தமிழ்மணி - விளம்பிநாகனாரின் நான்மணிக்கடிகை

474 views
Skip to first unread message

Kannan Natarajan

unread,
Aug 14, 2011, 3:05:31 AM8/14/11
to Min Thamizh

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று நான்மணிக்கடிகை.

விளம்பிநாகனார் என்ற புலவரால் இயற்றப்பட்டது. 

நான்கு மணிகள் உள்ள ஆபரணம் என்று பொருள்.

கடிகை என்ற சொல்லுக்கு
  • துண்டம்
  • நாழிகை
  • கரகம்
  • உண்கலம்
  • குத்துக்கோல்
  • தோள்வளை
  • ஊர்ச்சபை
  • மங்கலப்பாடகன்
  • முகூர்த்தம் பார்ப்பவன்
  • கேடகம்
  • திரைச்சீலை
  • கட்டுவடம்
முதலிய பல பொருள்கள் உள்ளன. 

இங்கு கடிகை என்பது ஆபரணத்தைக் குறிக்கும்.

நான்கு மணிகளால் ஆகிய ஆபரணம் என்று பொருள்படும்.

ஒவ்வொரு பாடலிலும் நான்கு மணிகள் போன்ற சிறந்த கருத்துகள் தருகின்றது நான்மணிக்கடிகை. 

கடவுள் வாழ்த்துச் செய்யுள்கள் இரண்டு நீங்கலாக இந்நூலில் 101 பாடல்கள் உள்ளன.

ஒரு மிகைப்பாடலும் கூடுதலாக உள்ளது.

விளம்பிநாகனாரின் காலம் கி.பி.4ஆம் நூற்றாண்டு என்பர்.

Kannan Natarajan

unread,
Aug 14, 2011, 3:07:30 AM8/14/11
to Min Thamizh
எள்ளற்க, என்றும் எளியர் என்று! என் பெறினும் 
கொள்ளற்க, கொள்ளார் கை மேற்பட! உள்சுடினும் 
சீறற்க, சிற்றில் பிறந்தாரை! கூறற்க, 
கூறல்ல வற்றை விரைந்து!
                                                                                   (பாடல் - 1) 

எளியர் என்று யாரையும் இகழாதே.
மற்றவர் தம் கையை உயர்த்திக் கொடுக்க, நீ கை தாழ்த்தி யாரிடமும் வாங்காதே. எளிய குடியில் பிறந்தவர் வருத்தத்தைத் தந்தாலும் அவர்மேல்  சினம் கொள்ளாதே.
சொல்லக்கூடாதவற்றை அவசரப்பட்டுச் சொல்லாதே.


நன்றி:- தினமணி

Kannan Natarajan

unread,
Sep 2, 2011, 6:13:49 PM9/2/11
to Min Thamizh
பறை பட வாழா அசுணமா; உள்ளங்
குறைபட வாழார் உரவோர் - நிறைவனத்து
நெற்பட்ட கண்ணே வெதிர்சாம் தனக்கொவ்வாச்
சொற்பட வாழாதாஞ் சால்பு.
                                                                                     (பாடல் - 2) 

உரவோர் - அறிவுடையோர்
அசுணமா - கேகயப் பறவைகள்

கேகயப் பறவைகள் பறையோசையைக் கேட்டால் இறந்துபடும்.
சான்றோர்கள் தன்மானக் குறைவு ஏற்பட்டால் உயிர் வாழ மாட்டார்கள். நெல்லுண்டான முதிர்ந்த மூங்கில் உடனே பட்டுப் போவது போல சான்றோர் தன் மீது பழி ஏற்பட்டால் உயிர் வாழ மாட்டார்கள்.

நன்றி:- நிலா முற்றம்

Kannan Natarajan

unread,
Sep 2, 2011, 6:15:45 PM9/2/11
to Min Thamizh
மண்ணி அறிப, மணி நலம், பண் அமைத்து 
ஏறியபின் அறிப, மாநலம், மாசறச் 
சுட்டு அறிப, பொன்னின் நலம் காண்பார், கெட்டு அறிப, 
கேளிரான் ஆய பயன்.
                                                                                    (பாடல் - 3) 

மணிகளின் தரத்தை நீரில் கழுவிய பிறகே அறிந்துகொள்ள முடியும்.
சேணம் பூட்டி  ஏறி அமர்ந்து பயணித்த பின்பே குதிரையின் தரம் தெரியும். உருக்கிப் பார்த்த பின்புதான்  தங்கத்தின் தராதரத்தை (தரம்) அறிய முடியும். துன்பத்தில் நாம் அல்லல்படும்போதுதான் உண்மை உறவினரின் உண்மை அன்பு தெரியு
ம்.

Kannan Natarajan

unread,
Sep 10, 2011, 4:23:02 PM9/10/11
to Min Thamizh
கள்ளி வயிற்றின் அகில் பிறக்கும், மான் வயிற்று
ஒள் அரிதாரம் பிறக்கும், பெருங் கடலுள்
பல் விலைய முத்தம் பிறக்கும், அறிவார் யார்,
நல்ஆள் பிறக்கும் குடி?
                                                                    (பாடல் - 4)

கள்ளியின் வயிற்றில் மணம் தரும் அகில் பிறக்கும்.
மானின் வயிற்றில் சிறந்த அரிதாரம் பிறக்கும்.
பெருங்கடலுள் உள்ள சிப்பியில் முத்து பிறக்கும்.
ஆனால், நல்லவர் பிறக்கும் குடியை யார் அறிவார்?
(நல்லவரா? கெட்டவரா? என்பதைப் பிறப்பு தீர்மானிப்பதில்லை என்பதை, "நல்ஆள் பிறக்கும் குடி", என்னும் தொடர் விளக்குகிறது).

Geetha Sambasivam

unread,
Sep 10, 2011, 9:07:55 PM9/10/11
to mint...@googlegroups.com
நன்றி.

2011/9/11 Kannan Natarajan <thar...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Innamburan Innamburan

unread,
Sep 11, 2011, 2:18:22 AM9/11/11
to mint...@googlegroups.com
என்னே ஒப்புமை!

'...Full many a flower is born to blush unseen,

And waste its sweetness on the desert air.


Some village-Hampden, that with dauntless breast

The little tyrant of his fields withstood,

Some mute inglorious Milton here may rest,

Some Cromwell, guiltless of his country's blood...'

~ "ELEGY WRITTEN IN

A COUNTRY CHURCH-YARD": Thomas Gray (1716 -1771)

இன்னம்பூரான்

11 09 2011


2011/9/11 Geetha Sambasivam <geetha...@gmail.com>

Kannan Natarajan

unread,
Sep 18, 2011, 6:35:57 PM9/18/11
to Min Thamizh
கல்லில் பிறக்கும், கதிர் மணி; காதலி
சொல்லில் பிறக்கும், உயர் மதம் - மெல்லென்
அருளில் பிறக்கும், அற நெறி, எல்லாம்
பொருளில் பிறந்துவிடும்.
                                                                     (பாடல் - 5)

கதிர் மணி - ஒளியுள்ள மணிகள்

ஒளியுள்ள உயர்ந்த மணிகள் எல்லாம் மலையில் உண்டாகும்.
காதலியின் இனிய மொழிகள் மிகுந்த களிப்பை ஏற்படுத்தும்,
மென்மையான அருளுள்ளம் கொண்டவர்களிடத்து அறநெறி தோன்றும்.
இவை எல்லா இன்பமும், செல்வத்தினால் உண்டாகிவிடும்.

Kannan Natarajan

unread,
Sep 18, 2011, 6:37:40 PM9/18/11
to Min Thamizh
திருஒக்கும் தீதுஇல் ஒழுக்கம்; பெரிய
அறன் ஒக்கும், ஆற்றின் ஒழுகல்; பிறனைக்
கொலை ஒக்கும், கொண்டு கண்மாறல்; புலைஒக்கும்;
போற்றாதார் முன்னர் செலவு.

                                                                     (பாடல் - 6)

ஒருவரிடம் உள்ள நல்லொழுக்கமே செல்வமாகும்.
(நன்)நெறியுடன் வாழ்தல் பெரும் அறச்செயலாகும்.
ஒருவனைப் பற்றி புறம் கூறுதல் அவனையே கொலை செய்வது போன்றதாகும். மதியாதார் வாசலை மிதிப்பது புலை வாழ்வைப் போன்றதாகும்.

