காதம் எவ்வளவு தூரம்

7,861 views
Skip to first unread message

Singanenjam Sambandam

unread,
Jul 10, 2016, 1:39:22 AM7/10/16
to mint...@googlegroups.com

காதம் என்றால் எவ்வளவு தூரம் ?

ஒரு காதம் என்பது பத்து மைல் தூரமா , பன்னிரெண்டு மைலா என்றெல்லாம் கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெறுகின்றன. யாப்பருங்கலக் காரிகை என்று ஒரு நூல். அதற்கு  யாப்பருங்கல விருத்தி என்று ஒரு உரை நூல்.. பதினோராம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனக் கருதுகிறார்கள் அதில் பக்கம் 473 இல் விளக்கம் உள்ளது. இதைத் தமிழ்  அறிஞர் ந. சி. கந்தையா தனது “தமிழகம்” (1934) எனும் நூலில் சுட்டிக் காட்டுகிறார்.

12   விரல்        1 சாண்          

2     சாண்         1 முழம்

4     முழம்        1 கோல்

500 கோல்         1 கூப்பிடு

4         கூப்பிடு    1 காதம்.

இனி, முழம் என்றால் யாருடைய கையால் , லால் பகதூர் சாஸ்திரி கையா, அல்லது கான் அப்துல் கபார் கான் கையா என்றல்லாம்  கேட்கக்  கூடாது.

Pandiyaraja

unread,
Jul 10, 2016, 8:01:48 AM7/10/16
to மின்தமிழ்
லால் பகதூர் சாஸ்திரி கைக்கும், அல்லது கான் அப்துல் கபார் கான் கைக்கும் எங்கே போவது?
கைலியை  மடித்துக்கட்டிக்கொண்டு நானே களத்தில் இறங்கினேன்.
தாங்கள் கொடுத்துள்ள வாய்பாட்டை அப்படியே எடுத்துக்கொண்டேன்.
நான் ஒரு சராசரித் தமிழன் - உயரம் 5 1/2 அடி.
என்னுடைய ஒரு சாண் என்பதை அளந்தேன். 8 1/2 அங்குலம் இருந்தது. அதாவது 17/2"
அல்லது 17/(2x12) அடி = 0.70833அடி = இது ஒரு சாண்
இப்போது 1 காதத்துக்கு எத்தனை அடி?
0.70833 x 2 x 4 x 500 x 4 = 11333.333அடி. இந்த அடியை மைல் ஆக்குங்கள்.

3 அடி 1 கஜம்
220 கஜம் 1 பர்லாங்கு
8 பர்லாங்கு 1 மைல்

இப்பொழுது கணக்கு இதுதான்:
11333.333/(3x220x8) = 2.1464 மைல்
இதில் 10 மைல் 12 மைல் எங்கே வந்தது?
ப.பாண்டியராஜா

N. Ganesan

unread,
Jul 10, 2016, 8:27:23 AM7/10/16
to மின்தமிழ்


On Sunday, July 10, 2016 at 5:01:48 AM UTC-7, Pandiyaraja wrote:
லால் பகதூர் சாஸ்திரி கைக்கும், அல்லது கான் அப்துல் கபார் கான் கைக்கும் எங்கே போவது?
கைலியை  மடித்துக்கட்டிக்கொண்டு நானே களத்தில் இறங்கினேன்.
தாங்கள் கொடுத்துள்ள வாய்பாட்டை அப்படியே எடுத்துக்கொண்டேன்.
நான் ஒரு சராசரித் தமிழன் - உயரம் 5 1/2 அடி.
என்னுடைய ஒரு சாண் என்பதை அளந்தேன். 8 1/2 அங்குலம் இருந்தது. அதாவது 17/2"
அல்லது 17/(2x12) அடி = 0.70833அடி = இது ஒரு சாண்
இப்போது 1 காதத்துக்கு எத்தனை அடி?
0.70833 x 2 x 4 x 500 x 4 = 11333.333அடி. இந்த அடியை மைல் ஆக்குங்கள்.

3 அடி 1 கஜம்
220 கஜம் 1 பர்லாங்கு
8 பர்லாங்கு 1 மைல்

இப்பொழுது கணக்கு இதுதான்:
11333.333/(3x220x8) = 2.1464 மைல்
இதில் 10 மைல் 12 மைல் எங்கே வந்தது?
ப.பாண்டியராஜா



ஆக, ந. சி. கந்தையாபிள்ளையவர்கள் கொடுத்த காதம் என்பதன் கணக்கு தவறு என விளங்குகிறது.

சென்னைப் பல்கலைக் கழகப் பேரகராதி (Madras Tamil Lexicon):
காதம்¹ kātam , n. cf. gavyūta. [K. gāvada, gāvuda, M. kātam, Tu. gāvuda.] Indian league, about 10 miles; ஏழரை நாழிகைவழி. காதம் பலவுந் திரிந்துழன்றேற்கு (திவ். பெரியாழ். 5, 3, 4).

கவுந்தி :கந்தி என்று சமண சமயக் குரத்தியர்க்குப் பெயர் ஆதல் போல, காவதம் :காதம் என்றாகிறது தமிழில். கர்நாடகத்தில் - சமணத்துக்குப் புகழ் பெற்ற நாடு - காவதம்
கல்வெட்டுகளிலும், அண்மைக் காலம் வரை வழக்கில் உள்ளது. அதன் படி, 12 - 14 மைல் காதம் எனத் தெரிகிறது. பி. எல். ரைஸ், பிரான்சிஸ் புக்கானன், ... போன்றோர்
சான்றுகள் கொடுத்துள்ளேன்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Jul 10, 2016, 9:30:40 AM7/10/16
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
அடியார்க்குநல்லார் உரையைவிட பாவாணர் விளக்கியுள்ள “வடபெருங்கோடு” = மேற்குத் தொடர்ச்சி மலை என்னும் பொருள் பொருந்துவதாக தோன்றுகிறது.
அதனை முகுந்தன் கேட்ட இழையில் விளக்க எண்ணியுள்ளேன். https://groups.google.com/forum/#!msg/vallamai/AckQT7mPiWU/RXqqqnnrBQAJ

காவதம்/காதம் ஒரு மனிதனால் ஒரு நாளைக்கு எவ்வளவு நடக்க முடியும்
என்பதை அடிப்படையாகக் கொண்டது. காவுகிற தொலைவு எனலாம் (cf. காவடி).

ந. சி. கந்தையாபிள்ளையவர்கள் கொடுத்த காதம் என்பதன் கணக்கு தவறு என விளங்குகிறது. பேரா. பாண்டியராசா இக் கணக்கின்படி காதம் = 2.1 மைல் ஆகும். ஒரு நாளைக்கு
2 மைல் தானா ஒரு ஆள் நடப்பான்?

சில பழைய சான்றுகள் தருகிறேன்:

காவதம் என்றும் > காதம் என்றும் (மூன்று) நாடுகாண் காதையில் குறிப்பிடுவது சமண நாட்டுச் சொல். கர்நாடகா கல்வெட்டுகளில்
Gaavada எனப்படும். காவதம் = காதம் நீட்டலளவை 12 - 14 மைல் என்கின்றனர் சரித்திர ஆசிரியர்கள். சென்னை அகராதி ~10 மைல் என்னும்.
ஆவரேஜ் ஆக, 12 மைல்எனலாம்.

(1)
See B. L. Rice, 1897, pg. 548, 
Mysore, by districts
"Gaavada or Gau = a distance of about 12 miles"

(2)
Foreign measures and their English values, 1864
Gavada or Day's Journey = 14.6 miles

(3)
Francis Buchanan, A Journey from Madras Through the Countries of Mysore, Canara and Malabar..., 1807
pg. 332
"for every Gau or Gavada of 4 cosses, which amount upon an average, I suppose, to between 12 and 14 miles."

Pandiyaraja

unread,
Jul 10, 2016, 11:40:37 AM7/10/16
to மின்தமிழ், vall...@googlegroups.com, housto...@googlegroups.com
இன்னொரு இழையிலிருந்து சுட்டது.

"
1 காதம் = 22000 அடி = 4.166667 மைல் = 6.7050438 கி.மீ

பழந்தமிழர் நீட்டளவை வாய்ப்பாட்டைக் கீழ்க்கண்டவாறு முறைப்படுத்தலாம்.

குறுந்தொலை வாய்ப்பாடு (வடபுலத்திற்கும் தென்புலத்திற்கும் பொதுவானது):
1 விரற்கிடை = 11/16 அங்குலம்
1 பெருவிரல் = 1 3/8 அங்குலம்
12 விரற்கிடை = 6 பெருவிரல் = 8 1/4 அங்குலம்
2 சாண் = 1 முழம் = 1.3/8 அடி
2 முழம் = 1 சிறுகோல் = 2 3/4 அடி
2 சிறுகோல் = 1 கோல் = 5 1/2 அடி
2 கோல் = 1 பெருங்கோல் (தண்டம்) = 11 அடி
8 பெருங்கோல் (தண்டம்) = 1 கயிறு
நெடுந்தொலை வாய்ப்பாடு (தென்புலம்):
500 பெருங்கோல் (தண்டம்) = 62 1/2 கயிறு = 1 கூப்பீடு = 5500 அடி =
1.04167 மைல்.= 1.6763595 கி.மீ
4 கூப்பீடு = 1 காதம் = 22000 அடி = 4.166667 மைல் = 6.7050438 கி.மீ
4 காதம் = 1 யோசனை = 88000 அடி = 16.233333 மைல் = 26.820175 கி.மீ

http://ezilnila.com/archives/1329


தேவ்

"

இதன்படி 1000 கோல் 1 கூப்பிடு என்றாகிறது. அப்படிப்பார்த்தாலும் 1 காதத்துக்கு 4 சொச்சம் மைல்தான்!

ப.பாண்டியராஜா

N. Ganesan

unread,
Jul 10, 2016, 12:33:49 PM7/10/16
to மின்தமிழ், vall...@googlegroups.com


On Sunday, July 10, 2016 at 8:40:37 AM UTC-7, Pandiyaraja wrote:
இன்னொரு இழையிலிருந்து சுட்டது.



தேவு ஐயா எங்கிருந்து எடுத்தார் என தெரியாது. ஆனால், பிழைபட்ட கணக்கு இது.
சென்னைப் பேரகராதி, ரைஸ், புக்கானன், .... காதம் 10 - 14 மைல்கள் என்கின்றன.
பலர் எழுதி ஆய்ந்துள்ளனர்: உ-ம்: கானிங்காம்

தேவ் முன்பெல்லாம் மின்தமிழில் என்னைக் குறிப்பிட்டு நிறைய எழுதினார். வாசித்திருப்பீர்கள்.
இப்போது அங்கே காணோம்.

Singanenjam Sambandam

unread,
Jul 10, 2016, 12:45:53 PM7/10/16
to mint...@googlegroups.com
அன்பின் கணேசன் ( 'ஐயா'  விட்டு விட்டேன் ; தாங்களும் விட்டு விடும்படி கேட்டுக் கொள்கிறேன்), யாப்பருங்கல விருத்தி நூல் உள்ளவர்கள் அதில் 473  ஆம் பக்கத்தைப் பார்த்து விடையிறுத்தால்  நன்றாக இருக்கும். பழந்தமிழ் இலக்கியங்களுக்கு  யாப்பருங்கல விருத்தியை சார்ந்திருப்பதே நன்று. புகானின் நூலை முழுமையாகப் படித்துள்ளேன்.  (அவர்தான் செம்புராங் கல்லுக்கு "LATERITE"என்று கேரளாவில் பெயர் வைத்தவர்.)  கானிங்காம் தரும் விளக்கம் என்ன ? 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jul 10, 2016, 1:01:08 PM7/10/16
to mintamil

வணக்கம்.

கி.பி. 1620ஆம் ஆண்டு கந்தசாமிப் புலவரால் எழுதப்பெற்ற திருப்பூவணப் புராணத்தில் காவதம் என்ற சொல் இரண்டு இடங்களில் இடம் பெற்றுற்றது.

பாடல் எண் 236
கங்கைதங்கியசெஞ்சடிலசேகரன்முன்கண்ணகன்கதம்பமாவனத்திற்
கங்கிதிக்கதனிலறைந்திடுகின்றவரைதலையிட்டகாவதத்தின்
மங்குறோய்புட்பவனமதிலென்றுமன்னுமெம்பிரான்மகிழ்ந்தருளுந்
துங்கமாதவநற்சவுநகவென்றுசூதமாமுனிவரன்சொல்வான்

கதம்பமாவனம் = மதுரை
அங்கி திக்கு = அக்னிதிசை = தென்கிழக்கே
புட்பவனம் = பூவணம் = திருப்பூவணம்
மதுரை திருப்பூவணம் = 20 கி.மீ. = 12 . 5 மைல்

பாடல் எண் 375
மிக்கவூழ்வந்துமேவிடவாயிடை
முக்கணன்றிருமுன்சென்றுதாழ்ந்தெழீஇப்
பக்கமோடுபதம்பணியாமலே
தெக்கிணாவர்த்ததென்றிசைசென்றனன்

பாடல் எண் 376
சென்றுகாவதத்திற்றிகழ்திருச்சுழியற்சிந்துதீர்த்தம்படிந்தியல்பிற்
பின்றிகழ்பின்னல்பிறங்குவானவனைப்பெரிதருச்சனைமுடித்ததற்பின்
பொன்றிகழ்புரிசைப்பூவணத்தடைந்தப்புனிதநீர்படிந்ததன்கரைமே
லொன்றினனாகவோரிராக்கதனாயுழன்றுதன்னலமிழந்தன்றே

திருப்பூவணத்திற்குத் தெற்கே திருச்சுழி = 47 கி.மீ. = 29. 4 மைல்

கி.பி. 1899 ஆம் ஆண்டு தஞ்சாவூர் சுப்பிரமணிய ஐயர் அவர்களால் பாடப்பெற்ற
காளையார்கோயில் புராணத்தில் காவதம் என்ற சொல் இடம் பெற்றுள்ளது.

பாடல் எண் 54
ஐயகேள்குணக்கதாயவார்கலிக்கருகிலுள்ள
மையறுநறியநீத்தமாசுணநதிக்கூலத்திற்
பொய்யின்மான்மியவிருத்தபுரிக்குவாருணதிக்கின்க
ணய்யரைக்காவதத்தினவிர்தருஞ்சோதிக்கானம்

விருத்தபுரி = திருப்புனவாசல்
வாருணதிக்கு = மேற்குத் திசை
சோதிக்கானம் = காளையார்கோயில்

திருப்புனவாசலில் இருந்து மேற்கே காளையார்கோயில் 55கி.மீ. = 34 மைல்

--

N. Ganesan

unread,
Jul 10, 2016, 1:09:15 PM7/10/16
to மின்தமிழ், kalair...@gmail.com, vallamai


On Sunday, July 10, 2016 at 10:01:08 AM UTC-7, kalai wrote:

வணக்கம்.

கி.பி. 1620ஆம் ஆண்டு கந்தசாமிப் புலவரால் எழுதப்பெற்ற திருப்பூவணப் புராணத்தில் காவதம் என்ற சொல் இரண்டு இடங்களில் இடம் பெற்றுற்றது.

பாடல் எண் 236
கங்கைதங்கியசெஞ்சடிலசேகரன்முன்கண்ணகன்கதம்பமாவனத்திற்
கங்கிதிக்கதனிலறைந்திடுகின்றவரைதலையிட்டகாவதத்தின்
மங்குறோய்புட்பவனமதிலென்றுமன்னுமெம்பிரான்மகிழ்ந்தருளுந்
துங்கமாதவநற்சவுநகவென்றுசூதமாமுனிவரன்சொல்வான்

கதம்பமாவனம் = மதுரை
அங்கி திக்கு = அக்னிதிசை = தென்கிழக்கே
புட்பவனம் = பூவணம் = திருப்பூவணம்
மதுரை திருப்பூவணம் = 20 கி.மீ. = 12 . 5 மைல்

பாடல் எண் 375


நன்றி, முனைவர் காளைராசன் ஐயா. காதம் = 10 - 14 மைல் என சான்றுகள் கொடுத்துள்ளேன்.

நாடுகாண் காதை என்று மூன்று நாடும் காட்டும் இளங்கோ அடிகள் காப்பியத்தில்
மதுரைக்கு வடக்கே சையமலையில் (மேற்குத்தொடர்ச்சி மலையில்) கோவலன்
கண்ணகிக்குச் சொல்லும் 30 காதம் ~360 மைல் என்று சிங்கநெஞ்சன் அவர்களுக்கு விளக்கினேன்.
எனவே, சமணம் தழைக்கும் கர்நாடகாவில் (சிரவணபெளகுள) பேசிய வார்த்தைகள்
என்பது என் ஆய்வு.

கந்தசாமிப் புலவரின் 12.5 மைல் கணக்கு மிக அருகே உள்ளது. நன்றி.

mukunthan

unread,
Jul 11, 2016, 1:43:09 AM7/11/16
to மின்தமிழ், kalair...@gmail.com, vall...@googlegroups.com
வணக்கம் . இதையும் பாருங்கள்
https://groups.google.com/forum/?#!msg/mintamil/jMtKshkmx5Y/RTjtEEt4PewJ

http://www.tamilvu.org/slet/l3100/l3100pd1.jsp?bookid=56&auth_pub_id=69&pno=366
காதம்  (பத்து நாழிகைத்  தூரம்)


http://valavu.blogspot.com/2009/07/6.html
இராம.கி ஐயா கூறுவது.
4 கூப்பீடு = 1 காதம் = 11000 அடி = 2.088888 மைல் = 3.3525219 கி.மீ

அவர் வடபு, தென்புலக் கணக்கு என்று இருவேறு அளவு கூறுகின்றார்.. அதயும் பாருங்கள்.

காதம் என்னும் அளவீடு கற்பனையோ, அன்றி வெறும் இலக்கியங்களில் வரும் நீட்டல் அளவையோ அல்ல என்பதை நிறுவுமாப் போல, 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மூன்று தொலைவுக் கற்கள் 1970 களில் கிடைத்தன. ஒரு கல், அதியமான் கோட்டையில் இருந்து பாலக்கோடு செல்லும் சாலையின் இடது புறத்தில், சிறிது தொலைவில் பதிகால் பள்ளம் என்ற இடத்தில் (கிட்டத்தட்ட இதன் புவியியல் இருப்பு அலகு, 12 பாகை.7’ 20” வடக்கு, 78 பாகை.13’ கிழக்கு என்பதாகும்.), “அதியமான் பெருவழி நாவற்தாவளத்துக்கு காதம் 29” என்ற குறிப்போடு கிடைத்தது. [இதைத் தமிழ்நாடு அரசுத் தொல்பொருள் ஆய்வுத் துறையினர் கண்டு பிடித்தனர்.]

....
29 ஆம், காதக் கல்லிற்கும், 27 ஆம் காதக் கல்லிற்கும் இடையே வளைந்து வளைந்து போகும் இன்றையப் பாதையின் தொலைவு கிட்டத்தட்ட 9 மைல் ஆகும். அதே பொழுது வெறுமே பாகைகளை வைத்து கணக்குப் போட்டால் இது குறைந்த தொலைவாய் 11.113333 கி.மீ (=6.906 மைல்) மட்டுமே இருந்திருக்கலாம் என்று தெரிகிறது. ஆனால் இந்தப் பெருவழி பாகைக் கணக்கு வழி போட்ட நேர்கோட்டுப் பாதையாய் இருக்கத் தேவையில்லையாதலால், பாதை வளைவுகளையும் சேர்த்து உண்மைத் தொலைவு 6.906 மைலுக்கும் கூடவே இருக்கலாம்.

அந்தக் காலப் பெருவழியில் 27 ஆம் காதத்திற்கும் 29 ஆம் காதத்திற்கும் இடையான தொலைவு 6.906 மைலுக்கும், 9 மைலுக்கும் நெருங்கியே இருக்க வேண்டும். முன்னால் நாம் பார்த்த தென்புல நீட்டளவை வாய்ப்பாட்டின் படி கணக்குப் போட்டால், 2 காதம் என்பது 8 மைல் 1760 அடி = 8 1/3 மைல் (=13.412 கி.மீ) என்று ஆகிறது. இது 6.906 மைலுக்கும், 9 மைலுக்கும் இடைப்பட்டு வருகிறது. அந்த அளவில் இந்த இரண்டு காதக் கற்களும் தென்புல நீட்டளவைக் கணிப்பை உறுதி செய்கின்றன.

ஆறைங்காதம் நம் அகல்நாட்டு உம்பர்
நாறு ஐங்கூந்தல் நணித்து என நக்கு (38-43)

இளங்கோ, கோவலன் வாயிலாய்த் தெளிவாகச் சொல்லுகிறார்: “ஆறைங்காதம் நம் அகல்நாட்டு உம்பர்”, அதாவது ”சோழ நாட்டின் எல்லைக்கு அப்பால் 30 காதத்தில் மதுரை உள்ளது”.
அதோடு இந்தத் தொலைவு கோவலனின் போக நினைத்த பாதையின் தொலைவே யொழிய, அவர்கள் முடிவாகப் போன பாதையின் தொலைவும் அல்ல. கவுந்தியைச் சந்தித்த பின்னால்,
கோவலன் தான் நினைத்த பாதையிற் செல்லவே இல்லை. கவுந்தி தேர்ந்த பாதையிலே தான் கோவலனும், கண்ணகியும் போகிறார்கள்.


காவதம் அல்லது கடவார் ஆகிப்
பன்னாள் தங்கிச் செல்நாள் ஒருநாள் (154-155)

154-155 ஆம் அடிகள் மூலம் கவுந்தியடிகள், கோவலன், கண்ணகி ஆகியோர் ஒரு நாளைக்கு ஒரு காவதம் (6.7 கி.மீ) நடந்தார்கள் என்பதையும், ஆங்காங்கு தங்கி ஓய்வெடுத்தே சென்றார்கள் என்பதும் புலப்படுகிறது.
இனி, இன்றைக்குப் பெறப்படும் தொலைவுகளை மனத்திற் கொண்டு, மேலே சொன்ன ஆறைங்காதத்தை உள்வாங்கிப் பார்ப்போமா?.

இன்றைக்குப் புதுக்கோட்டையில் இருந்து திருமெய்யம், திருப்புத்தூர், மேலூர் வழியாக மதுரை வரை செல்லும் தொலைவு = கிட்டத்தட்ட 100 கி.மீ
இன்றைக்குப் புதுக்கோட்டையில் இருந்து திருச்சிராப்பள்ளி வரை உள்ள தொலைவு = 53.75 கி.மீ.

திருச்சிராப்பள்ளியில் இருந்து, காவிரிக் கரையை ஒட்டியே தஞ்சாவூர் வரை கிழக்கு நோக்கிச் சாலை ஒன்று போகிறது. காவிரியாறு தஞ்சாவூருக்கு அப்புறம் சற்று வளைவு எடுத்து வட கிழக்காய்ப் போய் கடலை அடைகிறது. வரலாற்றில் சென்ற 2000 ஆண்டுகளில் காவிரி ஆறு தஞ்சாவூருக்கு அப்புறம், வெவ்வேறு ஆற்றுப் படுகைகளையும், கிளையாறுகளையும் காலத்திற்கு ஏற்ப மாற்றிக் கொண்டே இருந்திருக்கிறது. இன்றைக்கு இருக்கும் ஆற்றுப் போக்கே 2000 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்தது என்று உறுதியாகக் கூற முடியாது. இருந்தாலும், திருச்சிராப்பள்ளிக்கும், தஞ்சாவூருக்கும் இடையே காவிரியின் ஆற்றுப் போக்கு வரலாற்றில் மாறவில்லை என்பதைக் கல்லணையைக் கொண்டே உணர முடியும். எனவே காவிரிக் கரையோரம் நடந்து வந்து அடிகளும், கோவலனும், கண்ணகியும், தஞ்சாவூர் - திருச்சிராப்பள்ளி (=உறையூர்) தொலைவை உறுதியாகக் கடந்திருப்பர் என்றே கொள்ள வேண்டியிருக்கிறது.

திருச்சிராப்பள்ளியில் இருந்து தஞ்சாவூர் தொலைவு = 54.6 கி.மீ.

தஞ்சாவூருக்கு அப்புறம் புகாருக்கான தொலைவு கிட்டத்தட்ட 100 கி.மீ என்று பல்வேறு விரிவான நில முகப்புகளின் (land maps) மூலம் மதிப்பீடு செய்யலாம். இதுவரை பார்த்த பகுதித் தொலைவுகளைப் பட்டியலிட்டுப் பின் கவுந்தியடிகள் தேர்ந்தெடுத்த பாதையின் (நாடுகாண் காதையிலும், காடுகாண் காதையிலுமாய் ஏற்பட்ட பயணத்தின்) தொலைவை மதிப்பிட முடியும்.

புகாரில் இருந்து தஞ்சாவூருக்கு = கிட்டத்தட்ட 100 கி.மீ
தஞ்சாவூரில் இருந்து உறையூருக்கு = கிட்டத்தட்ட 54.6 கி.மீ
உறையூரில் இருந்து கொடும்பாளூருக்கு = கிட்டத்தட்ட 53.75 கி.மீ
கொடும்பாளூரில் இருந்து மதுரைக்கு = கிட்டத்தட்ட 100 கி.மீ [மறந்து விடாதீர்கள், பழைய மதுரை எரிபட்டுப் போனது. இன்றைய மதுரை வெற்றிவேற் செழியனுக்கு அப்புறம் சற்றே இடம் மாறி எழுந்து நிற்கிறது. இந்தக் கரணியத்தாலும் 100 கி.மீ என்பது சற்று மாறுபடும். ஆனாலும் அதைத் தரவு இல்லாத கரணியத்தால் ஒதுக்குகிறோம்.]

ஆக, கவுந்தியடிகள் தேர்ந்தெடுத்த பாதையின் தொலைவு மதிப்பீடு = நாடுகாண் காதையிலும், காடுகாண் காதையிலுமாய் ஏற்பட்ட பயணத் தொலைவு மதிப்பீடு = 100+54.6+53.75+100 = கிட்டத்தட்ட 308.35 கி.மீ [கொடுமுடி சண்முகம் தன் பொத்தகத்தில் இதை 300 கி,.மீ என்று மதிப்பிடுவார்.]

இனி உறையூர் வராமல், தஞ்சாவூர் வழி நேரே கொடும்பாளூர் வரும் தொலைவு = 57.39 கி.மீ என்பதனால், புகாரில் இருந்து மதுரைக்கு செல்லக் கூடிய ஆகச் சுருக்கமான தொலைவைக் கீழ் வருமாறு கணக்கிட முடியும்.

புகாரில் இருந்து தஞ்சாவூருக்கு = கிட்டத்தட்ட 100 கி.மீ
தஞ்சாவூரில் இருந்து கொடும்பாளூருக்கு = கிட்டத்தட்ட 57.39 கி.மீ
கொடும்பாளூரில் இருந்து மதுரைக்கு = கிட்டத்தட்ட 100 கி.மீ

கோவலன் போக நினைத்த பாதையின் தொலைவு = 100+57.39+100 = கிட்டத்தட்ட 257.39 கி.மீ [கோவலன் நினைத்த பாதையிற் போகாமல் கவுந்தியடிகள் தேர்ந்த பாதையில் மூவரும் போனதால், கிட்டத்தட்ட 51 கி.மீ அதிகமாய் அவர்கள் பயணம் போயிருக்கிறார்கள்.]

இதில் புகார்ச் சோழநாட்டிற்கு வெளியே உள்ள தொலைவு = 30 காதம் = 201 கி.மீ. [தென்புல வாய்ப்பாட்டின் படி]. வடபுல வாய்ப்பாட்டின் படி இது 100.5 கி.மீ. ஆகும்.

எனவே புகாரில் இருந்து புகார்ச் சோழநாட்டின் எல்லை = 257.39 - 201 = கிட்டத்தட்ட 56.39 கி.மீ. [தென்புல வாய்ப்பாட்டின் படி]. வடபுல வாய்ப்பாட்டின் படி இது 156.89 கி.மீ ஆகும்.
-------------------------------


காதம் பற்றி ஒவ்வொருவரும் ஒவ்வொரு அளவு கூறுகின்றனர்.

என்னைப் பொறுத்தவரை, காதம் என்பதைத் தனியாக தூரத்துடன் குறிப்பிடமுடியாது... நேரம், தூரம் இரண்டும் சம்பந்தப்படும்.


பொய்யின்மான்மியவிருத்தபுரிக்கு

வாருணதிக்கின்க
ணய்யரைக்காவதத்தினவிர்தருஞ்சோதிக்கானம்

விருத்தபுரி = திருப்புனவாசல்
வாருணதிக்கு = மேற்குத் திசை
சோதிக்கானம் = காளையார்கோயில்

திருப்புனவாசலில் இருந்து மேற்கே காளையார்கோயில் 55கி.மீ. = 34 மைல்

இங்கே, ஐயரைக் காவதம் என வருகின்றது... 55 கி.மீ எனின், 1 காவதம் 10 கி.மீ


30 காதம் எனின், 300 நாழிகை நடக்கவேண்டும் எனக் கூறியிருக்கலாம்.

நன்றி,
முகுந்தன்

தேமொழி

unread,
Jul 11, 2016, 3:11:49 AM7/11/16
to மின்தமிழ்
திரு. முகுந்தன் 
உங்கள் தேடலின் விரிவைப் பார்த்தால் நிச்சயம் இந்தத் தகவலையும் படித்திருப்பீர்கள் என்றே நம்புகிறேன்..

இருப்பினும்.... 

கண்ணகியின் அடிச்சுவட்டில் ஒரு நீநீநீண்ண்ட பயணம்



எதற்கும் இந்த வரைபடம் உதவக்கூடும் என்ற நம்பிக்கையில்  இங்கு கொடுக்கிறேன்....

..... தேமொழி

தேமொழி

unread,
Jul 11, 2016, 3:31:46 AM7/11/16
to மின்தமிழ்

உறையூரில் இருந்து மதுரைக்கு  சிலப்பதிகாரத்தில் 
கண்ணகி  & கோவலன் சென்றதாகக் கூறப்படும் வழி:


map:
https://goo.gl/maps/vTGj1KaN1Hq  

148 km or 92 miles 


..... தேமொழி

Mukunthan Pathmanesan

unread,
Jul 11, 2016, 3:43:21 AM7/11/16
to mint...@googlegroups.com
நன்றி தேமொழி அம்மா,
அந்தன் இணைப்புப் பார்க்கவில்லை.. இணைப்புக்கு நன்றி..
இரா.முருகவேள் எழுதிய ”மிளிர்கல்” புத்தகம் படித்திருக்கின்றீர்களா.. அதுவும் கண்ணகி சென்ற பாதை பற்றியது . ஒரு நாவல்..

முப்பது காதம் என்பதை வைத்துமட்டும் அவர்கள் சென்ற பாதையைக் கண்டுபிடிக்கமுடியாது என நினைக்கின்றேன்...

கூகிள் வரைபடத்திற்கு நன்றி..

நன்றி ,
முகுந்தன்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/k2vENrVBilc/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Jul 11, 2016, 9:48:20 AM7/11/16
to மின்தமிழ், vallamai


On Monday, July 11, 2016 at 12:43:21 AM UTC-7, mukunthan wrote:
நன்றி தேமொழி அம்மா,
அந்தன் இணைப்புப் பார்க்கவில்லை.. இணைப்புக்கு நன்றி..
இரா.முருகவேள் எழுதிய ”மிளிர்கல்” புத்தகம் படித்திருக்கின்றீர்களா.. அதுவும் கண்ணகி சென்ற பாதை பற்றியது . ஒரு நாவல்..

முப்பது காதம் என்பதை வைத்துமட்டும் அவர்கள் சென்ற பாதையைக் கண்டுபிடிக்கமுடியாது என நினைக்கின்றேன்...

கூகிள் வரைபடத்திற்கு நன்றி..

நன்றி ,
முகுந்தன்



நீங்கள் சொல்வது சரியே.

(1) காதம் என்பதை ந. சி.கந்தையா (ஈழம்( போன்றோர் 2 மைல் என எடுக்கக் காரணம், குமரிக்கண்டக் குழப்பங்கள்.
அது முழுக்கக் கற்பனைக் கதை எனத் தெரியாக் காலம். 7000 காவதம் என்ற கற்பனை எண்ணை வைத்துக் கொண்டு
அதற்காக, காதத்தின் அளவைக் குறைத்துள்ளனர்.

ந. சி. கந்தையாபிள்ளையவர்கள் கொடுத்த காதம் என்பதன் கணக்கு தவறு என விளங்குகிறது.

சென்னைப் பல்கலைக் கழகப் பேரகராதி (Madras Tamil Lexicon):
காதம்¹ kātam , n. cf. gavyūta. [K. gāvada, gāvuda, M. kātam, Tu. gāvuda.] Indian league, about 10 miles; ஏழரை நாழிகைவழி. காதம் பலவுந் திரிந்துழன்றேற்கு (திவ். பெரியாழ். 5, 3, 4).

கவுந்தி :கந்தி என்று சமண சமயக் குரத்தியர்க்குப் பெயர் ஆதல் போல, காவதம் :காதம் என்றாகிறது தமிழில். கர்நாடகத்தில் - சமணத்துக்குப் புகழ் பெற்ற நாடு - காவதம்க ல்வெட்டுகளிலும், அண்மைக் காலம் வரை வழக்கில் உள்ளது. அதன் படி, 12 - 14 மைல் காதம் எனத் தெரிகிறது. பி. எல். ரைஸ், பிரான்சிஸ் புக்கானன், ... போன்றோர் சான்றுகள் கொடுத்துள்ளேன்.

அலெக்ஸாண்டர் கானிங்காம் விரிவாக காதம் பற்றிய கட்டுரை எழுதியுள்ளார். தென்னிந்தியாவின் காதம் பற்றிச் சொல்லும் போது
14 மைலுக்கும் அதிகமாக வருகிறது. தென்னிந்தியா, மைசூர் தேசம் இருக்கும் அளவு என 14 மைல் அளவு என்கிறார். இதனையெல்லாம்
தமிழறிஞர்கள் பார்க்கவில்லை.

(2) தமிழ் தேசிய காப்பியத்தில் தன் நாடு - சேர நாட்டை - காட்டாமலா நாடுகாண் காதை பாடுவார் இளங்கோ அடிகள்?
இப்போதுள்ள வரைபடம் எல்லாம் புகார் to திருச்சி, அங்கிருந்து மதுரை என்றே படங்காட்டுகிறார்கள்.
ஆனால், கவுந்தி அடிகள் சமணக் குரத்தியார் என்ற பாத்திரம், “பொழில்” என்றால் என்ன? “அகல் நாட்டு உம்பர்”
அகல் நாடு என்பது எது? அகல் என்றால் என்ன? உம்பர் - உச்சி  (அ) அப்பால் என ஏன் சொல்கிறார்? காவிரியின் இருகரையும்
ஒன்றாக உள்ளன. வடபெருங்கோடு என்னும் ஸ்டாக் ஃப்ரேஸுக்கு பொருந்துமா? வடகரை தென்கரையை விட
கோடு போல் உள்ளது என்பதெல்லாம்? வட கரை நிவப்பு என ஏன் குறிக்கவில்லை? எனவெல்லாம் பார்த்தால்
காதம், காவதம் என்ற கன்னடச் சொற்களை அறிமுகம் செய்த அடிகள் கொண்டது 10 - 14 மைல் எனலாம்.
12 மைல் ஒரு தோராயம். 

பாவும், உரையும் பருந்தும் நிழலும் போல இருக்கவேண்டும். உரைகாரர்கள் கன்னட் நாட்டுத் தொடர்பையே
நாடுகாண் காதையில் விட்டுவிட்டார்கள் என தோன்றுகிறது. தமிழ் எழுத்தும் (ப்ராமி), சமணமும்
மதுரையை வடபெருங்கோடு (ஸஹ்யாத்ரி)யில் இருந்து மதுரை வந்து அடைந்தது சங்க காலத்தில் என்று
நிரூபணம் ஆகிவிட்டது. அச் செய்திகளைப் பயன்படுத்தினால், “கண்ணகி “கொங்கச் செல்வி, குடமலையாட்டி”
என துர்க்காதேவி கோயிலில் கந்தியாருடன் தங்கிக் கேட்ட வாக்கு என்னவென்று புரியும்.
கண்ணகி தெய்வம் என்று முதலில் பாராட்டினவர் கௌந்தி.கந்தி தான். அதன் பொருள் என்ன? - எனக்
காட்ட வடபெருங்கோடு சொல்கிறார். அப்போதெல்லாம், பேரூர்கள் இல்லாத “ஆபரந்தா” தேசம்
இந்த வடபெருங்கோடு. சுதனன் என்னும் செட்டி இளைஞன் 54 குருமார்களை சந்திப்பதாக கண்டவியூகம்
என்னும் மகாயான சூத்திரம் பாடப்பட்டது. இந்த 54 கலியாண மித்ரர்களையும் போரோபுதூரில் காணலாம்.
அதுபோல், பலரை கவுந்தியுடன் சந்திக்க வைத்துப் பாடினார் இளங்கோ அடிகள்.


---------------------------

வடபெருங் கோடு, வடபெருங் கல் என்பன தமிழகத்து எல்லைகளைக் குறிக்கும் stock phrases.
இதனைக் கருத்தில் கொண்டுதான் அடியார்க்குநல்லாரை விட்டுவிட்டுச் சரியான
பொருளை பாவாணர் கூறியுள்ளார்: வடபெருங்கோடு = மேற்குத் தொடர்ச்சி மலை.

சிங்கநெஞ்சன் ஐயா கொள்ளும் கோடு என்றால் நீர்க்கரை என்பது இளங்கோ அடிகள்
கொண்ட பொருளில்லை. ஏனெனில் காவிரி ஆற்றைப் பாருங்கள். இரண்டு கரைகளும்
ஒரே உயரந்தான். வேறுபாடு இல்லை. மேலும் சற்றே உயர்ந்த கரை என்றால்
நிவப்பு, நிவந்த கரை எனச் சொல்லியிருப்பார் அடிகள். அவ்வாறு காவிரிக் கரை இருமருங்கிலும்
இல்லை. 

எனவே தான், வடபெருங் கோடு = ஸ்ஹயாத்ரி மலைத் தொடர். தமிழ் தேசிய காப்பியம்
எழுதிய இளங்கோ அடிகள் நாடுகாண் காதையில் மூன்று நாடுகளையும் காப்பியத்
தலைவன் தலைவியை நடத்திக் காட்டுகிறார். ஒரு காதம் என்பது ஒரு நாள் நடை.
ஓராண் நடப்பது. நடந்து பழக்கம் இல்லாத கண்ணகியும் கூட வருவதால், ஒரு 45 நாள் கூட
எழுத்திருக்கும் 30 காதம் கடக்க. பொறுமையாக 3 நாடும் கண்டிருப்பர்.

ஒரு புத்த பிட்சுணி காகந்தி (புகார்) பட்டினத்தில் இருந்து வடமதுரையில் கி.பி. 2-ஆம்
நூற்றாண்டில் கொடுத்த தானக் கல்வெட்டு கிடைத்துள்ளது. அதுபோல, சமணக் குரத்தி
கவுந்தி அடிகளைப் பற்றி காவியம் முழுக்கப் பேசுகிறார் அடிகள். 
“கொங்கச் செல்வி, குடமலையாட்டி” என்று போற்றுவது சமண நாடுகள் ஆகிய கன்னாடு (இன்றைய கர்னாடகம்),
கொங்கு என்ன பொருள் என விரிவாகப் பார்ப்போம். தமிழ், கன்னட, சமண அறிஞர் (ஜெர்மனியில்
பேரா. Zydenbos) கவுந்தி  அடிகள் பற்றிய கட்டுரை படித்தேன். 

பொழில் என்று அடிகள் வடபெருங்கோட்டில் சொல்வது மேற்குத் தொடர்ச்சி மலைக்கே உரிய
ஒரு டெக்னிக்கல் வார்த்தை. அதுபற்றியும் பேசலாம். தெய்வம் என்று கண்ணகியை முதலில்
அழைத்தது கவுந்தி அடிகள் தான் என்பது அறிவீர்கள். அதற்கு சமண சமயப் பொருள் என்ன?
- இதைக் காட்டத் தான் கவுந்தி அடிகள் மேற்குத் தொடர்ச்சி மலையில் கண்ணகி - கோவலனை 30 காதம்
பிரயாணம் செய்யவைக்கிறார். 
 
தாழ் பொழில் உடுத்த, தண்பதப் பெருவழிக்
காவிரி வாயில் கடைமுகம் கழிந்து,
குட திசைக் கொண்டு, கொழும் புனல் காவிரி
வட பெரும் கோட்டு மலர்ப் பொழில் நுழைந்து

"கவுந்திஅடிகள் வாழும் பள்ளியை அடைதல்"

காவதம் கடந்து, கவுந்திப் பள்ளிப்
பூ மரப் பொதும்பர்ப் பொருந்தி-

"கண்ணகியின் வினாவும், கோவலன் உரைத்த விடையும"

ஆங்கண்,
இறும் கொடி நுசுப்போடு இனைந்து, அடி வருந்தி,
நறும் பல் கூந்தல் குறும் பல உயிர்த்து,
முதிராக் கிளவியின், முள் எயிறு இலங்க,
‘மதுரை மூதூர் யாது?’ என வினவ-
‘ஆறு-ஐங் காதம் நம் அகல் நாட்டு உம்பர்;
நாறு ஐங் கூந்தல்! நணித்து’ என நக்கு

பலரும் ‘அகல் நாட்டு உம்பர்’ என்பதை மறந்துவிட்டார்கள்.
அகல் நாடு என்பது கொங்குநாட்டு பேச்சு வழக்கு.
அதாவது, கொங்க்நாட்டைப் பார்த்தீர்களானால்
அகல் விளக்குப் போல் தோன்றும். காவிரி திரியாகவும்,
சுற்றிவர மலைகள் அகலின் விள்ம்பாகவும் இலங்குகிற நாடு கொங்குநாடு.
பார்க்க: புலவர் அ. மு. குழந்தை, கொங்குநாட்டு வரலாறு.
உம்பர் என்றால் உச்சி, உயரம். அகல் (விளக்கு) போல உள்ள
கொங்குநாட்டின் உச்சியாகிய மேற்குத்தொடர்ச்சி மலைகளில்
இருந்து, புருஷனைக் வினாவும் கண்ணகிக்கு சிரித்துக்கொண்டே
சொல்கிறான் 30 காதம் தான் என. அதாவது மதுரைக்கு வடக்கே ~360 மைல் 
தூரத்தில் கன்னாட்டுப் பகுதியில் இருந்து பேசிய வார்த்தைகள் இவை.

இந்த இடத்திலே “நம்” என்பது “உன்” என்ற கொங்கு வழக்கை ஆள்கிறார்
அடிகள். அவரே வஞ்சி ஊரர். பஸ் ஸ்டாண்டில் பார்த்து, “நம்ம வீட்டுகு போலாங்களா?”
என்றால், உங்கல் வீட்டுக்கு போகலாமா? - எனப் பொருள். 
இளங்கோ அடிகள் பின் வருவதை முன்னர் சொல்வார்: கவவுக்கை நெகிழாமல் ... முகூர்த்தத்தின்
போது சொல்கிறார். பின்னர் “கொங்கச் செல்வி, குடமலையாட்டி” ஆவதை துர்க்கா தேவி
கோட்டத்தில் கவுந்தி அடிகளுடன் தங்கி செல்கையில் “இவளோ! கொங்கச் செல்வி, குடமலையாட்டி!”
- அதாவது சமண சமயத்தின் படி கண்ணகி தெய்வம் என்றால் என்ன பொருள்? பார்ப்போம்.
அகல் நாட்டு உம்பர் ஆறைங் (30) காதம் - அதாவது, கொங்கு நாட்டு உச்சியிலே 30 காதம் (ஒரு காதம் = சராசரியாக, 12 மைல்).
 - மதுரைக்கு வடக்கே ஸஹ்யாத்திரி (வடபெருங்கோட்டில்) 360 மைல் தொலைவில் இருந்து பேசிய வார்த்தைகள் இவை.
சமண தேசத்தில் - இன்றும் கர்நாடகாவில் சமணம் சிறந்து வாழ்கிறது. மௌர்ய சக்ரவர்த்திகள் அரசாட்சியை
மக்களிடம் கொடுத்தபின்னர் வடக்கிருந்து உயிர்துறக்க வந்த நாடு கன்னாடு தான். கன்னடிய இலக்கியம் முதல் நூற்றாண்டுகளில்
எல்லாம் சமணம் தான். கவுந்தி/கந்தி, காவதம்/காதம் - கன்னட தேச சொற்கள். அங்கே தான் அடிகள் கூறும்
காவதம்/காதம் நீட்டலளவை நீளம் நமக்குப் புலனாகிறது. விபரங்கள் கொடுத்துளேன்.

காவிரிக்கு வடகரை மலைபோல உயரமானது எனவே கோடு. தென்கரை தாழ்ந்துள்ளது எனவே கரை என்றெல்லாம்
சொல்லமுடியாது. காவிரிக்கரையை திருச்சி வந்து பாருங்கள். இரண்டு கரையும் ஒரே உசரம்தான்.

பாவாணர் சரியாக விளக்கிவிட்டார்:


குமரியாறு குமரி (மகேந்திரம்) யென்னும் மாபெரு மலைத்தொடரி னின்று பிறந்தது. இப்போது மேற்குத் தொடர்ச்சிமலையென்றும் கடைக்கழக நூல்களில் குடமலையென்றும் வழங்கும் மலைத்தொடர், அக்காலத்தில் வடமலையென்றும் வடபெருங்கோடு என்றும் அழைக்கப் பட்டது. இலங்கை அக்காலத்தில் இந்தியாவொடு சேர்ந்தும், பொருநை (தாமிரபரணி) இலங்கையூடு சென்றும் இருந்தது. (பாவாணர்)

NG

Singanenjam Sambandam

unread,
Jul 11, 2016, 10:40:28 AM7/11/16
to mint...@googlegroups.com
அன்பின் கணேசன், ந. சி. கந்தையா எழுதியிருப்பது அவர் கணக்கு அல்ல. அவர் குறைத்தார் ஏற்றினார் என்பதெல்லாம் சரியல்ல. யாப்பருங்கல விருத்தியில் பக்கம் 473  இலிருந்து அவர் மேற்கோள் காட்டியுள்ளார். கந்தையா அவர்களை நூல் www.ulakaththamiz.org.Repository இல் கிடைக்கிறது. 

You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Jul 11, 2016, 11:04:43 AM7/11/16
to மின்தமிழ், vallamai


On Monday, July 11, 2016 at 7:40:28 AM UTC-7, singanenjan wrote:
அன்பின் கணேசன், ந. சி. கந்தையா எழுதியிருப்பது அவர் கணக்கு அல்ல. அவர் குறைத்தார் ஏற்றினார் என்பதெல்லாம் சரியல்ல. யாப்பருங்கல விருத்தியில் பக்கம் 473  இலிருந்து அவர் மேற்கோள் காட்டியுள்ளார். கந்தையா அவர்களை நூல் www.ulakaththamiz.org.Repository இல் கிடைக்கிறது. 


ஈழத் தமிழறிஞர் ந. சி. கந்தியாபிள்ளை நூல்கள் சில பார்த்துள்ளேன். சிந்து சமவெளி நாகரீகம் கண்டுபிடித்தபோது சில கருத்துக்கள் சொன்னவர் அவர்.
நூலைப் பார்க்கிறேன். யாராவது நீங்கள் சொல்லும் அப் பக்கத்தைக் கொடுத்தாலும் நல்லது. அது தற்காலத்தில் எழுதியதாக இருக்கலாம்.

யாப்பருங்கலவிருத்தி ஓர் இலக்கண நூல். இதில் இதுபோன்ற துல்லியமான காதம் எத்தனை விரற்கடை, எத்தனை சாண், என்றெல்லாம் இருக்குமா
என்பது மிக ஐயப்பாடுடைத்து. மே. வீ. வேணுகோபாலப்பிள்ளை பதிப்பும், அதற்கு முந்தைய ச, பவானந்தம்பிள்ளை பதிப்பும் பார்க்கவேண்டும்.

கல்வெட்டு போன்ற சான்றுகள், பூவணப்புராணம் பாட்டு காதம் 12.5 மைல் என்பதைக் காளைராசன் ஐயா காட்டினார்.

-----------------------

யாப்பருங்கலவிருத்தியில் ஓர் பழைய விந்துமதி வெண்பா இருக்கிறது. நான் நெடுங்காலமாக எள்/எண் என்னும் தானியப்பெயர் நெண்- /நெள்-
என இருக்கும் என எழுதியுள்ளேன்.  ஞெண்டு/நெண்டு (நண்டு, நள்ளி. நண்டு பிடிப்போர் நளவர் என்ற சாதியார், ஈழத்தில், தென் தமிழகத்தில், like fishermen, crabfolks).
நெள்- /நள் - கருமை/இருள். ஞெண்டு = அலவன். அல்- < நெள்-/நள்- = இருள்/இரவு. இந்த த்யரிக்கு ஆதாரம் நெள் என எள்ளின் மூலப்பெயர்
என்று சமணர்கள் பாடிய வெண்பா யாப்பருங்கலவிருத்தி உரையில் உண்டு:

---------------------------------
சட்டம்தான் என்னத்தான் சட்டென்று சொல்லத்தான்
இட்டம்தான் உன்மேல்தான் என்றிட்டாள் -- கட்டம்தான்
கட்டிக்கொள் சொல்கின்றேன் கண்ணாட்டி என்றேன்நான்
ஒட்டிக்கொண் டாள்வந்தென் மேல்!

இதனை “விட்டிசைத்துப் பாடும் விந்துமதி” எனலாம்.

புணர்ச்சி விதியால் மெய்+உயிர் = உயிர்மெய் என்றெழுதினால் விந்துமதி இலக்கணம் பிறழும்.

முதல் எழுத்தைத் தவிர, எங்கும் உயிரெழுத்து வந்தால் ஸ்ட்ரிக்ட்-ஆகப் பார்த்தால் பிந்துமதி இலக்கணம் தட்டும்.
உ-ம்: கவிமாமணி ஐயா சிவசிவா திருத்தம் சொல்லியபின் தந்த வெண்பாப் பாருங்கள்.

உயிர்மெய், மெய் என்றே கடுமையான விதி இருப்பதால்தான் பல செய்யுள்கள் பூரண பிந்துமதியாய்
உருவெடுக்கவில்லை போலும். நீங்கள் செய்வதுபோல், விட்டிசைத்துப் பாடும் பிந்துமதி என
இலக்கணம் நெகிழ்த்தல் அவசியம்.

இருக்கிற ஒரே பழைய பிந்துமதிக் குறளில் எள்ளின் முந்துதமிழ் (Proto-Dravidian) பெயர் - நெள் - துலங்குகிறது.
நெய்கொண்டென்? நெற்கொண்டென்? நெட்கொண்டென்? கொட்கொண்டென்?
செய்கொண்டென்? செம்பொன்கொண் டென்?
(பிந்துமதிக் குறள்வெண்பா)


இந்த விந்துமதி வெண்பாவில் நெள் என்னும் எள் அகராதிகளில், ஆய்வுகளில் ஏறவேண்டும். நீர்:ஈரம், நுண்ணிய-உண்ணி (உண்ணி க்ருஷ்ணன் - குருவாயூரில்), ... போல
நெள்:எள். சொன்முதல் நகரம் அழிந்தது.

நா. கணேசன்

வேந்தன் ட்வீட்டுக்கு அளித்த மறுமொழி:

Mukunthan Pathmanesan

unread,
Jul 11, 2016, 11:40:18 AM7/11/16
to mint...@googlegroups.com, vallamai
அன்பின் கணேசன் ஐயா,
1. காதம் என்பது இதுதான் என சரியாக நிறுவமுடியுமா?
2.
>தமிழ் தேசிய காப்பியத்தில் தன் நாடு - சேர நாட்டை - காட்டாமலா நாடுகாண் காதை பாடுவார் இளங்கோ அடிகள்?
அதற்குத்தான் வஞ்சிக்காண்டம் உள்ளதே.. தவிர, சேர நாட்டைப்பற்றிப் பாடுவதால், வெளிப்படையாகப் பாடுவாரே.. ஏன் இந்த மயக்கம் ?

3.
>கண்ணகி தெய்வம் என்று முதலில் பாராட்டினவர் கௌந்தி.கந்தி தான்.
ஏன் அவ்வாறு கூறுகிறீர்கள்?




நன்றி,
முகுந்தன்

தேமொழி

unread,
Jul 11, 2016, 11:40:24 AM7/11/16
to மின்தமிழ்


On Monday, July 11, 2016 at 8:04:43 AM UTC-7, N. Ganesan wrote:


On Monday, July 11, 2016 at 7:40:28 AM UTC-7, singanenjan wrote:
அன்பின் கணேசன், ந. சி. கந்தையா எழுதியிருப்பது அவர் கணக்கு அல்ல. அவர் குறைத்தார் ஏற்றினார் என்பதெல்லாம் சரியல்ல. யாப்பருங்கல விருத்தியில் பக்கம் 473  இலிருந்து அவர் மேற்கோள் காட்டியுள்ளார். கந்தையா அவர்களை நூல் www.ulakaththamiz.org.Repository இல் கிடைக்கிறது. 


ஈழத் தமிழறிஞர் ந. சி. கந்தியாபிள்ளை நூல்கள் சில பார்த்துள்ளேன். சிந்து சமவெளி நாகரீகம் கண்டுபிடித்தபோது சில கருத்துக்கள் சொன்னவர் அவர்.
நூலைப் பார்க்கிறேன். யாராவது நீங்கள் சொல்லும் அப் பக்கத்தைக் கொடுத்தாலும் நல்லது. அது தற்காலத்தில் எழுதியதாக இருக்கலாம்.

யாப்பருங்கலவிருத்தி ஓர் இலக்கண நூல். இதில் இதுபோன்ற துல்லியமான காதம் எத்தனை விரற்கடை, எத்தனை சாண், என்றெல்லாம் இருக்குமா
என்பது மிக ஐயப்பாடுடைத்து. மே. வீ. வேணுகோபாலப்பிள்ளை பதிப்பும், அதற்கு முந்தைய ச, பவானந்தம்பிள்ளை பதிப்பும் பார்க்கவேண்டும்.

கல்வெட்டு போன்ற சான்றுகள், பூவணப்புராணம் பாட்டு காதம் 12.5 மைல் என்பதைக் காளைராசன் ஐயா காட்டினார்.



இந்தக் கோட்டிற்குக் கீழுள்ள தகவலின்  தொடர்பு புரியவில்லையே ....!!!!!

Rathinam Chandramohan

unread,
Jul 11, 2016, 12:49:33 PM7/11/16
to mint...@googlegroups.com
While studying PUC 1975 I had a lesson stating Kadam as 12  miles. In Nalavenba; Meladai veezhnthathu Kan Edu vendrar atharkul Nalaru Kadham Kadanthathu Khan. Our Tamil teacher told that Kadham is 12 miles. But no evidence.

"Have a great Day.
An Evening away from Greatness"- From "More and Most" by T.R.R



அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு
“To see a world in a grain of sand,
And a heaven in a wild flower,
To hold infinity in the palm of your hand,
And Eternity in an hour.”
-----From “Auguries of Innocence” by William Blake

Dr.R.Chandramohan
Principal
Sree Sevugan Annamalai College,
Devakottai-630 303,
Tamilnadu State,
India

Rathinam Chandramohan

unread,
Jul 11, 2016, 1:02:50 PM7/11/16
to mint...@googlegroups.com

Length

  • 10 koaN= 1 nuNNaNu
  • 10 nuNNaNU= 1 aNu(atom)
  • 8 aNu= 1 kathirtthugaL
  • 8 kathirtthugaL= 1 thusumbu
  • 8 thusumbu= 1 mayirnuni
  • 8 mayirnuni= 1 nuNmaNal
  • 8 nuNmaNal= 1 siRu-kadugu
  • 8 siRu-kadugu= 1 eL
  • 8 eL= 1 nel
  • 8 nel= 1 viral= 8^8 aNu(atom)= 1.9444 centimetre
  • 12 viral= 1 saaN= 100 immi= 23.3333 centimetre
  • 2 saaN= 1 muzham= 46.6666 centimetre
  • 2 muzham= 1 kajam
  • 4 muzham= 1 paagam
  • 625 paagam= 1 kaadham= 5000 saaN= 1166.66 metres= 1.167 kilometre

"Have a great Day.
An Evening away from Greatness"- From "More and Most" by T.R.R



அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு
“To see a world in a grain of sand,
And a heaven in a wild flower,
To hold infinity in the palm of your hand,
And Eternity in an hour.”
-----From “Auguries of Innocence” by William Blake

Dr.R.Chandramohan
Principal
Sree Sevugan Annamalai College,
Devakottai-630 303,
Tamilnadu State,
India

N. Ganesan

unread,
Jul 11, 2016, 3:14:16 PM7/11/16
to மின்தமிழ், vallamai


On Monday, July 11, 2016 at 9:49:33 AM UTC-7, rathinam.chandramohan wrote:
While studying PUC 1975 I had a lesson stating Kadam as 12  miles. In Nalavenba; Meladai veezhnthathu Kan Edu vendrar atharkul Nalaru Kadham Kadanthathu Khan. Our Tamil teacher told that Kadham is 12 miles. But no evidence.


நல்ல பாடல். நன்றி.

இங்கே, நாலாறு காதம் = 10 காதம் (4X6 = 24) என்று பொருள் எடுத்தல் இல்லை. நைடதத்துடன் ஒப்பீடு:

பேரா. பாண்டியராசாவுக்கு சாலியூர் எது எனக் கொடுத்த கட்டுரையில் 10, 100 என்பவற்றின் ஸிம்பல்ஸுடன்
படிக்கவேண்டிய உதாரணம் ஒன்று கொடுத்துள்ளேன்: ”5 தலையிட்ட ஐம்பதிற்று எண்ணூறு” = 8*(100) + 5*(10) +5 = 855.
இதேபோல், அஷ்ட-விம்சதி-சதம் = 8+20+100 = 128. - பழைய ஆய்வுக் கட்டுரையைக் காட்டியுள்ளேன்,

வையைப் பூம்பட்டினத்தில் எண் 804 பொறித்த சங்ககாலத் தொல்பொருள்


நா. கணேசன்

N. Ganesan

unread,
Jul 11, 2016, 3:16:59 PM7/11/16
to மின்தமிழ், vallamai


On Monday, July 11, 2016 at 9:49:33 AM UTC-7, rathinam.chandramohan wrote:
While studying PUC 1975 I had a lesson stating Kadam as 12  miles. In Nalavenba; Meladai veezhnthathu Kan Edu vendrar atharkul Nalaru Kadham Kadanthathu Khan. Our Tamil teacher told that Kadham is 12 miles. But no evidence.

Thanks. There is old evidence, see B. L. Rice, F. Buchanan, A. Conningham, .... confirmig what your teacher said. Madras lexicon gives ~10 miles, this is on the lower side of Kaadham.

NG

N. Ganesan

unread,
Jul 11, 2016, 3:29:07 PM7/11/16
to மின்தமிழ்


On Monday, July 11, 2016 at 7:40:28 AM UTC-7, singanenjan wrote:
அன்பின் கணேசன், ந. சி. கந்தையா எழுதியிருப்பது அவர் கணக்கு அல்ல. அவர் குறைத்தார் ஏற்றினார் என்பதெல்லாம் சரியல்ல. யாப்பருங்கல விருத்தியில் பக்கம் 473  இலிருந்து அவர் மேற்கோள் காட்டியுள்ளார். கந்தையா அவர்களை நூல் www.ulakaththamiz.org.Repository இல் கிடைக்கிறது. 


தமிழகம் என்கிற தலைப்புக் கொண்ட நூலா? ந.சி.க. நூலில் எத்தனாம் பக்கம்?

நா. கணேசன் 

தேமொழி

unread,
Jul 11, 2016, 5:11:43 PM7/11/16
to மின்தமிழ்
திருச்சி ==> மதுரை தொலைவு ~ 90 மைல்


மதுரை 30 காதம்  தூரத்தில் உள்ளது என்று குறிப்பிட்டிருந்தால் 

ஒரு காதம் ~ 3 மைல் 


ந.சி.க நூல் குறிப்புப் படி பாண்டியராஜா ஐயா குறிப்பிட்ட அளவுதான் கிட்டத்தில் ஒத்து வருகிறது.  

கன்னட நாட்டு காதம் அளவும் தமிழகப் பகுதி காதம் அளவும் ஒன்றே என்று உறுதியாகச் சொல்ல என்ன அடிப்படை?

ஆப்கானிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும் ரூபாய் என்ற பணம்  ஒன்றாக இருக்கலாம்.

அவர்களுக்கு ஒரு ரூபாய் = 60 பைசா 

நமக்கு ஒரு ரூபாய் = 100 பைசா 

N. Ganesan

unread,
Jul 11, 2016, 8:26:33 PM7/11/16
to மின்தமிழ்


On Monday, July 11, 2016 at 2:11:43 PM UTC-7, தேமொழி wrote:
திருச்சி ==> மதுரை தொலைவு ~ 90 மைல்


மதுரை 30 காதம்  தூரத்தில் உள்ளது என்று குறிப்பிட்டிருந்தால் 

ஒரு காதம் ~ 3 மைல் 


ந.சி.க நூல் குறிப்புப் படி பாண்டியராஜா ஐயா குறிப்பிட்ட அளவுதான் கிட்டத்தில் ஒத்து வருகிறது.  

கன்னட நாட்டு காதம் அளவும் தமிழகப் பகுதி காதம் அளவும் ஒன்றே என்று உறுதியாகச் சொல்ல என்ன அடிப்படை?

காதம் என்பது ஒருவன் ஒருநாளில் நடக்கும் தூரம்.

கன்னடியனுக்கு காதம் 10 -14 மைல்; ஆனால், தமிழனுக்கு காதம் 2 மைல் (ந.சி. கந்தையா கணக்கு - பாண்டியராசா மடல்).
தமிழன் கன்னடனுக்கு ஓய்ந்தவனா? - என தமிழ்த்தேசியர் கேட்பார்கள்.

மேலும்,
சென்னைப் பேரகராதி, புக்கானன் தமிழ்நாட்டில் தானே ஆராய்ந்து எழுதினார்?
பூவணப் புராணம் கிபி 1620-ல் காதம் 12.5 மைல் என்கிறது. சந்திரமோகன் ஆசிரியர் 12 மைல் என்றிருக்கிறார்.
பச்சைத் தமிழரும் 12 மைல் காதம் எனக் கொண்டனர் என தெரிகிறது. கன்னடியர் மட்டுமில்லை.

நா. கணேசன்

 

N. Ganesan

unread,
Jul 11, 2016, 8:29:00 PM7/11/16
to மின்தமிழ்
திரு. சிங்கநெஞ்சன்,

ஐ ஐந்து அடுத்த இரட்டி : இருபத்தைந்தின் இருமடங்கு; ஐம்பது.
நான்கு குரோசம் கொண்டது ஒரு யோசனை. இரண்டரை மைல் ஒரு
குரோசம். எனவே, யோசனை என்பது பத்து மைல் தொலைவு
ஆகிறது. காதம் என்பதும் சுமார் பத்து மைல் தொலைவு என்பர்.
யோசனையைக் கூப்பிடு தூரம் என்றும் கூறுவர்.             

 காவதம்:  காதம்  (பத்து நாழிகைத்  தூரம்).

யோசனை, காதம் என்பன - ஒருபொருளன; அது
- ஏழரைநாழிகை வழி;(நாற்காதத்தை யோசனையென்பது - ஜைந நூல்
வழக்கு.)

FYI,
~NG

iraamaki

unread,
Jul 12, 2016, 12:37:04 AM7/12/16
to mint...@googlegroups.com
அன்பிற்குரிய சிங்கநெஞ்சனுக்கு,
 
பழந்தமிழர் நீட்டளவை பற்றி ஒரு முடியாத தொடர் ஒன்று 2009 இல் எழுதினேன். அதில் இன்னும் ஆர்யபட்டாவின் புவிவிட்டம் பற்றிய சிந்தனையை எழுதாமலுள்ளேன். ஆனால் விரற்கிடை, பெருவிரல்,  சாண்,  முழம், சிறுகோல், கோல், பெருங்கோல், கூப்பீடு, காதம், யோசனை வரை சொல்லியுள்ளேன்.
பல்வேறு விவரங்கள் அதிலுள்ளன. படித்துப்பாருங்கள். மின்தமிழில் உள்ளோரும் படிக்கட்டும்.
 
அன்புடன்,
இராம.கி.
 
Sent: Sunday, July 10, 2016 11:09 AM
Subject: [MinTamil] காதம் எவ்வளவு தூரம்
 

காதம் என்றால் எவ்வளவு தூரம் ?

ஒரு காதம் என்பது பத்து மைல் தூரமா , பன்னிரெண்டு மைலா என்றெல்லாம் கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெறுகின்றன. யாப்பருங்கலக் காரிகை என்று ஒரு நூல். அதற்கு  யாப்பருங்கல விருத்தி என்று ஒரு உரை நூல்.. பதினோராம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனக் கருதுகிறார்கள் அதில் பக்கம் 473 இல் விளக்கம் உள்ளது. இதைத் தமிழ்  அறிஞர் ந. சி. கந்தையா தனது “தமிழகம்” (1934) எனும் நூலில் சுட்டிக் காட்டுகிறார்.

12  விரல்        1 சாண்          

2    சாண்         1 முழம்

4    முழம்        1 கோல்

500 கோல்         1 கூப்பிடு

4         கூப்பிடு    1 காதம்.

இனி, முழம் என்றால் யாருடைய கையால் , லால் பகதூர் சாஸ்திரி கையா, அல்லது கான் அப்துல் கபார் கான் கையா என்றல்லாம்  கேட்கக்  கூடாது.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

iraamaki

unread,
Jul 12, 2016, 1:02:29 AM7/12/16
to mint...@googlegroups.com
எழில்நிலாக்காரர் என் கட்டுரைத்தொடரைத்தான் எடுத்துப் போட்டிருக்கிறார். அருகில் இருக்கிறேன். ஏனோ கண்களுக்குத் தேரியமாட்டேன் என்கிறேன்.
 
அன்புடன்,
இராம.கி.
--

Singanenjam Sambandam

unread,
Jul 12, 2016, 1:10:41 AM7/12/16
to mint...@googlegroups.com
அன்பின் இராம.கி. ஐயா அவர்களுக்கு வணக்கம், தாங்கள் அளித்துள்ள தகவல்களுக்கு   மிக்க நன்றி. பொறுமையாகப் படித்துப் பயனடைவேன். 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

Mukunthan Pathmanesan

unread,
Jul 12, 2016, 2:58:39 AM7/12/16
to mint...@googlegroups.com
காதம்

இராம.கி. ஐயா இழையிலிருந்து
http://valavu.blogspot.in/2009/07/6.html

நெடுந்தொலை வாய்ப்பாடு (தென்புலம்):
4 கூப்பீடு = 1 காதம் = 22000 அடி = 4.166667 மைல் = 6.7050438 கி.மீ
நெடுந்தொலை வாய்ப்பாடு (வடபுலம்):

4 கூப்பீடு = 1 காதம் = 11000 அடி = 2.088888 மைல் = 3.3525219 கி.மீ


அபிதான சிந்தாமணி என்ற தமிழின் முதல் கலைக்களஞ்சியத்தில் "கணிதவகை" என்ற சொல்லின் கீழ் "பூப்பிரமாணம் அறிதல்" என்ற தலைப்பில் தரப்பட்டிருக்கும் வாய்ப்பாடு இதற்கு பொருந்தும்.

குமரிமைந்தன் ஐயா அவர்களின் இழையிலிருந்து
http://kumarimainthan.blogspot.com/2005/11/blog-post_113188287842871425.html
சாண் 2 கொண்டது ஒரு முழம் (1½ அடி)
முழம் 12 கொண்டது ஒரு சிறுகோல் (18 அடி)
சிறுகோல் 4 கொண்டது ஒரு கோல் ( 72 அடி )
கோல் 55 கொண்டது ஒரு கூப்பிடு (3960 அடி)
கூப்பிடு 4 கொண்டது ஒரு காதம் (15840 அடி = 3 x 5280 = 3மைல்கள் )
(கூப்பிடு - காது - காதம்?)
காற்றில் ஒலியின் விரைவு நொடிக்கு 1089 அடி.
தோராயமாக 1100 அடி
ஒரு நாழிகையில் ஒலி செல்லும் தொலைவு = 24 x 60 x 1100 = 1584000 அடிகள் = 100 காதங்கள்.
அதாவது ஒரு காதம் என்பது ஒரு நாழிகையில் ஒலி செல்லும் தொலைவில் 100 இல் ஒரு பங்கு.


தேமொழி அம்மாவின் தேடலிலிருந்து
--------------

ஒரு காதம் என்பது 5 மைல் அதாவது 8 கி.மீ. ஆகும்.

--------------

ஒரு காதம், 11 கி.மீ. தொலைவு எனக் கருதப்படுகிறது.
[தொல்லியல்துறை அறிஞர் க.குழந்தைவேலன் அவர்களின் சொற்பொழிவிலிருந்து....து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர்]

------------
தமிழர் அளவை முறைகள்

1 காதம் (1200 கஜம்)



---------------------
(காதம் பற்றிய ஆய்வு  இவ்விழையில் தொடர்வதற்காக இங்கே இணைக்கின்றேன் .. )



N. Ganesan

unread,
Jul 12, 2016, 3:51:38 AM7/12/16
to மின்தமிழ், vallamai
On Sunday, July 10, 2016 at 9:45:53 AM UTC-7, singanenjan wrote:
அன்பின் கணேசன் ( 'ஐயா'  விட்டு விட்டேன் ; தாங்களும் விட்டு விடும்படி கேட்டுக் கொள்கிறேன்), யாப்பருங்கல விருத்தி நூல் உள்ளவர்கள் அதில் 473  ஆம் பக்கத்தைப் பார்த்து விடையிறுத்தால்  நன்றாக இருக்கும். பழந்தமிழ் இலக்கியங்களுக்கு  யாப்பருங்கல விருத்தியை சார்ந்திருப்பதே நன்று. புகானின் நூலை முழுமையாகப் படித்துள்ளேன்.  (அவர்தான் செம்புராங் கல்லுக்கு "LATERITE"என்று கேரளாவில் பெயர் வைத்தவர்.)  கானிங்காம் தரும் விளக்கம் என்ன ? 

 
கானிங்காம் கொடுக்கும் விளக்கத்தால் தெரியலாகும் காதம் (= ~16 மைல்).

"The Bundela kos, which is in use throughout Bundelkhand, and other Hindu provinces to the south of Jumna, is about 4 miles in length. The same long kos is also in use in Mysore, in Southern India" (The Ancient Geography of India: I. The Buddhist Period, Including the Campaigns of Alexander, and the Travels of Hwen-Thsang)

A. கானிங்காம் கூற்றுப்படி, காதம் = ~16 மைல்.
4 குரோசம் = 1 காதம்/காவதம். எனவே, கானிங்காம் ~16 மைல் = ஒரு காதம், பண்டை பொந்திலியர் நாட்டிலும்,
அதற்குத் தெற்காக இருக்கும் தென்னிந்தியாவிலும் என்கிறார். இந்த இழையில் கொடுத்துள்ள பழைய
ஆதாரமான இந்நூல்களை யாரும் காதக் கணக்கீட்டில் பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இவையெல்லாம் இல்லாமல், காதம் ~2 மைல் போன்றெல்லாம் சொல்வது பிழைபட்டதாக முடியும்.

காதம் = 10 - 14 மைல் என்று மற்ற தொல்லியல் ஆய்வு நூல்களுடன் பொருந்திவருகிறது.
சென்னைப் பல்கலைக் கழகப் பேரகராதி (Madras Tamil Lexicon):
காதம்¹ kātam , n. cf. gavyūta. [K. gāvada, gāvuda, M. kātam, Tu. gāvuda.] Indian league, about 10 miles; ஏழரை நாழிகைவழி. காதம் பலவுந் திரிந்துழன்றேற்கு (திவ். பெரியாழ். 5, 3, 4).

(1)
See B. L. Rice, 1897, pg. 548, 
Mysore, by districts
"Gaavada or Gau = a distance of about 12 miles"

(2)
Foreign measures and their English values, 1864
Gavada or Day's Journey = 14.6 miles

(3)
Francis Buchanan, A Journey from Madras Through the Countries of Mysore, Canara and Malabar..., 1807
pg. 332
"for every Gau or Gavada of 4 cosses, which amount upon an average, I suppose, to between 12 and 14 miles."

எனவே தான், கவுந்தி பள்ளி (வட பெருங்கோட்டு மலர்ப் பொழில் நுழைந்து இருப்பது)
மதுரைக்கு ~360 மைல் (=30 காதம்) தொலைவில் இருந்துள்ளது எனக் கணிக்கிறேன்.
கவுந்திப் பள்ளியில் இருந்துகொண்டு  கோவலன் கண்ணகிக்கு மதுரை 30 காதம்
என்று சொல்வதை நாடுகாண் காதையில் காண்கிறோம்.

--------------------------------------

கவுந்தி அடிகள் பள்ளியில் அவரைத் தொழுகின்றனர் இருவரும், பிறகு  பேசுகிறான் கோவலன். கவுந்தி அடிகள் இடத்தில் இருந்து
பேசுவதால், வட பெரும் கோடு வந்தாயிற்று:


குட திசைக் கொண்டு, கொழும் புனல் காவிரி
வட பெரும் கோட்டு மலர்ப் பொழில் நுழைந்து
காவதம் கடந்து, கவுந்திப் பள்ளிப்
பூ மரப் பொதும்பர்ப் பொருந்தி-
ஆங்கண்,
இறும் கொடி நுசுப்போடு இனைந்து, அடி வருந்தி,
நறும் பல் கூந்தல் குறும் பல உயிர்த்து,
முதிராக் கிளவியின், முள் எயிறு இலங்க,
‘மதுரை மூதூர் யாது?’ என வினவ-
‘ஆறு-ஐங் காதம் நம் அகல் நாட்டு உம்பர்;
நாறு ஐங் கூந்தல்! நணித்து’ என நக்கு

கவுந்தியின் பள்ளியில் இருந்து தெற்கே 30 காதம் மதுரை என்பது என் புரிதல்.
காதம் 12 மைல் எனக் கொள்ளின், 360 மைல். மதுரைக்கும், வடபெருங்கோட்டு (மேற்குத் தொடர்ச்சி மலையின்)
கவுந்தி தங்கியிருந்த பள்ளிக்கும் தொலைவு.

காவதம் கடந்து - பல காதம் கடந்து எய்திய பள்ளி.
காவதம் - இங்கே நெடுந்தூரம், 
http://www.tamilvu.org/slet/l3800/l3800uri.jsp?song_no=4114&book_id=57&head_id=54&sub_id=1416
காதம் - இங்கு, நெடுந்தூரமென்றபடி.

கவுந்தி அடிகள் வட பெருங்கோட்டில் ஒரு பள்ளியில் வாழும் குரத்தியார்.
அந்த இடத்திற்கும், மதுரைக்கும் 30 காதம் தொலைவு, அதாவது ~360 மைல்.
என்பது என் புரிதல். 

பின் அந்த வட பெரும் கோட்டு மலையூர்களை எல்லாம் தாண்டி, சீரங்கபட்டினம்
வந்தடைந்து தருமம் சாற்றும் சாரணரைத் தொழுகின்றனர். பின்னர் உறையூர் (திருச்சி)
நோக்கிப் பயணம் செய்கின்றனர்.

நா. கணேசன்
 

N. Ganesan

unread,
Jul 12, 2016, 6:41:35 AM7/12/16
to மின்தமிழ்
ஆப்கானிஸ்தானிலும் பல காலமாய் 100 பைசா இருந்திருக்கிறது. அண்மையில் 60 பைசா என மாற்றியுள்ளனர். அது கிடக்க.

