"மக்கள் தொலைக்காட்சியில்" அண்மையில் மருத்துவர் தெய்வநாயகம் தந்த தகவல்:
பசுவின் பாலைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார். பால் என்பது 'வெள்ளை
நஞ்சு' என்னும் தகவலை எப்போழுதும் சொல்லி வருகிறார். தயிரும்
அப்படித்தானாம். மோர் மட்டும் பருகலாம் எனச் சொல்லி வருகிறார். இதில்
உண்மை உள்ளது.
ஆனால் "தமிழர் வாழ்வில் பால் எப்போதும் இருந்து வந்திருக்கிறதே" என்று
கேட்ட பொழுது, "அப்படி இல்லை, பழந்தமிழர் வாழ்வில் பசும்பால் அருந்தும்
பழக்கமில்லை; மோர் மட்டுமே உண்டு" என்றார். "இலக்கியத்தில் பசும் பால்
அருந்தும் செய்தி எங்கும் சொல்லப்படவில்லை" என்றும் சொன்னார்.
எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. பசும் பால் தமிழர் உணவில் ஓரங்கம் என்றே
என்றும் எண்ணி வந்திருக்கிறேன்.
ஆனால் பசும் பால் நல்லுணவு என்பது ஒரு தமிழர் கலாசார myth தானோ?
ரெ.கா.
பசுக்கள் முக்கிய பங்கு வைத்த பண்டைய தமிழ் (இந்திய கூட)
பொருளாதாரத்தில், பசுவின் பால் முக்கிய சத்துணர்வாக கருதப்பட்டது. அது
அப்பொழுதும் , இப்பொழுதும் உணவில் புரத் சத்திற்க்கு ஊற்று. அதில்
ஆச்சர்யம் இல்லை. அரபுகள் ஒட்ட்க பாலை சத்துணர்வாக கருதுகின்றனர்.
ஆயர்கள் குலம் பசுவை பேணுவதற்கு இருந்தது. கண்ணனே ஆயர்குலத்தோன். பல
இந்திய சக்ரவர்த்திகளும் ஆயர்குலத்தில் இருந்து வந்தார்களாம்
மேலும் பசுவின் புனிதத்துவம், காமதேனு போன்ற கருத்துக்கள் ஆதிக்கம் பெற,
பசுப்பாலின் ‘உயர்ந்த மதிப்பீடும்’ அதிகமாகியது. பசுப்பால் ஒரு ‘சாத்வீக’
உணவாகியது.
கலாசார myth என்பது மிகை. அதற்கு பொருளாதார அடிப்படை இருந்தது. கலாசார
அடிப்படை இருந்தது.
If it is a myth , it is derived from it's association with cow.
விஜயராகவன்
சரி, ஏற்றுக் கொள்ளுகிறேன்.
என் அடிப்படை ஐயம் பால் பழந்தமிழர் வாழ்வில் உணவாக
இல்லை என அவர் சொல்வதும், பழந்தமிழ் இலக்கியத்தில்
தமிழர் மாட்டுப் பால் அருந்தியதற்குக் குறிப்புகள் இல்லையெனவும்
அவர் சொல்வதும்தான். பழந்தமிழ் இலக்கியங்களில் மோர் விற்பவள்
இருக்கிறாளே தவிர பால் விற்பவள் இல்லை என்றும் அவர் கூறுகிறார்.
அப்படியானால் இன்றைய தமிழர் வாழ்க்கையின் ஆவின் பால் இப்படி
ஓர் இடத்தைப் பெற்றது எப்படி? நம் துறவிகள் ஆனந்தமாகப்
பால் அருந்துகிறார்கள். முதலிரவில் பால் பரிமாறிக் கொள்ளப்படுகிறது.
தயிர் வயிற்றுக்கு நல்லது என்றே சொல்லப் படுகிறது. தயிரை மருத்துவர்
வெள்ளை நஞ்சில் சேர்க்கிறார்.
கண்ணனின் கதைகளில் அவன் தயிர் திருடித் தின்றதாகத்தான் இருக்கிறது.
பால் திருடிக் குடித்தானா? தெரியவில்லை.
மேலும் ஒன்று:
குழந்தைகளுக்கு மாட்டுப்பால் தருவதையும் மருத்துவர் தெய்வநாயகம்
தீவிரமாக எதிர்க்கிறார். தாய்ப்பால் மறந்தவுடன் குழந்தைக்கு வேறு எந்தப்
பாலும் வேண்டாம் என்கிறார். சாத்தியமா?
மேற்கத்தியரின் உடல் அமைப்பில் மாட்டுப்பாலை ஏற்றுக் கொள்ள இயலவைக்கும்
lactase (???) என்ற பொருள் இருப்பதாகவும் ஆசியர்களின் உடலமைப்பில் அது
மிகக் குறந்த அளவே இருப்பதாகவும் கூறுகிறார்.,
அவருடைய கருத்துக்கள் மேல் எனக்கு மிகுந்த மரியாதை இருந்தாலும், சில
வேளைகளில் சித்த மருந்துகளின் உயர்வைக் கூற அவர் மிகைப்படுத்துகிறார்
என்றும் மேற்கத்திய அறிவியல் கண்டுபிடிப்புக்களைத் தனக்குச் சாதகமாக
வளைக்கிறார் என்றும் இப்போது தோன்றுகிறது.
சில மாதங்களுக்கு முன்னர் வரை இவரை மட்டுமே தன் ஆஸ்தான
மருத்துவராக வைத்துக் கொண்டிருந்த மக்கள் தொலைக்காட்சி இப்போது
பல மேற்கத்திய பாணி மருத்துவர்களையும் நிகழ்ச்சியில் சேர்த்துக் கொள்ளுகிறது.
வாரத்தில் நான்கு நாட்கள் இந்த மேற்கத்திய மருத்துவர்களும், ஒரு நாள்
தெய்வநாயகமும் பேசுகிறார்கள்.
மேற்கத்திய பாணி மருத்துவர்கள் தங்கள் துறை பற்றி மட்டுமே பேசுகிறார்கள்.
சில கேள்விகளுக்கு இது பற்றித் தங்களுக்குத் தெரியாது என ஒப்புகிறார்கள்.
"சித்த மருத்துவம்" செய்து கொள்ளலாமா என்க் கேட்டால் "நீங்கள் அதனையும்
உங்கள் விருப்பத்திற்கேற்பச் செய்து பார்க்கலாம்" என்றே கூறுகிறார்கள்.
ஆனால் தெய்வநாயகத்தைப் பொறுத்த வரை மேற்கத்திய மருத்துவ முறைகளைச்
சாடுவதைத் தனது அன்றாடப் பணியாக வைத்துக் கொண்டிருக்கிறார்.
அவருடைய இயற்கை மருத்துவம் பற்றிய கொள்கைகளும் "முற்றான மருத்துவம்"
(holistc) என்ற கொள்கையும் எனக்கு மிகவும் பிடித்துள்ளன. மேற்கத்திய
மருத்துவத்தை
முற்றாக மறுக்கும் போக்கு ஒன்றுதான் பிடிக்கவில்லை.
ரெ.கா.
விஜயராகவன்,
சரி, ஏற்றுக் கொள்ளுகிறேன்.
என் அடிப்படை ஐயம் பால் பழந்தமிழர் வாழ்வில் உணவாக
இல்லை என அவர் சொல்வதும், பழந்தமிழ் இலக்கியத்தில்
தமிழர் மாட்டுப் பால் அருந்தியதற்குக் குறிப்புகள் இல்லையெனவும்
அவர் சொல்வதும்தான். பழந்தமிழ் இலக்கியங்களில் மோர் விற்பவள்
இருக்கிறாளே தவிர பால் விற்பவள் இல்லை என்றும் அவர் கூறுகிறார்.
------------
ஆனால், பழந்தமிழ் இலக்கியத்தில் பால், தயிர் நிறைய உண்டு.
பாலொடு தேன் கலந்தற்றே பணிமொழி எயிறு ஊறிய நீர் - வள்ளுவர்
நா. கணேசன்
பானையில் பாலைப் பருகிப் பற்றாதா ரெல்லாம் சிரிப்ப...
- பெரியாழ்வார்
சில ஹோமியோபதி மருத்துவர்களும் பாலை முற்றாகத் தவிர்க்கும்படி கூறி
வருகின்றனர்.
தேவ்
இலக்கியத்தில் சொல்லப்படாததெல்லாம் இல்லை என்று ஆகிவிடுமா ?
V
ரெ.கா.
----- Original Message -----
From: "வினோத் ராஜன்" <vinodh...@gmail.com>
To: "மின்தமிழ்" <mint...@googlegroups.com>
Sent: Friday, November 06, 2009 11:51 AM
Subject: [MinTamil] Re: பாலும் பழந்தமிழரும் - கலாசாரப் பிழை?
On Nov 5, 10:26 pm, "karthi" <karthige...@gmail.com> wrote:
> ஆகாது! சொல்லப்படாதது வியப்பு என்றுதான் சொல்ல வந்தேன்.
> ஆனால் இங்கு நா.க., தேவ் ஆகியோர் பால் அருந்துவது பழந்தமிழ்
> இலக்கியத்தில் இருக்கிறது என்று எடுத்துச் சொல்லத்
> தொடங்கியுள்ளனர். இன்னும் பல ஆதாரங்கள் இருக்கும்
> என்பதில் ஐயமில்லை. ஆகவே மருத்துவரின் கூற்று (நான் முதலில்
> ஐயமுற்றது போல்) மிகை என்றே தோன்றுகிறது.
>
> ரெ.கா.
>
மணிமொழியாரின் வாக்குப் போல்.
“பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து”
சொல்லும் உங்கள் வார்த்தைகள் இனிமை.
தீம் பால் - சங்க இலக்கியத்தில் நிறைய உண்டு.
நா. கணேசன்
ரெ.கா.
----- Original Message -----
From: "N. Ganesan" <naa.g...@gmail.com>
To: "மின்தமிழ்" <mint...@googlegroups.com>
Sent: Friday, November 06, 2009 12:36 PM
Subject: [MinTamil] Re: பாலும் பழந்தமிழரும் - கலாசாரப் பிழை?
>
>
இதை எழுதியவுடன் நினைவுக்கு வந்தது:
"இப்போதைக்கு அவன் இங்கு உதவான்" எனக்
கூறியவர் யார்?
ரெ.கா.
> > நா. கணேசன்- Hide quoted text -
>
> - Show quoted text -
பால், தயிர் ஏன் நஞ்சு ?? அதில் அப்படி என்ன உள்ளது ?? மோர் ஏன் நஞ்சு
இல்லை ??
அவரது விளக்கம் என்ன ??
ஆகாது! சொல்லப்படாதது வியப்பு என்றுதான் சொல்ல வந்தேன்.
சரி, அது தாய்ப் பால்.. இதுகறந்தபால் கன்னலோடு நெய் கலந்தாற்போலசிறந்தடியாற்சிந்தனையில் தேனூறி நின்றபிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்
Though absence of evidence is not evidence of absence, Its a fact that Milk was not there with the tamils from the beginning.It came only with the interaction with the aryans and the ensuing mixture of cultures.If it played an important part it would have been mentioned as one of the properties of various thinais ( mullai, kurinji, neiythal ...etc )It might have been mentioned even in sangam literature but it does not seem to be a "CULTURAL ASPECT" of tamils like it is today. After the sangam age, with tamils losing their distinctive identity with influx of many other cultures, milk gained its prominence.What the doctor is saying is true.
புத்தர் போதி மரத்தடியின் கீழ் உட்காருவதற்கு முன் பால் அமுது தான்
உண்டாராம். :-)
கவி மணி தேசிய விநயாகம் பிள்ளையோட ஆசிய ஜோதி'ல ஏதோ ஒரு பாட்டு இதப்பத்தி
இருக்கும். எட்டாவதுலயோ, ஏழாவதுலயோ படிச்சது மறந்திடுச்சு :-(
V
On Nov 6, 2:19 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> 2009/11/6 Megarajan Sivaprakasam megara...@gmail.com
----- Original Message -----From: N. KannanSent: Friday, November 06, 2009 5:19 PMSubject: [MinTamil] Re: பாலும் பழந்தமிழரும் - கலாசாரப் பிழை?
----- Original Message -----From: N. KannanSent: Friday, November 06, 2009 6:28 PMSubject: [MinTamil] Re: பாலும் பழந்தமிழரும் - கலாசாரப் பிழை?
V
On Nov 6, 3:28 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> ரெ.கா:
>
> இலக்கியத்தரவை நான் முடக்கவில்லை.
>
> ஐந்திணையில் பால் (பசு) இல்லை என்று எப்படிச் சொல்லலாம். ஆயர்குலத்தின்
> முக்கியத்தொழிலே மாடு மேய்த்தல்தானே. மேலும் `ஆநிரை` கவர்தல் பற்றி சங்கம்
> முழுவதும் சேதிகள் உள்ளனவே. கவர்ந்த மாட்டை என்ன செய்தனர்? வெறும் இறைச்சி
> மட்டுதானா?