Kannan Natarajan

unread,
Sep 25, 2011, 7:54:46 PM9/25/11
to Min Thamizh
கள்வம் என்பார்க்கும் துயில் இல்லை, காதலிமாட்டு 
உள்ளம் வைப்பார்க்கும் துயில் இல்லை, ஒண் பொருள் 
செய்வம் என்பார்க்கும் துயில் இல்லை, அப்பொருள் 
காப்பார்க்கும் இல்லை துயில்.
                                                          (பாடல் - 7) 

திருடத் திட்டமிட்டுக் கொண்டிருப்பவனுக்குத் தூக்கம் வராது.
காதலியையே  நினைத்துக் கொண்டிருப்பவனுக்குத் தூக்கம் வராது.
பொருள் தேடி உயர வேண்டும்  எனும் ஊக்கம் உடையவனுக்குத் தூக்கம் வராது. நிறைய பொருளைச் சேர்த்தவனுக்கு  அவற்றைக் காக்க வேண்டும் எனும் கவலையால் தூக்கம் வராது.

Kannan Natarajan

unread,
Oct 8, 2011, 6:56:46 PM10/8/11
to Min Thamizh
கற்றார்முன் தோன்றா கழிவிரக்கம், காதலித்து ஒன்று
உற்றார்முன் தோன்றா உறாமுதல், தெற்றென
அல்ல புரிந்தார்க்கு அறம் தோன்றா, எல்லாம்
வெகுண்டார்முன் தோன்றாக் கெடும்.
                                                                     (பாடல் - 8)

நடந்து முடிந்தவை பற்றிய நினைவுகளும், கழிவிரக்கங்களும் சான்றோரிடத்துத் தோன்றாது.
ஆர்வமுடன் ஒன்றை அடைய வேண்டும் என உழைத்து இலக்கை அடைந்தவுடன் இடையே பெற்ற துன்ப நினைவுகள் ஊக்கம் உடையாரிடத்தில் தோன்றாது.
மற்றவர்க்கு அல்லனவே (கெட்டதையே) செய்து பழகியவர்க்கு அறம் தோன்றாது.
முன்கோபிகளிடம் எந்த நன்மையும் தோன்றாது.

Kannan Natarajan

unread,
Oct 8, 2011, 6:59:22 PM10/8/11
to Min Thamizh
நிலத்துக்கு அணி என்ப, நெல்லும் கரும்பும்
குளத்துக்கு அணி என்ப, தாமரை; பெண்மை
நலத்துக்கு அணி என்ப, நாணம்; தனக்கு அணி
தான்செல் உலகத்து
உலகத்து அறம்.
                                                                    
  (பாடல் - 9)


நல்ல நிலத்துக்கு அணிகலன் நெல்லும், கரும்பும் ஆகும்.
குளத்துக்கு அணிகலன் தாமரைப் பூ.
பெண்ணுக்கு அணிகலன் நாணம் (வெட்கம்).
தனக்கு அணிகலன் உலகத்துக்குத் தான் செய்யும் தர்மம்.

Kannan Natarajan

unread,
Oct 16, 2011, 1:56:30 AM10/16/11
to Min Thamizh
கந்தில் பிணிப்பர் களிற்றை; கதம் தவிர 
மந்திரத்தினால் பிணிப்பர் மா நாகம்; கொந்தி 
இரும்பின் பிணிப்பர் கயத்தை; சான்றோரை 
நயத்தின் பிணித்துவிடல்!
                                                            (பாடல்-10) 

யானையின் சினத்தைக் கட்டிப்போடக் கட்டுத்தறி.
நாகப்பாம்பைக் கட்டிப்போட மந்திரம்.
கயவரைக் கட்டிப்போட இரும்பு விலங்கு.
சான்றோரைக் கட்டிப்போட நயம்மிக்க இனிய சொற்கள்.

N. Kannan

unread,
Oct 16, 2011, 4:09:14 AM10/16/11
to mint...@googlegroups.com
2011/10/16 Kannan Natarajan <thar...@gmail.com>:

> நாகப்பாம்பைக் கட்டிப்போட மந்திரம்.

இது பற்றிய சுவடிகள் கிடைத்தால் நலம். கோழியையும் மந்திரிச்சு அப்படியே
தூங்க வைக்கிறார்கள். சுரா மீனையும் சில இடங்களில் தொடுவதன் மூலம்
ஸ்தம்பிக்க வைக்க முடிகிறது. எங்களூர் பால்க்காரப்பாட்டி தேள் கடியை
மந்திரிச்சு இறக்குவார்!! இவையெல்லாம் என்ன?

