தமிழ் அலகுகள் (units)

2,089 views
Skip to first unread message

N. Kannan

unread,
Jan 6, 2010, 3:22:49 AM1/6/10
to மின்தமிழ்
1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை கால்
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால்வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/57511466188800000 0 - வெள்ளம்
1/57511466188800000 000 - நுண்மணல்
1/23238245302272000 00000 - தேர்த் துகள்.

@ நீட்டலளவு..

10 கோன் - 1 நுண்ணணு
10 நுண்ணணு - 1 அணு
8 அணு - 1 கதிர்த்துகள்
8 கதிர்த்துகள் - 1 துசும்பு
8 துசும்பு - 1 மயிர்நுணி
8 மயிர்நுணி - 1 நுண்மணல்
8 நுண்மணல் - 1 சிறுகடுகு
8 சிறுகடுகு - 1 எள்
8 எள் - 1 நெல்
8 நெல் - 1 விரல்
12 விரல் - 1 சாண்
2 சாண் - 1 முழம்
4 முழம் - 1 பாகம்
6000 பாகம் - 1 காதம்(1200 கெசம்)
4 காதம் - 1 யோசனை

@ பொன்நிறுத்தல்..

4 நெல் எடை - 1 குன்றிமணி
2 குன்றிமணி - 1 மஞ்சாடி
2 மஞ்சாடி - 1 பணவெடை
5 பணவெடை - 1 கழஞ்சு
8 பணவெடை - 1 வராகனெடை
4 கழஞ்சு - 1 கஃசு
4 கஃசு - 1 பலம்

@ பண்டங்கள் நிறுத்தல்..

32 குன்றிமணி - 1 வராகனெடை
10 வராகனெடை - 1 பலம்
40 பலம் - 1 வீசை
6 வீசை - 1 தூலாம்
8 வீசை - 1 மணங்கு
20 மணங்கு - 1 பாரம்

@ முகத்தல் அளவு..

5 செவிடு - 1 ஆழாக்கு
2 ஆழாக்கு - 1 உழக்கு
2 உழக்கு - 1 உரி
2 உரி - 1 படி
8 படி - 1 மரக்கால்
2 குறுணி - 1 பதக்கு
2 பதக்கு - 1 தூணி

@ பெய்தல் அளவு..

300 நெல் - 1 செவிடு
5 செவிடு - 1 ஆழாக்கு
2 ஆழாக்கு - 1 உழக்கு
2 உழக்கு - 1 உரி
2 உரி - 1 படி
8 படி - 1 மரக்கால்
2 குறுணி - 1 பதக்கு
2 பதக்கு - 1 தூணி
5 மரக்கால் - 1 பறை
80 பறை - 1 கரிசை
48 96 படி - 1 கலம்
120 படி - 1 பொதி
____________ ______

கால அளவு..

2 கண்ணிமை = 1 நொடி

2 கைநொடி = 1 மாத்திரை

2 மாத்திரை = 1 குரு

2 குரு = 1 உயிர்

2 உயிர் = 1 சணிகம்

12 சணிகம் = 1 விநாடி

60 விநாடி = 1 விநாடி-நாழிகை

2 1/2 நாழிகை = 1 ஓரை

3-3 1/2 நாழிகை = 1 முகூர்த்தம்

2 முகூர்த்தம் = 1 சாமம்

4 சாமம் = 1 பொழுது

2 பொழுது = 1 நாள்

15 நாள் = 1 பக்கம்

2 பக்கம்-30 நாள் = 1 மாதம்

6 மாதம் = 1 அயனம்

2 அயனம் -12 மாதம் = 1 ஆண்டு

60 ஆண்டு = 1 வட்டம்
____________ ______

எண்ணல் அளவை..

ஒன்றிலிருந்து கோடி வரை அனைவரும் அறிந்தவையே....கோடிக்கு பிறகான எண்களின்
பெயர்களை தெரிந்து கொள்ளுங்கள்.

10கோடி - 1அற்புதம்

10அற்புதம் - 1நிகற்புதம்

10நிகற்புதம் - 1கும்பம்

10கும்பம் - 1கணம்

10கணம் - 1கற்பம்

10கற்பம் - 1நிகற்பம்

10நிகற்பம் - 1பதுமம்

10பதுமம் - 1சங்கம்

10சங்கம் - 1சமுத்திரம்

10சமுத்திரம் - 1ஆம்பல்

10ஆம்பல் - 1மத்தியம்

10மத்தியம் - 1பரார்த்தம்

10பரார்த்தம் - 1பூரியம்

--

வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..

Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

வி. சு.

unread,
Jan 6, 2010, 3:31:08 AM1/6/10
to மின்தமிழ்
On Jan 6, 1:22 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
...

> 1/23238245302272000 00000 - தேர்த் துகள்.
...

ஏன் இவ்வளவு நுண்ணிய அலகுகள் தேவைப் பட்டன என்று தெரிய வில்லை. இவற்றைக்
கொண்டு எவற்றை அளந்தனர்...?!

N. Kannan

unread,
Jan 6, 2010, 4:11:06 AM1/6/10
to mint...@googlegroups.com
அதுதான் வியப்பாக உள்ளது.

கொரியாவில் எல்லாம் 10,000தின் மடங்காகக் கணக்கிடப்படும் போது, இவர்கள்
கடுகைத்துளைத்து அதில் ஏழ் கடலைப் புகுத்த முற்படுவானேன்?
ஐரோப்பிய/அரபிக் கணக்கில் 0 என்பது இல்லாமல் இருந்திருக்கிறது. அது இந்தியக்கொடை.
கணிதர் இராமானுஜம் அவர்களைப்பற்றிய ஒரு நூல். அமேரிக்காவில் வாசித்தேன்.
ஒரு அமெரிக்கப் பேராசிரியர் எழுதியது. 'அலகிலா அளவையும் அறிந்த அறிஞர்'
என்பது புத்தகப்பெயர்.
இத்தனை அலகுகளையும் வைத்துக்கொண்டு என்ன செய்து கொண்டு இருந்தார்கள்?
ஒரு புறம் நானோ டெக்னாலஜிக்கு தேவையான அலகுகள்.
மறுபுறம். விண்ணியலுக்கான அலகுகள்!

ம்ம்ம்..

க.>

2010/1/6 வி. சு. <vijayakuma...@gmail.com>:

> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Innamburan Innamburan

unread,
Jan 6, 2010, 4:27:34 AM1/6/10
to mint...@googlegroups.com
Exactly: "ஒரு புறம் நானோ டெக்னாலஜிக்கு தேவையான அலகுகள்.

மறுபுறம். விண்ணியலுக்கான அலகுகள்!"
Innamburan

2010/1/6 N. Kannan <navan...@gmail.com>



--
இன்னம்பூரான்

Astrologer Vighnesh சென்னை

unread,
Jan 6, 2010, 4:57:28 AM1/6/10
to mint...@googlegroups.com

விண்னையும் மண்னையும் அளந்தார்கள்

. நம் முன்னோர்கள் அறிவுடையவர்கள் என்பதற்கு இதை விட சான்றிதழ் வேண்டுமோ. அந்த காலத்திலே கால் வாய்ப்பாடு அறை வாய்ப்பாடு எல்லாம் அத்துபடி, இப்ப கால்கூலேட்டர் உதவி இல்லாமல் கணிதம் வராது நம்ம குழந்தைகளுக்கு

கே

.வீ.விக்னேஷ்

சென்னை



2010/1/6 Innamburan Innamburan <innam...@googlemail.com>



--
K V.Vighnesh
Chennai-93
mbl: +919382633377 or 9444961820
kvvig...@yahoo.co.in
http://astrologicalremedies.blogspot.com
http://in.groups.yahoo.com/group/Astro-Health-Remedies/join
skype: astrovighnesh
Sent from Tamil Nadu, India

வி. சு.

unread,
Jan 6, 2010, 8:27:12 AM1/6/10
to மின்தமிழ்

அலகுகள், அளவீடுகள் இருக்க வேண்டியதுதான். அதற்காக எனக்குத்தான் தெரியும்
என்று கண்டதையும் அளக்கக் கூடாது. ஒரு மனிதனின் மகிழ்ச்சியின் அளவு x, x
ன் ஆயிரம் மடங்கு y, y ன் ஆயிரம் மடங்கு z என கணக்கு சொல்லிக் கொண்டே
போவது முட்டாள்தனமாகத் தோன்றுகிறது. ஏதோ ஒரு உபநிடதத்தில் இதைப் பார்த்த
நியாபகம். :-)

Tirumurti Vasudevan

unread,
Jan 6, 2010, 8:44:30 AM1/6/10
to mint...@googlegroups.com
2010/1/6 வி. சு. <vijayakuma...@gmail.com>
அதற்காக எனக்குத்தான் தெரியும்

என்று கண்டதையும் அளக்கக் கூடாது.
கண்டதைத்தானே அளக்கமுடியும்? காணாததை அளப்பது என்பது வேறு!
 
ஒரு மனிதனின் மகிழ்ச்சியின் அளவு x, x
ன் ஆயிரம் மடங்கு y, y ன் ஆயிரம் மடங்கு z என கணக்கு சொல்லிக் கொண்டே
போவது முட்டாள்தனமாகத் தோன்றுகிறது.

ஏன்? அனுபவித்தவர்கள் சொல்லுகிறார்கள். நம்பவில்லை என்பது வேறு விஷயம்.

ஏதோ ஒரு உபநிடதத்தில் இதைப் பார்த்த
நியாபகம். :-)
தைத்ரீயம் ஆனந்தவல்லிதான்.

திவாஜி


--
My blogs: [all in Tamil]
http://anmikam4dumbme.blogspot.com/
http://chitirampesuthati.blogspot.com/ photo blog now with english text too!
http://kathaikathaiyaam.blogspot.com/

BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!

S.Partha sarathy

unread,
Jan 7, 2010, 12:07:54 PM1/7/10
to mint...@googlegroups.com
அருமையான தொகுப்பு! ஆதராமூலம் கொடுத்திருந்த்தால் நாங்களும் மேற்கோள் காட்டிச் சொல்ல வசதியாக இருந்திருக்கும், 

ஒரு சிறு கணக்கு..

8 அணு - 1 கதிர்த்துகள்
8 கதிர்த்துகள் - 1 துசும்பு
8 துசும்பு - 1 மயிர்நுணி
8 மயிர்நுணி - 1 நுண்மணல்
8 நுண்மணல் - 1 சிறுகடுகு

எனில் அணுவின் அளவு என்ன?

கடுகின் அளவு 1மி.மி. எனில் அணுவின் அளவு
10^(-3) * 3x10^(-5) = 30 நானோமீட்டர்.!! 
நவீன கணக்கைவிட சுமார் 1000கே குறைவு!

பார்த்தசாரதி


2010/1/6 N. Kannan <navan...@gmail.com>

N. Kannan

unread,
Jan 8, 2010, 2:05:55 AM1/8/10
to mint...@googlegroups.com
"The diameter of an atom is of the order of 10-8 cm." 0.1 nm

அதாவது 0.1 நானோமீட்டர் என்கிறது,
Henry F. Holtzclaw & William R. Robinson. General Chemistry.
Lexington, MA: Heath, 1988: 98.

நம்மவர் 30 நானோமீட்டர் என்று கணக்கிட்டுள்ளனர் என்கிறது உங்கள் கணக்கு.
அதாவது 300 மடங்கு அதிகமாக உள்ளது. ஆயினும் நானோமீட்டர் ரேஞ்சில்
இருப்பது அதன் சிறப்பு.

இதே போல் 'பை' யின் அலகை மிகத்துல்லியமாக நம்மவர் கணக்கிட்டுப்பதை
அறிந்திருப்பீர்கள்.

உலகம் தோன்றிய காலக்கட்டத்தை மிகத்துல்லியமாக கணக்கிட்டுள்ள ஒரு புத்தகம்
சரஸ்வதி மகால் நூலகத்தில் கண்டேன். இது பற்றிய குறிப்பை இணையத்தில்
பலமுறை சொல்லியிருக்கிறேன். தேட வேண்டும்.

என் ஆர்வமெல்லாம், முதலில் நம் வசம் இருந்த அறிவியல் பின்புலத்தைத் தேடி
சேகரிக்க வேண்டும். பின் அலசி, எது அறிவியல், எது மூட நம்பிக்கை என்று
கூறு போடலாம். சேகரமாவதற்குள் பல ஓலைச்சுவடி சாஸ்திரங்கள் அழிந்து
போய்விட்டன/போய் கொண்டிருக்கின்றன.

பொதுவாக, உங்கள் "நோய் நாடி" சூத்திரத்தை ஒத்துக் கொள்கிறேன். பொத்தாம்
பொதுவாய் நமக்கு எல்லாம் தெரியும் என்று சொல்வது அழகல்ல.
நம்மிடம் ஏதோ அபூர்வமான அணுகுமுறை (pedagogy) ஒன்று இருந்திருக்கிறது.
அதைத் தவறவிட்டிருக்கிறோம். மீண்டும் கிடைக்குமா பார்ப்போம்!

இத்தகவல் எனக்கு forward message-ஆக வந்தது. முதலில் அனுப்பியர் Konkuk
University வேலை செய்யும் டாக்டர் ரமேஷ்.

க.>
மேலும் சில சுவாரசியமான தகவல்: http://our_legacy.pitas.com/

2010/1/8 S.Partha sarathy <spsar...@gmail.com>:

annamalai sugumaran

unread,
Jan 8, 2010, 2:37:11 AM1/8/10
to mint...@googlegroups.com
ஆஸ்தான கோலாகலம் என்ற ஓலை சுவடியில் இருந்து ஒரு நூல்  முனைவர் சத்திய பாமா அவர்களால் தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நுலகத்தில் வெளியீட்டு  எண்  464  என  2004இல் வெளியிடப்பட்டுள்ளது  .
அதில் இதில் குறிப்பிட்ட  கணித செய்திகள் பல  சற்று வேறுபட்டு ஆனால் ஏறக்குறைய ஒன்றாக இருக்கிறது .அதைப் பற்றி இன்று எழுத நினைத்திருந்தேன் . திரு கண்ணன் முந்திக்கொண்டார் .
இதில் இன்னும் பல விந்தைக் கணக்குகள் உள்ளன ..மொத்தபக்கங்கள்  305
மிக  சுவாரசியமான  புத்தகம்  .
மின்னாக்கத்திற்க்காக திவா ஜி வைத்திருக்கும் அரங்கனாரின் சேகரிப்பிலும் அந்த புத்தகத்தின் பழம் பிரதியை 
பார்த்தேன் .
பல மாய சதுரங்கள்  புதிர்களும் ,பல்வேறு புதிர் கணக்குகளும் உள்ளன .
உதாரனத்திற்க்கு ஒன்றே ஒன்று
ஒரு கரும்பிற்கு 9 கணுக்கள் ,அந்த கரும்பின் விலை ஒன்பது  காசு அந்த கரும்பை ஒன்பது பேர் தின்றார்கள்
 அவர்கள் தாங்கள்  தின்ற கணுக்களுக்கு ஏற்ப காசு தரவேண்டும் என்றால் ஒவ்வருவரும் எத்தனை காசு கொடுத்திருப்பார்கள்
 
விடை நாளை சொல்கிறேன் .
அன்புடன் ,
ஏ சுகுமாரன்


2010/1/8 N. Kannan <navan...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
A.Sugumaran ,
PONDICHERRY INDIA
MOBILE 09345419948

We never like what we have.
We never get what we want,

வி. சு.

unread,
Jan 8, 2010, 2:50:50 AM1/8/10
to மின்தமிழ்
///

கால அளவு..

2 கண்ணிமை = 1 நொடி
2 கைநொடி = 1 மாத்திரை
2 மாத்திரை = 1 குரு
2 குரு = 1 உயிர்
2 உயிர் = 1 சணிகம்
12 சணிகம் = 1 விநாடி
60 விநாடி = 1 விநாடி-நாழிகை
2 1/2 நாழிகை = 1 ஓரை
3-3 1/2 நாழிகை = 1 முகூர்த்தம்
2 முகூர்த்தம் = 1 சாமம்
4 சாமம் = 1 பொழுது
2 பொழுது = 1 நாள்
15 நாள் = 1 பக்கம்
2 பக்கம்-30 நாள் = 1 மாதம்
6 மாதம் = 1 அயனம்
2 அயனம் -12 மாதம் = 1 ஆண்டு
60 ஆண்டு = 1 வட்டம்

///

ஒரு நாள் 24 மணி நேரம்; இரு பொழுது பகல், இரவு, ஒவ்வொன்றும் பன்னிரண்டு
மணிநேரம். 15 நாள் ஒரு பக்கம், வளர்பிறை, தேய்பிறை; 2 பக்கம் ஒரு மாதம்.
6 மாதம் 1 அயனம், உத்ராயணம், தக்ஷ்னாயணம். 2 அயனம் ஒரு ஆண்டு, 60 ஆண்டு
ஒரு வட்டம்; ஒருவரின் ஆயுள் 2 வட்டம் (?).

60 நாள், இரண்டு மாதங்கள் ஒரு பருவம்; ஒரு ஆண்டில் 6 பருவகாலங்கள்.

ஒரு பொழுது 4 யாமம், ஒரு நாளில் 8 யாமம். 2 முகூர்த்தம் 1 யமம், ஒரு
நாளில் 16 முகூர்த்தம்.

ஒரு நாளில் 60 நாளிகை, எனவே ஒரு முகூர்த்தம் என்பது மூனே முக்கால் (3
3/4) நாளிகை, ஒன்னரை (1 1/2) மணி நேரம்.

ஒரு நாளில் 60 நாளிகை; ஒரு நாளிகை 24 நிமிடம், 1440 விநாடிகள்; ஒரு மணி
நேரத்தில் இரண்டரை (2 1/2) நாளிகை, எனவே ஒரு மணி நேரம் = ஒரு ஓரை.

ஒரு நாளிகையை (24 * 60 விநாடிகள்) அறுபதாக பிரிக்கக் கிடைப்பது 24
விநாடிகள் ( பெயர் என்ன ? ஒரு தமிழ்-விநாடி-நாளிகை ), இதை (24 * 1000
மில்லி விநாடிகள்) அறுபதாக பிரிக்கக் கிடைப்பது 0.4 மில்லி விநாடிகள்
( பெயர் என்ன ? ஒரு தமிழ்-விநாடி ).

12 சணிகம் ஒரு தமிழ்-விநாடி-நாளிகை (தமிழ்-விநாடி ஆக இருந்தால் மிகவும்
நுண்ணிய அளவாகிவிடும், பின் மாத்திரை, கண்ணிமையுடன் ஒப்பிட இயலாது) என்று
நினைக்கிறேன். ஒரு நிமிடத்தில் இரண்டரை ( 2 1/2 ) தமிழ்-விநாடி-நாளிகை,
30 சணிகம், 60 உயிர், 120 குரு, 240 மாத்திரை, 480 கைநொடி, 960 கண்ணிமை.
விநாடி அளவில், 24 விநாடி 1 தமிழ்-விநாடி-நாளிகை, 2 விநாடி 1 சணிகம், 1
விநாடி 1 உயிர், அரை விநாடி 1 குரு, கால் விநாடி 1 மாத்திரை, ...
கணக்கில் ஏதோ குளறுபடி..

இப்போது, தெரிந்த அளவிலிருது தொடங்கலாம்..

கைநொடிக்கும் அளவும், கண்ணிமைக்கும் அளவும் ஒரு மாத்திரை என்பதால் இவை
மூன்றுமே ஒரே கால அளவைகள்தான். ஒன்றினும் மற்றது நுண்ணியதா எனத்
தெரியவில்லை. இவை 1 விநாடி கால அளவிலானவை. 2 மாத்திரை, 2 விநாடி 1 குரு;
4 விநாடி, 1 உயிர்; 8 விநாடி 1 சணிகம், 96 (12 * 8) விநாடி 1 தமிழ்-
விநாடி. இதுவும் சரியான கணக்கீடு என்று சொல்ல முடியாது...

http://valavu.blogspot.com/2008/06/blog-post_29.html ன்படி,

ஒரு நாளில் 60 நாளிகை, ஒரு நாளிகை (24 நிமிடங்கள்) 60 விநாளிகை, ஒரு
விநாளிகை (24 நிமிடங்கள்) 60 துடி, ஒரு துடி (0.4 மில்லி விநாடிகள்) 60
கணம். இரண்டரை துடி ஒரு விநாடி, எனவே ஒரு விநாடியில் 150 கணங்கள்.

இந்த அளவீட்டிற்கும் மாத்திரைக்கும் உள்ள ஒப்புமை தெரியவில்லை.

வி. சு.

unread,
Jan 8, 2010, 2:56:10 AM1/8/10
to மின்தமிழ்
On Jan 8, 12:50 pm, வி. சு. <vijayakumar.subbu...@gmail.com> wrote:
...

> ஒரு நாளில் 60 நாளிகை, ஒரு நாளிகை (24 நிமிடங்கள்) 60 விநாளிகை, ஒரு
> விநாளிகை (24 நிமிடங்கள்) 60 துடி, ஒரு துடி (0.4 மில்லி விநாடிகள்) 60
> கணம். இரண்டரை துடி ஒரு விநாடி, எனவே ஒரு விநாடியில் 150 கணங்கள்.
...

ஒரு விநாளிகை (24 விநாடிகள்) 60 துடி

வி. சு.

unread,
Jan 8, 2010, 4:08:33 AM1/8/10
to மின்தமிழ்
On Jan 8, 12:50 pm, வி. சு. <vijayakumar.subbu...@gmail.com> wrote:
...
> ஒரு நாளில் 60 நாளிகை, ஒரு நாளிகை (24 நிமிடங்கள்) 60 விநாளிகை, ஒரு
> விநாளிகை (24 நிமிடங்கள்) 60 துடி, ஒரு துடி (0.4 மில்லி விநாடிகள்) 60
> கணம். இரண்டரை துடி ஒரு விநாடி, எனவே ஒரு விநாடியில் 150 கணங்கள்.
...

ஒரு துடி (400 மில்லி விநாடிகள், அல்லது 0.4 விநாடிகள்) 60 கணம்

Venkatachalam Subramanian

unread,
Jan 8, 2010, 6:12:54 AM1/8/10
to mint...@googlegroups.com

இதே போல் 'பை' யின் அலகை மிகத்துல்லியமாக நம்மவர் கணக்கிட்டுப்பதை
அறிந்திருப்பீர்கள்.

  • சிற்பி ஒருவர் என்னுடைய நண்பர்.சிற்ப சாஸ்த்திரத்தில் ஒரு வாய்பாடு சொல்லுவார்.
-=-=-=-=-=-=-=-=-=-=
  • “வளையதைக் கிளையதாக்கி, கிளையதை எட்டதாக்கி, எட்டில் மூன்றைத் தள்ளி, நின்றது நெற்றிக் கனம் ”
-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=--=
  • வளையது= வளைவானது, அதாவது, வட்டத்தின் சுற்றளவு
  • நெற்றிக்கனம் = வட்டத்தின் விட்டம், அதாவது இரண்டு ஆரத்தின் கூடுதல்.
ஒரு உருளைவடிவிலானா தூண் உள்ளது. அதன் குறுக்கு விட்டம் காண்பதற்கு சிற்பக் கலைஞர் கையாளும் வழிமுறைதான் அந்த வாய்பாடு.
  • வளையதைக் கிளையதாக்கி= ஒரு நூலை எடுத்துக் கொண்டு விட்டம் காணவேண்டிய தூணின் சுற்றளவை எடுத்துக் கொள்ளவும் அந்த சுற்றளவினை இரண்டு சமபாகமாகப் பிரித்துக் கொள்ளவும்
  • கிளையதை எட்டதாக்கி= அந்த சுற்றளவின் பாதியினை எட்டு சமபாகமாக மடித்துக் கொள்ளவும்.
  • எட்டில் மூன்றைத்தள்ளி= அந்த எட்டு சமபாக்த்தில் மூன்று சம பாகங்களைக் கழித்துக் கொள்ளவும்
  • நின்றது நெற்றிக் கனம்= அதாவது ’செமி பெரிமீட்டரில்’ 3/8 பாகத்தைக் கழித்தது போக எஞ்சியுள்ள 5/8 பாகம் அந்த உருளையின் விட்டம் ஆகும்.
  • இது ‘பையின் ’ தொடர்புடைய அளவாகும்.                                                                                                         அன்புடன் வெ.சுப்பிரமணியன் ஓம்

2010/1/8 annamalai sugumaran <amirth...@gmail.com>

ananda rasa thiruma

unread,
Jan 8, 2010, 8:31:56 AM1/8/10
to mint...@googlegroups.com
கணக்கதிகாரம் noolagam.comஇல் கிடைக்கிறது. இதேபோல் ஆஸ்தான கோலாகலம் என்னும் ஒரு புத்தகம் இருக்கிறது. இவை இரண்டும் பண்டைத் தமிழரின் கணக்கீட்டு அலகுகளைப் பற்றி விரிவாகப் பேசுகின்றன. பார்க்கவும்.
-முனைவர் இராச.திருமாவளவன்.
<rasa.thir...@gmail.com>

2010/1/7 S.Partha sarathy <spsar...@gmail.com>

வி. சு.

unread,
Jan 8, 2010, 9:03:10 AM1/8/10
to மின்தமிழ்
On Jan 8, 4:12 pm, Venkatachalam Subramanian <v.dotth...@gmail.com>
wrote:
...
>    - “வளையதைக் கிளையதாக்கி, கிளையதை எட்டதாக்கி, எட்டில் மூன்றைத் தள்ளி,

>    நின்றது நெற்றிக் கனம் ”
...


d = 10
r = 5
2.pi.r = 31.4

--

2.pi.r = 31.4
p.r = 31.4 / 2
5.pi.r/8 = (31.4 / 2) * (5/8) = 9.812

--

d = 10
5.pi.r/8 = 9.8

d = 5.pi.r/8

அடடே!

வி. சு.

unread,
Jan 8, 2010, 9:07:58 AM1/8/10
to மின்தமிழ்

இன்னும்,

d = 5*pi*r/8
pi = 8*d/5*r
pi = 8*(2*r)/5*r
pi = 16/5
pi = 3.2

:-)

வி. சு.

unread,
Jan 8, 2010, 9:11:16 AM1/8/10
to மின்தமிழ்
On Jan 8, 12:50 pm, வி. சு. <vijayakumar.subbu...@gmail.com> wrote:
...
> 15 நாள் = 1 பக்கம்
> 2 பக்கம்-30 நாள் = 1 மாதம்
...

மலையாளத்தில் அடிக்ககடி சொல்லப் படும் 'பக்க்ஷே' இதுதானா...?!

Tirumurti Vasudevan

unread,
Jan 8, 2010, 9:23:17 AM1/8/10
to mint...@googlegroups.com
பக்ஷம் சம்ஸ்க்ருத சொல்.

2010/1/8 வி. சு. <vijayakuma...@gmail.com>

மலையாளத்தில் அடிக்ககடி சொல்லப் படும் 'பக்க்ஷே' இதுதானா...?!

வி. சு.

unread,
Jan 8, 2010, 10:42:38 AM1/8/10
to மின்தமிழ்
On Jan 8, 7:23 pm, Tirumurti Vasudevan <agnih...@gmail.com> wrote:
> 2010/1/8 வி. சு. <vijayakumar.subbu...@gmail.com>

> > மலையாளத்தில் அடிக்ககடி சொல்லப் படும் 'பக்க்ஷே' இதுதானா...?!
> பக்ஷம் சம்ஸ்க்ருத சொல்.

எது முதலில் வந்தது கோழியா ? முட்டையா ?

தமிழ் பக்கத்திலிருந்து சமஸ்கிருத பக்ஷம் வந்ததா ?
இல்லை, சமஸ்கிருத பக்ஷத்திலிருந்து தமிழ் பக்கம் வந்ததா ?

:-)

Geetha Sambasivam

unread,
Jan 14, 2010, 10:00:19 AM1/14/10
to mint...@googlegroups.com
மலையாள பக்ஷே அர்த்தமே வேறேனு நினைக்கிறேன்.

2010/1/8 வி. சு. <vijayakuma...@gmail.com>

Tthamizth Tthenee

unread,
Jan 14, 2010, 11:00:12 AM1/14/10
to mint...@googlegroups.com
மலையாளத்தில்   பஷே என்றால்
 
ஆனால்    என்று பொருள்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 
14-1-10 அன்று, Geetha Sambasivam <geetha...@gmail.com> எழுதினார்:



--
மனிதமும்,உலகமும் காப்போம்,

மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புள்ள
தமிழ்த்தேனீ

http://www.peopleofindia.net
rkc...@gmail.com
http://thamizthenee.blogspot.com

Vedaprakash

unread,
Jan 14, 2010, 10:08:33 PM1/14/10
to மின்தமிழ்
இவையெல்லாம் தமிழ் அலகுகள் இல்லை!

தமிழாக்கம் செய்யப்பட்ட / தமிழ் பெயர் இடப்பட்ட அலகுகள்!

சங்க இலக்கியத்தில் அத்தகைய பிரயோகங்களுக்கு ஆதாரம் இல்லை.

On Jan 6, 1:22 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:


> Tamil Heritage Foundation -http://www.tamilheritage.org/

Hari Krishnan

unread,
Jan 15, 2010, 8:13:54 AM1/15/10
to mint...@googlegroups.com


2010/1/6 N. Kannan <navan...@gmail.com>



10 கோன் - 1 நுண்ணணு

இதையெல்லாம் இப்பத்தான் பார்க்கிறேன்.  வேதப்ரகாஷ் சொன்னதைப் போல் இவற்றில் ஒருசில தமிழ்ப்படுத்தப்பட்டவை என்பதும் உண்மைதான்; அப்படியில்லாமல் தமிழ்ப் பெயர்களாகவே இருப்பதும் உண்மைதான்.  உதாரணத்துக்கு மேலே இருக்கும் கோன்.  அது கோண் என்று மூன்று சுழி ண்-ணாக இருக்கவேண்டும்.

சாணிலும் உளன்; ஓர் தன்மை, அணுவினைச் சதகூறுஇட்ட
கோணினும் உளன்; மாமேருக் குன்றினும் உளன்; இந் நின்ற
தூணினும் உளன்; நீ சொன்ன சொல்லினும் உளன்; இத் தன்மை
காணுதி விரைவின்" என்றான்; "நன்று" எனக் கனகன் நக்கான்.

என்பதில் உள்ளது பாருங்கள், அந்தக் கோண்தான் இது.  அபிதான சிந்தாமணியைப் பார்த்த பிறகு மற்ற எண்களைப் பற்றிச் சொல்கிறேன்.  



--
அன்புடன்,
ஹரிகி.

Hari Krishnan

unread,
Jan 15, 2010, 8:15:57 AM1/15/10
to mint...@googlegroups.com


2010/1/15 Hari Krishnan <hari.har...@gmail.com>



சாணிலும் உளன்; ஓர் தன்மை, அணுவினைச் சதகூறுஇட்ட
கோணினும் உளன்; மாமேருக் குன்றினும் உளன்; இந் நின்ற
தூணினும் உளன்; நீ சொன்ன சொல்லினும் உளன்; இத் தன்மை
காணுதி விரைவின்" என்றான்; "நன்று" எனக் கனகன் நக்கான்.

என்பதில் உள்ளது பாருங்கள், அந்தக் கோண்தான் இது.  அபிதான சிந்தாமணியைப் பார்த்த பிறகு மற்ற எண்களைப் பற்றிச் சொல்கிறேன்.  


விட்டுப் போச்சு.  இது கம்பராமியாணம்.  இரணியன் வதைப் படலம்.  பிரகல்லாதன் சொல்றது.  சிங்கம் வரதுக்கு ஒன் நிமி்ட் முன்னாடி.
-- 

Innamburan Innamburan

unread,
Jan 15, 2010, 9:28:25 AM1/15/10
to mint...@googlegroups.com
ஒன் நிமி்ட்? அதற்கும் குறைச்சல்.


 
2010/1/15 Hari Krishnan <hari.har...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--

Hari Krishnan

unread,
Jan 15, 2010, 10:22:27 AM1/15/10
to mint...@googlegroups.com


2010/1/15 Innamburan Innamburan <innam...@googlemail.com>

ஒன் நிமி்ட்? அதற்கும் குறைச்சல்.


நிமிஷம் அப்படின்னா எவ்ளோ நேரம் தலீவா?

உன்மேஷ நிமிஷோத்பன்ன விபன்ன புவனாவளி:

அப்படின்னா, அந்தம்மா அறுவது செகண்டு கண்ண மூடிட்டு இருந்தா புவனம் எல்லாம் அழிஞ்சுரும்னு அர்த்தமா?

சரணகம லாலயத்தை அரைநிமிஷ நேரமட்டில்
தவமுறைதி யானம் வைக்க அறியாத 
சடகசட மூடமட்டி பவவினையி லேசனித்த 
தமியன்மிடி யால் மயக்கம் உறுவேனோ

அப்படின்னா உன் பாத கமலங்களை என் மனத்தில் முப்பது செகண்ட் நிறுத்தி வைக்க முடியாதவன் நான்னு அர்த்தமா?

ஒருநொடிப் பொழுதில் ஓர்பத் தொன்பதா யிரமாம் காதம்
வருதிறல் உடைத்தாம் சோதிக் கதிரென வகுப்பவர் ஆன்றோர்
கருதவும் அரிய தம்ம கதிருடை விரைவும் அஃது
பருதியி நின்றோர் எட்டு விநாடியிற் பரவு மீங்கே

என்று பாரதி பாடுகிறான் (திசை என்ற கவிதை.  இது வழக்கமான பாரதி கவிதைத் தொகுப்புகளில் இடம்பெற்றிருக்காது. ஆய்வுப் பதிப்பில் உள்ளது.)

இந்தப் பாடலில், நொடி, விநாடி என்ற ஆட்சிகளை கவனியுங்கள்.  சூரியனுடைய ஒளி, பூமியை வந்தடைய எட்டு வினாடிகள் ஆகும் என்று சொல்கிறான்.  என்ன தெரிகிறது?  பாரதி காலம் வரையில்கூட, minute. second ஆகியவற்றுக்கு இப்போதுள்ள நிமிஷம், நொடி என்ற பொருள் define ஆயிருக்கவில்லை.  இருந்திருந்தால் ‘எட்டு நிமிடத்திற் பரவு மீங்கே’ என்றல்லவா பாரதி சொல்லியிருக்க வேண்டும்?  ஒருநிமிடப் போதில் ஓர்பத்தொன்பாயிரமாம் காதம்’ என்றல்லவா பாடியிருக்க வேண்டும்?

நிமிஷத்துக்கு அறுவது செகண்ட் என்பதெல்லாம் ரொம்ப ரொம்ப பிற்காலத்து பொருள் வரையறை.  நிமிஷம் என்றால் கண்ணிமைக்கும் நேரம் என்பது பாரதி காலம் வரையில் நிலவிய வரையறை.  எப்போதிலிருந்து இந்த வழக்கம் ஏற்பட்டது என்பது தெரியவில்லை.  (ஹிஹிஹி.....மொயலுக்கு மூணு கால்தான்றேன்...இன்னா?)


Hari Krishnan

unread,
Jan 15, 2010, 10:32:00 AM1/15/10
to mint...@googlegroups.com


2010/1/15 Hari Krishnan <hari.har...@gmail.com>


  ஒருநிமிடப் போதில் ஓர்பத்தொன்பாயிரமாம் காதம்’ என்றல்லவா பாடியிருக்க வேண்டும்?

இந்த இடத்தில் தவறிவிட்டேன்.  நொடி என்று பாரதி சொல்லும் இடத்தில் வினாடிக்கு ஒரு லட்சத்துத்துத் தொண்ணூறு ஆயிரம் மைல் என்று வருகிறது.  விநாடி என்று அவன் பயன்படுத்தியிருக்கும் இடத்தில், தற்போதைய நிமிடம் வருகிறது.  இப்போதைய நிமிட, வினாடிப் பயன்பாடுகள் அன்று இல்லாததன் காரணத்தால், வினாடி, நொடி என்ற சொற்களை அந்த இடத்தில் பயன்படுத்தி, இந்தச் சொற்களைத் தமிழ்ப்படுத்துவதற்கான முதல் முயற்சியைச் செய்திருக்கிறான் என்று அறியலாம்----இதைத்தான் சொல்ல வந்தேன்.  பிசகிவிட்டது.  

Swarna Lakshmi

unread,
Jan 15, 2010, 10:37:22 AM1/15/10
to mint...@googlegroups.com



From: Hari Krishnan <hari.har...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Fri, 15 January, 2010 8:52:27 PM
Subject: Re: [MinTamil] தமிழ் அலகுகள் (units)



2010/1/15 Innamburan Innamburan <innam...@googlemail.com>
ஒன் நிமி்ட்? அதற்கும் குறைச்சல்.


நிமிஷம் அப்படின்னா எவ்ளோ நேரம் தலீவா?

உன்மேஷ நிமிஷோத்பன்ன விபன்ன புவனாவளி:

அப்படின்னா, அந்தம்மா அறுவது செகண்டு கண்ண மூடிட்டு இருந்தா புவனம் எல்லாம் அழிஞ்சுரும்னு அர்த்தமா?
 
- இந்த நாமத்திற்க்கு அப்படியா அர்த்தம்? ஓரு நிமிஷத்தில் இந்த அண்ட பகிரண்டங்களை (இதைப் போல பல்வேறு புவனங்களை) உருவாக்கிடுவாள் என்று இல்லையா ஸ்ரீ அண்ணா (ராமசந்த்ரா மிஷன்) சொல்கிறார்... (அம்பாளை அந்தம்மா என்றால் என்னவோ போல இல்லை?!! - அவள் ஒருவருக்கு மட்டும் தனிச்சொத்தில்லை தான் - அவளை இப்படித்தான் அழைக்க வேண்டும் என்று வரையரையும் இல்லை என்றறிவேன் - தடங்கலுக்கு மன்னிக்கவும் :))


The INTERNET now has a personality. YOURS! See your Yahoo! Homepage.

Tirumurti Vasudevan

unread,
Jan 15, 2010, 10:47:13 AM1/15/10
to mint...@googlegroups.com
:-))))
உரை எழுதரவர் நடையை வெச்சு முடிவு பண்ணுங்க!

2010/1/15 Swarna Lakshmi <lakshm...@yahoo.com>


அம்பாளை அந்தம்மா என்றால் என்னவோ போல இல்லை?!! -

Swarna Lakshmi

unread,
Jan 15, 2010, 11:09:19 AM1/15/10
to mint...@googlegroups.com
நிமிஷத்துக்கும் அம்பாளுக்கும் சம்பத்தப்பட்ட இன்னும் ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது.
 
கர்னாடகாவில் ஸ்ரீரங்கபட்டினத்துக்கு அருகில் காவிரியாற்றங்கரையில், மிக அழகான சூழ்நிலையில், நிமிஷாம்பாள் என்ற பெயருடைய ஒரு அம்மன் கோவில் இருக்கிறது. கன்னடிகர்களுக்கு முக்கியமான பழமையான கோவில். எவ்வளவு பழமை என்று தெரியாது. இந்த அம்பாளிடம் வேண்டினால், ஒரு நிமிஷத்தில் அருள்வாள் என்று நம்பிக்கை. பல குடும்பங்களுக்கு குல தெய்வமாவாள்.
 
ஆனால் அவள் முன்னால் போனபோது ஒன்றுமே கேட்க தோன்றவில்லை - எவ்வளவு முயன்றும். :))


From: Swarna Lakshmi <lakshm...@yahoo.com>
To: mint...@googlegroups.com
Sent: Fri, 15 January, 2010 9:07:22 PM

Subject: Re: [MinTamil] தமிழ் அலகுகள் (units)




From: Hari Krishnan <hari.har...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Fri, 15 January, 2010 8:52:27 PM
Subject: Re: [MinTamil] தமிழ் அலகுகள் (units)



2010/1/15 Innamburan Innamburan <innam...@googlemail.com>
ஒன் நிமி்ட்? அதற்கும் குறைச்சல்.


நிமிஷம் அப்படின்னா எவ்ளோ நேரம் தலீவா?

உன்மேஷ நிமிஷோத்பன்ன விபன்ன புவனாவளி:

அப்படின்னா, அந்தம்மா அறுவது செகண்டு கண்ண மூடிட்டு இருந்தா புவனம் எல்லாம் அழிஞ்சுரும்னு அர்த்தமா?
 
- இந்த நாமத்திற்க்கு அப்படியா அர்த்தம்? ஓரு நிமிஷத்தில் இந்த அண்ட பகிரண்டங்களை (இதைப் போல பல்வேறு புவனங்களை) உருவாக்கிடுவாள் என்று இல்லையா ஸ்ரீ அண்ணா (ராமசந்த்ரா மிஷன்) சொல்கிறார்... (அம்பாளை அந்தம்மா என்றால் என்னவோ போல இல்லை?!! - அவள் ஒருவருக்கு மட்டும் தனிச்சொத்தில்லை தான் - அவளை இப்படித்தான் அழைக்க வேண்டும் என்று வரையரையும் இல்லை என்றறிவேன் - தடங்கலுக்கு மன்னிக்கவும் :))


The INTERNET now has a personality. YOURS! See your Yahoo! Homepage. --
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Tirumurti Vasudevan

unread,
Jan 15, 2010, 11:11:13 AM1/15/10
to mint...@googlegroups.com
beware of what you ask for!
it may be granted!

so i think you are already blessed!
:-))
tv

2010/1/15 Swarna Lakshmi <lakshm...@yahoo.com>

ஆனால் அவள் முன்னால் போனபோது ஒன்றுமே கேட்க தோன்றவில்லை - எவ்வளவு முயன்றும். :))

Hari Krishnan

unread,
Jan 15, 2010, 11:35:18 AM1/15/10
to mint...@googlegroups.com


2010/1/15 Swarna Lakshmi <lakshm...@yahoo.com>




From: Hari Krishnan <hari.har...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Fri, 15 January, 2010 8:52:27 PM
Subject: Re: [MinTamil] தமிழ் அலகுகள் (units)



2010/1/15 Innamburan Innamburan <innam...@googlemail.com>
ஒன் நிமி்ட்? அதற்கும் குறைச்சல்.


