நல்வரவு ஆகுக, சுபாஷிணி.இ
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
பிறந்த நாள் வாழ்த்து கூறி எனை வாழ்த்திய அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி. உங்கள் அன்புடனும் ஆதரவுடனும் தமிழ் மரபு அறக்கட்டளையின் பணிகள் இனிதே தொடரும். 🌹
இன்று சென்னையில் நமது த.ம.அ ஏற்பாடு செய்து நிகழ்த்திய நாட்டார் கலைகள் என்ற பொருளிலான கலந்துரையாடல் நிகழ்வு மன நிறைவு அளிக்கும் வகையில் அமைந்தது. நீண்ட கால களப்பணி அனுபவமும் ஆய்வு மற்றும் துறை சார்ந்த ஆசிரியப் பணி அனுபவமும் கொண்ட பேராசிரியர்கள் முனைவர்.செல்லன், பேரா.அமைதியரசு, பேரா. பழனி, பேரா.சீனிவாசன் ஆகியோருக்குத் த.ம.அ- வின் நன்றி. பாடல்களை வழங்கி கருத்துக்களையும் வழங்கி கூடுதல் சிறப்பு சேர்த்த முனைவர்.க.வெங்கடேசனுக்கு என் நன்றி. பறை இசை, பாடல்களை வழங்கி சிறப்புச் சேர்த்த திரு.ஆனந்தன் (முரசு) குடும்பத்தினருக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.
நிகழ்ச்சிக்கு வாழ்த்துரை வழங்கி ஆழமான அதிலும் மிகக்குறிப்பாக தற்கால தமிழகத்திற்கு ஏற்ற மிக முக்கியக்கருத்துக்களைப் பகிர்ந்த பாலச்சந்திரன் இ.ஆ.ப (ஓய்வு) அவர்களுக்கு என் நன்றி. நிகச்சியைத் தொகுத்தளித்த ஸ்ரீதேவி உதயனுக்கும் நிகழ்ச்சி ஏற்பாட்டில் உதவிய திரு.காந்தி திரு.கௌதம சன்னா ஆகிய இருவருக்கும் மிக்க நன்றி.
நிகழ்ச்சிக்கு வருகையாளராக வந்திருந்தாலும் பல பணிகளை முன்னெடுத்து செய்த அசோக், சிவரஞ்சனி, செழியன், நானா ஆகியோரின் அன்பிற்கு என் நன்றி.
கலந்துரையாடலில் கலந்து கொண்டதோடு நல்ல கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட முனைவர்.சந்திரபோஸ், திரு.கவியாழி கண்ணதாசன், திரு.இன்னம்பூரான், திரு.குமரகுருபரன, திரு.சுந்தரராஜன் ஆகியோருக்கும் என் நன்றி.
இனி நாட்டுப்புறக் கலைகள் எனக் கூறாமல்
நாட்டுக்கலை
அல்லது மக்கள் கலை
என சொல்வோம்!
இன்றைய நிகழ்வு ஏற்படுத்திய கருத்தாக்கங்களைக் கொண்டு அடுத்த ஆண்டு ஒரு கண்காட்சியோடு கூடிய கருத்தரங்கை ஏற்பாடு செய்யத் திட்டமிடுவோம்.
இந்த நிகழ்ச்சியைப் பயனுள்ள ஒரு நிகழ்ச்சியாக மாற்றிய பெருமை இன்று வந்து கலந்து சிறப்பித்த அனைவரையுமே சாரும். அனைவரின் அன்பிற்கும் ஆதரவிற்கும் எனது நன்றி.
அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை
********************************************************************************
--
அழைப்பிதழ்:

_______________________________________________________
சென்னை விமான நிலையத்திலிருந்து பினாங்கு (மலேசியா) புறப்படுகிறேன். அடுத்த சில நாட்கள் பினாங்கு மாநில அரசின் அழைப்பில் சில சந்திப்புக்களும் நிகழ்வுகளும் ஏற்பாடாகியுள்ளன. அதில் ஒரு நிகழ்ச்சியாக அமைகிறது தமிழ் மரபு அறக்கட்டளையின் தமிழர் மரபு விளையாட்டுக்கள் மீள் அறிமுகம் என நிகழ்ச்சி. இது பினாங்கில் அண்மையில் தொடங்கப்பட்ட இந்தியப் பாரம்பரிய அருங்காட்சியகத்தில் நடைபெற உள்ளது.
பினாங்கு இந்து அறநிலையத்துறை ஏற்பாடு செய்யும் இந்த நிகழ்வை பினாங்கு மாநில துணை முதலமைச்சர் பேரா.முனைவர் ராமசாமி அவர்கள் தொடக்கி வைக்கின்றார்.
எனது சொற்பொழிவு இடம்பெறுகின்றது.

Tamil manuscripts preserved in the countries of the world - Trying to save manuscripts
*****************************
சொற்களுக்கு அப்பாற்பட்டது இச்சாதனைகள். இந்த ஓலைச்சுவடிகள் இணையத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றனவா?
சொற்களுக்கு அப்பாற்பட்டது இச்சாதனைகள். இந்த ஓலைச்சுவடிகள் இணையத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றனவா?
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
https://www.youtube.com/watch?v=hj7XPjnqZ-0
https://www.youtube.com/watch?v=u6mSxk1RjNI
📌 25.10.2018 கைத்தறி அணிவோம் நிகழ்ச்சி
இடம் : சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரி, சென்னை
நேரம்: காலை 9:30- 12:00
இந்த நிகழ்வை தமிழ் மரபு அறக்கட்டளையும் Traditional India அமைப்பும் எத்திராஜ் கல்லூரியின் பெண்ணியத்துறையுடன் இணைந்து நடந்துகிறோம்.
கைத்தறி பற்றிய விழிப்புணர்வு, நூல் தயாரிக்கும் முறை, நெசவாளர்களின் உரைகள், கைத்தறி சேலை பவனி.. என பல அம்சங்கள் இந்த நிகழ்வில் இடம் பெறுகின்றன.
வந்து கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பிக்க அழைக்கின்றோம்.
நன்றி
ஏற்பாட்டாளர்கள்!
___________________
____________________________
இன்று காலை 9:30 மணிக்கு சென்னை எத்திராஜ் கல்லூரியில் த.ம.அ ஏற்பாட்டில் கைத்தறி அணிவோம் நிகழ்வு நடைபெறுகிறது. ஆர்வமுள்ளோர் வருக!
கைத்தறி பற்றிய விழிப்புணர்வு, நூல் தயாரிக்கும் முறை, நெசவாளர்களின் உரைகள், கைத்தறி சேலை பவனி.. என பல அம்சங்கள் இந்த நிகழ்ச்சி நிரலில் கண்டவாறே நடை பெற் றன
எத்திராஜ் மகளிர் கல்லூரியில் தமிழ் மரபு அறக்கட்டளையும் Traditional India அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்த கைத்தறி அணிவோம் நிகழ்ச்சியின் சில புகைப்படங்கள். News 18 செய்தியிலும் காணுங்கள்.
அதிர்ச்சியளிக்கும் செய்தி!
//
*BREAKING:* - News 24
*இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனவின் முன்னிலையில் ராஜபக்சே பிரதமராக பொறுப்பேற்றார்.*
*பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கே நீக்கப்பட்டுள்ளார். அதிபர் சிறிசேனாவின் கட்சியும் இலங்கை அரசில் இருந்து விலகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.*
*ஆளும் கூட்டணியில் ஏற்பட்ட பிளவு காரணமாக இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.*
*எனது நண்பர் ராஜபக்சே இலங்கையின் பிரதமராக தற்போது* *பதவியேற்றுள்ளார்”*
*சுப்ரமணியன் சுவாமி*
---
நேற்று மாலை கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் ஒரு விவாத மேடை நிகழ்வு நடைபெற்றது. இரண்டு அணிகளில் 4 ஆண்கள் 4 பெண்கள் என விவாதித்தனர். அனைவரும் 20 வயதுகளில் உள்ள இளையோர். தலைப்பு இலங்கை அரசில் தமிழ்க் கட்சிகளில் நிலைப்பாடு பற்றியது.
