--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
கீதாம்மா!பத்மாவதி அம்மா இங்கு (மின் தமிழில்) இருக்கிறார்களா? அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. அந்த மரியாதையை உள்ளத்தில் கொண்டுதான் கீழ்க்கண்டவாறு எழுதுகிறேன்.1. வடநாட்டு பிராம்மணர் என்றழைக்கப்படுவோர் காபாலிகத்தில் இல்லை. எனக்குத் தெரிந்து பாசுபதம் மட்டுமே பிராம்மணர் கடைபிடித்தார்கள். காளாமுகம் எல்லா குலமும் கலந்தது. பிராம்மணருக்கு மட்டுமே சொந்தமில்லை.2. Bபோயர்கள் (ஆதிவாசிப் பிரிவினர்) காசி சென்று வேதம் பயின்று ஆந்திராவில் வேத மதத்தைத் தழைத்தோங்கச் செய்தனர். இது நடந்த காலம் கி.பி. நான்கு அல்லது ஐந்தாம் நூற்றாண்டு. மடிபோயர் என்பவ்ர் மடிசர்மா என மாற்றிக்கொண்டதற்கான சான்று உண்டு. இவர்கள் பல்லவர்களுக்கு நெருங்கிய தோழர்கள். (என்னுடைய விசித்திர சித்தன் கதைக்காக நான் ஆழமாகத் தேடிய வரலாறில் இவர்களும் உண்டு)ஆனால் இவர்கள் (போயர்கள்) நீக்கப்பட்ட காலம் 5 ஆம் நூற்றாண்டு இல்லை.. ஒன்பதாம் நூற்றாண்டு கீழைச் சாளுக்கியர்கள் செய்தனர். வடநாட்டு பிராம்மணர்கள் ஆந்திராவுக்கு அழைத்து வரப்பட்டதில்லை.. தமிழ்நாட்டு தமிழ்ப் பிராம்மணர் மட்டுமே குடும்பம் குடும்பங்களாகவே தருவிக்கப்பட்டனர். இதற்கு பல சான்றுகள் உள்ளன. இவர்களுக்கு நிவந்தங்கள் அளித்த செப்புப் பட்டயங்களும் உள்ளன. தெய்வத்தின் குரல் முதலாம் தொகுதியில் கூட காஞ்சி மகாமுனிவர் இந்தச் செய்தியை எழுதி இருக்கிறார்கள்.3. திரிலோசன பல்லவன் காலத்தில் கல்வெட்டுகளா? அம்மாதான் பதில் சொல்லவேண்டும்.4. தமிழகத்தில் சைவம் நுழைந்தது கி.பி.500க்கு பிறகுதான் என்பது ஒப்புக்கொள்ளமுடியாத தியரி. மாணிக்கவாசகர் காலம் விவாதத்துக்கு உட்பட்டதாக இருந்தாலும் காரைக்கால் அம்மையார் போன்றோர் இரண்டாம் நூற்றாண்டு காலத்திலேயே இருந்தனர். சுமார் 20 சிவன் கோயில்களைப் பற்றிய ஐயடியார் காடவர்கோன் திருமுறைப் பாடல்கள் இந்த 500-600 காலத்திலேயே உள்ளன. பதினோராம் திருமுறைப்பாடல்களில் இவை உள்ளன. ஐயடியார் காலம் பற்றிய அனுமானம் பலரிடத்தே உண்டு. சிம்மவர்மன் (530-60) எனும் பல்லவ மன்னரின் தம்பியாக இவரை அடையாள்ம் செய்த திரு தி.ந. சுப்பிரமணியம், இவரால்தான் சிம்மவர்மன் தன் சர்மவியாதி நீங்கப்பெற்று தில்லையில் பொற்கூறை அமைத்தான் என்று எழுதி இருக்கிறார்.சிவன் கோயில்கள் கட்டப்பட்ட நிலையில் சைவம் எப்போதோ தமிழகத்தில் நுழைந்திருக்கவேண்டும்., இந்தக் காலம்தான் அது என வரையறுக்கமுடியாது.சைவம் தமிழகத்தில் ’நுழைந்திருக்க’ வேண்டும் என்பதே ஒப்புக்கொள்ள முடியுமா என்று தெரியவில்லை. தென்னாடுடைய சிவனே போற்றி!நான் இன்னமும் முழுக்கட்டுரையும் படிக்கவில்லை. படித்த பின்னர் மேலும் எழுத வேண்டுமெனில் எழுதுகிறேன். சுபா மூலமாக என் வணக்கத்தையும் திருமதி பத்மாவதி அம்மா அவர்களுக்கு சொல்லும் அதே நேரத்தில் ஆந்திர வரலாற்றை தமிழர்கள் சரிவரியாகவோ கோர்வையாகவோ ஆராயவில்லை என்ற என் வருத்தத்தையும் தெரிவித்து விடுங்கள்!!அன்புடன்திவாகர்
--
மின் தமிழ் நண்பர்களுக்கு,டாக்டர் பத்மாவதி அவர்கள் எழுதிய சோழர் காலத்துச் சமயம் பற்றிய கட்டுரைத் தொடரை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். கட்டுரையின் ஒரு பகுதி இப்போது இடப் படும். கொஞ்சம் கொஞ்சமாய் மற்றப் பகுதிகளும் இடம் பெறும். கட்டுரைகள் மரபு விக்கியிலும் சேர்க்கப் படுகிறது. இங்கே படிக்க இயலாதவர்கள் அங்கே படித்து இன்புறலாம். நன்றி.
