
my web page locating address:
|
இமெயில் குழுவில் இணைய...
|
Thanks!
இனி அப்படியே காதலர் தினத்தை எதிர்ப்பவர்களின்
பின்னணி பற்றி கொஞ்சம் பார்ப்போம்...//
ராஜா பர்த்ருஹரி சிருங்கார சதகமும் எழுதினார்;
வைராக்ய சதகமும் எழுதினார்.
கஜுரஹோ ஆலயம் உலகப்புகழ் பெற்றது.
பாரத சமுதாயம் சிருங்கார சதகத்திற்கு நெருப்பு வைக்கவில்லை;
கஜுரஹோ ஆலயத்தைத் தகர்க்கவில்லை.
அதிவீர ராம பாண்டியரைப் பழிக்கவில்லை.
அந்த அந்த இடம் அததற்கு.
பின்னணி ஆராய்ச்சி என்றால் அனைவரின் பின்னணியும்
வெளிவரும்.
தேவ்
அக்கால தமிழ்/இந்திய சூழலில் செமித்தியப் பண்பாட்டின் 'தூய்மை வாதம்'
(puritanical approach) இல்லாமல் இருந்தது. அதனால்தான் திருவாய்மொழி
வியாக்கியானம் பல அந்தரங்கமான விஷயங்களை பொதுவில், அதுவும் கோயிலில்,
அதுவும் இறைவனை வைத்துக்கொண்டு (பெருமாள் உற்சவத்தை விட்டு வியாக்கியானம்
கேட்டிருக்கிறார்) பேசமுடிந்திருக்கிறது.
ஆயிரம் சங்கப்பாடல்களை மேற்கோள் காட்டுவர். ஆனால் அடிமனதில் worst
conservative ஆக இருப்பர். இது எலிசபெத்தியன், இஸ்லாம் தாக்கம். நம்மை
அறியாமலே நம் சங்க வழியிலிருந்து பிறழ்ந்துவிட்டோம்.
மங்களூரில் ஒரு டிஸ்கோவிற்குள் இந்துசேனா புகுந்து ஆடிக்கொண்டிருந்த
பெண்களை வெளியே இழுத்துப்போட்டு அடித்திருக்கின்றனர். வீடியோ பார்த்தேன்.
குமுறியது. ஒரு பக்கம் தேவி என்று கோயிலில் வைத்துக் கும்பிடுகின்றனர்,
இன்னொரு பக்கம் ஆண்கள் விரும்புவதைத்தான் செய்ய வேண்டும் எனும்
ஆணாதிக்கம்! இந்தியா ஒரு முரண்பாட்டு மூட்டையாகிப் போனது.
மேலை நாடுகளைக் குற்றம் சொல்வது வழக்கமாகிவிட்டது இவர்களுக்கு. மேற்கில்
ஏதோ கற்பே இல்லை என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். எனது "நெஞ்சு
நிறைய" கதை படிக்க வேண்டும் இவர்கள். எல்லா உலகிலும் காதல் என்பது
இருமனச் சேர்க்கையாகவே உள்ளது. செக்ஸ் விஷயத்தில் இந்தியாவில் ஆணுக்குரிய
சுதந்திரம் பெண்களுக்கு இல்லை.
தமிழ்ப்பண்பாட்டின் கற்பு என்பதைப் பெண்கள்தான் காக்க வேண்டும் எனும்
ஆணின் எதிர்பார்ப்பு கேலிக்குரியது!
க.>
எது தமிழ் எல்லை? எது தமிழ் இல்லை?
மத உணர்வாளர்கள், அவர்கள் மதத்தைப் பரப்ப
பிறமொழி உணர்வாளர்கள், அவர்கள் மொழியைப் பரப்ப
திரைத்துறையினர்________________________
எது தமிழ் இல்லை? எது தமிழ் எல்லை?
அவரவர் தன் கருத்தைப் பரப்ப மட்டுமே தமிழைப் பயன்படுத்துகின்றனர்.
திரு ரெ,கா. மீண்டும் மன்னிக்க,
"தமிழ் அறிந்தவர் அனைவரும் தமிழர் அல்ல, தமிழர் அனைவரும் தமிழ் அறிந்தவர் அல்ல."
அன்புடன்
.கவி.
--- On Fri, 2/13/09, Kannan Natarajan <thar...@gmail.com> wrote: |
4. Sex decreases aging. "Use it or lose it" has never been more
applicable.
அப்படியெல்லாம் அக்கட்டுரை சொல்லவில்லை. காதலியிடம் உறவு கொள் என்று
சொல்கிறது. சொல்பவள் பெண் எழுத்தாளர்.
'ஆதலினால் காதல் செய்வீர்! வேந்தர் பெருமானே!'
க.>
> கண்ணன் நம் முன்னோர்கள் சிற்றின்பம் தவிர்க்கணும், குண்டலினி எழுப்பணும்
> என்கிறார்கள்.
>
> எதிர்கருத்தாக இருக்கே?
>
ஆகா! வந்திட்டீங்களா ;-)
இரண்டு கருத்தும் இந்தியாவில் உண்டு. யயாதிகளும் உண்டு (இல்லையெனில்
முப்பது கோடி சனங்களுக்கும் என்றிருந்த இந்தியா இன்று 100 கோடி சனங்களாக
எப்படி மாறியது?;-), யோகிகளும் உண்டு.
கலவி என்பது குண்டலியின் குட்டி!! ஒட்டு மொத்தமாகத் தந்தால் இவன் மண்டை
வெடித்து செத்துவிடுவான் என்று தினம் கொஞ்சம் மூலிகை, அதுவும் தேனில்
இழைத்த மூலிகை என்பதே கலவி இன்பம். கலவியும் குண்டலினியே! இக்கட்டுரை
ஆசிரியர் பேசும் அத்துணை நல்லதும் குண்டலினியால் விளைவதே.
சித்தர்களில் ஒரு சாரார் இதை 'வாலைத் தெய்வம்' என்பர். பாரதி கூட
கண்ணனைப் பாடும் போது (கண்ணம்மாவாக பாவித்து) 'வாலைக்குமரியடி கண்ணம்மா,
மருவக்காதல் கொண்டேன்' என்பான்.
கலவி ஆரோக்கியமானது. ஆதலினால் காதல் செய்வீர்!!
க.>
2009/2/15 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
கலவி ஆரோக்கியமானது. ஆதலினால் காதல் செய்வீர்!!
நல்ல கருத்துக்கள்.
சமகால மேலை மருத்துவம் அக்கட்டுரை பேசும் போக்கில்தான் உள்ளது. இந்திய
மருத்துவம் என்ன சொல்கிறது என்று தெரியவில்லை.
இந்த அடக்குவது குறித்து இந்தியா பேசி வருகிறதே தவிர
நடைமுறைப்படுத்தவில்லை என்று தோன்றுகிறது. இந்திய ஜனத்தொகை நிரம்பி
வழிகிறது. கட்டுமானத்துடனான கலவிக்கல்வி இந்தியாவில் இல்லை. மேலை
நாடுகளில் free sex இருந்தாலும் ஜனத்தொகை குறைவாகவே உள்ளது. அங்கு
குடும்பம் என்பது திட்டமிடப்படுகிறது. இந்தியாவில் sex education
இல்லாததால் கட்டுப்பாடற்ற ஜனத்தொகைப் பெருக்கம் நடந்துள்ளது. அங்கு
பிறப்பு என்பது ஒரு விபத்து. திட்டம் அல்ல. எனக்குத்தெரிந்தவரை கல்யாணம்
ஆகும் வரை ஆணும், பெண்ணும் பெரும் அவஸ்தையில் உள்ளார்கள். கல்யாணம்
ஆனவுடன் அது கட்டுக்கடங்காமல் ஓடுவதைக் காண்கிறோம்.
பண்டைய காமன்விழா சரியான நெறிப்படுத்தல் என்றே தோன்றுகிறது. இந்துசேனாக்
குண்டர்கள் தனிம்னைத சுதந்திரத்தில் தலையிடுவது அவர்கள் இந்து
தர்மங்களைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது. நீங்கள்
மிகச்சரியாக சுட்டியது போல் அவர்கள் இந்து 'தாலிபான்' கள்தான்!
க.>
வாரம் இரு முறையாவது முறையான கலவியில் ஈடுபடும் தம்பதிகள்மற்றவரை விட 10 வயது இளமையாக காட்சி அளிக்கிறார்களாம்இது ஒரு மருத்து விஞ்ஞான ஆய்வுகாதல் என்பது அன்பு மட்டுமல்ல காமமும் கூடத்தான்காமம் என்பது இச்சை மட்டும் அல்ல உடல் மனம் பயிற்சியும் தான்அதலினால் காதல் செய்வீர்
வாரம் இரு முறையாவது முறையான கலவியில் ஈடுபடும் தம்பதிகள்மற்றவரை விட 10 வயது இளமையாக காட்சி அளிக்கிறார்களாம்இது ஒரு மருத்து விஞ்ஞான ஆய்வு
குமரன் சொல்வது சரிதான்! மிகவும் வித்தியாசமான கோணம்.
இது குறித்த பரத்தையர் ஆய்வுகள் எம்மொழியிலேனும் உண்டா என்று
தெரியவில்லை. நெத்தியடிக் கேள்வியாகக் கேட்டுவிட்டீர்கள் ;-)
நம்மூர் பரத்தையர் (அக்காலத்து) கர்பமுறாமல் தவிர்க்கும் வழியாது என்பது
ஒரு மருத்துவக்கேள்வி எனக்கு. அதுவொரு தொழில் ரகசியமாக இருந்து
ஒழிந்துவிட்டது போலும். ஒரு மருத்துவமுறை அழிந்துவிட்டது!
