வல்லினம் -மெல்லினம் -இடையினம் - வரிசை சரியா..?

3,718 views
Skip to first unread message

thaayumaanavan venkat

unread,
Mar 16, 2009, 3:42:54 AM3/16/09
to minTamil
நம் தமிழ் மொழியில் 'வல்லினம்'  'மெல்லினம்' 'இடையினம்' என மூன்று இன எழுத்துக்களை பயன்படுத்துவது அறிந்த ஒன்று.
கருத்தியல் ரீதியிலும் சரி -தர்க்க ரீதியிலும் சரி..
வலுத்தது முதலிலும் , இளைத்தது ஈற்றிலும், மத்திமமானது இடையிலும் இருக்கவேண்டும்.
அதாவது வல்லினம்.இடையினம், மெல்லினம் என்ற வரிசையில் இருந்திருக்க வேண்டும். அவ்வாறில்லாமல் வல்லினம்., மெல்லினம், இடையினம்..எனும் அமைப்பில் இடையில் இருக்க வேண்டிய இடையினம் கடைக்கு சென்றது ஏன்..?

நான் சிறிய வயதாய் இருந்தபோது எங்கள் வீட்டிற்கு நிறைய தமிழறிஞர்கள் வருவார்கள். அப்போது ஒரு முறை என் தந்தையார் இவ்வாறு சொல்ல கேட்டிருக்கிறேன்" " தமிழ்" என்கிற சொல்லில் 
த -வல்லினம்
மி -மெல்லினம்
ழ் - இடையினம்
இந்த அமைப்பினையொட்டியே இலக்கணம் வகுத்தவர்கள்- எழுத்தையும் வரிசைப்படுத்தியிருக்க வேண்டும் " என்று.

இந்த அழகியலான கற்பனை சரியா..? அல்லது வேறு குறிப்பிட்ட காரணம் ஏதும் உண்டா..?

மின் தமிழ் அறிஞர்கள் விளக்கலாமே...!



என் தமிழெல்லாம் அழகியின் தமிழே..!
தமிழ்'அழகி'யுடன்
வெங்கட்.தாயுமானவன்

செந்தமிழை செழுந்தமிழாக்க (http://free.azhagi.com) easy tamil transliterator.(அழகிய தமிழ்மகள்)

என் தமிழோடு கைகுலுக்க
(www.kvthaayumaanavan.blogspot.com)






Hari Krishnan

unread,
Mar 16, 2009, 4:55:32 AM3/16/09
to minT...@googlegroups.com


2009/3/16 thaayumaanavan venkat <thaayum...@gmail.com>


த -வல்லினம்
மி -மெல்லினம்
ழ் - இடையினம்
இந்த அமைப்பினையொட்டியே இலக்கணம் வகுத்தவர்கள்- எழுத்தையும் வரிசைப்படுத்தியிருக்க வேண்டும் " என்று.

இந்த அழகியலான கற்பனை சரியா..? அல்லது வேறு குறிப்பிட்ட காரணம் ஏதும் உண்டா..?


வல்லினம், மெல்லினம், இடையினம் என்றுதான் வரிசையை அமைத்திருக்கிறார்கள்.

வல்லெழுத்து என்ப க ச ட த ப ற.  19
மெல்லெழுத்து என்ப ங ஞ ண ந ம ன.  20 
இடையெழுத்து என்ப ய ர ல வ ழ ள.  21 

இது தொல்காப்பியம், எழுத்ததிகாரம்.

வல்லினம் க ச ட த ப ற வெனவாறே  68
மெல்லினம் ங ஞ ண ந ம ன வெனவாறே  69
இடையினம் ய ர ல வ ழ ள வெனவாறே  70

இது நன்னூல்.

எனவே நீங்கள் சொல்லியிருப்பது அழகான கற்பனை மட்டுமன்று.  அழகான உண்மையும் கூட.

--
அன்புடன்,
ஹரிகி.

வேந்தன் அரசு

unread,
Mar 16, 2009, 11:52:49 AM3/16/09
to minT...@googlegroups.com
வடமொழி, தம்மொழி என் சொல்லி இருப்பாங்க.
தம்மில், தமையன், தமக்கை என தம் அடிப்பது நம் வழக்கம்

தம்மொழி தமிழ் ஆகி இருக்கலாம் என்பது என் (அழகிய) கற்பனை

வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
If truth is God then God is on my side.

thaayumaanavan venkat

unread,
Mar 16, 2009, 1:16:18 PM3/16/09
to மின்தமிழ்
அப்படி ஒருகால் கூறியிருந்தால்.."எம்மொழி"- என்றுதான் கூறியிருப்பார்கள்.
அல்லது "நம்மொழி" - என்று கூறியிருப்பார்கள்.
"தம்"மொழி என கூறியிருக்கமாட்டர்கள்.

இந்த "தம்" அடிக்கிற வேலையெல்லாம் சில இடைக்காட்டு சித்தர்களின் சித்து
வேலை.

Tthamizth Tthenee

unread,
Mar 16, 2009, 1:28:19 PM3/16/09
to minT...@googlegroups.com
ழ் என்னும் ஒரு  எழுத்தே தமிழுக்கு தலையாய எழுத்து
 
ஆதலால்  தம் + ழ் என்று  தமிழ் ஆகியதோ
 
ழ ,   ழ் எழுத்துக்களை  சரியாக உச்சரிக்க நம் நாக்கின் நுனி மேலண்ணத்தில் போய் ஒட்டவேண்டும்
அப்போதுதான்  ழ் வரும் இல்லையென்றால்
 
 
தமில் தான்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ


 
2009/3/16 thaayumaanavan venkat <thaayum...@gmail.com>

NATARAJAN SRINIVASAN

unread,
Mar 16, 2009, 4:20:41 PM3/16/09
to minT...@googlegroups.com
எழுத்துகளை இனம் பிரித்தபோது வல்லொலிகளையும் மெல்லொலிகளையும் கண்டறிந்து பின் இரண்டிலும் வகைபெறாதனவற்றை இடையினம் என்றனரோ?
 
நடராஜன். 

2009/3/16 thaayumaanavan venkat <thaayum...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages