்களில் வரும் ஞாங்கர் என்ற சொல்லானது இடம் என்று பொதுவாகச் சுட்டாமல் விளைநிலத்தைக் குறிப்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

இன்சுவை மூரல் பெறுகுவிர் ஞாங்கர் குடிநிறை வல்சி செஞ்சால் உழவர் - பெரும் 196
காவல் மறந்த கானவன் ஞாங்கர் கடியுடை மரம்தொறும் படுவலை மாட்டும் - குறு 342

வயல்நிலங்களைக் குறிக்கும் செறு, ஞாங்கர் ஆகிய தமிழ்ச்சொற்கள் பிறமாநில மொழிகளில் சற்றே திரிந்து வயல்நிலங்களை உழுவதற்குப் பயன்படும் கருவியான ஏரினைக் குறிக்கப் பயன்படும் விதங்களைக் கீழே காணலாம்.

செறு >>> சீ`ர >>> சீ`ல
ஞாங்கர் >>> நாங்க~ர >>> லாங்க~ல

வயலைக் குறிக்கும் செறு என்ற சொல்லில் இருந்தே சேறு என்ற சொல் உருவாகிறது. காரணம், வயல்நிலம் என்றாலே அங்கு சேறு நிறைந்து காணப்படும். அதுமட்டுமின்றி, சேறு என்ற சொல்லில் வரும் றகரம் மக்கள் நாவில் தகரமாக மாறி சேத்து என்று வழங்குவதும் இயல்புதான். இனி, செறு / சேறு என்ற சொல் பிறமொழிகளில் சற்றே திரிந்து வேளாண்மையைக் குறிக்கப் பயன்படுவதைக் கீழே காணலாம்.

செறு >>> சேறு >>> சே`தி >>> சே`த்யமு
செறு >>> ச்`ருத >>> ப்ரச்`ருத

சொல்வடிவம்        பேசப்படும் மொழிகள்

சீ`ர, சீ`ல             செங்கிருதம்
நாங்க~ர              மராத்தி
லாங்க~ல            வங்காளம்
சே`தி                மராத்தி
சே`த்யமு            தெலுங்கு
ப்ரச்`ருத             செங்கிருதம்          

வேளாண்மையில் பயன்படுத்தப்படும் ஏரினைக் குறிக்கப் பல சொற்கள் தமிழில் உண்டு. இவற்றில் நுகம், நாஞ்சில், கலப்பை ஆகிய சொற்கள் பிறமாநில மொழிகளில் சற்றே திரிந்து ஏர் / வேளாண்மையைக் குறிக்கப் பயன்படுவதனைக் கீழே காணலாம்.

நுகம் >>> உக்கெ - கன்னடம்
நாஞ்சில் >>> நாக~லி >>> நெகி~லு
கலப்பை >>> கலப்ப
கலப்பை >>> க`ல், க`ல, க`லி >>> க`ல்ய, க`லதி, க`லவத

சொல்வடிவம்        பேசப்படும் மொழிகள்

நாக~லி              தெலுங்கு
நெகி~லு              கன்னடம்
கலப்ப               மலையாளம்
க`ல், க`ல            இந்தி, செங்கிருதம், கு~ச்^ராத்தி,
வங்காளம், பஞ்சாபி`, ஒரியா
க`லி, க`ல்ய, க`லதி   செங்கிருதம்
க`லவத              கு~ச்^ராத்தி

இக்காலத்தில் வேளாண்மையானது நுகத்தேர் (டிராக்டர்) கொண்டே பெரும்பாலும் செய்யப்படுகிறது. ஆனால், அண்மைக்காலம் வரையிலும் மாடுகளே வயலை உழுவதற்குப் பயன்படுத்தப் பட்டன. இப்போதும் சில இடங்களில் பயன்படுத்தப் படுகின்றன. வேளாண்மையில் ஏர் என்னும் உழுகருவியானது மாடுகளுடன் பூட்டப்பட்டு வயலில் உழப்படும். தமிழில் மாடுகளைக் குறிக்கும் பெயர்ச்சொற்கள் பிறமாநில மொழிகளில் திரிந்து மாடுகளுடன் சேர்த்துப் பூட்டப்படும் ஏரினைக் குறிக்கக் கீழ்க்காணும் முறைகளில் பயன்படுகின்றன. 

மாடு >>> மடி`கெ - கன்னடம்
கோ >>> கோ~கில - செங்கிருதம்
பகடு >>> வக~ட`, வக~டி` >>> வக~டி`ரம் - பஞ்சாபி`

இறுதியாக, வேளாண்மையின் பயனாகிய விளைபொருட்களைப் பற்றிப் பார்ப்போம். வேளாண்மையில் விளைவிக்கப்படும் முதன்மை உணவுவகைகளான நெல், கரும்பு, தினைவகைகள் ஆகிய யாவும் புல்வகையைச் சேர்ந்தவையே. ஆனால், இவ்வகைப் புற்களின் இலைகள் சிறியதாக அன்றி அகலமாகவும் உயரமாகவும் வளரும். உயர மிகுதியால் இவை சாய்ந்த நிலையில் இருப்பதால் இவற்றைச் சாய் என்ற சொல்லால் குறிப்பர். பசுமையுடன் இருப்பதால் பைஞ்சாய் என்றும் பஞ்சாய் என்றும் இவற்றைக் குறிப்பிடுவர். வேளாண்மையின்போது வயலெங்கும் பச்சைப்பசேலென இப்புற்கள் வளர்ந்திருக்கும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும். இப்படி வேளாண் நிலங்களில் பசும்புற்கள் உயரமாக வளர்ந்து எங்கெங்கும் காணப்பட்டதன் அடிப்படையில் சாய்க்காடு, சாய்க்கானம் என்றெல்லாம் சங்ககாலத்தில் ஊர்ப்பெயர்கள் அமைக்கப்பட்டிருந்தன என்பது சங்க இலக்கியங்களில் இருந்து தெரியவருகிறது. நெல் முதலான பசும்புற்களைக் குறிப்பதான இத் தமிழ்ச்சொற்கள் திரிந்து பிறமாநில மொழிகளில் வேளாண்மையைக் குறிக்கப் பயன்படுவதைப் பற்றிக் கீழே காணலாம்.

பைஞ்சாய் >>> பே`சா`ய >>> வ்யவசா`ய, வ்யவசாய`மு
சாய் >>> சாச` >>> சாச`ணி

சொல்வடிவம்        பேசப்படும் மொழிகள்

பே`சா`ய             கன்னடம்
வ்யவசா`ய           கன்னடம்
வ்யவசா`யமு        தெலுங்கு
சாச`                 வங்காளம்
சாச`ணி              கு~ச்^ராத்தி

முடிவுரை:

மாடு, பால் மற்றும் வேளாண்மை தொடர்புடைய தமிழ்ச்சொற்கள் பலவும் பிறமொழிகளில் எவ்வாறெல்லாம் திரிந்து வழங்கப்படுகின்றன என்பதனை விரிவாக மேலே கண்டோம். தமிழர்கள் நடைமுறையில் பயன்படுத்தும் பல சொற்கள் தமிழ்மொழியா பிறமொழியா என்ற மயக்கம் அடிக்கடி பலருக்கு ஏற்படுவதுண்டு. இவற்றில் சக்தி, கல்யாணி முதலான சில சொற்களைப் பற்றி மேலே கண்டோம். இதைப்போல கல்யாணம் என்ற சொல்லும் ஒன்றாகும். திருமணம் என்ற சொல்லே தமிழென்றும் கல்யாணம் என்ற சொல் வடமொழி என்றும் பலர் கருதுகின்றனர். இது தவறான கருத்தாகும். கல்யாணம் என்னும் சொல் தூய தமிழ்ச்சொல்லே ஆகும். ஆணம் என்ற தமிழ்ச்சொல்லுக்கு அன்பு என்ற அகராதிப் பொருளுண்டு. இச்சொல்லானது நாம் மேலே கண்ட கலி (கலித்தல் = பெருகுதல்) என்ற சொல்லுடன் இணைந்து கலியாணம் என்ற சொல்லாகிப் 'பெருகும் அன்பு' என்ற பொருளில் திருமணத்தைக் குறிக்கப் பயன்பட்டு வருகின்றது. காதலர்கள் இருவரும் சேர்ந்து ஒன்றாக வாழ்ந்து தமக்குள் அன்பினைப் பெருக்கிக் கொள்வதற்காகப் பெரியோர்களால் செய்து வைக்கப்படும் பொதுவழக்கான திருமணத்தைக் குறிப்பதற்குக் கல்யாணம் என்ற சொல் மிகப் பொருத்தமாகவே அமைந்துள்ளது.

கலி+ஆணம் = கலியாணம் >>> கல்யாணம்

..... தொடரும் ...........
 

--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
------------------------------------------------------------------
எதிரியிடம் நமக்குப் பிடிக்காத பொருள்
எதிர்க்கும் தன்மையே அன்றிஅவர் உயிரல்ல
எதிர்க்கும் தன்மையை மட்டும் நீக்கிவிட்டு
எதிரியையும் வாழவிடுவோம் நண்பனாக !!!
----------------------------------------------------------------
எனது முகநூல் முகவரி: http://www.facebook.com/thiruththam
எனது டுவிட்டர் முகவரி: https://twitter.com/thiruththam
தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.in
திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com
தமிழ்நூல்களுக்கான மதிப்புரைகளைக் காண: http://noolmathippurai.blogspot.in

செல்வன்

unread,
Sep 3, 2018, 10:57:48 AM9/3/18
to mint...@googlegroups.com
சக்கரம் கண்டுபிடிக்கபட்டதே மத்திய ஆசியாவில் தான். குதிரைகள் டிமஸ்டிகேட் ஆனதும் அங்குதான். அதன்பின் தேர்களில் குதிரைகளை பூட்டிக்கொண்டு ஆரியர்கள் உலகெங்கும் பரவினார்கள். அதனால் சக்கரம் என்பது இந்தோ ஐரோப்பிய சொல் தான் என்பது பல அறிஞர்கள் கூற்று.

ஆழி என்பது தமிழ்ச்சொல். சக்கரம் தமிழ் சொல் அல்ல.


EtymologyEdit

From Proto-Indo-European *kʷékʷlos.