விவாதித்தோரின் தமிழ் ஆளுமை, உச்சரிப்பு, சமகால அரசியல் அறிவு, சமூக சிந்தனை என்னை வியக்க வைத்தது.
நிகழ்ச்சியைப் பார்க்க வந்தோரில் 50 விழுக்காடு இளையோரே. இதுவும் எனக்கு ஒரு வியப்பு. ஒரு உரை நிகழ்ச்சியைக் காண ஆர்வத்துடன் இளையோர் வந்து அமர்ந்திருப்பது அவர்களுக்கு அரசியல் சிந்தனைகள் சமூக நலனுக்கு முக்கியம் என்ற உணர்வு இருப்பதை வெளிப்படுத்துவதைக் காண்கிறேன்.
யாழ்ப்பாணம் வந்தடைந்தோம். காலை மணி 5:35.
பார்க்குமிடமெங்கும் தமிழ்.
நல்லூர் கோயிலைக் கடந்து தின்னவேலி பகுதியைக் கடந்து உரும்பிராய் வந்தடைந்தோம்.
முருங்கை, தென்னை மரங்களின் பசுமை
தோழி வல்ன்ரீனாவின் அன்பான கணிவான வ்ரவேற்பு..
தமிழ் மண்ணில் கால் பதிப்பதில் பெருமை!!
பெண்களே நடத்தும் தின்னவேலி பகுதி் "அம்மா ஆச்சி" உணவகத்தில் இன்று காலை உணவு சுவைத்தோம். இதே பகுதியில் விவசாயக் கல்லூரியும் உள்ளது.
தேங்காய்ப்பால் அப்பம்
குண்டு தோசை
குரக்கண் ரொட்டி
தொதோல்
பயித்தம் உருண்டை
பல்லு கொளுக்கட்டை
மரக்கறி ரொட்டி..
இஞ்சி தேயிலை + பணஞ்சீனி
தோசை
27.10.2018
யாழ்ப்பாணத்தில் இன்று ஒரு சில முக்கிய வரலாற்றுப் பகுதிகளுக்குச் சென்று பதிவுகளை செய்தோம். குறிப்பாக:
-யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், அதன் வரலாற்று தொல்லியல் துறை ஆய்வுகள் பற்றிய தகவல்கள். பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர் ப.புஷ்பரட்ணம் அவர்களுடன் சந்திப்பு.
-யாழ்ப்பாண தேசிய அருங்காட்சியகம்
-யாழ் நூலகம்
-யாழ்ப்பாணம் கோட்டை
-நல்லூர் கந்தசாமி கோயில்
-சிவபூமி திருவாசக அரண்மணை – 108 சிவலிங்க வடிவங்கள் சூழ தெட்சிணாமூர்த்தி சிலை கருவறையில் அமைக்கப்பட்ட வகையில் உருவாக்கப்பட்ட கோயில்.
-யமுனா ஏரி
-சங்கிலியான் அரண்மனை
-சங்கிலியான் குளம்
-சங்கிலியான் மனை
-மந்திரி மனை
நாளை மேலும் சில இடங்களுக்கான பயணம் திட்டமிட்டுள்ளோம்.
இன்று மலை 7 மணிக்கு பின்னர் கடும் மழை பெய்தது . இன்று நாள் முழுவதும் நல்ல இதமான தட்பவெப்ப நிலை இன்றைய அனைத்து வரலாற்றுப் பதிவுகளுக்கும் உதவியது.
-சுபா
------------------------------------------------------------------------------
நல்லூர் கந்தசாமி முருகன் கோயிலின் பிரம்மாண்டத்தை விவரிக்க சொற்கள் இல்லை.
தற்போது.. குரும்பசிட்டி நகரில் வருடாந்திர பரிசளிப்பு விழா, தமிழ்த்தின விழா நிகழ்வில் பிரதம விருந்தினராக ..
குரும்பசிட்டி 30 ஆண்டுகள் இராணுவக்கட்டுப்ப்பாட்டில் இருந்த பகுதி. இப்பகுதி போரின் போது முற்றிலுமாக அழிக்கப்பட்ட ஒரு பகுதி. வீடுகள், பள்ளிகள் கோயில்கள், மக்கள் உயிர்சேதம் என மிக மோசமான நிலையை அனுபவித்த ஒரு பகுதி. இன்று இங்கு ஒரு கல்விக்கோயில் எழும்பியுள்ளது. புலம்பெயர்ந்த தமிழர்களின் பொருளாதார உதவியுடன் இங்கு பாடசாலை எழுப்பப்பட்டுள்ளது.
தன்னலம் மறந்த , பொதுநல சிந்தனை மட்டுமே கொண்டு செயல்படும் கிராமத் தலைவர், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியை வலன்ரீனா மற்றும் ஏனைய ஆசிரியர் அனைவரும் போற்றுதலுக்குரியவர்கள்.
இப்பள்ளி மென்மேலும் வளர்ச்சியுற வேண்டும். அதற்கு பொருளாதார உதவி அடிப்படை தேவை..
உலகத் தமிழர்களே...இப்பள்ளி வளர உங்களால் இயன்ற பொருளாதார உதவிகளைச் செய்வோம். இப்பகுதி இளம் தலைமுறை நம் குழந்தைகள். இவர்கள் நல்வாழ்வு நமது நல்வாழ்வு!
-சுபா
காணொளிப்பதிவு: https://www.facebook.com/subashini.thf/videos/2288477798062271/
______________________________________
தற்போது யாழ்ப்பாணம் திருமறை கலாமன்றம் , கலைத்தூது அழகியல் கல்லூரியில் ..
கூத்துக்கலையை சிறப்பாக வளர்க்கும் பணியை தொடர்ந்து பல்லாண்டுகளாகச் செய்து வரும் பன்மொழிப் புலவர் பாதிரியார் மரியசேவியர். அவரோடு இன்று இணைந்து செயல்படும் இளம் ஆய்வாளர்கள் + கூத்துக் கலைஞர்களுடன் இன்று மாலை ஒரு கலந்துரையாடல்.
போர்க்காலத்திலும் மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் நிகழ்வுகளை இவரது அமைப்பு செயல்படுத்தியமை குறிப்பிடத்தக்கது. விரிவான பதிவினை செய்துள்ளோம். பின்னர் அது வெளியிடப்படும்.
____________________________________
28.10.2018 (ஞாயிறு)
யாழ்ப்பாணத்தின் சில முக்கிய வரலாற்றுப் பகுதிகளுக்கு தமிழ் மரபு அறக்கட்டளை குழுவினர் சென்றிருந்தோம். அதில் குறிப்பாக:
கந்தரோடை – தமிழ் பௌத்தம் நிலைபெற்றிருந்த பகுதியாக அறியப்படும் தொல்பழங்கால மனிதர்கள் வாழ்விடம். அகழ்வாய்வுகள் செய்யப்பட்ட ஒரு பகுதி இது. இங்கு பேரா.புஷ்பரட்ணம் அவர்களது பேட்டி ஒன்று இப்பகுதி பற்றிய விளக்கங்களுடன் பதிவு செய்யப்பட்டது.
(இப்பகுதியில் தற்சமயம் இலங்கை இராணுவத்தினர் இருக்கின்றனர். நான் சென்றிருந்த சமயத்தில் இரண்டு இராணுவத்தினர் வருவோர் போவோரிடம் சிங்களத்தில் பேசினர். எங்களிடமும் வந்து பேசினர். இப்பகுதியை விரிவாக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேராசிரியரிடம் சிங்களத்தில் கூறினர். பேருந்துகளில் சிங்களவர்கள் வந்து இப்பகுதியைப் பார்த்துச் செல்கின்றனர். )
கந்தரோடை செல்லும் சாலையில் போரினால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளைக் கடந்து சென்றோம். தற்சமயம் சாலையின் இரு பக்கங்களிலும் புதிய வீடுகள் தென்படுகின்றன. இவை இந்தியா கட்டிக்கொடுத்த வீடுகள் என ஒருவர் குறிப்பிட்டார். வீடுகளின் தரம் மிக எளிமையானதாக உள்ளது. 10 ஆண்டுகள் இவை தாங்குமா என்பதே சந்தேகம் எனும் வகையில் இவ்வீடுகள் காட்சியளிக்கின்றன.
கீரிமலை சிவாலயம் – இது சோழர் காலத்தில் கட்டப்பட்ட ஒரு பழம் கோயில் என அறியப்படுகின்றது. போரில் மிகுந்த சேதம் அடைந்து கடந்த ஆண்டு முழுமையாக புதிதாக கட்டப்பட்டு அழகாகக் காட்சியளிக்கின்றது இவ்வாலயம். கோயிலின் உள்ளே சிவபுராணக் காட்சிகள் சுவர்களில் ஓவியங்களாகவும் புடைப்புச் சிற்பங்களாகவும் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
மாவட்டபுரம் கந்தசாமி கோயில் – இது கீரிமலை கோயில் அருகிலேயே இருக்கும் ஒரு சிவாலயம். போரினால் மிகுந்த சேதம் அடைந்த சிவாலயங்களில் ஒன்று இது. தற்சமயம் இக்கோயில் புணரமைக்கப்பட்டு வருகிறது.
யாழ்ப்பாணம் துர்க்கையம்மன் கோயில். இங்கு போரின் போது மனநலம் பாதிக்கப்பட்ட பெண்கள் நலனுக்காக அமைக்கப்பட்ட ஒரு அமைப்பு இயங்குகின்றது. சைவ ஆராய்ச்சி நூலகம் ஒன்றும் இவ்வளாகத்தில் உள்ளது. துர்க்கைக்கான அர்ச்சனையாக இங்கு மனநலம் பாதிக்கபப்ட்ட பெண்களின் பெயர்கள் வரிசையாக வாசிக்கப்பட்டு அவர்களுக்கான போற்றி பாடல் இங்கு வழிபாட்டில் ஓதப்படுகின்றது.
மதியம் குரும்பையூர் (குரும்பசிட்டி) கிராமத்தில் ஏற்பாடாகியிருந்த பரிசளிப்பு விழா, தமிழ்த்தினவிழாவில் கலந்து கொண்ட்டோம். முற்றிலும் அழிக்கப்பட்ட, 30 ஆண்டுகள் இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு கிராமம் இது. இங்குப் புது குடியேற்றம் தொடங்கியுள்ளது. இங்கு ஒரு பள்ளிக்கூடம் அமைக்கப்பட்டு அங்கு வறுமைக்கோட்டின் அடித்தளத்தில் உள்ள மக்களின் குழந்தைகள் கல்வி கற்கின்றனர். குழந்தைகளின் நலனுக்காக பெரும் சேவையாற்றும் ஆசிரியை வலன்ரீனா, பள்ளி அதிபர் திரு.ரவிச்சந்திரன் ஆகியோருடன் மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கி மகிழ்ந்தோம்.
மாலை திருமறை கலாமன்றம், கலைத்தூது அழகியல் கல்லூரியில் பன்மொழிப்புலவர் பாதிரியார் மரியசேவியர் அவர்களையும் அவரது அமைப்பின் குழுவினரையும் சந்தித்து கலந்துரையாடினோம். பேட்டி ஒன்று பதிவாக்கப்பட்டது.
-சுபா
_____________________
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
28.10.2018 -திங்கள்
யாழ்ப்பாணத்தில் இன்றைய நிகழ்ச்சிகள்
காலை 10-12: யாழ் பல்கலைக்கழகத்தில் த.ம.அ கிளை அமைப்பு
மதியம் 2- 5 கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி
------
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று தமிழ் மரபு அறக்கட்டளையின் இலங்கைக் கிளை அமைப்பாக்க நிகழ்வும் தொடக்கவிழாவும், வரலாற்றுப் பயிலரங்கும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. ஏறக்குறைய 200 ஆய்வாளர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மற்றும் கிழக்கு மாகாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கால் பங்கு கொள்கின்றனர்.
______________________________
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியின் கலாச்சார விழா நிகழ்வில் தமிழ் மரபு அறக்கட்டளை.
1923ம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி இது. 1995 முதல் 2002 வரை இராணுவக்கட்டுப்பாட்டில் இக்கல்லூரியின் வளாகம் இருந்தாலும் கடும் போராட்டத்திற்குப் பின்னர் மீட்கப்பட்டு வகுப்புக்கள் நடைபெறுவதாக அறிந்தேன்.
கோலாட்டம் ஆடி எங்களை மகிழ்வித்து அழைத்துச் சென்றனர் இந்த வருங்கால ஆசிரியர்கள்.
_________________________________
புன்னாலைக்க்கட்டுவன் கிராமம் போரின் போது முற்றிலும் சேதப்பட்ட ஒரு கிராமம். இங்கு மாலை நேரப்பள்ளியை இலங்கை ஐயை குழுமம் இலவசமாக மிகுந்த ஈடுபாட்டுடன் நடத்தி வருகின்றனர்.
இந்த கிராமத்தைச் சேர்ந்த செல்வி தனுசியா தேசிய அளவில் பளு தூக்கும் போட்டியில் வெற்றி்பெற்று விரைவில் ஆசிய அளவிலான போட்டியில் பங்கு பெற மலேசியா செல்கின்றார்.
29.10.2018 (திங்கட்கிழமை)
காலை நிகழ்வு
************************
இலங்கையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறையும் தமிழ் மரபு அறக்கட்டளையும் இணைந்து நடத்திய செயலமர்வு யாழ் பல்கலைக்கழக விரிவுரைமண்டபம் இல.408ல், காலை 9 மணிக்குத் தொடங்கி மதியம் 1 மணி வரை நடைற்றது.
இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணப்பல்கலைக்கழக வரலாற்றுத்துறை தலைவர் திரு.சிவகணேசன் வரவேற்புரையாற்றினார்.
யாழ் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை தலைவர் பேராசிரியர் புஷ்பரட்ணம் தலைமையுரை ஆற்றினார்.
இந்த நிகழ்ச்சிக்குத் துணைவேந்தரின் பிரதிநிதியாக வந்து வாழ்த்துரை வழங்கினார் சித்தமருத்துவத்துறையின் தலைவர் பேரா.மிகுந்தன்.
கலைப்பீடத்தின் பீடாதிபதி கலாநிதி கே.சுந்தர் அவர்கள் வாழ்த்துரை வழங்கி யாழ் பல்கலைக்கழகத்தில் தமிழ் மரபு அறக்கட்டளை கிளை அமைத்து செயல்படுவதை பல்கலைக்கழகம் வரவேற்கின்றது எனக் கூறினார்.
இதனைத் தொடர்ந்து த.ம.அவின் பேராசிரியர்.நா.கண்ணன் “அயலகத் தமிழர் வரலாறும் இலங்கைத் தமிழர்களும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.
”இலங்கைத் தமிழர் வரலாற்றினை ஆவணப்படுத்தலின் தேவைகள்” என்ற தலைப்பில் இந்த நிகழ்வின் நோக்கவுரையை வழங்கி தமிழ் மரபு அறக்கட்டளையின் இலங்கைக்கிளை அமைப்பைத் தொடக்கி வைத்தார் த.ம.அ தலைவர் கலாநிதி க.சுபாஷிணி.
யாழ் பல்கலைக்கழகத்தின் தகைசால் பேராசிரியர் சிவலிங்கராஜா அவர்கள் கருத்துரை வழங்கினார்.
நிகழ்ச்சியின் தொகுப்புரையை வழங்கினார் த.ம.அ செயற்குழு உறுப்பினர் எழுத்தாளர் மதுமிதா.
நன்றியுரை வழங்கி நிகழ்ச்சியை நிறைவுக்குக் கொண்டு வந்தார் வரலாற்றுத்துறை பேராசிரியர் திருமதி.சாந்தி அருளானந்தம்.
மதிய நிகழ்வுகள்
******************
கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியின் கலாச்சார விழா மதியம் 2லிருந்து 5 வரை நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழ் மரபு அறக்கட்டளையின் குழுவினர் முனைவர்.க.சுபாஷிணி, முனைவர்.நா.கண்ணன், எழுத்தாளர் மதுமிதா ஆகியோர் உரையாற்றினர்.