நிமிஷம் அப்படின்னா எவ்ளோ நேரம் தலீவா?

உன்மேஷ நிமிஷோத்பன்ன விபன்ன புவனாவளி:

அப்படின்னா, அந்தம்மா அறுவது செகண்டு கண்ண மூடிட்டு இருந்தா புவனம் எல்லாம் அழிஞ்சுரும்னு அர்த்தமா?
 
- இந்த நாமத்திற்க்கு அப்படியா அர்த்தம்? ஓரு நிமிஷத்தில் இந்த அண்ட பகிரண்டங்களை (இதைப் போல பல்வேறு புவனங்களை) உருவாக்கிடுவாள் என்று இல்லையா ஸ்ரீ அண்ணா (ராமசந்த்ரா மிஷன்) சொல்கிறார்...

நான் இதை எழுதியபோது நிமிஷம் என்ற வார்த்தை மட்டும்தான் என் கவனத்தில் இருந்தது.  விபன்ன என்ற சொல்லை எப்படிப் பொருள் கொள்கிறார்கள் என்பதன் அடிப்படையில் பொருளுரைக்கப்படுகிறது.  அண்ணா என் சுப்பிரமணியம் (ராமகிருஷ்ணா மிஷன் பதிப்பு) இந்த நாமத்துக்கு ‘கண் இமை கொட்டுவதால் புவனங்களை ஆக்கி அழிப்பவள்’ என்று பொருள் சொல்கிறது.  

நிமிஷம் என்பதன்மேல் என் கவனம் இருந்ததால் ஆக்கி, அழிப்வள் என்ற பொருளை ஒப்பிட்டுப் பார்த்து எழுதாமல், நினைவிலிருந்து எழுதினேன்.  ஆகவே நாம ரெண்டுபேருமே ரைட்டுதான்.

 
(அம்பாளை அந்தம்மா என்றால் என்னவோ போல இல்லை?!! - அவள் ஒருவருக்கு மட்டும் தனிச்சொத்தில்லை தான் - அவளை இப்படித்தான் அழைக்க வேண்டும் என்று வரையரையும் இல்லை என்றறிவேன் - தடங்கலுக்கு மன்னிக்கவும் :))


என்ன நீங்க!  அவள் எப்படி உங்களுக்குமட்டும் சொத்தில்லையோ அப்படியே எனக்கு மட்டும் சொத்தில்லாதவள்தான்.  நான் எங்க அம்மாவை, அம்மா என்று அழைத்துக்கொண்டிருந்தேன்.  (காலமாகிவிட்டாள்.) ஆசை ஜாஸதியாப் போனா, ஆத்தா என்பேன்.  இன்னும் ஜாஸ்தியாப் போனா யம்மாடி, இன்னாடி வச்சிருக்கற துண்றதுக்கு என்று கேட்பேன். என் தம்பி ஒருபடி மேலே போய், ஏய் கெய்வி என்று கூப்பிடுவான்.  பிரியம் அதிகரிக்க அதிகரிக்க இப்படிப்பட்ட கொனஷ்டைகள் அதிகரிகத்தானே செய்யும்?

உங்களுடைய பக்தி உயர்வானது.  அதனால் உங்களால் ‘அந்தம்மாவை‘  பொறுத்துக்கொள்ள முடியவில்லை.  நான் எங்கம்மாவை அந்தம்மா என்றேன்.  உங்க அம்மாவை அம்பாள் என்று சொல்வதில் எனக்கு ஆட்சேபணையே இல்லை.  எனக்கு அவள் அம்பாள், ஆத்தா, அம்மா, ஆயி, அன்னபூரணி, அடியே மீனாச்சி எல்லாமும்தான்.  உங்களுடைய உணர்வுகளைப் புண்படுத்தியதற்காக மன்னிக்கவும்.  

கொஞ்ச நாளில் மடற்குழுவில் அவரவர் சுபாவங்கள் புரிந்துவிடும்.  அதுவரையில் கொஞ்சம் நெருடலாக இருப்பதுபோல் தோன்றுவது சகஜம்தான்.  எது எப்படி இருந்தாலும் உங்களை வினாடி நேரத்துக்காவது மனத்துன்பத்துக்கு உள்ளாக்கியதற்காக my unconditional apologies.  

இப்ப, நிமிஷம் பத்தின பேச்சுக்குத் திரும்பலாமா?

Tirumurti Vasudevan

unread,
Jan 15, 2010, 7:12:20 PM1/15/10
to mint...@googlegroups.com
சிவன் விஷ்ணுவை அவர் என்று சொல்வது போல அம்பாளை யாருமே அவர் என்று சொல்வதாக தெரியவில்லை. மரியாதை என்று கிடையாது நெருக்கம் மட்டுமே. அதுவே அவள் சிறப்பு!

2010/1/15 Hari Krishnan <hari.har...@gmail.com>

உங்களுடைய பக்தி உயர்வானது.  அதனால் உங்களால் ‘அந்தம்மாவை‘  பொறுத்துக்கொள்ள முடியவில்லை.  நான் எங்கம்மாவை அந்தம்மா என்றேன்.  உங்க அம்மாவை அம்பாள் என்று சொல்வதில் எனக்கு ஆட்சேபணையே இல்லை.  எனக்கு அவள் அம்பாள், ஆத்தா, அம்மா, ஆயி, அன்னபூரணி, அடியே மீனாச்சி எல்லாமும்தான்.  உங்களுடைய உணர்வுகளைப் புண்படுத்தியதற்காக மன்னிக்கவும்.  

N. Kannan

unread,
Jan 15, 2010, 7:51:49 PM1/15/10
to mint...@googlegroups.com
ஏன் இல்லை? `தாயார்` என்று சொல்லும் மரபில் `அவளை` `அவர்` என்று சொல்லும்
வழக்கமுண்டு. அம்பாள் என்றால் `அம்மா` என்று பொருள். அம்மாவைத் `தாயார்`
என்னும் போது `ஆர்` விகுதி வந்து மரியாதை சேர்ந்துவிடுகிறது ;-)

ஆனால் நெருக்கமானவற்றை ஒற்றைப்படையில் விளிப்பது மரபு. `அவனுக்கு` அதுவே
உவப்பு என்பது சம்பிரதாயம் :-))

க.>

2010/1/16 Tirumurti Vasudevan <agni...@gmail.com>:

devoo

unread,
Jan 15, 2010, 8:44:47 PM1/15/10
to மின்தமிழ்
இந்த இழைக்குத் தொடர்புடைய சில செய்திகளை தமிழ் மரபு அறக்கட்டளை
மின்னூலகம் நமக்குத் தருகிறது –

* தமிழில் எண்கள் 1) மேல் வாயிலக்கம்
2) கீழ் வாயிலக்கம்
3) கீழ் வாய்ச்சிற்றிலக்கம்
என்னும் மூவகைப் பாகுபாட்டில் கையாளப்பட்டன.
கீழ் வாயிலக்கம் என்பது பின்னம்; இதில் மிக நுண்ணிய சிற்றிலக்கம் 1/320
* கீழ்வாய்ச் சிற்றிலக்கத்தின் மிகச் சிறிய கூறு 1/3,22,56,000
* 1,00,00,000 மாதிரியான பெரிய இலக்கங்களையும் ’0’ வின் துணையின்றி
எழுத்தாகவே சுருக்கமான முறையில் குறிக்கும் வழக்கம் இருந்துள்ளது. (இது
ஒருங்குறியில் இடம் பெறவில்லை; காரணம் தமிழறிஞர் பலருக்கும் இம்முறை
தெரியாது)
* கணக்கதிகாரம் – இது 18ம் நூற்றாண்டில் தோன்றிய கணித நூல்
* கணித திவாகரம், கணித ரத்னம், புவந தீபம், ஹேரம்பம், த்ரிபுவந திலகம்,
ஆஸ்தாந கோலாஹலம் – இவை கணித நூல்கள்; வடமொழித் தலைப்பிருந்தாலும்
இவற்றில் பல தமிழ் நூல்களே.

இக்குறிப்புகள் ‘தமிழ்ச் சுவடிகளில் எண் கணிதம்’ என்னும் நூலிலிருந்து
எடுக்கப்பட்டுள்ளன.

ஆசிரியர் : புலவர்.மா.கண்ணையன்
வழங்கியவர் : திரு.V.சந்திரசேகரன்
மின்னாக்கம் செய்தவர் : திரு. நடராஜன் ஸ்ரீநிவாசன்
எண் : 158

http://www.tamilheritage.org/old/text/ebook/old-tamilleter-lesson.pdf

தேவ்

N. Kannan

unread,
Jan 15, 2010, 9:01:48 PM1/15/10
to mint...@googlegroups.com
மிக்க நன்றி. தேவ்.

மரபு நூலகத்திலுள்ள நூல்களை வாசிப்போர் உங்களைப் போல் சேதிப் பகிர்வு,
review, திறனாய்வு போன்றவற்றில் ஈடுபட வேண்டும். அப்போது, அந்நூல்களின்
பயன் அதிகரிக்கும். உதாரணமாக முத்துகண்ணப்பரின் எளிய தமிழ் இலக்கண நூல்
மின்தமிழில் மின்னச்சாக வந்த போது பலருக்கும் பயன்பட்டு, ஊடாடி புரிந்து
கொள்ள முடிந்தது.

மின்தமிழ் அன்பர்கள் இவ்வாணி காரியத்தில் உடனே இறங்கி புண்ணியம் பெற வேண்டும்.

நுழைவாயில்: http://www.tamilheritage.org/old/text/ebook/ebook.html

க.>

2010/1/16 devoo <rde...@gmail.com>:


> இந்த இழைக்குத் தொடர்புடைய சில செய்திகளை தமிழ் மரபு அறக்கட்டளை
> மின்னூலகம் நமக்குத் தருகிறது –
>

Hari Krishnan

unread,
Jan 16, 2010, 12:26:47 AM1/16/10
to mint...@googlegroups.com


2010/1/16 N. Kannan <navan...@gmail.com>

ஏன் இல்லை? `தாயார்` என்று சொல்லும் மரபில் `அவளை` `அவர்` என்று சொல்லும்
வழக்கமுண்டு. அம்பாள் என்றால் `அம்மா` என்று பொருள். அம்மாவைத் `தாயார்`
என்னும் போது `ஆர்` விகுதி வந்து மரியாதை சேர்ந்துவிடுகிறது ;-)

ஆனால் நெருக்கமானவற்றை ஒற்றைப்படையில் விளிப்பது மரபு. `அவனுக்கு` அதுவே
உவப்பு என்பது சம்பிரதாயம் :-))

க.>


கண்ணன் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை.  இந்த ஆர் விகுதி விஷயத்தைக் கொஞ்சம் பாக்கலாமா?