NounEdit

*čakrám n

  1. wheel

DescendantsEdit

From earlier *kʲekrám:

  • → Finnic: *kekrä (yearly feast)
  • → Samic: *keavrē (curved object, rim on a ski pole)

ReferencesEdit

  • Thomas V. Gamkrelidze; Vjaceslav V. Ivanov (1995) Indo-European and the Indo-Europeans[1], page 306
--

செல்வன்

செல்வன்

unread,
Sep 3, 2018, 11:18:13 AM9/3/18
to mint...@googlegroups.com
மாதா, மாது- இந்தோ ஐரோப்பிய சொல். பூர்விகம் தமிழ் அல்ல

சமஸ்கிருதம்-> மாதா
ஆங்கிலம்-> மதர்
ஜெர்மன்-> மடேர்

--

செல்வன்

செல்வன்

unread,
Sep 3, 2018, 11:23:10 AM9/3/18
to mint...@googlegroups.com
இந்திய மொழிகள் அனைத்தின் தாய் என எந்த மொழியும்
இல்லை

வடமாநிலங்களில் பேசப்படும் இந்தோ ஐரோப்பிய மொழிகளின் தாய் “இந்தோ ஆரியன்”. அதன் குழந்தைகள் சமஸ்கிருதம், பார்சி, பிராகிருதம். பேர குழந்தைகள் இந்தி, பெங்காலி

தெற்கே பேசப்படும் திராவிட மொழிகளின் தாய் ப்ரோட்டொ திராவிடம். அதன் குழந்தைகள் பழம் தமிழ் (classic tamil), கன்னடம், துளு, இருளர், படகர் மொழி

தமிழில் இருந்து கிளைத்தது மலையாளம்
கன்னடத்தில் இருந்து தெலுங்கு.


--

செல்வன்

iraamaki

unread,
Sep 3, 2018, 7:45:10 PM9/3/18
to mint...@googlegroups.com
சக்கரம் தமிழ்ச்சொல்லே.  இங்கே ஏற்கனவே பேசியிருக்கிறோம்.
 
 
இங்கு நான் வாதாடிக்கொண்டிருக்க விரும்பவில்லை.  விக்சனரியில் போட்டிருப்பதால் அங்கிருக்கும் எல்லாமே சரியென்றாகிவிடாது.  விக்சனரியில் சொல்வளர்ந்த விதம் சொல்லப்படவில்லை. இந்தையிரோப்பியனில் சக்கரத்தையொட்டி இருக்கும் சொற்கள் பட்டியலிடப் பட்டுள்ளன. அவ்வளவு தான்.
சக்கரத்திற்கும் குதிரைக்கும் தொடர்பில்லை. குதிரையில்லாமலும் வேறு விலங்குகள் இழுக்கும் வண்டிகள் இருந்தன. சக்கரம் நடுக்கிழக்கிலோ, நடு ஆசியாவிலோ மட்டும் உருவாகவில்லை.  சிந்துசமவெளியிலும் கண்டுபிடிக்கப் பட்டது.) பல்வேறு செய்திகளை ஒன்றுசேர்த்து பரந்து வீச்செறிவது போல் ஓர் ஊகத்தை நீங்கள் சொல்கிறீர்கள். அது மட்டுமே உண்மை என்றாகிவிடாது. நான் வேறொரு ஊகத்தைச் சொல்கிறேன். அவ்வளவுதான். ”உங்கள் ஊகம் சரி, எங்கள் ஊகம் தவறு” என்று எப்படி உறுதியாகச் சொல்லமுடியும்?
 
நான் தமிழிய மொழிகளும் இந்தையிரோப்பிய மொழிகளும் நோஸ்திராட்டிக் கருதுகோளின் படி உறவுள்ளவை என்று நினைப்பவன்.  ஆயிரக்கணக்கான இந்தையிரோப்பியச் சொற்களுக்கும் தமிழியச் சொற்களுக்கும் இணையிருப்பதைச் சுட்டிக்காட்டியவன் என்றமுறையில் சக்கரம் தமிழ்ச்சொல்லாக இருக்கலாம் என்றெண்னுகிறேன்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

செல்வன்

unread,
Sep 3, 2018, 10:06:36 PM9/3/18
to mint...@googlegroups.com
விக்சனரியில் மட்டும் போடவில்லை. சக்கரம் எனும் சொல் இந்தோ ஐரோப்பிய மொழிகளில் மாறுபட்ட விதம் குறித்து பல கட்டுரைகள் நூல்கள் எழுதப்பட்டுள்ளன. ஒரு சாம்பிள்

The horse, wheel and language - By David Anthony

Axle
Wheel
Shaft
Yoke 

இப்படி தேர் தொடர்பான பல சொற்கள் இந்தோ ஐரோபிய மொழிகளில் எப்படி உச்சரிக்கப்படுகிறது, வேர் சொல் என்ன என இந்த நூல் அழகாக விளக்குகிறது

இங்கும் காணலாம்



"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--

செல்வன்

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Sep 3, 2018, 11:53:18 PM9/3/18
to mintamil
On Mon, Sep 3, 2018 at 8:27 PM செல்வன் <hol...@gmail.com> wrote:
சக்கரம் கண்டுபிடிக்கபட்டதே மத்திய ஆசியாவில் தான். குதிரைகள் டிமஸ்டிகேட் ஆனதும் அங்குதான். அதன்பின் தேர்களில் குதிரைகளை பூட்டிக்கொண்டு ஆரியர்கள் உலகெங்கும் பரவினார்கள்.

ஏதோ கூடவே இருந்து பாத்தமாதிரியில்ல சொல்றிங்க. :))
நூல்ல / இணையத்துல படிச்சத தான சொல்றீங்க.?. இல்ல உட்டாலக்கடி கப்சாவா?

மேல்நாட்டு அறிஞர்கள் சொன்னால் அது சரியாகிடுமா?. தப்பிருக்காதா?

மேல்நாட்டு அறிஞர்கள் பலருக்குத் தமிழ் என்ற மொழி இருப்பதே தெரியாது பல நூற்றாண்டுகள் வரை.
அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் செங்கிருதமே இந்திய மொழிகளின் மூலம்.

செல்வன் ஐயா,

சங்கத் தமிழ் - செங்கிருதம் ஒப்பீடு செய்து ஆய்வு செய்தவர்களின் கட்டுரை ஏதேனும் இருப்பின் அதன் சுட்டியை இங்கே பகிருங்களேன். பலருக்கும் அது பயன்படுமே. பார்க்கலாம்.

கிடைக்கவில்லை என்றால், எனது கருத்துக்களை அவர்களுக்கு அனுப்பி மறுக்கச் சொல்லுங்கள். :))

நீங்கள் படித்தவற்றை நானும் கொஞ்சமாச்சும் படித்திருக்கிறேன் என்பதையும் மறந்து விடாதீர்கள். :))

மொழிக் குடும்பங்கள் பற்றிய மேலையாரின் கருத்துக்களை உடைப்பதே இந்த ஆய்வின் நோக்கம்.

 
அதனால் சக்கரம் என்பது இந்தோ ஐரோப்பிய சொல் தான் என்பது பல அறிஞர்கள் கூற்று.

3500 ஆண்டுகளுக்கு முன்பே மாட்டுவண்டி, குதிரை வண்டிகளில் பயணம் செய்தவன் தமிழன்,
சங்கத் தமிழனுக்கு வண்டி, சக்கரம் எதுவும் தெரியாது. எல்லாம் வெளிநாட்டாரின் உதவியா?
நல்ல நகைச்சுவை ஐயா.
 

ஆழி என்பது தமிழ்ச்சொல். சக்கரம் தமிழ் சொல் அல்ல.

தமிழ்ச்சொல் சகடு - விலிருந்தே சக்ர, சக்தி, ச`க`ரி (மாடு) போன்றவை தோன்றியுள்ளன.
சங்க இலக்கியத்தைவிட என்ன ஆதாரம் வேண்டும் உங்களுக்கு?.
 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Sep 3, 2018, 11:57:54 PM9/3/18
to mintamil
On Mon, Sep 3, 2018 at 8:48 PM செல்வன் <hol...@gmail.com> wrote:
மாதா, மாது- இந்தோ ஐரோப்பிய சொல். பூர்விகம் தமிழ் அல்ல

மாதர் - பெண்களைக் குறிக்கும் அழகான சங்கத் தமிழ்ச் சொல்.
கட்டுரையைப் படித்தும் ஏன் குழப்பம் உங்களுக்கு?

மாதர் >>> மாது
மாதர் >>> மாத்ரு
மாதர் >>> மதர், மடேர்
 

சமஸ்கிருதம்-> மாதா
ஆங்கிலம்-> மதர்
ஜெர்மன்-> மடேர்

--

செல்வன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Sep 3, 2018, 11:59:27 PM9/3/18
to mintamil
On Mon, Sep 3, 2018 at 8:53 PM செல்வன் <hol...@gmail.com> wrote:
இந்திய மொழிகள் அனைத்தின் தாய் என எந்த மொழியும்
இல்லை

வடமாநிலங்களில் பேசப்படும் இந்தோ ஐரோப்பிய மொழிகளின் தாய் “இந்தோ ஆரியன்”. அதன் குழந்தைகள் சமஸ்கிருதம், பார்சி, பிராகிருதம். பேர குழந்தைகள் இந்தி, பெங்காலி

நீங்கள் குறிப்பிடும் மேலையாரின் கருத்துக்கள் தவிடு பொடியாகும் கூடிய விரைவில். :))
 

தெற்கே பேசப்படும் திராவிட மொழிகளின் தாய் ப்ரோட்டொ திராவிடம். அதன் குழந்தைகள் பழம் தமிழ் (classic tamil), கன்னடம், துளு, இருளர், படகர் மொழி

தமிழில் இருந்து கிளைத்தது மலையாளம்
கன்னடத்தில் இருந்து தெலுங்கு.


--

செல்வன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

iraamaki

unread,
Sep 4, 2018, 12:07:19 AM9/4/18
to mint...@googlegroups.com
அன்பிற்குரிய செல்வன்,
 
உங்களைப் போன்றவரோடு வாதாடுவதில் உள்ள சிக்கலே இதுதான்.
 
சக்கரம் இந்தையிரோப்பியச் சொல் என்றீர்கள். இதைமறுத்து என் முந்தைக்கட்டுரையை மீண்டுமிங்கு குறிப்பிட்டேன். அதைநீங்கள் படித்துச் சக்கரம்பற்றிய என் கருத்திற்கு மறுப்புச் சொல்லி ”ஏன் அது இந்தையிரோப்பியன்?” என்று உங்கள் கோணத்தில் வாதாடினால் மேற்கொண்டு நான் பேசுவதில் பொருளிருக்கும். நீங்கள் என் கட்டுரையின் இருப்பை அறிந்ததாய் (acknowledge) ஒப்புக்குக் கூடச் சொல்லாது இணையத்திலுள்ள ஏதோவொரு கட்டுரைச் சுட்டியைத் தருவீர்களினில் தடுமாறிப் போகிறேன். (நீங்கள்சொன்ன பொத்தகத்தின் விலை 2000 உருபாய். என்னால் அதை வாங்க முடியாது. ஓய்வுபெற்ற எனக்கு அந்த அளவு வருமானமில்லை.) நீங்கள்தந்த சுட்டிக் கட்டுரையில் பல்வேறு புதுச்செய்திகள் உள்ளன. பல ஓட்டைகளும், கேள்விகளும் உள்ளன. ஒவ்வொன்றிற்கும் என்னால் விடை/மறுப்புச் சொல்லமுடியும். ஆனால் அவ் விடைசொல்லலே என் நேரத்தில் ஓரிரு மாதங்களை எடுத்துக்கொள்ளும். (அக்கட்டுரையில் காட்டப்படும் மண்பொம்மையின் காலம் கி.மு. மூவாயிரத்துச் சொச்சம் என்பதை மூலக்கட்டுரை படித்தாற்றான் நான் சரிபார்க்க இயலும். சிந்து சமவெளியிலும் இது போன்ற மண்பொம்மைகளைக் கண்டுபிடித்திருக்கிறார்.) அக்கட்டுரையின் சரித்தன்மையை நாம் விவாதிக்கிறோமா? அல்லது என் கூற்றை விவாதிக்கிறோமா? - எனக்குப் புரியவில்லை. நம் குறிக்கோள் இங்கு என்ன? ஏன் நாம் புதரைச் சுற்றிச் சுற்றி வருகிறோம்?.
 
