ஆறுமுகநாவலர் ஒரு நோக்கு

402 views
Skip to first unread message

Sri Sritharan

unread,
Nov 26, 2010, 6:10:28 AM11/26/10
to மின்தமிழ், agat...@yahoogroups.com

ஆறுமுகநாவலர் ஒரு நோக்கு

Friday, 26 November 2010 10:20
ஈழத்துத் தமிழினம் தனது பெருமைமிக்க பாரம்பரியத்தைப் பண்பாட்டை, பழக்கவழக்கத்தை, கலை, கலாசாரத்தை இழக்க வேண்டிய ஒரு பயங்கரமான சூழலின் போது அவதரித்தவர் தான் நல்லை நகர் தந்த ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமான்.ஈழத்தமிழர் தம் சமய வாழ்வில் புகுந்து விட்ட களைகளை நீக்க முயன்றும் புறச் சமய வெள்ளத்திலிருந்து அணை கட்டி காவல் செய்ய முயன்றும் பெரும் தொண்டாற்றியவர்; வெற்றியும் கொண்டவர்.
"நல்லை நகர் ஆறுமுக நாவலர் பிறந்திலரேல் சொல்லு தமிழ் எங்கே சுருதி எங்கே?'
என்ற சி.வை.தாமோதரம்பிள்ளையின் அழியாக்கூற்றே இதற்கு நற்சான்றாகும்.
அன்னார் நல்லை நகரில் 18.12.1822 அன்று அவதரித்தார். நாவலருக்கு சிறு வயதிலேயே தமிழையும் சைவசமயத்தையும் வளர்த்து அபிவிருத்தி செய்யவேண்டுமென்றும் ஆசை உண்டாகி அது பேராசையாகி அதற்காக எந்த இடர்வரினும் எதிர்கொள்ளும் துணிவும் உண்டாயிற்று.
இக்காலகட்டத்தில் தான் கிறிஸ்தவ பாதிரியாரான பார்சிவல் துரையின் நட்பு நாவலருக்குக் கிட்டியது. அந்நேரத்தில் பார்ப்பவர்களுக்கு நாவலரும் பார்சிவல்துரையும் நேர் விரோத கொள்கையுடையவர்கள். ஒருவருக்கொருவர் முரண்பட்டவர்கள் என்றே எண்ணத்தோன்றியது. ஆனால் உண்மை அதுவல்ல; அவர்கள் இருவரும் தத்தம் சமயத்திற்கு விசுவாசமாயிருந்தார்கள். இருவரம் உண்மைச் சமயவாதிகளாக இருந்தமையால் ஒருவரோடொருவர் மோதிக் கொள்ளவில்லை. மாறாக நல்ல நண்பர்களாக வாழ்ந்து வந்தார்கள். இந்த நட்பு மன ஒருமைப்பாடு ஒரு சைவனுக்கும் ஒரு கிறிஸ்தவனுக்கும் இன்னுமொரு கிறிஸ்தவனுக்கும் இருந்ததில்லை.
நாவலருக்கு பார்சிவல் துரையின் நட்பு கிடைத்த விதம் சுவாரசியமானது. புதுமையானது. ஆங்கிலம் கற்கும் முகமாக நாவலரது 12 ஆவது வயதில் அவர் பார்சிவல் துரையிடம் அனுப்பப்பட்டார். இவ்வாறு ஆங்கிலக் கல்வி கற்கும் போது தமிழ்க் கல்வியை இன்னமும் அதிகமாகக் கற்க வேண்டும் என்ற பேராவலால் அக்காலத்தில் மிகவும் பிரசித்தி பெற்றிருந்த சரவணமுத்து புலவரிடத்திலும் சேனாதிராய முதலியாரிடத்திலும் திருக்குறள், நன்னூற் காண்டிகையுரை, இரகுவம்சம், விருத்தியுரை, திருக்கோவையார், சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி போன்ற அரும்பெரும் நூல்களைக் கற்றுத் தேர்ந்தார்.
ஆங்கிலப் பாடசாலையில் கல்வி கற்று மேல்வகுப்புக்கு வந்தபோது ஆறுமுகப் பிள்ளையின் (இதுதான் நாவலருக்குப் பெற்றோர் சூட்டிய இயற்பெயர்) இரு மொழித் திறமை கண்டு வியந்த பார்சிவல் துரை அன்னாரை கீழ் வகுப்புகளுக்கு ஆங்கிலம் கற்பிக்கவும் மேல் வகுப்புகளுக்கு தமிழ் கற்பிக்கவும் வேண்டிக் கொண்டார். மேலும் பைபிளைத் திருத்தி தமிழில் அச்சேற்றுவதற்கு உதவி புரியுமாறும் அன்புடன் கேட்டுக் கொண்டார்.
