பெண்களின் முலைக்கு வரியாம் (mulakkaram)!!!

180 views
Skip to first unread message

rajam

unread,
Jun 12, 2017, 12:43:46 AM6/12/17
to mintamil, Vallamai, தமிழ் மன்றம், செல்வன், Suba, Jothi Themozhi, coral shree, Anna Kannan
அடேங்கப்பா! என்னவொரு ‘தார்மிகம்!!!’

அன்புநண்பர்களே, வணக்கம். நலம்தானே. 

இந்தாலஜிக்குழுமத்தில் முனைவர் பழனியப்பன் கொடுத்த சுட்டி இது:


இந்தச் சுட்டிவழிச் சென்று அங்கேயுள்ள கட்டுரையைப் படிக்கவும். ஏற்கனவே நீங்கள் இதைப்பற்றிப் படித்திருக்கலாம். எனக்கு அண்மையில்தான் தெரியவந்தது.

பெண்களின் உள்ளம் குமுறும். நல்லவேளை நாங்களெல்லாம் தப்பித்துவந்திருக்கிறோம். 

நான் மிகவிரும்பிக் கேட்கும் இசையைப் பொழியும் அசுவதித்திருநாள் இராமவர்மாவின் முன்னோன் அரசர் சுவாதித்திருநாள் அந்தக்காலத்தில் மக்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த பல தண்டனைவிதிகளை நீக்கினாராம். [சுவாதித்திருநாள் அவர்களின் காதல்பாடல்கள் அருமையானவை!]

இருநூறு ஆண்டுகளாகத் திருவனந்தபுரம் நவராத்திரி மண்டபத்தில் நுழைந்து பாடவோ கருவிகளை இசைக்கவோ இசையை நுகரவோ பெண்களுக்கு உரிமையில்லாமல் இருந்ததாம். இளமையிலிருந்தே அதை எதிர்த்துப் போராடி 22-ஆண்டுகளுக்குப் பிறகு பெண்கள் அங்கே நுழைந்து கலைச்சுவை வழங்கும் உரிமையை இராமவர்மா பெற்றுத்தந்திருக்கிறார்! குரல்வளத்தால், இசைப்பயிற்சியால், மக்களை மகிழ்விக்கும் மிகவும் எளிய இனிய நகைச்சுவையாளர்! ஓவியக்கலைஞர் ராஜா ரவிவர்மாவின் வழித்தோன்றல்! அவரை நேரில் பார்த்துப் பேசி இசையை நுகரும் பூரிப்பு அண்மையில் எனக்குக் கிடைத்தது. இரு படங்கள் இணைத்திருக்கிறேன்.

இராமவர்மா அவர்களை வல்லமையாளராகத் தேர்ந்தெடுக்கச் செல்வனிடம் பரிந்துரைக்கிறேன். விவரங்கள் தேவையானால் எனக்கு எழுதவும், அனுப்புகிறேன்.

அன்புடன்,
ராஜம் 

[மற்றபடி … புதிய இருப்பிடத்தில் பலவகைச் சிக்கல்கள். பண்பாட்டு மெருகுபெறாத மக்கள் குடியிருப்புக்கு வந்துவிட்டதுபோல இருக்கிறது. தாடகையின் மறுபிறவி இளம்பெண் உருவத்தில் என் தலைமேல் நடக்கிறது. இன்னும் பல சிக்கல். கடந்த 3-மாதங்களாகத் தொல்லை தொடருகிறது. மீண்டும் வேறிடம் தேடவேண்டுமா என்ற மலைப்பு. உருப்படியாக ஒன்றும் செய்யமுடிவதில்லை. ரொம்பவும் சோர்ந்திருக்கிறேன். வயது ஏறுவதால் அசதி கூடுதல்.]

Malarvizhi Mangay

unread,
Jun 12, 2017, 10:39:22 AM6/12/17
to mint...@googlegroups.com

Rarely it will happen Amma.

On 12-Jun-2017 10:27 AM, "rajam" <ra...@earthlink.net> wrote:
Boxbe This message is eligible for Automatic Cleanup! (ra...@earthlink.net) Add cleanup rule | More info
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Suba

unread,
Jun 12, 2017, 4:21:08 PM6/12/17
to rajam, மின்தமிழ், Subashini Kanagasundaram
2017-06-12 6:43 GMT+02:00 rajam <ra...@earthlink.net>:
அடேங்கப்பா! என்னவொரு ‘தார்மிகம்!!!’

அன்புநண்பர்களே, வணக்கம். நலம்தானே. 

இந்தாலஜிக்குழுமத்தில் முனைவர் பழனியப்பன் கொடுத்த சுட்டி இது:


இதனைப் பற்றி முன்னர் வாசித்திருக்கின்றேன். 
கொடூரமான இந்த சூழலைப் பற்றியெல்லாம் எழுத வேண்டும். ஆனால் பலருக்கு இத்தகைய நிகழ்வுகள் இந்திய தேசத்தில் நிகழ்ந்தன என்பதும் அதனை மாற்ற சிலர் செய்த தியாகப் போராட்டங்கள் எத்தனை வலி நிறைந்தவை என்பதையும் இங்கே பேசுவதில் விருப்பமில்லாமல் இருக்கின்றார்கள்.  
நீங்கள்  இக்கொடுமையைப் பற்றி முன்னரே அறிந்திருப்பீர்கள் என நினைத்திருந்தேன். ஆனாலும் பரவாயில்லை, 
 
தமிழிலும் முன்னர் வந்த சில பதிவுகள், சில விழியப் பதிவுகள் என இணையத்தில் கிடைக்கின்றன ராஜம் அம்மா.


இந்த வீடியோவில் அதனைத் தயாரித்தவர் அழகாகச் சொல்கின்றார். தன் கணவருக்காக உயிரை விட்ட கண்ணகிக்கு கோயில் எழுப்பும் நம் சமூகம்,  பெண் சமூகத்திற்காக தன் மார்பகங்களை அறுத்துக் கொண்டு இற ந்து போனதன் வழி முலை வரி நீக்க உயிரைக் கொடுத்த பெண் பற்றி செய்திகள் இல்லை. அவருக்கு நினைவு மண்டபமும் இல்லை.  

சுபா

வேந்தன் அரசு

unread,
Jun 12, 2017, 8:20:50 PM6/12/17
to தமிழ் மன்றம், mintamil, Vallamai, செல்வன், Suba, Jothi Themozhi, coral shree, Anna Kannan
இன்றும் சபரிமலைக்கோவிலுக்குள் பெண்கள் நுழையத்தடை.  
மாதவிடாய் என ஒன்று இல்லைஎனில் உயிரினமே இல்லை என்பது கோவில் அறங்காவலர் அறியாமல்போனது என்னே!

12 ஜூன், 2017 ’அன்று’ முற்பகல் 12:43 அன்று, rajam <ra...@earthlink.net> எழுதியது:

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/tamilmanram.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

rajam

unread,
Jun 13, 2017, 1:19:03 AM6/13/17
to tamil...@googlegroups.com, mintamil, Vallamai
வேந்தன் ஐயா, வணக்கம்.