மாலை 6 மணிக்கு புன்னாலைக்கட்டுவன் கிராமத்தில் செயல்படும் சனசமூக நிலையத்திற்குத் த.ம.அ வின் முனைவர். க.சுபாஷிணி, எழுத்தாளர் மதுமிதா ஆகியோர் வருகை புரிந்தனர். போரினால் முற்றிலும் சேதமடைந்த இக்கிராமத்தை மீட்டெழுப்பும் பணியில் இங்குள்ள சமூக அமைப்பான ஸ்ரீ துர்கா அமைப்பும், இலங்கை ஐயை குழுமமும் செயல்படுகின்றனர். காலை நேர, மாலை நேர வகுப்புக்களை இவர்கள் இலவசமாக நடத்தி வருகின்றனர். தேசிய அளவில் பளு தூக்கும் போட்டியில் வெற்றி பெற்ற இக்கிராமத்தைச் சேர்ந்த தனுசியாவையும், ஆசிரியர்களையும் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு செய்து கவுரவித்தனர்.
மாலை 7 மணிக்கு இணுவில் பொது நூலக சனசமூக நிலையத்திற்கு த.ம.அ குழுவினர் சென்றிருந்தோம். நூலகத்தின் சேகரத்தை பார்வையிட்டதோடு நூலகத்தின் செயல்பாடுகள், அதன ஆரம்பகால வரலாறு பற்றி கேட்டறிந்து பதிவு செய்தோம்.
-சுபா
சர் பொன் இராமநாதன் அவர்கள் ஏற்படுத்திய கல்லூரிக்கு இன்று சென்றிருந்தோம். இந்த வளாகத்தில்,
-பெண்கள் கல்லூரி
-இராமநாதன் இல்லம்
-சமாதி கோயில்
-அலுவலகம்
ஆகியன உள்ளன.
சர்.பொன்.இராமநாதன் அவர்கள் ஆண்களுக்கான பரமேஸ்வரா ( இன்னாளைய யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) கல்லூரியும் பெண்களுக்காக இக்கல்லூரியையும் உருவாக்கினார். அவரைப் பற்றியும் இக்கல்லூரி பற்றியும் விரிவான பேட்டி பதிவு ஒன்றினைச் செய்துள்ளோம்.
யாழ்ப்பாணத்திற்கான 4 நாள் பயணம் மிகச் சிறப்பாக அமைந்தது. இந்தப் பயணத்தில் எங்களுக்கு எல்லா வகையிலும் ஏற்பாடுகளில் உறுதுணையாக இருந்து செயலாற்றிய தோழர் வலண்ரீனா இளங்கோவன் அவர்களுக்கும் எங்களை மிகுந்த அன்புடன் கவனித்து உபசரித்ததோடு ஏராளமான வரலாற்று ஆய்வுத்தகவல்களை நம் பதிவுகளுக்காக வழங்கிய பேரா.முனைவர்.புஷ்பரட்ணம் அவர்களுக்கும் எங்கள் உளமார்ந்த நன்றி.
அடுத்த சில நாட்கள் மலையகத்தில்.
வணக்கம் நண்பர்களே. ப்ராங்பர்ட் விமான நிலையத்திலிருந்து தமிழகம் புறப்படுகிறேன். அடுத்த சில வாரங்கள் மின்னஞ்சல் பார்க்க வாய்ப்பு மிகக்குறைவு. குழும செய்திகளைப் பார்ப்பதற்கும் நேரம் குறைவாக அமையலாம்.வலைப்பக்க அப்டேட் தொடர்பான அனைத்து தேவைகளுக்கும், மின்தமிழ் தொடர்பான தகவல்களுக்கும் முனைவர் தேமொழியைத் தொடர்பு கொள்க!சந்திக்க வாய்ப்பமைந்தால் தமிழகம் / பினாங்கு / இலங்கையில் நேரில் சந்திப்போம்.அன்புடன்சுபா
மலையகம் பற்றி...சில தகவல்கள்.
நூ த லோ சுமயிலைஇன்று காலை 9:30 மணிக்கு சென்னை எத்திராஜ் கல்லூரியில் த.ம.அ ஏற்பாட்டில் கைத்தறி அணிவோம் நிகழ்வு நடைபெற் றது. நகரிலேயே வாழ்பவன் என்னும் நிலயில் ஆர்வமுள்ளோன்னாக கலந்து கொண்டேன்கைத்தறி பற்றிய விழிப்புணர்வு, நூல் தயாரிக்கும் முறை, நெசவாளர்களின் உரைகள், கைத்தறி சேலை பவனி.. என பல அம்சங்கள் இந்த நிகழ்ச்சி நிரலில் கண்டவாறே நடை பெற் றன
நகரின் மிக மிக நாகரீக மாக உடையணியும் கல்லூரி மாணவிகளிடை தமிழர் பா ரம்பரை புடைவை பற்றி மீட்டுணர்வு ஏற்படுத்தும் வகையில் கருத்துரைகளுக்கும் முப்பரிமாண உலகில் சில கல்லூரி மாணவிகளின் 18 பேரின்அன்னநடை நிகழ்ச்சியும் நடைபெற்றாது மிகவும் பாராட்டத்தக்கதாக அமைந்ததுஉலக அழகிகள் போட்டியில் உள்ளதுபோல் பங்குபெற்றோரி ன் அழகு நளினம் மட்டுமல்லஅவர்களின் உண்மை அறிவு முதிர் ச்சி நிலையம் கணக்கில் கொண்டு திரு மதி சுபா அவர்கள்நீதிபதியாக இருந்து பரிசளித்தமை மிக சிறப்பாக இருந்ததுஅன்னநடை பயின்றவர்கள் எல்லோ ரும் ஒருமுகமாக இடங்கலையாகவே புடைவைகளைஅணிந்தது வந்தது சிறப்பானதாக அமைந்தது கண்டேன் என்றால் மிகையாகாது அந்த நளினஅன்னநடை எ ல்லாம் என கருவியில் இருந்தாலும் அவைகள் இங்கு வைக்க ஜிமடலின் இணைப்பு நிலைஇடம்தகராது எனினும் ஒவ்வொருவராகவந்து கைத்தறி பருத்தி ஆடைகளின் மீதுதா ங்கள் கொண்டுள்ளஅறிவுநிலை கருத்துக்களை பகிர்ந்து ஒன்றே பரிசுக்கு முடிவாயத்தில் முதல் நிலை பெற்றதால் அவைகளைமட்டும் மற்றவற்றுடன் காணலாம்என்னுடைய கருவியின் தரம் என்னால் முடிந்தவரை கொடுத்துள்ளேன் இணைப்பினுக்காக குறைக்கப்பட்ட தரத்தினுக்கு மன்னிக்க
காணொளி: https://www.youtube.com/watch?v=57pVWtSE6AY
30,31-10.2018
இரண்டு நாட்கள் மலையகப் பகுதிகளின் பல்வேறு பகுதிகளில் தமிழ் மரபு அறக்கட்டளை வரலாற்றுப் பதிவுகளைச் செய்தோம். அதில் குறிப்பாகச் சில தகவல்கள்:
கி.பி 19ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து இலங்கைக்குக்கு வந்த தமிழ் மக்கள் இராமேஸ்வரம் வழியாக மரக்கலங்களில் பயணித்து பின்னர் மன்னார் வந்தடைந்து அங்கிருந்து கால் நடையாகவே மலையகம் வரை வந்திருக்கின்றனர். இது மிகக்கடினமான ஒரு பாதை. ஆயிரக்கனக்கான உயிரிழப்புக்கள் இதன் போது நிகழ்ந்திருக்கின்றன. அப்படி வந்த தமிழ் மக்கள் வந்து ஒன்று கூடிய முக்கிய இடமாக “மாத்தளை” கருதப்படுகின்றது.
எங்கள் பயணத்தில் மாத்தளைக்குச் செல்ல கால அவகாசம் கிட்டவில்லை. ஆயினும் ஹட்டன், நுவரலியா, பத்தனை, வட்டகொட, நியூ பீக்கோக் எஸ்டேட், சோகம் எஸ்டேட், புஸ்ஸல்லாவ மற்றும் அதன் அருகாமை கிராமங்களில் எங்கள் பதிவுகளை மேற்கொண்டோம்.