அந்த அன்புக் கட்டளையை சிரமேற் கொண்டு பைபிளை தமிழில் எழுதி முடித்தவுடன் அதனை அச்சிடும் பொருட்டு பார்சிவல் துரையுடன் சென்னை மாநகருக்கு வந்தார். அங்கிருந்த பாதிரிமார் நாவலர் தமிழில் தவறு உள்ளதென்று தடை செய்ய முயற்சித்தனர். ஆயினும் சென்னை நகரிலே மிகச் சிறந்த வித்துவானாக இருந்த திரு.மகாலிங்க ஐயர் தமிழ் பைபிளை முற்றாக வாசித்து அதில் பிழையேதும் இல்லையென்றும் அப்படியே அச்சிடலாமென்றும் கூறி நாவலரின் யாழ்ப்பாணத் தமிழைப் போற்றி சிலாகித்துப் பாராட்டினார்.
மீண்டும் யாழ்ப்பாணம் திரும்பிய போது அநேகர் சைவசமயத்திலிருந்து கிறிஸ்தவ சமயத்திற்கு மதம் மாறுவதை அறிந்து மனம் வருந்தினார். இந்நிகழ்வு தமது சமயத்திலுள்ள உண்மையை அறியாமலே நிகழ்கின்றது என்பதை அறிந்தார். சைவசமயப்பிரசங்கங்களும் சைவ நூல் வெளியீடுகளுமே மக்களுக்கு உண்மையை உணர்த்தி மதமாற்றத்தை நிறுத்த முடியும் என்பதைத் தெளிவாக உணர்ந்து கொண்டு செயலில் இறங்கினார்.
யாழ்.வண்ணார்பண்ணையில் வள்ளல் வைத்திலிங்கச்செட்டியாரால் கட்டப்பட்ட வைத்தீஸ்வரன் கோயில் வசந்த மண்டபத்திலே தமது 25 ஆவது வயதிலே 31.12.1947 அன்று தனது முதலாவது சைவப்பிரசங்கத்தை ஆரம்பித்தார். தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் இரவில் பிரசங்கம் நடைபெற்றது.
அவரைப்பின்பற்றி அவரது பள்ளி நண்பரான கார்திகேய ஐயரும் சைவப்பிரசங்கங்கள் நடாத்திவந்தார். இவ்விருவரும் வேதாகமங்கள், சிவபக்தி, யாக்கை நிலையாமை, மகளிரொழுக்கம், திருவிழாக்கள், சிவதீட்சை, தர்மம், கல்வி கற்பித்தல், பசுக்காத்தல், பிரபஞ்சமாயை, பேதமை, அறிஞரைத் தழுவி நடத்தல், தீட்சை, கொல்லாமை, கள்ளுண்ணல் போன்ற இன்னோரன்ன தலைப்புகளில் பிரசங்கங்கள் செய்து சைவத்தையும் தமிழையும் வளர்த்தார்கள்.
இப்பிரசங்கங்கள் கைமேற்பலனை ஏற்படுத்தின. மதுபானம் அருந்திய பலர் அப்பழக்கத்தைக் கைவிட்டார்கள். மாமிச போசனம் செய்தோர் செய்யாது விட்டார்கள். உருத்திராட்சம் தரியாது ஆலய தரிசனம் செய்தோர் உருத்திராட்சம் தரித்து செவ்வனே தரிசனம் செய்யத் தலைப்பட்டார்கள். பலர் விரதங்கள் அனுட்டிக்க ஆரம்பித்தார்கள். ஆலயப் பக்கமே தலை வைத்துப்படுக்காதவர்கள் தேவாரம், திருவாசகம், திருப்புகழ் பாடி மனமுருகி ஆண்டவனை வேண்டினார்கள்.
இந்த வெற்றிகளால் களிப்புற்ற நாவலர், நல்ல சமய நூல்கள் குறைவாக இருப்பதையும் இருக்கின்ற நூல்களிலே எழுத்துப் பிழை, சொற்பிழை, கருத்துப்பிழை இருப்பதனையும் கண்ணுற்று அச்சியந்திர சாலை ஒன்றை நிறுவுதலும் சைவ நூல்கள் வெளியிடுதலும் ஆத்திசூடி, கொன்றைவேந்தன் போன்ற நூல்களை மீள்பதிவு செய்தலும் சைவமும் தமிழும் தழைத்தோங்க நல்ல வழி என உணர்ந்து செயற்படத் தொடங்கினார்.