--------------------

கானிங்காம் ~16 மைல் = 1 காதம் தென்னிந்தியாவில் எனக் கொடுத்துள்ளார்:

சரி, தமிழ் இலக்கியங்களில் காதம் என்றால் எவ்வளவு தொலைவு என்று கணக்குப் போட்டுப் பார்த்தேன்.
கணிதப் பேரா. பாண்டியராசா மடலைப் படித்ததால்.

தமிழ் இலக்கியங்களில் 1 காதம் = ~ 18 மைல் என்று வருகிறது. கானிங்காம் ~16 மைல் தென்னிந்தியாவில்
என்பதுடன் ஒத்துப்போகிறது.

30 காதம் மேற்குத் தொடர்ச்சிமலைக் கவுந்திப்பள்ளியில் அடிகள் தருவதை
தமிழ் இலக்கிய ~ 18 மைல், கானிங்காம் ~16 மைல் எனப் பெருக்குவதை விட்டுவிட்டாலும்,
~12 மைல் என எடுத்தால் கூட ~ 360 மைல் கணக்கு வருகிறது.

புகார்க்காண்டத்தில் ஏன் பாடுகிறார் ஸஹ்யாத்திரியை என்கிறார் முகுந்தன் ஐயா.
அது சோழராசா ஆட்சியின் கீழ் அப்போது இருந்ததால் என்று இளங்கோ அடிகளே சொல்லியும் உள்ளார்.

பிற பின்!
நா. கணேசன் 

N. Ganesan

unread,
Jul 12, 2016, 10:21:26 AM7/12/16
to மின்தமிழ்


On Monday, July 11, 2016 at 11:42:36 PM UTC-7, தேமொழி wrote:


On Monday, July 11, 2016 at 10:45:10 PM UTC-7, selvi...@gmail.com wrote:


மேலும் காதம் எனும் சொல் பற்றி சில முறை இதே மின் தமிழில் மடல் இழைகள்வளர்ந்ததுண்டு அதனை பார்த்தல் தெரியும் 
தி ருமதி   தேமொழி அவர்களுக்கு நே ரம் கிடைத்து தேடிமுயன்றால் நலம்

இதுவரை கிடைத்தது .....


--------------

ஒரு காதம் என்பது 5 மைல் அதாவது 8 கி.மீ. ஆகும்.

--------------

ஒரு காதம், 11 கி.மீ. தொலைவு எனக் கருதப்படுகிறது.
[தொல்லியல்துறை அறிஞர் க.குழந்தைவேலன் அவர்களின் சொற்பொழிவிலிருந்து....து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர்]

------------
தமிழர் அளவை முறைகள்

1 காதம் (1200 கஜம்)


மேலும் தேடிப் பார்க்கிறேன் ஐயா.

..... தேமொழி 

தேடியபோது கிடைத்த ஒரு மடல்,
ந. உ. துரை, டிசம்பர் 19, 2010-ல் எழுதியுள்ளார். எங்கிருந்து எடுத்தார் எனக் கேட்போம்:
ஒரு கணக்கு : 
1 காதம் = 7.5 நாழிகை வழி = 3 மணி நேர பயண தூரம் = 10மைல் = 16.80கிமீ 

(காதம்¹ kātam 
, n. cf. gavyūta. [K. gāvada, gāvuda, M. kātam, Tu. gāvuda.] Indian league, about 10 miles; ஏழரை நாழிகைவழி)
 
நாழிகைக்கு 24 நிமிடம் என்றும் , 60 வினாடிகள் என்றும் குறிப்புகள் இருக்கின்றன .. இதில் நொடிகளுக்கு 
தொடர்ச்சியான குறிப்புகள் இல்லாமையால் ,24 நிமிடங்களை கணக்கில் கொள்கிறேன் )

1யோசனை = 4 காதம் = 12 மணி நேர பயண தூரம் = 67.2 கிமீ 

பயண தூரத்தின் அலகு : 

அந்தக் காலகட்டத்தில் மனிதனின் / கால்நடையின்/ (மாட்டு வண்டியின்)  நடக்கும் வேகமே அனைவரும் அறிந்த பொது அலகாக இருக்க வாய்ப்புகள் அதிகம் ...  

மனிதன் நடக்கும் சராசரி வேகம் = 5 கிமீ
முதியோர் =4.50 - 4.75 கிமீ/ மணி ; இளைஞர் = 5.32 - 5.43 கிமீ/ மணி)

ஒருபகல் பொழுதில் நடந்து கடக்கும் பயண தூரம் = 60 கிமீ ...

தமிழகத்தில் பெரும்பாலும் பெரிய ஊர்களுக்கு இடையே இருக்கும் இடைவெளி/ தூரம் பெரும்பாலும் 55-65 கிமீகளுக்கு உள்ளேயே அமைந்திக்கிறது எனபதையும் கவனத்தில் கொள்வோம் .... ( காலையில் புறப்பட்டு மாலையில் தங்கி ..மறு நாள் பயணம் தொடர வசதியான இடைவெளி) 

‘அனைவரும் சேர்ந்து ஆளுக்கு ஒரு யோசனை தேடினால் அதனை கண்டுபிடித்து விடலாம் ‘ என்ற ஒரு குறிப்பும் இங்கே உண்டு .... ’ ஒரு பகல் பொழுதுக்குள் ‘ என்ற பொருள் / அளவு இதற்குப் பொருந்துகிறது ...............

எனவே 1 யோசனை என்பது ஒரு நாள் நடைபயணத் தூரம் = 60 - 67 கிமீ  ( ie...4காதம் ) என்பது எனக்குப் பொருத்தமாகவேப் படுகிறது  

N. Ganesan

unread,
Jul 13, 2016, 2:00:10 AM7/13/16
to வல்லமை, mint...@googlegroups.com, housto...@googlegroups.com

On Saturday, July 9, 2016 at 10:39:22 PM UTC-7, singanenjan wrote:

காதம் என்றால் எவ்வளவு தூரம் ?

ஒரு காதம் என்பது பத்து மைல் தூரமா , பன்னிரெண்டு மைலா என்றெல்லாம் கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெறுகின்றன. யாப்பருங்கலக் காரிகை என்று ஒரு நூல். அதற்கு  யாப்பருங்கல விருத்தி என்று ஒரு உரை நூல்.. பதினோராம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனக் கருதுகிறார்கள் அதில் பக்கம் 473 இல் விளக்கம் உள்ளது. இதைத் தமிழ்  அறிஞர் ந. சி. கந்தையா தனது “தமிழகம்” (1934) எனும் நூலில் சுட்டிக் காட்டுகிறார்.

12   விரல்        1 சாண்          

2     சாண்         1 முழம்

4     முழம்        1 கோல்

500 கோல்         1 கூப்பிடு

4         கூப்பிடு    1 காதம்.

இனி, முழம் என்றால் யாருடைய கையால் , லால் பகதூர் சாஸ்திரி கையா, அல்லது கான் அப்துல் கபார் கான் கையா என்றல்லாம்  கேட்கக்  கூடாது.



யாப்பருங்கலம், அதன் பழைய விருத்தி இதுதான்:

இதில் சாண், முழம், கூப்பிடு, காதம் என்றெல்லாம் இல்லை.

ஒருவேளை, ச. பவானந்தம் தன் பதிப்பில் அடிக்குறிப்பாக எழுதியிருக்கலாம்.
மே. வீ. வேணுகோபாலப்பிள்ளை சுத்தப்பதிப்பில் நீக்கியிருக்கிறார்.
மூல நூலிலும், விருத்தியிலும் இல்லாமையான்.

ஆனால், காதம் (= ~18 மைல்) பழைய நூல்களில் உண்டு.

நா. கணேசன் 

Subbaier Ramasami

unread,
Jul 13, 2016, 9:11:07 AM7/13/16
to mintamil
சாண் முழம் கணக்குப்படி பார்த்தால்      சாண் என்பது 9 அங்குலம்

ஒரு முழம் ஒன்றரை அடி.  ஒரு கோல் - 6 அடி    கூப்பிடு  3000 அடி     ஒரு காதம்   12000 அடி . அதாவது 2.273 மைல். . காதம் என்பது கிட்டத்தட்ட 10 மைல் எனக்கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு காலத்தில்,   நிமிடத்தை விநாடி என்றும்  செகண்டை நொடி என்றும் சொல்லியிருக்கிறார்கள்.


பாரதியார் 3-4- 1909ல் இந்தியா பத்திரிகையில் எழுதியுள்ள திசைகள் என்ற கவிதையில்


ஒரு நொடிப்போதில் ஓர் பத்து
ஒன்பதாயிரமாம் காதம்
வருதிற லுடைத்தாஞ் சோதிக்
 கதிரவன் வகுப்பானான்றோர்
கருதவும் அரிய தம்மா!

என்கிறார். அதாவது  ஒரு நொடியில் ஒளி செல்லும் தூரம் 19000 காதம் என்கிறார். அதாவது 1,90,000 மைல்.   கிட்டத்தட்டச் சரிதான். ஒளியின் வேகம் 1,86,000 மைல்.

சூரியனிடமிருந்து பூமிக்கு ஒளிவர

கதிருடை விரைவும் அஃது
பருதியின் நின்றோர் எட்டு
விநாடியிற் பரவு மீங்கே” என்கிறார். அதாவது கிட்டத்தட்ட 8 நிமிடங்கள் என்பது அவரது கணக்கு. அதுவும் சரிதான். சரியான அளவு எட்டு நிமிடங்கள் 20 நொடிகள்.

காதம் என்பதைப் 10 மைல் என்று கொள்வதுதான் பொருத்தம் என நினைக்கிறேன்.  ஒரு காதத்திற்கு 6.5 கி மீ என்றும் இல்லை அதில் பாதி என்றும் சொல்பவர்கள் உண்டு. பலத்த ஆய்வு நடைபெற்றிருக்கிறது. ஆனால் முடிவுதான் எட்டவில்லை.

“ மண்டலத்தை அணுவணு வாக்கினால்
வருவதெத்தனை அத்தனை யோசனை
கொண்ட தூரம் அவற்றிடை வைத்தனை” என்கிறான் பாரதி.

ஒரு யோசனை என்றால் எவ்வளவு தொலைவு?

இலந்தை




--

Singanenjam Sambandam

unread,
Jul 13, 2016, 9:25:46 AM7/13/16
to mint...@googlegroups.com
அன்பின் அய்யா வணக்கம்  .. பகிர்விற்கு  நன்றி 

N. Ganesan

unread,
Jul 13, 2016, 9:31:51 AM7/13/16
to மின்தமிழ், vallamai


On Wednesday, July 13, 2016 at 6:11:07 AM UTC-7, elandhai wrote:
சாண் முழம் கணக்குப்படி பார்த்தால்      சாண் என்பது 9 அங்குலம்

ஒரு முழம் ஒன்றரை அடி.  ஒரு கோல் - 6 அடி    கூப்பிடு  3000 அடி     ஒரு காதம்   12000 அடி . அதாவது 2.273 மைல். . காதம் என்பது கிட்டத்தட்ட 10 மைல் எனக்கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு காலத்தில்,   நிமிடத்தை விநாடி என்றும்  செகண்டை நொடி என்றும் சொல்லியிருக்கிறார்கள்.


பாரதியார் 3-4- 1909ல் இந்தியா பத்திரிகையில் எழுதியுள்ள திசைகள் என்ற கவிதையில்


ஒரு நொடிப்போதில் ஓர் பத்து
ஒன்பதாயிரமாம் காதம்
வருதிற லுடைத்தாஞ் சோதிக்
 கதிரவன் வகுப்பானான்றோர்
கருதவும் அரிய தம்மா!

என்கிறார். அதாவது  ஒரு நொடியில் ஒளி செல்லும் தூரம் 19000 காதம் என்கிறார். அதாவது 1,90,000 மைல்.   கிட்டத்தட்டச் சரிதான். ஒளியின் வேகம் 1,86,000 மைல்.

சூரியனிடமிருந்து பூமிக்கு ஒளிவர

கதிருடை விரைவும் அஃது
பருதியின் நின்றோர் எட்டு
விநாடியிற் பரவு மீங்கே” என்கிறார். அதாவது கிட்டத்தட்ட 8 நிமிடங்கள் என்பது அவரது கணக்கு. அதுவும் சரிதான். சரியான அளவு எட்டு நிமிடங்கள் 20 நொடிகள்.

காதம் என்பதைப் 10 மைல் என்று கொள்வதுதான் பொருத்தம் என நினைக்கிறேன்.  ஒரு காதத்திற்கு 6.5 கி மீ என்றும் இல்லை அதில் பாதி என்றும் சொல்பவர்கள் உண்டு. பலத்த ஆய்வு நடைபெற்றிருக்கிறது. ஆனால் முடிவுதான் எட்டவில்லை.

காதம் < காவதம், கந்தி < கவுந்தி போல. இதனை சமணர்கள் பயன்படுத்த கர்நாடகாவில் இருந்து தமிழுக்கு முதன்முதலில் கொணர்ந்தவர் இளங்கோ அடிகள்.
கௌந்தி என்ற சமண சமயத்தைப் பரப்ப ஒரு கேரக்டர் படைத்து நாடுகாண் காதை எழுதியுள்ளார். இது சிலம்புக்கு முன்னரே பிரபலமாயிருந்த
கண்டவியூக சூத்திரம் - கிபி முதல் நூற்றாண்டிலே சீனாவில் மொழிபெயர்ப்பான நூல், போரோபுதூரில் இதற்கு ஆலயம் உள்ளது, தமிழ்நாடு, தென்னிந்தியாவில் பல இடங்களைக் குறிப்பிடும் நூல்.
சுதனச் செட்டி என்னும் தனவணிக இளைஞன் கலியாணமித்ரர் என்னும் குருமார்களை சந்தித்து ஞானம் பெறும் நூல், இன்னும் தமிழறிஞர் யாரும் ஆராயாத நூல் இது -
புவியியல் பொருளில் ஊர்களை கண்டவியூகமோ (மகாயானம்) - இதன் பொதியில்மலை பற்றிய கட்டுரை எழுதியுள்ளேன் - , சிலம்பில் நாடுகாண் காதையோ பேசுவதில்லை.
அதனாற்றான் வடபெருங்கோடு = ஸஹ்யாத்ரி எனப் புரிந்துகொள்ள இடர்ப்பாடுகள், அரங்கம் - சீரங்கபட்டினம், நாடுகாண் காதையில்.

அண்மையில் சிலர் கொடுத்துள்ள நாடுகாண்காதை உபதலைப்புகளால் நேரும் குழப்படிகள் பல. அவற்றை நூலைப் படித்து மாற்றலாம். காவிரி என்றால் திருச்சி - பூம்புகார்
என இளங்கோ அடிகள் கொள்ளவில்லை. அங்கே மலைநாட்டு வளப்பமான ஊர்கள் - நாடுகாண்காதையில் காண்பது - எதுவுமில்லை. தஞ்சாவூர் ஜில்லாவில் ஏது மலை?
 

“ மண்டலத்தை அணுவணு வாக்கினால்
வருவதெத்தனை அத்தனை யோசனை
கொண்ட தூரம் அவற்றிடை வைத்தனை” என்கிறான் பாரதி.

ஒரு யோசனை என்றால் எவ்வளவு தொலைவு?

இலந்தை



ஒரு யோசனை = ஒரு காதம் என்னும் கணக்கை பல தமிழ் நூல்களில் காண்கிறோம்.
உ-ம்: நளவெண்பா, நைடதம்.

மேலாடை வீழ்ந்த தெடுவென்றான் அவ்வளவில்
நாலாறு காதம் நடந்ததே - தோலாமை
மேல்கொண்டான் ஏறிவர வெம்மைக் கலிச்சூதின்
மால்கொண்டான் கோல்கொண்ட மா.

நால் ஆறுகாதம்: நாலும் ஆறும் கூடிய காதமெனப் பொருள் கொள்க. எனவே பத்துக் காதம்: உம்மைத்தொகை எண்ணுப்பொருளில் வந்தது. நால் ஆறு எனக்கொண்டு நாலாறு இருபத்து நான்கெனப் பெருக்கிப் பொருளுரைப்பர் சிலர். அதுபொருந்தாது. நைடத நூலினும் பத்து யோசனையென்றே குறிப்பதும் கருதத்தக்கது. காதத்தை யோசனையெனக் கொண்டனர்போலும் ! அதையும் காட்டுதும்:

‘முத்த வெண்குடை வேந்தர்கோன் முழவுறழ் தடந்தோள்
உத்த ரீயமந் நெறியிடை வீழ்தலும் உணர்ந்து
தத்து வாம்பரி நிறுவியத் துகில்தரு கென்னப்
பத்து யோசனை கடந்தது தேரெனப் பகர்ந்தான்.’


On Monday, July 11, 2016 at 9:49:33 AM UTC-7, rathinam.chandramohan wrote:
While studying PUC 1975 I had a lesson stating Kadam as 12  miles. In Nalavenba; Meladai veezhnthathu Kan Edu vendrar atharkul Nalaru Kadham Kadanthathu Khan. Our Tamil teacher told that Kadham is 12 miles. But no evidence.


நல்ல பாடல். நன்றி.

இங்கே, நாலாறு காதம் = 10 காதம் (4X6 = 24) என்று பொருள் எடுத்தல் இல்லை. நைடதத்துடன் ஒப்பீடு:

பேரா. பாண்டியராசாவுக்கு சாலியூர் எது எனக் கொடுத்த கட்டுரையில் 10, 100 என்பவற்றின் ஸிம்பல்ஸுடன்
படிக்கவேண்டிய உதாரணம் ஒன்று கொடுத்துள்ளேன்: ”5 தலையிட்ட ஐம்பதிற்று எண்ணூறு” = 8*(100) + 5*(10) +5 = 855.
இதேபோல், அஷ்ட-விம்சதி-சதம் = 8+20+100 = 128. - பழைய ஆய்வுக் கட்டுரையைக் காட்டியுள்ளேன்,

வையைப் பூம்பட்டினத்தில் எண் 804 பொறித்த சங்ககாலத் தொல்பொருள்


---------------------

N. Ganesan

unread,
Jul 13, 2016, 9:39:42 AM7/13/16
to மின்தமிழ், vallamai


On Wednesday, July 13, 2016 at 6:11:07 AM UTC-7, elandhai wrote:


காதம் என்பதைப் 10 மைல் என்று கொள்வதுதான் பொருத்தம் என நினைக்கிறேன்.  ஒரு காதத்திற்கு 6.5 கி மீ என்றும் இல்லை அதில் பாதி என்றும் சொல்பவர்கள் உண்டு. பலத்த ஆய்வு நடைபெற்றிருக்கிறது. ஆனால் முடிவுதான் எட்டவில்லை.

காதம் ~10 மைல் என சென்னைப் பல்கலைப் பேரகராதி. 

ஆனால், துல்லியமாக யோசனை (=காதம்) கணக்கிடும் நூல்கள் தமிழில் உண்டு. 1 அங்குலம் = 19 மிமீ, இது இந்தியா முழுவதிலும் பல ஆயிரம் ஆண்டுகளாய் உள்ள அளவை என்பர்.
1 அங்குலம் = 19 மிமீ என்று கணக்கிட்டால், காதம் = ~18 மைல் வருகிறது.

சுமாராக குறைந்தபட்ச அளவையாக காதம் = ~12 மைல் என்று எடுத்து கவுந்திப் பள்ளிக்கும் மதுரைக்கும் உள்ள தூரம் ~360 மைல் என நிறுவியுள்ளேன். அது,
வடபெருங்கோடு (ஸஹ்யாத்ரி)யில் கர்நாடக ஜைநப் பள்ளி. 

நோக்கிப் பயணம் செய்கின்றனர்.

நா. கணேசன்
 

N. Ganesan

unread,
Jul 13, 2016, 9:58:39 AM7/13/16
to மின்தமிழ், vallamai


On Sunday, July 10, 2016 at 5:01:48 AM UTC-7, Pandiyaraja wrote:
லால் பகதூர் சாஸ்திரி கைக்கும், அல்லது கான் அப்துல் கபார் கான் கைக்கும் எங்கே போவது?
கைலியை  மடித்துக்கட்டிக்கொண்டு நானே களத்தில் இறங்கினேன்.
தாங்கள் கொடுத்துள்ள வாய்பாட்டை அப்படியே எடுத்துக்கொண்டேன்.
நான் ஒரு சராசரித் தமிழன் - உயரம் 5 1/2 அடி.
என்னுடைய ஒரு சாண் என்பதை அளந்தேன். 8 1/2 அங்குலம் இருந்தது. அதாவது 17/2"
அல்லது 17/(2x12) அடி = 0.70833அடி = இது ஒரு சாண்
இப்போது 1 காதத்துக்கு எத்தனை அடி?
0.70833 x 2 x 4 x 500 x 4 = 11333.333அடி. இந்த அடியை மைல் ஆக்குங்கள்.

3 அடி 1 கஜம்
220 கஜம் 1 பர்லாங்கு
8 பர்லாங்கு 1 மைல்

இப்பொழுது கணக்கு இதுதான்:
11333.333/(3x220x8) = 2.1464 மைல்
இதில் 10 மைல் 12 மைல் எங்கே வந்தது?
ப.பாண்டியராஜா


காதம் ~2 மைல் என்ற பிழைபட்ட கருத்தை ச. பவானந்தம்பிள்ளை கொடுத்திருக்கிறார்.
இது 11-ஆம் நூற்றாண்டின் யாப்பருங்கலம், விருத்தியில் உள்ளதன்று.
அக்கால தமிழ்நூல்களில் காதம் ~18 மைல் என்ற கணக்கு இருக்கிறது.

பவானந்தர் செய்த கணக்கு பிழையானதால், அவருக்குப் பின் பதிப்பித்த
மே. வீ. வேணுகோபாலப்பிள்ளையவர்கள் இக்கணக்கை (காதம் = ~ 2மைல்) நீக்கிவிட்டார்.

N. Ganesan

unread,
Jul 13, 2016, 10:11:35 AM7/13/16
to மின்தமிழ்


On Sunday, July 10, 2016 at 5:01:48 AM UTC-7, Pandiyaraja wrote:
லால் பகதூர் சாஸ்திரி கைக்கும், அல்லது கான் அப்துல் கபார் கான் கைக்கும் எங்கே போவது?
கைலியை  மடித்துக்கட்டிக்கொண்டு நானே களத்தில் இறங்கினேன்.
தாங்கள் கொடுத்துள்ள வாய்பாட்டை அப்படியே எடுத்துக்கொண்டேன்.
நான் ஒரு சராசரித் தமிழன் - உயரம் 5 1/2 அடி.
என்னுடைய ஒரு சாண் என்பதை அளந்தேன். 8 1/2 அங்குலம் இருந்தது. அதாவது 17/2"
அல்லது 17/(2x12) அடி = 0.70833அடி = இது ஒரு சாண்
இப்போது 1 காதத்துக்கு எத்தனை அடி?
0.70833 x 2 x 4 x 500 x 4 = 11333.333அடி. இந்த அடியை மைல் ஆக்குங்கள்.

3 அடி 1 கஜம்
220 கஜம் 1 பர்லாங்கு
8 பர்லாங்கு 1 மைல்

இப்பொழுது கணக்கு இதுதான்:
11333.333/(3x220x8) = 2.1464 மைல்
இதில் 10 மைல் 12 மைல் எங்கே வந்தது?
ப.பாண்டியராஜா



யுரேக்கா!

யாப்பருங்கலம் - ந. சி. கந்தையாப்பிள்ளை பயன்படுத்திய பக்கம்:

Mukunthan Pathmanesan

unread,
Jul 13, 2016, 11:09:28 AM7/13/16
to mint...@googlegroups.com
இதையும் பாருங்கள்.


​இராம.கி.  ஐயா கூறுவது
http://valavu.blogspot.com/2009/07/8.html
”இத் தர்மத்துக்கு பிழைக்க நிற்பார் கங்கையிடக் குமரியிடை எழுநூற்றுக் காதத்திலும் பாவம் செய்தான் செய்த பாவம் கொள்வதாக ஒட்டிக் குடுத்தோம் ஸபையோம்”
கங்கையிடக் குமரியிடை எழுநூற்றுக் காதம் என்னும் பொழுது, ”வாரணாசிக்குச் சென்று கங்கையாடும்” பழக்கம் இங்கு உணர்த்தப் படுகிறது. கங்கைக்கும் குமரிக்கும் இடைத்தொலைவு 700 காதம் எனில், தென்புல வாய்ப்பாட்டின் படி, அது 700*6.7 = 4690 கி.மீ. என்றாகிறது. இது உறுதியாய் அதிகம். மாறாக, இத்தொலைவு வட, தென் புலங்களில் வேறாகி, முன்னே சொன்ன ”கோல் அளவு” குழப்பத்தால், கணக்கீடு மாறியிருக்குமோ என்று தோற்றுகிறது. அதாவது நம்மூரில் பெருங்கோல் (=தண்டம்) என்பது 11 அடி. கோல் (=தண்டு, ஓராள் உயரம்) என்பது 5 1./2 அடி. ஆனால் வடக்கே, 5 1/2 அடிக் கோலே குரோசத்திற்கு அடிப்படையாய் இருந்து, கணக்கிட்டிருக்கிறார்கள். [அர்த்த சாற்றம் சொல்லும் அளவும் 5 1/2 அடிக்கே பொருந்துகிறது.] வடபுல வாய்ப்பாட்டை ஒட்டி அளந்தால், ஒரு காதம் (அல்லது குரோசம்) என்பது 3.35 கி.மீ ஆக அமைகிறது. அப்பொழுது 700 காதம் என்பது 700*3.35 = 2345 கி.மீ என்றாகும்.

----
”கூப்பீடு என்பது இன்னும் குறைவாய் 500 சிறுகோலுக்கு இணையாய் ஒருகாலத்தில் இருந்திருக்கலாமோ?” என்றும் எண்ணத் தோன்றுகிறது. ...
----
மேலே ”கூப்பீடு என்பதன் தொலைவு வெவ்வேறு காலங்களில் மாறுபட்டு இருந்திருக்குமோ?” என்று ஐயுறுவதற்கு, இன்னொரு போல்மமும் (model) நம்மைத் தூண்டுகிறது. காலத்தின் நீட்சியைக் குறிக்கும் “யுகம்” என்ற சொல், இந்தியத் துணைக்கண்டத்தில் காலத்திற்குக் காலம் பொருள் வேறுபாடு காட்டியிருக்கிறது. கி.மு. 1500 - 1200 அளவில், யுகம் என்று சொல் 5 ஆண்டுகளையே (சமவட்டம், பரிவட்டம், இடவட்டம், அணுவட்டம், உத வட்டம் என்று அந்த ஐந்தாண்டுகளுக்குப் பெயர் சொல்லுவார்கள்.) குறித்திருக்கிறது. பின்னால் முன்செலவத்தைக் (precession) கணக்கில் கொண்டு ஒக்க நாட்கள் (equinox) அல்லது முடங்கல் நாட்கள் (solstice) ஒரு இராசியில் இருந்து இன்னொரு இராசிக்கு மெதுவாய் நகரும் காலத்தை யுகம் என்ற சொல் குறித்திருக்கிறது. இந்த யுகம் கிட்டத்தட்ட 2160 ஆண்டுகள் ஆகும். இன்னும் சிலகாலம் கழித்து நான்கு யுகங்கள் என்று சொல்லும் வகையில் ஆயிரக் கணக்கான ஆண்டுகள் வருமாப் போலக் கலியுகம் 432000 ஆண்டுகள், துவாபரயுகம் 864000 ஆண்டுகள், த்ரேதாயுகம் 1296000 ஆண்டுகள், க்ருதயுகம் 1728000 ஆண்டுகள் என்றும் பகுத்திருக்கிறார்கள். ஆக யுகம் என்ற சொல்லுக்கு வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு பொருட்பாடுகள் இருந்திருக்கின்றன. இதே போலக் காதம்/காவதம் என்றசொல்லுக்கும் வெவ்வேறு பொருட்பாடுகள் வெவ்வேறு காலங்களில் இருந்திருக்கலாமே?

முதற்சங்க காலம்:

1 கூப்பீடு = 500 சிறு கோல்.

இடைச்சங்க காலமும் அதற்குப் பின்னும் [கி.மு.1000-300. வடபுலத்துச் சனபதங்கள், மோரியர் ஆட்சிக் காலம்]

1 கூப்பீடு = 500 கோல் (இதுவே வட புலத்தில் நிலைத்திருக்கலாம், பின்னால் பல்லவர், சோழப் பேரரசில் வடமரபு ஆதிக்கம் கூடிப் பின் தெற்கிலும் நிலைபெற்றிருக்கலாம்)

கடைச்சங்க காலம் [கி.மு.500-கி.பி.200]

1 கூப்பீடு = 500 பெருங்கோல் (சிலம்பு வரையிலும் இது பயன்பாட்டில் இருந்து, பின் பல்லவர் ஆட்சியில் வடபுல வழக்கதிற்கு மாறியிருக்கலாம்).

இந்தக் கருதுகோளை இன்னும் பல சான்றுகள் கொண்டு உறுதி செய்யவேண்டும்.
---
http://valavu.blogspot.com/2009/07/8.html



நன்றி

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jul 13, 2016, 12:33:59 PM7/13/16
to mintamil
வணக்கம்.

2016-07-10 22:31 GMT+05:30 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:

கி.பி. 1620ஆம் ஆண்டு கந்தசாமிப் புலவரால் எழுதப்பெற்ற திருப்பூவணப் புராணத்தில் காவதம் என்ற சொல் இரண்டு இடங்களில் இடம் பெற்றுற்றது.

பாடல் எண் 236
கங்கைதங்கியசெஞ்சடிலசேகரன்முன்கண்ணகன்கதம்பமாவனத்திற்
கங்கிதிக்கதனிலறைந்திடுகின்றவரைதலையிட்டகாவதத்தின்
மங்குறோய்புட்பவனமதிலென்றுமன்னுமெம்பிரான்மகிழ்ந்தருளுந்
துங்கமாதவநற்சவுநகவென்றுசூதமாமுனிவரன்சொல்வான்

வரைதலையிட்ட காவதம் என்றால் என்ன பொருள்?

கதம்பமாவனம் = மதுரை
அங்கி திக்கு = அக்னிதிசை = தென்கிழக்கே
புட்பவனம் = பூவணம் = திருப்பூவணம்
மதுரை திருப்பூவணம் = 20 கி.மீ. = 12 . 5 மைல்

பாடல் எண் 375
மிக்கவூழ்வந்துமேவிடவாயிடை
முக்கணன்றிருமுன்சென்றுதாழ்ந்தெழீஇப்
பக்கமோடுபதம்பணியாமலே
தெக்கிணாவர்த்ததென்றிசைசென்றனன்

பாடல் எண் 376
சென்றுகாவதத்திற்றிகழ்திருச்சுழியற்சிந்துதீர்த்தம்படிந்தியல்பிற்
பின்றிகழ்பின்னல்பிறங்குவானவனைப்பெரிதருச்சனைமுடித்ததற்பின்
பொன்றிகழ்புரிசைப்பூவணத்தடைந்தப்புனிதநீர்படிந்ததன்கரைமே
லொன்றினனாகவோரிராக்கதனாயுழன்றுதன்னலமிழந்தன்றே

இந்தப் பாடலின்படி   காவதம் = 47 கி.மீ.= 29.4 மைல் என்றல்லவா பொருளாகிறது.

திருப்பூவணத்திற்குத் தெற்கே திருச்சுழி = 47 கி.மீ. = 29. 4 மைல்

கி.பி. 1899 ஆம் ஆண்டு தஞ்சாவூர் சுப்பிரமணிய ஐயர் அவர்களால் பாடப்பெற்ற
காளையார்கோயில் புராணத்தில் காவதம் என்ற சொல் இடம் பெற்றுள்ளது.

பாடல் எண் 54
ஐயகேள்குணக்கதாயவார்கலிக்கருகிலுள்ள
மையறுநறியநீத்தமாசுணநதிக்கூலத்திற்
பொய்யின்மான்மியவிருத்தபுரிக்குவாருணதிக்கின்க
ய்யரைக்காவதத்தினவிர்தருஞ்சோதிக்கானம்

இந்தப்பாடலின் படி ஐயரைக்காவதம் = 55 கி.மீ.
எனவே காவதம் = 5 கி.மீ. என்றல்லவா பொருளாகிறது?

விருத்தபுரி = திருப்புனவாசல்
வாருணதிக்கு = மேற்குத் திசை
சோதிக்கானம் = காளையார்கோயில்

திருப்புனவாசலில் இருந்து மேற்கே காளையார்கோயில் 55கி.மீ. = 34 மைல்

On 10-Jul-2016 10:03 pm, "N. Ganesan" <naa.g...@gmail.com> wrote:


On Sunday, July 10, 2016 at 8:40:37 AM UTC-7, Pandiyaraja wrote:
இன்னொரு இழையிலிருந்து சுட்டது.



தேவு ஐயா எங்கிருந்து எடுத்தார் என தெரியாது. ஆனால், பிழைபட்ட கணக்கு இது.
சென்னைப் பேரகராதி, ரைஸ், புக்கானன், .... காதம் 10 - 14 மைல்கள் என்கின்றன.
பலர் எழுதி ஆய்ந்துள்ளனர்: உ-ம்: கானிங்காம்

தேவ் முன்பெல்லாம் மின்தமிழில் என்னைக் குறிப்பிட்டு நிறைய எழுதினார். வாசித்திருப்பீர்கள்.
இப்போது அங்கே காணோம்.

நா. கணேசன்
 
"
1 காதம் = 22000 அடி = 4.166667 மைல் = 6.7050438 கி.மீ

பழந்தமிழர் நீட்டளவை வாய்ப்பாட்டைக் கீழ்க்கண்டவாறு முறைப்படுத்தலாம்.

குறுந்தொலை வாய்ப்பாடு (வடபுலத்திற்கும் தென்புலத்திற்கும் பொதுவானது):
1 விரற்கிடை = 11/16 அங்குலம்
1 பெருவிரல் = 1 3/8 அங்குலம்
12 விரற்கிடை = 6 பெருவிரல் = 8 1/4 அங்குலம்
2 சாண் = 1 முழம் = 1.3/8 அடி
2 முழம் = 1 சிறுகோல் = 2 3/4 அடி
2 சிறுகோல் = 1 கோல் = 5 1/2 அடி
2 கோல் = 1 பெருங்கோல் (தண்டம்) = 11 அடி
8 பெருங்கோல் (தண்டம்) = 1 கயிறு

நெடுந்தொலை வாய்ப்பாடு (தென்புலம்):

500 பெருங்கோல் (தண்டம்) = 62 1/2 கயிறு = 1 கூப்பீடு = 5500 அடி =
1.04167 மைல்.= 1.6763595 கி.மீ

4 கூப்பீடு = 1 காதம் = 22000 அடி = 4.166667 மைல் = 6.7050438 கி.மீ

4 காதம் = 1 யோசனை = 88000 அடி = 16.233333 மைல் = 26.820175 கி.மீ

http://ezilnila.com/archives/1329


தேவ்

"

இதன்படி 1000 கோல் 1 கூப்பிடு என்றாகிறது. அப்படிப்பார்த்தாலும் 1 காதத்துக்கு 4 சொச்சம் மைல்தான்!

ப.பாண்டியராஜா



On Sunday, July 10, 2016 at 7:00:40 PM UTC+5:30, N. Ganesan wrote:



On Saturday, July 9, 2016 at 10:39:22 PM UTC-7, singanenjan wrote:

காதம் என்றால் எவ்வளவு தூரம் ?

ஒரு காதம் என்பது பத்து மைல் தூரமா , பன்னிரெண்டு மைலா என்றெல்லாம் கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெறுகின்றன. யாப்பருங்கலக் காரிகை என்று ஒரு நூல். அதற்கு  யாப்பருங்கல விருத்தி என்று ஒரு உரை நூல்.. பதினோராம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனக் கருதுகிறார்கள் அதில் பக்கம் 473 இல் விளக்கம் உள்ளது. இதைத் தமிழ்  அறிஞர் ந. சி. கந்தையா தனது “தமிழகம்” (1934) எனும் நூலில் சுட்டிக் காட்டுகிறார்.

12   விரல்        1 சாண்          

2     சாண்         1 முழம்

4     முழம்        1 கோல்

500 கோல்         1 கூப்பிடு

4         கூப்பிடு    1 காதம்.

இனி, முழம் என்றால் யாருடைய கையால் , லால் பகதூர் சாஸ்திரி கையா, அல்லது கான் அப்துல் கபார் கான் கையா என்றல்லாம்  கேட்கக்  கூடாது.


அடியார்க்குநல்லார் உரையைவிட பாவாணர் விளக்கியுள்ள “வடபெருங்கோடு” = மேற்குத் தொடர்ச்சி மலை என்னும் பொருள் பொருந்துவதாக தோன்றுகிறது.
அதனை முகுந்தன் கேட்ட இழையில் விளக்க எண்ணியுள்ளேன். https://groups.google.com/forum/#!msg/vallamai/AckQT7mPiWU/RXqqqnnrBQAJ

காவதம்/காதம் ஒரு மனிதனால் ஒரு நாளைக்கு எவ்வளவு நடக்க முடியும்
என்பதை அடிப்படையாகக் கொண்டது. காவுகிற தொலைவு எனலாம் (cf. காவடி).

ந. சி. கந்தையாபிள்ளையவர்கள் கொடுத்த காதம் என்பதன் கணக்கு தவறு என விளங்குகிறது. பேரா. பாண்டியராசா இக் கணக்கின்படி காதம் = 2.1 மைல் ஆகும். ஒரு நாளைக்கு
2 மைல் தானா ஒரு ஆள் நடப்பான்?

சில பழைய சான்றுகள் தருகிறேன்:

காவதம் என்றும் > காதம் என்றும் (மூன்று) நாடுகாண் காதையில் குறிப்பிடுவது சமண நாட்டுச் சொல். கர்நாடகா கல்வெட்டுகளில்
Gaavada எனப்படும். காவதம் = காதம் நீட்டலளவை 12 - 14 மைல் என்கின்றனர் சரித்திர ஆசிரியர்கள். சென்னை அகராதி ~10 மைல் என்னும்.
ஆவரேஜ் ஆக, 12 மைல்எனலாம்.

(1)
See B. L. Rice, 1897, pg. 548, 
Mysore, by districts
"Gaavada or Gau = a distance of about 12 miles"

(2)
Foreign measures and their English values, 1864
Gavada or Day's Journey = 14.6 miles

(3)
Francis Buchanan, A Journey from Madras Through the Countries of Mysore, Canara and Malabar..., 1807
pg. 332
"for every Gau or Gavada of 4 cosses, which amount upon an average, I suppose, to between 12 and 14 miles."

சென்னைப் பல்கலைக் கழகப் பேரகராதி (Madras Tamil Lexicon):
காதம்¹ kātam , n. cf. gavyūta. [K. gāvada, gāvuda, M. kātam, Tu. gāvuda.] Indian league, about 10 miles; ஏழரை நாழிகைவழி. காதம் பலவுந் திரிந்துழன்றேற்கு (திவ். பெரியாழ். 5, 3, 4).

கவுந்தி :கந்தி என்று சமண சமயக் குரத்தியர்க்குப் பெயர் ஆதல் போல, காவதம் :காதம் என்றாகிறது தமிழில். கர்நாடகத்தில் - சமணத்துக்குப் புகழ் பெற்ற நாடு - காவதம்
கல்வெட்டுகளிலும், அண்மைக் காலம் வரை வழக்கில் உள்ளது. அதன் படி, 12 - 14 மைல் காதம் எனத் தெரிகிறது. பி. எல். ரைஸ், பிரான்சிஸ் புக்கானன், ... போன்றோர்
சான்றுகள் கொடுத்துள்ளேன்.

நா. கணேசன்
  

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Oru Arizonan

unread,
Jul 13, 2016, 1:36:50 PM7/13/16
to mintamil


2016-07-13 6:11 GMT-07:00 Subbaier Ramasami <elan...@gmail.com>:
//ஒரு நொடிப்போதில் ஓர் பத்து
ஒன்பதாயிரமாம் காதம்
வருதிற லுடைத்தாஞ் சோதிக்
 கதிரவன் வகுப்பானான்றோர்
கருதவும் அரிய தம்மா! 

என்கிறார். அதாவது  ஒரு நொடியில் ஒளி செல்லும் தூரம் 19000 காதம் என்கிறார். அதாவது 1,90,000 மைல்.   கிட்டத்தட்டச் சரிதான். ஒளியின் வேகம் 1,86,000 மைல். //
 
 கவிஞரே,

பாரதியின் கவிதையிலிருந்து எப்படிப்பட்ட அருமையான எடுத்துக்காட்டைக் கொடுத்திருக்கிறீர்கள்.  பாரதி ஒளியின் வேகத்தை எவ்வளவு அருமையாகக் கவிதையாகப் புனைந்து "காதத்தின்" அளவையும் கொடுத்திருக்கிறான்!

எனக்கு காழிப்பிள்ளையாரின் கோளறு திருப்பதிகத்திலுள்ள, நாள்கள்பற்றிய ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது.

"எம்பொடு கொம்பொடாமை இவை மார்பில் இலங்க
எருதேறும் எங்கள் பரமன் பொன்பொடு மத்தமாலை 
புனல்சூடி வந்தென்  உளமே புகுந்த அதனால் 
ஒன்பதோ தொன்றொடேழு பதினெட்டொடாறும் 
உடனாய நாள்கள் அவைதான் அன்புடன் நல்லநல்ல 
அவைநல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே."

இதில் நாள்கள் குறித்து திருஞானசம்பந்தர் கொடுத்திருப்பது ஒரு ஆண்டுக்கானவை என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்.  

அருள்கூர்ந்து,  இந்த நாள்களின் கணக்கை விளக்கிச்சொன்னால் மிக்க நன்றியுள்ளவனாக இருப்பேன்.
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

N. Ganesan

unread,
Jul 13, 2016, 8:05:04 PM7/13/16
to மின்தமிழ்


On Wednesday, July 13, 2016 at 6:11:07 AM UTC-7, elandhai wrote:
சாண் முழம் கணக்குப்படி பார்த்தால்      சாண் என்பது 9 அங்குலம்

ஒரு முழம் ஒன்றரை அடி.  ஒரு கோல் - 6 அடி    கூப்பிடு  3000 அடி     ஒரு காதம்   12000 அடி . அதாவது 2.273 மைல். . காதம் என்பது கிட்டத்தட்ட 10 மைல் எனக்கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு காலத்தில்,   நிமிடத்தை விநாடி என்றும்  செகண்டை நொடி என்றும் சொல்லியிருக்கிறார்கள்.


இங்கே காதம் என்பதைவிட, 12000 அடி = 1/2 கோசம்/க்ரோசம் அல்லது 1 கோசம்/க்ரோசம் என்பது பொருந்தும்

1 கோசம்/குரோசம் = 24000 அடி = 4.5 மைல்.
4 குரோசம் = 1 காவதம்/காதம் = 18 மைல்.
(சிவஞான மாபாடியம், தணிகைப் புராணம் ~18 மைல் தருவதன்படி, 1 கோசம் = 4.5 மைல்).

கானிங்காம் 1 காதம் = ~16 மைல் என்பதுடன் பொருந்தும்.

12000 அடியை 1 கோசம் என்று கொண்டால், காதம் = 9 மைல்.

ஆக, கீழெல்லை: 1 காதம் = 9 மைல்.
மேலெல்லை: 1 காதம்= 18 மைல்.

9, 12, 14, 16, 18 மைல் கணக்குகளை காதம்/காவதம் நீட்டலளவைக்கு கேட்கிறோம்.

தேமொழி

unread,
Jul 13, 2016, 8:27:45 PM7/13/16
to மின்தமிழ்
இந்தக் குழப்படியைத் தீர்க்க back calculation  ஒன்றுதான் வழி எனத் தோன்றுகிறது. 

இலக்கியங்களில் ...கல்வெட்டுகளில் ... நாமறிந்த இரு இடங்களும்... அவற்றுக்கு இடையேயான தொலைவும் குறிப்பிட்டிருந்தால் 
அதன் வழியில் கணக்கிட்டு அறியத்தேவை.


இப்பொழுது திருச்சி மதுரை 30 காதம் என்ற குறிப்பு சரியாக இருந்தால், ஒரு காதம் 3 மைல் என்று வருவது போன்ற வகையில் கணக்கிட்டுக்க ண்டறிந்து ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

..... தேமொழி

N. Ganesan

unread,
Jul 13, 2016, 8:38:38 PM7/13/16
to மின்தமிழ், kalair...@gmail.com


On Wednesday, July 13, 2016 at 9:33:59 AM UTC-7, kalai wrote:
வணக்கம்.

2016-07-10 22:31 GMT+05:30 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:

கி.பி. 1620ஆம் ஆண்டு கந்தசாமிப் புலவரால் எழுதப்பெற்ற திருப்பூவணப் புராணத்தில் காவதம் என்ற சொல் இரண்டு இடங்களில் இடம் பெற்றுற்றது.

பாடல் எண் 236
கங்கைதங்கியசெஞ்சடிலசேகரன்முன்கண்ணகன்கதம்பமாவனத்திற்
கங்கிதிக்கதனிலறைந்திடுகின்றவரைதலையிட்டகாவதத்தின்
மங்குறோய்புட்பவனமதிலென்றுமன்னுமெம்பிரான்மகிழ்ந்தருளுந்
துங்கமாதவநற்சவுநகவென்றுசூதமாமுனிவரன்சொல்வான்

வரைதலையிட்ட காவதம் என்றால் என்ன பொருள்?

பல பாடல்களில் காதம் (அ) காவதம் நெடுந்தூரம் என்ற பொருளில் வரும்.
அதுதான் இங்கே என நினைக்கிறேன்.

(1)
வட பெரும் கோட்டு மலர்ப் பொழில் நுழைந்து
காவதம் கடந்து, கவுந்திப் பள்ளிப்
பூ மரப் பொதும்பர்ப் பொருந்தி- நாடுகாண்காதை, சிலம்பு

(இங்கே காவதம் நீண்ட தொலைவு)

(2) 
ஓதப்பைங்கடல்புடைசூழுலகாளுமுடிவேந்தருறுபோரஞ்சிப்,
பாதத்தில்வீழ்வரோபாரரசர்கேட்டாலும்பழியேயன்றோ,
மேதக்கவரமகளிர்கைப்பிடிக்கவிந்திரனும்விண்ணோர்தாமும்,
காதத்திலெதிர் கொள்ளக் கற்பகநீழலில்வைப்பன்கலங்கலம்மா. (வில்லிபாரதம்_


காதம் - நீண்ட தொலைவு என்றபடி.

iraamaki

unread,
Jul 13, 2016, 10:43:28 PM7/13/16
to mint...@googlegroups.com
இரு இடங்களுக்கு இடையே இருந்த தொலைவைக்குறிப்பிட்டு அதில் இருக்கும் காதக்கற்களையுங் குறிப்பிட்டிருந்தேனே?
நான் அனுப்பிய பழந்தமிழர் நீட்டளவை பற்றிய தொடரைப் படிக்கவேயில்லையா?
 
கீழே கொடுத்திருப்பது தான் எல்லாவகையாலும் ஒத்துவருகிறது. அப்புறம் உங்கள் உகப்பு.
 
500 பெருங்கோல் (தண்டம்) = 62 1/2 கயிறு = 1 கூப்பீடு = 5500 அடி = 1.04167 மைல்.= 1.6763595 கி.மீ 
4 கூப்பீடு = 1 காதம் = 22000 அடி = 4.166667 மைல் = 6.7050438 கி.மீ 
4 காதம் = 1 யோசனை = 88000 அடி = 16.233333 மைல் = 26.820175 கி.மீ

நெடுந்தொலை வாய்ப்பாடு (வடபுலம்):

500 கோல் = 31 1/4 கயிறு = 1 கூப்பீடு = 2750 அடி = 0.520835 மைல் = 0.8381798 கி.மீ 
4 கூப்பீடு = 1 காதம் = 11000 அடி = 2.088888 மைல் = 3.3525219 கி.மீ 
4 காதம் = 1 யோசனை = 44000 அடி = 8.33333 மைல் = 13.4100875 கி.மீ

 
அன்புடன்,
இராம.கி.
Sent: Thursday, July 14, 2016 5:57 AM
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

தேமொழி

unread,
Jul 14, 2016, 12:12:29 AM7/14/16
to மின்தமிழ்
நன்றி இராமகி ஐயா.

மன்னிக்கவும்... பொறுமையாகப் படிக்க குறித்து வைத்தால் தவற விட்டுவிட்டேன்.

விரைவில் படித்துவிடுகிறேன்.

மீண்டும் நன்றி ஐயா.


..... தேமொழி

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

N. Ganesan

unread,
Jul 14, 2016, 2:41:09 AM7/14/16
to மின்தமிழ்


On Wednesday, July 13, 2016 at 7:43:28 PM UTC-7, இராம.கி wrote:
இரு இடங்களுக்கு இடையே இருந்த தொலைவைக்குறிப்பிட்டு அதில் இருக்கும் காதக்கற்களையுங் குறிப்பிட்டிருந்தேனே?
நான் அனுப்பிய பழந்தமிழர் நீட்டளவை பற்றிய தொடரைப் படிக்கவேயில்லையா?
 
கீழே கொடுத்திருப்பது தான் எல்லாவகையாலும் ஒத்துவருகிறது. அப்புறம் உங்கள் உகப்பு.
 
500 பெருங்கோல் (தண்டம்) = 62 1/2 கயிறு = 1 கூப்பீடு = 5500 அடி = 1.04167 மைல்.= 1.6763595 கி.மீ 
4 கூப்பீடு = 1 காதம் = 22000 அடி = 4.166667 மைல் = 6.7050438 கி.மீ 
4 காதம் = 1 யோசனை = 88000 அடி = 16.233333 மைல் = 26.820175 கி.மீ


புக்கானன், ரைஸ் போன்றோர் காதம் 12 மைல் என்கின்றனர்.
சென்னைப் பேரகராதி ~10 மைல் = 1 காதம் என்கிறது.
அ. கானிங்காம் ~16 மைல் = 1 காதம் தென்னிந்தியாவில் என்கின்றார்.

நா. கணேசன்
 
நெடுந்தொலை வாய்ப்பாடு (வடபுலம்):


500 கோல் = 31 1/4 கயிறு = 1 கூப்பீடு = 2750 அடி = 0.520835 மைல் = 0.8381798 கி.மீ 
4 கூப்பீடு = 1 காதம் = 11000 அடி = 2.088888 மைல் = 3.3525219 கி.மீ 
4 காதம் = 1 யோசனை = 44000 அடி = 8.33333 மைல் = 13.4100875 கி.மீ

 
அன்புடன்,
இராம.கி.

iraamaki

unread,
Jul 14, 2016, 3:38:58 AM7/14/16
to mint...@googlegroups.com
எதற்கெடுத்தாலும், சும்மா வெள்ளைக்காரரையே பிடித்துத் தொங்கிக்கொண்டிருந்தால் எப்படி?  கைப்பிடி இருக்கையில் உட்கார்ந்துகொண்டு ஆராய்ச்சி செய்பவருக்கு,, ”வெள்ளைக்காரர் சொல்வதே வேதவாக்கு” என்பவருக்கு, என்னால் விடைசொல்லமுடியாது. எந்த வெள்ளைக்காரருக்கும் தமிழென்றால் கொம்பு முளைத்துவிடவில்லை. ஒவ்வொரு வெள்ளைக்காரருக்கும் பின்னால் ஒரு துபாசி உண்டு.  எல்லாத் துபாசிகளும் தமிழாய்வாளரில்லை. அவர் தம்மைச் சூழ்ந்திருந்தவரிடம் கேட்டவற்றை வெள்ளைக்காரருக்குச் சொல்லியிருப்பார்.  அவ்வளவுதான் அதைப்பிடித்துக்கொண்டு மல்லுக்கு நிற்பதிற் பொருளில்லை. ஆய்வு என்பது வேறு.  அதற்குத் தரவுகளும் கொஞ்சம் ஏரணமும் வேண்டும். என் கட்டுரையில் ஆய்வு ஒன்றே அடிப்படையாக உள்ளது.
 
அப்புறம் சொல்ல விட்டேனே? என் தோல் புகர் (brown) நிறம் தான். எனவே உங்களுடைய எதிர்பார்ப்பில் சற்று மட்டுக்குறைவு தான்.
 
அன்புடன்,
இராம.கி. 

N. Ganesan

unread,
Jul 14, 2016, 3:58:13 AM7/14/16
to மின்தமிழ், vallamai, Santhavasantham, housto...@googlegroups.com, pira...@googlegroups.com, panb...@googlegroups.com, tiruva...@googlegroups.com


On Wednesday, July 13, 2016 at 6:11:07 AM UTC-7, elandhai wrote:
சாண் முழம் கணக்குப்படி பார்த்தால்      சாண் என்பது 9 அங்குலம்

ஒரு முழம் ஒன்றரை அடி.  ஒரு கோல் - 6 அடி    கூப்பிடு  3000 அடி     ஒரு காதம்   12000 அடி . அதாவது 2.273 மைல். . காதம் என்பது கிட்டத்தட்ட 10 மைல் எனக்கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு காலத்தில்,   நிமிடத்தை விநாடி என்றும்  செகண்டை நொடி என்றும் சொல்லியிருக்கிறார்கள்.


பாரதியார் 3-4- 1909ல் இந்தியா பத்திரிகையில் எழுதியுள்ள திசைகள் என்ற கவிதையில்


ஒரு நொடிப்போதில் ஓர் பத்து
ஒன்பதாயிரமாம் காதம்
வருதிற லுடைத்தாஞ் சோதிக்
 கதிரவன் வகுப்பானான்றோர்
கருதவும் அரிய தம்மா!

என்கிறார். அதாவது  ஒரு நொடியில் ஒளி செல்லும் தூரம் 19000 காதம் என்கிறார். அதாவது 1,90,000 மைல்.   கிட்டத்தட்டச் சரிதான். ஒளியின் வேகம் 1,86,000 மைல்.

சூரியனிடமிருந்து பூமிக்கு ஒளிவர

கதிருடை விரைவும் அஃது
பருதியின் நின்றோர் எட்டு
விநாடியிற் பரவு மீங்கே” என்கிறார். அதாவது கிட்டத்தட்ட 8 நிமிடங்கள் என்பது அவரது கணக்கு. அதுவும் சரிதான். சரியான அளவு எட்டு நிமிடங்கள் 20 நொடிகள்.

காதம் என்பதைப் 10 மைல் என்று கொள்வதுதான் பொருத்தம் என நினைக்கிறேன்.  ஒரு காதத்திற்கு 6.5 கி மீ என்றும் இல்லை அதில் பாதி என்றும் சொல்பவர்கள் உண்டு. பலத்த ஆய்வு நடைபெற்றிருக்கிறது. ஆனால் முடிவுதான் எட்டவில்லை.

“ மண்டலத்தை அணுவணு வாக்கினால்
வருவதெத்தனை அத்தனை யோசனை
கொண்ட தூரம் அவற்றிடை வைத்தனை” என்கிறான் பாரதி.

ஒரு யோசனை என்றால் எவ்வளவு தொலைவு?

இலந்தை



1 யோசனை = 1 காதம் என்று பல தமிழ் நூல்களில் கையாண்டுள்ளார்கள். உ-ம்: நைடடம் 10 யோசனை என்பதை நாலாறு (4+6) காதம் என்கிறது நளவெண்பா. எனவே, 1 காதம் = 1 யோசனை.

1 காதம்/காவதம் = 4 குரோசம்.
அதேபோல்,
1 யோசனை = 4 குரோசம். (சென்னைப் பேரகராதி)

இதனை, கந்தபுராணச் செய்யுள் கொண்டு காட்டலாம்:

அங்குலம் அறு நான்கு எய்தின் அது கரம் கரம் ஓர்  நான்கு 
தங்குதல் தனு என்று அகும் தனு இரண்டு அது ஓர்  தண்டம் 
இங்கு உறு தண்டம் ஆன இராயிரம் குரோசத்து  எல்லை 
பங்கம் இல் குரோசம் நான்கு ஓர் யோசனைப் பாலது  ஆமே. 

காளையார்கோயிற்புராணத்தின்படி 1 யோசனை = ~ 10 மைல் (அதாவது, 1 காதம்) என்றாகிறது:
முனைவர் காளைராசன் கணக்கீடு:

ஒரு யோசனை = 10 மைல் என வேளுக்குடியும் சொல்கிறார்:
/துன்புளது அன்றோ இன்பம் உளது -ஐவர் ஆனோம்-10 காதம் =100 மைல் தூரம் சித்ர கூடம் பரத்வாஜர் சொல்ல”

”-தமிழ் மா முனி-4 யோசனை 40 மைல் அகஸ்தியர் ப்ராத ஆஸ்ரமம் வரும்-பேர் சொல்ல வில்லை-மாமான் மகளே போலே/வில்லை கொடுக்கிறார்/”

சென்னைப் பேரகராதி, 1 யோசனை = 1 காதம் = ~10 மைல் எனக் குறிக்கிறது.
ஐ ஐந்து அடுத்த இரட்டி : இருபத்தைந்தின் இருமடங்கு; ஐம்பது.
நான்கு குரோசம் கொண்டது ஒரு யோசனை. இரண்டரை மைல் ஒரு
குரோசம். எனவே, யோசனை என்பது பத்து மைல் தொலைவு
ஆகிறது. காதம் என்பதும் சுமார் பத்து மைல் தொலைவு என்பர்.


காதம் = யோசனை ~10 மைல் கீழெல்லை எனத் தெரிகிறது.
இந்தியா முழுதும், ஓர் அங்குலம் = 19 மிமீ என நிர்ணயிப்பர்.
4000, 5000 வருஷமாய் உள்ள அளவைகளில் 1 அங்குலம் = 19 மிமீ என நிலையாக இருக்கிறது.

அதன் படி பார்த்தால், தணிகைப் புராணம், சிவஞான மாபாடியம் இவற்றில்
1 யோசனை (= 1 காதம்) = 18.2 மைல் வருகிறது. அதாவது, 1 குரோசம் = 18.2/4 மைல் = ~ 4.5 மைல்கள்.

இத்தத்துவங்களின் அளவு யோசனை என்ற கணக்கில் கூறப்படும். சாளரத்தில் தோன்றும் ஞாயிற்றின் கதிரின் அதிநுட்பமாய்த் தோன்றும் நுண்ணிய துகள் அணு எனப்படும்.

	8	அணு		-	திரசரேணு
	8	திரசரேணு	-	இலீக்கை
	8	இலீக்கை		-	யூகை
	8	யூகை		-	இயவை நெல்லு
	8	இயவை நெல்லு	-	அங்குலம்
	24	அங்குலம்	-	முழம்
	4	முழம்		-	வில்லு
	2	வில்லு		-	தண்டம் 8 (முழம்)
	2000	தண்டம் 		-	குரோசம்
	4 குரோசம்		-	யோசனை 64,000 (முழம்)

மேற்கண்ட கணக்கில் ஒரு யோசனை என்பது 18. 2160 மைல்கள் அல்லது 29.09 கிலோ மீட்டர் ஆகும். 


அலெக்சாண்டர் கானிங்காம் கொடுக்கும் தென்னிந்தியாவின் காதம் ~16 மைல் என்பதுடன் இந்தப் ~18 மைல் (=1 யோசனை) பொருந்துகிறது.
ரைஸ், புக்கானன், ... 1 காதம்/காவதம் ~14மைல் என்பர்.
-------------------------------

சைனர்கள் 4 காதம் = 1 யோசனை என்றும் சொல்வர். தீர்த்தங்கரர் உயரம் போன்றன மிகைப்படுத்தலாக உள்ளது: https://en.wikipedia.org/wiki/Tirthankara
அதுபோல, ஒரு காதம் ~10 மைல் என எடுத்தால், 1 யோசனை = 40 மைல் என்று ஆகிறது.

உ-ம்: நாலடியார் பாட்டுக்கு உரையில். நச்சினார்க்கினியரின் சிந்தாமணி உரை.

கடிப்பிடு கண்முரசம் காதத்தோர் கேட்பர்;
இடித்து முழங்கியதோர் யோசனையோர் கேட்பர்
அடுக்கிய மூவுலகுங் கேட்குமே சான்றோர்
கொடுத்தா ரெனப்படுஞ் சொல்

கடிப்பு - முரசறையுங் கோல், காதம் - ஏழரை நாழிகை வழி யென்ப. முழங்கியதென்பது முழங்கிய ஒலியென்னும் பொருட்டாதலின் ஈண்டுப் பெயர். சிந்தாமணியுரையில் ‘யோசனையென்பது நாற்காத எல்லை'1 என்பர் உரையாசிரியர் நச்சினார்க்கினியர். சான்றோராற் கூறப்படுஞ் சொல் எனப்படுதலின், ஞான ஒழுக்கங்களிற் சிறந்த அத்தகையோர்க்கு ஒன்று உதவுதலே சிறந்த ஈகையாகும் என்பது பெறப்படும்; "நன்றாய்ந் தடங்கினார்க்கு ஈத்துண்டல்" 2 என்றார் பிறரும்.


ஆனால், பொதுவாக, இருக்கிற சான்றுகளை வைத்துப் பார்த்தால்
1 யோசனை = 1 காதம் = ~ 12 மைல்  (~9 - ~18 மைலுக்கு இடையே).

அதன்படி பார்த்தால், 3 நாட்டையும் காட்டும் சிலம்பின் நாடுகாண்காதையில்
கவுந்தியடிகள் பள்ளி - மேற்குத்தொடர்ச்சிமலையில் தலைக்காவேரி அருகே.
மதுரையில் இருந்து ~360 மைல் வடக்கே இருந்துள்ளது. பின்னர், சீரங்கபட்டினம் (அரங்கம்)
வந்து, அந்தசாரணர் (விண்ணவரைக் கண்டு), வழியில் வம்பப் பரத்தை (harlot),
வறுமொழியாளன் (trifler) ... எல்லாம் சந்தித்து, மலைவளமும், அங்கே உள்ள
உழவர்களின் வேளாண்மையும் கண்டு கடைசியாக திருச்சி (உறையூர்) வருகின்றனர்.
உறையூரை வாரணம் என்கிறார். நாடுகாண் காதைக்கு ‘மாடல்’ கண்டவ்யூகம்
என்னும் மகாயான சூத்திரம். போரோபுதூர் ஸ்தூபி கண்டவ்யூகந்தான்.

நா. கணேசன்



N. Ganesan

unread,
Jul 14, 2016, 4:09:34 AM7/14/16
to மின்தமிழ்


On Thursday, July 14, 2016 at 12:38:58 AM UTC-7, இராம.கி wrote:
எதற்கெடுத்தாலும், சும்மா வெள்ளைக்காரரையே பிடித்துத் தொங்கிக்கொண்டிருந்தால் எப்படி?  கைப்பிடி இருக்கையில் உட்கார்ந்துகொண்டு ஆராய்ச்சி செய்பவருக்கு,, ”வெள்ளைக்காரர் சொல்வதே வேதவாக்கு” என்பவருக்கு, என்னால் விடைசொல்லமுடியாது. எந்த வெள்ளைக்காரருக்கும் தமிழென்றால் கொம்பு முளைத்துவிடவில்லை. ஒவ்வொரு வெள்ளைக்காரருக்கும் பின்னால் ஒரு துபாசி உண்டு.  எல்லாத் துபாசிகளும் தமிழாய்வாளரில்லை. அவர் தம்மைச் சூழ்ந்திருந்தவரிடம் கேட்டவற்றை வெள்ளைக்காரருக்குச் சொல்லியிருப்பார்.  அவ்வளவுதான் அதைப்பிடித்துக்கொண்டு மல்லுக்கு நிற்பதிற் பொருளில்லை. ஆய்வு என்பது வேறு.  அதற்குத் தரவுகளும் கொஞ்சம் ஏரணமும் வேண்டும். என் கட்டுரையில் ஆய்வு ஒன்றே அடிப்படையாக உள்ளது.
 
அப்புறம் சொல்ல விட்டேனே? என் தோல் புகர் (brown) நிறம் தான். எனவே உங்களுடைய எதிர்பார்ப்பில் சற்று மட்டுக்குறைவு தான்.
 

வெள்ளைக்காரருக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? வெள்ளைக்காரர் நாடுகளுக்கு உங்கள் மக்கள் வாழ்வதில்லையா? வெள்ளைக்காரருக்கு ஆராய்ச்சி தெரியாது என்பதை நீங்கள் சொல்லலாம். ஆனால், உண்மை அவ்வாறில்லை. எல்லிஸ், கால்ட்வெல், எமனோ, ஹார்ட், பார்போலா, ... இவர்களுக்கு தமிழ் வரலாறு, சமூகம், சமயம் தெரியாதா?

பாரதியார் வெள்ளைக்காரரா?  சென்னைப் பேரரகராதி வெள்ளைக்காரர்களா? சிவஞான பாடியம்,  தணிகைப் புராணம், பூவணப் புராணம் தமிழர்கள் தானே காதம் ~12 மைல் என எழுதியுள்ளனர்.

நா. கணேசன்

அன்புடன்,
இராம.கி. 

N. Ganesan

unread,
Jul 14, 2016, 4:26:12 AM7/14/16
to மின்தமிழ்


On Wednesday, July 13, 2016 at 7:43:28 PM UTC-7, இராம.கி wrote:
இரு இடங்களுக்கு இடையே இருந்த தொலைவைக்குறிப்பிட்டு அதில் இருக்கும் காதக்கற்களையுங் குறிப்பிட்டிருந்தேனே?
நான் அனுப்பிய பழந்தமிழர் நீட்டளவை பற்றிய தொடரைப் படிக்கவேயில்லையா?


இரண்டு இடங்களுக்கு இடையே இருந்த தொலைவு எனச் சொல்லமுடியவில்லை.

ஏனெனில், ஒரு கல்வெட்டில் “நாவல் தாவளம்” என்ற ஊர் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்னொன்றில், தமிழ் எழுத்துக்கள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை.

இவற்றை வைத்து எப்படிக் காதத்தின் அளவைக் கணிப்பது?
இரண்டும் வெவ்வேறு இடங்களுக்குச் செல்லும் தூரம். ஒரே காலத்தில் எழுதினவையும் அல்ல.

நா. கணேசன் 

iraamaki

unread,
Jul 14, 2016, 4:43:13 AM7/14/16
to mint...@googlegroups.com

iraamaki

unread,
Jul 14, 2016, 4:45:21 AM7/14/16
to mint...@googlegroups.com
---------------------------------
புக்கானன், ரைஸ் போன்றோர் காதம் 12 மைல் என்கின்றனர்.
சென்னைப் பேரகராதி ~10 மைல் = 1 காதம் என்கிறது.
அ. கானிங்காம் ~16 மைல் = 1 காதம் தென்னிந்தியாவில் என்கின்றார்.
-----------------------------------
 
என்று சொல்வதற்கு என்ன பொருள்? வெள்ளைக்காரர் வேறொன்று சொல்லியிருக்கிறார் என்பது தானே?

iraamaki

unread,
Jul 14, 2016, 5:30:18 AM7/14/16
to mint...@googlegroups.com
---------------------------------
புக்கானன், ரைஸ் போன்றோர் காதம் 12 மைல் என்கின்றனர்.
சென்னைப் பேரகராதி ~10 மைல் = 1 காதம் என்கிறது.
அ. கானிங்காம் ~16 மைல் = 1 காதம் தென்னிந்தியாவில் என்கின்றார்.
-----------------------------------
 
என்று சொல்வதற்கு என்ன பொருள்? வெள்ளைக்காரர் வேறொன்று சொல்லியிருக்கிறார் என்பது தானே?  நாங்களெல்லாம் சொன்னால் உங்களுக்கு ஏற்க மனசு வராது. யாராவது வெள்ளைக்காரர் சொன்னால் ஏற்பீர்கள் என்றல்லவா என் கருத்து உணர்த்துகிறது?  ஒரு புகர்த்தோலை ஏற்பது, அதுவும் கொங்குநாட்டவராய் இல்லாவிட்டால், உங்களைப் பொருத்தவரை அரிதிலும் அரிதல்லவா?
 
வெள்ளைக்காரருக்கு ஆராய்ச்சி தெரியாது என்று நானெங்கே சொன்னேன்? (இதில் என் மக்களைக் கொண்டுவந்துவிடுகிறீர்கள். உங்கள் அளவிற்கு என்னால் இறங்கமுடியாது. இது பொது அவை. சற்று நாகரிகங் கடைப்பிடிக்கவேண்டும். இல்லாவிட்டால் நாறிப்போய்விடும்.) எல்லிஸ், கால்ட்வெல், எமனோ, ஹார்ட், பார்போலா, ... ஆகியோரை இங்கு ஏன் கொண்டுவந்து சேர்க்கிறீர்கள்?  இவர்களோடும், இவர்களைப் புனிதமாய்ப் போற்றுவோரோடும்  என்னைச் சிண்டுமுடித்துவிடும் வேலையா?  நாங்கள் தான் இணையமெங்கும் பார்த்துக் கொண்டிருக்கிறோமே,  உங்களின் நடைமுறையை?  இந்த name-dropping எல்லாம் எத்தனை காலத்திற்குச் செய்வீர்கள்? இதற்கெல்லாம் நான் மசியமாட்டேன். உங்களுடைய போக்கைப் பலமுறை பார்த்தாயிற்று.
 
பாரதியார்,   சென்னைப் பேரரகராதி, சிவஞான பாடியம்,  தணிகைப் புராணம், பூவணப் புராணம் இவற்றை வைத்துக்கொண்டு காதம் எவ்வளவு என்று அழுத்தந்திருத்தமாய் ஒரு மதிப்பைக் கண்டுபிடியுங்கள். அதைவிடுத்து ”எடுத்தேன் கவிழ்த்தேன்” என்று பேசிக்கொண்டிராதீர்கள்.
 
இன்னும் எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே? சொந்த நாட்டிலே?

N. Ganesan

unread,
Jul 14, 2016, 5:38:11 AM7/14/16
to மின்தமிழ்


On Thursday, July 14, 2016 at 2:30:18 AM UTC-7, இராம.கி wrote:
---------------------------------
புக்கானன், ரைஸ் போன்றோர் காதம் 12 மைல் என்கின்றனர்.
சென்னைப் பேரகராதி ~10 மைல் = 1 காதம் என்கிறது.
அ. கானிங்காம் ~16 மைல் = 1 காதம் தென்னிந்தியாவில் என்கின்றார்.
-----------------------------------

வெள்ளைக்கார அறிஞர்களுக்கு ஆராய்ச்சி தெரியாது என என்னால் சொல்ல இயலாது.

> பாரதியார்,   சென்னைப் பேரரகராதி, சிவஞான பாடியம்,  தணிகைப் புராணம், பூவணப் புராணம் இவற்றை வைத்துக்கொண்டு காதம் எவ்வளவு என்று > அழுத்தந்திருத்தமாய் ஒரு மதிப்பைக் கண்டுபிடியுங்கள். அதைவிடுத்து ”எடுத்தேன் கவிழ்த்தேன்” என்று பேசிக்கொண்டிராதீர்கள்.

இந்தியாவின் இரண்டு செம்மொழி இலக்கியங்கள் கல்வெட்டுகளைப் படித்தும், ஆராய்ந்தும்
காதம்/காவதம் 10 - 18 மைல் என நிறுவியுள்ளனர். இந்த இழையைப் படித்துப் பாருங்கள், தெரியும்.

காதம்/காவதம் = ~12 மைல். சிவஞான மாபாடியம், அ. கானிங்காம் (யுவான் சுவாங், ...) சொல்வதற்கும், சென்னைப் பேரகராதி போன்றவற்றின் கணக்குக்கும்.

கல்வெட்டுகளில் உள்ள கணக்குகள் இரு வேறு ஊர்களுக்கு. ஒன்று வடக்கே, இன்னொன்று தெற்கே இருக்கலாம்.
ஏனெனில், ஒரே ஊர்ப் பெயர்கள் கொண்ட கல்வெட்டுகள் அல்ல அவை. ஒன்றில் ஊர்ப்பேரே இல்லை. 

நா. கணேசன்
 

N. Ganesan

unread,
Jul 14, 2016, 6:18:56 AM7/14/16
to மின்தமிழ், vallamai, Santhavasantham
இந்தியாவின் இரண்டு செம்மொழி இலக்கியங்கள் கல்வெட்டுகளைப் படித்தும், ஆராய்ந்தும்
காதம்/காவதம் 10 - 18 மைல் என நிறுவியுள்ளனர். இந்த இழையைப் படித்துப் பாருங்கள், தெரியும்.

காதம்/காவதம் = ~12 மைல். சிவஞான மாபாடியம், அ. கானிங்காம் (யுவான் சுவாங், ...) சொல்வதற்கும், சென்னைப் பேரகராதி போன்றவற்றின் கணக்குக்கும்.

கல்வெட்டுகளில் உள்ள கணக்குகள் இரு வேறு ஊர்களுக்கு. ஒன்று வடக்கே, இன்னொன்று தெற்கே இருக்கலாம்.
ஏனெனில், ஒரே ஊர்ப் பெயர்கள் கொண்ட கல்வெட்டுகள் அல்ல அவை. ஒன்றில் ஊர்ப்பேரே இல்லை. 


வட இந்தியாவில் Grand Trunk Road-ல் பல மைல்கற்கள் உள்ளன. தமிழில் கோசம்/குரோசம் என்று கூறப்படுவது
இந்தி/உர்துவில் கோஸ். கோஸ் மினார்கள் மைல்கற்களாக நெடுகக் கட்டப்பட்டுள்ளன. அவற்றுக்கு இடைப்பட்ட
தூரம் 2.25 மைல் =  1 கோசம்/க்ரோசம். அப்படியாயின், 4 கோசம் = 1 காதம் = 9 மைல் ஆகிறது. இது வடக்கே.
A kos is about 2.25 miles https://en.wikipedia.org/wiki/Kos_(unit)


ஆனால், தென்னிந்தியாவில் கோசம், (4 கோசம் = காதம்/காவதம்)  எல்லாம் இதற்கு இருமடங்கு = 4.5 மைல்
என அ. கானிங்காம் போன்றோர் குறிப்பிடுகின்றனர். அதனையே, சிவஞான பாடியம், தணிகைப் புராணம்
குறிப்பிடுகிறது. அதாவது 1 காதம் ~18.2 மைல் என்று. இது தெற்கே.

"The Bundela kos, which is in use throughout Bundelkhand, and other Hindu provinces to the south of Jumna, is about 4 miles in length. The same long kos is also in use in Mysore, in Southern India" (The Ancient Geography of India: I. The Buddhist Period, Including the Campaigns of Alexander, and the Travels of Hwen-Thsang)
 
எனவே, சென்னைப் பேரகராதி தரும் 1 காதம் = ~10 மைல் ஒரு சிற்றெல்லை ‘லோயர் லிமிட்’ தான். மேலெல்லை = ~18 மைல் (சிவஞான மாபாடியம், கானிங்காம்).

நா. கணேசன்
 

N. Ganesan

unread,
Jul 14, 2016, 6:47:59 AM7/14/16
to மின்தமிழ், vall...@googlegroups.com
(1) Mensuration in Ancient India
Saradha Srinivasan
Ajanta Publications, 1979
On the ancient Indian systems of measuring length, area, volume, weight, and time.

(2) Tamil̲ar aḷavaikaḷ
by Kē Pakavati
Cen̲n̲ai : Ulakat Tamil̲ārāycci Nir̲uvan̲am, 1983.

(3) Tamil̲ar paṇpāṭṭil aḷavaikaḷ : nāṭṭuppur̲aviyal āyvukaḷ
by Ku Vijayaleṭcumi
 Tañcāvūr : An̲n̲am, 2006.

N. Ganesan

unread,
Jul 20, 2016, 12:44:26 AM7/20/16
to மின்தமிழ், vall...@googlegroups.com, santhav...@googlegroups.com

காவதம் : காதம் என்னும் வடசொல்:

கணி- : கணிதம்
தில- (எள்) : திலதம் (பொட்டு)
...
என்பது போல

காவ- gāv “எருது (அ) காளை” : காவதம் gāvada “எருத்து வண்டி ஒருநாள் நடக்கும் தூரம்”.
கோமாதா (gomātā), gau- என்பதன் வடசொல் காவதம் gāvada.

காவதம் காதம் என்றாதல், கௌந்தி/கவுந்தி (Jaina nun) கந்தி என்று குறுகுதல் போல்.
குந்தி இருந்து தவம் செய்யும் குரத்தியர் கௌந்தி என்று பெயர்பெற்றிருக்கலாம்.
மிக இளம்வயதிலே துறவி ஆகும் பெண்கள் - மணமாவதன் முன் - பைம்மைநோன்பி எனப்
பெயர் பெறுவர். கவுந்தி அடிகள் என்றால் முதுமைக்கோலம்.

காதம்:காவதம் என்ற வடசொற்களைக் கன்னடநாட்டில் இருந்து தமிழில் முதன்முதலாக
அறிமுகம் செய்பவர் இளங்கோ அடிகள் ஆவார். சமணக் குரத்தி கவுந்தி அடிகளின்
காதாபத்திரத்தை தன் சமண சமயத்தை விவரிக்கத் தன் நாவலில் படைத்துக்கொள்கிறார்.
சீன மொழியில் Journey to the West போலவும், ஜப்பானிய மொழியில்
Tale of the Genji போல, செம்மொழி தமிழில் உள்ள முதல் நாவல் சிலப்பதிகாரம்.
காவிரி பாயும் கங்கர்களின் நாட்டை ஆளுமைக்குள் வைத்திருப்பதைச் சோழர்கள் எப்பொழுதும்
விரும்பினர். அணைகள் போன்றவை கட்டி நீர்வரத்து திருச்சி-தஞ்சை டெல்ட்டா பாசனத்துக்கு
வரவேண்டுமே. அதுபோல், சோழன் ஒருவனின் ஆட்சிக்குள் காவிநதி பாயும் எல்லா இடங்களும்
இருந்தன என்று நாடுகாண் காதையில் கூறி, மதுரைக்கு வடக்கே 30 காதம் (= ~360 மைல்)
தொலைவில் கோவலன் கண்ணகி கௌந்தி அடிகள் இருப்பிடத்தில் சந்தித்து, பின்னர்
சீரங்கபட்டினம் வந்து, அந்தசரணரைத் தொழுது, பின் உறையூர் வந்துசேர்வதாகப் பாடியுள்ளார்.
பலரைச் சந்திப்பது எல்லாம் கண்டவியூக சூத்திரத்தை மாதிரியாக வைத்துச் செய்தது.

குரோசம் kurōcam , n. < krōša. 1. Indian league, kōs = about 2¼ miles = 2000 தண்டம்; 2¼ மைல் கொண்ட தூரம். (கந்தபு. அண்டகோ

gavyūta - gavyūti. a league, measured by 2 fathoms

காதம்¹ kātam, n. cf. gavyūta. [K. gāvada, gāvuda, M. kātam, Tu. gāvuda.] Indian league, about 10 miles; ஏழரை நாழிகைவழி. காதம் பலவுந் திரிந்துழன்றேற்கு (திவ். பெரியாழ். 5, 3, 4).

கந்தபுராணம் - அண்டகோசப் படலம் (12-ஆம் நூற்றாண்டு)
அங்குலம் அறு நான்கு எய்தின் அது கரம் கரம் ஓர் நான்கு 
தங்குதல் தனு என்று அகும் தனு இரண்டு அது ஓர் தண்டம் 
இங்கு உறு தண்டம் ஆன இராயிரம் குரோசத்து எல்லை 
பங்கம் இல் குரோசம் நான்கு ஓர் யோசனைப் பாலது ஆமே.

தணிகைப்புராணம்:

இராயிரந் தண்டங் குரோசமே குரோச மிரட்டிசேர்ந் ததுகெவி யூதி
குரோசநான் குறல்யோ சனையது நூறு கோடிமண் ணண்டத்தி னளவை
தராதல முதலாந் தத்துவக் கண்டந் தனித்தனி யாயிர கோடி
விராவுமண் முதலா வொன்றனுக் கொன்று விளம்பிய வளவைமிக் குறுமால்.

(இ - ள்.) இரண்டாயிரந் தண்டங்கொண்டது ஒரு குரோசம். இரண்டு குரோசங் கொண்டது ஒரு கெவியூதி. நான்கு குரோசங் கொண்டது ஒருயோசனை. மண்ணண்டத்தின் அளவு நூறுகோடி யோசனையாம். தராதல முதலிய அம்மண்ணண்டத்திற்குத் தத்துவக் கண்டங்கள் தனித்தனியே ஆயிரகோடி யுள. மண்முதலாக அமைந்த அக்கண்டங்கள் ஒன்றனுக்கொன்று அளவையானும் மிகும்.

---------------------

  யோசனையாவது 24 அங்குலம்கொண்ட முழத்தினாலே 
16000 கொண்டது ஒரு குரோசமாக, நான்கு குரோசங்கள் கொண்டது 
ஒருயோசனையாம். எனவே 64000 முழம் ஒரு யோசனை எனப்படும். 
இதுபற்றி "சாளரத்திற்றோன்றும் ஞாயிற்றின் கதிரின் அதி 
நுட்பமாய்த் தோன்றும் நுண்ணிய துகள் அணுவெனப்படும். 
அஃதெண்மடங்கு கொண்டது திரிசர அணு. 
அஃதெண்மடங்குகொண்டது கசாக்கிரம். அஃதெண்மடங்கு 
கொண்டது இலீக்கை. அஃதெண்மடங்கு கொண்டது யூகை. 
அஃதெண்மடங்கு கொண்டது இயவைநெல்லு. இயவை நெல்லகலம் 
எட்டுக்கொண்டது ஓர் அங்குலம். அங்குலம் இருபத்துநான்கு 
கொண்டது ஒருமுழம். முழம் நான்குகொண்டது ஒருவில். 
வில்லிரண்டுகொண்டது. ஒரு தண்டம். தண்டம் 
இரண்டாயிரங்கொண்டது ஒரு குரோசம். குரோசம் நான்குகொண்டது 
ஒரு யோசனை; ஆகலான் இந்த அளவையாற் சாதராண 
புடவிதத்துவமாகிய அண்டம் நூறுகோடியோசனை ஆழ வகல 
நீளங்களையுடையது" என்று சிவஞானபாடியம் 2, 3-ல் "அரவுதன்" 
என்ற வெண்பாவின்கீழ் உரைத்தவைகாண்க. 
(சிவஞானபாடிய மேற்கோள், கோவை சிவக்கவிமணி சிகேஎஸ், பெரியபுராண உரையில்)

இதனைக் கணக்கிடுவோம்:
யோசனை = 4 X 16000 X 24 X 19
= 29184 m
= 29184/ 1610 = 18.2 miles

ஆக, ஒரு காவதம்/காதம் = 9 மைல் - 18 மைல். 
சராசரியாக ~12 மைல் எனலாம்

நா. கணேசன்


Transport and Communications in India Prior to Steam Locomotion: Volume I: Land Transport by Jean Deloche
Oxford University Press, 1993

A. Coningham, B. L. Rice ... I have given references in this thread.

Coss, Gow in Hobson-Jobson
GOW, GAOU , s. Dak. H. gau. An ancient measure of distance preserved in S. India and Ceylon. In the latter island, where the term still is in use, the gawwa is a measure of about 4 English miles. It is Pali gāvuta, one quarter of a yojana, and that again is the Skt. gavyūti with the same meaning. There is in Molesworth's Mahr. Dictionary, and in Wilson, a term gaukos (see COSS), 'a land measure' (for which read 'distance measure'), the distance at which the lowing of a cow may be heard. This is doubtless a form of the same term as that under consideration, but the explanation is probably modern and incorrect. The yojana with which the gau is correlated, appears etymologically to be 'a yoking,' viz. "the stage, or distance to be gone in one harnessing without unyoking" (Williams); and the lengths attributed to it are very various, oscillating from 2½ to 9 miles, and even to 8 krośas (see COSS). The last valuation of the yojana would correspond with that of the gau at ¼.
[...]
1676. -- "They measure the distances of places in India by Gos and Costes. A Gos is about 4 of our common leagues, and a Coste is one league." -- Tavernier, E.T. ii. 30; [ed. Ball, i. 47].

1860. -- "A gaou in Ceylon expresses a somewhat indeterminate length, according to the nature of the ground to be traversed, a gaou across a mountainous country being less than one measured on level ground, and a gaou for a loaded cooley is also permitted to be shorter than for one unburthened, but on the whole the average may be taken under four miles." -- Tennent's Ceylon, 4th ed. i. 467.



 

தேமொழி

unread,
Jul 20, 2016, 1:30:58 AM7/20/16
to மின்தமிழ்


Modern Metrology: A Manual of the Metrical Units and Systems of the ...

1882 - ‎Length measurement
The South-Indian kadam = 7 nali-vali. The gavada or journey in Maisur had two values, the ordinary and the large gavada, one about 10 miles ...

The South-Indian kadam = 7 nali-vali.

nali-vali  என்றால் என்ன?

..... தேமொழி

N. Ganesan

unread,
Jul 20, 2016, 1:39:57 AM7/20/16
to மின்தமிழ்


On Tuesday, July 19, 2016 at 10:30:58 PM UTC-7, தேமொழி wrote:


Modern Metrology: A Manual of the Metrical Units and Systems of the ...

1882 - ‎Length measurement
The South-Indian kadam = 7 nali-vali. The gavada or journey in Maisur had two values, the ordinary and the large gavada, one about 10 miles ...

The South-Indian kadam = 7 nali-vali.

nali-vali  என்றால் என்ன?

7 நாழிவழி.

அதாவது, 7 நாழிகை வழி.

ஒப்பீடு:
சென்னைப் பல்கலைக் கழகப் பேரகராதி (Madras Tamil Lexicon):
காதம்¹ kātam , n. cf. gavyūta. [K. gāvada, gāvuda, M. kātam, Tu. gāvuda.] Indian league, about 10 miles; ஏழரை நாழிகைவழி. காதம் பலவுந் திரிந்துழன்றேற்கு (திவ். பெரியாழ். 5, 3, 4).

ஆனால், தமிழ் இலக்கியங்கள் 12-ஆம் நூற்றாண்டிலிருந்து 18.2 மைல் காட்டுகின்றன. உ-ம்: கந்தபுராணம், .... சிவஞான மாபாடியம்.

நா. கணேசன் 



..... தேமொழி

N. Ganesan

unread,
Jul 20, 2016, 1:46:40 AM7/20/16
to மின்தமிழ், vallamai



On Tuesday, July 19, 2016 at 10:30:58 PM UTC-7, தேமொழி wrote:


Modern Metrology: A Manual of the Metrical Units and Systems of the ...

1882 - ‎Length measurement
The South-Indian kadam = 7 nali-vali. The gavada or journey in Maisur had two values, the ordinary and the large gavada, one about 10 miles ...


சரியான தூரத்தை ஆர்தர் கோக் பர்னல் (தொல்காப்பியத்தைப் பற்றிய முக்கிய நூல் எழுதியவர்) கொடுத்துள்ளார்.
ஒரு குரோசம் (கோசம்) = The kos as laid down in the Āīn [ed. Jarrett, iii. 414] was of 5000 gaz [see GUDGE]. The official decision of the British Government has assigned the length of Akbar's Ilāhī gaz as 33 inches, and this would make Akbar's kos= 2 m. 4 f. 183⅓ yards. Actual measurement of road distances between 5 pair of Akbar's kos-minārs,* near Delhi, gave a mean of 2 m. 4 f. 158 yards. (Hobson-Jobson)
1 காவதம்/காதம் = 4 குரோசம் = ~ 10 மைல் அளவில் வருகிறது.

தேமொழி

unread,
Aug 28, 2016, 1:16:51 AM8/28/16
to மின்தமிழ்


On Monday, July 11, 2016 at 12:11:49 AM UTC-7, தேமொழி wrote:
திரு. முகுந்தன் 
உங்கள் தேடலின் விரிவைப் பார்த்தால் நிச்சயம் இந்தத் தகவலையும் படித்திருப்பீர்கள் என்றே நம்புகிறேன்..

இருப்பினும்.... 

கண்ணகியின் அடிச்சுவட்டில் ஒரு நீநீநீண்ண்ட பயணம்



கண்ணகியின் அடிச்சுவட்டில் ஒரு நீநீநீண்ண்ட பயணம்


--கரந்தை ஜெயக்குமார்

தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்
என்பார் திருவள்ளுவர். நண்பர்களே, நாமும் நமது பணியினை நிறைவாகச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில், தினமும் முயன்று கொண்டே இருப்பவர்கள்தான். ஆனாலும் நமது முயற்சியின் எல்லை சிறியது, முயற்சிக்கும் காலமும் சிறியது.

     நண்பர்களே, நாம் அனைவரும் புத்தகங்கள் படிப்பவர்கள்தான். எத்துனையோ மாமனிதர்களின் வாழ்க்கை வரலாற்றைக் கரைத்துக் குடித்தவர்கள்தான். இதிகாசங்களையும், இலக்கியங்களையும், காப்பியங்களையும் படித்தவர்கள்தான். ஆனால் நம்மில் எத்தனைபேர், நூல்கள் சுட்டும் திசையில் பயணித்திருக்கிறோம்.

     நண்பர்களே, களப் பணி என்னும் சொல் இன்று மிகவும் பரவலாகப் பயன்படுத்தப் படுகிறது. தமிழாய்வாளர்கள் இன்று களப்பணி செய்து, புதிய புதிய செய்திகளை, உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறார்கள்.

     தமிழ்ப் பல்கலைக் கழகத்திலே பணியாற்றும், எனது நண்பர் முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்கள், விடுமுறை நாட்களில், பௌத்தத்தின்அடிச்சுவட்டைத் தேடி, சோழ நாடு முழுமையும் பயணம் செய்து கொண்டே இருக்கிறார்.

    இன்று களப்பணி ஆற்றுவதற்கு தொடர் வண்டிகள், பேரூந்துகள், வானூர்திகள், இரு சக்கர வாகனங்கள் என ஏராளமான வசதிகள் பல்கிப் பெருகிவிட்டன. ஆனால் இன்றைக்கு 68 ஆண்டுகளுக்கு முன்னர், பயண வசதிகள் என்ன இருந்திருக்கும், என்பதை ஒரு கணம் எண்ணிப் பாருங்கள் நண்பர்களே.

     ஒரு சில புகை வண்டிகள், மாட்டு வண்டிகள், குதிரை வண்டிகள், இரு சக்கர மிதி வண்டிகள் இவைதானே, அன்றிருந்தவை.
பேராசிரியர் சி.கோவிந்தராசனார்
     நண்பர்களே, தஞ்சாவூர், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின், கரந்தைப் புலவர் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றிய பேராசிரியர் சி.கோவிந்தராசனார்அவர்கள், இலங்கையைச் சார்ந்த பேரறிஞர், யாழ் நூல் என்னும் தமிழ் இசை இலக்கண நூலின் ஆசிரியர், சுவாமி விபுலானந்த அடிகளாரிடம், சிலப்பதிகாரத்தைத் திறம்படக் கற்றவர். சிலப்பதிகாரத்தில் ஊறித் திளைத்தவர். அவரது மனதில் நீண்ட நாட்களாகவே, ஓர் ஆசை, ஏக்கம், கனவு. சிலப்பதிகாரத்தில் கண்ணகி பயணம் செய்த, பாதை வழியாகவே, ஒரு பயணம் செய்தால் என்ன என்ற தணியாத தாகம்.

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு
பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்களும் எண்ணி, எண்ணித் துணிந்து இறங்கினார்.

     நண்பர்களே, சொன்னால் நம்ப மாட்டீர்கள், பேராசிரியர் சி.கோவிந்தராசனார், கண்ணகியின் அடிச்சுவட்டில் பயணம் தொடங்கிய ஆண்டு 1945. ஆம் நண்பர்களே, இன்றைக்கு 68 ஆண்டுகளுக்கு முன்னர், துணிந்து இறங்கினார்.

     நண்பர்களே, கண்ணகியின் அடிச்சுவட்டில், கண்ணகி பயணித்த பாதை வழியாகவே, இவரும் நடந்தே சென்றார். கல்லூரி விடுமுறையில் நடந்தார், விடுமுறை எடுத்துக் கொண்டு நடந்தார். ஊதியத்தைச் செலவிட்டு நடந்தார். தனது உடமைகள் ஒவ்வொன்றையும், விற்று, விற்று, காசாக்கிக் கொண்டே நடந்தார்.

     நண்பர்களே, இவர் நடந்தது ஒரு மாதம், இரு மாதமல்ல, பதினேழு ஆண்டுகள் நடந்தார். முடிவில் சிலப்பதிகாரம் என்பது கற்பனைக் கதையல்ல, வரலாற்று நிகழ்வு என்பதனை உலகிற்கு உணர்த்தினார்.


     அதுமட்டுமல்ல நண்பர்களே, சிலப்பதிகாரத்தில், குன்றக்குரவை என்னும் காதையுள், கண்ணகி மலைமேல், வேங்கை மர நிழலில் நின்று தெய்வமானஇடத்தினையும், அவ்விடத்தில் சேரன் செங்குட்டுவன் அமைத்த பத்தினிக் கோட்டம் என்னும் கண்ணகிக் கோயிலையும் கண்டுபிடித்து உலகிற்கு அறிவித்த பெருமைக்கு உரியவரும் இவரேதான்.

     நண்பர்களே, பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்கள், பதினேழு ஆண்டுகள் செலவிட்டு, கண்ணகியின் பாதச் சுவடுகளைப் பின் பற்றி நடந்த பாதையின் வழியே, நாமும் ஒரு புனிதப் பயணம் மேற்கொள்வோமா. வாருங்கள் நண்பர்களே வாருங்கள்.

      பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்கள், தனது பயணத் திட்டத்தை நான்கு பகுதிகளாகப் பிரித்துக் கொண்டார்.

     காவிரிப் பூம்பட்டிணம் முதல், காவிரியின் வடகரை வழியாக, திருவரங்கம், உறையூர் வரையிலான பாதை, இவரது ஆய்வின் முதல் பகுதி.

     உறையூர் முதல், கற்குடி, பூங்குடி, விராலிமலை, கொடும்பாளூர் வழியாகப் பிரான் மலை, அழகர் மலை, மதுரை வரையிலான பாதை இவரது ஆய்வின் இரண்டாம் பகுதி.

     மதுரை மாநகர் ஆராய்ச்சி இவரது ஆய்வின் மூன்றாம் பகுதி.

     மதுரை முதல் வையை கரை வழியே நெடுவேள் குன்றம் வரையிலான பாதை இவரது ஆய்வின் நான்காம் பகுதி.

கண்ணகியில் அடிச்சுவட்டில் பேராசிரியர் பயணித்த பாதை

    


1945 ஆம் ஆண்டின் ஓர் நாள், இவர் மயிலாடுதுறை என்று இன்று அழைக்கப் படுகின்ற மாயுரம் வரை புகை வண்டியில் சென்றார். அங்கிருந்து இரு சக்கர மிதி வண்டிதான். அந்தக் காலத்தில், இவர் மாயுரத்தில் இறங்கி விசாரித்த பொழுது, காவிரிப் பூம்பட்டிணம் எங்கிருக்கிறது என்று யாருக்குமே தெரியவில்லை.

     பலமுறை முயன்ற பிறகு, கடற் கரையில் மீனவர்களின் ஒரு சில குடிசைகளுடன், மணற் பரப்பும், மணல் மேடுகளும், கள்ளியுடன் காரைச் சூரைச் செடிகளும் செறிந்த புதர்களும், சவுக்குத் தோப்புகளும், புனங் காடுகளும் சூழ்ந்திருந்தபட்டணம் என்று, அன்று அழைக்கப் பட்டப் பகுதியே, பண்டைய புகார் நகரம் இருந்த இடம் என்பதைக் கண்டுபிடித்தார்.

     அங்கிருந்த மீனவர்களின் துணையோடு, கட்டுமரத்தில் ஏறி, ஒரு கல் அளவு கடலில் பயணித்தார். கடல் ஆழமின்றி இருந்ததை அறிந்தார். கடலில் மூழ்கி, மூச்சை அடக்கிக் கொண்டு, கடலுள் பயணிக்கும் பயிற்சி பெற்றிருந்தமுழுக்காளிகள் சிலரை, கடலினுள் மூழ்கச் செய்து, கடலடி ஆய்வு செய்தார். கடலில் மூழ்கிய மீனவர்கள் பழமையான செங்கற் பகுதிகள், சுண்ணக் காரைகள், பாசி படிந்த பானை ஓடுகள் என பலவற்றை எடுத்து வந்து இவரிடம் வழங்கினர்.

     இவ்வாராய்ச்சியின் பயனாக, கடற்கோளினால் அழிந்து கடலடியில் மறைந்து நிற்கும் நிலப் பரப்பே, காவிரிப் பூம்பட்டிணம், கண்ணகி பிறந்த இடம் என்பதை உறுதி செய்தார்.

     1945 ஆம் ஆண்டில் பூம்புகாரில் ஆய்வினைத் தொடங்கிய இவருக்கு, கால் நடையாக ஆராய்ந்து, ஆராய்ந்து, நடந்து, நடந்து மதுரை வரை செல்வதற்கே பன்னிரண்டு ஆண்டுகள் தேவைப் பட்டன.

     திருப்பரங் குன்றம் செல்லும் சாலையில் பழங்காலத்தில், இடுகாடாக இருந்தகோவலன் திடல் என்ற பகுதியினையும், செல்லத்தம்மன் கோயிலில் இருந்த, கண்ணகி சிலையினையும் கண்டு பிடித்தார்.

      பிறகு, மதுரையில் கோவலனை இழந்த கண்ணகி, சேரநாடு நோக்கிச் சென்ற வழியில், இளங்கோ அடிகள் தந்த குறிப்புகளின் உதவியுடன் நடக்கத் தொடங்கினார்.

     வையை ஆறானது, சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, பாதை வழியாகவே, தடம் மாறாமல் இன்றும் பயணிப்பதை கண்டு கொண்டார்.
     மதுரையில் இருந்து கோட்டையின் மேற்கு வாசல் வழியாக மனமுடைந்து, வெறுப்பு உணர்ச்சியோடு, தனித்துப் புறப்பட்ட கண்ணகி, வையை ஆற்றின் ஒரு கரையைப் பின்பற்றி, மேற்கு நோக்கி சென்று, நெடுவேள் குன்றத்தில் அடி வைத்து ஏறி, மலை மேல் இருந்த, வேங்கை மரச் சோலையில் நின்று தெய்வமானாள்.

    சேரன் செங்குட்டுவன், கண்ணகிக்குப் பத்தினிக் கோட்டம் நிறுவி, அதில், தான் இமயத்தில் இருந்து கொண்டு வந்த கல்லில், சிலை செய்து வைத்து வழிபாடு செய்தான். அச் செய்தியினை, அறிந்த கண்ணகியின் செவிலித் தாயும், பணிப் பெண்ணும், தேவந்தி என்கிற தோழியும் சேர்ந்து, கண்ணகித் தெய்வத்தைக் காண, காவிரிப் பூம்பட்டிணத்தில் இருந்து புறப்படுகிறார்கள். இவர்கள் மதுரைக்கு வந்து, அங்கிருந்த மாதரியின் மகள் ஐயை, கண்ணகியைப் பற்றிக் கூறக் கேட்டு, அவளையும் அழைத்துக் கொண்டு, வையை ஆற்றின் ஒரு கரை வழியாகச் சென்று, பெரிய மலையின் மேல் ஏறி, கண்ணகியின் கோயிலை அடைந்தார்கள்.

      நண்பர்களே, மேற்கண்ட இரு செய்திகளும், சிலப்பதிகாரக் கட்டுரைக் காதையிலும், வாழ்த்துக் காதை உரைப் பாட்டுப் பகுதியிலும் இடம் பெற்றுள்ளன.

     எனவே, மேலே கண்ட சிலப்பதிகார வழிகளின் படி மதுரையில் இருந்து, தரை வழியாகச் சென்றால், வையை ஆற்றின் தென் கரையே, அதற்குரிய வழி என்பதைப் பேராசிரியர் சி.கோவிந்தராசனார் ஆராய்ந்து உணர்ந்தார்.

     இவ்வழியைப் பின்பற்றி நடந்தப் பேராசிரியர் சி.கோவிந்தராசனார், 40 மைல்களுக்கும் மேல் பயணித்து, வையை ஆற்றின் தென்புறம் தொடர்ந்து நடந்து சுருளி மலைத் தொடரை அடைந்தார்.

     சுருளி மலைத்தொடரின் மேற்குப் புறக் கோடியில் உற்பத்தியாகும் வையை ஆறு, பள்ளத்தாக்கின் வழியாக, வடக்கு நோக்கி ஓடி, தேனி அருகில், கிழக்கு நோக்கித் திரும்புகிறது. இங்கு குன்னூர் இருக்கிறது. இங்கிருந்து கண்ணகி நடந்த வழியாகச் செல்வதற்கு காட்டிலும், கரம்பிலும், சதுப்பு நிலத்திலும் ஓடி வரும் வையை ஆற்றைப் பின்பற்ற வேண்டும்.

     குன்னூரில் இருந்து வையை ஆற்றைப் பின்பற்றி நடந்து, எதிரில் நிற்கும் மலைத் தொடரின் குறுக்கே, எங்காவது ஓரிடத்தில் மலை மேல் ஏறுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை உணர்ந்தார்.

வையை ஒரு கரைகொண்டு ஆங்கு நெடுவேள்
குன்றம் அடிவைத்து ஏறினாள்
என்று இளங்கோ அடிகள் கூறியிருப்பதற்கு ஏற்ப, இயற்கையில் அமைப்பு அவ்விடம் இருப்பதை அறிந்தார்.

     மேல் சுருளிமலையின் ஒரு பகுதியை ஆராயத் தொடங்கினார். சுருளி மலைதான் நெடுவேள் குன்றம் என்பதை உறுதி செய்தார்.

      பண்டைக் காலத் தமிழ் மரபுப் படி, முருகனின் பெயர்களுள் ஒன்று நெடுவேள் என்பதாகும். அப்பெயராலேயே, இம்மலைத் தொடர் அழைக்கப் பட்டிருக்க வேண்டும் என முடிவு செய்தார்.

     சித்தன் இருப்பு என்ற பெயருடன் விளங்கிய மலை, ஆவினன் குடியாகி, பின்னர் பொதினி மலையாக மாறி, தொடர்ந்து அதுவும் திரிந்து பழநி மலைஎன்று ஆனது போலவே, நெடுவேள் குன்றம் என்னும் பெயர், மலையில் இருந்து சுருண்டு விழும் அருவியின் பெயரால் சுருளி மலையாக மாறியிருக்க வேண்டும் என்பதை உணர்ந்தார்.

     சுருளி மலைத் தொடராலும், பழநி மலைத் தொடராலும் இணைந்து முப்புறமும் சுவர் வைத்தாற்போல் சூழப்பட்ட பகுதியில், வர்ஷ நாடு எனப்படும், கம்பம் பள்ளத்தாக்கின் காட்டுப் பிரதேசம் பரந்து விரிந்து கிடக்கிறது.

     வர்ஷ நாட்டின் மலைப் அடிவாரப் பகுதிகளை ஆராய்ந்த பேராசிரியர் சி.கோவிந்தராசனார், கீழக் கூடலூருக்குத் தெற்கே உள்ள கோயிலில் கல்வெட்டு ஒன்றினைக் கண்டு பிடித்தார்.

     கி.பி.14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு அது. மங்கல தேவி அம்மன் பூஜைக்கு, சேர மன்னன் ஒருவன், தானமாக வழங்கிய நிலங்களைப் பற்றிய செய்தி, அக்கல்வெட்டில் பொறிக்கப் பட்டிருந்தது.

     நண்பர்களே, பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்களின் மனதில் ஒரு மின்னல் வெட்டியது. கண்ணகிக்கு அடைக்கலம் தந்தபொழுது, அவளுக்கு உரிய சிறப்புப் பெயரில் ஒன்றான, மங்கல மடந்தை என்னும் பெயரை கவுந்தி அடிகள், இடையர் குல மங்கையான மாதரியிடம் கூறும் காட்சி, இவருக்கு நினைவிற்கு வந்தது.

     1963 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதி, மங்கலதேவி மலை ஆராய்ச்சிக்காக கூடலூருக்குச் சென்றார் பேராசிரியர். அடுத்த நாள் 17 ஆம் தேதி, அதிகாலை நான்கு மணிக்கு, ஊர் மக்கள் சிலரின் துணையுடனும், முத்து மற்றும் கந்தசாமி என்னும், இவரது இரு மாணவர்களோடும் புறப்பட்டார்.

     கூடலூரில் இருந்து மலையின் அடிவாரத்திற்குச் செல்ல மூன்று மைல்கள் நடக்க வேண்டியிருந்தது.  முல்லையாறு, காட்டாறு, களிமண் வழுக்கல், காடு கரம்பு, யானைகளின் புழக்கம் ஆகியவற்றைக் கடந்தாக வேண்டியிருந்த்து. ஏழு மணிக்கு மலை ஏறத் தொடங்கினார்கள். மலையில் தொடர்ந்து உயரும் மூன்று அடுக்குகளையும் ஏறிக் கடக்க வேண்டியிருந்தது. இடையே பற்பல இடையூறுகள்.

     ஒரு வழியாக, மங்கல தேவி மலையின் மேற் பரப்பிற்கு வந்தார்கள். போதைப் புற்காடு எட்டடி உயரத்திற்கு வளர்ந்து மண்டிக் கிடந்தது. அப் புதற்களுக்கு இடையில், ஓரிடத்தில், மூன்று சிற்ப வேலைப் பாடுகளுடன் கூடிய பெரிய, பெரிய கற்களைக் கண்டார்.

     அவற்றுள் இரண்டு கம்பமாக நிறுத்தப் பட்டிருந்த்து. ஒன்று வில் வடிவமாக கம்பத்தின் மீது நிறுத்தப் பட்டிருந்த்து. வில் வடிவமான கல்லின், ஒரு முகப்பில், மகர வாசிகையும, இரு பெண்களின் உருவமும் புடைப்புச் சிற்பங்களாகச் செதுக்கப் பட்டிருந்தன. இதை ஆராய்ந்த்தில், இது ஒரு சிற்ப முறையிலான மகர தோரண வாயில் என்பதை அறிந்தார்.

     பேராசிரியருடன், உடன் வந்த உள்ளூர் காரர்களில் ஒரு வேட்டைக் காரரும் இருந்தார். அந்த வேட்டைக் காரர், எல்லோரையும் உரக்கக் கத்துமாறு கூறவே, அனைவரும் தங்களால் இயன்ற வரை ஒலி எழுப்பினர். எதிரே திட்டாகத் தெரிந்த காட்டில் இருந்து எதிரொலி கிளம்பியது.

        எதிரொலி கிளம்பிய திட்டைச் சுட்டிக் காட்டிய வேட்டைக் காரன், அதோ தெரிகிறதே, அதுதான் வேங்கைக் கானல். அதனுள்ளேதான் கோட்டம் உள்ளது, அங்கிருந்துதான் எதிரொலி வருகிறது என்றார்.

      பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்களின் நெஞ்சம், ஒரு நிமிடம், துடிப்பதை சற்றே நிறுத்திவிட்டுப் பிறகு துடிக்கத் தொடங்கியது. வேங்கைக் கானல், கோட்டம், ஆகா, ஆராய்ச்சியின் இலக்கைத் தொட்டு விட்டோம். பதினேழு ஆண்டுகால ஆராய்ச்சிக்கு, உழைப்பிற்குப் பலன் கிடைத்து விட்டது. மனம் மகிழ்ச்சியில் குதூகலிக்கத் தொடங்கியது.

     இது எப்படி வேங்கைக் கானல் ஆகும்? கோட்டம் என்றால் என்ன? யார் சொன்னது? என கேள்வி மேல் கேள்விகளால், வேட்டைக் காரனைத் துளைத்தெடுத்தார்.

     அதெல்லாம் தெரியாதுங்க. இதை வேங்கைக் கானல் என்றுதான் கூப்பிடுவாங்க. இதுக்குள்ளேதான மங்கல தேவி குடி. அதுதான் கோட்டம். இதுக்கு இதுதான் பேரு என்றார்.

     வேங்கைக் கானல் என்ற பெயரைக் கேட்டவுடன் கோவிந்தராசனார் அவர்களின் உடல் ஒரு முறை சிலிர்த்தது. உள்ளத்தில் புதிய சக்தி பிறந்தது. கானலில நுழைந்தார். 200 அடி பக்கமுள்ளதாகவும், ஓரளவு சதுரமாக உள்ளதுமாகிய கோட்டத்தைக் கண்டார். கருங்கற்கள் அடுக்கிய நிலையில், யானைகள் உள்ளே வராத வகையில், மதிர் சுவர் அமைந்திருந்தது. உட்பகுதி முழுவதும் புதர் மண்டிக் கிடந்தது. மரங்கள் நிறைந்திருந்தன.

     செடி, கொடிகளால் சூழப்பட்டு சிதைந்த நிலையில் நிற்கும் கற்படைக் கோயில்கள் நான்கு ஆங்காங்கே இருந்தன. இரண்டு கோயில்கள் சிறியதாகவும், அழகுடனும் காட்சியளித்தன. இக் கோயிலின் உட்பகுதி வேரும், விழுதும், தழை மடிசல்களும், மழை நீரும் நிறைந்து, இடிபாடுகளுடன் இடிந்து கிடந்த்து.

     கோட்டத்தின் கிழக்குப் பகுதியில் ஓர் அழகான படிக்கட்டு. அதற்கு முன்னர் அரை குறையாகக் கட்டப் பட்டு, குத்துக் கற்களுடன் நிற்கும் வாயில். கோட்டத்திற்கு வெளியே சிறு சுனை.

    சுனையினைச் சூழ்ந்து, அடர்ந்து இருண்டு நிற்கும் காட்டு வேங்கை மரங்கள்.

     மிகப் பழமையோடு கூடியதும், பலி பீடத்துடன் உள்ளதுமாகிய மூன்றாவது கோயிலின் அருகினில் சென்றார்.

கண்ணகி சிலையின் மேற்பகுதி
கண்ணகி சிலையிருந்த அடிப் பகுதி (பீடம்)

      உள்ளே சுமார் இரண்டடி உயர அளவில், ஒரே கல்லில், இரண்டு கைகளுடன், இடது காலை பீடத்தில் மடக்கி, வலது காலை ஊன்றிய நிலையில், ஒரு பெண்ணின் சிலை.

      அப்பெண்ணின் தலையில் கிரீடம் இல்லை. விரிந்த கூந்தல். இடதுப் புற மார்பு சிறியதாக இருந்தது.

       நண்பர்களே, இதுதான், இதுதான் நண்பர்களே சேரன் செங்குட்டுவன் அமைத்த கண்ணகி சிலை. படிக்கும் நமக்கே, இவ்வளவு மகிழ்ச்சியும், பெருமையும் ஏற்படுகிறதே, இதனைக் கண்டு பிடித்த பேராசிரியர் சி.கோவிந்தராசனார் எவ்விதம் இருந்திருப்பார். உள்ளத்தில் உணர்ச்சிகள் அலைமோத, உற்சாகக் கடலிலே அல்லவா மிதந்திருப்பார். பதினேழு ஆண்டுகால இடையறா முயற்சி அல்லவா?

     கண்ணகி சிலை செய்யப் பெற்றக் கல், திண்மை இல்லாத, ஒருவகைக் கருங்கல். அதனால் அழிந்த அக் கட்டடத்தில் இருந்து , கீழே விழுந்த கற்களால் சிதைந்து போயிருந்தது. 1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிலையல்லவா.

     பல நூற்றாண்டுகளாக, இச்சிலை வழிபாட்டிற்கு உரியதாக இருந்துள்ளது என்பதனை, சிலையில் இருந்த வழவழப்பான தேய்வு புலப்படுத்தியது.

     இளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்தில், பல இடங்களில் குறிப்பிடும், நெடுவேள் குன்றமும், பத்தினிக் கோட்டமும் இதுதான் நண்பர்களே. சேரன் செங்குட்டவன் அமைத்த கண்ணகி சிலையும் இதுதான்.
கண்ணகி தீர்த்தம்
கண்ணகி கோயில் கல்வெட்டு




கண்ணகி கோயில், இன்றும்  அதே நிலையில்




கண்ணகி கோயிலும், செல்லும் மலைப் பாதையும்
 (இது இன்றைய நிலைமை)

கோவை நன்னெறிக் கழகத்தின் சார்பில், 21.3.1965 அன்று ம.பொ.சி அவர்கள் தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில்தான் முதன்முதலாக, கண்ணகி சிலையினைக் கண்டு பிடித்தது பற்றி வெளியுலகிற்குத் தெரியப் படுத்தினார். தொடர்ந்து பல இதழ்களில் கட்டுரைகள் எழுதினார்.

      இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டின் போது, தனது கண்டுபிடிப்புப் பற்றி சிறிய ஆங்கில நூல் ஒன்றினையும் வெளியிட்டார். அன்றைய தமிழக முதல்வர் அவர்கள், 17.5.1971 அன்று பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்களைக் அழைத்துப் பேசினார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற, இளங்கோவடிகள் சிலைத் திறப்பு விழாவின் போது, பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்களின் கண்டுபிடிப்பு பற்றி, தமிழக முதல்வரே , தமிழ் உலகிற்கு அதிகாரப் பூர்வமாக அறிவித்தார்.

தேடிச் சோறுநிதந்  தின்று – பல
     சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக வுழன்று – பிறர்
     வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
    கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
    வீழ்வே னென்று நினைத் தாயோ?
என்று பாடுவாரே பாரதி. அம்மகாகவியின் வரிகளுக்கு ஏற்ப, வேடிக்கை மனிதராய், வகுப்பறையே உலகென்று வீழ்ந்து விடாமல், வீறு கொண்டு எழுந்து, நடையாய் நடந்து, மலைதனில் மறைந்த வரலாற்றிற்கு உயிர் கொடுத்து, உலகறியச் செய்த மாமனிதரல்லவா இவர்.
   
கர்மவீரர் காமராசருடன் கை குலுக்குபவர் பேராசிரியர் சி.கோவிந்தராசனார்


பதினேழு ஆண்டுகள், ஒரே சிந்தனை, ஒரே செயல். சாதித்துக் காட்டிய மனிதரல்லவா பேராசிரியர் சி.கோவிந்தராசனார்.

பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்களை சில நாட்களுக்கு முன்னர்,
இந்தப் பதிவிற்காகச் சந்தித்த போது எடுத்துக் கொண்ட படம்.
(படம் எடுத்து உதவியவர் நண்பர் கரந்தை சரவணன் அவர்கள்)
     நண்பர்களே, பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்கள், இன்றும் நலமுடன் உள்ளார். அவருக்கு வயது 94. பத்தினி தெய்வம் கண்ணகியை நமக்கு மீட்டுக் கொடுத்தப் பேராசிரியர் சி.கோவிந்தராசனார், இன்னும் நூறாண்டு வாழ வாழ்த்துவோம். அவர்தம் உழைப்பை எந்நாளும் போற்றுவோம்.

       


     


     
பேராசிரியர் சி.கோவிந்தராசனார் குடியரசுத் தலைவரிடம் விருது பெறும் காட்சி

பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்கள் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் பாராட்டப்பெறும் காட்சி
--------------------------------- 

Oru Arizonan

unread,
Aug 28, 2016, 1:59:37 AM8/28/16
to mintamil
பேராசிரியர்சி கோவிந்தராசனார்பற்றிச் சிறந்த, பயனுள்ள பதிவு,தேமொழி அவர்களே!

N. Ganesan

unread,
Aug 28, 2016, 2:07:02 AM8/28/16
to மின்தமிழ்


On Saturday, August 27, 2016 at 10:16:51 PM UTC-7, தேமொழி wrote:

<<<
கண்ணகி சிலை செய்யப் பெற்றக் கல், திண்மை இல்லாத, ஒருவகைக் கருங்கல். அதனால் அழிந்த அக் கட்டடத்தில் இருந்து , கீழே விழுந்த கற்களால் சிதைந்து போயிருந்தது. 1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிலையல்லவா. 
>>>

மங்களூரிலும் மங்கலாதேவி வழிபாடுண்டு.

இந்த மலைக்கோவில் கண்டுபிடிப்பு அருமையானது. 1800 ஆண்டுக் கோவில் அல்ல இது. சி. கோவிந்தராசனார் நூல் என்னிடம் இருக்கிறது.
புலவர் செ. இராசு இக்கோயில் கல்வெட்டுக்களைப் பற்றி ஓர் அரிய கட்டுரை எழுதியுள்ளார்.

இந்த 1800 (!) ஆண்டு  சிலை இன்னும் இருக்கிறதா? இவ்வாறு கற்றளியில் பீடத்தில் உள்ள சிலைக்கு 1800 வருடம் ஆயிற்றா??
உண்மையெனில் தமிழ்நாட்டுச் சிலைகளில் மிகப் பழையது இதுதான். பார்த்தால் பிற்காலச் சிலை, கட்டிடம் எனத் தோன்றுகிறது.

> நண்பர்களே, இவர் நடந்தது ஒரு மாதம், இரு மாதமல்ல, பதினேழு ஆண்டுகள் நடந்தார். முடிவில் சிலப்பதிகாரம் 
> என்பது கற்பனைக் கதையல்ல, வரலாற்று நிகழ்வு என்பதனை உலகிற்கு உணர்த்தினார்.

:-) இதை நீங்கள் நம்புகிறீர்களா? இப்பொழுது வட இந்தியாவில் பலர் ராமாயணம், மகாபாரதம் கற்பனைக் கதையல்ல.
வரலாற்று நிகழ்வு என்கிறார்கள். அது போலத் தான் சிலம்பு 1800 ஆண்டு என்பதும் - முதலில் சொல்லியவர் வி. கனகசபைப் பிள்ளை -
வரலாற்று நிகழ்ச்சி என்பதும், கனகவிஜயர் தலையில் ஏற்றி செங்குட்டுவன் இமயமலியில் இருந்து இங்கே கொண்டுவந்தான்
என்பதும். கதைகள். இமயமலைக் கல்லா என்று பரிசோதிக்கலாமே.


----------------

நாடுகாண் காதையின் யாத்திரை நாட்டாரையா உரையின் வழியில் செல்கிறது. ஆனால், மூல நூலில் சொல்லியிருக்கிற செய்திகளுடன்
அவை பொருந்துவதில்லை.

On Saturday, August 27, 2016 at 10:12:10 PM UTC-7, தேமொழி wrote:

கண்ணகியின் அடிச்சுவட்டில், கண்ணகி பயணித்த பாதை வழியாகவே சென்ற பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்களது  ஆய்வுதான் எனக்கு ஒப்புக்கொள்ளும்படி இருக்கிறது.
இலக்கியத்தில்  உள்ள ஓரிரு பொது சொற்களின் வழி சென்று சிலப்பதிகாரத்தை புரிந்து கொள்வதைத் தவிர்க்க விரும்புகிறேன்.

புகார் - வடபெருங்கோடு -  அரங்கம் (= சீரங்கம். அரும்பத உரையாசிரியர்) - திருச்சி என இளங்கோ அடிகள் கூறும் நாடுகாண் காதைக்கும் இந்த வரைபடத்திற்கும் பொருந்துவதில்லை.
அப்போது, சமணத்தை ஆதரித்த கங்க அரசர்களின் அரங்கம் = சீரங்கம் என்னும் வடமொழிப் பெயரை இளங்கோ அடிகள் தருகிறார். அப்புறம் பல நிகழ்ச்சிகள்.

திருவரங்கத்தை துருத்தி எனத் தூய தமிழ்ப்பெயரால் அழைக்கிறார். திருவரங்கம் என்றுதான் ஆழ்வார்கள் பாடுகின்றனரே அல்லால், சீரங்கம் என்பதில்லை.
அரும்பத உரையாசிரியர் காலத்தில் சீரங்கம் = சீரங்கபட்டினம். இளங்கோவின் துருத்தி = திருவரங்கம். ந.மு.வே. நாட்டார் முதற்கொண்டு
அரும்பதவுரையாசிரியர் குறிக்கும் சீரங்கம் என்றால் என்ன இடம் எனப் புரிந்துகொள்ளவில்லை. இளங்கோ அடிகள் சீரங்கபட்டினத்தையும் (அரங்கம்:ரங்கம்),
விஷ்ணுவின் பெரிய கோயில் அமைந்துள்ள துருத்தியையும் - ஆழ்வார்களால் திருவரங்கம் எனப்படுவது. எந்த ஆழ்வாரும் சீரங்கம் என்பதில்லை -
வேறுபடுத்திப் பாடியுள்ளார். அதனை அரும்பத உரையாசிரியரும் காட்டுகிறார். 

பொதுச்சொற்கள் இல்லாமல் தெளிவாக வேறுபடுத்தி வடபெருங்கோட்டில் கவுந்தியின் பள்ளியையும், சீரங்கத்தையும் (அரங்கம்), பின்னர் பல நிகழ்ச்சிகளும்,
கடைசியில் திருச்சி வருவதும், அங்கே உள்ள துருத்தி (=திருவரங்கம்) திருக்கோவிலும் பாடியுள்ளார். அண்மைக் காலத்தில் அமைந்த நாட்டார் உரை
- பாகனேரி மு. காசிவிசுவநாதன் செட்டியார் நிதிஉதவி - தெய்வக் காவிரி நாட்டையும், அங்கே உள்ள சமணமும் சீரங்கமும் எடுத்துரைக்க தவறிவிட்டது.

கர்நாடகா காவிரிநாட்டில் சமணம் விரிவாகப் பேசும் இளங்கோ அடிகள், திருச்சி திருவரங்கம் ஊர்களைக் குறிப்பிட்டு மதுரை செல்லும் காடுகாண் காதையில்
சமண சமயம் குறித்துப் பேசவில்லை என்பது முக்கியம். கங்கர் ராஜ்ஜியமான காவிரிநாட்டில் மாத்திரம் சமண சமய போதனை, அந்தசாரணர் வருகை.
அரங்கம் - காவிரியிலேயே பெரிய அரங்கமாகிய சீரங்கம் - கர்நாடகத்தில். தமிழ்நாட்டில் உள்ளது துருத்தி, இதனை ஆழ்வார்கள் பிற்காலமும் சொல்லும் பெயர்
திருவரங்கம். அரும்பதவுரையாசிரியர் நுட்பமாய், அரங்கம்  = சீரங்கம் என்றார். அவர்காலத்தில் சீரங்கம் கங்கர்கள் ராஜ்யத்தில். திருவரங்கம் அன்று.

நா. கணேசன்

தேமொழி

unread,
Aug 28, 2016, 2:29:36 AM8/28/16
to மின்தமிழ்


On Saturday, August 27, 2016 at 11:07:02 PM UTC-7, N. Ganesan wrote:


On Saturday, August 27, 2016 at 10:16:51 PM UTC-7, தேமொழி wrote:

<<<
கண்ணகி சிலை செய்யப் பெற்றக் கல், திண்மை இல்லாத, ஒருவகைக் கருங்கல். அதனால் அழிந்த அக் கட்டடத்தில் இருந்து , கீழே விழுந்த கற்களால் சிதைந்து போயிருந்தது. 1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிலையல்லவா. 
>>>

மங்களூரிலும் மங்கலாதேவி வழிபாடுண்டு.

இந்த மலைக்கோவில் கண்டுபிடிப்பு அருமையானது. 1800 ஆண்டுக் கோவில் அல்ல இது. சி. கோவிந்தராசனார் நூல் என்னிடம் இருக்கிறது.
புலவர் செ. இராசு இக்கோயில் கல்வெட்டுக்களைப் பற்றி ஓர் அரிய கட்டுரை எழுதியுள்ளார்.

இந்த 1800 (!) ஆண்டு  சிலை இன்னும் இருக்கிறதா? இவ்வாறு கற்றளியில் பீடத்தில் உள்ள சிலைக்கு 1800 வருடம் ஆயிற்றா??
உண்மையெனில் தமிழ்நாட்டுச் சிலைகளில் மிகப் பழையது இதுதான். பார்த்தால் பிற்காலச் சிலை, கட்டிடம் எனத் தோன்றுகிறது.

உங்கள் கேள்வி நியாயமானதே. 

இந்தப் பகுதியை கோவில்கள் புனரமைப்பு செய்த முறையாக நான்  புரிந்து கொண்டேன்.

சோழ மன்னர்கள்  காவிரி தடம் நெடுகிலும் பல பழைய செங்கற்கள் கோவில்களை கற்றளிகளாக மாற்றியது நமக்குத் தெரியுமே.

நீங்களே உங்கள் ஊரில்  கோவில் ஒன்றைச் சீரமைக்க உதவிய செய்தியைக் கொடுத்தீர்களே. 

உங்கள் கொங்கு நாட்டு முன்னோர் யாரேனும் அவ்வாறு செய்திருக்க வாய்ப்புண்டு. 

நமது திரு. து. சுந்தரம் போன்றவர்கள் அந்தக் கல்வெட்டைப் படித்து (படிக்கும் நிலையில் இருந்தால் ) நமக்கு எக்காலத்தில் இந்தக் கோவில்  யாரால் சீரமைக்கப்பட்டது என்று சொல்லிவிடுவார்கள். 

தேமொழி

unread,
Aug 28, 2016, 6:49:01 PM8/28/16
to மின்தமிழ்


On Saturday, August 27, 2016 at 11:07:02 PM UTC-7, N. Ganesan wrote:
திரு. கணேசன்.  எனக்கு எழும் கேள்வி.

சிலப்பதிகாரம் எழுதப்பட்ட காலத்தில்,  கர்நாடகாவில் சீரங்க பட்டணம் என்ற ஊர் இருந்ததா என்பதே 

நான் படித்தவரை 9 ஆம் நூற்றாண்டுக்கு  முன்னர்  தகவல் கிடைக்கவில்லை.

The history of Srirangapattana commences from the 9th Century CE, as revealed in the record of a Ganga chief namely, Tirumalaiah. The record is dated 894 CE, which credits the Ganga chieftain namely Tirumalaiah, founded two temples - one dedicated to Sri Ranganatha Swamy and the other to his tutelary deity Tirumala Deva, and named the place as Srirangapura or Srirangapattana.


 ..... தேமொழி 

N. Ganesan

unread,
Aug 28, 2016, 8:56:08 PM8/28/16
to மின்தமிழ்

On Saturday, August 27, 2016 at 11:29:36 PM UTC-7, தேமொழி wrote:


On Saturday, August 27, 2016 at 11:07:02 PM UTC-7, N. Ganesan wrote:


On Saturday, August 27, 2016 at 10:16:51 PM UTC-7, தேமொழி wrote:

<<<
கண்ணகி சிலை செய்யப் பெற்றக் கல், திண்மை இல்லாத, ஒருவகைக் கருங்கல். அதனால் அழிந்த அக் கட்டடத்தில் இருந்து , கீழே விழுந்த கற்களால் சிதைந்து போயிருந்தது. 1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிலையல்லவா. 
>>>

மங்களூரிலும் மங்கலாதேவி வழிபாடுண்டு.

இந்த மலைக்கோவில் கண்டுபிடிப்பு அருமையானது. 1800 ஆண்டுக் கோவில் அல்ல இது. சி. கோவிந்தராசனார் நூல் என்னிடம் இருக்கிறது.
புலவர் செ. இராசு இக்கோயில் கல்வெட்டுக்களைப் பற்றி ஓர் அரிய கட்டுரை எழுதியுள்ளார்.

இந்த 1800 (!) ஆண்டு  சிலை இன்னும் இருக்கிறதா? இவ்வாறு கற்றளியில் பீடத்தில் உள்ள சிலைக்கு 1800 வருடம் ஆயிற்றா??
உண்மையெனில் தமிழ்நாட்டுச் சிலைகளில் மிகப் பழையது இதுதான். பார்த்தால் பிற்காலச் சிலை, கட்டிடம் எனத் தோன்றுகிறது.

உங்கள் கேள்வி நியாயமானதே. 

இந்தப் பகுதியை கோவில்கள் புனரமைப்பு செய்த முறையாக நான்  புரிந்து கொண்டேன்.

சோழ மன்னர்கள்  காவிரி தடம் நெடுகிலும் பல பழைய செங்கற்கள் கோவில்களை கற்றளிகளாக மாற்றியது நமக்குத் தெரியுமே.

நீங்களே உங்கள் ஊரில்  கோவில் ஒன்றைச் சீரமைக்க உதவிய செய்தியைக் கொடுத்தீர்களே. 

உங்கள் கொங்கு நாட்டு முன்னோர் யாரேனும் அவ்வாறு செய்திருக்க வாய்ப்புண்டு. 

நமது திரு. து. சுந்தரம் போன்றவர்கள் அந்தக் கல்வெட்டைப் படித்து (படிக்கும் நிலையில் இருந்தால் ) நமக்கு எக்காலத்தில் இந்தக் கோவில்  யாரால் சீரமைக்கப்பட்டது என்று சொல்லிவிடுவார்கள். 



உங்கள் மடலுக்கு பின்னர் விரிவாக எழுதுகிறேன். அந்தக் கல்வெட்டை படித்துள்ளனர்: புலவர் செ. இராசு, கல்வெட்டியல்துறைத்தலைவர் (ஓய்வு), தமிழ்ப் பல்கலை.
அங்கே இருந்தவர் புலவர் சி. கோ. ஐயா.

N. Ganesan

unread,
Aug 28, 2016, 9:37:44 PM8/28/16
to மின்தமிழ்

நாடுகாண் காதையின் யாத்திரை நாட்டாரையா உரையின் வழியில் செல்கிறது. ஆனால், மூல நூலில் சொல்லியிருக்கிற செய்திகளுடன்
அவை பொருந்துவதில்லை.

On Saturday, August 27, 2016 at 10:12:10 PM UTC-7, தேமொழி wrote:

கண்ணகியின் அடிச்சுவட்டில், கண்ணகி பயணித்த பாதை வழியாகவே சென்ற பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்களது  ஆய்வுதான் எனக்கு ஒப்புக்கொள்ளும்படி இருக்கிறது.
இலக்கியத்தில்  உள்ள ஓரிரு பொது சொற்களின் வழி சென்று சிலப்பதிகாரத்தை புரிந்து கொள்வதைத் தவிர்க்க விரும்புகிறேன்.

NG> புகார் - வடபெருங்கோடு -  அரங்கம் (= சீரங்கம். அரும்பத உரையாசிரியர்) - திருச்சி என இளங்கோ அடிகள் கூறும் நாடுகாண் காதைக்கும் இந்த வரைபடத்திற்கும் பொருந்துவதில்லை.
அப்போது, சமணத்தை ஆதரித்த கங்க அரசர்களின் அரங்கம் = சீரங்கம் என்னும் வடமொழிப் பெயரை இளங்கோ அடிகள் தருகிறார். அப்புறம் பல நிகழ்ச்சிகள்.

திருவரங்கத்தை துருத்தி எனத் தூய தமிழ்ப்பெயரால் அழைக்கிறார். திருவரங்கம் என்றுதான் ஆழ்வார்கள் பாடுகின்றனரே அல்லால், சீரங்கம் என்பதில்லை.
அரும்பத உரையாசிரியர் காலத்தில் சீரங்கம் = சீரங்கபட்டினம். இளங்கோவின் துருத்தி = திருவரங்கம். ந.மு.வே. நாட்டார் முதற்கொண்டு
அரும்பதவுரையாசிரியர் குறிக்கும் சீரங்கம் என்றால் என்ன இடம் எனப் புரிந்துகொள்ளவில்லை. இளங்கோ அடிகள் சீரங்கபட்டினத்தையும் (அரங்கம்:ரங்கம்),
விஷ்ணுவின் பெரிய கோயில் அமைந்துள்ள துருத்தியையும் - ஆழ்வார்களால் திருவரங்கம் எனப்படுவது. எந்த ஆழ்வாரும் சீரங்கம் என்பதில்லை -
வேறுபடுத்திப் பாடியுள்ளார். அதனை அரும்பத உரையாசிரியரும் காட்டுகிறார். 

பொதுச்சொற்கள் இல்லாமல் தெளிவாக வேறுபடுத்தி வடபெருங்கோட்டில் கவுந்தியின் பள்ளியையும், சீரங்கத்தையும் (அரங்கம்), பின்னர் பல நிகழ்ச்சிகளும்,
கடைசியில் திருச்சி வருவதும், அங்கே உள்ள துருத்தி (=திருவரங்கம்) திருக்கோவிலும் பாடியுள்ளார். அண்மைக் காலத்தில் அமைந்த நாட்டார் உரை
- பாகனேரி மு. காசிவிசுவநாதன் செட்டியார் நிதிஉதவி - தெய்வக் காவிரி நாட்டையும், அங்கே உள்ள சமணமும் சீரங்கமும் எடுத்துரைக்க தவறிவிட்டது.

கர்நாடகா காவிரிநாட்டில் சமணம் விரிவாகப் பேசும் இளங்கோ அடிகள், திருச்சி திருவரங்கம் ஊர்களைக் குறிப்பிட்டு மதுரை செல்லும் காடுகாண் காதையில்
சமண சமயம் குறித்துப் பேசவில்லை என்பது முக்கியம். கங்கர் ராஜ்ஜியமான காவிரிநாட்டில் மாத்திரம் சமண சமய போதனை, அந்தசாரணர் வருகை.
அரங்கம் - காவிரியிலேயே பெரிய அரங்கமாகிய சீரங்கம் - கர்நாடகத்தில்.

திரு. கணேசன்.  எனக்கு எழும் கேள்வி.

சிலப்பதிகாரம் எழுதப்பட்ட காலத்தில்,  கர்நாடகாவில் சீரங்க பட்டணம் என்ற ஊர் இருந்ததா என்பதே 

நான் படித்தவரை 9 ஆம் நூற்றாண்டுக்கு  முன்னர்  தகவல் கிடைக்கவில்லை.


நாடுகாண் காதையில் படித்தீர்களானால் அந்தசாரணர் வருகை  ஒரு ஊரில்  நிகழ்ந்ததாகச் சொல்லவேயில்லை.
வளைந்த மரங்கள் சூழ்ந்த அடுக்கங்கள் அருகே இருக்க - பல்மலை அடுக்கமாக சீரங்கம் = ஆதிரங்கம் எனப் புகழப்படுவது,
காவிரியில் உள்ள 3 அரங்கங்களில் தலையாயது. ஆனால், திருச்சியின் திருவரங்கம் சோழர் தலைநகராகிய பேரூரில் இருப்பது.

இது 9-ஆம் நூற்றாண்டில் கிடைத்த கல்வெட்டு. கொங்கில் சமீப காலத்தில் கூட சமண தலங்கள் வைணவ (உ-ம்: காரைமடை ரங்கநாதர் கோவில்),
சைவ (அமராவதி அணைக்கட்டு, திருமூர்த்திமலை. திருமூர்த்தி = தீர்த்தங்கரர். திருவள்ளுவர் < ஸ்ரீவல்லபதேவர். திருவரங்கம், தமிழ்நாட்டில் திரு இருக்கும்.

கங்கர்கள் (கொங்கர் என்பதன் மரூஉ என்பார் பேரா. மு. ஆரோக்கியசாமி அவர்கள். கொங்குநாட்டுக்கு ஆங்கிலத்தில் வரலாற்றுநூல் வடித்த
முதன்மைப் பேராசிரியர், சென்னைப்பல்கலை, 1950,60களில்).

தீர்த்தம், அரங்கம் கண்டால் நீராடல், வழிபாடு பல ஆயிரம் ஆண்டுகளாக நடக்கிறது இந்தியாவில். தீர்த்தங்கரர் - “Ford maker" பிறவாழி கடத்தல் அரிது.
ஒரு பாறையில் பிரசன்னம் ஆகி வள்ளுவர் கூறும் சமயத்தை விளக்குகிறார் சீரங்கத்தில் கவுந்தி, கண்ணகி, கோவலற்கு. அவ்வளவுதான்,
மூல நூலில் உள்ளது. அதன் பின் பல நிகழ்ச்சிகள். எல்லாம் கடந்து சீரங்கத்தில் (=ஆதிரங்கம்) இருந்து உறையூர் என்னும் பெருநகரை அடைகின்றனர் மூவரும்.
ஸ்ரீகோயில், ஸ்ரீசமவசரணம், ஸ்ரீயக்கி பழஞ்சலாகை, ஸ்ரீவல்லபர், ஸ்ரீரங்கம், ... எல்லாம் சமணர்களின் மணிப்ரவாளம், தமிழில்
ஸ்ரீ திரு ஆகிவிடும். திருவள்ளுவர், திருக்கோயில், திருவரங்கம், .... இந்த நுட்பமான வேறுபாட்டை கவனித்தால் எங்கே அந்தரசாரணர்
வருகை என விளங்கும். சமணம் செழித்த கர்நாடகாவின் சீரங்கத்தில். அங்கே கங்கர்கள் ராஜ்யம், சோழர் ஆளுமையில் என்று தொடக்கத்திலே
சொல்லுகிறார். இன்றும் சமணம் கொஞ்சமாவது நிலைக்க கங்கர்கள் கொடை பெரிது. பவணந்தி முனி நன்னூல் சொல்லிய வரலாறு:
'கங்கக் குரிசில் உவக்க நன்னூலைக் கனிந்து புகல் துங்கப் புலமைப்  பவணந்தி'

"Srirangapatna has since time immemorial been an urban center and place of pilgrimage. During the Vijayanagar empire, it became the seat of a major viceroyalty, from where several nearby vassal states of the empire, such as Mysore and Talakad, were overseen. When, perceiving the decline of the Vijayanagar empire, the rulers of Mysore ventured to assert independence, Srirangapatna was their first target. Raja Wodeyar vanquished Rangaraya,[2] the then viceroy of Srirangapatna, in 1610 and celebrated the Navaratri festival in the town that year. It came to be accepted in time that two things demonstrated control and signified sovereignty over the Kingdom of Mysore by any claimant to the throne:

  1. Successful holding of the 10-day-long Navaratri festival, dedicated to Chamundeshwari, patron goddess of Mysore;
  2. Control of the fort of Srirangapatna, the fortification nearest to the capital city of Mysore."

பட்டினம் என்ற பேரே புகார்ப் பட்டினத்துடன் உறவைக் காட்டும் “Mart" என சொல்லலாம் இந்த சீரங்கத்தை. பல நாட்டாரும் சமயம், வணிகம் என சந்திக்கும் முக்கிய இடம். இன்றும் சமண பசதி உண்டு,

கங்க அரைசர்களின் வம்மிசம் தன் சமண சமயம் பேணுவதை நேரில் கண்டவர் இளங்கோ அடிகள். சமண சமய போதனையின் முக்கியமான
பகுதியை கவுந்தி அடிகள் என்ற கதாபாத்ரம் (ஒருவகையில் தன்னை இப்பாத்திரம் வழியாகக் காட்டுகிறார்) படைத்து சீரங்கத்தில் (= ஆதிரங்கம்)
செய்கிறார். கங்கர்களும் சமணமும்


சீரங்கபட்டினம் தாண்டியபின் மதுரை செல்லும்வரை கல்நாட்டில் நிகழுமாப்போல சமணக்கல்வியை இளங்கோ அடிகள் செய்தாரில்லை.

உறையூரில்  தமிழ்நாட்டு அரங்கத்தைப் பெரியபெருமாள் பெருமை, ஊர்ப்பெருமை எல்லாம் பேசுகிறார். அது திருவரங்கம். திருவரங்கத்தை
“துருத்தி” என்கிறார் இளங்கோ தூயதமிழால். அப்புறமும் துருத்தி (குத்தாலம்) சைவத்தலம், பூந்துருத்தி, ... எல்லாம் இருக்கிறது.

சீரங்கம், துருத்தி என்னும் பழைய பெயர் கொண்ட திருவரங்கம் இரண்டுக்கும் வேறுபாட்டை நாட்டார் ஐயா பார்க்கவில்லை.
எனவே, நாடுகாண் காதையில் தெய்வக்காவிரி பாயும் பாதி நாட்டுக்கு உரை எழுதாது விட்டுவிட்டார்.

கண்டவியூகமும், திருவரங்கம்-சீரங்கம் வேறுபாடும் அறிந்திருந்தால் இச்செய்திகளைப் பண்டிதர் நாட்டாரவர்கள் எழுதியிருப்பார். 

நீங்கள் கொடுக்கும் கல்வெட்டு கங்கர்களின் கடைசிகாலம். ஆதியில் சமணம் இருந்த நிலை மாறிவிட்டது எனக் காட்டுகிறது.

தேமொழி

unread,
Aug 28, 2016, 10:24:40 PM8/28/16
to மின்தமிழ்
இதனை நன் முதலிலேயே பாத்துவிட்டுத்தான் மேலும் தேடினேன்.  

History[edit]

According to the Archaeological Survey of India (ASI), the temple is one of considerable antiquity. An inscription at the temple reveals it was first consecrated in 984 A.D. by a local chief called Tirumalaiah, a vassal of the Western Ganga dynasty.

என்ற தகவலும் வருகிறது.

அத்துடன் unesco.org (http://whc.unesco.org/en/tentativelists/5895/) நிறுவனம் தகவலும் அதைத்தான் சொல்கிறது.

அதனால் இவ்வூரின் கோவிலின் தொடக்கம் 9 ஆம் நூற்றாண்டு,  சிலப்பதிகாரதிற்குப் பின்னர்தான் என்றுதான்  எனக்கத் தோன்றுகிறது.

இரு நிறுவனங்களும் தகவல் பகிர்வதில் கவனமாக இருப்பார்கள் என நான் நம்புகிறேன்.



அதனால் நான்  

N. Ganesan

unread,
Aug 28, 2016, 11:09:04 PM8/28/16
to மின்தமிழ்
நீங்கள் சொல்லும் செய்தியைச் சிலப்பதிகாரத்தாலும் அறியலாகும். கல்நாட்டு ஸ்ரீரங்கத்தில் அப்போது விஷ்ணு பாம்பணைப்பள்ளிகொண்டதாக சிலம்பில் இல்லை.
காடுகாண் காதையில் குடக நாட்டில் இருந்து மாங்காட்டு மறையோன் திருவரங்கத்தில் பெருமாளை தரிசிக்க க்ஷேத்ராடநம் வருகிறான். வரும்வழியில்
ஆதிரங்கம் ஆகிய சீரங்கபட்டினத்தில் பெரிய பெருமாள் கோயில் இருந்திருந்தால் அங்கேயே வரும்வழியில் வணங்கியிருப்பானே. வணிகர்களும், விவசாயிகளும்
சந்திக்கும் ஒரு சந்தையாக இருந்திருக்கிறது எனலாம். 10-ஆம் நூற்றாண்டில் கடைசிக் கங்க மன்னர்கள் ரங்கநாடர் கோயில் எழுப்பியிருக்கலாம்.

வெறும் ஸ்ரீபாதம் மாத்திரம் இருந்த இடம் தான் மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயில். அதை நீக்கிவிட்டு மிக அண்மைக் காலத்தில் கட்டியதே
சைவ மயமான இப்போதைய திருவள்ளுவர் கோயில். தலையில் சடாமுடி, கழுத்தில் ருத்ராக்ஷக் கொட்டை, நெற்றியில் பட்டை என
சைவ சித்தாந்திகள் நூற்பதிப்புக்கழகம் வெளியிட சினிமாக் காரர்கள் ஓவியர் வேணுகோபாலசர்மாவை வைத்து பட்டை, கொட்டை நீக்கி
செக்யூலராக திருவள்ளுவர் படம் வரைந்து தந்தனர். சிஎஸ் அதை சட்டசபையில் திறந்துவைத்தார். இப்போது எல்லா ஊரிலும் அதே சிலைகள்.
பாஜக மீண்டும் சைவராக்க முயல்கிறது - சமயச் சின்னங்களுடன். ஆனால், பழைய வடிவம் திராவிட மொழிக்குடும்பத் தேற்றத்தின் தந்தை
வெளியிட்ட தங்கக்காசில் சமணமுனிவராக இருக்கிறது. 

நா. கணேசன்

satha sivam

unread,
Aug 28, 2016, 11:16:44 PM8/28/16
to mintamil

சார்  க.ராஜன் அவர்கள் அதியமான் பெருவழி அளந்த பார்த்து உள்ளார் அவரிடம் கேட்டு  பாருங்கள் ந சுப்பிரமணியம் அவர்களின் இந்தியா பண்பாட்டு வரலாறு என்னும் நூலில் இதைப்பற்றி ஒரு கட்டுரை எழுதி உள்ளார் தட்டச்சு செய்து பதவி இடுகிறேன்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

N D Logasundaram

unread,
Aug 29, 2016, 4:32:18 AM8/29/16
to mintamil
திருமதி தேமொழி அவர்களுக்கு 
என்னிடம் அடியார்க்கு நல்லார் உரை இல்லை 
 கிடைக்கவும் இ ல்லை அதனாலதான்

இதே கா தம் எனும் சொல்  பற்றிய விவாதம் முன்பு வந்தபோது
வந்த கருத்து இது நினைவிலிருந்து வைக்கின்றேன்
 திருசெங்கோட்  டிற் கும் கரூரிற்கும் இடையே உள்ள தூரம் இது  என காதக் குறிப்பு அடியார்க்கு நல்லார் உரையில்  வந்துள்ளது  என்பது  
அது கிடைத்தால் நமக்குத் நன்கே தெரிந்த இரண்டு ஊர்களுக்கு
  இ டையே உள்ளத்தூரம் விளக்கமாகும் என நினைக்கின்றேன் 

நூ த லோ சு 
மயிலை 

2016-07-11 21:10 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:


On Monday, July 11, 2016 at 8:04:43 AM UTC-7, N. Ganesan wrote:


On Monday, July 11, 2016 at 7:40:28 AM UTC-7, singanenjan wrote:
அன்பின் கணேசன், ந. சி. கந்தையா எழுதியிருப்பது அவர் கணக்கு அல்ல. அவர் குறைத்தார் ஏற்றினார் என்பதெல்லாம் சரியல்ல. யாப்பருங்கல விருத்தியில் பக்கம் 473  இலிருந்து அவர் மேற்கோள் காட்டியுள்ளார். கந்தையா அவர்களை நூல் www.ulakaththamiz.org.Repository இல் கிடைக்கிறது. 


ஈழத் தமிழறிஞர் ந. சி. கந்தியாபிள்ளை நூல்கள் சில பார்த்துள்ளேன். சிந்து சமவெளி நாகரீகம் கண்டுபிடித்தபோது சில கருத்துக்கள் சொன்னவர் அவர்.
நூலைப் பார்க்கிறேன். யாராவது நீங்கள் சொல்லும் அப் பக்கத்தைக் கொடுத்தாலும் நல்லது. அது தற்காலத்தில் எழுதியதாக இருக்கலாம்.

யாப்பருங்கலவிருத்தி ஓர் இலக்கண நூல். இதில் இதுபோன்ற துல்லியமான காதம் எத்தனை விரற்கடை, எத்தனை சாண், என்றெல்லாம் இருக்குமா
என்பது மிக ஐயப்பாடுடைத்து. மே. வீ. வேணுகோபாலப்பிள்ளை பதிப்பும், அதற்கு முந்தைய ச, பவானந்தம்பிள்ளை பதிப்பும் பார்க்கவேண்டும்.

கல்வெட்டு போன்ற சான்றுகள், பூவணப்புராணம் பாட்டு காதம் 12.5 மைல் என்பதைக் காளைராசன் ஐயா காட்டினார்.



இந்தக் கோட்டிற்குக் கீழுள்ள தகவலின்  தொடர்பு புரியவில்லையே ....!!!!!


 

-----------------------

யாப்பருங்கலவிருத்தியில் ஓர் பழைய விந்துமதி வெண்பா இருக்கிறது. நான் நெடுங்காலமாக எள்/எண் என்னும் தானியப்பெயர் நெண்- /நெள்-
என இருக்கும் என எழுதியுள்ளேன்.  ஞெண்டு/நெண்டு (நண்டு, நள்ளி. நண்டு பிடிப்போர் நளவர் என்ற சாதியார், ஈழத்தில், தென் தமிழகத்தில், like fishermen, crabfolks).
நெள்- /நள் - கருமை/இருள். ஞெண்டு = அலவன். அல்- < நெள்-/நள்- = இருள்/இரவு. இந்த த்யரிக்கு ஆதாரம் நெள் என எள்ளின் மூலப்பெயர்
என்று சமணர்கள் பாடிய வெண்பா யாப்பருங்கலவிருத்தி உரையில் உண்டு:

---------------------------------
சட்டம்தான் என்னத்தான் சட்டென்று சொல்லத்தான்
இட்டம்தான் உன்மேல்தான் என்றிட்டாள் -- கட்டம்தான்
கட்டிக்கொள் சொல்கின்றேன் கண்ணாட்டி என்றேன்நான்
ஒட்டிக்கொண் டாள்வந்தென் மேல்!

இதனை “விட்டிசைத்துப் பாடும் விந்துமதி” எனலாம்.

புணர்ச்சி விதியால் மெய்+உயிர் = உயிர்மெய் என்றெழுதினால் விந்துமதி இலக்கணம் பிறழும்.

முதல் எழுத்தைத் தவிர, எங்கும் உயிரெழுத்து வந்தால் ஸ்ட்ரிக்ட்-ஆகப் பார்த்தால் பிந்துமதி இலக்கணம் தட்டும்.
உ-ம்: கவிமாமணி ஐயா சிவசிவா திருத்தம் சொல்லியபின் தந்த வெண்பாப் பாருங்கள்.

உயிர்மெய், மெய் என்றே கடுமையான விதி இருப்பதால்தான் பல செய்யுள்கள் பூரண பிந்துமதியாய்
உருவெடுக்கவில்லை போலும். நீங்கள் செய்வதுபோல், விட்டிசைத்துப் பாடும் பிந்துமதி என
இலக்கணம் நெகிழ்த்தல் அவசியம்.

இருக்கிற ஒரே பழைய பிந்துமதிக் குறளில் எள்ளின் முந்துதமிழ் (Proto-Dravidian) பெயர் - நெள் - துலங்குகிறது.
நெய்கொண்டென்? நெற்கொண்டென்? நெட்கொண்டென்? கொட்கொண்டென்?
செய்கொண்டென்? செம்பொன்கொண் டென்?
(பிந்துமதிக் குறள்வெண்பா)


இந்த விந்துமதி வெண்பாவில் நெள் என்னும் எள் அகராதிகளில், ஆய்வுகளில் ஏறவேண்டும். நீர்:ஈரம், நுண்ணிய-உண்ணி (உண்ணி க்ருஷ்ணன் - குருவாயூரில்), ... போல
நெள்:எள். சொன்முதல் நகரம் அழிந்தது.

நா. கணேசன்

வேந்தன் ட்வீட்டுக்கு அளித்த மறுமொழி:

N D Logasundaram

unread,
Aug 29, 2016, 4:35:01 AM8/29/16
to mintamil
கா் என்பதற்கு பதில் யோசனை எனும் சொல் கைக்கொண்டதாகவும் ஆகலாம் 

நூ த லோ சு 
மயிலை 

N. Ganesan

unread,
Aug 29, 2016, 10:45:32 AM8/29/16
to மின்தமிழ்


On Sunday, August 28, 2016 at 8:16:44 PM UTC-7, சதாசிவம் wrote:

சார்  க.ராஜன் அவர்கள் அதியமான் பெருவழி அளந்த பார்த்து உள்ளார் அவரிடம் கேட்டு  பாருங்கள் ந சுப்பிரமணியம் அவர்களின் இந்தியா பண்பாட்டு வரலாறு என்னும் நூலில் இதைப்பற்றி ஒரு கட்டுரை எழுதி உள்ளார் தட்டச்சு செய்து பதவி இடுகிறேன்


நன்றி, தென்கொங்கு சதாசிவம். நலமா? 

பல செய்திகள் “காவதம்/காதம்” என்பதற்கு இவ்விழையில் தரப்பட்டுள்ளன. எருதுகளைப் பூட்டி ஒருநாள் சொல்லும் தூரம் காவதம். Gaauda என்னும் வடசொல். கன்னடத்தில் இருந்து முதன்முதல் தமிழுக்குக் கொண்டுவருபவர் இளங்கோ அடிகளாரே என்பதும் விளக்கியுள்ளேன். 9 மைல் - 18 மைல் என்று பலவாறாக இருக்கிறது. காதம் ~10 மைல் என்கிறது சென்னைப் பேரகராதி. மற்ற பலரும் 14 மைல், 18 மைல் (உ-ம்: கந்தபுராணம், மாதவச் சிவஞான யோகிகள்) என்பதால் காதம் = ~12 மைல் என எடுக்கிறேன். 

கல்வெட்டுக்களில் வணிகக் குழுக்கள் ஐம்பொழில் பரமேசுவரியை வணங்குவதாக வரும் - திசையாயிரத்து ஐஞ்ஞூற்றுவர் (இதனையும் முதலில் சொல்பவர் இளங்கோ அடிகளே.) அண்மையில் ஆறகழூரில் பொன். வெங்கடேசன் கண்டுபிடித்த சோழர் கல்வெட்டிலுமுண்டு. ஐம்பொழில் இப்பொழுது ஐஹொளெ என வழங்கும் கர்நாடக ஊர். கோயிற் கட்டடக் கலைகள் சமணம், சைவம் இரண்டிற்கும் அப்பகுதியில் தான் ஆரம்பம். பல்லவர்கள் அங்கிருந்து காஞ்சிக்குக் கொணர்ந்தனர். வட பெருங்கோட்டு பொழில்மண்டிலம் எனப்படுவது இந்தப் பகுதி. இது 30 காதம் (= ~ 360 மைல்) மதுரைக்கு வடக்கே என்கிறார் அடிகள். அங்கே கவுந்தியை சந்தித்து, காவிரி வளத்தால் இயற்கையும், வேளாண்மையும் சிறத்தலைப் பாடி, சீரங்கம் என்னும் ஆதிரங்கத்தில் அந்தரசாரணர் வருகையால் சமணம் அறிந்து, பின்னர் உறையூர் ( வாரணம் என பரியாயப் பெயரால் அழைத்தார் அடிகள். இது கண்டவியூகத்தில் காணும் யுக்தி தான்.) அடைகின்றனர். அங்கே, Parallel-ஆக, குடக (Coorg) நாட்டிலிருந்து வரும் வேதியனைச் சந்திக்கின்றனர் மூவரும். அவன் திருவரங்கப் பெருமையும், திருவேங்கடப் பெருமையும் நவில்கிறான். இது சமணத்திற்கு இணைகோடாக, வேத மறையவனை குடகிலிருந்து யாத்திரை வரச்செய்திருகிறார் தன் காவியத்தில். புறநானூற்றில் துறவு பற்றி - தாபதவாகை - இரண்டு பாடல்கள் அடுத்தடுத்து உள்ளன. ஒன்று, ஆசீவகத்தின் துறவு. இன்னொன்று, வேதியர் யாகம் வளர்க்கும் துறவு. அதேபோல, சிலம்பில் இரு சமயங்களையும் இணைகோடுகளாக வடபெருங்கோட்டில் (சைய மலை) இருந்து - சீரங்க பட்டினம் வழியாக - திருச்சி யாத்திரை வரவைக்கிறார். மாங்காட்டு மறையோன் ஏற்கெனவே பாண்டிநாடு யாத்திரை முடித்து திரும்பிவிட்டான். கவுந்தி-கோவலன் - கண்ணகி மதுரை செல்ல திருச்சியில் இருந்து தொடங்குகின்றனர். குடகுநாட்டானிடம் வழிகேட்டபின்.

சமணம், ஹிந்து சமயங்களை இணையாகச் சொல்வது புறநானூற்றின் துறவுப்பாடல்களை நினைவூட்டும். Two Sources of Indian Asceticism, by Johannes Bronkhorst நல்ல நூல். நான் குறிப்பிடும் புறப்பாட்டுகள் இரண்டு, காவியப் பாத்ரங்கள்: கவுந்தி, குடகுமலை மறையவன் - அவர்கள் சந்திப்பு திருச்சியில் (காடுகாண் காதை) ஒப்பிடற்குரியன. 50 ஆண்டு முன்னர் உரைஎழுதினோர் எல்லாம், சீரங்கம் என்றால் என்ன? திருவரங்கம் என்றால் என்ன? என்பதன் நுட்பமான வேறுபாட்டை அரும்பதவுரையாசிரியர் கொடுத்திருந்தாலும் உணராது விட்டனர். தெய்வக் காவிரி நாடு முழுதும் பாடியவர் இளங்கோ அடிகள். சமண சமய போதனையை காவிரி பாயும் கல்நாட்டில் வைத்தார். கவுந்தி அடிகளின் தவச்சாலையும் ஆங்கே என்றார் - 30 காவதம் என்று கூறினார். ’ஊழ்வினை உருத்து வந்தூட்டும்’ என்பதற்கு கோவலன் - கண்ணகி இருவரையும் நடக்க வைக்கிறார். தன் அணங்கு என்னும் அளப்பருஞ் சக்தியால், கற்பின் ஆற்றலைக் காட்ட இடமுலை திருகி எறிந்து மதுரையை கோவலன் “காட்டுக்கு” போனபின் எரியச் செய்கிறார் அடிகள். கற்புக் கடம்பூண்ட கண்ணகி என்னும் பத்தினித் தெய்வம் படுவதெல்லாம் படுகிறது. தெய்வம் என்பதற்கு சமணர்கள் கொள்ளும் பொருளென்ன? என்பதும் குறிக்கிறார் அடிகள். கண்ணகி தெய்வம் என்பதை முதலில் அடையாளம் காட்டுபவர் கவுந்தி அடிகள் தான். கொங்கச் செல்வி, குடமலை ஆட்டி என்று கண்ணகியைக் குறிப்பதால் சமண நாட்டார்களின் தெய்வம் முதலில் என்கிறார் காவிய ஆசான்.

பிற பின்!
நா. கணேசன்

N. Ganesan

unread,
Aug 30, 2016, 3:46:16 AM8/30/16
to மின்தமிழ்


திருமதி. தேமொழி,

மேலே கண்ட வலைப்பதிவு பார்த்தால் சி. கோவிந்தராசனார் தான் கண்ணகி மங்கலாதேவி ஆன இடம் கண்டதாக எழுதியிருப்பதாக இருக்கிறது.
ஆனால், பல தமிழறிஞர்கள் அவருக்கு முன்னரே இந்த இடுக்கி மாவட்ட கோயிலைப் பற்றி எழுதியுள்ளனர்.

1928-ல் கல்வெட்டு இருப்பதும், இடமும் ஆங்கிலத்திலும் வெளியானது.

நா. கணேசன்

தேமொழி

unread,
Aug 30, 2016, 4:14:03 AM8/30/16
to மின்தமிழ்


On Tuesday, August 30, 2016 at 12:46:16 AM UTC-7, N. Ganesan wrote:


திருமதி. தேமொழி,

(என்ன திடீரென "திருமதி. தேமொழி"... 
please just cut it out....தேமொழி போதுமே ...)

தகவலுக்கு நன்றி.  

சி. கோவிந்தராசனார் சிலப்பதிகார  இலக்கியம் குறிப்பிடும் தடத்தில், இலக்கியம் கூறும் குறிப்புகளைக் கொண்டு அந்தத் தடத்தில்  பயணிக்க விரும்பியிருக்கிறார்.  

நீங்கள் குறிப்பிட்ட இராமாயணம் கூறும் குறிப்புகளைக் கொண்டு சிலர் முன்னெடுக்கும் முயற்சி போல.  

Trekking through Historical Trail  using landmarks  - என்பதில்  உலகம் முழுவதும் பலருக்கு ஆர்வமுண்டு. 

இலக்கியத்தில் முன்னெடுக்கும்  இது போன்ற  அணுகுமுறைகளால்  .... இலக்கிய ஆசிரியர் கூறும் வழி அந்நாளில் மக்களால் பயணத்திற்கு பயன்பட்டிருக்கிறது, அந்த ஊர்கள் இன்னமும் இருக்கின்றன என்பது போன்ற தகவல்களை நாம் பெற்றுக் கொள்ளலாம்.  

அதற்கு மேல் அதற்குக் கொடுக்கும் முக்கியத்துவம் அவரவர்  தனிப்பட்ட விருப்பம்   

..... தேமொழி

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Aug 30, 2016, 4:24:20 AM8/30/16
to mintamil

2016-08-29 20:15 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
எருதுகளைப் பூட்டி ஒருநாள் சொல்லும் தூரம் காவதம்.


ஒருநாள்னா 24மணி நேரமா?

24 மணி நேரம் மாட்டைப் பூட்டி அப்படியே நடத்தி ஊர்சுத்திக் காட்டுவாய்ங்களா?

ஆனாலும் இப்படி ஒரு வெளக்கத்த உங்களத்தவிர யாருமே சொலல முடியாதுங்கோ. :))


--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
------------------------------------------------------------------
கடந்துபோன மணித்துளிகள் - மண்ணில்
கரைந்துபோன மழைத்துளிகள் - மீளாது !
கடமையைச் செய் ! - அதையும்
உடனடியாய்ச் செய் !
----------------------------------------------------------------

தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.com

திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com

N. Ganesan

unread,
Aug 30, 2016, 9:24:52 AM8/30/16
to மின்தமிழ்

2016-08-29 20:15 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
எருதுகளைப் பூட்டி ஒருநாள் சொல்லும் தூரம் காவதம்.

What I have given is the definition for Gaauda, and that Sanskrit/Kannada word is used by Ilango Adikal.

NG 

N. Ganesan

unread,
Aug 31, 2016, 1:00:04 AM8/31/16
to மின்தமிழ், vallamai


On Tuesday, August 30, 2016 at 1:14:03 AM UTC-7, தேமொழி wrote:


 
NG >

மேலே கண்ட வலைப்பதிவு பார்த்தால் சி. கோவிந்தராசனார் தான் கண்ணகி மங்கலாதேவி ஆன இடம் கண்டதாக எழுதியிருப்பதாக இருக்கிறது.
ஆனால், பல தமிழறிஞர்கள் அவருக்கு முன்னரே இந்த இடுக்கி மாவட்ட கோயிலைப் பற்றி எழுதியுள்ளனர்.

1928-ல் கல்வெட்டு இருப்பதும், இடமும் ஆங்கிலத்திலும் வெளியானது.

நா. கணேசன்
 


Themozhi wrote: 

தகவலுக்கு நன்றி.  

சி. கோவிந்தராசனார் சிலப்பதிகார  இலக்கியம் குறிப்பிடும் தடத்தில், இலக்கியம் கூறும் குறிப்புகளைக் கொண்டு அந்தத் தடத்தில்  பயணிக்க விரும்பியிருக்கிறார்.  

நீங்கள் குறிப்பிட்ட இராமாயணம் கூறும் குறிப்புகளைக் கொண்டு சிலர் முன்னெடுக்கும் முயற்சி போல.  

Trekking through Historical Trail  using landmarks  - என்பதில்  உலகம் முழுவதும் பலருக்கு ஆர்வமுண்டு. 

இலக்கியத்தில் முன்னெடுக்கும்  இது போன்ற  அணுகுமுறைகளால்  .... இலக்கிய ஆசிரியர் கூறும் வழி அந்நாளில் மக்களால் பயணத்திற்கு பயன்பட்டிருக்கிறது, அந்த ஊர்கள் இன்னமும் இருக்கின்றன என்பது போன்ற தகவல்களை நாம் பெற்றுக் கொள்ளலாம்.  

அதற்கு மேல் அதற்குக் கொடுக்கும் முக்கியத்துவம் அவரவர்  தனிப்பட்ட விருப்பம்   

..... தேமொழி



ந. மு. வே.  நாட்டார் சிலம்பு (~5-ஆம் நூற்.), அரும்பதவுரையாசிரியர் (~10-ஆம் நூற்றாண்டு) காலத்தில் சீரங்கம் என்னும் கல்நாட்டு அரங்கத்திற்கும்,
தமிழ்நாட்டு திருவரங்கம் - ஆழ்வார்கள் எல்லோரும் பாடிய திருப்பதி. ஒருவரும் சீரங்கம் என்றதில்லை - உள்ள நுட்பமான வேறுபாட்டை விட்டுவிட்டார்.
அதனால் நேர்ந்த குழப்பம் அதிகம்.

சி. கோவிந்தராசனார், கண்ணகியார் அடிச்சுவட்டில் என்ற நூல் எழுதினார். நாட்டார் ஐயா உரையை முன்வைத்து. ஆனால் இடுக்கி மாவட்ட
மங்கலாதேவி கோயில் தமிழறிஞர்கள் சுமார் நூறாண்டுகளாக நன்கறிந்ததே. யாழ்ப்பாணம் சோ. சிவபாதசுந்தரம் கௌதம புத்தர் அடிச்சுவட்டில்,
மாணிக்கவாசகர் அடிச்சுவட்டில் என்ற நூல்களை எழுதியது பிரபலமாக அப்போதிருந்தது. அதைப்படித்த பொள்ளாச்சி நா. மகாலிங்கம்,
அவரை அழைத்து எல்லா வசதியும் செய்துகொடுத்து “சேக்கிழார் அடிச்சுவட்டில்” என்ற நூல் எழுதச் செய்தார். சிட்டி சுந்தரராஜன் (நரசையாவின்
மாமன் அவர்), சிவபாதசுந்தரம் எழுதிய அருமையான பயண நூல். சைவர்கள் அறுபத்துமூவர் தலங்களை, இன்றைய நிலையை அறியத் துணைசெய்யும்
நூல். வானதி பதிப்பகம், பல பதிப்புகள் கண்ட நூல். சிவபாதசுந்தரத்தின் “அடிச்சுவட்டில்” போல, சி.கோ. எழுதினார்.

மங்கலாதேவி - பல ஊர்களில் வழிபடப்பட்டவள். வைதீகத்தில் தேவதை ஆகவில்லை. ஆனால் பௌத்தம் இணைத்துக்கொண்டது,
தாரா தேவியாக - அவலோகிதன் மனைவியாக. இலங்கை பௌத்ததில், சுருளிமலையில், மங்களூரில் (ஊர்ப்பெயரே கண்ணகி மங்கலாதேவியினால்தான்),
கர்னாடகத்தில் நாடுகாண் காதை காவிரிநாடு முழுதும் பாடுவதுபற்றி விரிவாகக் குறிப்பிட்டேன். கர்நாடக சீரங்கபட்டினம், வடபெருங்கோடு என்னும்
மேற்குத் தொடர்ச்சிமலையின் கவுந்தியடிகள் தவச்சாலை, .... பழைய சீரங்கத்தின் அரைசர்கள் கங்கர்கள் கண்ணகி கதையை, வழிபாட்டை
கர்நாடகாவில் வளர்த்திருக்கவேண்டும். அங்கே “சந்திரா” என்று பெயர் கண்ணகிக்கு. சுருளிமலை மங்கலாதேவி கோட்டத்தில்
“ஸ்ரீபூரணி” என்று அவள் குறிப்பிடப்பெறுவதுடன் ஒப்புநோக்கத் தக்கது. கி.பி. 6-ஆம் நூற்றாண்டில் இலங்கையில் கிடைத்த கண்ணகி
Folk Bronze முக்கியமானது. அதனைப் பற்றி எழுதியுள்ளேன். ஆக, சுருளிமலை மங்கலாதேவி வழிபடப்பெறும் இடங்களில் ஒன்று. மற்ற ஊர்களும் இருக்கின்றன.
தொகுத்து எழுதவேண்டும்.

கேரளாவின் நாட்டார் மரபுகளில் கண்ணகி,

நா. கணேசன்

 

N D Logasundaram

unread,
Aug 31, 2016, 7:54:50 AM8/31/16
to mintamil
தேமொழி அவர்களுக்கு,

காதம் எவ்வளவு தூரம் என்பது பற்றி விக்கியில் உள்ளது பலரும் அறிவர் அங்கும் பலதரப்பட்ட வேறுபாடுடன்தான் காட்டப்படுகிறது எனவே  அது ஒரு வேறுபாடுகளின் தொகுப்பு அவ்வளவே 

முன்பு காதம் கூப்பிடுதூரம் என வாய்ப்பாடு காட்டினார் 
விக்கியில் மாடு குரல் கொடுத்து (கத்தி)அழைப்பு விடுத்தல்   கேட்கக் கூடிய தூ ரம் ஓர் 
( காதம்) எனவும் ஓர் விளக்கம் உள்ளது  காணலாம் 

இழையின் தலைப்பில்லாமல் வேறு 
திரு திருத்தம் சரவணன்
காளை யை ஒரு நாளெல்லாம் ஒட்டிச் சென்றால் எனும் வரிக்கு 24 மணிநேரம் என காட்டகின்ரீரே எப்போதும் நாளென்றால் இரவும் சேர்த்தது தான் என்றாகுமா ?? 
ஒளிரும் ஒளி இல்லாதோ அல்லது உடனோ  யாரவது ஓட்டிச்சென்றால் என தனித்த குறிப்பு என ஒன்று இல்லாதபோதுஇடம் நோக்கித்தான் பொருள்கொள்ள வேண்டும் எனபது யாவரும் அறிந்ததுதானே 
 தமிழ் மொழிக்கு புதிய விளக்க இப்படியும் தரலாம் என்கிறீரா ?
தமிழ் நூல்களி ல்  நாளங்காடி  என்றால் இரவும் சேர்ந்த 24 கடிகார மணிநேர காலம் என புதிய விளக்கம் காட்டலாமா? 

நூ த லோ சு 
மயிலை 

--

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Aug 31, 2016, 10:05:27 AM8/31/16
to mintamil
காவதம் என்பதற்கு எனது விளக்கம் இதோ கீழே.

கவந்தம் என்றால் மரத்தின் தண்டுப்பகுதி எனவும் பொருளுண்டு.

கவந்தம் kavantam

, n. < kabandha. 1. Headless body; தலையற்ற உடல். கவந்த மெங்கணு மாடவும் (சீவக. 2310). 2. Stump of a tree; தலை தறிந்த மரம். Loc. 3. Oil-press; செக்கு. (பிங்.) 4. Demon; பேய். (பிங்.) 5. Water; நீர். கவந்த மலைந்தனவே (பாரத. பதினாறாம். 58).

அவ்வகையில்,

ஒரு குறிப்பிட்ட தூரத்தினைக் குறிக்க தற்போது வழியெங்கும் மைல்கல் வைத்திருப்பதைப்போல, அக் காலத்தில்
தூரத்தைக் குறிக்க, மரத்தின் தண்டுப் பகுதியினை நட்டு வைத்திருக்கலாம் அல்லது அந்த இடத்தில் வளர்ந்து இருக்கும் ஒரு மரத்தின் மேல்பகுதியினை மட்டும் வெட்டி அதன் தண்டுப்பகுதியில் குறிசெய்து வைத்திருக்லாம். இந்தக் கவந்தமே கவதம் ஆகி காவதம் என்று ஆகியிருக்கும் எ்ன்று நினைக்கிறேன். 

அன்புடன்,

தி.பொ.ச.



தேமொழி

unread,
Aug 31, 2016, 12:22:21 PM8/31/16
to மின்தமிழ்


On Wednesday, August 31, 2016 at 7:05:27 AM UTC-7, வேந்தன் சரவணன் wrote:
காவதம் என்பதற்கு எனது விளக்கம் இதோ கீழே.

கவந்தம் என்றால் மரத்தின் தண்டுப்பகுதி எனவும் பொருளுண்டு.

கவந்தம் kavantam

, n. < kabandha. 1. Headless body; தலையற்ற உடல். கவந்த மெங்கணு மாடவும் (சீவக. 2310). 2. Stump of a tree; தலை தறிந்த மரம். Loc. 3. Oil-press; செக்கு. (பிங்.) 4. Demon; பேய். (பிங்.) 5. Water; நீர். கவந்த மலைந்தனவே (பாரத. பதினாறாம். 58).

அவ்வகையில்,

ஒரு குறிப்பிட்ட தூரத்தினைக் குறிக்க தற்போது வழியெங்கும் மைல்கல் வைத்திருப்பதைப்போல, அக் காலத்தில்
தூரத்தைக் குறிக்க, மரத்தின் தண்டுப் பகுதியினை நட்டு வைத்திருக்கலாம்

இது அசோகரால் துவக்கப்பட்டிருக்குமோ சரவணன்!!!  
அவர்தானே சாலையில் நிழல் தரும் மரங்களை நட்டார் என எனக்கு மனப்பாடம் செய்த நினைவு.  
மக்கள் பயணம் செய்த சாலைகளில்  நிழல் தரும் மரங்களை நடுவதன் நோக்கம் ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்ற செயலோ!!!!  
- பயணம் செய்வோர் இளைப்பாற   நிழல் தருவதற்கும் பயன்படுகிறது, அதே சமயம் 
- மரத்தின் மேல்பகுதியினை மட்டும் வெட்டி அதன் தண்டுப்பகுதியில் குறிசெய்து தொலைவினை குறித்து வைத்திருப்பார்களோ 

மாற்றி யோசிப்பதால் பல் வரலாற்றில் மறைந்து போன்றவற்றை வெளிக் கொணரலாம் எனத் தோன்றுகிறது. 
;-)

..... தேமொழி

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Sep 1, 2016, 12:16:49 AM9/1/16
to mintamil

2016-08-31 21:52 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
மாற்றி யோசிப்பதால் பல் வரலாற்றில் மறைந்து போன்றவற்றை வெளிக் கொணரலாம் எனத் தோன்றுகிறது. 
;-)

உண்மைதான் தேமொழி அக்கா :))

N. Ganesan

unread,
Sep 5, 2016, 11:30:12 PM9/5/16
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, Kalairajan Krishnan
இளங்கோ அடிகள் நாடுகாண் காதையில் வடபெருங்கோட்டு பொழில்மண்டிலம் கடந்து கவுந்தி அடிகளின் தவப்பள்ளியை அடைகிறான். அங்கிருந்து மதுரை 30 காதம் என்று கண்ணகிக்குச் சொல்கிறான். 30 X 12 = 360 மைல்கள் எனக் கொள்கிறேன். பொதுவாக, ஒன்பதிலிருந்து 18 மைல் காதம்/காவதம் என்று இருப்பதால் காதம் =  ~12 மைல் என்று கொண்டேன். சென்னைப் பேரகராதி காதம் ~ 10 மைல் என்கிறது.

கந்தபுராணமும், பின்னர் திருப்புகழும், அதன் பின்னர் மாதவச் சிவஞான யோகிகளும், ... திருவேங்கட நெடியோன் முருகன் என்று பாடியுள்ளனர். முருகன் திருவேங்கடத்தின் உச்சியில் மலையப்பனாக நிற்பதற்கு ஒரு மிகப் பழைய தொன்மக் கதையும் கந்தபுராணம், திருப்புகழ் கூறுகிறது. அந்தப் புராணத்தை ஒட்டியே, பழனித் தலபுராணமும் பின்னாளில் அமைந்திருக்கவேண்டும் (கந்தபுராணம், ஸ்காந்தத்தில் பழனி பற்றிக் காணோம்). திருவேங்கடம், மல்லை, காஞ்சி, பகுதிகளில் வராக வழிபாடு மிகுதி. அப்பெருமாளை சிலம்பும், ஆழ்வார்களும் வர்ணிக்கின்றனர் எனலாம். ராமானுஜர் காலத்தில் திருவேங்கட நெடியோன் சங்கமும், சக்கரமும் சார்த்தப்படுகிறார் என்பது தலவரலாறு. குருபரம்பரையில் சொல்லப்படும் செய்தி. தீத்தாரப்பன் அவர்கள் “நாமம் போட்டுவிட்டான்” என்பதற்கு திருப்பதி மாற்றம் என எழுதினார். திருவேங்கட முருகனின் பழம்புராணம் சொல்லும் திருப்புகழ்களையும், அப் புராணத்தையும், சைவ மரபையும் பின்னர் பார்ப்போம். 

அத் திருப்புகழ்கள் வாசிக்கும் போது, காதம் எவ்வளவு தூரம் என்று சொல்லும் ஒரு திருப்புகழ் கண்டேன். வெள்ளிகரம் என்னும் ஆந்திர நாட்டுத் திருத்தலம் பற்றிய திருப்புகழ். அழகான சந்தப் பாடல். குருஜி ராகவன் 23 அக்ஷரம் எப்படிப் பாடணும்னு பாடிக் காட்டுகிறார். எம்பி3 இணைப்பில் கேட்டு அருள்பெருக.

இதில் ’காதங் காதம் அரை’ = 1 காதம் + 1 காதம் + 0.5 காதம் = 2.5 காதம், திருத்தணி - வள்ளிமலை என்கிறார் அருணகிரிநாதர்.
கூகுள் மேப்: 50 கிமீ = 31.06 மைல் என இந்த 2.5 காதத்தைக் காட்டுகிறது. அதாவது, ஒரு காதம் = 31.06 / 2.5 = 12.4 மைல்.

















அருணகிரிநாதர் வாக்கும், பிற்காலக் கல்வெட்டுகளை ஆராய்ந்த மேலைநாட்டார் கணக்கும் ஒத்துவருகிறது:
(1)
See B. L. Rice, 1897, pg. 548, 
Mysore, by districts
"Gaavada or Gau = a distance of about 12 miles"

(2)
Foreign measures and their English values, 1864
Gavada or Day's Journey = 14.6 miles

(3)
Francis Buchanan, A Journey from Madras Through the Countries of Mysore, Canara and Malabar..., 1807
pg. 332
"for every Gau or Gavada of 4 cosses, which amount upon an average, I suppose, to between 12 and 14 miles."

அருணகிரிநாதர் வாக்கில் கண்ட கணக்கின் படி, சிலம்பில் கவுந்தியடிகள் பள்ளிக்கும், மதுரைக்கும் ~360 மைல் என்பது தவறாகாது.

நா. கணேசன்

வெள்ளிகரத் திருப்புகழ் - வதன சரோருக ....

தனன தனாதன தனன தனாதன தய்ய தனத்த தந்த
     தானாதன தானந் தானன ...... தந்ததான

......... பாடல் .........

வதன சரோருக நயன சிலீமுக வள்ளி புனத்தில் நின்று
     வாராய்பதி காதங் காதரை ...... யொன்றுமூரும்

வயலு மொரேவிடை யெனவொரு காவிடை வல்லப மற்றழிந்து
     மாலாய்மட லேறுங் காமுக ...... எம்பிரானே

இதவிய காணிவை ததையென வேடுவ னெய்திடு மெச்சில் தின்று
     லீலாசல மாடுந் தூயவன் ...... மைந்தநாளும்

இளையவ மூதுரை மலைகிழ வோனென வெள்ள மெனக் கலந்து
     நூறாயிர பேதஞ் சாதமொ ...... ழிந்தவாதான்

[...]

வதன சரோருக நயன சிலீமுக ... தாமரை போன்ற முகமும், அம்பு
போன்ற கண்களும் உடைய

வள்ளி புனத்தில் நின்று ... வள்ளியின் தினைப்புனத்தில் போய்
நின்று கொண்டு,

வாராய்பதி காதங் காதரை ... நீ என்னுடன் வருவாயாக, என் ஊர்
(திருத்தணிகை) இரண்டரை காதம் தூரம்தான்,

ஒன்றுமூரும் வயலும் ஒரே இடை ... என் ஊரும், உன்னூராகிய
வள்ளிமலையும் நெருங்கி உள்ளன, இடையில் ஒரே ஒரு வயல்தான்
உள்ளது,

எனவொரு காவிடை வல்லபம் அற்றழிந்து ... என்று கூறி, ஒரு
சோலையிலே உன் வலிமை எல்லாம் இழந்து,

மாலாய் மடல் ஏறுங் காமுக எம்பிரானே ... வள்ளி மீது மிக்க
மயக்கம் கொண்டு மடல்* ஏறிய மோகம் நிறைந்த எம்பெருமானே,
grtp0664.mp3

N. Ganesan

unread,
Sep 6, 2016, 7:52:30 PM9/6/16
to மின்தமிழ்


On Saturday, July 9, 2016 at 10:39:22 PM UTC-7, singanenjan wrote:

காதம் என்றால் எவ்வளவு தூரம் ?

ஒரு காதம் என்பது பத்து மைல் தூரமா , பன்னிரெண்டு மைலா என்றெல்லாம் கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெறுகின்றன. யாப்பருங்கலக் காரிகை என்று ஒரு நூல். அதற்கு  யாப்பருங்கல விருத்தி என்று ஒரு உரை நூல்.. பதினோராம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனக் கருதுகிறார்கள் அதில் பக்கம் 473 இல் விளக்கம் உள்ளது. இதைத் தமிழ்  அறிஞர் ந. சி. கந்தையா தனது “தமிழகம்” (1934) எனும் நூலில் சுட்டிக் காட்டுகிறார்.

12   விரல்        1 சாண்          

2     சாண்         1 முழம்

4     முழம்        1 கோல்

500 கோல்         1 கூப்பிடு

4         கூப்பிடு    1 காதம்.

இனி, முழம் என்றால் யாருடைய கையால் , லால் பகதூர் சாஸ்திரி கையா, அல்லது கான் அப்துல் கபார் கான் கையா என்றல்லாம்  கேட்கக்  கூடாது.


1 கோல் = 4 தண்டம் என்பது போலும்:

வழியளவை வருமாறு:

8   தோரை(நெல்)

1 விரல்

12   விரல்

1 சாண்

2   சாண்  

1 முழம்

4   முழம்  

1 பாகம் அல்லது தண்டம்

2000 தண்டம்  

1 குரோசம்(2 1/4 மைல்)

2   குரோசம்   

1 யோசனை

71/2 நாழிகைவழி  

1 காதம்(10 மைல்)


 
See the factor of 4 between kOl vs. daNDam (from Artha Sastra).

This is from J. Prinsep who discovered the method to read Brahmi inscriptions (Ashoka)

நா. கணேசன்

Mukunthan Pathmanesan

unread,
Sep 7, 2016, 11:07:01 AM9/7/16
to mint...@googlegroups.com
மணிமேகலை -  சக்கரவாளக்கோட்டம் உரைத்த காதை
அந்தரம் ஆறா ஆறுஐந்து யோசனைத்
தென்திசை மருங்கில் சென்றுதிரை உடுத்த
மணிபல் லவத்திடை மணிமே கலாதெய்வம்
அணிஇழை தன்னைவைத்து அகன்றது தான்என்.

இங்கே வான் வழியாகச் செல்லாமல் , கடல் வழியாகச் சென்றது எனக் கொண்டால் புகாருக்கும் மணிபல்லவத்திற்குமிடையிலிருந்த தூரத்தைப் பார்ப்போம்.


கடற் தூரங்களை  எவ்வாறு அளந்திருப்பார்கள் எனத் தெரியவில்லை.. ஆனால் நேர்கோடாக இருக்காது என நினைக்கின்றேன். அதன்படி கீழேயுள்ள படத்தைப் பார்க்கவும்.

Inline image 1



ஆறுஐந்து யோசனை = 30 யோசனை = 105 மைல் (அண்ணளவாக)
1 யோசனை = 4 காதம் = 3.5 மைல் = 5.6 கி.மீ

1 யோசனை =  4  காதம் என்பது பல்வேறிடங்களில் குறிப்பிடப்படிருக்கின்றது.

அதன்படி 1 காதம் என்பது 0.875 மைல் = 1.4 கி.மீ


தூரங்களைப்( குறுகிய, நீண்ட ) பொறுத்து வெவ்வேறு காத அளவைகள் இருந்திருக்கலாம். அல்லது பயணப்படும் முறையிலும் (நேரத்தைப் பொறுத்து)  காதம் மாறியிருக்குமோ தெரியவில்லை. ( நடந்து செல்லல், குதிரை, படகு)


(பரப்பளவை அளக்கும் முறையில் வரும் யோசனை / காவதம் அளவு பற்றித் தெளிவாகத் தெரியவில்லை. இங்கே நீட்டளளவையில் வரும் யோசனையையே குறிப்பிடுகின்றேன்.)


நன்றி,
முகுந்தன்


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/k2vENrVBilc/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

N. Ganesan

unread,
Sep 7, 2016, 9:50:09 PM9/7/16
to மின்தமிழ், vallamai
On Wednesday, September 7, 2016 at 8:07:01 AM UTC-7, mukunthan wrote:
மணிமேகலை -  சக்கரவாளக்கோட்டம் உரைத்த காதை
அந்தரம் ஆறா ஆறுஐந்து யோசனைத்
தென்திசை மருங்கில் சென்றுதிரை உடுத்த
மணிபல் லவத்திடை மணிமே கலாதெய்வம்
அணிஇழை தன்னைவைத்து அகன்றது தான்என்.

இங்கே வான் வழியாகச் செல்லாமல் , கடல் வழியாகச் சென்றது எனக் கொண்டால் புகாருக்கும் மணிபல்லவத்திற்குமிடையிலிருந்த தூரத்தைப் பார்ப்போம்.


கடற் தூரங்களை  எவ்வாறு அளந்திருப்பார்கள் எனத் தெரியவில்லை.. ஆனால் நேர்கோடாக இருக்காது என நினைக்கின்றேன். அதன்படி கீழேயுள்ள படத்தைப் பார்க்கவும்.

Inline image 1



ஆறுஐந்து யோசனை = 30 யோசனை = 105 மைல் (அண்ணளவாக)
1 யோசனை = 4 காதம் = 3.5 மைல் = 5.6 கி.மீ

1 யோசனை =  4  காதம் என்பது பல்வேறிடங்களில் குறிப்பிடப்படிருக்கின்றது.

அதன்படி 1 காதம் என்பது 0.875 மைல் = 1.4 கி.மீ


யோசனை என்பது 9 மைல் என இந்தியாவில் பல காலமாக நிலவுகிறது.
வான்மீகத்தில்:

அர்த்த சாஸ்திரத்தில் (கௌடில்யர் - சோழிய பிராமணர் என ஜைந நிகண்டு சொல்கிறது. மௌரிய அரசவையில் சாணக்ய நீதி).

பிரின்ஸெப் - அசோகன் பிராமி முதலில் படிக்க வழிகண்டவர்:

...
இதுபோல் எண்ணற்ற சான்றுகளால் யோஜனை > யோசனை/ஓசனை அளவு தெரிகிறது.

----------------

சிரமண சமயங்கள் இரண்டிலும் உயர்வுநவிற்சி உண்டு. நாலு காதம் = ஒரு யோஜனை என்பது இதனால். காதம் = ~10 மைல் என்றால் யோஜனை = ~40 மைல் ஆகிறது.

மேலும், மணிமேகலை ஒரு கற்பனைக் காவியம். மணிபல்லவம் என்பது கற்பனையூர். அதன் அளவை இன்றைய யாழ்ப்பாணம் பக்கம் வைத்து
காதம், யோசனை கணக்கிட முடியாது. பிழையாகிவிடும். உ-ம்: காதம் = 0.8 மைல். 

புகாருக்கு தெற்கே ~300 மைல் என்கிறார் மணிபல்லவம் இருக்கும் இடத்தை. இது கற்பனையான இடம் என்பது இன்றைய நிலவியல் காட்டுகிறது.

காவதமோ (> காதமோ), யோஜனையோ 0.8 மைல் அல்ல. மணிபல்லவம் 300 மைல் புகாருக்கு தெற்கு என்கிறார் சாத்தனார்.

வாழ்க வளமுடன்,
நா. கணேசன்
 
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/k2vENrVBilc/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.

Mukunthan Pathmanesan

unread,
Sep 8, 2016, 4:54:53 AM9/8/16
to mint...@googlegroups.com
​ஆரியபட்டாவின் புவிவிட்டம் : 1050 யோசனை  - 7918 மைல் . அதன்படி  1 யோசனை 7.55 மைல். யோசனை என்பது இவ்வளவு தூரம் என்று குறிப்பிட சரியான அளவுகள் இல்லை என நினைக்கிறேன்.

மணிபல்லவம் என்பது முழு இலங்கையையும் குறிக்குமோ தெரியவில்லை. பார்க்கவேண்டும்.

2016-08-31 19:35 GMT+05:30 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>:
காவதம் என்பதற்கு எனது விளக்கம் இதோ கீழே.

கவந்தம் என்றால் மரத்தின் தண்டுப்பகுதி எனவும் பொருளுண்டு.

கவந்தம் kavantam

, n. < kabandha. 1. Headless body; தலையற்ற உடல். கவந்த மெங்கணு மாடவும் (சீவக. 2310). 2. Stump of a tree; தலை தறிந்த மரம். Loc. 3. Oil-press; செக்கு. (பிங்.) 4. Demon; பேய். (பிங்.) 5. Water; நீர். கவந்த மலைந்தனவே (பாரத. பதினாறாம். 58).

அவ்வகையில்,

ஒரு குறிப்பிட்ட தூரத்தினைக் குறிக்க தற்போது வழியெங்கும் மைல்கல் வைத்திருப்பதைப்போல, அக் காலத்தில்
தூரத்தைக் குறிக்க, மரத்தின் தண்டுப் பகுதியினை நட்டு வைத்திருக்கலாம் அல்லது அந்த இடத்தில் வளர்ந்து இருக்கும் ஒரு மரத்தின் மேல்பகுதியினை மட்டும் வெட்டி அதன் தண்டுப்பகுதியில் குறிசெய்து வைத்திருக்லாம். இந்தக் கவந்தமே கவதம் ஆகி காவதம் என்று ஆகியிருக்கும் எ்ன்று நினைக்கிறேன். 


நீங்கள் கூறுவது கிட்டத்தட்ட இங்கே பொருந்துகின்றது  சரவணன் ஐயா.
 
The Cosmology of the Bhagavata Purana: Mysteries of the Sacred Universe
By Richard L. Thompson

Strabo cites Megasthenes as saying that along the royal road to the Indian capital of Palibothra (thought to be modern Patna), pillars were set up every 10 stadia
Inline image 1
https://books.google.lk/books?id=3TZmDSr-1msC&lpg=PA111&ots=2KGQr2eOL5&dq=Stecchini%20gives%20400%20cubits%20per%20stadium%2C%20and%20this%20implies%2016%2C000%20cubits%20per%20yojana.&pg=PA111#v=onepage&q=yojana&f=false

இப்புத்தகத்தில்  யோசனை என்பது நிலவரைக்கோட்டின் பாகையுடன் சம்பந்தப்பட்டது எனக் கூறுகின்றது. மற்றும் ஆகக்குறைந்தது இரண்டு விதமான யோசனை அளவுகள் இருந்தன எனவும் கூறுகின்றது.

 Inline image 2




Inline image 3


 


சிறிய யோசனை = 4 கலை
யோசனை = 7.5 கலை

இதுபோல வேறு அளவுகளும் இருந்திருக்கலாம்.


அப்புத்தகத்திலிருந்தவை கீழே:

An encyclopedia article states that in early times length was defined by the breadth of the palm or hand, and the length from the elbow to the tip of the middle finger (the cubit). The article goes on to say, "Such standards were both changeable and perishable, and only within modern times have definite unchanging standards of measurement been adopted." (Microsoft Encarta)

The Middle Ages certainly saw many conflicting and poorly defined standards of weights and measures. But exact standards of measurement are not solely a modern invention.

Consider this example. In tenth-century England, King Athelstan decreed that the king's girth, in which the king's peace is in force, should extend from the royal residence for a distance of 3 miles, 3 furlongs, 9 acres, 9 feet, 9 palms, and 9 barleycorns. This sounds quaint. But it defines a circle with a diameter of 36,500 feet - almost exactly 1/10 of a degree of latitude in southern England.

Measuring with Latitude

To define a unit of length exactly, it is natural to use latitude as a standard, because latitude derives from the size of the earth, a constant that can be measured astronomically. So if a fire or invasion destroys the standard measuring rod stored in some government building, astronomical readings can be used to restore the lost standard. Of course, it seems unlikely that accurate astronomical measurements were being made in England in the days of King Athelstan. But if we look into the history of weights and measures, we find that distances were gauged in terms of latitude in ancient times, and medieval societies inherited many exact standards of measurement. These included volumes defined as length cubed and weights defined by filling such a volume with water.

The Greek astronomer Eratosthenes is usually credited with being the first to measure the size of the earth by observing latitudes (see Figure 1). He is said to have noted that the sun, when directly overhead at Syene at the Tropic of Cancer, casts a shadow of 7.2 degrees at Alexandria. Knowing the distance between Syene and Alexandria, he could compute the length of a degree of latitude and estimate the circumference of the earth.

But there is reason to believe that the size of the earth was known long before Eratosthenes. The Italian scholar Livio Stecchini has given extensive evidence that the ancient Egyptians laid out their country using latitude and longitude. He argues that they had accurate knowledge of the dimensions of the earth and that such knowledge was inherent in the design of the great pyramid at Giza. Since the great pyramid dates to about 2500 B.C., this implies that the earth was measured scientifically at least that long ago.

Defining the Yojana

Turning to India, we find a unit of distance, called the yojana, that at first glance seems as ill defined as the medieval English furlong or foot. The yojana is defined to be either 16,000 or 32,000 hastas, where a hasta, or cubit, is 24 angulas, or fingers. That there were at least two sizes for the yojana is upheld by the writings of classical Indian astronomers. The fifth-century astronomer Aryabhata used a yojana of about 8 miles, and the astronomy text Surya-siddhanta a yojana of roughly 5 miles.

The first hint of the ancient history of the yojana comes from Strabo, who describes the experiences of Megasthenes, a Greek ambassador to India in the period following Alexander the Great. Strabo cites Megasthenes as saying that along the royal road to the Indian capital of Palibothra (thought to be modern Patna), pillars were set up every 10 stadia (see Figure 2). The British scholar Alexander Cunningham argues that the pillars marked an interval of one krosa. Since there are traditionally 4 krosas per yojana, this implies 40 stadia per yojana.Stecchini gives 400 cubits per stadium, and this implies 16,000 cubits per yojana.

Since the smaller of the two definitions for the yojana assigns it 16,000 hastas, we can tentatively identify the hasta, or Indian cubit, with the Greek cubit. This unit is well known, and it enables us to compute the length of the yojana. The Greek cubit is 462.42 millimeters. This gives us a small yojana of about 4.6 miles, in rough agreement with texts such as the Surya-siddhanta.

Stecchini points out that the stadium was defined as 1/600 of a degree of latitude. This would mean that there are 15 small yojanas per degree. Likewise, there are 60 krosas per degree, or 1 krosa per minute.

Here we must make a technical observation about latitudes. Consider the earth to be a sphere, rotating on a line through the north and south poles called the polar axis. The latitude of a person facing north at some point in the northern hemisphere is the angle from his horizon up to the polar axis (see Figure 3). That angle is 0 degrees at the equator and grows to 90 degrees at the North Pole. The length of a degree of latitude is the distance a person would have to travel north for his latitude to increase by 1 degree. On a perfect sphere, this distance would be the same at all latitudes. But the earth is slightly flat at the poles and bulges at the equator. This makes for a degree of latitude slightly smaller at the equator than further north (see Figure 4).

Stecchini noted that the Greek stadium is 1/600 of a degree of latitude at Mycenae in Greece, and he argued that it was deliberately defined this way in ancient times. I propose that to define the yojana in India the degree of latitude at the equator was used. This means that the hasta should be 460.7 millimeters instead of 462.4 millimeters (and the yojana would still be about 4.6 miles). I shall point out below why this fine distinction is important.

At first glance, the yojana of 32,000 hastas should be twice as long as this, or about 9.2 miles. But there is reason to think that these two yojanas use different standards for the hasta (see Figures 5 and 6).

Hiuen Thsang, a Buddhist pilgrim who visited India in the seventh century, wrote of yojanas in terms of a Chinese unit of measure called the li. He reported that a yojana consisted of 40 li according to Indian tradition but the measure in customary use equaled 30 li and the measure given in sacred texts was only 16. The li has taken on many values during China's history. But using values for the Thang dynasty, when Hiuen Thsang lived, we can compute that the yojana of 16 li matches the small yojana of 4.6 miles.

Could the yojana of 30 li match the larger yojana of 32,000 hastas? If it does, then the larger yojana has to use a slightly smaller hasta, 30/32 as long as the hasta in the shorter yojana. Multiplying our hasta of 460.7 millimeters by 30/32, we get a smaller hasta of 431.9 millimeters. The larger yojana of 32,000 hastas then comes to 8.59 miles. At the equator, that is 1/8 of a degree of latitude.

In an investigation to be reported in a later article, I found that the geocentric orbits of the planets Mercury, Venus, Mars, Jupiter, and Saturn align closely with the dimensions of dvipas in Bhumandala. Bhumandala and dvipas are features of cosmic geography defined in the Fifth Canto of the Srimad-Bhagavatam. To align planetary orbits with dvipas we need to be able to convert the yojanas used in the Bhagavatam into the miles or kilometers of modern astronomy. I found that the alignment of orbits and dvipas works well if we assume about 8-1/8 miles per yojana.

To compare orbits with the structure of Bhumandala, I used modern ephemeris programs for orbital calculations. I was most interested in the epoch of about 3000 B.C., the traditional time of Krishna's manifest pastimes on earth, as described in the Bhagavatam. It turns out that at this epoch the planetary orbits align closely with dvipas in Bhumandala at a sharply defined value of 8.575 miles per yojana. This is very close to the figure of 8.59 miles based on the hasta of 432 millimeters. So the value of the yojana we get by historical research is confirmed by completely independent calculations having to do with planetary orbits and the astronomy of the Bhagavatam.

Familiar Numbers

As explained above, we get the larger yojana of 32,000 hastas (and 1/8 of a degree of latitude) by using a hasta of 431.9 millimeters. This can be rounded off to 432, a familiar number in Vedic literature. (For example, 432,000 is the number of years in Kali-yuga, the current age.) It turns out that this familiar number may not be simply coincidental.

First of all, the meter itself derives from a measurement of latitude. The meter (one thousand millimeters) was originally defined in 1791 as 1 ten-millionth of the distance from the equator to the north pole through the meridian of Paris. That distance has been remeasured since then, but the change amounts to a tiny fraction of a percent.

So accepting for the larger yojana a hasta of 432 millimeters, we find that this hasta comes very close to 108 ten-billionths of the circumference of the earth through the poles (see Figure 7). (This is because 432 = 4 x 108 and there are 4 quadrants from equator to pole in the circumference.)

Another 108 comes up if we consider the mean diameter of the earth, 7917.5 miles, or 1,728.5 “small yojanas.” This is close to 1728, or 16 x 108. (Recall the 1,728,000 years of Satya-yuga, the first in the cycle of the four ages.)

These observations suggest a simple experiment. Try setting the mean diameter of the earth to exactly 1,728 small yojanas of 16,000 hastas. Suppose that 30/32 of a hasta gives a smaller hasta exactly 108 ten-billionths of the circumference of the earth through the poles. If we multiply it all out, we find that the ratio between circumference and mean diameter comes to 3.13967.

This ratio expresses the degree of polar flattening of the earth (see Figure 8). (If the earth were a perfect sphere, the number would be pi—the ratio of the circumference of a circle to its diameter.) As it turns out, 3.13967 is within 0.006% of the actual ratio, as calculated using modern data. That this calculation works out so well indicates strongly that we are dealing with design rather than coincidence.

In summary, simple arguments from the testimony of Megasthenes and Hiuen Thsang enable us to reconstruct two closely related yojana values. Both are precisely defined as fractions of a degree of latitude at the equator. Both relate to the earth by multiples of 108 (namely 432 and 1728), and this relationship gives us a very accurate estimate of the polar flattening of the earth. Also, the length of the larger yojana is confirmed independently by an investigation comparing modern astronomy with the cosmology of the Bhagavatam.

The Great Pyramid

Let us return briefly to our replacement of the Greek cubit with a slightly smaller unit linked to a degree of latitude at the equator. All the calculations above would go through if we used the Greek cubit directly and did not make this substitution. But the errors would be larger. So I prefer to match the two yojana lengths to the equator rather than to Greece.

Curiously, we can find support for this in the design of the great pyramid of Egypt (see Figure 9). In 1925 an engineer named J. H. Cole made an accurate survey of the great pyramid using up-to-date instruments. He found that twice the perimeter is 1,842.91 meters. For comparison, a minute of latitude at the equator—or 1 krosa of the small yojana—is 1,842.93 meters. In other words, the perimeter of the great pyramid is almost exactly 1 krosa. Likewise, we find that the hasta of the small yojana goes almost exactly 500 times into each of the sides of the pyramid.

The Greek cubit and stadium, however, fit the pyramid less closely. (There is a 0.4% error.) So it would seem that the great pyramid was designed using units linked to the degree of latitude at the equator.

There is a further astronomical support for the length of the larger yojana. If we divide an up-to-date value for the distance from the earth to the sun by this length, the result is 10,821.6 thousand yojanas. This figure is close to 10,800, another multiple of the familiar 108. In a later article, I will show that this distance also fits naturally into the system of dvipas in Bhumandala, and I will also give many examples of 108 in astronomy.
 


 

N. Ganesan

unread,
Sep 8, 2016, 9:10:17 AM9/8/16
to மின்தமிழ்


On Thursday, September 8, 2016 at 1:54:53 AM UTC-7, mukunthan wrote:
இதுபோல வேறு அளவுகளும் இருந்திருக்கலாம்.


அப்புத்தகத்திலிருந்தவை கீழே:

இதெல்லாம் ஹரே கிருஷ்ணா கூட்டத்தின் ஸயன்ஸ் :) :)

-----------------

ஹரே கிருஷ்ணா இயக்கத்தை ஆரம்பித்தவர்: ஸ்ரீமத் ஸ்வாமி பக்திவேதாந்த பிரபுபாதர்.
அவர் பாகவதபுராணத்தைப் பரப்பினார். ஸ்ரீமத் பாகவதம் சம்ஸ்கிருத பக்தி நூல்களில் தலையாயது.
ஆழ்வார்களின் பக்தியை திருவரங்கத்தில் எழுதிய மாபெரும் இலக்கியம்.

ஸ்வாமி பிரபுபாதர் எல்லோரும் அறிந்த யோஜனை = ~ 9 மைல் என்றுதான் விளக்கினார்.
1 குரோசம் = 2.25 மைல் எனில், 1 யோஜனை = 9 மைல். அவர் ~2 மைல் கோசம்/க்ரோசம் எனச் சொன்னார்.
அர்த்த சாஸ்திரம், திருப்புகழ், நளவெண்பா, நைடதம், பாரதியார், ... போல.

பாகவத புராண சுலோகம் - அதில் யோஜனை = ~ 8 மைல் என்கிறார்.


சரியாக, அர்த்த சாஸ்திரம் (ப்ரின்செப், கானிங்காம் 200+ ஆண்டுமுன்பே யோஜனை = 9.09 மைல் என்றனர்.)
தமிழ் நூல்களும் அதனை உறுதி செய்கின்றன.

கந்தபுராணம் ஒரு யோஜனை = 18 மைல் என்கிறது. அதாவது, 9 X 2 மைல்.
அதன் படி பார்த்தால், தணிகைப் புராணம், சிவஞான மாபாடியம் இவற்றில்
1 யோசனை (= 1 காதம்) = 18.2 மைல் வருகிறது. அதாவது, 1 குரோசம் = 18.2/4 மைல் = ~ 4.5 மைல்கள்.

இத்தத்துவங்களின் அளவு யோசனை என்ற கணக்கில் கூறப்படும். சாளரத்தில் தோன்றும் ஞாயிற்றின் கதிரின் அதிநுட்பமாய்த் தோன்றும் நுண்ணிய துகள் அணு எனப்படும்.

	8	அணு		-	திரசரேணு
	8	திரசரேணு	-	இலீக்கை
	8	இலீக்கை		-	யூகை
	8	யூகை		-	இயவை நெல்லு
	8	இயவை நெல்லு	-	அங்குலம்
	24	அங்குலம்	-	முழம்
	4	முழம்		-	வில்லு
	2	வில்லு		-	தண்டம் 8 (முழம்)
	2000	தண்டம் 		-	குரோசம்
	4 குரோசம்		-	யோசனை 64,000 (முழம்)

மேற்கண்ட கணக்கில் ஒரு யோசனை என்பது 18. 2160 மைல்கள் அல்லது 29.09 கிலோ மீட்டர் ஆகும். 

(இது மாதவ சிவஞான யோகிகள் சம்ஸ்கிருதத்தில் இருந்து காட்டும் கணக்கு.)


இதனை, கந்தபுராணச் செய்யுள் கொண்டு காட்டலாம்:

அங்குலம் அறு நான்கு எய்தின் அது கரம் கரம் ஓர்  நான்கு 
தங்குதல் தனு என்று அகும் தனு இரண்டு அது ஓர்  தண்டம் 
இங்கு உறு தண்டம் ஆன இராயிரம் குரோசத்து  எல்லை 
பங்கம் இல் குரோசம் நான்கு ஓர் யோசனைப் பாலது  ஆமே. 

அலெக்சாண்டர் கானிங்காம் கொடுக்கும் தென்னிந்தியாவின் காதம் ~16 மைல் என்பதுடன் இந்தப் ~18 மைல் (=1 யோசனை) பொருந்துகிறது.
ரைஸ், புக்கானன், ... 1 காதம்/காவதம் ~14மைல் என்பர்.

நா. கணேசன்

iraamaki

unread,
Sep 8, 2016, 9:47:21 AM9/8/16
to mint...@googlegroups.com
பரவாயில்லையே! அருத்தசாற்றம் படிங்கன்னு சொன்னவுடனே, நாசாக்காரர் நல்ல பிள்ளையாப் படிச்சுட்டு, அதை விடாம 2 நாட்களா அருத்தசாற்றத்தே  தன் மடல்கள்லே எடுத்துக் கொடுத்துக்கிட்டே இருக்கார்.  கூடவே “மீசையிலே மண் ஒட்டலே”ங்குற பாவனை வேறே தென்படுது. என்ன செய்யுறது? அது இயற்கை தான்.  பார்த்து நடந்துக்குங்க.
 
இப்ப நடந்தது ஒரு முன்னேற்றம் தான். அடுத்த முன்னேற்றம் வரணும்னா, ”அவர் சொன்னார், இவர் சொன்னார்”னு நொய்/நொய்னு ”quote” குடுக்குறதை விட்டுட்டு தேர்ந்த பொறியாளர் மாதிரி யோசிக்கணும். அப்பத்தான் குழப்பம் குறையும். mensuration consistency ன்னு ஒண்ணுருக்கு. தெரியும் தானே? அங்குலம், அடி, சாண், முழம், எல்லாத்தையும் நீங்க கொடுத்திருக்கிற வாய்பாட்டை வச்சுப் பெருக்கிப் பாருங்க. ஒரு குரோசம்கிறது 2  1/4  மைலுக்குப் பக்கத்திலே சட்டுன்னு வந்து உக்கார்ந்துரும். அப்படியே  சங்கதக் குரோசமும் தமிழ்க் காதமும் ஒரே கருத்தைக் குறிக்குதுன்னு புரிஞ்சுதுன்னா, அடுத்து மேலும் நகரலாம்.  அதை விட்டுட்டு, மீண்டும் உச்சாணிக் கிளையிலே ஏறிக்கிட்டு, “வாழைப்பழக் கதை” படிச்சா என்னசொல்றது? வேதாளம் முருங்கமரத்துலே  ஏறின கதை தான்.  எப்படி வசதி? இல்லை, அப்படித்தான் அடம்பிடிப்பேன்னு சொல்லப்போறீங்களா?
 
When a theory mismatches facts, a scientist/engineer would throw his theory out and not the facts. He will try for a new theory. Facts are not easily disposable.
 
”தப்புப் பண்ணிட்டேன்”னு ஒத்துக்குறதுலெ குறையேயில்லைங்க. அப்படிச்செய்ஞ்சா, எல்லார் மதிப்புலேயும் உசந்து எங்கேயோ போயிடுவீங்க.
 
செய்வீங்களா?
 
இராம.கி.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Sep 8, 2016, 10:01:35 AM9/8/16
to மின்தமிழ்
அன்பின் இராமகி,

யோஜனை = 9 மைல்
என்று தானே எழுதியிருக்கிறார்கள். இதில் என்ன தவறு கண்டுபிடிச்சிங்க?

யூனிகோட் வேலை செய்யாது என்று எழுதிட்டு இருந்தீங்க. இப்ப காணம்.

சாசிரம்/சாயிரம் > ஆயிரம் என மொழியியல் அறிஞர் எழுதுவதை மாற்றியாச்சா?

நா. கணேசன்





To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

N. Ganesan

unread,
Sep 8, 2016, 10:03:14 AM9/8/16
to மின்தமிழ்


On Thursday, September 8, 2016 at 6:47:21 AM UTC-7, இராம.கி wrote:
பரவாயில்லையே! அருத்தசாற்றம் படிங்கன்னு சொன்னவுடனே

அருத்தசாற்றம் என்றால் என்ன??

நா. கணேசன்
 

N. Ganesan

unread,
Sep 8, 2016, 10:11:52 AM9/8/16
to மின்தமிழ், vall...@googlegroups.com
 மணிபல்லவம் என்னும் கற்பனை இடத்தைச் சொல்லும் மணிமேகலையை வைத்து யோஜனை (> ஓசனை) கணித்தல்
பாகவத புராணம், வேத இலக்கியம் வைத்து சூரியன் உயரமா, சந்திரன் உயரமா பூமியில் இருந்து என்று முடிவு கட்டுவதற்கு
ஒப்பாகிவிடும்.

“ஹரே கிருஷ்ணா” ஸயன்ஸ் பாருங்கள்:

Apr 11, 2012 — CANADA (SUN) — Excerpt from the book 'Vedic Cosmography and Astronomy' by Sadaputa dasa (Richard L. Thompson ).

Q: The Vedic literature says the moon is higher than the sun. How can this be?

A: In Chapter 22 of the Fifth Canto, the heights of the planets above the earth are given, and it is stated that the moon is 100,000 yojanas above the rays of the sun. In this chapter, the word "above" means "above the plane of Bhu-mandala." It does not refer to distance measured radially from the surface of the earth globe. In Section 4.b we show that if the plane of Bhu-mandala corresponds to the plane of the ecliptic, then it indeed makes sense to say that the moon is higher than the sun relative to Bhu-mandala. This does not mean that the moon is farther from the earth globe than the sun.

For example, if point A is in a plane, B is 1,000 miles above the plane, and C is 2,000 miles above the plane, we cannot necessarily conclude that C is further from A than B is.

Q: In SB 8.10.38p, Shrila Prabhupada says, "The sun is supposed to be 93,000,000 miles above the surface of the earth, and from the Shrimad-Bhagavatamwe understand that the moon is 1,600,000 miles above the sun. Therefore the distance between the earth and the moon would be about 95,000,000 miles." Doesn't this plainly say that the moon is farther from the earth than the sun?

A: In the summary at the end of Chapter 23 of the Fifth Canto Shrila Prabhupada says, "The distance from the sun to the earth is 100,000 yojanas." At 8 miles per yojana, this comes to 800,000 miles. We suggest that when Shrila Prabhupada cites the modern Western earth-sun distance of 93,000,000 miles, he is simply making the point that if you put together theBhagavatam and modern astronomy you get a contradictory picture. His conclusion is that one should simply accept the Vedic version, and he was not interested in personally delving into astronomical arguments in detail.

Q: What is your justification for going into these arguments in detail?

A: Shrila Prabhupada ordered some of his disciples to do this for the sake of preaching. In a letter to Svarupa Damodara dasa dated April 27, 1976, Shrila Prabhupada said, "Now our Ph.D.'s must collaborate and study the 5th Canto to make a model for building the Vedic Planetarium.... So now all you Ph.D.'s must carefully study the details of the 5th Canto and make a working model of the universe. If we can explain the passing seasons, eclipses, phases of the moon, passing of day and night, etc., then it will be very powerful propaganda." In this regard, he specifically mentioned Svarupa Damodara dasa, Sadaputa dasa, and Madhava dasa in a letter to Dr. Wolf-Rottkay dated October 14, 1976.

Q: If the distance from the earth to the sun is 800,000 miles, how can this be reconciled with modern astronomy?

A: This distance is relative to the plane of Bhu-mandala. The distance from the center of Jambudvipa to the orbit of the sun around Manasottara Mountain is 15,750,000 yojanasaccording to the dimensions given in the Fifth Canto. This distance lies in the plane of Bhu-mandala and comes to 126,000,000 miles at 8 miles per yojana and 78,750,000 miles at 5 miles per yojana. Since values for the yojana ranging from 5 to 8 miles have been used in India, this distance is compatible with the modern earth-sun distance of 93,000,000 miles.

N. Ganesan

unread,
Sep 8, 2016, 10:22:40 AM9/8/16
to மின்தமிழ், vallamai
சமண நூல்கள் லோகவிபாகம் (திருப்பாதிரிப்புலியூர்), ஜம்புத்வீப-ப்ரஜ்நப்தி, ... போன்ற நூல்களில் யோசனை = 9 மைல் (14 கிமீ)
என 2000 ஆண்டுகளாய் உள்ளது. Square root எப்படி இந்தியாவில் பயனாகியது? https://www.carma.newcastle.edu.au/jon/india-sqrt.pdf

படிக்க வேண்டிய கட்டுரை. அதில் யோஜனை எத்தனை தூரம் என்பதும் தரப்பட்டுள்ளது. தமிழ், சம்ஸ்கிருத நூல்கல்
போலவே சமண கனித நூல்களும், யோசனை = 9 மைல்.

நா. கணேசன்
india-sqrt.pdf

iraamaki

unread,
Sep 8, 2016, 8:31:50 PM9/8/16
to mint...@googlegroups.com
முருங்கைமரத்தில் ஏறுவதென முடிவுசெய்துவிட்டீர்கள். அப்புறம் உங்களை மீளமீள மரத்திலிருந்து இறக்குவதிற் பயனில்லை. நீங்களே யோஜனை = 9 மைல் என்கிறீர்கள். நீங்களே யோஜனை = 4 காதம் என்கிறீர்கள். அப்புறம் இன்னொருபக்கம் ஏதோவொரு நிரவல்கணக்குப் போட்டுக் 1 காதம் = 12 மைல் என்று சொல்கிறீர்கள். I am reminded of a statistician who drowned in a  lake  of 1 metre average depth. எதற்குத்தான் நிரவலெடுப்பதென்ற விவரங்கிடையாதா? அதோடு ஏன் நிறுத்திவிட்டீர்கள்?  historical relevancy – யே கிடையாதா? இன்னும் யாராவதொருவரின் எடுகோளைக் கொண்டுவந்து போட்டு, 1 காதம் = 100 மைல் என்று ஒரு நிரவலைச் செய்யலாமே?  இன்னும் நன்றாக இருக்கும்.  அதன்மூலம் கவுந்தியைக் கருநாடகத்திற்கென்ன,  மகாவீரர் பிறந்த வைசாலிக்கே கொண்டுபோய்ச் செயினநெறிக்குச் சேவைசெய்யலாமே?  தமிழ்நாட்டில் சமணமே கிடையாது பாருங்கள்? கவுந்தியை கருநாடகத்திற்குத் தூக்கினாற்றான் சிலம்பை இன்னுங் கீழே இறக்கமுடியும் இல்லையா?  செய்யுங்கள்.  இங்கே எல்லோருங் காத்துக்கொண்டிருக்கிறார். புதுப்புதுத் தேற்றங்களைக் கொண்டுவந்து கொட்டுங்கள். பிடித்துக்கொள்வார்.
 
உங்களிடம் போய் mensuration consistency பற்றிப் பேசுகிறேனே? ஒரு பொறியாளரிடம் பேசுவதாய் நான் நினைத்தது தப்புத்தான். உங்கள்பாட்டுக்கு அடித்து ஆடுங்கள், கணேசன்!
 
பெருமாளிட்ட விதி. என்ன செய்ய?
 
அன்புடன்,
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Sep 8, 2016, 9:01:54 PM9/8/16
to மின்தமிழ்
2016-09-08 17:31 GMT-07:00 iraamaki <p...@giasmd01.vsnl.net.in>:

உங்களிடம் போய் mensuration consistency பற்றிப் பேசுகிறேனே? ஒரு பொறியாளரிடம் பேசுவதாய் நான் நினைத்தது தப்புத்தான். உங்கள்பாட்டுக்கு அடித்து ஆடுங்கள், கணேசன்!

Wow!

There is consistency: Gaavada is ~ 12 miles, see the references. And, Tiruppukazh.

Yojana, in most sources, is 9.06 miles.

N. Ganesan

unread,
Sep 8, 2016, 9:42:28 PM9/8/16
to மின்தமிழ், SUBBAIER RAMASAMI, SUBBAIER RAMASAMI, Santhavasantham, vallamai, housto...@googlegroups.com, panb...@googlegroups.com, pira...@googlegroups.com


On Wednesday, July 13, 2016 at 6:11:07 AM UTC-7, elandhai wrote:
சாண் முழம் கணக்குப்படி பார்த்தால்      சாண் என்பது 9 அங்குலம்

ஒரு முழம் ஒன்றரை அடி.  ஒரு கோல் - 6 அடி    கூப்பிடு  3000 அடி     ஒரு காதம்   12000 அடி . அதாவது 2.273 மைல். . காதம் என்பது கிட்டத்தட்ட 10 மைல் எனக்கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு காலத்தில்,   நிமிடத்தை விநாடி என்றும்  செகண்டை நொடி என்றும் சொல்லியிருக்கிறார்கள்.


பாரதியார் 3-4- 1909ல் இந்தியா பத்திரிகையில் எழுதியுள்ள திசைகள் என்ற கவிதையில்


ஒரு நொடிப்போதில் ஓர் பத்து
ஒன்பதாயிரமாம் காதம்
வருதிற லுடைத்தாஞ் சோதிக்
 கதிரவன் வகுப்பானான்றோர்
கருதவும் அரிய தம்மா!

என்கிறார். அதாவது  ஒரு நொடியில் ஒளி செல்லும் தூரம் 19000 காதம் என்கிறார். அதாவது 1,90,000 மைல்.   கிட்டத்தட்டச் சரிதான். ஒளியின் வேகம் 1,86,000 மைல்.

சூரியனிடமிருந்து பூமிக்கு ஒளிவர

கதிருடை விரைவும் அஃது
பருதியின் நின்றோர் எட்டு
விநாடியிற் பரவு மீங்கே” என்கிறார். அதாவது கிட்டத்தட்ட 8 நிமிடங்கள் என்பது அவரது கணக்கு. அதுவும் சரிதான். சரியான அளவு எட்டு நிமிடங்கள் 20 நொடிகள்.

காதம் என்பதைப் 10 மைல் என்று கொள்வதுதான் பொருத்தம் என நினைக்கிறேன்.  ஒரு காதத்திற்கு 6.5 கி மீ என்றும் இல்லை அதில் பாதி என்றும் சொல்பவர்கள் உண்டு. பலத்த ஆய்வு நடைபெற்றிருக்கிறது. ஆனால் முடிவுதான் எட்டவில்லை.

“ மண்டலத்தை அணுவணு வாக்கினால்
வருவதெத்தனை அத்தனை யோசனை
கொண்ட தூரம் அவற்றிடை வைத்தனை” என்கிறான் பாரதி.

ஒரு யோசனை என்றால் எவ்வளவு தொலைவு?

இலந்தை


யோஜனை Yoking என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையான சம்ஸ்கிருதச் சொல். காவதம் (Gaavada) என்பதும் எருதுகள் பூட்டுவதை (யோஜனம், Gau - எருதுகள்)க் குறிப்பதே. ஒருநாள் பிரயாணம் எவ்வளவு  தொலைவோ அவ்வளவைக் குறிப்பிடும் சொற்கள். 10 யோசனை (நைடதம்) = 10 காதம் (நளவெண்பா). 1 யோசனை = 1 காதம் என்பது பொதுவாக எடுக்கும் பொருள். சிரமண சமயங்கள் உயர்வுநவிற்சியுடையன. தீர்த்தங்கரர்கள் உயரம், போதிசத்துவர்கள் உயரம் எல்லாம் கற்பனைக்கும் அதிகமான வடிவில் சொல்லப்படும் அச்சமயங்களில். சில சமயம் 4 காதம் = 1 யோசனை என்பது அம் மதங்களில். அப்படிப் பார்த்தால், 1 காதம் = 10 மைல் (சென்னைப் பேரகராதி, பாரதியார்) என்றால், அப்புறம் யோசனை 40 மைல் ஆகும்! வதன சரோருக எனத் தொடங்கும் திருப்புகழில் 1 காதம் = 12 மைல் என அருணகிரிநாதர் கொடுத்துள்ளார். ஏனெனில் வள்ளிமலை - திருத்தணி தூரம் நாம் நிச்சயிக்கமுடியும். அதேபோல், பூவணப் புராணமும் 1 காதம் = 12 மைல் என்றே காட்டுகிறது. கந்தபுராணம், சிவஞான மாபாடியம் 1 யோசனை = 18 மைல் என்கிற அளவைக் கொடுக்கிறது.

பாரதியார் ஒரு காதம் = ஒரு யோசனை என்று கொண்டுள்ளார். எவ்வாறு தெரிகிறது என்றால், நீங்கள் கொடுத்துள்ள பாரதி வாசகம் ரிக்வேதத்தின் 1.50 சுலோகத்தின் சாயண பாஷ்யத்து மொழிபெயர்ப்பு.
சாயணர் யோசனை என்ற இடத்தில் காதம் என்று பயன்படுத்துகிறார் பாரதியார்.

Sāyaṇa (c. 1315-1387) was a minister in the court of King Bukka I of the
Vijayanagar Empire in South India; he was also a great Vedic scholar who
wrote extensive commentaries on several ancient texts. In his commentary
on the fourth verse of the hymn 1.50 of the Rigveda on the sun, he says:

tathā ca smaryate yojanānāṃ sahasre dve dve śate dve ca yojane
ekena nimiṣārdhena kramamāṇa namo 'stu ta iti

Thus it is remembered: [O Sun,] bow to you, you who traverse
2,202 yojanas in half a nimeṣa.

We have no knowledge that Sāyaṇa was an astronomer and he acknowledges
that he is only quoting from an old tradition, so we label this note as
"Sāyaṇa's astronomy" only in the sense of what was known by his time in
the fourteenth century.

Padmakar Vishnu Vartak in a recent book has argued that this statement
refers to the speed of light. He says, "One Yojana is equal to 9 miles,
110 yards = 9 1/16 miles = 9.0625, ...and according to Mahābhārata,Sānti
Parva, 231, half a nimeṣa equals 8/75 seconds. If calculated on this data the
velocity of light comes to 187,084.1 miles per second... Sir Monier Williams
gives one Yojana equal to 4 Krosha = 9 miles. Taking 1 Yojana = 9 miles,
the velocity comes to 186,413.22 miles per second. The well accepted popular
scientific figure is 186,300 miles per second."

பாரதியார் சாயண பாஷ்யம் படித்திருக்கிறார்.

நா. கணேசன்

ஒருமுறை சுபாஷ் காக் (கஷ்மீரி பண்டிதர், எலெக்ட்ரிகல் எஞ்சினீயர்) இங்கே மீனாட்சி கோயிலில் பேசச் செய்தோம்.

ஒரு யோசனை = ஒரு காதம் (= ~10 மைல்) நடந்த எருதுகள் இளைப்பாறுகின்றன.
நண்பர் சுப்பராமன் அழகிய ஓவியமும், வி. சிந்தாமணிப் பாடலும் தந்துள்ளார்:


தேமொழி

unread,
Sep 8, 2016, 10:21:53 PM9/8/16
to மின்தமிழ்


On Thursday, September 8, 2016 at 6:42:28 PM UTC-7, N. Ganesan wrote:


On Wednesday, July 13, 2016 at 6:11:07 AM UTC-7, elandhai wrote:
சாண் முழம் கணக்குப்படி பார்த்தால்      சாண் என்பது 9 அங்குலம்

ஒரு முழம் ஒன்றரை அடி.  ஒரு கோல் - 6 அடி    கூப்பிடு  3000 அடி     ஒரு காதம்   12000 அடி . அதாவது 2.273 மைல். . காதம் என்பது கிட்டத்தட்ட 10 மைல் எனக்கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு காலத்தில்,   நிமிடத்தை விநாடி என்றும்  செகண்டை நொடி என்றும் சொல்லியிருக்கிறார்கள்.


பாரதியார் 3-4- 1909ல் இந்தியா பத்திரிகையில் எழுதியுள்ள திசைகள் என்ற கவிதையில்


ஒரு நொடிப்போதில் ஓர் பத்து
ஒன்பதாயிரமாம் காதம்
வருதிற லுடைத்தாஞ் சோதிக்
 கதிரவன் வகுப்பானான்றோர்
கருதவும் அரிய தம்மா!

என்கிறார். அதாவது  ஒரு நொடியில் ஒளி செல்லும் தூரம் 19000 காதம் என்கிறார். அதாவது 1,90,000 மைல்.   கிட்டத்தட்டச் சரிதான். ஒளியின் வேகம் 1,86,000 மைல்.

சூரியனிடமிருந்து பூமிக்கு ஒளிவர

கதிருடை விரைவும் அஃது
பருதியின் நின்றோர் எட்டு
விநாடியிற் பரவு மீங்கே” என்கிறார். அதாவது கிட்டத்தட்ட 8 நிமிடங்கள் என்பது அவரது கணக்கு. அதுவும் சரிதான். சரியான அளவு எட்டு நிமிடங்கள் 20 நொடிகள்.

காதம் என்பதைப் 10 மைல் என்று கொள்வதுதான் பொருத்தம் என நினைக்கிறேன்.  ஒரு காதத்திற்கு 6.5 கி மீ என்றும் இல்லை அதில் பாதி என்றும் சொல்பவர்கள் உண்டு. பலத்த ஆய்வு நடைபெற்றிருக்கிறது. ஆனால் முடிவுதான் எட்டவில்லை.

“ மண்டலத்தை அணுவணு வாக்கினால்
வருவதெத்தனை அத்தனை யோசனை
கொண்ட தூரம் அவற்றிடை வைத்தனை” என்கிறான் பாரதி.

ஒரு யோசனை என்றால் எவ்வளவு தொலைவு?

இலந்தை


யோஜனை Yoking என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையான சம்ஸ்கிருதச் சொல். காவதம் (Gaavada) என்பதும் எருதுகள் பூட்டுவதை (யோஜனம், Gau - எருதுகள்)க் குறிப்பதே. ஒருநாள் பிரயாணம் எவ்வளவு  தொலைவோ அவ்வளவைக் குறிப்பிடும் சொற்கள். 10 யோசனை (நைடதம்) = 10 காதம் (நளவெண்பா). 1 யோசனை = 1 காதம் என்பது பொதுவாக எடுக்கும் பொருள். சிரமண சமயங்கள் உயர்வுநவிற்சியுடையன.

சிரமண சமய சிலப்பதிகாரமும் ... 
திருச்சிக்கும் மதுரைக்கும் தொலைவு  30 காதம் எனவும், 
மலைக்கோட்டை குன்றை வடபெருங்கோடு எனவும்  உயர்வு நவிற்சியில் சொல்லியிருக்கவும்  வாய்ப்பிருக்கிறதே. 
It is loading more messages.
0 new messages