எப்பவும்போல் என் வாயைக் கிளறுவதற்காகப் பதிவு போட்டிருக்கிறீர்கள்! அதுக்கென்ன, வாங்க, கதைப்பொம். ;-)

சபரிமலைக்குப் போகப் பெண்கள் மாலை போட்டுவிட்டால் … விடலையின் நிலை என்னாவது????? ச்சோச்சோ … ஒரு மண்டலம் அவளைத் தொடமுடியாதே!!!!! ஓராண்டுக்கு ஒரு மண்டலம்!!! என்ன வாழ்க்கை! 'புத்தம் புதிய புத்தகமே உனைப் புரட்டிப் பார்க்கும் புலவன் நான்’ என்று பாடும் வாய்ப்பு கவியரசருக்கு அமைந்திருக்குமா?!

ஐயா, 'பசுப்போல் பெண்டிர்’க்கு மாதவிடாய் நாட்கள் என்பது இயற்கை அமைத்துக்கொடுத்த அருமையான ஓய்வுக்காலம்!! சிலருடைய உடல்வாகுக்கு … அப்படியே படுத்துக்கிடந்தால் போதுமென இருக்கும். நச்சு நச்சு என்று தொல்லைகொடுக்கும் ஆண்வாடை வீசாத அருமையான மிகநல்ல நாட்கள் அவை! பெண்களுக்குத்தான் அதைத் தங்களுக்குச் சாதகமாகக் கையாளத் தெரியவில்லை. கோயில் பூசாரிகளுக்கு என்ன ஏமாற்றமோ, அதைத் தங்கள் நிலையை உயர்த்திக்கொள்ளும் சாதகமாக ஆக்கிக்கொண்டுவிட்டார்கள்! பெண்கள் ஏமாளிகள்.

ஆக, உடல்நலக்குறைவு காரணமாக அந்த நேரத்தில் உடலை வருத்திக்கொண்டு மலையேறிப்போய்ச் சாமி கும்பிடத்தேவையில்லை. சாமி எப்போதும் நம்மோடே நம் மனத்துள்ளேயே இருக்கிறார். நாம்தான் அவரை உணர்வதில்லை.

ஆனால், மாதவிடாய்க்கு ஒரு மாயாவிக் காரணம் பூசி, பெண்களைத் தாழ்த்தித் தங்களை உயர்த்திக்கொள்ளுவதுதான் கொடுமை. அறிவிலிகள். Totallay insecure attitude.

என் உறவிலும் நட்பிலும் ... முதுமைக்காலத்தில், அதாவது மாதவிடாய்ச்சுழற்சி நின்ற காலத்தில், சபரிமலைக்குப் போய்வந்தவர்கள் உண்டு. அண்மையில் போனவாரம்தான் அந்தமாதிரியான தோழியொருவர் இறந்தார். என் மாமிப்பாட்டி 60~70 வயதில் சபரிமலை போய்வந்தார். அந்த ‘மொட்டைப்பாட்டியைச்’ சபரிமலை ஐயப்பன் 'பார்க்கமாட்டேன்‘ என்று (எங்கள் வீட்டுக்கு வந்து பாதபூசை பெற்ற சங்கராச்சாரியார்-போல) மறுக்கவில்லையே!

கடவுளுக்கும் பெண்களுக்கும் இடைப்பட்ட தரகர்கள் பல வக்கிர வடிவங்களில் வளையவருவார்கள்.

நானே என் இளமையில் அந்த நாட்களில் எங்கேயும் போக விரும்பியதில்லை. வீட்டில் படுத்துக்கிடப்பதைத்தான் விரும்பினேன். கோயிலை நினைத்துக் கவலைப்பட்டதேயில்லை! கடனே என்று கல்லூரிக்குப் போகவேண்டிவந்தது.

ஒருத்தர் 'என் வீட்டுக்கு நீ வரக்கூடாது' என்றால் நாம் அந்தப்பக்கம் போவானேன்? அதற்காக நாம் வருந்தினால்தான் அந்தக் கொடுமைக்கு மவுசு. ‘போய்ட்டு வா. நீயுமாச்சு உன் வீடுமாச்சு’ன்னு வேற பக்கம் பார்த்துப் போகணும். அந்தக் கொடுமைக்காக நாம் கவலைப்படவில்லை என்றால் அந்தக் கொடுமைசெய்யும் ஆட்களை ஏமாற்றம் பிச்சுப்பிடுங்கும்.

ஐயப்பனை நம் வீட்டுக்குள் கொண்டுவந்து கும்பிட்டால் போச்சு. அவனுக்குப் பெண்களைப்பற்றி என்ன தெரியும்? அரி+அரன் என்ற இரண்டு ஆண்களின் வழித்தோன்றலாச்சே.

On Jun 12, 2017, at 5:20 PM, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> wrote:

இன்றும் சபரிமலைக்கோவிலுக்குள் பெண்கள் நுழையத்தடை.  
மாதவிடாய் என ஒன்று இல்லைஎனில் உயிரினமே இல்லை என்பது கோவில் அறங்காவலர் அறியாமல்போனது என்னே!
12 ஜூன், 2017 ’அன்று’ முற்பகல் 12:43 அன்று, rajam <ra...@earthlink.net> எழுதியது:
அடேங்கப்பா! என்னவொரு ‘தார்மிகம்!!!’

அன்புநண்பர்களே, வணக்கம். நலம்தானே. 

இந்தாலஜிக்குழுமத்தில் முனைவர் பழனியப்பன் கொடுத்த சுட்டி இது:


இந்தச் சுட்டிவழிச் சென்று அங்கேயுள்ள கட்டுரையைப் படிக்கவும். ஏற்கனவே நீங்கள் இதைப்பற்றிப் படித்திருக்கலாம். எனக்கு அண்மையில்தான் தெரியவந்தது.

பெண்களின் உள்ளம் குமுறும். நல்லவேளை நாங்களெல்லாம் தப்பித்துவந்திருக்கிறோம். 

நான் மிகவிரும்பிக் கேட்கும் இசையைப் பொழியும் அசுவதித்திருநாள் இராமவர்மாவின் முன்னோன் அரசர் சுவாதித்திருநாள் அந்தக்காலத்தில் மக்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த பல தண்டனைவிதிகளை நீக்கினாராம். [சுவாதித்திருநாள் அவர்களின் காதல்பாடல்கள் அருமையானவை!]