> சான்றோரைக் கட்டிப்போட நயம்மிக்க இனிய சொற்கள்.
>

அடடா! எவ்வளவு உண்மை!

நா.கண்ணன்

s.bala subramani B+ve

unread,
Oct 16, 2011, 4:14:47 AM10/16/11
to mint...@googlegroups.com
சுறா கட்டு மந்திர வாதிகள் இன்றும் இருக்கிறார்கள் குமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில்
தண்ணீரை கலக்கி விட்டு அதன் தோள் பட்டையில் அடிக்க வேண்டும்

புலியை பொறி வைத்து  பிடிப்பது, கரடியை பிடிப்பது என்று பல நூல்கள் ஒரிசாவில் பதிப்பித்து இருக்கிறார்கள்

2011/10/16 N. Kannan <navan...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
S.Balasubramani B+ve
My Blog
http://balubpos.blogspot.com/

N. Kannan

unread,
Oct 16, 2011, 4:31:11 AM10/16/11
to mint...@googlegroups.com
பாலு! இன்னும் எங்கள் பால்க்காரப் பாட்டியை மறக்க முடியவில்லை. மந்திரம்
சொல்லிச் சொல்லி விஷத்தை இறக்கிவிடுவாள். என்ன அதிசயம்? இதை எப்படி
அறிவால் விளங்கிக்கொள்வது என்று தெரியவில்லை? :-)

கன்னுக்குட்டியை கழுத்தின் அடியில் வருடினால் சும்மா மெய்மறந்து இருப்பது
போல் சுறாவின் கழுத்துப்பகுதியை தொட்டு புரட்டிப்போட்டுவிட்டால் அது
வசியமாகிவிடுகிறது! (நன்றி: நேஷனல் ஜியாகிரஃபிக்)

நா.கண்ணன்

2011/10/16 s.bala subramani B+ve <sunke...@gmail.com>:

--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..

Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

s.bala subramani B+ve

unread,
Oct 16, 2011, 4:40:52 AM10/16/11
to mint...@googlegroups.com
அடுத்த தடவை தமிழகம் வரும் போது என்னுடன் குமரி கடலில் உள்ள சுறா பாருக்கு படகில் வாருங்கள் நேரிலே கான்பிக்கேறேன்

நுளையர்களும் முக்குவர்களும் மிகவும் சிறந்தவர்கள் சுறாபிடித்தலில்

இன்றும் உலா சுறா பிடி கப்பல்களில் அதிகம் வேலை செய்பவர்கள்  சுறா  வேட்டை யாடிகள் என்ற தூத்தூர் மீனவர்கள் தான்

எல்லா உயிர்களுக்கும்   கழுத்து பகுதி மிகவும் முக்கியமானது



2011/10/16 N. Kannan <navan...@gmail.com>

Nagarajan Vadivel

unread,
Oct 16, 2011, 6:21:19 AM10/16/11
to mint...@googlegroups.com
சென்னையில் எத்திராஜ் கல்லூரிக்கு வெளியே சரிகா ஷா என்ற மாணவி ஈவ் டீசிங்கால் மரணமடைந்தபோது வர்மக்கலைப் பயிற்சி ஒன்றை ஆரம்பிக்க எண்ணி வர்மக்கலை பற்றி துணைவேந்தருக்கு விளக்க ஒரு செய்முறைக் காட்சியை ஏற்பாடு செய்திருந்தோம்.  அதில் ஒரு கோழியை வர்மக்கலை மூலம் அழுத்தம் கொடுத்துச் செயலிழக்கச் செய்து பின்னர் மற்றொரு அழுத்தத்தின் மூலம் மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவந்தோம்.  வர்மக்கலையை அந்தத் துணைவேந்தர் பாராட்டினலும் பெண்கள் கையில் இதுபோன்ற சக்தியை கொடுத்தால் ஜொல்லின் செல்வர்களுக்குச் சிக்கல் வரும் என்று எண்ணி அனுமதி மறுத்தார்
அதே சமயம் தமிழக அரசின் போக்குவரத்து துறையில் தினந்தோரும் ஆயிரக் கணக்கான் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் உடல் முழுதும் எண்ணெய் தடவிக்கொண்டுவரும் களவானிகளால் திருடுபோவதைத் தடுக்கப் பயன் பட்டது
ஒருமுறை மேஹாலயாவில் குளிர்காலத்தில் குனிந்து கனமான பெட்டியை எடுத்தபோது எனக்கு டிஸ்க் ஸ்லிப் ஆகிவிட்டது.  நிமிர்ந்து நடக்க முடியவில்லை.  அப்போது அங்கு இருந்த அனுபவமிக்க எலும்பு நகர்த்திச் சரி செய்பவர் (போன் செட்டர்) எலும்பை அழுத்தியே சரிப்படுத்தினார்.  சென்னையில் உள்ள மருத்துவர் அதைத் தான் செய்ய அறுவைச் சிகிச்சைக்கு மூன்று லட்சம் கேட்பார் என்றும் முழுமையாகச் சரி செய்ய முடியாது என்றும் சொன்னார்
குமுகத்தின் உள்ளுறை அறிவுப்புலங்கள் பட்டறிவின் அடிப்படையில் தொகுக்கப்பட்டது.  சிறப்பு மிக்கது என்றாலும் சிதம்பர ரகசியமாகக் குடத்துள் இட்ட விளக்காக இருப்பது  குறையே
நாகராசன்


