கலாரசிகனின் இசை உலா!

439 views
Skip to first unread message

Kannan Natarajan

unread,
Dec 16, 2009, 1:53:29 AM12/16/09
to Min Thamizh
மஹா வைத்​தி​ய​நாத சிவன் கர்​நா​டக இசை உல​கின் ஒரு தலைச்​சி​றந்த பாட​கர்.​
ஹரி​கதை வல்​லு​நர் மட்​டு​மன்றி சிறந்த வாகே​ய​கா​ரர் ஆவார்.​
தியா​க​ரா​ஜ​ரின் சிஷ்ய பரம்​ப​ரை​யைச் சேர்ந்​த​வர்.​

1844ல் தஞ்சை மாவட்​டத்​தில் உள்ள வையச்​சேரி என்ற கிரா​மத்​தில் துரை​சாமி அய்​யர் ​(பஞ்​ச​நாத அய்​யர்)​,​​ அருந்​ததி அம்​மா​ளுக்கு மூன்​றா​வது மக​னா​கப் பிறந்த வைத்​ய​நாத சிவன்,​​ 49 ஆண்​டு​களே வாழ்ந்​தார்.​

மு​தன்​மு​த​லாக ஆனை அய்யா அவர்​க​ளி​ட​மும்,​​ பின்பு தியா​க​ரா​ஜ​ரின் நேரடி மாண​வ​ரான மானம்​பூச்​சா​வடி ​(மகா நோன்​புச்​சா​வடி)​ வேங்​க​ட​சுப்​பய்​யர்
அவர்​க​ளி​ட​மும் இசை பயின்​றார்.​

7வது வய​தி​லேயே விஸ்​தா​ர​மாக இராகம் பாடும் திற​னை​யும்,​​ மிக இலாவ​கத்​து​டன் பல்​லவி பாடும் முதிர்ச்​சி​யை​யும் பெற்​றி​ருந்​தார்.​
10வது வய​தில் மூத்த சகோ​த​ரர் இராம​சு​வாமி சிவ​னு​டன் சேர்ந்து கச்​சேரி செய்​யத் தொடங்​கி​னார்.​

இ​யற்​கை​யான சாரீர வசதி படைத்​த​வர்.​ 6 காலத்​தில் அநா​ய​ச​மா​கப் பாடும் திறன் பெற்​றி​ருந்​தார்.​ அய​ராத சாத​கத்​தின் மூலம் அநு​மந்​திர பஞ்​ச​மத்​தில்
இருந்து அதி தாரஸ்​தாயி ஷட்​ஜம் வரை த்ரிஸ்​தா​யி​யில் பாடும் குரலை வளர்த்​துக் கொண்​டார்.​

அ​ரு​மை​யான பிரு​காக்​கள்,​​ தொடர்ந்து பேசும் சாரீ​ரம்,​​ சம்ஸ்​கி​ரு​தத்​தி​லும்,​​ தமி​ழி​லும் பாண்​டித்​யம் பெற்​றி​ருந்​தார்.​ இசை இலக்​க​ணத்​தில் நிபு​ண​ரா​கத் திகழ்ந்​தார்.​
தனது 12வது வய​தி​லேயே "மஹா" பட்​டம் பெற்​ற​வர்.​

சிவன் அவர்​கள் இயற்​றிய காம்​போதி வர்​ணம்,​​ "கெளரி நாயக" எனும் கானடா இராகத்​தில் சிம்​ஹ​னந்​தன தாளத்​தில் அமைந்த தில்​லானா,​​
சங்​க​ரா​ப​ரண இராகத்​தில் "முத்​து​கு​ம​ரய்​யனே" போன்ற பாடல்​கள் காலத்​தால் அழி​யா​தவை.​

அ​வர் இயற்​றிய 72 மேள இராக​மா​லிகா இசை உல​குக்கு ஓர் வரப்​பி​ர​சா​தம்.​ "குஹ​தாச" என்​பது அவ​ரது முத்​திரை.

சுவாதி

நன்றி:- தினமணி

Kannan Natarajan

unread,
Dec 16, 2009, 2:00:51 AM12/16/09
to Min Thamizh

அடுத்த எம்.எஸ்....

சாந்தி ஆர்ட்ஸ் பவுண்​டே​ஷன்ஸ் ஆண்​டு​தோ​றும் ஏதா​வது ஒரு கலை​ஞரை முன்​நி​றுத்தி அவ​ரது நினை​வைப் போற்​றும் விதத்​தில் நிகழ்ச்​சி​களை அமைப்​பது வழக்​கம்.​ போன வரு​டம் ஜி.என்.பி.​ இந்த வரு​டம் எம்.எல்.வி.​

இன்று மைலாப்​பூர் சாஸ்திரி அரங்​கத்​தில் காயத்ரி வெங்​கட்​ரா​க​வ​னின் இசை நிகழ்ச்சி.​ வி.எஸ்.​ முராரி வய​லின்.​ உமை​யாள்​பு​ரம் மாலி மிரு​தங்​கம்.​
குரு​பி​ர​சாத் கடம்.​
 

குத்​தால அரு​வி​யில் குளித்த சுகம் எப்​படி இருக்​கும்?​
 
காயத்ரி வெங்​கட்​ரா​க​வ​னின் கச்​சேரி கேட்​ட​து​போல இருக்​கும்.​ நிஜம்...​ நிஜம்...​ நிஜம்...​
 
என்ன சாரீ​ரம்...​ எப்​ப​டிப்​பட்ட சங்​கீ​தம்...​ எழுதி வைத்​துக் கொள்​ளுங்​கள்...​ இன்​னொரு எம்.எஸ்.​ உரு​வா​கி​றார்!​

"இரஞ்​சனி" வர்​ணத்​தில் தொடங்​கிய நொடியி​லி​ருந்து சுகா​னு​ப​வம்​தான்.​
 
அடுத்​த​தா​கப் புரந்​த​ர​தா​ச​ரின் "வந்தி சுகத" என்​கிற "நாட்டை" இராக சாகித்​தி​யம்.​ அதற்​குப் பிறகு "வசந்தா" இராகத்​தில் தீக்ஷி​த​ரின் "ஹரி​ஹர புத்​ரம்"...​
இராக ஆலா​ப​னை​யும் சரி,​​ ஸ்வ​ரம் பாடிய வித​மும் சரி வார்த்​தை​க​ளால் வர்​ணிக்க முடி​யாத அள​வுக்கு "க்ளாஸ்".​

​ஸ்வ​ரம் பாடும்​போது பஞ்சு மெத்​தை​யில் படுத்து உரு​ளு​வ​து​போல நெரு​டலே இல்​லாத ஒரு செளக்​கி​யம்.​ இதெல்​லாம் சொல்​லிக் கொடுத்து வராது.​
பிற​வி​யில் பெற்ற வரம்!​

"பகு​தாரி"யில் ஜி.என்.பி.யின் சாகித்​ய​மும்,​​ "வீர வசந்​தம்" இராகத்​தில் "ஏமனி பொக​டு​துரா"வும் பாடி​விட்டு,​​ விஸ்​தா​ர​மாக ஒரு "தோடி" பாடி இருக்​கி​றார்.​
இன்​றைக்கு காயத்ரி வெங்​கட்​ரா​க​வன் பாடி இருக்​கும் "தோடி" இருக்​கி​றதே,​​ நிஜ​மா​கவே "கோடி" பெறும்.​ சாகித்​யம் "நின்னே நம்​மி​நானு..."

"பாயும் ஒளி நீ எனக்கு..." என்று பார​தி​யார் பாட​லு​டன் கச்​சேரி முடிந்​த​போது,​​ இசைக் கட​லில் மூழ்​கிக் குளித்து எழுந்த திருப்தி.​
 
மீண்​டும் ஒரு முறை ரிப்​பீட்...​ எழுதி வைத்​துக் கொள்​ளுங்​கள்...​ இன்​னொரு எம்.எஸ்.​ உரு​வாகி விட்​டார்....!

Kannan Natarajan

unread,
Dec 16, 2009, 2:08:16 AM12/16/09
to Min Thamizh
சீசன்​ஸ் பெஸ்ட்
 
சேஷ​கோ​பா​ல​னில் தொடங்​கிய இன்​றைய இசை விமர்​ச​னம் சங்​க​ர​நா​ரா​ய​ண​னில் முடி​வது​தானே நியா​யம்...​

நுங்​கம்​பாக்​கம் கல்​சு​ரஸ் அசோ​சி​யே​ஷ​னில் டி.வி.​ சங்​க​ர​நா​ரா​ய​ண​னின் இசை நிகழ்ச்சி.​ டெல்லி சுந்​தர்​ரா​ஜன் வய​லின்.​ குரு​வா​யூர் துரை மிரு​தங்​கம்.​
சிவ​ரா​ம​கி​ருஷ்​ணன் கடம்.​
 

அ​டாது மழை பெய்​தா​லும் விடாது சங்​க​ர​நா​ரா​ய​ணின் கச்​சே​ரி​யைக் கேட்டே தீரு​வோம் என்று நான் உள்​பட ஒரு சிலர் பிடி​வா​த​மா​கத் தெரு​வெல்​லாம்
பெருக்​கெ​டுத்து ஓடும் வெள்​ளத்​தில் தவழ்ந்து சென்​றது ஏமாற்​றத்​தில் முடி​ய​வில்லை.​ ​

சங்​கர நாரா​ய​ண​னின் குரல் சிர​மப்​ப​டுத்​து​கி​றது என்று யாரா​வது சொன்​னால் அது உண்மை.​ அது சிர​மப்​ப​டுத்​து​வது நம்​மை​யல்ல.​ அவ​ரைத்​தான்.​
 
குரல் என்​றும் பதி​னா​றா​கவே இருக்க சங்​க​ர​நா​ரா​ய​ணன் காய​கல்​பம் சாப்​பி​டு​கி​றாரா என்ன?​
 
ஆனால்,​​ தான் சிர​மப்​பட்​டா​லும் பர​வா​யில்லை என்று தன்னை வருத்​திக் கொண்டு நம்மை மகிழ்​விக்​கி​றார் என்​ப​தில் சந்​தே​கமே இல்லை.​

உ​ருண்​டோடி வரும் பிரு​காக்​க​ளும்,​​ போட்டி போட்​டுக் கொண்டு சுற்​றிச் சுழன்​ற​டிக்​கும் ஸ்வ​ரப் பிரஸ்​தா​ரங்​க​ளும் சங்​க​ர​நா​ரா​ய​ணனின் சங்​கீ​தத்​துக்கு
ஒரு தனி முத்​திரை பதிப்​பவை.​ சர்க்​க​சில் பத்​துப் பன்னி​ரெண்டு பந்​து​களை தூக்​கிப் பிடித்து விளை​யா​டு​வ​து​போல,​​ ஸ்வ​ரங்​களை சர​ச​ர​வென்று பின்​னிப்
பிரித்து விளை​யா​டும் சங்​க​ர​நா​ரா​ய​ணின் சங்​கீ​தத்​தில் சாரீ​ரத்​தின் குறை​பாடு இரசி​க​னுக்​குத் தென்​ப​டு​கிறா என்​பது சந்​தே​கமே...​

"சுட​ரொ​ளியே போற்றி...​ சுந்​தர கண​ப​தியே போற்றி..." என்று தொடங்​கி​யது முதல் கச்​சேரி முடி​யும் வரை மனி​தர் தொட்​டுக் காட்​டிய சங்​க​தி​க​ளும் சரி,​​
பிர​மிக்க வைக்​கும் வகை​யில் நாடியி​லி​ருந்து எழுப்​பிய பிரு​காக்​க​ளும் சரி...​

இன்​றைக்​குப் பாடிய பூர்​வி​கல்​யா​ணி​யும்,​​ காம்​போ​தி​யும் அடுத்த பத்து வரு​டங்​க​ளுக்​குக் காதில் ரீங்​கா​ரம் செய்​யும்.​
 
காணக் கண்​கோடி வேண்​டும் என்​பார்​கள்.​ இன்​றைய சங்​க​ர​நா​ரா​ய​ண​னின் காம்​போ​தி​யைக் கேட்​டுக் கொண்டே இருக்க ஆயுள் பல கோடி வேண்​டும்.​

மூத்த கலை​ஞர்.​ ஒரு மிகப் பெரிய இசை பாரம்​ப​ரி​யத்​தின் பிர​தி​நிதி.​ இவ​ருக்​கென்று இரசி​கர்​கள் இருக்​கி​றார்​கள்.​
 
இவர் ஏன் இத்​தனை கச்​சே​ரி​களை ஒவ்​வொரு சீச​னி​லும் ஏற்​றுக் கொண்டு தன்னை சிர​மப்ப​டுத்​திக் கொள்​கி​றார்?​
 
சுதா இரகு​நா​தன்,​​ அருணா சாய்​ராம் போன்​ற​வர்​கள் குறைந்த கச்​சே​ரியே ஏற்​றுக் கொள்​கி​றார்​கள்.​ தங்​க​ளது இரசி​கர்​கள் தாங்​கள் எங்கே பாடி​னா​லும்
கேட்க வரு​வார்​கள் என்​கிற தன்​னம்​பிக்கை அவர்​க​ளி​டம் இருக்​கி​றது.​ அந்​தத் தன்​னம்​பிக்கை ஏன் சங்​க​ர​நா​ரா​ய​ண​னுக்​கும்,​​ சேஷ​கோ​பா​ல​னுக்​கும் இல்லை
என்​ப​து ​தான் புரி​ய​வில்லை.​

சீ​ச​னில் ஆறே ஆறு கச்​சே​ரி​கள்.​ அது​வும் தள்​ளித் தள்ளி அமைந்த சபாக்​க​ளில்.​ அரங்​கம் நிறைந்த நிகழ்ச்​சி​கள் நான்கு அமை​வது சிறப்பா,​​
நாற்​கா​லி​க​ளுக்​காக நாற்​பது நிகழ்ச்​சி​களை ஏற்​றுக் கொள்​வது சிறப்பா?​

இது விமர்​ச​க​னின் அதி​கப்​பி​ரசங்கித்​த​னம் அல்ல,​ இரசி​கர்​க​ளின் ஆதங்​கம்!

Kannan Natarajan

unread,
Dec 16, 2009, 2:17:02 AM12/16/09
to Min Thamizh

நியா​யமா சங்​கீதா...?

பி​ரம்​ம​கான சபை​யின் சார்​பில் சங்​கீதா சுவா​மி​நா​த​னின் கச்​சேரி.​ இன்​றைய இளைய தலை​மு​றைக் கலை​ஞர்​க​ளு​டைய நம்​பிக்கை நட்​சத்​தி​ரங்​க​ளின் பட்​டி​ய​லைத் தயா​ரித்​தால் அதில் மறக்​கா​மல் சேர்க்​கப்​பட வேண்​டிய ஒரு​வர் இந்த சங்​கீதா சுவா​மி​நா​தன்.​
 
இவ​ரு​டைய இசைத்​தட்டு எங்​கே​யா​வது கிடைக்​குமா என்று கடை கடை​யாக அலைந்து நான் சலித்த கதை​யைப் பிறகு வைத்​துக் கொள்​வோம்.​

சங்​கீதா சுவா​மி​நா​தன்,​​ சுதா ரகு​நா​த​னின் சிஷ்​யை​யாம்.​ ​
 
எம்.எல்.வி.​ -​ சுதா -​ சங்​கீதா என்று பாரம்​ப​ரி​யம் தொடர்​வது கண்டு மகிழ்ச்சி.​
 
நானும் ஒரு சிஷ்யை என்​றில்​லா​மல்,​​ "நான்​தான் சிஷ்யை" என்று தனது குரு​வைப் போலவே தன்னை நிலை​நி​றுத்​திக் கொள்​ளும் சங்​கீ​தம்.​
 
 
தெரிந்​து​தான் சங்​கீதா என்று பெயர் வைத்​தி​ருக்​கி​றார்​கள்.​

இன்​றைய கச்​சே​ரிக்​குப் பத்மா சங்​கர் வய​லின்.​ நெல்லை பாலாஜி மிரு​தங்​கம்.​ ஆதம்​பாக்​கம் சங்​கர் கடம்.​ ​

"கெளளை" ராக வர்​ணத்​து​டன் தொடங்​கிய இசைக் கச்​சேரி,​​ அடுத்​த​தாக,​​ "ரகு​வர நன்​னும..." என்​கிற "காம​வர்த்​தினி" ராக தியா​கய்​யர் சாகித்​யத்​தி​லேயே
களை கட்டி விட்​டது.​ பல இடங்​க​ளில் "பலே..​ பலே..." என்று உரக்​கக் குர​லெ​ழுப்​ப​லாம் போலி​ருந்​தது.​
 
ஒரு இளம் கலை​ஞர் என்​பதை நிச்​ச​ய​மாக நம்​ப​மு​டி​ய​வில்லை.​

"கானடா" ராகத்​தில் "மரி​யேமி காவ​லனு" என்​கிற சாகித்​யத்​தைத் தொடர்ந்து,​​ "நாசிகா பூஷணி" ராகத்​தில் "மார​வ​யிரி ரமணி,​​ மஞ்சு பாஷிணி" என்​கிற
தியா​கய்​யர் சாகித்​யத்தை அற்​பு​த​மா​கப் பாடி​னார்.​ விஸ்​தா​ர​மான ஆலா​பனை.​ ஒரு அபூர்வ ராகம் இந்​தப் புதிய தலை​மு​றைப் பாட​கி​யின் குர​லில்
ஆனந்த ராக​மாக வியா​பித்த அற்​பு​தத்​தைக் கச்​சே​ரிக்கு வந்​தி​ருந்த பாக்​கி​ய​வான்​கள் மட்​டுமே உணர்ந்​தி​ருக்க முடி​யும்.​

அ​தோடு விட்​டாரா சங்​கீதா?​
 
அடுத்​த​தும் அதி​க​மா​கக் கேள்​விப்​ப​டாத ஒரு ராகம்.​ பெயர் "டக்கா".​ இந்த ராகத்​தில் தியா​கைய்​யர் "ராக சசி​வ​தனா" என்​கிற ஒரு சாகித்​யம் மட்​டும்​தான்
இயற்​றி​யி​ருக்​கி​றார் என்று நினைக்​கி​றேன்.​ பிறகு,​​ கெளரி,​​ மனோ​க​ரி​யில் ஒரு சுவா​தித் திரு​நாள் கிரு​தி​யும்,​​ "சுத்த சாரங்"கில் மதுரை ஜி.எஸ்.​ மணி​யின் பாட​லும்
பாடி நிகழ்ச்​சியை நிறைவு செய்​தார் சங்​கீதா.​

நல்ல சாரீ​ரம்.​ ஸ்ருதி சுத்​த​மான,​​ நல்ல காலப் பிர​மா​ணத்​து​டன் கூடிய சங்​கீ​தா​வின் சங்​கீ​தத்​தில் லயிக்க முடி​யா​மல் போனால் அவர்​கள்
ஞான சூன்​யங்​க​ளா​கத்​தான் இருக்க முடி​யும்.​

​"போத்​தீஸ்" பட்​டின் மினு​மி​னுப்​பும்,​​ நட​மா​டும் நகைக்​கடை அலங்​கா​ர​மும் இல்​லாத அற்​பு​த​மான சங்​கீ​தம் இவ​ரு​டை​யது.​
 
ஒரு சின்​னக் குறை.​
 
தனிக்​கும் சற்று நேரம் அதி​க​மா​கக் கொடுத்​துப் பக்​க​வாத்​தி​யக்​கா​ரர்​க​ளை​யும் உற்​சா​கப்​ப​டுத்த வேண்​டாமோ?​

ஒரு அன்பு வேண்​டு​கோள் -​ மார்​கழி உற்​ச​வம் நடக்​கி​றது.​
 
பெய​ருக்​குக் கூடத் தமிழ் பாட்டு இல்​லா​மல் இப்​படி கச்​சேரி செய்​வது நியா​ய​மா​கப் படு​கி​றதா,​​ சங்​கீதா?

meena muthu

unread,
Dec 16, 2009, 2:19:18 AM12/16/09
to mint...@googlegroups.com
கேட்கவே ஆனந்தமாக இருக்கிறது!தொடருங்கள் தங்களின் பகிர்தலை.

என்னைப்போல சங்கீத தி(பெ)ருவிழாவில் கலந்து கொள்ள இயலாதவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்!  மிகவும் நன்றி.

2009/12/16 Kannan Natarajan <thar...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

meena muthu

unread,
Dec 16, 2009, 2:22:10 AM12/16/09
to mint...@googlegroups.com
மீண்டும் நன்றி!

2009/12/16 Kannan Natarajan <thar...@gmail.com>
--

vishalam raman

unread,
Dec 16, 2009, 12:08:49 PM12/16/09
to mint...@googlegroups.com
மல்லடி பிரதர்ஸ் இசையும் என்னை மிகவும் கவர்ந்தது அவர்கள் புட்டப்பர்த்தியில் சாயிபாபாவின் முன்னால் பாடியது அப்படியே அருவிக்கொட்டியதுபோல்  சுகம் இதே போல் இப்போது திருச்சூர் பிரதர்ஸ் மிக அழகாகப்பாடுகிறார்கள் இந்த  இரு சங்கீத் மேதைகளுக்கு அடக்கம்
பவ்யம் தவிர கடவுள் பக்தி மிகவும் அதிகமாகவே இருக்கிறது ஒவ்வொரு கீர்த்தனையும் அர்த்தம் தெரிந்து பாடுகிறார்கள்

 

Kannan Natarajan

unread,
Dec 16, 2009, 7:09:16 PM12/16/09
to Min Thamizh
பட்​ட​ணம் சுப்​ர​மண்ய ஐயர்


http://www.dinamani.com/Images/article/2009/12/17/music1.jpg

சங்​கீத உல​கில்,​​ சங்​கீ​தத்​தின் பல பரி​மா​ணங்​க​ளில் உயர்ந்து நின்​ற​வர்​கள் சிலர்.​ அதில் ஒரு முக்​கிய இடத்தை அலங்​க​ரிப்​ப​வர் பட்​ட​ணம் சுப்​ர​மண்ய ஐயர் அவர்​கள்.​

சங்​கீத குடும்​பத்​தில் பிறந்த இவர்,​​ தலை​சி​றந்த பாட​க​ரா​க​வும்,​​ உயர்ந்த ஆசா​னா​க​வும்,​​ உத்​தம வாகே​ய​கா​ர​ரா​க​வும் பரி​ம​ளித்​தார்.​

ஒரு நூற்​றாண்​டுக்கு மேலாக கச்​சேரி மேடையை,​​ அவ​ரு​டைய சாஹித்​யங்​கள் வலம் வரு​வதே அதற்கு சான்று.​ ​

தந்தை பர​தம் வைத்​ய​நாத ஐயர்; பாட்​ட​னார் பர​தம் பஞ்​ச​நத சாஸ்த்ரி; இவர் இரண்​டாம் சர​போஜி மகா​ரா​ஜா​வின் அரண்​மணை ஆஸ்​தான வித்​வா​னாக இருந்​த​வர்.​

இவ​ரு​டைய தாய் மாமா,​​ மெலட்​டூர் கண​பதி சாஸ்த்​ரி​கள் தேர்ச்சி பெற்ற இசைக் கலை​ஞர்.​

அவ​ரி​ட​மும்,​​ பின்பு கொத்​த​வா​சல் வெங்​க​ட​ராம ஐயர்,​​ மான்​பூச்​சா​வடி வெங்​க​ட​சுப்​பய்​யர் அவர்​க​ளி​ட​மும் சுப்​ர​மண்ய ஐயர் சங்​கீ​தம் பயின்​றார்.​

கன​மான,​​ ஒத்​து​ழைக்​காத சாரீர வாகு கொண்​ட​வர்.​ முயற்சி உடை​யார் இகழ்ச்சி அடை​யார் என்​ப​தற்கு ஏற்ப,​​

விடா முயற்சி,​​ அசுர சாத​கம்,​​ கழுத்​த​ளவு தண்​ணீ​ரில் இருந்து சாத​கம் செய்​வ​தன் மூலம் தன்​னு​டைய கன சாரீ​ரத்தை நய​மாக்​கிக் கொண்​டார்.​

பேகடா இரா​கத்தை பிர​மா​த​மாக விஸ்​த​ரிப்​பார்.​ ​

  • இரா​ம​நா​த​பு​ரம் ​(பூச்சி)​ சீனி​வாஸ ஐயங்​கார்
  • மைசூர் வாசு​தே​வா​சா​ரி​யார்
  • தைகர் வர​தா​சா​ரி​யார்
  • ஈனாடி சகோ​த​ரி​கள்
  • முத்​தி​யால்பேட்டை சேஷய்​யர் ​
போன்​ற​வர்​கள் இவரது சீடர்கள்.​​

தமிழ்,​​ தெலுங்கு,​​ சம்ஸ்​கி​ரு​தம் ஆகிய மொழி​க​ளில் புலமை பெற்​றி​ருந்​தார்.​

வர்​ணங்​கள்,​​ கீர்த்​த​னை​கள்,​​ தில்​லானா,​​ ஜாவளி போன்ற உருப்​ப​டி​களை இயற்​றி​யுள்​ளார்.​

  • பைரவி இரா​கத்​தில் நீ பாத​முலே கதி​யனி
  • ஷண்​மு​கப்​ரி​யா​வில் மரி​வே​ர​திக்​கெ​வ​ரய்ய ராம
  • செராஷ்ட்​டிர இரா​கத்​தில் நினு ஜூசி
  • கத​ன​கு​தூ​க​லத்​தில் ரகு​வம்ச சுதா
போன்ற பாடல்​கள் மிகப்​பி​ரா​பல்​ய​மா​னவை.​

கத​ன​கு​தூ​க​லம் இ
ரா​கம் இவ​ரு​டைய கண்​டு​பி​டிப்​பா​கும்.​  

தனது 58வது வய​தில் 1902ம் ஆண்டு இவ​ரு​டைய இசைத் தெய்​வம் வாழ்ந்த திரு​வய்​யாற்​றி
ல்​ உயிர் நீத்​தார்.​

சுவாதி

Kannan Natarajan

unread,
Dec 16, 2009, 7:14:29 PM12/16/09
to Min Thamizh
பெ​ய​ரைக் கெடுக்க மாட்​டார்...

அ​மெ​ரிக்​காவி​லி​ருந்​த​ப​டியே,​​ இங்​குள்​ள​வர்​க​ளுக்கு இணை​யா​கப் பயின்று நார​த ​கான சபா​வில்,​​ கச்​சேரி செய்​தார்​கள் சங்​கர் ரம​ணி​யும்,​​ பிர​சன்னா வெங்​க​டே​ஷும்.​

"ஹம்​சத்​வனி"யில் "ஜல​ஜாக்ஷா" வர்​ணத்​து​டன் சங்​கர்
ரம​ணி​யின் நிகழ்ச்சி தொடங்​கி​யது.​

http://www.dinamani.com/Images/article/2009/12/17/music2.jpg

"சாரங்கா"வில் தூர​னின் "கண​நா​தனே".​ சர்​வ​ல​கு​வாக கல்​பனா ஸ்வ​ரங்​கள்.​ சிவ​னின் "கற்​பக மனோ​ஹரா" என்ற "மலை​ய​மா​ருத" கீர்த்​த​னை​யைத் தொடர்ந்து,​​
சுருக்​க​மான "சந்​தி​ர​ஜோதி" ஆலா​ப​னை​யும் பாக​ய​னய்யா கீர்த்​த​னை​யும் அழுத்​த​மாக அமைந்​தது.​

வெங்​க​ட​சுப்​பய்​ய​ரின் "வந்​த​தும் போன​தும்" பில​ஹரி
ராகத்​தில் அழ​காக வந்​து​போ​யிற்று.​ பிறகு ஒரு விஸ்​தா​ர​மான ஷண்​மு​கப்​பி​ரியா,​​ நல்ல குரல் வாகு.​
அதை முழு​மை​யா​கப் பயன்​ப​டுத்​திக் கொண்​டார்.​

ஷட்ஜ வர்​ஜத்​து​டன் மேல் சஞ்​சா​ரப் பிடி​கள் அவ​ரின் கற்​பனை வளத்​துக்கு சான்​றாக இருந்​தன.​

ஷண்​மு​கப்​பி​ரி​யா​வில் அதி​கம் கேட்​கப்​ப​டாத "ஏகாம்​ப​ரேச நாய​கீம்" கீர்த்​த​னை​யின் சர​ணத்​தில் "காஞ்சி நகர வாசினி"என்ற வரி​யில் நிர​வ​லும்,​​ சுவ​ரப் பிரஸ்​தா​ர​மும்.​

வய​லி​னில் சதீஷ் குமா​ரும்,​​ மிரு​தங்​கத்​தில் சந்​தோஷ் குமா​ரும் ஈடு​கொ​டுத்து வாசித்​தார்​கள்.​

முகா​ரி​யில் என்​றைக்கு சிவ​கி​ருபை வருமோ,​​ அன்​ன​பூர்​ணாஷ்​ட​கம்,​​ தீட்​சி​த​ரின் அன்​ன​பூர்ணே விசா​லாட்சி,​​ அஷ்​ட​ப​திக்​குப் பிறகு நாதுபை கீர்த்​த​னை​யு​டன் கச்​சேரி
நிறைவு அடைந்​தது.​

ஓ.எஸ்.​ தியா​க​ரா​ஜ​னின் சிஷ்​யர் இவர்.​ குரு​வின் பெய​ருக்​குக் களங்​கம் சேர்க்​காத சிஷ்​யர்!

Kannan Natarajan

unread,
Dec 16, 2009, 7:18:17 PM12/16/09
to Min Thamizh
சுருதி சுத்​தம் கூட...

சங்​கீத கலா​நிதி சேஷ​கோ​பா​ல​னின் சிஷ்​யர் பிர​சன்னா வெங்​க​டேஷ்.​

http://www.dinamani.com/Images/article/2009/12/17/music3.jpg

"கேதா​ர​கெ
ளை" வர்​ணத்​து​டன் விறு​வி​றுப்​பாக கச்​சே​ரியை ஆரம்​பித்​தார்.​

இவ​ரும் எடுத்​துக்​கொண்ட
ராகம் மலை​ய​மா​ரு​தம்.​

அமெ​ரிக்​க​வாழ் இந்​தி​யர்​க​ளுக்​குப் பிடித்த
ராகமோ என்​னவோ?​

அரு​ணா​ச​லக் கவி​ரா​ய​ரின் "ஹனு​மானே சுவா​மிக்​கிந்த" என்ற பாடல் விரி​வான கீர​வாணி
ராகம்.​

"இன்​ன​மும் சந்​தே​கப் பட​லாமோ" என்ற கீர்த்​தனை.​

வாய்​விட்டு அழுத்​த​மான குர​லில் பாடி​யது கேட்​ப​தற்கு நன்​றாய் இருந்​தது.​

வேகத்​தைக் குறைத்​தால்,​​ சுருதி சுத்​தம் கூடும்.​

து​ள​சி​தா​ச​ரின் பஜன்;​ அவரே இயற்​றிய "ஆரபி"
ராகத் தில்​லா​னா​வு​டன் கச்​சேரி நிறைவு பெற்​றது.

Kannan Natarajan

unread,
Dec 16, 2009, 7:26:14 PM12/16/09
to Min Thamizh
இனிமை.... வேகம்... சுகம்...

சாந்தி ஃபைன் ஆர்ட்​ஸில் புதன்​கி​ழமை(16/12/09) மாலை நேரக் கச்​சேரி பந்​துல ரமா​வு​டை​யது.​

http://www.dinamani.com/Images/article/2009/12/17/music4.jpg

இன்​றைய தலை​மு​றைக் கலை​ஞர்​க​ளில் முன்​வ​ரி​சை​யில் தனது வித்​வத்தை மட்​டுமே மூல​த​ன​மா​கக் கொண்டு இடம்​பி​டித்​தி​ருக்​கும் பிர​மிக்க வைக்​கும் கலை​ஞர்.​

தாய் மொழி தெலுங்கு என்​ப​தால் தியா​கைய்​யர் சாகித்​யங்​களை இவர் பாடும்​போது அதில் ஒன்​றி​வி​டு​கி​றார் என்​பது இவ​ரது சிறப்​பம்​சம்.​

பத்​ராச்​ச​லம்
ராம​தா​சர் "கா​னடா" ராகத்​தில் இயற்​றிய "ஓ ரகு நந்​தனா"வில் தொடங்கி,​​ அனு​மத் ஜெயந்​தியை முன்​னிட்டு அடுத்​த​ப​டி​யாக
"தர்​பார்"
ராகத்​தில் "ஆஞ்​ச​நே​யம் நமாம்​ய​கம்" என்​கிற கீர்த்​த​னை​யை​யும் பாடி​னார்.​

"மனசா மனசா மார்​க​மேமி..." என்​கிற தியா​கைய்​யர் கிருதி.​
ராகத்​தைக் கோடி காட்​டி​ய​போது முத​லில் "சுத்த சன்​யாசி" போல இருந்​தது.​ பிறகு அவரே தெளி​வு​ப​டுத்​தி​னார்.​ ராகம் "வர்​தினி" என்று.​ நன்​றா​கவே இருந்​தது.​

பிறகு "பண்​டு​ருத்தி கொல்லு" -​ "ஹம்சநாதம்"
ராகம் இனி பந்​துல ரமா பாடித்​தான் கேட்​பது என்று மன​திற்​குள் வைராக்​கி​யம் ​ எடுத்​துக்​கொண்​டேன்.​

அத்​தனை இனிமை..​ வேகம்..​ சுகம்.​

"வசந்தா"வின் "சீதம்ம மாயம்ம.." பாடி​விட்டு விஸ்​தா​ர​மாக "ஹரி​காம்​போதி" நிர​வல் ஸ்வ​ரம் பாடி
ரசி​கர்​க​ளுக்கு அற்​பு​த​மான விருந்து படைத்​தார்.​

எடுத்​துக்​கொண்ட சாகித்​யம் "தின​மணி வம்ச".​ தொடர்ந்து ஒரு பஜன்.​ "பிருந்​தா​வனி"யில் தில்​லானா என்று பாடி நிகழ்ச்​சியை நிறைவு செய்​தார்.​

ஸ்வ​ரம் பாடு​வ​தில்​தான் என்​ன​வொரு வேகம்.​ அனா​யா​ச​மான பிர​யோ​கங்​கள்.​ சற்​றும் பிசிறு தட்​டாத சாரீர வளம்.​ குர​லில் ஒரு சுகம்.​

வித்​வத்​துள்ள சாரீ​ரம் என்​பார்​களே,​​ அது இது!

Kannan Natarajan

unread,
Dec 16, 2009, 7:30:05 PM12/16/09
to Min Thamizh
இசைச் சுனாமி...

பு​தன்​கி​ழமை(16/12/09) மத்​தி​யான வேளை.​ நார​த​கான சபா அரங்​கத்​தில் 2 மணிக்கு சூறா​வ​ளி​யா​கப் பய​ணித்​தது சேலம் காயத்​தி​ரி​யின் அற்​பு​த​மாக இசைச் சுனாமி!​

http://www.dinamani.com/Images/article/2009/12/17/music5.jpg

பூச்சி அய்​யங்​கா​ரின் நாகஸ்​வ​ரா​வளி வர்​ணத்​து​டன் தொடங்கி எடுத்த எடுப்​பி​லேயே களை​கட்​டி​விட்​டது.​

சிட்​டை​யாக ஹம்​சத்​வனி
ராகம்;​ தொடர்ந்​தது பட்​ட​ணம் சுப்​பி​ர​ம​ணி​யன் "மன​சு​க​ர​கதே".​ பைரவி ராகத்தை அலசி ஆராய்ந்​து​விட்​டார்.​

அடே​யப்பா,​​ என்​ன​வொரு கற்​பனை வளம்.​ அந்​தக் குரல் என்​ன​மா​கப் பேசு​கி​றது.​

வி​வே​க​மான,​​ சுருதி தப்​பாத வேகம்;​ உயர்ந்த வித்​வத் அடுத்​த​தாக அவர் பாடிய
ரஞ்​சனி ராகத்​தி​லும் பளிச்​சிட்​டது.​

குரு டி.ஆர்.சுப்​பி​ர​ம​ணி​யம் ஆயிற்றே!​
ரஞ்​ச​க​மான ரஞ்​சனி.​ திச்ர திரு​புடை தாளத்​தில் மிச்​ர​க​தி​யில் விவ​கா​ர​மான பல்​ல​வியை மிக எளி​தா​கக் கையாண்​டார்.​

ஸ்வ​ரங்​கள் கணக்கு வழக்​கு​ட​னும்,​​
ராக​பா​வத்​து​ட​னும் கன​கச்​சி​த​மாக அமைந்​தது.

​வய​லி​னில் அழுத்​த​மான,​​ விச்​ராந்​தி​யான வாசிப்பு அனந்த பத்​ம​நா​ப​னு​டை​யது.​ மிரு​தங்​கம் அர்​ஜுன் கணே​ஷும்,​​ கஞ்​சிரா நெற்​கு​ணம் சங்​க​ரும் கச்​சே​ரியை மேலும்
பரி​ம​ளிக்​கச் செய்​தார்​கள்.​

சே​லம் காயத்​ரியை இன்​னும் 2 மணிக் கச்​சேரி செய்​யச் சொல்​வது நியா​ய​மில்லை.​ ஆறு மணிக் கச்​சே​ரிக்​கான சங்​கீ​தம் அவ​ரு​டை​யது!

Kannan Natarajan

unread,
Dec 16, 2009, 7:34:11 PM12/16/09
to Min Thamizh
பக்க வாத்​தி​யம் என்​றால் என்ன?

சங்​கீத வித்​வத் சபை​யின் முதல் நாள் நிகழ்​வு​கள் வழக்​கம்​போல,​​ இசை ஆர்​வ​லர்​க​ளை​யும்,​​ மாண​வர்​க​ளை​யும் கவர்ந்​த​தில் வியப்​பென்ன?

​டாக்டர் பப்பு வேணு​கோ​பால் முன்​னி​லை​யில்,​​ இந்த ஆண்டு சங்​கீத கலா​நிதி விருது பெறும் வலை​யப்​பட்டி சுப்​பி​ர​ம​ணி​யம் தலை​மை​யில் இசை இயல் விளக்க உரை தொடங்​கி​யது.

​"பக்​க​வாத்​தி​யம் -​ கச்​சே​ரி​யில் அதன் பங்கு" என்​கிற தலைப்​பில் பெங்​க​ளூர் மிரு​தங்க வித்​வான் வி.கிருஷ்​ணன் செயல்​முறை விளக்​க​மாற்​றி​னார்.​

அவ​ருக்​குப் பக்​க​ப​ல​மாக,
  • கஞ்​சீ​ரா​வில் குரு​பி​ர​சாத்
  • கடம் கிரி​தர குடி​யப்பா
  • மோர்​சிங் வி.ராஜே​கர்
வாசித்​தார்​கள்.​

ஜி.ரவி​கி​ரண் பாடி​னார்.​

http://www.dinamani.com/Images/article/2009/12/17/music6.jpg

கஞ்​சீரா,​​ கடம்,​​ மோர்​சிங் முத​லிய வாத்​தி​யங்​க​ளின் தோற்​றம்,​​ வளர்ச்சி,​​ மற்ற நாடு​க​ளில் அந்த வாத்​தி​யத்​தின் பெயர்,​​ அதன் இன்​றைய வளர்ச்சி முத​லி​ய​வற்​றைப்
பற்றி விரி​வாக விளக்​கம் கொடுத்​தார் கிருஷ்​ணன்.​

கச்​சே​ரி​யில் உப​பக்க வாத்​தி​யம் எந்த நேரம் மிரு​தங்​கத்​து​டன் சேர​வேண்​டும்,​​ விளம்​ப​கா​லத்​தில் எப்​படி வாசிக்க வேண்​டும்,​​ மத்​யம காலத்​துக்கு எப்​படி
வாசிக்க வேண்​டும்,​​ தனி ஆவர்த்​த​னத்​திற்கு எப்​படி வாசிக்க வேண்​டும் என்​ப​தை​யும் விளக்​கி​னார்.​

இந்த வாத்​தி​யங்​க​ளில் மாமே​தை​யாக திகழ்ந்த
  • கஞ்​சீரா புதுக்​கோட்டை மாமுண்​டியா பிள்ளை
  • கடம் பழனி கிருஷ்​ணய்​யர்
  • மோர்​சிங் மன்​னார்​குடி நடே​சப் பிள்ளை
இவர்​க​ளைப் பற்​றி​யும்,​​ இவர்​கள் இந்த வாத்​தி​யங்​களை இன்​றைய நிலை​மைக்கு உயர்த்​தி​ய​தைப் பற்​றி​யும் குறிப்​பிட்​டார்.​

மிக​வும் சுவை​யா​ன​தொரு இசை இயல் விளக்​க​மாக அமைந்​தது.

Kannan Natarajan

unread,
Dec 16, 2009, 7:42:44 PM12/16/09
to Min Thamizh
குழலூதும் கண்ணனுக்கு...

என்​ன​தான் சொல்​லுங்​கள்,​​ மாஸ்​டர்​கள் மாஸ்​டர்​கள் ​தான்.​ அதி​லும் புல்​லாங்​கு​ழல் ரம​ணியை மாஸ்​டர் என்று கூறு​வ​தை​விட "மேஸ்ட்ரோ" என்று அழைப்​ப​து​தான்
பொருத்​த​மாக இருக்​கும்.​

http://www.dinamani.com/Images/article/2009/12/17/music7.jpg

இந்த வய​தி​லும் புல்​லாங்​கு​ழல் வாசிக்​கி​றாரே மனி​தர் என்று பக்​கத்​தில் இருந்​த​வர் ஆச்​ச​ரி​யப்பட்​டார்.​

ரம​ணித்​தான் வய​தா​கி​விட்​டதே தவிர அவ​ரது இசை 20 வரு​டம் முன்​னால் கேட்ட அதே இனி​மை​யு​டன்​தான் இருக்​கி​றது.​

அந்த நாதம் இப்​போ​தும் அதே கனத்​து​டன்.​

இது எப்​படி சாத்​தி​யம் என்று ஆச்​ச​ரி​யப்​பட வேண்​டி​யதே இல்லை.​

அவ​ரது நாதோ​பா​சனை அப்​ப​டிப்​பட்​டது.

​"நாத இன்​பம்" சார்​பில்
ராக​சுகா அரங்​கத்​தில் புதன்​கி​ழமை(16/12/09) மாலை நிகழ்ச்சி புல்​லாங்​கு​ழல் எஸ்.ரம​ணி​யு​டை​யது.​

வய​லி​னில் எஸ்.​ வர​த​ரா​ஜ​னும்,​​ மிரு​தங்​கத்​தில் டி.​ வைத்​தி​ய​நா​த​னும்,​​ டி.வி.​ வாசன் கடத்​தி​லும் பக்​க​ப​ல​மாக இருந்​த​னர்.

​"சாமி நின்னே" என்று "நாட்டை"
ராகத்​தில் தொடங்​கி​ய​து​தான் தாம​தம்.​ மங்​க​ளம் பாடி முடிக்​கும்​ வரை சற்​றா​வது தொய்வோ,​​ விறு​வி​றுப்​புக்கு குறைவோ
இருக்க வேண்​டுமே.​

ரம​ணி​யின் குழ​லி​சைக்கு இருக்​கும் வளமை வேறு எந்​தப் புல்​லாங்​கு​ழ​லுக்​கும் இல்​லையே அது ஏன்?​

என்று அவ​ரி​டம் ஒரு பேட்டி எடுக்க வேண்​டும் போலி​ருந்​தது.​

"நின்னு ஜூசி" என்​கிற "செ
ராஷ்​டிர" ராக சாகித்​யம்.​

பிறகு,​​ "சஹானா"வில் "ஈ வசுதா".​ ஸ்வ​ரம் வாசிக்​க​வில்லை.​ அதற்​குப் பிறகு விஸ்​தா​ர​மாக ஒரு "ஹிந்​தோ​ளம்".​

குடம் குட​மா​கத் தேனைக் காதில் கொட்​டி​ய​து​போல ஒரு தெவிட்​டாத இன்​பம்.​

மந்​தி​ரஸ்​தா​யி​யில் வாசிப்​ப​தற்​காக ஒரு "பிரத்​யேக" புல்​லாங்​கு​ழல் வைத்​தி​ருக்​கி​றார்.​ எடுத்​துக்​கொண்ட சாகித்​யம் "கோவர்​தன கிரீ​சம்".​

அடுத்​தாற்​போல,​​ "பூர்வ கல்​யாணி".​ கேட்​கவா வேண்​டும்.​
ராகம் வாசித்து "நின்​னு​வினா" சாகித்​யம்.​ நிர​வல்,​​ ஸ்வ​ரம் வாசித்​த​போது யாரும் பூலோ​கத்​தி​லேயே
இல்லை போங்​கள்.​

ஹைலைட் என்ன தெரி​யுமா?​

திஸ்ர நடை​யில் ஸ்வ​ரம் வாசித்து அசத்​தி​ய​து​ தான்!​

வி​று​வி​றுப்​பா​க​வும்,​​ சுறு​சு​றுப்​பா​க​வும் ஒரு "
கா​னடா" வாசித்​து​விட்டு,​​ மீண்​டும் விஸ்​தா​ர​மாக ஒரு பிர​பல ராகத்​தைத் தொடங்​கி​ய​போது ரசி​கர்​க​ளுக்கு மேலும்
ஒரு இன்ப அதிர்ச்சி.​

எடுத்​துக்​கொண்ட
ராகம் கர​க​ரப்​பி​ரியா.​ சாகித்​யம்,​​ "ராமா...​ நீயடா..." நிர​வ​லுக்​குப் போக​வில்லை.​ கல்​பனா ஸ்வ​ரத்​து​டன் முடித்​துக் கொண்​டார்.​

ஒரு நேயர் விருப்​பம்.​

விரும்​பிய நேயர் "க்ளீவ்​லேண்ட்" சுந்​த​ரம்.​ "சசி பிராண",​​ என்​கிற ஜாவளி.​ அமெ​ரிக்​கா​வில் சுந்​த​ரம் கேட்டு மகிழ்ந்​ததை,​​ நம்​ம​வர்​க​ளுக்​காக வாசிக்க வைத்​த​தற்கு நன்றி.​

ர​ம​ணி​யின் குழ​லி​சைக்கு இணை​யான சுகத்தை உல​கில் வேறு எது​வும் கொடுத்​து​விட முடி​யுமா,​​ என்ன?

Innamburan Innamburan

unread,
Dec 16, 2009, 7:49:13 PM12/16/09
to mint...@googlegroups.com
எனக்கு பெருமிதம். என் க்டைக்குட்டி தங்கை ஹேமாவின் பெண், சேலம் காயத்திரி.
இன்னம்பூரான்
2009/12/17 Kannan Natarajan <thar...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



-

Kannan Natarajan

unread,
Dec 16, 2009, 7:49:38 PM12/16/09
to Min Thamizh
வெற்​றிக் கூட்​டணி!