திருத்தம் சரவணன் சொல்வதை, முழுதுமல்ல, ஏதோவொரு குறிப்பிட்ட சொல்லை, உங்கள் ஏரணங்கொண்டு மறுதலியுங்கள். (நான் மறுதலிப்பேன்.) மாறாக அது சரியில்லை, இது சரியில்லை என்று வெற்றுக் கோளக (global) முறையில் உங்கள் உகப்புகளை/தேர்வுகளைச் சொல்வதற்கு மாறாய், ஒரேயொரு தனிக்கருத்தை (particularity), உங்களுக்குத் தெரிந்த செய்திகளை வைத்து உங்கள் ஏரணம் பயனுறுத்தி உங்கள் கருத்தை நிலைநாட்டுங்கள். மாறாக நீங்கள் செய்யும் முறை அப்படியே திரு. நா.க. முறையை ஒத்ததாக இருக்கிறது. (எப்போதுமே நான் கொடுக்கும் கட்டுரைகளை அவர் பெரிய மனிதத் தோரணையில் படித்ததாய்க் காட்டிக்கொள்ளவே (acknowledge) மாட்டார். பொருட்டாகவுங் கருதமாட்டார். தன் முன்முடிவைச் சொல்லுமாப்போல் நாலைந்து பொதுச்சுட்டிகளைத் தருவார். 2,3 மேலையரை அடையாளங் காட்டுவார். ”மேலையருக்கு முன் விழுந்து மண்டியிடுங்கள்; அவருக்கு முந்தி நீங்கள் யார்? அல்லது 19,20 ஆம் நூற்றாண்டு முன்னாள் இந்திய ஆய்வாளருக்கு சாஷ்டாங்கமாய்க் கீழேவிழுந்து நமஸ்காரம் செய்யுங்கள்” - என்பார். ஒருநாளும் 1, 2, 3 என்று புள்ளிகளை அடுத்தடுத்துச் சொல்லி தன் ஏரணத்தை விளக்கமாட்டார், மொத்தத்தில் வாக்குவாதத்தில் ஏமாற்றமே மிஞ்சும்.
 
நீங்களும் உங்கள் ஏரணத்தைச் சிறிதும் உங்கள்சொற்களில் விளக்காது சுட்டி கொடுக்கிறீர்கள். எள்ளளவும் அவரிலிருந்து மாற்றமில்லை. இது உரையாடலேயில்லை செல்வன். நீங்கள் உங்கள் நிலையை எல்லோரும் அறியப் பொதுவாகப் பறையறிவிக்கிறீர்கள். அவ்வளவே. “மின்தமிழ் மகாஜனங்களே! இதனால் எல்லோர்க்கும் சொல்வது என்னவெனில் ”சக்கரம் தமிழில்லை” என்று செல்வனாகிய நான் முடிவுசெய்து விட்டேன்.” உங்கள் மூளைக்குள் இனி எதுவும் நுழையமுடியாதபடி அழுத்தி மூடிக்கொண்ட ஒருவிதக் கட்டுப்பெட்டிச் சிந்தனை. இதைமீறி நான்போய் உங்களுடன் முட்டி என்ன ஆகப் போகிறது? சூரியன் மேற்கே தோன்றுமா என்ன? இருவரின் நேரம் தான் வீணாகும். இதற்குக் கட்டுமானமாய் நான் வேறேதோ செய்யப் போகலாம்.
 
Unfortunately, most of the people here are interested only in stating their known postions / view points. Only a few are interested in genuine arguments. Any progress without discussion is futile, as I have often found with Dr. NG. So go ahead Mr. Selvan  I now desist from arguing on "சக்கரம்’. Let us keep our positions as they are. No discussion is possible here. I realized it long time back. When you don't even show simple courtesy and acknowledge the reading of my article, what is the point of discussion? இங்கு நான் வாதாடிக்கொண்டிருக்க விரும்பவில்லை என்று அதற்குத் தான் சொன்னேன்.
 
அன்புடன்,
இராம.கி.

nkantan r

unread,
Sep 4, 2018, 12:49:57 AM9/4/18
to மின்தமிழ்
The biggest issue, from the point of view of an outsider( that is not as an etymologist, or linguist) or as a non-aficianado, is the timeline.

As i mentioned in my earlier posts, many words or word-demorphs are present in both languages. Unless one can establish the timeline and date the changes in word-forms it is difficult to claim the word belongs to sanskrit, avesta, Tamil, etc

rnk

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Sep 4, 2018, 12:54:47 AM9/4/18
to mintamil
On Tue, Sep 4, 2018 at 10:19 AM nkantan r <rnka...@gmail.com> wrote:
The biggest issue, from the point of view of an outsider( that is not as an etymologist, or linguist) or as a non-aficianado, is the timeline.

As i mentioned in my earlier posts, many words or word-demorphs are present in both languages. Unless one can establish the timeline and date the changes in word-forms it is difficult to claim the word belongs to sanskrit, avesta, Tamil, etc

well, did / can you make any such timeline claims against the conclusions made by western scholars regarding sanskrit origin words in indo european languages?

if not, why so for tamil only?.

regards

T.P.S.


 

rnk

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.


--

செல்வன்

unread,
Sep 4, 2018, 2:15:10 AM9/4/18
to mintamil
இராமகி ஐயா

உங்கள் பதிவை படித்தேன். ஆனால் அதில் உள்ள தகவல்..சக்கரத்தின் வேர்ச்சொல் என்பது சக்கு, சகடம் என்பது தவறானது. 

சக்கரம் தமிழ் சொல்லாக இருந்து சம்ஸ்கிருதத்துக்கு போனது என்றால் அதே சொல் எப்படி பாரசிக, கிரேக்க, ஜெர்மானிய, லத்தீன், ஆங்கில,பின்னிஷ்  மொழிகளுக்கு சென்றது என விளக்கவேண்டும். இத்தனை மொழிகளில் தமிழில் இருந்து கடன்வாங்கினார்க்ள் என சொல்வதில் எதாவது லாஜிக் உள்ளதா? ஒரு தமிழ்ச்சொல் எப்படி இத்தனை இந்தோ ஐரோப்பிய மொழிகளில் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு செல்லும்?

சக்கரத்தை கண்டுபிடித்தது தமிழர் என சொல்லமட்டீர்கள் என நினைக்கிறேன். சக்கரத்தை கண்டுபிடித்தவர்கள் அதற்கு பெயர் வைப்பார்களா இல்லை கண்டுபிடிக்காத இனத்தினர் பெயரை வைத்து அதை கண்டுபிடித்த மொழியினர் ஏற்றுக்கொள்வார்களா?


ஹார்ஸ், வீல், லாங்க்வேஜ் நூலில் இருந்து: 

சக்கரத்தின் இந்தோ-ஐரோப்பிய வேர்ச்சொல் Keklos

இந்த நூல் ஆசிரியர் டேவிட் அந்தோணி பென்சில்வேனியா பல்கலைகழக மனிதவியல் துறை பேராசிரியர். இந்த நூல் ப்ரின்ஸ்டன் பல்கலைக்கழக வெளியீடு. 

சக்கரம் மட்டுமல்ல

ஆக்ஸில்
தில் என தேரின் ஒவ்வொரு உதிரிப்பாகத்தின் இந்தோ -ஐரோப்பிய வேர்ச்சொல்லையும் தந்துள்ளனர். காண்க

Screen Shot 2018-09-04 at 12.48.56 AM.png


மொழியியல் ஆய்வு என்கையில் அது வரலாறு, நிலவியல், மனிதவியல் போன்ற பலதுறைகளுடன் ஒத்துபோகவேண்டும். சக்கரத்தை கண்டுபிடித்தவர் இந்தோ- ஐரோப்பியர் என்பது அறிவுலகம் ஏற்கும் கூறு. அதன் இந்தோ - ஐரோப்பிய மொழி பெயர்களும் ஆய்வுலகம் ஏற்கும் உண்மை. தமிழில் சகடம், சக்கு என்பதில் இருந்து சக்கரம் வந்தது என்பதற்கு ஒலி ஒற்றுமையை தவிர எந்த ஆதாரமும் இல்லையே? பிறமொழிகளுக்கு அது எப்படி சென்றது என்பதற்கான விளக்கமும் இல்லை. சம்ஸ்கிருதம் கடன் வாங்கியது..சரி, பாரசிக மொழி, கிரேக்க மொழி எல்லாமுமா கடன் வாங்கின?

அதனால் சக்கரம் தமிழ் சொல் என்பது வரலாற்றுரீதியில் சரியானதாக  எனக்கு படவில்லை.

அன்புடன்
செல்வன்
Screen Shot 2018-09-04 at 12.48.56 AM.png

செல்வன்

unread,
Sep 4, 2018, 2:34:44 AM9/4/18
to mintamil
On Mon, Sep 3, 2018 at 10:53 PM திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com> wrote:


On Mon, Sep 3, 2018 at 8:27 PM செல்வன் <hol...@gmail.com> wrote:
சக்கரம் கண்டுபிடிக்கபட்டதே மத்திய ஆசியாவில் தான். குதிரைகள் டிமஸ்டிகேட் ஆனதும் அங்குதான். அதன்பின் தேர்களில் குதிரைகளை பூட்டிக்கொண்டு ஆரியர்கள் உலகெங்கும் பரவினார்கள்.

ஏதோ கூடவே இருந்து பாத்தமாதிரியில்ல சொல்றிங்க. :))
நூல்ல / இணையத்துல படிச்சத தான சொல்றீங்க.?. இல்ல உட்டாலக்கடி கப்சாவா?


இதற்கு தான் முன்பு சொன்னேன். தமிழறிஞர்கள் தமிழை படிப்பதுடன் நின்றுவிடுகிறார்கள். வரலாறு, மனிதவியல் துறைகளில் தேர்ச்சி பெறுவதில்லை என.