2011/10/16 N. Kannan <navan...@gmail.com>

Kannan Natarajan

unread,
Oct 22, 2011, 11:05:41 PM10/22/11
to Min Thamizh
கன்றாமை வேண்டும், கடிய பிறர் செய்த
நன்றியை நன்றாக் கொளல் வேண்டும் - என்றும்
விடல் வேண்டும் தன்கண் வெகுளி, அடல்வேண்டும்
ஆக்கம் சிதைக்கும் வினை.
                                                 
(பாடல் - 11)

பிறர் செய்த தீமைகளுக்காக, அவர்மேல் சீற்றங்கொள்ளாமல் இருத்தல் வேண்டும்.
பிறர் செய்த நன்மையை மறவாமல் இருத்தல் வேண்டும்.
கோபப்படுவதை என்றும், எப்போதும் விட்டுவிடுதல் வேண்டும்.
வளர்ச்சியைத் தடுக்கும் செயல்களைச் செய்யாது இருத்தல் வேண்டும்.

Geetha Sambasivam

unread,
Oct 23, 2011, 6:07:52 AM10/23/11
to mint...@googlegroups.com
அருமையான தேவைகள்.

2011/10/22 Kannan Natarajan <thar...@gmail.com>

--

Kannan Natarajan

unread,
Oct 30, 2011, 12:26:38 AM10/30/11
to Min Thamizh
பல்லினான் நோய் செய்யும், பாம்பு எல்லாம், கொல்களிறு
கோட்டான் நோய் செய்யும், குறித்தாரை ஊடி,
முகத்தான் நோய் செய்வர் மகளிர், முனிவர்
தவத்தின் தருக்குவர் நோய்.
                                                                                      (பாடல் - 12)

பாம்பு பல்லால் நோய் தரும்.
யானை கொம்புகளால் நோய் தரும்.
பெண்கள் ஊடல் கொண்டு முகம் கூம்பி நோய் தருவர்.
இவர்கள் எல்லாம் தம் செயல்களால் பிறருக்குத் துன்பம் தர, தவசிகள் தவமிருந்து தமக்குத்தாமே துன்பம் தந்துகொள்வர்.

Kannan Natarajan

unread,
Nov 6, 2011, 3:42:38 AM11/6/11
to Min Thamizh
பறை நன்று பண் அமையா யாழின் நிறை நின்ற 
பெண் நன்று, பீடு இலா மாந்தரின் பண் அழிந்து 
ஆர்தலின் நன்று, பசித்தல் பசைந்தாரின் 
தீர்தலின் தீப்புகுதல் நன்று. 
                                                              (பாடல் - 13) 

பண்ணொடு பொருந்தி சரியாக வாசிக்கப்படாத யாழைவிட வல்லோசை எழுப்பும் பறையே  நல்லது.
பெருமை இல்லாத மனிதரைவிடக் கற்புப் பிறழாத பெண்மை மிக நல்லது.
உடலுக்குத்  தீங்குதரும் பதம்கெட்ட பண்டங்களை உண்பதைவிடப் பசியோடு இருப்பதே நல்லது.
அன்புக்கு  உரியவரிடமிருந்து (கணவன்) பிரிந்து உயிர் வாழுதலைவிடத் தீப்புகுந்து உயிர் நீத்தல் நல்லது.

Kannan Natarajan

unread,
Nov 12, 2011, 11:47:37 PM11/12/11
to Min Thamizh
வளப் பாத்தியுள் வளரும் வண்மை, கிளைக் குழாம்
இன்சொற் குழியுள் இனிது எழூஉம், வன்சொல்
கரவு எழூஉம், கண்இல் குழியுள், இரவு எழூஉம்
இன்மைக் குழியுள் விரைந்து.

                                                                     (பாடல் - 14)

நீர்வளம் நிறைந்த பாத்திபோல் மனதை வைத்திருப்போரிடம் வள்ளன்மை விளையும்.
இனிய சொல்லாகிய நிலத்திலிருந்து உறவினர்க்கு மகிழ்ச்சி விளையும்.
வஞ்சனையோடு கண்டோட்டம் இல்லாத மனமுடையாரிடமிருந்து வன்சொல் விளையும்.
ஏழையாகிய நிலத்திலிருந்து யாசித்தல் விளையும்.

Kannan Natarajan

unread,
Nov 21, 2011, 6:38:06 AM11/21/11
to Min Thamizh
இன்னாமை வேண்டின் இரவு எழுக, இந்நிலத்து
மன்னுதல் வேண்டின் இசை நடுக, தன்னொடு
செல்வது வேண்டின் அறம் செய்க, வெல்வது
வேண்டின் வெகுளி விடல்.

                                                                     (பாடல் - 15)

இழிவாக மதிக்கப்படும் இன்னாமை வேண்டுமானால் யாசித்திடுக. இவ்வுலகில் நிலைபெற வேண்டுமானால் தொண்டுகளைச் செய்து புகழை நிலை நிறுத்துக.
தன்னோடு மற்றவர் பாராட்ட வேண்டுமெனில் அறம் செய்திடுக. உங்களையும், மற்றவர்களையும் வெல்ல வேண்டுமானால் சினத்தை விடுக.

ranganathan venkatachariar

unread,
Nov 21, 2011, 6:42:56 AM11/21/11
to mint...@googlegroups.com
மிகவும் நன்றி 

அரங்கநாதன்/ உத்திரமேரூர் 

2011/11/21 Kannan Natarajan <thar...@gmail.com>
--
Kailash.pps

Dhivakar

unread,
Nov 21, 2011, 11:10:29 AM11/21/11
to mint...@googlegroups.com
வெல்வது
வேண்டின் வெகுளி விடல்.

இவர் வெகுளி என்பதற்கு சினத்தை விடவேண்டும் எனக் கூறுகிறாரே..
வெகுளி என்றால் தயக்கம், பயம், அச்சம், அப்பாவித்தனம், அஞ்ஞானம் போன்ற பொருள் வரு அல்லவா?

2011/11/21 ranganathan venkatachariar <ranganath...@gmail.com>
மிகவும் நன்றி 

அரங்கநாதன்/ உத்திரமேரூர் 

2011/11/21 Kannan Natarajan <thar...@gmail.com>
இன்னாமை வேண்டின் இரவு எழுக, இந்நிலத்து
மன்னுதல் வேண்டின் இசை நடுக, தன்னொடு
செல்வது வேண்டின் அறம் செய்க, 

                                                                     (பாடல் - 15)

இழிவாக மதிக்கப்படும் இன்னாமை வேண்டுமானால் யாசித்திடுக. இவ்வுலகில் நிலைபெற வேண்டுமானால் தொண்டுகளைச் செய்து புகழை நிலை நிறுத்துக.
தன்னோடு மற்றவர் பாராட்ட வேண்டுமெனில் அறம் செய்திடுக. உங்களையும், மற்றவர்களையும் வெல்ல வேண்டுமானால் சினத்தை விடுக.