சோழர் காலச் சமயம்எழுத்து: டாக்டர் பத்மா
கி.பி. 5 ஆம் நூற்றாண்டில் ஆந்திராவின் ஒரு பகுதியை ஆண்டவன் பல்லவ மன்னன் திரிலோசன பல்லவன். இவன் சமணர்களை அழித்தான். வேதமல்லாச் சடங்குகளை நீக்கிவிட்டு வேதச் சடங்குகளையே கடைப்பிடித்தான். கோயில்களில் வழிபாடு செய்து கொண்டிருந்த பிராமணர் அல்லாதவரை நீக்கிவிட்டு வட நாட்டிலிருந்து அழைத்து வந்த பிராமணர்களை நியமித்தான்.*1 இந்த வடநாட்டு பிராமணர் என்பவர்கள் காளாமுக, பாசுபத, காபாலிக சைவத்தைச் சேர்ந்தவர்கள். கி.பி. 5-ஆம் நூற்றாண்டில் ஆந்திராவில் பரவிய இம்மதங்கள் அங்கு இருந்ததற்கான சான்றுகள் ஏராளமாக உள்ளன. கி.பி. 5-ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு அச்சைவம் தமிழகத்தில் நுழைந்தது. கி.பி. 7-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்த அப்பர் பாடல்களில் நாகப்பட்டினம் கோயிலை நாகைக் காரோகணம் என்று பாடுகிறார்.*2 இவரது காலம் மகேந்திர வர்மனின் காலம். அதாவது கி.பி. 600--630 ஆகும். திரிலோசன பல்லவன் கல்வெட்டுகள் ஆந்திராவில் கி.பி. 470 முதல் 490 வரை கிடைத்துள்ளன*3 எனவே. திரிலோசன பல்லவன் காலத்திற்குப் பின்னரும் மகேந்திர வர்மன் காலத்திற்கு முன்னரும் சற்றேறக் குறைய கி.பி. 500 முதல் 600-க்குள் வடநாட்டு சைவம் தமிழகத்திற்குள் நுழைந்திருக்க வேண்டும்.அப்பர் நாகப்பட்டினத்தை நாகைக் காரோகணம் என்றும் குடந்தைக் காரோகணம் என்றும் கச்சிக் காரோகணம் என்றும் பாடியுள்ளார். வட நாட்டில் காரோகணம் என்ற இடத்தில் பிறந்த லகுளீசரின் சித்தாந்தத்தைப் பின்பற்றும் மதம் பாசுபதம். இந்த லகுளீசர் பிறந்த இடமான காரோகணம் ஒரு தலையாய பாசுபதர்களின் மையமாகத் திகழ்ந்தது. எனவே மேற்கூறிய தமிழ்நாட்டுக் காரோகணங்கள் லகுளீச சித்தாந்தத்தைப் பின்பற்றும் பாசுபத சைவத்தின் அடிப்படையில் அமைந்திருந்தன. அப்பர் தம் திருவாரூர்ப் பதிகத்தில் பாசுபத, காளாமுக, காபாலிகர் உலவும் திருவாரூர் வீதியைப் பாடுகிறார். அவரது சமகால மகேந்திரவர்மனும் காபாலிகர்களையும் பெளத்தர்களையும் தமது மத்த விலாச பிரகடனம் என்ற நூலில் கேலி செய்து எழுதியுள்ளார்.சைவ வேளாளர் குடும்பத்தில் பிறந்து சமண மதத்தைத் தழுவிப் பின்னர் தீவிர சைவ சமயத்தவராக மாறிய அப்பர் தாம் தழுவியிருந்த சமண மதத்தைக் கடுமையாகத் தாக்குகின்றார்.*4 சம்பந்தரும் அவ்வாறே தாக்கியிருக்கின்றார். ஒரு மதத்திலிருந்து இன்னொரு மதத்திற்கு மாறுகின்ற போது தீவிரமாவது மனித இயல்பு. அதுபோல வயதில் மூத்த அப்பர் மிகவும் தீவிர பக்தராக மாறுகிறார். சமண பெளத்த பாழிகள் இடிக்கப் பட்டிருக்கின்றன. சொத்துக்கள் பறிமுதல் செய்யப் பட்டிருக்கின்றன. *5 அப்பரின் பாடல்கள் காபாலிக சைவர்களின் சிவ உருவ வழிபாடுகளும், சிவன் கபாலத்தை கையிலேந்தியவனாக, கால காலனாக, பைரவனாக, பிக்ஷாடனராக, மேனியெங்கும் திருநீறு பூசியவனாகக் கூறுவதிலிருந்து தீவிர சைவர்களான காபாலிகர்களின் சைவ சமயத் தாக்கம் அப்பரிடம் அதிகமிருந்திருக்கிறது. மனித உயிர்பலி செய்யும் காபாலிகத்தைப் பின் பற்றியதால் தான் மதுரை, திருவோத்தூர் போன்ற இடங்களில் சமணர்களைக் கழுவேற்றிக் கொல்லப் பட்டனரோ என எண்ண வேண்டியுள்ளது. *6இவ்வாறு நாயன்மார், ஆழ்வார்கள் காலத்தில் தோன்றிய பக்தி இயக்கத்தால் சமண, பெளத்தர்களின் ஆதிக்கம் பொருளாதாரத்திலும், கல்வி, மருத்துவ, சமூக சேவைகளிலும் கட்டாயமாகப் பறிக்கப் பட்டது. அதற்கு மாற்றாக சைவ வைணவ மதங்கள் மக்கள் மத்தியில் முன் வைக்கப் பட்டு அவ்விடங்களை நிரப்ப முயற்சி செய்தன. முடிவில் வெற்றியும் பெற்றன என்பதில் யாருக்கும் ஐயமிருக்க வாய்ப்பில்லை. இவ்வாறு சைவ சமய மறுமலர்ச்சியில் வேளாளரான அப்பரும் பிராமணரான சம்பந்தரும்,பங்கு பெற்றிருந்தனர். இவர்களுக்குப் பின்னர் வந்த பிராமணராகிய சுந்தரரும், எனவே. வேளாளர்களும், அந்தணர்களும் ஒன்று சேர்ந்து சமணர்களின் பொருளாதார சமய ஆதிக்கத்தைக் குறைத்துக் கைப்பற்றி இருக்கின்றார்கள் என்பதை கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் நிறுவப் பட்ட பிற்காலச் சோழராட்சியில், வேளாள அந்தணர்களின் பொருளாதார, சமய ஆதிக்கத்தையும் அரசியல் செல்வாக்கையும் கொண்டு அறியலாம். சமணர்களின் செல்வாக்கும் செல்வமும் வணிகர்களின் வியாபார ரீதியில் அமைந்தது.வணிகர்கள் ஆதரித்த மதம் சமண மதம். சமண முனிவர்கள் நல்லவர்களாக இருந்தும் சமூகத் தொண்டுகள் பல செய்தும் நீர்ப் பாசனத்திற்கு வேண்டிய குளம், தூம்பு, போன்றவை செய்து கொடுத்தும் நல்ல மனத்தவர்களாக இருந்திருந்தும், விவசாயத்தை முன்னிலைப் படுத்தித் தங்கள் பொருளாதாரத்தையும் நாட்டின் பொருளாதாரத்தையும் வளர்த்தார்களில்லை. தமிழ்நாடோ ஒரு சிறந்த முழு விவசாய நாடு. விவசாய வளர்ச்சியில் தான் உழுகுடி மக்களின், பிற தொழிலாளிகளின் வாழ்வும் உயர்வும் அடங்கியிருந்தது. எனவே சமண மதத்தின் ஆதிக்கத்தைக் குறைத்து--விவசாய நாடாக நிலவுடமைச் சமுதாயமாக அச்சமுதாயத்தின் கருவூலமாகக் கோவில்களை அமைத்து மக்களின் அன்றாட வாழ்வில் கோயிலோடு அதாவது சைவ மதத்தோடு தொடர்பு படுத்தியதாகவும் அமைக்கப் பட்ட அரசமைப்பே பிற்காலச் சோழ வரலாற்றின் சாராம்சமாகும்.விவசாயத்தைப் பெருக்க எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப் பட்டன என்பதை நோக்கினால் மிகவும் பிரமிப்பாக இருக்கும். நீர்ப்பாசனத்திற்கு அவர்கள் செய்த செயல்களைக் கல்வெட்டுக்களில் படிக்கும்போது பெரு வியப்பை ஏற்படுத்தும்.பிற்காலச் சோழராட்சியில், கி.பி. 9--ஆம் நூற்றாண்டில் அந்தணர்களும், வேளாளர்களும் மிக உயர்ந்த பதவியை வகித்தனர் எனச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. கி.பி. 6--ஆம் நூற்றாண்டில் அவர்கள் நடத்திய போராட்டத்தின் பலனை 9-ஆம் நூற்றாண்டில் மிக நன்றாகவே அனுபவித்தார்கள்.அமைச்சர்களாகவும் பிரமதேய சதுர்வேதி மங்கலங்களின் சபை நிர்வாகிகளாகவும் படைத் தளபதிகளாகவும் கோயில் அதிகாரிகளாகவும் நீதி வழங்குபவர்களாகவும் முக்கிய பதவிகளில் அமர்ந்திருந்த அவர்கள் மிகுந்த செல்வந்தர்களாக வாழ்ந்தனர்.அவர்கள் சைவக் கோயில்களுக்குத் தங்கள் செல்வத்தின் காரணமாக ஏராளமான பொன்னையும், பொருளையும் வாரி வழங்கினர். செப்புத் திருமேனிகளை எழுந்தருளிவித்தனர். ஏன் கோயில் பலவும் கட்டியிருக்கின்றனர். நல்ல வளமிக்க ஊர்கள் பிரமதாயமாகவும் சதுர்வேதி மங்கலங்களாகவும் அந்தணர்களுக்கு அளிக்கப் பட்டன.இந்த இரு குலத்தவரும் அதிக செல்வாக்குப் பெற்றிருந்தாலும் கல்வி கேள்விகளிலும் நாட்டின் கருவூலங்களாக ஆங்காங்கே நிறுவப் பட்டிருக்கும் கோயில்களின் கருவூலத்திலும், நிர்வாக அமைப்புக்களிலும் முதன்மை பெற்று விளங்கியவர்கள் அந்தணர்கள்.இறையிலியாக பிரமதேய சதுர்வேதி மங்கல நிலங்கள் வழங்கப் பட்டது அந்தணர்களுக்குத் தான். வளமிக்க அவ்வூர்களுக்கு சபை அதிகாரிகள் அல்லது அங்கத்தினர்கள் அவர்கள் தாம். இந்த அளவுக்கு வேளாளர்கள் செல்வாக்குப் பெற்றிருக்க வில்லை. அரசர்களிடம் அமைச்சர்களாகவும், மிகவும் குறைந்த அளவில் ஆங்காங்கே கி.பி. 11--ஆம் நூற்றாண்டின் சித்ரமேழி பெரிய நாடு என்னும் அமைப்பிலும் அவர்கள் அதிகாரிகளாக இருந்தார்களே தவிர, ஊர் நிர்வாகத்தில் அந்தணர்களைப்போல அதிகமான செல்வாக்குப் பெற்றிருக்கவில்லை என்பதை அறிய முடிகிறது. முதலாம் இராஜ இராஜ சோழன் காலத்தில் அமணகுடியைச் சேர்ந்த கிருஷ்ணன் ராமன் குடும்பத்தார் எந்த அளவுக்கு பரம்பரை பரம்பரையாக சோழர்களுக்கு அதிகாரிகளாக இருந்தார்கள் என்பதை திரு ஒய். சுப்பராயலு அவர்கள் எழுதிய கட்டுரையின் மூலம் அறிந்து கொள்ளலாம். *7அந்தணர்களின் இந்த வளர்ச்சியும், செல்வாக்கும் நிலவுடமைச் சமுதாய வளர்ச்சியின் உச்சகட்டத்தை எய்திய முதலாம் இராஜராஜனின் செல்வாக்கிற்கு ஏற்றாற்போல அவன் காலத்தில் உயர்ந்திருந்தது. அந்தண சமூகத்தினரின் இந்த வளர்ச்சி ராஜராஜ சோழனின் போக்கையே திசை திருப்புமளவு காணப்பட்டது.
இச்சமயத்தில்--சமணர்களின் பொருளாதார சமய ஆதிக்கத்தைக் குறைக்க அப்பர், சம்பந்தர் எடுத்த நடவடிக்கைகளை நினைவு கூர வேண்டும். சமணத்தை அழிக்க அப்பருக்குக் காபாலிகம் தேவைப் பட்டது. இவர் காலத்தில் வாழ்ந்த மகேந்திரவர்மன் எடுத்த கோயில்களிலோ பாண்டிய நாட்டிலோ அகோர உருவங்கள் இல்லை. இக்கால கட்டங்களில் எடுத்த கோயில்களே நமக்குக் கிடக்கும் காலத்தால் முந்திய கோயிலும் உருவங்களுமாகும். அப்பர் பாடலுக்குப் பின் கட்டப்பட்ட கற்கோயில்களில் தான் சிவனின் பல்வேறு உருவங்களுடன் அகோர மூர்த்தங்கள் இடம் பெறுகின்றன.சமணர்களை அழிக்க எழுச்சி செய்ய அப்பர்--சம்பந்தர், அழிக்கும் கடவுளான சிவனின் அகோர உருவங்களைத் தானே வருணிக்க முடியும்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil




The article is totally one-sided. biased. Sorry to say this has come from a scholar like Dr. Padmavathi,>>அப்பர் பாடலுக்குப் பின் கட்டப்பட்ட கற்கோயில்களில் தான் சிவனின் பல்வேறு உருவங்களுடன் அகோர மூர்த்தங்கள் இடம் பெறுகின்றன.சமணர்களை அழிக்க எழுச்சி செய்ய அப்பர்--சம்பந்தர், அழிக்கும் கடவுளான சிவனின் அகோர உருவங்களைத் தானே வருணிக்க முடியும்.<<
--
ஆதாரங்களின் அடிப்படையில் எழுதப்படும் கருத்து பொதுக் கருத்தன்றித் தனியார் கருத்து என்று அழைக்க முடியாது. அவர் மேற்கோளாகக் காட்டியிருக்கும் ஆதாரங்கள் சான்றுகள் தகவில என்றோ அவர் முன் வத்த கருத்துக்களுக்கு மாற்றுக்கருத்து உள்ளது என்றோ ஆவண அடிப்படையில் முன் வைக்கப்படும் மற்ற பொதுக் கருத்துக்களையும் மரபு விக்கியில் வெளியிடலாம்
மரபு விக்கிக் கருத்துக்களம் புலன் சார் புலமை வாய்ந்த அறிஞர்கள் எழுதி வெளியிடப்படும் கட்டுரைகளைச் சேமித்து வெளியடப்படும் தளம். தரவுகள் தகவல் மூலம் அக்கருத்துக்களுக்கான மாற்றுக்கருத்தை இன்னொரு அறிஞர் வெளிட்டால் அதையும் மரபு விக்கியில் சேர்க்கவேண்டும்
நாகராசன்
ஆதாரங்களின் அடிப்படையில் எழுதப்படும் கருத்து பொதுக் கருத்தன்றித் தனியார் கருத்து என்று அழைக்க முடியாது. அவர் மேற்கோளாகக் காட்டியிருக்கும் ஆதாரங்கள் சான்றுகள் தகவில என்றோ அவர் முன் வத்த கருத்துக்களுக்கு மாற்றுக்கருத்து உள்ளது என்றோ ஆவண அடிப்படையில் முன் வைக்கப்படும் மற்ற பொதுக் கருத்துக்களையும் மரபு விக்கியில் வெளியிடலாம்
மரபு விக்கிக் கருத்துக்களம் புலன் சார் புலமை வாய்ந்த அறிஞர்கள் எழுதி வெளியிடப்படும் கட்டுரைகளைச் சேமித்து வெளியடப்படும் தளம். தரவுகள் தகவல் மூலம் அக்கருத்துக்களுக்கான மாற்றுக்கருத்தை இன்னொரு அறிஞர் வெளிட்டால் அதையும் மரபு விக்கியில் சேர்க்கவேண்டும்
நாகராசன்
விக்கியில் கட்டுரைக் கருத்துக்கு ஆசிரியரே பொறுப்பு எனும் பொது வாசகம்
போதும். அப்படித்தான் இருக்க வேண்டுமென்று ஆரம்பிக்கும் போது சொன்னது.
(ஆசிரியர் தரும் தலைப்பை மாற்றுவது சரியில்லை!)
நா.கண்ணன்
2012/5/24 Geetha Sambasivam <geetha...@gmail.com>:
கீதா!
விக்கியில் கட்டுரைக் கருத்துக்கு ஆசிரியரே பொறுப்பு எனும் பொது வாசகம்
போதும். அப்படித்தான் இருக்க வேண்டுமென்று ஆரம்பிக்கும் போது சொன்னது.
(ஆசிரியர் தரும் தலைப்பை மாற்றுவது சரியில்லை!)
நா.கண்ணன்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
On May 24, 2:29 am, Geetha Sambasivam <geethasmbs...@gmail.com> wrote:
> இந்தக் கட்டுரைப்பகுதியின் கீழ்க்கண்ட தகவலில் எனக்குச் சந்தேகம்.
> கர்நாடகத்திலும் சோமநாதபுரக் கோயில் உண்டா? எனக்குத் தெரிந்தது
> குஜராத்திலுள்ள சோமநாதம் தான். தெரிந்தவர்கள் விளக்கவும்.
>
> //*கர்நாடக நாட்டிலுள்ள சோமநாதபுரக் கோயில் காளாமுக பாசுபதர்களின் மையம் *என்பது
> யாவரும் அறிந்த செய்தியாகும். //
>
>
இருக்கிறது. ஹொய்சளர் கட்டியது. காவிரிக்கரையில்.
நா. கணேசன்
... தொடரட்டும். படுத்துக் கிடந்தவளை வரலாற்று எழுப்பிவிட்டிருக்கின்றது. நன்றிசீதாம்மா
http://www.youtube.com/watch?v=Onml8zPbCFo
On May 24, 2:29 am, Geetha Sambasivam <geethasmbs...@gmail.com> wrote:
> இந்தக் கட்டுரைப்பகுதியின் கீழ்க்கண்ட தகவலில் எனக்குச் சந்தேகம்.
> கர்நாடகத்திலும் சோமநாதபுரக் கோயில் உண்டா? எனக்குத் தெரிந்தது
> குஜராத்திலுள்ள சோமநாதம் தான். தெரிந்தவர்கள் விளக்கவும்.
>
> //*கர்நாடக நாட்டிலுள்ள சோமநாதபுரக் கோயில் காளாமுக பாசுபதர்களின் மையம் *என்பது
> யாவரும் அறிந்த செய்தியாகும். //
>
>
>
>
>
>
>
> > மின் தமிழ் நண்பர்களுக்கு,
>
> >> டாக்டர் பத்மாவதி அவர்கள் எழுதிய *சோழர் காலத்துச் சமயம் *பற்றிய கட்டுரைத்
> >> தொடரை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். கட்டுரையின் ஒரு
> >> பகுதி இப்போது இடப் படும். கொஞ்சம் கொஞ்சமாய் மற்றப் பகுதிகளும் இடம் பெறும்.
> >> கட்டுரைகள் மரபு விக்கியிலும் சேர்க்கப் படுகிறது. இங்கே படிக்க இயலாதவர்கள்
> >> அங்கே படித்து இன்புறலாம். நன்றி.
>
> >> *
> >> *
டாக்டர். பத்மாவதிக்கும் சோழர்களுக்கும் பூர்வ ஜென்மத்தொடர்பு அல்லவோ!
ஒருமுறை முனைவர் நாகசாமியோடு களப்பணி செய்துவிட்டு புரியாத புதிர்
ஒன்றைச் சிந்தித்த வண்ணமே தூங்கப்போக ராஜேந்திர சோழன் கனவில் வந்து
விளக்கியதாக ஒரு கதை சொல்லியிருக்கிறார்!!
மார்க்சீய சிந்தனைவாதியான அவர் வாழ்வின் பெரும் பகுதி கோயில்களில்தானே
செலவழிந்து இருக்கிறது. நண்பர் ஸ்ரீதரன் ராகவன், அவர் துணைவியார்,
என்னுடன் பலமணி நேரம் திருமழிசையில் திருமஞ்சனம் கண்டு களிக்க. ஆண்டாள்
என்கிற அவரது தோழி இதைக் கண்டு ஆச்சர்யப்பட்டு, ‘என்னடீ? இப்படி பக்தையாக
மாறிவிட்டாய்?’ என்று கேலி செய்ய!! பின்னரும் இரவுப் பொழுதான பின்னும்
எங்களுடன் ஸ்ரீபெரும்புதூர் வந்து எம்பெருமானார் சேவை சேய்வித்து விட்டு
பின்னரே வீடு சென்றார்.
அவர் த.ம.அ தோழமையில் தோற்றம் முதல் இன்று வரை இருப்பது எம் பாக்கியம்!
நா.கண்ணன்
இங்கு சொல்லப்படும் ’பாசுபதம்’
பாசுபத அஸ்த்ரத்தைக் குறிப்பது.
பாசுபத மதப் பிரிவிற்கும் இதற்கும்
தொடர்பில்லை. கட்டுரைக்குப்
பொருந்தாத மேற்கோள்.
சிவபெருமானது 25 மூர்த்தங்களுள்
‘கிராத மூர்த்தம்’ ஒன்று. வேட
வடிவுகொண்டு பார்த்தனுக்கு
அருளியதைக் குறிப்பது
தேவ்
> 2012/5/23 Geetha Sambasivam <geethasmbs...@gmail.com>> மின் தமிழ் நண்பர்களுக்கு,
>
> > டாக்டர் பத்மாவதி அவர்கள் எழுதிய *சோழர் காலத்துச் சமயம் *பற்றிய கட்டுரைத்
> > தொடரை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். கட்டுரையின் ஒரு
> > பகுதி இப்போது இடப் படும். கொஞ்சம் கொஞ்சமாய் மற்றப் பகுதிகளும் இடம் பெறும்.
> > கட்டுரைகள் மரபு விக்கியிலும் சேர்க்கப் படுகிறது. இங்கே படிக்க இயலாதவர்கள்
> > அங்கே படித்து இன்புறலாம். நன்றி.
>
> > *
> > *


On May 24, 2:27 am, Geetha Sambasivam <geethasmbs...@gmail.com> wrote:இங்கு சொல்லப்படும் ’பாசுபதம்’
>>> அப்பர் தம் தேவாரப் பதிகமொன்றில்,
"பாசுபதம் பார்த்தர்க்கு அளித்தார் போலும்"*14
எனப் பாடியிருப்பது இங்கு நினைவு கூரத்தக்கது <<<
பாசுபத அஸ்த்ரத்தைக் குறிப்பது.
பாசுபத மதப் பிரிவிற்கும் இதற்கும்
தொடர்பில்லை. கட்டுரைக்குப்
பொருந்தாத மேற்கோள்.
சிவபெருமானது 25 மூர்த்தங்களுள்
‘கிராத மூர்த்தம்’ ஒன்று. வேட
வடிவுகொண்டு பார்த்தனுக்கு
அருளியதைக் குறிப்பது
தேவ்
டாக்டர் பத்மாவதி அவர்களின் கவனத்துக்கு:
அழிக்கும் கடவுளைச் சமய குரவர் போற்றிய விதம் -
நங்கடம்பனைப் பெற்றவள் பங்கினன்
தென் கடம்பைத் திருக்கரக் கோயிலான்
தன்கடன் அடியேனையும் தாங்குதல்
என்கடன் பணி செய்து கிடப்பதே.
பொடிகள் பூசித் தொண்டர் பின்செல்லப் புகழ்விம்மக்
கொடிக ளோடுந் நாள்விழ மல்கு குற்றாலம்
கடிகொள் கொன்றை கூவிள மாலை காதல்செய்
அடிகண் மேய நன்னகர் போலும் அடியீர்காள்.
மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலைக்
கண்ணில் நல்லஃதுறுங் கழுமல வளநகர்ப்
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே.
அயர்வுளோம் என்றுநீ அசைவு ஒழி நெஞ்சமே
நியர்வளை முன்கையாள் நேரிழை யவளொடுங்
கயல்வயல் குதிகொளும் கழுமல வளநகர்ப்
பெயர்பல துதிசெயப் பெருந்தகை இருந்ததே.
வானமார் திங்களும் நீரும் மருவிய வார்சடையானைத்
தேனமர் கொன்றையினானைத் தேவர் தொழப்படுவானைக்
கானமரும் பிணை புல்கிக் கலைபயிலுங் கடம்பூரில்
தானமர் கொள்கையினானைத் தாள்தொழ வீடெளிதாமே.
>>> அப்பர் பாடலுக்குப் பின் கட்டப்பட்ட கற்கோயில்களில் தான்
சிவனின் பல்வேறு உருவங்களுடன் அகோர மூர்த்தங்கள் இடம் பெறுகின்றன<<<
முற்றிலும் ஆதாரமற்ற கருத்து;
ஆலய அமைப்பும், இறைத் திருமேனிகள் அமைப்பும்
காமிகம், மகுடம் போன்ற ஆகமங்களின் அடிப்படையில்;
அப்பரடிகள் காலத்திற்கு மிகவும் பிற்பட்ட தென்காசி ஆலயத்தில்
ஒரே ஒரு பைரவ மூர்த்தம் மட்டுமே அர்தஜாம வழிபாட்டில்.