அதன் முதற்படியாக தாம் ஸ்தாபித்த சைவப்பிரகாச வித்தியாசாலையை தமது நம்பிக்கை மிக்க மாணாக்கர் சிலரிடம் ஒப்படைத்துவிட்டு தமது பால்ய கால நண்பரான சதாசிவப்பிள்ளையை அழைத்துக் கொண்டு அச்சு இயந்திரம் ஒன்றை வாங்கும் முகமாக 1849 ஆம் ஆண்டு சென்னை நகரம் நோக்கிப் புறப்பட்டார்.
சென்னையில் சிலகாலம் தங்கியிருந்த நாவலர் பெருமான் சூடாமணி நிகண்டு உரையையும், சௌந்தர்ய லகரியையும், அச்சில் பதிப்பித்தார். யாழ்.மீண்ட அன்னார் "வித்தியா நுபாலன யந்திரசாலை' என்ற அச்சகத்தை நிறுவி முதல் முயற்சியாக நீதி சாரங்களையும் சைவசமய சாரங்களையும் திரட்டி வசன ரூபங்களாக எழுதி முதற் பாலபாடத்தின் இறுதியிலே ஆத்திசூடி கொன்றைவேந்தன் என்ற நீதி நூல்களையும் இரண்டாம் பால பாடத்தில் அவைகளுக்கு உரையையும் எழுதிச் சேர்த்து அச்சிட்டு வெளியிட்டார். தொடர்ந்து பல நூல்கள் அவரால் வெளியிடப்பட்டன. அவற்றுள் "கொலைமறுத்தல்', "திருமுருகாற்றுப்படைஉரை' என்பன குறிப்பிடத்தக்கவை.
நாவன்மை மிக்க இவருக்கு அன்னாரது 27 ஆவது வயதில் 1849 இல் "நாவலர்' பட்டம் கிடைத்தது. நாவலர் பெற்ற பெறுபேறுகள் வெற்றிகள் கண்டு திருப்தியடையவுமில்லை. இறுமாப்போ, பெருமிதமோ கொள்ளவுமில்லை. மாறாக நல்ல ஆசிரியர்களையும் சைவப் பிரசாரகர்களையும் உருவாக்க ஐந்தாண்டுத் திட்டமொன்றை நிறுவினார் திட்டம் வருமாறு: வருடந்தோறும் இருபது மாணவர்களுக்கு ஒழுக்கமும், சைவ அறிவும் தமிழ்ப்புலமையும் போதிக்கப்படும். ஐந்தாம் வருடத்தில் ஐந்து வருடப்பயிற்சி பெற்ற இருபது இளைஞர்கள் இருப்பார்கள். அவர்கள் பயிற்சி முடிந்து வெளியேற அடுத்தவருடம் புதிதாக இருபது இளைஞர் பயிற்சியில் சேருவார்கள்.
பயிற்சி முடிந்த இருபது இளைஞர்களில் ஒரு பகுதியினர் கற்று வல்ல ஆசிரியர்களாக இருப்பார்கள். இன்னுமொரு பகுதியினர் சைவப் பிரசாரகராகவிருப்பர். மிகுதியினர் முக்கிய ஆலயங்கள் தோறும் நியமனம் பெற்று கோயில் பூசை முதலிய அன்றாட கருமங்களை சாத்திர முறைப்படி நடாத்த வழிகாட்டிகளாகவும் உசாத்துணைவர்களாகவும் இருப்பர். மேலும் பெற்றோருடன் அள வளாவி சமய தீட்சை பெற்று சமயாசாரம் உடையவர்களாகத் திகழ வழிவகுப்பர்.
ஆனால் என்னை துரதிர்ஷ்டம்! இத்திட்டம் நிறைவேற முன்னரே அதாவது 5.12.1879 அன்று தனது 57 ஆவது வயதில் பெருமானை எல்லாம்வல்ல இறைவன் தம்முடன் அழைத்துக் கொண்டான். வாழும் போதே அன்னாரை சைவப்பெருமக்கள்"ஐந்தாம் குரவர்' என மனதாரப் பாராட்டி பட்டம் வழங்க எத்தனித்தனர். நாவலர் பெருமான் அதை ஏற்றுக் கொள்ள மறுத்ததுடன் அந்த முயற்சிகளையும் வன்மையாகக் கண்டித்தார். பேச்சாற்றலுக்கு புகழ் பெற்றதால் "நாவலர்' என்றும் உரை நடையினைக் கையாண்ட திறமையினால் "வசன நடை கைவந்த வல்லாளர்' என்றும் போற்றிப்புகழப்பட்ட நாவலர் பெருமானுக்கு 1971 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 29 ஆம் திகதி அரசு முத்திரை வெளியிட்டு கௌரவித்தது.


நன்றி: தினக்குரல், நவம்பர் 26, 2010

Dhivakar

unread,
Nov 26, 2010, 6:18:38 AM11/26/10
to mint...@googlegroups.com
தமிழில் நாவலர் என்றால் அவர் தெய்வத்திரு ஆறுமுகநாவலர் ஒருவர் மட்டுமே.

நல்ல கட்டுரை தந்ததற்கு நன்றி சிறீதரன்!

திவாகர்



2010/11/26 Sri Sritharan <ksth...@hotmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com

N. Ganesan

unread,
Nov 26, 2010, 7:48:43 AM11/26/10
to மின்தமிழ்

On Nov 26, 5:18 am, Dhivakar <venkdhiva...@gmail.com> wrote:
> தமிழில் நாவலர் என்றால் அவர் தெய்வத்திரு ஆறுமுகநாவலர் ஒருவர் மட்டுமே....
>
> read more »


>
> நல்ல கட்டுரை தந்ததற்கு நன்றி சிறீதரன்!
>
> திவாகர்
>

1960 -90களில் நாவலர் என்றால் அரசியல் மட்டத்தில்
தமிழ்நாட்டில் இன்னொருவர்.
திராவிட இயக்கங்களில் நாவலர் என்றால் நெடுஞ்செழியன் என்பர்.
நாராயணசாமி தனி தமிழில் நெடுஞ்செழியன் ஆனார்.
அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சிகளில்
பொறுப்பான மந்திரி பதவிகளை வகித்தவர். முதல் அமைச்சர்
ஆக வாய்ப்பு இல்லாமல் போனது.
எழுத்துச் சீரமைப்பில் தீவிரமான ஆதரவாளராக விளங்கியவர்.

நா. கணேசன்


> 2010/11/26 Sri Sritharan <ksthar...@hotmail.com>


>
>
>
> >   ஆறுமுகநாவலர் ஒரு நோக்கு

> > <http://www.thinakkural.com/beta/index.php?option=com_content&view=art...>

> > மகளிரொழுக்கம்,- Hide quoted text -
>
> - Show quoted text -

விஜயராகவன்

unread,
Nov 26, 2010, 7:59:41 AM11/26/10
to மின்தமிழ்
On Nov 26, 1:48 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> திராவிட இயக்கங்களில் நாவலர் என்றால் நெடுஞ்செழியன் என்பர்.
> நாராயணசாமி தனி தமிழில் நெடுஞ்செழியன் ஆனார்.

You can say Mr.Narayanaswamy changed his name to Mr.Nedunchezhiyan.
You can't say நெடுஞ்செழியன் is a thaniththamiz ádaption'of
நாராயணசாமி .


Vijayaraghavan

devoo

unread,
Nov 26, 2010, 8:05:01 AM11/26/10
to மின்தமிழ்
'தனித்தமிழ்’ முத்திரையோடு என்ன வெளியானாலும் மறுத்துப்பேசக் கூடாது;
மீறினால் பேசுவோர் மீது முத்திரை குத்தப்படும்


தேவ்

N. Ganesan

unread,
Nov 26, 2010, 8:15:25 AM11/26/10
to மின்தமிழ்

On Nov 26, 7:05 am, devoo <rde...@gmail.com> wrote:
> 'தனித்தமிழ்’ முத்திரையோடு  என்ன வெளியானாலும் மறுத்துப்பேசக் கூடாது;
> மீறினால் பேசுவோர் மீது முத்திரை குத்தப்படும்
>
> தேவ்
>

இ-மெயில் புரட்சிகள் தனி தமிழ்,
இனி தனி க்ரந்தம் செய்ய முயற்சிகள்

“தனி” இனம் என்பது ஆந்தரபாலஜியில்
இல்லை என்கின்றனர். எழுத்து மாத்திரம்
“தனி”யாய் எப்படி நிற்கும்?

நா. கணேசன்

devoo

unread,
Nov 26, 2010, 8:19:10 AM11/26/10
to மின்தமிழ்

On Nov 26, 7:15 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> On Nov 26, 7:05 am, devoo <rde...@gmail.com> wrote:
> எழுத்து மாத்திரம் “தனி”யாய் எப்படி நிற்கும்?<

அதுவேதான் எனது ஐயப்பாடும் ?!


தேவ்

N. Ganesan

unread,
Nov 26, 2010, 8:32:21 AM11/26/10
to மின்தமிழ்

On Nov 26, 7:19 am, devoo <rde...@gmail.com> wrote:
> On Nov 26, 7:15 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
>
> > On Nov 26, 7:05 am, devoo <rde...@gmail.com> wrote:
> > எழுத்து மாத்திரம் “தனி”யாய் எப்படி நிற்கும்?<
>
> அதுவேதான் எனது ஐயப்பாடும் ?!
>
> தேவ்
>


கொஞ்சம் பொறுத்திருங்கள். விடை கிட்டும்.

கணேசன்


>
>
> > > 'தனித்தமிழ்’ முத்திரையோடு  என்ன வெளியானாலும் மறுத்துப்பேசக் கூடாது;
> > > மீறினால் பேசுவோர் மீது முத்திரை குத்தப்படும்
>
> > > தேவ்
>
> > இ-மெயில் புரட்சிகள் தனி தமிழ்,
> > இனி தனி க்ரந்தம் செய்ய முயற்சிகள்
>
> > “தனி” இனம் என்பது ஆந்தரபாலஜியில்
> > இல்லை என்கின்றனர். எழுத்து மாத்திரம்
> > “தனி”யாய் எப்படி நிற்கும்?
>

> > நா. கணேசன்- Hide quoted text -

N. Kannan

unread,
Nov 26, 2010, 9:09:21 AM11/26/10
to mint...@googlegroups.com
ஒருபுறம் கலப்புத் திருமணத்தை ஆதரிப்பதும்,
மறுபுறம் `தனித்தமிழ்` தூயவாதம் வைப்பதும் முரணாகப் படவில்லையா?

மனிதர் வேறு, மொழி வேறா?

க.>

2010/11/26 devoo <rde...@gmail.com>:

N. Ganesan

unread,
Nov 26, 2010, 9:13:19 AM11/26/10
to மின்தமிழ்

On Nov 26, 8:09 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> ஒருபுறம் கலப்புத் திருமணத்தை ஆதரிப்பதும்,
> மறுபுறம் `தனித்தமிழ்` தூயவாதம் வைப்பதும் முரணாகப் படவில்லையா?
>
> மனிதர் வேறு, மொழி வேறா?
>

இன்னொரு முரண்:
அறபித் தமிழை ஆதரிப்போர்
க்ரந்த த்ராவிடத்தை எதிர்க்கலாமா?

அதிலும், க்ரந்த அறிஞர்களே
வரவேற்கிறபோது, க்ரந்தத்தை
untouchable என்போருக்கு இதில்
அதிகாரம் எப்படி?

நா. கணேசன்

> க.>


>
> 2010/11/26 devoo <rde...@gmail.com>:
>
>
>
>
>
> > On Nov 26, 7:15 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> >> On Nov 26, 7:05 am, devoo <rde...@gmail.com> wrote:
> >> எழுத்து மாத்திரம் “தனி”யாய் எப்படி நிற்கும்?<
>

> > அதுவேதான் எனது ஐயப்பாடும் ?!- Hide quoted text -

Dhivakar

unread,
Nov 26, 2010, 9:45:55 AM11/26/10
to mint...@googlegroups.com
<<960 -90களில் நாவலர் என்றால் அரசியல் மட்டத்தில்
தமிழ்நாட்டில் இன்னொருவர்.
திராவிட இயக்கங்களில் நாவலர் என்றால் நெடுஞ்செழியன் என்பர்.>>

I think just for arguement sake you quote.

2010/11/26 N. Ganesan <naa.g...@gmail.com>


On Nov 26, 5:18 am, Dhivakar <venkdhiva...@gmail.com> wrote:
> தமிழில் நாவலர் என்றால் அவர் தெய்வத்திரு ஆறுமுகநாவலர் ஒருவர் மட்டுமே....
>
> read more »
>
> நல்ல கட்டுரை தந்ததற்கு நன்றி சிறீதரன்!
>
> திவாகர்
>

1
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com

N. Ganesan

unread,
Nov 26, 2010, 10:15:19 AM11/26/10
to மின்தமிழ், santhav...@googlegroups.com

அன்பின் திவாகர்,

பிராமணர்களில் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் வரை
சங்கீதம், வியாகரணம், அத்வைதம், தத்வம், ...
என்று ஏதாவது ஒரு துறையில் சிறந்தோருக்கு
கலைமகளின் பெயரான பாரதி என்ற சிறப்புப்
பட்டம் உண்டு. உ-ம்: அதிகை உத்தண்ட பாரதி,
மழவை சிதம்பர பாரதி, சிவகங்கை கவி குஞ்சர பாரதி,
பழைய சிருங்கேரி மடத்தலைவருக்கு
பாரதி, பின்னர் எழுந்த காஞ்சி மடத்துக்கு அதைப்போல்
சரஸ்வதி என்ற பட்டமும் உண்டு. 20-ஆம் நூற்றாண்டில்
ஜாதியை மீறிய பட்டமாக பாரதி உருமாறிய வளர்ச்சியும்
காண்கிறோம்: உ-ம்: சோமசுந்தர பாரதி. ஆனால், உலகறிந்த
பாரதி ஒருவர்தானே. அதுபோல, உலகறிந்த
நாவலர் பெருமான் ஒருவரே. மற்ற நாவலர்கள்
பலர் பேருக்கு இருந்தாலும்.

--------------

உத்தர மேரூர்க்குப் பக்கத்தில் உள்ள
திருவதிகைக் கோயில் தெய்வத்தின் மீது
கனிந்த செந்தமிழ்க் கலம்பகம் ஒன்று
பாடியவர் உத்தண்ட வேலாயுத பாரதி.

திருவிளை யாடல் நாடகம் செய்து
கீர்த்தி சேர்த்தவர் கிருட்டிண பாரதி.

படித்தால் பயன்தரக் கூடிய பல்பொருட்
சூடா மணிநிகண் டென்னும் சுவடி
இயற்றித் தந்தவர் ஈசுர பாரதி.

தாய்ப்பால் பருவத்தில் இருந்தே தமிழைப்
பயின்று பயின்று பக்குவப் பட்டு
முயன்று முயன்றுதம் முதுமைப் பருவத்தில்
ஆத்தி சூடிவெண் பாவை அளித்தவர்
இயற்றமிழ்ப் புலவர் இராம பாரதி.

விருத்தங்க ளாலே விசுவ புராணம்
தந்தவர் முத்துச் சாமி பாரதி.

திருத்தொண்டர் மாலை தேசிகர் தோத்திரம்
முதலிய நூல்களின் மூலம் பெரும்புகழ்
கொண்டவர் புதுவை குமார பாரதி

ஊடல் பதிகமோ உதட்டுப் பதிகமாம்
உதட்டுப் பதிகமோ உறவுப் பதிகமாம்
ஊடலால் ஏற்படும் உணர்ச்சியும் உறவும்
பக்தி வழிக்குப் பயன்படா தென்பதால்
கூடல் பதிகம் பாடிக் கொடுத்தவர்
குணங்குடி கொண்ட கோவிந்த பாரதி.

புகழ்மிகு கந்த புராணகீர்த் தனைகளும்
பதமே கெடாத பருவப் பதங்களும்
வேங்கைக் கும்மியும் வேறுபல நூல்களும்
கொடுத்தவர் பெருங்கரை குஞ்சர பாரதி.

வள்ளல்முத் திருளப்ப பிளை அவர்களால்
மதிக்கப் பெற்றவர் மதுரகவி பாரதி.

கீர்த்தனைகள் எழுதிக் கீர்த்தியோடு விளங்கிய
கிழவர் கோபால கிருட்டிண பாரதி.

பேச்சுத் திறத்தால் பெரும்பெரும் பகைவரின்
மூச்சைத் திணறடித்த முத்தமிழ் வித்தகர்
பசுமலை சோம சுந்தர பாரதி.

இத்தனை பாரதிகள் இந்நாட்டில் இருந்தும்
ஒரேஒரு பாரதி உயர்ந்து நிற்கின்றான்.

அவன்யார்? அவன்யார்? அவன்யார் என்றால்
அவன்தான் ஆங்கில ஆட்சிக்குச் சனியன்
குப்புற விழாத சுப்பிர மணியன்!

நித்திரைக் கவிஞர்க்கு மத்தியில் தோன்றிய
முத்திரைக் கவிஞன்! முண்டாசு பாரதி!

பெண்மீதில் ஆசை வைக்காமல் பெருந்தமிழ்
மண்மீதில் ஆசை வைத்த மகாகவி!

பா-ரதம் ஓட்டிய பாரதி! பழைமையைப்
பார்-அதம் செய்கிறேன் என்ற பாரதி!

கட்டுப் படாத கவிஞன்! என்றென்றும்
வெட்டுப் படாத வெற்றிக் குரியவன்.

--சுரதா.

--------------------------

பா-ரதம் ஓட்டிய பாரதி! பழைமையைப்
பார்-அதம் செய்கிறேன் என்ற பாரதி!
- சுரதா வரிகளை மீட்டும் படிக்கும்போது
நினைவுக்கு வரும் யுனித்தமிழ் நினைவு ஒன்று.

எனக்கொரு பெருமையை கவிஞர் பேரா. அனந்தநாராயணன்
வழங்கினார்கள். அந்த வெண்பா யூனிகோடு
குழுமங்கள் தமிழில் வளர சந்தவசந்தம் யாப்பறி புலமைப்
பெரியோர்கள் முடிவெடுத்து தமிழின் முதல்
யுனிக்கோடு குழுமங்கள் ஆகிய செயலுக்குச்
சான்று. இன்று எல்லா தமிழ்க் குழுமங்களும்
யூனிக்கோடில், 10,000 வலைப்பதிவுகள்.
அரசியல்வாதிகள் தமிழ்நாட்டில் விட்டிருந்தால்
இன்று சில லட்சம் வலைப்பதிவாவது தமிழ்நாட்டில்
தமிழில் இருந்திருக்கும். எவ்வளவு அரிய
விஞ்ஞானம், கருத்துக்கள், வரலாறு ... தமிழில்
இருந்திருக்கும் என்று எண்ணிப் பாருங்கள்.

பாரதம் நூலெழுதும் பங்கேற்றார் பண்டையொரு
வாரணம்; சந்த வசந்தக் கவிஞர்கள்தம்
பாரதம்செல் பாதை படைக்கக் கணேசனே
காரணமாய் நின்றார் களித்து!
- பேரா. அனந்தா

http://nganesan.blogspot.com/2007/12/blog-post_31.html

அன்புடன்,
நா. கணேசன்

விஜயராகவன்

unread,
Nov 26, 2010, 10:45:33 AM11/26/10
to மின்தமிழ்
On Nov 26, 4:15 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> அன்பின் திவாகர்,
>
> பிராமணர்களில் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் வரை
> சங்கீதம், வியாகரணம், அத்வைதம், தத்வம், ...
> என்று ஏதாவது ஒரு துறையில் சிறந்தோருக்கு
> கலைமகளின் பெயரான பாரதி என்ற சிறப்புப்
> பட்டம் உண்டு. உ-ம்: அதிகை உத்தண்ட பாரதி,

பாரதி என்பதி தசநாமி சன்யாசிகளின் ஒரு பெயர். இந்த தசநாமி முறையில்
சந்யாசி ஆகுபவர்கள் பாரதி, சரஸ்வதி, தீர்தா, அரண்யா,ஆஷ்ரமா, கிரி,
பர்வதா, சாகரா, வனா, பூரி என்ற பத்து பெயர்களில் ஒன்றை சன்யாசி பெயருடன்
சேர்த்தொக் கொள்ளலாம். அது பிராமணர் பேர் அல்ல.


விஜயராகவன்

N. Ganesan

unread,
Nov 26, 2010, 11:08:24 AM11/26/10
to மின்தமிழ்

நான் தமிழ்நாட்டு வழக்கத்தை எழுதினேன்.
தசநாமிகள் வடநாட்டில்.

நா. கணேசன்

Sri Sritharan

unread,
Nov 26, 2010, 4:13:22 PM11/26/10
to மின்தமிழ்
> > ஒருபுறம் கலப்புத் திருமணத்தை ஆதரிப்பதும்,
> > மறுபுறம் `தனித்தமிழ்` தூயவாதம் வைப்பதும் முரணாகப் படவில்லையா?
> >
> > மனிதர் வேறு, மொழி வேறா?
> > க.>
> >

கலப்புத் திருமணம் என்பது ஒரே இனத்துக்குள் வெவ்வேறு சாதிகளுக்குள் இடம்பெறுவது என்ற அர்த்தத்தில் தான் பயன்படுத்தப்பட்டு பரப்புரை செய்யப்பட்டு வந்துள்ளது.

 
 
> அறபித் தமிழை ஆதரிப்போர்
> க்ரந்த த்ராவிடத்தை எதிர்க்கலாமா?
>
> நா. கணேசன்

க்ரந்த, த்ராவிட..????
 
தமிழறிஞர்கள் இப்படி எல்லாம் எழுதலாமா?
 
சிறீதரன்
 
 

விஜயராகவன்

unread,
Nov 26, 2010, 4:19:36 PM11/26/10
to மின்தமிழ்
On Nov 26, 10:13 pm, Sri Sritharan <ksthar...@hotmail.com> wrote:
>
> க்ரந்த, த்ராவிட..????
>
> தமிழறிஞர்கள் இப்படி எல்லாம் எழுதலாமா?
>
> சிறீதரன்

க்ரியாவின் தற்கால அகராதியிலிருந்தே , தமிழ் மாறி விட்டது என
தெரியவில்லையா?

தமிழ்விக்கி கொடுக்கும் `கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதி` எங்குமில்லை.


விஜயராகவன்


விஜயராகவன்

Sri Sritharan

unread,
Nov 26, 2010, 6:34:46 PM11/26/10
to மின்தமிழ்
FWD
 
-------- Original Message --------
Subject: Naavalar
Date: Thu, 25 Nov 2010 17:58:28 +0530
From: Sasirekha <tami...@tamilnool.com>


தவத்திரு ஆறுமுக நாவலரின் 131ஆவது ஆண்டு விழா - கார்த்திகை மகம் - 28.11.2010
தமிழ்நூல்.காம் வழங்கும் அரிய படைப்புகள்

குறுந்தட்டு:
சொற்பொழிவு - உரைவீச்சு பேராசிரியர் இரா. செல்வகணபதி - ஒலிக் குறுந்தகடுகள் 3 
ஆறுமுகநாவலர் 1. பெருநாமச் சீர்பரவுவார்
ஆறுமுகநாவலர் 2. பரசமய கோளரி
ஆறுமுகநாவலர் 3. நுணங்கிய கேள்வி மேலோர்
ஓதுவார் பா. சற்குருநாதனின் பன்னிரு திருமுறை இன்னிசைக் குறுந்தகடு உபரியாக
ஆக 4 குறுந்தகடுகள் பெட்டிக்குள் விலை ரூ. 500

நூல்:
அருட்பா மருட்பா கண்டனத் திரட்டு
பதிப்பாசிரியர் ப. சரவணன் - 1190 பக்கங்கள், விலை ரூ. 750
நாவலர் வாழ்வையும் நோக்கையும் மேலும் சிறப்பாக அறிய மற்றுமொரு நூல்
அவர் வாழ்ந்த காலத்தில் வெளிவந்த அதே நூல்களின் மறு பதிப்பு ஒரே திரட்டாக

தேவைகளுக்கு அஞ்சல் முகவரியுடன் எழுதுக. கூறுவிலை தருவோம்.

நன்றி

சசிரேகா



To mark the occassion of the 131st anniversary of Thavathiru Arumuga Naavalar
on Karthikai Makam (28th November 2010)

tamilnool.com brings to you the following releases

CD:
Sorpozhivu - Uraiveechu Prof. Ra. Selvaganapathy - Audio CDs 3 Nos.
Aarumuga Naavalar 1. Perunaamach cheer paravuvaar
Aarumuga Naavalar 2. Para Samaya Kolari
Aarumuga Naavalar 3. Nunankiya Kelvi Melor

Panniru Thirumurai Innisai - Oathuvaar Pa. Sargurunathan - Audio CD 1 No.
Altogether 4 CDs Pack - Rs. 500

Book:
Arutpa Marutpa Kandana thirattu
Editor: Pa. Saravanan - 1190 Pages, Price: Rs. 750
Reprint of books published during Naavalar's time in one compilation.

Please let us know your requirements along with your postal address for us to quote.

Thanks and regards

Sasirekha

Dhivakar

unread,
Nov 27, 2010, 12:23:37 AM11/27/10
to mint...@googlegroups.com
>>ஆனால், உலகறிந்த
பாரதி ஒருவர்தானே. அதுபோல, உலகறிந்த
நாவலர் பெருமான் ஒருவரே. மற்ற நாவலர்கள்
பலர் பேருக்கு இருந்தாலும்<<.

நன்றி கணேசனார்.

2010/11/26 N. Ganesan <naa.g...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com

Reply all
Reply to author
Forward
0 new messages