திருமதி சுபாஷினி அவர்களின் “தொல்மனித இனங்களும் மனித குல இடப்பெயர்வுகளும் ” எனத் தலைப்பிடப்பட்ட நூலை ஆர்வத்தோடு படித்து முடித்தேன்.
டேவிட் ரைஹ் எழுதிய WHO ARE WE AND HOW WE GOT HERE மற்றும் டோனி ஜோசப் எழுதிய EARLY INDIANS ஆகிய இரண்டு நூல்களின் சாராம்சத்தை எளிமைப் படுத்தி வழங்கியுள்ளார்
மரபணு ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட மேற்கண்ட இரு நூல்களும் தீவிரமான விஞ்ஞானப் பாடங்களாகும். அவற்றை அனைத்து தரப்பினரும் புரிந்து கொள்ளும் வகையில் எழுதியுள்ளார்.
தொல் மனித இனங்களின் வகைகள், அவைகளின் கால கட்டங்கள், இடம் பெயர்வுகள் , அழிவுகள், நவீன மனிதர்கள் ஆகியோர் குறித்த ஆய்வுகளைத் திறம்பட விவரித்துள்ளார் .
தொல்மனிதர்கள் வட ஐரோப்பாவிலிருந்து ஆஸ்திரேலியா சென்றடைந்தது, ஆப்பிரிக்காவிலிருந்து நவீன மனிதர்கள் உலகம் முழுவதும் இடம் பெயர்ந்தது, தற்போதைய ஈரான் பகுதியிலிருந்து தொல் மனிதர்கள ஆப்பிரிக்காவிற்கு இடம்
பெயர்ந்து விவசாயம் செய்தது, இவை அனைத்தும் 50000 ஆண்டுகள் முதல் 7000 ஆண்டுகளுக்கு முன்பு வரை நிகழ்ந்திருப்பது போன்ற தகவல்கள் மிகுந்த வியப்பை உண்டாக்குகின்றன.
மனித இனங்கள், காலப் போக்கில் எவ்வாறு, எங்கே கலப்பினங்களாக மாறின, தூய்மையான இனம் என்று ஒன்றும் இல்லை ஆகவே சாதி, இனம் போன்ற வேறு பாடுகள் பொருளற்றவை என்பதை ஆணித்தரமாக விளக்கியுள்ளார்.
அவருடைய உயரிய தமிழ் நடை, இந்நூலிற்கு மணி மகுடம்.
அவர் எழுதிய நூல்களில் நான் படித்த முதல் நூல் இது. அவருடைய மற்ற நூல்களையும் படிக்க வேண்டிய ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.
வாழ்த்துக்கள் திருமதி. சுபாஷினி.
அ. கா. விசுவநாதன்