>
> க.>
>
> 2009/11/6 karthi <karthige...@gmail.com>
மாடு உழவுக்குப் பயன் பட்டிருக்கும். அதன் பாலிலிருந்து தயிரும்மோரும் செய்திருப்பார்கள். சாணம் பலவகைகளில் பயன் பட்டிருக்கும்.இறைச்சியும் முக்கியமே. இப்படித்தான் என் ஊகம்.
எப்படிங்க, இப்படியெல்லாம் யொசிக்கிறீங்க :-))))))
> பலருக்கு பால் அலர்ஜி உண்டு. அவர்களால் வெண்ணை பால் அருந்த முடியாது. சீஸ்
> சாப்பிட இன்றும் பல ஜப்பானியர் தடுமாறுவர். தமிழருக்கு (யார் தமிழர் என்று
> கேட்டுவிடாதீர்க்ள் ;-) இப்படியொரு பிரச்சனை இருப்பதாகத்தெரியவில்லை.
Lactose Intolerance நம் மக்களுக்கு இருப்பதாக தெரியவில்லை. நான்
பங்கேற்கும் மேற்கத்திய Forumகளில் இதை ஏதோ ஒரு முக்கிய பிரச்சினையாக
அப்பப்ப பேசுவார்கள். காமெடியா இருக்கும், பால்குடி விஷயத்தை இவ்வளவு
சீரியசாக பேசுகிறார்களே என்று :-)
வீகன் கும்பல் (Vegan) இதையே முக்கிய பிரச்சினையாக வைத்துக்கொண்டு
அலையும். அப்போது தானே சோயா பாலையும், டோஃபூயும் பிரபலப்படுத்தலாம் !
V
On Nov 6, 4:19 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> 2009/11/6 karthi <karthige...@gmail.com>
>
> > மாடு உழவுக்குப் பயன் பட்டிருக்கும். அதன் பாலிலிருந்து தயிரும்
> > மோரும் செய்திருப்பார்கள். சாணம் பலவகைகளில் பயன் பட்டிருக்கும்.
> > இறைச்சியும் முக்கியமே. இப்படித்தான் என் ஊகம்.
>
> ரெ.கா:
>
> Human learning is mostly by imitating.
> தாய்பால் அருந்துவதைக் கண்ணுறும் மனிதன் மிக இயற்கையாக பசும்பாலை
> அருந்தியிருப்பான்.
> சரி, ஒரு வைத்தியர் சொல்லறார். நீங்களும் சொல்லறீங்க, தேடுவோம்.
> ஒரு உயிர்வேதியல் துப்பு இருக்கிறது. பால்குடி குடிகளின் வயிற்றில் லாக்டேஸ்
> எனும் நொதி (enzyme) இருக்கும்.
----- Original Message -----From: N. KannanSent: Friday, November 06, 2009 7:19 PMSubject: [MinTamil] Re: பாலும் பழந்தமிழரும் - கலாசாரப் பிழை?
On Nov 5, 11:00 pm, karthi <karthige...@gmail.com> wrote:
> Sidetracking: மன்னியுங்கள்:
>
> இதை எழுதியவுடன் நினைவுக்கு வந்தது:
>
> "இப்போதைக்கு அவன் இங்கு உதவான்" எனக்
> கூறியவர் யார்?
>
> ரெ.கா.
>
பெரியபுராணத்தில் சேக்கிழார் சொல்வது.
http://thirumurai.blogspot.com/2004/09/blog-post_29.html
நின்றவர் முகத்தை உற்று நோக்கினார் நாவுக்கரசர். யாவும் சொல்லாமலே
விளங்கியது அவருக்கு. அமுது கொள்ள
ஆசனத்தில் அமர்ந்தவர் எதிரில் நின்ற இளைய
திருநாவுக்கரசை அழைத்து நீறு பூசினார். 'எங்கே இவனுக்கு மூத்தவன்,
அவனுக்கும்
நீறிட வேண்டும்' என்றழைக்கக் கலங்கி நின்ற அப்பூதியாருக்கு 'இப்போது
இங்கவன் உதவான்' என்பதற்கு மேல் நா எழும்பவில்லை.
நா. கணேசன்
நீண்ட நாள் வரை தமிழர் பால் அருந்தவில்லை என்பதால் மட்டுமே பால் உணவு
நஞ்சு என்று சொல்லிவிட முடியாது.
அப்பூதி அடிகளாரின் இந்த மறுமொழி எத்தனை தீவிரமாக/
சோகமாக அந்தச் சூழலில் வந்து விழுந்தது என்பது
இலக்கிய அனுபவமாக ரசித்துச் சுவைக்கத் தக்கது.
ரெ.கா.
----- Original Message -----
From: "N. Ganesan" <naa.g...@gmail.com>
To: "மின்தமிழ்" <mint...@googlegroups.com>
Sent: Friday, November 06, 2009 8:10 PM
Subject: [MinTamil] Re: பாலும் பழந்தமிழரும் - கலாசாரப் பிழை?
>
>
On Nov 6, 4:43 am, "karthi" <karthige...@gmail.com> wrote:
> மாடு உழவுக்குப் பயன் பட்டிருக்கும். அதன் பாலிலிருந்து தயிரும்
> மோரும் செய்திருப்பார்கள். சாணம் பலவகைகளில் பயன் பட்டிருக்கும்.
> இறைச்சியும் முக்கியமே. இப்படித்தான் என் ஊகம்.
>
தீம் பால், பால் என்று சங்க இலக்கியத்தில் நிறைய உண்டு.
கரந்தை நீ. கந்தசாமிப் பிள்ளை அகராதி (பிரெஞ்சு நிறுவனம்),
இப்போது வந்துள்ள மர்ரே ராஜம் (சாதனா டிரஸ்ட்) அகராதி ...
பார்த்தால் தெரியும். மோகனரங்கரிடம் இருக்கும்.
நான் நேரம் கிடைக்கும்போது தருகிறேன். பத்துப் பாட்டில்
இழை அப்பம் (rice noodles பற்றி இந்தியாவில் முதலில் சொல்வது
இங்கே) பாலொடு கலந்து உண்ணப்படுகிறது. அதற்கான
உவமை மிக அழகானது. இரும்பு பிழிகுழலில் சந்தகை
உருவாவதை வர்ணிப்பது. .....
-----------
இந்தியச் சாதிமுறை உணவு பிரமிடை அடிப்படையாகக்
கொண்டது.
வேளாண்மை நாகரிகம் விரிந்து, இரும்பூழிக்
காலம் (Iron Age) ஆயிரம் ஆண்டுகள் ஆன நிலையில்
மாட்டிறைச்சியை பொதுவாக மக்கள் வாழ்வில் இருந்து
விலக்கிவிட்டனர். சங்க கால இலக்கியங்களைப்
படித்தால் தெற்றென விளங்கும் இது. ’தீம்புளிப் பாகர்’
என்னும் பாடல் சைவர் (அ) பிராமணர் வீட்டு சைவ சாப்பாட்டு
நிகழ்ச்சி (ஹார்ட் குறிப்பும் காண்க). Beef eating in Sangam texts
என்று தேடினால் வலையில் நிறையக் குறிப்புகள் கொடுத்துள்ளேன்.
நற்றிணை 310-ஆம் பாடலுக்கு உவேசா, பின்னத்தூர் நாராயணசாமி
பாடமே சிறந்தது. ஆக் கன்றை சிறு விவசாயிகள் தலித்துகளுக்கு
நன்கொடை வழங்கல் சுட்டப்படும் பாடலிது. பின்னத்தூரார்,
ஹார்ட், சுஜாதா, ... உரைகள் ஏற்கெனவே காட்டியுள்ளேன்.
”கன்று பெறு வல்சி”யில், கன்றைக் களிறு என ஆக்கினால் பொருட்சிறப்பு
போய்விடுகிறது
என்பதை உணர்ந்தவர்கள் உவேசா, பின்னத்தூர்.
மலைவாசிகள் , ... போன்றோர் களிறும் உண்பதாக உண்டு.
ஆனாலும் ஒவ்வொரு குறுநிலக் கிழாரும் தனக்குப்
பெண்டுகளைக் கூட்டி வைக்கும் தொழில் உடைய பாணனுக்குக் களிறைக்
கொடையாகவா வழங்கினர் என்னும் வினாவைச் சிந்திக்கவேணும்.
மருத நிலத் தலைவர்கள் (ஊரன் என்று சங்க இலக்கியம் சுட்டும்,
இல்பரத்தை, ஊர்ப்பரத்தை, கணிகை, காமக்கிழத்தி, ... எல்லாம் உண்டு.
ஊரன் மாளிகை வர்ணனைகளில் ஆட்டுக் கடா, யவனர் மது,
பெண்டுகள், ... எல்லாம் இருக்கும். ஆனால் மாட்டிறைச்சி இல்லை
என்பதை அவதானிக்க வேண்டும்)
நிற்க.
இந்தியாவில் பிராமண சமூகத்தில் புலால் உண்ணாமை பெருக,
தென்னிந்தியா, தமிழர் நாகரிகமே அடிப்படைக்காரணம்.
வேத காலத்தில் வட இந்தியாவில் யாகம் செய்தபின்
மாட்டிறைச்சி உண்ணப்பட்டிருக்கிறது. பசு வேட்டு யாகம் செய்தல்
சம்பந்தர் தேவாரத்திலும் உண்டு. 19-ஆம் நூற்றாண்டில் கூட
யாகங்களில் பசுவதை உண்டு. இதை ஆறுமுக நாவலர்,
வள்ளலார் கண்டித்தனர். திவிஜேந்திர நாத் ஜா
என்பவர் “Sacred Cow" என்னு புத்தகமே எழுதியுள்ளார்
வேத நாகரிகத்தில் மாட்டிறைச்சி என்று, பாருங்கள்.
யாக்ஞவால்க்யர் சதபத பிராமணத்தில் “அம்சலம்”
(நிணம் மிக்கதால் ருசியானது) ‘பீஃப் தனக்குப்
பிடித்தமானது! என்கிறார். அப்போதெல்லாம்
கொலஸ்ட்ரால் பற்றிய மருத்துவ ஞானம் இல்லாத
காலம்.
ஆனால், வேளாண் நாகரிகமும், சமணமும் தமிழ்நாட்டில்
மாட்டிறைச்சியை பிராமணர்களிடம் இருந்தும், தலித்
அல்லாத பெருவாரியான சாதிகளிடம் இருந்தும்
விலக்கிவிட்டது. பார்ப்பனச் சேரி வருணனை
சங்க இலக்கியத்திலும் ஊன் உணவு பற்றி எதுவும் இல்லை.
வெள்ளகால் ப. சுப்பிரமணிய முதலியார் 19-ஆம்
நூற்றாண்டின் பெரும் தமிழ் அறிஞர். இதனை
விரிவாக எழுதியுள்ளார் - எப்படி வேத கால
மாட்டிறைச்சி தவிர்க்கலானார் என்று.
அதனைத் தருகிறேன்.
நா. கணேசன்
> ஆனால் பால் உணவாகப் பயன்படவில்லை என்பதே மருத்துவர்
> தெய்வநாயகம் கூற்று. பால் ஓர் உணவாக பழந்தமிழ் இலக்கியத்தில்
> கூறப்படவில்லை என்றும் கூறுகிறார்.
>
> ஆகவே பழந்தமிழ் இலக்கியத்தில் உணவாகக் கூறப்பட்டுள்ளதா
> என்பதே என்னுடைய தேடல். ( More a curiosity).
>
> ரெ.கா.
>
> ----- Original Message -----
> From: N. Kannan
> To: mint...@googlegroups.com
> Sent: Friday, November 06, 2009 6:28 PM
> Subject: [MinTamil] Re: பாலும் பழந்தமிழரும் - கலாசாரப் பிழை?
>
> ரெ.கா:
>
> இலக்கியத்தரவை நான் முடக்கவில்லை.
>
> ஐந்திணையில் பால் (பசு) இல்லை என்று எப்படிச் சொல்லலாம். ஆயர்குலத்தின் முக்கியத்தொழிலே மாடு மேய்த்தல்தானே. மேலும் `ஆநிரை` கவர்தல் பற்றி சங்கம் முழுவதும் சேதிகள் உள்ளனவே. கவர்ந்த மாட்டை என்ன செய்தனர்? வெறும் இறைச்சி மட்டுதானா?
>
> க.>
>
> 2009/11/6 karthi <karthige...@gmail.com>
On Nov 6, 4:43 am, வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com> wrote:
> ஒரு வேளை காளை மாடுகளை மட்டும் மேய்த்திருப்பார்களோ :-/ :-\ :-| :-?