பல ஆலயங்களிலும் இப்படியே.
ஈரோடு ஆர்த்ர கபாலீசுவரர் ஆலயத்திலும்
கோர வடிவங்கள் கிடையா.
கோர வடிவங்கள் அமைந்துள்ள ஆலயங்களைப்
பட்டியலிட்டுச் சுட்டுவது இவர்தம் கருத்துக்கு வலிமை சேர்க்கும்
தேவ்
On May 23, 2:48 am, Geetha Sambasivam <geethasmbs...@gmail.com> wrote:
> மின் தமிழ் நண்பர்களுக்கு,
>
> டாக்டர் பத்மாவதி அவர்கள் எழுதிய *சோழர் காலத்துச் சமயம் *பற்றிய கட்டுரைத்
> தொடரை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். கட்டுரையின் ஒரு
> பகுதி இப்போது இடப் படும். கொஞ்சம் கொஞ்சமாய் மற்றப் பகுதிகளும் இடம் பெறும்.
> கட்டுரைகள் மரபு விக்கியிலும் சேர்க்கப் படுகிறது. இங்கே படிக்க இயலாதவர்கள்
> அங்கே படித்து இன்புறலாம். நன்றி.
>
> *சோழர் காலச் சமயம் *
> *
> *
> *எழுத்து: டாக்டர் பத்மா*
>
> கி.பி. 5 ஆம் நூற்றாண்டில் ஆந்திராவின் ஒரு பகுதியை ஆண்டவன் பல்லவ மன்னன்
> திரிலோசன பல்லவன். இவன் சமணர்களை அழித்தான். வேதமல்லாச் சடங்குகளை
> நீக்கிவிட்டு வேதச் சடங்குகளையே கடைப்பிடித்தான். கோயில்களில் வழிபாடு செய்து
> கொண்டிருந்த பிராமணர் அல்லாதவரை நீக்கிவிட்டு வட நாட்டிலிருந்து அழைத்து வந்த
> பிராமணர்களை நியமித்தான்.*1 இந்த வடநாட்டு பிராமணர் என்பவர்கள் காளாமுக,
> பாசுபத, காபாலிக சைவத்தைச் சேர்ந்தவர்கள். கி.பி. 5-ஆம் நூற்றாண்டில்
> ஆந்திராவில் பரவிய இம்மதங்கள் அங்கு இருந்ததற்கான சான்றுகள் ஏராளமாக உள்ளன.
> கி.பி. 5-ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு அச்சைவம் தமிழகத்தில் நுழைந்தது. கி.பி.
> 7-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்த அப்பர் பாடல்களில் நாகப்பட்டினம்
> கோயிலை நாகைக் காரோகணம் என்று பாடுகிறார்.*2 இவரது காலம் மகேந்திர வர்மனின்
> காலம். அதாவது கி.பி. 600--630 ஆகும். திரிலோசன பல்லவன் கல்வெட்டுகள்
> ஆந்திராவில் கி.பி. 470 முதல் 490 வரை கிடைத்துள்ளன*3 எனவே. திரிலோசன பல்லவன்
> காலத்திற்குப் பின்னரும் மகேந்திர வர்மன் காலத்திற்கு முன்னரும் சற்றேறக்
> குறைய கி.பி. 500 முதல் 600-க்குள் வடநாட்டு சைவம் தமிழகத்திற்குள்
> நுழைந்திருக்க வேண்டும்.
>
> அப்பர் நாகப்பட்டினத்தை நாகைக் காரோகணம் என்றும் குடந்தைக் காரோகணம் என்றும்
> கச்சிக் காரோகணம் என்றும் பாடியுள்ளார். வட நாட்டில் காரோகணம் என்ற இடத்தில்
> பிறந்த லகுளீசரின் சித்தாந்தத்தைப் பின்பற்றும் மதம் பாசுபதம். இந்த லகுளீசர்
> பிறந்த இடமான காரோகணம் ஒரு தலையாய பாசுபதர்களின் மையமாகத் திகழ்ந்தது. எனவே
> மேற்கூறிய தமிழ்நாட்டுக் காரோகணங்கள் லகுளீச சித்தாந்தத்தைப் பின்பற்றும்
> பாசுபத சைவத்தின் அடிப்படையில் அமைந்திருந்தன. அப்பர் தம் திருவாரூர்ப்
> பதிகத்தில் பாசுபத, காளாமுக, காபாலிகர் உலவும் திருவாரூர் வீதியைப்
> பாடுகிறார். அவரது சமகால மகேந்திரவர்மனும் காபாலிகர்களையும் பெளத்தர்களையும்
> தமது மத்த விலாச பிரகடனம் என்ற நூலில் கேலி செய்து எழுதியுள்ளார்.
>
> சைவ வேளாளர் குடும்பத்தில் பிறந்து சமண மதத்தைத் தழுவிப் பின்னர் தீவிர சைவ
> சமயத்தவராக மாறிய அப்பர் தாம் தழுவியிருந்த சமண மதத்தைக் கடுமையாகத்
> தாக்குகின்றார்.*4 சம்பந்தரும் அவ்வாறே தாக்கியிருக்கின்றார். ஒரு
> மதத்திலிருந்து இன்னொரு மதத்திற்கு மாறுகின்ற போது தீவிரமாவது மனித இயல்பு.
> அதுபோல வயதில் மூத்த அப்பர் மிகவும் தீவிர பக்தராக மாறுகிறார். சமண பெளத்த
> பாழிகள் இடிக்கப் பட்டிருக்கின்றன. சொத்துக்கள் பறிமுதல் செய்யப்
> பட்டிருக்கின்றன. *5 அப்பரின் பாடல்கள் காபாலிக சைவர்களின் சிவ உருவ
> வழிபாடுகளும், சிவன் கபாலத்தை கையிலேந்தியவனாக, கால காலனாக, பைரவனாக,
> பிக்ஷாடனராக, மேனியெங்கும் திருநீறு பூசியவனாகக் கூறுவதிலிருந்து தீவிர
> சைவர்களான காபாலிகர்களின் சைவ சமயத் தாக்கம் அப்பரிடம் அதிகமிருந்திருக்கிறது.
> மனித உயிர்பலி செய்யும் காபாலிகத்தைப் பின் பற்றியதால் தான் மதுரை,
> திருவோத்தூர் போன்ற இடங்களில் சமணர்களைக் கழுவேற்றிக் கொல்லப் பட்டனரோ என எண்ண
> வேண்டியுள்ளது. *6
>
> இவ்வாறு நாயன்மார், ஆழ்வார்கள் காலத்தில் தோன்றிய பக்தி இயக்கத்தால் சமண,
> பெளத்தர்களின் ஆதிக்கம் பொருளாதாரத்திலும், கல்வி, மருத்துவ, சமூக சேவைகளிலும்
> கட்டாயமாகப் பறிக்கப் பட்டது. அதற்கு மாற்றாக சைவ வைணவ மதங்கள் மக்கள்
> மத்தியில் முன் வைக்கப் பட்டு அவ்விடங்களை நிரப்ப முயற்சி செய்தன. முடிவில்
> வெற்றியும் பெற்றன என்பதில் யாருக்கும் ஐயமிருக்க வாய்ப்பில்லை. இவ்வாறு சைவ
> சமய மறுமலர்ச்சியில் வேளாளரான அப்பரும் பிராமணரான சம்பந்தரும்,பங்கு
> பெற்றிருந்தனர். இவர்களுக்குப் பின்னர் வந்த பிராமணராகிய சுந்தரரும், எனவே.
