சார் நீங்க முஸ்லிமா?

292 views
Skip to first unread message

செல்வன்

unread,
Mar 29, 2017, 4:30:43 PM3/29/17
to செல்வன்

என் உடல் சார்ந்த குறைபாட்டை நான் கடந்துவிட்டேன். ஆனால், என் பிறப்பு சார்ந்த பெயருக்காக எனக்குக் கொடுக்கப்படும் தண்டனைகளை என்னால் கடக்க முடியவில்லை. வாடகைக்கு ஒரு வீடுதான் கேட்கிறேன். கிடைக்கவில்லை. என் போன்ற சமூகப் பொதுவெளியில் வசிக்கும் ஒருவனுக்கே இதுதான் நிலை என்றால், எந்தப் பின்புலமும் அற்ற வெறும் பெயராக மட்டுமே அறியப்படும் சாமானிய முஸ்லிம்களின் நிலை என்னவாக இருக்கும்? 

நான் பதினைந்து வருடங்களாகக் குடியிருந்த வீட்டை அதன் உரிமையாளர் விற்பதால் காலி செய்ய வேண்டிய கட்டாயம். உண்மையில், என் வாழ்வில் அழியாத நினைவுகளைக் கொண்ட வீடு இது. இந்த வீட்டில்தான் ஒருகாலத்தில் நடிகை வடிவுக்கரசி இருந்தார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதைப் பற்றிக்கூட ‘வடிவுக்கரசி இருந்த வீடு’ என்று ஒரு கவிதை எழுதியிருக்கிறேன். ஆனால், ‘மனுஷ்ய புத்திரன் இருந்த வீடு’ என்று யாரோ ஒரு வாசகன் சொல்ல இந்த வீடு இருக்கப்போவதில்லை. இரண்டு வருடங்களுக்குள் இங்கே ஒரு மூன்றடுக்கு ஃப்ளாட் வந்துவிடும். 

கடந்த இரண்டு மாதங்களாக வீடு தேடி அலைகிறேன். நான் வீடு பார்க்கப்போகிற எல்லா இடத்திலும் என்னை வீட்டு உரிமையாளர்களுக்கு நன்கு தெரிந்திருக்கிறது. ‘டி.வி.யில் உங்க நிகழ்ச்சின்னா விரும்பிப் பார்ப்போம்’ என்று அன்பாகச் சொல்லி காபி கொடுக்கிறார்கள். ஆனால், எல்லா இடங்களிலும் நான் புரிந்துகொள்ள முடியாத ஏதோ ஒரு காரணத்தால், எனக்கு வீடு மறுக்கப்படுகிறது. 

சார், நீங்க முஸ்லிமா? 

ஒரு வீட்டு உரிமையாளர் விளம்பரத்தில் கொடுத்திருந்ததைவிட இன்னொரு மடங்கு வாடகை சொன்னார். கேட்டால், “அது பிரின்டிங் மிஸ்டேக்” என்றார். என்னை நிராகரிக்க வேண்டும் என்பதே அவரது விருப்பம். பிறகு, அதே வாடகை குறிப்பிடப்பட்டு, அதே விளம்பரம் அடுத்த வாரமும் வந்திருந்தது. 

நான்கு நாளைக்கு முன்னர் வீடு பார்த்தேன். வீடு எனக்கு ஓரளவு பிடித்திருந்தது. வீட்டுத் தரகர் உரிமையாளரிடம் அந்த வீட்டை நான்தான் பார்த்திருக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். வீட்டு உரிமையாளருக்கு ஒரே மகிழ்ச்சியாம். ‘‘அவர் எழுத்தையெல்லாம் படித்திருக்கிறோம்.. அவர் எங்க வீட்டுக்குக் குடிவருவது எங்களுக்குத்தான் பெருமை..’’ என்று அவர் சொன்னதாகச் சொல்லிய வீட்டுத் தரகர் ‘‘நாளைக்கே போய் அட்வான்ஸ் கொடுத்துவிடுவோம்’’ என்றார். அவர் சொன்ன நாளில் வீட்டு உரிமையாளரைச் சந்திக்க நான் ஆயத்தமாகிக்கொண்டிருந்தபோது தொங்கிய முகத்துடன் தரகர் வந்தார், ‘‘சார், நீங்க முஸ்லிமா? உங்க நிஜப் பெயர் என்ன?’’ என்றார். 

நான் அவரை உற்றுப் பார்த்தேன் ‘‘இல்ல சார், வீட்டு ஓனர்கிட்ட நீங்க முஸ்லிம் என்று யாரோ சொல்லியிருக்காங்க..” என்று இழுத்தார்.‘‘ஏன், நான் அசைவம் என்பதால் கொடுக்க மாட்டார்களா?’’ என்று கேட்டேன். ‘‘அசைவம் எல்லாம் பிரச்சினை இல்லை.. நீங்க முஸ்லிம் என்பதுதான் பிரச்சினை’’ என்றார். 

நான் உடைந்துபோனேன். ஒருவகையில், அந்த வீட்டு உரிமையாளரைப் பாராட்ட வேண்டும். அவர் மற்றவர்களைப் போல மழுப்பாமல், நேரடியாக உண்மையான காரணத்தை நேர்மையாகக் கூறிவிட்டார். நான் எழுதிய இரண்டாயிரம் கவிதைகளை நினைத்துப்பார்த்தேன். மதச்சார்பின்மைக் காகவும் சமூக நீதிக்காகவும் நான் எழுதிய ஆயிரக்கணக்கான பக்கங்கள், பேசிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பொதுக் கூட்டங்கள் அனைத்தையும் நினைத்துப் பார்த்தேன். ஆயிரம் இருந்தென்ன? நான் இப்போது எதுவுமே இல்லை; வெறும் ஒரு முஸ்லிம்… அவ்வளவுதானே! 

ஒரு கணம், என் வாழ்க்கையில் நான் எதையெல்லாம் போராடிப் பெற்றேனோ அது அனைத்தும் என்னிடமிருந்து பறிக்கப்பட்ட உணர்வு. நான் இப்போது வெறுக்கப்படும் ஒரு பெயர், ஒரு அடையாளம் மட்டுமே. இரண்டு நாளைக்கு முன்புகூட, மதவாதத்தைப் பரப்புகிற கட்சிகளுக்குத் தமிழக மக்களிடம் எந்த இடமும் இல்லை என்று ஒரு தொலைக்காட்சியில் சவால் விட்டுவிட்டு வந்தேன். ஆனால், என் நம்பிக்கைகள் தோற்றுவிடுமோ என்று இன்று நான் அஞ்சுகிறேன். 

கடக்க முடியாத தண்டனை 

நான் என் சொந்தப் பெயரை ஒருபோதும் மறைத்ததில்லை. ‘ஹமீது’ என்றுதான் என்னைப் பல இடங்களில் சுஜாதா குறிப்பிட்டிருக்கிறார். முகநூலில் அந்தப் பெயரில்தான் எழுதுகிறேன். ஆனால், என்னை ‘மனுஷ்ய புத்திரன்’ என்கிற பொது அடையாளத்தில் மட்டும் அறிபவர்கள், என் சொந்தப் பெயரைக் கேட்டதும் அடையும் சங்கடம் என்னை மிகவும் அதிர்ச்சியடைய வைக்கிறது. இத்தனைக்கும் இஸ்லாமியப் பண்பாடு சார்ந்து ஒரு வாக்கியம்கூட என் கவிதைகளில் இல்லை. முகநூலில் என் அளவுக்கு மதவெறியர்களால் தாக்கப்பட்ட இன்னொரு எழுத்தாளரோ சமூகச் செயல் பாட்டாளரோ யாரும் இல்லை. இந்துத்துவா அடிப்படைவாதிகள் மட்டுமல்ல, இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் இந்தத் தாக்குதலைச் செய்திருக்கிறார்கள். 

மூன்று வயதில் எனக்கு நடக்க முடியாமல்போனது. என் உடல் சார்ந்த குறைபாட்டை நான் கடந்துவிட்டேன். ஆனால், என் பிறப்பு சார்ந்த பெயருக்காக எனக்குக் கொடுக்கப்படும் தண்டனைகளை என்னால் கடக்க முடியவில்லை. ஒரு எழுத்தாளனாக, ஒரு ஊடகவியலாளனாக, ஒரு பதிப்பாளனாக, ஒரு மிகப்பெரிய அரசியல் இயக்கத்தைச் சேர்ந்தவனாக மைய நீரோட்டத்தில் நான் எவ்வளவு கரைந்து நின்றபோதிலும் திடீரென ஒரு குரல் கேட்கிறது.. ‘‘வெளியே போ!’’ 

என்ன ஆனது பாரம்பரியம்? 

சென்னையில் பெரும் வெள்ளம் சூழ்ந்த போது, வீடுகளிலும் கோயில்களிலும் புகுந்த சாக்கடையைச் சுத்தப்படுத்திய இஸ்லாமியர்கள் பாராட்டப்பட்டார்கள். அந்த நல்லுணர்வுகள் சாக்கடைத் தண்ணீரைப் போல இவ்வளவு சீக்கிரம் வடிந்துவிட்டனவா என்று தோன்றியது. வட இந்தியாவில் இருப்பதுபோல தமிழகத் தில் இஸ்லாமியர்களும் இந்துக்களும் தனித் தனியான குடியிருப்புப் பகுதிகளைக் கொண்டிருப்பதில்லை. தமிழகத்துக்கு என்று தனிப் பாரம்பரியமும் நல்லுறவு நல்லுணர்வும் இருக்கிறது. ஆனால், இஸ்லாமியர்களுக்கு வீடு தரக் கூடாது என்ற மனோபாவம் இவ்வளவு ஆழமாக இங்கே எப்போது ஊடுருவியது? இல்லாமியர்கள் அசுத்தமானவர்கள், வன்முறை யாளர்கள், தேச விரோதிகள் என்ற பிரச்சாரம் சமூகத்தின் அடியாழம் வரை எப்போது ஆழமாகப் பரவியது? தெரியவில்லை! 

எனக்கு ஒரு பெயர் இருப்பதுதான் பிரச்சினையா அல்லது நான் இருப்பதே பிரச்சினையா என்று குழப்பமாக இருக்கிறது. இந்த மொழிக்காகவும் பண்பாட்டுக்காகவும் நான் செய்திருக்கும் வேலைகளுக்காக நான் எந்த பிரதியுபகாரமும் கேட்கவில்லை. வாடகைக்கு ஒரு வீடுதான் கேட்கிறேன். என் போன்ற சமூகப் பொதுவெளியில் வசிக்கும் ஒருவனுக்கே இதுதான் நிலை என்றால், எந்தப் பின்புலமும் அற்ற வெறும் பெயராக மட்டுமே அறியப்படும் சாமானிய முஸ்லிம்களின் நிலை என்னவாக இருக்கும்? தமிழ்ப் பொதுச்சமூகம் யோசிக்க வேண்டும். 

எனக்கு இங்கு இடமில்லையா என்று இதுவரை கேட்டுக்கொண்டிருந்த நான் இப்போது முதல் முறையாகக் கேட்கிறேன், ‘‘எங்களுக்கு இங்கு இடமில்லையா?’’ 

- மனுஷ்ய புத்திரன், 

கவிஞர், பதிப்பாளர், 

‘காந்தியுடன் இரவு விருந்திற்கு செல்கிறேன்’, ‘எதிர்க்குரல்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். 


--

Suba

unread,
Mar 29, 2017, 4:45:08 PM3/29/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram
2017-03-29 22:30 GMT+02:00 செல்வன் <hol...@gmail.com>:


நான் உடைந்துபோனேன். ஒருவகையில், அந்த வீட்டு உரிமையாளரைப் பாராட்ட வேண்டும். அவர் மற்றவர்களைப் போல மழுப்பாமல், நேரடியாக உண்மையான காரணத்தை நேர்மையாகக் கூறிவிட்டார். நான் எழுதிய இரண்டாயிரம் கவிதைகளை நினைத்துப்பார்த்தேன். மதச்சார்பின்மைக் காகவும் சமூக நீதிக்காகவும் நான் எழுதிய ஆயிரக்கணக்கான பக்கங்கள், பேசிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பொதுக் கூட்டங்கள் அனைத்தையும் நினைத்துப் பார்த்தேன். ஆயிரம் இருந்தென்ன? நான் இப்போது எதுவுமே இல்லை; வெறும் ஒரு முஸ்லிம்… அவ்வளவுதானே! 

ஒரு கணம், என் வாழ்க்கையில் நான் எதையெல்லாம் போராடிப் பெற்றேனோ அது அனைத்தும் என்னிடமிருந்து பறிக்கப்பட்ட உணர்வு. நான் இப்போது வெறுக்கப்படும் ஒரு பெயர், ஒரு அடையாளம் மட்டுமே. இரண்டு நாளைக்கு முன்புகூட, மதவாதத்தைப் பரப்புகிற கட்சிகளுக்குத் தமிழக மக்களிடம் எந்த இடமும் இல்லை என்று ஒரு தொலைக்காட்சியில் சவால் விட்டுவிட்டு வந்தேன். ஆனால், என் நம்பிக்கைகள் தோற்றுவிடுமோ என்று இன்று நான் அஞ்சுகிறேன். 

கடக்க முடியாத தண்டனை 

நான் என் சொந்தப் பெயரை ஒருபோதும் மறைத்ததில்லை. ‘ஹமீது’ என்றுதான் என்னைப் பல இடங்களில் சுஜாதா குறிப்பிட்டிருக்கிறார். முகநூலில் அந்தப் பெயரில்தான் எழுதுகிறேன். ஆனால், என்னை ‘மனுஷ்ய புத்திரன்’ என்கிற பொது அடையாளத்தில் மட்டும் அறிபவர்கள், என் சொந்தப் பெயரைக் கேட்டதும் அடையும் சங்கடம் என்னை மிகவும் அதிர்ச்சியடைய வைக்கிறது. இத்தனைக்கும் இஸ்லாமியப் பண்பாடு சார்ந்து ஒரு வாக்கியம்கூட என் கவிதைகளில் இல்லை. முகநூலில் என் அளவுக்கு மதவெறியர்களால் தாக்கப்பட்ட இன்னொரு எழுத்தாளரோ சமூகச் செயல் பாட்டாளரோ யாரும் இல்லை. இந்துத்துவா அடிப்படைவாதிகள் மட்டுமல்ல, இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் இந்தத் தாக்குதலைச் செய்திருக்கிறார்கள். 

மூன்று வயதில் எனக்கு நடக்க முடியாமல்போனது. என் உடல் சார்ந்த குறைபாட்டை நான் கடந்துவிட்டேன். ஆனால், என் பிறப்பு சார்ந்த பெயருக்காக எனக்குக் கொடுக்கப்படும் தண்டனைகளை என்னால் கடக்க முடியவில்லை. ஒரு எழுத்தாளனாக, ஒரு ஊடகவியலாளனாக, ஒரு பதிப்பாளனாக, ஒரு மிகப்பெரிய அரசியல் இயக்கத்தைச் சேர்ந்தவனாக மைய நீரோட்டத்தில் நான் எவ்வளவு கரைந்து நின்றபோதிலும் திடீரென ஒரு குரல் கேட்கிறது.. ‘‘வெளியே போ!’’ 

சமூகத்தை நினைக்கும் போது ​என்ன சொல்வதென்று தெரியாத ஒரு வேதனை மனதில் தோன்றுகின்றது.

சுபா


 

என்ன ஆனது பாரம்பரியம்? 

சென்னையில் பெரும் வெள்ளம் சூழ்ந்த போது, வீடுகளிலும் கோயில்களிலும் புகுந்த சாக்கடையைச் சுத்தப்படுத்திய இஸ்லாமியர்கள் பாராட்டப்பட்டார்கள். அந்த நல்லுணர்வுகள் சாக்கடைத் தண்ணீரைப் போல இவ்வளவு சீக்கிரம் வடிந்துவிட்டனவா என்று தோன்றியது. வட இந்தியாவில் இருப்பதுபோல தமிழகத் தில் இஸ்லாமியர்களும் இந்துக்களும் தனித் தனியான குடியிருப்புப் பகுதிகளைக் கொண்டிருப்பதில்லை. தமிழகத்துக்கு என்று தனிப் பாரம்பரியமும் நல்லுறவு நல்லுணர்வும் இருக்கிறது. ஆனால், இஸ்லாமியர்களுக்கு வீடு தரக் கூடாது என்ற மனோபாவம் இவ்வளவு ஆழமாக இங்கே எப்போது ஊடுருவியது? இல்லாமியர்கள் அசுத்தமானவர்கள், வன்முறை யாளர்கள், தேச விரோதிகள் என்ற பிரச்சாரம் சமூகத்தின் அடியாழம் வரை எப்போது ஆழமாகப் பரவியது? தெரியவில்லை! 

எனக்கு ஒரு பெயர் இருப்பதுதான் பிரச்சினையா அல்லது நான் இருப்பதே பிரச்சினையா என்று குழப்பமாக இருக்கிறது. இந்த மொழிக்காகவும் பண்பாட்டுக்காகவும் நான் செய்திருக்கும் வேலைகளுக்காக நான் எந்த பிரதியுபகாரமும் கேட்கவில்லை. வாடகைக்கு ஒரு வீடுதான் கேட்கிறேன். என் போன்ற சமூகப் பொதுவெளியில் வசிக்கும் ஒருவனுக்கே இதுதான் நிலை என்றால், எந்தப் பின்புலமும் அற்ற வெறும் பெயராக மட்டுமே அறியப்படும் சாமானிய முஸ்லிம்களின் நிலை என்னவாக இருக்கும்? தமிழ்ப் பொதுச்சமூகம் யோசிக்க வேண்டும். 

எனக்கு இங்கு இடமில்லையா என்று இதுவரை கேட்டுக்கொண்டிருந்த நான் இப்போது முதல் முறையாகக் கேட்கிறேன், ‘‘எங்களுக்கு இங்கு இடமில்லையா?’’ 

- மனுஷ்ய புத்திரன், 

கவிஞர், பதிப்பாளர், 

‘காந்தியுடன் இரவு விருந்திற்கு செல்கிறேன்’, ‘எதிர்க்குரல்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். 


--

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Visit THF pages and blogs
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி
http://suba-in-news.blogspot.com/ - தொலைகாட்சி, பத்திரிக்கை பேட்டிகள்
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://thf-villagedeities.blogspot.de/ - கிராம தேவதைகள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

சி. ஜெயபாரதன்

unread,
Mar 29, 2017, 5:10:53 PM3/29/17
to vallamai, mintamil, செல்வன், vannan vannan, vaiyavan mspm, Asan Buhari, veeramani k, iraamaki, C.R. Selvakumar, Oru Arizonan, Elangovan N, Aravindan Neelakandan, Semmal Aravajy, senkodi thamizhan, Anna Kannan, Anne Josephine
இஸ்லாமியர் நமது [இந்துக்களின்] சகோதரர்கள்.  இந்திய சுதந்திரப் போரில் இஸ்லாமியர் இந்துக்களோடு இணையாகப் போராடியவர். 

This is utter discrimination.

மனுஷ்ய புத்திரன் அத்தொகுதி அரசியல்வாதியிடம் புகாரிட வேண்டும்.​  அவரது மின்னஞ்சல் முகவரி தெரிந்தவர் எழுதுங்கள் எனக்கு.

சி. ஜெயபாரதன், கனடா

+++++++++++++++

2017-03-29 16:30 GMT-04:00 செல்வன் <hol...@gmail.com>:

என் உடல் சார்ந்த குறைபாட்டை நான் கடந்துவிட்டேன். ஆனால், என் பிறப்பு சார்ந்த பெயருக்காக எனக்குக் கொடுக்கப்படும் தண்டனைகளை என்னால் கடக்க முடியவில்லை. வாடகைக்கு ஒரு வீடுதான் கேட்கிறேன். கிடைக்கவில்லை. என் போன்ற சமூகப் பொதுவெளியில் வசிக்கும் ஒருவனுக்கே இதுதான் நிலை என்றால், எந்தப் பின்புலமும் அற்ற வெறும் பெயராக மட்டுமே அறியப்படும் சாமானிய முஸ்லிம்களின் நிலை என்னவாக இருக்கும்? 

நான் பதினைந்து வருடங்களாகக் குடியிருந்த வீட்டை அதன் உரிமையாளர் விற்பதால் காலி செய்ய வேண்டிய கட்டாயம். உண்மையில், என் வாழ்வில் அழியாத நினைவுகளைக் கொண்ட வீடு இது. இந்த வீட்டில்தான் ஒருகாலத்தில் நடிகை வடிவுக்கரசி இருந்தார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதைப் பற்றிக்கூட ‘வடிவுக்கரசி இருந்த வீடு’ என்று ஒரு கவிதை எழுதியிருக்கிறேன். ஆனால், ‘மனுஷ்ய புத்திரன் இருந்த வீடு’ என்று யாரோ ஒரு வாசகன் சொல்ல இந்த வீடு இருக்கப்போவதில்லை. இரண்டு வருடங்களுக்குள் இங்கே ஒரு மூன்றடுக்கு ஃப்ளாட் வந்துவிடும். 

கடந்த இரண்டு மாதங்களாக வீடு தேடி அலைகிறேன். நான் வீடு பார்க்கப்போகிற எல்லா இடத்திலும் என்னை வீட்டு உரிமையாளர்களுக்கு நன்கு தெரிந்திருக்கிறது. ‘டி.வி.யில் உங்க நிகழ்ச்சின்னா விரும்பிப் பார்ப்போம்’ என்று அன்பாகச் சொல்லி காபி கொடுக்கிறார்கள். ஆனால், எல்லா இடங்களிலும் நான் புரிந்துகொள்ள முடியாத ஏதோ ஒரு காரணத்தால், எனக்கு வீடு மறுக்கப்படுகிறது


சார், நீங்க முஸ்லிமா? 

ஒரு வீட்டு உரிமையாளர் விளம்பரத்தில் கொடுத்திருந்ததைவிட இன்னொரு மடங்கு வாடகை சொன்னார். கேட்டால், “அது பிரின்டிங் மிஸ்டேக்” என்றார். என்னை நிராகரிக்க வேண்டும் என்பதே அவரது விருப்பம். பிறகு, அதே வாடகை குறிப்பிடப்பட்டு, அதே விளம்பரம் அடுத்த வாரமும் வந்திருந்தது. 

நான்கு நாளைக்கு முன்னர் வீடு பார்த்தேன். வீடு எனக்கு ஓரளவு பிடித்திருந்தது. வீட்டுத் தரகர் உரிமையாளரிடம் அந்த வீட்டை நான்தான் பார்த்திருக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். வீட்டு உரிமையாளருக்கு ஒரே மகிழ்ச்சியாம். ‘‘அவர் எழுத்தையெல்லாம் படித்திருக்கிறோம்.. அவர் எங்க வீட்டுக்குக் குடிவருவது எங்களுக்குத்தான் பெருமை..’’ என்று அவர் சொன்னதாகச் சொல்லிய வீட்டுத் தரகர் ‘‘நாளைக்கே போய் அட்வான்ஸ் கொடுத்துவிடுவோம்’’ என்றார். அவர் சொன்ன நாளில் வீட்டு உரிமையாளரைச் சந்திக்க நான் ஆயத்தமாகிக்கொண்டிருந்தபோது தொங்கிய முகத்துடன் தரகர் வந்தார், ‘‘சார், நீங்க முஸ்லிமா? உங்க நிஜப் பெயர் என்ன?’’ என்றார். 

நான் அவரை உற்றுப் பார்த்தேன் ‘‘இல்ல சார், வீட்டு ஓனர்கிட்ட நீங்க முஸ்லிம் என்று யாரோ சொல்லியிருக்காங்க..” என்று இழுத்தார்.‘‘ஏன், நான் அசைவம் என்பதால் கொடுக்க மாட்டார்களா?’’ என்று கேட்டேன். ‘‘அசைவம் எல்லாம் பிரச்சினை இல்லை.. நீங்க முஸ்லிம் என்பதுதான் பிரச்சினை’’ என்றார். 

நான் உடைந்துபோனேன். ஒருவகையில், அந்த வீட்டு உரிமையாளரைப் பாராட்ட வேண்டும். அவர் மற்றவர்களைப் போல மழுப்பாமல், நேரடியாக உண்மையான காரணத்தை நேர்மையாகக் கூறிவிட்டார். நான் எழுதிய இரண்டாயிரம் கவிதைகளை நினைத்துப்பார்த்தேன். மதச்சார்பின்மைக் காகவும் சமூக நீதிக்காகவும் நான் எழுதிய ஆயிரக்கணக்கான பக்கங்கள், பேசிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பொதுக் கூட்டங்கள் அனைத்தையும் நினைத்துப் பார்த்தேன். ஆயிரம் இருந்தென்ன? நான் இப்போது எதுவுமே இல்லை; வெறும் ஒரு முஸ்லிம்… அவ்வளவுதானே! 

ஒரு கணம், என் வாழ்க்கையில் நான் எதையெல்லாம் போராடிப் பெற்றேனோ அது அனைத்தும் என்னிடமிருந்து பறிக்கப்பட்ட உணர்வு. நான் இப்போது வெறுக்கப்படும் ஒரு பெயர், ஒரு அடையாளம் மட்டுமே. இரண்டு நாளைக்கு முன்புகூட, மதவாதத்தைப் பரப்புகிற கட்சிகளுக்குத் தமிழக மக்களிடம் எந்த இடமும் இல்லை என்று ஒரு தொலைக்காட்சியில் சவால் விட்டுவிட்டு வந்தேன். ஆனால், என் நம்பிக்கைகள் தோற்றுவிடுமோ என்று இன்று நான் அஞ்சுகிறேன். 

கடக்க முடியாத தண்டனை 

நான் என் சொந்தப் பெயரை ஒருபோதும் மறைத்ததில்லை. ‘ஹமீது’ என்றுதான் என்னைப் பல இடங்களில் சுஜாதா குறிப்பிட்டிருக்கிறார். முகநூலில் அந்தப் பெயரில்தான் எழுதுகிறேன். ஆனால், என்னை ‘மனுஷ்ய புத்திரன்’ என்கிற பொது அடையாளத்தில் மட்டும் அறிபவர்கள், என் சொந்தப் பெயரைக் கேட்டதும் அடையும் சங்கடம் என்னை மிகவும் அதிர்ச்சியடைய வைக்கிறது. இத்தனைக்கும் இஸ்லாமியப் பண்பாடு சார்ந்து ஒரு வாக்கியம்கூட என் கவிதைகளில் இல்லை. முகநூலில் என் அளவுக்கு மதவெறியர்களால் தாக்கப்பட்ட இன்னொரு எழுத்தாளரோ சமூகச் செயல் பாட்டாளரோ யாரும் இல்லை. இந்துத்துவா அடிப்படைவாதிகள் மட்டுமல்ல, இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் இந்தத் தாக்குதலைச் செய்திருக்கிறார்கள். 

மூன்று வயதில் எனக்கு நடக்க முடியாமல்போனது. என் உடல் சார்ந்த குறைபாட்டை நான் கடந்துவிட்டேன். ஆனால், என் பிறப்பு சார்ந்த பெயருக்காக எனக்குக் கொடுக்கப்படும் தண்டனைகளை என்னால் கடக்க முடியவில்லை. ஒரு எழுத்தாளனாக, ஒரு ஊடகவியலாளனாக, ஒரு பதிப்பாளனாக, ஒரு மிகப்பெரிய அரசியல் இயக்கத்தைச் சேர்ந்தவனாக மைய நீரோட்டத்தில் நான் எவ்வளவு கரைந்து நின்றபோதிலும் திடீரென ஒரு குரல் கேட்கிறது.. ‘‘வெளியே போ!’’ 

என்ன ஆனது பாரம்பரியம்? 

சென்னையில் பெரும் வெள்ளம் சூழ்ந்த போது, வீடுகளிலும் கோயில்களிலும் புகுந்த சாக்கடையைச் சுத்தப்படுத்திய இஸ்லாமியர்கள் பாராட்டப்பட்டார்கள். அந்த நல்லுணர்வுகள் சாக்கடைத் தண்ணீரைப் போல இவ்வளவு சீக்கிரம் வடிந்துவிட்டனவா என்று தோன்றியது. வட இந்தியாவில் இருப்பதுபோல தமிழகத் தில் இஸ்லாமியர்களும் இந்துக்களும் தனித் தனியான குடியிருப்புப் பகுதிகளைக் கொண்டிருப்பதில்லை. தமிழகத்துக்கு என்று தனிப் பாரம்பரியமும் நல்லுறவு நல்லுணர்வும் இருக்கிறது. ஆனால், இஸ்லாமியர்களுக்கு வீடு தரக் கூடாது என்ற மனோபாவம் இவ்வளவு ஆழமாக இங்கே எப்போது ஊடுருவியது? இல்லாமியர்கள் அசுத்தமானவர்கள், வன்முறை யாளர்கள், தேச விரோதிகள் என்ற பிரச்சாரம் சமூகத்தின் அடியாழம் வரை எப்போது ஆழமாகப் பரவியது? தெரியவில்லை! 

எனக்கு ஒரு பெயர் இருப்பதுதான் பிரச்சினையா அல்லது நான் இருப்பதே பிரச்சினையா என்று குழப்பமாக இருக்கிறது. இந்த மொழிக்காகவும் பண்பாட்டுக்காகவும் நான் செய்திருக்கும் வேலைகளுக்காக நான் எந்த பிரதியுபகாரமும் கேட்கவில்லை. வாடகைக்கு ஒரு வீடுதான் கேட்கிறேன். என் போன்ற சமூகப் பொதுவெளியில் வசிக்கும் ஒருவனுக்கே இதுதான் நிலை என்றால், எந்தப் பின்புலமும் அற்ற வெறும் பெயராக மட்டுமே அறியப்படும் சாமானிய முஸ்லிம்களின் நிலை என்னவாக இருக்கும்? தமிழ்ப் பொதுச்சமூகம் யோசிக்க வேண்டும். 

எனக்கு இங்கு இடமில்லையா என்று இதுவரை கேட்டுக்கொண்டிருந்த நான் இப்போது முதல் முறையாகக் கேட்கிறேன், ‘‘எங்களுக்கு இங்கு இடமில்லையா?’’ 

- மனுஷ்ய புத்திரன், 

கவிஞர், பதிப்பாளர், 

‘காந்தியுடன் இரவு விருந்திற்கு செல்கிறேன்’, ‘எதிர்க்குரல்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். 


--

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

தேமொழி

unread,
Mar 29, 2017, 6:29:26 PM3/29/17
to மின்தமிழ், hol...@gmail.com
நான் வளர்ந்த  பொழுது தமிழகம் இவ்வாறு இருந்ததாக நினைவில்லையே.

இந்த நிகழ்ச்சி, இருக்கும் சூழ்நிலையில் முஸ்லீம்களுக்கு வீடு கொடுத்து வம்பை விலைக்கு வாங்குவானேன் என்று வீட்டுச் சொந்தக்காரர்கள் கொண்டிருக்கும் மனநிலையைக் காட்டுகிறது.

iraamaki

unread,
Mar 29, 2017, 8:46:50 PM3/29/17
to mint...@googlegroups.com
தமிழகத்தில் இப்போதுள்ள நிலையைத்தான் அவர் சொல்லுகிறார். இன்னுமொரு தீண்டாமை, பாராமை இங்கு உருவாகிக்கொண்டிருக்கிறது  அப்படி உருவாவதை எடுத்துக்காட்டிச் “செய்யாதீர்கள்” என்று சொல்வோரையும் சாடும் நிலை ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது.
 
மொத்தத்தில் இற்றைக் குமுகாயம் போகும் பாதை சரியில்லை.  தமிழகத்தில் கிட்டத்தட்ட பொ.உ.250/300 களுக்கு அப்புறம் பொ.உ.650/700 கள் வரை  நடந்த கொலைவெறி வேறுவுருவத்தில் திரும்பவருகிறது போலும்.
 
தமிழ்க்குமுகாயம் தலைசாயும் நேரம்.
 
இராம.கி.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Innamburan S.Soundararajan

unread,
Mar 29, 2017, 9:36:26 PM3/29/17
to mintamil
நான் வளர்ந்த  பொழுது தமிழகம் இவ்வாறு இருந்ததாக நினைவில்லையே.

~எங்கள் வீட்டு சமைலறையில் சுவாதீனமாக நுழைந்து, வாப்பாவுக்கு ரசம் மொண்டு செல்லும் ஆபீஜா பீபீ என்பவர் அப்போது சிறுமி. வாப்பா ஆகிற ஜி.யாகூப்கான் ஊரே மதிக்கும் தலைமை ஆசிரியர். அண்டை வீடு. ஒரே கிணறு. வருடம் 1940 முதல்.

தமிழ்க்குமுகாயம் தலைசாயும் நேரம். 
 
இராம.கி.

ஐயா! இது தான் உண்மை. வெளிநாட்டிலிருந்து எல்லாரும் கமெண்ட் அடிக்கிறார்கள். உள் நாட்டு வீரதீரர்கள் தெரியாத விஷயங்களை பற்றி அடித்து பேசுகிறார்கள். விமோசனம் எங்கே?
இன்னம்பூரான்

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Mahalingam

unread,
Mar 30, 2017, 12:32:16 AM3/30/17
to மின்தமிழ், hol...@gmail.com
நான் என் வீட்டை ஒரு இஸ்லாமியருக்கு வாடகைக்கு விட்ட பொழுது இதைப்போன்ற விமர்சனங்கள் நிறைய எழுந்தன. பக்கத்து அபார்ட்மென்ட் பெண்மணி பதற்றமும் கோபமும் கொண்டார்.

இதை எண்ணும் பொழுது வருத்தமும் நான் அவற்றை செவி சாய்க்கவில்லை என்ற நிம்மதியும்  எழுகின்றன. 

 Wednesday, March 29, 2017 at 1:30:43 PM UTC-7, செல்வன் wrote:

தேமொழி

unread,
Mar 30, 2017, 12:45:17 AM3/30/17
to மின்தமிழ்
அண்ணா பல்கலைக்கழக இயற்பியல் பேராசிரியர் மகாலிங்கம் அவர்களின் வரவு  நல்வரவாகுக 

உங்கள் பகிர்வுகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

அன்புடன்
..... தேமொழி

தேனீ

unread,
Mar 30, 2017, 12:45:24 AM3/30/17
to மின்தமிழ், hol...@gmail.com
மத வெறி கண்முன் நிற்கும் பொழுது மனித நேயம் தாழ்ந்து போகின்றது. அதுவே மனுஷ்ய புத்திரனின் கண்ணீருக்குப் பின்னால் ஒழிந்திருக்கும் மயக்கம்.

மதம் என்பது இன்று ஒரு வாழ்க்கை நெறியாக்கப் பட்டு விட்டது. அதனில் ஆன்மிகம் தொலைக்கப் பட்டு விட்டது. மதங்களை நிருவாக அமைப்பு முறையில் வழி நடத்தி அவர்வர் மதக் கட்டுப்பாடுகளைக் கொண்டு இனம் பிரிக்கவே இன்று மதம் பயன்படுகின்றது. இப்படித்தான் தவத்திரு குன்றக்குடி அடிகளாரும் கூறிப் போந்தார். 

மதம் மாறிப் போன ஒரு தமிழரைப் பார்த்து 'ஐயா, நீங்கள் தமிழரா?' என்று கேட்டால் அவர் பதிலுக்கு அனிச்சையாக 'நான் முச்லிம்' என்றோ அல்லது 'நான் கிறிஸ்துவர்' என்றோ சொல்லக் கேட்கிறோம்!. தமிழருக்கு ஏன் இந்த நிலை? தமிழர் ஒருவர் மதம் மாறிய பிறகு அவருடைய சிந்தனைகள் அவரவர் ஏற்றுக் கொண்ட புதிய மதத்தின் அடிப்படையில் அமைகின்றது. அவர் பெயர் மாறுகின்றது. உடை மாறுகின்றது. அவர் பழக்க வழக்கங்கள் மாறுகின்றது. அவரது உணவு முறை மாறுகின்றது. மதம் மாறியோருடைய கலை கலாச்சாரமே முற்றிலும் மாறி விடுகின்றது. அதனால்தான் மதம் மாறிய தமிழர் தங்களை அனிச்சையாக முச்லிம் என்றோ அல்லது கிறிச்துவர் என்றோ அடையாளப் படுத்திக் கொள்வதைக் காண்கிறோம். இக்கருத்துக்கு விதிவிலக்காக சிலர் இருக்கலாம். இல்லையென்று கூறவில்லை. ஆனால் நாங்கள் வாழும் மலேசிய திருநாட்டில் நடப்பதென்னவோ மேற்கூறியவாரே.

ஆகையால் மதம் மாறியோர் அவரவர் இன அடையாளத்தை இழந்து தவிப்பதை இன்று நாம் காண்கிறோம். அதுவே மனுஷ்சிய புத்திரன் @ ஹமீதின் நிலை.  இதற்கு காரணம் தமிழர் என்பதா? அல்லது மதம் மாறியோரே காரணமென்பதா? அல்லது தமிழரின் அறிவார்ந்த சமயச் சிந்தனையை அறியாது மதம் மாறிய அவர்தம் முன்னோரின் குற்றம் என்பதா?  சிந்தியுங்கள். தமிழரிடையே எத்தனை பாகுபாடுகள்!. சாதியம் ஒரு பக்கம்! மதம் ஒரு பக்கம்! பொருளாதார வேற்றுமை ஒரு பக்கம்! அரசியல் வேற்றுமை ஒரு பக்கம்! தாய்மொழி வேற்றுமை இன்னொரு பக்கம்!. இன்னும் எவ்வளவு வேற்றுமைகளைத்தான் இந்த தமிழர் இனம் தாங்கும்! அல்லது தாங்க வேண்டும்?. தமிழர் என்ற ஒர் இனத்திற்கு இன்று அடையாளம் கூற முடியவில்லை அல்லது அவ்வாறு கூறுவதும் தப்பு என்று அறிவுறுத்துகின்றனர் மதம் மாறியோரும், வேற்று தாய்மொழியைக் கொண்டோரும்!. அப்படியானல் தமிழர் இனத்தின் அடையாளம்தான் என்ன? இது சிந்திக்கப்பட வேண்டிய விடயம். விடை காண வேண்டிய விடயம். இது காலத்தின் கட்டாயம். 

அன்புடன் கமலநாதன்

தேமொழி

unread,
Mar 30, 2017, 1:07:15 AM3/30/17
to மின்தமிழ்


On Wednesday, March 29, 2017 at 9:45:24 PM UTC-7, தேனீ wrote:

மதம் மாறிப் போன ஒரு தமிழரைப் பார்த்து 'ஐயா, நீங்கள் தமிழரா?' என்று கேட்டால் அவர் பதிலுக்கு அனிச்சையாக 'நான் முச்லிம்' என்றோ அல்லது 'நான் கிறிஸ்துவர்' என்றோ சொல்லக் கேட்கிறோம்!. தமிழருக்கு ஏன் இந்த நிலை? 
ஆகையால் மதம் மாறியோர் அவரவர் இன அடையாளத்தை இழந்து தவிப்பதை இன்று நாம் காண்கிறோம். அதுவே மனுஷ்சிய புத்திரன் @ ஹமீதின் நிலை.  இதற்கு காரணம் தமிழர் என்பதா


தமிழர்தான் காரணம்...தமிழர் மட்டுமேதான் காரணம்.  நம் குற்றத்தை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். தமிழருக்கு இங்கு தமிழரே எதிரி. 

தமிழ்  எழுத்தாளர் ஒருவருக்கு  வாடகைக்கு வீடு கொடுக்க மறுக்கும் ஒருவருக்குமே அவர் நமது தமிழர், நம்மில் ஒருவர் என்று தோன்றவில்லையே.  

இக்கேள்வி எழுப்பப்பட்ட விதமே  தமிழர் என்றால் இந்துமதத்தவர் என்ற எண்ணத்தின் எதிரொலியாகவே "தமிழரின் அறிவார்ந்த சமயச் சிந்தனையை அறியாது மதம் மாறிய...". சொற்றொடர் ஒலிக்கிறது என்பதைக்  குறிப்பிட விரும்புகிறேன் ..... வருத்தத்துடன். 

தமிழர் என்பவர் தமிழிடமும் தமிழ் பேசும் நிலத்தின் வழி வந்தோர் நலத்திலும் அக்கறை கொண்டவர்.

மனிஷ்யபுத்திரனுக்கு இடமளிக்க மறுப்பவர்கள் தமிழரல்லர்.  தமிழுக்கும் தமிழருக்கும் எதிரிகள் என்பதைத்தான் அவர்கள் நடவடிக்கை காட்டுகிறது. 


..... தேமொழி

Arumugam Mahalingam

unread,
Mar 30, 2017, 1:08:02 AM3/30/17
to mint...@googlegroups.com
நன்றி தேமொழி அவர்களே.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/jxGm-BY7eCI/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Thenee MK

unread,
Mar 30, 2017, 2:28:46 AM3/30/17
to mintamil
"இக்கேள்வி எழுப்பப்பட்ட விதமே  தமிழர் என்றால் இந்துமதத்தவர் என்ற எண்ணத்தின் எதிரொலியாகவே "தமிழரின் அறிவார்ந்த சமயச் சிந்தனையை அறியாது மதம் மாறிய...". சொற்றொடர் ஒலிக்கிறது என்பதைக்  குறிப்பிட விரும்புகிறேன் ..... வருத்தத்துடன்."

இங்குதான் தமிழரின் சமயச் சிந்தனையை நாமே புரிந்து கொள்ளாமல் வாழ்கிறோம் என்பது தெளிவாகின்றது.

இந்து என்பது ஒரு மதமன்று. இந்து என்ற மக்களை அடிப்படையாகக் கொண்டு வைதிக வாழ்க்கை நெறிகளை பின்பற்றுவோரை ஆங்கிலேயர் "இந்து" என்றால் அதுவே தமிழரின் சமயமும் நீதி நெறியும் அன்று. ஆகையால் தமிழர் என்று சொல்லும் பொழுது அவன் இந்து என்னும் புரியாத மதப் பெயரில் இருக்க வேண்டும் என்பதல்ல கருத்து.

தமிழர் என்று ஒரு அக்கம் பக்கத்தவர் பார்க்கும் பொழுது அவர் தமிழர் கலை கலாச்சாரத்தைப் பேணி தமிழர் பண்பாட்டுடன் வாழ வேண்டும் என்று எதிபார்ப்பதில் தவறு ஏதும் இல்லையல்லவா? அவ்வாறு இருக்க முடியாதவருக்கு இங்கு இடமில்லை என்றால் வேற்றொரு இடத்தில் இடமில்லாமல் போகாது. மனுஷ்ய புத்திரனுக்கு ஏற்பட்ட ஒரு இடரைக் கொண்டு அவர் கருத்தை வெளியிட்டார். அதே நிலைதான் மலேசிய நாட்டிலும். தமிழருக்கு இரண்டாம் நிலை குடியுரிமை! முச்லிம்களுக்கு முதல் சலுகை. தமிழன் கஞ்சி குடித்தாலும் அவனுக்கு இரண்டாம் சலுகைதான். அதற்காக நாம் முச்லிம்களைப் பகைத்துக் கொண்டு வாழவில்லையே. அவர்களில் பல்லோர் எங்களுக்கும் நட்புதான். அதைப் போலவே ஒரு வீட்டு உரிமையாளர் போன்று மற்றவரும் இருப்பார் என்பதில்லை. மனித நேயத்துடன் கூடிய தமிழரும் உண்டு. அத்தகை மனிதநேயம் நீங்கிய பிற மதத்தவரும் உண்டு. ஆதலால் தமிழரைக் குற்றமோ குறையோ சொல்வதில் பயனில்லை. அவரவர் தனி மனித உரிமைக்கு மதிப்பு கொடுக்க வேண்டுமேன்று அமெரிக்கவிலிருந்து உரக்கப் பேசுவது தமிழகத்தவருக்கும் அத்தகைய உரிமை உண்டு என்பதை புரிந்து கொண்டால் மனுஷ்ய புத்திரனுக்கும் பாதகமில்லை மற்ற தமிழருக்கும் நட்டமில்லை.

அன்புடன் கமலநாதன்
   



  



 




 


 

Thenee MK

unread,
Mar 30, 2017, 2:41:48 AM3/30/17
to mintamil
தேமொழி,

தனி மனித விருப்பு வெறுப்பு என்று ஒன்று உண்டு. அத்தகைய விருப்பு வெறுப்பு என்பது ஒவ்வொரு மனிதரின் மனோ நிலைக்கு மாறுப்பட்டு இருக்கும். அதற்காக ஒட்டு மொத்த தமிழரும் காரணம் என்றால் தாங்கள் 'தமிழருக்கு" கொடுத்த இலக்கணத்தின்படி மனுஷ்ய புத்திரனும் குற்றமுடையவராகின்றார்.

தான் தமிழர் என்று உள்ளபடி நினைத்திருந்தால் அவர் ஏன் தன் இயலாமைக்கு மதத்தைக் கை நீட்டிக் காட்ட வேண்டும்? அத்தகைய மனப்பாங்கும் மத வேற்றுமையும் அவர் மனதிலும் உண்டு என்பதை நாம் மறக்கலாகாது.

ஆகையால், வேற்றுமையே ஒட்டு மொத்த உருவகமாக திகழும் இந்தியாவில் இத்தகைய குறையை நிறைவாகக் கொண்டு தமிழருடன் ஒத்து வாழும் நெளிவு சுழிவுகளை மதம் மாறியோரும் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதே அறிவுடைமையாகும். 

அன்புடன் கமலநாதன்
 



2017-03-30 13:07 GMT+08:00 தேமொழி <jsthe...@gmail.com>:

Arumugam Mahalingam

unread,
Mar 30, 2017, 2:43:46 AM3/30/17
to mint...@googlegroups.com
உண்மை. நான் சொல்ல நினைத்திருந்ததை நீங்கள் சொல்லி விட்டீர்கள்.

Suba

unread,
Mar 30, 2017, 3:00:51 AM3/30/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram
2017-03-30 6:18 GMT+02:00 Mahalingam <maha...@gmail.com>:
நான் என் வீட்டை ஒரு இஸ்லாமியருக்கு வாடகைக்கு விட்ட பொழுது இதைப்போன்ற விமர்சனங்கள் நிறைய எழுந்தன. பக்கத்து அபார்ட்மென்ட் பெண்மணி பதற்றமும் கோபமும் கொண்டார்.

இதை எண்ணும் பொழுது வருத்தமும் நான் அவற்றை செவி சாய்க்கவில்லை என்ற நிம்மதியும்  எழுகின்றன. 

​இப்படி நடைமுறையில் சிலர் செய்யும் போது தான் அது பிறருக்கும் நல்ல வழிகாட்டுதலாகவும் உதாரணமாகவும் அமைய வாய்ப்பு அமையும்.

சுபா

Suba

unread,
Mar 30, 2017, 3:01:37 AM3/30/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram
2017-03-30 6:45 GMT+02:00 தேமொழி <jsthe...@gmail.com>:
​​
அண்ணா பல்கலைக்கழக இயற்பியல் பேராசிரியர் மகாலிங்கம் அவர்களின் வரவு  நல்வரவாகுக 

உங்கள் பகிர்வுகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
​அப்படியா மகிழ்ச்சி.
அண்ணா பல்கலைக்கழக இயற்பியல் பேராசிரியர் மகாலிங்கம் அவர்களை நானும் வரவேற்கின்றேன்.

சுபா​

Suba

unread,
Mar 30, 2017, 3:04:05 AM3/30/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram
2017-03-30 6:45 GMT+02:00 தேனீ <ipohs...@gmail.com>:


ஆகையால் மதம் மாறியோர் அவரவர் இன அடையாளத்தை இழந்து தவிப்பதை இன்று நாம் காண்கிறோம்.

​மதம் மாறாதோர்  தமிழர் என்ற அடையாளத்தை முன் வைத்து இருக்கின்றார்களா? அவர்களும் அடையாளத்தை இழந்து மதம், சாதி என்ற  முகமூடிகளைப்  போட்டுக் கொண்டு தானே ​இயங்குகின்றனர்.

சுபா


​ 

Suba

unread,
Mar 30, 2017, 3:14:53 AM3/30/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram
2017-03-30 8:28 GMT+02:00 Thenee MK <ipohs...@gmail.com>:
"இக்கேள்வி எழுப்பப்பட்ட விதமே  தமிழர் என்றால் இந்துமதத்தவர் என்ற எண்ணத்தின் எதிரொலியாகவே "தமிழரின் அறிவார்ந்த சமயச் சிந்தனையை அறியாது மதம் மாறிய...". சொற்றொடர் ஒலிக்கிறது என்பதைக்  குறிப்பிட விரும்புகிறேன் ..... வருத்தத்துடன்."

இங்குதான் தமிழரின் சமயச் சிந்தனையை நாமே புரிந்து கொள்ளாமல் வாழ்கிறோம் என்பது தெளிவாகின்றது.

இந்து என்பது ஒரு மதமன்று. இந்து என்ற மக்களை அடிப்படையாகக் கொண்டு வைதிக வாழ்க்கை நெறிகளை பின்பற்றுவோரை ஆங்கிலேயர் "இந்து" என்றால் அதுவே தமிழரின் சமயமும் நீதி நெறியும் அன்று. ஆகையால் தமிழர் என்று சொல்லும் பொழுது அவன் இந்து என்னும் புரியாத மதப் பெயரில் இருக்க வேண்டும் என்பதல்ல கருத்து.

தமிழர் என்று ஒரு அக்கம் பக்கத்தவர் பார்க்கும் பொழுது அவர் தமிழர் கலை கலாச்சாரத்தைப் பேணி தமிழர் பண்பாட்டுடன் வாழ வேண்டும் என்று எதிபார்ப்பதில் தவறு ஏதும் இல்லையல்லவா? அவ்வாறு இருக்க முடியாதவருக்கு இங்கு இடமில்லை என்றால் வேற்றொரு இடத்தில் இடமில்லாமல் போகாது. மனுஷ்ய புத்திரனுக்கு ஏற்பட்ட ஒரு இடரைக் கொண்டு அவர் கருத்தை வெளியிட்டார். அதே நிலைதான் மலேசிய நாட்டிலும். தமிழருக்கு இரண்டாம் நிலை குடியுரிமை! முச்லிம்களுக்கு முதல் சலுகை. தமிழன் கஞ்சி குடித்தாலும் அவனுக்கு இரண்டாம் சலுகைதான். அதற்காக நாம் முச்லிம்களைப் பகைத்துக் கொண்டு வாழவில்லையே.
மலேசியாவில் தமிழர்களுக்கு இரண்டாம் நிலை என சொல்வது பொத்தாம் பொதுவான கருத்து. நீங்கள் மலேசியாவில் வாழ்கின்றீர்கள் என அறிகின்றேன். அங்கேயே பிறந்து, படித்து, பணிபுரிந்தவறா என்று அறிந்து கொள்ள விரும்புகின்றேன். ஏனென்றால் நானும் மலேசியாவில் பிறந்து வளர்ந்து படித்ததனால் பின்புலம் நன்கு அறிந்திருக்கின்றேன்.
மலேசியாவில் இஸ்லாம் அதிகாரப்பூர்வ மதம்
மலேசியாவில் மலாய் மொழி அதிகாரப்பூர்வ மொழி. 
இது சுதந்திரத்தின் போது சட்டமாக்கப்பட்ட விசயம்.

இந்தியாவின் நிலை அது அல்ல என்பதை ஒப்பீட்டிற்கு வரும் போது நாம் நிச்சயம் குறிப்பிட வேண்டும்.

மலாய் இனத்தவர் வறுமைக்கோட்டின் அடித்தளத்தில் இருந்தமையால் அவர்களுக்காக, ஐந்தாண்டு திட்டம், பத்தாண்டு திட்டம் என தொடங்கப்பட்டு அவர்களது வாழ்வியல் நிலை உயர்த்த இந்தச் சட்டங்கள் உதவின. இதனால் சீன, இந்திய மக்கள் கல்வி, வேலை வாய்ப்பு என்ற வகையில் முக்கியத்துவம் கொடுக்கப்படாமல் பாதிக்கப்பட்டாலும்  மலேசிய பிரஜையாகத்தான் அடையாளம் காணப்படுகின்றார்கள்.

தமிழர்கள் தோட்டத்தில் காலணித்துவ ஆட்சியில் எடுபிடியாக இருந்தோர் இன்று ஆசிரியராகவும், வக்கீலாகவும், வங்கி ஊழியராகவும், வர்த்தகர்களாகவும் என உயர்ந்து விட்டோம். தமிழர் வளர்ச்சியை தடைபோடவில்லை மலேசிய அரசு. நான் வீடு வாங்கிய போதும் கூட இஸ்லாமிய வங்கியில் கடன்பெற்றுத்தான் வீடு வாங்கினேன். வட்டியில்லா கடன் எனக்கு கிடைத்தது. எனது பிறப்புச் சான்றிதழில் இந்து என்று தான் என் மதம் குறிப்பிடப்பட்டுள்ளது. அங்கு தடை இல்லையே. 

மலேசியாவில் வீடு வாடகைக்கு கொடுப்பது கூட இந்த வகை பிரச்சனை நான் கேள்விப்பட்டதில்லை. என் வீட்டில் இப்போது வாடகைக்கு குடித்தனம் இருப்பவர் கூட ஒரு மலாய்க்காரர் குடும்பத்தினர் தான். 

​சுபா​
​ 

Suba

unread,
Mar 30, 2017, 3:24:13 AM3/30/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram
இதனை வாசித்த போது மற்றுமொரு கோணத்தில் சிந்தனையும் எழுந்தது.

தமிழகத்து இஸ்லாமியர்கள் வேறு மதத்தினருக்குத் தங்கள் வீடுகளை வாடகைக்குத் தருகின்றனரா?அவர்களிடம் வேற்று மதத்தினர் என்ற மத பாகுபாடு இல்லையா?

மனுஷ்ய புத்திரன் என்ற ஒரு தனி நபரை எடுத்துக் கொண்டால் அவர் திமுக-வின் முக்கிய கொள்கை பரப்பும் பேச்சாளர். அவரது தற்போதைய அரசியல் ஈடுபாட்டினால் அவருக்கு அமைந்திருக்கும் தனிப்பட்ட செல்வாக்கு என்பது மறைக்கமுடியாதது. அவருக்கு விரைவில் வீடு கிடைத்து விட வாய்ப்பிருக்கின்றது. ஆனால் எந்த ஆதரவும் இல்லாத சாதாரண மனிதர்களுக்கு  என்ன கதி என நினைக்கும் போது மதம் சாதி என்ற இரு விசயங்களுக்குள் மாட்டிக்கொண்டு உழலும் இந்த சமூக அமைப்பின் மேல் கோபமே வருகின்றது.

சுபா


​ 

தேமொழி

unread,
Mar 30, 2017, 4:00:11 AM3/30/17
to மின்தமிழ், ksuba...@gmail.com
நாங்கள் தில்லைநகர் சாஸ்திரி ரோடில் ஒருமுறை வாடகை வீட்டில் குடியிருந்தோம் சுபா.

அந்த வீட்டின் முகவரி: B 37, Sastri Road 7th Cross Street, Thillai Nagar, Trichy 620018
இப்பொழுது அங்கு  Trichy Diabetics Speciality Centre Pvt Ltd இருக்கிறது.

அதை எங்களுக்கு வாடகைக்குக் கொடுத்தவர்கள் முஸ்லிம் குடும்பத்தினர்.
அதன் உரிமையாளர் இன்ஜினியர் சிராஜுதீன்.

நல்ல உயரமாக ஒல்லியாக, தினமும் மாலை நடைப்பயிற்சி போவார். நானும் தங்கை மணிமொழியும் ஒரே பள்ளியில் படித்தாலும் தனியாக வீடு திரும்புவதை உரிமையோடு கடிந்துகொண்டு ஒருவருக்கொருவர் துணையாக சேர்ந்து வந்தால் என்ன என்று  அக்கறையுடன் வழியில் நிறுத்தி அறிவுரை கூறுவார்.

திருச்சி காவிரியின்  புதுப்பாலம் எனப்படும் பைபாஸ் பாலம், சமயபுரம் வழி செல்வது, கட்டுவதில் முக்கியப் பொறுப்பேற்றவர்.
அவர் வீட்டையும் அவர்தான் வடிவமைத்திருந்தார்.  நல்ல அமைப்பு.

அப்பாவின் நோயாளிகளில் ஒருவர். வயதான காலத்தில் ரம்ஜான் நோன்பிருக்க வேண்டாம் என்று சொன்ன ஆலோசனையை ஏற்றுக் கொள்ளவில்லை. 
பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார். 

அவர் மனைவி தஞ்சையில் மருத்துவராக இருந்த டாக்டர் மும்தாஜுடன் சென்று தங்கிவிட்டார்.  எங்களுக்கு அந்த வீட்டை வாடகைக்கு விட்டார்கள்.
வீட்டில் மாமரங்கள் இருந்தன.  காய்கள் நிறைய இருந்த பொழுது ஒரு சமயம்  நான் தஞ்சை மருத்துவக் கல்லூரியில் படித்த மணிமொழியை பார்க்கச் செல்லும்பொழுது ஒரு கூடையில் சுமக்கமுடிந்தவரை எடுத்துச் சென்று மகளுடன் தங்கியிருந்த அம்மையாரிடம் கொடுத்து நலம் விசாரித்துவிட்டு  வந்த நினைவுள்ளது.

இது பல ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த நிகழ்வு 

ஹா..பழைய நினைவுகளைக் கிளறி விட்டு விட்டீர்கள் :-)

..... தேமொழி

iraamaki

unread,
Mar 30, 2017, 4:18:11 AM3/30/17
to mint...@googlegroups.com
முசுலீம்கள் இன்னொரு முசுலீமிற்குக் கொடுப்பது இடத்தைப் பொறுத்து அமையும். திருவல்லிக்கேணியில், புதுப்பேட்டையில் பெரும்பாலும் முசுலீம்களுக்காக முன்னுரிமை இருக்கும். மற்ற பகுதிகளில் முசுலீம் அல்லாதவருக்குக் கொடுக்கலாம். இதிலும் ஒரு பட்டவம் (pattern) இருப்பது உண்மைதான்.
 
இதேபோல பெருமானர் தம் வீடுகளை பெருமானருக்கே வாடகைக்குக் கொடுக்க விரும்புவார். மீறி மாற்று வகுப்பினருக்குக் கொடுப்பது அரிதாகவே காணப்படுகிறது. இதைச் சாதிவேறுபாடு என்று சொல்வதைக் காட்டிலும் பெருமானர்/பெருமானர் அல்லாதோர் என்றே வேறுபாடு கொள்வதாய் எண்ணவேண்டியிருக்கிறது. 
 
பெருமானர் அல்லாதோர் எல்லோருக்கும் தான் கொடுக்கிறார்  அதேபொழுது தாழ்த்தப்பட்டோரை பெருமானர் அல்லாதோர் விலக்குகிறாரா என்பது இன்னும் எனக்கு விவரமாய்த் தெரியவில்லை. மேலும் அலசிப் பார்க்கவேண்டும்.
 
கறி/மரக்கறி சமைப்பது என்றும் ஒருவித வேற்றுமை பார்ப்பார். இச்சிக்கலும் மேலே கூறிய பெருமானர்/பெருமானர் அல்லாதோர்/ முசுலீம் என்று முக்கோணத்தில் ஊடுவரும். வடவிந்தியர்/ தென்னிந்தியர் என்னும் வேற்றுமையைக் கடுகெண்ணெய்ப் பழக்கத்தால் உரசிப்பார்ப்பார்.
 
நகரத்தில் ஒருமாதிரியாய் இருப்பவர் ஊருக்குப் போனால் இன்னொரு மாதிரியாயிருப்பார். கொள்கைப்பிடிப்புகள் என்பவை இடத்திற்குத் தகுந்தாற்போல் அமைவது இன்னுமொரு விந்தை.
 
மொத்தத்தில் வாடகைக்கு வீடுபிடிப்பது தமிழகத்தில் அவ்வளவு எளிதல்ல. தமிழகமெங்கும் வீடுகளை வாடகைக்குக் கொடுப்பதில் ஏதோ ஒருவிதத்தில் தீண்டாமை நடந்து கொண்டுதான் உள்ளது. காலம் மாறிவரும்போது, பழைய வழக்கங்கள் சிறிதுசிறிதாய் மறைந்தால் எதிர்காலத் தமிழகத்திற்கு நல்லது.  கிழாரியப் பழக்கம் (feudal practice) குறைந்து முதலிட்டிய பழக்கம் (capitalist practice) வந்தால் நல்லது. இன்னும் அரைக்கிழாரியப் பின்புலம் (semi-feudal background) நம்மிடையே மாறாதிருப்பது கவலையைக் கொடுக்கிறது.
 
அன்புடன்,
இராம.கி.
Sent: Thursday, March 30, 2017 12:54 PM
Subject: Re: [MinTamil] சார் நீங்க முஸ்லிமா?
 
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Jalasayanan

unread,
Mar 30, 2017, 5:58:06 AM3/30/17
to mint...@googlegroups.com

இவை வெறும் வெற்று வாதங்கள்.  இதனுள் எள்ளவும் உண்மை இருப்பதாய் தெரியவில்லை.

 

அன்னாரின் அரசியல் பின்புலத்தில் வீடு வேண்டும் என்றால் ஒரு கட்சிக்காரன் கூட வீடு கொடுக்கவில்லை என்பது உண்மை என்றால் இதுகாலம் அன்னாரும் அன்னார் சார்ந்த கட்சியும் சாதித்தது ஏதுமில்லை வெறும் வெற்று வாதங்களே என தெரிகிறது. இதனுள் மதம் திணிக்கப்பட்டதாய் தெரிகிறது.