>
> V
>
சிந்து சமவெளி முத்திரைகளை ஆராய்ந்தால் ஒன்று தெரியும்.
பெண்விலங்குகளே இருக்கா. எல்லாமே காளை, எருது, ...
என ஆண்பால் தான்.
அதனால், பெண்பசு இல்லை என்று அர்த்தமா?
வேத இலக்கியங்களில் எதிர்மாறாய் கோமாதா இருக்கும்.
நா. கணேசன்
On Nov 6, 5:19 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> 2009/11/6 karthi <karthige...@gmail.com>
>
> > மாடு உழவுக்குப் பயன் பட்டிருக்கும். அதன் பாலிலிருந்து தயிரும்
> > மோரும் செய்திருப்பார்கள். சாணம் பலவகைகளில் பயன் பட்டிருக்கும்.
> > இறைச்சியும் முக்கியமே. இப்படித்தான் என் ஊகம்.
>
> ரெ.கா:
>
> Human learning is mostly by imitating.
> தாய்பால் அருந்துவதைக் கண்ணுறும் மனிதன் மிக இயற்கையாக பசும்பாலை
> அருந்தியிருப்பான். பாலைப்பார்த்துக்கொண்டே அதைத் தயிராக்கி, மோராக்கித்தான்
> பின் தான் உண்டான் என்பது நமக்கே கொஞ்சம் டூ மச்சா தெரியலை ;-)
> சரி, ஒரு வைத்தியர் சொல்லறார். நீங்களும் சொல்லறீங்க, தேடுவோம்.
> ஒரு உயிர்வேதியல் துப்பு இருக்கிறது. பால்குடி குடிகளின் வயிற்றில் லாக்டேஸ்
> எனும் நொதி (enzyme) இருக்கும். Cattle culture இல்லாத ஜப்பானிலும், கொரியாலும்
> பலருக்கு பால் அலர்ஜி உண்டு. அவர்களால் வெண்ணை பால் அருந்த முடியாது. சீஸ்
> சாப்பிட இன்றும் பல ஜப்பானியர் தடுமாறுவர்.
சீனர்களும் தான். அவர்களுக்கு மஞ்சள் நதிப் பாசனத்தில்
வளரும் வாத்தே பேருணவு (நாய், பாம்பு, குரங்கு, ... உண்டு.
ஊர்வன, பறப்பன, எல்லாம் உண்பதால் சீனாவில் விலங்குகள்
எல்லாம் அழிந்தன, ... உ-ம்: யானை. பாரதத்தில் எல்லா உயிரையும்
மதிக்கும் சமயங்களும், கலாச்சாரமும் இருப்பதால் தான்
இத்தனை நெரிசலிலும் வகைக்குச் சில இன்றும் உயிர்வாழ்கின்றன.
ஆனால், இந்த அபரிமித இண்டஸ்ட்ரி, மக்கள்தொகை வளர்ச்சியில்
இனிமேலும் இருக்குமா??).
சீனர், கொரியர், ... வெள்ளைக்காரர்களுடன் தொடர்பால்
மத மாற்றம் நிகழ்கிறது. ஓரியண்டல் முழுக்க கிறித்துவம்
பெருவெற்றி பெற்றுவருகிறது. கம்யூனிஸ்ட்கள் பெரிய
பிஸினெஸ்மென் ஆச்சே. வியாபாரம் என்றால் உலகில்
ஐரோப்பா, அமெரிக்காவுக்கு அனுப்பணும் அல்லவா?
அதில் மேலைனாட்டில் இருந்து இறக்குமதி மாட்டிறைச்சி.
ஒன்றை 18, 19-ஆம் நூற்றாண்டு இலக்கியங்களில்
அவதானிக்கலாம். ஆறுமுக நாவலர், வண்ணச்சரபம்,
... எல்லாரும் மிலேச்சர் - மாட்டூண் நுகர்வ்வோர் -
ஆட்சியில் இருக்கின்றனரே என்று சாபம் தருவர்.
கலெக்டர் ஆஷ் துரையைச் சுட்ட வாஞ்சிநாதன்
சட்டைப் பாக்கெட்டிலும் மிலேச்சரின் பசுவூன்
வழக்கைச் சாடும் கடிதம் எழுதி வைத்து
இந்திய சுதந்திரப் போராடினார். அக் கடிதம் கிடைத்துள்ளது.
பாரதிதாசன் அனுப்பிவைத்த துப்பாக்கி
என்று கேள்விப்பட்டுள்ளேன் (உண்மையா
என்று ஹரிகி போன்றோரை அணுகலாம்).
நா. கணேசன்
On Nov 6, 6:10 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> அதனால், பெண்பசு இல்லை என்று அர்த்தமா?
ஏங்க, பக்கத்துல அத்தன ஸ்மைலி போட்டிருக்கேனே, பார்க்கலையோ ? :-)
V
>
> > V
>
> சிந்து சமவெளி முத்திரைகளை ஆராய்ந்தால் ஒன்று தெரியும்.
> பெண்விலங்குகளே இருக்கா. எல்லாமே காளை, எருது, ...
> என ஆண்பால் தான்.
>
>
"தமிழருக்கு (யார் தமிழர் என்று கேட்டுவிடாதீர்க்ள் ;-) இப்படியொரு பிரச்சனை இருப்பதாகத்தெரியவில்லை""இருக்கிறது" என்பதுதான் மருத்துவரின் கூற்று. மேற்கத்தியர்களுக்கு லாக்டேஸ் அதிகமாக இருப்பதால்அவர்களுக்குப் பால் ஒத்துப் போகும் என்றும், ஆசியர்களுக்கு அது குறைவாக இருப்பதால் அதுஒத்துப் போகாது என்றும் சொல்லுகிறார். முன்பே இதனை எழுதியிருக்கிறேன்.
----- Original Message -----From: Tthamizth TtheneeSent: Friday, November 06, 2009 10:50 PMSubject: [MinTamil] Re: பாலும் பழந்தமிழரும் - கலாசாரப் பிழை?
On Nov 6, 6:42 am, "karthi" <karthige...@gmail.com> wrote:
> வணங்குகிறேன். சோதனை ஏதும் வைக்கவில்லை.
> இயற்கையாக இந்த வரி நினைவுக்கு வந்தது.
> எழுதி விட்டு மற்றவர்களுக்கு நினைவு இருக்குமா
> என்று பார்த்தேன்.
>
> அப்பூதி அடிகளாரின் இந்த மறுமொழி எத்தனை தீவிரமாக/
> சோகமாக அந்தச் சூழலில் வந்து விழுந்தது என்பது
> இலக்கிய அனுபவமாக ரசித்துச் சுவைக்கத் தக்கது.
>
> ரெ.கா.
>
ஆதிநான் மறைநூல் வாய்மை
அப்பூதி யாரை நோக்கிக்
காதலர் இவர்க்கு மூத்த
சேயையுங் காட்டும் முன்னே
மேதகு பூதி சாத்த
என்றலும் விளைந்த தன்மை
யாதும்ஒன் றுரையார் இப்போ
திங்கவன் உதவான் என்றார்.
பொழிப்புரை :
பழமையான நான் மறைகளிலும் நூல்களிலும் பயின்ற வாய்மை ஒழுக்கமுடைய
அப்பூதியடிகளாரை நோக்கி, அன்பால் இம்மக்களுள் மூத்த பிள்ளையையும் முன்னே
மேன்மை மிக்க வெண்ணீறணிதற்குக் காட்டுக என்றுரைக்க, நிகழ்ந்த செய்தியை
உரைக்க மாட்டாதவராய், `இப்போது இங்கு அவன் உதவான்` என்றார்.
குறிப்புரை :
நீறு பெறுதற்கு அடிகளாரின் மக்கள் அனைவரும் முன்னிற்ப அவர்களுள் வயது
முறைமையில் நீறு வழங்க வேண்டும் எனத் திருவுள்ளம் பற்றிய நாவரசர், மூத்த
சேயையையும் முன்னே காட்டுக என்றனர். இம்மூன்று பாடல்களும் ஒரு முடிபின.
Look at the woodblock print of the Naayanaar episode:
http://www.shaivam.org/tamil/thirumurai/thiru12_05_05.htm
NG
>
>
> ----- Original Message -----
> From: "N. Ganesan" <naa.gane...@gmail.com>
> To: "மின்தமிழ்" <mint...@googlegroups.com>
> Sent: Friday, November 06, 2009 8:10 PM
> Subject: [MinTamil] Re: பாலும் பழந்தமிழரும் - கலாசாரப் பிழை?
>
> > On Nov 5, 11:00 pm, karthi <karthige...@gmail.com> wrote:
> >> Sidetracking: மன்னியுங்கள்:
>
> >> இதை எழுதியவுடன் நினைவுக்கு வந்தது:
>
> >> "இப்போதைக்கு அவன் இங்கு உதவான்" எனக்
> >> கூறியவர் யார்?
>
> >> ரெ.கா.
>
> > பெரியபுராணத்தில் சேக்கிழார் சொல்வது.
>
> >http://thirumurai.blogspot.com/2004/09/blog-post_29.html
> > நின்றவர் முகத்தை உற்று நோக்கினார் நாவுக்கரசர். யாவும் சொல்லாமலே
> > விளங்கியது அவருக்கு. அமுது கொள்ள
> > ஆசனத்தில் அமர்ந்தவர் எதிரில் நின்ற இளைய
> > திருநாவுக்கரசை அழைத்து நீறு பூசினார். 'எங்கே இவனுக்கு மூத்தவன்,
> > அவனுக்கும்
> > நீறிட வேண்டும்' என்றழைக்கக் கலங்கி நின்ற அப்பூதியாருக்கு 'இப்போது
> > இங்கவன் உதவான்' என்பதற்கு மேல் நா எழும்பவில்லை.
>
> > நா. கணேசன்- Hide quoted text -
>
> - Show quoted text -
> சாப்பிட இன்றும் பல ஜப்பானியர் தடுமாறுவர். தமிழருக்கு (யார் தமிழர் என்று
> கேட்டுவிடாதீர்க்ள் ;-)
இது ஜோக்கு இல்லை. இன்னொரு தமிழ் குழுவில் ,கடந்த 50 வருடங்களாக
விஞ்ஞாத்தை தமிழில் எழுதி, ஆயிரக்கணக்கான கட்டுரைகளையும்,
புத்தகங்களையும் தமிழில் எழுதும் ஜெயபாரதன் என்பவர் `தமிழ்ர் இல்லை` என
பட்டம் வாங்கிக் கொண்டார். என்ன காரணம்? வழக்கமாக சயன்ஸ் என்பதை
விஞ்ஞானம் என எழுதுகிறார். விஞ்ஞான தமிழுக்கு கிரந்தம் இன்றியமையாதது
என்கிறார். அது போதும் ` தமிழர் இல்லை` என்ற முத்திரை வாங்க. அப்படி
முத்திரை கொடுப்பவர்கள் என்ன பொது மக்கள் படிக்கும் படி
எழுதுவிட்டார்கள்? ஒன்றும் இல்லை.
விஜயராகவன்
Though absence of evidence is not evidence of absence, Its a fact that Milk was not there with the tamils from the beginning.It came only with the interaction with the aryans and the ensuing mixture of cultures.If it played an important part it would have been mentioned as one of the properties of various thinais ( mullai, kurinji, neiythal ...etc )It might have been mentioned even in sangam literature but it does not seem to be a "CULTURAL ASPECT" of tamils like it is today. After the sangam age, with tamils losing their distinctive identity with influx of many other cultures, milk gained its prominence.What the doctor is saying is true.
ஆரியம் வந்தாச்சா! அப்பாடா!ஆப்பிரிக்க குடிகள் எல்லாம் மாடு மேய்க்கும் குடிகள்தான்.
ஆப்பிரிக்காவிலிருந்து வந்து சேர்ந்த தமிழன் மட்டும் ஆடு மேய்த்துக்கொண்டிருந்தானா?
ஐந்திணையில் முல்லைத்திணையின் மக்கள் ஆயர். ஆயர்தேவு கண்ணன். கண்ணனுக்குப் பிடித்ததோ வெண்ணெய். எல்லாம் ஆட்டுப்பால் என்று சொன்னாலும் சொல்வார்கள். நமக்கேன் வம்பு!
க.>
அப்படித்தான் நானும் முதலில் நினைத்தேன். இருந்தாலும் மே. சிவப்பிரகாசத்தின்இந்தக் கோணம் சுவாரஸ்யமாக இருக்கிறது.சங்க இலக்கியத்தில் பால் இருக்கிறதா என்பது நமது இப்போதைய கேள்வி.திருக்குறளில் இருக்கிறது என்று பார்த்தோம். வேறு?
ரெ.கா.
----- Original Message -----From: N. KannanSent: Friday, November 06, 2009 5:19 PMSubject: [MinTamil] Re: பாலும் பழந்தமிழரும் - கலாசாரப் பிழை?