நோயீர் அல்லீர்; நும் கணவன் தன் உயிர் உண்டீர்;
பேயீரே நீர்! இன்னம் இருக்கப் பெறுவீரே?
மாயீர்! மாயா வன் பழி தந்தீர்! முலை தந்தீர்!
தாயீரே நீர்! இன்னும் எனக்கு என் தருவீரே!

கைகேயியைப் பார்த்து பரதன் சொல்வது.  ‘உங்களுடைய கணவரின் உயிரையே உண்ட நீர், நோய் போன்றவரா என்றால், இல்லை.  நீர் நோய் போன்றவர் இல்லை.  உம்முடைய கணவர் உம் செய்கையாலே இறந்துபட்டதன் பின்னரும் நீர் வாழ்ந்துகொண்டிருக்கிறீரே (நோய் என்றால் உயிர் பிரிந்தவுடனே உடலை விட்டுப் போய்விடுமே!  நீரோ இன்னமும் போகாமல் அப்படியே இருக்கின்றீரே!  ஆகவே உண்மையில் நீர்) பேய்தான்.  பேயீர்.  இன்னமும் சாகாமல் இருக்கின்றீரே!  ஐயோ அம்மா!  எனக்கு என்றென்றும் நீங்காத பழியைத் தேடித் தந்தீரே!  எனக்கு முலையும் தந்தீரே! (அடி பாதகி! உன் முலைப்பாலை நான் குடிக்க நேர்ந்ததே!) அம்மா தாயாரே!  இன்னும் என்னவெல்லாம் எனக்குத் தரப்போகின்றீர் அம்மா?

இது தாயைப் பார்த்து மகன் சொல்வது.  அடுத்த ஆர் விகுதியைப் பார்ப்போம்.

'தோற்பித்தீர்; மதிக்கு மேனி சுடுவித்தீர்; தென்றல் தூற்ற
வேர்ப்பித்தீர்; வயிரத் தோளை மெலிவித்தீர்; வேனில் வேளை
ஆர்ப்பித்தீர்; என்னை இன்னல் அறிவித்தீர்; அமரர் அச்சம்
தீர்ப்பித்தீர்; இன்னம், என் என் செய்வித்துத் தீர்திர் அம்மா!

(பெண்ணே நீர் என்னைத்) தோற்கச் செய்துவிட்டீர்.  (கேவலம், எனக்கு அடிமையான) சந்திரன், என் உடலை தகிக்கும்படி செய்துவிட்டீர்; தென்றல் வீசும்போது கூட எனக்கு வியர்வை தோன்றும்படியாகச் செய்துவிட்டீர்; வன்மை பொருந்திய என் வைரத் தோளை இளைக்கச் செய்துவிட்டீர்; வேனிலைத் தனது தூதுவனாகக் கொண்ட மன்மதன் என்மேல் போர்தொடுத்து ஆர்ப்பரிக்குமாறு செய்துவிட்டீர்; துன்பம் என்றால் எவ்வாறிருக்கும் என்பதையே அறியாதவனாகிய எனக்குத் ‘துன்பம் என்பது இப்படித்தான் இருக்கும்’ என்று அறிமுகம் செய்துவைத்தீர்; (இப்படியெல்லாம் நடக்கின்றபடியால் ஒருவேளை நான் இறந்தாலும் இறந்துவிடுவேன். ஆகையாலே)  தேவர்கள் இதுவரையில் என்னிடம் கொண்டிருந்த அச்சம் போய்விடும்படியாக அதைத் தீர்த்தும் வைத்துவிட்டீர்.  இன்னமும் என்னவெல்லாம் செய்த பின்னர் ஓயப்போகிறீர் அம்மா!

யார், யாரைப் பாத்து சொல்றது தெரியுமா?  ராவணன் சீதையைப் பார்த்துச் சொல்கிறான்.

சரி, அதுதான் போகட்டும்.  ராம நாடகக் கீர்த்தனையிலிருந்து இந்தப் பாட்டைப் பாருங்கள்:

ஆரோ இவர் யாரோ--என்ன 
பேரோ அறியேனே

காருலாவும் சீருலாவும் மிதிலையில்
கன்னி மாடந்தனில் முன்னே நின்றனர் (ஆரோ)

இந்தக் கீர்த்தனையில் உள்ள ர் விகுதியின் அடிப்படையில் ராயர் காபி கிளப்பில் இரா முருகன் தொடங்கி வைத்த விவாதம் பழைய இணைய நண்பர்களுக்கு நினைவிருக்கும்.  இந்தப் பாடலை யாரும் முழுசாகப் பாடுவதில்லை.  அங்க கொஞ்சம் இங்க கொஞ்சம் என்று எலி கரண்டற மாதிரி கரண்டித் துப்பிக் கொண்டிருக்கிறார்கள் அல்லவா?  அதனால், இந்தப் பாடலை சீதை, ராமனைப் பார்த்துப் பாடுவது என்று தீர்மானித்து ஒரு கோஷ்டியும் (இவர் யாரோ, கன்னி மாடம் முன்னே நின்றனர் என்றெல்லாம் ரொம்ப மரியாதையா அவதானே அவனைப் பாத்து சொல்வா, ஆகையாலே) சர்வ நிச்சயமாக இது சீதை, ராமனைப் பார்த்துப் பாடியதுதான் என்று வாதிட்டுக் கொண்டிருந்தது என்று சொல்லி இரா முருகன் அந்த இழையைத் தொடங்கிவைத்தார்--ஒரு இசைப் பருவத்தில் (அடங்க...மீஸிக் ஸீஸன்ஙகோ...)

பிறகு, ஒருத்தரும் பாடாமல் ஸ்கிப் பண்ணிக்கொண்டே போகும் அந்த முக்கியமான சரணத்தை எடுத்துப் போட்டேன்.

பண்ணிப் பதித்தாற்போல் இரு ஸ்தனமும் - கூட
          பாங்கியர்கள் இன்ன முத்துரைத் தனமும்
எண்ணத்தாலும் வண்ணத்தாலும் பங்கயப்
          பெண்ணைப் போல் கண்ணிற் காணும் மங்கையர் (ஆரோ)

சுருக்கிப் பாடறேன் பேர்வழி என்று இப்படி கொறித்துக் கொறித்துக் குதறினால், ரசிகன் என்ன பண்ணுவான் பாவம்!  குழம்பித்தான் போவான்.  ராமன் சீதையைப் பார்த்துப் பாடிய கீர்த்தனைதான் இது.

என்ன சொல்ல வர்ரேன்னா, பெண்களை (மனைவியாகப் போகின்றவளாகவே இருந்தாலும், மனைவியான பிற்பாடும் கூட) அவர் இவர் என்று ஆண்கள் குறிப்பிட்டுக் கொண்டிருந்ததும் உண்டு.  அன்பின் மிகுதியினாலே தாயையும் அவள் இவள் என்று குறிப்பிட்ட சமயங்களும் உண்டு.  அதது அந்தந்த சமயத்துக் தக, உள்ளே பொங்கும் உணர்வுகளுக்குத் தக.  பெண்களுக்கு ஆர் விகுதி பொருந்தாது என்று சொல்ல முடியாது.  

அப்புறம் திருவாட்டி ஸ்வர்ண லக்ஷ்மிக்கு ஒரு சிறிய குறிப்பு.  உன்மேஷ நிமிஷோத்பன்ன விபன்ன புவனாவளி என்ற நாமத்தின் விளக்கத்தை ஸெளந்தர்ய லஹரீ 55ம் ஸ்லோகத்தில் காணலாம்.  ‘நீ கண்ணை இமைத்தால் இந்த புவனங்களெல்லாம் அழிந்துவிடும் என்ற காரணத்தால் அல்லவோ நீ கண்ணை இமையாமல் இருக்கிறாய்!’ என்றும், கண் இமைப்பதனால் ஒரு புவனம் அழிந்து, இன்னொரு புவனம் ஆவதையும் அழகாகச் சொல்லியிருக்கிறார்.  உங்களிடம் ஸெளந்தர்ய லஹரி இருக்கும் என்பதனாலும் இந்த இழைக்குத் தொடர்பில்லாததைப் பேசுகிறேன் என்று ஒருசிலர் ஞைஞை என்று பிடித்துக்கொள்வார்கள் என்பதனாலும் இத்தோட இத்த உட்டேன்.  குறிப்பிட்ட அந்த இடத்தை நீங்கள் பாருங்கள்.  

V, Dhivakar

unread,
Jan 16, 2010, 4:00:20 AM1/16/10
to mint...@googlegroups.com
 எது எப்படி இருந்தாலும் உங்களை வினாடி நேரத்துக்காவது மனத்துன்பத்துக்கு உள்ளாக்கியதற்காக my unconditional apologies.  
 
Hariki..
You have reached the heights here. This is what Ramanuja described as a true vaishnavite. No doubt, You are a true vaishnavite and also a vaishnavi'ite
Dhivakar

 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Dhivakar
http://www.vamsadhara.blogspot.com
http://aduththaveedu.blogspot.com

shylaja

unread,
Jan 16, 2010, 9:05:49 PM1/16/10
to mint...@googlegroups.com


 

////
'தோற்பித்தீர்; மதிக்கு மேனி சுடுவித்தீர்; தென்றல் தூற்ற
வேர்ப்பித்தீர்; வயிரத் தோளை மெலிவித்தீர்; வேனில் வேளை
ஆர்ப்பித்தீர்; என்னை இன்னல் அறிவித்தீர்; அமரர் அச்சம்
தீர்ப்பித்தீர்; இன்னம், என் என் செய்வித்துத் தீர்திர் அம்மா!

(பெண்ணே நீர் என்னைத்) தோற்கச் செய்துவிட்டீர்.  (கேவலம், எனக்கு அடிமையான) சந்திரன், என் உடலை தகிக்கும்படி செய்துவிட்டீர்; தென்றல் வீசும்போது கூட எனக்கு வியர்வை தோன்றும்படியாகச் செய்துவிட்டீர்; வன்மை பொருந்திய என் வைரத் தோளை இளைக்கச் செய்துவிட்டீர்; வேனிலைத் தனது தூதுவனாகக் கொண்ட மன்மதன் என்மேல் போர்தொடுத்து ஆர்ப்பரிக்குமாறு செய்துவிட்டீர்; துன்பம் என்றால் எவ்வாறிருக்கும் என்பதையே அறியாதவனாகிய எனக்குத் ‘துன்பம் என்பது இப்படித்தான் இருக்கும்’ என்று அறிமுகம் செய்துவைத்தீர்; (இப்படியெல்லாம் நடக்கின்றபடியால் ஒருவேளை நான் இறந்தாலும் இறந்துவிடுவேன். ஆகையாலே)  தேவர்கள் இதுவரையில் என்னிடம் கொண்டிருந்த அச்சம் போய்விடும்படியாக அதைத் தீர்த்தும் வைத்துவிட்டீர்.  இன்னமும் என்னவெல்லாம் செய்த பின்னர் ஓயப்போகிறீர் அம்மா!><<>><<><<<><><<<
 
 
ஹரிஅண்ணா(ர்) இங்க அழகாகச்சொல்லி இருக்கார்(விரல் நுனில ராமாயணம் இருக்குமோ?) ஒன்ஸ் மோர்!

யார், யாரைப் பாத்து சொல்றது தெரியுமா?  ராவணன் சீதையைப் பார்த்துச் சொல்கிறான்.

சரி, அதுதான் போகட்டும்.  ராம நாடகக் கீர்த்தனையிலிருந்து இந்தப் பாட்டைப் பாருங்கள்:

ஆரோ இவர் யாரோ--என்ன 
பேரோ அறியேனே<<<>
 
யாரோ இவர் யாரோன்னுதானே எங்க பாட்டு டிச்சர்  ஸ்ரீரங்கம்ல சொல்லிக்கொடுத்தாங்க?!

காருலாவும் சீருலாவும் மிதிலையில்
கன்னி மாடந்தனில் முன்னே நின்றனர் (ஆரோ)

இந்தக் கீர்த்தனையில் உள்ள ர் விகுதியின் அடிப்படையில் ராயர் காபி கிளப்பில் இரா முருகன் தொடங்கி வைத்த விவாதம் பழைய இணைய நண்பர்களுக்கு நினைவிருக்கும்.  இந்தப் பாடலை யாரும் முழுசாகப் பாடுவதில்லை.  அங்க கொஞ்சம் இங்க கொஞ்சம் என்று எலி கரண்டற மாதிரி கரண்டித் துப்பிக் கொண்டிருக்கிறார்கள் அல்லவா?  அதனால், இந்தப் பாடலை சீதை, ராமனைப் பார்த்துப் பாடுவது என்று தீர்மானித்து ஒரு கோஷ்டியும்><><>>
 
 
இன்னமும் பலர் அப்படித்தான்(நான் கொஞ்சம் அப்பப்போ  அபூர்வமா யோசிப்பேன் ’சந்திரபிம்ப முக மலராலே தானே பாக்குறார் ஒருக்காலே அந்த நாளில் சொந்தம் போல உருகினார் இந்த நாளில் வந்து சேவை தருகிறார் ’ என்னும் முதல் சரணத்தைப்பாடும்போது  டவுட் வந்தது):)
 
(இவர் யாரோ, கன்னி மாடம் முன்னே நின்றனர் என்றெல்லாம் ரொம்ப மரியாதையா அவதானே அவனைப் பாத்து சொல்வா, ஆகையாலே) சர்வ நிச்சயமாக இது சீதை, ராமனைப் பார்த்துப் பாடியதுதான் என்று வாதிட்டுக் கொண்டிருந்தது என்று சொல்லி இரா முருகன் அந்த இழையைத் தொடங்கிவைத்தார்--ஒரு இசைப் பருவத்தில் (அடங்க...மீஸிக் ஸீஸன்ஙகோ...)

பிறகு, ஒருத்தரும் பாடாமல் ஸ்கிப் பண்ணிக்கொண்டே போகும் அந்த முக்கியமான சரணத்தை எடுத்துப் போட்டேன்.

பண்ணிப் பதித்தாற்போல் இரு ஸ்தனமும் - கூட
          பாங்கியர்கள் இன்ன முத்துரைத் தனமும்
எண்ணத்தாலும் வண்ணத்தாலும் பங்கயப்
          பெண்ணைப் போல் கண்ணிற் காணும் மங்கையர் (ஆரோ)<<<>>
 
இதெல்லாம்  சொல்லியே தரல  கேள்விப்படவும் இல்ல  !  பாட்டு டீச்சர் பெண் என்பதால்  இதை ஸ்கிப் பண்ணிட்டாங்கன்னும் நினைக்கமுடியல  ஏன்னா அப்றோமா  கத்துண்ட  இன்னொரு பாட்டு வாத்தியாரும் இந்தப்பாட்டைப்பாடிக்காண்பிச்சப்போ இரண்டாவதாய் சரணம் இருக்குன்னே சொல்லவில்லையே! சொல்லி இருப்பார் பாவம் அவரை நானும் என்தம்பியும்  கிண்டல் அடிச்சே துரத்திட்டோம்:) போகிறபோது அவர் என் அப்பாவிடம்”உங்க பொண்ணுக்கு  ரொம்பகுறும்பு. நான் வெத்திலைபோட்டுண்டு பாட்டுபாடறதை அப்டியே மிமிக்ரி பண்றா அதுவும் என்முன்னாடியே! குருபக்தியே கொஞ்சம்கூடஇல்ல “ என்றுகோவிச்சிட்டுபோய்ட்டார்!  என்கூட அதற்காக அப்பாஒருவாரம் பேசவே இல்லை! குருபக்தி இருந்திருந்தால் இன்றைக்கு நானும்இசைப்பருவத்தில்(அதாங்க ஹரிண்ணா, நீங்க சொன்ன மூசிக் சீசன்:)  எங்காவது மேடைல  சாமஜவரகமனாவை பாடிண்டு இருந்திருப்பேன்:)
 
(தப்பிச்சோம்னு முணுமுணுப்பது யாரோ அவர் யாரோ?:):)

சுருக்கிப் பாடறேன் பேர்வழி என்று இப்படி கொறித்துக் கொறித்துக் குதறினால், ரசிகன் என்ன பண்ணுவான் பாவம்!  குழம்பித்தான் போவான்.  ராமன் சீதையைப் பார்த்துப் பாடிய கீர்த்தனைதான் இது.

என்ன சொல்ல வர்ரேன்னா, பெண்களை (மனைவியாகப் போகின்றவளாகவே இருந்தாலும், மனைவியான பிற்பாடும் கூட) அவர் இவர் என்று ஆண்கள் குறிப்பிட்டுக் கொண்டிருந்ததும் உண்டு.  அன்பின் மிகுதியினாலே தாயையும் அவள் இவள் என்று குறிப்பிட்ட சமயங்களும் உண்டு.  அதது அந்தந்த சமயத்துக் தக, உள்ளே பொங்கும் உணர்வுகளுக்குத் தக.  பெண்களுக்கு ஆர் விகுதி பொருந்தாது என்று சொல்ல முடியாது. >><>>
 
 
சமீபத்தில் தெரிந்த ஒருகுடும்ப நண்பரைப்பார்க்கப்போனோம் அந்த குடும்பத்தலவர் மனைவியை  வாங்கபோங்ன்னுதான் அழைச்சிட்டு இருந்தார் அந்த நாள் காதல்திருமணாமாம் மனைவி அவரைவிட 5வயதுமூத்தவங்களாம்!:)
 

அப்புறம் திருவாட்டி ஸ்வர்ண லக்ஷ்மிக்கு ஒரு சிறிய குறிப்பு.  உன்மேஷ நிமிஷோத்பன்ன விபன்ன புவனாவளி என்ற நாமத்தின் விளக்கத்தை ஸெளந்தர்ய லஹரீ 55ம் ஸ்லோகத்தில் காணலாம்.  ‘நீ கண்ணை இமைத்தால் இந்த புவனங்களெல்லாம் அழிந்துவிடும் என்ற காரணத்தால் அல்லவோ நீ கண்ணை இமையாமல் இருக்கிறாய்!’ என்றும், கண் இமைப்பதனால் ஒரு புவனம் அழிந்து, இன்னொரு புவனம் ஆவதையும் அழகாகச் சொல்லியிருக்கிறார்.  உங்களிடம் ஸெளந்தர்ய லஹரி இருக்கும் என்பதனாலும் இந்த இழைக்குத் தொடர்பில்லாததைப் பேசுகிறேன் என்று ஒருசிலர் ஞைஞை என்று பிடித்துக்கொள்வார்கள் என்பதனாலும் இத்தோட இத்த உட்டேன்.  குறிப்பிட்ட அந்த இடத்தை நீங்கள் பாருங்கள்.  

<<>>பார்த்துட்டேன், நீங்க சொன்னபடியே அர்த்தம் இருக்கு! போனவார கல்கில ’லஜ்ஜா ’ க்கும் அருமையான  விளக்கமுடன் குறிப்பிட்டதையும் படித்தேன் நம்மபேரோட சம்பந்தமா இருக்கேன்னு!--

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
ஷைலஜா

///

எங்குப்போய் உய்கேன்?உன்
இணையடியே அடையலல்லால்
எங்கும்போய்க் கரைகாணாது
எறிகடல் வாய் மீண்டேயும்
வங்கத்தின் கூம்பேறும் மாப்பறவை போன்றேனே!////

N. Kannan

unread,
Jan 16, 2010, 9:14:51 PM1/16/10
to mint...@googlegroups.com
2010/1/17 shylaja <shyl...@gmail.com>:

> சமீபத்தில் தெரிந்த ஒருகுடும்ப நண்பரைப்பார்க்கப்போனோம் அந்த குடும்பத்தலவர்
> மனைவியை  வாங்கபோங்ன்னுதான் அழைச்சிட்டு இருந்தார் அந்த நாள் காதல்திருமணாமாம்
> மனைவி அவரைவிட 5வயதுமூத்தவங்களாம்!:)
>>

வடநாட்டில் உறவுகளிடையே எப்போதுமே மரியாதை விளிச்சொல் உண்டு.
தாயை மாதாஜி என்பது, மனைவி கணவன் கேட்டால், ‘ஜி’ என்பது, கணவனும் ‘ஜி’
என்பது. ஏன் குழந்தைகளிடம் கூட இதே மரியாதைதான். இதைக் கொஞ்சம், கொஞ்சம்
ஸ்ரீலங்கா தமிழர்களிடம் காண முடிகிறது. வயதாய் இருந்தால்தான் ‘ஜி’ என்பது
எப்போது தமிழ் மண்ணில் வந்தது?