க.>
There is an excellent book by Sriram V "The Devadasi and the Saint - The life and times of Bangalore Nagarathnamma" on this subject
|
From: Narayanan Kannan <nka...@gmail.com> |
சில நேரம் ஆச்சர்யமாக இருக்கிறது. அந்தக் காலத்தில் செய்யும் தொழிலே
தெய்வம்! அதில் திறமைதான் நமது மையம்! என்றொரு professionalism
இருந்திருக்கிறது. இப்போது ஏன் அது போய் திருப்பதி மொட்டை போன்ற
கதையாகிவிட்டது என்று தெரியவில்லை;-)
64 கலைகள் கற்றவள் தேவதாசி. அவளுக்கு மருத்துவமும் தெரியும்.
சாதுர்யமாகப் பேசவும் தெரியும். அமெரிக்காவில் பேசப்படும் 'ஹூக்கர்'
எனும் பெண்ணிற்கு 'அதை'த்தவிர ஒன்றும் தெரியாது. எல்லாவற்றிலும் ஒரு கலை
நுணுக்கம் இருந்திருக்கிறது அந்த மண்ணில். அந்த அழகியலை எப்போது நாம்
தொலைத்தோம்? ஏன்?
க்.>
எதைத் தப்பு என்கிறீர்?
அப்படியே எடைபோட்டு விட்டாலும் அதில் என்ன தவறு?
முற்போக்குச் சிந்தனையிலும் பாசாங்கு பிடித்துக் கொள்வதேன்?
தேவ்
வேடிக்கையாக உள்ளது. ஒருதடவை நான் "மறையும் மறையவர்கள்" என்ற நூலுக்கு விமர்சனம் எழுத, அதைத் தாக்கி ஒரு துவேஷி, பொதிகைச் சித்தர் என்ற பெயரில், நான் தேவதாசிகளுக்கு வக்காலத்து வாங்குவ்தாகவும் பிராமண்ர்கள் சத்தியமூர்த்தி காலத்திலிருந்து இதையே செய்து வ்ருவதாகவும் சாடியிருந்தார்! என்க்கு அதைப்பற்றிக் கவலையில்லை; ஆனால் என் எழுத்தைச் சரியாக்ப் புரிந்து கொள்ளாமல் பிராமண்த்துவேஷம் ஒன்றையே கருத்தில் கொண்டு, தாக்குவது நியாயமற்றது என்று மட்டும் தோன்றிற்று. நரசய்யா
|
எப்பொருள் யார், யார் வாய் கேட்பினும்....
என்று உரத்து சொல்லிக்கொண்டே, "பேசுவது யார்? நம்ம சாதிப்பயலா?
வேத்தாளா?" என்று வேண்டியரிடம் கேட்டுக்கொண்டிருக்கும் சமூகம்
தமிழ்ச்சமூகம்!
ஆச்சர்யமாக இருக்கும்! எப்படி சாதீயம் என்பது ஒரு மனிதனனின் உலகு காணலையே
(world view)வக்கிரமாக்கிவிடுகிறது! என்று. இலக்கியம் மனிதனை அவன்
தளைகளிலிருந்து விடுவிக்க வேண்டும. அதைச் செய்யாத இலக்கியம் இலக்கியமே
அல்ல.
தமிழன் போக வேண்டிய தூரம் இன்னும் எவ்வளவோ இருக்கிறது.
மின்தமிழ் தளைகளற்ற ஒரு தமிழ் சமுதாயத்தை உருவாக்கும் மின்னுதாரணமாக
(model) அமைய வேண்டும் என்பது என் எதிர்பார்ப்பு.
மின்வெளிக்குள் வரும் சில பொழுதுகளாவது நமது கசடுகளைக் களைந்துவிட்டு,
புதிய மனிதனாக அவதாரிக்கமுடியுமா? என ஒவ்வொருவரும் யோசிக்க வேண்டும்.
இதுவொரு லீலாவிபூதி. இங்காவது நீங்கள் ஒரு இலட்சிய மனிதனாக வாழமுயலுங்கள்.
நான் பேசுவது யாருக்காவது புரிகிறதா? ;-))
க.>
2009/2/15 kra narasiah <nara...@yahoo.com>:
வேடிக்கையாக உள்ளது. ஒருதடவை நான் "மறையும் மறையவர்கள்" என்ற நூலுக்கு விமர்சனம் எழுத, அதைத் தாக்கி ஒரு துவேஷி, பொதிகைச் சித்தர் என்ற பெயரில், நான் தேவதாசிகளுக்கு வக்காலத்து வாங்குவ்தாகவும் பிராமண்ர்கள் சத்தியமூர்த்தி காலத்திலிருந்து இதையே செய்து வ்ருவதாகவும் சாடியிருந்தார்! என்க்கு அதைப்பற்றிக் கவலையில்லை; ஆனால் என் எழுத்தைச் சரியாக்ப் புரிந்து கொள்ளாமல் பிராமண்த்துவேஷம் ஒன்றையே கருத்தில் கொண்டு, தாக்குவது நியாயமற்றது என்று மட்டும் தோன்றிற்று.நரசய்யா