எமது பதிவில் கண்ட சில முக்கியக் கூறுகள்:
-மலையகத்தமிழர்களின் முக்கிய தொழிலாக அமைவது தேயிலைத் தோட்டத்தைச் சார்ந்ததாகவே அமைகின்றது.
-ஆண்களும் பெண்களும் சலிக்காது உழைக்கின்றனர்.
-பெருமாபாலான தேயிலைத் தோட்டங்களின் உரிமையாளர்களாக ஆங்கிலேயர்களும், இந்தியர்களும், சிங்களவர்களும் இருக்கின்றனர்.
-மலையகத்தமிழ் மக்களின் பொதுப்பிரச்சனையாக அமைவது தங்களுக்கு சொந்த வீடு இல்லாமையும், ஓய்வூதியச் சலுகைகள் ஏதும் இல்லாமையும், போதிய மருத்துவ வசதிகள் இல்லாமையும் எனலாம்.
-இஸ்லாமியர்கள் தமிழ் மக்களோடு சேர்ந்து வாழ்கின்றனர். சிங்களவர்கள், இஸ்லாமியர்கள், மலையகத் தமிழர்கள் அனைவரிடையே நட்புணர்வு வெளிப்படுகின்றது. தமிழ் பேசும், எழுதும் சிங்களவர்கள் சிலரை தோட்டங்களில் நேரடியாகக் கண்டு உரையாட முடிந்தது.
-பெரும்பாலான தமிழ் மக்கள் சிங்கள மொழியும் பேசுகின்றனர்.
-தமிழ் மக்கள் வழிபடும் தெய்வங்களாக, பிள்ளையார், மாரியம்மன், முருகன் ஆகிய தெய்வங்களின் கோயில்கள் அதிகமாக உள்ளன.
-யாழ்ப்பாணத்தில் ஊருக்கு ஊர் நூலகங்களைப் பார்த்தோம். ஆனால் மலையகப் பகுதியில் நூலகங்களை அதிகம் காண முடியவில்லை. அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சனைகளே இங்கு அதிகமாக மக்களை வாட்டும் நிலை இருப்பதால் இந்த நிலையோ என எண்ணத் தோன்றுகிறது.
-மலையகம் முழுமையுமே தூய்மையாக உள்ளது.
-தமிழக வகை உணவுகளை இங்கே கடைகளில் காண்கின்றோம்.
-தமிழ்ப்பள்ளிகள் அனைத்துமே “வித்யாலயா” என்ற சமஸ்கிருத பெயருடனேயே வழக்கில் உள்ளன. தமிழகத்தில் 1950களின் காலகட்டத்து மணிப்பிரவாள் நடைபோல பல சமஸ்கிருத பயன்பாடு இருப்பதை இலங்கையில் காண்கிறேன்.
-பேருந்து பயணங்கள் ஒரு கிராமத்திலிருந்து மற்றொரு கிராமத்திற்குச் செல்லும் முக்கிய போக்கு வரத்துச் சாதனமாக உள்ளது.
-தோட்டத்தில் தேயிலைப் பறிக்கும் தொழிலில் தமிழ்ப்பெண்களே அதிகம் ஈடுபடுகின்றனர். கால்களில் அட்டை கடித்து துன்பப்படுவது என்பது அவர்களது வாழ்க்கையின் இயல்பான ஒன்றாகவே ஆகிவிட்டதால் பலரது கால்விரல்கள் மிக மோசமான நிலையில் இருப்பதைக் கண்டோம்.
-இன்று நமக்குக் கிடைக்கின்ற பல ப்ரேண்ட்களில் உள்ள தேயிலைகளை உருவாக்கி நமக்குச் சுவையான தேநீரை வழங்குபவர்களாக இலங்கை மலையகத் தமிழர்கள் இருக்கின்றார்கள் என்பதை நினைவு கூற வேண்டியது அவசியம்.
தோட்டத்தொழிலாளர்களின் வாழ்க்கை மேம்பாடு அவர்களது கல்வி மேம்பாட்டினால் மட்டுமே சாத்தியப்படும்!
-முனைவர்.க.சுபாஷிணி
____________________________________________
இன்று கண்டி பேராதனைப் பல்கலைக்கழகத்தின் நூலகத்துறை அதிகாரிகளுடன் ஒரு சந்திப்பு நிகழ்ந்தது. நூலகர் திரு.மகேஸ்வரனின் திடீர் ஏற்பாட்டில் எங்கள் உரை நிகழ்வு நிகழ்ந்தது.
அனைவரும் சிங்களவர்கள். அவர்களுடன் ஆவணப்பாதுகாப்பில் தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னாக்க செயல்பாடுகள் பற்றி உரையாடினோம்.
_____________________________________
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/jKm9M8QOJko/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.
கொழும்பு நகரில் இன்று..
ஆதவன் தொலைக்காட்சிக்காக நேருக்கு நேர் நிகழ்ச்சிக்காக ஒரு பேட்டி..
தோழர் திவ்யா வீட்டில் விடைபெற்ற போது..
இன்று தமிழகம் திரும்புகிறேன்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
2.10.2018
பேராதனைப் பல்கலைக்கழக வளாகத்தில் எங்களின் இந்த காலைப்பொழுது தொடங்கியது. அங்கு விருந்தினர் தங்கும் விடுதியில் தங்கியிருந்தோம். காலை உணவுக்கு மாணவர்கள் வந்து பசியாறும் பகுதிக்குச் சென்றோம். இதுவரை நான் பெயர் கேள்விப்படாத பல பலகார வகைகளை அங்கு காண முடிந்தது. அதில் சோயா தோசையும் சில பலகாரங்கரங்களையும் வாங்கி சுவைத்தோம்.
17,000 மாணவர்கள், 3000 ஆசிரியர்கள், 2400 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்ட வளாகம் பேராதனை பல்கலைக்கழகம்.
எங்களின் பெரும்பாலான நேரம் பேராதனைப் பல்கலைக்கழக நூலகத்திலேயே கழிந்தது. தமிழ் நூல் பகுதிக்குச் சென்றிருந்தோம். தமிழ் நூல்கள், சஞ்சிகைகள் தொகுப்பினைப் பார்வையிட்டோம்.
பேராதனைப் பல்கலைக்கழக நூலகத்தில் சிங்கள நூலக ஊழியர்களுக்கு ஆவணப்பாதுகாப்பில் தொழில்நுட்ப பயன்பாடு தொடர்பாக ஆங்கிலத்தில் உரையாற்றினோம்.
பேராதனைப் பல்கலைக்கழக நூலகத்தின் அரிய சேகரிப்பில் உள்ள ஓலைச்சுவடிகளை நேரில் கண்டோம். நூலகத்தின் அடித்தளத்தில் உள்ல பாதுகாப்பு அறைக்கும் திரு.மகேஸ்வரன் அவர்களுடன் சென்று அங்குள்ள பாதுகாக்கப்படும் நூல்களைப் பார்வையிட்டோம்.
இலங்கையில் பதிப்பிக்கப்படும் வெளியிடப்படும் ஒவ்வொரு நூலின் 5 படிவங்கள் 5 பகுதிகளுக்குச் சென்று பாதுகாக்கப்பட வேண்டும் என்பது இலங்கை அரசு ஏற்படுத்தியுள்ள சட்டம். அந்த ரீதியில், வெளியிடப்படும் ஒவ்வொரு நூலின் ஒரு படிவம் பேராதனைப் பல்கலைக்கழக நூலகத்தின் சேகரப்பிற்காக இணைக்கப்படுகின்றது.
மதியம் கண்டி முத்தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் எனது உரை நிகழ்ச்சி ஏற்பாடாகியிருந்தது. நடனமாடிய சிறுமிகளின் பாவனையும் நடன அமைப்பும் மனதை விட்டு அகலவில்லை. நிகழ்ச்சிக்குத் தலைமையுரையாற்றிய கலாநிதி துரை மனோகரன் அவர்களின் அருமையான வழிகாட்டுதலில் இந்த அமைப்பு சீரிய செயல்பாடுகளை முன்னெடுக்கின்றது.