க.>

Tirumurti Vasudevan

unread,
Jan 16, 2010, 9:22:52 PM1/16/10
to mint...@googlegroups.com
சிவாஜி வந்தபோது வந்திருக்கும்!
:-))
ச்சும்மா! மரியாதை இருந்தால் தானே வரும். குழந்தை பிறந்த பின் மனைவியையே அம்மாடி ன்னு கூப்பிடறதில்லையா?
திவாஜி

2010/1/17 N. Kannan <navan...@gmail.com>

வயதாய் இருந்தால்தான் ‘ஜி’ என்பது
எப்போது தமிழ் மண்ணில் வந்தது?

Hari Krishnan

unread,
Jan 16, 2010, 9:37:36 PM1/16/10
to mint...@googlegroups.com


2010/1/17 shylaja <shyl...@gmail.com>

ஹரிஅண்ணா(ர்) இங்க அழகாகச்சொல்லி இருக்கார்(விரல் நுனில ராமாயணம் இருக்குமோ?) ஒன்ஸ் மோர்!


லஜ்ஜாம்பாள்,

ராமாயணம் எப்பவும் மனசுலேயே இருக்கு.  பல சமயங்களில் பாடலின் நினைவு இருக்கும்.  பாடல் நினைவிருக்காது.  அர்த்தம் நினைவிருப்பதால் கான்டெக்ஸ்ட் வச்சு இன்ன இடத்தில் இருக்கிறது என்று புத்தகத்தை எடுத்துப் பார்த்து, இல்லாட்டா டிஜிடல் வர்ஷனைப் பாத்து போடுவேன்.  ஆனாலும் அங்க இருக்கு அப்படிங்கறது இஙங்ங்க (தொப்பிக்கு அடில மொட்டையா இருக்கற மண்டைல) இருக்கு.  பல சமயங்களில் மனப்பாடமாகவே பாடலைச் சொல்வதும் உண்டு.  ரெண்டும்.

ஆரோ இவர் யாரோ--என்ன 
பேரோ அறியேனே<<<>
 
யாரோ இவர் யாரோன்னுதானே எங்க பாட்டு டிச்சர்  ஸ்ரீரங்கம்ல சொல்லிக்கொடுத்தாங்க?!


அம்மாடீ, சரஸ்வதி மஹால் பதிப்பித்திருக்கும் ராமநாடகக் கீர்த்தனைகளில் ஆரோ இவர் யாரோ அப்படின்னுதான் இருக்கு.  ‘இதென்னடா இது....யாரோ இவர் யாரோ’ இல்லியோ என்று நினைத்துக் கொண்டேன்.  

சபாபதிக்கு வேறுதெய்வம் சமானமாகுமா தில்லை
சபாபதிக்கு வேறு தெய்வம்... பாட்டைக் கேட்டிருக்கீங்களா?  ஒண்ணுபோல எல்லாரும்

ஒருதரம் சிவசிதம்பரம் என்று சொன்னால் போதுமா
பரகதி கிடைக்க வேறு புண்யம் பண்ணவேணுமா 

அப்படின்னு பாடறாங்க. அர்த்தம் உதைக்குதே!  அதை ஒர்த்தரும் கண்டுக்கறதில்லை.  போதுமா, வேணுமா அப்படின்னு ரைம் வருதாம்.... எனக்குக் கேவாம்தான் வருது.  ஒருதரம் சிவசிதம்பரம் என்று சொன்னால் போதுமே அப்படிங்கறதுதான் சரியான பாடம்.  என்ன பண்றது!  சுதா ரகுநாதன் எவ்ளோ பாடல்களை இப்படித் தப்பா பாடறாங்க தெரியுமா?  பாம்பே சிஸ்டர்ஸும் விதிவிலக்கில்லை.

அப்படித்தான் ஆரோ இவர் யாரோ மாறிப் போயிருக்குப் போலிருக்கு.  போகட்டும்.  அர்த்தமாவது கெடாமல் அப்படியே இருக்கே...அந்த மட்டுக்கும் ராமர் பொழச்சார்..

Hari Krishnan

unread,
Jan 16, 2010, 9:39:28 PM1/16/10
to mint...@googlegroups.com


2010/1/17 Tirumurti Vasudevan <agni...@gmail.com>

சிவாஜி வந்தபோது வந்திருக்கும்!
:-))
ச்சும்மா! மரியாதை இருந்தால் தானே வரும். குழந்தை பிறந்த பின் மனைவியையே அம்மாடி ன்னு கூப்பிடறதில்லையா?
திவாஜி


குழந்தை பிறந்த பிறகுதான் மனைவி அம்-மாடிக்குப் போய்விடுறாங்களே...அப்புறம் இம்மாடி அம்மாடி என்னாமல் வேற என்ன செய்யுமாம்..... எல்லாம் சும்மாடீ! 

Tirumurti Vasudevan

unread,
Jan 16, 2010, 9:43:28 PM1/16/10
to mint...@googlegroups.com
ஏன் போதும்ம்மா ன்னு போட்டு இருக்கலாமே? ராகத்துக்கு சரி வராதோ?
 இப்படி ஆதென்டிக்கா சொல்ல ஆள் (ஹரி அண்ணா ) இருப்பது நம் பாக்கியம்.

2010/1/17 Hari Krishnan <hari.har...@gmail.com>

ஒருதரம் சிவசிதம்பரம் என்று சொன்னால் போதுமா
பரகதி கிடைக்க வேறு புண்யம் பண்ணவேணுமா 

அப்படின்னு பாடறாங்க. அர்த்தம் உதைக்குதே!  அதை ஒர்த்தரும் கண்டுக்கறதில்லை.  போதுமா, வேணுமா அப்படின்னு ரைம் வருதாம்...

shylaja

unread,
Jan 16, 2010, 10:26:42 PM1/16/10
to mint...@googlegroups.com


2010/1/17 Hari Krishnan <hari.har...@gmail.com>



2010/1/17 shylaja <shyl...@gmail.com>
ஹரிஅண்ணா(ர்) இங்க அழகாகச்சொல்லி இருக்கார்(விரல் நுனில ராமாயணம் இருக்குமோ?) ஒன்ஸ் மோர்!


லஜ்ஜாம்பாள்,

ராமாயணம் எப்பவும் மனசுலேயே இருக்கு.  பல சமயங்களில் பாடலின் நினைவு இருக்கும்.  பாடல் நினைவிருக்காது.  அர்த்தம் நினைவிருப்பதால் கான்டெக்ஸ்ட் வச்சு இன்ன இடத்தில் இருக்கிறது என்று புத்தகத்தை எடுத்துப் பார்த்து, இல்லாட்டா டிஜிடல் வர்ஷனைப் பாத்து போடுவேன்.  ஆனாலும் அங்க இருக்கு அப்படிங்கறது இஙங்ங்க (தொப்பிக்கு அடில மொட்டையா இருக்கற மண்டைல) இருக்கு.  பல சமயங்களில் மனப்பாடமாகவே பாடலைச் சொல்வதும் உண்டு.  ரெண்டும்.
<<<>>>>>   
 
சரஸ்வதி கடாஷம் தான்!

///அம்மாடீ, சரஸ்வதி மஹால் பதிப்பித்திருக்கும் ராமநாடகக் கீர்த்தனைகளில் ஆரோ இவர் யாரோ அப்படின்னுதான் இருக்கு.  ‘இதென்னடா இது....யாரோ இவர் யாரோ’ இல்லியோ என்று நினைத்துக் கொண்டேன்.  

சபாபதிக்கு வேறுதெய்வம் சமானமாகுமா தில்லை
சபாபதிக்கு வேறு தெய்வம்... பாட்டைக் கேட்டிருக்கீங்களா?  ஒண்ணுபோல எல்லாரும்

ஒருதரம் சிவசிதம்பரம் என்று சொன்னால் போதுமா
பரகதி கிடைக்க வேறு புண்யம் பண்ணவேணுமா 

அப்படின்னு பாடறாங்க. அர்த்தம் உதைக்குதே!  அதை ஒர்த்தரும் கண்டுக்கறதில்லை.  போதுமா, வேணுமா அப்படின்னு ரைம் வருதாம்.... எனக்குக் கேவாம்தான் வருது.  ஒருதரம் சிவசிதம்பரம் என்று சொன்னால் போதுமே அப்படிங்கறதுதான் சரியான பாடம்.  என்ன பண்றது!  சுதா ரகுநாதன் எவ்ளோ பாடல்களை இப்படித் தப்பா பாடறாங்க தெரியுமா?  பாம்பே சிஸ்டர்ஸும் விதிவிலக்கில்லை.<<<<>>>>>>>>>>
 
இதெல்லாம்  உங்களமாதிரி இப்படி தைரியமா  மேடைலயே யாராவது சொல்லிட்டா   தப்பு பண்ணமாட்டாங்க.
 
நேத்து சங்கரா டிவில ஒருத்தர் எப்படிப்பாடினரோ பாட்டை பாடும்போது  குறு(ரு?)மணி சங்கரரும் அருமைத்தாயுமானாரும் என்பதற்கு  ’அருமைத் தயும் ஆனவரும்’ என்று பாடினார்!  கனிதமிழ்ச்சொல்லினால் இனிதுனை அனுதினமும் என்று சரியாகப்பாடிமுடித்தார்  கனியாக இல்லாமல்  அங்கங்கே கடியாக இருந்தது நிஜம்:)

அப்படித்தான் ஆரோ இவர் யாரோ மாறிப் போயிருக்குப் போலிருக்கு.  போகட்டும்.  அர்த்தமாவது கெடாமல் அப்படியே இருக்கே...அந்த மட்டுக்கும் ராமர் பொழச்சார்.. >>>>  :)

--
அன்புடன்,
ஹரிகி.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

karthi

unread,
Jan 17, 2010, 5:07:20 AM1/17/10
to mint...@googlegroups.com
பலே பலே ஹரி!
ஆம், இரா.மு.சம்பந்தப்பட்ட விவாதமும்
உங்கள் விளக்கமும் நினைவில் உண்டு.
 
ரெ.கா.
----- Original Message -----
Sent: Saturday, January 16, 2010 1:26 PM
Subject: Re: [MinTamil] தமிழ் அலகுகள் (units)



karthi

unread,
Jan 17, 2010, 6:09:23 AM1/17/10
to mint...@googlegroups.com
இந்த முறை கவனித்துக் கேட்டேன். "சொன்னால் போதுமே" என்றே
அனைவரும் பாடினார்கள்.
 
ரெ.கா.
----- Original Message -----
Sent: Sunday, January 17, 2010 10:37 AM
Subject: Re: [MinTamil] தமிழ் அலகுகள் (units)



Reply all
Reply to author
Forward
0 new messages