சக்கரம், தேர், குதிரை இவற்றின் வரலாறு உங்களுக்கு தெரியவில்லை..பிழையில்லை...ஆனால் அதை தெரிந்துகொள்ளாமல் சக்கரத்தின் வரலாற்றை எழுதமுற்படுவதுதான் தவறு :-)

இப்போதும் என்னிடம் ஆதாரம் கேட்காமல் நீங்கள் எழுதியதற்கு நீங்களே ஆதாரம் கண்டுபிடிக்கவும். குறிப்பாக சக்கரம் எந்த ஆண்டு எங்கே கண்டுபிடிக்கபட்டது? சுமேரிய, எகிப்திய, சிந்து சமவெளி நாகரிகங்களில் சக்கரங்கள் இருந்தனவா என எல்லாம் தேடி கண்டுபிடித்து அதன்பின் கட்டுரை எழுதுவது நல்லது. அதாவது நீங்கள் எழுதுவது அறிவியல் கட்டுரை என நீங்கள் நம்பினால்...முகநூல் பதிவு என்றால் இஷ்டபடி எழுதலாம். யார் கண்டுக்க போகிறார்கள்? :-)

மொழிக் குடும்பங்கள் பற்றிய மேலையாரின் கருத்துக்களை உடைப்பதே இந்த ஆய்வின் நோக்கம். 
 

அவர்கள் செய்துள்ள ஆய்வில் லட்சத்தில் ஒரு பங்கை செய்துவிட்டு இப்படி சவால் விட்டால் நன்றாக இருக்கும் :-)

இப்போதும் பாதகமில்லை. ஆய்வு செய்து பின் கட்டுரை எழுதவும் :-)


--

செல்வன்

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Sep 4, 2018, 2:43:32 AM9/4/18
to mintamil
செல்வன், நீங்கள் அனுப்பியுள்ள இணைப்பில் கண்டபடி

கெக்லோச்` என்பதுதான் சக்ர என்று ஆகியுள்ளது . அப்படித்தானே?

என்ன கொடுமை செல்வன் ஐயா. இதையெல்லாம் எப்படி நம்புகிறீர்கள்?

கெக்லோச்` லிருந்து சக்ர தோன்றுவதும்
சகடு விலிருந்து சக்ர . தோன்றுவதும்

எது ஏற்கும்படியாய் உள்ளது?.

 

அன்புடன்
செல்வன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.


--

iraamaki

unread,
Sep 4, 2018, 2:48:52 AM9/4/18
to mint...@googlegroups.com
நன்றி செல்வன். இந்த உரையாடலைத் தொடர எனக்கு விருப்பமில்லை என்று முன்மடலில் சொன்னேனே? நான் சொல்வதின் பொருளை நீங்கள் புரிந்துகொள்ளவில்லை.  சக்கரத்தின் வேர்ச்சொல் சக்கு, சகடமில்லை. அது சுல். வேர்ச்சொற்களுக்கும் சொற்பகுதிகளுக்கும் வேறுபாடு தெரியாது நீங்கள் இருக்கிறீர்கள். முதலில் அதைப் புரிந்துகொள்ளுங்கள். சக்கரத்தோடு தொடர்புடைய பல்வேறு சொற்களை  என் தொடரில் காட்டியிருந்தையும் நீங்கள் புரிந்துகொள்ளவில்லை. சக்கரம் தமிழில்லை என்றால் அந்த நூற்றுக்கணக்கான வளைவுச் சொற்களும் தமிழில்லை என்றாகிவிடும். சக்கரம் என்ற சொல்லை தனித்துப் பார்ப்பது என் வழக்கமில்லை. தொகுதியாய்ப் பார்க்கும் என் முறையைப் புரிந்துகொள்ளக் கூட நீங்கள் முயலவில்லை. 
 
ஏற்கனவே, அவரவர் நிலைப்பாட்டில் நின்றுகொள்வோமென்று சொன்னேனே?  உங்களின் இம்மடலுக்கும் மறுமொழி உண்டு. ஆனால் இப்போது தருவதாயில்லை. ஏனெனில் அதனாற் பலனிருக்காது. 
 
வேறு இழையில் பார்க்கலாம், செல்வன்.
 
அன்புடன்,
இராம.கி. 
 
Sent: Tuesday, September 04, 2018 11:44 AM
Subject: Re: [SPAM]- Re: [MinTamil] இந்திய மொழிகளின் தாய் தமிழே !!! - பகுதி 7 - மாடு - பால் - வேளாண்மை
 
Screen Shot 2018-09-04 at 12.48.56 AM.png

செல்வன்

unread,
Sep 4, 2018, 3:06:53 AM9/4/18
to mintamil
On Tue, Sep 4, 2018 at 1:43 AM திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com> wrote:


செல்வன், நீங்கள் அனுப்பியுள்ள இணைப்பில் கண்டபடி

கெக்லோச்` என்பதுதான் சக்ர என்று ஆகியுள்ளது . அப்படித்தானே?

என்ன கொடுமை செல்வன் ஐயா. இதையெல்லாம் எப்படி நம்புகிறீர்கள்?

கெக்லோச்` லிருந்து சக்ர தோன்றுவதும்
சகடு விலிருந்து சக்ர . தோன்றுவதும்

எது ஏற்கும்படியாய் உள்ளது?.




சக்கரம் கண்டுபிடிக்கபட்டது கிமு 4000ல்

சமஸ்கிருதம் பயன்பாட்டுக்கு வந்தது சுமாராக கிமு 1500 வாக்கில். ரிக்வேத காலம் கிமு 1500 என கொள்ளலாம்.

ஆக 2500 ஆண்டுகளில் ஒரு சொல் எத்தனை மாறுதலடையும் என கற்பனையாவது செய்ய முடிகிறதா?

சகடுக்கும் சக்கரத்துக்கும் தொடர்பு இருந்தால் சக்கரம் சகடாக திரிந்திருக்கலாமே ஒழிய சகடு சக்கரம் ஆகியிருக்காது :-)

ஈரானிய, ஜெர்மானிய, லத்தீன் மொழி எப்படி தமிழிடம் இருந்து சக்கரம் எனும் சொல்லை கட்ன் வாங்கியது என்பதையும் நீங்கள் விளக்கவேண்டும். தமிழுக்கும் இம்மொழிகளுக்கும் என்ன தொடர்பு? :-)



திருத்தம் பொன்.சரவணன்

unread,
Sep 4, 2018, 3:07:27 AM9/4/18
to mintamil
செல்வன்,

இந்த இணைப்பில் பல குளறுபடிகள் உள்ளன.

இதில் உள்ள PIE மூலச்சொற்கள் எந்த மொழியில் பயன்பாட்டில் உள்ளன?

இவை எந்த அடிப்படையில் தோற்றுவிக்கப்பட்டன?.

மூலநூலைப் பெறும் எளியவழி உள்ளதா?

தமிழ் அச்சு >>> அக்ச~, அக்சி`ல்






On Tue, Sep 4, 2018 at 11:45 AM செல்வன் <hol...@gmail.com> wrote:
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.


--

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Sep 4, 2018, 3:19:21 AM9/4/18
to mintamil
On Tue, Sep 4, 2018 at 12:04 PM செல்வன் <hol...@gmail.com> wrote:


On Mon, Sep 3, 2018 at 10:53 PM திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com> wrote:


On Mon, Sep 3, 2018 at 8:27 PM செல்வன் <hol...@gmail.com> wrote:
சக்கரம் கண்டுபிடிக்கபட்டதே மத்திய ஆசியாவில் தான். குதிரைகள் டிமஸ்டிகேட் ஆனதும் அங்குதான். அதன்பின் தேர்களில் குதிரைகளை பூட்டிக்கொண்டு ஆரியர்கள் உலகெங்கும் பரவினார்கள்.

ஏதோ கூடவே இருந்து பாத்தமாதிரியில்ல சொல்றிங்க. :))
நூல்ல / இணையத்துல படிச்சத தான சொல்றீங்க.?. இல்ல உட்டாலக்கடி கப்சாவா?


இதற்கு தான் முன்பு சொன்னேன். தமிழறிஞர்கள் தமிழை படிப்பதுடன் நின்றுவிடுகிறார்கள். வரலாறு, மனிதவியல் துறைகளில் தேர்ச்சி பெறுவதில்லை என.

சக்கரம், தேர், குதிரை இவற்றின் வரலாறு உங்களுக்கு தெரியவில்லை..பிழையில்லை...ஆனால் அதை தெரிந்துகொள்ளாமல் சக்கரத்தின் வரலாற்றை எழுதமுற்படுவதுதான் தவறு :-)

இப்போதும் என்னிடம் ஆதாரம் கேட்காமல் நீங்கள் எழுதியதற்கு நீங்களே ஆதாரம் கண்டுபிடிக்கவும். குறிப்பாக சக்கரம் எந்த ஆண்டு எங்கே கண்டுபிடிக்கபட்டது? சுமேரிய, எகிப்திய, சிந்து சமவெளி நாகரிகங்களில் சக்கரங்கள் இருந்தனவா என எல்லாம் தேடி கண்டுபிடித்து அதன்பின் கட்டுரை எழுதுவது நல்லது.

செல்வன், உங்களிடமுள்ள சிக்கலே நீங்கள் மேலையார் சொல்வதையெல்லாம் அப்படியே நம்புவதுதான்.
ஒரு கருத்து ஒரு / பல ஆய்விதழிலோ நூலிலோ வந்துவிட்டால் அது உண்மையாகிவிடுமா?. வரலாறு ஆகிவிடுமா?
சிந்துசமவெளியில் சக்கரம் தொடர்பான சின்னங்கள் / தொல்பொருட்கள் இல்லாவிட்டால் அங்கே சக்கரங்கள் பயன்பாட்டில் இல்லை என்று பொருளா?

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.

உண்மை அறிவதற்கு உழைக்க வேண்டும்.

நீங்கள் உழைக்காமல் பிறர் சொன்னதை அப்படியே நம்பி இங்கே இடுகிறீர்கள்.

எதாவது கேள்வி கேட்டால் எனக்குத் தெரியாது, அவரைக் கேளுங்கள் என்று எசுகேப்பு ஆகிவிடுகிறீர்கள்.

நல்ல பாலிசி. கீப் இட் அப். :))











 
அதாவது நீங்கள் எழுதுவது அறிவியல் கட்டுரை என நீங்கள் நம்பினால்...முகநூல் பதிவு என்றால் இஷ்டபடி எழுதலாம். யார் கண்டுக்க போகிறார்கள்? :-)

மொழிக் குடும்பங்கள் பற்றிய மேலையாரின் கருத்துக்களை உடைப்பதே இந்த ஆய்வின் நோக்கம். 
 

அவர்கள் செய்துள்ள ஆய்வில் லட்சத்தில் ஒரு பங்கை செய்துவிட்டு இப்படி சவால் விட்டால் நன்றாக இருக்கும் :-)

இப்போதும் பாதகமில்லை. ஆய்வு செய்து பின் கட்டுரை எழுதவும் :-)


--

செல்வன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.


--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
------------------------------------------------------------------
எதிரியிடம் நமக்குப் பிடிக்காத பொருள்

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Sep 4, 2018, 4:43:22 AM9/4/18
to mintamil
தமிழ் மூலங்கள்:

அச்சு >>> அக்ச~, அக்சி`ல்
ஒழுகை >>> வொழுகை >>> வேழு, வேக~, வேக~ன், வாக`தி....