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் இங்கு கண்டியில் தான் பிறந்தவர் என்ற கூடுதல் செய்தியையும் அறிந்து கொண்டேன். முத்தமிழ்ச்சங்கத்தின் செயற்குழு மென்மேலும் சிறப்புடன் செயல்பெற தமிழ் மரபு அறக்கட்டளையின் நல்வாழ்த்துக்கள்.
கண்டியில் தமிழ் மரபு அறக்கட்டளையின் நிகழ்வுகளை ஏற்பாடு செய்ததோடு சிறந்து விருந்துபசரிப்பையும் வழங்கிய பேராதனை பல்கலைக்கழக நூலகர் திரு.மகேஸ்வரன் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றி.
3.11.2018
26ம் தேதி அக்டோபர் தொடங்கி இன்று வரை இலங்கையில் 9 நாட்கள் எனக்கு பல்வேறு புதிய அனுபவங்களை அளித்தது. பயணத்தில் தமிழ் மரபு அறக்கட்டளைக்கானப் பணிகளின் திட்டங்கள் பலரது ஒத்துழைப்பாலும் உழைப்பாலும் சிறப்பாக தொடக்கம் கண்டிருக்கின்றது. புதிதாக அறிமுகமானாலும் கூட, பேஸ்புக் பக்கத்தில் மட்டுமே பார்த்திருந்தாலும் கூட, என்னைக் காணத் தேடி வந்து பேசி என்னை அன்பில் ஆழ்த்திய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை சமர்ப்பிக்க வேண்டியது என் கடமை. அதில் சிலரது செயல்பாடுகள் த.ம.அ இலங்கை கிளை அமைப்பின் வளர்ச்சிக்கும் உதவுவதால் அவர்களைப் பெயர் குறிப்பிட்டு வாழ்த்த விரும்புகிறேன்.
ஆசிரியை வாலண்ரீனா – யாழ்ப்பாணத்தில் த.ம.அ குழுவினருக்குப் பலவகையில் எல்லா ஏற்பாடுகளிலும் உறுதுணையாக இருந்தவர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேரா.கலாநிதி புட்பரத்தினம் – இலங்கை வரலாற்றினை ஆவணப்படுத்துதலில் ¬வரலாற்றுத் தகவல்களை வழங்கியதோடு எங்கள் பயணத்தின் முக்கிய நோக்கமாகிய த.ம.அ இலங்கை கிளை அமைப்பை உறுதி செய்தி செயல்படுத்தியவர்.
மலையகத்தில் த.ம.அ குழுவினரை வரவேற்று எங்களுக்குத் தேவையான சில தகவல்களை வழங்கியவர் ஹட்டன் பகுதி திரு.தியாகு.
ஹட்டன் பகுதியிலிருந்து வல்லக்கோட்ட பகுதிக்கு களப்பணி சென்றபோது எங்களுக்கு ஆட்டோ ஓட்டி வந்த தம்பி நிஜாம். எங்களில் ஒருவராகவே இணைந்து கொண்டு அவரும் மின்னாக்கத்தில் ஈடுபட்டது, காரணம் தெரிந்தால் பொதுமக்களும் ஆவணப்படுத்துதலில் ஆர்வம் காட்டுவார்கள் என்பதற்குச் சான்றாக அமைந்தது.
கண்டியில் மட்டுமே முதலில் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடாகியிருந்தாலும் எனது நூலகம் மட்டும் அருங்காட்சியகம் தொடர்பான ஆர்வத்தை அறிந்து கொண்டு தக்க தகவல்களை வழங்கிய பேராதனைப் பல்கலைக்கழக நூலகர் இரா. மகேஸ்வரன். எல்லா வகையிலும் முற்றும்முழுமையுமாக உதவியதோடு பல புதிய நண்பர்களையும் நமக்கு அறிமுகப்படுத்தி வைத்தவர்.
வட்டக்கொடை ராஜசேகர் அவர்கள் – தனிமனிதராக ஆவணங்களைச் சேர்த்துத் தொகுப்பதில் ஆர்வம் கொண்டவர். அவரது சேகரிப்பில் உள்ள ஆவணங்களை த.ம.அ பொது மக்களின் நலனிற்காக மின்னாக்கம் செய்து வெளியிடலாம் என பொது நலச் சிந்தனையுடன் எங்களை வரவேற்று தகவல் பரிமாறிக் கொண்டார்.
கண்டியில் சந்தித்த தம்பி லக்ஷ்மணன். மலையக மக்கள் நலனில் அக்கறை கொண்டு செயல்படும் சமூகச் சேவையாளர்.
நியூ பீக்கோக் பகுதி மலையக மக்களின் வாழ்வியல் அருங்காட்சியகத்தின் சந்தனம் சத்தியநாதன். இவர் போன்றவர்கள் தான் மலையக மக்களின் வரலாற்றை இன்று உலகிற்கு வெளிச்சப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
கொழும்பு நகரில் திவ்யா, ஐயா மற்றும் அம்மா விமலேந்திரன் குடும்பத்தினர். கொழும்பு நகரில் எங்களை வரவேற்று பாதுகாத்து பத்திரமாக அனுப்பி வைத்த அன்புள்ளங்கள்.
கொழும்பு திரு.யோகராஜ், திரு.இராமன் – தக்க நேரத்தில் எங்களை இரவில் வரவேற்று பத்திரமாக அனுப்பி வைத்த சகோதரர்கள். திரு.யோகராஜ் ஏற்பாடு செய்து அனுப்பிய ஆட்டோ ஓட்டுநர் – அவருடன் பயணித்த பொழுதுகளில் கொழும்பு மக்களின் மனம், அவர்களின் ஒற்றுமை பற்றி அறிய முடிந்தது.
நேற்று இரவு பேருந்தில் சந்தித்த திரு.உமா மகேஸ்வரன் – நமது பணிகளில் ஆர்வம் கொண்டு அவர் கூறியவை..
துவாரகியின் அன்பு இனிமை.
இன்று இறுதியாக எங்களை கொழும்பு நகரிலிருந்து ரமாடா ஹோட்டல் வரை அழைத்து வந்த சிங்கள ஆட்டோ ஓட்டுநர்…..
இப்படி பட்டியல் போட்டுக் கொண்டே செல்லலாம்.
இலங்கையில் நான் சந்தித்த மக்கள் - தமிழ்மக்கள், சிங்களவர், இசுலாமியர் அனைவருமே எங்களுடன் அன்புடனும் அக்கறையுடனும் பழகினர்.
பல்வேறு புதிய அனுபவங்களை சுமந்து சென்னை பயணிக்கின்றேன். மீண்டும் விரைவில் சந்திப்போம்.
“மதங்கள் துறந்து மனிதம் பிறக்கட்டும்
அன்பும் அறனும் ஓங்கட்டும்”
-சுபா
_____________________________________________________
முதன் முதலாக தமிழகத்தில் தீபாவளியை நேற்று கொண்டாடினேன். கோயில் வழிபாடு சுவை மிகுந்த உணவு நண்பர்களின் வாழ்த்துக்கள் பட்டாசு சத்தம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மாலை நேர பட்டாசு வேடிக்கை இந்த ஆண்டு தீபாவளி குதூகலமாக அமைந்தது.
பட்டாசுகளை வெடித்த பின்னர் அதன் குப்பைகளைப் பொருட்படுத்தாது மக்கள் செல்வதை பார்த்தேன். ஓரிரு வீடுகளில் மட்டும் பட்டுச் சேலை கட்டிய பெண்மணிகள் வீட்டு வாசல்படி தெருவையும் கூட்டி தூய்மைப்படுத்தினர். பல இடங்களில் சாலையில் துப்புரவு தொழிலாளர்கள் ஆங்காங்கே தங்கள் பணியைத் தொடங்கியதையும் கண்ணுற்றேன்.
துப்புரவு தொழிலாளர்களுக்கு அவர்கள் அன்றாடம் செய்கின்ற பணிகளை விட கூடுதல் பணி தான். அதைவிட வெடிக்காத சில பட்டாசுகள் சாலையைப் பெருக்கும் போது வெடித்தால் அது அவர்களின் உடலில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்ற அச்சமும் எனக்கு இருந்தது.
கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு வெடிச்சத்தம் மற்றும் காற்றில் மாசு குறைவு என்று நண்பர்கள் கூறிக் கொண்டனர் . இது ஒரு நல்ல அறிகுறியே. வருகின்ற ஆண்டுகளில் பட்டாசு வெடிப்பவர்கள் தாங்களே சாலைகளையும் தூய்மைப் படுத்தி விட்டால் மகிழ்ச்சிக்கு மகிழ்ச்சி... தூய்மைக்குத் தூய்மை..என்ற நிலையும் ஏற்படும்.
-சுபா
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/jKm9M8QOJko/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தில் வரலாற்றுத்துறையால் ஒழுங்குபடுத்தப்பட்ட “தமிழ் மொழியும் தமிழ்மொழி சார்ந்த மரபுரிமைகளும்” என்ற தலைப்பில் கடந்த (29.10.2018) அன்று நடைபெற்ற பயிலரங்கம் இலங்கைத் தமிழரின் மரபுரிமை அடையாளங்களைச் சர்வதேச அளவில் எடுத்துச் செல்லும் தொடக்கப்புள்ளியாக அமைந்தது.
....
அவற்றுள் இலங்கைக்கான தமிழர் மரபுரிமை மையத்தின் கிளையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நிறுவுவதற்கு அவர்கள் எடுத்த தீர்மானம் எமது பல்கலைக்கழகத்திற்கு கிடைத்திருக்கும் மிகப் பெரிய அங்கிகாரமாகப் பார்க்கிறேன். இப்பல்கலைக்கழகத்துடன் இணைந்து கிழக்கிலங்கை, தென்கிழக்கு, கண்டி, கொழும்பு ஆகிய பல்கலைக்கழகங்களும், மலையகம் உட்பட இலங்கையிலுள்ள பொது அமைப்புக்களும், மரபுரிமை ஆர்வலகர்களும் ஒன்றிணைந்து செயற்படும் வகையில் இலங்கைக்கான சர்வதேச தமிழ் மரபுரிமை மையத்தின் கிளை நிறுவனம் உருவாக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தில் வரலாற்றுத்துறையால் ஒழுங்குபடுத்தப்பட்ட “தமிழ் மொழியும் தமிழ்மொழி சார்ந்த மரபுரிமைகளும்” என்ற தலைப்பில் கடந்த (29.10.2018) அன்று நடைபெற்ற பயிலரங்கம் இலங்கைத் தமிழரின் மரபுரிமை அடையாளங்களைச் சர்வதேச அளவில் எடுத்துச் செல்லும் தொடக்கப்புள்ளியாக அமைந்தது.

இப்பயிலரங்கிற்கு ஜெர்மனியைத் தலமையகமாகக் கொண்டு இயங்கும் “சர்வதேச தமிழ் மரபுரிமைமையத்தின்” நிறுவனரும், தலைவருமான கலாநிதி சுபாஜினி, பேராசிரியர் நாரயணன் கண்ணன், திருமதி மதுமிதா ஆகியோர் வருகை தந்து பெறுமதியான கருத்துரைகளை வழங்கியமை இப்பயிலரங்கின் முக்கிய நிகழ்வாக இருந்தது.
இந்நிகழ்வை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடாத்துவதில் துணைவேந்தர் பேராசிரியர் ஆர்.விக்னேஸ்வரனும், கலைப்பீடாதிபதி கலாநிதி சுதாகர் அவர்களும் மிகுந்த அக்கறை காட்டியதுடன் அதற்கு வேண்டிய உதவிகளையும் வழங்கியிருந்தனர்.
இந்நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மற்றும் கிழக்கிலங்கைப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறையின் ஆசிரியர்களும், மாணவர்களும், கலைப்பீட ஆசிரியர்கள் மற்றும் யாழ்ப்பாண தொல்லியற் திணைக்கழக மற்றும் மத்திய கலாசார நிதிய ஆய்வு உத்தியோகத்தர்கள் உட்பட 200 க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டமை தமிழரது மரபுரிமைகளைப் பாதுகாக்கவேண்டும் என்பதில் அவர்கள் கொண்டிருந்த ஆர்வத்தையும், அக்கறையையும் காட்டுவதாக இருந்தது.
இந்நிகழ்வில் தொடக்க உரைநிகழ்த்திய பதில் துணைவேந்தர் பேராசிரியர் மிகுந்தன், முன்னாள் தமிழ்த்துறைத் தலைவரும் மூத்த பேராசிரியருமான சிவலிங்கராஜா, கலைப்பீடாதிபதி கலாநிதி சுதாகர் ஆகியோரின் ஆழமான கருத்துக்கள் தமிழர்களின் மரபுரிமைகளின் சிறப்புக்களையும், அவற்றை பாதுகாத்து ஆவணப்படுத்துவதில் பல்கலைக்கழகங்களுக்கு இருக்கவேண்டிய கடமைப்பாடுகளையும் வெளிப்படுத்துவதாக இருந்தன.
இலங்கை சுதந்திரமடைந்த காலத்தில் இருந்து யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு வெளிவந்த வெகுசாதனத் தொடர்புச் சாதனங்கள் இலங்கைத் தமிழரின் பாரம்பரிய பண்பாட்டுச் சின்னங்களும், மரபுரிமை அடையாளங்களும் மறைந்து வருகின்றன.
அவை குறைந்த விலைக்கு விற்கப்பட்டு பிற இடங்களுக்கும், பிற நாடுகளுக்கும் கடத்தப்படுகின்றன என்ற செய்திகளை வெளிப்படுத்தி வந்தன. அச்செயற்பாடுகள் 2009 ஆண்டின் பின்னர் மிகத் தீவிரமாக நடைபெற்று வருவதை நாம் அறிவோம். இவற்றைத் தடுப்பதற்கும் மக்களிடையே மரபுரிமைகளைப் பாதுகாக்கும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தவும் சில முயற்சிகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறையாலும், பொது நிறுவனங்களாலும் எடுக்கப்பட்டாலும் அவை யாழ்ப்பாணத்தை மையப்படுத்திய சிறிய முயற்சியாகவே இருந்து வருகின்றது.
இந்நிலையில் ஜேயர்மனியைத் தலமையகமாகக் கொண்ட சர்வதேச தமிழ் மரபுரிமை மையத்தின் செயற்பாடுகள் மலேசியா, சிங்கப்பூர், தமிழ்நாடு போன்ற நாடுகளில் வாழும் தமிழர்களின் பாரம்பரிய பண்பாட்டு அடையாளங்களை மட்டுமன்றி ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழர்கள் பின்பற்றும் பாரம்பரியங்களையும், மாறிவரும் பாரம்பரிய பண்பாட்டு அம்சங்களையும், கண்டறிந்து அவற்றைச் சமகால நவீன தகவல் தொழில்நுட்பச் சாதனங்கள் ஊடாக ஆவணப்படுத்துவதை நோக்காகக் கொண்டு செயற்பட்டு வருகிறது. பேராசிரியர் கண்ணன், கலாநிதி சுபாஜினி ஆகிய இருவரின் தனிப்பட்ட முயற்சியால் ஆரம்பிக்கப்பட்ட இச்சர்வதேச தமிழ் மரபுரிமை மையத்தின் செயற்பாடுகள் இன்று உலகத் தமிழர் மத்தியில் அவர்களுக்கு புதிய முகவரியைத் தேடிக்கொடுத்திருப்பதை அவர்களின் இலங்கை வருகையின் பின்னர் முகநூல்களில் வெளிவந்து கொண்டிருக்கும் பாராட்டுச் செய்திகள் உறுதி செய்கின்றன. அவற்றுள் இலங்கைக்கான தமிழர் மரபுரிமை மையத்தின் கிளையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நிறுவுவதற்கு அவர்கள் எடுத்த தீர்மானம் எமது பல்கலைக்கழகத்திற்கு கிடைத்திருக்கும் மிகப் பெரிய அங்கிகாரமாகப் பார்க்கிறேன். இப்பல்கலைக்கழகத்துடன் இணைந்து கிழக்கிலங்கை, தென்கிழக்கு, கண்டி, கொழும்பு ஆகிய பல்கலைக்கழகங்களும், மலையகம் உட்பட இலங்கையிலுள்ள பொது அமைப்புக்களும், மரபுரிமை ஆர்வலகர்களும் ஒன்றிணைந்து செயற்படும் வகையில் இலங்கைக்கான சர்வதேச தமிழ் மரபுரிமை மையத்தின் கிளை நிறுவனம் உருவாக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
**மின்னாக்கப் பணிக்கு பணியாளர்கள் தேவை**
(தமிழகம் - புதுக்கோட்டை பகுதியில்)
தமிழ் மரபு அறக்கட்டளையின் சார்பில் புதுக்கோட்டையில் நூல்களை மின்னாக்கம் செய்வதற்கான பணியாளர்கள் தேவை. இந்தப் பணி ஒரு வருட காலம் நீடிக்கும். தகுந்த மாத ஊதியம் வழங்கப்படும்.