த​னித்​த​னி​யா​கக் கச்​சேரி செய்​யும் இரண்டு மூத்த கலை​ஞர்​களை,​​ இணைந்து கச்​சேரி செய்​யச் சொல்ல ஒரு துணிவு வேண்​டும்.​

அப்​படி ஒரு கச்​சே​ரியை ஒத்​துக்​கொள்ள அதை​விட தைரி​யம் வேண்​டும்.​

நன்​றா​கவே சாத​கம் செய்து கச்​சேரி செய்​யும் இரட்​டை​யர்​கள் சங்​கீ​தம் போல அல்ல இது.​

கர​ணம் தப்​பி​னால் மர​ணம்​போல,​​ சற்று வில​கி​னால் நகைப்​புக்​கி​ட​மா​கி​வி​டும்.​

எந்த அள​வுக்கு குரு​வி​டம் ஆழ்ந்து சிஷ்​யம் பண்​ணி​யி​ருக்​கி​றார்​கள் என்​ப​தை​யும்,​​ எத்​தனை ஞானஸ்​தர்​கள் என்​ப​தை​யும்
  • சுகுணா புரு​ஷோத்​த​ம​னும்
  • சுகுணா வர​தாச்​சா​ரி​யும்
இணைந்து நிகழ்த்​திய கச்​சேரி நிரூ​பித்​துக் காட்​டி​யது.​

http://www.dinamani.com/Images/article/2009/12/17/music8.jpg

ஜெயா தொலைக்​காட்​சி​யில் "மார்​கழி மகோத்​ச​வ"த்​தின் கடைசி நாள் நிகழ்ச்சி.​

சுகுணா புரு​ஷோத்​த​ம​னும்,​​ சுகுணா வர​தாச்​சா​ரி​யும் இணைந்து பாடு​கி​றார்​கள் என்று சொன்​னால் கூட்​டத்​துக்​குக் கேட்​கவா வேண்​டும்?​

இரண்டு பேருமே நூற்​றுக்​க​ணக்​கான சிஷ்​யர்​களை உரு​வாக்​கிக் கடந்த முப்​பது ஆண்​டு​க​ளாக இசைத் தொண்டு செய்​து​வ​ரு​ப​வர்​கள்.​

இரு​வ​ருமே முசிறி சுப்​பி​ர​ம​ணிய அய்​ய​ரின் குரு​கு​லத்தி​லி​ருந்து வந்​த​வர்​கள்.​

அனு​மத் ஜெயந்​தியை முன்​னிட்டு,​​ அன்​றைய இசை நிகழ்ச்​சிக்கு எடுத்​துக் கொள்​ளப்​பட்ட அடிப்​ப​டைப் பொருள் அனு​மார்.​

ஹேம​ல​தா​வின் வய​லி​னும்,​​ பி.சிவ​ரா​ம​னின் மிரு​தங்​க​மும் பக்​க​வாத்​தி​யங்​கள்.​

அரங்​கம் நிரம்பி வழிந்​தது என்​பது மட்​டு​மல்ல,​​ வெளி​யி​லும் கூட்​டம்.​

இவர்​க​ளுக்கு இவ்​வ​ளவு பெரிய
ரசி​கர் கூட்​டம் இருக்​கும் என்று அவர்​க​ளே​கூட எதிர்​பார்த்​தி​ருப்​பார்​களா என்​பது சந்​தே​கம்.​

"நாட்டை"
ராகத்​தில் "பவ​னாத்​மஜ ஆகஸ்ச்ச" என்​கிற தீக்ஷி​தர் கிரு​தி​யில்,​​ கல்​பனா ஸ்வ​ரம் பாடி கச்​சே​ரி​யைத் தொடங்​கி​னார்​கள்.​

தொடர்ந்து,​​ "கர்​நா​டக காபி"
ராகத்​தில் "வீர ஹனு​மதே" என்​கிற தீக்ஷி​தர் கிருதி.​ "ஷட்​வித மார்​கினி" ராகத்​தில் "பாஹி பர​மாத்மா" பாடி​ய​போது,​​ ஏதோ பல வரு​டங்​கள் இணைந்து பாடிய அனு​ப​வஸ்​தர்​கள்​ போல இவர்​க​ளின் கச்​சேரி களை​கட்​டி​யி​ருந்​தது.​

மந்​தி​ரத்​தால் கட்​டுப்​பட்​ட​து​போல
ரசி​கர்​கள்.

​"பேகடா"
ராக ஆலா​ப​னையை விஸ்​தா​ர​மாக சுகுணா வர​தாச்​சாரி கையாண்​ட​வி​தமே அலாதி.​ இந்த ராகத்​துக்கு இத்​தனை பரி​மா​ணங்​களா என்​பது
அதி​ச​யப்​ப​ட​வைக்​கும் அள​வுக்கு ஒரு கற்​ப​னையை முன்​வைத்​தார் அவர்.​

சுகுணா புரு​ஷோத்​த​ம​னின் "அனு​மான் திரு​வடி நினை மனமே" என்​கிற பல்​ல​வியை எடுத்​துக்​கொண்டு நினை​ம​னமே,​​ திரு​வடி நினை​ம​னமே,​​ அனு​மான் திரு​வடி
நினை​ம​னமே" என்று விஸ்​தா​ர​மா​கப் பாடி முடித்​த​போது எழுந்த கர​கோ​ஷம் சொல்லி முடி​யாது.​

இப்​போது,​​ சுகுணா புரு​ஷோத்​த​ம​னின் முறை.​ அவர் "சாவேரி"
ராகத்​தில் விஸ்​தா​ர​மாக ஒரு ஆலா​ப​னை​யைத் தொடர்ந்து சுவா​தித் திரு​நா​ளின் "ஆஞ்​ச​நேய" என்​கிற சாகித்​யத்​தில் "ஜனக சுதா"வில் நிர​வல் ஸ்வ​ரம்.​ பிறகு ஒரு ராகமாலிகை பாடி முடித்​தார்​கள்.​

"முசிறி" பாணின்னா என்ன?​

என்று யாரா​வது கேட்​டால் இந்த சுகு​ணாக்​க​ளி​டம் அனுப்பி வையுங்​கள்.​

இரண்டு பேருமே இசை கற்​றுக் கொடுப்​ப​தால் அவர்​க​ளது சிஷ்​யர்​கள் அரங்​கம் முழு​வ​தும் ஆங்​காங்கே அமர்ந்​தி​ருந்​த​னர்.​

கச்​சே​ரி​க​ளில் இந்த அள​வுக்​குத் தாளம் போட்டு
ரசித்​த​தைப் பார்த்​த​தில்லை.​

ஒரே மாதிரி புடவை கட்டி,​​ ஒரே மாதிரி சேஷ்​டை​கள் செய்து,​​ ஒரே மாதிரி அபஸ்​வ​ரம் பாடி....​ இது எது​வுமே கிடை​யாது.​ ​

இது ஒரு வெற்​றிக் கூட்​டணி.​

அடுத்த சீச​னில் நிச்​ச​ய​மாக நான்​கைந்து கச்​சே​ரி​க​ளா​வது இவர்​கள் இணைந்து பாடு​வார்​கள் என்று எதிர்​பார்க்​க​லாம்.​ பாட​வேண்​டும்!​

Kannan Natarajan

unread,
Dec 18, 2009, 6:30:52 AM12/18/09
to Min Thamizh
முன்னோடிகள்

தியா​க​ரா​ஜ​ சு​வா​மிக​ளின் நேரடி சிஷ்​யப் பரம்ப​ரையைச் சேர்ந்​த​வர் சேஷய்​யர்.​
http://www.dinamani.com/Images/article/2009/12/18/music1.jpg

சேலம் மாவட்​டம் நெய்க்​கரை கிரா​மத்​தில் வாழ்ந்த சுப்​பய்​யர் என்ற தெலுங்கு பிரா​ம​ணர்.​

இவரது தந்தை திருவை​யாற்​றில் தங்கி தியா​க​ராஜ சுவா​மி​க​ளி​டம் குரு​குல வாசம் செய்​த​வர்.

சேஷய்​யர் தன் தந்​தை​யி​டமே இசைப் பயின்று தியா​க​ரா​ஜ​ சு​வா​மி​க​ளின் நேரடி சிஷ்​யப் பரம்ப்​ரையை சேர்ந்​த​வ​ரா​னார்.​

பாடு​வ​தில் மட்​டும் அன்றி,​​ பாடல்​கள் புனை​வ​தி​லும் தேர்ச்சி பெற்​றி​ருந்​தார்.​ ​​

திரு​வொற்​றி​யூர் தியா​கய்​யர் நடத்​திய இசை​ வி​ழா​வில் பல வித்​வா​
ன்ள் முன்பு 8 மணி நேரம் தொடர்ந்து தன்​யாசி இரா​கம் பாடி,​​ பின்பு பல்​லவி,​​
கல்​பனா சுரங்​க​ளும் பாடி மிகுந்த பாராட்​டைப்​ பெற்​றார்.பல வர்​ணங்​கள்,​​ கீர்த்​த​னை​கள்,​​ தில்​லா​னாக்​கள் இயற்​றி​யுள்​ளார்.​

இவ​ரு​டைய படைப்​பு​களை இவரே சுவர,​​ தாளக் குறிப்​பு​டன் எழுதி வைத்​தி​ருப்​பது சங்​கீத கலை​ஞர்​க​ளுக்​கும்,​​ இசைப் பயி​லும் மாண​வர்​க​ளுக்​கும் ஒரு அரிய
பொக்​கி​ஷ​மா​கும்.​

ஆயி​ரக்​க​ணக்​கான இரா​கங்​க​ளுக்கு இவர் ஆரோ​கண ​ -​ அவ​ரோ​கண சுரக் குறிப்​பு​களை எழுதி வைத்​துள்​ளார்.​ ​

இசை உல​கத்​திற்கு தெலுங்​கில் பல அரிய வர்​ணங்​க​ளை​யும்,​​ கீர்த்​த​னை​க​ளை​யும்,​​ தில்​லா​னாக்​க​ளை​யும் இயற்றி தனக்​கென்று ஒரு தனி முத்​தி​ரை​யைப் பதித்த ​ இவர்,​​ 1908ம் ஆண்டு அம​ரத்​வம் எய்​தி​னார்.

Kannan Natarajan

unread,
Dec 18, 2009, 6:35:20 AM12/18/09
to Min Thamizh
சுவா​ரஸ்​ய​மான சங்​க​டம்...

மியூ​சிக் அகா​த​மி​யின் சங்​கீத வித்​வத் சபை​யில் முதல் இய​லிசை விளக்​கத்​தில் நம் கலா​சா​ரத்​தை​யும், பழங்​கு​டி​யி​னர் இசை​யை​யும் நம்​மி​டையே கோத்​த​கி​ரியி​லி​ருந்து நேரிடை ஒளி​ப​ரப்​பா​கக் காட்டி விளக்​கி​னார் வெளி​நாட்டு இசை ஆய்​வா​ளர் ரிச்​சர்ட் வுல்ஃ.​

கோத்​த​கிரி மலை​வாழ் பழங்​குடி மக்​கள்,​​ தமி​ழும் - மலை​யா​ள​மும் கலந்த மொழி பேசு​வ​தா​கக் குறிப்​பிட்​டார்.​

க​ட​வுள் வழிப்​பாட்டு இசை,​​ ஒரு​வர் இறந்​த​பின் பாடப்​ப​டும் இசை என்ற இரு​வ​கைப்பட்ட இசை​யை​யும் நேரி​டை​யாக அந்​தப் பகுதி மக்​களை அழைத்து வந்து பாடி ஆட
வைத்​தார்.​

அங்​குள்ள கோவிலை வரு​டத்​திற்கு ஓர் முறையே திறப்​பார்​க​ளாம்.​

ஆண்​கள் முத​லில் நட​ன​மாட,​​ பெண்​கள் பின்பு சேர்ந்​து​கொள்​வார்​கள்.​ பின்பு அவர்​களே முடிப்​பார்​கள் என்று அவர்​க​ளின் சம்​பி​ர​தா​யத்தை விளக்​கி​னார்.​

வித்​வத் சபை​யில் எப்​போ​தும் நடக்​கும் இயல் இசை விளக்​கங்​க​ளுக்கு,​​ இது ஒரு மாறு​பட்ட விளக்​கம்.​

காலை வேளை​யில் ஒரு​வர் இறந்​த​பின் நடக்​கும் சடங்​கி​சை​யைக் கேட்க எல்​லோ​ருக்​கும் கொஞ்​சம் சங்​க​ட​மா​கத்​தான் இருந்​தது.​

ஆனா​லும், விஷ​யம் சுவா​ரஸ்​ய​மாக இருந்​தது.​

இ​ரண்​டா​வது இயல், இசை விளக்​கத்​தில் சங்​கீத ஆசார்யா பேரா​சி​ரி​யர் பி.​ கிருஷ்​ண​மூர்த்தி - தியா​க​ரா​ஜ​ரின் பாடல்​க​ளில்
"இலய விசே​ஷம்" என்ற தலைப்​பில் பல
திவ்​ய​நாம கீர்த்​த​னை​க​ளைப் பாடி​னார்.​
  • சமம்
  • கால் இடம்
  • அரை இடம்
  • முக்​கால் இடம்
  • நான்கு தள்ளி
  • ஒன்​றரை இடம்
என்று பாடல் ஆரம்​பிக்​கும் இடங்​க​ளின் வித்​தி​யா​சத்தை எடுத்​துக் காட்​டி​னார்.​

நிறைய சர்ச்​சை​க​ளு​ட​னும்,​​ வேறு​பட்​டக் கருத்​துக்​க​ளு​ட​னும் கருத்​த​ரங்​கம் முடிந்​தது.

Kannan Natarajan

unread,
Dec 18, 2009, 6:39:52 AM12/18/09
to Min Thamizh
இரட்​டை​யர் என்​றாலே விறு​வி​றுப்பு!

மி​யூ​சிக் அகா​த​மி​யில் மத்​தி​யா​னக் கச்​சேரி எப்​படி இருக்​கி​றது என்று பார்க்​க​லாம் என்று நுழைந்​தால் கர்​னா​டிகா சகோ​த​ரர்​கள் மேடை​யேறி இருந்​த​னர்.​

  • இடப்​பள்ளி அஜித்​கு​மார் வய​லின்
  • திரு​வ​னந்​த​பு​ரம் வைத்​தி​ய​நா​தன் மிரு​தங்​கம்
கர்​னா​டிகா சகோ​த​தர்​கள் என்று அறி​யப்​ப​டும்
  • கே.எஸ்.​ சசி​கி​ர​ணும்
  • பி.கணே​ஷும்
http://www.dinamani.com/Images/article/2009/12/18/music3.jpg

"சித்ர வீணை" ரவி ​கி​ர​ணின் சகோ​த​ரர்​கள்.​

இந்த நிகழ்ச்​சி​யின் சிறப்​பம்​சம்
ராகம்,​​ தானம்,​​ பல்​லவி.​

ரஞ்​சனி,​​ ஜன​ரஞ்​சனி,​​ சிவ​ரஞ்​சனி ராகங்​க​ளைக் கோர்த்து அமைத்த "சொக​சுகா மிரு​தங்க தாளமு,​​ ஸ்ரீரஞ்​சனி ராக பாரிதா" என்​கிற பல்​ல​வியை எடுத்​துக்​கொண்டு
அற்​பு​த​மாக கல்​பனா ஸ்வ​ரங்​க​ளு​டன்,​​ அனா​ச​ய​மா​கப் பாடிய இவர்​க​ளைப் பாராட்​டா​மல் இருக்க முடி​யாது.​

உச்ச ஸ்தா​யி​யி​லும்,​​ கீழ் ஸ்தா​யி​யி​லும் சரி ஒரு​வ​ருக்​கொ​ரு​வர் அனு​ச​ர​ணை​யா​கப் பாடி​ய​வி​தம் நிஜ​மா​கவே அசத்​தல்.​

புதிய வரவு.​

இரட்​டை​யர் சங்​கீ​தம் என்​றாலே விறு​வி​றுப்பு என்​று​தானே அர்த்​தம்!

Kannan Natarajan

unread,
Dec 18, 2009, 6:47:50 AM12/18/09
to Min Thamizh
அல்வா இனித்​தது...

மி​யூ​சிக் அகா​தெ​மி​யில் புதன்​கி​ழமை சாயங்​கா​லக் கச்​சேரி விஜய் சிவா​வு​டை​யது.​

இன்​றைய தலை​முறை இசைக் கலை​ஞர்​க​ளில் தனக்​கென ஒரு இடம் பிடித்​த​து​டன் நின்று விடா​மல்,​​ தனது சங்​கீ​தத்​தின் கெ
ர​வத்​தைக் காப்​பாற்​றிக் கொண்​டி​ருக்​கும்
அற்​பு​தக் கலை​ஞர் விஜய் சிவா.​

சாஸ்​தி​ரிய மாண்​பு​கள் சற்​றும் குறை​யா​மல்,​​ அதே நேரத்​தில்
ரசி​கர்​க​ளைத் தனது இசை​யால் கவர்ந்து இழுக்​கும் நுணுக்​கம் விஜய் சிவா​வுக்கு மட்​டுமே தெரிந்த ரக​சி​யம்.​

கெ
​ர​வ​மான சங்​கீ​தம்.​

எனக்​குத் தெரிந்து கடந்த பத்து வரு​டங்​க​ளாக விஜய் சிவா​வின் எந்​தக் கச்​சே​ரி​யும்
ரசி​கர்​களை ஏமாற்​றி​ய​தில்லை.​
http://www.dinamani.com/Images/article/2009/12/18/music5.jpg
இந்த வரு​டத்​திய அகா​தெமி கச்​சேரி மட்​டும் ஏமாற்​றுமா என்ன?​

இந்த வரு​டத்​திய கச்​சே​ரி​யின் "ஹைலைட்" "கம​னாஸ்​ர​மம்" என்​கிற
ராகம்.​

பூர்வி கல்​யா​ணியை ஒத்த இந்த மேள​கர்த்தா
ராகம் அதி​க​மாக இசைக்​கப் படா​தது.​

மிஸ்ர சாப்​பில்,​​ "இது நீக்கு நியா​யமா" என்​கிற மைசூர் வாசு​தே​வாச்​சா​ரின் சாகித்​யத்​தைத் தேர்ந்​தெ​டுத்து நிர​வல்​பாடி,​​ ஸ்வ​ரம் பாடி ஜமாய்த்து விட்​டார் மனி​தர்.​


ராக ஆலா​ப​னை​யில் கம​னாஸ்​ர​மத்​தின் பாவங்​களை அவர் வெளிக் கொணர்ந்த போது,​​ ஏதோ நாற்​பது ஆண்​டுக்கு முந்​தைய சங்​கீத சாம்​ராஜ்​யத்​தில் சஞ்​ச​ரித்த
சுகா​னு​ப​வம்.​

நன்றி,​​ விஜய் சிவா.​

டி.கே.ஜெய​ரா​ம​னின் சீடர் விஜய் சிவா.​

இவர் பாடிய பைரவி ஜெய​ரா​மன்,​​ பட்​டம்​மாள் பாணி​யில் அத்​தனை சிறப்​பம்​சங்​க​ளை​யும் வெளிப்​ப​டுத்​தி​ய​தில் வியப்​பென்ன இருக்​கி​றது?​

  • ஆர்.கே.​ ஸ்ரீராம்​கு​மார் வய​லின்
  • திருச்சி சங்​க​ரன் மிரு​தங்​கம்
  • சுரேஷ் கடம்
திருச்சி சங்​க​ர​னும்,​​ சுரே​ஷும் வாசித்த "தனி" இருக்​கி​றதே,​​ அதைப் பற்​றித் தனி​யா​கவே ஒரு கட்​டுரை எழு​த​லாம்.​

கேன்​டீ​னுக்கு எழுந்து போன​வர்​க​ளைக்​கூ​டத் திருப்பி அழைத்து வந்த வாசிப்பு.​

அகா​தெமி அரங்​கமே தாளம் போட்டு
ரசித்த தனி​யா​வர்​த​னம் அது.​

வி​ஜய் சிவா​வின் கச்​சேரி நன்​றாக இருந்​தது என்று சொல்​வது அல்வா சுவை​யாக இருந்​தது என்று சொல்​வ​தைப் போல!

Kannan Natarajan

unread,
Dec 18, 2009, 6:54:19 AM12/18/09
to Min Thamizh
அம்​மணி ஏமாற்றி விட்​டார்...

வி​யா​ழக்​கி​ழமை (17/12/09) நண்​பக​லில் ஒரு ஏமாற்​றம் காத்​தி​ருக்​கி​றது என்று தெரிந்​தி​ருந்​தால் மியூ​சிக் அதா​தெமி பக்​கத்​தி​லேயே போயி​ருக்க மாட்​டோம்.​

வசுதா கேசவ் ஒரு வள​ரும் நட்​சத்​தி​ர​மா​யிற்றே.​

http://www.dinamani.com/Images/article/2009/12/18/music4.jpg

ஊரெல்​லாம் இவர் புக​ழைப் பாடு​கி​றதே.​

இவர் எப்​ப​டிப் பாடு​கி​றார் கேட்​க​லாம் என்று போனால்,​​ மிஞ்​சி​யது என்​னவோ ஏமாற்​றம்​ தான்.​

நான் எப்​ப​டிப் பாடி​னா​லும் நன்​றாக இருக்​கும் என்று ஒரு பாட​கர் நினைக்​கத் தொடங்கி விட்​டால்,​​ அவர் ஒரு பாட்​டுக்​குப் பாடு​வார்,​​ குரல் ஒரு பாட்​டுக்​குப் பாடும்.​

ஸ்ரு​தி​யும், தாள​மும் அதன் பாட்​டுக்கு உலா​வத் தொடங்​கி​வி​டும்.​

முறை​யாக சங்​கீ​தம் படித்த வசுதா கேச​வுக்கு இந்த பால பாடத்தை அவ​ரது குரு​நா​தர் கற்​றுத்​த​ரா​மல் போய்​விட்​டார் போலி​ருக்​கி​றது.​

"சாவேரி" ஆலா​பனை தப்​புச் சொல்ல முடி​யாத அள​வுக்கு நன்​றா​கவே இருந்​தது.​

ஆலா​பனை முடிந்து "வேலைய்யா,​​ தய​வில்​லையா..." என்​கிற கோட்​டீஸ்​வர ஐய​ரின் சாகித்​யத்தை,​​ கொஞ்​சம்​கூட பாவமோ, உணர்ச்​சியோ இல்​லா​மல் வசுதா கேச​வால்
மட்​டும்​ தான் பாட முடி​யும்.​

எவ்​வ​ளவு உருக்​க​மான சாகித்​யம்.​ என்ன அற்​பு​த​மான வார்த்​தைப் பிர​யோ​கங்​கள்.​

கோட்​டீஸ்​வர ஐயர் கேட்​டி​ருந்​தால் கொலையே விழுந்​தி​ருக்​கும்.​

இ​லக்​கண சுத்​த​மாக இருந்​தது வசுதா பாடிய சுப​பந்​து​வ​ராளி.​ கொஞ்​சம் கூடக் குறை சொல்ல முடி​யாது.​

சங்​கீ​தம் என்​பது இலக்​கண சுத்​தம் மட்​டு​மல்ல,​​ அம்​மணி...​

நமது கற்​ப​னை​யும்,​​ பாவ​மும் சேரும்​போ​து​ தான் அதற்கு ஜீவன் வரும்.​

ராகத்​தின் ஜீவன் வெளிப்​ப​ட​வில்லை என்​பது ஒரு​பு​றம் இருக்​கட்​டும்.​ தீக்ஷி​த​ரின் "ஸ்ரீ சத்​ய​நா​ரா​ய​ணம்" என்​கிற கிரு​தி​யை​யா​வது பாவத்​து​ட​னும்,​​ உணர்​வு​
பூர்​வ​மா​க​வும் கையாண்​டாரா என்​றால் அது​வும் இல்லை.

​வ​சுதா கேச​வுக்கு நல்ல குரல் வளம் இருக்​கி​றது.​ கொஞ்​சம் சிர​மப்​பட்டு சாத​கம் செய்​தால் அற்​பு​த​மான குர​லாக ஆகர்​ஷிக்​கும்.​

காலப்​பி​ர​மா​ணம் கச்​சி​த​மா​கவே இருக்​கி​றது.​ ஸ்வ​ரப்​பி​ரஸ்​தா​ரங்​க​ளில் இன்​னும் சற்று ஆழ​மும்,​​ அழுத்​த​மும்,​​ வேக​மும் இருந்​தால் நன்​றாக இருக்​கும்.​

உச்​ச​ரிப்​பில் கவ​ன​மும்,​​ பாடாந்​த​ரத்​தில் சிரத்​தை​யும்,​​ சாத​க​மும் வசுதா கேச​வின் அத்​தி​யா​வ​சி​யத் தேவை​கள்.​

குற்​றம் சொல்​கி​றார்​கள் என்று கோவப்​ப​டா​மல்,​​ குறை​க​ளைக் களை​வ​தில் கவ​னம் செலுத்​தி​னால் கர்​னா​டக சங்​கீ​தத்​துக்கு ஒரு நல்ல கலை​ஞர் கிடைப்​பார்.​

இல்​லை​யென்​றால் நஷ்​டம் நிச்​ச​ய​மாக சங்​கீ​தத்​துக்​கும்,​​
ரசி​கர்​க​ளுக்​கும் அல்ல.

Kannan Natarajan

unread,
Dec 18, 2009, 7:02:34 AM12/18/09
to Min Thamizh
நேர​மா​வது...​ கால​மா​வது...

நா​ரத கான சபை​யில் வியா​ழக்​கி​ழமை (17/12/09) டாக்​டர் கணே​ஷி​டம் இசை நிகழ்ச்சி.​

மகா​ரா​ஜ​பு​ரம் சந்​தா​னத்​தின் சீடர்.​

குருவே இவ​ருக்​குள் கூடு பாய்ந்து விட்​டாரோ என்று சந்​தே​கப்​பட வைக்​கும் சங்​கீ​தம்.​

ம​ஹா​ரா​ஜபு​ரம் சந்​தா​னத்​தின் குரல் வளம்.​ அப்​ப​டியே இருப்​பது என்​பது உண்​மை​யி​லேயே வியப்​பா​கத்​தான் இருக்​கி​றது.​

குரல் மட்​டு​மல்ல,​​ சங்​கீத ஞான​மும் அப்​ப​டியே...​

  • கண்​ட​தேவி விஜ​ய​ரா​க​வன் வய​லின்
  • சிதம்​ப​ரம் பால​சங்​கர் மிரு​தங்​கம்
  • தீன​த​யா​ளன் மோர்​சிங்
"வக்ர துண்ட மஹா​காய" என்ற சுலோ​கத்​து​டன் பிள்​ளை​யார் சுழி போட்டு தனது நிகழ்ச்​சி​யைத் தொடங்​கி​னார் டாக்​டர் கணேஷ்.​

எடுப்​பும், தொடுப்​பும் களை​கட்ட வைத்​தது.​

http://www.dinamani.com/Images/article/2009/12/18/music6.jpg

"பௌளி"
ராகத்​தில்,​​ கண்​ட​சாபு தாளத்​தில் தியா​கய்​ய​ரின் "மேலு​கோ​வய்ய" ​தொ​டர்ந்​தது "கம்​பீர நாட்டை"யில்,​​ ஆதி தாளத்​தில் மைசூர் மஹா​ரா​ஜா​வின்
"ஸ்ரீஜா​லந்தா" கீர்த்​த​னை​யும் அழ​கா​கப் பின்னி பிணை​யப்​பட்ட கல்​ப​னா​சு​வ​ரங்​க​ளும்.​

வ​சந்​த​மாக வீசி​யது இன்​றைக்கு இவர் பாடிய "வசந்த பைரவி"
ராக ஆலா​பனை.​ முத்​து​சு​வாமி தீட்​சி​த​ரின் "ப்ர​சன்ன வெங்​க​டேச்​வ​ரம்" கீர்த்​த​னை​யும்,
கல்​பனா சுவ​ரங்​க​ளும் அசத்​தின.​

பி​ரதி மத்​ய​மத்​தில் வாசஸ்​பதி
ராகத்​தில் தியா​கய்​ய​ரின் "கண்​ட​ஜூ​டுமி" கீர்த்​தனை உசத்​தி​யான ரகம்.​

விறு​வி​றுப்​பாக நிர​வல்,​​
ரம்​மி​ய​மான கல்​பனா சுவ​ரங்​கள்.​

சு​ருட்டி
ராகத்​தில்,​​ ஆதி தாளத்​தில் கோபா​ல​கி​ருஷ்ண பார​தி​யின் "கன​க​சபை திரு நட​னத்​தை"த் தொடர்ந்து,​​ வீசும் தென்​ற​லாய் வந்​தது சங்​க​ரா​ப​ரண ராகம்.​

ரஞ்​ச​க​மான ராக ஆலா​பனை.​

வியா​ழக்​கி​ழ​மைக்​குப் பொருத்​த​மாய் சுப்​ப​ராம தீட்​சி​த​ரின் சங்​க​ரா​சார்​யம் கிருதி.​ இன்​றைய கச்​சே​ரி​யின் "ஹைலைட்" சங்​க​ரா​ப​ர​ணம் ​தான்.​ ​

ஞானா​னந்​தர்​மேல் ஹரி​தாஸ்​கிரி அவர்​கள் ஆபேரி
ராகத்​தில் இயற்​றிய "ஞானா​னந்த குரும்" என்ற பாடல்,​​ ராக​வேந்​தர் மேல் கம​லேச விட்​ட​ல​ரின்
"துங்​கா​தீ​ர​வி​ரா​ஜம்",​​ சாய் பஜ​னு​டன் கச்​சேரி நிறை​வாய் அமைந்​தது.​

அதி​காலை பத்து மணிக் கச்​சேரி என்​றால்​ தான் என்ன?​

சுக​மான நிறை​யான நிகழ்ச்​சி​யைக் கேட்ட திருப்தி.​

நல்ல சங்​கீ​தம் கேட்க நேரம் காலம் என்ன வேண்​டிக் கிடக்​கி​றது?

Kannan Natarajan

unread,
Dec 18, 2009, 7:09:24 AM12/18/09
to Min Thamizh
இதுக்குப் போயி பயப்​ப​ட​லாமா...?

நாரத கான சபை​யில் வியா​ழக்​கி​ழமை டாக்​டர் கணே​ஷின் கச்​சே​ரி​யைத் தொடர்ந்து மினி ஹாலில் பாரதி ராம​சுப்​பன் பாடு​கி​றார் என்று கேட்டு உள்ளே நுழைந்​தோம்.​

பி.எஸ்.​ நாரா​யண ஸ்வா​மி​யின் சிஷ்​யை​யா​யிற்றே,​​ சோடை போகாது என்​கிற தைரி​யம்​ தான்.​
  • திரு​ம​ரு​கல் தினேஷ்​கு​மார் வய​லின்
  • ஜி.கே.​ கணேஷ் மிரு​தங்​கம்
மூன்று காலத்​தில்,​​ ஆதி தாளத்​தில் "வன​ஜாக்ஷீ" "கல்​யாணி" வர்​ணம்;​ பில​ஹரி மூன்று காலத்​தில்,​​ ஆதி தாளத்​தில் "வன​ஜாக்ஷீ' "கல்​யாணி' வர்​ணம்;​ பில​ஹரி ராக
ஆலா​பனை,​​ சுவாதி திரு​நாள் மஹா​ரா​ஜா​வின் "ஸ்மர சதா மானச" கீர்த்​தனை,​​ சுருக்​க​மான நிர​வல் ஸ்வ​ரம்.​

வி​ளம்ப காலத்​தில் "
லலிதா" ராகத்​தில் அமைந்த தீட்​சி​த​ரின் "ஹிரண்​ம​யீம் லட்​சு​மீம்" ​ கிரு​தியை மிக அழ​காக அட்​சர சுத்​த​மா​கப் பாடி​னார்.​

பார​தி​யி​டம் பாவத்​து​ட​னும்,​​
ராகத்​தின் ஜீவன் கெடா​ம​லும் பாட வேண்​டும் என்​கிற கவ​னம் நிறை​யவே இருக்​கி​றது.​

அது​தான் இவ​ரது சங்​கீ​தத்​தில் இருக்​கும் "ஸ்பெ​ஷல்" கவர்ச்சி.​

http://www.dinamani.com/Images/article/2009/12/18/music7.jpg

"சந்​திர ஜோதி"
ராகத்​தில் தியா​கய்​ய​ரின் "சசி​வ​தனா"விற்​குப் பிறகு வந்​தது ஆபத்து!​

ஆபத்து என்று சொன்​னால் ஏதோ அப​வா​தம் நடந்​து​விட்​ட​தாக நினைத்து விடா​தீர்​கள்.​

வள​ரும் கலை​ஞர்​கள் எல்​லோ​ருக்​குமே கச்​சே​ரி​யின்​ போது ஏற்​ப​டும் அதே சறுக்​கல் ​தான் பார​திக்​கும் இன்​றைய நிகழ்ச்​சி​யில் ஏற்​பட்​டது.​

அந்த சறுக்​க​லுக்​குக் கார​ணம் பதட்​டம்​ தான் என்​பதை அவர் புரிந்து கொண்​டாரோ இல்​லையோ கேட்​கும்
ரசி​கர்​கள் புரிந்து கொண்​ட​னர்.​

க​ர​ஹ​ரப்​பி​ரியா பாடு​கை​யில் ஓர் பதட்​டம்.​

பதட்​டத்​தின் விளைவு ஆங்​காங்கே இட​றல்.​ சிர​மப்​பட்டு சுதா​ரித்​துக் கொண்​டு​விட்​டார்.​

இதுக்​கெல்​லாம் பதட்​டப்​பட்​டால்,​​ இனி சாதிக்க எவ்​வ​ளவு இருக்கு பாரதி...​ இதுக்​குப் போயி பயப்​ப​ட​லாமா...?​

த​னிக்​குப் பின் காபி​யில் அம்​பு​ஜம் கிருஷ்​ணா​வின் "அர​விந்த பத​ம​லர்",​ அவ​ச​ர​மா​கத் தவழ்ந்து வந்​தது.​

சிந்து பைர​வி​யில் "வந்து,வந்து முன் தவழ்ந்து" என்ற திருப்​பு​கழ்.​

தியா​கய்​ய​ரின் "ஷோபானே" கீர்த்​த​னை​யு​டன் ஷோப​ன​மாய் முடித்​தார் பாரதி.​

பா​ரதி
ராம​சுப்​ப​னைப் பற்றி ஒரு வார்த்தை.​

இன்​னும் இரண்டு சீசன் கழித்து பாருங்​கள்.​

இவர் ஒரு நம்​பிக்கை நட்​சத்​தி​ரம்.

Kannan Natarajan

unread,
Dec 18, 2009, 11:08:33 PM12/18/09
to Min Thamizh
உயி​ரோட்​டம் மிஸ்​ஸிங்...​ மிஸ்...!

ஏர்-​டெல் சிங்​க​ரின் குரல் பயிற்​சி​யா​ளர் அனந்த வைத்​ய​நா​த​னின் பக்தி இசை​யைக் கேட்​க​லாம் என்று ஆசை​யோடு வெள்​ளிக்​கி​ழமை (18/12/09) மதி​யம் நார​த​ கான
சபா​வில் நுழைந்​த​போது ஒரு அதிர்ச்சி.​

அவ​ருக்குப் பதில் திரு​மதி ஜெயந்தி ஸ்ரீதர்

http://www.dinamani.com/Images/article/2009/12/19/music8.jpg

"பந்​து​வ​ராளி"
ராகத்​தில் "நினு​நேர நம்​மி​நா​னுரா"வின் சர​ணம் "வேத​சாஸ்த்ர புராண"வில் நிர​வல் செய்து கொண்​டி​ருந்​தார்.​

ஞானம் இருந்​தா​லும் அதை வெளிப்​ப​டுத்த சில​ரால்​ தான் முடி​யும்.​ இசைக்கு,​​ ஏற்ற இறக்​கம்,​​ வல்​லி​னம் -​ மெல்​லி​னம் இவை அத்​தி​யா​வ​ச​மா​னவை.​

ஜெயந்தி ஸ்ரீத​ருக்கு நல்ல குரல் வளம்.​ நினைத்​த​தெல்​லாம் குர​லில் பேசு​கி​றது.​ ஆனால் உயி​ரோட்​டம்?​

குரல் மட்​டும் நன்​றாக இருந்​தால் போதுமா?​

பாவ​மும்,​​ சாகித்ய சுத்​த​மும்,​​ கற்​பனா சக்​தி​யும் இல்​லா​மல் போனால் குரல் நன்​றாக இருந்து என்ன பயன்?​

சினி​மாப் பின்​ன​ணிப் பாட​கி​யாக வேண்​டு​மா​னால் போக​லாம்.​

பந்து​வ​ராளி
ராக ஆலா​பனை நல்ல கற்​பனை வளத்​து​டன் இருந்​தது என்​பதை மறுக்​க​வில்லை.​

நிர​வல் இலக்​க​ணம் என்​ன​வா​யிற்று?​

எடுப்​பும், அறு​தி​யும் முடிக்​கும்​போது மட்​டும் எட்​டிப் பார்த்​தன.​சரி, ​​ திருப்​பா​வைக்கு விஸ்​தார ஆலா​பனை தேவையா?​

அது போகட்​டும்,​​ தமிழ் சாகித்​யங்​களை இப்​ப​டியா உச்​ச​ரிப்​பது?​

அது​வும் ஆண்​டாள் திருப்​பா​வையை?​

தமி​ழில் கூட சாகித்ய சுத்​தம் இல்​லா​மல் போனால் எப்​படி?​

"ஓங்கி உல​க​ளந்த உத்​த​மன்" ஊத்​த​ம​னா​கி​விட்​டானே,​​ இது நியா​யமா?​

தீட்​சி​த​ரின் "நீலோத்​ப​லாம்​பி​கா​யாம்" கீர்த்​தனை அவ​சர அவ​ச​ர​மாக ஒப்​பிப்​ப​து​போல் இருந்​தது.​

சாவேரி
ராக ஆலா​பனை விவ​ர​மாக இருந்​தா​லும் மன​தைத் தொட​வில்லை.​

"ஆஞ்​ச​நேய
ரகு​ராம" கீர்த்​த​னையை அழுத்​த​மா​கப் பாடி​னார்.​ ஆனால் கல்​ப​னா​சு​வ​ரம் குறைப்பு ஏது​மின்றி உப்​பு​சப்​பில்​லா​மல் இருந்​தது.​

தொடர்ந்து தனி.​

  • கும்​ப​கோ​ணம் ராம​கி​ருஷ்ணா மிரு​தங்​கத்​தி​லும்
  • நாரா​ய​ணன் கடத்​தி​லும்
திறம்​பட வாசித்​தார்​கள்.​

நல்ல ஈடு!​ சுக​மான வாசிப்பு!​

கல்​யாணி சங்​க​ரின் வய​லின் வாசிப்பு அனு​ச​ர​ணை​யாக இருந்​தது.

​க​ட​வுள் நல்ல குரல் வளத்​தைக் கொடுத்​தி​ருக்​கி​றார்.​

ஒழுங்​காக சாத​கம் செய்து,​​ முறை​யா​கப் பாடந்​தி​ரங்​களை அப்​பி​யா​சம் செய்​தால் இந்​தக் குர​லுக்கு எட்ட வேண்​டிய உய​ரம் அதி​கம்.​

அதற்​குத் தேவை உழைப்பு.​ பார்ப்​போம்.​ அடுத்த சீச​னில் முன்​னேற்​றம் தெரி​கி​றதா என்று...

Kannan Natarajan

unread,
Dec 18, 2009, 11:20:12 PM12/18/09
to Min Thamizh
எள் போட இட​மில்லை!

வியா​ழக்​கி​ழமை (17/12/09) பார்த்​த​சா​ரதி சுவாமி சபா​வில் எள் போட இட​மில்லை.​

அப்​படி ஒரு கூட்​டம்.​

சர்க்​க​ரை​யைத் தேடி எறும்​பு​கள் மொய்ப்​ப​து ​போல சபாவை
ரசி​கர்​கள் மொய்த்​த​னர்.​ கார​ணம் அன்​றைக்கு பாம்பே ஜெயஸ்ரீ பாடு​கி​றார் என்​ப​து​ தான்.​

அன்று முதல் இன்று வரை,​​ பாம்பே ஜெய​ஸ்ரீ​யின் கச்​சேரி என்​றால் அதற்கு ஒரு தனி அந்​தஸ்து.​

http://www.dinamani.com/Images/article/2009/12/19/music2.jpg

இத்​த​னைக்​கும் அவர் ஒரு விளம்​ப​ரப் பிரி​யரோ,​​ அவ​ரது சங்​கீ​தத்​தில் தேவை​யில்​லாத கவர்ச்​சியோ கிடை​யாது.​

சாஸ்த்​ரீய மணம் கம​ழும் ஸ்ருதி சுத்​த​மான சங்​கீ​தம் ஜெய​ஸ்ரீக்கு மட்​டுமே சொந்​தம்.​


முகத்​தில் சற்று முதுமை அதி​க​மா​கவே தெரி​கி​றது என்று
ரசி​கர்​கள் பேசிக்​கொண்​ட​னர்.​

ஆனால் சங்​கீ​தத்​தில் நாளுக்கு நாள் இளமை அதி​க​ரித்து வரு​கி​றது.​

அவ​ருக்கு ஹெச்.எஸ்.​ பாஸ்​கர் வய​லின்,​​ அருண் பிர​காஷ் மிரு​தங்​கம்,​​ கே.வி.​ கோபா​ல​கி​ருஷ்​ணன் கஞ்​சிரா.​


"நாட்டை"யில் "சரி​சீ​ருகா..." என்று எடுத்த எடுப்​பி​லேயே கச்​சேரி களை​கட்​டி​விட்​டது.​

சாதா​ர​ண​மாக ஜெய​ஸ்ரீ​யின் கச்​சே​ரி​யில் விறு​வி​றுப்​பை ​விட செ
க்​யம்​ தான் அதி​க​மாக இருக்​கும்.​

இந்​தக் கச்​சேரி விதி​வி​லக்கு.​

கன​கச்​சி​த​மான காலப் பிர​மா​ண​மும்,​​ ஸ்ருதி சுத்​த​மான சங்​கீ​த​மும் அமைத்​து​விட்​டால்,​​ கேட்​கவா வேண்​டும்?​


இது​வரை எத்​த​னையோ பேர் "மோக​னம்" பாடிக் கேட்​டி​ருக்​கி​றோம்.​

ஆனால் இந்த நிகழ்ச்​சி​யில் ஜெயஸ்ரீ பாடிய "மோக​னம்" இருக்​கி​றதே,​​ அதற்கு ஈடு இணை ​ சொல்ல முடி​யாது.​

பவழ மல்​லியை மேலே உதிர்த்​தாற்​போல ஒரு சுகம்.​


எ​டுத்​துக் கொண்ட சாகித்​யம் "எவ​ருறா...",​ அதில் "பவன ரக்ஷக நித்​யோத்​சவ" என்​கிற இடத்​தில் நிர​வல்,​​ ஸ்வ​ரம்.​


தொடர்ந்து "வசந்தா"வில் தீக்ஷி​த​ரின் "ஹரி​ஹ​ர​புத்​ரம்".​

மத்​ய​ம​கா​லத்​தில் ஜெயஸ்ரீ ஸ்வ​ரம் பாடிய சுகமே அலாதி!​

என்​ன​வொரு பாவம்.​

ஸ்பஷ்​ட​மான பாடாந்​த​ரம்.​ சபாஷ்....​ பலே...​ என்று அடிக்​க​டி​தொரு தடவை கூற​லாம் போலி​ருந்​தது.​

பாவ பூர்​வ​மா​கப் பாடு​வ​தாலோ என்​னவோ,​​ ஜெயஸ்ரீ பாடும்​போது அதற்கு ஒரு தனி தெய்​வீ​கக் களை ஏற்​பட்டு விடு​கி​றது.​


அன்​றைய நிகழ்ச்​சி​யின் சிறப்​பம்​சம் ஜெயஸ்ரீ பாடிய
ராகம்,​​ தானம்,​​ பல்​ல​வி​ தான்.​ அதற்கு அவர் எடுத்​துக்​கொண்ட ராகங்​கள் ஹம்​ச​நா​தம்,​​ கேதா​ரம் மற்​றும்
பூர்வ கல்​யாணி.​

ஒவ்​வொரு
ராக​மா​கப் பாடி,​​ திருப்​பிப் பாடி அப்​ப​டியே ரசி​கர்​களை மெய்​ம​றக்​கச் செய்​து​விட்​டார்.​

ஆதி தாளத்​தில் கண்ட நடை​யில்,​​ "ஆனந்த நட​ன​மா​டி​னார்,​​ ததீம் ததீ​மென..." என்​கிற பல்​ல​வி​யில் அவர் "ததீம்...​ ததீ​மென...." என்​பதை பாடிய விதமே
மெய்சி​லிர்க்க வைத்​தது.​

அப்​படி ஒரு பாவம்.​


ஸ்வ​ரம் பாடும்​போது வசந்​தா​வை​யும் அவர் தொட்​டுக் காட்​டி​யதை சிலா​கிக்​கா​மல் போனால் அப​ரா​தம்.​


பாகேஸ்​வ​ரி​யில் தில்​லானா பாடி பாம்பே ஜெயஸ்ரீ முடித்​த​போது,​​ கச்​சேரி முடிந்​து​விட்​டதே என்று தோன்​றி​யது.​

மெரினா கடற்​க​ரை​யில் கால்​க​ளில் அலை​கள் மோத நடந்து செல்​லும் சுகம் ஜெய​ஸ்ரீ​யின் சங்​கீ​தம் தரும் சுகம்.​

கடந்த 15 ஆண்​டு​க​ளாக சீச​னுக்கு சீசன் ஜெய​ஸ்ரீ​யின் சங்​கீ​தத்​தில் மெருகு ஏறிக் கொண்டே போகி​றதே,​​ அதற்கு என்ன கார​ணம்?​

தெரிந்​தால் சொல்​லுங்​கள்...​

Kannan Natarajan

unread,
Dec 18, 2009, 11:25:17 PM12/18/09
to Min Thamizh
பிரு​ஹ​தேசி

கண்​ணைக் கட்​டிக் காட்​டில் விட்​டால் நாம் என்ன செய்​வோம்?​

இருட்​டில் துழா​வு​வோம்;​ பயப்​ப​டு​வோம்.​

ஆனால், இரு ​கண்​ணும் தெரி​யாத அனில் துகார் எல்​லோ​ரை​யும் மூக்​கில் விரல் வைக்க வைத்​தார்.​

http://www.dinamani.com/Images/article/2009/12/19/music6.jpg

மதங்​க​ரின் "பிரு​ஹ​தேசி" இசை​நூ​லைப் பற்​றிப் பேசி​னார் இவர்.​

மதங்​கர்​ தான் எழு​தி​னார் என்​ப​தற்கு அத்​தாட்​சி​யாக "மதங்க உவாச" என்று தொடங்​கும் சுலோ​கங்​களை ஆதா​ர​மா​கக் காட்​டி​னார்.​

தேசி, ​​ நாத​சு​வ​ரம்,​​
சுருதி இவை​க​ளின் உறவு,​​ வாதி,​​ சம்​வாதி,​​ விவாதி சுவ​ரங்​கள்,​​ சுவ​ரங்​க​ளின் இடை​வேளை,​​ வர்​ணம்,​​ ஸ்தாயி,​​ ஆரோஹி,​​ அவ​ரோஹி
இவை​களை எந்த அத்​தி​யா​யத்​தில் எழு​தி​யுள்​ளா​ரென்​பதை விளக்​கி​னார்.​

சில அத்​யா​யங்​கள் கிடைக்​கா​மல் போன​தைக் குறிப்​பிட்​டார்.​

கிடைக்​காத அத்​யா​யங்​க​ளைப் பற்றி குறிப்​பிட்​டி​ருக்​கும்
  • அபி​னவ குப்தா
  • சார்ங்​க​தே​வர்
  • நான்ய தேவர்
  • மஹா​ராணா கும்பா
  • சோம​நா​தர்
பெயர்​க​ளைக் குறிப்​பிட்​டார்.​

முழு விவ​ரம் கூற ஒரு பக்​கம் போதாது.​ 

ப​வர் பாயிண்ட் மூலம் டாக்​டர் என்.​
ராம​நா​தன் திரை​யில் விவ​ரங்​க​ளைக் ​காண்​பிக்க,​​ திரை​யைப் பார்த்​துக்​கொண்டே பேசும் அனில், கொட்​டும் நீர் வீழ்ச்​சி​யாய்
பேசி​னார்.​

அவ​ரு​டைய திறமை கேட்​போரை நெகி​ழ​வைத்​தது.