இன்னும் வரும்..

nkantan r

unread,
Sep 4, 2018, 5:07:36 AM9/4/18
to மின்தமிழ்
@திருத்தம்.

நான் எழுதியதைப் படித்துவிட்டு பின்னர் என்னைக்குற்றம் சொல்ல முயலுங்கள்.
========
well, did / can you make any such timeline claims against the conclusions made by western scholars regarding sanskrit origin words in indo european languages?

if not, why so for tamil only?.

regards

T.P.S.
=======

I did not made any claim against your theories. So i am not also saying that avesta root is right. But you are THE person making a claim and just as many in internet proposing morphisms you are also doing the same.

What i am suggesting is whenever a root and morph are shown, you need to show where (which literature work) they are seen and what us the affirmed date of that literary work

Till then all (whether in Tamil or avesta) are theories and conjectures.

rnk

nkantan r

unread,
Sep 4, 2018, 5:16:59 AM9/4/18
to மின்தமிழ்
Anthropology says that early men found that logs and smoothened stones were useful and to move things easily. Wheels came much later.


தமிழில் உருள். இலத்தீன் Rolla (?)
Was this a coincidence!?

rnk

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Sep 4, 2018, 5:44:34 AM9/4/18
to mintamil
ஒரு கதை சொல்லட்டுமா செல்வன்?

நள்ளிரவு நேரம். கடல் அலைகள் சீறிப் பாய்ந்து கரையில் உள்ள உயரமான மணல்மேடுகளைத் தாக்குகின்றன.

அதைப்பார்க்கும் சங்கப் புலவருக்கு யானையின் நினைவு வந்துவிட்டது. உவமைகள் தோன்ற உடனே கவிதை எழுதுகிறார்.

கடலின் பேரலை போர்யானை ஆனது.
கடலின் வெண்ணிற வலம்புரிச் சங்குகள் யானையின் மருப்புக்கள் ஆயின.
கடற்கரையின் உயர்ந்த மணல்மேடுகள் கோட்டைக் கதவுகள் ஆயின.

இதோ உவமைகள் பொங்கும் அப்பாடல் வரிகள்:
துணை புணர்ந்து எழுதரும் தூ நிற வலம்புரி
இணை திரள் மருப்பு ஆக எறி வளி பாகனா
அயில் திணி நெடும் கதவு அமைத்து அடைத்து அணி கொண்ட
எயில் இடு களிறே போல் இடு மணல் நெடும் கோட்டை
பயில் திரை நடு நன்நாள் பாய்ந்து உறூஉம் துறைவ கேள்.. - கலி.135
யானைகள் கோட்டைக் கதவினை முட்டி மோதுவதைப் போல
கடலலைகள் மணல்மேடுகளைத் தாக்கினவாம். என்ன ஒரு உவமை பாருங்கள்.!!

இப்பாடலில் அயில் திணி நெடும் கதவு என்பது இரும்புக் கழி கொண்டு திணிக்கப்பட்ட நெடிய கோட்டைக் கதவினைக் குறிக்கும்.

அதாவது, யானைகள் முட்டி மோதினாலும் எளிதில் திறந்துவிடாத படிக்கு, கோட்டைக் கதவின் உட்புறமாக வலிமையான இரும்புக் கழிகளை தாழ்ப்பாள் போல இணைத்திருப்பார்கள். இப்பாடலில் அயில் என்பது வெறும் இரும்பு என்று பொருளன்று. இரும்பினால் ஆன பெருங்கழி. ஆங்கிலத்தில் IRON POLE OR POST.

இந்த அயில் என்ற சொல், நீங்கள் இணைப்பில் காட்டிய POLE / SHAFT என்ற பொருளுடைய எய் / ஒய் என்ற மூலத்துடன் தொடர்புடையது.

PIE வேர்மூலமான எய் / ஒய் யைக் காட்டிலும்

அயில் என்னும் தமிழ்ச்சொல்லே வடமொழி இசா~ வின் மூலமாக இருக்க அதிக வாய்ப்புண்டு. அதாவது

அயில் >>> யிசா~ >>> யச்~டி

இதெல்லாம் அறிய வேண்டுமெனில் உழைக்க வேண்டும். :))








iraamaki

unread,
Sep 4, 2018, 5:57:20 AM9/4/18
to mint...@googlegroups.com
Keep trying. You get thousands of similarities between Tamil words and
Indo-European words. But many choose to ignore them because a respected
"so-and-so" has told them. Just like Rakhigarh this will also get eventually
settled one day. Till then Paavaanar will be ridiculed.

iraama.ki.

-----Original Message-----
From: nkantan r
Sent: Tuesday, September 04, 2018 2:46 PM
To: மின்தமிழ்
Subject: Re: [SPAM]- Re: [MinTamil] இந்திய மொழிகளின் தாய் தமிழே !!! - பகுதி
7 - மாடு - பால் - வேளாண்மை

nkantan r

unread,
Sep 4, 2018, 7:25:56 AM9/4/18
to மின்தமிழ்
yes. But these similarities donot
necessarily indicate the root or 'first mine' claims. Certainly chakra doesnot. I remember reading somewhere that tholkappium proscribes any word starting with 'ச'. Learned people can confirm.

rbk

iraamaki

unread,
Sep 4, 2018, 7:42:46 AM9/4/18
to mint...@googlegroups.com
That is a wrong reading of Tholkappiam. உலகத்தில் எந்தவொரு மொழியிலும்
அப்படியொரு விதியில்லை. சகரத்தில் சொல்தொடங்கா மொழியே உலகில் இல்லை.
தமிழ்மட்டும் உலகத்தில் இல்லாத விந்தை மொழியா? A strange creature? தவிர
எந்தவொரு தமிழ் அகரமுதலியை வேண்டுமானாலும் எடுங்கள் ககரமுதற் சொற்களின்
எண்ணிக்கையில் குறைந்தது 40% விழுக்காடாவது சகரமுதற் சொற்களாகும். இத்தனையும்
கடன் சொற்களா? சிக்கல் அந்த நூற்பாவைப் புரிந்துகொண்ட முறையில் இருக்கிறது.
இதையும் சொல்லிச்சொல்லிச் சலித்துப் போனேன்.

Why do people have strange understanding of Tamil?





-----Original Message-----
From: rnka...@gmail.com via
mintamil+bncBCU2PO5YQ...@googlegroups.com
Sent: Tuesday, September 04, 2018 4:55 PM
To: மின்தமிழ்
Subject: Re: [SPAM]- Re: [MinTamil] இந்திய மொழிகளின் தாய் தமிழே !!! - பகுதி
7 - மாடு - பால் - வேளாண்மை

nkantan r

unread,
Sep 4, 2018, 8:33:14 AM9/4/18
to மின்தமிழ்
சரி எனக்கு விளக்கியச்சுட்டியைத் தாருங்கள்.

rnk

செல்வன்

unread,
Sep 4, 2018, 8:59:27 AM9/4/18
to mintamil
On Tue, Sep 4, 2018 at 2:07 AM திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com> wrote:
செல்வன்,

இந்த இணைப்பில் பல குளறுபடிகள் உள்ளன.

இதில் உள்ள PIE மூலச்சொற்கள் எந்த மொழியில் பயன்பாட்டில் உள்ளன?

இவை எந்த அடிப்படையில் தோற்றுவிக்கப்பட்டன?.

மூலநூலைப் பெறும் எளியவழி உள்ளதா?

தமிழ் அச்சு >>> அக்ச~, அக்சி`ல்



என்னது ப்ரின்ஸ்டன் பல்கலைகழக வெளியீட்டில் குளறுபடிகள் உள்ளனவா? :-). 

இந்த மூல சொற்கள் ப்ரோட்டோ இந்தோ ஐரோப்பிய மொழி சொற்கள். அம்மொழி இப்போது வழக்கில் இல்லை.

அச்சில் இருந்து ஆக்ஸில் வரவில்லை. "ஆக்ஸ" என்பதில் இருந்துதான் அச்சு வந்திருக்கலாம். அல்லது அச்சு ஆக்ஸவுடன் தொடர்பற்றதாக இருக்கலாம்


 

iraamaki

unread,
Sep 4, 2018, 8:59:46 AM9/4/18
to mint...@googlegroups.com
https://groups.google.com/forum/#!topic/mintamil/_ZEzeUlsKEs

-----Original Message-----
From: rnka...@gmail.com via
mintamil+bncBCU2PO5YQ...@googlegroups.com
Sent: Tuesday, September 04, 2018 6:03 PM
To: மின்தமிழ்
Subject: Re: [SPAM]- Re: [MinTamil] இந்திய மொழிகளின் தாய் தமிழே !!! - பகுதி
7 - மாடு - பால் - வேளாண்மை

செல்வன்

unread,
Sep 4, 2018, 9:00:59 AM9/4/18
to mintamil


On Tue, Sep 4, 2018 at 3:43 AM திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com> wrote:
தமிழ் மூலங்கள்:

அச்சு >>> அக்ச~, அக்சி`ல்
ஒழுகை >>> வொழுகை >>> வேழு, வேக~, வேக~ன், வாக`தி....

இன்னும் வரும்..



தவறு

ஆக்ஸ, வேகன் ஆகியவற்றுக்கு தமிழ் சொற்கள் மூல சொற்கள் இல்லை. 

Malarvizhi Mangay

unread,
Sep 4, 2018, 12:14:45 PM9/4/18
to mint...@googlegroups.com
சங்கு சக்கர சாமி வந்து
ஜிங்கு ஜிங்குன்னு ஆடுச்சாம்" என்று சின்னப்புள்ளயில ஒரு பாட்டுப் பாடுவோம்.

On Tue 4 Sep, 2018, 6:35 PM செல்வன், <hol...@gmail.com> wrote:
Boxbe This message is eligible for Automatic Cleanup! (hol...@gmail.com) Add cleanup rule | More info


On Tue, Sep 4, 2018 at 2:07 AM திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com> wrote:
செல்வன்,

இந்த இணைப்பில் பல குளறுபடிகள் உள்ளன.

இதில் உள்ள PIE மூலச்சொற்கள் எந்த மொழியில் பயன்பாட்டில் உள்ளன?

இவை எந்த அடிப்படையில் தோற்றுவிக்கப்பட்டன?.

மூலநூலைப் பெறும் எளியவழி உள்ளதா?

தமிழ் அச்சு >>> அக்ச~, அக்சி`ல்



என்னது ப்ரின்ஸ்டன் பல்கலைகழக வெளியீட்டில் குளறுபடிகள் உள்ளனவா? :-). 

இந்த மூல சொற்கள் ப்ரோட்டோ இந்தோ ஐரோப்பிய மொழி சொற்கள். அம்மொழி இப்போது வழக்கில் இல்லை.

அச்சில் இருந்து ஆக்ஸில் வரவில்லை. "ஆக்ஸ" என்பதில் இருந்துதான் அச்சு வந்திருக்கலாம். அல்லது அச்சு ஆக்ஸவுடன் தொடர்பற்றதாக இருக்கலாம்


 

செல்வன்

unread,
Sep 4, 2018, 12:36:57 PM9/4/18
to mintamil
On Tue, Sep 4, 2018 at 2:19 AM திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com> wrote:

செல்வன், உங்களிடமுள்ள சிக்கலே நீங்கள் மேலையார் சொல்வதையெல்லாம் அப்படியே நம்புவதுதான்.
ஒரு கருத்து ஒரு / பல ஆய்விதழிலோ நூலிலோ வந்துவிட்டால் அது உண்மையாகிவிடுமா?. வரலாறு ஆகிவிடுமா?
சிந்துசமவெளியில் சக்கரம் தொடர்பான சின்னங்கள் / தொல்பொருட்கள் இல்லாவிட்டால் அங்கே சக்கரங்கள் பயன்பாட்டில் இல்லை என்று பொருளா?

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.

உண்மை அறிவதற்கு உழைக்க வேண்டும்.

நீங்கள் உழைக்காமல் பிறர் சொன்னதை அப்படியே நம்பி இங்கே இடுகிறீர்கள்.

எதாவது கேள்வி கேட்டால் எனக்குத் தெரியாது, அவரைக் கேளுங்கள் என்று எசுகேப்பு ஆகிவிடுகிறீர்கள்.

நல்ல பாலிசி. கீப் இட் அப். :))


மேலையார் சொல்வதால் அது உண்மை என நான் கூறவில்லை.

ஒரு நூலுக்கு அவர்கள் காட்டும் உழைப்பும், செய்யும் ஆராய்ச்சியும் பிரமிக்கதக்கது. அதன் அடிப்படையில் அவர்கள் கண்டுபிடிப்புகளை வெளியிடுகிறார்கள். பல துறைகளை ஆழ்ந்து படிக்கிறார்கள். உதாரனமாக இந்த பேராசிரியர் டேவிட் அந்தோணி மனிதவியல் பேராசிரியர். ஆனால் மொழியியல் முதல் பல்வேறு இந்தோ ஐரோப்பீய மொழிகளின் ஒப்பிலக்கணம் முதல் வரலாறு வரை ஆழ்ந்து படித்து இந்த நூலை எழுதியுள்ளார்.

இம்மாதிரி உழைப்பை வெறுமனே உங்கள் பிளாக் கட்டுரைகள் மூலம் நிராகரிக்க இயலாது.

உங்கள் கட்டுரைகளின் அடிப்படையில் தமிழ் மட்டுமே உள்ளது. பிறதுறைகள் எதுவுமே இல்லையே? அதிலும் பியர் ரிவ்யூ இல்லை- அதாவது நீங்கள் சொல்வது நம்பகமானது என சொல்ல இன்னொரு அறிஞர் இல்லை. ஆக அதைத்தள்ளி இதை ஏற்பது எஞ்ஞனம்?

முன்பே சொன்னதுதான். ஆழ்ந்து படியுங்கள். வரலாறு, தத்துவம், மானுடவியல்..என ஆழ்ந்து படித்து கட்டுரைகளை படையுங்கள். சக்கரம் என்பதற்கு சொல் ஒற்றுமைகளை மட்டும் தேடாதீர்கள். சக்கரத்தின் வரலாற்றை தேடுங்கள். அப்போதுதான் கட்டுரைகள் சிறக்கும்.

சும்மா வாதம், எதிர்வாதம் என செய்துகொண்டிருக்காமல் சொன்னதை சிந்தித்தால் உங்கள் கட்டுரைகள் மேம்படும். உங்கள் வாச்கனாக அளிக்கும் டிப்ஸ் இவைகள். நன்றி வணக்கம்



nkantan r

unread,
Sep 10, 2018, 4:00:13 PM9/10/18
to மின்தமிழ்
We had XP. Then NT and new versions based on NT structure.

XP, 2000, NT .. all got deprecated.

If Tamils of sanga created Sanskrit, obviously they found sanga Tamil was not up to mark, buggy, and needed upgrade. Just as NT was totally different structure over XP, Sanskrit appears to be much different. ( gender, number, so much extended alphabet, dropping out of எ, ஒ, ற, ழ..)

rnj

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Sep 11, 2018, 12:54:35 AM9/11/18
to mintamil
On Tue, Sep 4, 2018 at 10:06 PM செல்வன் <hol...@gmail.com> wrote:


On Tue, Sep 4, 2018 at 2:19 AM திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com> wrote:

செல்வன், உங்களிடமுள்ள சிக்கலே நீங்கள் மேலையார் சொல்வதையெல்லாம் அப்படியே நம்புவதுதான்.
ஒரு கருத்து ஒரு / பல ஆய்விதழிலோ நூலிலோ வந்துவிட்டால் அது உண்மையாகிவிடுமா?. வரலாறு ஆகிவிடுமா?
சிந்துசமவெளியில் சக்கரம் தொடர்பான சின்னங்கள் / தொல்பொருட்கள் இல்லாவிட்டால் அங்கே சக்கரங்கள் பயன்பாட்டில் இல்லை என்று பொருளா?

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.

உண்மை அறிவதற்கு உழைக்க வேண்டும்.

நீங்கள் உழைக்காமல் பிறர் சொன்னதை அப்படியே நம்பி இங்கே இடுகிறீர்கள்.

எதாவது கேள்வி கேட்டால் எனக்குத் தெரியாது, அவரைக் கேளுங்கள் என்று எசுகேப்பு ஆகிவிடுகிறீர்கள்.

நல்ல பாலிசி. கீப் இட் அப். :))


மேலையார் சொல்வதால் அது உண்மை என நான் கூறவில்லை.

ஒரு நூலுக்கு அவர்கள் காட்டும் உழைப்பும், செய்யும் ஆராய்ச்சியும் பிரமிக்கதக்கது. அதன் அடிப்படையில் அவர்கள் கண்டுபிடிப்புகளை வெளியிடுகிறார்கள். பல துறைகளை ஆழ்ந்து படிக்கிறார்கள். உதாரனமாக இந்த பேராசிரியர் டேவிட் அந்தோணி மனிதவியல் பேராசிரியர். ஆனால் மொழியியல் முதல் பல்வேறு இந்தோ ஐரோப்பீய மொழிகளின் ஒப்பிலக்கணம் முதல் வரலாறு வரை ஆழ்ந்து படித்து இந்த நூலை எழுதியுள்ளார்.

இம்மாதிரி உழைப்பை வெறுமனே உங்கள் பிளாக் கட்டுரைகள் மூலம் நிராகரிக்க இயலாது.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை உங்கள் எழுத்துக்களே காட்டிவிடும் செல்வன்.

கீழே உள்ள சுட்டியைப் பாருங்கள்.


இதில் போய்ப் படித்துப் பார்த்தீர்கள் என்றால், அவர்கள் கூறியிருக்கும் PIE வேர்ச்சொற்கள் எவ்வளவு தவறானவை என்று தெரிந்து கொள்ளலாம். இவை தவறானவை என்று என்னைப் போல மொழியியலாளர்கள் மட்டுமே கூறமுடியும். 

பத்து மொழியில் உள்ள சொற்களை எடுத்துக்கொண்டு அவை எல்லாவற்றுக்கும் பொருந்தி வருவதைப் போல எழுத்துக்களைப் போட்டுச் செயற்கையாகச் செய்யப்பட்டவையே இந்த PIE மூலச் சொற்கள். இவை எந்த மொழியிலும் அப்படியே பயிலப் பெறாதவை. ஆனால் எல்லா மொழிகளுக்கும் ஒற்றுமை இருப்பதைப் போல செயற்கையாக உருவாக்கப்பட்டவை. இப்படிச் செய்வது ஆய்வே இல்லை. ஒரு மூலச்சொல் என்பது உயிருடன் இருக்கும் ஒரு மொழியில் இருந்து காட்டப்பட வேண்டும். அதுமட்டுமின்றி, அது எப்படியெல்லாம் திரிந்து பிற வடிவம் பெற்றது என்ற வரலாறும் காட்டப்பட வேண்டும். இன்னும் சொல்வதற்கு எவ்வளவோ இருக்கிறது. ஆனால், உங்களுக்கு அது தேவையில்லை.

கவலற்க, என்னுடைய ஆய்வு வீண் போகாது. :))
இதன் பலனை காலம் கண்டிப்பாக இவ் உலகத்திற்கு அளிக்கும்.

காத்திருங்கள் சற்று பொறுமையுடன். :))

உங்கள் கட்டுரைகளின் அடிப்படையில் தமிழ் மட்டுமே உள்ளது. பிறதுறைகள் எதுவுமே இல்லையே? அதிலும் பியர் ரிவ்யூ இல்லை- அதாவது நீங்கள் சொல்வது நம்பகமானது என சொல்ல இன்னொரு அறிஞர் இல்லை. ஆக அதைத்தள்ளி இதை ஏற்பது எஞ்ஞனம்?

முன்பே சொன்னதுதான். ஆழ்ந்து படியுங்கள். வரலாறு, தத்துவம், மானுடவியல்..என ஆழ்ந்து படித்து கட்டுரைகளை படையுங்கள். சக்கரம் என்பதற்கு சொல் ஒற்றுமைகளை மட்டும் தேடாதீர்கள். சக்கரத்தின் வரலாற்றை தேடுங்கள். அப்போதுதான் கட்டுரைகள் சிறக்கும்.

சும்மா வாதம், எதிர்வாதம் என செய்துகொண்டிருக்காமல் சொன்னதை சிந்தித்தால் உங்கள் கட்டுரைகள் மேம்படும். உங்கள் வாச்கனாக அளிக்கும் டிப்ஸ் இவைகள். நன்றி வணக்கம்



--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.


--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
------------------------------------------------------------------
எதிரியிடம் நமக்குப் பிடிக்காத பொருள்

iraamaki

unread,
Sep 11, 2018, 1:28:42 AM9/11/18
to mint...@googlegroups.com
+1
 
பாராட்டுகள், சரவணன், அடிப்படையான, ஆழமானதொரு கருத்தைப் பிடித்துவிட்டீர்கள். உறுதியாக உங்களுக்கு இனி முன்னேற்றங் கிட்டும். (பல இடங்களில் நான் பெரிதும் வேறுபடுவேன். அது வேறுகதை. ஆனால் உங்கள் முயற்சி தொடரட்டும்.)
 
அன்புடன்,
இராம.கி.
Sent: Tuesday, September 11, 2018 10:24 AM
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.