இருநூறு ஆண்டுகளாகத் திருவனந்தபுரம் நவராத்திரி மண்டபத்தில் நுழைந்து பாடவோ கருவிகளை இசைக்கவோ இசையை நுகரவோ பெண்களுக்கு உரிமையில்லாமல் இருந்ததாம். இளமையிலிருந்தே அதை எதிர்த்துப் போராடி 22-ஆண்டுகளுக்குப் பிறகு பெண்கள் அங்கே நுழைந்து கலைச்சுவை வழங்கும் உரிமையை இராமவர்மா பெற்றுத்தந்திருக்கிறார்! குரல்வளத்தால், இசைப்பயிற்சியால், மக்களை மகிழ்விக்கும் மிகவும் எளிய இனிய நகைச்சுவையாளர்! ஓவியக்கலைஞர் ராஜா ரவிவர்மாவின் வழித்தோன்றல்! அவரை நேரில் பார்த்துப் பேசி இசையை நுகரும் பூரிப்பு அண்மையில் எனக்குக் கிடைத்தது. இரு படங்கள் இணைத்திருக்கிறேன்.

இராமவர்மா அவர்களை வல்லமையாளராகத் தேர்ந்தெடுக்கச் செல்வனிடம் பரிந்துரைக்கிறேன். விவரங்கள் தேவையானால் எனக்கு எழுதவும், அனுப்புகிறேன்.

அன்புடன்,
ராஜம் 

[மற்றபடி … புதிய இருப்பிடத்தில் பலவகைச் சிக்கல்கள். பண்பாட்டு மெருகுபெறாத மக்கள் குடியிருப்புக்கு வந்துவிட்டதுபோல இருக்கிறது. தாடகையின் மறுபிறவி இளம்பெண் உருவத்தில் என் தலைமேல் நடக்கிறது. இன்னும் பல சிக்கல். கடந்த 3-மாதங்களாகத் தொல்லை தொடருகிறது. மீண்டும் வேறிடம் தேடவேண்டுமா என்ற மலைப்பு. உருப்படியாக ஒன்றும் செய்யமுடிவதில்லை. ரொம்பவும் சோர்ந்திருக்கிறேன். வயது ஏறுவதால் அசதி கூடுதல்.]

<prince2.png><prince5.png>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/tamilmanram.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.

வேந்தன் அரசு

unread,
Jun 13, 2017, 9:00:31 AM6/13/17
to vallamai, தமிழ் மன்றம், mintamil
<
ஒருத்தர் 'என் வீட்டுக்கு நீ வரக்கூடாது' என்றால் நாம் அந்தப்பக்கம் போவானேன்? >

ஆண்டவன்கோயில் யாருக்கும் தனியுரிமை இல்லை.

13 ஜூன், 2017 ’அன்று’ முற்பகல் 1:18 அன்று, rajam <ra...@earthlink.net> எழுதியது:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

Velmurugan Subramanian

unread,
Jun 13, 2017, 11:35:02 AM6/13/17
to tamil...@googlegroups.com, mintamil, Vallamai

அருமையம்மா. 

-வேல்

Sent from my iPhone

Velmurugan Subramanian

unread,
Jun 13, 2017, 1:49:51 PM6/13/17
to tamilmanram, mintamil, Vallamai
வேந்தரே,

உங்களிடம் ஒரு கேள்வி! 

ஒரு அனுமானிக்கப்பட்ட சூழல்! 
எனக்கு ஒன்று தேவையில்லை. அதை வேண்டாம் என்று நானே தீர்மானித்துவிட்டேன்.  இப்போது இன்னொருவர் "உனக்கு அதேயொன்று  கிடையாது" என்று சொல்கிறார் என்று வைத்துக்கொள்வோம்.

நான் என்னுடைய தீர்மானத்திற்கு முக்கியத்துவங்கொடுக்கவேண்டுமா, ----(அ) 
இல்லை, இன்னொருவர் என்னைப்பற்றி  ஏதோசொல்கிறாரே அதற்கு முக்கியத்துவங்கொடுக்கவேண்டுமா? ---- (ஆ)
++++++

நான் (அ)ஐ  மிக வலிமையானதொரு  பண்பாகக்கருதுகிறேன். தாழ்வுமனப்பான்மையற்ற நிலையாகக்கருதுகிறேன். இது சுயமரியாதையைக்காட்டுவதாகவும் எண்ணுகிறேன். 

இது (அ) ஐப்பற்றிய ஒருபகுதிதான். இன்னொருபகுதி யாதெனில், "வேண்டும்" என்று எண்ணுபவர்களும் [அப்படி யாரேனும் இருந்தால், அதாவது பினாமிகள் இல்லாமல்!] பாதிக்கப்படுகிறார்களா? - என்ற கேள்வி மிகவும் நியாயமான கேள்வி. அப்படி யாரேனும் இருந்தால், அவர்களுக்கு ஆதரவாக குரல்கொடுக்கவேண்டும் என்றும் நான் கருதுகிறேன்.  அம்மாவின் பதிவில் அதற்குரிய தக்க சாடலும் இல்லாமலில்லை.  எனவே இரண்டாம்பகுதியிலும் குறையில்லை. 

ஆதலால், அந்தப்பதிவு மிகநேர்த்தியான,  தன்னம்பிக்கையூட்டும் பதிவு என்பது எனது பார்வை. 

கோயில் அனைவருக்கும் பொதுவானது என்னும் செய்தி இதன் இரண்டாம்பகுதியில் வருகிறது! 
++++++

என்னால் (ஆ)ஐ எப்படியாக புரிந்துகொள்ளவேண்டும் என்று விளங்கவில்லை.  விளக்கினால் நன்று! 

-வேல்



13 ஜூன், 2017 ’அன்று’ முற்பகல் 8:34 அன்று, Velmurugan Subramanian <hen...@gmail.com> எழுதியது:

rajam

unread,
Jun 13, 2017, 3:24:46 PM6/13/17
to tamil...@googlegroups.com, vallamai, mintamil
///ஆண்டவன்கோயில் யாருக்கும் தனியுரிமை இல்லை.///

என்று நீங்கள் சொல்லலாம், அதைப் பிறரும் விரும்பலாம். 

ஆனால் … 'கோயிலைக் காப்பவர்’ என்ற ஒரு கூட்டம் உருவானதும் அந்தக்கூட்டத்தின் ஊழலால் சாதாரண மக்கள் பலரின் விருப்பங்கள் நிறைவேறாததும் அந்த ஆண்டவனுக்குப் புலப்படாவிடில் … அவனுக்கு மானுடப்பிறவியைச் சரியாக ஒருங்குபடுத்திக் காக்கத் தெரியவில்லை என்பது தெளிவு, இல்லீங்களா!

அப்படிப்பட்ட ஆண்டவனை நம் வீட்டுக்கு வரவழைத்து, நம் நெஞ்சுக்குள்ளே இருத்தி வழிபட்டால் ஆச்சு!

நம்மைப்போலவே குற்றமும் குறையுமாகத் திரியும் ‘அறங்காவலர்’ போன்ற இன்னொரு பிறவியின் கட்டளைக்கு நாம் ஏன் அடிபணியணும்? 