2009/11/6 Megarajan Sivaprakasam mega...@gmail.com
Though absence of evidence is not evidence of absence, Its a fact that Milk was not there with the tamils from the beginning.It came only with the interaction with the aryans and the ensuing mixture of cultures.If it played an important part it would have been mentioned as one of the properties of various thinais ( mullai, kurinji, neiythal ...etc )It might have been mentioned even in sangam literature but it does not seem to be a "CULTURAL ASPECT" of tamils like it is today. After the sangam age, with tamils losing their distinctive identity with influx of many other cultures, milk gained its prominence.What the doctor is saying is true.ஆரியம் வந்தாச்சா! அப்பாடா!ஆப்பிரிக்க குடிகள் எல்லாம் மாடு மேய்க்கும் குடிகள்தான்.ஆப்பிரிக்காவிலிருந்து வந்து சேர்ந்த தமிழன் மட்டும் ஆடு மேய்த்துக்கொண்டிருந்தானா?ஐந்திணையில் முல்லைத்திணையின் மக்கள் ஆயர். ஆயர்தேவு கண்ணன். கண்ணனுக்குப் பிடித்ததோ வெண்ணெய். எல்லாம் ஆட்டுப்பால் என்று சொன்னாலும் சொல்வார்கள். நமக்கேன் வம்பு!
க.>
On Nov 6, 7:30 pm, Megarajan Sivaprakasam <megara...@gmail.com> wrote:
> 2009/11/6 karthi <karthige...@gmail.com>
>
> > அப்படித்தான் நானும் முதலில் நினைத்தேன். இருந்தாலும் மே. சிவப்பிரகாசத்தின்
>
> > இந்தக் கோணம் சுவாரஸ்யமாக இருக்கிறது.
>
> > சங்க இலக்கியத்தில் பால் இருக்கிறதா என்பது நமது இப்போதைய கேள்வி.
> > திருக்குறளில் இருக்கிறது என்று பார்த்தோம். வேறு?
>
> Also you can look into the popular book Guns Germs Steel, where Jared
> Diamond tries to analyse the reasons for europeans success in invasion.
>
> He categorises them in 3 things, Guns , Germs and Steel.
>
> He will mention that europeans had developed a immunity for diseases because
> of closely working with cows for many thousands of years which the africans
> lacked.
> When europeans entered africa, they passed these diseases to africans who
> did not have the immunity for these and hence died in the millions. This was
> one of the reasons attributed to the success of europeans in africa.
>
> Does it mean that cows were not present in africa ? . no.
>
பொதுவாக ஆப்ரிக்காவில் வேளாண்மை இல்லை.
தமிழர் தென்னாப்பிரிக்கா சஞ்சிக் கூலியாய்ப்
போனபின்னர் பலருக்கும் காய்கறி வேளாண்மை
கற்பித்தனர். இதனை ஏஎன்சி தலைவர்கள்
மாண்டேலா போராட்டம் உச்சமாய் இருந்தபோது
டிவியில் கேட்டிருக்கிறேன்.
வடக்கே மாசாய் மக்கள் எப்போது கால்நடைகளை
வளர்த்தனர் என்று பார்க்கணும். இருக்குவேத கால
மக்களை விட்சல் மாசாய் மக்கள் கலாசாரத்திற்கு
ஒப்பிடுவார். ஆப்பிரிக்கா மாடுகள் இந்திய
Zebu cattle என்று மரபணு ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
பால் தமிழர்க்கு தொடர்பில்லை என்றால்
கொங்கு நாட்டில் வாழ்ந்தோரை
“ஆ கெழு கொங்கர்” என்று ஏன் சங்க இலக்கியம்
பல இடங்களில் பேசுகிறது?
ஓர் உதாரணம் தருகிறேன். எங்களுக்கு
பல தலைமுறையாய் உறவு பழையகோட்டை
மன்றாடிமார். அவர்கள் என்றும் போற்றி வளர்த்த
காங்கயம் காளை (ஈரோட்டில் சிலையே இருக்கிறது):
http://www.hindu.com/2006/01/16/stories/2006011611140300.htm
http://en.wikipedia.org/wiki/Kangeyam_bull
முதல் பக்கம்:
http://www.kangayambull.com/gallery.php?pageid=1
8 பக்கங்களில் போட்டோக்கள் உள்ளன.
1960-70களின் ஃபோட்டோக்கள்.
நானறிய 30, 40 ஏரும், பட்டியும் இருந்த
பண்ணையங்களில் இன்று பால் வெளியே
வாங்கிக் கொள்கிறார்கள். கொங்குநாட்டின்
கால்நடை வளம் 20 ஆண்டுகளாய் முடிந்துவிட்டது.
லாரி ஏறி கேரளா போய்விட்டது.
நா. கணேசன்
> What it means is Africans did not have a close relationship with cows like
> the europeans had.
>
> Megarajan
>
>
>
> > ரெ.கா.
>
> > ----- Original Message -----
> > *From:* N. Kannan <navannak...@gmail.com>
> > *To:* mint...@googlegroups.com
> > *Sent:* Friday, November 06, 2009 5:19 PM
> > *Subject:* [MinTamil] Re: பாலும் பழந்தமிழரும் - கலாசாரப் பிழை?
>
> > 2009/11/6 Megarajan Sivaprakasam megara...@gmail.com
On Nov 6, 6:42 am, "karthi" <karthige...@gmail.com> wrote:
> அப்பூதி அடிகளாரின் இந்த மறுமொழி எத்தனை தீவிரமாக/
> சோகமாக அந்தச் சூழலில் வந்து விழுந்தது என்பது
> இலக்கிய அனுபவமாக ரசித்துச் சுவைக்கத் தக்கது.
>
ரெ.கா. இன்னொரு முக்கியமான இடத்தில்
இத்தொடர் பெரியபுராணத்தில் உண்டு,
வேட்டைக்கொருமகன்காவு பேரா./கவிஞர் அனந்தா நினைவூட்டினார்கள்.
அம்மடல்.
-----
இதே போன்ற (ஒருவகையில் இன்னும் சோகமான) ஒரு சூழ்நிலையில், சிறுத்தொண்ட
நாயனார்
புராணத்திலும் ‘இப்போது உதவான் அவன்’ என்ற குறிப்பு வருகிறது.