நன்றி:- தினமணி

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Kannan Natarajan

unread,
Dec 3, 2011, 12:20:38 AM12/3/11
to Min Thamizh
கடற் குட்டம் போழ்வர் கலவர்; படைக் குட்டம் 
பாய்மா உடையான் உடைக்கிற்கும்; தோம் இல் 
தவக் குட்டம் தன்னுடையான் நீந்தும்; அவைக் குட்டம் 
கற்றான் கடந்து விடும். 
                                                                 (பாடல் - 16) 

கப்பல் மாலுமிகள், கடலின் ஆழத்தைக் கடப்பர்.
மறவர் படை ஆழத்தைக் கடப்பர்.
தன்னை ஒருவழியில் நிறுத்தி நெறி நின்று வாழ்பவர் குற்றமில்லாத தவ ஆழத்தைக் கடப்பர்.
நன்கு கற்றவர், அறிஞர் போன்றோர் அவை ஆழத்தைக் கடப்பர்.

(குட்டம் - ஆழம்; கலவர் - மாலுமி)

Kannan Natarajan

unread,
Dec 3, 2011, 3:27:55 PM12/3/11
to Min Thamizh
பொய்த்தல் இறுவாய நட்புக்கள் மெய்த்தாக
மூத்தல் இறுவாய்த்து இளநலம், தூக்கு இல்
மிகுதி இறுவாய செல்வங்கள், தம்தம்
தகுதி இறுவாய்த்து உயிர்.

                                                                 (பாடல் - 17)


ஒருவருக்கொருவர் பொய்யாகப் பழகுதல் நட்புக்கு முடிவாகும் (இறுவாய்).
உடலில் முதுமை தோன்றினால், அது இளமைக்கு முடிவாகும். வரவுக்கு விஞ்சிய செலவு செய்தால் அது செல்வத்துக்கு முடிவாகும். அவரவர் தகுதிக்கு இறுவாய் உயிர்.

Kannan Natarajan

unread,
Dec 10, 2011, 4:47:31 PM12/10/11
to Min Thamizh
மனைக்கு ஆக்கம் மாண்ட மகளிர்; ஒருவன் 
வினைக்கு ஆக்கம் செவ்வியன் ஆதல்; சினச்செவ்வேல் 
நாட்டு ஆக்கம் நல்லன் இவ்வேந்து என்றல், 
கேட்டு ஆக்கம் கேளிர் ஒரீஇ விடல். 
                                                                   (பாடல் - 18) 

நல்ல பண்புடைய பெண்கள் இருத்தல் நல்ல வீட்டுக்கு ஆக்கம் தரும். ஒருவன் சிறந்த பண்புடையவனாக இருத்தல் உயர் வினைக்கு ஆக்கம் தரும்.
நாட்டை ஆளும் அரசன் நல்லவனாக இருந்தால், அது நாட்டுக்கு ஆக்கம் தரும்.
நல்ல உறவினரை ஒதுக்கிவிடுதல் (ஒதுக்கிவைத்தல்) கேட்டுக்கு ஆக்கம் தரும்.

Kannan Natarajan

unread,
Dec 17, 2011, 5:56:13 PM12/17/11
to Min Thamizh
பெற்றான் அதிர்ப்பின் பிணை அன்னாள்தான் அதிர்க்கும்;
கற்றான் அதிர்ப்பின் பொருள் அதிர்க்கும்;
பற்றியமண் அதிர்ப்பின் மன்னவன் கோல் அதிர்க்கும்;
பண் அதிர்ப்பின் பாடல் அதிர்ந்து விடும்.

                                                                           (பாடல் - 19)

கணவன் கலங்கினால், மான் போன்ற அவன் மனைவியும் கலங்குவாள்.
கற்ற அறிஞன் கலங்கினால், அவன் வெளிப்படுத்தும் கருத்துகளும் தெளிவின்றிக் கலங்கும் (குழப்பம் தரும்).
மண்ணிலுள்ள மக்கள் கலங்குவர் என்றால், அம் மண்ணை ஆளுகின்ற அரசனின் ஆட்சியும் கலங்கும்.
இசைக்கப்படும் பண் (
ராகம்) கலங்கினால் அதனோடு இசைந்த பாடலும் கலங்கிவிடும்.

கி.காளைராசன்

unread,
Dec 18, 2011, 4:30:05 AM12/18/11
to mint...@googlegroups.com
வணக்கம்.

படித்துப் பயனடைந்து வருகிறேன்.

நன்றி

--
அன்பன்
கி.காளைராசன்
http://www.freewebs.com/thirupoovanam/
திருப்பூவணப் புராணம் மற்றும் திருப்பூவணக்காசி படியுங்கள்,

அன்னதானம் செய்வோம், கண்தானம் செய்வோம். இவ்விருதானங்களையும் சிவபெருமான்
ஏற்றுக் கொள்கிறார்,

Kannan Natarajan

unread,
Dec 30, 2011, 4:36:47 AM12/30/11
to Min Thamizh
மனைக்குப் பாழ் வாணுதல் இன்மை; தான் செல்லும் 
திசைக்குப் பாழ் நட்டோரை இன்மை; இருந்த 
அவைக்குப் பாழ் மூத்தோரை இன்மை; தனக்குப் பாழ் 
கற்றறிவு இல்லா உடம்பு. 
                                                                (பாடல் - 20) 

இல்வாழ்க்கைக்குப் பாழ் நல்ல மனையாள் வாய்க்காதது.
ஒருவர் செல்லும் ஊருக்குப் பாழ் நண்பர் இல்லாதிருத்தல்.
அறிஞர் அவைக்குப் பாழ் மூத்த அறிஞர் இல்லாதிருத்தல். தனக்குத்தானே பாழ் படிப்பறிவு இல்லாதிருத்தல்.

Kannan Natarajan

unread,
Jan 1, 2012, 4:42:59 AM1/1/12
to Min Thamizh
மொய் சிதைக்கும் ஒற்றுமை இன்மை; ஒருவனைப்

பொய் சிதைக்கும் பொன்போலும் மேனியை; பெய்த

கலம் சிதைக்கும் பாலின் சுவையை; குலம் சிதைக்கும்

கூடார்கண் கூடி விடின்.
 
                                                                                       (பாடல் - 21)


ஒற்றுமை இல்லாமை ஓர் இனத்தின் வலிமையைச் சிதைக்கும். 
அழகிய உருவமுடைய ஒருவனைப் பற்றிய மதிப்பீட்டை அவன் சொல்லும் பொய் சிதைக்கும். 
பாலின் இனிய சுவையை அந்தப் பால் ஊற்றப்படும் அழுக்குள்ள பாத்திரம் சிதைக்கும். 
கயவருடன் நட்பு கொண்டால் அது அவன் குலத்தையே சிதைத்துவிடும். 

Kannan Natarajan

unread,
Jan 17, 2012, 1:36:15 AM1/17/12
to Min Thamizh
புகழ் செய்யும், பொய்யா விளக்கம்; இகழ்ந்து ஒருவன்
பேணாமை செய்வது பேதைமை; காணாக்
குருடராச் செய்வது மம்மர்; இருள் தீர்ந்த
கண்ணராச் செய்வது, கற்பு.
                                                             (பாடல் - 22)

இகழ்ந்து - முறை கடந்து
பேணாமை - மதியாமை

பொய்யாமை புகழை ஏற்படுத்தும்,
அறியாமை முறையற்ற தீய செயலைச் செய்யத் தூண்டும், கல்லாமை அறியாமையை ஏற்படுத்தும்,
கல்வி அறிவை உண்டாக்கி ஒளிபெறச் செய்யும்.

நன்றி:- சென்னை நூலகம்

Kannan Natarajan

unread,
Jan 17, 2012, 1:38:33 AM1/17/12
to Min Thamizh
மலைப்பினும் வாரணம் தாங்கும்; குழவி
அலைப்பினும் அன்னே! என்று ஓடும்; சிலைப்பினும்
நட்டார் நடுங்கும் வினை செய்யார்; ஒட்டார்
உடன் உறையும் காலமும் இல்.

                                                           (பாடல்-23)


யானைப் பாகன் தன்னை அங்குசத்தால் குத்தினாலும், யானை அவனைச் சுமந்து செல்லும்.
தாய் தன்னை அடித்தாலும், குழந்தை தன் தாயிடமே செல்லும். நெருங்கிய நல்ல நண்பர்களைக் கோபித்தாலும், அவர்கள் தீயன செய்யாமல் நன்மையே செய்வர்.
பகைவர் ஒன்றாகக் கூடினும் என்றும் சேர்ந்து வாழார்.

Kannan Natarajan

unread,
Jan 21, 2012, 11:48:40 PM1/21/12
to Min Thamizh

Kannan Natarajan

unread,
Jan 28, 2012, 9:18:21 PM1/28/12
to Min Thamizh
Reply all
Reply to author
Forward
0 new messages