[கொசுறு: இங்கே சில ஊர்களில் கிறித்துவக்கோயில்களுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை குறையவே, அந்தக் கட்டிடங்கள் நிலைமாறின. அதே-போல … இந்துக்கோயில்களுக்குப் போகும் கூட்டமும் குறைந்தால் … ]

++++++++++

சபரிமலைக்கு ஏன் போகணும், இங்கேயே ஒரு கதை இருக்கே.

‘ப்ரசீல் (Brazil)’ நாட்டுப் பெண்ணொருத்தியுடன் என் மகனும் நானும் இங்கே ‘லிவர்மோர் (Livermore)’ கோயிலுக்குப் போனோம். அங்கே அந்தப் பூசாரி அந்த ப்ரசீல் பெண்ணை மரியாதையாக நடத்தவில்லை, அதுவும் ‘பெருமாள் சந்நிதியில்!’ [பெருமாள் எந்தச் சாதி?] இத்தனைக்கும் அவள் என்னைவிடப் ‘பவ்வியமாக,' ‘ப்ராமணத்தியாக’த் தெரிந்தாள் — நெற்றியில் பெரீய குங்குமப்பொட்டும் அதுவும் இதுவுமாக! இனி இங்கே வரமாட்டேன் என்று என் மகனிடம் சொல்லிவிட்டேன்.

நான் போகாமல் அந்த விஷ்ணுவும் சுணங்கவில்லை, நானும் சுணங்கவில்லை. 


To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.

Oru Arizonan

unread,
Jun 13, 2017, 5:22:38 PM6/13/17
to vallamai, mintamil, rajam


2017-06-13 12:24 GMT-07:00 rajam <ra...@earthlink.net>:
//‘ப்ரசீல் (Brazil)’ நாட்டுப் பெண்ணொருத்தியுடன் என் மகனும் நானும் இங்கே ‘லிவர்மோர் (Livermore)’ கோயிலுக்குப் போனோம். அங்கே அந்தப் பூசாரி அந்த ப்ரசீல் பெண்ணை மரியாதையாக நடத்தவில்லை, அதுவும் ‘பெருமாள் சந்நிதியில்!’ [பெருமாள் எந்தச் சாதி?] இத்தனைக்கும் அவள் என்னைவிடப் ‘பவ்வியமாக,' ‘ப்ராமணத்தியாக’த் தெரிந்தாள் — நெற்றியில் பெரீய குங்குமப்பொட்டும் அதுவும் இதுவுமாக! இனி இங்கே வரமாட்டேன் என்று என் மகனிடம் சொல்லிவிட்டேன்.

நான் போகாமல் அந்த விஷ்ணுவும் சுணங்கவில்லை, நானும் சுணங்கவில்லை. //

 அன்புள்ள ராஜம் அம்மா,

அரிசோனா ஆனைமுகன் ஆலயத்தில் கோவிலுக்குவரும் பக்தர்கள் [சாதி, சமய, நிற, இன வேறுபாடின்றி] அனைவரும் "மரியாதையாக" நடத்தப்படவேண்டும் என்று விதிமுறையே  இருக்கிறது.  எங்கள் கோவில் அர்ச்சகர்களும் அது வேலையில் சேரும்போதே அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.  முறையற்று பக்தர்களிடம் நடந்துகொண்டால், நடவடிக்கை எடுக்கப்படும். ஏடாகூடாமாக நடக்கும் பக்தர்களைக்கூட எங்கள் அர்ச்சகர்கள் கடிந்துபேசமாட்டார்கள்.  ஏனெனில் அரிசோனா ஆனைமுகன் ஆலயம் உங்களைப்போன்ற பக்தர்கள் கொடுக்கும் கொடையால்தான் நடத்தப்படுகிறது.  அரசர்கள் கொடுத்த நிவந்தத்தால் அல்ல.  

நீங்கள் வந்தால் இறைவரைத் தொழ அனைவரும் வருவதைக் காணலாம். 

கதையில்லை, ஒரு உண்மை நிகழ்வைத் தருகிறேன்:

சென்ற மஹாசிவராத்திரிக்கு நள்ளிரவுவரை பூசை நடத்தப்பட்டது.  மூன்றாமகால அபிஷேகம் நடந்துமுடிய அதிகாலை [நள்ளிரவு எனவும் கூறலாம்] இரண்டு மணி ஆகிவிட்டது.  

திடீரென்று ஒரு வெள்ளைக்கார இளைஞர் ஒரு பெண்ணுடன்  இரு குழந்தைகள் பின்தொடர கோவிலுல் நுழைந்தார்.  கழுத்துவரை தொங்கும் சரிவர வாரப்படாத மயிர், பத்துப்பதினைந்து நாள்கள் மழிக்கப்படாத முகம்.  அழுக்குப்படிந்த உடை.  அப்பெண்ணும், குழந்தைகளும் கிட்டத்தட்ட அப்படித்தான்.

"நாங்கள் உங்கள் கோவிலை [சர்ச்சை என்றுதான் சொன்னார்]பி பார்க்கலாமா?" என்றவர்கள், நாங்கள் சரியென்றவுடன் எல்லா சன்னதிகளும் சுற்றிப்பார்த்தார்கள்.

பின்னர் என்னிடம், "காலையிலிருந்து நாங்கள் யாரும் சாப்பிடவில்லை.  ஏதாவது சாப்பிட இருக்கிறதா?" என்று அந்த வெள்ளைக்காரர் கேட்டார்.

நான் நிவேதனம் செய்திருந்த பழங்களை ஒரு பையில் போட்டுக்கொடுத்தேன்.  உட்கார்ந்துகொண்டு பழங்களை நால்வரும் உண்டார்கள்.

"பால் இருக்குமா?  குழந்தைக்கு வேண்டும்." என்று அடுத்த வேண்டுதல்.

அரை காலன் பால் புட்டியையும் அவரிடம் தந்தோம்.

கோவிலின் பெயரைக் கேட்டுக்கொண்டார்.  

"என்னிடம் ஒரு குவார்ட்டர்தான் இருக்கிறது," என்றுசொல்லி, "உங்கள் கோவிலுக்கு என் கொடையாக வைத்துக்கொள்ளுங்கள்," என்று நீட்டினார்.

உண்டியலைக் காட்டினேன்.  அதில் அந்தக் காசைப் போட்டுவிட்டு, "உங்கள் கோவிலும், உங்கள் பணியும் சிறக்கவேண்டும்," என்று சொல்லிவிட்டு வெளியே நடந்து சென்றுவிட்டார்கள்.

நாங்கள் பேச்சின்றிப்போனோம்.

எங்களுக்கு பார்வதியும், பரமேஸ்வரனும், ஆனைமுகனுடனும், முருகனுடனும் அவ்வெள்ளைக்காரக் குடும்பமாக வந்து மகாசிவராத்திரிப் பிரசாதத்தைக் கேட்டுவாங்கிக்கொண்டு சென்றதாகத்தான் தோன்றியது.