Kannan Natarajan

unread,
Dec 18, 2009, 11:31:52 PM12/18/09
to Min Thamizh
இசை கேட்​டால்...

அகா​த​மி​யின் சங்​கீத வித்​வத் சபை​யில் இன்​றைய முதல் இய​லிசை விளக்​க​மாக இசைச் சிகிச்சை முறை​யைப் பற்றி கேர​ளாவி​லி​ருந்து டாக்​டர் சுவர்ணா
நல​பத் மிக அற்​பு​த​மாக செயல்​முறை விளக்​கம் அளித்​தார்.​

http://www.dinamani.com/Images/article/2009/12/19/music5.jpg

நாம் இருக்​கும் இடத்​தைப் பொருத்து இசை​யின் சப்த அளவு இருக்க வேண்​டும் என்​றும்,​​ உதா​ர​ணத்​திற்கு,​​ ஒரு நல்ல உணவு விடு​தி​யில் இருக்​கும்​போது 50
டெசி​பெ​லும்,​​ சப்​த​மில்​லாத இர​வில் 40 டெசி​பெ​லும்,​​ நம்​மு​டைய மூச்சு காற்று மட்​டும் காதில் கேட்​கும்​போது 10 டெசி​பெ​லும் இருக்​க​வேண்​டும் என்று
அவ​ரு​டைய ஆய்​வில் கண்​டு​பி​டித்​த​தைத் தெரி​வித்​தார்.​

கோ​லொ​னோஸ்​கோபி என்​னும் ஒரு மருத்​துவ சோத​னையை செய்​யும்​போது,​​ இசை கேட்​ட​வர்​க​ளுக்கு வலி குறை​வாக இருந்​த​தை​யும்,​​ மருந்​தின் அள​வும்
குறை​வா​கவே கொடுத்​த​தை​யும் குறிப்​பிட்​டார்.​

இதைப்​போல் மறதி,​​ மன​வ​ளர்ச்சி குறைவு,​​ இத​யக்​கோ​ளாறு இருப்​ப​வர்​க​ளும் இசைக் கேட்​ட​போது,​​ அவர்​க​ளு​டைய உடல் நிலை​மை​யில் முன்​னேற்​றம்
இருந்​த​தா​கத் தெரி​வித்​தார்.​

ஆயுர்​வே​தம்,​​ ஆங்​கில மருத்​து​வம்,​​ யோகா,​​ இசை,​​ இசை​இ​யல்
ராக சிகிச்சை மற்​றும் உட​லி​லுள்ள சக்​க​ரம் முத​லி​ய​வற்றை சேர்த்து அவர் சிகிச்சை
அளிப்​ப​தா​கக் கூறி​னார்.​

கேர​ளாவி​லி​ருப்​ப​வர்​க​ளுக்கு புரி​வ​தற்​காக மலை​யா​ளத்​தில் 72 மேள​கர்த்தா செய்​யப்​பட்​டி​ருப்​ப​தாக அவர் கூறி​ய​போது,​​
ரசி​கர்​க​ளி​டையே சல​ச​லப்பு.​

கேள்வி நேரத்​தின் போது பேரா​சி​ரி​யர் டி.ஆர்.​ சுப்​பி​ர​ம​ணி​யம் எல்​லோ​ரு​டைய சந்​தே​கத்​தை​யும் தன்​னு​டைய கேள்வி மூலம் நிவர்த்தி செய்​தார்.​

சுவர்ணா நல​பத் சொல்ல நினைத்​தது "72 மேள​கர்த்​தா​வில் பாடல்​கள்."

"அப்​பாடா" என்று இருந்​தது!

Kannan Natarajan

unread,
Dec 18, 2009, 11:40:27 PM12/18/09
to Min Thamizh
ரசி​கா​வுக்கு ஒர் வேண்​டு​கோள்!

வெண்​க​ல​நா​த​மாய் குரல்,​​ கச்​சி​த​மாய் நிர​வ​லும்,​​ சுவ​ரங்​க​ளும் இடத்​துக்கு வந்து விழு​கின்​றன.​

சுத்​த​மான பாடாந்​த​ரம்.​

http://www.dinamani.com/Images/article/2009/12/19/music3.jpg

இவ்​வ​ளவு இருந்​தா​லும்,​​ இவர் முக்​கி​ய​மாக கவ​னிக்க வேண்​டி​யது,​​ மாதா​வை​யும்,​​ பிதா​வை​யும்.​ வேறென்ன?​

சுரு​தி​யை​யும்
லயத்​தை​யும் ​தான்.​

சுருதி விலகி,​​
லயம் இழு​ப​றி​யாகி இவ​ரு​டைய வித்​வத்​துக்கு இடைஞ்​சல் கொடுக்​கி​றது.​

நாட்​டைக்​கு​றிஞ்சி வர்​ணத்​து​டன் தாம​த​மாக கச்​சேரி ஆரம்​பித்​தது.​ அடா​ணா​வில் மைசூர் மஹா​ரா​ஜா​வின் "ஸ்ரீ மஹாகண​பதே",​ தன்​யா​சி​யில் சுருக்​க​மான ஆலா​பனை,​​
பால​கி​ருஷ்​ணன் பாத​ம​லர் கீர்த்​தனை என்று மட​ம​ட​வென்று ஒன்​றன்​பின் ஒன்​றா​கப் பாடி​விட்டு விஸ்​தா​ர​மான "பந்​து​வ​ராளி" ஆலா​ப​னை​யில் இறங்​கி​னார்
ரசிகா.​

தியா​கய்​ய​ரின் "சம்போ மஹா​தேவா" என்​கிற கீர்த்​த​னை​யில் நிர​வல் சுவ​ரம் பாடி​னார்.​

ஆங்​காங்கே ஸ்ரு​தி​ சே​ரா​மல் அவ​ரை​யும் சிர​மப்​ப​டுத்தி, நம்​மை​யும் சிர​மப்​ப​டுத்​தி​யது.​

தொடர்ந்து, வஸந்​தா​வில் அரு​ணா​சால கவி​ரா​ய​ரின் "கண்​டேன் கண்​டேன்" பாடல்.​கச்​சேரி செய்​ப​வ​ருக்கு கால நிர்​ண​யம் மிக முக்​கி​யம்.​

நான்கு மணிக்கு முடிக்க வேண்​டிய கச்​சே​ரி​யில்,​​ மூன்​றே​கால் மணிக்கு மேல்​ தான் கர​ஹ​ரப்​பி​ரியா
ராகத்தை ஆரம்​பித்​தார்.​

"ஜான​கி​பதே ஜய காருண்ய ஜலதே" கீர்த்​த​னையை மிக அழ​கா​கப் பாடி​னார்.​

நிர​வ​லும் கல்​ப​னா​சு​வ​ரங்​க​ளும் முதிர்ச்​சி​யு​டன் இருந்​தன.​

ஆனால், முறை​யா​கத் திட்​ட​மி​டா​த​தால் கர​க​ரப்​ரி​யாவை முழு​மை​யாக பயன்​ப​டுத்தி தமது குறை​க​ளைப் பூசி மெழுக முடி​யா​மல் போனது.​

தாச​ரின் "எம​னல்லி காண​னெந்து" பாட​லு​டன் நிகழ்ச்சி முடிந்​தது.​

வ​ழு​வூர் பாபு,​​ மிரு​தங்க மேதை குரு​வா​யூர் துரை​யின் சிஷ்​யர்.​ அப்​ப​ழுக்​கில்​லாத செ
க்​கி​ய​மான வாசிப்பு.​

வி.வி.எஸ்.​ மணி​யன் கஞ்சிரா மட்​டும் அன்றி அதி​ர​டி​யா​கக் கொன்​னக்​கோ​லும் சொல்லி மகிழ்​வித்​தார்.​

அ​டுத்த கச்​சே​ரி​யை​யா​வது முறை​யா​கத் திட்​ட​மிட்டு,​​ சுரு​தி​யைத் தேடி அலை​யா​ம​லும்,​​ தாளப் பிர​மா​ணம் தவ​றா​ம​லும் பார்த்​துக் கொள்​வா​ராக!​

ரசி​கா​வுக்கு ஒரு ரசி​க​னின் வேண்​டு​கோள் இது!​

Kannan Natarajan

unread,
Dec 18, 2009, 11:46:13 PM12/18/09
to Min Thamizh
என் ஆசை நிறை​வே​றுமா...?

வி​யா​ழ​னன்று(17/12/09) பார்த்​த​சா​ரதி சுவாமி சபா​வில் மத்​யா​னக் கச்​சேரி தீபி​கா​வு​டை​யது.​

ஜெயஸ்ரீ போன்ற மூத்த கலை​ஞ​ரின் சங்​கீ​தத்​துக்கு சீச​னுக்கு சீசன் மெருகு ஏறு​கி​றது என்​றால் சுதா
ரகு​நா​த​னின் சிஷ்யை தீபி​கா​வின் சங்​கீ​தத்​தில் கொஞ்​சம்​கூட
முன்​னேற்​றமே இல்​லா​மல் இருக்​கி​றதே என்​பது ஆச்​ச​ரி​ய​மாக இருக்​கி​றது.​

"கல்​யாணி"
ராகத்​தில் "வன​ஜாக்ஷி" வர்​ணத்​து​டன் தொடங்​கி​யது தீபி​கா​வின் நிகழ்ச்சி.​

தொடர்ந்து, "ஜெகன்​மோ​கினி"யில் "ஷோபில்லு" சாகித்​யம்.​

கொஞ்​ச​மா​வது பாவமோ,​​ குர​லில் ஏற்ற இறக்​கமோ இல்​லா​மல் பள்​ளிக்​கூ​டப் பாடத்தை மனப்​பா​டம் செய்து ஒப்​பிப்​பது போலவா கச்​சே​ரி​யில் வந்து பாடு​வது...?​
http://www.dinamani.com/Images/article/2009/12/19/music7.jpg

அது​வும் சுதா​வின் சிஷ்யை...!​

"ரீதி ​கெ
ளை" ராகத்​தில் "ராக​ரத்​ன​மா​லி​கசே.." சாகித்​யத்தை எத்​தனை உணர்​வு​பூர்​வ​மா​கப் பாட வேண்​டும்.​

அந்த உணர்​வும், பாவ​மும் தீபி​கா​வின் சங்​கீ​தத்​தில் காண​வில்​லையே,​​ ஏன்?​

அன்​றைய நிகழ்ச்​சி​யில் சொல்​லும்​ப​டி​யாக அவர் எடுத்​துக் கொண்​டது "தோடி"
ராக ஆலா​ப​னையை.​

நிர​வல் ஸ்வ​ரம் பாடி விஸ்​தா​ர​மா​கக் கையாண்ட தோடி​யில் குற்​றம் உண்டா என்​றால் இல்லை.​

எப்​படி இருந்​தது என்​றால் தெருக்​கோ​டி​யில் இருந்​தது.​

அவ்​வ​ளவே.​

தோடி பாடி​னால் மோடி​யில் கட்​டுப்​பட்ட பாம்​பாக
ரசி​கர்​கள் உருக வேண்​டாமோ!​

ரசி​கர்​க​ளும் உரு​க​வில்லை.​

தீபி​கா​வும் அலட்​டிக் கொள்​ள​வில்லை.​

நன்​றாக ஒப்​பனை செய்​வ​தை​யும்,​​ உடை அணி​வ​தை​யும் கற்​றுக் கொண்ட தீபிகா,​​ குரு​நா​த​ரி​டம் கற்​றுக் கொள்ள மறந்​தது நிறை​யவே இருக்​கி​றது.​

அடுத்த சீச​னில்,​​ தீபி​கா​வைப் பற்றி நான் சொன்ன குறை​கள் அனைத்​தை​யும் வாபஸ் பெறு​கி​றேன் என்று விமர்​ச​னத்​தில் பாராட்டி எழுத எனக்கு ஆசை.​

என் ஆசை நிறை​வே​றுமா,​​ தீபிகா?​

Kannan Natarajan

unread,
Dec 18, 2009, 11:55:46 PM12/18/09
to Min Thamizh
நாத இன்​பம் தந்த இன்​பம்...

"நாத இன்​பம்" சார்​பில் மைலாப்​பூர்
ராக​சுதா அரங்​கத்​தில் ரித்தா ராஜன் கச்​சேரி.​
http://www.dinamani.com/Images/article/2009/12/19/music1.jpg

ராணி ​மே​ரிக் கல்​லூ​ரி​யில் இசைத் துறைத் தலை​வ​ராக இருந்து ஓய்​வு​பெற்​ற​வர் என்​பது ஒரு​பு​றம் இருக்​கட்​டும்.​

பிருந்தா அம்​மா​வி​ட​மும் பிறகு
ராம​நாத் கிருஷ்​ண​னி​ட​மும் சிஷ்​யை​யாக இருந்​த​வர் என்​பது ரித்தா ராஜ​னின் தனிச் சிறப்பு.​

வீணை தனம்​மாள் பாணியை நிலை​நி​றுத்​தும் சங்​கீ​தம் என்​றும் சொல்​ல​லாம்.​
ராம​நாத் கிருஷ்​ணனை நினை​வு​ப​டுத்​தும் சங்​கீ​தம் என்​றும் சொல்​லாம்.​

வியா​ழ​னன்று (17/12/09) மாலை​யில் நடந்த இந்த நிகழ்ச்​சி​யில் சிறப்​பம்​சம் என்​ன​வென்​றால்,​​ மூத்த கலை​ஞ​ரான ரித்தா
ராஜன் அதி​க​மா​கக் கணக்கு விவ​கா​ரங்​க​ளில்
தன்​னைக் குழப்​பிக் கொள்​ளா​மல் சர்வ
லகு பாணி​யில் தனது கச்​சே​ரியை அமைத்​துக் கொண்​ட​து​ தான்.​

மூத்த மிரு​தங்​கக் கலை​ஞர் வேலூர்
ராம​பத்​தி​ரன் பக்​க​வாத்​தி​ய​மாக அமைந்​தது ஒரு சிறப்பு.​

வி.வி.எஸ்.​ முரளி வய​லின்.

"சல​மேல" என்​கிற "தர்​பார்"
ராக சாகித்​யத்​து​டன் தொடங்​கி​யது நிகழ்ச்சி.​

"வேக​வா​கினி"
ராகத்​தில் "சல்​லக நாதோ" என்​கிற சாகித்​யத்தை அனா​யா​ச​மாக அவர் எடுத்​த​போது சபையே நிமிர்ந்து உட்​கார்ந்​தது.​

இந்த "வேக​வா​கினி"
ராகம் இருக்​கி​றதே,​​ அது சற்று "சக்​ர​வா​கம்" போல இருப்​ப​தால் சிலரை ஏமாற்​றி​வி​டும்.​

இரண்​டா​வது காலத்​தில் ரித்தா
ராஜன் கல்​பனா ஸ்வ​ரம் பாடி​ய​போது இந்​தக் கலை​ஞ​ரின் அனு​ப​வம் பளிச்​சிட்​டது.​

பி​றகு "சாரங்கா"
ராகத்​தில் ஒரு சின்ன ஆலா​பனை.​

எடுத்​துக் கொண்ட சாகித்​யம் "நீ வாடானே கான".​

"சத்​யம்பூ,​​ நித்​யம்பூ..." என்ற இடத்​தில் நிர​வல் மற்​றும் கல்​பனா ஸ்வ​ரம்.​

திருப்​தி​யாக சாரங்கா கேட்ட சந்​தோ​ஷம் சொல்லி மாளாது.

​"த்வ ​ஜா​வந்தி"
ராகத்​தில் திஸ்ர ஏக தாளத்​தில் பதம் பாடத் தெரிந்​த​வர்​கள் எத்​தனை பேர்?​

அது​வும், சாஸ்த்​ரி​ய​மாக,​​ தனம்​மாள் பாணி​யி​லான பதம் பாடு​வது என்​பது எத்​தனை
ரம்​மி​ய​மான விஷ​யம்?​ ​

"வசந்தா"
ராகத்​தில் திரு​வா​ரூர் ராம​சா​மிப் பிள்​ளை​யின் "ஸ்ரீ காமாக்ஷி" என்​கிற சாகித்​யத்தை மிக​வும் அபூர்​வ​மா​கத் ​தான் மேடை​யில் கேட்க முடி​கி​றது.​

இந்த சாகித்​யங்​கள் எல்​லாம் இன்​றைய தலை​மு​றைக்​குப் பாடந்​த​ரமே கிடை​யாது.​

ரித்தா
ராஜன் பாடி​ய​போது,​​ அடடா,​​ எவ்​வ​ளவு அற்​பு​த​மான சாகித்​யம்.​

இதை நமது இளைய தலை​மு​றை​யி​னர் கையா​ளா​மல் இருக்​கி​றார்​களே என்​கிற ஆதங்​கம் மேலிட்​டது உண்மை.

​"மத்​ய​மா​வதி"
ராகத்​தி​லான தியா​கைய்​ய​ரின் "எவ​ரிச்​சிரா"வை ஆலா​பனை மட்​டும் பாடி ஸ்வ​ரம் பாடா​மல் முடித்​துக் கொண்​டார்.​

அதற்​குப் பிறகு ஒரு "சங்​க​ரா​ப​ர​ணம்" பாடி​யி​ருக்​கி​றார்,​​ அற்​பு​தம் என்​றால் அற்​பு​தம்.​

வீணை தனம்​மா​ளி​டம் அந்​தக் காலத்​தில் ஒரு பாடம் படிக்க ஐந்து ரூபாய் கட்​ட​ண​மாம்.​

பல்​லவி,​​ அனு​பல்​லவி,​​ சர​ணம் படிக்க 15 ரூபாய் கொடுத்​தாக வேண்​டும்.​

"தனம்​மாள் ஸ்கூல்" என்​றால் பாடாந்​திர சுத்​தம் இருக்​கும் என்​ப​தால் பரூர் சுந்​த​ர​மைய்​யர்,​​ முசிறி சுப்​பி​ர​மண்ய அய்​யர் போன்​ற​வர்​கள்,​​ கொஞ்​சம் கொஞ்​ச​மா​கப்
பணம் சேர்த்து அவ​ரி​டம் போய்க் கற்​றுக் கொள்​வார்​க​ளாம்.​

அந்​தப் பாரம்​ப​ரி​யத்​தில் வந்த விருந்​தாம்​மா​வி​டம் கற்​றுக் கொண்​ட​வர் என்​பதை ரித்தா
ராஜன் தனது சங்​க​ரா​ப​ர​ணத்​தில் நிரூ​பித்​தார்.​

எடுத்​துக் கொண்ட சாகித்​யம் தீக்ஷி​த​ரின் "சங்​க​ராச்​சார்​யம்".​

பிறகு ஆனந்த பைர​வி​யில் ஒரு பத​மும்,​​ "கமாஸ்"
ராகத்​தில் ஒரு ஜாவ​ளி​யும் பாடித் தனது நிகழ்ச்​சியை நிறைவு செய்​தார் ரித்தா ராஜன்.​

இன்​றைய இளைய தலை​மு​றைக் கலை​ஞர்​க​ளுக்கு ஒரு வேண்​டு​கோள்.​

காலங்கடத்​தா​மல் இது​போன்ற மூத்த கலை​ஞர்​க​ளி​டம் கையைக் கட்​டிக் கொண்டு அமர்ந்து பாடம் கேட்​க​வும்.​

இந்​தப் பாடாந்​த​ரங்​களை நீங்​கள் தவ​ற​விட்​டால்,​​ நஷ்​டம் உங்​க​ளுக்கு மட்​டு​மல்ல.​ வருங்​கா​லக் கர்​னா​டக இசைக்​கும்​கூட.

Kannan Natarajan

unread,
Dec 18, 2009, 11:59:07 PM12/18/09
to Min Thamizh
முன்னோடிகள்:- தஞ்​சா​வூர் கிருஷ்​ண​ பா​க​வ​தர்

http://www.dinamani.com/Images/article/2009/12/19/music4.jpg

தஞ்​சையை மராத்​திய மன்​னர்​கள் ஆண்ட காலம் கலை​க​ளின் பொற்​கா​ல​மென்றே சொல்​ல​லாம்.​

கலை​கள் நன்கு போஷிக்​கப்​பட்டு தழைத்து வளர்ந்​தன.​

இந்த கால​கட்​டத்​தில் தஞ்​சை​யில் பிறந்​த​வர் கிருஷ்ண பாக​வ​தர்.​ 

கதா ​கா​லட்​சே​பம் செய்​வ​தில் நிபு​ண​ராக விளங்​கி​னார்.​

வாய்ப்​பாட்டு மட்​டும் அன்றி,​​ வய​லின்,​​ சுர​பத்,​​ மிரு​தங்​கம் போன்ற பல இசைக் கரு​வி​களை வாசிப்​ப​தில் தேர்ச்சி பெற்​றி​ருந்​தார்.​

தில்​லைஸ்​தா​னம்
ராம அய்​யங்​கா​ரி​டம் தியா​க​ரா​ஜ​ரின் கிரு​தி​களை முறை​யா​கப் பயின்​றார்.​

தஞ்​சை​யில் வட​நாட்டு இசைக் கலை​யி​லும்,​​ கதை​கள் சொல்​லு​வ​தி​லும் தேர்ச்சி பெற்​றார்.​

தமிழ் மட்​டும் அன்றி,​மராத்தி,​​ சம்ஸ்​கி​ரு​தம்,​​ ஹிந்தி போன்ற பல மொழி​க​ளைக் கற்​றுத் தேர்ந்​தார்.​

இதி​ஹா​சப் புரா​ணங்​களை முழு​மை​யா​கப் படித்து அறிந்​தார்.​ சில காலங்​கள் பரத நாட்​டி​யக் கலை​யும் பயின்​றார்.​

கோபா​ல​கி​ருஷ்ண பார​தி​யா​ரின் நந்​த​னார் சரித்​தி​ரத்தை கதா​கா​லட்​சே​பம் செய்​வ​தில் ஈடு இணை​யற்று விளங்​கி​னார்.​

கோபா​ல​கி​ருஷ்ண பார​தி​யார் முன்​னி​லை​யில் நந்​த​னார் சரித்​தி​ரத்​தைக் கூறி,​​ அவ​ரு​டைய ஆசிர்​வா​தத்​தைப் பெற்​றார்.​

அதைக் கேட்டு பர​வ​ச​ம​டைந்த பார​தி​யார் கிருஷ்ண பாக​வ​தரை ஆரத் தழு​வி​னார்.​

கதா​கா​லட்​சே​பம் செய்​வ​தில் ஓர் முன்​னோ​டி​யாய்த் திகழ்ந்து சாதனை படைத்த கிருஷ்ண பாக​வ​தர் 1903ம் ஆண்டு அம​ரத்துவம் எய்​தி​னார்.​​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​


சுவாதி

Kannan Natarajan

unread,
Dec 19, 2009, 11:12:58 PM12/19/09
to Min Thamizh
முன்னோடிகள்:- இரா​ம​நா​த​பு​ரம் ​(பூச்சி)​ சீனி​வாச அய்​யங்​கார்

இரா​ம​நா​த​பு​ரம் நாரா​யண அய்​யங்​கார் -​
லட்​சுமி அம்​மாள் தம்​ப​திக்கு பிறந்​த​வர் சீனி​வாச அய்​யங்​கார்.​

சிட்​சையே இல்​லா​மல் இவர் பாடும் திற​னைக் கண்ட
ராம​நா​த​பு​ரம் மன்​ன​ரின் குடும்​பத்​தைச் சேர்ந்த
பாண்​டித்​து​ரைத் தேவர் இவர் மேல் நம்​பிக்​கைக் கொண்டு,​​ அடிக்​கடி சமஸ்​தா​னத்​திற்கு வருகை தரும்
பட்​ட​ணம் சுப்​பி​ர​ம​ணிய அய்​ய​ரி​டம் இவரை மாணாக்​க​ரா​கச் சேர்த்​தார்.​

ஆழ்ந்த குரு விசு​வா​ச​மும்,​​ அயா​ராத உழைப்​பும்,​​ இயற்​கை​யான ஞான​மும்,​​ குரல் வள​மும் இவரை
ஒரு உயர்ந்த கலை​ஞ​ரா​க​வும்,​​ வாக்​கே​ய​கா​ர​ரா​க​வும் ஆக்​கி​யது.​
http://www.dinamani.com/Images/article/2009/12/20/music1.jpg
பட்​ட​ணம் சுப்​பி​ர​ம​ணிய அய்​ய​ரி​டம் பலர் இசை பயின்​றி​ருந்த போதி​லும்,​​ குரு​வு​டன் ஒன்​றாக
மேடை​யில் இணைந்து பாடும் வாய்ப்​பைப் பெற்​ற​வர் இவர் மட்​டுமே.​

கு​ரு​வி​டம் கற்ற இசைப் பயிற்​சி​யைத் தவிர நல்ல கச்​சே​ரி​க​ளைக் கேட்​டுத் தன் ஞானத்தை மேலும்
பட்​டைத் தீட்​டிக்​கொண்​டார்.​

மகாவைத்​ய​நாத சிவ​னின் கச்​சே​ரி​கள் எங்கு நடந்​தா​லும் தவ​றா​மல் போய் கேட்​பா​ராம்.​

நா​ல​ரைக் கட்​டை​யில் முத​லில் பாடிக் கொண்​டி​ருந்த இவர்,​​ பின்பு 3 கட்​டை​யில் சர​மா​கக் கச்​சேரி
செய்​தார்.​

இனி​மை​யான குர​லில் வண்டு ரீங்​கா​ரம் செய்​வ​தைப் போன்று ஸ்வ​ரம் பாடி​ய​தால் "பூச்சி" என்ற
அடை​மொ​ழி​யைப் பெற்​றார்.​

தலை​சி​றந்த வாக்​கே​ய​கா​ரர்​க​ளில் ஒரு​வர் இவர்.​

இவ​ரது படைப்​பு​க​ளில்,
  • கேதா​ர​கெளை​யில் "ஸர​குண பாலிம்ப"
  • பேக​டா​வில் "அனு​தி​ன​முனு"
போன்ற கீர்த்​த​னை​க​ளும்,​​
  • மோக​னத்​தில் "நின்​னுக்​கோரி"
  • கான​டா​வில் "நெர​நம்​மிதி"
முத​லிய வர்​ணங்​க​ளும் மிக பிர​ப​ல​மா​னவை.​

1919ம் ஆண்டு இவர் கால​மா​னார்.​

இவ​ரது பெயரை நிலை​நி​றுத்​தும் சீட​ராக அடை​யா​ளம் காணப்​பட்ட அரி​யக்​குடி
ராமா​னுஜ அய்​யங்​கார்,​​
பிற்​கா​லத்​தில் தனக்​கென ஒரு தனி​யி​டம் பிடித்​தார் என்​றா​லும் "பூச்சி" அய்​யங்​கா​ரின் மாண​வன் என்று
சொல்​லிக் கொள்​வ​தைத்​தான் பெரு​மை​யா​கக் கடை​சி​ வ​ரைக் கரு​தி​னார்.

Kannan Natarajan

unread,
Dec 19, 2009, 11:25:03 PM12/19/09
to Min Thamizh
இரசிப்​ப​தற்​குத்​ தான் இரசி​கன்!

சனிக்​கி​ழமை (19/12/09) காலை​யில் அகாத​மி​யின் சங்​கீத வித்​வத் சபை​யில்
மதங்கி இராஜா​கோ​பா​லன்
  • ஷாஜி மகா​ரா​ஜா​வின்
இசைத் தொண்​டி​னைப் பற்றி இய​லிசை விளக்​கம் அளித்​தார்.​

அவர் இயற்​றி​யுள்ள பதங்​க​ளில்,
  • பக்​திப் பதங்​கள் 50
  • பாவப் பதங்​கள் 5
  • வைராக்​யப் பதங்​கள் 9
  • சிருங்​கா​ரப் பதங்​கள் 103
  • ஹாஸ்​யப் பதங்​கள் 14
  • நீதிப் பதங்​கள் 24
  • மங்​க​ளம் 3
ஆக மொத்​தம் 208 உருப்​ப​டி​கள் புனைந்​தி​ருப்​ப​தா​கச் சொன்​னார்.​

சில மணிப்​பி​ர​வா​ளப் பதங்​க​ளைப் பாடிக் காட்​டி​னார்.​

த​மிழ், ​​ தெலுங்கு,​​ மராட்டி மூன்​றும் கலந்த பதம் "வாரும் தயதோ ஆஜீ சேரும் பாகுக சிவ​சங்க".​

"சதுர்​தச புவன அனு​ராக இராக​மா​லிகா தரு",​ 14 இராகங்​க​ளைக் கொண்​டது.​

சப்த தாள சூலாதி பிர​பந்த லீலா தரு ஸப்த தாளத்​தில்,​​
  • நாரா​யண கெளள
  • கன்​னட கெளள
  • மாளவ கெளள
  • ரீதி கெளள
  • பூர்வ கெளள
  • சாயா கெளள
  • கேதார கெளள
முத​லிய மித்ர இராகங்​க​ளில் அமைந்​தது.​

கச்​சேரி செய்​யும் கலை​ஞர்​கள் ஒவ்​வொரு கச்​சே​ரி​யி​லும் கட்​டா​ய​மாக ஷாஜி மஹா​ரா​ஜா​வின் ஒரு
பதத்​தை​யா​வது பாடிப் பிர​ப​லப்​ப​டுத்த வேண்​டும் என்று வேண்​டு​கோள் விடுத்​தார் அவர்.​​

http://www.dinamani.com/Images/article/2009/12/20/music2.jpg

இரண்​டா​வ​தாக,​​ வேத​வல்லி "ஒரே சாய​லுள்ள இராகங்​கள்" என்ற தலைப்​பில் சாஸ்​தி​ரீ​ய​மாக,​​ ஒரே
மேளத்​தில் ஜன்​ய​மான,​​ ஒரே ஆரோ​ஹ​ணத்​தை​யும்,​​ சிறிய வித்​யா​சத்​து​டன் கூடிய
அவ​ரோ​ஹ​ணத்​தை​யும் கொண்ட சில இராகங்​களை எடுத்​துக் கொண்​டார்.​

உதா​ர​ண​மாக,​​
  • ஆரபி
  • தேவ​காந்​தாரி
  • சாமா
  • கேதா​ர​கெளள 
போன்ற இராகங்​க​ளில் ஒரு ஸ்வ​ரத்தை அசைக்​கும்​போ​தும்,​அதை அசை​வில்​லா​மல் பாடும்​போ​தும்
இராகத்​தின் சாயல் எப்​படி வெளிப்​ப​டு​கி​றது என்று விளக்​கி​னார்.​

ஸ்​வ​ரங்​ களை வைத்​துக்​கொண்டு பாடக்​கூ​டாது.​

இராக​மாய் பாடும்​போது தேவை​யான இடத்​தில் கம​கத்​தோடு பாடு​வது மிக​வும் அவ​சி​யம் என்​றார்.​

கேதா​ர​கெளள இராகத்​தில் "நி,நி,ஸ" வரும் இடத்​தில் அசைத்​தும்,​​ சுருட்​டி​யில் அதே "நி,நி,ஸ" வரும்
இடத்​தில் அசைவு இல்​லா​ம​லும் பாட வேண்​டும் என்று பாடிக் காட்​டி​னார்.​

ஒரே குரு​வி​டம் பயி​லும் மாண​வர்​கள் புரிந்து கொண்டு பாடும் முறை​யி​லேயே மாற்​றம் வந்து விடு​கி​றது.​
முடிந்​த​வரை மாற்​றம் செய்​யக்​கூ​டாது.​

பெரி​ய​வர்​கள் வழி​வ​ழி​யா​கப் பாடி​வைத்​ததை மாற்​றக்​கூ​டாது என்று வலி​யு​றுத்​தி​னார்.​

அவர் கூறிய பல விஷ​யங்​கள் பாடக் கேட்டு புரிந்து கொள்ள வேண்​டி​யவை;​ அவற்றை எழுத்​தில் வடிக்க
முடி​யாது.​

பேரா​சி​ரி​யர் எஸ்.ஆர்.​ ஜான​கி​ரா​மன் கருத்து சொல்​லும்​போது,​​ இசைக் கலை​ஞர்​களே இசை​யைப் பற்​றிய
தீர்​மா​னங்​களை கொண்டு வர​லாம்;​ இசை விமர்​ச​கர்​கள் தங்​க​ளு​டைய கருத்​துக்​களை சொல்​ல​லாம்;​
இரசி​கர்​கள் வேலை இசையை இரசிப்​ப​து​ தான் என்​றார்.

Kannan Natarajan

unread,
Dec 19, 2009, 11:47:15 PM12/19/09
to Min Thamizh
ஒன்ஸ் மோர் எப்​ப​டிக் கேட்​பது?

ஒரு சில கலை​ஞர்​க​ளின் அற்​பு​த​மான திற​மை​யைப் பற்றி யோசிக்​கும்​போது,​​ "பூர்வ ஜென்ம சுகிர்​தம்"
என்​கிற வார்த்​தை​யின் பொருள்​ தான் நினை​வுக்கு வரு​கி​றது.​

படித்து வரு​வது என்​பது ஒரு வகை.​

பிற​வி​யி​லேயே கலை​ஞர்​க​ளா​கப் பிறப்​பது என்​பது இன்​னொரு வகை.​

"சித்ர வீணை" இரவிக்​ கி​ரண் இரண்​டா​வது இரகம்.​

பி​ற​விக் கலை​ஞர் இவர்.​

சித்​திர வீணை​யில் சித்​தி​ரம் வரை​யும் அற்​பு​தக் கலை​ஞர்.​

மாற்​றுக் குறை​யாத சங்​கீ​தம் எப்​படி இருக்​கும் என்​பதை சித்​திர வீணை இரவிக்​ கி​ர​ணின் வாசிப்​பைக்
கேட்​டுத் தெரிந்து கொள்​ள​லாம்.​

"சித்​திர வீணை" எப்​படி இருக்​கும் என்​றெல்​லாம் கற்​பனை செய்து பயப்​ப​டா​தீர்​கள்.​

"பழைய கோட்டு வாத்​தி​யம்"தான் இரவிக்​ கி​ர​ணின் கையில் தவ​ழும்​போது சித்​திர வீணை​யாகி விடு​கி​றது.​

பூர்​விக வாத்​தி​யம் பழக்​கத்தி​லி​ருந்து மறைந்து விடக் கூடாது என்​ப​தற்​கா​கவே கட​வுள் இரவிக் ​கி​ர​ணைப்
படைத்​தி​ருக்​கி​றாரோ என்​னவோ...​

வி​யா​ழக்​கி​ழமை (17/12/09) மியூ​சிக் அகாத​மி​யின் மாலை நேர இசை விருந்து இரவிக்​ கி​ர​ணு​டை​யது.​
  • அக்​கரை சுப்​பு​லெட்​சுமி வய​லின்
  • டி.வி.​ கோபா​ல​கி​ருஷ்​ணன் மிரு​தங்​கம்
இப்​படி ஒரு "செட்" அமைந்​தால் அங்கே கச்​சே​ரியா நடக்​கும்,​​ இசை மழை​யல்​லவா பொழி​யும்?​

பொழிந்​தது!​

http://www.dinamani.com/Images/article/2009/12/20/music3.jpg

"சர​சீ​ருஹா..." என்று நாட்​டை​யில் தொடங்​கிய நிகழ்ச்சி எப்​போது எப்​படி முடிந்​தது என்றே தெரி​ய​வில்லை.​

நேரம் ஜெட் வேகத்​தில் ஓடி​யது.​

இசை மடை திறந்த வெள்​ள​மாய் பாய்ந்து வந்​தது.​

தொடர்ந்து "முகாரி" இராகத்​தில் "பிரம்ம கடு​கின பாதமு"

அதற்​குப் பிறகு, "இலலிதா" இராகத்​தில் "ஹிரண்​ம​யீம் இலக்ஷ்​மீம்" என்​கிற தீட்​சி​தர் கிருதி.​

ஒரு அதி அற்​பு​த​மான "த்வா​ஜா​வந்தி" ஆலா​ப​னை​யைத் தொடர்ந்து மிஸ்ர அட தாளத்​தில்
ஊத்​துக்​காடு வெங்​கட கவி​ரா​ய​ரின் சாகித்​யம் வாசித்​தி​ருக்​கி​றார்.​

என்ன கெளர​வ​மான வாசிப்பு.​

தண்​ட​பாணி தேசி​க​ரின் நூற்​றாண்டு என்​ப​தாலோ என்​னவோ,​​ அவ​ரு​டைய "என்னை நீ மற​வாதே" என்​கிற
அமிர்​த​வர்​ஷிணி சாகித்​யத்தை வாசித்​தார்.​

காம்​போதி இராகத்​தைக் கையாள்​வது என்​பது ஒரு சுகா​னு​ப​வம்.​

கேட்​ப​வ​ருக்​கும் சுகம்,​​ வாசிப்​ப​வ​ருக்​கும் சுகம்.​

இராவ​ணேஸ்​வ​ரன் இந்​தக் காம்​போ​தியை வாசித்​தல்​லவா பர​மேஸ்​வ​ர​னையே மயக்​கி​னான் என்​பார்​கள்.​

இரவிக்​ கி​ரண் அன்று வாசித்த காம்​போதி இராக ஆலா​பனை,​​ ஏதோ தாம​ரைப் பூவில் இதழ்​கள்
கதி​ர​வ​னைக் கண்​ட​தும் மலர்​வ​து​ போல ஒன்​றன் பின் ஒன்​றாக அந்​தச் சித்​திர வீணையி​லி​ருந்து
எழுந்​த​போது,​​ எங்கே மியூ​சிக் அகா​த​மி​யில் பர​மேஸ்​வ​ரன் பிர​சன்​ன​மாகி விடு​வாரோ என்று கூட
நினைக்​கத் தோன்​றி​யது.​

கீழ் ஸ்தா​யி​யில் தொடங்கி,​​ மந்த்ர ஸ்தா​யி​யில் சய​னித்​துக் கடை​சி​யில் உச்ச ஸ்தா​யிக்​குச் செல்​லும்
அந்த வாசிப்பு ஏதோ அலை, அலை​யாக இசை ஊர்​வ​லம் நகர்​வ​து​ போன்ற இன்​பத்தை அள்​ளித்
தெளித்​தது.​

இராக மாலி​கை​யில் தானம் வாசித்து விட்டு,​​ கண்ட திரி​புடை,​​ கண்​ட​ந​டை​யில் பைரவி இராகத்​தில்
"கோபால கோகு​ல​பாலா,​​ கோபிகா சமூ​க​லோலா இலாசா​ஹி​ரு​த​யா​லயா,​​ மாம்​பா​லயா" என்​கிற
இராகம் தானம் பல்​லவி.​

சாஸ்த்​ரிய சுத்​தம்.​ சங்​கீத உச்​சம்.​

அக்கரை சுப்​பு​லெட்​சுமி தின​மும் பன்​னீ​ரில் கைக​ழு​வு​கி​றாரோ என்​கிற சந்​தே​கம் ஏற்​ப​டு​கி​றது.​

அவ​ரது விரல்​களி​லி​ருந்து அந்த வய​லின் வெளிப்​ப​டுத்​தும் பூசை​யின் சுக​மும் சங்​கீத மண​மும்
அத்​த​கை​யது.​

இரவிக்​ கி​ர​னுக்கு ஈடு கொடுத்து வாசிப்​பது சும்​மாவா?​ ​

போதாக்​கு​றைக்கு,​​ மூத்த கலை​ஞ​ரான டி.வி.​ கோபா​ல​கி​ருஷ்​ணன் மிரு​தங்​கம்,​​
திருப்​பூ​ணித்துரை இராதா​கி​ருஷ்​ணன் கடம்.​

இரவிக்​ கி​ரண் போன்ற கலை​ஞர்​கள்​தான் கர்​னா​டக சங்​கீ​தத்​தின் தூண்​கள்.​

என்ன கற்​பனை.​ என்ன வாசிப்பு.​

பிர​மிப்பு இன்​னும்​ கூட அடங்​கின பாடில்லை என்​றால் பார்த்​துக் கொள்​ளுங்​கள்.​

இதே "செட்" இன்​னொரு தடவை சேர்த்​தால் எப்​படி இருக்​கும்?​

என்ன செய்​வது,​​ அகா​த​மி​யின் "ஒன்ஸ் மோர்" கேட்க முடி​யாதே!

Kannan Natarajan

unread,
Dec 20, 2009, 12:00:04 AM12/20/09
to Min Thamizh
டபுள் ஓகே!

மைலாப்​பூர் ஃபைன் ஆர்ட்​சில் மதி​யக் கச்​சேரி என்​றால் சற்று சிர​மம்​ தான்.​

ஏசி இல்​லா​த​து​ தான் கார​ணம்.​

மார்​கழி மாத​மா​ன​தால் தப்​பித்​தோம்.​

சனிக்​கி​ழமை (19/12/09) பாம்பே ஜெய​ஸ்ரீ​யின் சீடர்​கள் என்​ப​தால் கார்த்​திகா, கீர்த்​தனா இரட்​டை​ய​ரின்
கச்​சேரி எப்​படி இருக்​கி​றது கேட்​போம் என்​கிற ஆர்​வம்.​

http://www.dinamani.com/Images/article/2009/12/20/music4.jpg

உள்ளே நுழைந்​தால்,​​ தனது தயா​ரிப்​பு​க​ளின் தரத்தை முன்​வ​ரி​சையி​லி​ருந்து எடை போட்​டுக்
கொண்​டி​ருந்​தார் பாம்பே ஜெயஸ்ரீ.​உள்ளே நுழை​யும்​போது "ஹிந்​தோ​ளம்" பாடிக் கொண்​டி​ருந்​தார்​கள்.​

"மன​சி​லோனி" என்​கிற கிருதி.​

கார்த்​திகா இராக ஆலா​பனை செய்து கொண்​டி​ருந்​தார்.​

ஆகா அற்​பு​தம் என்​றெல்​லாம் பாராட்ட முடி​யா​விட்​டா​லும்,​​ அப்​ப​ழுக்கு சொல்ல முடி​யாது.​

நன்​றாக சாத​கம் செய்​தி​ருப்​ப​தும்,​​ குர​லில் கவ​னம் செலுத்​து​வ​தும்,​​ கற்​பனை வளம் இருப்​ப​தும் தெரிந்​தது.​

ஸ்வ​ரம் பாடும்​போது இரு​வ​ரும் ஒரு​வ​ருக்​கொ​ரு​வர் புரிந்து கொண்​டும் இணைந்​தும் பாடிய விதம் நம்மை
உட்​கார்ந்து கேட்க வைத்​தது.​"கமாஸ்" இராகத்​தில் "சந்​தான கோபா​லம்" பாடி​விட்டு "கல்​யாணி" இராகத்தை
விஸ்​தா​ர​மாக ஆலா​பனை செய்​யும் வாய்ப்பை எடுத்​துக் கொண்​டார் கீர்த்​தனா.​

தர​மான கல்​யாணி.​

கார்த்​தி​கா​வுக்கு,​​ தான் எள்​ள​ள​வும் சளைத்​த​வ​ரல்ல என்​பதை நிரூ​பித்​தார் கீர்த்​தனா.​

பிரு​காக்​கள் ஒன்​றன் பின் ஒன்​றாக அலை​ய​டிப்​பது போல வந்த விதம் நிஜ​மா​கவோ நம்மை அசர அடித்​தன.​

"பஜரே சித்த பாலாம்​பி​காம்" என்​கிற தீக்ஷி​தர் கிரு​தி​யைத் தேர்ந்​தெ​டுத்​தி​ருந்​த​னர்.​

நிர​வல் ஸ்வ​ரங்​க​ளி​லும் சரி,​​ அப்​படி ஒரு விறு​வி​றுப்பு.​ புதி​ய​வர்​கள் என்று சத்​தி​ய​மா​கச் சொல்ல முடி​யாது.​

ஒரு சில இடங்​க​ளில் முதிர்ச்​சி​யின் நளி​னம் இல்​லை​யென்​றா​லும்,​​ பல இடங்​க​ளில் பயிற்​சி​யின் அழுத்​தம்
தெரி​கி​றது.​

நல்ல செளக்​கி​ய​மான குரல் ​வ​ளம்.​

அதீ​த​மான தன்​னம்​பிக்​கை​யு​டன் பாடும் பக்​கு​வம்.​

கொஞ்​சம் ​கூட பிசிரோ,​​ தப்போ காண முடி​யாத சங்​கீ​தம்.​

பிரு​காக்​க​ளில் சுறு​சு​றுப்​பும்,​​ அழுத்​த​மும்.​

குறை காண முடி​யாத இவர்​கள் பாம்பே ஜெய​ஸ்ரீ​யின் பெயரை நிலை​நி​றுத்​து​வார்​கள் என்​கிற
வித்யாநம்​பிக்​கையை ஏற்​ப​டுத்​தி​யது இவர்​க​ளது நிகழ்ச்சி.​

டபுள் ஓகே!

Kannan Natarajan

unread,
Dec 20, 2009, 12:12:45 AM12/20/09
to Min Thamizh
ஆகட்​டும் பார்க்​க​லாம்...

நார​த​கான சபா​வில் சனி​யன்று (19/12/09) 12.30 மணிக்கு ஐயர் சகோ​த​ரி​க​ளின் இசை நிகழ்ச்சி.​

http://www.dinamani.com/Images/article/2009/12/20/music5.jpg

விறு​வி​றுப்​பாக சாவே​ரி​யில் ஆதி தாள வர்​ண​மான "ஸர​ஸஸுட"வுடன் கச்​சேரி தொடங்​கி​யது.​

நளி​ன​காந்தி இராக​மும்,ஈ.எஸ்.​ கிருஷ்​ணய்ய​ரின் "துர்கா இலட்​சுமி சரஸ்​வதி" சாகித்​ய​மும்,​​ அதற்கு
சிட்​டை​யாக ஸ்வ​ரங்​க​ளும் பாடி​னர்.​

அடுத்​த​தாக வந்​தது "தர்​பார்".​

வித்யா பாடி​ய​தில் விறு​வி​றுப்​புக்கு குறை​வில்லை.​

ஆனால், கார்வை கொடுத்து நிலைத்து நின்று பாடு​தல் அவ​சி​யம்.​

இது சாத​க​மும், அனு​ப​வ​மும் இருந்​தால்​ தான் வரும்.​

இரு​வர் பாடும்​போது ஒருங்​கி​ணைந்து பாடு​வது மிக முக்​கி​யம்.​

தியா​கய்​ய​ரின் "யோசனா" கீர்த்​த​னை​யைப் பாடும்​போது வேறு ஏதோ யோச​னை​யில் இருந்​தார்​களோ
என்​னவோ,​​ இந்த விஷ​யத்​தைக் கோட்டை விட்​டார்​கள்.​

ஒரு விஷ​யத்தை ஒத்​துக்​கொள்​ளத்​தான் வேண்​டும்.​

கல்​ப​னா​சு​வ​ரங்​கள் சர்​வ​ல​கு​வாக வந்து விழுந்​தன.​

த்வி​ஜா​வந்தி இராகத்​தில் முத்​து​சு​வாமி தீக்ஷி​த​ரின் "சேத ஸ்ரீபால​கி​ருஷ்​ணம்" கிரு​தியை விச்​ராந்​தி​யு​டன்
பாடி​னார்​கள்.​

அ​டுத்த இராகத்தை சுதா பாடி​னார்.​

அவர் பாட ஆரம்​பித்​த​வு​டன் இரசி​கர்​கள் மத்​தி​யில் சின்ன சல​ச​லப்பு.​ சர்ச்சை!​

ஒரு​வர் தோடி என்று சொல்ல,​​ சிலர் இல்லை, இல்லை இது கர​ஹ​ரப்​பி​ரியா என்​றார்​கள்.​

அவர் பாடி​ய​தென்​னவோ நாட​கப்​பி​ரியா!​

இந்த இராகத்​தின் பூர்​வாங்​கம் தோடி;​ உத்​தி​ராங்​கம் கர​ஹ​ரப்​பி​ரியா.​

இராகம் பாடும்​போது சில சில்​லறை சித​றல்​கள்.​

இருந்​தா​லும் முழு​மை​யா​கப் பாடி​னர்.​

"சங்​கீத வாத்ய நடன நாட​கப் பிரியே!​ இரசிகே!​" என்ற இராக முத்​தி​ரை​யு​டன் கூடிய பாடல்.​

கச்​சே​ரி​யில் நிர​வல் இல்​லா​தது பெரிய குறையே!​

ப​ர​ப​ரப்​பா​ன​தொரு தனி வாசித்​தார் குரு இராக​வேந்​திரா.​

பக்​க​வாத்​தி​யம் என்​றால் எப்​படி இருக்க வேண்​டும் என்று உணர்ந்து வாசித்​தார் என்​று ​தான்
சொல்ல வேண்​டும்.​

வய​லின் வாசித்த விஜ​யும் சரி,​​ ரொம்ப அனு​ச​ர​ணை​யான வாசிப்பு.​

கச்​சே​ரி​யைத் தாங்​கிப் பிடித்​தது என்று சொன்​னால் கூடத் தப்​பில்லை.​

இராகே - ஸ்ரீராகத்​தில் லால்​குடி ஜெய​ரா​ம​னின் தில்​லா​னா​வு​டன் கச்​சேரி நிறை​வ​டைந்​தது.​

ஆகா ஓகோ இரகம் இல்​லா​விட்​டா​லும் ஊஹூம் இரகம் இல்லை.​

வருங்​கா​லம் பிர​கா​ச​மாக இருப்​ப​தற்​கான அறி​கு​றி​கள் இல்​லா​மல் இல்லை.​

ஆகட்​டும் பார்க்​க​லாம்...!

Kannan Natarajan

unread,
Dec 20, 2009, 12:21:42 AM12/20/09
to Min Thamizh
சபாக்​கா​ரர்​க​ளின் கவ​னத்​திற்கு...

நுங்​கம்​பாக்​கம் கல்​சு​ரல் அகா​ட​மி​யில் கல்​லி​டைக்​கு​றிச்சி எஸ்.​ வெங்​க​டே​ச​னின் வீணை கச்​சேரி.​ ​

http://www.dinamani.com/Images/article/2009/12/20/music6.jpg

அந்த காலத்​தில் பிர​சித்தி பெற்ற வாக்​கே​யக்​கா​ர​ராக விளங்​கிய கல்​லி​டைக்​கு​றிச்சி ஏ.​சுந்​த​ர​மை​யர்
இல்​லை​யென்​றா​லும் அவர் இயற்​றிய,
  • மாம​துரை மீனாக்ஷி ​(பாகேஸ்ரீ)​
  • யமுனா தீர விஹார ​(மோக​னத்​வனி)​
  • ஆனந்த தாண்​டவ ​(ஆரபி)​
போன்ற புகழ்​மிக்க கீர்த்​த​னை​கள் எப்​போ​தும் இசை இரசி​கர்​க​ளின் விருப்ப பட்​டிய​லில் இருந்து
கொண்​டே​யி​ருக்​கின்​றன.​

அ​வ​ரது புதல்​வர் எஸ்.​வெங்​க​டே​சன் வீணை விற்​பன்​ன​ராக இசைப் பாரம்​ப​ரி​யத்​தைத் தொடர்ந்து
கொண்​டி​ருக்​கி​றார்.​

மானாம்​பு​சா​வடி வேங்​கட சுப்​பை​யர் இயற்​றிய "ஜல​ஜாக்ஷ" ​(ஹம்​ஸத்​வனி)​ வர்​ணத்​தோடு
அமர்க்​க​ள​மாக தொடங்​கி​யது நிகழ்ச்சி.​

தொடர்ந்து தீக்ஷி​த​ரின் "எவர்​கி​ரீன் மெல​டி​"யான "கஞ்​ச​த​ளா​ய​தா​க்ஷியை" ​(கம​லா​ம​னோ​ஹரி)​
வாசித்த கையோடு "பண்​டு​ரிதி கொலு​விய்ய" என்று ஹம்​ஸ​நா​தம் வீணை​யின் தந்​தி​க​ளி​னூடே
தவழ்ந்து வந்​தது.​

அதி​லும் சர​ணத்​தில் வரும் "ரோமாஞ்​ச​மனே கன கஞ்​ச​முகு" என்​கிற வரி​களை வாசிக்​கும்​போது
மெய்சி​லிர்த்​தது என்​னவோ நிஜம்.​

அ​டுத்​ததாக அவர் தேர்ந்​தெ​டுத்​தது பட்​ட​ணம் சுப்​பி​ர​ம​ணிய ஐய​ரின் "பரி​தா​ன​மிச்​சிதே" ​(பில​ஹரி)​.​
இலஞ்​ச​மாக ஏதா​வது கொடுத்​தால்​ தான் காப்​பாற்​று​வாயா என்று வெங்​க​டேச பெரு​மானை வேண்​டும்
"பரி​தா​ன​மிச்​சிதே பாவிந்​து​வேமோ?​" என்​கிற வரி​களை வாசிக்​கும்​போது அப்​படி ஒரு உருக்​கம்.​

அடுத்து தியா​க​ரா​ஜ​ரின் "மனஸா யெடு​லோர்​துனே" ​(மலை​ய​மா​ரு​தம்)​,​​ தொடர்ந்து
தீக்ஷி​த​ரின் "ப்ரு​ஹன்​னா​யகி வர​தா​யகி" (ஆந்​தாளி)​ வாசித்து விட்டு மீண்​டும்
பட்​ட​னம் சுப்​பி​ர​ம​ணிய ஐய​ரின் "அப​ரா​த​முலு" ​(இலதாங்கி)​ வாசித்​தார்.​

இதன் அனு​பல்​ல​வி​யில் வரும் "க்ரு​ப​ஜேஸி நாம​னவி ஆல​கிஞ்சி கீ கண்ட ஜூட ஸம​ய​மிதே"
என்​கிற வரி​க​ளில் அற்​பு​த​மான நிர​வல்.​

இ​று​தி​யாக தனது தந்தை இயற்​றிய "மாம​துரை மீனாட்சி" (பாகேஸ்ரீ)​ பாட​லு​டன் நிகழ்ச்​சியை
நிறைவு செய்​தார்.​

தஞ்​சா​வூர் ஆர்.​ குமார் மிரு​தங்​கம் இணைத்த வாசிப்பு.​

வாத்​தி​யங்​க​ளுக்கே சமீப கால​மாக இரசி​கர்​க​ளின் ஆத​ரவு குறைந்து வரு​கி​றது என்​கிற
குற்​றச்​சாட்​டுக்​குக் கார​ணம் வெங்​க​டே​சன் போன்ற அற்​பு​த​மான கலை​ஞர்​க​ளுக்கு கிடைக்க வேண்​டிய
வாய்ப்​பு​கள் இல்​லா​மல் இருப்​ப​து​ தான்.​

பாரம்​ப​ரி​யம் மிக்க பாலாந்​த​ர​மும்,​​ குரு பரம்​ப​ரை​யும் உள்ள இது​போன்ற கலை​ஞர்​க​ளுக்கு
சாயங்​கா​லக் கச்​சே​ரி​களை ஒதுக்​கி​னால்,​​ மீண்​டும் பழைய வர​வேற்​புக் கிடைக்​கும்.

Kannan Natarajan

unread,
Dec 20, 2009, 12:27:50 AM12/20/09
to Min Thamizh
வித்​தை​கள் தேவை​தானா திலீப்...?

காத்​தி​ர​மான சாரீ​ரத்​தில்,​​ பேரா​சி​ரி​யர் எஸ்.ஆர்.​ ஜான​கி​ரா​ம​னின் முத்​தி​ரை​யு​டன் ஆதி தாளத்​தில்
சாவேரி இராகத்​தில் "ஸர​ஸஸுட" வர்​ணத்​து​டன் ஸ்ரீராம் கண்​ண​ன​னின் கச்​சேரி தொடங்​கி​யது.​
http://www.dinamani.com/Images/article/2009/12/20/music7.jpg


அம்​ரு​த​மா​கப் பொழிந்​தது அம்​ரு​த​வர்ஷிணி இராக ஆலா​பனை.​

தீட்​சி​த​ரின் "ஆனந்​தாம்​ரு​த​வர்​ஷிணி" கீர்த்​த​னை​யும் அதற்​கும் பொருத்​த​மா​கக் கற்​ப​னா​சு​வ​ரங்​க​ளும்.​

ஆனந்​த​பை​ர​வியோ என்று ஒரு வினாடி நம்மை யோசிக்க வைத்து,​​ பின் அழ​காக,​​ அழுத்​த​மாக
ரீதி​கெளளையை விஸ்​தா​ர​மாக ஆலா​பனை செய்து ச்யாமா சாஸ்த்​தி​ரி​யின் "நினு​வி​னா​ம​ரி​க​லதா"
பாடி​ய​ போது,​​ நல்ல ரீதி​கெளளை கேட்ட சம் திருப்தி.​

அ​டுத்து தமி​ழில் எந்​நே​ர​மும் கேட்டு மகி​ழக்​கூ​டிய "தேவ காந்​தாரி" இராகத்​தில் அமைந்த
கோபா​ல​கி​ருஷ்ண பார​தி​யின் "என் நேர​மும் உந்​தன் சன்​னிதி" பாடலை விச்​ராந்​தி​யு​டன் பாடி​னார்.​

ஒரே குரு​வி​டம் பல​ கா​லம் பயில்​வது இப்​போ​தெல்​லாம் ரொம்​ப​வும் அரி​தான விஷ​ய​மாகி விட்​டது.​

ஆனால், குரு​கு​லப் பாடாந்​த​ரத்​தில் ஸ்வா​பா​வீ​க​மா​கக் குரு​வின் குரல் சிஷ்​ய​ரின் குர​லில் ஒலிக்​கும்
என்று பெரி​ய​வர்​கள் கூறு​வார்​கள்.​

தோடி ஆலா​ப​னை​யில் அதை நிரூ​பித்​தார் ஸ்ரீராம்.​

தோடி​யில் தியா​கய்​ய​ரின் ஸ்ரீரங்க பஞ்​ச​ரத்​னத்​தில் ஒன்​றான "இராஜு​வெ​டல" கீர்த்​த​னை​யைப் பாடி​னார்.​
நிர​வ​லும்,​​ கல்​ப​னா​சு​வ​ரங்​க​ளும் அவ​ரின் முதிர்ச்​சி​யைப் பறை சாற்​றிற்று.​

தோடி​யில் கல்​பனா ஸ்வ​ரம் பாடும்​போது கீழ்​கா​லத்​தில் பாடா​தது ஒரு குறை​யாக இருந்​தது.​

இராக​மா​லி​கை​யில் புரந்​த​ர​தா​ச​ரின் "நின்​யாகோ பதம்",​​ கர​ஹ​ரப்​பி​ரி​யா​வில் "பக​லி​ர​வி​னில்" என்ற
திருப்​பு​க​ழு​டன் கச்​சேரி நிறை​வ​டைந்​தது.​

வய​லின் வாசித்த திலீப் வய​லின் மேதை எம்.எஸ்.​ கோபா​ல​கி​ருஷ்​ண​னின் சீடர் என்​பதை ஒவ்​வொரு
கைய​சை​வும் பறைச்​சாற்​றிற்று.​ வய​லி​னில் அலை​,அ​லை​யாய் வரும் அசை​வு​கள் பரூர் குடும்​பத்​தின்
தனிச் சொத்து.​

நன்​றாக வாசித்​தார்.​

ஆனால், சில இடங்​க​ளில் தலை​யில் எண்​ணெய்க் குடத்தை வைத்​துக்​கொண்டு கயிற்​றின் மேல்
நடப்​ப​தைப் போல் இருந்​தது.​

நல்ல பாரம்​ப​ரி​ய​மான வாசிப்​பில் செப்​படி வித்​தை​கள் தேவை​தானா திலீப்?​

விளாங்​குடி சிவ​கு​மார்,​​ உப​பக்​க​வாத்​தி​யம் இல்லை என்ற குறையே தெரி​யா​மல் வாசித்​தார்.​ 

அ​ழுத்​த​மான,​​ முதிர்ச்​சி​யான கச்​சே​ரியை ஒரு இளைய தலை​மு​றைப் பாடக் கேட்​ட​தில் அலாதி திருப்தி!​!

Kannan Natarajan

unread,
Dec 20, 2009, 12:34:28 AM12/20/09
to Min Thamizh
அலட்​டல் இல்​லாத...

அலட்​டலோ, ஆர்​பாட்​டமோ இல்​லாத அச​லான அக்​மார்க் சங்​கீ​தம் மட்​டுமே வழங்​கக் கூடிய
கலை​ஞர்​க​ளின் பட்​டிய​லில் சங்​கரி கிருஷ்​ண​னுக்கு நிச்​ச​யம் இடம் உண்டு.​

http://www.dinamani.com/Images/article/2009/12/20/music8.jpg

அ​வ​ரு​டைய நிகழ்ச்சி கார்த்​திக் பைன் ஆர்ட்ஸ் சார்​பில் சனிக்​கி​ழ​மை​யன்று(19/12/09) பார​திய வித்யா
பவ​னில் காலை பத்து மணிக்கு என்று தெரிந்​த​தும் பத்து நிமி​டம் முன்​ன​தா​கவே ஆஜர்.​

ஆனால் நமக்கு முன்​பா​கவே பக்க வாத்​திய கலை​ஞர்​கள் புடை​சூழ மேடை​யில் தயா​ராக இருந்​தார்
சங்​கரி கிருஷ்​ணன்.​

ச​ரி​யாக பத்து மணிக்கு லால்​குடி ஜெய​ரா​மன் இயற்​றிய "அரு​ணோ​த​யமே அன்​பின் வடி​வமே" என்​கிற
பெளளி இராக கீர்த்​த​னை​யோடு நிகழ்ச்​சியை தொடங்​கி​னார் ​(லால்​கு​டி​யா​ரின் சிஷ்​யை​யான)​
சங்​கரி கிருஷ்​ணன்.​

அடுத்து, புலி​யூர் துரை​சாமி ஐய​ரின் "ஸர​ஸி​ரு​ஹா​ஸ​னப்​ரியே" ​(நாட்டை)​,​​ தியா​க​ரா​ஜ​ரின்
நன்​னு​வி​டச்சி ​(ரீதி​கெளளை)​ இரண்​டை​யும் பாடி​விட்டு பட்​ட​னம் சுப்​ர​ம​ணிய ஐய​ரின்
"அப​ரா​த​மு​லன்​னியு" ​(இலதாங்கி)​ கீர்த்​த​னையை எடுத்​துக் கொண்டு ஒரு இசைத் தேரோட்​டமே
நடத்தி விட்​டார்.​

அதி​லும், அனு​பல்​ல​வி​யில் வரும் "க்ரு​ப​ஜேஸி நாம​னவி ஆல​கிஞ்சி கீ கண்ட ஜூட சம​ய​மிதே" என்​கிற
வரி​க​ளில் ஸ்வ​ரம் பாடி முடிக்கு முன்பே அரங்​கத்​தில் பலத்த கர​கோ​ஷம்.​

அ​டாணா இராகத்தை விஸ்​தா​ர​மாக அவர் ஆலா​பனை செய்​த​போது "சாரதே நமோஸ்​துதே"வோ
"நீ இரங்​கா​யெனி"லோ வரப்​போ​கி​றது என்று நினைத்த நமக்கு இன்ப அதிர்ச்​சி​யாக
"அனு​பவ குணாம்​பதி" ​(தியா​க​ரா​ஜர்)​ பாடி வியக்க வைத்​தார்.​

அடுத்​த​தாக இவர் பாடிய "கொலு மர​கத கோதண்​ட​பாணி" ​(தியா​க​ரா​ஜர்)​ கீர்த்​த​னை​யில் வரும்
"ஸ்ரீ கருணீ" என்​கிற வரியை எடுத்​துக் கொண்டு இவர் செய்த நிர​வல் அட்​சர இலட்​சம் பெறும்.​

ம​யி​லாப்​பூர் கச்​சே​ரி​யில் பாப​நா​சம் சிவன் பாடல் இல்​லா​மல் எப்​படி?​

என்ன தவம் செய்​தனை ​(காபி)​ பாடி இறு​தி​யாக லால்​கு​டி​யா​ரின் யமுனா கல்​யாணி இராக
தில்​லா​னா​வு​டன் நிகழ்ச்​சியை நிறைவு செய்​தார் சங்​கரி கிருஷ்​ணன்.​

  • வயலின்:​ பத்மா சங்​கர் ​(இவ​ரும் லால்​குடி சிஷ்யை)​
  • மிரு​தங்​கம் கண​ப​தி​ரா​மன்
  • கஞ்​சிரா கோபா​ல​கி​ருஷ்​ணன்
பிழிந்​தெ​டுத்த சாஸ்​தி​ரிய சங்​கீ​தத்தை செளக்​கி​ய​மா​க​வும்,​​ ஜன​ரஞ்​ச​க​மா​க​வும் பாட முடி​யும்
என்​கிற இரசம் சங்​கரி கிருஷ்​ண​னின் சங்​கீ​தம்.

Kannan Natarajan

unread,
Dec 21, 2009, 3:35:18 AM12/21/09
to Min Thamizh
முன்னோடிகள்:-  திருக்கோடிக்காவல் கிருஷ்ணய்யர் (1857 - 1913)

19ம் நூற்றாண்டில் பாலுசுவாமி தீட்சிதரால் கர்நாடக இசைக்கு இறக்குமதி செய்யப்பட்ட பிடில் வாத்தியத்தில் கரை கண்டு மாமேதையாகத்
திகழ்ந்தவர் திருக்கோடிக்காவல் கிருஷ்ணய்யர்.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள மரத்துறை என்ற கிராமத்தில் பாகவத சம்பிரதாயத்தில் ஊறிய ஒரு குடும்பத்தில் பிறந்தவர் இவர்.

ஸங்கீதம் இயல்பாகவே இவருடைய
ரத்தத்தில் கலந்திருந்தது.

இவருடைய தந்தை நல்ல பாஷா ஞானம் பெற்று ஹரிகதை நிகழ்த்துவதில் வல்லுநராகத் திகழ்ந்தார்.

கிருஷ்ணய்யரின் முதல் ஆசான் அவருடைய தந்தையாவார்.

குரல் பேசவில்லை. ஆனால் இவர் விரல் பேசியது.

சாத்தனூர் பஞ்சநத பாகவதரிடமும், பின்பு வயலின் சுப்பராயரிடமும் வயலின் பயின்று, அதை வாசிப்பதில் கைதேர்ந்தவரானார்.

விடாமுயற்சியும், அயராத உழைப்பும் இவரை நன்கு பக்குவப் படுத்திற்று.

நான்கு ஸ்தாயிகளிலும் விடாது சாதகம் செய்வதையும், சாவேரி, பேகடா முதலிய ஆதிதாள வர்ணங்கள், கல்யாணி மற்றும் பைரவி
அட தாள வர்ணங்களை தினமும் வாசித்து மெருகேற்றுவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார்.

அதிகாலை 3 மணிக்கு ஆரம்பிக்கும் இவரது சாதகம் 7 மணி வரை தொடரும்.

அபூர்வ
ராகங்களையும் அதற்கான சுவர பிரஸ்தாரங்களையும் அதிகாலையில் சாதகம் செய்வது இவரது வழக்கம்.

மாலை கச்சேரி இருந்தாலும் தன்னுடைய சாதகம் செய்யும் நேரத்தைக் குறைத்துக்கொள்ள மாட்டாராம்.

பிரபல வித்வான்களுக்கு மட்டுமன்றி இளம் வித்வான்களுக்கும் பக்கவாத்தியம் வாசிப்பார்.

எவ்வளவு தான் அடக்கி வாசித்தாலும், இவர் வாசிக்கும்போது, அவருடைய திறமை அதிகமாக பரிமளித்தது.

இளம் வித்வான்கள் இவரைப் பக்கவாத்தியமாக போட்டுக்கொள்ள அஞ்சினர்.

பட்டணம் சுப்ரமண்ய அய்யர், பூச்சி சீனிவாஸ அய்யங்கார் போன்றவர்களுக்கு வாசிக்கும்போது இவருடைய திறமையை முழுமையாக
வெளிக்கொண்டு வர முடிந்தது.

இவர் வாழ்க்கையில் நடந்த ஓர் சுவையான சம்பவம்.

ஒரு சமயம், பூச்சி சீனிவாஸ அய்யங்காருக்கு பக்கவாத்தியம் வாசிப்பதற்காக சென்னை வந்திருந்தார்.

கச்சேரி முடிந்த பின் சீனிவாஸ அய்யங்கார் தன்னுடனே தங்குமாறு கிருஷ்ணய்யரை அழைத்தார்.

தான் அதிகாலை 3 மணிக்கு செய்யும் சாதகம் மற்றவர்களுக்கு சிரமம் தரக்கூடாது என்பதால் அவருடன் செல்ல மறுத்துவிட்டார்.

தான் தங்கியிருந்த இடத்தில் வழக்கம்போல் அதிகாலை சாதகம் செய்யத் தொடங்கினார்.

சாதகம் முடிந்த தறுவாயில் பக்கத்து வீட்டுத் திண்ணையிலிருந்து பூச்சி சீனிவாச அய்யங்கார் அவர்கள் எழுந்து வந்து மிகவும் பாராட்டினாராம்.

இவரது சங்கீத சாதகத்தைக் கேட்பதற்காக இரவு முழுவதும் திண்ணையில் படுத்திருந்தார் அய்யங்கார் அவர்கள்.

இவருடைய ஒரு கச்சேரிக்கு நடுவில் புல்லாங்குழல் வித்வான் சரப சாஸ்திரிகள் இறந்ததை அறிந்து வாய்விட்டு அழுதாராம்.

"மகா வைத்யநாத சிவன் காலமானபோது என் வலது கை இழந்தேன்; இன்று என் இடது கையையும் இழந்தேன்" என்று சொல்லி கச்சேரியை
முடித்துக்கொண்டாராம்.

வயலினுக்கு பெருமைச் சேர்த்த இவர், 1903ம் ஆண்டு இயற்கை எய்தினார்.


சுவாதி

Kannan Natarajan

unread,
Dec 21, 2009, 3:41:08 AM12/21/09
to Min Thamizh
இதோ வந்துவிட்டார்...

மதுரை புஷ்பவனம் அய்யரின் பாணி வழிவழியாக வந்து இப்போது டி.வி. சங்கரநாராயணின் மகன் மகாதேவனிடம்
பத்திரமாக அடைக்கலமாகி இருக்கிறது.

ஒரு மிகப் பெரிய பாரம்பரியத்தின் பொறுத்தமான வாரிசு என்று "சபாஷ்" போட வைக்கும் சங்கீதத்துக்கு சொந்தக்காரர்
இந்த இளைஞர்.

சங்கீத கலாநிதி டி.வி. சங்கரநாராயணனின் மகன்.

http://www.dinamani.com/Images/article/2009/12/21/music2.jpg

மீன் குட்டிக்கு நீந்தவா கற்றுக் கொடுக்க வேண்டும்?

எந்த ஒரு கலைஞனுமே தனியாக நிகழ்ச்சி நடத்தத் தொடங்கும்போதுதான் அவனது ஞானமும், கற்பனா சக்தியும் வெளிவருகிறது.

மதுரை மணி அய்யருடன் பின்பாட்டுப் பாடிக் கொண்டிருந்தபோது யாராவது டி.வி. சங்கரநாராயணின் வீச்சும், தாக்கமும் இந்த
அளவுக்கு இருக்கும் என்று நினைத்துப் பார்த்தார்களோ?

ஆனால், மகாதேவன் தமது தந்தையுடன் பாடும் போதே தனது திறமையைக் கூட்ட சில சந்தர்ப்பங்களை டி.வி.எஸ். தராமல் இல்லை.

அதை அவரும் முறையாக பயன்படுத்திக் கொண்டார் எனலாம்.

சரியான நேரத்தில் களம் இறங்கியிருக்கிறார் இந்த இசை உலக வாரிசு...

நாட்டையில் தீட்சிதரின் "மஹாகணபதிம்" தொடர்ந்து தர்பார்!

அவுட் வாணமாய் சங்கதிகள் வந்து இறங்கின.

வாலாஜாபேட்டை வெங்கடரமண பாகவதரின் "நீவே நனு ப்ரோலே" என்கிற சாகித்யம்.

அதைத் தொடர்ந்து ஜிலுஜிலுப்பாக கல்பனா ஸ்வரங்கள்.

வாசஸ்பதியில்
ராக ஆலாபனை, "ஸ்ரீ பதே ஜய" என்ற கீர்த்தனை.

தோடியில் விஸ்தாரமான ஆலாபனை.

மகாதேவனின் சங்கீதத்தில் நிறைய நாதஸ்வரப்பிடிகள்.

ஸ்ருதியும்,
லயமும் மணி அய்யருக்கு வாய்த்தது போல இவரிடமும் கைகட்டி சேவகம் செய்கிறது.

குரலில் தான் என்ன வேகம்!

எங்கு தேவையோ அங்கே வேகத்தை பிரயோகிக்கும் புத்திசாலித்தனத்தைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

மிச்ர சாபு தாளத்தில் சுவாதித் திருநாளின் "ஸரஸிஜநாப முராரே".

அடுத்த ஆலாபனை ஹமீர் கல்யாணி.

மஹாதேவனுக்கும் அம்பிகா பிரசாதுக்கும் இடையே ஆரோக்கியமான போட்டி!

ரசிகர்களுக்கு விருந்தாய் அமைந்தது ஹமீர் கல்யாணி.

சுப்பராய சாஸ்த்ரியின் "வெங்கடசைல விஹார" கீர்த்தனையை அழகாகப் பாடினார்.

நெய்வேலி
ராம்குமாரின் மிருதங்கமும், ராஜ் கணேஷின் கஞ்சிராவும் சேர்ந்து தனி ஆவர்த்தனம் ஒரு லய சங்கமமாக
இருந்தது.

"எப்போ வருவாரோ" பாடல் மதுரை மணி அய்யரின் குடும்ப சொத்து.

மிக அழகாகப் பாடினார்.

மத்யமாவதியில் அன்னமாச்சார்யாரின் "நீ நாமமே மாகு" பாட்டுடன் கச்சேரி நிறைவடைந்தது.

எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

கொடிகட்டிப் பறக்கப் போகிறார் இந்த இளைஞர்.

விறுவிறுப்பான சங்கீதத்துக்கும், சாஸ்த்ரிய சுத்தமான இசைக்கும் பங்கம் வந்து விடுமோ என்று யாராவது கவலைப்பட்டால்,
தயவு செய்து ம
காதேவனின் பாட்டைக் கேளுங்கள்.

வருங்காலத்தைப் பற்றிய கவலை பறந்து விடும்.

"எப்போ வருவாரோ" என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஒரு செய்தி - இதோ வந்துவிட்டார்!

Kannan Natarajan

unread,
Dec 21, 2009, 3:49:16 AM12/21/09
to Min Thamizh
அந்த 3 மணி நேரம்...

மயிலாப்பூர் ராகசுதா அரங்கத்தில் "நாத இன்பம்" அமைப்பின் சார்பில் சீதா ராஜனின் நிகழ்ச்சி.

இவரது மாணவி ஜோத்ஸ்னா உடன் பாடினார்.
http://www.dinamani.com/Images/article/2009/12/21/music3.jpg

"பாலபிருந்தம்" என்கிற இசைப் பள்ளியின் மூலம் பல இளம் இசைக் கலைஞர்களை உருவாக்கும் பணியில் தன்னை
அர்ப்பணித்துக் கொண்டிருப்பவர் சீதா ராஜன்.

"இன்ட்ட சாலா" பேகடா
ராக வர்ணத்துடன் தனது நிகழ்ச்சியைத் தொடங்கிய சீதா ராஜன், அடுத்ததாக எடுத்துக் கொண்டது
"முட்டுமோமு" என்கிற தியாகராஜர் கிருதியை.

"சூரியகாந்தம்"
ராகத்திலான அந்த சாகித்யத்தில், "ஜனன ஸ்வபாவமு" என்ற இடத்தில் அப்படியே பாவத்தைப் பிழிந்து
பாடிய சீதா ராஜனின் சங்கீதம் தியாகய்யரையே கூட உருக வைத்திருக்கும். 

பிறகு வராளியில் "கா வா வா, கந்தா வா..." பாடிவிட்டு தேவகாந்தாரி
ராக ஆலாபனையில் இறங்கினார்.

அற்புதமான தேவகாந்தாரிக்குப் பிறகு வழக்கம்போல "ஷீரசாகர" சாகித்தியம் பாடுவார் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஒரு
இன்ப அதிர்ச்சி, "வந்தனேஸ்வரம்" என்கிற தீட்சிதர் சாகித்யத்தை எடுத்துக் கொண்டதும் பலே... பலே... என்று வாய்விட்டு சிலர்
தங்களது மகிழ்ச்சியை வெளியிட்டனர்.

பிறகு விஸ்தாரமாக ஒரு பூர்விகல்யாணி.

சாகித்தியம் ஸ்யாமா சாஸ்திரியின் "நின்னுவினா".

தொடர்ந்து மைசூர் சதாசிவராவின் "எவருன்னாரு" என்கிற "பாலஹம்சா"
ராக சாகித்தியம்.

இந்த சாகித்தியம் அதிகம் கேட்டிராத சாகித்தியம் என்பதால் பரவலாக
ரசித்தனர்.

ரசமஞ்சரி என்றொரு ராகம். ரசிகப்பிரியா போல என்று சொல்லலாம்.

இந்த
ராகத்தில் தீட்சிதரின் "சிருங்கார ரசமஞ்சரி" என்கிற சாகித்தியத்தை எடுத்துக்கொண்டு  சீதா ராஜன்
பாடியது மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

அந்த
ராகத்தின் பல்வேறு பரிமாணங்களைத் தொட்டுக்காட்டி நமது இசை அறிவுக்கு விஷயதானம் செய்தார்
என்று சொல்லலாம்.

அடாணாவிலும், சுபபந்துவராளி
ராகத்திலும் உருப்படிகள் பாடிவிட்டு கடைசியாக சீதா ராஜன் எடுத்துக் கொண்டது
காம்போதியை.

விஸ்தாரமான ஆலாபனை.

எடுத்துக் கொண்ட சாகித்தியம் கோபாலகிருஷ்ண பாரதியின் "திருவடி சரணம்".

நிரவல், ஸ்வரம் பாடி முடித்தபோது நல்ல இசை விருந்து கிடைத்த திருப்தி.

சுமார் 3 மணி நேரம் சற்றும் அலுப்பு தட்டாத, ஆர்ப்பாட்டமே இல்லாத, சாஸ்த்ரீய
ரசம் சொட்டும் சங்கீத நிகழ்ச்சி.

முல்லைவாசல் சந்திரமெ
லியின் வயலினும், பத்ரி சதீஷ்குமாரின் மிருதங்கமும், புருஷோத்தமனின் கடமும் நிகழ்ச்சிக்கு மெருகு சேர்த்தன.

Kannan Natarajan

unread,
Dec 21, 2009, 3:53:57 AM12/21/09
to Min Thamizh
நாளொரு நிகழ்ச்சி!

வாய்மொழியாக வந்த இசை மரபை பற்றிய குறிப்பீடே சுப்பராம தீட்சிதரின் சம்பிரதாயப் பிரதர்சினி என்று
குறிப்பிட்டு விட்டு தன் விளக்கத்தை ஆரம்பித்தார் இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணா.

http://www.dinamani.com/Images/article/2009/12/21/music4.jpg

கடந்த காலத்தில் பரவலாய் இருந்த சங்கதிகள், பழைய மரபில் பாடப்பட்டு வந்த
ராகங்கள் இவற்றைப்
பற்றி நாம் புரிந்துகொள்ள இதைப் போன்ற குறிப்பீட்டுப் புத்தகங்கள் மிக உதவியாக இருக்கின்றன.

முதலில் பைரவம், கன்னட, சஹானா என்ற மூன்று
ராகங்களை எடுத்துக்கொண்டார்.

காரணம், இந்த
ராகங்களை தியாகராஜரும் கையாண்டுள்ளார் என்பதனால்.

சம்பிரதாயப்ரதர்சினியில் தீட்சிதர் சம்பிரதாயத்தில் இவை எப்படிப் பாடப்படவேண்டும் என்ற குறிப்பிருந்தும்,
தியாகராஜர் இந்த
ராகங்களைக் கையாண்ட விதத்திலேயே இப்போது தீட்சிதரின் சாஹித்யங்களும்
பாடப்படுகின்றன என்று கூறினார்.

தீட்சிதர் சம்பிரதாயத்தில், சம்பிரதாயப் பிரதர்சினியில் குறிப்பிட்டிருப்பதைப் போல எப்படிப் பாட வேண்டும் என்று
சஹானா
ராகத்தை மிக அழகாகப் பாடிக் காட்டினார்.

முதன்முறையாக இந்த பாணியில் சஹானாவைக் கேட்டபோது, அது தர்பார் - கானடா கலவையாகத்தான்
காதில் விழுந்தது.

கலைஞர்கள் அடிக்கடி பாடி
ரசிகர்கள் மனதில் இவற்றைப் பதிய வைக்க வேண்டியது அவசியம்.

அன்யஸ்வரங்கள் அந்த
ராகத்திற்குரிய இயற்கையான ஸ்வரங்களைப் போல கையாளப்படுகின்றன.

இது தவறு என்று சுட்டிக்காட்டினார் கிருஷ்ணா.

கிருஷ்ணாவின் சங்கீத ஈடுபாடு பட்டவர்தனமாகத் தெரிந்தது.

"எள் போட்டால் எள் விழாத கூட்டம்" என்பார்கள்.

ஆனால், அகாதெமி மினி ஹாலில், எள்ளைப் போட்டால் கீழே விழுவதற்குள் எண்ணையாகி விடுமளவு
கூட்டம்.

இதுபோன்ற நிகழ்ச்சிகளை ஒரு நாளுக்கு ஒரு நிகழ்ச்சியாக பெரிய ஹாலிலேயே வைத்துக் கொள்ளலாமே!!

Kannan Natarajan

unread,
Dec 21, 2009, 4:01:51 AM12/21/09
to Min Thamizh
அடுத்த கச்சேரி எங்கே?

பிரம்மகான சபையில் வெள்ளிக்கிழமை(18/12/09) ஓ.எஸ். தியாகராஜனின் நிகழ்ச்சி.

  • அம்பிகா பிரசாத் வயலின்
  • எஸ். தியாகராஜன் மிருதங்கம்
"ஓ.எஸ்.டி." கச்சேரி என்றால் கேட்கவா வேண்டும், களைகட்ட!

http://www.dinamani.com/Images/article/2009/12/21/music5.jpg

சங்கராபரணத்தில் "சாமி நின்னே"யில் தொடங்கிய நிகழ்ச்சியில் அடுத்ததாக "தசரத நந்தன..."
என்கிற "அசாவேரி"
ராக கீர்த்தனை.

பிறகு தீட்சதரின் "நீலகண்டம் பஜேகம் சததம்" என்கிற "கேதார கெ
ளை" ராக சாகித்யம்.

"தக்ஷிண காசிபுரம்" என்கிற இடத்தில் ஸ்வரம் பாடுவதுடன் நிறுத்திக் கொண்டார்.

விஸ்தாரமாகப் போகவில்லை.

"சீதா மனோகர சிருங்கார சேகர" என்கிற "
ராம மனோகரி" ராகக் கீர்த்தனை தியாகய்யருடையது.

அதை "ஓ.எஸ்.டி." பாடிக் கேட்கும்போது புதிய பல
ராகபாவங்கள் வெளிப்பட்டன.

முன்பெல்லாம் முசிறியைத் தவிர ஏனைய வித்வான்கள் "முகாரி"
ராகம் பாடுவதைத் தவிர்ப்பார்கள்.

கச்சேரியில் விறுவிறுப்புக்கு உதவாது என்பதுகூடக் காரணமாக இருக்கலாம்.

இப்போது "முகாரி" பாடுவது என்பது வித்வத்தின் வெளிபாடாகக் கருதப்படுகிறது.

உருக்கமான சங்கீதத்தை வெளிப்படுத்த இந்த
ராகத்துக்கு ஈடு இணை இல்லை என்பதை
இன்றைய கலைஞர்கள் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஓ.எஸ். தியாகராஜன் பாடிய "முகாரி"யை முசிறி அந்த நாளில் பாடிய முகாரியுடன் ஒப்பிடலாம்.

"அக்மார்க்" முகாரி சாகித்யம் வழக்கம்போல "என்றைக்கு சிவகிருபை வருமோ..." நந்தனாரை நமது
மனக் கண்ணில் கொண்டு வந்து நிறுத்திய "முகாரி".

ஹம்சநாதத்தில் ஊத்துக்காடு வெங்கடசுப்பைய்யரின் "கல்யாணாம"வைத் தொடர்ந்து விஸ்தாரமாக ஒரு மத்யமாவதி
எடுத்துக் கொண்ட சாகித்யம் தியாகைய்யரின் "அடிகி சுகமுலு".

மத்யமாவதி
ராக ஆலாபனை, வழக்கம்போல "க்ளாஸ்".

"சாக்கேததாம தியாகராஜனுத"லில் நிரவல், ஸ்வரம்."பெகாக்"
ராகத்தில் "ஆடும் சிதம்பரமே",
"அனுமனை அனுதினம் நினை மனமே" என்று
ராகமாலிகை பாடி நிகழ்ச்சியை "ஓ.எஸ்.டி." நிறைவு செய்தபோது,
நம்மை அறியாமலே கேட்கத் தோன்றிய கேள்வி. என்ன தெரியுமா?

ஓ.எஸ்.டி.யின் அடுத்த கச்சேரி எங்கே, எப்போது?

Kannan Natarajan

unread,
Dec 21, 2009, 4:08:34 AM12/21/09
to Min Thamizh
"வி" ஃபார் வித்யா!

மைலாப்பூர் சாஸ்த்ரி ஹாலில் சனிக்கிழமை(19/12/09) வித்யா கல்யாணராமனின் நிகழ்ச்சி.

http://www.dinamani.com/Images/article/2009/12/21/music6.jpg

இன்றைய இளைய தலைமுறைக் கலைஞர்களில் ஒளிமயமான எதிர்காலம் காணப்படும் சிலரில்
இவருக்கும் நிச்சயமாக இடமுண்டு.

கடந்த மூன்று ஆண்டுகளாக இவரது சங்கீதத்தில் ஆண்டுதோறும் மெருகேறி வருகிறது.

  • லட்சுமி வெங்கட்ரமணி வயலின்
  • கும்பகோணம் சுவாமிநாதன் மிருதங்கம்
"ஸ்ரீராக" வர்ணத்துடன் தொடங்கிய வித்யாவின் இசை நிகழ்ச்சி, அடுத்ததாக, "வராளி"
ராகத்தில் அமைந்த "ஆழிமழைக் கண்ணா" என்கிற திருப்பாவையுடன் தொடர்ந்தது.

பிறகு ஒரு அற்புதமான "மலையமாருதம்" பாடினார் வித்யா.

சுமார் 18 நிமிடங்கள் பாடிய மலையமாருதத்திற்கு அவர் எடுத்துக் கொண்ட சாகித்யம் "மனசாயெட்டுலோ...".

இவரும் சரி, தனது சங்கீதத்தின் பாவ
லட்சணங்களை வெளிப்படுத்தத் தேர்ந்தெடுத்துக் கொண்ட ராகம்
"முகாரி". சாகித்யம், "அறிவார், யார் அறிவார்...". தொடர்ந்து "சிந்தயாம் மகாலிங்கம்" என்கிற தீட்சதரின் "பரஸ்"
ராக கீர்த்தனை.

வித்யா கல்யாணராமன் அதற்குப் பிறகு விஸ்தாரமாக ஒரு கல்யாணி பாடி இருக்கிறார்.

அடேயப்பா, கல்யாணியின் அத்தனை இயல்புகளும் அவரது குரலில் இழைத்தோடி வந்தன.

அந்த விஸ்தாரமான ஆலாபனையின்போது பிருகாக்கள் உருண்டோடி வந்த விதம் சில இடங்களில்
எம்.எல்.வி.யை ஞாபகப்படுத்தின.

அவ்வளவு அனாயாசமாக பிருகாக்கள் எழுந்தன என்பது மட்டுமல்ல, 'கல்யாணி'
ராகத்தின்
இனிமையையும் உட்பொருளையும் உள்ளடக்கியவையாக இருந்தன என்பதுதான் நம்மை அசர அடித்தது.

"கல்யாணி"
ராகத்துக்கு வித்யா எடுத்துக் கொண்ட சாகித்யம் பட்டணம் சுப்பிரமணிய அய்யரின் "நிஜதாஸவரதா".

ஸ்வரம் பாடி பிறகு தனியாவர்தனத்திற்கும் இடம் ஒதுக்கி, வியக்கத்தக்க விதத்தில் விருந்து படைத்தார் என்று
கூறவேண்டும்.

ஒரு
ராகமாலிகை, "ஜோன்புரி" ராகத்தில் "எப்போ வருவாரோ", பூர்ண சந்திரிகாவில் "தில்லானா" என்று
விறுவிறுவென்று பாடி திருப்தியான இசை நிகழ்ச்சியை நிறைவு செய்தார் வித்யா கல்யாணராமன்.

அனாயாசமாகப் பாடுகிறார். அனுபவத்தில் பாடுகிறார்.

அதனால் அசைபோட்டு
ரசிக்க வைக்கிறார் "வி" ஃபார் வித்யா!

Kannan Natarajan

unread,
Dec 22, 2009, 6:27:56 AM12/22/09
to Min Thamizh
'ஓ' போடு!

நாரதகான சபாவில் ஆர்.​ ராகவேந்திர ராவின் இசை நிகழ்ச்சி.

http://www.dinamani.com/Images/article/2009/12/22/22opodu.jpg

ஸ்ரீமுஷ்ணம்
ராஜாராவ் அவரை வளர்க்கும் போது இசையையும் சேர்த்தே வளர்த்திருக்கிறார் என்று தெரிகிறது.​

அப்படியொரு புஷ்டியான இசை!​

இந்த சீசனில்,​​ சாவேரி வர்ணத்தை நாரதகான சபா மினி ஹால் குத்தகைக்கு எடுத்துக் கொண்டுள்ளது போலும்.​

தொடர்ந்து இந்த அரங்கில் சாவேரி வர்ணத்தில் தொடங்கி நான் கேட்கும் ஏழாவது கச்சேரி இது.

அதன் பின்,​​
ரஞ்சனி ராகத்தை நல்ல மனோதர்மத்துடன் பாடினார்.​

தொடர்ந்தது "
ரஞ்சனி நிரஞ்சனி" சாகித்யம்.​

வாகதீச்வரியில் "
ஸுகவரதே" என்று நாராயணன் என்பவர் எழுதி,​​ ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ் இசை அமைத்த
கீர்த்தனையைப் பாடினார்.​

அசாத்தியமாக இருந்தது.

நாகஸ்வராவளியில் "ஸ்ரீபதே" பாடி நிரவலும்,​​ கல்பனா ஸ்வரங்களும்.​

ஆஹா!​ எக்ஸ்பிரஸ் வேகம்!​

மனோரதக் குதிரை அதி வேகமாக நாலு கால் பாய்ச்சலில் போனாலும்
லகானைக் கச்சிதமாகப் பிடித்துக்
கொண்டு தனது "கன்ட்ரோலிங்" குரலையும்,​​ இசையையும் வைத்துக் கொண்டிருக்கும் சாமர்த்தியத்துக்கு
"ஓ" போட வேண்டும்.

இதற்கு நேர்மாறாக அடுத்து வந்தது,​​ நிதானமாய் ஒரு பூர்வி கல்யாணி.​

நிறைய கார்வைகள் கொடுத்து நின்று நிதானமாய்ப் பாடினார்.​

தீட்சிதரின் "மீனாட்சி முதம் தேஹி"; பொருத்தமாய் கல்பனா ஸ்வரங்கள்;​ என்ன ஒரு
லயப் படிப்பு!

மோஹனம்,​​ சிந்து பைரவி,​​ ஆனந்த பைரவி பெஹாகில் விருத்தம் பாடி,​​ கோபாலகிருஷ்ணன பாரதியார்
"இரக்கம் வராததேனோ - சுவாமி" என்ற பாட்டை உருக்கமாகப் பாடினார்.​ ​

காரைக்கால் சுப்பிரமணியம் மிக இனிமையாக,​​ அழுத்தமாக வயலின் வாசித்தார்.​

வயலின் மேதை டி.என்.​ கிருஷ்ணனின் சிஷ்யராயிற்றே!​

ஸ்ரீவாஞ்சியம் ஸ்ரீராம் முதிர்ச்சியான ஒரு தனி வாசித்தார்.

நாளைய தலைமுறையின் நம்பிக்கை நட்சத்திரங்களில் இவருக்கு நிச்சயமாக ஒரு இடமுண்டு.

Kannan Natarajan

unread,
Dec 22, 2009, 6:31:53 AM12/22/09
to Min Thamizh
காசுக்கு பறக்க மாட்டேன்!

மகாராஜபுரம் விஸ்வநாதய்யர் பாட்டில் மட்டுமல்ல...பேச்சிலும் சமர்த்தர்.​ ​

http://www.dinamani.com/Images/article/2009/12/22/22kasu.jpg

தஞ்சாவூர் ஜில்லாக்காரர்களுக்கே உரித்தான நுட்பமான பொடி வைத்த பேச்சு அவருடையது.​ ​

நண்பர்கள் புடை சூழ அமர்ந்திருக்கும் சமயங்களில் சுவாரஸ்யமான உரையாடல்களுக்கு நடு நடுவே ​ அவர்
அடிக்கிற ஜோக்குகளுக்கு ஈடு இணையே கிடையாது.​ ​

குறிப்பாக இரட்டுற மொழிதலில் -​ சிலேடைப் பேச்சுக்களில் மன்னன்.

எந்தக் காலத்திலும் பணத்தையே பிரதானமாக ​ எண்ணாமல் கெ
ரவமாகத் தொழில் செய்த ​
தன்மானம் மிக்க அந்த நாள் கலைஞர்களில் அவருக்குத் தனி இடம் உண்டு.

ஒரு தடவை கச்சேரிக்கு அழைக்க மும்பையிலிருந்து - அன்றைய பம்பாய் - சிலர் வந்திருந்தார்கள்.​

விஸ்வநாதய்யர் ஓய்வாக நாற்காலியில் சாய்ந்து அமர்ந்திருக்க அவர்கள் அவரிடம் பம்பாயில்
வந்து அவசியம் பாடவேண்டுமென்று கேட்டுக் கொண்டனர்.​

"பண்ணின கச்சேரியெல்லாம் போருமே...அவ்வளவு தூரம் வந்து பாடறது சிரமம்" என்று அதை
ஏற்க அவர் மறுத்துவிட்டார்.​

அண்ணாவுக்கு
ரயில்ல வரது சிரமமாயிருந்தால் நாங்கள் ​ பிளேனிலேயே டிக்கெட் ஏற்பாடு
பண்ணறோம் என்றனர் அந்த விடாக் கண்டர்கள்.​

விஸ்வநாதய்யர் சட்டென்று "நான் பணத்துக்காகப் பறக்கலை ஐயா....ஆளைவிடுங்கள்"
என்ற போது வந்தவர்களுக்கே சிரிப்பு வந்துவிட்டது.

V, Dhivakar

unread,
Dec 22, 2009, 6:38:20 AM12/22/09
to mint...@googlegroups.com
ஆர்.​ ராகவேந்திர ராவின்
இராவ் - இப்படித்தான் தமிழில் எழுதவேண்டுமா? அ.பி.த.வாக நினைக்கவேண்டாம். நிஜமாகவே கேட்கிறேன்.
 
தி

Dhivakar
http://www.vamsadhara.blogspot.com
http://aduththaveedu.blogspot.com

Kannan Natarajan

unread,
Dec 22, 2009, 6:38:21 AM12/22/09
to Min Thamizh
மத்தியானக் கச்சேரி சகோதரிகள்...

ஞாயிறன்று(20/12/09) நாரத கான சபாவில் மதிய நேரக் கச்சேரி மாம்பலம் சகோதரிகளுடையது.​

http://www.dinamani.com/Images/article/2009/12/22/22mambalam.jpg
மாம்பலம் சகோதரிகள்

மத்தியானக் கச்சேரி சகோதரிகள் என்று இவர்களை அழைத்தாலும் தகும்.​

காரணம் இருக்கிறது.​

மேலே படியுங்கள்...​

மைசூர் மஹாராஜாவின் "ஸ்ரீமஹா கணபதே" என்ற அடாணா
ராகக் கீர்த்தனையுடன் கச்சேரி ஆரம்பித்தது.​

சிவசக்தி
ராகத்தை விஜயலட்சுமி பாடி,​​ பின் ஜி.என்.பி.யின் "ஸ்ரீசக்ரராஜ" கீர்த்தனையைப் பாடினார்கள்.​

கல்பனாஸ்வரம் பாடும் பாணி நன்றாக இருந்தது.​

"மாயனை மன்னும்" என்ற திருப்பாவை.​


ராஜ பாட்டையாகத் தோடி ராகம்.​

சித்ரா நன்றாகவே பாடினார்.​ ​

சுபபந்துவராளி
ராகம்;​ தியாகராஜரின் "என்னாளு" கீர்த்தனை;​ தொடர்ந்தது "சாவேரி" ராகம்.​

மன்னார்குடி
ராஜகோபால சுவாமியை தீட்சிதர் தனது பாட்டின் மூலம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தினார்.​

புரந்தரதாசரின் "அபராதி நானல்ல",​ அன்னமாசாரியாரின் "நீ நாமமேது" கீர்த்தனைகளைப் பாடி முடித்தார்கள்.​

குரல் பேசும்;​ விரல் பேசுமா?​

ஹேமலதாவின் கையில் பேசியது.​

அவர் வயலினில் வாசித்ததெல்லாம் வார்த்தைகளாய் வந்து விழுந்தன.​

என்ன ஒரு வித்வத்!​

மிருதங்கம் கல்லிடைகுறிச்சி சிவகுமார் இடது கை வாசிப்பு.​

டி.எஸ்.​
ரங்காசாரி கஞ்சிரா;​ நல்ல ஜமா;​ தேர்ந்த கலைஞர்கள் என்பதை நிரூபித்தனர்.​

சிறப்பான தனி.

இந்த மாம்பலம் சகோதரிகளைக் கடந்த ஐந்தாறு வருடங்களாகத் தொடர்ந்து கேட்டுக் கொண்டு வருகிறோம்.​

அப்போது கேட்ட மாதிரியே இப்போதும் ஏதோ கடனுக்குப் பாடிவிட்டது போல இருக்கிறது.​

சங்கீதத்தில் என்ன குறை என்று கேட்டால்,​​ தப்புச் சொல்லவும் முடியவில்லை.​

ஆனால் வெறும் "ச,ரி,க,ம,ப,த,நி" மட்டுமே சங்கீதமல்லவே.​

இவர்களுக்குப் பின்னால் பாட வந்த
ரஞ்சனி -​ காயத்ரி,​​ உச்சத்துக்குப் போய்விட்டார்கள்.​

இவர்கள் அண்ணாந்து பார்த்தபடி,​​ சான்சுக்கு ஆலாய்ப் பறக்கிறார்கள்.என்ன கொடுமையப்பா இது?​

தொடர்ந்து அடுத்த நாள் கச்சேரியை ஏற்றுக் கொள்வதே,​​ நியாயமாக எந்த ஒரு கலைஞரும்
செய்யத் தயங்குவார்கள்.​

இவர்கள் கிடைத்த வாய்ப்பை நழுவவிடக் கூடாது என்று ஒரே நாளில் இரண்டு மூன்று கச்சேரியை
ஏற்றுக் கொள்கிறார்கள்.​ இப்படி இருந்தால் இவர்களது சங்கீதம் எப்படி இருக்கும்?​

அது தான், மத்தியானக் கச்சேரியுடன் ஸ்தம்பித்து விட்டது.

Kannan Natarajan

unread,
Dec 22, 2009, 6:42:15 AM12/22/09
to Min Thamizh
எங்கே இவர்கள்?

இரட்டையர்களைப் பற்றிய பேச்சு வந்ததாலும்,​​ பிரியா சகோதரிகள் பற்றிய பிரஸ்தாபம் எழுந்ததாலும்
ஒரு அதிர்ச்சியான மர்மம்.​

எங்கே தான் சென்றார்கள்
ராதா -​ ஜெயலட்சுமி?

அறுபதுகளில் கொடி கட்டிப் பறந்த இரட்டையர்கள்.​ ​

http://www.dinamani.com/Images/article/2009/12/22/22enge.jpg

ஜி.என்.பி.யின் சிஷ்யைகளான
ராதா-​ ஜெயலட்சுமி.​

இவர்கள் ஒரே குருவிடம் பாடம் பயின்றபோது ஏற்பட்ட நெருக்கத்தால் இணைந்து
இரட்டையர்களாகப் பாடி வலம் வந்தனர்.​

பிருந்தா முக்தாவுக்குப் பிறகு இசை உலகில் தங்களுக்கென்று தனி முத்திரை பதித்த
இரட்டையர்கள்
ராதா -​ ஜெயலட்சுமி தான் எனலாம்.

பிரியா சகோதரிகள் இவர்களிடம் இசை கற்றனர்.​

இதுபோல பலருக்கும் குருவாக இருந்த
ராதா - ஜெயலட்சுமி சைதாப்பேட்டையில்
குடியிருந்த வீட்டை விற்றுவிட்டார்கள்.​

திருமணம் செய்துகொள்ளாத இவர்கள் கடைசியாக புட்டபர்த்திக்குச் செல்வதாகக்
கூறிச் சென்றார்களாம்.​

பிறகு என்ன ஆனார்கள் என்று யாருக்குமே தெரியவில்லை.​

பல இடங்களில் விசாரித்தும் பலனில்லை.​

பிரியா சகோதரிகள் தாங்களும் தேடுவதாகவும்,​​ விவரம் எதுவும் இல்லை என்று
உதட்டைப் பிதுக்குகிறார்கள்.

அற்புதமான சங்கீதத்துக்கு சொந்தக்காரர்கள்.​

ரசிகர்களை தங்களது விறுவிறுப்பான இசையால் கட்டிப் போட்டவர்கள்.​

எங்கே தான் போனார்கள் இவர்கள்?​

தெரிந்தால் சொல்லுங்களேன்...

Kannan Natarajan

unread,
Dec 22, 2009, 6:51:47 AM12/22/09
to Min Thamizh
இரட்டை 'சபாஷ்'!

சனிக்கிழமை(19/12/09) அகாதெமியின் "இரட்டையர்கள் தினம்" என்று அறிவிக்காத குறை.​

  • 9 மணிக்கு ருத்ரபட்டினம் சகோதரர்கள்
  • 4 மணிக்கு மல்லாடி சகோதரர்கள்
  • 7 மணிக்கு பிரியா சகோதரிகள்
என்று இரட்டையர்களின் அணிவகுப்பு.

தங்களது தொழிலில் சிரத்தையும்,​​ அணுகுமுறையில் துணிவும்,​​ சங்கீதத்தில் புதிது புதிதாக
ஏதாவது செய்து காட்ட வேண்டும் என்கிற தாகமும்,​​ எல்லாவற்றிற்கும் மேலாக இசை
உலகில் தனித்தன்மையுடன் வளையவர வேண்டும் என்கிற வைராக்கியமும் தான்
பிரியா சகோதரிகளைத் தொடர்ந்து முன்வரிசைக் கலைஞர்களாகத் தக்க வைத்திருக்கிறது.

"சுத்த சங்கீதம்" என்று அங்கலாய்ப்பவர்களால் பிரியா சகோதரிகளின் சங்கீதத்தை ஏற்றுக்
கொள்ள முடியாமல் இருக்கலாம்.​

ஆனால், இந்த சகோதரிகளின் இசையைப் பொறுத்தவரை அடிப்படை இலக்கணத்தில்
பிழை காண முடியாது.​

ஸ்ருதி சுத்தமான சங்கீதம் என்பதிலும் சந்தேகம் கிடையாது.​

ரசிகர்களைக் கட்டிப் போடுகிறார்கள் என்பது ஒன்று போதும் இவர்களது அங்கீகாரத்துக்கு
சான்று.

http://www.dinamani.com/Images/article/2009/12/22/22priya.jpg

பிரியா சகோதரிகள்

பகர தார ஸ்தாயியிலேயே நிரவல்,​​ ஸ்வரம் பாடுகிறார்கள் என்பதும்,​​ சில "சீப்"பான
சங்கதிகளைப் போட்டு கைதட்டல் வாங்குகிறார்கள் என்பதும் பிரியா சகோதரிகளைப்
பற்றிய குற்றச்சாட்டுகள்.​

இந்தக் குற்றச்சாட்டுக்கு இன்றைய இளைய தலைமுறைக் கலைஞர்கள் பலரும்
உள்ளாவார்கள் என்பது தானே உண்மை!

கச்சேரியை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை பிரியா சகோதரிகளிடம்
தான் பாடம் படிக்க வேண்டும்.​

அவ்வளவு கச்சிதமாகத் தயாரித்திருப்பார்கள்.​

அகாதெமி நிகழ்ச்சி மட்டும் விதிவிலக்காகிவிடுமா என்ன?

ருத்ரபட்டணம் வெங்கட்ராமய்யாவின் "நாயகி" ராக வர்ணத்தில் தொடங்கியது முதல்
கடைசியில் மங்களம் பாடி முடிக்கும் வரை ஒரு வினாடிகூடத் தொய்வு இல்லாத நிகழ்ச்சி.​

விறு விறுவென்று அவர்கள் கச்சேரியைக் கொண்டு சென்ற விதத்துக்கே பாராட்ட வேண்டும்.​

​"லாவண்ய ராமா" பாடிவிட்டு,​​ அடுத்தாற்போல "கமகப்ரியா",​ நம்ம "பூர்வி கல்யாணி"தான் சுவாமி.​

இதற்கு "கமகப்ரியா" என்றும் ஒரு பெயர் உண்டு.​

"மீனாட்சி மேமும் தேஹி" என்கிற தீட்சிதர் கிருதி.​

வழக்கம்போல "மீனலோசனி"யில் நிரவல் ஸ்வரம்.​

மகுடியில் கட்டுண்ட பாம்பு போல ரசிகர்களைக் கட்டிப் போட்டு விட்டனர்.

"தோடி"யில் ஒரு ராகம்,​​ தானம்,​​ பல்லவி பாடியிருக்கிறார்கள் பாருங்கள்.​

இவர்களது சங்கீத சுத்தத்தைக் கேள்வி கேட்பவர்கள் அன்றைய ராகம்,​​ தானம்,​​ பல்லவியை
கேட்டிருக்க வேண்டும்.​

அற்புதமான ஆலாபனை.​ சுருக்கமான தானம்.​

இரண்டு எடுப்புடன் கூடிய கண்ட அட தாளத்தில் நறுக்கென்று ஒரு இரட்டைப் பல்லவியை
எடுத்துக் கொண்டு அற்புதமாக இந்த சகோதரிகள் கையாண்ட விதத்தை எப்படி பாராட்டாமல் இருப்பது?​

குறிப்பாக,​​ பல்லவி வரிகளுக்கு திரிகாலம் மற்றும் நிரவல் கொடுத்ததை "பலே" போட்டு ரசிக்காமல்
இருந்தால் எப்படி?

  • வயலினில் வி.வி.​ சீனிவாச ராவ்
  • நெய்வேலி ஸ்கந்த சுப்பிரமணியன் மிருதங்கம்
  • மடிப்பாக்கம் முரளி கடம்
நிறைவான நிகழ்ச்சி.​

பிரியா சகோதரிகளுக்கு இரட்டை சபாஷ்!

Kannan Natarajan

unread,
Dec 22, 2009, 6:56:46 AM12/22/09
to Min Thamizh
"டபுள் ஓகே"

மியூசிக் அகாதமியில் சனிக்கிழமை(19/12/09) காலையில் ருத்ரப்பட்டினம் சகோதரர்களின் வாய்ப்பாட்டு நிகழ்ச்சி.​

http://www.dinamani.com/Images/article/2009/12/22/22ruthra.jpg
ருத்ரப்பட்டினம் சகோதரர்கள்

இவர்கள் கர்நாடகாவைச் சேர்ந்த மூத்த கலைஞர்கள் என்பது மட்டுமல்லாமல்,​​ பிழிந்தெடுத்த சாஸ்த்ரிய
பாணிக்கு சொந்தக்காரர்களும் கூட.

லால்குடி ஜெயராமனின் "கன்னட" வர்ணத்தில் தொடங்கிய இவர்களது நிகழ்ச்சியில் அடுத்த உருப்படி,​​
பட்டணம் சுப்பிரமணிய அய்யரின் "பைரவி"
ராக சாகித்யமான "நன்னு ப்ரோவராதா" அடுத்தாற்போல
"தோடி"
ராகத்தில் "நின்னே நம்மிநானு",​ "மாளவி" ராகத்தில் ஜி.என்.பி.யின் "மரிவேரே..."யும் சரி,​​
அதைத் தொடர்ந்து பாடிய "கீரவாணி"
ராகத்திலான ராகம்,​​ தானம்,​​ பல்லவியும் சரி,​​ சாஸ்த்ரிய
சங்கீத இலக்கணங்களிலிருந்து இம்மியும் விலகாத சுத்தமான பாடாந்தாரங்கள்.

இவர்கள் தமிழர்கள் அல்ல.​ கன்னடத்தவர்கள்.​

நம்மவர்கள் தமிழைக் கொலை செய்து பாடுகிறார்கள்.​

இவர்களோ "ஆரபிமான வைத்து ஆதரி" என்ற
ராகமாலிகையை ​ ஸ்பஷ்டமாகவும்,​​
ராகத்தின் பாவமும்,​​ சாகித்யத்தின் பாவமும் கெடாமலும் பாடியிருக்கிறார்கள் பாருங்கள்,​​
சபாஷ்,​​ சபாஷ்,​​ சபாஷ்!

லால்குடி விஜயலட்சுமி வயலின்.​ சொல்ல வேண்டுமா?​

கமலாகர ராவ் மிருதங்கம்.​

ஒரு காலத்தில் இசை விழா மேடைகளை ஒரு கலக்குக் கலக்கிய அன்றைய கமலாகரராவ்,​​
சிட்டிபாபு மற்றும் பாலமுரளி கிருஷ்ணாவின் ஃபேவரிட்.​

வயதானாலும் அவரது வாசிப்பில் கொஞ்சம் கூட தொய்வு தட்டவில்லை என்பது மறுக்க
முடியாத உண்மை.​

கடம் வாசித்த கோவிந்தராஜனும் ஈடு கொடுத்து வாசித்தார்.

நிறைவான கச்சேரி.​

இவர்களைப் போன்றவர்களால் தான் சாஸ்த்ரிய சங்கீதம் நிலைத்திருக்கிறது!

Kannan Natarajan

unread,
Dec 22, 2009, 7:07:27 AM12/22/09
to Min Thamizh
காத்திருந்து...காத்திருந்து...

திங்கள் (21/12/09) அன்று மியூசிக் அகாதமியில் சங்கீத வித்வத் சபையின் இயலிசை செயல் விளக்க நிகழ்ச்சியில்
சங்கீத ஆராய்ச்சியாளர் டாக்டர் எம்.பி.​ வேதவல்லியின் நிகழ்ச்சி.​

டாக்டர் எம்.பி.​ வேதவல்லி மும்மூர்த்திகளுக்கு பின்பு உருவான
ராகங்களுக்குள்ள இரட்டைப் பெயர்கள்
என்ற பெயரில் விளக்க உரையாற்றினார்.​

http://www.dinamani.com/Images/article/2009/12/22/22vedha.jpg
வேதவல்லி

ஒரே ஸ்வரஸ்தானங்களை வைத்து
  • சாரங்க தரங்கிணி என்ற பெயரில் ஜி.என்.பி.யும்
  • விவாஹபிரியா என்ற பெயரில் சித்திர வீணை ரவிக்கிரணும் 
ராகம் உருவாக்கி இருக்கிறார்கள்.​

அதுபோல,​​

  • ரதிபதிப்ரியா என்ற பெயரில் தண்டபாணி தேசிகரும்
  • சாரதாப்பிரியா என்ற பெயரில் மைசூர் வெங்கடகிரியப்பாவும்
ஒரே ஸ்வரஸ்தானங்களில் ராகம் உருவாக்கியுள்ளனர்.​

இதைப் போல தியாகராஜரின் காலத்திலும் ஆந்தோளிகாவும், மயூரத்வனியும் ஒரே ஸ்வரஸ்தானங்களைக்
கொண்டவை.​

சிந்துராமகிரியாவும், கேசரியும் ஒரே ஸ்வரஸ்தானங்களைக் கொண்டவை என்று கூறினார்.​

இரண்டாவதாக
லய வாத்திய மேதை,​​ டி.வி.​ கோபாலகிருஷ்ணன் ஹிந்துஸ்தானி கர்நாடக
சங்கீதத்தல் உள்ள கமகங்களும்,​​ அழகும் என்ற தலைப்பில் பவர் பாயிண்ட் மூலம் விளக்கினார்.​

  • பலுஸ்கர்
  • படே குலாமலிகான்
  • ரோஷனாரா பேகம்
  • பண்டிட் மல்லிகா அர்ஜுன் மன்ஸுர்
  • பீம்சேன் ஜோஸி
  • பர்வீன் சுல்தானா
இவர்களின் இசையையும்,​​ கர்நாடக சங்கீதத்தில்
  • அரியகுடி ராமானுஜம் அய்யங்கார்
  • செம்பை வைத்யநாத பாகவதர்
  • எம்.எஸ்.​ சுப்புலட்சுமி
  • எம்.டி.​ ராமநாதன்
  • வோலெட்டி வெங்கடேச்வருலு
  • எம்.எல்.​ வசந்தகுமாரி
  • பாலமுரளி கிருஷ்ணா 
    போன்றவர்களின் இசையையும் மின் கணினி மூலம் இசைத்தார்.​

    பின் மியாகிதோடி சுபபந்துவராளி,​​ பூர்ட கல்யாண் -​ பூர்வ கல்யாணி,​​ மற்றும் சிந்துபைரவியில் சில
    சாஹித்யங்களைப் பாடிக் காண்பித்தார்.

    எடுத்துக் கொண்ட தலைப்போ கமக்கமும்,​​ அழகும்.​

    சிந்துபைரவி போன்ற ராகங்களை ஹிந்துஸ்தானியில் எப்படிப் பாடுகிறார்கள்,​​ கர்நாடக சங்கீதம்
    பாடும்போது எப்படி கமக்கம் கொடுக்கவேண்டும் என்று கமக்கத்தைப் பற்றி விளக்கம் வரும், வரும்
    என்று காத்திருந்து ஏமாந்தது தான் மிச்சம்.​

    வராமலேயே போயிற்று.

    Kannan Natarajan

    unread,
    Dec 22, 2009, 7:12:02 AM12/22/09
    to Min Thamizh
    தகர்த்தார் மாயையை...

    மியூசிக் அதாதமியில் வெள்ளிக்கிழமையன்று (18/12/09) மத்தியானக் கச்சேரி ஹரிபிரசாதுடையது.​

    http://www.dinamani.com/Images/article/2009/12/22/22hari.jpg

    சாஸ்திரியமான கர்னாடக சங்கீதம் எப்படி இருக்க வேண்டும்?​

    ஹரிபிரசாதின் சங்கீதம்போல இருக்க வேண்டும்,​​ வேறென்ன?​

    ​"பூஷாவளி"
    ராகத்தில் சுவாதித் திருநாளின் கீர்த்தனையுடன் தனது நிகழ்ச்சியைத் தொடங்கிய
    ஹரிபிரசாத்,​​ அடுத்தாற்போல எடுத்துக் கொண்டது "பேகடா"
    ராகத்தை.​

    இனிமையைப் பன்னீரில் குழைத்துத் தெளிக்கும் குரலில்,​​ அலை அலையாக பிருகாக்களை
    எழுப்பி மயங்க வைக்கும் ஆலாபனை.​

    தொடர்ந்து "அனுதினமுனு காவுமய்யா" என்கிற பூச்சி சீனிவாசய்யங்காரின் கீர்த்தனை.

    ஆனந்த பைரவியில் "மரிவேரே கதி எவரய்யா"வைத் தொடர்ந்து ஒரு
    ராகம்,​​ தானம்,​​ பல்லவி.​

    சிம்மேந்திர மத்யமத்தில் விஸ்தாரமான ஆலாபனைக்குப் பிறகு தாளத்தைத் தொடர்ந்து
    கண்ட திரிபுடையில் அற்புதமான ஒரு பல்லவி.​

    "நீ பாதமுலே கதி எனி நம்மிதி,​​ ஸ்ரீராமச்சந்திரா" என்கிற பல்லவியில் ஸ்வரம் பாடி,​​ மூன்று காலத்திலும்
    நிரவல் செய்து,​​
    ராகம்,​​ தானம்,​​ பல்லவி எப்படி இருத்தல் வேண்டும் என்று இலக்கண சுத்தமாகப் படைத்ததை
    பாராட்டாமல் இருந்தால் எப்படி?

    அம்புஜம் கிருஷ்ணாவின் "காபி"
    ராக கிருதியான "அரவிந்த பாதமலருடன்" நிகழ்ச்சியை நிறைவு செய்த
    கே.​ ஹரிபிரசாதின் சங்கீதத்தில் நிறையவே செம்மங்குடி பாணியின் தாக்கம் தெரிந்தது.​

    விசாரித்தபோதுதான் குட்டு வெளியானது.​

    வி.​ சுப்பிரமணியத்தின் சீடரிடம் "செம்மங்குடி" பாணி முத்திரை இல்லாமலா இருக்கும்?

    நாட்டியத்துக்குப் பாடும் கலைஞர் இசை நிகழ்ச்சி நடத்த முடியாது என்கிற மாயையைத் தகர்த்திருக்கிறார்
    ஹரிபிரசாத்.​

    இவர் தொடர்ந்து பரதநாட்டியத்துக்குப் பாடுபவராம்.​

    அன்றைய நிகழ்ச்சியின் வெற்றிக்கு கண்டதேவி விஜயராகவனின் வயலினும்,​​ மைசூர் சுதர்ஷனின்
    மிருதங்கமும் உரிய பங்களிப்பு நல்கின என்பதைக் குறிப்பிடாமல் விட்டால் தவறு.​

    அப்படி ஒரு இயைந்த வாசிப்பு.

    Kannan Natarajan

    unread,
    Dec 22, 2009, 7:16:10 AM12/22/09
    to Min Thamizh
    முன்னோடிகள்:- வீணை தனம்மாள்

    சங்கீதத்தின் உறைவிடமாய் இருந்த தஞ்சாவூர்,​​ இசை உலகிற்கு அளித்த இன்னுமொரு பொக்கிஷம் வீணை தனம்மாள்.​

    http://www.dinamani.com/Images/article/2009/12/22/22veenai.jpg

    1867ம் ஆண்டு பிறந்தார்.​

    இவருடைய முன்னோர்கள் தஞ்சையை ஆண்ட மராத்திய மன்னரின் அரசவையில் ஆடல்,​​ பாடல் கலைஞர்களாக சேவை
    செய்து வந்தனர்.​

    நான்கு தலைமுறை சங்கீத குடும்பம் என்று சொல்லலாம்.

    தனம்மள் அவர்களுடைய பாட்டி காமாட்சியம்மாள்,​​ சியாமா சாஸ்திரி,​​ ஆனை அய்யா,​​ பாலுசுவாமி தீட்சிதர் மற்றும்
    பரதம் கணபதி சாஸ்திரி முதலியவர்களிடம் இசை பயின்றவர்.​

    தாயார்,​​ சுப்பராய சாஸ்திரி அவர்களிடம் இசை பயின்றவர்.​

    தஞ்சை நால்வரின் பதங்கள்,​​ ஜாவளிகள்,​​ தில்லானாக்கள் போன்றவற்றை பொக்கிஷமாகப் பாதுகாத்து,​​ இன்றும் இசை
    உலகில் உலவிவர காரணமாக இருந்தது இவர்களின் இசைக் குடும்பமேயாகும்.

    பாட்டி காமாட்சியம்மாளின் காலத்தில் தான் இக்குடும்பம் சென்னைக்குக் குடி பெயர்ந்தது.​

    முதலில் பாட்டியிடமும்,​​ தாயாரிடமும் இசை பயின்றார் இவர்.​

    இவருடைய முதல் வீணையாசான் அழகியசிங்கரையா.​

    12வது வயதிலேயே நன்கு கற்றுத் தேர்ந்தார்.​

    பதம் பாலகிருஷ்ணதாசரிடமும் நீண்ட காலமாக இசை பயின்றார்.​

    இவரிடம் ஷேத்ரஞரின் பதங்களைப் பயின்று அவற்றை தன்னுடைமையாக்கிக் கொண்டார்.​

    சாத்தனூர் பஞ்சநத பாகவதரிடம் தீட்சிதரின் செ
    ககால கீர்த்தனைகளையும்,​​ பல்லவி கோபாலய்யரின் மத்தியமகால
    உருப்படிகளையும்,​​ நிரவல் சுவரம்,​​ பல்லவி பாடும் முறையையும் பயின்றார்.

    இவருடைய முக்கிய சிஷ்யர்கள்,​​ வீணை கற்றுக்கொண்ட முத்தியால்பேட்டை சரவணம்,​​ டாக்டர் சீதாபதி அவர்களின் மனைவி,​​
    மகள் சாவித்ரி
    ராஜன்,​​ கனகம்மாள்,​​ திருவாங்கூர் மகாராணியின் மகள் சேது பார்வதி பாய் முதலியவர்கள்.​

    வாய்பாட்டுக் கற்றுக்கொண்ட திருவாரூர்
    ராஜாயீ இளமையிலேயே காலமாகிவிட்டார்.​

    ஆனால் இவர் வாசிப்பைக் கேட்டு ஊக்கமும்,​​ ஞானமும் அடைந்தவர்கள் ஏராளம்.

    Kannan Natarajan

    unread,
    Dec 23, 2009, 3:34:47 AM12/23/09
    to Min Thamizh
    மினி ஹாலில் மேஜர் கச்சேரி...

    இன்றைய இளம் தலைமுறைக் கலைஞர்களில் மிக அதிகமான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி
    இருப்பவர்களில் சவிதா நரசிம்மனும் ஒருவர்.​

    http://www.dinamani.com/Images/article/2009/12/23/23savitha.jpg

    குரல் தேன் பாகாய் இனிக்கிறது ​ என்று சொல்லிக் கேட்டிருக்கிறோம்.​

    உணர வேண்டுமானால் சவிதாவின் இசை நிகழ்ச்சிக்குப் போங்கள்.

    கபாலி ஃபைன் ஆர்ட்ஸ் சார்பில் கடந்த சனிக்கிழமை மைலாப்பூர் சாஸ்த்ரி ஹாலில்
    சவிதாவின் கச்சேரி.​

    மாலை நான்கு மணிக் கச்சேரி என்றாலும் அரங்கம் நிரம்பி வழிந்தது.​

    சவிதா மேஜர் ஆர்ட்டிஸ்ட் ஆகிவிட்டார்.​

    இவரது நிகழ்ச்சியை மினி ஹாலில் வைத்தால் எப்படி?

    "கெ
    ளை" ராகத்தில் ""ஸ்ரீமகாகணபதி ரவத்துமாம்"வுடன் தனது நிகழ்ச்சியைத் தொடங்கினார்
    சவிதா.​

    தொடர்ந்து "ஹரிகாம்போதி"யில் "முருகா,​​ திருமால் மருகா,​​ ஷண்முகா".

    "பந்துவராளி" ஒரு அசத்தலான
    ராகம்.​

    கச்சேரி களை கட்ட "பந்துவராளி"யும் "கரகரப்ரியா"வும் கை கொடுக்கும் என்பது தொன்றுதொட்டு
    நமது கலைஞர்கள் தெரிந்து வைத்திருக்கும் "டெக்னிக்".​

    சவிதா தனது மேஜர் அயிட்டமாகத் தேர்வு செய்திருந்தது "பந்துவராளி"யைத்தான்.​

    சாகித்யம் தியாகய்யரின் "நின்னே நேர நம்மினானு..."

    ஆலாபனை என்றால் சூப்பரான ஆலாபனை.​

    சவிதாவின் குரல் வளத்துக்கும்,​​ ஒன்றன் பின் ஒன்றாக மேகங்கள் உருண்டோடி வருவது
    போல வந்த பிருகாக்களுக்கும்,​​ பந்துவராளி
    ரசிகர்களின் மனதைப் பந்தாடியது.​

    "வேத சாஸ்த்ர புராண" என்கிற இடத்தில் ஸ்வரம் பாடினார்.​

    விறுவிறுப்பாக அவர் ஸ்வரம் பாடிய விதம் நம்மை அறியாமலே எம்.எஸ்.வி.யை
    நினைவுபடுத்தியது.​

    அதே கவர்ச்சி.​ அதே சுறுசுறுப்பு.​

    ஸ்வரப்பிரஸ்தாரங்களில் அப்படி ஒரு செ
    க்கியமான பிரயோகங்கள்.​

    எந்த ஒரு இடத்திலும் இடரலே இல்லாமல்,​​ பாதாம் அல்வா சாப்பிடுவது போல ஒரு தங்கு
    தடங்கலே இல்லாத சுகானுபவம்.

    "பிருந்தாவன சாரங்கா"வில் தீட்சிதரின் "செ
    ந்தரராஜம்" கிருதியை மட்டும் பாடிவிட்டு,​​
    விஸ்தாரமாகக் "கேதார கெ
    ளை" ராக ஆலாபனையில் இறங்கினார் சவிதா நரசிம்மன்.​

    தேர்ந்தெடுத்த சாகித்யம்,​​ பூச்சி சீனிவாச அய்யங்காரின் "சுரகுண பாலிம்ப சமயமுகா".

    கச்சேரி முடியும்போது,​​ இன்னும் கொஞ்சநேரம் பாடமாட்டாரா சவிதா நரசிம்மன் என்கிற
    ஏக்கத்துடன் தான் அத்தனை
    ரசிகர்களும் சாஸ்த்ரி ஹாலிலிருந்து வெளியேறினார்கள்
    என்பது தான் நிஜம்.​

    இன்னும் பத்து வருஷங்களுக்குப் பிறகு அத்தனை விமர்சகர்களும் "செ
    க்யமான சங்கீதத்திற்கு
    சவிதா நரசிம்மன்" என்று எழுதப் போகிறார்கள்.​

    அதற்குப் பிள்ளையார் சுழி போட்ட திருப்தி நமக்கு!

    Kannan Natarajan

    unread,
    Dec 23, 2009, 3:43:13 AM12/23/09
    to Min Thamizh
    எங்கே எதிலே தமிழ்...?

    எல்டாம்ஸ் சாலை "தத்வலோகா" அரங்கத்தில் கர்னாடிகா அமைப்பின் சார்பில்
    ஞாயிற்றுக்கிழமை(20/12/09) ஹைதராபாத் சகோதரர்களின் கச்சேரி.​

    அரங்கம் நிரம்பி வழிந்ததில் ஆச்சரியம் என்ன இருக்கிறது?​

    ஆனால்,​​ ஐந்து மணிக் கச்சேரிக்கு பிரபல இரட்டையர்கள் தம்புரா வைத்துக்
    கொள்ளாமல் நிகழ்ச்சி நடத்துவது வியப்பாக இருந்தது.​

    சொல்லப் போனால் குறையாகத் தெரிந்தது.​

    இதைத் தவிர அப்பழுக்கு சொல்ல முடியாத அற்புதமான ஒரு இசை நிகழ்ச்சி
    அன்றைய ஹைதராபாத் சகோதரர்களுடையது.

    "வலச்சி" வர்ணத்துடன் தங்களது நிகழ்ச்சியைத் தொடங்கினார்கள்
    • சேஷாச்சாரியும்,​​
    • ராகவாச்சாரியும்
    http://www.dinamani.com/Images/article/2009/12/23/23hydrabad.jpg

    தொடர்ந்து "சேஷாச்சாரி" மாயாமாளவ கெளை ராக ஆலாபனையில் இறங்கினார்.​

    வழக்கம்போல உருண்டோடி வரும் பிருகாக்களுடன் சேஷாச்சாரியின் மின்னல்
    வெட்டுப் போன்ற ஆலாபனை
    ரசிகர்களைக் கட்டிப் போட்டதில் வியப்பென்ன
    வேண்டிக் கிடக்கிறது?​

    தேர்ந்தெடுத்துக் கொண்ட சாகித்யம் "
    ரக்ஷிம்பவே...".​

    கல்பனா ஸ்வரத்தில் எக்கச்சக்கமான கணக்கு விவகாரங்கள்.​

    இந்தச் சாரியும், அந்தச் சாரியும் சரசரவென்று சாரிசாரியாக எடுத்துவிட்ட
    ஸ்வரப்பிரஸ்தாரங்கள்
    ரசிகர்களுக்கு அற்புத விருந்து.

    "பூபாளம்"
    ராகத்தில் "சதா சலேஸ்வரம்" கிருதியையும்,​​ "சந்திரஜோதி" ராகத்தில்
    "பாகாயனய்ய.." கிருதியையும் பாடிவிட்டு,​​ "நாகஸ்வராளி"
    ராகத்தை
    சேஷாச்சாரியும்,​​
    ராகவாச்சாரியும் இணைந்து ஆலாபனை செய்தனர்.​

    "கருட கமன"விலும்,​​ "சமயமிதே" என்கிற இடத்திலும் கற்பனா ஸ்வரம் பாடினார்கள்.​

    தொடர்ந்து,​​ "செ
    ராஷ்டிரம்" ராகத்தில் "ரங்கநாதுடே.." பாடிவிட்டு
    அன்றைய முக்கிய அயிட்டத்துக்குத் தாவினார்கள்.

    இந்த கச்சேரியின் பிரதான அம்சமான ஹைதராபாத் சகோதரர்கள் தேர்ந்தெடுத்துக்
    கொண்ட
    ராகம் "ஹேமவதி".​

    சாகித்யம் தீட்சிதரின் "ஸ்ரீசாந்திமதிம்".​

    மந்த்ர ஷட்ஜத்தில் ஆலாபனை செய்தது அற்புதமாக இருந்தது.​

    பிறகு நிரவல்,​​ கற்பனா ஸ்வரம் பாடி தனியாவர்த்தனத்திற்கும் விட்டனர்.

    ஒரு நொடி கூடத் தொய்வு என்பது கிடையாது.​

    சங்கீதமே தெரியாத ஒருவர் அந்த அரங்கத்தில் போய் அமர்ந்திருந்தால்கூடக்
    கடைசிவரை எழுந்து போக மனது வந்திருக்காது.​

    அப்படி ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தும் நிகழ்ச்சி.

    ஹைதராபாத்காரர்கள் தெலுங்கு சாகித்யங்களைப் பாடியதில் தவறில்லை.​

    சென்னையில் நிகழ்ச்சிக்கு வரும்போது ஒன்றிரண்டு தமிழ் உருப்படிகளும் பாட வேண்டாமோ?​

    எங்களவர்களைப் பாருங்கள்.​

    நாங்கள் தமிழகத்தில் வாழ்ந்து சென்னையில் பாடினாலும்,​​
    • தெலுங்கு
    • கன்னடம்
    • மராட்டி
    • இந்தி
    என்று பாகுபாடே இல்லாமல் எல்லா சாகித்யங்களையும் பாடி எங்கள் தாய்மொழியைக் கூடப்
    பின்னுக்குத் தள்ளும் அளவுக்குப் பெருந்தன்மையுடன் நடந்து கொள்கிறோமே...​

    "இந்த யாதும் ஊரே,​​ யாவரும் கேளிர்" மனப் பக்குவம் உங்களுக்கு ஏன் வரமாட்டேன் என்கிறது..?

    Kannan Natarajan

    unread,
    Dec 23, 2009, 3:55:05 AM12/23/09
    to Min Thamizh
    ஆண்டொன்று போனால்...

    சௌம்யாவின் குரல் போலவும் இல்லாமல்,​​ நித்யஸ்ரீயின் குரல் போலவும் இல்லாமல்
    இரண்டும் கலந்த ஒரு கலவையாக இருக்கிறது சௌம்யஸ்ரீயின் குரல்.​

    http://www.dinamani.com/Images/article/2009/12/23/23somya.jpg

    கடந்த ஞாயிறன்று ஸ்ரீ பார்த்தசாரதி சபாவுக்காக இவர் பாடிய ஒரு உச்சி வெயில்
    நேரத்தில் அரங்கினுள் நுழைந்தோம்.

    ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதரின் "மாதே மலையத்வஜா" என்னும் கமாஸ்

    ராக வர்ணத்துடன் தன் நிகழ்ச்சியைத் தொடங்கினார்.​

    அடுத்ததாக, அன்னமாச்சார்யாவின் "பெ
    ளி" ராகத்தில் அமைந்த
    "ஸ்ரீமந்நாராயணா"வை அருமையாகப் பாடினார்.​

    உச்ச ஸ்தாயியில் பாடும்போது அவரது கடுமையான சாதகம் வெளிப்பட்டது.​

    நிறையவே சிரமப்பட்டு தனது சங்கீதத்தை உயர்த்திக் கொள்ள முயற்சிக்கிறார்
    என்பது தெரிகிறது.

    பட்டணம் சுப்பிரமணிய ஐயரின் "சமயமிதே நன்னு ப்ரோவ" ​(கேதாரம்)​ பாடிவிட்டு
    மீண்டும் அன்னமாச்சார்யாவின் "பரமபுருஷ நிருபமான" ​(ஷண்முகப்ரியா)வுக்கு வந்தார்.​

    தொடர்ந்து பாபநாசம் சிவனின் "என்ன தவம் செய்தனை" ​(காபி)யை மிக அழகாகப் பாடினார்.​
    அதிலும் "பிரமனும் இந்திரனும் மனதில் பொறாமை கொள்ள" என்கிற வரியை இத்தனை
    விதமாக பாட முடியும் என்பது இப்போது தான் தெரிகிறது.​ அருமை.

    தியாகராஜரின் "வினராதநா மனவி" ​(தேவகாந்தாரி)​ பாடிவிட்டு,​​ விஸ்தாரமாக
    பிலஹரி
    ராகத்தை ஆலாபனை செய்தார்.​

    நாம் எதிர்பார்த்தது போலவே "தொரகுனா இது
    வண்ட்டி" ​(தியாகராஜர்)​ பாடிவிட்டு
    நாராயண தீர்த்தரின் "பாஹி பாஹி ஜகன்மோகன கிருஷ்ணா" ​(நாத நாமக்ரியா)​ பாடினார்.​

    லால்குடியாரின் மிஸ்ர சிவரஞ்சனி
    ராக தில்லானாவை பாடி கைதட்டலை
    பெற்றுக்கொண்டு நிகழ்ச்சியை நிறைவு செய்தார் சௌம்யஸ்ரீ.

    வயலின் வாசித்த சுதர்ஸன் அவரது தம்பி என்று சொன்னார்கள்.​

    மதுரை பி.சுந்தரின் அனாயாச வாசிப்பில் வியப்பதற்கு எதுவும் இல்லை.​

    உமையாள்புரம் சீடராயிற்றே.​

    அம்சமான கச்சேரி.​

    குறையொன்றுமில்லை.​

    போன வருடத்துக்கு இந்த வருடம் நல்ல முன்னேற்றம்.​

    ஒரு சின்ன விண்ணப்பம்.​

    இவ்வளவு நல்ல குரல் வளமும்,​​ முன்னேற வேண்டும் என்கிற ஆர்வமும் உள்ள செüம்யஸ்ரீ
    திருப்பதியில் இருந்தால் எப்படி?​

    சென்னையில் மூத்த கலைஞர்கள் யாரிடமாவது சிஷ்யம் பண்ணினால்தானே,​​ அடுத்த
    கட்டத்துக்கு உயர முடியும்?

    எங்கள் திருப்பதி வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் இல்லாத சங்கீத விற்பன்னர்களா
    உங்கள் சென்னையில் இருந்துவிடப் போகிறார்கள் என்று எதிர் கேள்வி தொடுத்து விடுவாரோ!

    Kannan Natarajan

    unread,
    Dec 23, 2009, 4:02:05 AM12/23/09
    to Min Thamizh
    பத்தரை மாற்றுப் பொன்!

    "பாரசால" பொன்னம்மாள் ஒரு மூத்த கலைஞர்.​

    http://www.dinamani.com/Images/article/2009/12/23/23patharai.jpg

    செம்மங்குடி சீனிவாசய்யர் நாற்பதுகளில் திருவனந்தபுரம் இசைக் கல்லூரி
    முதல்வராக இருந்த காலத்தில் அவரிடம் சங்கீதம் படித்தவர்.​

    எழுபது வயதைக் கடந்து விட்ட பிராயத்திலும் தொடர்ந்து சாதகம் செய்து
    வருவதுடன்,​​ சற்றும் தளர்ச்சி அடையாது சாரீரத்துடன் கச்சேரியும் செய்கிறார்.​

    இவரது பெயரில் மட்டும் "பொன்" இல்லை.​ பாட்டும் பொன்.​

    அதிலும், பத்தரை மாற்றுப் பொன்.

    ஞாயிறன்று காலை மியூசிக் அகாதமியில் காலை 9 மணிக் கச்சேரி
    "பாரசாலை" பொன்னம்மாளுடையது.​

    • மகாதேவ சர்மா வயலின்
    • சல்லராஜு மிருதங்கம்
    • ராமகிருஷ்ணன் கடம்
    "ஆனந்த பைரவி"யில் அடதாள வர்ணத்துடன் தனது கச்சேரியைத் தொடங்கினார்
    "பாரசாலா" பொன்னம்மாள்.​

    தொடர்ந்து,​​ "மாயாமாளவ கெ
    ளை" ராக ஆலாபனை.​

    பிறகு "சாவேரி"
    ராகத்தில் "துருசுகா கிருபஜூடு".​

    "சாவேரி"
    ராகத்தை சாறு பிழிந்து தந்து விட்டார்.​

    இந்தப் பெண்மணிக்கு
    லட்சணமும்,​​ லட்சியமும் ரத்தத்தில்
    ஊறிய விஷயங்கள் என்பது தெரிந்தது.

    தொடர்ந்து ஒரு "சங்கராபரணம்" பாடியிருக்கிறார் பாருங்கள்.​

    ஸ்வரப்பிரஸ்தாரங்களில் அவ்வளவு அனாயாசம்.​

    சப்த ஸ்வரங்களும் இவரிடம் சேவகம் செய்கின்றனவோ என்று தோன்றிவிட்டது.​

    சங்கீதத்துக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டு விட்டிருக்கும் பொன்னம்மாளின்
    நாத உபாசனையின் பயனோ என்னவோ இந்த வயதிலும் கொஞ்சம்கூட சாரீரத்தில்
    பிசிறு தட்டவில்லை.​

    சரீரத்தின் முதிர்ச்சிக்கும் இவரது சங்கீதத்தின் முதிர்ச்சிக்கும் நேர் எதிராக
    சாரீரம் இளமைப் பொலிவுடன் இருப்பது எப்படி என்பதுதான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.

    முகபாவ சேஷ்டைகளிலோ,​​ கழுத்தை நீட்டி, நீட்டிப் பாடுவது,​​ கையைக் காற்றில் ஆட்டி
    அலையவிட்டுப் பாடுவது,​​ பட்டுப்புடவைகள்,​​ வைர நகைகள் என்று எதுவும் நல்ல
    சங்கீதத்தைத் தந்துவிடாது என்பதற்கு பாரசாலைப் பொன்னம்மாள் ஒரு எடுத்துக்காட்டு.​

    நமது இளைய தலைமுறையினர் இவரைப் பார்த்துப் படிக்க வேண்டிய விஷயம்.​

    கடுமையான சாதகமும், முழு மனதுடனான சங்கீத உபாசனையும்!

    அடுத்த வருடம் எப்போது வரும்,​​ பாரசாலைப் பொன்னம்மாளின் கச்சேரியை மீண்டும்
    எப்போது கேட்போம் என்று ஆவலாக இருக்கிறது.

    Kannan Natarajan

    unread,
    Dec 23, 2009, 4:10:21 AM12/23/09
    to Min Thamizh
    தப்பி ஓடாதே தாளமே...

    "விக்னராஜஸ்ரீ" என்ற "சுத்ததன்யாசி கீர்த்தனையுடன் கச்சேரியை ஆரம்பித்தார்
    மகாராஜபுரம் கணேஷ் விஸ்வநாதன்.​
    http://www.dinamani.com/Images/article/2009/12/23/23ganesh.jpg

    நாரதகான சபாவில் மத்தியானம் 2.30 மணிக்கு கச்சேரி.​

    மகாராஜபுரம் குடும்பத்துக்கே உரிய கணீரென்ற குரல்.​

    சர்வ
    லகுவாய் கல்பனா ஸ்வரங்கள் வந்து விழுகிறது.

    அதிகம் பாடப்படாத "நீவேரா குல தனமு" என்ற தியாகய்யரின் கிருதியை,​​
    இயற்கையாய் உருண்டோடி வந்து விழும் பிருகாக்களுடன் பாட முயன்ற கணேஷ்
    விஸ்வநாதனுக்கு இன்றைக்குப் பார்த்து சவுண்ட் பாக்ஸ் சதி செய்தது.​

    நன்கு கட்டிய அட்டிகையிலிருந்து கல் விழுந்து விடுவதுபோல் அழுத்தமில்லாத
    வார்த்தை உச்சரிப்பு.​

    உச்சரிப்பில் நாசூக்கு தேவை என்பதை தாத்தா சந்தானம் இருந்தால் சொல்லிப்
    புரிய வைத்திருப்பார்.

    சரக்கிருந்தால் மட்டும் போதாது;​ அதை அழகாய் வெளிக்கொணர வேண்டும்.​

    இந்த விஷயத்தை சந்தானத்தின் பேரன் ஏன் புரிந்து கொள்ளவில்லை என்பது புதிர்.

    மாயாமாளவகெ
    ளையில் சுவாதித் திருநாளின் "தேவ தேவ கலயாமிதே"; சரணத்தில்
    "ஜாதரூப நிபசேல" என்ற இடத்தில் நிரவல்.​

    வேகமாய் பாடும்போது
    லயக் கட்டுப்பாடு தேவை.​

    வீட்டிலேயே வைத்து வந்து விட்டார் போலிருக்கிறது.​

    தாளம் தப்புகிறது.

    ஸ்வரங்கள் பாடுவதில் கட்டுப்பாடற்ற வேகம்.​

    வேகம் விவேகமல்ல!​

    நின்று நிதானமாகப் பாடினால்தானே ஒரு கலைஞனாக உயர்ந்து நிற்க முடியும்,​​ கணேஷ்!

    அடுத்து ஷண்முகப்பிரியாவை ஆலாபனை செய்தார்.​

    சில சங்கதிகள் தாத்தாவை நினைவுபடுத்தின என்பதில் ஐயமில்லை.​

    பட்டணம் சுப்பிரமணிய ஐயரின் "மரிவேரே திக்கெவரய்ய
    ராம" சாகித்யம்.​

    இந்த ஒரு சாஹித்யத்துக்காக பட்டணம் சுப்பிரமணிய ஐயருக்கு என்ன கொடுத்தாலும் தகும்.​

    அவ்வளவு அழகான கீர்த்தனை.​

    தியாகய்யர்,​​ தீட்சிதர்,​​ சியாமா சாஸ்த்ரி இவர்கள் எல்லோரையும் கரைத்துக் குடித்து
    விட்டு வாக்கேயகாரரானவர் ஆயிற்றே!

    தொடர்ந்தது "ஸன்னுதாங்க ஸ்ரீ"யில் நிரவல் செய்தார்;​ சரவெடியாகக் கல்பனா ஸ்வரங்கள் வெடித்தன.​

    திலங்
    ராகத்தில் "கோவிந்தா,​​ நின்ன நாமவே சந்தா"; ராகமாலிகைக்குப் பிறகு,​​
    "நாடித் தேடித் திரிவார் பால்" என்ற திருப்புகழுடன் முடித்தார்.​

    கோவை சந்திரன் எப்போதுமே தொல்லை தராத வயலின் வித்வான்.​

    ஒற்றையடிப் பாதையாய் அவர் பின் தொடர்ந்தார்.​

    முதிர்ச்சியான மிருதங்க வித்வான் கும்பகோணம்
    ராமகிருஷ்ணன்.​

    எப்போதுமே பாட்டை ஒட்டிய வாசிப்பு;​ "தனி" அமர்க்களமாய் அமையக் கேட்பானேன்?

    நான்காவது தலைமுறைக் கலைஞர் கணேஷ்.​

    அதனால் பொறுப்பு அதிகம்;​ தாத்தாவும்,​​ கொள்ளு தாத்தாவும் சங்கீத கலாநிதிகள்.​

    பெயரைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டுமென்றால்,​​ நிறைய உழைத்து,​​
    பாடாந்திரத்தை விருத்தி செய்துகொண்டு,​​ குடும்ப சொத்தான குரலை மட்டும்
    நம்பாமல் ஸ்ருதியிலும்
    லயத்திலும் கவனம் செலுத்தித் தனக்கென்று ஒரு
    தனி முத்திரையைப் பதிக்க வேண்டும்.

    இத்தனையையும் சொல்லிவிட்டு ஒரு வார்த்தை.​

    கச்சேரி எப்படி இருந்தது என்று கேட்டால்,​​ "தேவலாம்",​ "கேட்கலாம்" என்று தான்
    சொல்லத் தோன்றுகிறதே தவிர முகம் சுளிக்கத் தோன்றவில்லை.​

    காரணம்,​​ குரல் வளம்.​ வம்சாவளிக்கும் மார்க் போடணுமோன்னோ...

    Kannan Natarajan

    unread,
    Dec 23, 2009, 4:16:21 AM12/23/09
    to Min Thamizh
    ஜி.என்.பி.யின் வழி...

    செவ்வாய் (22/12/09) அன்று மியூசிக் அகாதமி சங்கீத வித்வத் சபையில் நடந்த
    வயலின் விதூஷி கன்யாகுமாரியின் இசை இயல் விளக்கம் மிகவும்
    நேர்த்தியாக இருந்தது.​

    http://www.dinamani.com/Images/article/2009/12/23/23gnp.jpg

    அவர் எடுத்துக்கொண்ட தலைப்பு "ஜி.என்.பி.யின் ​ வழி".​

    18வது வயதில் ஜி.என்.பி.​ மைலாப்பூரில் முசிரி சுப்பிரமணிய அய்யரால் பாட
    முடியாமல் போனதால் அவருக்கு பதிலாகக் கச்சேரி செய்தார்.​

    அவரால் பிரபலமடைந்த கீர்த்தனைகளும்,​​
    ராகங்களும் ஏராளம்;​
    அவருடைய படைப்புகள் காலத்தால் அழியாதவை என்று கூறினார்.

    ஒரு வயலின் மேதை இவ்வளவு குரல் வளத்துடன் பாட முடியுமா
    என்று எல்லோரையும் தன் பாட்டின் மூலம் ஆச்சரியப்பட வைத்தார் கன்யாகுமாரி.​

    முதல் முறையாகப் பாடுகிறாராம்.​

    நம்ப முடியவில்லை.​

    அகாதமி இவருக்கு அடுத்த வருடம் பாட்டுக் கச்சேரிக்கு வாய்ப்பளித்தால்
    ஆச்சரியப்படுவதற்கில்லை.​

    ஜி.என்.பி.​ இயற்றிய
    • சாரங்தரங்கிணியில் "சமானரஹிதே"
    • சந்திரஹசிதத்தில் "எந்த நினு வேடுதிர"
    • அமிர்த பெஹாகில் "கமல சரண"
    • வலஜியில் "சன்ததமு நின்னே"
    • தோடியில் "மமகுகேச்வரம்"
    முதலியவற்றை மிக அழகாக எம்பார் கண்ணன் வயலின் வாசிக்கப் பாடிக் காண்பித்தார்.

    தோடி
    ராகக் கீர்த்தனை "மமகுலேச்வரம்", தீட்சிதரின் கீர்த்தனையைப் போல
    அமைந்திருப்பதைக் குறிப்பிட்டார்.​

    ஆந்தோளிகா
    ராகம் அவரால் பிரபலமடைந்தது.​

    அவருடைய படைப்பான சிவசக்தி
    ராகம்,​​ கானடாவில் "பராமுகமேல நம்ம"
    இவற்றைக் குறிப்பிட்டார்.

    ஜி.என்.பி.​ இயற்றிய சாஹித்யத்தின் ஒவ்வொரு சிட்டைசுவரமும்
    ராக ரூபத்தை
    முழுமையாக வெளிப்படுத்துகிறது என்று கூறினார்.​

    பாடல்களின் சங்கதியில் அவருடைய தனித்துவம் புலப்படுவதைப் பாடிக் காட்டினார்.​

    ஜி.என்.பி.யைக் கண் முன்னே கொண்டு நிறுத்தினார் கன்யாகுமாரி என்று
    சொன்னால்கூடத் தவறில்லை.

    Kannan Natarajan

    unread,
    Dec 23, 2009, 4:23:53 AM12/23/09
    to Min Thamizh
    பஞ்ச மரபு!

    இரண்டாவது இசை இயல் விளக்கம் திருவையாறு இசைக் கல்லூரியில் முதல்வராகப்
    பல வருடங்கள் சேவை செய்த முனைவர் ஆர்.​ கெ
    சல்யாவின் "பஞ்சமரபு" எனும்
    இசைத்தமிழ் நூல் பற்றியது.​


    இது ஒரு மணி நேரத்தில் விளக்கக்கூடிய விஷயம் இல்லை.

    முதன்முதலில் தெய்வசிகாமணி கெ
    ண்டரால் ஒரு ஓலைசுவடியும்,​​ உரை நூலும்
    கண்டறியப்பட்டு அவரால் பதிக்கப்பட்டது என்று கூறினார்.​

    இந்த மரபு நூல் முதல் திருமாறன் என்ற மன்னர் காலத்ததாக இருக்க வேண்டும் என்றார்.​

    இடைச் சங்கத்தின் கடைப் பகுதியோ அல்லது கடைச்சங்க காலத்தைச் சேர்ந்ததாக இருக்க வேண்டும்
    என்றார்.

    ஐந்து பகுதிகளைக் கொண்ட இந்நூலுக்கு "பஞ்ச மரபு" என்று பெயர் என்றும்,​​ இது
    • தோல்
    • துளை
    • நரம்பு
    • கஞ்சம்
    • மிடறு
    என்ற ஐந்து விஷயங்களைப் பற்றி விவரிப்பதாகக் குறிப்பிட்டார்.​

    7 ஸ்வரங்களின் தமிழ்ப் பெயர்களான
    • குரல்
    • துத்தம்
    • கைக்கிளை
    • உழை
    • இளி
    • விளரி
    • தாரம்
    என்ற பெயர்களைக் குறிப்பிட்டார்.​

    இதைத் தவிர 103 பண்கள் அதில்
    • பெரும் பண்கள் ​(சம்பூர்ணம்)​ 17
    • பண்ணியல் ​(ஷாடவம்)​ 70
    • திறம் ​(ஒடவம்)​ 12
    • திறத்திறம் ​(சுவராந்தரம்)​ 4
    என்பதை விளக்கினார்.​

    7 பாலைகளையும்,​​ ஒவ்வொரு பாலையின் கீழ் எவ்வளவு பண்கள் வருகின்றன என்றும் குறிப்பிட்டார்.​

    இசைப் புணர்ப்பு என்ற இசை அமைத்தலுக்கு தேவையானவை,​​ மங்கலப் பண்கள்.​

    இவற்றைப் பற்றியும் குறிப்பிட்டார் கெ
    சல்யா.

    Kannan Natarajan

    unread,
    Dec 23, 2009, 4:30:46 AM12/23/09
    to Min Thamizh
    முன்னோடிகள்:- "வேணுகான" சரப சாஸ்திரிகள்

    31 வருடங்களே வாழ்ந்தும்,​​ அதிலும் இரண்டாவது வயதிலேயே கண் பார்வையை
    இழந்தும் புல்லாங்குழல் வாசிப்புக்கு ஓர் சின்னமாகத் திகழ்ந்தவர் சரப சாஸ்திரிகள்.​

    1872ம் ஆண்டு கும்பகோணத்தில் பிறந்தார்.​

    நோய் காரணமாக இரண்டாவது வயதில் கண் பார்வையை இழந்தார்.​

    பள்ளிக்கூடம் செல்ல முடியாத சூழ்நிலையில் இவருடைய தந்தை வீட்டிலேயே
    இவருக்கு படிப்பை கற்றுக் கொடுக்க அது இவருடைய கேட்கும் திறனையும் புத்தி
    கூர்மையையும் வளர்த்தது.​

    இசை பயிற்றுவித்தால் மகனுடைய பிற்காலத்துக்கு உறுதுணையாக இருக்கும்
    என்று தந்தை எண்ணினார்.​

    புல்லாங்குழல் பழக தனக்கு விருப்பம் இருப்பதை சரப சாஸ்திரியும் வெளிப்படுத்தினார்.​

    புல்லாங்குழல் வாங்கிக் கொடுத்ததும் சுயமாகவே வாசிக்கத் தொடங்கினார்.​

    முதலில் அவ்வூரிலேயே இருந்த கலைஞர்களிடம் பயின்ற சரப சாஸ்திரி,​​ பின்பு
    மானம்புச்சாவடி வெங்கட சுப்பையரிடம் பயின்றார்.​

    மிகவும் இனிமையாகப் பாடும் திறன் பெற்றிருந்தார்.​

    அறுபத்து மூன்று நாயன்மார்களின் சரித்திரத்தைப் பாடல்களாகப் புனைந்து
    மெட்டமைத்தார்.​

    சூலமங்கலம் வைத்யநாத பாகவதர் தன்னுடைய கதாகாலட்சேபத்தில் இவற்றைப்
    பாடுவது வழக்கம்.​

    சிறு வயதிலேயே கச்சேரிகள் செய்ய ஆரம்பித்துவிட்டார்.​

    அபாரமாய் கிரகித்துக்கொள்ளும் திறனைப் பெற்றிருந்த சரப சாஸ்திரி,​​ தெலுங்கு,​​
    சம்ஸ்கிருதம்,​​ மராத்தி போன்ற பல மொழிகளில் பாண்டித்தியம் பெற்றார்.​

    சம்ஸ்கிருதத்தில் சரளமாகப் பேசும் திறன் பெற்றிருந்தார்.​

    தியாகராஜ கிருதிகளுக்கு மிகப் பொருத்தமாகச் சங்கதிகளைச் சேர்த்து கேட்பவர்களை
    மெய்ம்மறக்கச் செய்வார்.​

    இவருடைய சமகால வித்வான்களான
    • கடம் பழனி கிருஷ்ணய்யர்
    • கஞ்சிரா மாமுண்டியா பிள்ளை
    • தட்சிணாமூர்த்தி பிள்ளை
    • திருக்கோடிக்காவல் கிருஷ்ணய்யர்
      ஆகியோர் இவரிடம் மிகுந்த மதிப்பு வைத்திருந்தனர்.

      தகவல் உதவி:-
      • சந்திரிகா ராஜாராம்
      • ஜெயஸ்ரீ
      • சுவாதி
      • ஹம்சினி
      • உமா சரஸ்
      • ராஜ்கண்ணன் 
      படங்கள்:- ராகி - விஜி -ரவி

      Kannan Natarajan

      unread,
      Dec 24, 2009, 4:04:59 PM12/24/09
      to Min Thamizh
      வாழ்க...வளர்க...

      பால கலாசாகரம் சார்பில் பாரதிய வித்யா பவன் மினி அரங்கில் கே.​ தாரிணியின் பாட்டு.​

      http://www.dinamani.com/Images/article/2009/12/24/24tharini.jpg
      • கெஷிக் சிவராமகிருஷ்ணன் -​ வயலின்
      • சுசீந்திரம் கிரிதர் - மிருதங்கம்
      அபஸ்வரம் ராம்ஜியின் இசை மழலைக் குழுவில் உருவானவர்.

      முதலாவதாக "நீயே கதியணி நிரதமு" என்கிற லால்குடி ஜெயராமனின் நளினகாந்தி
      ராக வர்ணத்துடன்
      தொடங்கினார்.

      அடுத்து நாட்டை ராகத்தில் மாயவரம் விஸ்வநாத சாஸ்த்ரி இயற்றிய "மஹா கணபதே சுரபதே"
      முடித்து சியாமா சாஸ்த்ரியின் "நன்னு ப்ரோவு
      லலிதே"யை ​(லலிதா)​  மிக அழகாகப் பாடினார்.​

      ​(ஆஹா, எத்தனை நாளாயிற்று கேட்டு!)

      தொடர்ந்து சுருட்டி
      ராக ஆலாபனை.​ அருமை.​ பாடலும் அருமை தான்.​

      தீட்சதரின் "ஸ்ரீவேங்கட கிரீஸம்".​

      இதில் "அலமேலு மங்கா சமேத" என்கிற வரியில் ஸ்வரம் பாடி அமர்க்களப்படுத்தினார்.

      உடனே "மனோரஞ்சனி"
      ராகத்தில் தியாகராஜரின் "அடுக்காரதனி"யை ஆரம்பித்ததும்
      அரங்கத்தில் கரகோஷம்.

      அடுத்து தீட்சதரின் "
      ராமநாதம் பஜேகம்" ​(பந்துவராளி).​ நல்ல பாவம்.​ தெளிவான உச்சரிப்பு.​

      இதில் "குமார குருகுஹ மஹேசம்" வரியில் நிரவல் பாடி ஸ்வரம் பாடினார்.​

      பலே பலே
      ரகம்!

      அடுத்ததாக
      சுரஜானந்தாவின் ஹிட் பாடலான "முருகனின் மறுபெயர் அழகு" ​(பெஹாக்)​ இவர்
      பாடிய விதமும் அழகு.இறுதியாக "மாணிக்கம் கட்டி வயிரம் இடை கட்டி" என்னும் ஆழ்வார்
      பாசுரத்தை ஆனந்த பைரவியில் தொடங்கி சந்திர கெ
      ஸில் தொடர்ந்து நீலாம்பரியில் நிறைவு
      செய்த போது உற்சாகம் சபை முழுக்க பரவியது.

      கச்சேரி தொடங்கும் முன்பே அரங்கம் நிறைந்து விட்டதன் காரணம் புரிந்தது.​

      NO DU​LL MO​M​E​NT.​​

      வாழ்க!​ வளர்க!

      Kannan Natarajan

      unread,
      Dec 24, 2009, 4:11:34 PM12/24/09
      to Min Thamizh
      உருப்படி சரியில்லை...

      செவ்வாய் (22/12/09) அன்று பாரதீய வித்யா பவன் மினி ஹாலில் கார்த்திக் பைன் ஆர்ட்ஸின்
      7 மணி கச்சேரி அருணா
      ரங்கநாதனுடையது.​

      http://www.dinamani.com/Images/article/2009/12/24/24aruna.jpg

      "கானட"வில் ஆதி தாள வர்ணம் "நேரநம்மிதி"யுடன் கச்சேரி தொடங்கியது.​

      "சுத்த சீமந்தினி'யில் தியாகய்யரின் "ஜானகி ரமணா'.​ நேர்த்தியாகப் பாடினார்.​

      கல்பனா ஸ்வரங்கள் மிகப் பொருத்தமாக அமைந்தன.​

      அழுத்தமான சம்பிரதாயமான பாடாந்திரம் என்பது புலப்பட்டது.

      கேதார
      ராகத்தில் "சிதம்பரம் நடராஜ" என்ற தீட்சிதர் கீர்த்தனை.​

      அருமையான கிருதியை அழகாகப் பாடினார்.​

      தொடர்ந்து விரிவான "முகாரி" ஆலாபனை.​

      வார்த்தைச் சிதைவின்றி நிரவலை அழகாய் நிர்மித்தார்.​

      ஆனந்த பைரவியில் "காப்பதுவே"; அதிகம் பாடப்படாத கீர்த்தனை;​
      பொன்னைய்யா பிள்ளையுடையது;​ அடுத்து வந்தது காம்போதி;​

      இந்த இரண்டிற்கும் இடையே விறுவிறுப்பாக ஏதாவது பாடியிருக்கலாமோ என்று
      தோன்றிற்று.

      விஸ்தாரமான காம்போதி;​ "ஓ
      ரங்கசாயி" வரப்போகிறது என்று நினைத்தல் வந்தது
      "மறுபடியும் கருவடையும் குழியில்" ஹுசேனி
      ராகத்தில் "என்ன புண்ணீயம் செய்தேனோ",​
      தொடர்ந்து திவிஜாவந்தியில் தஞ்சாவூர் சங்கரய்யரின் தில்லானா.

      கச்சேரி எப்படி இருந்தது?​

      நன்றாகத்தான் இருந்தது.​

      சில விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும்.​


      ராகம் பாடுவது இவரது கோட்டை.​

      ஆனால் அடிக்கடி அதற்காக சாகித்யத்தைக் கோட்டை விடக்கூடாது பாருங்கள்...

      ஒரே
      ரிஷப,​​ காந்தார ஸ்வரஸ்தானங்கள் வருவது போல கீர்த்தனைகளை ஒரு
      கச்சேரியில் கையாள்வது இவருக்கு ஒரு சாகசம் செய்து சாதனை புரிந்த திருப்தியை
      அளிக்கலாம்.​

      ஆனால் கேட்பவர்கள் மனதைத் தொடுவது கடினம்.​
      • முகாரி
      • ஆனந்த பைரவி
      • ஹுசேனி
      என்று அழுகுணி ராகங்களாகவே பாட வேண்டும் என்று என்ன கட்டாயம்.​

      இதில் ஒன்றைப் பாடிவிட்டு,​​ விறுவிறுப்பான ஒரு கீர்த்தனையைப் பாடினால்தானே
      கச்சேரியின் "டெம்போ"வை நிலைநிறுத்த முடியும்!

      அருணாவுடையது சம்பிரதாயமான நல்ல சங்கீதம்.​

      அது சம்பிரதாயத்துக்கு நடத்தப்படுவதாக மாறிவிடக் கூடாது பாருங்கள்.

      கண்டதேவி விஜராகவனுடையது பாதுகாப்பான ஒரு வாசிப்பு.​ நம் கூடவே வருவார்.​
      இப்பவும் அப்படியே!​

      நெல்லை பாலாஜியை "ஸீஸன்" பாலாஜி என்று கூப்பிடலாம்.​

      ஸர்வ வியாபியாக எல்லா இடத்திலும் இருக்கிறார்.​ நல்ல வாசிப்பு.​

      அதனால்தான் எல்லோரும் அழைக்கிறார்கள்.​

      கடம் வாசித்த சிறுவன் நன்றாக வாசித்தான்.​ பெயர் தெரியவில்லை.

      எல்லாம் இருந்தும் கச்சேரியில் வேகம் இல்லை.​ காரணம்,​​ தேர்ந்தெடுத்த உருப்படிகள்.​

      உருப்படி சரியில்லாவிட்டாலும் என்ன செப்படி வித்தை செய்தாலும் கச்சேரி தம்பிடி
      பெறாது என்பது அருணாவுக்கு ஏன் புரியவில்லை...!

      Kannan Natarajan

      unread,
      Dec 24, 2009, 4:17:30 PM12/24/09
      to Min Thamizh
      வீணாகவில்லை...

      திங்கள்கிழமை (21/12/09) காலை ஒன்பது மணிக்கு அகாதமியில் கல்யாணி கணேசனின்
      வீணைக் கச்சேரி.​

      உமயாள்புரம் மாலி மிருதங்கம்.​

      கஞ்சிரா வாசித்தவர் யார் என்று நினைவில்லை.

      • எஸ்.​ பாலச்சந்தர்
      • மைசூர் துரைசாமி அய்யங்கார்
      • சிட்டிபாபு
      • ராஜேஸ்வரி பத்மநாபன்
      என்று வீணைக் கச்சேரிகளுக்கு மவுசு இருந்த காலம் இப்போது ஏனோ மாறிவிட்டது.​

      வீணைக் கச்சேரியில் இருக்கும் சுகம் வாய்ப்பாட்டில் கிடையாது என்பது
      ரசிக்கத்
      தெரிந்தவர்களுக்குத் தெரியும்.

      கல்யாணி கணேசன் ஒரு மூத்த வீணைக் கலைஞர்.​

      சாஸ்த்ரிய சுத்தமான சங்கீதம் இவருடையது.​

      இம்மி பிசகாத காலப் பிரமாணத்துடன் கூடிய வீணை வாசிப்பு.

      http://www.dinamani.com/Images/article/2009/12/24/24kalyani.jpg

      "யதுகுல காம்போதி"
      ராகத்தில் ஜி.என்.பி.யின் கிருதியான "பரம கிருபா சாகரி"யைக்
      கல்யாணி கணேசன் வாசித்த விதமே அருமையிலும் அருமை.​

      மின்னல் வெட்டுப் போன்ற சிட்ட ஸ்வரங்களும்,​​ நளினமான பிருகாக்களும்,

      ரம்மியமான இசையை வீணையிலிருந்து வெளிப்படுத்தின.​

      தொடர்ந்து சங்கராபரணத்தின் அடிப்படையைப் பிழிந்து தந்த "அக்ஷய
      லிங்க விபோ"

      சாகித்யம்.

      வீணையில் "சாவேரி" ராகம் வாசிக்கும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.​
      சற்று கவனக்குறைவாக இருந்துவிட்டால்,​​ தைவதமும்,​​ ரிஷபமும் இளித்துவிடும்.​

      அதேபோல,​​ வீணையில் தாளக் கட்டுப்பாடு கச்சிதமாக இருக்க வேண்டுமானால்,​​
      நல்ல
      லய ஞானமும்,​​ விரல் பயிற்சியும் இருந்தாக வேண்டும்.​

      "சாவேரி"யில் கல்யாணி கணேசன் வாசித்த
      ராகம்,​​ தானம்,​​ பல்லவி
      அப்பழுக்கில்லாததாக இருந்தது.​

      தானமும் சரி,​​ பல்லவியில் திருகாலமும் சரி,​​ கச்சிதமாக இருந்தன.​

      • பட்டணம் சுப்பிரமணிய அய்யரின் "கமாஸ்" ராகத் தில்லானாவும்
      • பாபநாசம் சிவனின் மத்யமாவதி ராகத்தில் அமைந்த "கற்பகமே"யும்
      கல்யாணி கணேசனின் வீணை நிகழ்ச்சிக்கு மெருகு சேர்த்தன.

      ஒரு
      ரம்மியமான,​​ நல்ல வீணைக் கச்சேரி கேட்ட திருப்தி.

      Kannan Natarajan

      unread,
      Dec 24, 2009, 4:25:03 PM12/24/09
      to Min Thamizh
      இனி ராஜபாட்டை தான்...

      திங்கள்கிழமை (21/12/09) கிருஷ்ண கான சபையில் டி.என்.எஸ்.​ கிருஷ்ணாவின் நிகழ்ச்சி.​  

      சேஷகோபாலனின் மகனும் சிஷ்யனுமான கிருஷ்ணா ஒரு சாதாரண இசை வாரிசு
      மட்டுமல்ல.​ பொறியியல் பட்டதாரி.​ எம்.பி.ஏ.​ படித்தவர்.​

      பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் உயர் அதிகாரி.​

      ஆனால்,​​ இவரது இசை ஆர்வம் மட்டும் சற்றும் அடங்கவில்லை.​

      இந்த இளைஞர் எந்த அளவுக்கு சாதகம் செய்கிறார் என்பதை இவரது கச்சேரிகள்
      தெளிவுபடுத்துகின்றன.

      பிழைப்புக்காக இசைக் கலைஞராகாமல்,​​ இதயபூர்வ தாகத்துடன் இசையை
      நேசிக்கும் இளைய தலைமுறை கலைஞர்களில் கிருஷ்ணாவும் ஒருவர்.​

      புலிக்குப் பிறந்தது பூனையாகாது என்பதை நிரூபிப்பதற்ககாவே களம்
      இறங்கி இருக்கிறாரோ என்றுகூட நினைக்கத் தோன்றுகிறது.

      மதுரை சங்கர சிவத்தின் பாணியைத் தந்தை டி.என்.​ சேஷகோபாலனிடமிருந்து
      உள்வாங்கி,​​ தனது சொந்த ஞானத்தையும்,​​ குரல் வளத்தையும் சேர்த்துத்
      தனக்கென ஒரு இசைப் பயணத்தைத் தொடங்கி இருக்கிறார் இந்த இளைஞர்.

      அன்றைய கச்சேரிக்கு டி.என்.எஸ்.​ கிருஷ்ணாவுக்கு அமைந்தது பக்கவாத்தியம் அல்ல.​

      "பக்
      கா"வாத்தியம்.​

      பின் என்ன?​

      • வயலினில் "சங்கீத கலாநிதி" எம்.​ சந்திரசேகர்
      • மிருதங்கத்தில் இன்னொரு சங்கீத கலாநிதி உமயாள்புரம் சிவராமன்
      http://www.dinamani.com/Images/article/2009/12/24/24krishna.jpg

      மூத்த தலைமுறை ஜாம்பவான்களின் பக்கவாத்தியத்துடன் இளைய தலைமுறை இசை.​

      கேட்கவா வேண்டும் கச்சேரி களைகட்ட?

      அன்றைய கச்சேரியில் எதைச் சொல்வது,​​ எதை விடுவது?​

      பூர்விகல்யாணியிலான "நின்னு வினாகமாரி"யில் அவரது மத்யம காலப்பிரமாணத்தைச்
      சொல்லவா,​​ தீட்சதரின் "அம்பா நீலாயதாக்ஷி"யில் செ
      க்க காலத்தில் பாடியதைச் சொல்லவா,​​
      "தோடி"
      ராக சாகித்யமான "தாசுகோவலேனா"வின் மிஸ்ர ஜம்பத்தைச் சிலாகிக்காவா?

      தந்தை சேஷகோபாலனிடமிருந்து கிருஷ்ணா காலப்பிரமாணத்தையும்,​​ தாளக்
      கட்டுப்பாட்டையும் இம்மி பிசகாமல் கிரகித்துக் கொண்டிருக்கிறார்.​

      விசேஷம் என்னவென்றால்,​​ தாளத்தையும்,​​ கணக்கு விவகாரங்களையும் இவர் பாவம்
      சற்றும் குறையாமல் கையாளும் புத்திசாலித்தனம்தான்.​


      ராக ஆலாபனைகளில் பிரமாதமான மனோதர்மம்.​ கட்டுப்பாடு.​

      அன்றைக்குப் பாடிய "தோடி"
      ராக ஆலாபனை மிக உயர்ந்த ரகத்திலானது.

      ஹரிகேச நல்லூர் முத்தையா பாகவதரின் தில்லானாவுடன் தனது நிகழ்ச்சியை
      நிறைவு செய்தபோது,​​ நினைவுக்கு வந்த பழமொழி என்ன தெரியுமா?​

      "புலி பத்தடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும்"!

      இனிமேல்,​​ N‌o ‌s‌t‌o‌p‌p‌i‌n‌g ‌h‌i‌m!

      Kannan Natarajan

      unread,
      Dec 24, 2009, 4:32:16 PM12/24/09
      to Min Thamizh
      பேர் சொல்லும் சீடன்...

      திங்களன்று (21/12/09) மயிலை கபாலி ஃபைன் ஆர்ட்ஸ் சார்பில் பிரசன்னா வெங்கட்ராமனின்
      இசை நிகழ்ச்சி.​

      பிரகாசமான எதிர்காலம் உள்ள இளைஞர்கள் பட்டியலில் இடம்பெற வேண்டியவர்களில்
      ஒருவர்.​
      http://www.dinamani.com/Images/article/2009/12/24/24prasanna.jpg


      சஞ்சய் சுப்பிரமணியத்தின் சீடர்.​
      • வயலினில் சாருமதி ராகவனும்
      • மிருதங்கத்தில் அர்ஜுன் கணேஷும் பக்கவாத்தியங்கள்
      "சாமி நின்னே" என்கிற "ஸ்ரீ"ராக வர்ணத்துடன் தனது நிகழ்ச்சியை ஆரம்பித்த பிரசன்னாவுக்கு
      அற்புதமான குரல் வளம்.​ பிரமாதமான மனோதர்மம்.​

      தன்னம்பிகையுடன் பாடும் இவரைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போலிருந்தது.​

      பாடுகின்ற ஸ்டைலே கவர்ந்திழுக்கிறது.​

      குருவிடம் இருப்பது போல முக சேஷ்டைகள் இல்லாத சங்கீதம் இவருடையது.

      அடுத்தாற்போல,​​ "ஹரிகாம்போதி"யில் "எவருநானுரா" என்கிற தியாகைய்யர் சாகித்யம்.​
      ஸ்வரம் மட்டும் பாடினார்.​

      தொடர்ந்து பத்து நிமிடத்துக்கு "
      லதாங்கி" ராக ஆலாபனை.​

      அடேயப்பா,​​ என்ன கற்பனை.​

      அனாயாசமாக அந்தக் குரல் குழைந்து, நெளிந்து வெள்ளப் பிரவாகமாக எழுந்து
      ஆற்றொழுக்காகப் பாயும் அழகே தனி...

      பிறகு,​​ "ஆரபி"யில் தியாகைய்யரின் "நாதசுதாரசம்".​ நிரவல்,​​ ஸ்வரம் பாடினார்.​

      "ஆபேரி"யில் தீட்சதரின் "காயாரோகணேசம்" பாடி,​​ விஸ்தாரமாக ஒரு "பைரவி" பாடினார்.​

      எடுத்துக் கொண்ட சாகித்யம்,​​ "யாரோ இவர் யாரோ".​ நிரவல் ஸ்வரம் பாடி அசத்தினார்.

      சற்றும் பிசிறு தட்டாத அற்புதமான குரல் வளம்.​ கொஞ்சம் கூடக் குறையே காண முடியாத
      சங்கீதம்.​

      சஞ்சய் சுப்பிரமணியத்தின் பெயரைக் காப்பாத்துவார்.​

      K‌e‌e‌p ‌i‌t ‌u‌p P‌r​a‌s​a‌n‌na!

      Kannan Natarajan

      unread,
      Dec 24, 2009, 4:37:31 PM12/24/09
      to Min Thamizh
      முன்னோடிகள்:- திருவையாறு சபேசய்யர்

      தியாகராஜரின் பரம்பரையில் நான்காவது தலைமுறைக் கலைஞர் சபேசய்யர்.​

      http://www.dinamani.com/Images/article/2009/12/24/24sabesh.jpg

      இவருடைய குரு மஹாவைத்யநாத சிவன்.​

      சிவனின் ஆசான் மானம்பூச்சாவடி வெங்கடசுப்பய்யர்.​

      இவர் தியாகராஜரின் நேரடி சிஷ்யராவார்.​

      சபேசய்யரின் தந்தை சாம்பசிவ அய்யர் ஒரு வயலின் வித்தகர்.​

      மஹாவைத்யநாத சிவனின் கச்சேரிகளுக்குப் பக்கவாத்தியம் வாசித்தவர்.​

      இவருடைய தாத்தா பல்லவி துரைசுவாமி.​

      சங்கீத,​​ சாஹித்ய வித்வானாக தஞ்சாவூர் அரண்மனையில் துளஜாராவின்
      ஆஸ்தான வித்வானாகவும்,​​ வைணீகராகவும் பிரபலமாக விளங்கினார்.

      சபேசய்யர் 10 வயதில் மஹாவைத்யநாத அய்யரிடம் சிஷ்யனாகச் சேர்ந்தார்.​

      சிவனிடம் தியாகராஜ கீர்த்தனைகள்,​​ ஆனை -​ அய்யாவின் கீர்த்தனைகள்,​​
      சிவனின் 72 மேள
      ராகமாலிகை இவற்றை நேரடியாகப் பயின்றார்.​

      ஹரிகேசநல்லூர் முத்தைய்யா பாகவதர் சபேசய்யரின் தந்தை சாம்பசிவ அய்யரிடம்
      சங்கீதம் பயின்று வந்தார்.​

      அவருடைய காலத்திற்குப் பிறகு சபேசய்யரிடம் சங்கீதம் பயின்றார்.​

      சபேசய்யரிடம் நேரடியாக சங்கீதம் பயின்றவர்களில் முக்கியமானவர்கள்
      • முசிரி சுப்பிரமணிய அய்யர்
      • வீணைக் கலைஞர் வித்யா சங்கர்
      1929ம் வருடம் அண்ணாமலைப் பல்கலைக்கழக இசைத் துறையின் தலைமைப் பொறுப்பை
      முதன்முதல் ஏற்றவர்.​

      அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இவரிடம் இசைப் பயின்றவர்களில் முக்கியமானவர்கள்
      • பேராசிரியர் எஸ்.​ இராமனாதன்
      • வீணை வித்வான் ஜி.என்.​ தண்டபாணி
      • ஓ.எஸ்.​சுப்பிரமணியம்
      முதலானோர்.​

      1937ம் வருடம் வரை அப்பதவியில் இருந்தார்.​

      சர்வகலாசலையிலும்,​​ சங்கீத பாட நியமன சங்கத்திலும் முக்கிய அங்கத்தினராக இருந்தார்.

      நிரவல் செய்வதில் தனிமுத்திரையைப் பதித்தவர்.​

      இவர் புரசைவாக்கம், வெள்ளாளர் தெருவில் முசிரி சுப்பிரமணிய அய்யருக்கு சங்கீதம் கற்றுக்
      கொடுக்கும்போது,​​ வீட்டுத் திண்ணையில் பலர் குழுமி விடுவார்களாம்.​

      மஹாவைத்யநாத சிவனின் 72 மேள
      ராகமாலிகா இவர் மூலம் பிரபல்யம் அடைந்தது.​

      1934ம் வருடம் சங்கீத வித்வத் சபை மகாநாட்டிற்குத் தலைமை வகித்தார்.​

      1948ம் ஆண்டு அமரத்வம் எய்தினார்.

      vishalam raman

      unread,
      Dec 25, 2009, 3:18:49 AM12/25/09
      to mint...@googlegroups.com
      அன்பு கண்ணன் மிகவும் ரசித்து படித்தேன் இளம் தலைமுறைகளைப்பற்றி
      எழுதுவது சிறப்பாக இருக்கிறது 

       
      --
      "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
      To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
      For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

      Kannan Natarajan

      unread,
      Dec 25, 2009, 5:32:50 AM12/25/09
      to Min Thamizh
      கச்சிதம்.. கனகச்சிதம்...

      நாத இன்பம் ஆதரவில் ராகசுதாவில் செவ்வாய்க்கிழமை ((22/12/09) மாலை
      "கருணிம்ப" என்கிற "
      ஹானா" ராக வர்ணத்துடன் தொடங்கியது பரத் சுந்தரின்
      இசை நிகழ்ச்சி.
      http://www.dinamani.com/Images/article/2009/12/25/25barath.jpg

      தீக்ஷிதரின் "ஷண்முகப்ரியா"வில் அமைந்த "ஸித்தி வினாயக"த்துடன் நிகழ்ச்சி
      களை கட்டியது.​

      பேகடாவில் "லோகாவனசதரா" பாடி,​​ "வாசஸ்பதி"யில் சிவனுடைய
      "பராத்பரா"வில் அரியும், அரனும் காணா என்கிற இடத்தில் நிரவல்.​

      இருபது நிமிஷம் அசத்திவிட்டார்.​

      நாதநாமக்ரியை பாடிவிட்டு ஹரிகாம்போதியில்
      "இராராபணி சயனாவை"
      அவர் பாடியபோது
      ரசிகர்கள் கட்டுண்டவர்களாய் லயித்து விட்டிருந்தனர்.

      தொடர்ந்து பைரவியில் இறங்கினார் பரத் சுந்தர்.​ 45 நிமிடம் போனது தெரியவில்லை.​

      "கொலுவையுன்னாடேவில் மன
      சு..." நிரவல் ஸ்வரம் இரண்டுமே கச்சிதம்.​

      வயலின் எம்.​
      ராஜீவ் நல்ல பக்க பலம்.​

      திருவனந்தபுரம் பாலாஜி கேட்கவே வேண்டாம்,​​ விரல் பேசியது.​

      "தனி" அமர்க்களம்.​ பின் பரத் சுந்தர் கோபாலகிருஷ்ண பாரதியின்
      "இரக்கம் வராமல் போனதேனய்யா" ​(பெஹாக்)​ மற்றும் "மாஞ்சி"
      ராகத்தில்
      அமைந்த வருகலாமோ ஐயா பாடி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.​

      Wat​ch out for this rising st​ar!

      Kannan Natarajan

      unread,
      Dec 25, 2009, 5:38:29 AM12/25/09
      to Min Thamizh
      பாராமுகம் ஏனோ?

      மைலாப்பூரில் ஃபைன் ஆர்ட்ஸ் கிளப்பில்,​​ வியாழனன்று (24/12/09) காலைக்
      கச்சேரி சுகந்தா காளமேகத்துடையது.​
      • பத்மா சங்கர் வயலின்
      • ஜே.​ வைத்தியநாதன் மிருதங்கம்
      காலை நேரக் கச்சேரிக்குக்கூட சுகந்தா காளமேகத்தின் சங்கீதம்
      கேட்பதற்காகவே சிலர் ஆஜராகி இருந்தனர் என்பது ஆச்சரியமான விஷயம்.​

      இந்த அதி அற்புதமான கலைஞரை ஏன்,​​ எப்படி,​​ எதற்காக ஏனைய
      சபாக்காரர்கள் ஆதரிப்பதில்லை என்பது புதிராகவே இருக்கிறது.

      http://www.dinamani.com/Images/article/2009/12/25/25sugantha.jpg

      "கன்னட"
      ராகத்தில் "நன்னு ப்ரோவா"வில் தொடங்கி "நாட்டை"யில்
      "நின்னே ​பஜன",​ "தன்யாசி"யில் "ஸ்ரீரங்கநாதாய" என்று சற்றும்
      தொய்வில்லாமல் நிகழ்ச்சி தொடர்ந்தது.​

      அற்புதமான பிருகா சாரீரம்.​
      ராக ஆலாபனையில் வித்வத் பளிச்சிட்டது.​

      ஜனரஞ்சகத்துக்கும் குறைவில்லை.​

      பிறகும் ஏன் இவருக்கு மாலை நேரக் கச்சேரிக்கு வாய்ப்பளிக்கத்
      தயங்குகிறார்கள்?​

      இதற்குப் பின்னால் இருப்பது அரசியலா,​​ சதியா என்றெல்லாம் சிந்தனையைச்
      சிதறவிட்ட வேளையில்,​​ பளிச்சென்று தீட்சதரின் "ஆனந்த நடனப்ரகாசம்" பாடத்
      தொடங்கியதும் சுதாரித்துக் கொண்டோம்.​

      கேதாரத்தைத் தொடர்ந்து "ஏதா உன்னரா" என்கிற தியாகய்யரின் "கல்யாணி"

      ராகக் கிருதி.​

      பிறகு "சிந்து பைரவி"யில் "கருணை தெய்வமே.."

      பிருந்தாவன சாரங்காவில் ஒரு தில்லானா,​​ விருத்தம் என்று பாடி நிகழ்ச்சியை
      நிறைவு செய்தார் சுகந்தா காளமேகம்.

      திறமைகள் தூங்குகின்றன.​

      சங்கீதத்தில் நிஜமான அக்கறை நமது சபாக்காரர்களுக்கு இருந்தால்,​​
      சுகந்தாவின் சங்கீதம் புறக்கணிக்கப்படாமல் பார்த்துக் கொள்வது அவசியம்!

      Kannan Natarajan

      unread,
      Dec 25, 2009, 5:47:03 AM12/25/09
      to Min Thamizh
      யாருக்காக இது யாருக்காக...?

      இசை வல்லுநர்கள் சபையின் சார்பில் ஸ்ரீ பார்வதி அரங்கில்
      சனிக்கிழமையன்று (19/12/09) மாளவிகாவின் கச்சேரி.​

      http://www.dinamani.com/Images/article/2009/12/25/25malavika.jpg

      சென்ற ஆண்டு மியூஸிக் அகாதெமியில் காலை நேரத்தில் கேட்டு
      ரசித்த மாளவிகாவின் இசையை இந்த வருடம் மாலையில் கேட்கிறோம்
      என்பதுதான் முன்னேற்றம்.​ ​

      அதிகம் கேட்டிராத அண்ணாசாமி சாஸ்த்ரியின் "கருணாகடாக்ஷி" என்னும்
      தோடி
      ராக வர்ணத்துடன் நிகழ்ச்சியை அமர்க்களமாகத் தொடங்கினார்.​

      தொடர்ந்து "
      ரகுநாயக நீ பாதயுக" ​(ஹம்ஸத்வனி)​ என்கிற தியாகராஜ
      கிர்த்தனையைப் பாடி முடித்து அழகாக "ஆழிமழைக் கண்ணா"வுக்கு ​
      (திருப்பாவை)​ மாறினார்.

      அடுத்ததாக இவர் எடுத்துக் கொண்டது கதன குதூகலத்தில் அமைந்த
      முத்தையா பாகவதரின் "கிரிப்ரியம்".​

      இந்த பாட்டும் அருமை.​ இவர் பாடிய விதமும் அருமை.

      அடுத்தாற்போல இவர் பாடிய தியாகராஜரின் "முரிபெமு கலிரக கதா" ​
      (முகாரி)​ ஏனோ அவ்வளவாக சோபிக்கவில்லை.​

      "
      லதாங்கி" ஆலாபனை முடிந்து "பிறவா வரம் தாரும்" ​(பாபநாசம் சிவன்)​
      ஆரம்பித்தபோது மீண்டும் உற்சாகம் களை கட்டியது.​

      தொடர்ந்து தீட்சதரின் "தியாகராஜாய நமஸ்தே"யை ​(பேகடா)​
      அற்புதமாகப் பாடினார்.​

      மறுபடியும் காபியில் "காபி மதுரி குணா" ​(அஷ்டபதி)​ பாடிவிட்டு
      லால்குடியின் மிஸ்ர சிவரஞ்சனி
      ராக தில்லானாவைப் பாடினார் ​

      (இசை விழாவின் நாட்டுப் பண் போல் எல்லா கச்சேரியிலும் இதுதான்).

      இறுதியாக திருப்புகழ்.​

      என்ன இவர் மும்மூர்த்திகளில் சியாமா சாஸ்த்ரியை விட்டுவிட்டாரே
      என்று நாம் நினைத்தபோது மத்யமாவதியில் "காமாக்ஷி லோகசாக்ஷி"யை
      பாடி கைதட்டலோடு நிறைவு செய்தார்.

      மனதுக்கு நிறைவான கச்சேரி.​

      கடந்த ஆண்டை விட இந்த முறை நல்ல முன்னேற்றம்.​ உழைப்பு தெரிகிறது.​

      குரு பத்மாவதி அனந்தகோபால் என்று சொன்னார்கள்.​ பாராட்டுவோம்.

      சம்பந்தப்பட்ட சபா நிர்வாகிகளுக்கு ஒரு வார்த்தை.​ கிடைக்கிற
      இடத்தைப் பிடித்து கிடைக்கிற கலைஞர்களை அழைத்து கிடைக்கிற
      நேரத்தில் இசையைப் பரப்ப வேண்டும் என்கிற உங்கள் உயர்ந்த உள்ளத்தை
      பாராட்டுகிறோம்.​

      அதற்காக நவராத்திரி கொலுவில் பாடுகிற வீட்டுக் கூடத்தை விட ஒரு சிறிய
      இடத்தை பிடித்து ​(சென்னையின் மிகச் சிறிய அரங்கம் இதுவாகத்தான் இருக்கும்!)​
      கச்சேரி நடத்துவது நியாயமா?​

      அந்த இடத்திற்கு ஒலிபெருக்கியே தேவையில்லை.​ சரியாகவும் இயங்கவில்லை.

      மற்றொரு விஷயம்.​

      இருபத்தைந்தே இருக்கைகள் உள்ள அந்த சிற்றரங்கில் பாடுபவரின் பெற்றோர்,​​
      உற்றார்,​​ உறவின் முறை,​​ குரு,​​ குடும்பம்,​​ நலம் விரும்பிகள் போட்டோ வீடியோ
      எடுப்பவர்கள் என்று இருபத்து மூன்று இருக்கையை பிடித்து விட்டால்
      ரசிகர்கள்
      எப்படி கச்சேரி கேட்க முடியும்?​

      அவர்களல்லவா முக்கியம்?

      Kannan Natarajan

      unread,
      Dec 25, 2009, 5:53:09 AM12/25/09
      to Min Thamizh
      இரட்டைத்தாள அவதானம்!