> வேளாளர்களும், அந்தணர்களும் ஒன்று சேர்ந்து சமணர்களின் பொருளாதார சமய
> ஆதிக்கத்தைக் குறைத்துக் கைப்பற்றி இருக்கின்றார்கள் என்பதை கி.பி. 9-ஆம்
> நூற்றாண்டில் நிறுவப் பட்ட பிற்காலச் சோழராட்சியில், வேளாள அந்தணர்களின்
> பொருளாதார, சமய ஆதிக்கத்தையும் அரசியல் செல்வாக்கையும் கொண்டு அறியலாம்.
> சமணர்களின் செல்வாக்கும் செல்வமும் வணிகர்களின் வியாபார ரீதியில்
> அமைந்தது.வணிகர்கள் ஆதரித்த மதம் சமண மதம். சமண முனிவர்கள் நல்லவர்களாக
> இருந்தும் சமூகத் தொண்டுகள் பல செய்தும் நீர்ப் பாசனத்திற்கு வேண்டிய குளம்,
> தூம்பு, போன்றவை செய்து கொடுத்தும் நல்ல மனத்தவர்களாக இருந்திருந்தும்,
> விவசாயத்தை முன்னிலைப் படுத்தித் தங்கள் பொருளாதாரத்தையும் நாட்டின்
> பொருளாதாரத்தையும் வளர்த்தார்களில்லை. தமிழ்நாடோ ஒரு சிறந்த முழு விவசாய நாடு.
> விவசாய வளர்ச்சியில் தான் உழுகுடி மக்களின், பிற தொழிலாளிகளின் வாழ்வும்
> உயர்வும் அடங்கியிருந்தது. எனவே சமண மதத்தின் ஆதிக்கத்தைக் குறைத்து--விவசாய
> நாடாக நிலவுடமைச் சமுதாயமாக அச்சமுதாயத்தின் கருவூலமாகக் கோவில்களை அமைத்து
> மக்களின் அன்றாட வாழ்வில் கோயிலோடு அதாவது சைவ மதத்தோடு தொடர்பு
> படுத்தியதாகவும் அமைக்கப் பட்ட அரசமைப்பே பிற்காலச் சோழ வரலாற்றின்
> சாராம்சமாகும்.விவசாயத்தைப் பெருக்க எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப் பட்டன
> என்பதை நோக்கினால் மிகவும் பிரமிப்பாக இருக்கும். நீர்ப்பாசனத்திற்கு அவர்கள்
> செய்த செயல்களைக் கல்வெட்டுக்களில் படிக்கும்போது பெரு வியப்பை ஏற்படுத்தும்.
>
> பிற்காலச் சோழராட்சியில், கி.பி. 9--ஆம் நூற்றாண்டில் அந்தணர்களும்,
> வேளாளர்களும் மிக உயர்ந்த பதவியை வகித்தனர் எனச் சொல்லித் தெரிய
> வேண்டியதில்லை. கி.பி. 6--ஆம் நூற்றாண்டில் அவர்கள் நடத்திய போராட்டத்தின்
> பலனை 9-ஆம் நூற்றாண்டில் மிக நன்றாகவே அனுபவித்தார்கள்.அமைச்சர்களாகவும்
> பிரமதேய சதுர்வேதி மங்கலங்களின் சபை நிர்வாகிகளாகவும் படைத் தளபதிகளாகவும்
> கோயில் அதிகாரிகளாகவும் நீதி வழங்குபவர்களாகவும் முக்கிய பதவிகளில்
> அமர்ந்திருந்த அவர்கள் மிகுந்த செல்வந்தர்களாக வாழ்ந்தனர்.அவர்கள் சைவக்
> கோயில்களுக்குத் தங்கள் செல்வத்தின் காரணமாக ஏராளமான பொன்னையும், பொருளையும்
> வாரி வழங்கினர். செப்புத் திருமேனிகளை எழுந்தருளிவித்தனர். ஏன் கோயில் பலவும்
> கட்டியிருக்கின்றனர். நல்ல வளமிக்க ஊர்கள் பிரமதாயமாகவும் சதுர்வேதி
> மங்கலங்களாகவும் அந்தணர்களுக்கு அளிக்கப் பட்டன.
>
> இந்த இரு குலத்தவரும் அதிக செல்வாக்குப் பெற்றிருந்தாலும் கல்வி கேள்விகளிலும்
> நாட்டின் கருவூலங்களாக ஆங்காங்கே நிறுவப் பட்டிருக்கும் கோயில்களின்
> கருவூலத்திலும், நிர்வாக அமைப்புக்களிலும் முதன்மை பெற்று விளங்கியவர்கள்
> அந்தணர்கள்.இறையிலியாக பிரமதேய சதுர்வேதி மங்கல நிலங்கள் வழங்கப் பட்டது
> அந்தணர்களுக்குத் தான். வளமிக்க அவ்வூர்களுக்கு சபை அதிகாரிகள் அல்லது
> அங்கத்தினர்கள் அவர்கள் தாம். இந்த அளவுக்கு வேளாளர்கள் செல்வாக்குப்
> பெற்றிருக்க வில்லை. அரசர்களிடம் அமைச்சர்களாகவும், மிகவும் குறைந்த அளவில்
> ஆங்காங்கே கி.பி. 11--ஆம் நூற்றாண்டின் சித்ரமேழி பெரிய நாடு என்னும்
> அமைப்பிலும் அவர்கள் அதிகாரிகளாக இருந்தார்களே தவிர, ஊர் நிர்வாகத்தில்
> அந்தணர்களைப்போல அதிகமான செல்வாக்குப் பெற்றிருக்கவில்லை என்பதை அறிய
> முடிகிறது. முதலாம் இராஜ இராஜ சோழன் காலத்தில் அமணகுடியைச் சேர்ந்த கிருஷ்ணன்
> ராமன் குடும்பத்தார் எந்த அளவுக்கு பரம்பரை பரம்பரையாக சோழர்களுக்கு
> அதிகாரிகளாக இருந்தார்கள் என்பதை திரு ஒய். சுப்பராயலு அவர்கள் எழுதிய
> கட்டுரையின் மூலம் அறிந்து கொள்ளலாம். *7
>
> அந்தணர்களின் இந்த வளர்ச்சியும், செல்வாக்கும் நிலவுடமைச் சமுதாய வளர்ச்சியின்
> உச்சகட்டத்தை எய்திய முதலாம் இராஜராஜனின் செல்வாக்கிற்கு ஏற்றாற்போல அவன்
> காலத்தில் உயர்ந்திருந்தது. அந்தண சமூகத்தினரின் இந்த வளர்ச்சி ராஜராஜ சோழனின்
> போக்கையே திசை திருப்புமளவு காணப்பட்டது. ராஜராஜ சோழனின் கல்வெட்டுகளை ஊன்றிப்
> பார்க்கின்றபோது அவன் அந்தணர்களின் செல்வாக்கினைக் குறைக்க அவர்களே அறியாத
> வகையில் புத்திசாலித் தனமாகப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றான்.
> தந்தை சுந்தர சோழன் காலத்தில் பிரம்மாதிராயர்களாகிய அந்தண உயர் அதிகாரிகளால்
> தமையன் ஆதித்த கரிகாலன் கொலையுண்ட செய்தி அந்தணர்களின் ஆதிக்கத்தின் உச்ச
> கட்டமாக இருந்திருக்க வேண்டும். இத்தகைய காலகட்டத்தில் தான் ராஜராஜ சோழனின்
> சிந்தை வேறுவிதமாகச் செயல் பட்டது.