--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
------------------------------------------------------------------
எதிரியிடம் நமக்குப் பிடிக்காத பொருள்
எதிர்க்கும் தன்மையே அன்றிஅவர் உயிரல்ல
எதிர்க்கும் தன்மையை மட்டும் நீக்கிவிட்டு
எதிரியையும் வாழவிடுவோம் நண்பனாக !!!
----------------------------------------------------------------
எனது முகநூல் முகவரி: http://www.facebook.com/thiruththam
எனது டுவிட்டர் முகவரி: https://twitter.com/thiruththam
தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.in
திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com
தமிழ்நூல்களுக்கான மதிப்புரைகளைக் காண: http://noolmathippurai.blogspot.in
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Sep 11, 2018, 1:58:51 AM9/11/18
to mintamil
On Tue, Sep 11, 2018 at 10:58 AM iraamaki <p...@giasmd01.vsnl.net.in> wrote:
+1
 
பாராட்டுகள், சரவணன், அடிப்படையான, ஆழமானதொரு கருத்தைப் பிடித்துவிட்டீர்கள். உறுதியாக உங்களுக்கு இனி முன்னேற்றங் கிட்டும். (பல இடங்களில் நான் பெரிதும் வேறுபடுவேன். அது வேறுகதை. ஆனால் உங்கள் முயற்சி தொடரட்டும்.)
 
அன்புடன்,
இராம.கி.

மிக்க நன்றி ஐயா. :))
 
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

செல்வன்

unread,
Sep 12, 2018, 4:48:10 AM9/12/18
to mint...@googlegroups.com
On Mon, Sep 10, 2018 at 11:54 PM திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com> wrote:


நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை உங்கள் எழுத்துக்களே காட்டிவிடும் செல்வன்.

கீழே உள்ள சுட்டியைப் பாருங்கள்.


இதில் போய்ப் படித்துப் பார்த்தீர்கள் என்றால், அவர்கள் கூறியிருக்கும் PIE வேர்ச்சொற்கள் எவ்வளவு தவறானவை என்று தெரிந்து கொள்ளலாம். இவை தவறானவை என்று என்னைப் போல மொழியியலாளர்கள் மட்டுமே கூறமுடியும். 

பத்து மொழியில் உள்ள சொற்களை எடுத்துக்கொண்டு அவை எல்லாவற்றுக்கும் பொருந்தி வருவதைப் போல எழுத்துக்களைப் போட்டுச் செயற்கையாகச் செய்யப்பட்டவையே இந்த PIE மூலச் சொற்கள். இவை எந்த மொழியிலும் அப்படியே பயிலப் பெறாதவை. ஆனால் எல்லா மொழிகளுக்கும் ஒற்றுமை இருப்பதைப் போல செயற்கையாக உருவாக்கப்பட்டவை. இப்படிச் செய்வது ஆய்வே இல்லை. ஒரு மூலச்சொல் என்பது உயிருடன் இருக்கும் ஒரு மொழியில் இருந்து காட்டப்பட வேண்டும். அதுமட்டுமின்றி, அது எப்படியெல்லாம் திரிந்து பிற வடிவம் பெற்றது என்ற வரலாறும் காட்டப்பட வேண்டும். இன்னும் சொல்வதற்கு எவ்வளவோ இருக்கிறது. ஆனால், உங்களுக்கு அது தேவையில்லை.

கவலற்க, என்னுடைய ஆய்வு வீண் போகாது. :))
இதன் பலனை காலம் கண்டிப்பாக இவ் உலகத்திற்கு அளிக்கும்.

காத்திருங்கள் சற்று பொறுமையுடன். :))

----

கிமு 4000 ஆண்டில் பேசப்பட்ட மொழி. எந்த சுவடிகளும், கல்வெட்டில் இல்லாது நிலையில் கிமு 1500 ஆண்டுவாக்கில் பேசப்பட்ட மொழிச்சொற்களை வைத்து, அவற்றின் ஒப்பிலக்கணம், சொல் மாறுபடும் விதம்
ஆகியவற்றை கொண்டு உருவாக்கியவை தான் அந்த வேர்சொற்கள்.

அவை 100% துல்லியமானவையா? யாருக்கும் தெரியாது. ஒப்பிடவும் வழி இல்லை. இருக்கும் அறிவியலை வைத்து செய்யப்பட்ட முயற்சி தான் இது.

இது எப்படி செய்யபடது என்பதற்கு விரிவான கட்டுரைகள், நூல்கள் உண்டு. தேடிபார்த்து படித்தால் நமக்கும் பிடிபடும். 

சமஸ்கிருதத்க்தின் தாய் இறந்து போன PIE.மொழி தான் என்கையில் வேர்ச்சொல்லை
எப்படி உயிருடன் இருக்கும் மொழியில் இருந்து எடுக்க முடியும்??? 

உங்கள் தியரி உண்மை எனில்:

ரிக்வேதத்தில் சக்ர எனும்
சொல் 30 முறை வருகிறது.

ரிக்வேத காலம் என்ன?

ரிக்வேதத்துக்கு முந்தைய காலகட்ட தமிழ் நூல் எது? அதில் சக்கரம் எனும் சொல் புழக்கத்தில் இருந்ததா?

சக்கரம் எனும் சொல்லை புழங்கும் முதல் தமிழ் நூல் எது? அதன் காலகட்டம் யாது?

ஆராய்ச்சி செய்து பதில் இடவும். அவசரம் இல்லை 😆😆🙏




--

செல்வன்

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Sep 12, 2018, 5:35:51 AM9/12/18
to mintamil
On Wed, Sep 12, 2018 at 2:18 PM செல்வன் <hol...@gmail.com> wrote:

கிமு 4000 ஆண்டில் பேசப்பட்ட மொழி. எந்த சுவடிகளும், கல்வெட்டில் இல்லாது நிலையில் கிமு 1500 ஆண்டுவாக்கில் பேசப்பட்ட மொழிச்சொற்களை வைத்து, அவற்றின் ஒப்பிலக்கணம், சொல் மாறுபடும் விதம்
ஆகியவற்றை கொண்டு உருவாக்கியவை தான் அந்த வேர்சொற்கள்.

ஒன்றும் புரியவில்லை செல்வன். கிமு 4000 த்தில் பேசப்பட்ட மொழி(1) என்கிறீர்கள். அப்புறம் கிமு 1500 வாக்கில் பேசப்பட்ட மொழி (2) என்கிறீர்கள். 1 ம் 2 ம் வேறா? ஒன்றா?. தெளிவாக்குங்கள்.

நீங்கள் மேலே கூறும் கருத்துக்களுக்கு ஏதேனும் ஆதாரம் / இணைப்பு உள்ளது எனில் இங்கே கொடுங்கள்.


அவை 100% துல்லியமானவையா? யாருக்கும் தெரியாது. ஒப்பிடவும் வழி இல்லை. இருக்கும் அறிவியலை வைத்து செய்யப்பட்ட முயற்சி தான் இது.

எவ்விதமாக அறிவியல் முறைப்படி செய்யப்பட்டது?. எங்கே படிக்கலாம் அதைப்பற்றி?
 

இது எப்படி செய்யபடது என்பதற்கு விரிவான கட்டுரைகள், நூல்கள் உண்டு. தேடிபார்த்து படித்தால் நமக்கும் பிடிபடும். 

எங்கே தேடுவேன்?..எங்கே தேடுவேன் ?.என்று கலைவாணரைப் போல பாடத்தான் தோன்றுகிறது. :))
 

சமஸ்கிருதத்க்தின் தாய் இறந்து போன PIE.மொழி தான் என்கையில் வேர்ச்சொல்லை
எப்படி உயிருடன் இருக்கும் மொழியில் இருந்து எடுக்க முடியும்??? 

ஏன், உயிருடன் இருக்கும் தமிழ்மொழியில் இருந்து நான் வேர்ச்சொற்களைக் காட்டவில்லையா?

 
உங்கள் தியரி உண்மை எனில்:

ரிக்வேதத்தில் சக்ர எனும்
சொல் 30 முறை வருகிறது.

ரிக்வேத காலம் என்ன?

ரிக்வேதத்துக்கு முந்தைய காலகட்ட தமிழ் நூல் எது? அதில் சக்கரம் எனும் சொல் புழக்கத்தில் இருந்ததா?

சக்கரம் எனும் சொல்லை புழங்கும் முதல் தமிழ் நூல் எது? அதன் காலகட்டம் யாது?

ஆராய்ச்சி செய்து பதில் இடவும். அவசரம் இல்லை 😆😆🙏

கால ஆராய்ச்சி என்பது ஒரு மாயக்கண்ணாடியைப் போல மயக்கம் நிறைந்த கருத்துக்களையே தரும்.
இதுவரைக்கும் எந்த செங்கிருத நூலுக்காவது / சங்கத் தமிழ்நூலுக்காவது ஒருமித்த, முடிவான காலம் கண்டறியப்பட்டுள்ளதா?

எனவே தான் கால ஆய்வில் நான் ஈடுபடுவதில்லை.

வேதங்கள் எழுதாக் கிளவி எனும்போது அங்கே காலம் தோன்றுவதும் உறுதியாவதும் எப்படியோ அறியேன். :))





--

செல்வன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.


--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
------------------------------------------------------------------
எதிரியிடம் நமக்குப் பிடிக்காத பொருள்

nkantan r

unread,
Sep 12, 2018, 6:39:06 AM9/12/18
to மின்தமிழ்

This point of timeline and date is very important to establish the authenticity of origin of roots. Till then all roots and (subjective) morphs are all just conjectures.

As i repeated in other threads, many words were co-existant as people were not islands. 

As regards Vedas there are certain marks of times . 1) appearance of horses  and dowstication in IVC areas.(~1900 BC)
2) buddhas preachings ( part of Vedas are certainly before and  parts after his preachings. Buddha preached in opposition and apposition of vedic rituasl. (~550 bc)
3) language analysis (a land mine area) indicate also 2000 to 300 BC ( ashoka)

Thus a certain time range is available for Vedas and certainly chakra appears as a phtsical wheel, as well as use of words to show rotation and Divine Yantra.

rnk

செல்வன்

unread,
Sep 12, 2018, 9:11:10 AM9/12/18
to mint...@googlegroups.com


On Wed, Sep 12, 2018 at 4:35 AM திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com> wrote:


On Wed, Sep 12, 2018 at 2:18 PM செல்வன் <hol...@gmail.com> wrot.

ஒன்றும் புரியவில்லை செல்வன். கிமு 4000 த்தில் பேசப்பட்ட மொழி(1) என்கிறீர்கள். அப்புறம் கிமு 1500 வாக்கில் பேசப்பட்ட மொழி (2) என்கிறீர்கள். 1 ம் 2 ம் வேறா? ஒன்றா?. தெளிவாக்குங்கள்.

நீங்கள் மேலே கூறும் கருத்துக்களுக்கு ஏதேனும் ஆதாரம் / இணைப்பு உள்ளது எனில் இங்கே கொடுங்கள்.


சுமாராக கிமு 4000 வாக்கில் உருவானது PIE மொழி (proto Indo European- கொள்ளுபாட்டி மொழி)

PIE இருந்து பிரிந்து சுமாராக கிமு 3000 வாக்கில் உருவானது இந்தோ- இரானியன் (பாட்டி மொழி)

இந்தோ இரானிய மொழியில் இருந்து கிமு 1500 வாக்கில் பாரசிக மொழியும், வேதகால சமஸ்கிருதமும்  (பாட்டிமொழி) தோன்றுகின்றன. வேதகால சமஸ்கிருதம் கிமு 600 வாக்கில் செம்மைபடுத்தபட்டு classic Sanskrit ஆக மாறுகிறது.



எவ்விதமாக அறிவியல் முறைப்படி செய்யப்பட்டது?. எங்கே படிக்கலாம் அதைப்பற்றி?

ஆராய்ச்சியாளருக்கு கோடு தான் போட்டு காட்ட முடியும். ரோடுமா போட்டு கொடுக்க முடியும்? 😆




ஏன், உயிருடன் இருக்கும் தமிழ்மொழியில் இருந்து நான் வேர்ச்சொற்களைக் காட்டவில்லையா?

அது எல்லாம் தவறான ஆராய்ச்சி




 


கால ஆராய்ச்சி என்பது ஒரு மாயக்கண்ணாடியைப் போல மயக்கம் நிறைந்த கருத்துக்களையே தரும்.
இதுவரைக்கும் எந்த செங்கிருத நூலுக்காவது / சங்கத் தமிழ்நூலுக்காவது ஒருமித்த, முடிவான காலம் கண்டறியப்பட்டுள்ளதா?

எனவே தான் கால ஆய்வில் நான் ஈடுபடுவதில்லை.

வேதங்கள் எழுதாக் கிளவி எனும்போது அங்கே காலம் தோன்றுவதும் உறுதியாவதும் எப்படியோ அறியேன். :))


அப்படியானால் நீங்கள் செய்வது ஆய்வே அல்ல். அது ஒரு பொழுதுபோக்கு வலைதளம்கட்டுரை. பொழுதுபோக பதிவு எழுதினால் நான் ஏன் குறுக்கே வரப்பொகிரேன்? அதை ஆய்வு என சொல்லியதால் தான் எனக்கு குழப்பம்
எற்பட்டது. பொழுதுபோக்கை தொடர்க 🙏🙏
--

செல்வன்

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Sep 12, 2018, 9:16:29 AM9/12/18
to mintamil
தெரிந்ததுதானே செல்வன்.

ஆதாரங்களோ கேள்விகளோ கேட்டால் அதற்குப் பதில் அளிக்காமல் வேறு எதையாவது கூறுவீர்கள்.

இராம.கி. ஐயா முன்பே சொன்னார். நான் தான் கேட்கவில்லை. :))

செல்வன்

unread,
Sep 12, 2018, 9:35:38 AM9/12/18
to mintamil
நீங்கள் எழுதிய சக்கரக் கதைக்கு ஆதாரம் என ஒற்றை வரியை எங்காவது, எந்த நூலில், கட்டுரையில் இருந்து நீங்கள் இதுநாள் வரை காட்டியதுண்டா?

நான் பல நூல்களில் இருந்து எடுத்து போட்ட ஆதாரங்கள் இழையில் உள்ளன.

உங்களுக்கு நீங்கள் எடுக்கும் தலைப்பில் எப்படி ஆராய்ச்சி செய்வது என்பது கூட தெரியவில்லை.

அதை உங்களுக்கு புரியவைக்கதான் மொழியின் வரலாற்றை சுருக்கமாக எழுதினேன்.

அதன்பின்னர் தான் எனக்கு புரிந்தது..நீங்கள் செய்வது வலைபதிவு கட்டுரைகள் எழுதுவது மட்டும் தான் என.

எந்த ஜர்னலுக்கும் ஆயுளில் போகவே போகாத இக்கட்டுரைகளில் என்ன இருந்தால் தான் என்ன? :-)

அதனால் எழுதுங்கள். பொழுதுபோக ஜாலியாக படித்துவிட்டு செல்கிறேன் :-)

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Sep 14, 2018, 10:46:52 AM9/14/18
to mintamil
On Wed, Sep 12, 2018 at 6:41 PM செல்வன் <hol...@gmail.com> wrote:


On Wed, Sep 12, 2018 at 4:35 AM திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com> wrote:


On Wed, Sep 12, 2018 at 2:18 PM செல்வன் <hol...@gmail.com> wrot.

ஒன்றும் புரியவில்லை செல்வன். கிமு 4000 த்தில் பேசப்பட்ட மொழி(1) என்கிறீர்கள். அப்புறம் கிமு 1500 வாக்கில் பேசப்பட்ட மொழி (2) என்கிறீர்கள். 1 ம் 2 ம் வேறா? ஒன்றா?. தெளிவாக்குங்கள்.

நீங்கள் மேலே கூறும் கருத்துக்களுக்கு ஏதேனும் ஆதாரம் / இணைப்பு உள்ளது எனில் இங்கே கொடுங்கள்.


சுமாராக கிமு 4000 வாக்கில் உருவானது PIE மொழி (proto Indo European- கொள்ளுபாட்டி மொழி)

செல்வன்,

PIE என்பது ஒரு கற்பனையான மொழி. இதைப்பற்றி விக்கிபீடி`யா கூறும் வரிகளைப் படியுங்கள் கீழே:


Development of the hypothesis


No direct evidence of PIE remains – scholars have reconstructed PIE from its present-day descendants using the comparative method.[4]

The comparative method follows the Neogrammarian rule: the Indo-European sound laws apply without exception. The method compares languages and uses the sound laws to find a common ancestor. For example, compare the pairs of words in Italian and English: piede and foot, padre and father, pesce and fish. Since there is a consistent correspondence of the initial consonants that emerges far too frequently to be coincidental, one can assume that these languages stem from a common parent-language.[5]
 
இவர்கள் என்ன முறையைப் பின்பற்றினார்களோ அதே முறையினைத் தான் நானும் பின்பற்றிச் சொல்லியிருக்கிறேன். :))

செல்வன்

unread,
Sep 23, 2018, 11:41:41 AM9/23/18
to மின்தமிழ்


On Friday, September 14, 2018 at 9:46:52 AM UTC-5, திருத்தம் பொன். சரவணன் wrote:

On Wed, Sep 12, 2018 at 6:41 PM செல்வன் <hol...@gmail.com> wrote:


On Wed, Sep 12, 2018 at 4:35 AM திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com> wrote:


On Wed, Sep 12, 2018 at 2:18 PM செல்வன் <hol...@gmail.com> wrot.

ஒன்றும் புரியவில்லை செல்வன். கிமு 4000 த்தில் பேசப்பட்ட மொழி(1) என்கிறீர்கள். அப்புறம் கிமு 1500 வாக்கில் பேசப்பட்ட மொழி (2) என்கிறீர்கள். 1 ம் 2 ம் வேறா? ஒன்றா?. தெளிவாக்குங்கள்.

நீங்கள் மேலே கூறும் கருத்துக்களுக்கு ஏதேனும் ஆதாரம் / இணைப்பு உள்ளது எனில் இங்கே கொடுங்கள்.


சுமாராக கிமு 4000 வாக்கில் உருவானது PIE மொழி (proto Indo European- கொள்ளுபாட்டி மொழி)

செல்வன்,

PIE என்பது ஒரு கற்பனையான மொழி. இதைப்பற்றி விக்கிபீடி`யா கூறும் வரிகளைப் படியுங்கள் கீழே:


Development of the hypothesis


No direct evidence of PIE remains – scholars have reconstructed PIE from its present-day descendants using the comparative method.[4]

The comparative method follows the Neogrammarian rule: the Indo-European sound laws apply without exception. The method compares languages and uses the sound laws to find a common ancestor. For example, compare the pairs of words in Italian and English: piede and foot, padre and father, pesce and fish. Since there is a consistent correspondence of the initial consonants that emerges far too frequently to be coincidental, one can assume that these languages stem from a common parent-language.[5]
 
இவர்கள் என்ன முறையைப் பின்பற்றினார்களோ அதே முறையினைத் தான் நானும் பின்பற்றிச் சொல்லியிருக்கிறேன். :))

 

சரவணன் அவர்களே

இந்தோ-ஐரோப்பிய மொழி கிமு 4000ல் பேசப்பட்டது என்கையில் அந்த மொழி தற்போது வழக்கில் சுத்தமாக இல்லை. இறந்த மொழிகளை மீளுருவாக்கம் செய்ய தேவையான அறிவியல் வழிமுறைகளை கையாண்டு தான் மீளுருவாக்கம் செய்கிறார்கள்.

மகள்கள், பேத்திகளின் உருவ அமைப்பை வைத்து பாட்டியின் உருவ அமைப்பை யூகம் செய்யும் முறையே இது. 100% துல்லியமா என்றால் நிச்சயமாக இல்லை. அதே சமயம் தற்போது இருப்பதில் சிறந்த அறிவியல் முறை இதுதான்.

உங்கள் ஆய்வில்:

காலக்கணிப்பு சுத்தமாக இல்லை. சக்கரம் எந்த நூற்றாண்டில் உருவான சொல், எப்போது வடமொழிக்கும், இரானிய மொழிக்கும், ஐரோப்பிய மொழிகளுக்கும் போனது என்பதை யூகிக்க கூட உங்களால் முடியவில்லை

தமிழ்புலவர்கள் வடமொழியை உருவாக்கினார்கள் என மொட்டைதாத்தன் குட்டையில் விழுந்த கதை சொல்கிறீர்கள். எந்த ஆண்டு உருவாக்கினார்கள், எதற்காக உருவாக்கினார்கள், யார் உருவாக்கினார்கள் என எந்த தகவலும் இல்லை.

சக்கரம் கண்டுபிடிக்கபட்டது மத்தியாசியாவில் ஆரியர் வாழுமிடத்தில். அதை அவர்கள் கண்டுபிடித்து அதற்கு என சொல்லே இல்லாமல் இருந்து, அதை தமிழ்நாட்டுக்கு கொண்டுவந்து, தமிழர்கள் அதற்கு சகக்ரம் என பெயர் சூட்டி அது லத்தீன், பாரசிக, கிரேக்க, ஆங்கில, ஜெர்மானிய மொழிகளில் ஏறியது என்றால் நம்பும்படியாகவா உள்ளது?

ஆய்வாளருக்கு தேவை நடுநிலைமை. தன் மொழி தான் அனைத்து மொழிக்கும் தாய் எனும் கண்ணோட்டத்தில் ஆய்வு செய்ய ஆர்ம்பித்தால் அது ஆய்வுலகில் ஏற்கப்படாது. அரசியல் மேடைகளில் பேசி கைதட்டல் வாங்கலாம். ஏதும் அறியாத பொதுமக்கள் கைதட்டி பாராட்டலாம். ஆனால் கும்மிடிபூண்டிக்கு வடக்கே உள்ள எந்த நாட்டிலும் யாராலும் உங்கள் ஆய்வு ஏற்கபடாது. :-)
Reply all
Reply to author
Forward
0 new messages