      புதன்கிழமையன்று (23/12/09) மியூசிக் அகாதமியின் ​இரண்டாவது இசையியல்
      விளக்கத்தில் விதூஷி சுகுணா புருஷோத்தமன் எடுத்துக் கொண்ட தலைப்பு
      "இரட்டைத்தாள அவதானம்"
      • சொல்லிக்கொடுக்கும் முறையும்
      • கற்றுக்கொள்ளும் முறையும்
      இதை அவரது சிஷ்யைகள் மூலம் விளக்கினார்.​

      http://www.dinamani.com/Images/article/2009/12/25/25suguna.jpg

      "அவதானம்" என்பது ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட காரியங்கள் செய்வது.​

      ஒரு கையில் ஒரு தாளம், மற்றொரு கையில் அதே எண்ணிக்கை வருவதுபோல்
      மற்றொரு தாளம்.​

      வாய்பாட்டுக்கு அகார சாதகம் போல்
      லயத்திற்கும் சாதகப் பயிற்சி உண்டு என்று
      கூறி,​​ சரளி வரிசையிலிருந்து,​​ கால் இடம் தள்ளி,​​ முக்கால் இடம் தள்ளி பயிற்சி
      மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

      சதுஸ்ரஜாதி ஆதி தாளம் திச்ர நடையில் ஒரு கையிலும் மற்றொரு கையில் ரூபக
      தாளமும் போட்டுக் காண்பித்தார்.​

      இதைப்போல மிச்ர ஜம்பை ​(40 அட்சரம்),​​ சதுரச்ர மட்டியத்திலும் ​(40 அட்சரம்)​ இரு
      கைகளிலும் போட்டுக் கொண்டு பாடிக் காண்பித்தனர் அவருடைய மாணவியர்.​

      இருகைகளிலும் ஒரே அட்சரம் கொண்ட இரு தாளங்களைப் போட்டுக் கொண்டு,​​
        • ஆதி தாள வர்ணம்
        • அட தாள வர்ணம்
        • கீர்த்தனை
        • பல்லவி
        இவைகளைப் பாடிக் காண்பித்தார்.

        விதூஷி சுகுணா வரதாசாரியுடன் சேர்ந்து ஆளுக்கொரு தாளம் ​(ஒரே அட்சரத்தில்)​
        போட்டுக்கொண்டு பல்லவி பாடிக் காண்பித்தனர் அவரது மாணவியர்.​

        செவிக்கும்,​​ கண்ணுக்கும் ஒரு சேர விருந்து கிடைத்தது.​ மனம் நிறைந்தது.

        Kannan Natarajan

        unread,
        Dec 25, 2009, 6:00:47 AM12/25/09
        to Min Thamizh
        அட்ரா சக்கை!

        புதன்கிழமை (23/12/09),​​ பிரும்மகான சபாவின் ஆதரவில் நடந்த
        "ஜயராஜ் -​ ஜயஸ்ரீ தம்பதி"யினரின் வீணைக் கச்சேரி ஒரு
        சுகானுபவமாக அமைந்தது.​

        http://www.dinamani.com/Images/article/2009/12/25/25jayaraj.jpg

        வீணைக் கச்சேரி கேட்கலாமே என்று போனது வீணாகவில்லை.

        "ஸஹானா" வர்ணத்துடன் ஆரம்பமான கச்சேரியின் அடுத்த உருப்படி
        நாட்டையும் சரி,​​ பின் "ஸ்ரீரஞ்ஜனி"யின் "சொகசுகா,​​மிருதங்க,​​தாளமு"
        என்று மூன்றிலும் இரட்டையர் மாறி, மாறி வாசித்து பிரமிக்க
        செய்துவிட்டார்கள்.​

        "ஸ்ரீரஞ்ஜனி" இராக ஆலாபனை அற்புதம் என்பதைவிட அதி அற்புதம்
        என்றுதான் கூறவேண்டும்.​

        "தேவக்ரியா"வில் "ஸ்ரீகுருகுஹ தாரயாசுமாம்" வாசித்துவிட்டு பிடித்தார்களே
        ஒரு பிடி பூர்வி கல்யாணியை.​

        • பஹுதாரி
        • ஹமீர் கல்யாணி
        • பாகேஸ்ரீ    மற்றும்
        • ஸ்ரீராகம்
        என்று இராகமாலிகையாக தானம் வாசித்துவிட்டு "ஏகாம்பர நாதம்" என்ற
        பூர்விகல்யாணிப் பல்லவிக்கு ஒரே நாதமாக இரண்டு வீணையும்
        இழைந்தது அபாரமான வாசிப்பு.​

        மன்னார்கோவில் பாலாஜியும் ஸ்ரீரங்கம் இரவிக்கிருஷ்ணனும் மிருதங்கமும்,
        கடமும்.​

        தனி ஆவர்த்தனத்தில் ஒருவரை ஒருவர் மிஞ்சிவிட்டார்கள்.​ ​

        வீணைக்கு மீண்டும் மிகப்பெரிய வரவேற்பை ஏற்படுத்தக்கூடிய வாசிப்பு
        இவர்களுடையது.​

        "சிவானந்தம் -​ சாரதா"வுக்குப் பிறகு மீண்டும் இரட்டையர் வீணையா,​​ அட்ரா சக்கை!

        Kannan Natarajan

        unread,
        Dec 25, 2009, 6:12:38 AM12/25/09
        to Min Thamizh
        முன்னோடிகள்:- டைகர் வரதாசாரியார்

        சங்கீத பரம்பரையில் பிறந்தவர் டைகர் வரதாசாரியார்.​

        http://www.dinamani.com/Images/article/2009/12/25/25tiger.jpg

        கதாகாலட்சேபம் செய்வதில் நிபுணரான இராமானுஜாசாரியாருக்கு
        மகனாக 1876ம் ஆண்டு கொளத்தூர் என்ற கிராமத்தில் பிறந்தார் இவர்.​

        வரதாசாரியாரின் தமையனார் கே.வி.​சுந்தரம் ஐயங்கார் சிறந்த இசை
        வல்லுநர்.​

        மற்றொரு தமையனார் கே.வி.​கிருஷ்ணமாசாரியார் வீணை வித்தகர்.​

        தமக்கைகளும் இசை பயின்றனர்.​

        இத்தகைய சூழலில் பிறந்து வளர்ந்த இவர் காதுகள் இசையின்
        நுணுக்கங்களை வெகுவாக உள்வாங்கிக்கொண்டன.​

        வரதாசாரியார் தனது தமையனாரிடம் வர்ணங்களைப் பயின்றார்.​

        இராமசந்திரன் என்ற வயலின் வித்வானிடம் இராகங்களைக் கற்றார்.​

        சங்கீதத்தை முழு நேரத் தொழிலாக எடுத்துக்கொள்ள முடியுமா என்று
        இவருடைய தந்தையார் கவலைப்பட்டார்.​

        ஆனால்,
        • போட்டோ மாசிலாமணி
        • பெத்த சிங்கராசார்யலு
        ஆகியோர் அளித்த ஊக்கத்தினால் வரதாசாரியார் சங்கீதத்தை ஆழ்ந்து
        கற்றார்.​

        பட்டணம் சுப்பிரமணிய ஐயரிடம் பயிலத் தொடங்கி 3 ஆண்டுகள் மட்டுமே
        படிக்க முடிந்தது.​

        குடும்பச் சூழலால் வேலைக்குப் போக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.​

        சில ​ உருப்படிகளையே பட்டணம் சுப்பிரமணிய ஐயரிடம் கற்றிருந்தாலும்
        அவருடைய பாடமுறையால் இவருள் ஆழ்ந்த சங்கீத நுணுக்கங்கள் கல்லில்
        செதுக்கியது போலப் பதிந்துவிட்டன.​

        இதனால்தானோ என்னவோ பட்டணம் சுப்பிரமணிய ஐயரின் சீடர் என்று
        பின்னாளில் பெருமையாக பேசப்பட்டார்.​

        வரதாசாரியாரின் குரல் கரகரப்பாக இருந்த போதிலும் சங்கீத இரஸத்தைப்
        பிழிந்துதர அது தடையாக இருக்கவில்லை.​

        மைசூருக்குச் சென்ற டைகர் நிகழ்த்திய கச்சேரியைக் கேட்ட மன்னர்
        கிருஷ்ணராஜ உடையார் இவருக்கு "டைகர்" என்ற பட்டத்தையும்,
        தோடையமும் அளித்தார் என்று ஒரு தகவல் தெரிவிக்கிறது.​

        தொண்டை கரகரப்பையும் மீறி பிருகாக்களும் கமகங்களும் இவரிடம்
        கைகட்டி சேவகம் செய்யும் என்று கூறுவது உண்டு.​

        இவர் நல்ல சாகித்தியகர்த்தாவும் கூட.​

        கீதம்,​​ வர்ணம்,​​ கீர்த்தனைகளைப் புனைந்திருக்கிறார்.​

        1931ம் வருடம் சங்கீத வித்வத் சபையின் ஆசிரியர் படிப்புக் கல்லூரியிலும்,​​
        அதன் பின் சென்னை சர்வகலாசாலையின் இசைத் துறையிலும்,​​1937ல்
        அண்ணாமலை சர்வகலாசாலையிலும்,​​1943ல் சென்னை
        கலாட்சேத்திரத்திலும் பணிபுரிந்தார்.​

        சக்ரவர்த்தி சி.​ இராஜகோபாலாசாரியார் கலாட்சேத்திரத்துக்கு வருகை
        தந்த நாளையொட்டி,​​ "ஈ தினமே சுப தினமு" என்ற கிருதியை இயற்றிப்
        பாடினார் டைகர்.​

        1932ம் வருடம் சங்கீத வித்வத் சபைக்குத் தலைமை தாங்கினார்.​

        வரதாசாரியாருக்கு நகைச்சுவை உணர்வு அதிகம்.​

        ஒரு முறை மிருகக்காட்சி சாலையை ஒட்டிய மைதானத்தில் சங்கீத
        வித்வத் சபை மாநாடு நடைபெற்றது.​

        ஆடல் -​ பாடல் என்ற தலைப்பில் எழுத்தாளர் கல்கி அதைச் சுட்டிக்காட்டி
        கேலியாக விமர்சிக்க,​​ அதை முதலில் ஆமோதித்து இரசித்துச் சிரித்தவர்
        டைகர் வரதாசாரியார் தான் என்பது குறிப்பிடத்தக்கது.​

        இவருடைய சிஷ்யர்களில் முக்கியமானவர்களில் சிலர்.
          • எம்.டி.​ இராமநாதன்
          • டி.கே.​ இரங்காசாரி,​​
          • பி.வி.​ இராமன்
          • பி.வி.​ இலட்சுமணன்
          • சாவித்ரி இராஜன்
          • எஸ்.ஆர்.​ ஜானகிராமன்
          • டி.​ பசுபதி
          போன்றோர்.

          சுவாதி

          தகவல் உதவி:-
          • கே.ஸ்ரீநிவாசன்
          • சந்திரிகா இராஜாராம்
          • ஜெயஸ்ரீ
          • ஹம்சினி
          • உமா சரஸ்
          • இராஜ்கண்ணன்
            படங்கள்:- இராகி - விஜி - இரவி - கணேஷ்

            PENNESWARAN KRISHNA RAO

            unread,
            Dec 25, 2009, 6:17:08 AM12/25/09
            to mint...@googlegroups.com

            இங்கே டெல்லியில் என் காதுகளில் வண்டி வண்டியாகப் புகை.

            ஆளுக்கு ஒரு கச்சேரியாக எழுதி அமர்க்களம் பண்ணுகிறீர்கள்.  சென்னையில் அங்கங்கே பொளந்து கட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.  இங்கே டெல்லியில்  ஏதாவது மாமியோ மாமாவோ  நான் இன்ன இடத்தில் பாடப்போறேன் அவசியம் வரணும் என்று கூப்பிட்டால் அவசரமாக வயிற்றைக் கலக்குகிறது.

            சென்னை ஆசாமிகள் கொண்டை உள்ள மகாராஜன்கள்.  முடிந்து கொள்கிறீர்கள்.

            இங்கே சொட்டைத் தலையை சொறிந்து கொண்டு இருக்கிறோம்.  நல்ல குளிரில்.

            வயிற்றெரிச்சலுடன்

            பென்னேஸ்வரன்

            2009/12/25 Kannan Natarajan <thar...@gmail.com>
            --
            "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
            To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
            For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



            --
            http://www.vadakkuvaasal.com/

            Geetha Sambasivam

            unread,
            Dec 25, 2009, 6:23:56 AM12/25/09
            to mint...@googlegroups.com
            தொலைக்காட்சியில் பார்க்கலாம், நேரம் இருந்தால். நேத்திக்குப் பொதிகையில் இரு சிறு பெண்கள் அநன்யா, அநாமிகா இருவரும் பாடினார்கள். கூடவே பேட்டியும் ஒளிபரப்பானது. குரலும் அருமை, கச்சேரி செய்தவிதமும் தேர்ந்த வித்வான்களைப் போல் மிக மிக அருமை. ஒவ்வொரு நாளும் மாலை 5-30 மணியில் இருந்து ஆறு மணி வரை விஜய் தொலைக்காட்சியிலும், 6-00 மணியில் இருந்து 7-00 மணி வரை ஜெயா தொலைக்காட்சியிலும் கச்சேரிகள் ஒளிபரப்பப்படுகின்றன. அனைத்தும் முத்தான கச்சேரிகள். ஜெயாவில் மறு ஒளிபரப்பு மறுநாள் காலை ஆறு முப்பதுக்கு. ஆனால் அரை மணி நேரம் தான்.

            2009/12/25 PENNESWARAN KRISHNA RAO <penne...@gmail.com>

            PENNESWARAN KRISHNA RAO

            unread,
            Dec 25, 2009, 1:14:29 PM12/25/09
            to mint...@googlegroups.com

            என்ன இருந்தாலும் வெளியே நின்று கீரை வடையும் பஜ்ஜியும் தஞ்சாவூர் காபியும் சாப்பிட்டு வாயைத் துடைத்துக் கொண்டு திரும்பப் போய் விட்ட இடத்தைப் பிடிக்கிற சுகம் இந்த டிவியில் எல்லாம் வருமா?

            அதுக்குத்தான் அந்தப் புகை.

            அன்புடன்

            பென்னேஸ்வரன்

            2009/12/25 Geetha Sambasivam <geetha...@gmail.com>



            --
            http://www.vadakkuvaasal.com/

            Kannan Natarajan

            unread,
            Dec 25, 2009, 10:57:56 PM12/25/09
            to Min Thamizh
            ஏன் என்ற கேள்வி...

            சென்னை இசை இரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட -​ சென்னைக்கு
            வெளியே இருக்கும் -​ கலைஞர்களில் முக்கியமானவர் மானஸி பிரசாத் ​
            (பெங்களூரு).​ ​

            http://www.dinamani.com/Images/article/2009/12/26/26manasi.jpg

            கடந்த திங்கள்கிழமை (21/12/09) அடையாறு எம்.ஜி.ஆர் கலை மற்றும் அறிவியல்
            கல்லூரி அரங்கில் கர்னாடிகா அமைப்பின் சார்பில் நடந்த இவரது இசை
            நிகழ்ச்சியில் மைசூர் வாசுதேவாச்சாரின் சாஹித்யங்கள் மட்டுமே இடம்பெற்றன.

            மந்தாரி இராகத்தில் அமைந்த "வனஜாஷி" என்கிற வர்ணத்துடன் நிகழ்ச்சியை
            தொடங்கினார் மானஸி.​

            தொடர்ந்து "பாலயாஷீ பத்மநாபா" ​(ஹம்ஸத்வனி)வும்,​​ "தேவி ரமே மாமவ"வும்
            பாடிவிட்டு அடுத்ததாக வகுளாபரணத்தில் "கருணிஞ்சி நன்னு காப்பாடு"பாட
            தொடங்கியதுமே அரங்கத்தில் கைதட்டல்.​

            அதிலும் "ப்ரோவ பாரமா ஸூகேத இராமா" என்ற வரியைப் பாடும்போது
            உருகியும் விட்டார்.​ உருக்கியும் விட்டார்.

            அடுத்து பாடிய "நின்னே நம்மிதினய்ய" ​(சிம்மேந்திர மத்திமம்)​ அநேகமாக எல்லா
            கச்சேரிகளிலும் கேட்கிற பாடல் தான் என்றாலும் "பன்னகேந்திர ஸயனா" என்கிற
            வரியில் வந்த நிரவல் மானஸி ஸ்பெஷல்.​

            தொடர்ந்து "கோகுல நிலைய க்ருபாலய பாலய" (ஆவேரி)​ என்கிற பஜன் பாடிவிட்டு
            கமாஸ் இராக தில்லானாவுடன் நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

            இதனை பாட்டுக் கச்சேரி என்று கூறுவதை விட பாட்டும் பேச்சும் கலந்த கச்சேரி
            என்று கூறுவதுதான் பொருத்தம்.​

            மைசூர் வாசுதேவாச்சார் வாழ்வில் நடந்த பல சுவையான தகவல்களை ஒவ்வொரு
            பாடலுக்கு இடையிலும் அழகுபடக் கூறினார் மானஸி.

            அது சரி,​​ வாசுதேவாச்சார் சம்ஸ்க்ருதத்திலும், தெலுங்கிலும் மட்டுமே கீர்த்தனைகள்
            இயற்றியிருக்கிறாரே தவிர தமது தாய்மொழியான கன்னடத்தில் ஒரு கீர்த்தனை கூட
            இயற்றவில்லை என்று கூறினார் இந்த கன்னடத்துப் பைங்கிளி.​ அப்படியா?

            • ஆனையாம்பட்டி வேங்கடசுப்பிரமணியம் -​ வயலின்
            • ஸ்கந்த சுப்பிரமணியம் -​ மிருதங்கம்
            நிறைவான நிகழ்ச்சி.​ நல்ல குரல் வளம்.​ நிறைய விஷயங்கள் தெரிந்து வைத்திருக்கிறார்.​

            மானஸியின் நிகழ்ச்சிகள் அதிகம் இல்லையே,​​ ஏன்?

            Kannan Natarajan

            unread,
            Dec 25, 2009, 11:09:40 PM12/25/09
            to Min Thamizh
            பலே, மேஜர் ஆயிட்டயே...

            சிக்கில் குருசரணுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!​

            சங்கீத உலகத்தின் உச்சகட்ட அங்கீகாரம் "சங்கீத கலாநிதி" விருது என்றால்
            அதற்கு அச்சாரம்,​​ மியூசிக் அகாதமியில் ஏழு மணிக் கச்சேரி.​

            இந்தத் தகுதியைப் பெற்றுத் தந்திருப்பது அவரது சங்கீதத்தின்
            • செழுமையும்
            • உழைப்பும் தான்
            என்பதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்.

            சிலருக்குக் குரல் வளம் இருக்கும்.​ வித்வத் இருக்காது.​

            இன்னும் சிலருக்கு மேடைக் கவர்ச்சி இருக்காது.​

            வேறு சிலருக்குத் தங்களது நிகழ்ச்சியை பொறுக்கி எடுத்த
            உருப்படிகளுடன் புத்திசாலித்தனமாக அமைத்துக் கொள்ளத் தெரியாது.​

            இந்த எல்லா விஷயங்களும் ஒருங்கே அமைந்திருக்கிறது குரு சரணிடம்.​

            போதாக் குறைக்கு,​​ பணிவும்,​​ கிஞ்சித்தும் தலைக்கனமே இல்லாமல் பழகும்
            இயல்பும்.​

            http://www.dinamani.com/Images/article/2009/12/26/26sikkkil.jpg

            வெற்றிக்கு வேறு தகுதிகள் தேவையா என்ன?

            ஒரு இராகத்தையோ,​​ சாகித்யத்தையோ குரு சரண் கையாளும் விதமே அலாதியாக
            இருக்கும்.​ அதில் முழுமைத்தனம் இருக்கும் என்பது மட்டுமல்ல,​​ தன்னுடைய
            வித்வத்தைக் காட்டுவதில் கவனம் செலுத்தாமல் இராகத்தின் அல்லது சாகித்யத்தின்
            ஜீவனைத் தொட்டுக் காட்ட வேண்டும் என்கிற கவனம் தான் அதிகமாக இருக்கும்.​

            "சீனியர்" என்கிற அங்கீகாரம் கிடைத்து விட்டிருக்கும் நிலையில்,​​ இவரது
            சங்கீதம் எப்படி மெருகேறப் போகிறது,​​ தனது கற்பனையை எந்த அளவுக்கு மேலும்
            வளர்த்திக் கொள்ளப் போகிறார் என்பதைக் காலம் தான் கணிக்க வேண்டும்.

            மியூசிக் அதாதமியில் செவ்வாயன்று (22/12/09) சிக்கில் குரு சரணின் நிகழ்ச்சி.​
            • நாகை ஸ்ரீராம் வயலின்
            • உமையாள்புரம் சிவராமன் மிருதங்கம்
            • சுப்பிரமணியம் கடம்
            தனது பெயருக்கு முன்னால் மட்டும் "சங்கீத கலாநிதி" என்று நாம் எழுதாமல்
            விட்டதில் ஒரு மூத்த வித்வானுக்கு அசாத்திய வருத்தம் ​(கோபம்).​

            எதற்பு வம்பு?​

            இனிமேல் யாருக்குமே விருதுகள் போட்டு மரியாதை தருவதில்லை என்று
            தீர்மானித்து விட்டோம்.​ சிவராமன் மன்னிப்பீராக!

            அன்றைக்கு குரு சரண் "வசந்தா" பாடியிருக்கிறார் பாருங்கள்.​

            அடடா,​​ கேட்காமல் விட்டவர்கள் துரதிர்ஷ்டசாலிகள்.​

            அந்த கச்சேரியின் சிறப்பம்சமே அந்த "வசந்தா"தான்.​

            எடுத்துக் கொண்ட சாகித்யம்,​​ வழக்கம் போல "ஹரிஹர புத்ரம்".

            இப்போதெல்லாம்,"முகாரி" அடிக்கடி நமது இளைய தலைமுறைக் கலைஞர்களால்
            கையாளப்படுகிறது.​ குறிப்பாக,​​ சிக்கில் குருசரணின் ஃபேவரிட் என்றுகூடக் கூறலாம்.​

            உருக்கத்தைப் பிழிந்தெடுத்துக் கொடுக்க "முகாரி" உதவுகிறது என்பது உண்மை.​

            "என்ட்ட நின்னே சபரி பாக்யமு" என்கிற சாகித்யம்.​

            முழுமையான உருக்கத்தை குரு சரண் வெளிக்கொணர்ந்தாரா என்பதில் நமக்கு சந்தேகமே.​

            "ஆகா ஓகோ" இரகத்திலான முகாரி அல்ல இது!

            "பரஸ்" இராகத்தில் சியாமா சாஸ்த்திரியின் "நீலாயதாக்ஷி"யையும் குரு சரண் ஏதோ
            பாடினார் என்று சொல்லலாமே தவிர,​​ "சபாஷ்" போட்டு இரசிக்க முடியவில்லை.​

            ஏழு மணிக் கச்சேரியில் குரு இப்படி "டல்" அடிக்கிறாரே என்று சற்று சிந்திப்பதற்குள்
            எடுத்து விட்டார் பாருங்கள் ஒரு கல்யாணியை.​

            அரங்கமே சுறுசுறுப்பாகிவிட்டது.​ கைகள் தாளமிடத் தொடங்கிவிட்டன.

            "கல்யாணி" இராக ஆலாபனையில் குரு சரண் ஒரு மாயாஜாலமே நிகழ்த்தி விட்டார்.​

            ஒரு ஸ்ருதிபேதம் நடத்தி,​​ ஹிந்தோளத்தையும்,​​ மோகனத்தையும் தொட்டுக் காட்டினார்
            பாருங்கள்.​

            அடடா...​ அடடா...​ கேட்காமல் விட்ட காதுகள் பூர்வ ஜென்மத்தில் பாவம் செய்தவை.​

            "நிஜதாச வரத",​​ தான் எடுத்துக் கொண்ட சாகித்யம்.​ "புஜகாதிப சயனா"வில் நிரவல்,​​
            ஸ்வரம்.

            குருசரண் ஸ்வரம் பாடும்போது நம்மை அறியாமலே எம்.எல்.வி.​ நினைவுக்கு வருகிறார்.​

            அவரைப் போலவே,​​ கொஞ்சம்கூட சிரமப்படாமல் ஸ்வரம் பாடுவது இந்த மனிதருக்கும்
            சர்வசாதாரணமான விஷயமாக இருக்கிறது.

            தொடர்ந்து "தன்யாசி" இராகத்தில் மிஸ்ரசாப்பு தாளத்தில் இராகம் தாளம் பல்லவி.​

            கமாஸ் இராகத்தில் ஒரு ஜாவளி பாடிவிட்டு,​​ பூச்சி சீனிவாச அய்யங்கார் இயற்றிய
            "காபி" இராகத் தில்லானா என்று பாடி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

            வயலின் வாசித்த நாகை ஸ்ரீராமை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.​

            அப்படி ஒரு அற்புதமான வாசிப்பு.​

            உமையாள்புரம் சிவராமனின் வாசிப்பைப் பற்றிச் சொல்ல நமக்கெல்லாம் யோக்யதை கிடையாது.​

            "இலயம்" என்பதே அவரது விரல்களில் ​சங்கமமான விஷயம்.​

            கடம் வாசித்த சுப்பிரமணியமும் சரி.​ அப்பழுக்கில்லாத வாசிப்பு.

            மீண்டும் முதல் வரியைப் படித்துக் கொள்ளுங்கள்.

            Kannan Natarajan

            unread,
            Dec 25, 2009, 11:21:52 PM12/25/09
            to Min Thamizh
            இசையியல் விளக்கம்

            மியூசிக் அகாதமியின் வித்வத் சபையில் டாக்டர் என்.​சோமநாதன் என்ற ஆய்வாளர் ​ ​
            இசை இலக்கண நூலான பஞ்சமரபில் 30 வாத்தியங்களைப் பற்றி குறிப்பாகத்
            "தவில்" என்ற தலைப்பில் வியாழனன்று (24/12/09) "இசையியல் விளக்கம்" அளித்தார்.​

            • பேரிகை
            • படகம்
            • இடைக்கை
            • உடுக்கை
            • குடமுழா
            • தக்கை
            • கன்னப் பரை
            • டமருகம்
            • தத்திரி
            • முழவு
            போன்றவைகளைக் குறித்துக் குறிப்பிட்டார்.​

            • பத்துப்பாட்டு
            • எட்டுத்தொகை
            • பதினென் கீழ்கணக்கு
            ஆகியவற்றில் தோல் வாத்தியங்களைப் பற்றிய
            • குறிப்புகளும்
            • பிறப்பு
            • இறப்பு
            ஆகியவற்றின்போது அவை எப்படி உபயோகப்படுகின்றன என்பதையும் விளக்கினார்.

            எல்லா நாடுகளிலும் தோல் கருவி வாத்தியங்களை அது எத்தனை பெரிது என்று அளவை
            வைத்து பார்க்கும்போது,​​ நம்நாட்டில் மட்டும் தாள வாத்தியங்கள் அவற்றின் சப்த அளவை
            வைத்து பிரிக்கப்படுகின்றன என்று விளக்கினார்.

            • மிழவுக்கு ஆட்டின் தோலும்
            • பஞ்சமுக வாத்தியத்துக்கு மான் தோலும்
            • கஞ்சிராவுக்கு உடும்பின் தோலும்
            • இடக்கைக்கு பசுவின் வயிற்றின் உட்பகுதியும்
            உபயோகப்படுத்தப்படுகின்றன என்று விளக்கினார்.

            "தவில்" என்ற பெயர் முதன்முதலில் திருப்புகழில் காணப்பட்டாலும்,​​ பஞ்சமரபில்
            "தாவல் தடாரி" என்ற குறிப்பு உள்ளதைச் சுட்டிக்காட்டினார்.

            http://www.dinamani.com/Images/article/2009/12/26/26isaiyiyal.jpg

            இரண்டாவது இசையியல் விளக்கத்தை இந்த வருடம் சங்கீத கலாநிதி பட்டத்தைப்
            பெறப்போகும் தவில் வித்வான் வலையப்பட்டி சுப்பிரமணியம் "இலயம் ஆலயம்"
            என்ற தலைப்பில் நகைச்சுவை உணர்வுடன் விளக்கினார்.​

            பஞ்ச நடையில் வாசிப்பது என்பது,​​ பஞ்ச பூதங்களின் புறப்பாட்டைக் குறிப்பதாகக்
            கூறினார்.​

            இது மங்கல வாத்தியமாகக் கருதப்பட்டதற்குக் காரணம் அசைவம் சாப்பிடாத
            மிருகத்தின் தோலை உபயோகப்படுத்துவதே காரணம் என்று கிருபானந்த வாரியார்
            சொன்னதாகவும் குறிப்பிட்டார்.

            ஒரு காருக்கு எப்படி பெட்ரோலும்,​​ ஓட்டுனரும் தேவையோ அதைப்போல சங்கீதத்திற்கு
            ஸ்ருதியும் இலயமும் இரு கண்கள் என்று குறிப்பிட்டார் வலையப்பட்டி.

            Kannan Natarajan

            unread,
            Dec 25, 2009, 11:26:25 PM12/25/09
            to Min Thamizh
            90 வயதில் பாட முடியுமா?

            தொண்ணூறு வயதில் பாட முடியுமா?​

            முடியும் என்று நிரூபிக்கிறார் ஆர்.கே.​ ஸ்ரீகண்டன்.​

            http://www.dinamani.com/Images/article/2009/12/26/26srikandan.jpg

            60 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி உற்சாகமாகப் பாடினாரோ அதே உற்சாகம்.​

            30 ஆண்டுகளுக்கு முன்னால் எப்படி இருந்ததோ அதே குரல் வளம்.

            "சங்கீத கலாநிதி" பட்டம் பெற்ற இந்த மூத்த கலைஞர்,​​ தனது 60 வயது
            மகன் இராமகாந்த் உடன் பாட,​​
            • இரவிக்கிரணின் சித்திர வீணை
            • உமையாள்பும் சிவராமனின் மிருதங்கம்
            • கார்த்திக்கின் கடம்
            என்று சுற்றி அமர்ந்திருக்க அற்புதமான நிகழ்ச்சியை இரசிகர்களுக்கு விருந்தளித்த
            சுகானுபவம்,​​ பாரத் கலாச்சாரில் கடந்த ஞாயிறன்று(20/12/09) காலை பத்தரை மணிக்கு
            நிகழ்ந்தது.

            அன்றைக்கு அவர் பாடியிருக்கும் "சக்கரவாகம்" இருக்கிறதே,​​ சமீப காலத்தில்
            இத்தனை கற்பனை வளத்துடன் யாரும் பாடிக் கேட்டதில்லை.​

            தந்தை ஸ்ரீகண்டனுக்குச் சற்றும் சளைக்காத சாரீர வளமும்,​​ சங்கீதச் செறிவும்
            இராமகாந்துக்கு.​

            ஸ்ரீகண்டனும்,​​ இராமகாந்தும் மட்டுமல்ல,​​ சித்திர வீணை வாசித்த இரவிக்கிரணும் சரி,​​
            மிருதங்கம் வாசித்த உமையாள்புரம் சிவராமனும் சரி,​​ கடம் வாசித்த கார்த்திக்கும் சரி,​​
            ஒரு அதி அற்புதமான இசை நிகழ்வைப் பதிவு செய்தனர்.

            ஒரு சில இடங்களில் வயலினுக்கு பதிலாக வீணையைப் பக்கவாத்தியம் ஆக்கினால்
            என்ன என்று யோசிக்க வைத்துவிட்டார் இரவிக்கிரண்.​

            சிவராமன் ஆகட்டும்.​ அன்றைக்கு மிஸ்ர சாப்பில் ஒரு தனி வாசித்திருக்கிறார்,​​ அந்த
            விரல்களைக் கண்ணில் ஒற்றிக் கொள்ள வேண்டும் போலிருந்தது.

            ஸ்ரீகண்டனின் நிகழ்ச்சியைக் கேட்டதுதான் இந்த ஆண்டு இசைவிழாவைப் பற்றிய
            நினைவு வரும்போதெல்லாம் முதலில் ஞாபகம் வரும்.​

            பாரத் கலாச்சாருக்கு நன்றி சொல்ல வேண்டும்!

            Kannan Natarajan

            unread,
            Dec 25, 2009, 11:35:28 PM12/25/09
            to Min Thamizh
            பாயசத்தில் இனிப்பு எந்த இடம்?

            செவ்வாய் (22/12/09) அன்று நுங்கம்பாக்கம் கல்சுரல் அகாதமியில்
            மகாராஜபுரம் இராமச்சந்திரனின் இசை நிகழ்ச்சி.​
            • நாகை முரளிதரன் வயலின்
            • நெய்வேலி நாராயணன் மிருதங்கம்
            • சிவராமகிருஷ்ணன் கடம்
            அப்பாவின் சாரீரம் தப்பாமல் பிள்ளைக்கு அமைந்திருப்பது மிகப் பெரிய ப்ளஸ் பாயிண்ட்.​

            அந்தக் குரலில் இருக்கும் கனம்,​​ பிருகாக்களில் இருக்கும் அனாயாசம்,​​ சாகித்யத்தில் இருக்கும்
            ஸ்பஷ்டம்...​

            http://www.dinamani.com/Images/article/2009/12/26/26maharaja.jpg

            மீண்டும் மகாராஜபுரம் சந்தானம் உயிர் கொண்டு வந்து பாடுவது போல ஒரு பிரமை,​​
            கண்ணை மூடிக் கொண்டு இராமச்சந்திரனின் கச்சேரியைக் கேட்கும் போது ஏற்படுகிறது.

            "சுத்த தன்யாசி" இராகத்தில் "ஸ்ரீராஜமாதங்கி" என்கிற வர்ணத்தில் ஆரம்பித்து,​​ "நாட்டை"யில்
            "வரசித்தி வினாயகம் பஜரே ரே மானஸு.."வை,​​ சுருக்கமாக இராகத்தைக் கோடு காட்டிவிட்டு
            சாகித்யம் மட்டும் பாடி முடித்தார்.​

            தொடர்ந்து ஆறு நிமிடங்கள் "கமாஸ்" இராக ஆலாபனை.​

            "சபாஷ்" போட வைத்த ஆலாபனை அது.​

            தீட்சதரின் "ஸ்ரீசுவாமிநாதாய நமஸ்தே..." சாகித்யம்.​

            பிறகு விறுவிறுப்பாக ஒரு "தர்பார்".​

            வழக்கம்போல "யோசனா"தான் சாகித்யம்.​

            அடுத்தாற்போல,​​ விஸ்தாரமாக ஒரு "கல்யாணி" பாடியிருக்கிறார் மனிதர்.​

            அந்த சுகத்தைச் சொல்லி மாளாது.​

            கல்யாணியின் அத்தனை பரிமாணங்களையும் தொட்டுக் காட்டிய அற்புதமான ஆலாபனை.​

            அந்த கனமான சாரீரத்துக்கும்,​​ ஒன்றன்பின் ஒன்றாக எழும் பிருகாக்களும்,​​ அரங்கமே
            மகுடிக்குக் கட்டுப்பட்ட பாம்பாக மயங்கியது.

            "கல்யாணி"க்கு எடுத்துக் கொண்ட சாகித்யம் தியாகைய்யரின் "நிதி சால சுகமா..."
            நிரவல்,​​ ஸ்வரம் பாடி முடித்தபோது,​​ ஒரு நிமிடத்துக்குக் கரவொலி அலை அலையாய் எழுந்தது.​

            தொடர்ந்து,​​ சின்னதாக ஒரு "நவரச கானடா".​

            பாபநாசம் சிவனின் "நானொரு விளையாட்டுப் பிள்ளையா?" தான் சாகித்யம்.​

            உருக்கத்துக்குக் கேட்கவா வேண்டும்?

            இராகம்,​​ தானம்,​​ பல்லவிக்கு மகாராஜபுரம் இராமச்சந்திரன் எடுத்துக் கொண்ட இராகம்
            "பிருந்தாவன சாரங்கா". "நாதனை தினம் நினை மனமே..​ பிருந்தாவன சாரங்க
            இரங்கநாதனை தினம் நினை மனமே..." தான் பல்லவி.​

            கண்ட ஜாதி திரிபுட தாளத்தில் அமைந்த இந்தப் பல்லவியில்
            • அமீர் கல்யாணி
            • சிவரஞ்சனி
            இராகங்களில் சஞ்சாரம் நிகழ்த்தியபோது,​​ பல இடங்களில் "பலே..​ பலே.." போடத்
            தோன்றியது.

            அதன் பிறகு காவடிச் சிந்து,​​ தில்லானா என்று துக்கடாக்கள்.​

            கச்சேரியில் எது நன்றாக இருந்தது என்று மட்டும் கேட்டு விடாதீர்கள்.​

            பாயசத்தில் எந்த இடம் இனிக்கிறது என்று கேட்டால் என்ன பதில் சொல்ல?

            Kannan Natarajan

            unread,
            Dec 25, 2009, 11:45:36 PM12/25/09
            to Min Thamizh
            முன்னோடிகள்:- ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர்

            ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர் இசைப்புரட்சி செய்த ஒரு மகாவித்வான்
            என்று கூறலாம்.​

            http://www.dinamani.com/Images/article/2009/12/26/26muthai.jpg

            இவர் 1877ல் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள புனைவேலி என்ற கிராமத்தில்
            லிங்கம் ஐயருக்கும்,​​ ஆனந்தம் அம்மாவிற்கும் மகனாகப் பிறந்தார்.​

            திருவையாறைச் சேர்ந்த முது கணபதிகளிடம் ஒன்பதாவது வயதில் வேதம் பயிலத்
            தொடங்கினார்.

            திருவையாறு சங்கீதத்தின் உறைவிடமாய் இருந்த காலம்.​ சங்கீதம் முத்தையாவை
            இழுத்தது.​

            வேத அத்யாயனம் செய்வதை விட்டுவிட்டு,​​ தியாகய்யரின் சிஷ்ய பரம்பரையைச் சேர்ந்த
            பல்லவி துரைசுவாமி அய்யரின் சீடரும்,​​ சபேசய்யரின் தந்தையுமான வித்வான் சாம்பசிவ
            ஐயரிடம் சங்கீதம் பயின்றார்.​

            அவர் காலத்திற்குப் பிறகு சபேசய்யரிடமும் சில உருப்படிகளைப் பாடம் செய்தார்.​

            1893ம் ஆண்டு மீண்டும் ஹரிகேசநல்லூருக்குத் திரும்பினார்.​ ​

            அசுர சாதகம் செய்து தன் குரலை வளப்படுத்திக் கொண்டார்.​

            த்ரிஸ்தாபியும் ​(மூன்று காலமும்)​ பேசக்கூடிய சாரீரம்.​ தானம் பாடுவதில் நிபுணத்துவம்
            அடைந்தார்.​

            1897ம் வருடம் திருவனந்தபுரம் மூலம் திருநாள் முன்பு பாடி சமஸ்தான கௌரவங்கள் பல
            பெற்றார்.​

            தஞ்சாவூர் கிருஷ்ண பாகவதருக்குப் பின்பு ஹரிகதையில் ஒரு இடைவெளி வந்து
            விட்டதைப் புரிந்துகொண்டு,​​ தன்னுடைய நாவன்மை,​​ நகைச்சுவை உணர்வு,​​ மொழி
            ஆளுமை ஆகியவற்றை ​ மூலதனமாகக் கொண்டு,​​ ஹரிகதை செய்ய ஆரம்பித்தார்.​ ​

            தஞ்சாவூரில் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வசித்தார்.​

            அங்கு,
            • கோனேரிராஜபுரம் வைத்யநாத ஐயர்
            • கும்பகோணம் இராஜமாணிக்கம் பிள்ளை
            • மாயவரம் சுப்பு ஐயர்
            • கும்பகோணம் அழகநம்பி
            இவர்களின் பழக்கம் ஏற்பட்டது.​

            குரு சாம்பசிவ ஐயரின் உதவியாலும் அப்பிரஹாம் பண்டிதரின் நட்பாலும் இசையையும்
            திறம்படக் கற்றார்.​

            இந்த நேரத்தில் அவர் ஹரிகதைக்குத் தேவையான பாடல்களையும்,​​ தனிக் கீர்த்தனைகளையும்
            இயற்ற ஆரம்பித்தார்.​ தன்னுடைய ஹரிகதைகளுக்கு நிரூபணங்களை எழுதினார்.​
            எல்லா சமஸ்தான மன்னர்களும் இவரை ஆதரித்தனர்.

            மைசூர் மஹாராஜா இவருக்கு "காயக சிகாமணி" என்ற பட்டத்தை அளித்தார்.​

            மஹாராஜாவின் வேண்டுகோளின்படி சாமுண்டீச்வரியின் பெயரில் அஷ்டோத்திரங்களும்,​​
            பாடல்களும் புனைந்தார்.​

            1930ம் வருடம் சங்கீத கலாநிதி பட்டம் சங்கீத வித்வத் சபையினரால் இவருக்கு
            வழங்கப்பட்டது.

            1936ல் திருவனந்தபுரம் சமஸ்தானத்தில் ஆஸ்தான வித்வானாக நியமிக்கப்பட்டார்.​

            சுவாதி திருநாள் மஹாராஜாவின் கீர்த்தனைகளை தொகுப்பதில் முக்கிய பங்கு வகித்தார்.​

            "சங்கீத கல்பத்ருமம்" என்ற இசை இலக்கண நூலை எழுதி டாக்டர் பட்டம் பெற்றார்.​

            காசியில் சில காலம் தங்கி இந்துஸ்தானி சங்கீதத்தையும் முறைப்படி புரிந்துகொண்டார்.​ ​

            இவர் வர்ணங்கள்,​​ தருவர்ணங்கள்,​​ கீர்த்தனைகள் என்று பல உருப்படிகளை இயற்றியுள்ளார்.​

            இவருடைய கீர்த்தனைகளில் 400 கீர்த்தனைகள் நமக்கு கிடைத்துள்ளன.​
            • விஜயநாகரி
            • புதமனோஹரி
            போன்ற பல இராகங்கள் இவரின் கண்டுபிடிப்பு.​

            அவரிடம் சங்கீதம் பயின்றவர்களில் சிலர்,​​
            • மதுரை மணி ஐயர்
            • பூதலூர் கிருஷ்ணமூர்த்தி சாஸ்த்ரிகள்
            போன்றோர்.​

            1945ம் வருடம் இயற்கை எய்தினார்.

            சுவாதி.


            தகவல் உதவி:-
            • சந்திரிகா இராஜாராம்
            • ஜெயஸ்ரீ
            • ஹம்சினி
            • உமா சரஸ்
            • இராஜ்கண்ணன்
            படங்கள்:- இராகி - விஜி - இரவி - கணேஷ்

            Kannan Natarajan

            unread,
            Dec 26, 2009, 8:04:35 PM12/26/09
            to Min Thamizh
            சுதா சாதாவாகி விடுவாரா?

            சுதா ரகுநாதனுக்குக் குரல் சிரமப்படுத்துகிறது.

            முன்புபோல அவரது சாரீரம் ஒத்துழைக்காததால், தொடர்ந்து கீர்த்தனங்களாகப் பாடி சமாளிக்கிறார்.

            இப்படி எல்லாம் அவரைப் பற்றிக் குற்றம் சொல்பவர்கள் தயவு செய்து தங்களது குற்றச்சாட்டுகளைத்
            திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள்.

            இந்த சீசனில் எண்ணி 13 கச்சேரிகள் மட்டுமே இடைவெளி விட்டு ஒத்துக் கொண்டு, ஒவ்வொரு
            நிகழ்ச்சியையும் ஒன்றை அடுத்தது விஞ்சுவதாக அமைத்துக் கொண்டு விட்டார்.
            http://www.dinamani.com/Images/article/2009/12/27/music1a.jpg

            கடந்த வெள்ளிக்கிழமை (25/12/09) கிருஷ்ண கான சபாவில் காலை 9.30 மணிக்கு சுதா
            ரகுநாதனின்
            கச்சேரி.
            • ஸ்ரீராம்குமார் - வயலின்
            • திருவாரூர் வைத்தியநாதன் - மிருதங்கம்
            • ஆர். ராமன் - மொகர் சிங்
            வருடா வருடம் கிறிஸ்துமஸ் அன்று,
            • காலையில் கிருஷ்ண கான சபாவில் சுதா
            • மாலையில் இந்தியன் பைன் ஆர்ட்சில் கே.ஜே. ஜேசுதாஸ்
            என்பது எழுதப்படாத ஒப்பந்தம்.

            தெரியாதவர்கள் தெரிந்து கொள்க.

            "ஏரா நாபை" தோடி
            ராக வர்ணத்துடன் தொடங்கியது சுதா ரகுநாதனின் அன்றைய கச்சேரி.

            தொடர்ந்து, "செ
            ராஷ்ட்ரம்" ராகத்தில் அமைந்த தியாகைய்யரின் "குமயனி" என்கிற சாகித்யம்.

            ஸ்வரம் மட்டும் பாடிவிட்டு அடுத்தாற்போல, "சாரமதி"யில் "மோட்சமுகலதா".

            இதை வெறும் பாட்டுடன் முடித்துக் கொண்டார்.

            அதற்குப் பிறகு, விஸ்தாரமாகப் "பந்துவராளி"
            ராக ஆலாபனையில் இறங்கினார்.

            ரொம்ப நாளாயிற்று.

            சுதாவின் இப்படி ஒரு பந்துவராளி
            ராக ஆலாபனையைக் கேட்டு.

            என்ன பிருகாக்கள். எத்தகைய மனோதர்மம். ஞானம்.

            தேர்ந்தெடுத்த சாகித்யம். "விசாலாட்சீம் விஸ்வேசம் பஜரே.." என்கிற தீட்சிதர் கிருதி.

            "காசிராணி கபாலின" என்கிற இடத்தில் அமைந்த நிரவல் "ஆகா ஓகோ"
            ரகம்.

            நிரவல் பாடி, ஸ்வரம் பாடி முடிந்தபோது, "பந்துவராளி" பூரணத்துவம் அடைந்தது.

            "மணிரங்க்"
            ராகத்தை சுருக்கமாக ஆலாபனை செய்து விட்டு, "ஜெய,ஜெய பத்மநாப"
            என்கிற சுவாதித் திருநாள் சாகித்யத்தைப் பாடிய கையோடு, சிதம்பர பாரதியின் "சாரங்கா"

            ராகக் கிருதியான "கண்மணியே சொல்லடி".

            கச்சேரியின் விறுவிறுப்புக்கு இதுபோல சில உருப்படிகள் தேவை என்பதை உணர்ந்து
            தனது நிகழ்ச்சிகளை அமைத்துக் கொள்ளும் புத்திசாலித்தனம் சுதாவின் ஸ்பெஷாலிடி!

            ரொம்ப நாளாயிற்றே, "
            ராமநன்னுப் ரோவர" கேட்டு என்று, எம்.எஸ். சுப்புலெட்சுமியைப்
            பற்றிய நினைவு வரும்போதெல்லாம் தோன்றும்.

            இனிமேல் அப்படி நினைவு வந்தால், வெள்ளிக்கிழமை கிருஷ்ணகான சபாவில்
            சுதா
            ரகுநாதன் பாடிய "இராமநன்னுப் ரோவரா"வும் நினைவுக்கு வரும்.

            அப்படி ஒரு பிரமாதமான "ஹரிகாம்போதி" ஆலாபனையும் அதைத் தொடர்ந்து நிரவல்
            ஸ்வரமும்.

            சொல்லி மாளாது போங்கள்!

            "கல்யாண வசந்த மண்டபத்தில் வசந்த
            ராகம் சுகந்த வாசம்" என்கிற பல்லவியை எடுத்துக்
            கொண்டு ஒரு
            ராகம், தானம், பல்லவி.

            அதற்குக் கையாண்ட
            ராகங்கள்,
            • கல்யாண வசந்தம்
            • வசந்தா
            • வாசந்தி
            சுதா தன்னுடைய பழைய ஃபார்மில் இருந்தார்.

            மகுடிக்கு மயங்கிய பாம்பாகக் கேட்கும்
            ரசிகர்கள் மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

            சுதாரித்துக் கொண்டு விட்டார் சுதா என்று தெரிகிறது.

            தனது நிகழ்ச்சிகளைக் குறைத்துக் கொண்டு, கவனத்துடன் ஒவ்வொரு கச்சேரியையும் இதைப்
            போல அமைத்துக் கொண்டு விட்டால், சுதாவைக் குற்றம் குறை சொல்ல இடமிருக்காது.

            என்னதான் இருந்தாலும் சுதா சுதாதானே... அவர் "சாதா" ஆகிவிடுவாரா என்ன?

            Kannan Natarajan

            unread,
            Dec 26, 2009, 8:12:40 PM12/26/09
            to Min Thamizh
            தரம் நிரந்தரம்...

            மியூசிக் அகாதமியில் சனிக்கிழமை (26/12/09) காலையில் பம்பாய் சகோதரிகள்
            • சி. சரோஜா,
            • சி. லலிதாவின்
            இசை நிகழ்ச்சி. கெரவமான பாட்டு பம்பாய் சகோதரிகளுடயைது.

            http://www.dinamani.com/Images/article/2009/12/27/tamil4.jpg

            ஒரு கச்சேரியைத் தொய்வில்லாமல் எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை
            இவர்களிடமிருந்து பயில வேண்டும்.

            டி.கே. கோவிந்த ராவ் இயற்றிய "நிகிலலோக" என்ற தன்யாசி வர்ணத்துடன் கச்சேரி
            தொடங்கியது.

            தொடர்ந்து தீட்சிதரின் "மஹா கணபதிம்" என்கிற நாட்டை
            ராகக் கீர்த்தனை;
            பாவபூர்வமாகக் கல்பனா ஸ்வரங்கள்.

            "நாட்டை" பாடியபோதே
            ரசிகர்களின் இதயக் கோட்டையைக் கவர்ந்துவிட்டனர்.

            சனிக்கிழமையை ஒட்டி தீட்சிதரின் வாரக் கீர்த்தனையான "திவாகர தனுஜம்" அதைத்
            தொடர்ந்து தியாகய்யரின் "தெரத்யகராத".

            லலிதா, ஷண்முகப்பிரியா ராகத்தை மிக விஸ்தாரமாக ஆலாபனை செய்தார்;

            ரசிகர்களை இதுவோ? அதுவோ? என்று யோசிக்க வைக்காமல் முதல் சஞ்சாரத்திலேயே
            ராகத்தின் சாயல் தெள்ளத் தெளிவாயிற்று.

            உஷா
            ராஜகோபால் இவர்களுக்கு ஆஸ்தான வயலின் வித்வான்.

            இவர்களுடைய பாடாந்திரமும் வழியும் அவருக்குப் அத்துப்படி.

            லலிதா பாடியதற்கு இணையாக வாசித்த உஷாவின் ஷண்முகப்பிரியா கச்சேரியை
            களைகட்ட வைத்தது.

            "மாமவ கருணையா" என்ற சுவாதித் திருநாள் கிருதி.

            நிரவலுக்குப் பெயர் போன "முசிறி" பாணி சங்கீதத்தின் வழித்தோன்றல்களிடம் கேட்கவா வேண்டும்.

            "சண்முகப்ரியா" பிரமாதமாக அமைந்தது.

            விறுவிறுவென்று தியாகய்யரின் "நெனருஞ்சினானு"வுக்குப் பிறகு, "மத்யமாவதி" ஆலாபனை
            சரோஜாவுடையது.

            தானத்தை இருவரும் மாறி, மாறி மிக அழகாகப் பாடினார்கள்; ஆதி தாளத்தில் கால் இடத்தில்
            "தசரத சுத
            ராமசந்திர..." என்ற பல்லவி.

            தொடர்ந்தது
            ராகமாலிகா கல்பனா ஸ்வரங்கள்;
            • பிலஹரி
            • வராளி
            • காபி
            • பெஹாக்
            என்று சுவையாய் அமைந்தது.

            பல்லடம்
            ரவியின் மிருதங்கமும், ஆதம்பாக்கம் சுவாமிநாதனின் கடமும் பாவமான சங்கீதத்துக்கு
            மிகப் பொருத்தம்; தனியில் அவர்களுடைய வித்வத் பளிச்சிட்டது.

            • கோவிந்த விட்டலதாசரின் "பந்தே பந்தே"
            • நாராயண தீர்த்தரின் "நந்த நந்தன கோபாலா"
            என்ற ராகமாலிகா; இரண்டும் குரு கோவிந்த ராவின் வர்ண மெட்டு.

            கச்சிதமானதொரு கச்சேரி.

            தரம் நிரந்தரம்! அதில் என்ன சந்தேகம்?

            Kannan Natarajan

            unread,
            Dec 26, 2009, 8:22:42 PM12/26/09
            to Min Thamizh
            அசுர சாதகி...

            கடந்த சனிக்கிழமை, அதாவது 19ஆம் தேதி (12/09) "நாத இன்ப"த்தின் சார்பில் "ராகசுதா" அரங்கத்தில்
            டி.கே.
            ராமச்சந்திரனின் இசை நிகழ்ச்சி.

            இந்த டி.கே.
            ராமச்சந்திரன் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி.

            குடிசை மாற்று வாரியத்தின் மேலாண் இயக்குநர்.

            http://www.dinamani.com/Images/article/2009/12/27/tamil3.jpg

            டி.கே. கோவிந்த ராவின் சீடர்.

            "எவரிபோத" என்கிற "ஆபோகி" வர்ணத்துடன் தொடங்கிய நிகழ்ச்சி, ஊத்துக்காடு வெங்கட சுப்பையரின்
            "ப்ரணவாகாரம்" என்கிற ஆபேரி
            ராகக் கிருதியுடன் விறுவிறுப்பாக நகர்ந்தது.

            அடுத்ததாக, "தோடி"
            ராகத்தில் பிரமாதமாக ஒரு ஆலாபனை.

            "மீன லோசனி" என்கிற சாகித்யத்தை எடுத்துக் கொண்டு "மாணிக்க வீணாதரி" என்ற இடத்தில்
            நிரவல், கல்பனா ஸ்வரம்.

            அட, அசத்தலாக இருக்கிறதே என்று நினைப்பதற்குள் அடுத்த அசத்தல் "யதுகுல காம்போதி"யில்
            "ஹெச்சரிக்க கா ராரா".

            இதற்கும் விஸ்தாரமாக
            ராகம் பாடி நிரவல், ஸ்வரம்.

            • வாசஸ்பதி
            • சாவேரி
            • சாருகேசி
            என்று தொடர்ந்து விஸ்தாரமாக ஆலாபனையுடன், நிரவல், ஸ்வரம் பாடி ராமச்சந்திரன்
            நிகழ்ச்சியைத் தொடர்ந்தபோது, பிரமிப்பாக இருந்தது.

            சமீப காலங்களில் இப்படி
            ராகங்களை 20 முதல் 30 நிமிடங்கள் ஆலாபனை செய்யும்
            திறமையும், குரல் வளமும், சக்தியும் எந்தவொரு முழுநேர வித்வான்களிடம்கூடக்
            காணமுடியாத நிலையில், இந்த அரசு உயர் அதிகாரியால் எப்படி முடிகிறது என்று
            ஆச்சரியமாக இருந்தது.

            ராமச்சந்திரனின் சங்கீகதத்தில் கட்டுக்குலையாத "முசிறி" பாணி அப்பழுக்கில்லாமல் இருக்கிறது.

            தினமும் குறைந்தது 2 மணி நேரமாவது மனிதர் சாதகம் செய்பவராக இருக்க வேண்டும்
            என்பது உறுதி.

            மூன்று மணி நேரக் கச்சேரி. நேரம் போனதே தெரியவில்லை.

            விறுவிறுப்பு என்றால் அப்படி ஒரு விறுவிறுப்பு.

            ஒரு இடத்தில் கூடத் தொய்வு என்பதே இல்லை.

            பக்கவாத்தியம் வாசித்த
            • பி. அனந்தகிருஷ்ணன் (வயலின்)
            • அர்ஜுன் கணேஷ் (மிருதங்கம்)
            • வெங்கடசுப்பிரமணியம் (கடம்)
            ஆகிய மூவருமே கச்சேரியின் விறுவிறுப்புக்குத் துணை நின்றனர் என்பதும் மறுக்க முடியாத உண்மை.

            டி.கே.
            ராமச்சந்திரன் அரசு அதிகாரியாக இல்லாமல் முழுநேர வித்வானாக இருந்தால், இன்றைய முன்னணி
            சங்கீத விற்பன்னர்களில் ஒருவர்!

            Kannan Natarajan

            unread,
            Dec 26, 2009, 8:30:24 PM12/26/09
            to Min Thamizh
            சரியா.. தவறா..?

            "சம்பிரதாயா" என்பது சாஸ்த்ரிய சங்கீதத்தை பாதுகாக்கும் ஒரு அமைப்பு.

            இவர்கள் வெள்ளியன்று (25/12/09) "சங்கீதக் கலைஞர்கள், இசை விமர்சகர்கள்" என்ற
            ஒரு அருமையான நிகழ்ச்சியை வழங்கினார்கள்.

            கலைஞர்கள் சார்பில்,
            • விஜய் சிவா
            • வீணை ஈ. காயத்திரி
            • மிருதங்க வித்வான் கே.வி. பிரசாத்
            ஆகிய மூவரும் அழைக்கப்பட்டிருந்தனர்.

            இசை விமர்சகர்கள் சார்பில்,
            • கெரீ ராமநாராயணன்
            • கல்கி ஆசிரியர் சீதா ரவி மற்றும்
            • வீயெஸ்வீ
            ஆகியோர் பங்கு பெற்றனர்.

            ஒருங்கிணைப்பாளராக சம்பிரதாயாவின் வாழ்நாள் அங்கத்தினரான தியாகராஜன் நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தார்.

            http://www.dinamani.com/Images/article/2009/12/27/tamil5.jpg

            இனி யார் என்ன கூறினார்கள் என்பது;

            விஜய் சிவா - "விமர்சகர்களுக்கு சுதந்திரம் கொடுக்க வேண்டும்; வித்வான்கள் அவர்களிடமிருந்து விலகியே
            இருக்க வேண்டும்; கலையையும், கலைஞர்களையும் வெளி உலகத்துக்கு எடுத்துச் செல்பவர்கள் அவர்களே.

            அதேசமயம் நல்ல விஷயங்களை அவர்கள் காதுக்கு எட்ட வைக்க வேண்டும்.

            உதாரணமாக, சங்கீத வித்வத் சபை, தம்பூரா இல்லாமல் பாடக்கூடாது என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

            இது மிக நல்ல விஷயம்; ஆனால் இது எவ்வளவு பேருக்குத் தெரியும்?

            கல்கி ஆசிரியர் சீதா
            ரவி - "பத்திரிகைக் கொள்கைகளை சில சமயம் வெளிப்படையாகச்
            சொல்லக்கூடாது; எவ்வளவு பத்திரிகை ஆசிரியர்களுக்கு சங்கீதத்திலும், நாட்டியத்திலும்
            பரிச்சியம் இருக்கும்".

            கெ
            ரி நாராயணன் - "விமர்சனம் எழுதுவது கலைஞர்களையும், ரசிகர்களையும் சரியாகச்
            சென்று அடைவதில்லை. அதனால் விமர்சனம் எழுத விரும்பவில்லை; அதனால் கலை பற்றிய
            ஆராய்ச்சிக் கட்டுரைகளையே எழுத விரும்புகிறேன்".

            வீயெஸ்வீ - நூற்றுக்கணக்கானவர்கள் கேட்கும் ஒரு நிகழ்ச்சியை நாங்கள் பத்திரிகை மூலம்
            லட்சகணக்கானவர்களுக்கு கொண்டு செல்லுகிறோம்".

            வீணை காயத்திரி - "நான் முன்னேற விமர்சகர்கள் பெரும் பங்கு வகித்திருக்கிறார்கள்."

            கே.வி. பிரசாத் - "யார் மிருதங்கம்  வாசித்தாலும், எப்படி வாசித்தாலும், முதிர்ந்த வித்வானாக,
            அல்லது இளம் கலைஞராய் இருப்பினும், மிருதங்க வாசிப்பைப் பற்றி ஒரே மாதிரியான
            விமர்சனங்கள் தான் வருகின்றன".

            பேப்பரை பார்த்துக் கொண்டு, கம்ப்யூட்டரை எதிரில் வைத்துக் கொண்டு பாடுவது சரியா? தவறா?

            என்ற விவாதம் சூடு பிடித்தது.

            அது சரியில்லை என்று விஜய் சிவாவும்,

            அதில் என்ன தவறு? என்று ஓரிரு
            ரசிகர்களும் விவாதம் நடத்தினர்.

            Kannan Natarajan

            unread,
            Dec 26, 2009, 8:35:48 PM12/26/09
            to Min Thamizh
            முன்னோடிகள்:- கோனேரிராஜபுரம் வைத்யநாத பாகவதர்

            http://www.dinamani.com/Images/article/2009/12/27/tamil2.jpg

            கோனேரிராஜபுரம் வைத்யநாத பாகவதர் 1879ம் ஆண்டு மாயவரம் அருகில் உள்ள
            மரத்துறை கிராமத்தில் பிறந்தார்.

            தந்தை நாராயணசுவாமி முறையாக சங்கீதம் பயிலாதவர் என்றாலும் பக்திப் பாடல்களைப்
            பாடுவதில் வல்லவர்.

            வைத்யநாதருக்கு 12 வயதானபோது பந்தநல்லூர் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் சங்கீதம்
            பயில அழைத்துச் சென்றார் அவருடைய தந்தையார்.

            அப்போது குடும்பமே கோனேரிராஜபுரத்துக்குக் குடிபெயர்ந்தது.

            அங்கு நாகசுர மேதை வைத்யலிங்கம் பிள்ளையிடம் இசை பயின்றார்.

            இவருடைய வித்வத்தைப் பார்த்து வியந்த மஞ்சக்குடி தேவராஜ ஐயங்கார், இவரை
            புதுக்கோட்டை மான்புண்டியா பிள்ளையிடம் அழைத்துச் சென்றார்.

            அங்கு குருகுலவாசம் செய்தபோது புதுக்கோட்டை தட்சிணாமூர்த்திப் பிள்ளையிடம்
            லய நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டார்.

            பிறகு மான்புண்டியா பிள்ளையிடம் நேரடி சிட்சை மூலம்
            லய இலக்கணங்களைக் கற்றறிந்தார்.

            கோனேரிராஜபுரம் வைத்யநாதரின் சில கச்சேரிகளுக்கு மான்புண்டியா பிள்ளை பக்கவாத்தியம்
            வாசித்திருக்கிறார்.

            ஆரம்பகாலத்தில் வைத்யநாதரின் இசை,
            லயத்தைச் சார்ந்து இருந்தது.

            ஒருமுறை திருக்கோடிக்காவல் கிருஷ்ணய்யர் இவருக்கு திருவாவடுதுறை ஆதினத்தில்
            நடந்த கச்சேரிக்கு உடன் வாசித்தார்.

            கச்சேரி முடிந்ததும் ஆதினத்தின் தலைவர் கிருஷ்ணய்யரிடம் கச்சேரி எப்படி நடந்தது என்று கேட்க
            அவர் முட்கள் நிறைய இருந்தன என்றாராம்.

            ஆதினத் தலைவரும் அதை ஆமோதிக்க, இந்த விஷயம் வைத்யநாதரின் காதுக்கு எட்ட அவர்
            மிகவும் வருத்தப்பட்டாராம்.

            தன்னுடைய குறையை உணர்ந்த வைத்யநாத பாகவதர், சில மணி நேரங்களுக்குள் தன்னுடைய
            போக்கை மாற்றிக்கொண்டாராம்.

            அடுத்த கச்சேரி பாடியவுடன், கச்சேரி எப்படி
            ருந்தது என்று கிருஷ்ணய்யரிடம் கேட்க,
            அவர் இன்றைக்கு நீ பாடியது தான் உண்மையான சங்கீதம்; கச்சேரியென்றால் இப்படித்தான்
            இருக்க வேண்டும் என்று கூறினாராம்.

            வைத்யநாத பாகவதர் சிறிது கட்டையான சாரீரம் கொண்டவராம்;

            ஆனால் சிறிது நேரத்துக்குள் கச்சேரி களைகட்டிவிடுமாம்;

            வீட்டிலேயே ஒரு மணி நேரம் பாடிவிட்டுத்தான் கச்சேரிக்குச் செல்வாராம்.

            ராகம், தானம், பல்லவி பாடுவதில் முன்னோடியாகத் திகழ்ந்தவர்.

            கேட்டால் மரத்துறை வைத்தியின் கச்சேரியைக் கேட்க வேண்டும் என்று
            ரசிகர்களிடையே
            பேச்சு நிலவியதுண்டு.

            பக்திப்பாடல்கள் மட்டுமே பாடிவந்த பாபநாசம் சிவன், இவருடைய கச்சேரியைக் கேட்ட பின்பே
            கர்நாடக சங்கீதத்தில் நாட்டம் கொண்டு பாடல்கள் புனைய ஆரம்பித்தாராம்.

            1921ம் ஆண்டு இசை உலகுக்குப் பேரிழப்பை ஏற்படுத்திவிட்டு இயற்கை எய்தினார் வைத்யநாத
            பாகவதர்.


            சுவாதி

            Kannan Natarajan

            unread,
            Jan 16, 2010, 5:23:00 AM1/16/10
            to Min Thamizh
            தமிழ் வெறும் துக்​க​டாவா...?
            கடந்த ஒரு மாத​மாக நடந்​து​ வ​ரும் சென்னை இசை விழா முடி​வ​டை​யும் நிலையை எட்​டி​விட்​டது.​

            முக்​கி​ய​மான பழம்​பெ​ரும் சபாக்​க​ளின் நிகழ்​வு​கள் முடிந்​து​விட்​டன.​

            சென்னை சங்​க​மத்​து​டன் இந்த ஆண்​டுக்​கான இசை​விழா நிறை​வு​பெ​றும்.​

            உ​ல​கின் பல்​வேறு நாடு​க​ளி​லும் இது​போன்ற இசை,​​ நாட்​டி​யம் தொடர்​பான கலை விழாக்​கள்
            டை​பெ​று​கின்​றன.​

            ஆகஸ்ட் மாதம் எடின்​பரோ சர்​வ​தே​சக் கலை​விழா மிக​வும் விம​ரி​சை​யா​கக் கொண்​டா​டப்​ப​டும் விழா.​

            1947ம் ஆண்டு தொடங்​கப்​பட்ட இந்த இசை,​​ நாட்​டிய விழா​வில் பங்​கு​பெ​ற​வும்,​​ கலந்​து​கொள்​ள​வும்
            உல​கெங்​கி​லும் இருந்து கலை​ஞர்​க​ளும்
            ரசி​கர்​க​ளும் குவி​கி​றார்​கள்.​

            ஆனால்,​​ இந்த இசை விழா நடப்​பது ஆறே ஆறு அரங்​கங்​க​ளில் மட்​டுமே.​

            • லண்​டன் நாட்​டிய விழா
            • நியூ​யார்க் நாட்​டிய விழா
            • ஐரோப்​பிய நாட்​டிய விழா
            என்று எத்​தனை எத்​த​னையோ இசை,​​ நாட்​டிய விழாக்​கள்.​

            ஆனால்,​​ அவை அனைத்​துமே வியா​பா​ரக் கண்​ணோட்​டத்​து​டன்,​​ பல தொழில் நிறு​வ​னங்​க​ளும்,​​
            அந்​தந்த நகர அமைப்​பு​க​ளும் சுற்​று​லாப் பய​ணி​க​ளைக் கவர்ந்து தங்​க​ளது பொரு​ளா​தா​ரத்தை
            மேம்​ப​டுத்த இது​போன்ற கலை நிகழ்ச்​சி​களை விளம்​ப​ரப்​ப​டுத்​திக் குளிர்​காய முற்​ப​டு​கின்​ற​னவே தவிர,​​
            கலைக்​காக நடத்​தப்​ப​டும் விழாக்​களா என்​றால் கிடை​யாது.​

            ஆனால் நமது சென்​னை​யில் ஆண்​டு​தோ​றும் நடை​பெ​றும் இசை​விழா அப்​ப​டிப்​பட்​ட​தல்ல.​

            இது வியா​பா​ரத்​துக்​காக நடத்​தப்​ப​டு​வது அல்ல.​

            சுற்​று​லாப் பய​ணி​க​ளைக் கவர வேண்​டும் என்​ப​தற்​காக ஏற்​பாடு செய்​யப்​ப​டு​வ​தும் அல்ல.​

            கலைக்​கா​கக் கலா​ர​சி​கர்​க​ளால் நடத்​தப்​ப​டும் நமது சென்னை இசை விழா​வின் பிர​மாண்​டம்
            உல​கில் வேறு எந்​தப் பகு​தி​யில் நடை​பெ​றும் விழாக்​க​ளுக்​கும் இல்லை என்​ப​தால்​தான்,​​ சென்னை
            மாந​க​ரம் இந்​தி​யா​வின் கலா​சார தலை​ந​க​ரம் என்று போற்​றப்​ப​டு​கி​றது.​

            73 சபாக்​கள் ஏறத்​தாழ 2,850 இசை,​​ நாட்​டிய நிகழ்ச்​சி​களை நடத்தி நாலா​யி​ரத்​துக்​கும்
            மேற்​பட்ட கலை​ஞர்​க​ளின் திற​மையை
            ரசி​கர்​க​ளுக்கு விருந்து படைக்​கும் இந்த அதி​ச​யத்​தைப்
            பார்த்து வட​நாட்​ட​வ​ரும்,​​ வெளி​நாட்​ட​வ​ரும் வாய் பிளந்து ஆச்​ச​ரி​யப்​ப​டு​கி​றார்​கள்.​

            ஆண்​டு​தோ​றும் சில நூறு புதிய இளைய தலை​மு​றைக் கலை​ஞர்​கள் அறி​மு​க​மா​கி​றார்​கள்.​

            சொல்​லப்​போ​னால் இந்த இளைய தலை​மு​றைக் கலை​ஞர்​க​ளில் பலர் பணத்​துக்​காக
            இசை​யைத் தேர்ந்​தெ​டுக்​கா​மல்,​​ இசையை இசைக்​காக நேசிப்​ப​வர்​க​ளா​க​வும் இருக்​கி​றார்​கள்.​

            கர்​நா​டக இசை என்​பதை நாம் தென்​னிந்​திய இசை அல்​லது திரா​விட இசை என்று சொல்​வ​து​
            தான் சரி.​

            எப்​ப​டித் தமி​ழர்,​​ கேர​ளத்​த​வர்,​​ கன்​ன​டர்,​​ ஆந்​தி​ரர் ஆகிய அனை​வ​ரை​யும் வட​வர்​கள்
            "மத​ரா​சி​கள்" என்று குறிப்​பி​டு​கி​றார்​களோ அதைப்​போல,​​ நமது தஞ்​சைத் தர​ணி​யில் தோன்றி
            தென்​ன​க​மெங்​கும் பர​விய தென்​னக இசை​யைக் கர்​நா​டக இசை என்று குறிப்​பி​டு​கி​றார்​கள்,​​

            ஆற்​காடு நவா​பு​கள் அப்​போது கர்​நா​டிக் நவாப் என்​றும் அழைக்​கப்​பட்​ட​னர்.​

            இவர்​கள் கிருஷ்ணா நதிக்​கும், கொள்​ளி​டத்​துக்​கும் இடை​யி​லான பகு​தியை 1690 முதல் 1801 வரை
            ஆண்டு வந்​த​னர்.​ மைசூர் உள்​பட உள்ள பகு​தியை ஆண்ட கர்​நா​டிக் நவா​பு​க​ளின் நாட்டு இசை​யைக்
            கர்​நா​டக இசை என்று இந்​துஸ்​தா​னிய இசை மர​பி​னர் அழைக்க முற்​பட்​ட​னர்.​

            இது​தான் வர​லாற்று உண்மை.​

            சப்த ஸ்வ​ரங்​க​ளின் அடிப்​ப​டை​யில் அமைந்த இசை எப்​ப​டித் தமி​ழி​சை​யா​கும் என்று கேட்​ப​வர்​கள்
            மறந்​து​வி​டும் ஒன்று,​​ இந்த சப்த ஸ்வ​ரங்​கள் நமது பண்​க​ளின் பரி​ணா​மம் ​தான் என்​பதை.​

            1. இசை​யும்
            2. முழ​வும்
            3. தாள​மும்
            4. கூத்​தும்
            5. அபி​ந​ய​மும்
            ஆய இவை ஐந்​தும் பஞ்ச மரபு என்​பார்​கள்.​

            "பஞ்ச மரபு" என்​கிற சங்க கால நூலில் இசை மர​பின் வங்​கிய மரபு என்​கிற உட்​பி​ரி​வில் பாடல்
            28ல் "சரி கம பத நீ" எனும் ​ சுத்த எழுத்​தால்,

            "வரி​ப​ரந்த கண்​ம​ட​வாய் வைக்​கத் தெரி​வ​ரிய ஏழி​சை​யும் தோன்​றும்.​ இத​னுள்ளே பண் பிறக்​கும்.​
            சூழ் முத​லாம் சுத்​தத் துளை"

            என்று வங்​கி​யம் ​(புல்​லாங்​கு​ழல்)​ வர்​ணிக்​கப்​பட்​டி​ருக்​கி​றது.​

            நமக்கே உரித்​தான இந்த இசையை நாம் தக்​க​வைத்​துக் கொள்ள வேண்​டு​மா​னால் ​ முத​லில்
            அந்த இசை பாம​ர​னுக்​கும் புரி​யும் இசை​யாக இருக்க வேண்​டும்.​

            அதற்கு அதி​க​மா​கத் தமிழ் சாகித்​யங்​கள் ​(பாடல்​கள்)​ கையா​ளப்​பட வேண்​டும்.​

            பெய​ருக்​குத் துக்​க​டா​வாக ஒரு திருப்​பு​கழோ,​​ திருப்​பா​வையோ பாடு​வது என்​பது இசையை மட்​டு​மல்ல,​​
            தமி​ழை​யும் கேவ​லப்​ப​டுத்​து​வ​தாக இருக்​கி​றது.​

            இ​ளைய தலை​மு​றைக் கலை​ஞர்​கள் பலர் தமிழ் சாகித்​யங்​களை மட்​டு​மல்ல,​​ தெலுங்கு
            சாகித்​யங்​க​ளை​யும் ஆங்​கி​லத்​தில் எழுதி வைத்​துப் பாடும் அவ​ல​நிலை ஏற்​பட்​டி​ருப்​பது எத்​தனை
            பேருக்​குத் தெரி​யும்?​

            தமி​ழில் பாடி​னால் மட்​டும் போதாது.​

            தமிழ் படித்​துத் தமி​ழைச் சரி​யாக உச்​ச​ரித்​தும் பாட வேண்​டும்.​

            க​லை​ஞர்​களை ஒப்​பந்​தம் செய்​யும்​போது,​​ நீங்​கள் தமி​ழில் பாடு​வ​தாக இருந்​தால்​தான்
            வாய்ப்பு என்று ஏன் இந்த சபாக்​கள் நிபந்​தனை விதிப்​ப​தில்லை என்​கிற நியா​ய​மான கேள்​வியை
            எழுப்பி இருக்​கி​றது "விடு​தலை" நாளி​தழ்.​

            நாமும் அந்​தக் கருத்​தையே பிர​திப​லிக்​கி​றோம்.​

            இசை பாம​ரர்​க​ளைப் போய்ச் சேர வேண்​டும்.​

            இந்த நோக்​கம் சென்னை சங்​க​மத்​தால் ஓர​ள​வுக்கு செயல்​வ​டி​வம் கொள்​கி​றது என்​ப​தை​யும்
            இங்கே பதிவு செய்​தாக வேண்​டும்.​

            பூங்​காக்​க​ளில் பாடும் பல கலை​ஞர்​கள் பாம​ரர்​கள்
            ரசிக்க வேண்​டும் என்​ப​தற்​கா​கத் தமி​ழில் பாடு​கி​றார்​கள்.​

            இவர்​கள் சபாக்​க​ளில் பாடும்​போது தமி​ழில் பாடு​வ​தில்​லையே ஏன்?​

            அங்கே கூடும்
            ரசி​கர்​கள் தமிழ் பாடக்​கூ​டாது என்று சொல்​வார்​களா என்ன?​

            இல்லை அவர்​கள்,​ வெளி​நாட்​ட​வர்​க​ளும் வெளி​மா​நி​லத்​தா​ருமா,​​தமி​ழர்​கள்​தானே?​

            ப​ணக்​கார நிலச்​சு​வான்​தார்​கள் மற்​றும் ஜமீன்​தார்​க​ளின் ஏக​போக உரி​மை​யாக இருந்த இசை
            இன்று அனை​வ​ருக்​கும் பொது​வாகி இருக்​கி​றது.​

            இனி அதைப் பாம​ர​னும்
            ரசிக்​கும் நிலை ஏற்​பட வேண்​டும்.​

            அதற்​குப் பள்​ளி​க​ளில் ஐந்​தாம் வகுப்பு வரை இசை கட்​டா​ய​மா​கக் கற்​றுத்​த​ரப்​பட வேண்​டும்.​

            நமது சபாக்​க​ளும்,​​ இசை​வா​ணர்​க​ளும் தமி​ழி​சைக்கு முன்​னு​ரிமை தர​வேண்​டும்.​

            தமி​ழ​கத்​தில் தமி​ழில் பாடுங்​கள் என்று வேண்​டு​கோள் விடுக்​கும் கேவ​லம் இனி​யும் தொட​ரக்​கூ​டாது!

            karthi

            unread,
            Jan 17, 2010, 6:02:35 AM1/17/10
            to mint...@googlegroups.com
            இந்தக் கட்டுரை மிகைப்படுத்தப்பட்டது என்பதே என் எண்ணம்.
            நானும் கலாரசிகந்தான். So my take!
             
            2009 டிசம்பர் சீசனில் தமிழ்க் கிருதியை centrepieceஆக வைத்துப் பாடாத
            பாடகரே இல்லை என்று சொல்லலாம். ராகம் தானம் பல்லவியில் கூட
            தமிழ்ப் பல்லவிகள் அதிகம். பாம்பே ஜெயஸ்ரீ "ஐயனும் நோக்கினான்;
            அவளும் நோக்கினாள்; கண்ணினைக் கண் ஒன்றையொன்று உண்ணவும்"
            என்று பல்லவி பாடியபோது சங்கீத வித்வத் சபையில் (இதுதான் மையம்)
            கைதட்டல் அதிர்ந்தது - சங்கீதத்துக்கு அல்ல, தமிழுக்காக.
             
            சங்கீத சீசனில் தமிழைத் துக்கடாவா ஆக்குகிறார்கள் என்பது நைந்து போன
            cliche. இதை முதன்மையாக வைத்து எழுதுபவர்கள் வந்து உட்கார்ந்து
            கேட்கிறார்களா என்பதே தெரியவில்லை.
             
            நீங்கள் பாரக் கணக்கு போட்டு பாடகர் தமிழ் இத்தனைக் கிலோவும் தெலுங்கு
            இத்தனைக் கிலோவும் பாடினார் என்று பார்த்தால் தெலுங்கு தூக்கலாக
            இருக்கும். அதற்கு என்ன செய்வது? தியாகராஜர்தான் கர்நாடக சங்கீதத்தின்
            முதுகெலும்பு. அவருக்கு உரிய மரியாதையைக் கொடுக்கத்தானே வேண்டும்!
             
            கர்நாடக சங்கீதம்தான் முற்றாகத் திராவிடத் தன்மை உடையது. திராவிட
            மாநிலங்களின் அனைத்து மொழிகளும் பாடப்படுகின்றன. அனைத்து திராவிடப்
            பிரதேச பாடகர்களும் பாடுகிறார்கள். ஒருவரை ஒருவர் பரஸ்பரம் அறிந்து
            வைத்திருக்கிறார்கள். மிகுந்த மரியாதையுடன் பழகுகிறார்கள். நான் தமிழன்,
            நீ கன்னடன் போன்ற துவேஷங்கள் எங்கும் இல்லை.
             
            மியூசிக் அக்காதமியின் சதசுக்குப் போயிருந்தேன். வலையப்பட்டி சுப்பிரமணியத்துக்கு
            சங்கீத கலாநிதி விருது கொடுத்தார்கள். விழா சிதம்பரம் தலைமையில் நடந்தது.
            வழக்கம் போல விழா மொழி முழுதும் ஆங்கிலம்தான். அறிவிப்பாளர்,
            அக்காதமியின் தலைவர், விருது  பெறுபவர்களை அறிமுகப் படுத்துவோர் ஆங்கிலத்திலேயே
            மிகத் திறமையாகவும் சுருக்கமாகவும் கண்ணியமாகவும் மொழிந்தார்கள்.
            The Honourable Minister Chidambaram" என்று அறிமுகப் படுத்தியவுடன் வந்த அவர்,
            "அன்புள்ள தலைவர் அவர்களே" என்று ஆரம்பித்து ஓர் இருபது நிமிடம் அழகான
            எளிய நளினமான தமிழில் பேசி அமர்ந்தார்.  சடங்குக்காகக் கூட ஆங்கிலத்தில் ஒரு
            வாக்கியமும் பேசவில்லை. அடுத்த நிகழ்ச்சியை அறிவிக்க
            எழுந்த பப்பு வேணுகோபால் ரெட்டி (மனிதருக்குத் தலைமுழுதும் சங்கீதம் பற்றிய
            அறிவு) "அமைச்சர் அவர்களுக்கு நமது நன்றி" என்று முதன் முறை தமிழில்
            பேசினார். (வலையப்பட்டியாரின் நன்றி உரையும் தமிழில் அமைந்திருந்தாலும்
            அது திட்டமிடப்படாத வழவழாவாகப் போயிற்று.)
             
            என்னைக் கேட்டீர்களானால் சங்கீத சபாக்களில் யாரும் தமிழ்த் துவேஷிகள் அல்லர்.
            ஆனால் அவர்கள் lingua franca ஆங்கிலமாக அமைந்து விட்டது. ஆனால் அவர்களிடம்
            தமிழில் பேசினால் சந்தோஷமாகத் தமிழிலேயே பேசுகிறார்கள்.
             
            பார்க்கப் போனால் துவேஷம் பார்ப்பவர் கண்ணில்தான் இருக்கிறது.
             
            ரெ.கா.
             
             
             
             

            vishalam raman

            unread,
            Jan 17, 2010, 12:30:33 PM1/17/10
            to mint...@googlegroups.com
            இசைக்கு மொழியில்லை எந்த மொழியில் பாடினாலும் நெஞ்சைத்தொட்டுவிடும்
            மொழிகள் புரிந்திருந்தால் இன்னும் ஆழமாக நெஞ்சில் ஊடுருவி நிற்கும்

            karthi

            unread,
            Jan 17, 2010, 8:00:32 PM1/17/10
            to mint...@googlegroups.com
            உண்மைதான் விசாலம் அம்மா! ஆனால் தமிழைப் புறம் தள்ளுவதற்காகவே
            இந்த சமாதானத்தைச் சொன்ன காலம் ஒன்றிருந்தது. ஆனால் இப்போது ஒரு
            சமப்பாடு வந்து விட்டது.

            திருத்தம்: "அண்ணலும் நோக்கினான்..." என் நினைவுப் பிழை; ஜெயஸ்ரீயின்
            பிழையன்று.
            மன்னிக்கவும்.

            ரெ.கா.


            --------------------------------------------------------------------------------

            Hari Krishnan

            unread,
            Jan 17, 2010, 10:29:25 PM1/17/10
            to mint...@googlegroups.com


            2010/1/17 vishalam raman <rvis...@gmail.com>

            இசைக்கு மொழியில்லை எந்த மொழியில் பாடினாலும் நெஞ்சைத்தொட்டுவிடும்
            மொழிகள் புரிந்திருந்தால் இன்னும் ஆழமாக நெஞ்சில் ஊடுருவி நிற்கும்


            இசைக்கு மொழியில்லை.  ஆமாம்.  ரசிகன் சொல்லவேண்டிய வார்த்தை அது.  பாடகனுக்கு மொழி உண்டு.  ஒவ்வொரு வார்த்தையையும் புரிந்துகொண்டு, அர்த்த ருசியை மனத்தில் வாங்கிக்கொண்டு ரசபாவத்தைக் குரல்வழியே கொடுக்க முடியுமானால், கேட்பவனுக்கு இசை போதும், மொழி தேவையில்லை.  

            பாடகனுக்கு அப்படியில்லை.  இப்படி நான் பலகாலமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.  நித்யஸ்ரீ (அமீரக வானொலிக்காக ஆசீப் மீரானை நான் கேட்கச் சொல்லி எழுதியிருந்த கேள்விக்கு விடையிறுக்கையில்) நான் மேலே சொல்லியிருப்பதை அப்படியே சொன்னார்கள்.  அண்மையில் எஸ் பி பாலசுப்பிரமணியம், ஏதோ ஒரு சேனலின் இசைப்போட்டி நிகழ்ச்சியில் தமிழில் பாடிய ஒரு தெலுங்கருக்கும் இதையே சொன்னார்.  ஆகவே, it is only partially true to say that music is beyond the barriers of language.  
             
            On 17/01/2010, karthi <karth...@gmail.com> wrote:
            >
            > இந்தக் கட்டுரை மிகைப்படுத்தப்பட்டது என்பதே என் எண்ணம்.
            > நானும் கலாரசிகந்தான். So my take!
            >
            > 2009 டிசம்பர் சீசனில் தமிழ்க் கிருதியை centrepieceஆக வைத்துப் பாடாத
            > பாடகரே இல்லை என்று சொல்லலாம். ராகம் தானம் பல்லவியில் கூட
            > தமிழ்ப் பல்லவிகள் அதிகம். பாம்பே ஜெயஸ்ரீ "ஐயனும் நோக்கினான்;
            > அவளும் நோக்கினாள்; கண்ணினைக் கண் ஒன்றையொன்று உண்ணவும்"
            >

            அப்படியில்லை ரெகா. ஆங்கிலத்தில் எழுதியிருப்பதிலிருந்து அப்படியே (இந்தப் பகுதியை மட்டும்) தருகிறேன்.  (சீதை-308 கட்டுரைகள் விரைவில் தமிழ்மரபு விக்கியில் ஏறப்போகின்றன.)

            aNNalum nOkkinaan avaLum nOkkinaaL

            It is a strange meeting.  It is an enthralling story of love that Kamban builds.  They see each other by sheer accident.  They forget their surroundings.  Walking on the line of vision of each other, they move into the hearts of each other.  A dream of a meeting and a dream of a verse.  The first meeting of the divine couple ever since they left their abode in the Ocean of Milk.  Kamban melts the hearts of the readers, taking everyone with him to the heights of delight in this scene, a real grand creation of his, a deviation from the original. 

             After the deliverance of Ahalya from the curse of Gautama, her husband, the boys Rama and Lakshmana are taken by their preceptor Viswamitra, to Mithila.  Viswamitra had already decided about taking Rama to the court of Janaka and to ask him to string the bow.  But he had not disclosed his decision to Rama at this stage.  He had simply informed him that they are going to Mithila to witness the grand Yaga being performed by Janaka and nothing more. 

             The sage and the boys walk into the long and wide roads of Mithila, with everyone turning their heads in wonder at the handsomeness of the boys, and walk close to the moat that surrounds the fortress.  Vaidehi is at that time playing on the terrace of her gynaecium with her friends.  Running happily like a swan to the parapet wall, she chanced to look at the street.  ‘A feast to the eyes of the beholder,’ says Kamban.  ‘vengkaLi vizhikku oru vizhavum aayavar.’  A delight to the spectator.  ‘mangayarkku iniyadhu oru marundhum aayavaL.’  She is the elixir, the manna among all maidens.  Such delight she is, ‘engaL naayagarkku yaavadhu aam kolO?’ what would she be to our Lord!  Our Lord who cherishes Her on His chest!

             

            Her eyes fell on the ‘koNdal,’ the cloudlet that was walking down the streets of Mithila.  The excited, happy, high-pitched squeals of the girls naturally made Rama to look up.  Their eyes locked into each other.  ‘eNNa aru nalaththinaaL, inayaL nindruzhi,’ When Sita, whose beauty cannot be comprehended, stood there, leaning on the parapet wall, ‘kaNodu kaN iNai kavvi,’ their pairs of eyes locked into each other, ‘ondrai ondru uNNavum,’ and seemed to swallow each other, ‘nilai peraadhu,’ their minds destabilised as they were (moved towards each other) ‘uNarvum ondrida,’ were in the same state (of love) ‘aNNalum nOkkinaan,’ Rama kept looking on and on.  ‘avaLum nOkkinaaL.’  Sita could not take her eyes away from him. 

             ‘parugiya nOkku enum paasathaal piNiththu,’ Their line of vision metamorphosed into a rope and ‘oruvari oruvar tham uLLam eerththalaal,’ since their mind pulled the other with such force (through the towline of their vision), ‘vari silai aNNalum,’ the Lord of the banded bow ‘vaat kaN nangayum,’ and the maiden whose eyes were as sharp as a sword, ‘iruvarum maarip pukku idhayam eydhinaar’ walked on the rope (of their line of vision), and entered into the heart of the other. 

             A tightrope walking indeed!  Rama walked on the ‘rope’ reached the eye of the maiden and through the eye, walked into the grand chamber of her heart.  Sita walked to his heart in a similar manner.  Scintillating.  The kind of vision that the Poet had and the manner in which he has treasured it in words for us to see, is simply marvellous.  There is no other word to describe the joy that wells up the heart of the reader. 

             And why would they stand like that for such a long time?  Listen to the Poet......(would be continued later in Marabu Wiki)


            --
            அன்புடன்,
            ஹரிகி.

            devoo

            unread,
            Jan 17, 2010, 11:29:08 PM1/17/10
            to மின்தமிழ்
            Jan 17, 9:29 pm, Hari Krishnan
            //ஆங்கிலத்தில் எழுதியிருப்பதிலிருந்து அப்படியே (இந்தப் பகுதியை

            மட்டும்) தருகிறேன். (சீதை-308 கட்டுரைகள் விரைவில் தமிழ்மரபு
            விக்கியில் ஏறப்போகின்றன.)//

            முதல் பத்து கட்டுரைகள் ஏறி விட்டன, அண்ணா.
            அண்ணல் நோக்கியது ஐந்தாம் தலைப்பு


            தேவ்

            Geetha Sambasivam

            unread,
            Jan 17, 2010, 11:55:24 PM1/17/10
            to mint...@googlegroups.com
            செளம்யா தமிழ்ப்பாடல்களின் பண்கள், பாடும் காலங்கள், எந்த எந்த நேரத்தில் எந்தப் பண் என்பது பற்றி ஒரு விரிவான ஆய்வே செய்திருக்கிறார். சங்க காலம் தொட்டு, இந்த நூற்றாண்டு வரையிலான எல்லாத் தமிழ்ப்பாடல்களையும் இவ்வகையில் பாடியும் காட்டினார். இவை கர்நாடக சங்கீத ராகத்தோடு எவ்வகையில் ஒத்திருக்கிறது என்பதையும் சுட்டிக் காட்டினார். அருமையான நிகழ்ச்சி. சென்ற வருடம் வந்தது.

            2010/1/18 karthi <karth...@gmail.com>

            V, Dhivakar

            unread,
            Jan 18, 2010, 12:05:51 AM1/18/10
            to mint...@googlegroups.com
            ரெ.கா இம்முறை பல கச்சேரிகளுக்கு நேரில் ஆஜராகி ரசித்துவிட்டு, எழுதியுள்ளார். இந்த தமிழ் தெலுங்கு கன்னடம் பற்றிய அவர் பார்வையோடு ஒத்துப் போகலாம்தான்.
             
            ஆனால் நான் இங்கு சொல்ல விரும்புவது வேறு. தமிழில் பல பாடல்களை தமிழ் வித்வான்கள் பாடும் விதத்தைப் பற்றிக் குறை சொல்லவும் போவதில்லை. ஆனால் தெலுங்கு மொழியை சித்திரவதை செய்யும் மிகப் பெரிய (தமிழக) கர்நாடக வித்துவான்களை என்ன சொல்வது..  முன்பெல்லாம் ராகம், குரல், கீதம் பிடித்திருந்தால் லயித்துப் போய்விடுவேன்.. ஆனால் போகப்போக இவர்கள் தெலுங்குமொழியைப் பிரித்துப் பாடுவதாக நினைத்து அந்த இனிய பாஷையை வதைப்படுத்துவது என்னவென்றென்பது.
             
            போகட்டும்.. இதற்காகத்தான் இசைக்கு மொழி தேவை இல்லை என்கிறார்களோ..
             
            இவ்வண்
            இசை அறிவில்லாத
            தி

             
            Dhivakar
            http://www.vamsadhara.blogspot.com
            http://aduththaveedu.blogspot.com

            shylaja

            unread,
            Jan 18, 2010, 12:06:19 AM1/18/10
            to mint...@googlegroups.com

                  நால்வகை நிலங்களுக்குமான நான்குபெரும்பண்கள் உருவானது. பண்களே,காலப்போக்கில் ராகங்களாக வளர்ச்சியடைந்தன பண்ணென்பது   பாடலின் இசைவடிவம் அதை’மெட்டு’என்றும்கூறலாம்
             
            நான்குநிலத்திற்கும் உரிய பெரும்பண்ணை ’பாலை’ என்கிறோம்!
             
            ஒரு  பழையபண்தான் இன்று முக்கிய ராகமாகத் திகழ்கிறது
             
            .
            சிலப்பதிகாரத்தின் ஆய்ச்சியர்குரவை பாடலில் ’முல்லைத்தீம்பாணி ’என்று குறிப்பிடப்பட்டுள்ளது
             
            ச ரி க ப த இதன் சுரம்(ஸ்வரம்)
            இதுதான், இன்றையமோகன ராகம்.திரைப்படப்பாடல்களில்   அதிகம் பயன்படுத்தப்படும் ராகம்..ஆம்,  இதுவேமோகனம்! சுகமான ராகம் இது!

            2010/1/18 Geetha Sambasivam <geetha...@gmail.com>

            Innamburan Innamburan

            unread,
            Jan 18, 2010, 5:28:02 AM1/18/10
            to mint...@googlegroups.com
            As Shailaja put it, Silappadhikaaraam is the fountainhead. Dr.V.K.Narayana mEnon extols its virte.
            Innamburan


             
            2010/1/18 shylaja <shyl...@gmail.com>
            --
            "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
            To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
            For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



            --
            இன்னம்பூரான்
            It is loading more messages.
            0 new messages