கல்வித்தகுதி: அடிப்படை கணினி பயன்பாடு, தமிழும் ஆங்கிலமும் வாசிக்கவும் கணினியில் பயன்படுத்தவும் தெரிந்திருக்க வேண்டும். புதிதாக கல்லூரியில் இளங்கலை கல்வியை முடித்த மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
பணியாளர்கள் புதுக்கோட்டையிலேயே இப்பணியைச் செய்ய வேண்டியுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் myth...@gmail.com என்ற மின்னஞ்சலில் வழியாக தொடர்பு கொள்ளவும். விண்ணப்பிப்பவர்கள் தங்களுடைய சுயவிபர குறிப்புக்களை புகைப்படத்துடன் மேற்காணும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். இந்தப் பணி வருகின்ற 2019ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் தொடங்கி 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை நடைபெறும்.
நாளை திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழ் மரபு அறக்கட்டளையின் இரண்டு நிகழ்ச்சிகள் வெவ்வேறு பகுதிகளில் நடைபெறுகின்றன . காலையில் திருவண்ணாமலை அரசு கல்லூரியில் தமிழ் மாணவர் மரபு மையம் தொடக்க விழா நடைபெற உள்ளது. ஆரணி நகரில் நாளந்தா நாடக குழுவோடு இணைந்து ஒரு கலந்துரையாடல் - பரிசளிப்பு விழா நிகழ்ச்சி நடைபெற உள்ளது . அதன் அழைப்பிதழை கீழே காணலாம். ஆர்வமுள்ளவர்கள் இந்த நிகழ்ச்சிகளில் கலந்து சிறப்பிக்கவும்.
________________________________________________________________
"யாழ்ப்பாண அரச பரம்பரை" - இந்த நூலை எழுதியவர் கலாநிதி குணராசா.
இந்த நூலில் வருகின்ற ஒரு பகுதி,பக்கம் 4,5 .
//எனவே குடிசார் வரலாற்று புவியியல் அடிப்படையில் திராவிட இனத்தின் பாரம்பரிய இலங்கை தனது ஒரு பெரும் பகுதியில் புதியதொரு இனத்தினைச் சேர்த்துக் கொண்ட சம்பவம் கிமு 483 ஆம் ஆண்டு நிகழ்ந்தது. இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் இருந்த லாடா நாட்டின் மன்னன் தன் நாட்டிற்கு உதவாதவர்கள் எனக் கருதிய தன் மகன் சிங்ஹள விஜயனையும் அவனது தோழர்கள் எழுநூறு பேரையும் மரக்கலம் ஒன்றில் ஏற்றி நாடு கடத்தி விட்டான். (மகாவம்சம் பக்கம் 53,54 )அவர்கள் தாமிரபரணி என்ற கொணாநதிக்கும் கதம்பனதிக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் வந்து சேர்ந்தனர் . சிங்கள விஜயனின் வருகையுடன் இலங்கையில் சிங்கள மக்களது தோற்றம் ஆரம்பமானதாக வரலாற்றுச் செய்திகள் கூறுகின்றன. அவை கூறிய செய்திகள் என்னவென்றால் விஜயனும் அவனது தோழர்களும் இலங்கையின் கரையில் இறங்கியபோது இலங்கையில் நாகரிகத்தில் முன்னேறிய ஒரு மக்கள் கூட்டமும் பண்டைய வாழ்க்கை முறையை கைக் கொண்டு வாழ்ந்த ஒரு மக்கள் கூட்டமும் வாழ்ந்து வந்துள்ளன என்பதாம்.//
- சுபா
____________________
தமிழ் நாடகத்தில் பெண் புனைவு..
கலைஞர்களுக்கு விருது வழங்கிய தருணம்.
அண்மைய இலங்கை பயணத்தின்போது மலையக ஊர்களில் ஒன்றான சீதா எலியா நகரில் அமைந்திருக்கும் சீதா அம்மன் ஆலயம் பற்றி நண்பர்கள் பலரும் குறிப்பிட்டிருந்தனர். ராவணனால் சிறை பிடிக்கப்பட்ட சீதை இந்த வனத்தில் தான் அமர்ந்திருந்தார் என்றும் அன்னை சீதாவை காண வந்த அனுமன் இங்குதான் அவரைக் கண்டார் என்றும் இங்குள்ள மக்கள் நம்புகின்றனர் . சீதா அம்மன் ஆலயம் எவ்வாறு அமைந்திருக்கின்றது என்று அறிந்துகொள்ள எனக்கும் அதிக ஆர்வம் ஏற்படவே நுவராலியா வந்த பின்னர் இப்பகுதிக்கு நாங்கள் வந்தடைந்தோம்.
மேலிருந்து பார்க்கும் பொழுது ஒருபொற்கோயில் போல வடிவமைக்கப்பட்ட இக்கோயில் தெரிகின்றது. பின்னே அருவியின் சத்தம் காதுகளுக்கும் கண்களுக்கும் இனிமை சேர்க்கிறது. கோயில் சிறப்பாகவே அமைக்கப்பட்டிருக்கின்றது . சென்று உள்ளே இருக்கும் சீதா அம்மனைக் காண தேடினேன்.
ஆனால் கோயிலில் தனி சன்னதிகளில் சீதைக்கு தனி சன்னதி ஏதும் இல்லை. மூல பிரகாரத்தில் இராமர் சீதை இலக்குவன் சிற்பங்கள் உள்ளன . தனியாக அனுமனுக்கு ஒரு சந்நிதி உள்ளது. ஓரத்தில் பிள்ளையாருக்கு சந்நிதி இருக்கிறது. கோயிலுக்குப் பின்னால் ஓடும் அருவிக்கு மேலே சிறிய அளவில் சீதை அமர்ந்திருக்க கீழே மண்டியிட்டு அனுமன் அவரிடம் உரையாடுவது போன்ற ஒரு காட்சி சிற்ப வடிவில் அமைக்கப்பட்டிருக்கின்றது . ஆனால் கோயில் முழுக்க சீதைக்கு என்று தனியாக ஒரு சன்னிதி இல்லை .
சீதை அம்மன் கோயில் என்று கேள்விப்பட்டபோது இதற்கென்று ஒரு தனி சன்னிதி அமைத்து இக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது என்று நான் எண்ணினேன் . கோயிலுக்குள் தனி சன்னிதி இல்லாதது ஏமாற்றத்தையே அளித்தது . புராணகால சீதை அனுபவித்த துன்பங்கள் சீதையின் வாழ்வின் இறுதிக்காலம் வரை நீடித்தன . புராணத்தில் சீதைக்கு துன்பம் நிறைந்த வாழ்வு.இன்று நிஜத்தில் சீதைக்காண ஒரு பகுதியாக கருதப்படும் இடத்தில் சீதைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இக்கோயிலை அமைத்திருக்கலாம்.
பெயரில் மட்டுமே சீதை அம்மன் கோயில் என இருக்கும் இக்கோயில் ஒரு ராமர் கோயில் தான் என்று மனதில் எழும் எண்ணங்களைத் தவிர்க்கமுடியவில்லை.

-சுபா
திருவண்ணாமலை அரசு கல்லூரியில் கடந்த 10.11.2018 சனிக்கிழமை மாநில அளவில் நடைபெற்ற வரலாற்றுப் பயிலரங்கம் தொடர்பான பத்திரிக்கைச் செய்திகள்.