 

முகநூல் எனும் பேஸ்புக்கில் சொந்த பெயரில் எழுதும் நேர்மையாளர் ஏன் தரகரிடம் புனைபெயரை சொன்னார் என்பது அவருக்கே வெளிச்சம்.

 

இது இசுலாமியர்களின் நிலைப்பாடு அல்ல, மாறாக ஒரு அரசியல்வாதியின் நிலைப்பாடு.  நான் ஒரு இசுலாமியரின் வீட்டில் குடியிருந்துள்ளேன்.  எனது பகுதியில் சில இசுலாமியர் இந்துக்களின் வீட்டில் குடியிருந்துள்ளனர்.

 

ஐதரபாத்தில் தன் வீட்டை பெரிய பூஜைக்காக சுத்தப்படுத்தி தந்த இசுலாமியரை சந்தித்துள்ளேன்.  ஆனால் சென்னையில் அசோக்நகரில் வீட்டில் சாமிப்படம் கூடாது என வீட்டை வாடகை தர மறுத்த இசுலாமியரை கண்டிருக்கிறேன்.  அதே வேலையில் ராஜஸ்தானில் உள்ள பிராமணர்கள் தமிழ் பிராமணர்களை பிராமணர்களாக மதிக்காத நிலையை எதிர்த்து வந்திருக்கிறேன்.

 

வாடகை வீடு என்பது மதம் மொழி இனம் சார்ந்த பிரச்சனை அல்ல மாறாக தனி நபர் எத்தகைய பிரச்சனைகளை கையாள தயாராக உள்ளனர் என்பதை பொருத்தே அமைகிறது.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

Thenee MK

unread,
Mar 30, 2017, 7:38:44 AM3/30/17
to mintamil
மலேசியாவில்தான் வாழ்கிறேன். மலேசியாவில் வீட்டு வாடகை கொடுப்பதும் எடுப்பதும் பெரிய பிரச்சனை அல்ல. இனமும் மதமும் அதற்கு தடங்கல் அல்ல. பணமே அதனை நிர்ணையிக்கின்றது.

சலுகை என்றது 'Bumiputra' (மண்ணின் மைந்தன்) என்று ஒரு பிரிவை ஏற்படுத்தி பாகிச்தான், வங்காளதேசம், மியான்மார், இந்தியா என்று பல்வேறு நாடுகளிலிருந்து வந்த முச்லிம் மக்களும் மண்ணின் மைந்தனாகி விடுகின்றனர். அதன் வழி பல்வேறு சலுகைகள் பெற்று வாழ்கின்றனர். இந்நாட்டில் பிறந்து இந்நாட்டில் வளர்ந்து இந்நாட்டு குடிமகன் என்று வாழும் பொழுதும் முச்லிம் அல்லாதவர் என்ற காரணத்தினால் இரண்டாம் தர சலுகைதான் என்று குறிப்பிட வந்தேன்.

அரசியல் சாசனம் என்று எடுத்துக் கொண்டால் இந்தியாவிற்கும் மலேசியாவிற்கும் ஏறக்குறைய ஒரே நியதியுடன்தான்  சட்டம் இயற்றப்பட்டது. அது பின்னர் பல்வேறு காலங்களில் மாற்றி அமைக்கப் பட்டு இன்று அதன் உண்மை நிலை மாறி வேற்றொரு சாசனமாக திகழ்கின்றது.

அது என்ன வட்டியில்லா கடன்? இச்லாமிய கோட்பாட்டைக் கொண்டு அந்த வீட்டை வாங்கி கொண்டு அதனுடன் இலாபத்தைச் சேர்த்து மறுபடியும் தங்களுக்கு விற்பதானது 'conventional bank' வட்டி கட்டுவதைப் போன்றதுதான்.

மனுஷ்ய புத்திரன் தனக்கு வீடு வாடகைக்கு கிடைக்காததை மதத்தை ஒட்டி எழுதிய கருத்து உள் நோக்கம் கொண்டதாகத் தெரிகின்றது. அதற்காக நமது நேரத்தைச் செலவழித்து வெட்டிப் போர் செய்ய வேண்டாமென்று எமது கருத்தை இத்தோடு நிறுத்திக் கொள்ள விரும்புகிறேன்.


அன்புடன் கமலநாதன்

--

Suba

unread,
Mar 30, 2017, 8:13:53 AM3/30/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram
2017-03-30 13:38 GMT+02:00 Thenee MK <ipohs...@gmail.com>:

சலுகை என்றது 'Bumiputra' (மண்ணின் மைந்தன்) என்று ஒரு பிரிவை ஏற்படுத்தி பாகிச்தான், வங்காளதேசம், மியான்மார், இந்தியா என்று பல்வேறு நாடுகளிலிருந்து வந்த முச்லிம் மக்களும் மண்ணின் மைந்தனாகி விடுகின்றனர்.
 
​உண்மையற்ற கருத்து. ​
​மிக மேம்போக்காக உள்ளது உங்கள் எழுத்து. இது வாசிப்போருக்குத் தவறான செய்தியையே கொண்டு செல்லும். ​

 
அதன் வழி பல்வேறு சலுகைகள் பெற்று வாழ்கின்றனர். இந்நாட்டில் பிறந்து இந்நாட்டில் வளர்ந்து இந்நாட்டு குடிமகன் என்று வாழும் பொழுதும் முச்லிம் அல்லாதவர் என்ற காரணத்தினால் இரண்டாம் தர சலுகைதான் என்று குறிப்பிட வந்தேன்.

அரசியல் சாசனம் என்று எடுத்துக் கொண்டால் இந்தியாவிற்கும் மலேசியாவிற்கும் ஏறக்குறைய ஒரே நியதியுடன்தான்  சட்டம் இயற்றப்பட்டது.
​இல்லை.
அது பின்னர் பல்வேறு காலங்களில் மாற்றி அமைக்கப் பட்டு இன்று அதன் உண்மை நிலை மாறி வேற்றொரு சாசனமாக திகழ்கின்றது.
​தவறான கருத்து. 
ஒருமுறை மலேசிய சுதந்திர அறிக்கையை முழுதாக தாங்கள் வாசித்து பின்னர் எழுத வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றேன்.

அது என்ன வட்டியில்லா கடன்?
​இதனை இணையத்திலேயே தேடி வாசிக்கலாம்.
இச்லாமிய கோட்பாட்டைக் கொண்டு அந்த வீட்டை வாங்கி கொண்டு அதனுடன் இலாபத்தைச் சேர்த்து மறுபடியும் தங்களுக்கு விற்பதானது 'conventional bank' வட்டி கட்டுவதைப் போன்றதுதான்.
​தவறான கருத்து. வட்டியில்லா கடனுக்கு விளக்கம் இது அல்ல.

மனுஷ்ய புத்திரன் தனக்கு வீடு வாடகைக்கு கிடைக்காததை மதத்தை ஒட்டி எழுதிய கருத்து உள் நோக்கம் கொண்டதாகத் தெரிகின்றது. அதற்காக நமது நேரத்தைச் செலவழித்து வெட்டிப் போர் செய்ய வேண்டாமென்று எமது கருத்தை இத்தோடு நிறுத்திக் கொள்ள விரும்புகிறேன்.

​நன்று

சுபா​
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Mar 30, 2017, 9:42:37 AM3/30/17
to mintamil, செல்வன்

சார், இங்கே காளைராசன் என்பது?

நான்தான், என்ன சார் விசயம்.

உங்களுக்கு .........ஐத் தெரியுமா?

நல்லாத் தெரியும், அவன் என் தம்பி, 32 வருடப் பழக்கம்.  அவனை ஏன் என்னிடம் விசாரிக்கின்றீர்கள்?

சார் நீங்க அப்படியே ஒரு எட்டு ஸ்டேசனுக்கு வந்து ஐயாவைப் பார்த்துவிட்டு வாருங்கள்.

ஐயாவைப் பார்க்க வேண்டுமா?  என்ன ஆச்சு என் தம்பி .................க்கு? ஏதேனும் விபத்தா?

அதெல்லாம் அவர் நன்றாகத்தான் இருக்கிறார்.  நீங்கள் உடனடியாக ஸ்டேசனுக்கு வாங்க.

சார், என் பெயர் காளைராசன், தம்பி ............க்கு என்ன ஆச்சு?  அவனைப் பற்றி ஏதும் சொல்லாமா என்னை அழைத்து வரச் சொல்லியுள்ளீர்களே, எனக்கு ஒரே பதட்டமா இருக்கு சார்.

நீங்க என்ன ஆளுக?

நாங்க ......

இந்தப் போட்டோவில் உங்களுடன் நிற்பது உங்களது தம்பியா? நல்லாப் பார்த்துச் சொல்லுங்க,

ஆமாம் சார். இவன்தான், இவனுடன் நிற்பது நான்தான். என்னசார் விசயம்.  என் தம்பிக்கு என்ன ஆச்சு, ஒன்றும் சொல்லாமா இழுத்து இழுத்துப் பேசுவதால் எனக்கு ஒரே பதட்டமா இருக்குசார். சொல்லுங்க அவனுக்கு என்ன ஆச்சு.

அவர் நன்றாகத்தான் உள்ளார்.  பதட்டப் படாம பதில் சொல்லுங்க, நீங்க எப்படி ................ஐத் தம்பி என்று அழைக்கின்றீர்கள்,

அவன் சின்னப்பிள்ளையாய் இருக்கும் போது எங்க வீட்டில்தான் குடியிருந்தார்கள்.  33 வருடமாகக் குடும்பப் பழக்கம்.  அவனது பிள்ளைகள் என்னைப் பெரியப்பா என்றுதான் கூப்பிடுவார்கள்.  எனது பிள்ளை அவனைச் சித்தப்பா என்றுதான் கூப்பிடும்.  அது சரி,  என் தம்பிக்கு என்ன சார் ஆச்சு.  என் பதட்டம் குறைய மாட்டேன் என்கிறது, சீக்கிரம் சொல்லுங்களேன்.

அதுதான் சொன்னேன்ல.  உங்க தம்பிக்கு ஒன்றும் இல்லை.  மதுரையில் நடந்து வெடிகுண்டு வழக்கில் இவரது பெயரும் சம்பந்தப்படுத்தப் பட்டிருக்கு.   இவரை விசாரிக்கும் போது உங்களுடன் இவர் நின்று எடுத்துக் கொண்ட படம் கிடைத்தது.  அதனால்தான் உங்களிடமும் விசாரிக்கிறோம்.

அப்படியெல்லாம் அவன் செய்பவன் இல்லை.  அவன் அல்லாவின் மேல் பற்றுக் கொண்டவன்.  ஐந்து வேலையும் தவறாது தொழுவான்.  அவனுக்கும் வெடிகுண்டிற்கும் துளியும் சம்பந்தமிருக்காது சார்.
......
......
......
......
......
என் தம்பி .............பேரிலேயே அதே தெருவில் மற்றொருவன் இருக்கிறான் சார். அவனை வேண்டுமானால் நீங்கள் விசாரிச்சுப் பாருங்கள்.

அவனைத்தான் முக்கிய குற்றவாளியாகப் பிடித்துள்ளோம்.  இருந்தாலும் இவரது பெயரும் அவனது பெயரும் ஒன்றாக இருப்பதால் இவரையும் விசாரித்து வருகிறோம்.

சார், என் தம்பியை நான் பார்க்கலாமா?

இல்லை.  அவரைத் தனியாக வைத்து விசாரித்து வருகிறோம்.  அவர் மீது குற்றம் ஏதும் இருப்பதாக எங்களுக்கு இதுவரை தெரியவில்லை.  இருந்தாலும் குற்றவாளியின் பெயரும் இவரது பெயரும் ஒன்றாக இருப்பதால் இவரையும் விசாரணையில் வைத்துள்ளோம்.  மற்றபடி இதில் நீங்கள் பதட்டம் அடையாதீர்கள்.

பதட்டம் அடையாதீர்கள்.
பதட்டம் அடையாதீர்கள்..
பதட்டம் அடையாதீர்கள் ... இது ஒரு கற்பனைக் கதைதான்....

--

Thenee MK

unread,
Mar 30, 2017, 11:07:42 AM3/30/17
to mintamil
அம்மணி, தங்களின் வயது எமது அனுபவம்.

தாங்கள் மலேசியாவில் பிறந்து வளர்ந்து சிட்டாய் பறந்து விட்டீர்கள். அதனால் உண்மை நிலையை ஓரளவே அறிந்து கொண்டு பேசுகின்றீர்கள். கீழ்மட்டத்தில் என்ன நடக்கின்றது என்பதை வெளி நாட்டிலிருந்து மேம்போக்காகப் பார்ப்போருக்குத் தெரியாது. அந்த நிலவரங்களை தினமும் சந்திக்கும் எம்மைப் போன்றோர் நன்கு அறிவார்.

எமது தொழில்துறை  சட்டத்தைச் சார்ந்தது. ஆதலால் தங்களை விட மலேசிய அரசியல் சாசனத்ததை நன்கு அறிந்து வைத்துள்ளேன். அதனைப் பற்றி அறிந்துதான் கருத்து கூறினேன்.

சரியா கோட்பாட்டைக் கொண்டு மலேசியாவின் சிவில் சட்டங்களை அடிப்படையாகக் கொண்டு இசுலாமிய வங்கி கடன் என்பது உண்மையில் பசுத்தோல் போர்த்திய புலி.

வட்டிக்கு கடன் கொடுக்கும் வாணிப வங்கிகளின் வட்டி விகிதமும், இசுலாமிய வங்கிக் கடனுக்கு விதிக்கப் படும் இலாபமும் ஒரே நிலைப் பட்டவை. பெயர்தான் வேறே ஒழிய வங்கி சுரண்டல் என்பது ஒரே நிலைதான். அத்தகைய இசுலாமிய வங்கி கடன் ஒப்பந்தங்களை செய்வதும் எமது தினசரி கடமைகளில் ஒன்று. அதனால் அதன் உட்புறமும் வெளிப்புறமும் நன்கு அறிவேன்.

நன்றி.

அன்புடன் கமலநாதன்



Suba

unread,
Mar 30, 2017, 11:15:38 AM3/30/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram
2017-03-30 17:07 GMT+02:00 Thenee MK <ipohs...@gmail.com>:
அம்மணி, தங்களின் வயது எமது அனுபவம்.

தாங்கள் மலேசியாவில் பிறந்து வளர்ந்து சிட்டாய் பறந்து விட்டீர்கள்.
​இல்லை. எனது 27வது வயதில் தன நாட்டை விட்டு வெளியேறினேன். படித்து வேலைபார்த்து அதன் பின்னர் தான். ​

 
அதனால் உண்மை நிலையை ஓரளவே அறிந்து கொண்டு பேசுகின்றீர்கள்.
கீழ்மட்டத்தில் என்ன நடக்கின்றது என்பதை வெளி நாட்டிலிருந்து மேம்போக்காகப் பார்ப்போருக்குத் தெரியாது. அந்த நிலவரங்களை தினமும் சந்திக்கும் எம்மைப் போன்றோர் நன்கு அறிவார்.

​அப்படியா? நீங்கள் நம்பிக்கொண்டிருந்தா லது உங்களுக்கு சரிதான்.
எமது தொழில்துறை  சட்டத்தைச் சார்ந்தது. ஆதலால் தங்களை விட மலேசிய அரசியல் சாசனத்ததை நன்கு அறிந்து வைத்துள்ளேன். அதனைப் பற்றி அறிந்துதான் கருத்து கூறினேன்.
​சட்டத்துரை சார்ந்தவர் என்கின்றீர்கள். அடிப்படை விசயமான எது அதிகாரப்பூர்வ மதம், மொழ் இஎன்ற செய்தியை தனக்கல் அறியாது இருப்பது வியப்பாக உள்ளது.

சரியா கோட்பாட்டைக் கொண்டு மலேசியாவின் சிவில் சட்டங்களை அடிப்படையாகக் கொண்டு இசுலாமிய வங்கி கடன் என்பது உண்மையில் பசுத்தோல் போர்த்திய புலி.
நான் அதனால் பயனடைந்திருக்கின்றேன். எனது அனுபவத்தைத் தான் இங்கு பகிர்ந்து கொண்டிருக்கின்றேன். எந்த ஒரு சிறிய ஏமாற்றுத்தனமும் எனது வீடு வாங்குதலில் நிகழவில்லை.  ஏனைய வங்கிகளுக்கு நான் கட்டவேண்டிய  வட்டித்தொகையான 20% வட்டி இல்லாமலேயே கட்டி முடிக்க இது எனக்கு உதவியது. 

 

வட்டிக்கு கடன் கொடுக்கும் வாணிப வங்கிகளின் வட்டி விகிதமும், இசுலாமிய வங்கிக் கடனுக்கு விதிக்கப் படும் இலாபமும் ஒரே நிலைப் பட்டவை. பெயர்தான் வேறே ஒழிய வங்கி சுரண்டல் என்பது ஒரே நிலைதான். அத்தகைய இசுலாமிய வங்கி கடன் ஒப்பந்தங்களை செய்வதும் எமது தினசரி கடமைகளில் ஒன்று. அதனால் அதன் உட்புறமும் வெளிப்புறமும் நன்கு அறிவேன்.

​நல்லது. உங்கள் நம்பிக்கை தொடரட்டும்.

சுபா

Buhari

unread,
Mar 30, 2017, 11:16:58 AM3/30/17
to சி. ஜெயபாரதன், vallamai, mintamil, செல்வன், vannan vannan, vaiyavan mspm, veeramani k, iraamaki, C.R. Selvakumar, Oru Arizonan, Elangovan N, Aravindan Neelakandan, Semmal Aravajy, senkodi thamizhan, Anna Kannan, Anne Josephine
எனக்கு இங்கு இடமில்லையா என்று இதுவரை கேட்டுக்கொண்டிருந்த நான் இப்போது முதல் முறையாகக் கேட்கிறேன், ‘‘எங்களுக்கு இங்கு இடமில்லையா?’’ 

மதவெறியற்றவர்களையும் 
மதவெறியர்களாய் ஆக்குவது 
பிறமத வெறுப்பாளர்கள்தாம்

மதப் பற்றாளர்களால்
மத வெறியர்களும்
மத நல்லிணக்கக்காரர்களாய் 
ஆவது எப்போது?




அன்புடன் புகாரி
+1-416-500-0972

Thenee MK

unread,
Mar 30, 2017, 11:30:15 AM3/30/17
to mintamil
மலேசிய சாசனத்தில் இசுலாம் அதிகாரப்பூர்வமான மதம் என்று எழுதியதின் நிலைப்பாட்டை 1974- ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் (சுப்ரீம் கோர்டு) கொடுத்த விளக்கத்தை தாங்கள் படித்தால் அதன் உண்மை நிலை புரியும். மலாய் மொழி தேசிய மொழி என்பதில் எந்த ஒரு தர்க்கத்தையும் முன் வைக்கவில்லை.

நன்றி. இத்தோடு நிறுத்தி விடுவோம்.

அன்புடன் கமலநாதன்

 

Thenee MK

unread,
Mar 30, 2017, 11:33:43 AM3/30/17
to mintamil
ஒரு நாணயத்திற்கு இருபக்கம் உண்டு.

ஒற்றுமை, நல்லிணக்கம் என்பது ஒரு சாரரை சார்ந்தது அல்ல. இரு சாராரும் சேர்ந்தே நல்லிணக்கத்தை நாடுவது நலம். ஒரு கை தட்டினால் ஓசை எழும்பாது.

நட்புடன் கமலநாதன்




--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/jxGm-BY7eCI/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Aravindan Neelakandan

unread,
Mar 30, 2017, 11:45:04 AM3/30/17
to Buhari, சி. ஜெயபாரதன், vallamai, mintamil, செல்வன், vannan vannan, vaiyavan mspm, veeramani k, iraamaki, C.R. Selvakumar, Oru Arizonan, Elangovan N, Semmal Aravajy, senkodi thamizhan, Anna Kannan, Anne Josephine
I think it is a template-cooked-up story. Manusha Puthran is a crypto-Islamist and a Dravidian racist masquerading as a humanist poet. A poet he is a mediocre poet. And this story is in template sync with another urban legend spread in North Indian media- especially Mumbai that Muslims were denied accomodation. Perhaps Muslims should also introspect given the Islamist terror infiltration in their society. Lakshmi Manivannan another Tamil poet who lives in Kanyakumari district has pointed out in Muslim areas Hindus are denied houses more vehemently, unless perhaps for Dawa purposes.  

Buhari

unread,
Mar 30, 2017, 11:57:31 AM3/30/17
to Aravindan Neelakandan, சி. ஜெயபாரதன், vallamai, mintamil, செல்வன், vannan vannan, vaiyavan mspm, veeramani k, iraamaki, C.R. Selvakumar, Oru Arizonan, Elangovan N, Semmal Aravajy, senkodi thamizhan, Anna Kannan, Anne Josephine
வீடுகேட்டுப் போனால் இப்படியும் பழிபாவங்களா?

மனுஷ்யபுத்திரன் இஸ்லாமியர்களுக்கு எதிரானவர் என்பதுதான் தமிழ்நாட்டின் நிலை. இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல அனைத்து மதத்தினருக்கும். அது அவர் விருப்பம். யாரும் தலையிடுவதற்கில்லை. ஆனால் அவரின் பெயரையே காரணமாய் வைத்து வீடுதராததற்கு இப்படியெல்லாம் மேலும் பழிபாவங்களா என்று அறியும்போது  வேதனை அதிகரிக்கிறது.

திராவிட பற்றாளர் என்றால் அதை மறுப்பதற்கில்லை. அதனாலென்ன? திராவிடப் பற்றுடையவர்களுக்கு வீடு தரமாட்டீர்களா? ஏன்?

அக்ரஹாரத்தில் மற்றவர்களுக்கு வீடுதரமாட்டார்கள் என்றால் பரவாயில்லை. ஆனால் சென்னையில் எல்லோரும் கலந்துதான் வாழ்கிறார்கள். அங்கே வீடு கிடையாது என்று சொல்லும் நிலை சமீபத்திய நிலைப்பாடு என்றே நான் காண்கிறேன்.

முஸ்லிம் குடியிருப்புப் பகுதியில் முஸ்லிம் அல்லாதவர்கள் என்று வீடு கேட்பதுகூட இல்லை, பிராமண குடியிருப்புப் பகுதிகளில் மற்றவர்கள் வீடு தேடி அலைவதும் இல்லை. ஆனால் அப்படியான குடியிருப்புகள் பெருநகரங்களில் மறைந்துவருகின்றன.

நாம் பின்னோக்கிச் செல்ல வேண்டுமா அல்லது முன்னோக்கியா?

அன்புடன் புகாரி
+1-416-500-0972

Aravindan Neelakandan

unread,
Mar 30, 2017, 12:12:54 PM3/30/17
to Buhari, சி. ஜெயபாரதன், vallamai, mintamil, செல்வன், vannan vannan, vaiyavan mspm, veeramani k, iraamaki, C.R. Selvakumar, Oru Arizonan, Elangovan N, Semmal Aravajy, senkodi thamizhan, Anna Kannan, Anne Josephine
//திராவிட பற்றாளர் என்றால் அதை மறுப்பதற்கில்லை. அதனாலென்ன? திராவிடப் பற்றுடையவர்களுக்கு வீடு தரமாட்டீர்களா? ஏன்?//

புகாரி, நான் தனிப்பட்ட முறையில் எந்த மதத்தவருக்கும் வீடு கொடுப்பேன் ஆனால் திராவிட இனவாதிகளுக்கு கொடுக்க மாட்டேன். தவ்ஹீத் ஜமாத், ஜமாத்தியே இஸ்லாமி போன்ற அமைப்புகளைச் சார்ந்தவர்களுக்கும் கொடுக்க மாட்டேன். இங்கு நான் மனுஷ புத்திரனை ஒரு மறைமுக இஸ்லாமியத்துவர் - திராவிட இனவாதி என கூறியது எதற்கெனில் எனவே அவர் பொய் சொல்ல முகாந்திரமுள்ளது என்பதை சுட்டுவதற்கு. 

2017-03-30 21:27 GMT+05:30 Buhari <buh...@gmail.com>:
வீடுகேட்டுப் போனால் இப்படியும் பழிபாவங்களா?

மனுஷ்யபுத்திரன் இஸ்லாமியர்களுக்கு எதிரானவர் என்பதுதான் தமிழ்நாட்டின் நிலை. இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல அனைத்து மதத்தினருக்கும். அது அவர் விருப்பம். யாரும் தலையிடுவதற்கில்லை. ஆனால் அவரின் பெயரையே காரணமாய் வைத்து வீடுதராததற்கு இப்படியெல்லாம் மேலும் பழிபாவங்களா என்று அறியும்போது  வேதனை அதிகரிக்கிறது.

திராவிட பற்றாளர் என்றால் அதை மறுப்பதற்கில்லை. அதனாலென்ன? திராவிடப் பற்றுடையவர்களுக்கு வீடு தரமாட்டீர்களா? ஏன்?

அக்ரஹாரத்தில் மற்றவர்களுக்கு வீடுதரமாட்டார்கள் என்றால் பரவாயில்லை. ஆனால் சென்னையில் எல்லோரும் கலந்துதான் வாழ்கிறார்கள். அங்கே வீடு கிடையாது என்று சொல்லும் நிலை சமீபத்திய நிலைப்பாடு என்றே நான் காண்கிறேன்.

முஸ்லிம் குடியிருப்புப் பகுதியில் முஸ்லிம் அல்லாதவர்கள் என்று வீடு கேட்பதுகூட இல்லை, பிராமண குடியிருப்புப் பகுதிகளில் மற்றவர்கள் வீடு தேடி அலைவதும் இல்லை. ஆனால் அப்படியான குடியிருப்புகள் பெருநகரங்களில் மறைந்துவருகின்றன.

நாம் பின்னோக்கிச் செல்ல வேண்டுமா அல்லது முன்னோக்கியா?

அன்புடன் புகாரி
+1-416-500-0972

Suba

unread,
Mar 30, 2017, 12:18:46 PM3/30/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram
2017-03-30 18:12 GMT+02:00 Aravindan Neelakandan <aravindan....@gmail.com>:
//திராவிட பற்றாளர் என்றால் அதை மறுப்பதற்கில்லை. அதனாலென்ன? திராவிடப் பற்றுடையவர்களுக்கு வீடு தரமாட்டீர்களா? ஏன்?//

புகாரி, நான் தனிப்பட்ட முறையில் எந்த மதத்தவருக்கும் வீடு கொடுப்பேன் ஆனால் திராவிட இனவாதிகளுக்கு கொடுக்க மாட்டேன். தவ்ஹீத் ஜமாத், ஜமாத்தியே இஸ்லாமி போன்ற அமைப்புகளைச் சார்ந்தவர்களுக்கும் கொடுக்க மாட்டேன்.

​எந்த காரணத்தினால்?​

Buhari

unread,
Mar 30, 2017, 12:23:28 PM3/30/17
to Aravindan Neelakandan, சி. ஜெயபாரதன், vallamai, mintamil, செல்வன், vannan vannan, vaiyavan mspm, veeramani k, iraamaki, C.R. Selvakumar, Oru Arizonan, Elangovan N, Semmal Aravajy, senkodi thamizhan, Anna Kannan, Anne Josephine
அரவிந்தன்,

நான் வீடு கொடுக்கும்போது ஒழுக்கமானவரா, சுத்தமானவரா, வன்முறையில் ஈடுபடாதவரா என்றுதான் பார்ப்பேன். சாதியையோ மதத்தையோ, இனத்தையோ, மொழியையோ ஒருபோதும் பார்க்க மாட்டேன்.

திராவிட இனத்தவர் என்ன தவறு செய்கிறார்கள்? எல்லாவற்றையும் வடக்குக்கு இழந்து தேந்த தெற்காளர்களாய்த்தானே நிற்கிறார்கள்?

தென்னிந்தியர்கள் எல்லோரும் திராவிட இனத்தவர்தானே?

ஜமாத்துகள் என்றதும் பாகிஸ்தானில் வன்முறையில் ஈடுபடும் ஜமாத்துகளோடு ஒப்பிடுவீர்களா? அதில் எந்த நியாயமும் இல்லையே?

கருத்தால் மாற்றுடையவர்கள் வேறு வேறு ஜமாத்தில் இருக்கிறார்கள். மற்றபடி அவர்கள் ஒன்றும் தீவிரவாதிகள் இல்லையே?

ஆரிய சமாஜ் என்றதும் அவர்களை வெறுக்க வேண்டுமா? ஏன்? அவர்கள் ஏதும் வன்முறையில் ஈடுபட்டார்களா? அவர்கள் கருத்துக்கள் அவர்கள் எண்ணங்கள் அவர்கள் பற்று அவர்களுக்கு.

ஏன் துவேசம்?

ஏன் வெறுப்பு?

நாம் மனிதர்கள் இல்லையா?

மனுஷ்யபுத்திரன் என்ற பெயர் அப்படியே வடமொழியைக் கட்டித் தழுவிக் கிடக்கிறது. என்றால் அவர் ஆரிய இனவாதியா? 

திராவிட இனவாதி என்று ஒரு நடுநிலையாளரைக் கூறும் நீங்கள் ஆரிய இனவாதியா?

நாம் திராவிடத்தில் இருக்கலாம் ஆரியத்தில் இருக்கலாம் இந்துவாக இருக்கலாம் முஸ்லிமாக இருக்கலாம் கிருத்துவராக இருக்கலாம், எதில் இருந்தாலும் மனிதர்களாய் இருத்தல் அல்லவா அவசியமான ஒன்று

எங்கிருந்தபோதும் பண்போடு இருக்க வேண்டும் வன்முறையற்று இருக்க வேண்டும். தீங்கு என்ன இதயத்தோடு இருக்க வேண்டும்.

மனுஷ்யபுத்திரன் இஸ்லாமியத் தீவிரவாதி என்று சொல்வீர்கள் போல இருக்கிறதே? ஏன் இந்த வெறுப்பும் வேற்றுமையும் அரவிந்தன்?





அன்புடன் புகாரி
+1-416-500-0972

Buhari

unread,
Mar 30, 2017, 12:29:29 PM3/30/17
to Aravindan Neelakandan, சி. ஜெயபாரதன், vallamai, mintamil, செல்வன், vannan vannan, vaiyavan mspm, veeramani k, iraamaki, C.R. Selvakumar, Oru Arizonan, Elangovan N, Semmal Aravajy, senkodi thamizhan, Anna Kannan, Anne Josephine
M.M.Abdullah - Facebook page

மனுஷ்யபுத்திரன் வீடு கிடைக்காததற்கு வருந்தி எழுதிய கட்டுரையை பலரும் மிகைப்படுத்தி எழுதி இருப்பதாகக் கூறுகின்றனர். அவரை விடுங்கள். என் கதைக்கு வருகிறேன்.

கடந்த மூன்று வருடங்களாக நான் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் அயல் நாட்டில் இருந்து வரும் தனது மகனுக்கு வீடு தேவைப்படுவதாய் சொல்லி காலி செய்ய முடியுமா என்று இந்த மாதம் ஆரம்பத்தில் கேட்டார். அக்ரிமென்ட்படி நவம்பர் வரை காலம் இருக்கிறது. இருப்பினும் பொருளுக்கு உரியவர் அதைக் கேட்கும் போது குடுக்க வேண்டும் என்று முகமது இஸ்மாயில் என்னை சொல்லிச் சொல்லி வளர்த்ததால் அடுத்த மாதம் 15 ஆம் தேதிக்குள் காலி செய்து தருவதாக வாக்கு குடுத்தேன். முகமது இஸ்மாயில் யார் என்று யோசிப்பவர்கள் என் இனிஷியலைப் பார்க்கவும்

துவங்கியது வீடு தேடும் படலம். நண்பரிடம் சொன்னேன். "எனது ஃபிளாட்டிலேயே ஒரு வீடு இருக்கிறது.. நான் சொன்னால் ஓனர் கேட்பார்..டோன்ட் ஒர்ரி" என்றார். அடுத்த நாள் வந்து " என்னண்ணே முஸ்லீம்னா குடுக்க மாட்டேன்னு" அந்த ஆள் சொல்றாரு என்று அதிர்ச்சியாக என்னிடமே கேட்டார். புன்னகைத்து திரும்பினேன். அந்த நண்பர் சிறீராஜா சொக்கர். கடந்த சட்டமன்ற தேர்தலில் சிவகாசி காங்கிரஸ் வேட்பாளர்.

இதன் பிறகு லாயிட்ஸ் ரோட்டில் ஒரு வீடு பார்க்கச் சென்றேன். கூடவே நண்பர் கார்த்திக். பேரைக் கேட்ட உரிமையாளர் முஸ்லீம்ஸ்க்கு தர்றதில்லைங்க என்றார்! கார்த்திக் மட்டும்தான் கடுப்பானார். நான் இல்லை.

ஒரு விசயம் கவனிச்சு இருக்கீங்களா? என்னிடம் பழகும் அத்தனை பேரையும் அண்ணன் அக்கா என்றும் வயதில் சிறியோரையும் வாங்க போங்க என்றும் அழைப்பேன்.வெகு சிலரைதான் வா போ என்பேன். அப்படி ஒருத்தி திவ்யா. அண்ணனுக்காக வீடு பார்க்க கிளம்பி புரோக்கர்களிடம் அண்ணனுக்காக இன்னமும் பேசிக்கொண்டு இருக்கிறாள். நோ யூஸ். சத்தியமாய் என் பெயர் ராசி மட்டும்தான் காரணமாய் இருக்கிறது.

எப்படியும் சொன்ன வாக்கின்படி வரும் 15 பதினைந்தாம் தேதிக்குள் வீட்டை ஒப்படைத்து விடுவேன். அதற்குள் வீடு கிடைக்காவிட்டால் தெருவில் நின்றாவது குடுத்து விடுவேன். எனக்கு வீடு வழங்காத உரிமையாளர்களைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. காரணம் என்னைத் தாங்குவது சிறீராஜாக்களும், கார்த்திகளும், என் அன்பு திவ்யாகளும்.


அன்புடன் புகாரி
+1-416-500-0972

2017-03-30 12:23 GMT-04:00 Buhari <buh...@gmail.com>:
அரவிந்தன்,

நான் வீடு கொடுக்கும்போது ஒழுக்கமானவரா, சுத்தமானவரா, வன்முறையில் ஈடுபடாதவரா என்றுதான் பார்ப்பேன். சாதியையோ மதத்தையோ, இனத்தையோ, மொழியையோ ஒருபோதும் பார்க்க மாட்டேன்.

திராவிட இனத்தவர் என்ன தவறு செய்கிறார்கள்? எல்லாவற்றையும் வடக்குக்கு இழந்து தேந்த தெற்காளர்களாய்த்தானே நிற்கிறார்கள்?

தென்னிந்தியர்கள் எல்லோரும் திராவிட இனத்தவர்தானே?

ஜமாத்துகள் என்றதும் பாகிஸ்தானில் வன்முறையில் ஈடுபடும் ஜமாத்துகளோடு ஒப்பிடுவீர்களா? அதில் எந்த நியாயமும் இல்லையே?

கருத்தால் மாற்றுடையவர்கள் வேறு வேறு ஜமாத்தில் இருக்கிறார்கள். மற்றபடி அவர்கள் ஒன்றும் தீவிரவாதிகள் இல்லையே?

ஆரிய சமாஜ் என்றதும் அவர்களை வெறுக்க வேண்டுமா? ஏன்? அவர்கள் ஏதும் வன்முறையில் ஈடுபட்டார்களா? அவர்கள் கருத்துக்கள் அவர்கள் எண்ணங்கள் அவர்கள் பற்று அவர்களுக்கு.

ஏன் துவேசம்?

ஏன் வெறுப்பு?

நாம் மனிதர்கள் இல்லையா?

மனுஷ்யபுத்திரன் என்ற பெயர் அப்படியே வடமொழியைக் கட்டித் தழுவிக் கிடக்கிறது. என்றால் அவர் ஆரிய இனவாதியா? 

திராவிட இனவாதி என்று ஒரு நடுநிலையாளரைக் கூறும் நீங்கள் ஆரிய இனவாதியா?

நாம் திராவிடத்தில் இருக்கலாம் ஆரியத்தில் இருக்கலாம் இந்துவாக இருக்கலாம் முஸ்லிமாக இருக்கலாம் கிருத்துவராக இருக்கலாம், எதில் இருந்தாலும் மனிதர்களாய் இருத்தல் அல்லவா அவசியமான ஒன்று

எங்கிருந்தபோதும் பண்போடு இருக்க வேண்டும் வன்முறையற்று இருக்க வேண்டும். தீங்கு என்ன இதயத்தோடு இருக்க வேண்டும்.

மனுஷ்யபுத்திரன் இஸ்லாமியத் தீவிரவாதி என்று சொல்வீர்கள் போல இருக்கிறதே? ஏன் இந்த வெறுப்பும் வேற்றுமையும் அரவிந்தன்?





அன்புடன் புகாரி
+1-416-500-0972

சி. ஜெயபாரதன்

unread,
Mar 30, 2017, 12:35:48 PM3/30/17
to Aravindan Neelakandan, vallamai, mintamil, செல்வன், vannan vannan, vaiyavan mspm, veeramani k, iraamaki, C.R. Selvakumar, Oru Arizonan, Elangovan N, Semmal Aravajy, senkodi thamizhan, Anna Kannan, Anne Josephine, Asan Buhari, manushya...@gmail.com
தற்போது தமிழ்நாட்டில் வாழும் தமிழக முற்போக்குச் சமூக வாதிகள், மனுஷ்ய புத்திரன் போன்ற நடுத்தரச் சிறுபான்மை இஸ்லாமியருக்கு வீடு வாடகைக்குக் கிடைக்க வகுக்கும் வழிகள் என்ன ?

சி. ஜெயபாரதன் 
2017-03-30 12:23 GMT-04:00 Buhari <buh...@gmail.com>:
அரவிந்தன்,

நான் வீடு கொடுக்கும்போது ஒழுக்கமானவரா, சுத்தமானவரா, வன்முறையில் ஈடுபடாதவரா என்றுதான் பார்ப்பேன். சாதியையோ மதத்தையோ, இனத்தையோ, மொழியையோ ஒருபோதும் பார்க்க மாட்டேன்.

திராவிட இனத்தவர் என்ன தவறு செய்கிறார்கள்? எல்லாவற்றையும் வடக்குக்கு இழந்து தேந்த தெற்காளர்களாய்த்தானே நிற்கிறார்கள்?

தென்னிந்தியர்கள் எல்லோரும் திராவிட இனத்தவர்தானே?

ஜமாத்துகள் என்றதும் பாகிஸ்தானில் வன்முறையில் ஈடுபடும் ஜமாத்துகளோடு ஒப்பிடுவீர்களா? அதில் எந்த நியாயமும் இல்லையே?

கருத்தால் மாற்றுடையவர்கள் வேறு வேறு ஜமாத்தில் இருக்கிறார்கள். மற்றபடி அவர்கள் ஒன்றும் தீவிரவாதிகள் இல்லையே?

ஆரிய சமாஜ் என்றதும் அவர்களை வெறுக்க வேண்டுமா? ஏன்? அவர்கள் ஏதும் வன்முறையில் ஈடுபட்டார்களா? அவர்கள் கருத்துக்கள் அவர்கள் எண்ணங்கள் அவர்கள் பற்று அவர்களுக்கு.

ஏன் துவேசம்?

ஏன் வெறுப்பு?

நாம் மனிதர்கள் இல்லையா?

மனுஷ்யபுத்திரன் என்ற பெயர் அப்படியே வடமொழியைக் கட்டித் தழுவிக் கிடக்கிறது. என்றால் அவர் ஆரிய இனவாதியா? 

திராவிட இனவாதி என்று ஒரு நடுநிலையாளரைக் கூறும் நீங்கள் ஆரிய இனவாதியா?

நாம் திராவிடத்தில் இருக்கலாம் ஆரியத்தில் இருக்கலாம் இந்துவாக இருக்கலாம் முஸ்லிமாக இருக்கலாம் கிருத்துவராக இருக்கலாம், எதில் இருந்தாலும் மனிதர்களாய் இருத்தல் அல்லவா அவசியமான ஒன்று

எங்கிருந்தபோதும் பண்போடு இருக்க வேண்டும் வன்முறையற்று இருக்க வேண்டும். தீங்கு என்ன இதயத்தோடு இருக்க வேண்டும்.

மனுஷ்யபுத்திரன் இஸ்லாமியத் தீவிரவாதி என்று சொல்வீர்கள் போல இருக்கிறதே? ஏன் இந்த வெறுப்பும் வேற்றுமையும் அரவிந்தன்?





அன்புடன் புகாரி
+1-416-500-0972

Buhari

unread,
Mar 30, 2017, 12:39:08 PM3/30/17
to சி. ஜெயபாரதன், Aravindan Neelakandan, vallamai, mintamil, செல்வன், vannan vannan, vaiyavan mspm, veeramani k, iraamaki, C.R. Selvakumar, Oru Arizonan, Elangovan N, Semmal Aravajy, senkodi thamizhan, Anna Kannan, Anne Josephine, manushya...@gmail.com
அருமையான கேள்வி ஜெயபாரதன்!

எல்லாம் சுயநலத்திற்காக அரசியல் பதவிகளுக்காக வாய் கிழியப் பேசுவார்கள், அவ்ளோதான் ;-)

அன்புடன் புகாரி
+1-416-500-0972

Oru Arizonan

unread,
Mar 30, 2017, 9:18:03 PM3/30/17
to mintamil


2017-03-29 23:41 GMT-07:00 Thenee MK <ipohs...@gmail.com>:
//ஆகையால், வேற்றுமையே ஒட்டு மொத்த உருவகமாக திகழும் இந்தியாவில் இத்தகைய குறையை நிறைவாகக் கொண்டு தமிழருடன் ஒத்து வாழும் நெளிவு சுழிவுகளை மதம் மாறியோரும் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதே அறிவுடைமையாகும். //

இக்கருத்துடன் எனக்கு உடன்பாடில்லை, கமலநாதன் ஐயா!

"பூமிபுத்ரா" என்று,  மலேசிய முஸ்லிம்களைமட்டும் அழைத்து, மற்றவருக்கு உரிமையை மறுத்துவரும் செயல் நடக்குமிடத்தில் [மலேசியாவில்] இருந்துகொண்டு இந்தியாவைக் குறைகூறுவது எந்தவிதத்தில் நியாயமாகும், கமலநாதன் ஐயா?!  

நீங்கள் மலேசிய முஸ்லீம் அல்லவே!  அவர்களுக்கு அங்கிருக்கும் எல்லா உரிமைகளும் சைவரான, தமிழரான உங்களுக்கு உள்ளனவா?

முன்பே இதுபற்றி நான் தங்களுக்கு எழுதியிருக்கிறேன்.  இந்தியாவில் முஸ்லிம்களுக்கு இருக்கும் உரிமை, பாகிஸ்தானில் இருக்கும் முஸ்லிமகளுக்குக்கூட இல்லை.  இதை  பாகிஸ்தான் முஸ்லிமே என்னிடம் சொல்லி வருந்தியிருக்கிறார்.

தமிழன் சமயம் மாறியதும் தன்னைத் தமிழன் என்று சொல்லிக்கொள்வதில்லை.  தமிழைத் தாய்மொழியாகக்கொண்ட ஒரு இந்து -- அவன் சைவனோ, வைணவனோ, வைதிகனோ -- தன்னைத் தமிழன் என்றுதான் சொல்லிக்கொள்கிறான்இதை அண்மையில் இலங்கை சென்றுவந்த நான் நேரில் அறிந்திருக்கிறேன்.  .  அவ்வகையில் தங்கள் கருத்துடன் நான் உடன்படுகிறேன்.

நான் சமயவெறிகொண்டவன் அல்லன்.  நான் சிறுவனாக இருந்தபோது, எனது தாய்வாழிப்பாட்டனார், அக்கிரகாரத்தில் தனது வீட்டிலேயே முன்பகுதியைத் தடுத்து, ஒரு முஸ்லீம் தையல்காரருக்குக் கடையமைத்துக்கொடுத்து உதவிசெய்திருக்கிறார்.  அப்படிப்பட்ட நல்லவரின் வளர்ப்பு நான்.  
 
வடஇந்தியாவில் ஒரு இந்து-முஸ்லீம் கலவரத்தில் ஒரு வயோதிக முஸ்லீம் தம்பதிகளுக்கு   சிலநாள்கள் இடமளித்து நான் அவர்கள் உயிரைக் காப்பாற்றியிருக்கிறேன்.

பரமக்குடியில் என் தாய் கர்ப்பமாக இருந்தபோது, அவருக்கு குமட்டல் எடுக்கக்கூடாது என்று அதே குடியிருப்பிலுள்ள முஸ்லிம் குடும்பம் சைவ உணவையே சமைத்துவந்தனர்.

அப்பொழுது அவரவர் சமய நம்பிக்கையை அனைவரும் மதித்துவந்தனர்.  அது இன்னும் தொடர்கிறதா என்று நம்மை நாமே கேட்டுக்கொண்டால்போதும்.  

மனுஷ்யபுத்திரனின் பட்சாதாபத்திற்குச் சரியான விடைகிடைக்கும்.

அன்புடன்,
ஒரு அரிசோனன் 

Oru Arizonan

unread,
Mar 30, 2017, 9:36:00 PM3/30/17
to mintamil


2017-03-30 0:14 GMT-07:00 Suba <ksuba...@gmail.com>:

//மலேசியாவில் இஸ்லாம் அதிகாரப்பூர்வ மதம்
மலேசியாவில் மலாய் மொழி அதிகாரப்பூர்வ மொழி. 
இது சுதந்திரத்தின் போது சட்டமாக்கப்பட்ட விசயம்.

இந்தியாவின் நிலை அது அல்ல என்பதை ஒப்பீட்டிற்கு வரும் போது நாம் நிச்சயம் குறிப்பிட வேண்டும்.//

தங்களுடைய  இக்கருத்துடன் எனக்கு உடன்பாடில்லை, உயர்திரு சுபா அவர்களே!

மலேசியாவின் இந்த முடிவு [இஸ்லாம் அதிகாரபூர்வமான சமயம், மலையமொழி அதிகாரப்பூர்வமான மொழி] சரியல்ல என்று சொல்ல உங்களுக்குத் சுதந்திரம் -- மலேசியப்பிரஜையான உங்களுக்கோ, அல்லது கமலநாதன் ஐயாவுக்கோ இருக்கிறதா?

இந்தியாவைப்பற்றி என்னவேண்டுமானாலும் குறைகூறலாம்.  அச்சுதந்திரம் இந்தியப்பிரஜை இல்லாத உங்களுக்குக்கூட இருக்கிறது.  

 எனவே, மலேசியாவின் முடிவு சரி என்பதுபோல நீங்கள் எழுதுவது, எல்லாவிதத்திலும் சமத்துவத்தை விரும்பும் தங்களிடமிருந்து வருகிறதே என்பதைக்காணும்போது வியப்பாக உள்ளது.

//மலாய் இனத்தவர் வறுமைக்கோட்டின் அடித்தளத்தில் இருந்தமையால் அவர்களுக்காக, ஐந்தாண்டு திட்டம், பத்தாண்டு திட்டம் என தொடங்கப்பட்டு அவர்களது வாழ்வியல் நிலை உயர்த்த இந்தச் சட்டங்கள் உதவின. இதனால் சீன, இந்திய மக்கள் கல்வி, வேலை வாய்ப்பு என்ற வகையில் முக்கியத்துவம் கொடுக்கப்படாமல் பாதிக்கப்பட்டாலும்  மலேசிய பிரஜையாகத்தான் அடையாளம் காணப்படுகின்றார்கள்.//

 இந்தியாவிலும் பின்தங்கியோருக்கு அப்படித்தானே செய்யப்பட்டுவந்திருக்கிறது?!

மலாய் இனத்தவர் அனைவருமே வறுமைக்கோட்டுக்கு அடித்தளத்தில் இருந்தார்கள்?  தமிழர்களும்தானே காலனித்துவ ஆட்சியில் எடுபிடிகளாக [தாங்கள் கீழே எழுதியுள்ளபடி] இருந்தார்கள்?  அவர்களுக்கென்று ஏன் தனிச் சலுகைகள் கொடுக்கப்படவில்லை?  அவர்களில் பெரும்பாலானோர் மலேசிய மண்ணில் பிறந்தவர்கள்தாமே?  அவர்கள் "பூமிபுத்திரர்கள்" அல்லோரா?

//மலேசியாவில் வீடு வாடகைக்கு கொடுப்பது கூட இந்த வகை பிரச்சனை நான் கேள்விப்பட்டதில்லை. என் வீட்டில் இப்போது வாடகைக்கு குடித்தனம் இருப்பவர் கூட ஒரு மலாய்க்காரர் குடும்பத்தினர் தான்.//

 நான் கமலநாதன் அய்யாவுக்கு எழுதிய மறுமொழியில் ஒருபகுதியை மீண்டும் தருகிறேன்.  எங்கும் [அமெரிக்க உள்பட] ஒருசிலர்  பாகுபாடு [discriminataion] செய்யத்தான் செய்கிறார்கள்.  அச்செயலைத்தான் நாம் கண்டனம் செய்யவேண்டும்.

அதைவிடுத்து ஒருநாட்டையோ, தமிழ் இனத்தையோ, ஒரு சமயத்தையோ [தமிழர் என்றால் இந்து என்ற நினைப்பு] என்று பலரும் சாடியிருப்பது சரியல்ல, முறையல்ல என்பதே எனது கருத்து.

ஒரு அரிசோனன்

Oru Arizonan

unread,
Mar 30, 2017, 9:38:53 PM3/30/17
to mintamil


2017-03-30 1:17 GMT-07:00 iraamaki <p...@giasmd01.vsnl.net.in>:
//முசுலீம்கள் இன்னொரு முசுலீமிற்குக் கொடுப்பது இடத்தைப் பொறுத்து அமையும். திருவல்லிக்கேணியில், புதுப்பேட்டையில் பெரும்பாலும் முசுலீம்களுக்காக முன்னுரிமை இருக்கும். மற்ற பகுதிகளில் முசுலீம் அல்லாதவருக்குக் கொடுக்கலாம். இதிலும் ஒரு பட்டவம் (pattern) இருப்பது உண்மைதான்.
 
இதேபோல பெருமானர் தம் வீடுகளை பெருமானருக்கே வாடகைக்குக் கொடுக்க விரும்புவார். மீறி மாற்று வகுப்பினருக்குக் கொடுப்பது அரிதாகவே காணப்படுகிறது. இதைச் சாதிவேறுபாடு என்று சொல்வதைக் காட்டிலும் பெருமானர்/பெருமானர் அல்லாதோர் என்றே வேறுபாடு கொள்வதாய் எண்ணவேண்டியிருக்கிறது. 
 
பெருமானர் அல்லாதோர் எல்லோருக்கும் தான் கொடுக்கிறார்  அதேபொழுது தாழ்த்தப்பட்டோரை பெருமானர் அல்லாதோர் விலக்குகிறாரா என்பது இன்னும் எனக்கு விவரமாய்த் தெரியவில்லை. மேலும் அலசிப் பார்க்கவேண்டும்.
 
கறி/மரக்கறி சமைப்பது என்றும் ஒருவித வேற்றுமை பார்ப்பார். இச்சிக்கலும் மேலே கூறிய பெருமானர்/பெருமானர் அல்லாதோர்/ முசுலீம் என்று முக்கோணத்தில் ஊடுவரும். வடவிந்தியர்/ தென்னிந்தியர் என்னும் வேற்றுமையைக் கடுகெண்ணெய்ப் பழக்கத்தால் உரசிப்பார்ப்பார்.
 
நகரத்தில் ஒருமாதிரியாய் இருப்பவர் ஊருக்குப் போனால் இன்னொரு மாதிரியாயிருப்பார். கொள்கைப்பிடிப்புகள் என்பவை இடத்திற்குத் தகுந்தாற்போல் அமைவது இன்னுமொரு விந்தை.
 
மொத்தத்தில் வாடகைக்கு வீடுபிடிப்பது தமிழகத்தில் அவ்வளவு எளிதல்ல. தமிழகமெங்கும் வீடுகளை வாடகைக்குக் கொடுப்பதில் ஏதோ ஒருவிதத்தில் தீண்டாமை நடந்து கொண்டுதான் உள்ளது. காலம் மாறிவரும்போது, பழைய வழக்கங்கள் சிறிதுசிறிதாய் மறைந்தால் எதிர்காலத் தமிழகத்திற்கு நல்லது.  கிழாரியப் பழக்கம் (feudal practice) குறைந்து முதலிட்டிய பழக்கம் (capitalist practice) வந்தால் நல்லது. இன்னும் அரைக்கிழாரியப் பின்புலம் (semi-feudal background) நம்மிடையே மாறாதிருப்பது கவலையைக் கொடுக்கிறது.
 
அன்புடன்,
இராம.கி.//

உயர்திரு இராம.கி. ஐயா அவர்களே,

தாங்கள் மிகவும் நடுநிலைமையுடன் எழுதியிருப்பது எனக்கு மனநிறைவைத் தருகிறது.

அன்புடன்,
ஒரு அரிசோனன் 

Oru Arizonan

unread,
Mar 30, 2017, 9:44:50 PM3/30/17
to mintamil
இன்னொன்றும் சொல்ல மறந்துவிட்டேன்.

சென்னையில் தமிழரான  எனது மாமனார் வள்ளுவர் கோட்டத்துக்கு அருகில் ஒருவீட்டில் மாடியில் குடியிருந்தபோது, கீழே குடியிருந்தது  தமிழரான ஒரு முஸ்லீம் குடும்பம்.  அவர்களும், எனது மைத்துனி கர்ப்பமாக இருந்தபோது அசைவ உணவு சமைப்பதை நிறுத்திவைத்திருந்தார்கள்.

ஒவ்வொருவர் சமயத்துப் பண்டிகையின்போதும் வாழ்த்துச் சொல்லிக்கொண்டு, இனிப்புகளை பகிர்ந்துகொள்வோம்.

அந்த நல்லிணக்கம் தொடரவேண்டும் என்றே விரும்புகிறேன்.

Megala Ramamourty

unread,
Mar 30, 2017, 9:51:35 PM3/30/17
to மின்தமிழ்

நண்பர்கள் பார்வைக்கு:

வீடு வாடகைக்கு விடுவதில் உள்ள சிக்கல்களை இக்கட்டுரையில் ஜெ.மோ விளக்கியுள்ளார். 

***

http://www.jeyamohan.in/96889#.WN204dQrLMp

இஸ்லாமியர்களுக்கு வீடு

ஜெயமோகன்

வாடகைக்கு வீடு கிடைக்காதது குறித்து மனுஷ்யபுத்திரன் தமிழ் இந்துவில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். மிகவும் அந்தரங்கமான கட்டுரை. அவர் என் நண்பர் என்பதனால் அது வருத்தம் அளித்தது. அவருக்கு வீடு கிடைக்கவேண்டும் என விரும்புகிறேன்

சில ஆண்டுகளுக்கு முன்பு இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் உருவாகிவரும் இடைவெளியைப்பற்றி அச்சத்துடனும் ஆதங்கத்துடனும் நான் ஒரு குறிப்பு எழுதியிருந்தேன். [வளரும் வெறி] சமூகவலைத்தளங்களில் கொதித்துக் கிளம்பினார்கள். இந்துக்களும் இஸ்லாமியரும் ஓருடல் ஈருயிராக மாமன்மச்சானாகப் பழகுவதாகச் சொல்லி பலநூறு கட்டுரைகள் வந்தன. அப்படி என்றால் நல்லதுதானே என நானும் எண்ணிக்கொண்டேன். இப்போது நான் சொன்னதையே வேறுவடிவில் ஹமீது சொல்லியிருக்கிறார்.

ஆனால் வாடகைக்கு வீடுகிடைப்பதைப் பற்றிய பிரச்சினையை இத்தனை எளிதாக இந்து -முஸ்லீம் பிரச்சினையாக ஆக்கிவிடமுடியுமா? உணர்ச்சிகரமாக அப்படி ஆக்கிக்கொண்டால் உண்மையான சிக்கலை நோக்கிச் செல்லமுடியுமா? மீண்டும் இந்துக்களைக் குற்றவாளிகளாக்க, இஸ்லாமியருக்கு இந்தத் தேசத்தில் இடமில்லை என்னும் வழக்கமான பாடலை இசைக்க, மட்டுமே அதனால் உதவும்

நான் நேரடியாக அறிந்த யதார்த்தத்தை மட்டுமே எழுதுகிறேன். வீடு வாடகைக்கு விடுவதில் ஏன் இத்தனை எச்சரிக்கை? ஏனென்றால் இங்குள்ள சட்டம் அப்படிப்பட்டது. அதில் வாடகைக்கு விடுபவருக்கு எந்தப்பாதுகாப்பும் இல்லை. ஒருவர் வாடகைக்கு எடுத்த வீட்டை திரும்பத் தரமாட்டேன் என உறுதியுடன் சொல்லிவிட்டால் வீடு வாடகைக்கு விட்டவர் பற்பல ஆண்டுகளுக்கு அந்த வீட்டை மீட்க முடியாது.

சட்டநடவடிக்கைகள் ஒரு பொருளை கையகப்படுத்தியவருக்கே சாதகமானவையாக உள்ளன இந்தியாவில். நிலமோ வீடோ. அதை மீட்க உரிமையாளர்தான் சட்டப்போர் செய்யவேண்டும். சட்டப்போர் என்பதை நீதிமன்றக் காத்திருப்பு என்றுதான் சொல்லவேண்டும். எந்த வழக்கையும் ஐம்பதாண்டுக்காலம் இழுத்தடிக்க முடியும் இங்கே.

நீதிமன்றம் சென்றால் ஒருதலைமுறைக்குள் தீர்ப்பு வராது. வாடகைப்பணம் நீதிமன்றத்தில் கட்டிவைக்கப்படவேண்டும். நான் அறிந்து நாகர்கோயில் மணிமேடைப்பகுதியில் உள்ள பலகடைகள் 1950 களிலிருந்தே ‘வாடகைக்கு’ எடுத்து வைக்கப்பட்டிருக்கின்றன. உள்வாடகைக்கு மாதம் இரண்டு லட்சரூபாய்க்கு விடப்பட்டுள்ள கட்டிடத்திற்கு நீதிமன்ற ரிசீவருக்கு மாதம் இருபது ரூபாய் வாடகை கட்டப்படுகிறது. நெல்லையில் நெல்லையப்பர் ஆலயத்தின் கட்டிடங்கள் ‘வாடகைக்கு’ எடுக்கப்பட்டு எழுபதாண்டுகள் கடந்துவிட்டன என்கிறார்கள்..

என் மாமா ஒருவர் திருவனந்தபுரத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு விட்டார், கட்டி முடித்து ஒருநாள்கூட அதில் குடியேறவில்லை. எட்டுமாத வாடகைக்குப்பின் வாடகையும் வரவில்லை, வீடும் திரும்பவில்லை. நீதிமன்றம் சென்று வீட்டை மீட்டு எடுத்தபோது அவர் இறந்து அவரது மகனுக்கும் அறுபது வயது. வீடு பழையதாக ஆகி உதிர்ந்துகொண்டிருந்தது. இடிக்கவேண்டியிருந்தது.நாம் ஒவ்வொருவரும் இத்தகைய பல கதைகளை அறிவோம். .

ஆகவே வேறுவழியில்லாமல் வன்முறைக்கு செல்லவேண்டும். தமிழகத்தின் குற்றக்குழுக்களில் பெரும்பகுதி ‘காலிசெய்ய’ வைக்கும் தொழிலையே செய்துகொண்டிருக்கின்றன. வாடகைக்கு விடுபவர் வன்முறைப் பின்னணி கொண்ட சாதி அல்ல என்றால், அவருக்கு பெரிய அமைப்புபலம் இல்லை என்றால் வன்முறைப் பின்புலம் கொண்ட சாதிக்கு அமைப்புபலம் கொண்ட சாதிக்கு வீட்டை வாடகைக்கு விடமாட்டார்.

இஸ்லாமியருக்கு மட்டும் அல்ல, இங்கே வீடு வாடகைக்கு பெறுவதில் பல்வேறு தொழிற்பிரிவினருக்குச் சிக்கல் இருப்பது இதனால்தான். டாக்டர்கள், வழக்கறிஞர்கள் போன்றவர்களுக்கு வீடு கிடைப்பது மிகக்கடினம். டாக்டர்கள் அந்த இடத்தை கிளினிக் ஆக ஆக்கிக்கொண்டார்கள் என்றால் அதன்பின்னர் அந்த இடமே அவர்களின் அடையாளம். காலிசெய்ய மாட்டார்கள். வழக்கறிஞர்களுக்கு சட்டம் என்ன செய்யும் என தெரியும். நிறுவனங்களுக்கு வீடு கிடைப்பது மிகக்கடினம். கொடுத்தால் மீட்பது அதைவிடக்கடினம்.

தென்மாவட்டங்களில் போர்க்குணம்கொண்ட சாதியினருக்கு பிறர் வீடு வாடகைக்குக் கொடுக்கமாட்டார்கள். கட்டைப்பஞ்சாயத்துக்கு வருவார்கள் என்னும் ஐயம். குமரிமாவட்டத்தில் பெந்தெகொஸ்துகளுக்கு கொடுக்கமாட்டார்கள். மிகவிரைவிலேயே அந்த வீட்டை ஜெபவீடாக ஆக்கிக்கொண்டு பேரம்பேச வந்து அமர்வார்கள். எங்குமே அரசியல் கட்சிப்பின்னணி கொண்டவர்களுக்கு வீடு வாடகைக்குக் கிடைக்காது

இலங்கைக்காரர்களுக்கு வீடு அளிக்க சென்னையில் எவருமே தயாராக மாட்டார்கள். இலங்கைப் பிரச்சினையில் அங்குள்ள தமிழர்களுக்காக மனம் பொங்குபவர்கள் கூட. இதை இலங்கைக்காரர்களாகிய பல நண்பர்கள் என்னிடம் கண்ணீருடன் சொல்லியிருக்கிறார்கள்

ஹமீது அவருக்கு வீடு கிடைப்பதைப்பற்றிச் சொல்கிறார். பாரதிய ஜனதாக் கட்சியின் பொறுப்பில் இருப்பவருக்கு மட்டும் பிறர் வீடு கொடுத்துவிடுவார்களா? ’அரசியல் ஆளுங்க, நமக்கு எதுக்கு வம்பு’ என்று பின்வாங்குவார்கள். இது என் இன்னொரு நண்பரின் அனுபவம்.

சென்னையில் சினிமாக்காரர்களுக்கு வாடகைக்கு வீடு கிடைக்காது. தனியாக வாழும் பெண்களுக்கு வீடு கிடைக்காது. இதெல்லாமே ஒழுக்கக் கவலைகள் அல்ல, ஏதேனும் பிரச்சினை வருமா என்னும் நடுத்தரவர்க்க பதற்றம், அவ்வளவுதான்.

ஏனென்றால் எந்த ஒரு பிரச்சினைக்கும் வீட்டு உரிமையாளரை காவல்துறை இழுத்தடிக்கும். குறிப்பாக அந்த வீட்டு விலாசம் பாஸ்போர்ட் எடுக்கவோ ரேஷன் கார்டு வாங்கவோ அளிக்கப்பட்டிருந்தால் பெரிய சிக்கல்கள் வரும். போலிபாஸ்போர்ட் எடுக்க ஒருவர் தன் வாடகைவீட்டு விலாசத்தை அளிக்க அந்த வீட்டு உரிமையாளர் கிட்டத்தட்ட வீட்டையே விற்குமளவுக்கு பணம் செலவழிக்க வேண்டியிருந்ததை ஒருமுறை கேட்டறிந்தேன்

இஸ்லாமியர்களில் இன்றுள்ள வலுவான வன்முறை அமைப்புகளை அனைவரும் அறிவார்கள். அவ்வமைப்புகளில் கணிசமானவர்கள் கட்டைப் பஞ்சாயத்தைத்தான் தொழிலாகச் செய்கிறார்கள். இஸ்லாமியர் மீது ஐயமோ விலக்கமோ எவருக்கும் இல்லை, இருந்திருந்தால் பொதுவெளியில் எல்லா தளங்களிலும் அது வெளியாகும் அல்லவா? விலகிச்செல்வது இஸ்லாமியர்தான், உடைகளால் பேச்சுகளால் மதவெறியால். இஸ்லாமியர் மேல் அச்சம் கண்டிப்பாக உள்ளது. அந்த அச்சமே வீட்டு விஷயத்தில் வெளியாகிறது

என்னை எடுத்துக்கொள்வோம், எனக்கு இஸ்லாமியர் மேல் அச்சம் உள்ளதா? கண்டிப்பாக ஆழமான அச்சம் உள்ளது. ஓர் இஸ்லாமியர் இஸ்லாமிய அமைப்புகளின் பின்புலம் உள்ளவரா என பலமுறை சோதித்துப்பார்க்காமல் நான் நெருங்கவே மாட்டேன். ஒருமுறை நான் பேசவிருந்த மேடைக்கு ஜவஹருல்லாவையும் அழைக்கலாமா என என்னிடம் கேட்டனர். என் முதுகுத்தண்டில் ஓர் அச்சம் சிலிர்த்தது. பதறி விலகிவிட்டேன்.

ஐ.எஸ்.ஐ.எஸ் பற்றிய ஒரு சாதாரணமான கருத்தை நான் எழுதியபோது நூற்றுக்கும் மேற்பட்ட அழைப்புகள் எனக்கு, ஜாக்ரதையாக இருங்கள், இதையெல்லாம் எழுதவேண்டுமா என. இந்தியப் பொதுச்சமூகம் இந்த நவவஹாபிய அமைப்புக்களை எண்ணி அஞ்சிக் கிடக்கிறது. அதை வலுப்படுத்துவது போலவே நாளும் செய்திகள் வருகின்றன. அதை காணாதது போல நடிப்பதில் பொருளே இல்லை. அது ஓரு சமூக உண்மை

அந்த அச்சத்தைப் பொதுச் சமூகத்தின் உள்ளத்தில் விதைத்த அமைப்புக்கள் எவை? பொதுச் சமூகத்தில் இத்தனை அச்சத்தை உருவாக்குபவர்களை விட்டுவிட்டு அஞ்சுபவர்களை மீண்டும் கூண்டிலேற்றுவதில் என்ன பொருள்?

இருபதாண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது இது, ஓர் இஸ்லாமியர் [மரைக்காயர்] சிறிய அளவிலான லஞ்சம் வாங்கிய செய்தி வந்தது. லஞ்சம் சாதாரணமாகப் புழங்கிய அலுவலகச்சூழலே அதிர்ச்சி அடைந்தது. “மரைக்காயர்களெல்லாம் இப்படிச் செய்வார்களா என்ன?” என பலர் கேட்டனர்.. ஏனென்றால் நேர்மையற்ற, பண்பற்ற மரைக்காயர்களை பலர் கேள்விப்பட்டே இருக்கவில்லை.

மனுஷ்யபுத்திரன் தொழில்துறையில் கொஞ்சம் விசாரித்துப் பார்க்கவேண்டும், இன்று முஸ்லீம்களுக்கு முழு முன்பணமும் பெற்றுக்கொள்ளாமல் முஸ்லீம்கள் அல்லாத எவரேனும் சரக்கு கொடுப்பார்களா என்று. அந்த மாற்றம் எங்கே வந்தது? இஸ்லாமியர்கள் நட்பானவர்கள், சொன்ன சொல்லுக்குள் நிற்பவர்கள் என்னும் பிம்பம் எப்படிச் சிதைந்தது? அதற்கு எவர் பொறுப்பு?

இஸ்லாமியர் பல நூறு ஆண்டுகளாக இங்கே ஈட்டிவைத்திருந்த நல்லெண்ணம் கடந்த இருபதாண்டுகளில் இங்குள்ள வஹாபியக் கும்பல்களால் அழிக்கப்பட்டுவிட்டது. துரதிருஷ்டவசமாக அவர்களே இஸ்லாமின் முகமாக பரவலாக அறியப்படுகிறார்கள். ஒவ்வொரு இந்துவும் அந்த பழைய இஸ்லாமியருக்காக ஏங்கிக்கொண்டிருக்கிறான். அதை இஸ்லாமியரில் சிலராவது உணரவேண்டும்.

ஜெ



--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Singanenjam Sambandam

unread,
Mar 30, 2017, 11:09:17 PM3/30/17
to mint...@googlegroups.com
வாதப் பிரதிவாதங்கள் வளர்ந்துகொண்டே போகலாம்.    சென்னையில்இ சுலாமியர்ககுக்கு வாடகைக்கு வீடு கிடைப்பது மிகவும் சிரமம்தான். இதுதான் உண்மை.

--

K R A Narasiah

unread,
Mar 30, 2017, 11:26:24 PM3/30/17
to mintamil
சமுதாயத்தின் பல கோணல்களில் இது ஒன்று. சில வருடங்களுக்கு முன்னர், இலங்கைத் தமிழர்களுக்கு வீடு வாடகை கொடுப்பதில் சென்னையில் பலர் தயங்கினர். இதனால் இடர் பட்ட இலங்கைத் தமிழர் இப்போது ஆஸ்திரேலியாவில் வாழ்பவர் எனக்குச் சொல்லியுள்ளார். இது மத வெறுப்பால் மட்டுமல்ல; சில சமுதாய நோக்குகளினால்தான. ஆகையால் இது ஏதோ தமிழ் நாட்டில் முஸ்லீம்களுக்கு அளிக்கப்படும் அநியாயமெனக் கருதக் கூடாது. மதுரையில் எங்கள் குடும்பம் வாழுமிடஹ்தில் பல முஸ்லீம்கள் நன்றாகவே வீடு மட்டுமல்ல, கடைகளயும் வாடகைக்கு எடுத்துக் கொண்டு சிறப்பாகவே வாழ்கிறார்கள். 
இந்தப் பிரச்சினைக்கு மத வர்ணம் தீட்டுவது நல்லதல்ல.
நரசய்யா 

On Fri, Mar 31, 2017 at 8:39 AM, Singanenjam Sambandam <singa...@gmail.com> wrote:
Boxbe This message is eligible for Automatic Cleanup! (singa...@gmail.com) Add cleanup rule | More info

வாதப் பிரதிவாதங்கள் வளர்ந்துகொண்டே போகலாம்.    சென்னையில்இ சுலாமியர்ககுக்கு வாடகைக்கு வீடு கிடைப்பது மிகவும் சிரமம்தான். இதுதான் உண்மை.
2017-03-31 7:21 GMT+05:30 Megala Ramamourty <megala.r...@gmail.com>:

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--

Seshadri Sridharan

unread,
Mar 30, 2017, 11:58:20 PM3/30/17
to mintamil, p...@giasmd01.vsnl.net.in, jsthe...@gmail.com, Banukumar Rajendran, N D Llogasundaram, Raju Saravanan, rajalakshmi paramasivam, yesura...@gmail.com, Pandiyaraja Paramasivam, Shylaja Narayan, Malarvizhi Mangay, Kalairajan Krishnan, Krishnamachary Rangaswamy, bala subramani, V. Dhivakar, பெருமாள் தேவன், coral shree, Geetha Sambasivam, rajam ramamurti, Rathinam Chandramohan, Vetha Nayagy, நா. கணேசன், Gowthama Sanna, Nagarajan Vadivel, Jay Jayabarathan, ipohs...@gmail.com, Subashini Tremmel, Innamburan Innamburan
2017-03-30 2:00 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:

என் உடல் சார்ந்த குறைபாட்டை நான் கடந்துவிட்டேன். ஆனால், என் பிறப்பு சார்ந்த பெயருக்காக எனக்குக் கொடுக்கப்படும் தண்டனைகளை என்னால் கடக்க முடியவில்லை. வாடகைக்கு ஒரு வீடுதான் கேட்கிறேன். கிடைக்கவில்லை. என் போன்ற சமூகப் பொதுவெளியில் வசிக்கும் ஒருவனுக்கே இதுதான் நிலை என்றால், எந்தப் பின்புலமும் அற்ற வெறும் பெயராக மட்டுமே அறியப்படும் சாமானிய முஸ்லிம்களின் நிலை என்னவாக இருக்கும்? 

நான் பதினைந்து வருடங்களாகக் குடியிருந்த வீட்டை அதன் உரிமையாளர் விற்பதால் காலி செய்ய வேண்டிய கட்டாயம். உண்மையில், என் வாழ்வில் அழியாத நினைவுகளைக் கொண்ட வீடு இது. இந்த வீட்டில்தான் ஒருகாலத்தில் நடிகை வடிவுக்கரசி இருந்தார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதைப் பற்றிக்கூட ‘வடிவுக்கரசி இருந்த வீடு’ என்று ஒரு கவிதை எழுதியிருக்கிறேன். ஆனால், ‘மனுஷ்ய புத்திரன் இருந்த வீடு’ என்று யாரோ ஒரு வாசகன் சொல்ல இந்த வீடு இருக்கப்போவதில்லை. இரண்டு வருடங்களுக்குள் இங்கே ஒரு மூன்றடுக்கு ஃப்ளாட் வந்துவிடும். 

கடந்த இரண்டு மாதங்களாக வீடு தேடி அலைகிறேன். நான் வீடு பார்க்கப்போகிற எல்லா இடத்திலும் என்னை வீட்டு உரிமையாளர்களுக்கு நன்கு தெரிந்திருக்கிறது. ‘டி.வி.யில் உங்க நிகழ்ச்சின்னா விரும்பிப் பார்ப்போம்’ என்று அன்பாகச் சொல்லி காபி கொடுக்கிறார்கள். ஆனால், எல்லா இடங்களிலும் நான் புரிந்துகொள்ள முடியாத ஏதோ ஒரு காரணத்தால், எனக்கு வீடு மறுக்கப்படுகிறது. 

சார், நீங்க முஸ்லிமா? 

ஒரு வீட்டு உரிமையாளர் விளம்பரத்தில் கொடுத்திருந்ததைவிட இன்னொரு மடங்கு வாடகை சொன்னார். கேட்டால், “அது பிரின்டிங் மிஸ்டேக்” என்றார். என்னை நிராகரிக்க வேண்டும் என்பதே அவரது விருப்பம். பிறகு, அதே வாடகை குறிப்பிடப்பட்டு, அதே விளம்பரம் அடுத்த வாரமும் வந்திருந்தது. 

நான்கு நாளைக்கு முன்னர் வீடு பார்த்தேன். வீடு எனக்கு ஓரளவு பிடித்திருந்தது. வீட்டுத் தரகர் உரிமையாளரிடம் அந்த வீட்டை நான்தான் பார்த்திருக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். வீட்டு உரிமையாளருக்கு ஒரே மகிழ்ச்சியாம். ‘‘அவர் எழுத்தையெல்லாம் படித்திருக்கிறோம்.. அவர் எங்க வீட்டுக்குக் குடிவருவது எங்களுக்குத்தான் பெருமை..’’ என்று அவர் சொன்னதாகச் சொல்லிய வீட்டுத் தரகர் ‘‘நாளைக்கே போய் அட்வான்ஸ் கொடுத்துவிடுவோம்’’ என்றார். அவர் சொன்ன நாளில் வீட்டு உரிமையாளரைச் சந்திக்க நான் ஆயத்தமாகிக்கொண்டிருந்தபோது தொங்கிய முகத்துடன் தரகர் வந்தார், ‘‘சார், நீங்க முஸ்லிமா? உங்க நிஜப் பெயர் என்ன?’’ என்றார். 

நான் அவரை உற்றுப் பார்த்தேன் ‘‘இல்ல சார், வீட்டு ஓனர்கிட்ட நீங்க முஸ்லிம் என்று யாரோ சொல்லியிருக்காங்க..” என்று இழுத்தார்.‘‘ஏன், நான் அசைவம் என்பதால் கொடுக்க மாட்டார்களா?’’ என்று கேட்டேன். ‘‘அசைவம் எல்லாம் பிரச்சினை இல்லை.. நீங்க முஸ்லிம் என்பதுதான் பிரச்சினை’’ என்றார். 

நான் உடைந்துபோனேன். ஒருவகையில், அந்த வீட்டு உரிமையாளரைப் பாராட்ட வேண்டும். அவர் மற்றவர்களைப் போல மழுப்பாமல், நேரடியாக உண்மையான காரணத்தை நேர்மையாகக் கூறிவிட்டார். நான் எழுதிய இரண்டாயிரம் கவிதைகளை நினைத்துப்பார்த்தேன். மதச்சார்பின்மைக் காகவும் சமூக நீதிக்காகவும் நான் எழுதிய ஆயிரக்கணக்கான பக்கங்கள், பேசிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பொதுக் கூட்டங்கள் அனைத்தையும் நினைத்துப் பார்த்தேன். ஆயிரம் இருந்தென்ன? நான் இப்போது எதுவுமே இல்லை; வெறும் ஒரு முஸ்லிம்… அவ்வளவுதானே! 

ஒரு கணம், என் வாழ்க்கையில் நான் எதையெல்லாம் போராடிப் பெற்றேனோ அது அனைத்தும் என்னிடமிருந்து பறிக்கப்பட்ட உணர்வு. நான் இப்போது வெறுக்கப்படும் ஒரு பெயர், ஒரு அடையாளம் மட்டுமே. இரண்டு நாளைக்கு முன்புகூட, மதவாதத்தைப் பரப்புகிற கட்சிகளுக்குத் தமிழக மக்களிடம் எந்த இடமும் இல்லை என்று ஒரு தொலைக்காட்சியில் சவால் விட்டுவிட்டு வந்தேன். ஆனால், என் நம்பிக்கைகள் தோற்றுவிடுமோ என்று இன்று நான் அஞ்சுகிறேன். 

கடக்க முடியாத தண்டனை 

நான் என் சொந்தப் பெயரை ஒருபோதும் மறைத்ததில்லை. ‘ஹமீது’ என்றுதான் என்னைப் பல இடங்களில் சுஜாதா குறிப்பிட்டிருக்கிறார். முகநூலில் அந்தப் பெயரில்தான் எழுதுகிறேன். ஆனால், என்னை ‘மனுஷ்ய புத்திரன்’ என்கிற பொது அடையாளத்தில் மட்டும் அறிபவர்கள், என் சொந்தப் பெயரைக் கேட்டதும் அடையும் சங்கடம் என்னை மிகவும் அதிர்ச்சியடைய வைக்கிறது. இத்தனைக்கும் இஸ்லாமியப் பண்பாடு சார்ந்து ஒரு வாக்கியம்கூட என் கவிதைகளில் இல்லை. முகநூலில் என் அளவுக்கு மதவெறியர்களால் தாக்கப்பட்ட இன்னொரு எழுத்தாளரோ சமூகச் செயல் பாட்டாளரோ யாரும் இல்லை. இந்துத்துவா அடிப்படைவாதிகள் மட்டுமல்ல, இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் இந்தத் தாக்குதலைச் செய்திருக்கிறார்கள். 

மூன்று வயதில் எனக்கு நடக்க முடியாமல்போனது. என் உடல் சார்ந்த குறைபாட்டை நான் கடந்துவிட்டேன். ஆனால், என் பிறப்பு சார்ந்த பெயருக்காக எனக்குக் கொடுக்கப்படும் தண்டனைகளை என்னால் கடக்க முடியவில்லை. ஒரு எழுத்தாளனாக, ஒரு ஊடகவியலாளனாக, ஒரு பதிப்பாளனாக, ஒரு மிகப்பெரிய அரசியல் இயக்கத்தைச் சேர்ந்தவனாக மைய நீரோட்டத்தில் நான் எவ்வளவு கரைந்து நின்றபோதிலும் திடீரென ஒரு குரல் கேட்கிறது.. ‘‘வெளியே போ!’’ 


திரு சாகுல் அமீது என்ற மனுஷ்ய புத்திரன் வருத்தம் ஏமாற்றம் நியாயமானது தான். இந்த நிலைக்கு காரணம் 1998 கோவை குண்டு வெடிப்பின் போது இவரது திமுக கட்சி அரசு மிகப் பல இசுலாமியரை காரணம் இன்றி வாட்டி வதைத்தது. அது தான் இன்றும் தொடர்கிறது.

இதே வகையில் தான் திமுக பிராமணர் வெறுப்பை வளர்த்தது. அது இன்றும் திமுகவின் கொள்கையாக உள்ளது.  அதை பற்றி ஏதேனும் கருத்து செல்வாரா? மேலிடத்தில் பேசுவாரா? இவர்.

மாரக்கல் 

Suba

unread,
Mar 31, 2017, 7:16:31 AM3/31/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram
ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகளில் வீடுகள் வாடகைக்கு அல்லது விற்பனைக்கு ஏற்படுத்தித் தரும் ரியல் எஸ்டேட் ஏஜென்சிகள் உண்டு. வாடகை வீடாகத் தேடும் போது மாத சம்பளம் வருகின்றதா என்பதை மட்டும் உறுதி செய்யும் பழக்கம் இருக்கின்றது. அதோடு 1 மாத வாடகையை முதலில் கட்டி விடவேண்டும். குறைந்தது 1 வருட காண்ட்ரேக்ட் செய்வார்கள். வீடு வாங்கும் போது பெரும்பாலும் வங்கியோடு தொடர்பு செய்து கொள்வதால் அதிலும் யாருக்கு வீடு விற்கின்றோம் என்ற  பிரச்சனைகள் இங்கில்லை. 

தமிழகத்தில் தேவையற்ற உணர்ச்சிப்பூர்வமான அம்சங்களை அதிகம்  நடைமுறைப்படுத்தியதன் விளைவே இது. 

அடிப்படையில் தேவையான விசயம், 
குடித்தனம் வருவோர் வீட்டை சரியாகப் பார்த்துக் கொள்வார்களா?
தடையில்லாமல் மாத வாடகையைத் தருவார்களா?
வீட்டில் சட்டத்திற்குப் புறம்பான காரியங்களைச் செய்யாமல் இருப்பார்களா?
.. என்பது மட்டும் தான். 

சிந்திக்கக்கூடிய அனைவரும் சிந்தித்தால் இது ஒரு பிரச்சனையே அல்ல என்பதை உணர முடியும்.

ஐரோப்பாவில் இருப்பது போல இந்த வகையிலான ஏஜென்சிகள் தமிழகத்தில் நடைமுறைக்கு  வந்தால் இப்படிப்பட்ட பிரச்சனைகள் தீரும். 

சுபா


 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Mar 31, 2017, 10:04:50 AM3/31/17
to mintamil, செல்வன்

https://m.facebook.com/story.php?story_fbid=1881916768760685&id=1815348792084150

இவர்கள் இசுலாமானவர்களா ?

On 30-Mar-2017 2:00 AM, "செல்வன்" <hol...@gmail.com> wrote:

என் உடல் சார்ந்த குறைபாட்டை நான் கடந்துவிட்டேன். ஆனால், என் பிறப்பு சார்ந்த பெயருக்காக எனக்குக் கொடுக்கப்படும் தண்டனைகளை என்னால் கடக்க முடியவில்லை. வாடகைக்கு ஒரு வீடுதான் கேட்கிறேன். கிடைக்கவில்லை. என் போன்ற சமூகப் பொதுவெளியில் வசிக்கும் ஒருவனுக்கே இதுதான் நிலை என்றால், எந்தப் பின்புலமும் அற்ற வெறும் பெயராக மட்டுமே அறியப்படும் சாமானிய முஸ்லிம்களின் நிலை என்னவாக இருக்கும்? 

நான் பதினைந்து வருடங்களாகக் குடியிருந்த வீட்டை அதன் உரிமையாளர் விற்பதால் காலி செய்ய வேண்டிய கட்டாயம். உண்மையில், என் வாழ்வில் அழியாத நினைவுகளைக் கொண்ட வீடு இது. இந்த வீட்டில்தான் ஒருகாலத்தில் நடிகை வடிவுக்கரசி இருந்தார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதைப் பற்றிக்கூட ‘வடிவுக்கரசி இருந்த வீடு’ என்று ஒரு கவிதை எழுதியிருக்கிறேன். ஆனால், ‘மனுஷ்ய புத்திரன் இருந்த வீடு’ என்று யாரோ ஒரு வாசகன் சொல்ல இந்த வீடு இருக்கப்போவதில்லை. இரண்டு வருடங்களுக்குள் இங்கே ஒரு மூன்றடுக்கு ஃப்ளாட் வந்துவிடும். 

கடந்த இரண்டு மாதங்களாக வீடு தேடி அலைகிறேன். நான் வீடு பார்க்கப்போகிற எல்லா இடத்திலும் என்னை வீட்டு உரிமையாளர்களுக்கு நன்கு தெரிந்திருக்கிறது. ‘டி.வி.யில் உங்க நிகழ்ச்சின்னா விரும்பிப் பார்ப்போம்’ என்று அன்பாகச் சொல்லி காபி கொடுக்கிறார்கள். ஆனால், எல்லா இடங்களிலும் நான் புரிந்துகொள்ள முடியாத ஏதோ ஒரு காரணத்தால், எனக்கு வீடு மறுக்கப்படுகிறது. 

சார், நீங்க முஸ்லிமா? 

ஒரு வீட்டு உரிமையாளர் விளம்பரத்தில் கொடுத்திருந்ததைவிட இன்னொரு மடங்கு வாடகை சொன்னார். கேட்டால், “அது பிரின்டிங் மிஸ்டேக்” என்றார். என்னை நிராகரிக்க வேண்டும் என்பதே அவரது விருப்பம். பிறகு, அதே வாடகை குறிப்பிடப்பட்டு, அதே விளம்பரம் அடுத்த வாரமும் வந்திருந்தது. 

நான்கு நாளைக்கு முன்னர் வீடு பார்த்தேன். வீடு எனக்கு ஓரளவு பிடித்திருந்தது. வீட்டுத் தரகர் உரிமையாளரிடம் அந்த வீட்டை நான்தான் பார்த்திருக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். வீட்டு உரிமையாளருக்கு ஒரே மகிழ்ச்சியாம். ‘‘அவர் எழுத்தையெல்லாம் படித்திருக்கிறோம்.. அவர் எங்க வீட்டுக்குக் குடிவருவது எங்களுக்குத்தான் பெருமை..’’ என்று அவர் சொன்னதாகச் சொல்லிய வீட்டுத் தரகர் ‘‘நாளைக்கே போய் அட்வான்ஸ் கொடுத்துவிடுவோம்’’ என்றார். அவர் சொன்ன நாளில் வீட்டு உரிமையாளரைச் சந்திக்க நான் ஆயத்தமாகிக்கொண்டிருந்தபோது தொங்கிய முகத்துடன் தரகர் வந்தார், ‘‘சார், நீங்க முஸ்லிமா? உங்க நிஜப் பெயர் என்ன?’’ என்றார். 

நான் அவரை உற்றுப் பார்த்தேன் ‘‘இல்ல சார், வீட்டு ஓனர்கிட்ட நீங்க முஸ்லிம் என்று யாரோ சொல்லியிருக்காங்க..” என்று இழுத்தார்.‘‘ஏன், நான் அசைவம் என்பதால் கொடுக்க மாட்டார்களா?’’ என்று கேட்டேன். ‘‘அசைவம் எல்லாம் பிரச்சினை இல்லை.. நீங்க முஸ்லிம் என்பதுதான் பிரச்சினை’’ என்றார். 

நான் உடைந்துபோனேன். ஒருவகையில், அந்த வீட்டு உரிமையாளரைப் பாராட்ட வேண்டும். அவர் மற்றவர்களைப் போல மழுப்பாமல், நேரடியாக உண்மையான காரணத்தை நேர்மையாகக் கூறிவிட்டார். நான் எழுதிய இரண்டாயிரம் கவிதைகளை நினைத்துப்பார்த்தேன். மதச்சார்பின்மைக் காகவும் சமூக நீதிக்காகவும் நான் எழுதிய ஆயிரக்கணக்கான பக்கங்கள், பேசிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பொதுக் கூட்டங்கள் அனைத்தையும் நினைத்துப் பார்த்தேன். ஆயிரம் இருந்தென்ன? நான் இப்போது எதுவுமே இல்லை; வெறும் ஒரு முஸ்லிம்… அவ்வளவுதானே! 

ஒரு கணம், என் வாழ்க்கையில் நான் எதையெல்லாம் போராடிப் பெற்றேனோ அது அனைத்தும் என்னிடமிருந்து பறிக்கப்பட்ட உணர்வு. நான் இப்போது வெறுக்கப்படும் ஒரு பெயர், ஒரு அடையாளம் மட்டுமே. இரண்டு நாளைக்கு முன்புகூட, மதவாதத்தைப் பரப்புகிற கட்சிகளுக்குத் தமிழக மக்களிடம் எந்த இடமும் இல்லை என்று ஒரு தொலைக்காட்சியில் சவால் விட்டுவிட்டு வந்தேன். ஆனால், என் நம்பிக்கைகள் தோற்றுவிடுமோ என்று இன்று நான் அஞ்சுகிறேன். 

கடக்க முடியாத தண்டனை 

நான் என் சொந்தப் பெயரை ஒருபோதும் மறைத்ததில்லை. ‘ஹமீது’ என்றுதான் என்னைப் பல இடங்களில் சுஜாதா குறிப்பிட்டிருக்கிறார். முகநூலில் அந்தப் பெயரில்தான் எழுதுகிறேன். ஆனால், என்னை ‘மனுஷ்ய புத்திரன்’ என்கிற பொது அடையாளத்தில் மட்டும் அறிபவர்கள், என் சொந்தப் பெயரைக் கேட்டதும் அடையும் சங்கடம் என்னை மிகவும் அதிர்ச்சியடைய வைக்கிறது. இத்தனைக்கும் இஸ்லாமியப் பண்பாடு சார்ந்து ஒரு வாக்கியம்கூட என் கவிதைகளில் இல்லை. முகநூலில் என் அளவுக்கு மதவெறியர்களால் தாக்கப்பட்ட இன்னொரு எழுத்தாளரோ சமூகச் செயல் பாட்டாளரோ யாரும் இல்லை. இந்துத்துவா அடிப்படைவாதிகள் மட்டுமல்ல, இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் இந்தத் தாக்குதலைச் செய்திருக்கிறார்கள். 

மூன்று வயதில் எனக்கு நடக்க முடியாமல்போனது. என் உடல் சார்ந்த குறைபாட்டை நான் கடந்துவிட்டேன். ஆனால், என் பிறப்பு சார்ந்த பெயருக்காக எனக்குக் கொடுக்கப்படும் தண்டனைகளை என்னால் கடக்க முடியவில்லை. ஒரு எழுத்தாளனாக, ஒரு ஊடகவியலாளனாக, ஒரு பதிப்பாளனாக, ஒரு மிகப்பெரிய அரசியல் இயக்கத்தைச் சேர்ந்தவனாக மைய நீரோட்டத்தில் நான் எவ்வளவு கரைந்து நின்றபோதிலும் திடீரென ஒரு குரல் கேட்கிறது.. ‘‘வெளியே போ!’’ 

என்ன ஆனது பாரம்பரியம்? 

சென்னையில் பெரும் வெள்ளம் சூழ்ந்த போது, வீடுகளிலும் கோயில்களிலும் புகுந்த சாக்கடையைச் சுத்தப்படுத்திய இஸ்லாமியர்கள் பாராட்டப்பட்டார்கள். அந்த நல்லுணர்வுகள் சாக்கடைத் தண்ணீரைப் போல இவ்வளவு சீக்கிரம் வடிந்துவிட்டனவா என்று தோன்றியது. வட இந்தியாவில் இருப்பதுபோல தமிழகத் தில் இஸ்லாமியர்களும் இந்துக்களும் தனித் தனியான குடியிருப்புப் பகுதிகளைக் கொண்டிருப்பதில்லை. தமிழகத்துக்கு என்று தனிப் பாரம்பரியமும் நல்லுறவு நல்லுணர்வும் இருக்கிறது. ஆனால், இஸ்லாமியர்களுக்கு வீடு தரக் கூடாது என்ற மனோபாவம் இவ்வளவு ஆழமாக இங்கே எப்போது ஊடுருவியது? இல்லாமியர்கள் அசுத்தமானவர்கள், வன்முறை யாளர்கள், தேச விரோதிகள் என்ற பிரச்சாரம் சமூகத்தின் அடியாழம் வரை எப்போது ஆழமாகப் பரவியது? தெரியவில்லை! 

எனக்கு ஒரு பெயர் இருப்பதுதான் பிரச்சினையா அல்லது நான் இருப்பதே பிரச்சினையா என்று குழப்பமாக இருக்கிறது. இந்த மொழிக்காகவும் பண்பாட்டுக்காகவும் நான் செய்திருக்கும் வேலைகளுக்காக நான் எந்த பிரதியுபகாரமும் கேட்கவில்லை. வாடகைக்கு ஒரு வீடுதான் கேட்கிறேன். என் போன்ற சமூகப் பொதுவெளியில் வசிக்கும் ஒருவனுக்கே இதுதான் நிலை என்றால், எந்தப் பின்புலமும் அற்ற வெறும் பெயராக மட்டுமே அறியப்படும் சாமானிய முஸ்லிம்களின் நிலை என்னவாக இருக்கும்? தமிழ்ப் பொதுச்சமூகம் யோசிக்க வேண்டும். 

எனக்கு இங்கு இடமில்லையா என்று இதுவரை கேட்டுக்கொண்டிருந்த நான் இப்போது முதல் முறையாகக் கேட்கிறேன், ‘‘எங்களுக்கு இங்கு இடமில்லையா?’’ 

- மனுஷ்ய புத்திரன், 

கவிஞர், பதிப்பாளர், 

‘காந்தியுடன் இரவு விருந்திற்கு செல்கிறேன்’, ‘எதிர்க்குரல்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். 


--

--

சி. ஜெயபாரதன்

unread,
Mar 31, 2017, 10:06:15 AM3/31/17
to mintamil, vallamai, tamilmantram, Subashini Kanagasundaram, vannan vannan, Aravindan Neelakandan, manushya...@gmail.com, Asan Buhari, megala.ramamourty, தேமொழி
நண்பர் ஜெயமோகன் கருத்துரை வாடகை நபர் சட்டநெறிப்பாடுப் பிரச்சனைகளைத் தீர்க்க வில்லை.  தமிழகத்தில் அரசியல் /சமூக நிலைக் குறைபாடுகள் இல்லாத துறையே கிடையாது.  தமிழகக் காவல்துறை, சட்டநெறித் துறைகளில் கண்காணிப்புகள் அபூர்வம். சீரான வாடகை ஒப்பந்தம் வீட்டுக்காரருக்கும், வாடகை நபருக்கும் தேவை. வாடகை நபரில் / வாடகை விடுபவரில் வஞ்சகம் புரிவோர் 10%-20% இருக்கலாம்.  அதற்காக வாடகைக்கு வருவபர் அனைவர் மீதும் [இஸ்லாமியர், டாக்டர், வழக்கறிஞர், பிற இனத்தர், தலித்துகள்] ஒரே சிவப்பு நிறத்தால் அடிப்பது ஏற்றுக் கொள்ளப்படாது. மனுஷ்ய புத்திரன் போன்ற இஸ்லாமியர் யாருக்குமே வீட்டை வாடகைக்கு விடாதே என்கிறார் ஜெயமோகன் !!! 

10% கயவர்கள் தொல்லை கொடுத்தால், வேறு யாருமே கற்க வேண்டாம் பல்கலைக் கழகத்தை மூடு என்கிறார், ஜெயமோகன். 

முறையான வாடகைச் சட்டநெறிப்பாடுகள் வகுத்து, குறைபாடுகளைக் கண்காணித்து எழும் வஞ்சகரைத் தண்டிப்பதே இப்போது தேவைப்படும் தமிழக அரசியல் அமைச்சர்கள் பொறுப்பாகும்.  50 ஆண்டு அரசியல் அனுபவம் பெற்ற திராவிடப் புத்திசாலிகள் அதை இப்போது செய்வார்களா ?  முதலமைச்சராய் வரப்போகும் சசிகலா இந்தப் பிரச்சனையைத் தீர்ப்பாரா ?

சி. ஜெயபாரதன்

Buhari

unread,
Mar 31, 2017, 11:10:25 AM3/31/17
to சி. ஜெயபாரதன், mintamil, vallamai, tamilmantram, Subashini Kanagasundaram, vannan vannan, Aravindan Neelakandan, manushya...@gmail.com, megala.ramamourty, தேமொழி
ஜெயமோகனின் பல கருத்துக்கள் அபத்தமானவை. அவற்றைக் கணக்கில் எடுத்துக்கொள்ளத் தேவையில்லை.

அவர் பாசிச உணர்வுகளால் பீடிக்கப்பட்ட நோயாளி!

சட்டத்தின் நுணுக்கங்களைக் கொண்டு வீடு வாடகைக்கு விடுபவருக்கும் வாடகைக்குத் தங்குபவர்களுக்கும் இடையே சுமுகமான பந்தம் இருக்க என்ன வழி என்று சொல்ல இங்கே ஒருவரும் இல்லை.

சட்டம் இடம்தராத பட்சத்தில் அதை மாற்றியமைக்கும் பரிந்துரையைச் செய்யும் ஒரு அமைப்பும் இங்கே இல்லை.

அவனவன் அவனவனது வெறுப்பை உமிழ்ந்துவிட்டுச் செல்கிறான்!


அன்புடன் புகாரி
+1-416-500-0972

தேமொழி

unread,
Mar 31, 2017, 11:59:09 PM3/31/17
to மின்தமிழ்
மனுஷ்யபுத்திரன் தனக்கு வீடு வாடகைக்குக் கிடைக்காததை மதத்தை ஒட்டி எழுதிய கருத்து உள் நோக்கம் கொண்டதாகத் தெரிகின்றது என்று சொல்பவர்கள் மனுஷ்யபுத்திரன் கூறிய கீழ்க்காணும் வரியைத்  தவறவிட்டதாகத் தெரிகிறது. 

... தொங்கிய முகத்துடன் தரகர் வந்தார், ‘‘சார், நீங்க முஸ்லிமா? உங்க நிஜப் பெயர் என்ன?’’ என்றார். 


இஸ்லாமியருக்குத் தீவிரவாதி பெயர் ஒட்டிக்கொண்டுவிட்டது என்று சொல்பவர்கள் மனுஷ்ய புத்திரன் கூறிய கீழ்க்காணும் வரியைத்  தவறவிட்டதாகத் தெரிகிறது. 

... என் போன்ற சமூகப் பொதுவெளியில் வசிக்கும் ஒருவனுக்கே இதுதான் நிலை என்றால், எந்தப் பின்புலமும் அற்ற வெறும் பெயராக மட்டுமே அறியப்படும் சாமானிய முஸ்லிம்களின் நிலை என்னவாக இருக்கும்? 


மனுஷ்யபுத்திரன் "இஸ்லாமியத் தீவிரவாதி அல்ல என்பது தெரிந்தும்தானே" அவரை விலக்கியிருக்கிறார்கள்.  
அப்படியானால் அது மதம் அடிப்படையில் எடுத்த முடிவு மட்டுமே.
ஆனால், தவிர்க்கச் சாக்கு போக்கு சொல்பவர்கள் தீவிரவாதம் என்ற காரணம் கூறத் தலைப்பட்டு கழித்துக் காட்ட முனைகிறார்கள்.


நன்கு தெரிந்த உடன் பணியாற்றும்   இஸ்லாமிய நண்பர் (வன்முறைப் பின்னணி அற்றவர், நாணயமானவர் என்று அறியப்பட்டவர்) ஒருவருக்கு வீட்டை வாடகைக்குக் கேட்டால் என்ன சொல்வார்கள் இவர்கள்?

ஜெ  மோ  சொல்வது போல வாடகைக்கு விட நினைப்பவர்களுக்குச் சட்டம் உதவுவதில்லை.... உதவியதில்லை என்பதற்கு எங்கள் குடும்பத்திலேயே மறுதலைமுறை வரை வழக்கு நீண்டு, நீதிமன்றம் வழி பிச்சைக்காசு வாடகை வசூலித்துக் கொண்டிருந்த கதையெல்லாம் உண்டு.
  
பூனை, நாய் வளர்க்கக் கூடாது, ஆணி அடிக்கக்கூடாது, தனியான பெண்ணாக இருக்கக்கூடாது, திரைத்துறையில் இருக்கக்கூடாது, முஸ்லீமாக இந்துவாக கிறிஸ்த்துவராக இருக்கக் கூடாது, மாணவராக இருக்கக்கூடாது என்று சொல்பவர்களிடம் நேரத்தை விரயம் செய்வதை விட்டு விடலாம்.

 
சட்டம் உதவி,  அரசு உதவி என்பதெல்லாம் இக்காலத்தில் எதிர் பார்க்கவும்  வழியில்லை.

நேர்மையானவர் என்பவருக்கு உறுதியளிக்கப் பிறர் உள்ளனர் அது போதும், வாடகை ஒழுங்காகத் தருபவர் என்ற பின்னணி உள்ளது அதுபோதும்  என்பவர்கள் இருப்பார்கள். 

என் வீட்டை ஒரு இஸ்லாமியருக்கு வாடகைக்கு விட்டேன் என்ற  பேராசிரியர் மகாலிங்கம் போல  ஒரு  சிலர் தமிழகத்தில் இல்லாமலா இருப்பார்கள்?

புகாரி சொல்வது போல  சிறீராஜாக்களும், கார்த்திகளும்,  திவ்யாக்களும் இருப்பார்கள், அவர்களிடம் வீடும் இருக்க வேண்டும்.  அப்படி இருப்பவர்களை  ஒருங்கிணைக்க வேண்டும். 

எத்தனையோ நல்ல உள்ளங்கள் இரத்ததானம் செய்யத் தயார் என்று தங்கள் இரத்தப் பிரிவை தொலைபேசி எண்ணைக்  கொடுப்பவர்களைப் பட்டியலிட்டு வாட்சப் செய்திகள் அனுப்பிக்கொண்டேதான் இருக்கிறார்கள்.

இவர்களைப் போன்ற இக்கால இளைய தலைமுறையினர்தான் நமக்குத் தேவை. 

எந்தப் பேதமும் காட்டாமல் நல்ல குடியிருப்பவர் ஒருவருக்கு வீடு தருவதில் தயக்கமில்லை, அவர் பின்னணி என்னவாக இருந்தாலும் சரி என்று கூறும் வீட்டு உரிமையாளர் பட்டியலை தொகுக்க ஒரு இணையத்தளமோ, செயலியோ உருவாக்கி ஊர்கள் தோறும் உள்ள தயாராக இருக்கும் வீடுகளைப் பட்டியலிட்டு அறியத் தர வேண்டும். 

இதனை அரசே செய்தாலும் நல்லதுதான்.

ஆனால்  அதைவிடத் தனியார் ரியல் எஸ்டேட் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ளும் வகையில் இது போன்ற ஒரு பணியைச் செய்தால் விரைவில் நடைமுறைக்குக் கொண்டு வரலாம். 
ஒரு மாதிரிக்கு...

 cats ok
 dogs ok
 furnished
 no smoking
 wheelchair access

&


இது போன்ற வசதி இந்தியாவில் உள்ளதா தெரியவில்லை. இருந்தால் நன்றாக இருக்கும்.

.... தேமொழி 

சி. ஜெயபாரதன்

unread,
Apr 1, 2017, 9:59:13 AM4/1/17
to mintamil, vallamai, tamilmantram, vannan vannan, Oru Arizonan, Asan Buhari

/////முஸ்லீம்களை இந்துக்களிடமிருந்து பிரித்து வைத்து அவர்களின் மீது
வெறுப்பேற்றும் வகையில் அரசியல் செய்தவர் மகா ஆத்மாவான அந்த மோகன்தாஸ்
கரம்சந்த் காந்தி என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டியுள்ளது. அவரின் இந்த
அரசியல் காரணமாகவே கொலை செய்யவும் பட்டார் என்பதையும் நினைவுறுத்த
வேண்டியுள்ளது.////


நண்பர் பெருமாள் தேவரே,

இந்துக்களும் இஸ்லாமியரும் காந்தி கொலையுற்ற பின் சேர்ந்து வாழ்ந்தாரா ? அல்லது முத்துராமலிங்கத் தேவர் சேர்த்து வைத்தாரா ? இந்துக்களையும், இஸ்லாமியரையும் பிரித்தவர் தூய ஆர். எஸ். எஸ் இந்துக்கள் அல்லவா ?

சி. ஜெயபாரதன்

2017-04-01 0:49 GMT-04:00 Thevan <apth...@gmail.com>:
//10% கயவர்கள் தொல்லை கொடுத்தால், வேறு யாருமே கற்க வேண்டாம் பல்கலைக்
கழகத்தை மூடு என்கிறார், ஜெயமோகன். //

சாதி ஒழிப்பு விவகாரத்தில் முற்போக்காளர்கள் இதே நிலைப்பாட்டில்தானே

இருக்கிறார்கள்.

மற்றபடி ஜெயமோகனின் கருத்துக்கள் மீது பிடிப்பு எதுவும் இல்லை.

மும்பையில் யாராக இருந்தாலும் அதிகபட்சமாக 11 மாதங்களுக்குத்தான் வீட்டு
வாடகை ஒப்பந்தம் செய்யப்படும். பெரும்பாலான காவல் நிலையங்களில் வீட்டை
காலி செய்தல், வீட்டை அபகரித்தல் போன்ற புகார்கள் ஏற்கபடமாட்டா என்ற
அறிவிப்பு ஒட்டப்பட்டிருப்பதை காணலாம்.

பொதுவாகவே முஸ்லீம்கள் நல்லவர்கள் என்ற கருத்தை ஊடகங்களும்,
முற்போக்குவாதிகளும் பேசி வருகிறார்கள்.

ஆனால் பெரும்பாலான மக்கள் அதை நம்பத் தயாராக இல்லை என்பதையே இந்த நிகழ்வு
காட்டுகிறது. குறிப்பாக மனுஷ்யபுத்திரன் நுரையீரல் வெளியே வந்து விழும்
அளவுக்கு சாதி ஒழிப்பு குறித்துப் பேசுவார். பாவம் இந்த விஷயத்தில் உண்மை
நிலையை உணர்ந்திருக்கிறார்.

முஸ்லீம்களை இந்துக்களிடமிருந்து பிரித்து வைத்து அவர்களின் மீது
வெறுப்பேற்றும் வகையில் அரசியல் செய்தவர் மகா ஆத்மாவான அந்த மோகன்தாஸ்
கரம்சந்த் காந்தி என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டியுள்ளது. அவரின் இந்த
அரசியல் காரணமாகவே கொலை செய்யவும் பட்டார் என்பதையும் நினைவுறுத்த
வேண்டியுள்ளது.

ஆனால் பாவம், இன்று பாதிக்கப்படுபவர்கள் முஸ்லீம்களாகவே இருக்கிறார்கள்.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Apr 1, 2017, 11:54:40 AM4/1/17
to mintamil


On 01-Apr-2017 9:29 AM, "தேமொழி" <jsthe...@gmail.com> wrote:
>
> மனுஷ்யபுத்திரன் தனக்கு வீடு வாடகைக்குக் கிடைக்காததை மதத்தை ஒட்டி எழுதிய கருத்து உள் நோக்கம் கொண்டதாகத் தெரிகின்றது என்று சொல்பவர்கள் மனுஷ்யபுத்திரன் கூறிய கீழ்க்காணும் வரியைத்  தவறவிட்டதாகத் தெரிகிறது. 
>
>> ... தொங்கிய முகத்துடன் தரகர் வந்தார், ‘‘சார், நீங்க முஸ்லிமா? உங்க நிஜப் பெயர் என்ன?’’ என்றார். 
>
>
>
> இஸ்லாமியருக்குத் தீவிரவாதி பெயர் ஒட்டிக்கொண்டுவிட்டது என்று சொல்பவர்கள் மனுஷ்ய புத்திரன் கூறிய கீழ்க்காணும் வரியைத்  தவறவிட்டதாகத் தெரிகிறது. 
>
>> ... என் போன்ற சமூகப் பொதுவெளியில் வசிக்கும் ஒருவனுக்கே இதுதான் நிலை என்றால், எந்தப் பின்புலமும் அற்ற வெறும் பெயராக மட்டுமே அறியப்படும் சாமானிய முஸ்லிம்களின் நிலை என்னவாக இருக்கும்? 
>
>
>
> மனுஷ்யபுத்திரன் "இஸ்லாமியத் தீவிரவாதி அல்ல என்பது தெரிந்தும்தானே" அவரை விலக்கியிருக்கிறார்கள்.  

இந்திய நாட்டின் தலைக்குடிமகனாக இருந்த
ஐயா அப்துல்கலாம் அவர்களை அமெரிக்கா எப்படி யெல்லாம் சோதனை செய்து பார்த்தது !

https://www.google.co.in/url?sa=t&source=web&rct=j&url=http://www.bbc.com/news/world-asia-15711135&ved=0ahUKEwi9jurSzILTAhUEfbwKHZZxC9IQFgg5MAE&usg=AFQjCNEIUA9Uh0svXZK42PQ5v91CyiTM4Q&sig2=51aExdhk68cxmGayv66NIw

இதற்குக் காரணம் என்ன ?
அவர் தீவிரவாதி அல்லவே !
அமெரிக்க நாடே பயங்கரவாத்த்தைக் கண்டு பயப்படும்போது சாதாரணமாக வீட்டை வாடகைக்கு விடுபவர் பயப்படுவதில் அர்த்தம் உள்ளதல்லவா?

> --
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com


> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

சி. ஜெயபாரதன்

unread,
Apr 1, 2017, 12:08:44 PM4/1/17
to vallamai, tamilmantram, mintamil, vannan vannan, Oru Arizonan
நண்பர் பெருமாள் தேவரே,


அயோத்தியா புரியில் இந்துக்கள் பாப்ரி மசூதியை ஓரிரவிலே இடித்து, வில்லங்க பூமியில் இராம பிரானுக்கு  ஆலயம் கட்டுவது இந்து-முஸ்லீம் ஒற்றுமையை வளர்க்கிறதா ? 

வில்லங்க பூமியைத் தாண்டி ஆயிரம் அடி தூரத்தில் இந்துக்கள் இராமாலயம் கட்டினால் என்ன ?  மக்கள் அந்த ஆலயத்துக்குப் போகமாட்டாரா ?

இந்து-முஸ்லீம் வெறுப்புக்கு முதலில் இந்துக்கள்தானே காரணிகள் ..


சி. ஜெயபாரதன்.

2017-04-01 10:29 GMT-04:00 Thevan <apth...@gmail.com>:
ஐயா ஜெயபரதன், காந்தி கொலை செய்யப்பட்டதும், ஒரு முஸ்லீம்தான் அவரை கொலை செய்து விட்டதாக மதுரையில் வதந்தி பரவியது. அது பதட்டத்தை ஏற்படுத்தியது. 

அப்போது மதுரையிலிருந்த தேவர் உடனே எல்லாப் பகுதிகளுக்கும் சென்று காந்தியை கொன்றது ஒரு இந்துதான், முஸ்லீம் அல்ல என்று உண்மையை உணர்த்தி பதட்டத்தை போக்கினார். இது வரலாறு.

Dev Raj

unread,
Apr 1, 2017, 3:28:40 PM4/1/17
to மின்தமிழ்

எனக்கு இங்கு இடமில்லையா என்று இதுவரை கேட்டுக்கொண்டிருந்த நான் இப்போது முதல் முறையாகக் கேட்கிறேன், ‘‘எங்களுக்கு இங்கு இடமில்லையா?’’ 

 

கிரித்தவர் யாருக்கும் இப்பிரச்னை எழவில்லையே !
உங்களுக்கும் மட்டும்தானே இந்தப் பிரச்னை;
எனவே சமுதாயத்தைக் குறை கூறாமல் உங்களை
நீங்களே மறு ஆய்வு செய்துகொள்ளும் நிலையில் உள்ளீர்கள்
என உணர்க 


தேவ்
 

1.jpg

சி. ஜெயபாரதன்

unread,
Apr 1, 2017, 3:40:19 PM4/1/17
to mintamil, vallamai, tamilmantram, vannan vannan, Oru Arizonan
நண்பர் தேவ்,




வட இந்தியாவில் கிறித்துவப் பாதிரிகள் இந்து வெறியரால் உயிரோடு எரிக்கப்படுகிறார். கிறித்துவ ஆலயங்கள் தாக்கப் படுகின்றன.


Inline image 1

Demonstrators shout slogans as they hold placards during a protest outside a church in 
New Delhi February 5, 2015.



சி. ஜெயபாரதன். 

++++++++++++++++

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

பழமைபேசி

unread,
Apr 1, 2017, 4:04:12 PM4/1/17
to மின்தமிழ், vall...@googlegroups.com, tamil...@googlegroups.com
உலகமயமாக்கல், பொருளாதாரமயமாக்கல் போன்றவை ஓங்கியுள்ள சூழலில், அதற்கொப்ப சட்டதிட்டங்கள் மாற்றியமைக்கப்படவில்லை என்பதே காரணம். எங்கள் ஊரில் ரோட்டாரம் இருந்த வீட்டில், (பொள்ளாச்சி - உடுமலை பெருந்தெருவாகி விட்ட சூழலில்), முன்புறம் இரு கடைகளாக்கி வாடகைக்கு விட்டு, பின்புறம் குடும்பம் பிள்ளைகளுடன் குடியிருந்தார் ஓர் ஏழை விவசாயி. ஒரு கட்டத்தில் ”கடையின் பொருட்களை வைக்கக் கிடங்கு வேண்டும், நீ காலி செய்” என மிரட்டியும் அந்த விவசாயின் மகளுக்கு அச்சுறுத்தலும் விடுக்கப்பட, அவருக்கு ஏதுவாக யாராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. காரணம், கடைக்காரருக்கு வணிகர் சங்கமும் ஒரு குறிப்பிட்ட சாதி சங்கமும் துணை. தூக்கில் தொங்கினான் அந்த ஏழை விவசாயி!!

இதன் ஆணிவேர், இத்துப்போன சட்டதிட்டமும் சட்டமொழுங்கும்!! இதற்குள் மதங்களும் சாதிகளும் ஆர்கனைசுடு கிரிமினல் அமைப்புகளும் அந்தந்த சூழலுக்கொப்ப இடம் பிடிக்கின்றன. இதன் பிரச்சினை என்பதே வேறு!! ஆமாம். நாட்டில், மிடில்கிளாசு குடிமக்களுக்கும் அவர்தம் உடைமைகளுக்கும் பாதுகாப்பில்லை என்பதே உண்மை. மற்றன யாவும் சந்தர்ப்பவாதங்களே!! மிடில்கிளாசுக்காரன் பிரச்சினையில கூடப் பங்கு கேக்குறாய்ங்க!! அவனுக்கு அதுலகூட உரிமையில்லை. அவ்வ்வ்....

சி. ஜெயபாரதன்

unread,
Apr 1, 2017, 4:40:50 PM4/1/17
to mintamil, vallamai, tamilmantram, vannan vannan, Oru Arizonan, Asan Buhari

சி. ஜெயபாரதன்

unread,
Apr 1, 2017, 4:43:58 PM4/1/17
to vallamai, tamilmantram, mintamil, vannan vannan, Oru Arizonan, Asan Buhari

பழமைபேசி

unread,
Apr 1, 2017, 5:07:30 PM4/1/17
to வல்லமை, mint...@googlegroups.com, tamil...@googlegroups.com
அடுத்து, பிரச்சினையின் மூலத்தை விடுத்து அவரவர் விருப்பு வெறுப்புக்கொப்ப கட்டமைப்பது, தும்பை விடுத்து வாலைப் பிடித்துத் தொங்குவதற்கு இணையானதாகும். அதைத்தான் இவ்விழையில் இடம்பெற்றிருக்கும் படைப்புகளை எழுதியிருக்கும் அவ்விரு எழுத்தாளர்களும் செய்திருக்கின்றனர். சமூகத்தின் நாடித்துடிப்பாக இருக்க வேண்டிய எழுத்தாளர்களே, முழுமையற்று அரைகுறையுடன், சார்புத்தன்மையுடன் சமைத்துக் கொண்டிருந்தால்... நாடு நல்லா விளங்கும்!! :-(

Prakash Sugumaran

unread,
Apr 1, 2017, 6:07:11 PM4/1/17
to mintamil
பத்திரிகையாளர், வழக்கறிஞர், காவலர், அரசியல்வாதி என பல தரப்பினருக்கு வீடு கிடைப்பதில் பிரச்சினைகள் உள்ளது. இதில் தேவையற்ற சர்ச்சையை மதத்தின் பெயரால் மனுஷ்யபுத்திரன் தொடங்கி வைத்துள்ளார். இஸ்லாமியர்கள் எப்படி இந்துக்களுக்கு வீடு தருவதற்கு யோசிப்பார்களோ அப்படித்தான், இவருக்கும் நேர்ந்திருக்கும். சென்னையில் இஸ்லாமியர்கள் கூடவா இவருக்கு வீடு தர மறுத்தார்கள்? சொந்தக்காரர்களுக்கே வீடு வாடகைக்கு விட யோசிக்கும் காலத்தில்,..

பழமைபேசி

unread,
Apr 1, 2017, 6:16:26 PM4/1/17
to மின்தமிழ்
இஃகி, மறுபடியும் அதே பல்லவியா? பிரச்சினையின் அடிப்படை, சட்டமும் சட்டமொழுங்குக் கட்டமைப்பும்தான்.... அது சரி செய்யப்பட்டால், வாடகைக்கு விடுபவனுக்கும் நொம்பலமிருக்காது... வாடகைக்கு எடுக்கிறவனுக்கும் நொம்பலமிருக்காது.... ஆகவே, எல்லாரும் அணி திரள வேண்டியது சட்டமொழுங்குக்குகாக... அதை விடுத்து, இப்படி ஒன்டிக்கு ஒன்டியா இருந்தா... தீர்வே கெடியாது.... :-)

Dev Raj

unread,
Apr 2, 2017, 1:19:42 AM4/2/17
to மின்தமிழ்
இசுலாமியர் பெரும்பான்மை தம் நிறுவனங்களில் இந்துக்களுக்குப்
பணி வாய்ப்பு அளிக்கின்றனரா ?


தேவ்

Dev Raj

unread,
Apr 2, 2017, 1:41:51 AM4/2/17
to மின்தமிழ்
On Sunday, 2 April 2017 01:10:19 UTC+5:30, jayabarathans wrote:
நண்பர் தேவ்,




வட இந்தியாவில் கிறித்துவப் பாதிரிகள் இந்து வெறியரால் உயிரோடு எரிக்கப்படுகிறார். கிறித்துவ ஆலயங்கள் தாக்கப் படுகின்றன.

ஏதோ ஒருசில நிகழ்வுகள் அவை; ஆராய்ந்தால் பின்புலம் வேறாக இருக்கும்.
 
இக்கொலைகள் தொடராக நிகழ்ந்திருப்பதும் இந்தியாவில்தான் -


தேவ்

தேமொழி

unread,
Apr 2, 2017, 1:47:54 AM4/2/17
to மின்தமிழ்


On Saturday, April 1, 2017 at 10:19:42 PM UTC-7, Dev Raj wrote:
இசுலாமியர் பெரும்பான்மை தம் நிறுவனங்களில் இந்துக்களுக்குப்
பணி வாய்ப்பு அளிக்கின்றனரா ?

http://www.jmc.edu/academics.php?mn=acad << இங்கு சென்று, ஒவ்வொரு துறையாகச் சொடுக்கி, ஒவ்வொரு துறையின் பக்கத்திலும் faculty  சுட்டியைச் சொடுக்கிப் பார்க்கலாம்.

புள்ளி விவரம் சேகரித்தால் நானும் பார்க்க ஆவலுடன் உள்ளேன்.


..... தேமொழி



Dev Raj

unread,
Apr 2, 2017, 2:02:38 AM4/2/17
to மின்தமிழ்


Wipro Chief Azim Premji  speaks at Rashtriya Seva Sangam, New Delhi


Wipro Chief Azim Premji speaks at Rashtriya Seva Sangam, New Delhi

Prakash Sugumaran

unread,
Apr 2, 2017, 2:32:14 AM4/2/17
to mintamil
எல்லாரும் அணி திரள வேண்டியது சட்டமொழுங்குக்குகாக.//

திரளவும் முடியாது. மீறி திரண்டாலும் செல்லுபடியாகாது. காரணம், பிரிட்டீஷ் சட்ட - ஒழுங்கு நடைமுறை இன்னும் தொடர்வது தான். :-)

பழமைபேசி

unread,
Apr 2, 2017, 9:17:34 AM4/2/17
to மின்தமிழ்
//மீறி திரண்டாலும் செல்லுபடியாகாது. காரணம், பிரிட்டீஷ் சட்ட - ஒழுங்கு நடைமுறை இன்னும் தொடர்வது தான். :-)//

இஃகிஃகி!! சும்மா சாக்கு போக்கு..... எல்லாம் தனிமனித ஒழுக்கக்குறைபாடு!!

Buhari

unread,
Apr 2, 2017, 10:23:50 AM4/2/17
to சி. ஜெயபாரதன், vallamai, tamilmantram, mintamil, vannan vannan, Oru Arizonan
மீண்டும் காட்டுமிராண்டிக் காலம் தொடங்கியாச்சு!

அன்புடன் புகாரி
+1-416-500-0972

Uttar.mp4

nkantan r

unread,
Apr 2, 2017, 11:03:45 AM4/2/17
to மின்தமிழ்
1) i point to my earlier post on my experience in vadodara:  https://groups.google.com/forum/#!msg/mintamil/tUskZ6c2OlA/KvYUfLl2DAAJ
 (i remember when i went to vadodara and walked out on a morning to buy milk clad in lungi, there was a hue and cry and neighbours complained that a muslim had come to stay among them! (that was rented by L&T);  when the neighbour confronted me i told him my name was abu bukker and left to my office; the neighbour went rushing to HR to lodge a complaint about estate department;)

2) there is s perception that tamils were originally castelss and treated all alike and the so called divisive nature was introduced by vedic culture and religions (example read: https://groups.google.com/forum/#!topic/mintamil/HJ6muo73xzM where Dr subashini starts with presumptive statement:
தமிழ் நிலத்தில் தமிழ் மக்களின் பண்பாட்டில் வைதீக தருமம் அதன் விரிவாக்கத்தை அமைத்த பின்னர் மிகப்பல சமூகக் கேடுகள் தமிழர் பண்பாட்டுத் தளத்தில் நுழைந்தன. அதன் தொடர்ச்சியாகச்   சாதி அமைப்பும் அதனைச் சார்ந்த கொள்கைகளும் "நீதி", "சமய ஒழுக்கம்" என்ற பெயரில் அக்கால அரசுகளின்  துணையோடு விரிவாக்கம் கண்டன. இதனால் தமிழ்ப்பெருங்குடி மக்களான பழங்குடி மக்கள், சமூகத்தின் கடைக்கோடி மனிதராக சமூதாய அளவுகோளில் வைக்கப்படும் நிலமை உருவானது. அது இன்றும் தொடர்கின்றது. )

3) we have to realise men are gregarious animals; we group on the basis of language, skincolour, diet, dress, locale, clan, etc leave alone money, education, profession, etc; when some group in one unit others are excluded and this is division,.  It is worth remembering there are two faces of a same coin; so a division means a grouping in some other place

4) the problem is when such division is used for downgrading or excluding others from the accepted norms of social freedom;

5) Ghetto segregation is very apparent in delhi, ahmedabad etc; it is also present in chennai and most of the indian cities and towns;  when we have a street (செங்குந்தர் street, vanniyar street etc) it is just ghetto structure and agregation and segregation!
(A ghetto is a part of a city in which members of a minority group live, especially because of social, legal, or economic pressure. The term was originally used in Venice to describe the part of the city to which Jews were restricted and segregated. The term has been applied in various contexts)

regards
rnkantan
(i was not able to log-in and read net, as i went to chennai to get my flat back from tenant;  he works in IT and wife works in a hosptial with combined earning crossing Rs 1 lac permonth;  and due to some financial problems in his family business caused by demonitization, stopped paying rent in nov onwards;  when i asked for rent in jan he abused me - he being a mara-thamizhan and me being a brahmin, he thought i am a walk over! i gave him legal notice in feb and gave a month;s time for vacating; when he didnot bother to do so by 15th march, i went to chennai and locked the flat; there was a ruckus and finally he understood he had to vacate; that happened finally on 1st april; yesterday, when i finally got the flat cleaned and flew back to mumbai! )

let me continue reading the thread and revert as required

 

On Thursday, March 30, 2017 at 1:48:11 PM UTC+5:30, இராம.கி wrote:
முசுலீம்கள் இன்னொரு முசுலீமிற்குக் கொடுப்பது இடத்தைப் பொறுத்து அமையும். திருவல்லிக்கேணியில், புதுப்பேட்டையில் பெரும்பாலும் முசுலீம்களுக்காக முன்னுரிமை இருக்கும். மற்ற பகுதிகளில் முசுலீம் அல்லாதவருக்குக் கொடுக்கலாம். இதிலும் ஒரு பட்டவம் (pattern) இருப்பது உண்மைதான்.
 
இதேபோல பெருமானர் தம் வீடுகளை பெருமானருக்கே வாடகைக்குக் கொடுக்க விரும்புவார். மீறி மாற்று வகுப்பினருக்குக் கொடுப்பது அரிதாகவே காணப்படுகிறது. இதைச் சாதிவேறுபாடு என்று சொல்வதைக் காட்டிலும் பெருமானர்/பெருமானர் அல்லாதோர் என்றே வேறுபாடு கொள்வதாய் எண்ணவேண்டியிருக்கிறது. 
 
பெருமானர் அல்லாதோர் எல்லோருக்கும் தான் கொடுக்கிறார்  அதேபொழுது தாழ்த்தப்பட்டோரை பெருமானர் அல்லாதோர் விலக்குகிறாரா என்பது இன்னும் எனக்கு விவரமாய்த் தெரியவில்லை. மேலும் அலசிப் பார்க்கவேண்டும்.
 
கறி/மரக்கறி சமைப்பது என்றும் ஒருவித வேற்றுமை பார்ப்பார். இச்சிக்கலும் மேலே கூறிய பெருமானர்/பெருமானர் அல்லாதோர்/ முசுலீம் என்று முக்கோணத்தில் ஊடுவரும். வடவிந்தியர்/ தென்னிந்தியர் என்னும் வேற்றுமையைக் கடுகெண்ணெய்ப் பழக்கத்தால் உரசிப்பார்ப்பார்.
 
நகரத்தில் ஒருமாதிரியாய் இருப்பவர் ஊருக்குப் போனால் இன்னொரு மாதிரியாயிருப்பார். கொள்கைப்பிடிப்புகள் என்பவை இடத்திற்குத் தகுந்தாற்போல் அமைவது இன்னுமொரு விந்தை.
 
மொத்தத்தில் வாடகைக்கு வீடுபிடிப்பது தமிழகத்தில் அவ்வளவு எளிதல்ல. தமிழகமெங்கும் வீடுகளை வாடகைக்குக் கொடுப்பதில் ஏதோ ஒருவிதத்தில் தீண்டாமை நடந்து கொண்டுதான் உள்ளது. காலம் மாறிவரும்போது, பழைய வழக்கங்கள் சிறிதுசிறிதாய் மறைந்தால் எதிர்காலத் தமிழகத்திற்கு நல்லது.  கிழாரியப் பழக்கம் (feudal practice) குறைந்து முதலிட்டிய பழக்கம் (capitalist practice) வந்தால் நல்லது. இன்னும் அரைக்கிழாரியப் பின்புலம் (semi-feudal background) நம்மிடையே மாறாதிருப்பது கவலையைக் கொடுக்கிறது.
 
அன்புடன்,
இராம.கி.
Sent: Thursday, March 30, 2017 12:54 PM
Subject: Re: [MinTamil] சார் நீங்க முஸ்லிமா?
 
 
 
2017-03-29 22:30 GMT+02:00 செல்வன் <hol...@gmail.com>:

என் உடல் சார்ந்த குறைபாட்டை நான் கடந்துவிட்டேன். ஆனால், என் பிறப்பு சார்ந்த பெயருக்காக எனக்குக் கொடுக்கப்படும் தண்டனைகளை என்னால் கடக்க முடியவில்லை. வாடகைக்கு ஒரு வீடுதான் கேட்கிறேன். கிடைக்கவில்லை. என் போன்ற சமூகப் பொதுவெளியில் வசிக்கும் ஒருவனுக்கே இதுதான் நிலை என்றால், எந்தப் பின்புலமும் அற்ற வெறும் பெயராக மட்டுமே அறியப்படும் சாமானிய முஸ்லிம்களின் நிலை என்னவாக இருக்கும்?

நான் பதினைந்து வருடங்களாகக் குடியிருந்த வீட்டை அதன் உரிமையாளர் விற்பதால் காலி செய்ய வேண்டிய கட்டாயம். உண்மையில், என் வாழ்வில் அழியாத நினைவுகளைக் கொண்ட வீடு இது. இந்த வீட்டில்தான் ஒருகாலத்தில் நடிகை வடிவுக்கரசி இருந்தார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதைப் பற்றிக்கூட ‘வடிவுக்கரசி இருந்த வீடு’ என்று ஒரு கவிதை எழுதியிருக்கிறேன். ஆனால், ‘மனுஷ்ய புத்திரன் இருந்த வீடு’ என்று யாரோ ஒரு வாசகன் சொல்ல இந்த வீடு இருக்கப்போவதில்லை. இரண்டு வருடங்களுக்குள் இங்கே ஒரு மூன்றடுக்கு ஃப்ளாட் வந்துவிடும்.

கடந்த இரண்டு மாதங்களாக வீடு தேடி அலைகிறேன். நான் வீடு பார்க்கப்போகிற எல்லா இடத்திலும் என்னை வீட்டு உரிமையாளர்களுக்கு நன்கு தெரிந்திருக்கிறது. ‘டி.வி.யில் உங்க நிகழ்ச்சின்னா விரும்பிப் பார்ப்போம்’ என்று அன்பாகச் சொல்லி காபி கொடுக்கிறார்கள். ஆனால், எல்லா இடங்களிலும் நான் புரிந்துகொள்ள முடியாத ஏதோ ஒரு காரணத்தால், எனக்கு வீடு மறுக்கப்படுகிறது. 

சார், நீங்க முஸ்லிமா?

ஒரு வீட்டு உரிமையாளர் விளம்பரத்தில் கொடுத்திருந்ததைவிட இன்னொரு மடங்கு வாடகை சொன்னார். கேட்டால், “அது பிரின்டிங் மிஸ்டேக்” என்றார். என்னை நிராகரிக்க வேண்டும் என்பதே அவரது விருப்பம். பிறகு, அதே வாடகை குறிப்பிடப்பட்டு, அதே விளம்பரம் அடுத்த வாரமும் வந்திருந்தது.

நான்கு நாளைக்கு முன்னர் வீடு பார்த்தேன். வீடு எனக்கு ஓரளவு பிடித்திருந்தது. வீட்டுத் தரகர் உரிமையாளரிடம் அந்த வீட்டை நான்தான் பார்த்திருக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். வீட்டு உரிமையாளருக்கு ஒரே மகிழ்ச்சியாம். ‘‘அவர் எழுத்தையெல்லாம் படித்திருக்கிறோம்.. அவர் எங்க வீட்டுக்குக் குடிவருவது எங்களுக்குத்தான் பெருமை..’’ என்று அவர் சொன்னதாகச் சொல்லிய வீட்டுத் தரகர் ‘‘நாளைக்கே போய் அட்வான்ஸ் கொடுத்துவிடுவோம்’’ என்றார். அவர் சொன்ன நாளில் வீட்டு உரிமையாளரைச் சந்திக்க நான் ஆயத்தமாகிக்கொண்டிருந்தபோது தொங்கிய முகத்துடன் தரகர் வந்தார், ‘‘சார், நீங்க முஸ்லிமா? உங்க நிஜப் பெயர் என்ன?’’ என்றார்.

நான் அவரை உற்றுப் பார்த்தேன் ‘‘இல்ல சார், வீட்டு ஓனர்கிட்ட நீங்க முஸ்லிம் என்று யாரோ சொல்லியிருக்காங்க..” என்று இழுத்தார்.‘‘ஏன், நான் அசைவம் என்பதால் கொடுக்க மாட்டார்களா?’’ என்று கேட்டேன். ‘‘அசைவம் எல்லாம் பிரச்சினை இல்லை.. நீங்க முஸ்லிம் என்பதுதான் பிரச்சினை’’ என்றார்.

நான் உடைந்துபோனேன். ஒருவகையில், அந்த வீட்டு உரிமையாளரைப் பாராட்ட வேண்டும். அவர் மற்றவர்களைப் போல மழுப்பாமல், நேரடியாக உண்மையான காரணத்தை நேர்மையாகக் கூறிவிட்டார். நான் எழுதிய இரண்டாயிரம் கவிதைகளை நினைத்துப்பார்த்தேன். மதச்சார்பின்மைக் காகவும் சமூக நீதிக்காகவும் நான் எழுதிய ஆயிரக்கணக்கான பக்கங்கள், பேசிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பொதுக் கூட்டங்கள் அனைத்தையும் நினைத்துப் பார்த்தேன். ஆயிரம் இருந்தென்ன? நான் இப்போது எதுவுமே இல்லை; வெறும் ஒரு முஸ்லிம்… அவ்வளவுதானே!

ஒரு கணம், என் வாழ்க்கையில் நான் எதையெல்லாம் போராடிப் பெற்றேனோ அது அனைத்தும் என்னிடமிருந்து பறிக்கப்பட்ட உணர்வு. நான் இப்போது வெறுக்கப்படும் ஒரு பெயர், ஒரு அடையாளம் மட்டுமே. இரண்டு நாளைக்கு முன்புகூட, மதவாதத்தைப் பரப்புகிற கட்சிகளுக்குத் தமிழக மக்களிடம் எந்த இடமும் இல்லை என்று ஒரு தொலைக்காட்சியில் சவால் விட்டுவிட்டு வந்தேன். ஆனால், என் நம்பிக்கைகள் தோற்றுவிடுமோ என்று இன்று நான் அஞ்சுகிறேன்.

கடக்க முடியாத தண்டனை

நான் என் சொந்தப் பெயரை ஒருபோதும் மறைத்ததில்லை. ‘ஹமீது’ என்றுதான் என்னைப் பல இடங்களில் சுஜாதா குறிப்பிட்டிருக்கிறார். முகநூலில் அந்தப் பெயரில்தான் எழுதுகிறேன். ஆனால், என்னை ‘மனுஷ்ய புத்திரன்’ என்கிற பொது அடையாளத்தில் மட்டும் அறிபவர்கள், என் சொந்தப் பெயரைக் கேட்டதும் அடையும் சங்கடம் என்னை மிகவும் அதிர்ச்சியடைய வைக்கிறது. இத்தனைக்கும் இஸ்லாமியப் பண்பாடு சார்ந்து ஒரு வாக்கியம்கூட என் கவிதைகளில் இல்லை. முகநூலில் என் அளவுக்கு மதவெறியர்களால் தாக்கப்பட்ட இன்னொரு எழுத்தாளரோ சமூகச் செயல் பாட்டாளரோ யாரும் இல்லை. இந்துத்துவா அடிப்படைவாதிகள் மட்டுமல்ல, இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் இந்தத் தாக்குதலைச் செய்திருக்கிறார்கள்.

மூன்று வயதில் எனக்கு நடக்க முடியாமல்போனது. என் உடல் சார்ந்த குறைபாட்டை நான் கடந்துவிட்டேன். ஆனால், என் பிறப்பு சார்ந்த பெயருக்காக எனக்குக் கொடுக்கப்படும் தண்டனைகளை என்னால் கடக்க முடியவில்லை. ஒரு எழுத்தாளனாக, ஒரு ஊடகவியலாளனாக, ஒரு பதிப்பாளனாக, ஒரு மிகப்பெரிய அரசியல் இயக்கத்தைச் சேர்ந்தவனாக மைய நீரோட்டத்தில் நான் எவ்வளவு கரைந்து நின்றபோதிலும் திடீரென ஒரு குரல் கேட்கிறது.. ‘‘வெளியே போ!’’

என்ன ஆனது பாரம்பரியம்?

சென்னையில் பெரும் வெள்ளம் சூழ்ந்த போது, வீடுகளிலும் கோயில்களிலும் புகுந்த சாக்கடையைச் சுத்தப்படுத்திய இஸ்லாமியர்கள் பாராட்டப்பட்டார்கள். அந்த நல்லுணர்வுகள் சாக்கடைத் தண்ணீரைப் போல இவ்வளவு சீக்கிரம் வடிந்துவிட்டனவா என்று தோன்றியது. வட இந்தியாவில் இருப்பதுபோல தமிழகத் தில் இஸ்லாமியர்களும் இந்துக்களும் தனித் தனியான குடியிருப்புப் பகுதிகளைக் கொண்டிருப்பதில்லை. தமிழகத்துக்கு என்று தனிப் பாரம்பரியமும் நல்லுறவு நல்லுணர்வும் இருக்கிறது. ஆனால், இஸ்லாமியர்களுக்கு வீடு தரக் கூடாது என்ற மனோபாவம் இவ்வளவு ஆழமாக இங்கே எப்போது ஊடுருவியது? இல்லாமியர்கள் அசுத்தமானவர்கள், வன்முறை யாளர்கள், தேச விரோதிகள் என்ற பிரச்சாரம் சமூகத்தின் அடியாழம் வரை எப்போது ஆழமாகப் பரவியது? தெரியவில்லை!

எனக்கு ஒரு பெயர் இருப்பதுதான் பிரச்சினையா அல்லது நான் இருப்பதே பிரச்சினையா என்று குழப்பமாக இருக்கிறது. இந்த மொழிக்காகவும் பண்பாட்டுக்காகவும் நான் செய்திருக்கும் வேலைகளுக்காக நான் எந்த பிரதியுபகாரமும் கேட்கவில்லை. வாடகைக்கு ஒரு வீடுதான் கேட்கிறேன். என் போன்ற சமூகப் பொதுவெளியில் வசிக்கும் ஒருவனுக்கே இதுதான் நிலை என்றால், எந்தப் பின்புலமும் அற்ற வெறும் பெயராக மட்டுமே அறியப்படும் சாமானிய முஸ்லிம்களின் நிலை என்னவாக இருக்கும்? தமிழ்ப் பொதுச்சமூகம் யோசிக்க வேண்டும்.

எனக்கு இங்கு இடமில்லையா என்று இதுவரை கேட்டுக்கொண்டிருந்த நான் இப்போது முதல் முறையாகக் கேட்கிறேன், ‘‘எங்களுக்கு இங்கு இடமில்லையா?’’

- மனுஷ்ய புத்திரன்,

கவிஞர், பதிப்பாளர்,

‘காந்தியுடன் இரவு விருந்திற்கு செல்கிறேன்’, ‘எதிர்க்குரல்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

இதனை வாசித்த போது மற்றுமொரு கோணத்தில் சிந்தனையும் எழுந்தது.
 
தமிழகத்து இஸ்லாமியர்கள் வேறு மதத்தினருக்குத் தங்கள் வீடுகளை வாடகைக்குத் தருகின்றனரா?அவர்களிடம் வேற்று மதத்தினர் என்ற மத பாகுபாடு இல்லையா?
 
மனுஷ்ய புத்திரன் என்ற ஒரு தனி நபரை எடுத்துக் கொண்டால் அவர் திமுக-வின் முக்கிய கொள்கை பரப்பும் பேச்சாளர். அவரது தற்போதைய அரசியல் ஈடுபாட்டினால் அவருக்கு அமைந்திருக்கும் தனிப்பட்ட செல்வாக்கு என்பது மறைக்கமுடியாதது. அவருக்கு விரைவில் வீடு கிடைத்து விட வாய்ப்பிருக்கின்றது. ஆனால் எந்த ஆதரவும் இல்லாத சாதாரண மனிதர்களுக்கு  என்ன கதி என நினைக்கும் போது மதம் சாதி என்ற இரு விசயங்களுக்குள் மாட்டிக்கொண்டு உழலும் இந்த சமூக அமைப்பின் மேல் கோபமே வருகின்றது.
 
சுபா
 
 
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

சி. ஜெயபாரதன்

unread,
Apr 2, 2017, 1:03:54 PM4/2/17
to mintamil, vallamai, tamilmantram, vannan vannan, Oru Arizonan, Asan Buhari
////காந்தியின் உருவாக்கிய போஸ்டர் பாயான நேரு மிக குறுகிய காலத்திற்குள்ளாக,
ஒரு பெரிய, ஒரு முட்டாள் தனமான பிரிவினைக்கு ஒப்புக்கொண்டார். அதன்
விளைவாக இந்திய எல்லைக்குள் இருந்த முஸ்லீம்கள் பாகிஸ்தானிற்கும்,
பாகிஸ்தானிலிருந்த இந்துக்கள் இந்தியாவுக்கும் குடிபெயர்ந்தனர்.////


இந்தியப் பிரிவினைக்கு வித்திட்டவர் ஜின்னா.  பண்டித நேரு இல்லை.  பல ஐந்தாண்டுத் திட்டங்கள் வகுத்து, நீரணைகள், பல்கலைக் கழகங்கள், கன யந்திரச் தொழிற்சாலைகள், அண்டவெளி, அணுசக்தி ஆராய்ச்சிகள், துவங்கி  பாரத தேசத்தை ஆசியாவிலே முதன்மைக் குடியரசாய் ஆக்கியவர் நேரு. 

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், ஆக்கபூர்வமாகத் தமிழ்நாட்டுக்கு என்ன செய்தார் ?

சி. ஜெயபாரதன்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

பழமைபேசி

unread,
Apr 2, 2017, 1:35:08 PM4/2/17
to மின்தமிழ்

Conscience is an aptitude, faculty, intuition or judgment that assists in distinguishing right from wrong. ஆனால் மெய்நிகருலகில், எது சரி, எது தவறு என்பதற்கு மாற்றாக, தாம் வெற்றியடைவதற்கும் அல்லது தன்னைத் தக்கவைத்துக் கொள்வதற்கும் எது உகந்தது, எது உகந்ததற்றது என்பதைத் தீர்மானிக்கும் திறனை வளர்த்துக் கொள்ளவே பயிற்றுவிக்கின்றனர். இதில் தேர்ச்சி கொண்டோர் வளர்ச்சி/வெற்றியில் முன்னணி வகிப்பர். வெற்றியின் சுவையில் தொடர்ந்து மென்மேலும் பல வெற்றிகளைச் சுவைக்கத் தலைப்படும்போது மனம் பாழ்பட்டும் போகும். In other words, their conscience becomes corrupt!!


இப்படியான தலைவர்கள் வழி நடக்கும் சமூகம்/அமைப்புகள் எப்படி மேன்மையுறும்?!

abdul rahuman

unread,
Apr 2, 2017, 5:15:28 PM4/2/17
to மின்தமிழ், hol...@gmail.com
நேற்றுவரை இஸ்லாமியர்களின் பிரச்சனைக்காக பேசாத மனுசபுத்திரன், இன்று தமக்கு தம் பெயரின் காரணமாகவே பிரச்சனை ஏற்பட்டவுடன் "சிறுபான்மை" எதிர்மனோபாவம் எனக் குமுறுவதன் பின்னணியில் தன்னலமோ அல்லது அரசியல் லாபமோ எதுவேண்டுமென்றாலும் காரணமாக இருக்கலாம். ஆனால், வீடு வாடகைக்கு எடுப்பது தொடர்பில்-மக்கள் சாதி, மதம், மொழி, இனம், கலாச்சாரம் பாராமல் ஒருவருக்கொருவர் கலந்து வாழ்வதில் பிரச்சனை இருப்பது என்பது உண்மை. அதற்கு ஆர்.எஸ்.எஸ் முதலான ஹிந்துத்துவ தீவிர சிந்தனை கொண்ட இயக்கங்கள் முக்கிய காரணமெனில், இன்னொரு வகையில் முஸ்லிம் தீவிர சிந்தனை கொண்ட அமைப்புகளும் காரணங்களாக அமையலாம். ஆய்வு ரீதியாக அதனை உண்மைப்படுத்தவும் முடியும். ஆனால் இவைகளையே பேசிக்கொண்டிருப்பதில் தீர்வு கிடைக்கப்போவதில்லை. பிரச்சனையைக் களைவதற்கான வழிகளை ஆய்வதும் அச்சிந்தனை கொண்டோர் வலுப்பெறுவதுமே தீர்வுக்கான வழி.

பழமைபேசி

unread,
Apr 2, 2017, 6:36:52 PM4/2/17
to மின்தமிழ்
//பிரச்சனையைக் களைவதற்கான வழிகளை ஆய்வதும் அச்சிந்தனை கொண்டோர் வலுப்பெறுவதுமே தீர்வுக்கான வழி.//
தம்மை, தம் கருத்தினை நிறுவுவதற்கே நேரம் போதவில்லைங்ளாம் சார்!!

Thenee MK

unread,
Apr 2, 2017, 9:50:32 PM4/2/17
to mintamil
அப்துல் ரஹமான் அவர்கள் கூறியது உண்மை.

பிரச்சனையைக் களைவதற்கு வழிகளை சொல்லுங்க. பிரச்சனையே பிரச்சனையாக்கிக்கிட்டு இருக்காதிங்க.

கமலநாதன்





 

2017-04-02 18:22 GMT+08:00 abdul rahuman <abdra...@gmail.com>:
நேற்றுவரை இஸ்லாமியர்களின் பிரச்சனைக்காக பேசாத மனுசபுத்திரன், இன்று தமக்கு தம் பெயரின் காரணமாகவே பிரச்சனை ஏற்பட்டவுடன் "சிறுபான்மை" எதிர்மனோபாவம் எனக் குமுறுவதன் பின்னணியில் தன்னலமோ அல்லது அரசியல் லாபமோ எதுவேண்டுமென்றாலும் காரணமாக இருக்கலாம். ஆனால், வீடு வாடகைக்கு எடுப்பது தொடர்பில்-மக்கள் சாதி, மதம், மொழி, இனம், கலாச்சாரம் பாராமல் ஒருவருக்கொருவர் கலந்து வாழ்வதில் பிரச்சனை இருப்பது என்பது உண்மை. அதற்கு ஆர்.எஸ்.எஸ் முதலான ஹிந்துத்துவ தீவிர சிந்தனை கொண்ட இயக்கங்கள் முக்கிய காரணமெனில், இன்னொரு வகையில் முஸ்லிம் தீவிர சிந்தனை கொண்ட அமைப்புகளும் காரணங்களாக அமையலாம். ஆய்வு ரீதியாக அதனை உண்மைப்படுத்தவும் முடியும். ஆனால் இவைகளையே பேசிக்கொண்டிருப்பதில் தீர்வு கிடைக்கப்போவதில்லை. பிரச்சனையைக் களைவதற்கான வழிகளை ஆய்வதும் அச்சிந்தனை கொண்டோர் வலுப்பெறுவதுமே தீர்வுக்கான வழி.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/jxGm-BY7eCI/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

K R A Narasiah

unread,
Apr 3, 2017, 2:05:03 AM4/3/17
to mintamil
All in this link think this is only in India! When we were in Northern Ireland in 1959/60, as paying guests the Irish thought twice before taking us in. They definitely avoided Africans!
So it is all over the world. This is part of a community problem. Nothing to do with religion alone! 
N

On Mon, Apr 3, 2017 at 7:20 AM, Thenee MK <ipohs...@gmail.com> wrote:
Boxbe This message is eligible for Automatic Cleanup! (ipohs...@gmail.com) Add cleanup rule | More info

அப்துல் ரஹமான் அவர்கள் கூறியது உண்மை.

பிரச்சனையைக் களைவதற்கு வழிகளை சொல்லுங்க. பிரச்சனையே பிரச்சனையாக்கிக்கிட்டு இருக்காதிங்க.

கமலநாதன்





 
2017-04-02 18:22 GMT+08:00 abdul rahuman <abdra...@gmail.com>:
நேற்றுவரை இஸ்லாமியர்களின் பிரச்சனைக்காக பேசாத மனுசபுத்திரன், இன்று தமக்கு தம் பெயரின் காரணமாகவே பிரச்சனை ஏற்பட்டவுடன் "சிறுபான்மை" எதிர்மனோபாவம் எனக் குமுறுவதன் பின்னணியில் தன்னலமோ அல்லது அரசியல் லாபமோ எதுவேண்டுமென்றாலும் காரணமாக இருக்கலாம். ஆனால், வீடு வாடகைக்கு எடுப்பது தொடர்பில்-மக்கள் சாதி, மதம், மொழி, இனம், கலாச்சாரம் பாராமல் ஒருவருக்கொருவர் கலந்து வாழ்வதில் பிரச்சனை இருப்பது என்பது உண்மை. அதற்கு ஆர்.எஸ்.எஸ் முதலான ஹிந்துத்துவ தீவிர சிந்தனை கொண்ட இயக்கங்கள் முக்கிய காரணமெனில், இன்னொரு வகையில் முஸ்லிம் தீவிர சிந்தனை கொண்ட அமைப்புகளும் காரணங்களாக அமையலாம். ஆய்வு ரீதியாக அதனை உண்மைப்படுத்தவும் முடியும். ஆனால் இவைகளையே பேசிக்கொண்டிருப்பதில் தீர்வு கிடைக்கப்போவதில்லை. பிரச்சனையைக் களைவதற்கான வழிகளை ஆய்வதும் அச்சிந்தனை கொண்டோர் வலுப்பெறுவதுமே தீர்வுக்கான வழி.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/jxGm-BY7eCI/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Arumugam Mahalingam

unread,
Apr 3, 2017, 3:02:41 AM4/3/17
to mint...@googlegroups.com
இப்படி ஒரு பிரச்சினை இருப்பது உண்மை. அதை மறுதலிப்பது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளும் முயற்சி மட்டுமே. இதற்கான தீர்வை நோக்கி நகர்வதே சிறந்தது. 

தீவிரவாதம் வளர்வதற்கு யார் காரணம் என்பதில் ஆரம்பித்து அதைக் களைவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதில் ஊன்றி இக்கருத்துகளை பெருமளவில் பரப்பும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

மதரீதியில் மட்டுமல்ல சாதி ரீதியிலும் இதைச் செய்தால் மட்டுமே நாம் ஒரு பண்பட்ட சமுதாயமாக வளர முடியும்.                                   

Prakash Sugumaran

unread,
Apr 3, 2017, 8:57:22 AM4/3/17
to mintamil
இஃகிஃகி!! சும்மா சாக்கு போக்கு... எல்லாம் தனிமனித ஒழுக்கக்குறைபாடு!!
தனிமனித ஒழுக்க நிறைபாடுன்னு எப்போவாவது இருந்திருக்கா, இப்போ குறையறதுக்கு?

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Apr 3, 2017, 9:08:14 AM4/3/17
to mintamil

On Mon, Apr 3, 2017 at 6:27 PM, Prakash Sugumaran <praka...@gmail.com> wrote:
தனிமனித ஒழுக்க நிறைபாடுன்னு எப்போவாவது இருந்திருக்கா, இப்போ குறையறதுக்கு?

இதப் பத்தி நாம யோசிக்கவே இல்லையே. :((
Image result for man knocking his head against the wall gif


--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
------------------------------------------------------------------
கடந்துபோன மணித்துளிகள் - மண்ணில்
கரைந்துபோன மழைத்துளிகள் - மீளா !
கடமையைச் செய் ! - அதையும்
உடனடியாய்ச் செய் !
----------------------------------------------------------------
எனது முகநூல் முகவரி: http://www.facebook.com/thiruththam
எனது டுவிட்டர் முகவரி: https://twitter.com/thiruththam
தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.in
திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com
தமிழ்நூல்களுக்கான மதிப்புரைகளைக் காண: http://noolmathippurai.blogspot.in

சி. ஜெயபாரதன்

unread,
Apr 3, 2017, 9:20:43 AM4/3/17
to mintamil, vallamai, tamilmantram, vannan vannan, Oru Arizonan
Dear Shri. Narasiah,


But this is utter discrimination towards some minority people who are also Indian citizens. There should be law & order to prevent or reduce such crimes.

This is Gandhiji's free  Nation to have peaceful life with Muslims & Christians. 

Regards,
S. Jayabarathan

++++++++++++++++

சி. ஜெயபாரதன்

unread,
Apr 3, 2017, 9:22:44 AM4/3/17
to mintamil, vallamai, tamilmantram, vannan vannan, Oru Arizonan, Asan Buhari

பழமைபேசி

unread,
Apr 3, 2017, 9:39:13 AM4/3/17
to மின்தமிழ்
everything is relative.... ஒப்பீடுதான்....  வாங்கின காசை சரியான நேரத்துல கொடுக்கலைன்னாலோ, வாக்கு பிறழ்ந்துட்டாலோ மானம் போகுமேன்னு நிலைகுலைந்தது(ஒப்பீட்டளவில்) உண்டு. இப்பெல்லாம் ஆரு சார் ‘மானம்’ போகுதேன்னு கவலைப்படுறாக?? அடுத்தவன் வீட்டுக்குள் புகுந்து கொண்டு, ஆட்டையப் போடுறதும், உள் வாடகைக்கு வுடுறதும், கைமாத்தி வுட்டு சம்பாதிக்கிறதும்ங்றதெல்லாம் எவ்விதக் கூச்சமுமில்லாம நடக்குது... அப்பெல்லாம், உள்ளூர் மக்கள்தான்... வெளியூர்வாசிகள்னா, அரசு அலுவலர், மருத்துவர்கள்னு கொஞ்ச பேர் தற்காலிகக் குடிகளாக ஊருக்குள் இருப்பாங்க... அவர்களும் மானரோசத்துக்கு கட்டுப்பட்டு இருந்தாக... இப்ப, உலகமயமாக்கல்... அதற்குத் தகுந்த சட்டதிட்டங்கள் தேவையா இருக்கு...

nkantan r

unread,
Apr 3, 2017, 11:47:18 AM4/3/17
to மின்தமிழ்

தமிழன் தமிழன் என மார் தட்டும் தமிழர்கள் யோசிக்க: 
http://www.tvtamilshows.net/2017/04/solvathellam-unmai-season-2-03-04-2017.html

இன்று  ஒளிபரப்பப்பட்ட "சொல்வதெல்லாம் உண்மை" நிகழ்ச்சியைப் பாருங்கள்;   தமிழ் கிராமமக்களின்  எண்ணம் புரியும்; அதுமட்டும் அல்ல, கழகங்கள் மற்ற கட்சிகள்  "வளர்த்த" சாதிப்பாகுபாடு தெரியும்;  எவ்வளவு மானம் கெட்ட சாதிவெறியர்கள் தமிழர்கள் எனப்புரியும்; 
"தைரியமாக" நீங்க கல்யாணம் செய்தால் உங்க அப்பா அம்மா உரை விட்டு போகணும்னு சொல்வதைக்கேளுங்கள்;  சட்டம் என்னச்செய்யும்; புகார் பண்ணினால் ஒன்றும் ஆதாரம் தரமுடியாது எனப்பேசுவதைப்பாருங்கள்; 

ஏன் இளம்பெண்களும் ஆண்களும் நகரம் நோக்கி நகர்கிறார்கள் எனப்புரியும்,

தொலை காட்சி சானலும், நிகழ்ச்சி நடத்துனர் லட்சமி ராமகிருஷ்ணனும் தைரியமில்லாமல், கிராம பெயரையோ, சாதி பிரிவுகளின் பெயர்களையும் சொல்லாதிருப்பதும் புரியும்.

regards
rnkantan

சி. ஜெயபாரதன்

unread,
Apr 3, 2017, 1:18:31 PM4/3/17
to vallamai, mintamil, tamilmantram, vannan vannan, Oru Arizonan, Asan Buhari

முத்துராமலிங்கத் தேவர் என்ற ஜாதி வெறியர்



முத்துராமலிங்கத் தேவர் என்ற ஜாதி வெறியர்


நன்றி கீற்று.
விவரங்கள்
எழுத்தாளர்: கற்பக விநாயகம்
தாய்ப் பிரிவு: வரலாறு
பிரிவு: தமிழ்நாடு
 


இந்துத்துவத்துக்கு விளக்குப் பிடித்த திருமகன்

தேவரின் காலடி மண்ணை எடுத்துக் கும்பிடும் கோடானு கோடி பாசாங்குவாதிகளின் காதில், தேவர் பற்றிய அவ்வளவாய் சொல்லப்படாத விசயங்களைப் போட்டு வைப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

பசும்பொன் முத்துராமலிங்கம்

முதலில் காமராஜர் குறித்து, முத்துராமலிங்கத் தேவர் உதிர்த்த பொன்முத்துக்களைப் பார்ப்போமா?

1957 சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், காஞ்சிபுரத்தில் பேசிய பேச்சு:- "இற்றைக்கு முதல் மந்திரி என்று சொல்கிற நபர் எல்லாம், அற்றைக்கு நாங்கள் ஏவின வேலையை கேட்டுக் கொண்டிருந்தவர்", என்று ஆணவம் நிரம்பக் கூறினார்.

இதே விசயத்தை, சங்கரன்கோவிலில் இருந்து தேனி வரை எல்லா ஊர்க் கூட்டங்களிலும், முதல்வரை, மரியாதை சிறிதும் இன்றி 'நபர்' என்றோ, காமராஜன் என்றோ, காமராஜ் நாடான் என்றோ தாழ்த்தியே பேசி வந்தார். எல்லா மேடைகளிலும் ஒரு கதை சொல்வார், காமராஜர் குறித்து. அது என்ன கதை?பசும்பொன் உ.முத்துராமலிங்கமே கூறட்டும் கேட்போம்.

"இதே காமராஜ் இற்றைக்கு முதல் மந்திரியாக இருக்கலாம். ஆனால் இதே நபர் பழைய காலத்தில் ஒரு ஓட்டராக இருக்கக்கூட யோக்யதை இல்லாமல் இருந்த தொண்டர். அற்றைக்கு சொத்திருந்தவர்களுக்குத்தான் ஓட்டுரிமை. இவருக்கு சொத்து கிடையாது. ஒரே ஒரு வீடு இருந்தது. அதுவும் அவர் தாயார் பெயரில் இருந்தது. அந்த வீட்டை இவர் பேருக்கு மாற்றித் தரும்படி நான் கேட்டபோது, இவருக்கு ஒரு தங்கை உண்டு. இவருடைய தாயார், "வீட்டில் ஒரு பெண் பிள்ளை இருக்கிறது. அதை நல்ல இடத்தில் கை பிடித்துக் கொடுக்க வேண்டும். ஆகையால் நான் இந்த வீட்டைப் பையன் பேருக்கு மாற்ற முடியாது" என்று சொல்லி விட்டார்கள்.

(இதே கூற்றை "அவன் வேலை வெட்டி இல்லாமல், பொருள் சேர்க்கத் தெரியாமல் ஊரைச் சுத்துகிறவனாயிற்றே. அவனுக்கு வீட்டை எழுதி வைத்து விட்டு பிறகு என்ன செய்கிறது?" என்று காமராஜரின் அன்னை சொன்னதாக சங்கரன்கோவிலில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் 25 பிப்ரவரி 1957ல் தேவர் கூறியுள்ளார்)

அதன் பிறகு நான் என்ன செய்ய வேண்டியிருந்தது என்றால், ஒரு வெள்ளாட்டை வாங்கி, அதற்குக் கட்ட வேண்டிய முனிசிபாலிடி வரியைச் செலுத்தி, தகர வில்லையை வாங்கி, அதனுடைய கழுத்தில் கட்டி,அந்த ரசீதை காமராஜ் கையில் கொடுத்து,ஓட்டர் ஆக்கியவன் அடியேன். இந்த நிலைமையிலிருந்த சாதாரணத் தொண்டர்களை எல்லாம் மனிதத் தன்மைக்குக் (!!!) கொண்டு வந்தவன் அடியேன்."(21/2/57 காஞ்சிபுரம் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்)

சாதாரணமான தொண்டனாக இருந்த காமராஜை, மனிதத்தன்மை உள்ள மனிதராக இவர் ஆக்கினாராம். என்னதோர் ஆணவப் பேச்சு பாருங்கள். அதே கூட்டத்தில் காமராஜரை, காமராஜன் என்றுதான் சொல்லியிருக்கிறார். அப்போதைய காலகட்டத்தில் தமிழ்நாடு காங்கிரசின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர் காமராஜர். அவர் தலைமையை, முத்துராமலிங்கத் தேவர் மதிப்பிடும் தரம் எப்படி இருந்தது பாருங்கள்.

"இன்றைக்கு மாகாணக் கமிட்டியில் எவனெவனோ வந்து விட்டான்.இற்றைக்கு காங்கிரஸ் சார்பில் எம்.எல்.ஏ. தேர்தலுக்கு 'நாமினேஷன்' போடுகிறவன் கேட்கிறான். "திலகர், காந்தி மகன் தானே" என்று.இப்படிப்பட்ட அறிவாளிகள் வந்து விட்டார்கள். தமிழ்நாடு காங்கிரஸ் சபையில் காமராஜின் புண்ணியத்தால்."

கல்வியைப் பரவலாக்கிப் பணியாற்றிய காமராஜரினை, ராஜாஜியுடன், தேவர் ஒப்பிட்டதைப் பார்ப்போம். "அவர் மிதவாதியாக (ராஜாஜி) இருந்தாலும், காமராஜ் போல தற்குறி அல்ல. பழங்காலத்தில் எம்.ஏ. எல்.டி., பி.ஏ. எல்.டி. பட்டம் பெற்றவர்கள் ஆண்டார்கள். இற்றைக்கி எம்.ஏ.,பி.ஏ. இல்லாது வெறும் எல்.டி.க்கள், அதாவது 'லெப்ட் தம்ப்' இடது கைப்பெருவிரல் பிரட்டுகிறவர்கள் ஸ்தானம் பெற்றிருக்கிற காலம்."

காமராஜ், வறுமையின் காரணமாய்ப் பள்ளிப்படிப்பைத் தாண்டவில்லை, என்பதனை நாடறியும். இதனால் என்ன குறைந்தது, அவரின் திறமைக்கு? தேவர், இதனைக் கூட கேவலமாகப் பேசித் தன் பெருந்தன்மையை உலகுக்குப் பறைசாற்றியிருக்கிறார். (இதனைச் சொன்ன தேவரோ, எஸ்.எஸ்.எல்.சி.யே தாண்டவில்லை என்பது இன்னும் சிறப்பு).

குலக்கல்வித் திட்டம் கொண்டுவந்து தமிழர்கள் கல்வியில் மண்ணள்ளிப்போட சூதறிஞர் ராஜாஜி முனைந்தபோது, காங்கிரசுக்குள்ளேயே எதிர்ப்பு வலுத்து, குல்லுகப் பட்டர், பதவி விலகி, காமராஜர் முதல்வரானார். அச்சூழலை விவரிக்க வந்த தேவர் சொல்கிறார், காஞ்சி தேர்தல் பிரச்சாரத்தில் - "பிளாக் மார்க்கெட்காரர்களுக்கு புரோக்கராக நின்ற காமராஜர் பிரதம மந்திரியாகிறார்." (அப்போது, மாகாண முதல்வர்களை, பிரீமியர்-பிரதமர் என்று சொல்வது வழக்கம்)

காமராஜரை ஆதரித்த காங்கிரஸ் தலைவர்களிடம் தேவர் சொன்ன கருத்து "உங்களுக்கு அவர் பிரதமராகத் தோன்றலாம். எனக்கு அவருடைய பழைய மார்க்கெட் வேல்யூ தெரியும். ஒழுக்கத்தின் பெயரால், அறிவால்,தியாகத்தால் பதவிக்கு வருகிறவர்களைத்தான் நான் மதிக்க முடியும். சந்தர்ப்பத்தின் பெயரால் முன்னுக்கு வருகிறவர்களை நீங்கள் மதிப்பதாக இருந்தால் நான் என்ன செய்ய முடியும்?".

சற்றே யோசித்துப் பார்ப்பின் தேவர் குறிப்பிட்ட மார்க்கெட் வேல்யூ என்பது, ஜாதிப் படிநிலைதான் என்பது தெள்ளெனப் புரியும்.

முதல்வராகும் முன் ஆசீர்வாதம் வாங்க வந்த காமராஜரிடம் இவர் சொல்கிறார் "நீ பிரதமர் ஆவதன் மூலம் காங்கிரஸ் கெடும். நீ மாகாணக் கமிட்டித் தலைவனாக (தலைவராக அல்ல-அழுத்தம் எம்முடையது) இருந்து கொண்டு யாரேனும் நல்லவரைப் பிரதமராக்கி, உன்னுடைய அதிகாரத்தைச் செலுத்து. உனக்கு வர வேண்டிய லாபம் வரும்".

அதே காஞ்சிக் கூட்டத்திலே, தேவர், காமராஜர் மீது ஓர் அபாண்டப் பழியைப் போட்டார். அது என்ன பழி? "பழைய காலத்தில் காங்கிரஸ் காரன் போட்டது கள்ள ஓட்டு. இப்போது காமராஜ், கள்ள நோட்டு அச்சடிக்கிற காரியத்தில் ஈடுபட்டிருக்கிறார்", " ஏற்கெனவே விருதுநகர் நாடார் ஒருவர் நான்கு லட்ச ரூபாய் கள்ள நோட்டை அள்ளிக் கொண்டு,திருவெற்றியூருக்கு வந்திருந்தபோது கைது செய்யப்பட்டார். இப்பேர்ப்பட்ட யோக்யதை அற்ற காமராஜ் கும்பலைத் தேர்ந்தெடுப்பது உங்களுக்கு நல்லதல்ல".

காமராஜர், சாகும்போது அவர் வீட்டில் நூற்றிச் சொச்சம் ரூபாய் மட்டுமே இருந்தது என்பதை நாம் அறிவோம். நேர்மையாய், எளிமையாய் வாழ்ந்த அத்தலைவரினைத் தரம் தாழ்த்தி, இவ்வாறு பழி போட்டு, காஞ்சியில் மட்டுமல்ல, எல்லா ஊர்களிலும் கள்ளநோட்டுப் பேர்வழி என்று புழுதிவாரித் தூற்றியவர், தேவர்.

கம்பம் தேர்தல் கூட்டத்திலே, 24 பிப்ரவரி, 1957ல் மீண்டும் அதே பழியைப் பின்வருமாறு சொல்கிறார்."இன்று கள்ள நோட்டு அடிக்கும் நாடாரின் ஆட்சி இந்த நாட்டிலே நடைபெறுகிறது" "என் மீது கேஸ் போட்டால் இந்தக் கள்ள நோட்டு அடிக்கும் நாடாரின் அயோக்கியத்தனத்தைச் சாட்சி மூலம் நிரூபிக்க ரிக்கார்டு இருக்கிறது".

இக்கூட்டத்திலே, காமராஜரின் படிப்பறிவை மறுபடியும் கொச்சைப்படுத்தி "எம்.ஏ. படித்தவர்கள் ஆண்ட நாட்டிலே எல்.டி. பதவிக்கு வந்து விட்டார்கள். இந்த அளவுக்கு மானம் கெட்டு வந்திருக்கிறது. இப்படி மானம் கெட்டு இருக்கிற காரணத்தினாலேயே இந்த நாட்டிலே காரியங்கள் மிகத் தாழ்ந்த நிலைமைக்கு வந்திருக்கிறது."

(இதே காலகட்டத்தில் மதுரை தமுக்கத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் தேவருக்கு, குறும்பாய் ஒருவர் துண்டுச்சீட்டில் "நாடார், நாட்டை ஆள்வார்" என்று எழுதிக் கொடுத்து இருக்கிறார். தேவரய்யா டென்ஷனாகி விட்டார் "நாடார், பனையை ஆள்வார், தென்னையை ஆள்வார், நாட்டை ஆளமுடியாது" என்று பச்சையாய் சாதிவெறி கக்கினாராம். தூத்துக்குடி அருகில் உள்ள குருக்குச்சாலையில் நடந்த தேர்தல் கூட்டத்தில், உரை முழுவதும் காமராஜரை 'சாணாப் பயலே' என்று திட்டியே பேசியிருக்கிறார்.)

இதே கம்பம் கூட்டத்திலே, காமராஜரைக் கொச்சைப்படுத்தி ஒரு சம்பவத்தை, தேவர் சொல்லி இருக்கிறார்.

"வெளிநாட்டிலிருந்து சென்னைக்கு வந்தவர்களுக்கு, முனிசிபல் கவுன்சிலர்கள் வரவேற்புக் கொடுத்தார்கள். அந்த வரவேற்பில், காமராஜூம் கலந்து கொண்டார். யார் இந்த நாட்டு முதல் மந்திரி என்பதைத் தெரிந்து கொள்வதற்காக வெளிநாட்டுக்காரர்கள் சுற்றிச் சுற்றிப் பார்த்தார்கள். அறிவாலோ, பேசும் திறத்தாலோ, அல்லது நடையுடை பாவனையாலோ பார்த்துத் தெரிந்து கொள்ள முடியவில்லை. உடனே ஒரு வெள்ளைக்காரன், "சென்னையின் முதல் மந்திரி யார்?" என்று கேட்டார். இந்த நாடார் சும்மா இருந்தால் செக்கரட்டரி சொல்லியிருப்பான் அல்லது தமிழிலே பேசியிருந்தால் தேச அவமானம் என்று நினைத்திருப்பான். தன் அறிவைக் காட்டத் தெரியாத ஒருவர், இந்த நாட்டு முதல் மந்திரியாக இருக்கிற இந்த அலங்கோலத்தினால் நாடு அவலட்சணமாகக் கேவல நிலை அடைந்தது. தமிழ்நாடு தலைகுனிய வேண்டிய நிலை ஏற்பட்டது. தமிழ்நாடு அன்று அவமானப்பட்டது."

(இதே சம்பவத்தை இன்னும் விரிவாக்கி "அந்தக் கேள்விக்கு தமிழிலேயே பதிலளித்து இருக்கலாம். அப்படிச் செய்யாமல், அவருக்கு ஆங்கிலத்தில் இருக்கும் அறியாமையை எடுத்துக் காட்டுமளவில் "I is the Chief" என்று சொல்லியிருக்கிறார். இப்படிப்பட்ட ஒரு ஆள் முதன்மந்திரியாக இருக்கிறான் (இருக்கிறார் அல்ல- அழுத்தம் எமது) என்று அவர்கள் நினைத்திருக்கிறார்கள்" என சங்கரன்கோவிலில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் 25 பிப்ரவரி 1957ல் தேவர் கூறியுள்ளார்)

ஈயத்தைப் பார்த்து இளித்த பித்தளையின் கதை இது. காமராசர், சுய சாதி வெறியுடன் ஆட்சி செய்கிறார் என்று, இந்த சாதி ஒழிப்புப் போராளி, அதே சங்கரன் கோவில் கூட்டத்திலே சொல்கிறார் "சர்க்கார் உத்தியோகங்களை அவருடைய ஆட்களுக்கே கொடுத்து வருகிறார். பிளாக் மார்க்கெட்டு வியாபாரத்தையும் அவருடைய ஆட்களே செய்து வருகிறார்கள். அவர்களுக்கெல்லாம் மறைமுகமாக ஆதரவு கொடுத்து வருகிறார் இந்த காமராஜர். தமிழ்நாட்டின் நிர்வாகத் தரம் குறைந்து போய் விட்டது."

மார்ச் 1, 1957 இல் சிறீ வில்லிபுத்தூர் தேர்தல் கூட்டத்திலே, மக்களுக்கு தேவரய்யா நாகரீகமாக ஒரு அழைப்பு விடுக்கிறார் - "அரசியல் சரித்திரத்திலே இப்படி மானம் கெட்டவன் பிரதம மந்திரியாக இருந்தது கிடையாது. விருது நகர் வியாபாரி சமாச்சாரம் தெரிஞ்ச ரகசியமில்லே. இதை மறைக்கலாமா? இற்றைக்கு அரசியலையும் அப்படி கெடுக்கப் பார்க்கிற. பத்து வருஷமா இப்படித்தானே அரசியலிலே காலம் தள்ளினே. இனிமேலும் நடக்க விடுவோமா? எவ்வளவு சீக்கிரம் இந்த நாடார் பதவியை விட்டுப் போறாரோ அவ்வளவுக்கவ்வளவு அவருக்கு நல்லது. நாட்டுக்கும் நல்லது."

இம்மானுவேல் சேகரன் கொலைச் சதி வழக்கில் இருந்தில் தப்பிய தேவர், 1962 இல் மதுரையில் நடந்த தேர்தல் கூட்டத்தில் கூட, முதல்வர் காமராஜருக்கு ஆதியிலே சோறு போட்டது நானாக்கும் என்கிற ரேஞ்சுக்கு அல்பத்தனத்தைக் காட்டி இருக்கிறார் "நம்மால் உணவு கொடுத்து, உடை கொடுத்து, உறைவிடங் கொடுத்து வளர்க்கப்பட்ட புண்ணியவான்களாலேயே கொலைக் குற்றம் சாட்டப்பட்டேன்" என்றார்.

காமராஜரின் மதிய உணவுத் திட்டம், பல தரப்பு ஏழைக் குழந்தைகளையும் கல்விச்சாலை நோக்கி வர ஊக்கப்படுத்தியது என்பதை முந்தைய இரண்டு, மூன்று தலைமுறை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். 1962லே அந்த மதிய உணவுத் திட்டத்தை தேவர் மதிப்பிடும் லட்சணம் இதுதான் "மதிய உணவுத் திட்டம் என்பதன் பெயரால், பிள்ளைகளின் படிப்பு பாழாக்கப்படுகிறது. உபாத்தியாயர்கள் மதிய உணவுத் திட்டத்திற்கு அரிசிப் பிச்சை எடுக்கப் போக நேர்வதால், பிள்ளைகள் படிப்பு நாசமாகி தேசத்தின் எதிர்காலம் அறிவுச் சூன்யத்துக்குத் தயாராகிறது."

******************

[தொடரும்]

முழுக் கட்டுரை :

http://keetru.com/index.php/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-85/1331-2009-11-19-18-10-56

நன்றி கீற்று.

+++++++++++++



2017-04-03 12:24 GMT-04:00 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>:
///முஸ்லீம்களின் மீதான இந்துக்களின் வெறுப்புக்கு காரணம் அவர்களுக்கு அளவுக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது அல்லது அவ்வாறு நடிக்கப்பட்டதே காரணம். அதற்கு காந்தியில் தொடங்கி இன்றைய முற்போக்கு அரசியல்வாதிகள் வரை பொறுப்பேற்க வேண்டும். ////

நண்பர் பெருமாள் தேவரே,

காந்திஜி செத்து 70 ஆண்டுகள் ஓடிவிட்டன. சுதந்திர இந்தியரை இப்போது மோடி காலத்தில் ஆள்வது டாக்டர் அம்பேத்கார் ஆக்கிய அரசியல் சாஸனம்.  

நீங்கள் ஆர்.எஸ்.எஸ். தீவிர முற்போக்கு இந்துவா ? அல்லது சாதுவான பிற்போக்கு இந்துவா ? 

சி. ஜெயபாரதன்


2017-04-03 9:46 GMT-04:00 Thevan <apth...@gmail.com>:
//நண்பர் பெருமாள் தேவரே,

அயோத்தியா புரியில் இந்துக்கள் பாப்ரி மசூதியை ஓரிரவிலே இடித்து, வில்லங்க பூமியில் இராம பிரானுக்கு  ஆலயம் கட்டுவது இந்து-முஸ்லீம் ஒற்றுமையை வளர்க்கிறதா ? 

வில்லங்க பூமியைத் தாண்டி ஆயிரம் அடி தூரத்தில் இந்துக்கள் இராமாலயம் கட்டினால் என்ன ?  மக்கள் அந்த ஆலயத்துக்குப் போகமாட்டாரா ?

இந்து-முஸ்லீம் வெறுப்புக்கு முதலில் இந்துக்கள்தானே காரணிகள் ...//

ஐயா ஜெயபாரதன் அவர்களே,

முதலில் சாதாரண இந்து மக்களுக்கும் ஆர்எஸ்எஸ் போன்ற இயக்கங்களுக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்துகொள்ளுங்கள். 

எவ்வாறு இரட்டை கோபுரங்கள் தகர்க்கப்பட்டதற்கும் சாதாரண முஸ்லீம்களுக்கும் தொடர்பு இல்லையோ அதுபோலவே பாபர் மசூதி தகர்க்கப்பட்டதற்கும் சாதாரண இந்துக்களுக்கும் தொடர்பில்லை. 


முஸ்லீம்களின் மீதான இந்துக்களின் வெறுப்புக்கு காரணம் அவர்களுக்கு அளவுக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது அல்லது அவ்வாறு நடிக்கப்பட்டதே காரணம். அதற்கு காந்தியில் தொடங்கி இன்றைய முற்போக்கு அரசியல்வாதிகள் வரை பொறுப்பேற்க வேண்டும். 

சாதாரண இந்துக்களோ , முஸ்லீம்களோ அல்ல. 

2017-04-03 19:11 GMT+05:30 Thevan <apth...@gmail.com>:
//இந்துக்களும் இஸ்லாமியரும் காந்தி கொலையுற்ற பின் சேர்ந்து வாழ்ந்தாரா ? அல்லது முத்துராமலிங்கத் தேவர் சேர்த்து வைத்தாரா ? இந்துக்களையும், இஸ்லாமியரையும் பிரித்தவர் தூய ஆர். எஸ். எஸ் இந்துக்கள் அல்லவா ?//

ஐயா ஜெயபாரதன் அவர்களே, 

ஆர்ஸ்எஸ் இயக்கத்தினர்தான் இந்துக்களின் ஒட்டுமொத்த பிரதிநிதிகள் என்கிறீர்களா?

You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

Prakash Sugumaran

unread,
Apr 3, 2017, 3:00:55 PM4/3/17
to mintamil
//everything is relative.... ஒப்பீடுதான்....  வாங்கின காசை சரியான நேரத்துல கொடுக்கலைன்னாலோ, வாக்கு பிறழ்ந்துட்டாலோ மானம் போகுமேன்னு நிலைகுலைந்தது(ஒப்பீட்டளவில்) உண்டு.//

இப்பவும், எப்பவும் அப்படியான ஆளுக இருக்கத்தான் செய்யறாங்க. பேருதான் பிரபலமாகிடுச்சி.. பொழைக்கத் தெரியாதவன்னு.

//இப்பெல்லாம் ஆரு சார் ‘மானம்’ போகுதேன்னு கவலைப்படுறாக?? அடுத்தவன் வீட்டுக்குள் புகுந்து கொண்டு, ஆட்டையப் போடுறதும், உள் வாடகைக்கு வுடுறதும், கைமாத்தி வுட்டு சம்பாதிக்கிறதும்ங்றதெல்லாம் எவ்விதக் கூச்சமுமில்லாம நடக்குது.//

அப்பவும், எப்பவும் பலான ஆளுக இருந்தபடியேதான் இருந்தாங்க. எப்பவும் போல பெரிய மனுஷங்களா.

//அப்பெல்லாம், உள்ளூர் மக்கள்தான்... வெளியூர்வாசிகள்னா, அரசு அலுவலர், மருத்துவர்கள்னு கொஞ்ச பேர் தற்காலிகக் குடிகளாக ஊருக்குள் இருப்பாங்க... அவர்களும் மானரோசத்துக்கு கட்டுப்பட்டு இருந்தாக..//

இதையே தானுங்க நானும் அப்போருந்து சொல்றேன்.  இங்கிலீஷ்காரன் கொண்டு வந்த சட்டத்தால மானரோசம்னா கிலோ என்னன்னு ஆகிடுச்சி. மொத்தமும் திருடனுக்கு விட்ட குத்தகைன்னு ஆகிடுச்சி.

இப்ப, உலகமயமாக்கல்... அதற்குத் தகுந்த சட்டதிட்டங்கள் தேவையா இருக்கு...//

சட்டத்த தாராளமா சட்டைய போல மாத்திக்கலாம். புத்தியையும், பழக்க - வழக்கத்தையும்?

இடையில யாரோ அம்பேத்கர் தான் பாவம் சட்டம் இயற்றியதா சொல்றார். எந்த சட்டம்னு மட்டும் சொல்லவே இல்ல. இங்கிலீஷ் சட்டத்த, பிரஞ்சி சட்டத்தோட கலந்து, கொஞ்சமா மேலாக்க வளைச்சி இந்தியில இந்தியாவோட சட்டம்னு எழுதினா வர்ற எதிர்ப்ப சமாளிக்க சில பேருக்கு இவர போல ஒரு சட்ட மேதை தேவைப்பட்டிருப்பாரோன்னு!?

பழமைபேசி

unread,
Apr 3, 2017, 7:16:44 PM4/3/17
to மின்தமிழ்
இஃகிஃகி, கடைசியில தன்னை நிறுவுற முசுதீபுக்கு என்னியவும் ஆளாக்கிட்டீங்களே? அவ்வ்வ்வ்...... நான் துவங்கினதே இப்படித்தானுங்க... “இதன் ஆணிவேர், இத்துப்போன சட்டதிட்டமும் சட்டமொழுங்கும்!! ”

சரி, எல்லாரும் நேந்துகலந்து பேசி நல்ல முடிவுக்கு வந்து நாட்டுல மேன்மையக் கூட்டுங்க.... நான் அப்பப்ப, வந்து போறன்... இஃகிஃகி!!

Prakash Sugumaran

unread,
Apr 4, 2017, 2:45:05 AM4/4/17
to mintamil
//எல்லாரும் நேந்து கலந்து பேசி நல்ல முடிவுக்கு வந்து//

வேற யாருக்கும் வேலை கொடுக்காம மனுஷ்ய புத்திரன் அதை செய்துட்டாரே :-)

abdul rahuman

unread,
Apr 5, 2017, 1:54:51 AM4/5/17
to மின்தமிழ், hol...@gmail.com
//தீவிரவாதம் வளர்வதற்கு யார் காரணம் என்பதில் ஆரம்பித்து அதைக் களைவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதில் ஊன்றி இக்கருத்துகளை பெருமளவில் பரப்பும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

மதரீதியில் மட்டுமல்ல சாதி ரீதியிலும் இதைச் செய்தால் மட்டுமே நாம் ஒரு பண்பட்ட சமுதாயமாக வளர முடியும்.//

Thenee MK

unread,
Apr 5, 2017, 3:01:06 AM4/5/17
to mintamil
முதலில் இது தமிழ் நாட்டில் நடக்கட்டட்டும்.

மற்றவருக்கு நாம் எடுத்துக்காட்டு இனமாக வாழ்வோம்.

 கமலநாதன்


2017-04-05 13:52 GMT+08:00 abdul rahuman <abdra...@gmail.com>:
//தீவிரவாதம் வளர்வதற்கு யார் காரணம் என்பதில் ஆரம்பித்து அதைக் களைவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதில் ஊன்றி இக்கருத்துகளை பெருமளவில் பரப்பும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

மதரீதியில் மட்டுமல்ல சாதி ரீதியிலும் இதைச் செய்தால் மட்டுமே நாம் ஒரு பண்பட்ட சமுதாயமாக வளர முடியும்.//

--

Thevan

unread,
Apr 5, 2017, 3:10:46 PM4/5/17
to mint...@googlegroups.com
//முதலில் இது தமிழ் நாட்டில் நடக்கட்டட்டும்.

மற்றவருக்கு நாம் எடுத்துக்காட்டு இனமாக வாழ்வோம்.

கமலநாதன்//

ஹாஹாஹா

இங்கேயும் தமிழன்தான் அதைச் செய்ய வேண்டுமா?

Thenee MK

unread,
Apr 6, 2017, 12:35:24 AM4/6/17
to mintamil
பிறருக்கு நல்லதொரு எடுத்துக்காட்டாக வாழ்வதால் நாம் பிறரால் மதிக்கப் படுவோம்.

இப்படி சிந்தித்துப் பார்த்தால் நமது சமயம் உணர்த்தும் நற்பண்புகள் நம்மோடு நிலைத்திருக்கும்.

ஆறறிவு கொண்ட மனிதனாக வாழ்வோருக்கு நல்லதை நினைப்போம், நல்லதையே நாடுவோம் என்பதில் கருத்து வேறுப்பாடு இருக்க முடியாது, 

கமலநாதன்
   

Reply all
Reply to author
Forward
0 new messages