பன்னிரண்டாம் திருமுறை
36 சிறுத்தொண்ட நாயனார் புராணம்
79. ஆறு திங்கள் ஒழித்துண்போம்
உண்ணு மளவுந் தரியாது
சோறு நாளு முண்பீர்முன்
னுண்ப தென்நம் முடன்றுய்ப்ப
மாறின் மகவு பெற்றீரேல்
மைந்தன் தன்னை யழையுமென
ஈறு முதலு மில்லா தார்க்
கிப்போ துதவான் அவனென்றார்.
அனந்த்
ரெ. கா.
உங்களுக்கு ஒரு வேண்டுகோள். சிறுத்தொண்டர், அப்பூதி
நாயனார் புராணங்களை ஒருமுரை படித்துப் பின்
இந்த கதைகளை உங்கள் நடையில் ஒரு விரிவான
கட்டுரையோ, கதையோ எழுதி பதிவிடுங்கள்.
’பிள்ளையார் பந்து’ கதையை வலைப்படுத்துங்கள்.
உங்கள் தமிழ் சொக்கவைப்பது. ”இப்போது இங்கு உதவான்”
சேக்கிழார் வாக்கை, அந்தச் சூழலை உங்கள் தமிழில்
கேட்போம்.
அவசரமில்லை. நேரம் வாய்க்கிறபோது.
நா. கணேசன்
கண்ணினுள் கருமணி போல்
*பாற்கடலில்* பரந்தாமன் அறிதுயில்!
“ஆவினுக்கு அருங்கலம் அரன் அஞ்சாடுதல்” !
(தேவாரம்)
(அஞ்சு=) பஞ்ச கவ்வியத்தில் முதல் = பால்.
முல்லை நிலத்தில் பால் இல்லையா?
கலித்தொகை:
தீம்பால் கறந்த கலமாற்றிக் கன்றெல்லாம்
தாம்பில் பிணித்து மனைநிறீஇ ஆய்தந்த
பூங்கரை நீலம் புடைதாழ மெய்யசைஇப் பாங்கரு
முல்லையும் தாய ....
----------
கலித்தொகை:
தலைவி பாலைக் கூறிட்டுச் சங்கில்
மகனுக்கு ஊட்டுகின்றாள். சிறைப்புறமாகக்
கேட்டுப் புக்க தலைவனைக் கண்டு தன்னுள்ளே
புலந்து புலவியொடு பின்னும் பாராட்டியது.
பொய் போர்த்துப் பாண்டலை இட்ட பல வல் புலையனைத்
தூண்டிலா விட்டுத் துடக்கித் தான் வேண்டியார்
நெஞ்சம் பிணித்த தொழிலாத் திரிதரு
நுந்தை பால் உண்டி சில.
பொருள்: தலைமேல் ஏறட்டுக்கொண்ட பாண்மையாலே
வஞ்சனையை மறைத்து வசீகரித்தல் தொழில் பலவும் வல்ல
பாணனைத் தூண்டிலாகப் போகட்டுப் பரத்தையரை
அகப்படுத்தித் தான் விரும்பின பரத்தையருடைய
நெஞ்சம் தன் வசமாக்குதல் தனக்குத் தொழிலாகக்கொண்டு
திரியும் நுந்தைக்குப் பட்ட சிலகூற்றை உண்பாய்.
கூறிட்டு ஆவின் பாலை சங்கில் ஒவ்வொருமுறை
ஊட்டும்போதும் தலைவி தலவைனைச் சாடை
பேசுவதாய் பல பாடல்கள் காணலாம். ஓர் உதாரணம்
காட்டினேன்.
--------------
கிளிக்குப் பால் ஊட்டல் (கலி.)
சேடியல் வள்ளத்துப் பெய்த பால் சில காட்ட
யூடுமென் சிறுகிளி உணர்ப்பவள் முகம்போல - கலி.
தேனும் பாலும் கலந்துண்ணல் வழக்கம்.
பாலொடு தேன்கலந்தற்றே பணிமொழி வாலெயிறு ஊறிய நீர் - குறள்
சிறையாரும் மடக்கிளியே இங்கேவா தேனொடுபால்
முறையாலே உணத்தருவேன் - தேவாரம்
---------
பாலிலே உள்ள பயன் வெண்ணெய். அதனால் தான்
வெண்ணெய் உண்கிறான் கண்ணன், வெண்ணையைப்
பாலில் எடுத்துவிட்டால் ஒரு பயனும் இல்லை
என்பது பழந்தமிழர் கொள்கை.
(அப்போதெல்லாம், Zero-fat foodsக்கு இன்றுள்ள
மரியாதை, மருத்துவ ஞானம் இல்லை :)
மரு. தெய்வநாயகம் போன்றோர் அப்பொழுதில்லையே.)
எவ்வம் மிகுதர எந்திறத்து எஞ்ஞான்றும்
நெய்கடை பாலிற் பயன்யாதும் இன்றாகி ... (கலி).
இவ்வளவு ஏன்? 20-ஆம் நூற். தொடக்கத்தில்
கலித்தொகைக்கு உரையிட்ட இ. வை. அனந்தராமையர்
எழுதிச் செல்கிறார்:
“பாலைக் காய்ச்சாமலே இயந்திரத்தின் உதவியால்
அதிலுள்ள வெண்ணெயை எடுத்துவிட்டு,
சென்னை முதலிய இடங்களில் விற்கும் பால்
உண்பவர்க்குப் பயன்படாமை இங்கே அறிதற்பாலது.”
4000 வருடத்திற்கு முன் இந்தியாவில்
காளை, எருது, எருமை, பசுமாடு....
http://dakshinatya.blogspot.com/2008/11/zebu-buffalo.html
எருமையுடன் போரிடும் கொற்றி/கொற்றவை:
http://nganesan.blogspot.com/2008/01/eru-tazuval.html
என்பால் இவ்விழை முற்றும்,
நா. கணேசன்
அப்பூதி அடிகள் பற்றி பலகாலத்துக்கு
முன் ஆங்கிலத்தில் ஒரு கட்டுரை எழுதினேன்.
இந்தத் தொடர் ஆங்கிலத்தில் "He is of no use here"
என்ற போதும் அழகாகவே இருந்தது.
எழுத வேண்டிய விஷயங்களின் பட்டியல்
நீண்டுகொண்டே போகிறது.
ரெ.கா.
----- Original Message -----
From: "N. Ganesan" <naa.g...@gmail.com>
To: "மின்தமிழ்" <mint...@googlegroups.com>
Sent: Saturday, November 07, 2009 7:49 PM
Subject: [MinTamil] Re: பாலும் பழந்தமிழரும் - கலாசாரப் பிழை?
>
>