சில அறியா வினாக்கள்:
  • "மரியாதை"யாக நடத்தவில்லை என்று குறிப்பிட்டீர்கள்.  அதைச் சற்று விளக்கமுடியுமா?  
  • உங்களுக்கும், உங்கள் மகனுக்கும்  அவர்கள் கொடுத்த மரியாதை என்ன?  
  • உங்கள் மகனின் தோழிக்கு கொடுக்கமறுத்ததென்ன? 
  • அவரின் உடையைக் குறிப்பிட்டிருந்தீர்கள்.  சரி, சாதியைக் குறிப்பிடவேண்டிய நோக்கமென்ன?
  • சாதிக்கு மரியாதை கொடுக்கவேண்டுமா,, அல்லது பக்தர்களைச் சமமாக மரியாதைகொடுத்து நடத்தவேண்டுமா?
கடைசியாக,

கோவில் பக்தர்களுக்கானது.  பக்தர்கள் இல்லையேல் கோவிலில்லை.  

அங்கு உங்களை சரியாக நடத்தவிட்டால், என்ன நடந்தது என்பதை கோவில் மேலிடத்திற்கு எழுதிப்  புகார் செய்யுங்கள்.  அமெரிக்கக் கோவில்களில் மரியாதைக்குறைவாக நடத்திய அர்ச்சகர்களைக் கோவில் நிர்வாகம் எச்சரிக்கைசெய்யும்.  அது தொடர்ந்தால் அவர்கள் பதவிநீக்கமும் செய்யப்படுவார்கள். 

உங்களுக்கும் அவர்கள் பதில் எழுதுவார்கள் என்றே நம்புகிறேன்.

ஊமையாக இருப்பதால் இப்படிப்பட்ட நிகழ்வுகள் மேலும் தொடரலாம். நிலைமை சரிசெய்யப்படவேண்டுமென்றால் நாம்தான் அதற்குத் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மின்தமிழ், வல்லமையில் எழுதுவது செய்தியைப் பகிர்வதுதான்.  அதனால் கோவிலில் நிலைமை சரிசெய்யப்படுமா?   

பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

rajam

unread,
Jun 14, 2017, 12:27:22 AM6/14/17
to Oru Arizonan, vallamai, mintamil
என் கருத்து கீழே இடைச்செருலாக ...

On Jun 13, 2017, at 2:22 PM, Oru Arizonan <oruar...@gmail.com> wrote:



2017-06-13 12:24 GMT-07:00 rajam <ra...@earthlink.net>:
//‘ப்ரசீல் (Brazil)’ நாட்டுப் பெண்ணொருத்தியுடன் என் மகனும் நானும் இங்கே ‘லிவர்மோர் (Livermore)’ கோயிலுக்குப் போனோம். அங்கே அந்தப் பூசாரி அந்த ப்ரசீல் பெண்ணை மரியாதையாக நடத்தவில்லை, அதுவும் ‘பெருமாள் சந்நிதியில்!’ [பெருமாள் எந்தச் சாதி?] இத்தனைக்கும் அவள் என்னைவிடப் ‘பவ்வியமாக,' ‘ப்ராமணத்தியாக’த் தெரிந்தாள் — நெற்றியில் பெரீய குங்குமப்பொட்டும் அதுவும் இதுவுமாக! இனி இங்கே வரமாட்டேன் என்று என் மகனிடம் சொல்லிவிட்டேன்.

நான் போகாமல் அந்த விஷ்ணுவும் சுணங்கவில்லை, நானும் சுணங்கவில்லை. //

 அன்புள்ள ராஜம் அம்மா,

அரிசோனா ஆனைமுகன் ஆலயத்தில் கோவிலுக்குவரும் பக்தர்கள் [சாதி, சமய, நிற, இன வேறுபாடின்றி] அனைவரும் "மரியாதையாக" நடத்தப்படவேண்டும் என்று விதிமுறையே  இருக்கிறது.  எங்கள் கோவில் அர்ச்சகர்களும் அது வேலையில் சேரும்போதே அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.  முறையற்று பக்தர்களிடம் நடந்துகொண்டால், நடவடிக்கை எடுக்கப்படும். ஏடாகூடாமாக நடக்கும் பக்தர்களைக்கூட எங்கள் அர்ச்சகர்கள் கடிந்துபேசமாட்டார்கள்.  ஏனெனில் அரிசோனா ஆனைமுகன் ஆலயம் உங்களைப்போன்ற பக்தர்கள் கொடுக்கும் கொடையால்தான் நடத்தப்படுகிறது.  அரசர்கள் கொடுத்த நிவந்தத்தால் அல்ல.  

நீங்கள் வந்தால் இறைவரைத் தொழ அனைவரும் வருவதைக் காணலாம். 

கதையில்லை, ஒரு உண்மை நிகழ்வைத் தருகிறேன்:

சென்ற மஹாசிவராத்திரிக்கு நள்ளிரவுவரை பூசை நடத்தப்பட்டது.  மூன்றாமகால அபிஷேகம் நடந்துமுடிய அதிகாலை [நள்ளிரவு எனவும் கூறலாம்] இரண்டு மணி ஆகிவிட்டது.  

திடீரென்று ஒரு வெள்ளைக்கார இளைஞர் ஒரு பெண்ணுடன்  இரு குழந்தைகள் பின்தொடர கோவிலுல் நுழைந்தார்.  கழுத்துவரை தொங்கும் சரிவர வாரப்படாத மயிர், பத்துப்பதினைந்து நாள்கள் மழிக்கப்படாத முகம்.  அழுக்குப்படிந்த உடை.  அப்பெண்ணும், குழந்தைகளும் கிட்டத்தட்ட அப்படித்தான்.

"நாங்கள் உங்கள் கோவிலை [சர்ச்சை என்றுதான் சொன்னார்]பி பார்க்கலாமா?" என்றவர்கள், நாங்கள் சரியென்றவுடன் எல்லா சன்னதிகளும் சுற்றிப்பார்த்தார்கள்.

பின்னர் என்னிடம், "காலையிலிருந்து நாங்கள் யாரும் சாப்பிடவில்லை.  ஏதாவது சாப்பிட இருக்கிறதா?" என்று அந்த வெள்ளைக்காரர் கேட்டார்.

நான் நிவேதனம் செய்திருந்த பழங்களை ஒரு பையில் போட்டுக்கொடுத்தேன்.  உட்கார்ந்துகொண்டு பழங்களை நால்வரும் உண்டார்கள்.

"பால் இருக்குமா?  குழந்தைக்கு வேண்டும்." என்று அடுத்த வேண்டுதல்.

அரை காலன் பால் புட்டியையும் அவரிடம் தந்தோம்.

கோவிலின் பெயரைக் கேட்டுக்கொண்டார்.  

"என்னிடம் ஒரு குவார்ட்டர்தான் இருக்கிறது," என்றுசொல்லி, "உங்கள் கோவிலுக்கு என் கொடையாக வைத்துக்கொள்ளுங்கள்," என்று நீட்டினார்.

உண்டியலைக் காட்டினேன்.  அதில் அந்தக் காசைப் போட்டுவிட்டு, "உங்கள் கோவிலும், உங்கள் பணியும் சிறக்கவேண்டும்," என்று சொல்லிவிட்டு வெளியே நடந்து சென்றுவிட்டார்கள்.

நாங்கள் பேச்சின்றிப்போனோம்.

எங்களுக்கு பார்வதியும், பரமேஸ்வரனும், ஆனைமுகனுடனும், முருகனுடனும் அவ்வெள்ளைக்காரக் குடும்பமாக வந்து மகாசிவராத்திரிப் பிரசாதத்தைக் கேட்டுவாங்கிக்கொண்டு சென்றதாகத்தான் தோன்றியது.

சில அறியா வினாக்கள்:
  • "மரியாதை"யாக நடத்தவில்லை என்று குறிப்பிட்டீர்கள்.  அதைச் சற்று விளக்கமுடியுமா?  

நீண்ட வரிசையில் முதலில் என் மகன், அடுத்து அந்தப்பெண், பிறகு நான். கோயில் பட்டர் என் மகனுக்குக் கொடுத்த பிரசாதங்களை அந்தப்பெண்ணுக்குக் கொடுக்கவில்லை. முதலில் தலையைக் குனிந்துகொண்டே ஏதோ ஒன்றை அவள் கையில் போட்டுவிட்டுத் தலைநிமிர்ந்து அவளைப் பார்த்ததும் வேறு ஒன்றும் கொடுக்காமல் … ‘போ போ’ என்று சொல்லுகிறமாதிரிப் புறங்கையை ஆட்டிச் சைகை காட்டினார். அந்தப்பெண் புரியாமல் திரும்பி என்னைப்பார்த்தாள். நான் தலையை அசைத்து விலகச்சொல்லிச் சாடை காட்டினேன். அவளோடு நானும் விலகிவிட்டேன்.

  • உங்களுக்கும், உங்கள் மகனுக்கும்  அவர்கள் கொடுத்த மரியாதை என்ன?  
  • உங்கள் மகனின் தோழிக்கு கொடுக்கமறுத்ததென்ன? 
  • அவரின் உடையைக் குறிப்பிட்டிருந்தீர்கள்.  சரி, சாதியைக் குறிப்பிடவேண்டிய நோக்கமென்ன?
  • சாதிக்கு மரியாதை கொடுக்கவேண்டுமா,, அல்லது பக்தர்களைச் சமமாக மரியாதைகொடுத்து நடத்தவேண்டுமா?
கடைசியாக,

கோவில் பக்தர்களுக்கானது.  பக்தர்கள் இல்லையேல் கோவிலில்லை.  

அங்கு உங்களை சரியாக நடத்தவிட்டால், என்ன நடந்தது என்பதை கோவில் மேலிடத்திற்கு எழுதிப்  புகார் செய்யுங்கள்.  அமெரிக்கக் கோவில்களில் மரியாதைக்குறைவாக நடத்திய அர்ச்சகர்களைக் கோவில் நிர்வாகம் எச்சரிக்கைசெய்யும்.  அது தொடர்ந்தால் அவர்கள் பதவிநீக்கமும் செய்யப்படுவார்கள். 

உங்களுக்கும் அவர்கள் பதில் எழுதுவார்கள் என்றே நம்புகிறேன்.

ஊமையாக இருப்பதால் இப்படிப்பட்ட நிகழ்வுகள் மேலும் தொடரலாம். நிலைமை சரிசெய்யப்படவேண்டுமென்றால் நாம்தான் அதற்குத் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மின்தமிழ், வல்லமையில் எழுதுவது செய்தியைப் பகிர்வதுதான்.  அதனால் கோவிலில் நிலைமை சரிசெய்யப்படுமா?   


நான் ஒரு சமூகசேவகியில்லை. 

Oru Arizonan

unread,
Jun 14, 2017, 5:08:10 PM6/14/17
to rajam, vallamai, mintamil
எனது கருத்துமே இடைச்செருகலாக:

2017-06-13 21:27 GMT-07:00 rajam <ra...@earthlink.net>:
//என் கருத்து கீழே இடைச்செருலாக ...

On Jun 13, 2017, at 2:22 PM, Oru Arizonan <oruar...@gmail.com> wrote:

//சில அறியா வினாக்கள்:
  • "மரியாதை"யாக நடத்தவில்லை என்று குறிப்பிட்டீர்கள்.  அதைச் சற்று விளக்கமுடியுமா?  //

//நீண்ட வரிசையில் முதலில் என் மகன், அடுத்து அந்தப்பெண், பிறகு நான். கோயில் பட்டர் என் மகனுக்குக் கொடுத்த பிரசாதங்களை அந்தப்பெண்ணுக்குக் கொடுக்கவில்லை. முதலில் தலையைக் குனிந்துகொண்டே ஏதோ ஒன்றை அவள் கையில் போட்டுவிட்டுத் தலைநிமிர்ந்து அவளைப் பார்த்ததும் வேறு ஒன்றும் கொடுக்காமல் … ‘போ போ’ என்று சொல்லுகிறமாதிரிப் புறங்கையை ஆட்டிச் சைகை காட்டினார். அந்தப்பெண் புரியாமல் திரும்பி என்னைப்பார்த்தாள். நான் தலையை அசைத்து விலகச்சொல்லிச் சாடை காட்டினேன். அவளோடு நானும் விலகிவிட்டேன்.//

பட்டர் செய்தது மிகவும் தவறு/அறமற்றது/அநீதியானது.  

அங்கேயே நீங்கள் அவரைச் சொல்லால் சாடி உங்கள் உரிமையை -- கடவுளின் பிரசாதத்தைப் பெரும் உரிமையை -- நிலைநாட்டியிருக்கவேண்டும். எனக்குத் தெரிந்த -- சிறுமைகண்டு பொங்கும் ராஜம் அம்மா எங்கு போனார்கள்?

நீங்கள் அமைதி காத்ததால் கோவில் பட்டர் தனது செய்கை சரியென்றுதானே எண்ணுவார்?  அறமற்றது என்று அறிந்தும் அமைதிகாத்தால் அந்த அறமற்ற செயலுக்கு நாமும் துணைபோனதாகாதா/

எங்கள் கோவிலில் இப்படியொரு செயல் நடந்திருந்தால், அப்பட்டரை உங்களிடம் மன்னிப்புக்கேட்க வைத்திருப்போம். 

//மின்தமிழ், வல்லமையில் எழுதுவது செய்தியைப் பகிர்வதுதான்.  அதனால் கோவிலில் நிலைமை சரிசெய்யப்படுமா?//   


//நான் ஒரு சமூகசேவகியில்லை. //

மின்தமிழுக்கும், வல்லமைக்கு எழுதுவதால் பயன் ஏதும் ஏற்படவில்லை.  ஆனால் லிவர்மோர் கோவில் மேலிடத்திற்கு ஒரு மின்னஞ்சல் எழுதினால் உங்களுக்கு [உங்கள் மகனின் தோழிக்கு] மறுக்கப்பட்ட  உரிமை மற்றவர்களும் மறுக்கப்பட்டது தடுக்கலாம்;  உங்களுக்கு அநீதியிழைத்த பட்டரும் கண்டிக்கப்படுவார்.  இது சமூகசேவையைவிட தன்னுரிமை நிலைநாட்டல் என்றே கருதுவேன்.

பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

வேந்தன் அரசு

unread,
Jun 15, 2017, 9:07:43 AM6/15/17
to தமிழ் மன்றம், mintamil, Vallamai


13 ஜூன், 2017 ’அன்று’ பிற்பகல் 1:49 அன்று, Velmurugan Subramanian <hen...@gmail.com> எழுதியது:

வேந்தரே,

உங்களிடம் ஒரு கேள்வி! 


காலம் நீடியதற்கு மன்னிக்க.
உனக்கு அது இல்லை என்று சொல்லியபோதே எனக்கான தெரிவுகள் அற்றுவிட்டன. நான் எதைத்தேர்ந்து என்ன பயன்??

Velmurugan Subramanian

unread,
Jun 16, 2017, 12:29:50 AM6/16/17
to tamilmanram, mintamil, Vallamai
"உனக்கு அது இல்லை என்று சொல்லியபோதே எனக்கான தெரிவுகள் அற்றுவிட்டன"
// அப்படியெல்லாம் இல்லை என்பதே எனது பார்வை.

இவ்வுலகத்திலுள்ள அனைந்த்தும்  பெரும்பாலும் அடிப்படைநிலையில் மறுக்கப்பட்டே இருக்கின்றன. நாம் அவற்றையெல்லாம் எண்ணி கலங்கவேண்டியதில்லை. ஒன்று மறுக்கப்படுகிறதா இல்லையா என்பதை விட   நமக்கு என்ன தேவை, நமது அந்த  தேவை மறுக்கப்படுகிறதா என்பதே மிகவும் முக்கியம் என்று நான் கருதுகிறேன்.   இது நம்மை நம்முடைய வலிமையில் நிறுத்தி ஆற்றல் இழப்பை  தடுக்கிறது. 

தேவையானவொன்று "அறமற்றமுறையில்" மறுக்கப்படும்போது அதற்கு எதிராக போராடவும் தயாராய் இருக்கவேண்டும்.  தேவையானவற்றின்  "ஏனைய"  மறுப்புகளை அதற்கான தகுதிகொண்டு  உடைக்கவேண்டும். இப்படியாகப்பயணிப்பதே சிறந்தது என்பது எனது பார்வை. 

ஆமாம்! 
"என் தேவை" என்று அதை சுருக்காமல்  "நம் தேவை" என்று முடிந்தவரையிலும் விரித்துப்பார்ப்பது மிகவும் போற்றப்படத்தக்கது ஆகும். அடிப்படையில் "தேவை" என்ற ஒன்று இருக்கவேண்டும். 

+++++++++ 

இதற்குப்பதிலாக, 
சும்மா பொத்தாம்பொதுவாக மறுக்கப்படும் ஒவ்வொன்றையும் நாம் எதிர்க்கவேண்டும் என்பது நடைமுறையில் இயலாததும் தேவையற்றதும் ஆகும் என்பது எனது பார்வை. வெறுமனே இன்னொருவரின்   மறுப்பே நமது  தெரிவுகளை இல்லாமல் ஆக்குகிறது என்ற கோட்பாட்டோடு  இயங்கினால்  நாம் இன்னொருவரின் ஈர்ப்பிற்குள் அடங்கியிருக்கும்நிலைக்கு தள்ளப்படுவோம். அதைவிட (நம்) தேவை என்னும் ஈர்ப்பிற்குள் உட்படுவது சிறந்தது.

+++++

ஆண்கள்  கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள் என்பதால்மட்டுமே  ஓர் ஆண் கோவிலுக்குப்போவதில்   பெரியபொருளொன்று இருப்பதாக நான் கருதவில்லை.  
மேலும், இயலுமெல்லாவற்றையும் நாம் செய்வதில்லை என்பதையும் கருத்திலெடுக்கவேண்டும். 

-வேல் 




15 ஜூன், 2017 ’அன்று’ முற்பகல் 6:07 அன்று, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> எழுதியது:

--

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jun 17, 2017, 10:27:21 AM6/17/17
to mintamil, Kalai Email

கோவில்பட்டி அருள்மிகு ஆனந்த ஐயப்பன் கோயில் கட்டி குடமுழுக்கு நடத்தி, ஆண்கள் பெண்கள் என அனைவரும் ஒன்றுகூடி பாட்டுப்பாடி ஐயப்பனை வழிபடுகின்றனர்.
ஆனால் சபரிமலையின் நடைமுறைச் சட்டதிட்டங்களை இவர்கள் சரியே என்கின்றனர்.  அங்குள்ளதை இங்குள்ளவர்கள் மாற்ற முற்படவில்லை.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
TimePhoto_20170617_194839.jpg

Suba

unread,
Jun 18, 2017, 3:20:27 PM6/18/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram
2017-06-13 7:18 GMT+02:00 rajam <ra...@earthlink.net>:


கடவுளுக்கும் பெண்களுக்கும் இடைப்பட்ட தரகர்கள் பல வக்கிர வடிவங்களில் வளையவருவார்கள்.

நானே என் இளமையில் அந்த நாட்களில் எங்கேயும் போக விரும்பியதில்லை. வீட்டில் படுத்துக்கிடப்பதைத்தான் விரும்பினேன். கோயிலை நினைத்துக் கவலைப்பட்டதேயில்லை! கடனே என்று கல்லூரிக்குப் போகவேண்டிவந்தது.

பெண்கலை அடிமைப்படுத்த ஆண்மக்கள் செய்த ஏற்பாட்டில் இதுவும் ஒன்று. படித்திருக்க ஒரு விழுக்காட்டு பெண்களுக்கு பிடிப்பதுபோல அந்த நாட்களையும் இயல்பாக எடுத்துக் கொண்டு ஓடி ஆடி வேலை செய்யவும் எல்லா இடங்கலுக்குச் செல்லவும் வொரும்பும் பெண்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.

இந்தக் காலத்தில் லாதவிடாய காலத்தில் கோயிலுக்குச் செல்லக்குடாது எனச் ஒல்லிக் கொள்பவர் சிஅல்ர் இருந்தாலும் எல்லா நாட்களிலும் கோயிலுக்குச் செல்லும் பெண்கல் இருக்கின்ரனர். எனத் உசுற்றத்தில் இது பெரியஒரு பிரச்சனையாகப் பேசி அங்கலாய்ப்பவ்பவர்களை விட  சகஜமாகச் சென்று வரும் பெண்கள் எண்ணிக்கையில் அதிகரித்து விட்டார்கள் என்பதைக்  குறிப்பிடுவது  அவசியம் எனக் கருதுகிறேன். கால ஓட்டம் செய்திருக்கும் சிந்தனை மாற்றத்தில் இதுவும் ஒன்று.

ஒருத்தர் 'என் வீட்டுக்கு நீ வரக்கூடாது' என்றால் நாம் அந்தப்பக்கம் போவானேன்? அதற்காக நாம் வருந்தினால்தான் அந்தக் கொடுமைக்கு மவுசு. ‘போய்ட்டு வா. நீயுமாச்சு உன் வீடுமாச்சு’ன்னு வேற பக்கம் பார்த்துப் போகணும். அந்தக் கொடுமைக்காக நாம் கவலைப்படவில்லை என்றால் அந்தக் கொடுமைசெய்யும் ஆட்களை ஏமாற்றம் பிச்சுப்பிடுங்கும்.
​ஒருவர் வீட்டுக்கு வரவேண்டாம் என்றால் அந்தப் பக்கமே போக மாட்டேன். அதுமட்டுமல்ல, அவர் எனக்கு உறவுமில்ல ஒட்டுமில்லை.. என அவரைச் சாரமல் இருந்து விடலாம். ஆனால் ஒரு கோயிலோ  அது பிரதிநிதிக்கும் மதமோ இதனைச் சொல்லும் போது என்ன முடிவெடுப்பது? நம்மை  வர விடா கோயிலைச் சார்ந்திருக்கும் மதமே வேண்டாம் என்றா?
விட்டுக் கொடுத்துப் போவதற்கு சமாதானங்கள் சொல்லிக் கொண்டு செல்வதற்கும் ஒரு எல்லை உண்டல்லவா? நம்மை ஒரு இனமோ அல்லது சமூகமோ, சமயமோ ஒதுக்கினால் பின் அந்த சமூக, அமய அடையாளம் எதற்கு என்று தான் பலர் வெவ்வேறு மதங்களுக்கு மாறிக் கொள்கின்றனர். பலர் கடவுளே இல்லை என மதத்தைத் துறக்கின்றனர்.


 

ஐயப்பனை நம் வீட்டுக்குள் கொண்டுவந்து கும்பிட்டால் போச்சு. அவனுக்குப் பெண்களைப்பற்றி என்ன தெரியும்?
​பெண்களுக்குக் கோயிலில் இடம் கொடுக்காத அந்தச்சாமிக்கு வீட்டில் இடம்  எதற்கு என்ற கேள்வி எழுகிறதே..
சாமி யாரையும் வராதே எனச் சொல்லவில்லை.  சாமியை வழிபட சட்ட திட்டங்களை எழுதிய ஆண் வர்க்கம் செய்திருக்கும் ஏற்பாடு இது.
  .. கும்பிட வேறு சாமியா இல்லை. ​ :-)

suba

தேமொழி

unread,
Jun 18, 2017, 3:26:48 PM6/18/17
to மின்தமிழ்


On Sunday, June 18, 2017 at 12:20:27 PM UTC-7, Dr.K.Subashini wrote:


2017-06-13 7:18 GMT+02:00 rajam <ra...@earthlink.net>:


கடவுளுக்கும் பெண்களுக்கும் இடைப்பட்ட தரகர்கள் பல வக்கிர வடிவங்களில் வளையவருவார்கள்.

நானே என் இளமையில் அந்த நாட்களில் எங்கேயும் போக விரும்பியதில்லை. வீட்டில் படுத்துக்கிடப்பதைத்தான் விரும்பினேன். கோயிலை நினைத்துக் கவலைப்பட்டதேயில்லை! கடனே என்று கல்லூரிக்குப் போகவேண்டிவந்தது.

பெண்கலை அடிமைப்படுத்த ஆண்மக்கள் செய்த ஏற்பாட்டில் இதுவும் ஒன்று. படித்திருக்க ஒரு விழுக்காட்டு பெண்களுக்கு பிடிப்பதுபோல அந்த நாட்களையும் இயல்பாக எடுத்துக் கொண்டு ஓடி ஆடி வேலை செய்யவும் எல்லா இடங்கலுக்குச் செல்லவும் வொரும்பும் பெண்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.

இந்தக் காலத்தில் லாதவிடாய காலத்தில் கோயிலுக்குச் செல்லக்குடாது எனச் ஒல்லிக் கொள்பவர் சிஅல்ர் இருந்தாலும் எல்லா நாட்களிலும் கோயிலுக்குச் செல்லும் பெண்கல் இருக்கின்ரனர். எனத் உசுற்றத்தில் இது பெரியஒரு பிரச்சனையாகப் பேசி அங்கலாய்ப்பவ்பவர்களை விட  சகஜமாகச் சென்று வரும் பெண்கள் எண்ணிக்கையில் அதிகரித்து விட்டார்கள் என்பதைக்  குறிப்பிடுவது  அவசியம் எனக் கருதுகிறேன். கால ஓட்டம் செய்திருக்கும் சிந்தனை மாற்றத்தில் இதுவும் ஒன்று.

ஒருத்தர் 'என் வீட்டுக்கு நீ வரக்கூடாது' என்றால் நாம் அந்தப்பக்கம் போவானேன்? அதற்காக நாம் வருந்தினால்தான் அந்தக் கொடுமைக்கு மவுசு. ‘போய்ட்டு வா. நீயுமாச்சு உன் வீடுமாச்சு’ன்னு வேற பக்கம் பார்த்துப் போகணும். அந்தக் கொடுமைக்காக நாம் கவலைப்படவில்லை என்றால் அந்தக் கொடுமைசெய்யும் ஆட்களை ஏமாற்றம் பிச்சுப்பிடுங்கும்.
​ஒருவர் வீட்டுக்கு வரவேண்டாம் என்றால் அந்தப் பக்கமே போக மாட்டேன். அதுமட்டுமல்ல, அவர் எனக்கு உறவுமில்ல ஒட்டுமில்லை.. என அவரைச் சாரமல் இருந்து விடலாம். ஆனால் ஒரு கோயிலோ  அது பிரதிநிதிக்கும் மதமோ இதனைச் சொல்லும் போது என்ன முடிவெடுப்பது? நம்மை  வர விடா கோயிலைச் சார்ந்திருக்கும் மதமே வேண்டாம் என்றா?

good i like this.

இப்பொழுது  கடவுள் ஏன் கல்லானார் பாட்டு பாடிக்  கொண்டிருக்கிறது  ஜெயா மேக்ஸ் 

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jul 28, 2017, 9:08:44 PM7/28/17
to mintamil, Kalai Email, thiruppuvanam

பாண்டிச்சேரி அருள்மிகு ஐயப்பன் கோயிலில் பெண்கள் அனைவரும் ஒன்றுகூடி பாட்டுப்பாடி ஐயப்பனை வழிபடுகின்றனர்.

1501290362089.png
Reply all
Reply to author
Forward
0 new messages