>
> இச்சமயத்தில்--சமணர்களின் பொருளாதார சமய ஆதிக்கத்தைக் குறைக்க அப்பர்,
> சம்பந்தர் எடுத்த நடவடிக்கைகளை நினைவு கூர வேண்டும். சமணத்தை அழிக்க
> அப்பருக்குக் காபாலிகம் தேவைப் பட்டது. இவர் காலத்தில் வாழ்ந்த மகேந்திரவர்மன்
> எடுத்த கோயில்களிலோ பாண்டிய நாட்டிலோ அகோர உருவங்கள் இல்லை. இக்கால
> கட்டங்களில் எடுத்த கோயில்களே நமக்குக் கிடக்கும் காலத்தால் முந்திய கோயிலும்
> உருவங்களுமாகும். அப்பர் பாடலுக்குப் பின் கட்டப்பட்ட கற்கோயில்களில் தான்
> சிவனின் பல்வேறு உருவங்களுடன் அகோர மூர்த்தங்கள் இடம் பெறுகின்றன.சமணர்களை
> அழிக்க எழுச்சி செய்ய அப்பர்--சம்பந்தர், அழிக்கும் கடவுளான சிவனின் அகோர
> உருவங்களைத் தானே வருணிக்க முடியும்.
அப்பர் பெருமான் காட்டும் இறைமையில்
கொடுமை இல்லை -
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசுவண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தன் இணையடி நீழலே
தமிழகச் சைவம் இறைமை கருணையே வடிவானது
என்று கூறுகிறது; செருக்கை அழிப்பதும், தீமையைக்
களை கட்டுவதும் இறைவனின் பொறுப்பு. இறைவன்
மேற்கொள்ளும் ஐந்தொழில்களும் உயிர்களை
உய்விப்பதில் நோக்கம் கொண்டவை.
அவற்றையே அடியார்கள் பாடியுள்ளனர்.
மெய்யடியவர்கள் பெறும் பேறு ’அறக்கருணை ’
என்றும், தீயோர் பெறும் தண்டனை ’மறக்கருணை ’
என்றும் அழைக்கப்படுகிறது. இரண்டிலும் சீவர்கள்
உய்வு பெறுவதே நோக்கம்.
செருக்கடைந்த பிரமனும், தக்ஷ ப்ரஜாபதியும்,
இராவணனும், தாருக வனத்தின் முனிவர்களும்
இறைவனிடம் பாடம் பெற்றனர்.
காமனது ஆற்றலும், காலனது வலிமையும்
இறைமையின்முன் செயலொழிந்தன.
வீரட்டத் தலங்கள் இறைவன் செய்த மறக்கருணையை
நினைவுறுத்துவன.
ஆலவாய், அன்பில்,குடமூக்கு, திருவண்ணாமலை,கருகாவூர், சிராப்பள்ளி,
நல்லம்,
பெண்ணாகடம், மறைக்காடு, திருப்பருப்பதம், கோகர்ணம், இராமேசுவரம்,
பாதிரிப்புலியூர் போன்ற 52 தலங்களை அப்பரும், சம்பந்தரும் சேர்ந்து
பாடியுள்ளனர்.
முனைவர் பத்மாவதியின் கருத்துப்படி இந்த ஆலயங்களில் சிவபெருமானின் கோர
வடிவங்கள்
இடம் பெற வேண்டும்; ஏனெனில் இவற்றில் பல சமய குரவர் காலத்திற்குப்பின்
விரிவாக்கம் பெற்றவை. தம் கருத்தை உறுதிப்படுத்த இதைச் செய்ய வேண்டிய
கடமை
அவருக்கிருப்பதால் இந்த ஆலயங்களில் கோர வடிவங்கள் , கோரமான வழிபாடுகள்
உள்ளன என்பதை டாக்டர் பத்மாவதி அவர்கள் நிறுவ வேண்டும், மிக முக்கியமாக
சிவ ராஜதானியான தில்லை ஆலயத்தில் .
(திருமிகு கீதா சாம்பசிவம் அவர்கள் தில்லை ஆலயத்தைப் பற்றி
நன்கு அறிவார்; அவரே விளக்கம் கூறலாம்)
நெடிய வரலாறு கொண்ட தாமிர சபையில் (நெல்லை)
கோர வடிவங்களை வழிபடுகின்றனரா ? (சமய குரவர்
காலத்துக்குப் பின்னும் விரிவாக்கம் பெற்ற மிக முக்கியமான
பாண்டிநாட்டுத் தலம்)
சமய குரவர்களைப் பெரிதும் போற்றிய தெய்வச் சேக்கிழார் சமைத்த
குன்றத்தூர் சிவாலயத்தின் கண்ணும் அரனாரின் கோர வடிவங்கள்
இருக்க வேண்டும், இல்லையா ?
பைரவ சந்நிதிகள் (க்ஷேத்ர பாலர்) ஆகமம் வற்புறுத்துவதால் ஏற்பட்டவை.
அதைச் சேர்க்க இடமில்லை.
அன்பு செய்த எறும்புக்கும், யானைக்கும், சிலந்திக்கும்,
நாரைக்கும் உய்வு கிடைத்ததாகச் சிவநெறி சொல்கிறது;
சாக்கிய நாயனாரையும் சைவம் ஏற்றது.
எல்லை கடந்து அப்பாலும் அடி சார்ந்தாரையும்
ஒதுக்காமல் இறை வடிவாகப் போற்றுகிறது.
காபாலிகம், காளாமுகம், பாசுபதம் என்றெல்லாம்
சொல்லி அம்மையார் அச்சுறுத்துவது மிகவும்
புதுமையாக உள்ளது





அவங்க கட்டுரையின் கருத்துகளோட எனக்கும் மாறுபட்ட கருத்துக்களே உள்ளன. அவங்களை நேரில் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் கேட்கலாம். கணினிப் பயிற்சி போதலைனு வருத்தப்பட்டாங்க. அதனாலும் பதில் கொடுக்க முடியலைனு நினைக்கிறேன். "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
மோகன ரங்கன் அவர்களுடன் பேசிய போதும் அவரது வேதாந்த் புரிதலை
மறுதலித்தார். அவர்கள் மார்க்சீய சிந்தனையில் குமுகாய வளர்ச்சியைக்
காண்கின்றனர். ஒரு பக்தன் இறைமையைக் காண்பதும், ஒரு அறிவுஜீவி அதைக்
காண்பதற்கும் வேறுபாடுள்ளது. அன்று, ‘தன்னிலை அறியா, தொன்மிகு பெருமர’
என்பது போன்ற வசனங்களை ஒரு பக்தன் எப்படி புரிந்து கொண்டு ஆறுதல்
அடைகிறான், ஒரு அறிவாளி (பண்டிதன்) எப்படிக் குழப்பிக் கொண்டு கொதிநிலை
அடைகிறான் என்று அன்று பேசினோம். இல்லையா?
எப்படியாயினும் டாக்டர் பத்மா பழகுவதற்கு இனியவர். கேள்விகளுக்குப்
பயப்படாதவர். :-)
க.>
2012/5/29 Geetha Sambasivam <geetha...@gmail.com>
> நேரிலே பார்த்தப்போவே இது குறித்துப் பேசினோம். அவங்க என்னோட கருத்துக்களை ஒத்துக்கலை. அவங்க கட்டுரையின் கருத்துகளோட எனக்கும் மாறுபட்ட கருத்துக்களே உள்ளன. அவங்களை நேரில் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் கேட்கலாம். கணினிப் பயிற்சி போதலைனு வருத்தப்பட்டாங்க. அதனாலும் பதில் கொடுக்க முடியலைனு நினைக்கிறேன்.




அன்பின் கீதா:
மோகன ரங்கன் அவர்களுடன் பேசிய போதும் அவரது வேதாந்த் புரிதலை
மறுதலித்தார். அவர்கள் மார்க்சீய சிந்தனையில் குமுகாய வளர்ச்சியைக்
காண்கின்றனர். ஒரு பக்தன் இறைமையைக் காண்பதும், ஒரு அறிவுஜீவி அதைக்
காண்பதற்கும் வேறுபாடுள்ளது. அன்று, ‘தன்னிலை அறியா, தொன்மிகு பெருமர’
என்பது போன்ற வசனங்களை ஒரு பக்தன் எப்படி புரிந்து கொண்டு ஆறுதல்
அடைகிறான், ஒரு அறிவாளி (பண்டிதன்) எப்படிக் குழப்பிக் கொண்டு கொதிநிலை
அடைகிறான் என்று அன்று பேசினோம். இல்லையா?
எப்படியாயினும் டாக்டர் பத்மா பழகுவதற்கு இனியவர். கேள்விகளுக்குப்
பயப்படாதவர். :-)
க.>
வரலாற்று நிகழ்வு இருவருக்கும் ஒன்றுதான்;
அறிவு ஜீவி என்றாலும் ஒரு முடிவுக்கு வர
வேண்டுமென்றால் ஆதாரம் காட்ட வேண்டிய பொறுப்பு
உண்டு. வெற்று ஊகம் உண்மையாகாது.
அகோர - இதற்குரிய பொருளைத் தெரிந்துகொண்டுதான்
டாக்டர் பத்மாவதி அவர்கள் எழுதுகிறாரா ?
அகோர (aghora) - கோரமற்றது
अघोर : (H1) अ-घोर [p= 7,1] [L=1392] mfn. not terrific
http://www.sanskrit-lexicon.uni-koeln.de/monier/
”யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்றபோது..”
என்றுபாடிய அப்பரடிகளாரைக் காபாலிகத்தில் சேர்ப்பதுதான்
மிகவும் கோரமாக உள்ளது.
காபாலிக, பாசுபத சமயங்கள் தமிழகத்தில்
இருந்துள்ளன என்றாலும் அவற்றால் மக்களின்
வரவேற்பைப்பெற்று இங்கு வேரூன்ற முடியவில்லை.
ராசிபுரம், ஈரோடு பிராந்தியத்தில் அம்மதங்கள்
இருந்துள்ளன. கபாலீசுவரம், பசுபதீசுவரம்
போன்ற பெயர்கள் ஊகத்துக்கு வலிமை
சேர்ப்பன. ஆனால் சமய குரவர் காலத்தில்
நெறிப்படுத்தப்பட்டன.
அருவுருவத் திருமேனியான இலிங்க வழிபாட்டுக்கு
அடுத்ததாகத் தமிழக ஆலயங்களில் முதன்மை பெற்று
விழாக் காண்பது ஆடல் வல்லானின் மூர்த்தமே;
பிக்ஷாடநர் ஒரு நாள் உலா வருவார். குறுநகை தவழும்
இவ்விரு மூர்த்தங்களையும் கோர வடிவத்தோடு
சேர்க்க இயலாது
தேவ்
On May 29, 1:17 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> அன்பின் கீதா:
>
> மோகன ரங்கன் அவர்களுடன் பேசிய போதும் அவரது வேதாந்த் புரிதலை
> மறுதலித்தார். அவர்கள் மார்க்சீய சிந்தனையில் குமுகாய வளர்ச்சியைக்
> காண்கின்றனர். ஒரு பக்தன் இறைமையைக் காண்பதும், ஒரு அறிவுஜீவி அதைக்
> காண்பதற்கும் வேறுபாடுள்ளது. அன்று, ‘தன்னிலை அறியா, தொன்மிகு பெருமர’
> என்பது போன்ற வசனங்களை ஒரு பக்தன் எப்படி புரிந்து கொண்டு ஆறுதல்
> அடைகிறான், ஒரு அறிவாளி (பண்டிதன்) எப்படிக் குழப்பிக் கொண்டு கொதிநிலை
> அடைகிறான் என்று அன்று பேசினோம். இல்லையா?
>
> எப்படியாயினும் டாக்டர் பத்மா பழகுவதற்கு இனியவர். கேள்விகளுக்குப்
> பயப்படாதவர். :-)
>
> க.>
>
> 2012/5/29 Geetha Sambasivam <geethasmbs...@gmail.com>
--
காரைக்கால் அம்மையார் செய்த மூத்த திருப்பதிகம் :
எட்டி, இலவம் ஈகை சூரை காரை படர்ந்தெங்கும்
சுட்ட சுடலை சூழ்ந்த கள்ளி சோர்ந்த குடர்கௌவப்
பட்ட பிணங்கள் பரந்த காட்டிற் பறைபோல் விழிகட்பேய்
கொட்ட முழவங் கூளி பாடக் குழகன் ஆடுமே.
நிணந்தான் உருகி நிலந்தான் நனைப்ப நெடும்பற் குழிகட்பேய்
துணங்கை யெறிந்து சூழும் நோக்கிச் சுடலை நவிழ்த் தெங்கும்
கணங்கள் கூடிப் பிணங்கள் மாந்திக் களித்த மனத்தவாய்
அணங்கு காட்டில் அனல்கை யேந்தி அழகன் ஆடுமே.
செத்த பிணத்தைத் தெளியா தொருபேய் சென்று விரல்சுட்டிக்
கத்தி உறுமிக் கனல்விட் டெறிந்து கடக்கப் பாய்ந்துபோய்ப்
பத்தல் வயிற்றைப் பதைக்க மோதிப் பலபேய் இரிந்தோடப்
பித்த வேடங் கொண்டு நட்டம் பெருமான் ஆடுமே.
இதை எந்தக் கோணத்தில் பார்க்க வேண்டும் ?
டாக்டர் . பத்மாவதி அவர்களின் கருத்துப்படி காரைக்கால் அம்மையார்
பாசுபத, லகுலீச, காளாமுக, காபாலிகப் பிரிவுகளில்
எந்தப் பிரிவைச் சேர்ந்தவர் ?
விடை மெதுவாகவே வரட்டும்
தேவ்
On May 29, 1:22 am, Geetha Sambasivam <geethasmbs...@gmail.com> wrote:
> புரிந்தது கண்ணன். டாக்டர் பத்மாவதியால் கணினியில் பதிலளிக்கும் அளவுக்குத்
> தேர்ச்சி இல்லை என்பதை என்னிடம் நேரிலேயே சொன்னார்கள். ஆகவே அவர்கள் பதில்
> வரத் தாமதம் ஆகலாம். மெதுவாக வரட்டும். அவர்கள் பார்க்கும் கோணத்தைச்
> சொல்கின்றார்கள். என்னளவில் அவ்வளவே! என் கோணம் வேறு! [?][?][?][?]
>
> 2012/5/29 N. Kannan <navannak...@gmail.com>
>
>
>
>
>
>
>
> > அன்பின் கீதா:
>
> > மோகன ரங்கன் அவர்களுடன் பேசிய போதும் அவரது வேதாந்த் புரிதலை
> > மறுதலித்தார். அவர்கள் மார்க்சீய சிந்தனையில் குமுகாய வளர்ச்சியைக்
> > காண்கின்றனர். ஒரு பக்தன் இறைமையைக் காண்பதும், ஒரு அறிவுஜீவி அதைக்
> > காண்பதற்கும் வேறுபாடுள்ளது. அன்று, ‘தன்னிலை அறியா, தொன்மிகு பெருமர’
> > என்பது போன்ற வசனங்களை ஒரு பக்தன் எப்படி புரிந்து கொண்டு ஆறுதல்
> > அடைகிறான், ஒரு அறிவாளி (பண்டிதன்) எப்படிக் குழப்பிக் கொண்டு கொதிநிலை
> > அடைகிறான் என்று அன்று பேசினோம். இல்லையா?
>
> > எப்படியாயினும் டாக்டர் பத்மா பழகுவதற்கு இனியவர். கேள்விகளுக்குப்
> > பயப்படாதவர். :-)
>
> > க.>
>
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> > to visit our Muthusom Blogs at:
> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
> > send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil
>
>
>
> 360.gif
> < 1KViewDownload
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil