சக்தி ரதம்!

579 views
Skip to first unread message

shylaja

unread,
Oct 3, 2013, 10:18:44 PM10/3/13
to mintamil, vallamai, தமிழ் வாசல், தமிழ் சிறகுகள்
 சக்தி ரதமிழுக்க  வடத்தில் முதல் கரமாக  இக்கவிதை நவராத்திரி நன்னாளில்..மேலும் கரங்கள்  இழுக்கட்டும்.!
 
காப்பு
 
ஆனைமுகங்கொண்ட ஞான முதலோனே
பானை வயிற்றுக்குள்ளே பாரைக்காப்போனே
ஞானமேதுமின்றிலும் பாடமுனைகின்றேன்
தேனாய்ப் பெருகிடவே  தேவே அருள்வீரே!

-
_____________________________________________
 
 நெல்லுக்குள் மணியாக இருக்கின்றாள் -சக்தி
நீருக்குள் சுவையாக  இனிக்கின்றாள்-அவள்
பண்ணுக்குள்பாட்டாக இசைக்கின்றாள்-இசைப்
பாட்டுக்கு யாழாக ஒலிக்கின்றாள்
 
சொல்லுக்குப்பொருளாக திகழ்கின்றாள்-சக்தி
சோர்வுக்குத் தெம்பைத் தருகின்றாள்-அவள்
கற்பகத்தருவெனக் கொடுக்கின்றாள்-கரு
காப்பதைப் பணியாகக் கொள்கின்றாள்
 
பேரொளியின் ஜோதியாய் நிற்கின்றாள் -சக்தி
பேர்தனிலே வலிமை சேர்க்கின்றாள் அவள்
கார்வண்ணக்காளியாய் சிரிக்கின்றாள் -எல்லைக்
காவல்தெய்வமாயும் காக்கின்றாள்!
___________________
நவராத்திரி குறிப்பு...
 
உடுப்பிகிருஷ்ணன்  கோவிலில் நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் கிருஷ்ணருக்கு புடவை அணிவித்து அலங்கரிப்பார்கள் இவைகள் மைசூர் மகராஜா வழங்கினார் என்று சொல்லப்படுகிறது.

. .

Reply
Forward
 

Hari Krishnan

unread,
Oct 3, 2013, 10:24:13 PM10/3/13
to vallamai, mintamil, தமிழ் சிறகுகள்

2013/10/4 shylaja <shyl...@gmail.com>

காப்பு
 
ஆனைமுகங்கொண்ட ஞான முதலோனே
பானை வயிற்றுக்குள்ளே பாரைக்காப்போனே
ஞானமேதுமின்றிலும் பாடமுனைகின்றேன்
தேனாய்ப் பெருகிடவே  தேவே அருள்வீரே!


ஓஹோ நவராத்திரி திருவிழாக் கொண்டாட்டம் தொடங்கியாச்சா!  (இங்க ஸ்க்ரிப்டோட மல்லுக்கு நின்னுட்டிருக்கேன்.  11 மணி ட்ரெயினைப் பிடிக்கணும்.. நாளைக்கு க்ளாஸ் இருக்கே.. அதுவும் என் வீட்டுல... ஒண்டியாளா அதுக்கும் ஏற்பாடு செய்யணும்...)  அங்க இசைக்கவி ரமணன் பேர்ல தனிக்குழுவே இயங்கிட்டிருக்கு... பாட்டா வந்து தினோமும் கொட்டிக்கிட்டு இருக்கு.  இங்க அங்குச்சி பொளந்து கட்டியாச்சு.

நான் சக்தியிருந்தும் அசக்தனானேன்!  எழுத ஆசையிருந்தா போறுமா!  நல்ல தொடக்கம் ஷை... வாழ்த்துகள்.

--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

shylaja

unread,
Oct 3, 2013, 11:07:16 PM10/3/13
to vallamai, mintamil, தமிழ் சிறகுகள்
நன்றி  ஹரிண்ணா.இங்கு சக்திகள் எல்லாரும் சேர்ந்து   நவராத்திரிக்கு தெரிந்ததை எழுதறதா திட்டம்!  உங்கள் வாழ்த்தே  பேறு!


2013/10/4 Hari Krishnan <hari.har...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--
 
 

. .

Reply
Forward
 

coral shree

unread,
Oct 3, 2013, 11:14:08 PM10/3/13
to தமிழ் வாசல், mintamil, vallamai, தமிழ் சிறகுகள்

வளம் தரும் நாயகியே வருகவே!


பாற்கடல் நாயகி கற்பகவல்லி புறப்பட்டாள்!
அற்புதங்கள் புரியவே அருள்மழை பொழியவே
பொற்பதங்கள் பணிந்து கருத்தாய் வழிபடவே
நற்கதியருளி  ஆனந்தமழை பொழியவே
பொற்சலங்கைகள் ஜல்ஜல்லென தாளமிட
கற்சிலையாய் வீற்றிருந்தவள் கலகலவென புறப்பட்டாள்!

நித்ய கல்யாணியே நிதம் வாருமம்மா
சத்ய சொரூபமாய் சாந்தமாய் வாருமம்மா
சிந்தை கலங்காமல் நின்பதம்பாட வாழ்த்தியருளுமம்மா
முந்தைவினை தீண்டாமல் முத்தாய் பதமருளுமம்மா
பந்தத்தில் கிடந்துழலாமல் பரிவாய் காத்தருளுமம்மா
பைந்தமிழ்ப்பாமாலை பாடியுனைத் துதிக்கும் வரமருளுமம்மா

அஞ்சி அஞ்சி நிற்பவருக்கு ஆறுதலாய் வாருமம்மா
கெஞ்சி கெஞ்சி தவமிருப்போரை காத்தருளுமம்மா
தஞ்சம் தஞ்சமென அலைந்தேனுக்கு அடைக்கலம் அருளுமம்மா
நஞ்சையும் புஞ்சையும் செழித்து வளர வாருமம்மா
பஞ்சமும் பசியும் பாரினில் அறவேஒழிய தயைதாருமம்மா
வஞ்சம் தீண்டாமல் வஞ்சியே காத்தருளுமம்மா

ரஞ்சனியே  தாயே தயாபரயே ரட்சித்தருளுமம்மா!
பிரதமை திதியில் பிரியமாய்வந்து காத்தருளுமம்மா!


வேதம் படிப்பதால் கிடைக்கும் அத்தனை ஞானமும், நலனும், வளமும் விரதங்களால் கிடைக்கின்றன என்று புராணங்கள் கூறுகின்றன. ‘சிவனுக்கு ஒரு இராத்திரி சிவராத்திரி, அம்மனுக்கு ஒன்பது இராத்திரி, நவராத்திரி’ என்பார்கள். அன்னை பராசக்தியை புரட்டாசி மாதத்தில்  ஒன்பது தினங்கள் முறையாக வழிபடும்  அற்புத விரதம் நவராத்திரி விரதம். அன்னையின்  விரதங்களுள் மிகச் சிறந்த ஒன்றாகும் இவ்விரதம். நலங்கள் யாவும் அள்ளித்தரும் நாயகியின் நவராத்திரி விரத மகிமையை கந்தபுராணமும் எடுத்துரைக்கிறது . நவராத்திரி வழிபாடு அன்னை சக்தியின் மகிமையை பார் புகழ விளங்கச்செய்யும்.  மனிதரின் வாழ்க்கை நலமான,  கல்வி, செல்வம், வீரம் ஆகிய இம்மூன்றையும் வேண்டி அம்மனின் அவதாரங்களான  சரசுவதி, இலக்குமி, துர்காதேவி என மூன்று சக்தி அம்சங்களையும் உளம் குளிர வழிபடுதலே இவ்விரதத்தின் நோக்கம்.  முதல் மூன்று நாட்களில் வீரத்தையும், தைரியத்தையும் வேண்டி அன்னை பராசக்தியை வழிபடுகிறோம்.  அடுத்த மூன்று நாட்கள் வாழ்வாதாரமான செல்வம் வேண்டி மகாலட்சுமியைத் துதிக்கிறோம். இறுதி மூன்று நாட்களும் கல்வி, ஞானம், சகல கலைகள் என அனைத்தும் வேண்டி  சரசுவதி தேவியை வழிபடுகிறோம். 

அனைவருக்கும் இனிய நவராத்திரி வாழ்த்துகள்! நன்றி.

அன்புடன்
பவளா



2013/10/4 shylaja <shyl...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--

                                                               
                 

Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

shylaja

unread,
Oct 4, 2013, 12:00:18 AM10/4/13
to தமிழ் வாசல், mintamil, vallamai, தமிழ் சிறகுகள்
கவிதையும் நவ்ராத்திரிக்குறிப்பும்  சிறப்பு பவழா!


2013/10/4 coral shree <cor...@gmail.com>



--
 
 

. .

Reply
Forward
 

coral shree

unread,
Oct 4, 2013, 12:58:44 AM10/4/13
to vallamai, தமிழ் வாசல், mintamil, தமிழ் சிறகுகள்
நன்றி ஷைலு.  உங்களுடைய ஆரம்பமே அருமை. தொடருங்கள்.

அன்புடன்
பவளா


2013/10/4 shylaja <shyl...@gmail.com>
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Oct 4, 2013, 2:04:10 AM10/4/13
to மின்தமிழ்
---------- Forwarded message ----------
From: "பார்வதி இராமச்சந்திரன்." <tspar...@gmail.com>
Date: Oct 4, 2013 11:12 AM
Subject: Re: [வல்லமை] Re: [தமிழ் வாசல்] சக்தி ரதம்!
To: <vall...@googlegroups.com>

மாபெரும் கவிதாயினிகள் வரிசையில் என் மீது கொண்ட பேரன்பால் என்னையும் இணைத்திருக்கும் அக்காவுக்கு சிரம் தாழ்ந்த நன்றி!!.. என்னாலியன்ற சிறு முயற்சி இதோ..

(நாட்டரசன் கோட்டை ஸ்ரீகண்ணுடை நாயகி அம்மனைக் குறித்த கவிதை..கண் பார்வைக் குறைபாடுகளைப் போக்கி, எல்லா நலமும் அருள்வாள் அன்னை. கவிச்சக்கரவர்த்தி கம்பரது சமாதி இருக்கும் ஊர் இது).

கண்ணுக்கு ஒளி தரும் கண்ணுடை நாயகி என்

எண்ணத்தில் நிறைந்தருள்வாய் எம் குல தேவிநீ

விண்ணோடு  உலகேழும் படைத்தருளும்  பொன்மகளே

பண்ணறியா சிறுமி நான் பாடவந்தேன் பா அருள்வாய்

சொல்லுக்கு சொல் தருவாய் சொல்லுக்குள் பொருளாவாய்

கல்லுக்கும் கவி அருளும் கலைமகளே நலம் தருவாய்

நாட்டரசன் கோட்டையிலே நடை பழகும் பொன்மயிலே

பாட்டரசன் கம்பன் தினம் பார்த்திருக்கும் பொன்னழகே

அழுகுணிச் சித்தரவர் அமர்ந்திருக்கும் மேடையிலே

அழகுடனே வீற்றிருந்து அருள் சுரக்கும் கலையழகே

கண்ணின் மணி நீயே கனிந்துன்னைத் தொழுதாலே

கண்ணீர் பெருகுதடி கள்ள மனம் உருகுதடி

உண்மை நிறைந்திருக்கும் உள்ளத்தில் வாழ்பவளே

பெண்மைப் பேரொளியே பெருங்கனலே வரமருள்வாய்

நவராத்திரி நாயகியே நானிலமும் போற்றுதடி

நாவார உனைப்பாட நங்கையரே வரமருள்வாய்

மூன்று மகா சக்தியர் நீ முக்கண்ணன் தேவியும் நீ

மும்மலங்கள் நீக்கியருள் முழு நிலவே வரமருள்வாய்

உன் நினைவால் வாழுகின்றேன் உன்னருளால் பாடுகின்றேன்

பொன்மகளே உன் பாதம் போற்றித் தொழ வரமருள்வாய்.


பணிவன்புடன்

பார்வதி இராமச்சந்திரன்.


நவராத்திரி டிப்ஸ்:

சுண்டல் தீந்தா ஸ்டாப் கேப் அரேன்ஞ்மென்ட்டா பொட்டுக்கடலை மாவு உருண்டை, அல்லது கடலை உருண்டை தருவீங்க.. ஆனால் இப்ப இத எல்லாரும் செய்யறதால, நீங்க கொடுத்தா டக்குனு கண்டுபுடிச்சுருவாங்க.. சீக்க்ரம் செய்யற ஒரு ஸ்வீட் செய்யலாம் வாங்க..இது என் தோழி ஒருத்தி சொன்ன ரெசிபி.

பால் பௌடர் ஒரு கப் எடுத்துக்கங்க. அப்புறம் சர்க்கரை அரை கப், வெண்ணை கால் கப், கோகோ பவுடர் இல்லாட்டி பூஸ்ட், போர்ன்விடா இப்படி ஏதாவது அரை ஸ்பூன்.

சர்க்கரையை கம்பிப் பாகு வச்சிக்கங்க.. அதுலயே வெண்ணையைப் போட்டு உருக்குங்க சொல்றேன். அப்புறம் பால் பௌடரப் போட்டு கட்டியில்லாமக் கிளறணும். கோகோ பவுடர் சேர்த்து சுருண்டு வரும் போது இறக்கித் துண்டுகள் போடுங்க.. நான் இதை இருபத்தஞ்சு நிமிஷத்துல செஞ்சேன்.  குழந்தைகளுக்கு ரொம்பப் புடிக்கும் இது.. ஒரு வாரம் வச்சிருக்கலாம் இதை. 

மேலும் டிப்ஸ் வேணுமா?

இங்க வாங்க...http://kuviyalgal.blogspot.in/2013/10/golu-tips.html

 



2013/10/4 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>
////தஞ்சம் தஞ்சமென அலைந்தேனுக்கு அடைக்கலம் அருளுமம்மா
நஞ்சையும் புஞ்சையும் செழித்து வளர வாருமம்மா
பஞ்சமும் பசியும் பாரினில் அறவேஒழிய தயைதாருமம்மா
வஞ்சம் தீண்டாமல் வஞ்சியே காத்தருளுமம்மா///

திருமகளைப் போற்றும் அருமையான பாடல்!!.. வளம் பெருக வரம் தருக என்று போற்றித் தொழுகின்றேன் நானும்.

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.


2013/10/4 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>

///நெல்லுக்குள் மணியாக இருக்கின்றாள் -சக்தி
நீருக்குள் சுவையாக  இனிக்கின்றாள்-அவள்
பண்ணுக்குள்பாட்டாக இசைக்கின்றாள்-இசைப்
பாட்டுக்கு யாழாக ஒலிக்கின்றாள்////

'எங்கெங்கு காணினும் சக்தியடா' வை நினைவுபடுத்தும் அருமையான வரிகள். மிக அருமையான சொல்லாட்சி அக்கா!. 

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.


2013/10/4 coral shree <cor...@gmail.com>
அன்பின் ரஞ்சனி மேடம்,


மிக்க நன்றிங்க. தங்களுடைய அன்பான ஊக்க்மான வார்த்தைக்களுக்கு மனமார்ந்த நன்றி.

அன்புடன்
பவளா


2013/10/4 Ranjani Narayanan <ranjanid...@gmail.com>

// பாற்கடல் நாயகி கற்பகவல்லி புறப்பட்டாள்!

அற்புதங்கள் புரியவே அருள்மழை பொழியவே//

என்று ஆரம்பித்து அழகாக, பெருகும் அன்புடன்  அவளை வாருமம்மா, வாருமம்மா என்று வரவேற்க கவிதை பாடி - நவராத்திரி பற்றிய சிறப்பு செய்திகளையும் சொல்லி எங்களை ஆனந்த வெள்ளத்தில் மூழ்கடித்து விட்டீர்கள், பவளா!

பாராட்டுக்கள்.

இனிய நவராத்திரி வாழ்த்துக்கள்.



2013/10/4 Ranjani Narayanan <ranjanid...@gmail.com>
காப்பு செய்யுளுடன் சக்தியை அமர்க்களமாக 
// நெல்லுக்குள் மணியாக
நீருக்குள் சுவையாக 
பண்ணுக்குள்பாட்டாக
சொல்லுக்குப்பொருளாக// திகழும் சக்தியை உங்கள் பாமாலை என்னும் ரதத்தில் எழுந்தருளப் பண்ணிவிட்டீர்கள், ஷைலஜா!
தேவியின் பரிபூரண அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும். பாராட்டுக்கள். இனிய நவராத்திரி வாழ்த்துக்கள்!


2013/10/4 shylaja <shyl...@gmail.com>
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--

                                                               
                 

Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

சொ. வினைதீர்த்தான்

unread,
Oct 4, 2013, 2:11:35 AM10/4/13
to vallamai, mintamil, thamizhvaasal
2013/10/4 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>


(நாட்டரசன் கோட்டை ஸ்ரீகண்ணுடை நாயகி அம்மனைக் குறித்த கவிதை..கண் பார்வைக் குறைபாடுகளைப் போக்கி, எல்லா நலமும் அருள்வாள் அன்னை).


பண்ணறியா சிறுமி நான் பாடவந்தேன் பா அருள்வாய்

சொல்லுக்கு சொல் தருவாய் சொல்லுக்குள் பொருளாவாய்

கல்லுக்கும் கவி அருளும் கலைமகளே நலம் தருவாய்

நாட்டரசன் கோட்டையிலே நடை பழகும் பொன்மயிலே

பாட்டரசன் கம்பன் தினம் பார்த்திருக்கும் பொன்னழகே


கண்ணின் மணி நீயே கனிந்துன்னைத் தொழுதாலே

கண்ணீர் பெருகுதடி கள்ள மனம் உருகுதடி

உண்மை நிறைந்திருக்கும் உள்ளத்தில் வாழ்பவளே

பெண்மைப் பேரொளியே பெருங்கனலே வரமருள்வாய்.

சிறப்பான கவிதை திருமிகு பார்வதி இராமச்ச்ந்திரன்.
இழையை ஆரம்பித்து ஆர்வத்துடன் கவிதையிட்ட கவிதாயினிகள் திருமிகு ஷைலஜாவுக்கும்,  பவளா அவர்களுக்கும், பல்துறை வித்தகர் தமிழ்த்தேனி அவர்களுக்கும், திருமுறையை மொழிபெயர்த்த பன்மொழியார் கணவர் திரு திவாகர் அவர்களுக்கும், வழிநடத்தும் நண்பர் திரு ஹரிகி,பேராசிரியர் அவர்களுக்கும் நவராத்திரி சக்தி தின வாழ்த்துக்கள்.
நாட்டரசன்கோட்டை தங்க ரதத்திலும், காரைக்குடி கொப்புடையாளும், கண்டரமாணிக்கம் மாணிக்க நாச்சியும் ரதத்தில் பவனிவருவது கண்கொள்ளாக் காட்சிகள். முந்தைய இலக்கியத்தில் தேரேறி வந்த தேவியர் பற்றி நண்பர்கள் கூறலாம். ஆனால் இன்று தேர்ப் பவனி வரும் சக்தியரைக் கண்டால் நம் கவிதாயினிகள் இலக்கியம் படைப்பார்கள் என்பது உறுதி.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.

Geetha Sambasivam

unread,
Oct 4, 2013, 2:22:05 AM10/4/13
to மின்தமிழ்
அனைவரின் முயற்சியையும் கண்டு பிரமித்துப் போயிருக்கிறேன்.  எனக்குக் கவிதை எழுத வராது.  உரைநடையே பல சமயங்களில் உளறலாக அமைவதும் உண்டு.  ஆகவே யாரையும் பயமுறுத்த வேண்டாம்னு நவராத்திரி பற்றிய கட்டுரைகளாகவே கொடுக்க எண்ணம்.  அதுவும் இப்போப் புதுசா எழுதலை.  ஏற்கெனவே எழுதியதை இங்கே பகிர்கிறேன்.  மன்னித்துப் பொறுத்தருள்க!

நலம் தரும் நவராத்திரி வழிபாடு குறித்துச் சில தகவல்கள்!

நவராத்திரி வழிபாடு பெண்களுக்கே உரியது. பெண்ணைத் தெய்வமாய்ப் போற்றும் நாடு நம் நாடு. பெண்ணுரிமை பேசுவோர் இதை அடிமைத் தனம் எனக் கூறினாலும் இன்றளவும் அது மாறவில்லை என்றே சொல்லலாம். சக்தி உபாசகன் ஆன பாரதியும் சக்தி வழிபாட்டிலும், காளியை வணங்குவதிலும் காட்டிய ஈடுபாடு நாம் அறிவோம். காளியே அனைத்திலும் நிலைத்து நின்று இருக்கிறாள் என்பதை அவன்

யாதுமாகி நின்றாய் காளி, 
எங்கும் நீ நிறைந்தாய்;
தீது நன்மையெல்லாம்-காளி
தெய்வ லீலையன்றோ"

என்ற பாடலின் மூலம் காட்டுகிறான். மேலும் பாடலின் கடைசியில் காளியைச் சரணடைந்து அன்பு செலுத்தினால் அவளும் அனைத்தையும் தருகிறாள் என்றும் உறுதிபடச் சொல்கின்றான்.

அன்பு தந்துவிட்டாய்-காளி-காளி
ஆண்மை தந்துவிட்டாய்
துன்பம் நீக்கிவிட்டாய்- காளி
துயரமழித்து விட்டாய்! 

என்று காளியைச் சரணடைந்தால் அனைத்துத் துன்பங்களும் நீங்கும் எனக் கூறுகிறான். இது உண்மை என்பதையும் அறிவோமல்லவா! அன்னையின் பாதங்களைச் சரணடைந்தால் அவளே கதி என இறுகப் பற்றிக்கொண்டு விட்டால் அந்தக் குழந்தையை அவள் எட்டியா உதைப்பாள். இந்த எண்ணங்களோடு தெய்வத்தின் குரல் புத்தகத்தில் செளந்தர்ய லஹரி விளக்கங்களைப் படிக்க ஆரம்பித்தேன்.. 

எல்லாவற்றுக்கும் மேலே ஆச்சரியவசமாக நான் பிரித்த பக்கத்திலும் அம்பாளின் காலடிகளைப் பிடித்துக்கொண்டு கதறுவதையே பரமாசாரியாரும் கூறி உள்ளார். இந்த மனம் பல விதங்களிலும் வெட்கம் அடைந்து, பலராலும் துக்கம் அடைந்து, அதனால் அவமானம் அடைந்து அழுகிறது. துடிக்கிறது. ஆனால் நாம் அப்போதாவது அம்பாளைச் சரணடைய வேண்டாமா! மாட்டோம். உலகாயுத விஷயங்களில் மூழ்கி, அதிலேயே கவனமாக நமக்கு ஏன் இப்படி ஒரு கதி ஏற்பட்டது என்றெல்லாம் யோசிப்போம். அதன் பின்னராவது புத்தி வருமா என்றால் வராது. இவ்வுலகத்தை நாமா உண்டாக்கினோம்? எல்லாமே நம்மால் தான் என்பது போல் ஒரு எண்ணத்தை ஏற்படுத்திக்கொண்டு மேலும் மேலும் மனம் புழுங்குவோம். கோபம், ஆத்திரம், அசூயை, எரிச்சல் எல்லாம் ஏற்படும். கொஞ்சம் யோசித்தால், சூரிய, சந்திரரை, மலையை, மரம், செடிகொடிகளை, புழுக்களை, பூச்சிகளை, விலங்குகளை, பறவைகளை எது நம்மால் ஏற்பட்டது! எதுவும் இல்லை. நாமே அவள் சிருஷ்டி. நம் மனத்தை நம்மால் அடக்க முடியாமல் தவிக்கையில் இது நம்மால் இயலக்கூடிய ஒன்றல்ல, இதுவும் அம்பிகையின் மாயை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இதை அடக்க வல்லது தேவியின் திருநாமமே என்பதைப் புரிந்து கொண்டால் அவளே கதி எனச் சரணடைந்தால் அப்படி நாம் சரணடைவதும் அவள் அனுகிரஹத்தாலேயே என்பதைப் புரிந்து கொண்டால் மனம் என்பது ஒன்று இருப்பதே தெரியாமல் உடல் இருப்பதும் தெரியாமல் பக்திப் பரவசத்தில் மூழ்கி விடுவோம். ஆனால் எங்கே! அப்போதும் நாம் நம்மைக் குறித்தே தான் நினைத்துக்கொண்டிருக்கிறோம். 

ஆனால் அம்பாள் அனைத்தையும் மன்னிப்பாள். தாய் எங்காவது தன் குழந்தையிடம் கோபமாய் நடந்து கொள்வாளா?? அப்படிக் கோபமாய் இருந்தால் அது நம் நன்மைக்கே தான் இருக்குமே அன்றி, சும்மாவானும் அம்மா கோபிக்க மாட்டாள் இல்லையா?? அதே போல் தான் அம்பாள் நமக்குத் தரும் கஷ்ட, நஷ்டங்கள் அனைத்துமே நம் நன்மைக்காகவே. நம்மைப் புடம் போட்டு நம் மனதைத் திடம் ஆக்கித் தன்னுடன் சேர்த்துக்கொண்டு தானும் ஆனந்தித்து, நம்மையும் ஆனந்தமாக இருக்கப் பண்ணுவதற்காகவே அனைத்தும் நடக்கின்றன. அன்னையைத் தொடர்ந்து வழிபடுவோர் நாளடைவில் தாம் அவளது குழந்தை என்ற மனோபாவம் தோன்ற ஆரம்பித்து ஒரு குழந்தையைப் போலவே நிர்மலமான மனத்தைப்பெறுவார்கள். குழந்தையாகவே மாறி, தேவி ஒருத்தியே அனைவருக்கும் தாய் என்ற எண்ணம் மேலிட்டு இருக்கும். பார்க்கும் அனைத்துப் பெண்களையும் அன்னை வடிவிலேயே பார்க்க ஆரம்பிப்பார்கள். 

நம் நாட்டில் தெய்வ வழிபாடு, அதிலும் பெண் தெய்வ வழிபாடு தொன்று தொட்டு, எப்போது எனத் தெரியாத காலத்திலிருந்தே இருந்து வருகிறது. பழையோள் எனவும், ஐயை எனவும் போற்றித் துதித்து வந்திருக்கின்றனர். நம் தமிழ் மூதாட்டியான ஒளவையோ “அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்” என்கிறாள். மாணிக்கவாசகரோ தம் சிவ புராணத்தில், “தாயிற்சிறந்த தயாவான தத்துவனே!” எனவும், பிடித்த பத்துக்களில் “அம்மையே, அப்பா, ஒப்பிலா மணியே” எனவும் ஈசனுக்கும் மாத்ருபாவத்தை ஏற்றிப் பாடி இருக்கிறார் என்பதையும் காண்கிறோம். 

அப்பன்நீ அம்மைநீ ஐய னும்நீ
அன்புடைய மாமனும் மாமி யும்நீ
ஒப்புடைய மாதரும் ஒண்பொரு ளும்நீ 
ஒருகுலமும் சுற்றமும் ஓரூ ரும்நீ

என்கிறார் திருத்தாண்டகத்தில் அப்பரடிகள்.

அவ்வளவு ஏன்! திருச்சியில் மலைக்கோட்டைக் கோயிலில் “தாயுமானவர்” என்ற பெயரிலேயே அருளாட்சி புரிந்து வருகிறார். செட்டிப் பெண்ணின் பிரசவத்திற்காக அவள் தாயைப் போல் வந்து அவளுக்குப் பிரசவம் பார்த்த நிகழ்ச்சி அந்தக் கோயிலின் தலவரலாறாகவே சொல்லப் படுகிறது. இதிலிருந்து தாயின் முக்கியத்துவம் புரிகிறது அல்லவா.

ஆனால் நம் சரீரத்தை, உடலை நமக்குக் கொடுத்த தாய் என்றேனும் ஓர் நாள் மறையலாம்; ஆனால் சர்வலோகத்துக்கும் மாதாவான ஜகத் ஜநநீயான அம்பாளோ நம்மை என்றும் தொடர்ந்து வருகிறாள். அதுவும் ஈசனையும் தன்னுள் அடக்கிய வண்ணம் சிவசக்தியாகத் தொடர்ந்து வந்து என்றென்றும் சாச்வதமாகத் தன் கருணையைக்காட்டிய வண்ணமே இருக்கிறாள். அத்தகையதொரு மாத்ருகாபாவத்தை நாம் அன்னையிடமே காணமுடியும். இந்த அன்னைக்கு எடுக்கும் விழாவே நவராத்திரி ஆகும். பொதுவாக விழாக்களும் பண்டிகைகளும் ஓரிரு நாட்கள் தான் இருக்கும். ஆனால் இந்த நவராத்திரிக்கு மட்டும் ஒன்பது நாட்கள்! ஒன்பது நாட்களும் அன்னைக்கு விழா எடுப்பார்கள். முக்கியமாய்ப் பெண்களுக்கெனவே ஏற்பட்ட மாபெரும் பண்டிகை நவராத்திரிப் பண்டிகை ஆகும். ஏன்?

சிருஷ்டிக்குப் பெண்ணே முக்கியம். அனைத்துக்கும் ஆதாரம் அவளே. பெண்ணில்லையேல் சிருஷ்டி இல்லை. அழிந்து போகும் இவ்வுயிருக்கு எப்படி ஒரு தாய் இருக்கிறாளோ அவ்வாறே இகம், பரம் இரண்டிலும் ரக்ஷிக்கிற ஒரு தாயையே அம்பாள் வடிவில் நாம் வழிபடுகிறோம். இந்த மண்ணில் தோன்றிய புல்லில் இருந்து, புழு, பூச்சி, வண்டுகள், பறவைகள், அசையும் அசையாப் பொருட்கள், விலங்குகள், மலைகள், காடுகள் என அனைத்துக்கும் உருக்கொடுத்து சிருஷ்டியை ஏற்படுத்திய தாயை நாம் வணங்கி அவளுக்கு நன்றிக்கடன் செலுத்துவதே நவராத்திரியின் தாத்பரியம். மஹாபிரளயம் முடிந்து சிருஷ்டி ஆரம்பிக்கையில் முதலில் பரம்பொருள் உண்டாக்குவது இச்சா சக்தி என்னும் சக்தி. அதன் பின்னரே கிரியை உண்டாகிறது. முடிவில் ஞானம் கிட்டுகிறது. இவையே முறையாக முதல் மூன்று நாட்கள் துர்கை, நடுவில் மூன்று நாட்கள் லக்ஷ்மி, கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி என வழிபடப் படுகிறது. இம்மூன்று சக்திகளும் சேர்ந்த திரிபுரசுந்தரியையே விஜயதசமி அன்று வெற்றித் தேவதையாக வழிபடுகிறோம்.

துர்கையானவள் வீரத்தின் விளைநிலமாக, சிவனுக்குப் ப்ரியமானவளாக, நெருப்பைப் பார்க்கையில் அழகாக இருக்கும், தொட்டால் சுடும் என்பது போல் சீற்றம் நிறைந்தவளாக, கேடுகளை அடியோடு அழிக்கும் மாபெரும் சக்தியாக விளங்குகிறாள். இந்த துர்கைகள் ஒன்பது பேர். அவர்கள் முறையே வன துர்கை, சூலினி துர்கை, ஜாத்வே துர்கை, ஜ்வாலா துர்கை, சாந்தி துர்கை, சபரி துர்கை, தீப துர்கை, ஆசுரி துர்கை, லவண துர்கை


லக்ஷ்மி: செல்வத்தின் பிறப்பிடம், விஷ்ணுவின் மார்பில் வாசம் செய்பவள், தாமரை மலர் போன்ற அழகுடையவள், அமுதமயமான இவள் வறுமையைப் போக்குவாள். கிரியா சக்தியான இவள் அஷ்ட லக்ஷ்மிகளாகவும் விளங்குகிறாள். அவர்கள் முறையே ஆதி லக்ஷ்மி, தன லக்ஷ்மி, வீர லக்ஷ்மி, தைரிய லக்ஷ்மி, சந்தான லக்ஷ்மி, தான்ய லக்ஷ்மி, கஜ லக்ஷ்மி, விஜய லக்ஷ்மி

சரஸ்வதி: ஆரவாரமில்லாமல் ஜொலிக்கும் வைரம் போன்ற இவள், கல்வியின் தெய்வம், ஞானச் சுடர், பிரம்மனுக்குப் பிரியமானவள். அஷ்ட சரஸ்வதியர் வாகீஸ்வரி, சித்தேஸ்வரி, துளஜா, கீர்த்தீஸ்வரி, அந்தரிக்ஷ சரஸ்வதி, கட சரஸ்வதி, நீல சரஸ்வதி, கினி சரஸ்வதி.

அதே போல் மூன்று தேவியரின் முப்பெரும் சக்திகளாக முதலில் துர்கைக்கு மாஹேஸ்வரி, கெளமாரி, வாராஹி ஆகியோரும் லக்ஷ்மிக்கு இந்திராணி, வைஷ்ணவி, மஹாலக்ஷ்மி ஆகியோரும், சரஸ்வதிக்கு மஹாசரஸ்வதி, நாரசிம்ஹி, சாமுண்டி ஆகியோரும் சக்திகள். இவர்கள் அனைவரும் சேர்ந்தே மஹிஷனை அழித்தார்கள் எனப்படும். 


துணைப் புத்தகங்கள்: தெய்வத்தின் குரல் ஆறாம் பாகம், செளந்தர்ய லஹரி விளக்கங்கள்
ஸ்ரீதேவி மஹாத்மியம், ராமகிருஷ்ணா பதிப்பகம், விளக்க உரை அண்ணா.

நாளை நவராத்திரி முதல் நாள் சனிக்கிழமையில் ஆரம்பிப்பதால் நாளைய தினத்துக்கு உரிய துர்கையையும், அவளுக்கான வழிபாடு முறையையும் இன்றே இட்டுவிடுகிறேன். இரண்டு பதிவுகளை ஒரே சமயம் இடுவதற்குப் பொறுத்துக்கொள்ளவும்.  நாளையிலிருந்து பதிவுகள் ஒவ்வொன்றாகவே வரும்.  நன்றி. வணக்கம்.





360.gif

Geetha Sambasivam

unread,
Oct 4, 2013, 2:31:36 AM10/4/13
to மின்தமிழ்
நவராத்திரிகளில் துர்க்கையை நவதுர்க்கா வடிவாக வழிபடுதல் மிகச் சிறப்பான ஒன்றாகும். ஒவ்வொரு கிழமைக்கும் ஒரு துர்க்கையாக நவராத்திரி ஒன்பது நாட்களும் வழிபடவேண்டும். பக்தர்கள் துயர் தீர்க்கும் துர்க்கையை வழிபட்டால் நவகிரஹ தோஷங்களும் விலகும் என்றும் சொல்லுவார்கள். இந்த வருஷம் நவராத்திரி சனிக்கிழமை அன்று ஆரம்பிக்கின்றது. அன்று வழிபடவேண்டியவள் “காலராத்ரி” “காலி” என்றெல்லாம் அழைக்கப் படும் அம்பிகை ஆவாள். கால என்பது காலத்தை மட்டும் குறிக்காமல், கறுப்பு நிறத்தையும், காற்றையும் குறிக்கும். காற்றின் வேகத்தில் நம்மிடம் வந்தடைவாள் காலி என அழைக்கப் படும் மஹாகாளி. காலத்தை வென்றவளான இவள் இரவைப் போன்ற கரிய நிறத்துடன் சற்று அச்சம் தரும் கோலத்திலேயே காணப் படுகின்றாள். என்றாலும் அன்பர்களுக்கு அருளும் தயவான உள்ளம் படைத்தவள் இவள். கரிய நிறத்துடன் மங்களங்களை அள்ளித் தருவதாலேயும் இவளுக்குக் காலராத்ரி எனப் பெயர் ஏற்பட்டது. ராத்ரி என்னும் சொல்லுக்கு இரவு என்ற பொருள் மட்டுமில்லாமல் மங்களம் என்னும் அர்த்தமும் உண்டு. மங்களகரமான காலத்தை ஏற்படுத்துவதாலும் மங்களகாலி என்றும் அழைக்கப் படுவாள் இவள். நவராத்திரி சனிக்கிழமைகளில் இவளை வணங்கலாம். சனீஸ்வரனின் ஆதிக்கத்தின் வலிமை கொஞ்சம் குறையும் என்பதோடு அதைத் தாங்கும் மனவல்லமையையும் அளிக்க வல்லவள் இந்தக் காளி. ஈசன் தாருகாமுனிவர்கள் ஏவிய கஜாசுரனைக் கொன்று யானைத் தோல் போர்த்தி ஆடிய ஆட்டம் பூதத் தாண்டவம் எனப் படும் அந்தத் தாண்டவத்தின் போது தோன்றியவள் காலராத்திரி என்பார்கள்.

சித்தாத்ரி: இவளும் சனிக்கிழமைகளில் வழிபடவேண்டியவளே. கேதுவின் பார்வையால் தீது வருமோ என அஞ்சுபவர்கள் இவளை வழிபடலாம். சித்தர்களுக்கும், ரிஷி, முனிவர்களுக்கும், அஷ்ட சித்திகளும் அளிக்க வல்லவள் இவள். அணிமா, மகிமா, கிரிமா, லகிமா, ப்ராப்தி, பரகாம்யம், ஈஷித்வம், வாஷித்வம் என்னும் அட்டமாசித்திகளை அளிப்பதால் இவளுக்கு சித்தாத்ரி எனப் பெயர் ஏற்பட்டது. நினைத்த காரியங்களில் சித்தியடையவும் இவளை வழிபடலாம் என்று சொல்கின்றனர். நவரசங்களையும் வெளிப்படுத்து நவரச நாட்டியத்தை சிவ நடனம் அல்லது சிருங்காரத் தாண்டவம் என்பார்கள். ஈசன் இந்தத் தாண்டவம் ஆடும்போது தோன்றியவளே சித்தாத்ரி அல்லது சித்தி ராத்திரி.

நவராத்திரியில் முதல்நாள் பொட்டுக் கோலம் போட்டு அம்பிகையை பாலை எனக் கூறி வழிபடவேண்டும். சிலர் குமாரி எனவும் வழிபடுவர். இரண்டு வயதுப் பெண் குழந்தையை பாலையாக வழிபடுதல் நல்லது. அந்தக் குழந்தைக்குப் பிடித்த ஆகாரங்களைச் செய்து கொடுக்கலாம். பிடித்த உடையை வாங்கிக் கொடுக்கலாம் என்றாலும் மஞ்சள் நிறம் சிறப்பாகச் சொல்லப் படுகிறது. மஞ்சள் சாமந்திப் பூ விசேஷம் வழிபாட்டுக்கு. செவ்வரளியும் பயன்படுத்தலாம். நைவேத்தியம் எலுமிச்சை சாதம். மாலை நைவேத்தியம் வெல்லம், தேங்காய், ஏலக்காய் போட்ட பச்சைப் பயறுச் சுண்டல். சுண்டல் குறித்த செய்முறைக்குறிப்புக் கீழே வரும் . எல்லாருக்கும் தெரிஞ்ச துர்காஷ்டகத்தை இங்கே ஒவ்வொரு நாள் ஒன்றாகக் கொடுக்கிறேன். கடைசி நாள் எல்லாத்தையும் சேர்த்துக்கொடுக்க முயல்கிறேன்.

துர்கா அஷ்டகம்:

1. வாழ்வுமானவள் துர்கா வாக்குமானவள்
வானில் நின்றவள் இந்த மண்ணில் வந்தனள்
தாழ்வு அற்றவள் துர்கா தாயுமானவள்
தாபம் நீக்கியே என்னைத் தாங்கும் துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே!

துர்காஷ்டகம் தொடரும்.


திருமதி ஜெயஸ்ரீ நீலகண்டனின் விருப்பத்தின் படி லலிதா நவரத்தினமாலையின் முதல் பாடல் கீழே இடம் பெறுகிறது. முதலில் வைரம் போல் ஜொலிக்கும் ஸ்ரீலலிதை!

மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே! மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே!
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே! மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே!

கற்றும் தெளியார் காடே கதியாய் கண்மூடி நெடுங்கனவான தவம்
பெற்றும் தெரியார் நிலையென்னில் அவர் பெருகும் பிழை என பேசத் தகுமோ
பற்றும் வயிரப் படைவாள் வயிரப் பகைவர்க்கெமனாக எடுத்தவளே
வற்றாத அருட் சுனையே வருவாய் மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே!


இன்றைய அலங்காரம் ராஜராஜேஸ்வரி.

நிவேதனம் காலை: சர்க்கரைப் பொங்கல், எலுமிச்சைச் சாதம். 

சர்க்கரைப் பொங்கல்: தேவையான பொருட்கள்: பச்சரிசி ஒரு கிண்ணம், பாசிப்பருப்பு ஒரு கரண்டி. பால் அரை லிட்டர், வெல்லம் அரை கிலோ தூளாக்கவும். ஏலக்காய்த்தூள், முந்திரிப்பருப்பு, திராக்ஷைப்பழம், தேவைக்கேற்ப. நெய் குறைந்த பக்ஷம் ஐம்பது கிராம்.

பாசிப்பருப்பையும், பச்சரிசியையும் வாசனை வரும் அளவு வறுத்துக் கொண்டு பாலில் குழைய விடவும்.  வெல்லத்தூளைச் சேர்த்துக் கிளறவும்.  வெல்லம் சேர்ந்து கெட்டியாகும் சமயம் நெய்யைச் சூடாக்கி முந்திரிப்பருப்பு, திராக்ஷைப்பழம் சிவக்க வறுத்துச் சேர்க்கவும்.  ஏலத்தூள் சேர்க்கவும். 

எலுமிச்சைச் சாதம்:  தேவையான பொருட்கள்:  உதிராக வடித்த சாதம் இரண்டு கிண்ணம், பச்சை மிளகாய் 2, இஞ்சி(தேவையானால்), கருகப்பிலை,  இரண்டு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் அல்லது சமையல் எண்ணெய், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு வகைக்கு ஒவ்வொரு டீஸ்பூன், வேர்க்கடலை(வறுத்தது) இரண்டு டேபிள் ஸ்பூன், உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், எலுமிச்சம்பழம் சிறிதாக ஒன்று.

உதிராக வடித்த சாதத்தில் எலுமிச்சைச் சாறு, உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத் தூள் சேர்த்து, ஒரு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணையைக் கலந்து வைக்கவும்.  வாணலியில்  மீதம் இருக்கும் நல்லெண்ணெயில் கொஞ்சம் போல் தாளிக்க மட்டும் எடுத்துக் காய வைத்துக் கடுகு, உபருப்பு, க.பருப்பு, வேர்க்கடலை, கருகப்பிலை, பச்சை மிளகாய் போட்டுத் தாளித்து எலுமிச்சைச் சாறு சேர்த்த சாதத்தில் கொட்டிக் கிளறவும்.  அரை மணி நேரம் வைத்துவிட்டுப் பின்னர் பரிமாறலாம்.

மாலை: பயறுச்சுண்டல். 

செய்முறை: எந்தச் சுண்டலுக்கானாலும் முதலில் நன்கு ஊற வைத்துவிடுங்கள். இல்லை எனில் குழைய வேகாது. ஒவ்வொருத்தர் பச்சைப்பயறைச் சும்மா வெறும் வாணலியில் வறுத்துவிட்டுக் குக்கரில் வேக வைத்தால் போதுமானது என்கின்றனர். பயறு வகைகள் சில சமயம் கல் போல இருக்கும். அரித்தால் அடியில் தங்கும். ஆகவே பயறு வேக வைக்கையில் அம்முறையில் பயறு அவ்வளவு நன்கு வேகாது. மேலும் வெல்லம் போட்டுச் செய்கையில் வெல்லத்தைச் சேர்த்ததும் விறைத்துக்கொண்டு காணப்படும். காரம் போட்டுச் செய்தாலும் கொஞ்சம் நறுக் நறுக்கென்று தான் இருக்கும். சுண்டல் குழைய வேண்டும் என்றால் முதல்நாளே பயறாகவே இருந்தாலும் ஊற வைக்கவும்.

ஊற வைத்த பயறை நேரடியாகவே வேக வைக்கலாம். குக்கரில் வைத்தால் மாவு போல் ஆகிவிடக் கூடிய வாய்ப்பு உண்டு. வேக வைத்த பயறில் வெல்லம் போட்டுச் செய்வதானால் ஒரு சிட்டிகை மட்டும் உப்புச் சேர்த்தால் போதும். 

வாணலியில் எண்ணெய் விட்டுக் கடுகு தாளித்துக்கொண்டு, வேக வைத்த பயறு, கால் கிலோ எனில் 50 கிராம் வெல்லம் பொடி செய்து சேர்க்கவும். வெல்லத்தோடு பயறு நன்கு கலந்து வெல்ல வாசனை போனதும் தேங்காய்த் துருவல் சேர்த்து ஏலப்பொடி சேர்க்கவும்.

காரச் சுண்டல்: பயறு வேக வைக்கையிலேயே தேவையான உப்பைச் சேர்க்கவும். பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றிக் கடுகு, பெருங்காயம், மி.வத்தல், கருகப்பிலை தாளித்துப் பயறைச் சேர்க்கவும். தேவையானால் ஒரு ஸ்பூன் சாம்பார் பொடியைச் சேர்க்கவும். அல்லது மி.வத்தல், தனியாவை எண்ணெய் கொஞ்சமாக ஊற்றிக்கொண்டு வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ளவும். அந்தப் பொடியைப் போடலாம். நன்கு கலந்ததும், தேங்காய் துருவல் சேர்க்கவும். 


டிஸ்கி: ஞாயிற்றுக்கிழமைக்கான வழிபாட்டு முறை நாளை வெளியாகும்.  நன்றியுடன்

shylaja

unread,
Oct 4, 2013, 2:39:47 AM10/4/13
to தமிழ் வாசல், மின்தமிழ்
ரத்த்தை  அன்புடனும்  ஆர்வமுடனும் இழுத்துக்கொண்டிருக்கும் அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் நன்றி.தேவ் ஜீ ரஞ்சனிமேடம்  வினைதீர்த்தான் ஐயா   புரபசர்ஜீ  ஹரிகீஜீ  ஆகியோரின்  மேலான  கருத்துக்கும்  அனைவர் சார்பிலும் நன்றி.  கீதா  அவர்களின் நவராத்திரி விஷயங்கள்  சுண்டல் செய்முறை சேர்த்து அனைத்திற்கும்  மிக்க நன்றி.


2013/10/4 Geetha Sambasivam <geetha...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

Nagarajan Vadivel

unread,
Oct 4, 2013, 2:48:27 AM10/4/13
to மின்தமிழ்

2013/10/4 Geetha Sambasivam <geetha...@gmail.com>

 எனக்குக் கவிதை எழுத வராது.

​பெண் கவிஞர்கள் அதிகம் இலக்கிய உலகில் வலம் வராததன் மர்மம் என்னவோ

ஆண்களைப் பாட மனம் ஒப்புவதில்லையோ?

மிஞ்ஞானி


Subashini Tremmel

unread,
Oct 4, 2013, 3:02:40 AM10/4/13
to மின்தமிழ், Subashini Tremmel
சக்தி ரதத்தை இனிதே தொடக்கிய ஷைலஜாவிற்கும் தொடர்ந்து கவிதையும் பொருளும் வழங்கிக்கொண்டிருக்கும் ஏனைய தோழியருக்கும் என் வாழ்த்துக்கள். அன்னையின் அருள் எல்லோருக்கும் கிடக்க பிரார்த்தனைகளுடன்....

சுபா


2013/10/4 shylaja <shyl...@gmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

Dhivakar

unread,
Oct 4, 2013, 3:04:27 AM10/4/13
to மின்தமிழ்

அடியேனும் உண்டு சக்தி ரதத்தை இழுப்பதில் //


மீனாட்சியுமையே 

அம்மையே அப்பனின் இடரூபவதியே மீனாட்சியுமையே

செம்மையே செவ்விதழ்நாயகியே சிவகாமசுந்தரியே

இம்மையின்இயக்கமே இன்பத்தின் ஊற்றே  இன்னிசையே

எம்மையும் ஆட்கொண்டருளும் அம்மையே போற்றி!!                1

 

திண்ணமாய் உள்ளத்திலூறும் எண்ணமாய் திளைப்பவளே

எண்ணயெண்ண என்னிரண்டு கண்ணநீர் பெருகுதும்மா

கண்ணின்மணியே மணியினொளியே ஒளிரும் கீற்றே

மண்ணில் வநது ஆட்கொண்டருளும் அம்மையேபோற்றி!!      2

 

காற்றோடு கலந்து அனலாகி புனலாகித் தோன்றி

ஆற்றுமணலென மலையென வளமிகு பூமியாய்மாறி

மற்றுமொன்றறியா விண்ணாகி தொலைவாகிப் போனாலும்  3

பற்றோடு வந்தெமை ஆட்கொண்டருளும் அம்மையேபோற்றி!!



2013/10/4 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>
செய்து விட்டேன் தோழி!. மிக்க நன்றி!


2013/10/4 coral shree <cor...@gmail.com>
அன்பின் பார்வதி,

உங்கள் படையலையும் சமர்ப்பிக்கலாமே?

அன்புடன்
பவளா


2013/10/4 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>
////தஞ்சம் தஞ்சமென அலைந்தேனுக்கு அடைக்கலம் அருளுமம்மா
நஞ்சையும் புஞ்சையும் செழித்து வளர வாருமம்மா
பஞ்சமும் பசியும் பாரினில் அறவேஒழிய தயைதாருமம்மா
வஞ்சம் தீண்டாமல் வஞ்சியே காத்தருளுமம்மா///

திருமகளைப் போற்றும் அருமையான பாடல்!!.. வளம் பெருக வரம் தருக என்று போற்றித் தொழுகின்றேன் நானும்.

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.
2013/10/4 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>

///நெல்லுக்குள் மணியாக இருக்கின்றாள் -சக்தி
நீருக்குள் சுவையாக  இனிக்கின்றாள்-அவள்
பண்ணுக்குள்பாட்டாக இசைக்கின்றாள்-இசைப்
பாட்டுக்கு யாழாக ஒலிக்கின்றாள்////

'எங்கெங்கு காணினும் சக்தியடா' வை நினைவுபடுத்தும் அருமையான வரிகள். மிக அருமையான சொல்லாட்சி அக்கா!. 

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.


2013/10/4 coral shree <cor...@gmail.com>
அன்பின் ரஞ்சனி மேடம்,


மிக்க நன்றிங்க. தங்களுடைய அன்பான ஊக்க்மான வார்த்தைக்களுக்கு மனமார்ந்த நன்றி.

அன்புடன்
பவளா


2013/10/4 Ranjani Narayanan <ranjanid...@gmail.com>

// பாற்கடல் நாயகி கற்பகவல்லி புறப்பட்டாள்!

அற்புதங்கள் புரியவே அருள்மழை பொழியவே//

என்று ஆரம்பித்து அழகாக, பெருகும் அன்புடன்  அவளை வாருமம்மா, வாருமம்மா என்று வரவேற்க கவிதை பாடி - நவராத்திரி பற்றிய சிறப்பு செய்திகளையும் சொல்லி எங்களை ஆனந்த வெள்ளத்தில் மூழ்கடித்து விட்டீர்கள், பவளா!

பாராட்டுக்கள்.

இனிய நவராத்திரி வாழ்த்துக்கள்.



2013/10/4 Ranjani Narayanan <ranjanid...@gmail.com>
காப்பு செய்யுளுடன் சக்தியை அமர்க்களமாக 
// நெல்லுக்குள் மணியாக
நீருக்குள் சுவையாக 
பண்ணுக்குள்பாட்டாக
சொல்லுக்குப்பொருளாக// திகழும் சக்தியை உங்கள் பாமாலை என்னும் ரதத்தில் எழுந்தருளப் பண்ணிவிட்டீர்கள், ஷைலஜா!
தேவியின் பரிபூரண அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும். பாராட்டுக்கள். இனிய நவராத்திரி வாழ்த்துக்கள்!


2013/10/4 shylaja <shyl...@gmail.com>
கவிதையும் நவ்ராத்திரிக்குறிப்பும்  சிறப்பு பவழா!
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--

                                                               
                 

Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--

                                                               
                 

Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.

Geetha Sambasivam

unread,
Oct 4, 2013, 3:29:48 AM10/4/13
to மின்தமிழ்
திடீர்னு ரதம் வேகமாய்ப் போகுதேனு பார்த்தேன். :)))))


2013/10/4 Dhivakar <venkdh...@gmail.com>

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Oct 4, 2013, 3:31:32 AM10/4/13
to மின்தமிழ்
எத்தனை எத்தனை தகவல்கள் கீதாம்மா!. சுண்டல் டிப்ஸ் குறித்து வைத்துக் கொண்டேன். மனமார்ந்த நன்றி!


2013/10/4 Geetha Sambasivam <geetha...@gmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Geetha Sambasivam

unread,
Oct 4, 2013, 3:31:25 AM10/4/13
to மின்தமிழ்
தெரியலை.  ஆண்கள் மட்டும் தான் பாட இருக்கிறார்களா என்ன?  எத்தனையோ இருக்கு பாட! :)))

shylaja

unread,
Oct 4, 2013, 3:33:11 AM10/4/13
to mintamil
இப்படில்லாம் கேள்விகேட்டு  எதுவும் பத்தவைக்கமுடியாது ப்.ப (பத்தவைக்கிற பரட்டை:) அவர்களே! 


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.

Geetha Sambasivam

unread,
Oct 4, 2013, 3:52:59 AM10/4/13
to மின்தமிழ்
உங்களுக்குத் தெரியாததா பார்வதி!  நான் புதுசா எல்லாம் எதுவும் சொல்லலை. 


2013/10/4 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>
எத்தனை எத்தனை தகவல்கள் கீதாம்மா!. சுண்டல் டிப்ஸ் குறித்து வைத்துக் கொண்டேன். மனமார்ந்த நன்றி!


360.gif

Kamala Devi

unread,
Oct 4, 2013, 4:24:17 AM10/4/13
to mint...@googlegroups.com
மைதிலி
சகதிக்காக சக்தியான தொடக்கம்.
மனமுவந்த வாழ்த்துக்கள்
கமலம்
 


Kamala Devi

unread,
Oct 4, 2013, 4:27:46 AM10/4/13
to mint...@googlegroups.com
என்ன அருமை, என்ன அருமை,
மைதிலி, பவழம், பார்வதி, ரஞ்சனியோடு எங்கள் திவாகரின் பாடலும் ......
நவராத்ரி தேவியரை பாலபிஷேகத்தில் முழுக்காட்டிய பூரிப்பை
மனக்கண்ணால் கண்ட மகிழ்வில், அனைவருக்கும்
வாழ்த்துக்கள்
கமலம்

 


From: Dhivakar <venkdh...@gmail.com>
To: மின்தமிழ் <minT...@googlegroups.com>
Sent: Friday, 4 October 2013, 15:34
Subject: [MinTamil] Fwd: [வல்லமை] Re: [தமிழ் வாசல்] சக்தி ரதம்!

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Kamala Devi

unread,
Oct 4, 2013, 4:30:33 AM10/4/13
to mint...@googlegroups.com
கீதா
இதுவே தேவி வழிபாடுதான்
இந்த கட்டுரை அவ்வளவு பயனுள்ளது
க.

 


From: Geetha Sambasivam <geetha...@gmail.com>
To: மின்தமிழ் <mint...@googlegroups.com>
Sent: Friday, 4 October 2013, 15:01
Subject: Re: [MinTamil] Fwd: Re: [வல்லமை] Re: [தமிழ் வாசல்] சக்தி ரதம்!

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Kamala Devi

unread,
Oct 4, 2013, 6:28:21 AM10/4/13
to mint...@googlegroups.com
 சக்திக்காக --
என்றிருக்கவேண்டும், தட்டச்சு பிழைக்கு மன்னிக்க
க.


From: Kamala Devi <saahi...@yahoo.com.sg>
To: "mint...@googlegroups.com" <mint...@googlegroups.com>
Sent: Friday, 4 October 2013, 16:24
Subject: Re: [MinTamil] சக்தி ரதம்!

PRASATH

unread,
Oct 4, 2013, 8:36:17 AM10/4/13
to தமிழ் வாசல், mintamil, vallamai, தமிழ் சிறகுகள்
இந்த இழையை கிடைத்த குறுகிய கால அவகாசத்தில் ஒரு பார்வை பார்க்க நேரிட்டது...
 
அனைவரது பாடல்களும் அருமை.
 
குறிப்பாக, ஆரம்பித்து வைத்த ஷைலஜா அக்கா, திவாகர் ஐயா, பார்வதி இராமச்சந்திரன் இவர்களது பாடல்களைச் சொல்லலாம். மற்றவர்களின் பாடல்களும் நன்றாக இருக்கிறது என்றாலும் மேல் சொன்னவர்கள் பாடலில் வரிகளுக்கிடையே ஒத்த தாள கதி இருப்பதைப் படிக்கும் பொழுது உணர முடிந்ததால் அவர்கள் பெயர்களைக் குறிப்பிட்டு சொன்னேன்...
 
****************************************
 
2013/10/4 shylaja <shyl...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal.

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Oct 4, 2013, 11:44:39 AM10/4/13
to vall...@googlegroups.com, மின்தமிழ்
////பாராட்டுக்களும் நன்றியும்! /////

மிக்க நன்றி ரஞ்சனி அவர்களே!!. ஐடியாவை செய்து பாத்துட்டு சொல்லுங்க..

திரு.பிரசாத் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.


2013/10/4 Ranjani Narayanan <ranjanid...@gmail.com>
தேனாய் இனிக்கும் திருநாமம் உடைய மீனாட்சி அன்னையின் அருள் வேண்டும் தமிழ் தேனீ அவர்களின் கவிதை அருமை. பாராட்டுக்கள்!

//கண்ணின் மணி நீயே கனிந்துன்னைத் தொழுதாலே

கண்ணீர் பெருகுதடி கள்ள மனம் உருகுதடி// என்று ஸ்ரீகண்ணுடைநாயகியை போற்றிப் பாடும் திருமதி பார்வதியின் கவிதையில் நம் நெஞ்சமும் உருகுகிறது. 

@பார்வதி நீங்கள் கொடுத்திருக்கும் நவராத்திரி ஸ்டாப் கேப் அரேன்ஞ்மென்ட் ஐடியா சூப்பர்! பாராட்டுக்களும் நன்றியும்! 





2013/10/4 DEV RAJ <rde...@gmail.com>
அன்னை இந்திரனுடனும், வருணனுடனும்
போர் புரிவது இதில் உள்ளது -

http://www.panoramio.com/photo/59480926

வெள்ளையானை மீது இருப்பவர் இந்திரன்;
மகரத்தின் மீது இருப்பவர் வருணன்


தேவ்

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

Sk Natarajan

unread,
Oct 4, 2013, 10:15:59 PM10/4/13
to தமிழ் வாசல், mintamil, vallamai, தமிழ் சிறகுகள்
அருமை


என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்




2013/10/4 shylaja <shyl...@gmail.com>

Sk Natarajan

unread,
Oct 4, 2013, 10:16:33 PM10/4/13
to தமிழ் வாசல், mintamil, vallamai, தமிழ் சிறகுகள்
அருமை


என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்




2013/10/4 coral shree <cor...@gmail.com>

Dhivakar

unread,
Oct 5, 2013, 12:38:40 AM10/5/13
to vallamai, மின்தமிழ், தமிழ் வாசல், தமிழ் சிறகுகள்

அகத்தினுள்ளே இகபரசுக நாயகியாய் நிறைந்தவளே

சகமனைத்தும் ரட்சிக்கும் சகன்மோகினியே சங்கரியேயுன்

மகத்துவம் முழுவதும் சகத்தினில்தான் யாரறிவார்

திகம்பரனின் சுந்தரியே ஆட்கொண்டருளும் அம்மையேபோற்றி!!

 

மாசிலாமணியே மலயத்துவசன்மகளே மண்ணாண்ட மீனாளே

காசினியின் அன்னையாய் கருணைக்கடலாய் வந்தவளே

வீசுதென்றலாய் மதுரையீசன் மனதிற்குளிர்ந்த தாயே                5

பசுமைநாயகியே எமையாட்கொண்டருளும் அம்மையேபோற்றி!!

 

காமனை எரித்தவனுக்கு காமத்தைக்கொடுப்பவளே கற்பகமே

சோமசுந்தரன் மனங்கவர்ந்த மங்கையே மீனாட்சியுமையே

பாமரனைக் காத்தருளும் தென்மதுரைத் தேனிலவே                    6

எமபயம் தீர்த்து எமையாட்கொண்டருளும் அம்மையே போற்றி!!

 



2013/10/4 Dhivakar <venkdh...@gmail.com>
அடியேனும் உண்டு சக்தி ரதத்தை இழுப்பதில் //


மீனாட்சியுமையே 

அம்மையே அப்பனின் இடரூபவதியே மீனாட்சியுமையே

செம்மையே செவ்விதழ்நாயகியே சிவகாமசுந்தரியே

இம்மையின்இயக்கமே இன்பத்தின் ஊற்றே  இன்னிசையே

எம்மையும் ஆட்கொண்டருளும் அம்மையே போற்றி!!                1

 

திண்ணமாய் உள்ளத்திலூறும் எண்ணமாய் திளைப்பவளே

எண்ணயெண்ண என்னிரண்டு கண்ணநீர் பெருகுதும்மா

கண்ணின்மணியே மணியினொளியே ஒளிரும் கீற்றே

மண்ணில் வநது ஆட்கொண்டருளும் அம்மையேபோற்றி!!      2

 

காற்றோடு கலந்து அனலாகி புனலாகித் தோன்றி

ஆற்றுமணலென மலையென வளமிகு பூமியாய்மாறி

மற்றுமொன்றறியா விண்ணாகி தொலைவாகிப் போனாலும்  3

பற்றோடு வந்தெமை ஆட்கொண்டருளும் அம்மையேபோற்றி!!

2013/10/4 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>
செய்து விட்டேன் தோழி!. மிக்க நன்றி!


2013/10/4 coral shree <cor...@gmail.com>
அன்பின் பார்வதி,

உங்கள் படையலையும் சமர்ப்பிக்கலாமே?

அன்புடன்
பவளா


2013/10/4 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>
////தஞ்சம் தஞ்சமென அலைந்தேனுக்கு அடைக்கலம் அருளுமம்மா
நஞ்சையும் புஞ்சையும் செழித்து வளர வாருமம்மா
பஞ்சமும் பசியும் பாரினில் அறவேஒழிய தயைதாருமம்மா
வஞ்சம் தீண்டாமல் வஞ்சியே காத்தருளுமம்மா///

திருமகளைப் போற்றும் அருமையான பாடல்!!.. வளம் பெருக வரம் தருக என்று போற்றித் தொழுகின்றேன் நானும்.

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.


2013/10/4 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>

///நெல்லுக்குள் மணியாக இருக்கின்றாள் -சக்தி
நீருக்குள் சுவையாக  இனிக்கின்றாள்-அவள்
பண்ணுக்குள்பாட்டாக இசைக்கின்றாள்-இசைப்
பாட்டுக்கு யாழாக ஒலிக்கின்றாள்////

'எங்கெங்கு காணினும் சக்தியடா' வை நினைவுபடுத்தும் அருமையான வரிகள். மிக அருமையான சொல்லாட்சி அக்கா!. 
அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.


2013/10/4 coral shree <cor...@gmail.com>
அன்பின் ரஞ்சனி மேடம்,


மிக்க நன்றிங்க. தங்களுடைய அன்பான ஊக்க்மான வார்த்தைக்களுக்கு மனமார்ந்த நன்றி.

அன்புடன்
பவளா


2013/10/4 Ranjani Narayanan <ranjanid...@gmail.com>

// பாற்கடல் நாயகி கற்பகவல்லி புறப்பட்டாள்!

அற்புதங்கள் புரியவே அருள்மழை பொழியவே//

என்று ஆரம்பித்து அழகாக, பெருகும் அன்புடன்  அவளை வாருமம்மா, வாருமம்மா என்று வரவேற்க கவிதை பாடி - நவராத்திரி பற்றிய சிறப்பு செய்திகளையும் சொல்லி எங்களை ஆனந்த வெள்ளத்தில் மூழ்கடித்து விட்டீர்கள், பவளா!

பாராட்டுக்கள்.

இனிய நவராத்திரி வாழ்த்துக்கள்.



2013/10/4 Ranjani Narayanan <ranjanid...@gmail.com>
காப்பு செய்யுளுடன் சக்தியை அமர்க்களமாக 
// நெல்லுக்குள் மணியாக
நீருக்குள் சுவையாக 
பண்ணுக்குள்பாட்டாக
சொல்லுக்குப்பொருளாக// திகழும் சக்தியை உங்கள் பாமாலை என்னும் ரதத்தில் எழுந்தருளப் பண்ணிவிட்டீர்கள், ஷைலஜா!
தேவியின் பரிபூரண அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும். பாராட்டுக்கள். இனிய நவராத்திரி வாழ்த்துக்கள்!


2013/10/4 shylaja <shyl...@gmail.com>
கவிதையும் நவ்ராத்திரிக்குறிப்பும்  சிறப்பு பவழா!
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--

                                                               
                 

Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--

                                                               
                 

Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.

Geetha Sambasivam

unread,
Oct 5, 2013, 12:54:41 AM10/5/13
to மின்தமிழ்
நவராத்திரி இரண்டாம் நாளான இன்றைய துர்கை சைலபுத்திரி எனப்படுவாள்.  சைலம் என்றால் மலை. மலையரசன் மகளான அம்பிகையையே இது குறிக்கிறது. பார்வதி, பர்வதகுமாரி, பவானி என்றெல்லாம் அழைக்கப் படும் இவளே, அனைவரிலும் தேவர், மூவர் என யாவரிலும் சக்தியாக நிறைந்து நிற்பவள். இவள் சக்தியின்றி எந்த இயக்கமும் இல்லை.நடைபெறாது. இவள் தமிழில் மலைமகள் என அழைக்கப் படுகின்றாள். மகாமேருவை வலம் வந்து கொண்டிருக்கும் ஆதித்தியன் ஆன சூரியன் இவளின் பக்தர்களுக்கு அருள் புரியும் வல்லமை கொண்டவன். நவராத்திரி நாட்களில் ஞாயிற்றுக் கிழமை அன்று இவளை வணங்கித் துதித்தால் ஆரோக்கியம் பெருகும். மனம் விசாலமடையும். பர்வத ராஜபுத்திரி வேண்டியது அருளுவாள். வலக்காலை ஊன்றி இடக்காலைத் தூக்கி ஆடிய ஆநந்த தாண்டவத்தின் ரிஷிமண்டல கோலத்தில் தோன்றியவளே ஸ்ரீசைலபுத்ரி என்னும் இந்த தேவி ஆவாள்.

நவராத்திரி இரண்டாம் நாளான இன்று அம்பிகையை வாராஹியாகச் சிலர் வழிபடுவார்கள். தன் தெற்றிப் பற்களால் பூமியைத் தாங்கும் இவளின் ஆயுதங்கள் சூலமும், உலக்கையும், தேவையற்ற போட்டி, பொறாமைகளில் இருந்து காக்கும் வல்லமை படைத்தவள். இன்று கட்டங்களால் ஆன கோலம் போட்டுச் சிறு பெண்ணை குமாரியாகப் பாவித்து வழிபடவேண்டும். இன்று  எள் சாதமோ, தயிர்சாதமோ நிவேதனம் செய்யலாம். 


அ+உ+ம= ஓம் என்பது. அதுவே மாறி உ+அ+ம=உமா என தேவி பிரணவம் என்ற சிறப்பைப் பெற்றது. இதைத் தவிரவும் உ என்ற எழுத்துக்கு சிவன் என்றும் மா என்ற எழுத்து அவனின் சக்தியையும் குறிக்கும். மேலும் இந்தச் சக்திதான் நமக்கு சிவனை அடையாளமும் காட்டுகிறாள். நிறமற்றப் பரம்பொருளைத் தன் செந்நிறத்தால் அடையாளம் காட்டுகிறாள். இதையே அபிராமி பட்டரும்,
“உதிக்கின்ற செங்கதிர் “என்று கூறுகிறார். இவளுக்கு எல்லாமே மூன்று. தேவியின் பீஜாக்ஷரங்கள் மூன்று. அதனாலேயே த்ரிபுர சுந்தரி என்ற நாமத்தையும் பெற்றாள். த்ரிபுரம் என்பதே தேவியின் பீஜாக்ஷரங்களையே குறிக்கும். சிருஷ்டி(படைத்தல்), ஸ்திதி(காத்தல்), ஸம்ஹாரம்(அழித்தல்), திரோதானம்(மறைத்தல்), அனுகிரஹம்(அருளுதல்) என்னும் ஐந்து தொழில்களையும் தேவி முறையே பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், ஈசானன், ஸதாசிவன் ஆகியோர் மூலம் நடத்துகிறாள். இதையே லலிதா சஹஸ்ரநாமமும்,, “பஞ்ச க்ருத்ய பராயணா” என்று கூறுகிறது. முக்குணம் உள்ள மாயைக்கு ரஜோ குணம் மேலிட்டிருக்கும்போது பிரம்மா என்ற சைதன்யமும், ஸத்வ குணம் மேலிட்டிருக்கும்போது விஷ்ணு என்ற சைதன்யமும், தமோ குணம் மேலிட்டிருக்கும்போது ருத்ரன் என்ற சைதன்யமும் அதனுடன் சம்பந்தப் படுகிறது.

இன்று அன்னையை மஹிஷனை வதைக்கக் கிளம்பிய ராஜராஜேஸ்வரி ரூபத்திலும் வணங்கலாம்.. மூன்று வயதுப் பெண் குழந்தையை திரிமூர்த்தியாக பாவித்து வழிபடவேண்டும். இன்றும் மஞ்சள் நிறம் உகந்தது. சிவப்புக் கொன்றையும் விசேஷம். இன்றைய நைவேத்தியம் எள் சாதம். எள்ளைக் கல்லில்லாமல் களைந்து வடிகட்டி வெறும் வாணலியில் வறுத்துக் கொண்டு அதோடு உப்பு, காய்ந்த மிளகாயும் வறுத்துக் கொண்டு பொடி செய்து வைத்து அந்தப் பொடியை நல்லெண்ணெய் கலந்த சாதத்தில் போட்டுக் கலந்து கொள்ளவேண்டும். சிலருக்குப் பெருங்காயம் உளுந்து, தேங்காய்த் துருவல் சேர்க்கும் வழக்கம் உண்டு. எள்ளுக்குப் பெருங்காயம் தேவை இல்லை. இது தவிர மூன்று வயதுக் குழந்தைக்குப் பிடித்த பலகாரங்கள் எதுவேண்டுமானாலும், வெங்காயம், பூண்டு, தவிர்த்துச் செய்து கொடுக்கலாம். இன்றைய சுண்டல் காய்ந்த மொச்சையை ஊற வைத்துச் செய்த மொச்சைச் சுண்டல். 

காய்ந்த மொச்சையை முதல் நாளே ஊற வைக்கவும்.  மறுநாள் அதை நன்கு நான்கு, ஐந்து முறை கழுவிக் களைந்து கொண்டு கல்லில்லாமல் அரித்துக் கொண்டு, வெண்கல உருளி அல்லது குக்கரில் உப்புச் சேர்த்து வேக வைக்கவும்.  ஒரு வாணலியில் மூன்று மி.வத்தல் ஒரு டேபிள் ஸ்பூன் தனியா என்ற கொத்துமல்லி விதைகள், பெருங்காயம் வறுத்துப் பொடி செய்து தனியாக வைக்கவும். தேங்காய் ஒரு மூடி துருவிக் கொள்ளவும்.  பிடித்தவர்கள் பல், பல்லாகக் கீறிக் கொள்ளலாம், வேக வைத்த மொச்சையிலிருந்து  நீரை வடிகட்டவும்.  வாணலியில் சமையல் எண்ணெய் ஊற்றிக் கொண்டு, கடுகு, மி.வத்தல், கருகப்பிலை தாளிக்கவும்.  வெந்த மொச்சையைப் போட்டுக் கொஞ்சம் கிளறி வறுத்துப் பொடிசெய்ததைத் தேவையான அளவுக்கு மட்டும் சேர்க்கவும்.  தேங்காய்த் துருவல்/கீறிய தேங்காய்ப் பற்களைப் போட்டு நன்கு கிளறவும். விநியோகத்துக்கு உங்கள் சுண்டல் தயார்.


துர்கா அஷ்டகம் இரண்டாம் பாடல்:

உலகையீன்றவள் துர்கா உமையுமானவள்
உண்மையானவள் எந்தன் உயிரைக் காப்பவள்
நிலவில் நின்றவள் துர்கா நித்யையானவள்
நிலவி நின்றவள் எந்தன் நிதியும் துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே

லலிதா நவரத்னமாலையின் நீலம்!

மூலக்கனலே சரணம் சரணம் முடியா முதலே சரணம் சரணம்
கோலக்கிளியே சரணம் சரணம் குன்றாத ஒளிக்குவையே சரணம்
நீலத் திருமேனியிலே நினைவாய் நினைவற்றெளியேன் நின்றேன் அருள்வாய்
வாலைக்குமரி வருவாய் வருவாய் மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே

மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே


பி.கு. திங்கள் கிழமைக்கான வழிபாடு முறை நாளை வெளியாகும்.  நன்றியுடன்

Subashini Tremmel

unread,
Oct 5, 2013, 6:27:13 AM10/5/13
to மின்தமிழ், Subashini Tremmel
கவிதை எழுதும் திறன் எனக்கு இல்லை. ஆனாலும் ஒரு சிந்தனைப்பகிர்வாக இந்த நவராத்திரி நாளில் சக்தியை நினைத்து சில குறிப்புக்களைப் பகிர்ந்து கொள்ளலாமே என்ற சிந்தனையில் இப்பதிவு.

திருமூலர்  திருமந்திரத்தில் நான்காம் தந்திரத்தில் சில பாடல்களை வாசித்துக் கொண்டிருந்ததில் இப்பாடல்கள் இரண்டினையும் இன்று பகிர்ந்து கொள்ளலாமே எந்த் தோன்றியது.

பாடல் 1030 - தருமையாதீனப் பதிப்பு.

தானே அமைந்தஅம் முப்புரந்  தன்னிடைத்
தானான மூவுரு ஓருருத் தன்மையள்;
தானான பொன்செம்மை வெண்ணிறத் தாள்;  கல்வி
தானான போகமும் முத்தியும் நல்குமே.

பொருள் சுருக்கமாக:
மூன்று உலகங்களையும் ஆட்சி செய்யும் உருத்திரன், விஷ்ணு, பிரமன் ஆகியோரை ஒடுக்கும் நான்காவது பொருளாய் நிற்பவள் சக்தி. அவள் ஒருத்தியே பொன்னிறம் உடைய சக்தியாய் நின்று முத்தியையும், செந்நிறம் உடைய திருமகளாய் நின்று செல்வத்தையும், வெண்ணிறம் உடைய கலைமகளாய் நின்று கல்வியையும் தருவாள்.


பாடல் 1036
அவளை அறியா அமரரும் இல்லை;
அவளன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை;
அவளன்றி ஐவரால் ஆவதொன் றில்லை;
அவளன்றி ஊர்புகும் ஆறறி யேனே.

என்ன அருமையான செய்யுள். இறைவியின் பெருமை கூறும் இப்பாடல் இன்றைய நன்னாளில் நினைத்து இன்புறத்தக்கது அல்லாவா?

அன்புடன்
சுபா

Nagarajan Vadivel

unread,
Oct 5, 2013, 6:39:23 AM10/5/13
to மின்தமிழ்
முழுக்க முழுக்க சக்தி தாண்டவம்

நின்று பார்க்கவோ படிக்கவோ நினைக்கவோ நெஞ்சு பதறுகிறது

பெண் தெய்வங்களின் பரந்து விரிந்த சக்தியின் வெளிப்பாடு விளக்கும்

அகவாழ்விலும் புற வாழ்விலும் பெண்களின் பீடும் பெருமையும் கண்டு

இந்த உற்சவத்தைப் பார்க்க இரண்டு மூன்று ஆண்கள் சென்றார்களே அவர்கள் என்ன ஆனார்களோ 

ஆணாதிக்கத்துக்கு ஆன்மவியலில் சாட்டையெடுத்துச் சொடுக்கிய திருமந்திர மேற்கோள் அர்மையிலும் அருமை

மிஞ்ஞானி


2013/10/5 Subashini Tremmel <ksuba...@gmail.com>
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

coral shree

unread,
Oct 5, 2013, 6:51:45 AM10/5/13
to vallamai, மின்தமிழ், தமிழ் வாசல், தமிழ் சிறகுகள்
அம்மையே! அகிலாண்டநாயகியே!



தேவியவள் திரிசூலியவள் பரிபாலியவள்
தேன்மதுர யாழ்மீட்டி துதிபாட நெகிழ்ந்து
வான்மழையாய் பொழிந்திடுவாள் கனிவாக
அருள்ம்ழையாய்  எம்உளம் நிறைந்திடுவாள்!

அம்மையாய் அப்பனாய் அமுதமாய்
எமை வழிநடத்தும் அற்புதமாய்
காவல் நிற்கும் கருந்தெய்வமாய்
கற்றவர் சபையில் எமைக்களித்திருக்கச்செய்த
கனிரசமாய் கற்கண்டாய் கவித்தேனாய்
கருப்பஞ்சாராய் காத்துநிற்கும் தேவியே!

லோச்சனியே.. லோகநாயகியே! ஈசனின்
இடப்பாகத்து இருப்பவளே! நேசமுடன்யான்
நின் திருப்பாதம் நாடிநின்று பாடிப பரவி
பணிந்தேத்துவனே! பார்போற்றும் நாயகியே!
காவிரியே கங்கையே கருணைக்கடலே!

அன்புடன்
பவளா


2013/10/5 Dhivakar <venkdh...@gmail.com>

Subashini Tremmel

unread,
Oct 5, 2013, 8:30:31 AM10/5/13
to மின்தமிழ், Subashini Tremmel



2013/10/5 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

முழுக்க முழுக்க சக்தி தாண்டவம்

நின்று பார்க்கவோ படிக்கவோ நினைக்கவோ நெஞ்சு பதறுகிறது

பெண் தெய்வங்களின் பரந்து விரிந்த சக்தியின் வெளிப்பாடு விளக்கும்

அகவாழ்விலும் புற வாழ்விலும் பெண்களின் பீடும் பெருமையும் கண்டு

இந்த உற்சவத்தைப் பார்க்க இரண்டு மூன்று ஆண்கள் சென்றார்களே அவர்கள் என்ன ஆனார்களோ 

ஆணாதிக்கத்துக்கு ஆன்மவியலில் சாட்டையெடுத்துச் சொடுக்கிய திருமந்திர மேற்கோள் அர்மையிலும் அருமை

நன்றி.
திருமந்திரத்தில் 4ம் தந்திரத்தில் சக்தியின் சிறப்பைக் கூறும் மிக அழகிய செய்யுட்கள் பல உள்ளன. இந்த நவராத்ரி காலத்தில் தினம் 2 அல்லது 3 பாடல்களை வழங்கி அதற்கு விளக்கமும் தர முயற்சிக்கிறேன். 

சுபா

shylaja

unread,
Oct 5, 2013, 8:55:05 AM10/5/13
to mintamil, vallamai, தமிழ் வாசல், தமிழ் சிறகுகள்
எங்கெங்குகாணினும் சக்தியடா!
என்றவன் எங்கள்பாரதியடா!
அங்கங்கே அவன்கண்ட ஓவியமே
தங்கக்கவிதையாய் தரணியில் நின்றதுவே!
 
சக்திதனை துணையாக்கிக்கொள்வான்
பக்திப்பாமாலை பலபடைப்பான்
 
திக்கெட்டும் வெற்றிக்கொடிகட்டென்பான்
தக்கத்திமியென்றே குதிப்பான்!
 
சக்திக்கென்றால் அவன் எழுதுகோலும்
திக்குமுக்காடித்தான்போகும்!
 
வானம் சக்தி ஆழ்கடலும் சக்தி
கானமயிலும் சக்தி மோனத்தவமும் சக்தி
யானை சக்தி சிறுபூனை சக்தி
பார்க்கும் பொருளெல்லாம் சக்தி
களிப்பில் கூத்தாடி நிற்கும்
கவிஞனுக்கே அவள்மீது பக்தி
 
 

. .

Reply
Forward
 

ரா.கிருஷ்ணன்

unread,
Oct 5, 2013, 9:06:57 AM10/5/13
to mint...@googlegroups.com

‘எங்கெங்கு காணினும் சக்தியடா’ என பாடியது பாரதிதாசன் அல்லவா?!



2013/10/5 shylaja <shyl...@gmail.com>
--

Hari Krishnan

unread,
Oct 5, 2013, 9:39:14 AM10/5/13
to mintamil

2013/10/5 ரா.கிருஷ்ணன் <krish...@gmail.com>

‘எங்கெங்கு காணினும் சக்தியடா’ என பாடியது பாரதிதாசன் அல்லவா?!

ஆமாம்.  இந்தப் பாடலைக் கேட்டுதான் பாரதி, ‘பாண்டியா!  நீ புலவனடா!’ என்று மகிழ்ந்தான்.  உடனடியாக, சுப்பிரமணிய பாரதியின் கவிதாமண்டலத்தைச் சேர்ந்த கனகசுப்புரத்தினம் இயற்றிய பாடல் என்ற குறிப்புடன் சுதேசமித்திரன் பத்திரிகைக்கு அனுப்பியும் வைத்தான்; அது பிரசுரமும் ஆனது.

முழுப்பாடலையும் தரலாம் என்று இணையத்தில் தேடினால் கிடைக்கவில்லை--அல்லது கிடைக்கும்படியாகத் தேடத் தெரியவில்லை.  அச்சுப் புத்தகம் இருக்கவே இருக்கிறது.  ஒளிவருடி இணைத்திருக்கிறேன்.

ஷைலஜா,

சின்ன மாற்றம் செய்துவிட்டால் போகிறது... ஒற்றை அடியோடு, துணுக்கோடு நிறுத்திக் கொள்ளாமல்

எண்ணுங் காரியங்க ளெல்லாம் வெற்றி
ஏறப்புரிந்தருளுமாறு - சக்தி
தன்னைப் பணிந்தவன் பாரதி - எண்ணம்
யாவையுமே அவட் காவுதி*

(அவளுக்கு ஆகுதி)

அப்படிங்கறா மாதிரி பாரதி பாட்டுலேந்து எதையாவது எடுத்து முன்னால லைன் கரக்.ஷன் பண்ணினா தீந்துது வேல!

(சக்தி பெறும்) பாவாணர் சாற்றுபொருள் யாதெனினும்
சித்திபெறச் செய்வாக்கு வல்லமைக்கே - முத்தான
தங்கைக்குப் பஞ்சமிலை; சட்டென்று கைகொடுக்க
சிங்கக் கருப்பனுளான் தேர்!


--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 
img067.jpg

Geetha Sambasivam

unread,
Oct 5, 2013, 10:00:32 AM10/5/13
to மின்தமிழ்
ஆம், ஐயா, பாரதியார் கேட்டுக்கொண்டதுக்கு இணங்க பாரதிதாசன் இதைப் பாடியதாகவும், அவரின் முதல் பாட்டு இந்த சக்திப் பாட்டும் என்றும் படித்த நினைவு.  எதுக்கும் ஹரிகி வந்து உறுதி செய்யட்டும்.   பாரதியால் தான் இது  சுதேசமித்திரனுக்கு அனுப்பப் பட்டதாகவும் படித்திருக்கிறேன்.  


2013/10/5 ரா.கிருஷ்ணன் <krish...@gmail.com>

‘எங்கெங்கு காணினும் சக்தியடா’ என பாடியது பாரதிதாசன் அல்லவா?!




360.gif

Geetha Sambasivam

unread,
Oct 5, 2013, 10:01:04 AM10/5/13
to மின்தமிழ்
வந்து சொல்லிட்டார். :)))


2013/10/5 Geetha Sambasivam <geetha...@gmail.com>
360.gif

Geetha Sambasivam

unread,
Oct 5, 2013, 10:02:24 AM10/5/13
to மின்தமிழ்
 பாரதியிடம் ஏகோபித்த அன்பைப் பெற்ற பாரதிதாசன் அடிக்கடி பாரதியின் இல்லத்திற்குச் சென்று வரும் வாய்ப்பினைப் பெற்றார்.  ஒரு நாள் பாரதியார், குயில் சிவா, வ.வே.சு ஐயர், போன்றோர் குழுமியிருந்தனர்.  அப்போது பாரதிதாசன் பற்றி அவர்கள் பேசலாயினர்.  பாரதியார் கனகசுப்புரத்தினம்
கவிதை எழுதுவதில் வல்லவர் என்று கூற உடனே கூடியிருந்தவர்கள் ஒரு கவிதை புனையுமாறு கேட்டனர். 
பாவேந்தர் அப்பொழுது இயற்றிய கவிதை வரிகள் தாம் இவை.


எங்கெங்கு காணினும் சக்தியடா;-தம்பி
ஏழு கடல் அவள் வண்ணமடா!-அங்குத்
தங்கும் வெளியினிற் கோடியண்டம்-அந்த
தாயின் கைப்பந்தென ஓடுமடா-ஒரு
கங்குலில் ஏழு முகிலினமும்-வந்து
கர்ச்சனை செய்வது கண்டதுண்டோஈ?-எனில்
மங்கை நகைத்த ஒலியெனலாம்-அவள்
மந்த நகையங்கு மின்னுதடா!
காளை ஒருவன் கவிச்சுவையைக்-கரை
காண நினைத்த முழு நினைப்பில்-அன்னை
தோளசைத்தங்கு நடம்புரிவாள்-அவன்
தொல்லறிவாளர் திறம் பெறுவான் - ஒரு
வாளைச் சுழற்றும் விசையினிலே-இந்த
வைய முழுவதும் துண்டு செய்வேன் – என
நீள இடையின்றி நீ நினைந்தால் அம்மை
நேர்படுவாள் உன்றன் தோளினிலே!


இப்பாடலைக் கேட்டவுடன் அனைவரும் பாராட்டினர். 


2013/10/5 Hari Krishnan <hari.har...@gmail.com>
--

Geetha Sambasivam

unread,
Oct 5, 2013, 10:04:15 AM10/5/13
to மின்தமிழ்
http://silambukal.blogspot.in/2012/09/blog-post_1198.html

@ஹரிகி,

இந்தச் சுட்டியில் முழுத் தகவலும் கிடைக்கிறது.




Nagarajan Vadivel

unread,
Oct 5, 2013, 1:04:24 PM10/5/13
to மின்தமிழ்
கவிதாயினி கவிதையில் பாரதி என்று எழுதியதை பாரதிதாசன் என்றிருக்கவேண்டும் என்று சொல்வதில் லாஜிக் உதைக்கிறது

அந்தப்பாட்டை எழுதும்போது அவர் பாரதியின் கவிதா மண்டலத்தைச் சேர்ந்த கனக சுப்புரத்தின என்றுதான் குறிப்பிட்டுள்ளார்  பாரதி தாசன் என்றில்லை

கனக் சுப்புரத்தினம் அரசுப் பணியில் இருந்தவர் எனவே அவருக்குப் புனை பெயர் தேவைப் பட்டது

கே எஸ் ஆர் கண்டெழுதுவோன் கிறுக்கன் கிண்டல்காரன் என்ற பல புனைப்பெயர்களில் எழுதினார்

ஒரு முறை ஒரு கவிதைக்காகத் தன்பெயரை மறைத்து கே.எஸ். பாரதிதாசன் என்றெழுதினார்

பின்னர் பாரதி தாசன் என்ற புனைபெயர் அவருக்கு நிரந்தரம் ஆனது

இந்தப் பெயர் மாற்றம் திராவிடக் கட்சியினருக்குப் பிடிக்கவில்லை

பாரதி ஒரு ஐயர் தாசன் என்பது வடமொழி அந்தப் பெயர் வேண்டாம் என்று பலர் சொன்னார்கள் 

அவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள் பட்டுக்கோட்டை அழகிரியும் பேராசிரியர் அன்பழகனும்

அதற்கு அவர் சொன்ன பதில் பெரியார் தன்னுடைய சாதி எதிர்ப்பை எழுப்புதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னாலேயே சாதி ஒழிப்பை முழங்கியது மட்டுமல்ல செயல் படுத்திக் காட்டியதும் இந்த ஐயர்தான் எனவே அவர் தாசனாக இருப்பதில் தவறில்லை என்று மறுத்துவிட்டார்

பாரதி பற்றிய திரைப்படம் எடுக்கவேண்டும் என்று முதன்முதலாகக் கோடம்பாக்கம் கனவுத் தொழிற்சாலைக்கு வந்தவர் பாரதிதாசன்

அவர் கனவு நிறைவேறவில்லை

=======================================================================================


பாவேந்தர் அவர்கள் அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர். இவர் கவிதை எழுதி இதழ்களில் வெளியிட அரசு அலுவல் விதிகள் அன்றைக்கு இடந்தரவில்லை.

மேலும் தொடக்க காலத்தில் அவர் எழுதியவை எல்லாம் காந்தீய ஆதரவுப் பாடல்களாக இருந்தன. இதனை நினைத்துக் கவிஞர் தனது சொந்தப் பெயரை மறைக்க நினைத்தார். புனைப் பெயர் வைத்துக் கொள்வது என்ற முடிவுக்கு வந்தார்.

மதுரையில் இருந்து வெளிவந்த “தேசோபகாரி” என்ற இதழுக்கு ஒரு பாடல் எழுதி, புதுவை கே.எஸ்.பாரதிதாசன் என்னும் பெயரில் அனுப்பி வைத்தார். கே.எஸ்.பாரதிதாசன் என்பது கனக சுப்புரத்தின பாரதிதாசன் என்று விரியும். மேலும் தேச சேவகன், ரூப்ளக்ஸ், தேச பக்தன், ஆனந்த போதினி, புதுவைக் கலைமகள், சுதேச மித்திரன், சுதந்திரன் போன்ற ஏடுகளுக்கும் பாரதிதாசன் என்னும் புனைப் பெயரிலேயே தம் படைப்புகளைப் பாவேந்தர் அனுப்பி வைத்தார்.

ஆங்கில அரசின் கண்காணிப்பிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவும், தன் ஆசான் சுப்பிரமணிய பாரதியாரிடம் இருந்த ஈடுபாட்டின் காரணமாகவும் ஆசிரியர் கனக சுப்புரத்தினம் “பாரதிதாசன்” என்னும் பெயரை ஏற்றார்.

இது பற்றிப் பாரதிதாசன் அவர்களே குயில் இதழில் ஒரு முறை எழுதினார். “நான் பாரதிதாசன் என்று புனைப்பெயர் வைத்துக்கொண்டுள்ளேன். அதற்குக் காரணம் அப்போது அவர் என்னுள்ளத்தில் முதலிடம் பெற்றிருந்ததுதான். சாதிக் கொள்கையை நன்றாக உண்மையாக எதிர்த்தவர் பாரதியார்தாம். சென்ற காலத்தில் அவருக்கு முன் இவ்வாறு சாதிக் கொள்கையை எதிர்த்தவரை நான் கண்டதில்லை. பாரதி எதிர்த்துப் பணிபுரியத் தொடங்கிய பன்னாட்களுக்குப் பின்னரே பெரியார் இயக்கம் தோன்றியது” என்று பெயர் மாற்றத்திற்குக் காரணம் கூறினார்.

ஆரிய ஆதிக்கத்தையும், பார்ப்பனப் புரட்டையும் துணிவாகப் புறக்கணிக்கும் மனப்பான்மை உள்ளவராகத்தான் வாழ்நாள் இறுதிவரை வாழ்ந்தார். தன் படைப்புகளில் கடுமையாக எதிர்த்தும் எழுதினார். இருந்தாலும் தன் பெயரை “பாரதிதாசன்” என்றே வைத்து இருநதார். பார்ப்பன சாதியினரான “பாரதி”யின் பெயர் தமக்கு ஒத்து வராது என்று அவர் விலக்கி விடாமல் இணைத்தே வைத்திருந்தார்.

திராவிட இயக்க முன்னணித் தோழர்கள் சிலருக்குப் புரட்சிக் கவிஞர் கொண்டிருந்த “பாரதிதாசன்” என்ற பெயர் ஏற்கத்தக்கதாக இல்லை. ஒரு சிலர் அவரிடமே பார்ப்பன இனத்தைச் சேர்ந்த பாரதிக்குத் தாசனாக விளங்கக் கூடாது என்று எடுத்துச் சொல்லி, பெயரை மாற்றிக் கொள்ளுங்கள் என்றும் சொன்னார்கள். ஆனால் அதற்கு அவர் சம்மதிக்கவில்லை. மேலும் அவர் சொன்னார் நான் பாரதிதாசன் என்று பெயர் வைத்துக் கொண்டிருப்பதில் பிழை ஒன்றும் இல்லை என்று கருதுகின்றேன். இவ்வாறான முடிவுக்கு வந்ததற்குப் பல காரணங்கள் உண்டு. அதிலொரு காரணம் :

என் நூல்களை வெளியிட்டுப் பிழைக்க எண்ணியவர்கள் என் பெயர் பாரதிதாசன் என்பதற்காக அந்த எண்ணத்தைக் கை விட்டதுண்டா? அந்தச் சுவடிகளின் அட்டையில் பாரதிதாசன் என்ற பெயரைப் பெரிய எழுத்தால் அவர்கள் அச்சடிக்க மறுத்ததுண்டா? எத்தனையோ சீர்திருத்தக்காரர்கள் என் நூல்களை என் அனுமதிக்குக் காத்திருந்து பெற்று வெளியிட்டுள்ளார்கள் என்று தெரிவித்துத் தம் பெயரில் தவறில்லை என்று வலியுறுத்தியுள்ளார்.

திராவிட இயக்கத் தோழர்களில் பாரதிதாசன் என்னும் பெயருக்கு எதிர்ப்புக் காட்டியவர்களில் முக்கியமானவர் அஞ்சாநெஞ்சன் பட்டுக் கோட்டை அழகிரிசாமி ஆவார். அவர் கவிஞரைச் சந்தித்து “பாரதி ஒரு பார்ப்பான், மேலும் ‘தாசன்’ என்பது வடசொல். பாரதிதாசன் என்றால் பாரதிக்கு அடிமை என்றல்லவா பொருளாகி விடும்” என்று கேட்டார். அவர் இப்படிக் கேட்டவுடனே, “ஆமாண்டா, நான் பாரதிக்கு அடிமைதான்டா” என்று சொல்லி அழகிரிசாமியின் வாயடக்கினாராம்.

மதுரை வி.ஜி.சீனிவாசன் என்பவர் சில நண்பர்களோடு பாரதிதாசனைச் சந்தித்துப் பேசியிருந்த பொழுது அவர்களில் ஒருவர், “நீங்கள் ஏன் பாரதிதாசன் என்று பெயர் வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டுவிட்டார். கவிஞர் உடனே சினந்து “உங்களுடைய வினாவின் நோக்கம் எனக்குப் புரிகிறது. இது குறும்புத்தனமான வினா. அய்யருக்கு நீங்கள் அடிமையா என்று கேட்பது போலத்தான். நான் என்றென்றும் உளமாரப் போற்றி வழிபடுகிறவர் இந்த அய்யர். அன்பும் பண்பும் தமிழுணர்வும் ஒருங்குசேர்ந்த பொன்னுருவம் அவர். பாரதியாருக்கு நான் தாசனாக இருப்பதில் உங்களுக்கு என்ன ஆட்சேபனை? இந்த வினாவினை யார் விடுத்தாலும் எனக்குக் கோபம் வரும். ஏனெனில் கழகத்தவர்களோ முன்னேற்றம் காணத்துடித்தவர்களோ யாராயிருந்தாலும் சரி, சீர்திருத்தம் என்னும் சொல்லை எழுத்துக் கூட்டிப் படிக்கக் கற்றுக்கொள்ளத் தெரிந்து கொள்வதற்குப் பலநாளுக்கு முன்னதாகவே தமது வாழ்க்கையிலே சீர்திருத்தச் செயல்கள் பலவற்றைச் செய்து காட்டியவர் பாரதி” என்று தன் வழிகாட்டியைப் பற்றிப் பாரதிதாசன் பெருமைப்பட்டுள்ளார்.

நம்முடைய இன மானப் பேராசிரியர் (க.அன்பழகன்) அவர்கள் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் விழாவில் 1982 இல் உரையாற்றியபோது ஒரு சம்பவத்தை நினைவுபடுத்தினார்.

பேராசிரியர் ஒரு முறை பாவேந்தரைச் சந்தித்த போது, “பாரதியின் மேல் உங்களுக்குப் பற்று இருக்கலாம்; மதிப்பு இருக்கலாம். அதற்காக நீங்கள் பாரதிதாசன் என்னும் பெயரை வைத்துக் கொள்ள வேண்டுமா?” என்று வினாவினார். அதற்கு அவர் “பாரதியைப் பற்றி மற்றவர்கள் தவறாகக் கருதுவதைப் போலவே நீயும் கருதுகிறாயே! அவரோடு நான் 12 ஆண்டுகள் பழகி இருக்கிறேன். அவருடைய உள்ளத்தில் சாதி வேறுபாடு அறவே இல்லை. பிராமணர்களை அவர் துளிகூட மதிப்பது கிடையாது. மேலும் என்னுடைய கவிதைகளில் காணப்படுகிற முற்போக்குக் கருத்துகளுக்குப் பாரதியாரே காரணம் ஆவார்” என்று பதிலுரைத்தாராம்.


==============================================================================================================================


மிஞ்ஞானி



பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Oct 5, 2013, 1:19:19 PM10/5/13
to vall...@googlegroups.com, மின்தமிழ்
ஸ்ரீ லக்ஷ்மீ நமநாஷ்டகம் என்று வழங்கப்படும் துதியினை நான் தமிழ்ப்படுத்தி எழுதிய கவிதை. இதை எழுத என்னை ஊக்கிய சகோதரர் உயர்திரு.க்ஷேத்ரயாத்ரா(http://kshetrayaatra.blogspot.in/search/label/Sri%20Lakshmi%20Namanashtakam)
 அவர்களுக்கு என் நன்றி. அவரது வலைப்பூவில் வெளியான இதை மீண்டும் இங்கு பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்தத் துதியின் மூலமும், நான் எழுதிய தமிழ் உரையும் கீழே..

நமஸ்கார மஹாமாயே, ஜகந்மாதே பராத்பரே ॥
ஶங்க சக்ர கதா ஹஸ்தே, லக்ஷ்மீமாதே நமோ ஸ்துதே ॥௧॥

உயர்ந்தது அனைத்திலும் உயர்ந்தவளாம் உலகுக்கெல்லாம்  தாய் அவளாம்
அன்புக்கரங்களில் சக்கர‌ம், கதையும் அழகுச் சங்கும் தாங்கியவளாம்
மாயா சக்தியை தோற்றுவிக்கும் மஹாமாயை அவளாவாள்
அருளின் மழையாம் அமுதப் புனலாம் அன்னை லக்ஷ்மியை வணங்குகின்றேன்.

ஆதி நஹீஂ அந்த் நஹீஂ, ஆத்யஶக்தி ஸச்முச் தூ ॥
விஶ்வாதாரே விஷ்ணூகாந்தே, லக்ஷ்மீமாதே நமோஸ்துதே ॥௨॥

முதலும் இல்லா முடிவும் இல்லா முழுமுதற்  கடவுள் நிச்சயம் நீ!!
மூவுலகுக்கும்  ஆதாரமாய் நிற்கும் மூலப் பொருளும் பத்மினி நீ !!
அலைகடல் துயிலும் திருமால் விரும்பும் அற்புதப் பொக்கிஷம் தேவி நீ!!
அருளின் மழையாம் அமுதப் புனலாம் அன்னை  லக்ஷ்மியே!! வணங்குகின்றேன்.

ஸர்வ வ்யாபீ ஸர்வஸாக்ஷீ, ஶுத்த ஸத்வ ஸ்வரூபிணீ ॥
ஸர்வஜ்ஞே ஸிந்து ஸம்பூதே, லக்ஷ்மீமாதே நமோஸ்துதே ॥௩॥

எங்கும் நிறைவாள் எதற்கும் சாட்சி என்னுயிர் நீயே ஸ்ரீலக்ஷ்மி!!
தூய நன் மனதில் குடி கொண்டருள்வாள் மன்னுயிர் மாதா ஸ்ரீலக்ஷ்மி!!
சாந்தரூபிணி சகலமும் அறிவாள் பாற்கடல் தந்த ஸ்ரீலக்ஷ்மி!!
அருளின் மழையாம் அமுதப் புனலாம் அன்னை  லக்ஷ்மியே!! வணங்குகின்றேன்.

கமலே கமலநேத்ரே கோமலே கமலாஸநே ॥
மங்கலே முதிதே முக்தே, லக்ஷ்மீமாதே நமோஸ்துதே ॥௪॥

விழிகள் தாமரை, அமர்வதும் தாமரை, நிறமும் தாமரை, தாமரை நீ!!
மாதவன் கருணை உயிர்களுக்களித்திடும் மங்கல உருவாம் அம்பிகை நீ!!
முக்தியளித்திடும் மூலமும் நீயே மூவுலகும் தொழும் அற்புதம் நீ!!
அருளின் மழையாம் அமுதப் புனலாம் அன்னை லக்ஷ்மியே!! வணங்குகின்றேன்.

ஶுப்ரவஸ்த்ரதாரிணீ ஹே, கருடத்வஜபாமிநீ ॥
திவ்யாலங்கார பூஷிதே, லக்ஷ்மீமாதே நமோஸ்துதே ॥௫॥

தூயநல் ஆடை அணிந்தே அருள்வாய்,  தூயவள் நீயே  திருமகளே!!
திறமிகு கருடனைக் கொடியில் கொண்டாய் திருவருள் நீயே திருமகளே!!
அலங்கார ரூபிணி, அன்புக் கடல் நீ, கருணை பொழிவாய் திருமகளே!!
அருளின் மழையாம் அமுதப் புனலாம் அன்னை லக்ஷ்மியே!! வணங்குகின்றேன்.

ஸர்வ துஃக ஹரே தேவீ, புஜங்க ஶயநாங்கநே ॥
பகவதீ பாக்யதாத்ரீ, லக்ஷ்மீமாதே நமோஸ்துதே ॥௬॥

துக்கக் கடலில் மூழ்கிடுவோரின் துயரம் தீர்ப்பாய் பொன்மகளே!!
அரவினில் துயிலும் அன்பன் மனதில் அகலாதுறையும் அலைமகளே!!
பகவதி நீயே பாக்கியம் தந்திடும் பரம்பொருள் நீயே திருமகளே!!
அருளின் மழையாம் அமுதப் புனலாம் அன்னை லக்ஷ்மியே!! வணங்குகின்றேன்

ஸித்திபுத்தி புக்திமுக்தி ஸந்ததீ ஸுகஸம்பதா ॥
ஆயுராரோக்யஹி தேநேவாலீ லக்ஷ்மீமாதே நமோஸ்துதே ॥௭॥

சித்தியும் புத்தியும் தந்திடுவாய் நீ சிறப்புகள் தருவாய் அருளமுதே!!
இகபர சுகமும் இனிதான ஆயுளும் இணையாய் அருள்வாய் இன்னமுதே!!
மழலை பாக்கியமும், மனம்நிறை வாழ்வும் மகிழ்ந்தே தருவாய் தெள்ளமுதே!!
அருளின் மழையாம் அமுதப் புனலாம் அன்னை லக்ஷ்மியே!! வணங்குகின்றேன்.

நமோநமஃ மஹாலக்ஷ்மீ தநவைபவதாயகே ॥
தைந்ய ஹமாரே தூர கரோ, ப்ரார்தீ மிலிந்த மாதவ ॥௮॥

பொருளை அருளும் பொற்செல்வி, புகழும் அருள்வாய் தாயே நீ!!
ஏழ்மை அகற்றி ஏற்றம் தருவாய் என் துணை வருவாய் தாயே நீ!!
வைபவம் அருளும் வைபவ லக்ஷ்மி வளங்கள் தருவாய் தாயே நீ !!
அருளின் மழையாம் அமுதப் புனலாம் அன்னை லக்ஷ்மியே!! வணங்குகின்றேன்.

படந - ஶ்ரவண பாவே நித்ய கரே நமநாஷ்டகா ॥
மநோகாமநா ப்ராப்த ஹோ, ஸத்ய ஶ்ரத்தாயுக்த பாவுகா ॥௯॥

நல்லன அருளும் நமனாஷ்டகம் இதை நாளும் துதித்து நலம் பெறுவோம்!!
பக்தியாய் படித்தாலும் படிப்பதைக் கேட்டாலும் பவவினை தீரும் சுகமடைவோம்!!
நிதமும் துதித்து நமஸ்கரித் தெழுந்தால் நிலமெல்லாம் போற்றும் நிச்சயமே!! 
நினைப்பது நடக்கும் கேட்டது கிடைக்கும் திருமகள் அருள்வாள் சத்தியமே!!

பணிவன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.



2013/10/5 Granny Visalam <meera...@gmail.com>
என் இரு கண்கள் அறுவை சிகிச்சைக்குப்பிறகு இன்று   நான் "சக்தி ரதம் " பவனி வருவதைப்பார்த்து மிகவும் ஆனந்தம் அடைந்தேன் அதுவும் நான் மனதில் நினைத்த கண்ணாத்தா  அம்மனும் இங்கு பவனி வந்ததைக்கண்டேன் .அவள் ஆசி அளித்துவிட்டாள். உங்கள் எல்லோருடைய வாழ்த்துகளுக்கு என் நன்றி இதோ நானும் நவராத்திரி நாயகிகளை "சக்தி ரதத்தில் ஏற்றிவிட்டேன் . 

நலம் புரிய அருள் புரிவாய் 

ஆதி முதல்வனே ஆனை முகத்தோனே 
அன்னை பார்வதியின் செல்ல மகனே .
விக்னங்கள் தீரட்டும் . வேதனைகள் மறையட்டும்
கொலுவில் அமர்வாய் 
குலம் விளங்க அருள் புரிவாய் 

துர்க்கை அம்மனைத் துதித்தாலே 
துக்கமெல்லாம் பறந்து போகும் 
தஞ்சமளிக்கும் தாயும் அவளே,
தரிசித்தாலே அமைதி கிடைக்கும்
கொலுவில் அமர்வாய்
குலம் தழைக்க அருள் புரிவாய் 

பாற்கடலில் உதித்தவளே 
பரந்தாமனின் இனியவளே
பொற்கரங்கள் நான்கைக்கொண்டு
பொன்னும் மணியும் பொழிபவளே
கொலுவில் அமர்வாய் 
குலம் விளங்க அருள் புரிவாய் 

வெள்ளைத்தாமரையில் அமர்ந்தவளே
வீணா கானப்பிரியே ஹம்சவாஹினியே
வெண்பட்டு  அணிந்தவளே
வெளிச்சம் தந்து அறிவை வளர்ப்பவளே.
கொலுவில் அமர்வாய் 
குலம் சிறக்க அருள் புரிவாய் 

நாரணணின் சகோதரியே சங்கரனின் நாயகியே
நவராத்திரி நாயகியே சங்கரனின் அர்த்தநாரியே
அடைக்கலம் புகுந்தேன் அமைதியை நாடினேன்
கொலுவில் அமர்வாய் 
குலம் மகிழ அருள் புரிவாய் .  




2013/10/5 coral shree <cor...@gmail.com>
அம்மையே! அகிலாண்டநாயகியே!



தேவியவள் திரிசூலியவள் பரிபாலியவள்
தேன்மதுர யாழ்மீட்டி துதிபாட நெகிழ்ந்து
வான்மழையாய் பொழிந்திடுவாள் கனிவாக
அருள்ம்ழையாய்  எம்உளம் நிறைந்திடுவாள்!

அம்மையாய் அப்பனாய் அமுதமாய்
எமை வழிநடத்தும் அற்புதமாய்
காவல் நிற்கும் கருந்தெய்வமாய்
கற்றவர் சபையில் எமைக்களித்திருக்கச்செய்த
கனிரசமாய் கற்கண்டாய் கவித்தேனாய்
கருப்பஞ்சாராய் காத்துநிற்கும் தேவியே!

லோச்சனியே.. லோகநாயகியே! ஈசனின்
இடப்பாகத்து இருப்பவளே! நேசமுடன்யான்
நின் திருப்பாதம் நாடிநின்று பாடிப பரவி
பணிந்தேத்துவனே! பார்போற்றும் நாயகியே!
காவிரியே கங்கையே கருணைக்கடலே!

அன்புடன்
பவளா


2013/10/5 Megala Ramamourty <megala.r...@gmail.com>
சக்தி ரதத்திற்கு என் கவிதைப் படையல்...

முப்பெருந்தேவியர்!!

மலைமகள் தனைநாம் மறவாது போற்றிட

     மலையென வருதுயர் பனியென ஓடும்!

தலைமகள் அவளே தரணியின் நாயகி

     வெற்றித் தெய்வமாம் கொற்றவை அவளே!

 

அலையிடை பிறந்த அருள்மகள் அவளும்

     அள்ளித் தருவாள் பொருள்வளம் தன்னை!

தொலையா நிதியமும் தொல்லையில் வாழ்வும்

     அளித்திடும் அன்னை அவளன்றி உண்டோ?

 

கலையாத கல்வியும் நிலையான புகழுமே

     மானுட வாழ்வினை மாண்புறச் செய்யும்

கலைமகள் அவளைநாம் கருத்துடன் துதித்தால்

     கிடைத்திடும் இவையெலாம் தடையின்றி உடனே!

 

முப்பெருந் தேவியர் நம்மனை தனிலே

     கொலுவீற் றிருந்தால் குதூகலம் தானே?

அப்புறம் ஏது துன்பமும் துயரும்…

     வாழ்வினில் வசந்தமே சூழ்ந்திடும் என்றும்!!


அன்புடன்,

மேகலா

    




2013/10/4 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>


2013/10/5 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>


2013/10/5 தேமொழி <them...@yahoo.com>
அன்னை சக்தி 

பல்லவி
ஒவ்வொரு இரவும் உந்தன் புகழ்பாடி   
இவ்வுலம் வாழுமே    -- அன்னை சக்தி 
ஒவ்வொரு இரவும் உந்தன் புகழ் பாடியே
 
அனுபல்லவி  
மனமது உருகிநான் 
தினமுனைப் போற்றுவேன்
கரமது குவிந்திடவே 
சிரமது பணிந்திடவே  -- தாயே (ஒவ்வொரு)

சரணம்
செல்வமுடன்  கல்வி வீரமும் வழங்கியே  
செழித்திந்த உலகினை மகிழ்ந்திடச் செய்வாய் 
சேவை புரிந்தே பல்லுயிர் போற்றிடும்  
சேயிழையார்  தினமுனை வாழ்த்திட -- தாயே (ஒவ்வொரு)


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--

                                                               
                 

Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

coral shree

unread,
Oct 5, 2013, 10:30:57 PM10/5/13
to தமிழ் வாசல், mintamil, vallamai, தமிழ் சிறகுகள்
பவள சங்கரி

தாயே! தவமே!


தாயே! தவமே! தத்துவஞான ஒளியே!
மாயே மதிவதனி வாருமம்மா
சேயே யானுனைத் தழுவிடவே
காமதேனுவாய் கற்பகத்தருவாய் வாருமம்மா!

கொல்லன் உலையெனக் தொதிக்குமென் மனமே
நில்லெனக் கருணைகூர்ந்து வரமொன்றருள்வாயே
கல்லென்ற இதயம்கொண்டு எனைக் காணாமல்
கொல்லெந்தன் பாவம்யாவும்  பரிபாலியே!

ஊற்றைச் சடலமிதை உய்யும் வழியறியா உயிரிதை
தையல்நல்லாள் தள்ளிநின்றே பார்ப்பதென்னே
பைம்பொழில் மாதரசே பரிதவிக்கும் ஏழையெனை
கடைக்கண்ணால் பார்த்தருளுமம்மா!

நன்றி

அன்புடன்
பவளா


2013/10/4 shylaja <shyl...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

Dhivakar

unread,
Oct 6, 2013, 1:22:28 AM10/6/13
to vallamai, மின்தமிழ், தமிழ் வாசல், தமிழ் சிறகுகள்

மீனாட்சியுமையே - 7,8,9

அங்கமெல்லாம் மின்னும் தங்கமே தங்கத்தினொளியே

சங்கத்தமிழ்தந்த செல்வமே செல்வத்தின் ஊற்றே

மங்காப்புகழ் மதுரையின்கண் மதுரமாய் அமர்ந்தவளே               7

சிங்காரவல்லியே எமையாட்கொண்டருளும் அம்மையேபோற்றி!!

 

தந்தையுந்தாயுமாய் இருப்பவளே  தாமரையின் மென்மையே

சிந்தைதனிலே உறையும் செண்பகநாயகியே செல்வமே

செந்தேனாயினிக்கும் சொக்கநாதன் திருவருளே அருமருந்தே  8      

உந்தனிருபாதம் தந்தெமையாட்கொண்டருளும் அம்மையேபோற்றி!!

 

ஆருயிரே அங்கயற்கண் நாயகியே அகிலாண்டேஸ்வரியே

ஓருடலானவனின் இடபாகமாண்டவளே இதயமாய் இயங்குபவளே

ஓருருவம் தனக்கில்லா எவ்வுருவுமானவளே ஒப்பிலாதவளே   9    

சேரும்வினை தீர்த்தெமையாட்கொண்டருளும் அம்மையே போற்றி!!



2013/10/5 Dhivakar <venkdh...@gmail.com>

shylaja

unread,
Oct 6, 2013, 1:40:38 AM10/6/13
to mintamil


2013/10/5 Hari Krishnan <hari.har...@gmail.com>

2013/10/5 ரா.கிருஷ்ணன் <krish...@gmail.com>

‘எங்கெங்கு காணினும் சக்தியடா’ என பாடியது பாரதிதாசன் அல்லவா?!

ஆமாம்.  இந்தப் பாடலைக் கேட்டுதான் பாரதி, ‘பாண்டியா!  நீ புலவனடா!’ என்று மகிழ்ந்தான்.  உடனடியாக, சுப்பிரமணிய பாரதியின் கவிதாமண்டலத்தைச் சேர்ந்த கனகசுப்புரத்தினம் இயற்றிய பாடல் என்ற குறிப்புடன் சுதேசமித்திரன் பத்திரிகைக்கு அனுப்பியும் வைத்தான்; அது பிரசுரமும் ஆனது.

முழுப்பாடலையும் தரலாம் என்று இணையத்தில் தேடினால் கிடைக்கவில்லை--அல்லது கிடைக்கும்படியாகத் தேடத் தெரியவில்லை.  அச்சுப் புத்தகம் இருக்கவே இருக்கிறது.  ஒளிவருடி இணைத்திருக்கிறேன்.

ஷைலஜா,

சின்ன மாற்றம் செய்துவிட்டால் போகிறது... ஒற்றை அடியோடு, துணுக்கோடு நிறுத்திக் கொள்ளாமல்

எண்ணுங் காரியங்க ளெல்லாம் வெற்றி
ஏறப்புரிந்தருளுமாறு - சக்தி
தன்னைப் பணிந்தவன் பாரதி - எண்ணம்
யாவையுமே அவட் காவுதி*

(அவளுக்கு ஆகுதி)

அப்படிங்கறா மாதிரி பாரதி பாட்டுலேந்து எதையாவது எடுத்து முன்னால லைன் கரக்.ஷன் பண்ணினா தீந்துது வேல!

(சக்தி பெறும்) பாவாணர் சாற்றுபொருள் யாதெனினும்
சித்திபெறச் செய்வாக்கு வல்லமைக்கே - முத்தான
தங்கைக்குப் பஞ்சமிலை; சட்டென்று கைகொடுக்க
சிங்கக் கருப்பனுளான் தேர்!
>>  நேத்து  வெளியூர்  போன இடத்தில் சட்டென  எழுதி  சரி பார்க்காமல்  சக்தி ரதமதில் ஏற்றியவள் ஊர் வந்து இப்பதான் கவனிக்கிறேன்.அறியாமல் செய்த பிழை திரு கிருஷ்ணன் ஐயா மன்னிக்க... சட்டென்று கைகொடுத்த சிங்கக்கருப்பருக்கு நன்றிமிக.


--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

shylaja

unread,
Oct 6, 2013, 2:19:38 AM10/6/13
to mintamil
வாராத  கல்விவரும் வளர்பிறைபோல் பொருளும் வரும்
கூராகும் புத்தியும் நல்லோர் கூட்டமும் சேர்ந்துவரும்
யாராலும் பயமில்லை நம் அன்னை மீனாட்சிதன்
பாதார விந்தங்களை ப்பற்றிப்பணிவோர்க்கு என்றும்!
 


2013/10/6 shylaja <shyl...@gmail.com>

Subashini Tremmel

unread,
Oct 6, 2013, 3:12:52 AM10/6/13
to மின்தமிழ், Subashini Tremmel
நவராத்திரி நன்னாளில் பராசக்தியின் அருள் சிந்தனையோடு திருமந்திரத்தில் சில பாடல்களை வாசிப்போமே!

திருமந்திரம் - தருமையாதீனப் பதிப்பு

பாடல் 1070

காணும் பலபல தெய்வங்கள் வெவ்வேறு
பூணும் பலபல பொன்போலத் தோற்றிடும்
பேணும் சிவனும் பிரமனும் மாயனும்
காணுந் தலைவிநற் காரணி காணே

பொருள் சுருக்கமாக
நாம் அணிகின்ற பொன் அணிகலன்கள் வெவ்வேறு வடிவங்களில் அமைந்திருந்தாலும் அவை பொன் என்னும் அடிப்படை பொருளால் உருவாக்கப்பட்டவை தானே. அது போல உலகில் மனிதர்கள் நாம் வணங்குகின்ற  பலபல தெய்வங்களில், அவர்களுள் முதல்வராகப் போற்றப்படுகின்றவர்கள் மும்மூர்த்திகள்.  அம்மும்மூர்த்திகளாயும் காணப்படும் தலைவியே உலக காரணியாகிய ஆதி சக்தி என்பதை அறிக!


பாடல் 1091

உபாயம் அளிக்கும் ஒருத்திஎன் உள்ளத்
தபாயம் அறக்கெடுத் தன்பு விளைவித்துச்
சுவாவை விளக்கும் சுழியகத் துள்ளே
அவாவை யடக்கிவைத் தஞ்சலென் றாளே.

பொருள் சுருக்கமாக
எல்லாவற்றிற்கும் வழியைத் தருகின்ற ஒப்பற்றவளாகிய சக்தி எனது மனதில் உண்டாகின்ற தீங்குகள் அனைத்தையும் அறவே போக்கும் வல்லமை படைத்தவள்.  தீங்குகளைப் போக்கி என் மனத்தில் அன்பினை உண்டாக்கி வைப்பவள் இவள். என் மனதை ஒடுங்கச் செய்து இனி எதற்கும் அஞ்சவேண்டாம் என்று ஆறுதல் கூறி என் அச்சத்தை நீக்கியவளும் அவளே. 


பாடல் 1086

தையல்நல் லாளைத் தவத்தின் தலைவியை
மையலை நூக்கும் மனோன்மனி மங்கையைப்
பையநின் றேத்திப் பணிமின்; பணிந்தபின்
வெய்ய பவமினி மேவகி லாவே.

பொருள் சுருக்கமாக
சக்தியின் பெருமையை என்னவென்பது? அம்மனோண்மனி தேவியை வணங்கி போற்றி அவள் அருள் பெறுவோமாக!

அன்புடன்
சுபா


2013/10/5 Subashini Tremmel <ksuba...@gmail.com>

shylaja

unread,
Oct 6, 2013, 3:22:46 AM10/6/13
to mintamil
மனோன்மணி தெய்வம்  பற்றிய நல்ல பாடல் சுபா.. அந்ததேவிபற்றி  அதிகம்  அறிய ஆவல்  யாருக்காவது தெரிந்தால் விளக்கலாம்


2013/10/6 Subashini Tremmel <ksuba...@gmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

Geetha Sambasivam

unread,
Oct 6, 2013, 3:29:53 AM10/6/13
to மின்தமிழ்
நவராத்திரியின் நவதுர்க்கைகள் - மஹா கெளரி - மூன்றாம் நாள்!
இன்றைய அலங்காரம் கல்யாணி!

மகாகெளரி: எட்டு வயதுச் சிறுமி இவள். அம்பிகையின் சிறுமி வடிவான இவளே, அசுரர்களை அழிக்கும் வல்லமை கொண்டு அவர்களை அழித்தாள். இதனால் ஏற்பட்ட உடல் சோர்வினால் அவள் உடலின் பொன் நிறம் மங்கி, அசுரர்களின் ரத்தமும், போர்க்களத்தின் புழுதியும் படிந்து மங்கிக் காணப்பட்டது. ஈசன் தன் சடாமுடியில் இருந்து கங்கை நீரை எடுத்து அவள் உடலைச் சுத்தம் செய்தார். கசடுகள் நீங்கி மீண்டும் பொன்போல் ஒளிர்ந்தாள் மகாகெளரி. மனநலம் பாதிக்கப் பட்டோரும், உடல்நலம் பாதிக்கப் பட்டோரும் வணங்கக் கூடிய தெய்வம் இவள். இவளை வணங்கினால் சந்திரனால் ஏற்படும் மனசஞ்சலங்கள் அகன்று அறிவு சுடர் விட்டுப் பிரகாசிக்கும். நவராத்திரியின் திங்கட்கிழமைக்கு உகந்த தேவதை இவளே. திங்கட்கிழமைகளில் இவளை வணங்கவேண்டும். தண்டகாரண்யத்தின் முனிவர்களின் அல்லல்கள் தீர, அசுரர்களை அழித்து ஆடிய ஆட்டமே சுத்தத் தாண்டவம் எனப்படும். ஈசனின் இந்தத் தாண்டவத்தில் தோன்றியவளே மஹாகெளரி ஆவாள்.


மூன்றாம் நாளான இன்று பூக்களால் கோலம் போட்டு அம்பிகையைத் தாருணியாக வழிபட வேண்டும். சிலர் இவளை வஜ்ராயுதத்துடன் கூடிய இந்திராணியாக யானை வாகனத்தில் அமர்த்தி வழிபடுவார்கள். 


தேவியின் அருளைப் பெறுவதற்குப் பெரிதாகப் பூஜை, ஜபம், ஹோமம்னு எல்லாம் அமர்க்களமாய் எதுவும் செய்யவேண்டாம். ஒருமித்த மனதோடு தேவியின் நாமஸ்மரணை பண்ணினாலே போதும் என செளந்தர்ய லஹரியின் 23-ம் ஸ்லோகம் கூறுகிறது. தேவியை பவனாகிய ஈசனின் மனைவி என்ற பொருளில் பவானி என அழைக்கின்றனர். ஆனால் சம்ஸ்கிருத மொழியில் விளங்கும் பல பொருள் கொண்ட சிறப்பின் படி, பவாநீ என்பது,”நான் அப்படியே ஆவேன்” என்னும் பொருள் கொண்ட வினைச்சொல்லாகவும் எடுத்துக்கொள்வார்கள் சாக்தர்கள். தேவியைப் பூரணமாக ஒருமித்த மனதோடு வழிபடும் சாக்தர்கள் “நீயாகவே நான் ஆகின்றேன்” என்று உணர்கின்றான். இதை பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரும் உணர்ந்திருக்கிறார். அம்பாளை வழிபடும் சக்தி உபாசகர் ஆன அவர் அச்சமயங்களில் தானும் புடைவை உடுத்திக்கொண்டு ஒரு பெண்ணைப் போலவே முக்கியமாய்த் தானே அம்பாள் ஆனதாகவே உணர்ந்திருக்கிறார். தேவியை வழிபடுபவர்களுக்குத் தனக்கும் அவனுக்கும் வேற்றுமை இல்லாததாகிய அத்தகையதொரு சாயுஜ்ய பதவியை தேவி அளிக்கிறாள். 

மஹிஷனை வதம் செய்த அம்பிகையை சூலம் எந்தியவளாக, மஹிஷத்தின் தலை மீது வீற்றிருக்கும் கோலத்தில் அலங்கரித்து வழிபடவேண்டும். இந்தக் கோலத்தைக் கல்யாணி என்று சொல்வார்கள். இன்று நான்கு வயதுள்ள பெண் குழந்தையை கல்யாணியாகப் பாவித்து அல்லது சிறு பெண் குழந்தையைத் தாருணியாகப் பாவித்து வழிபட்டு வழிபடவேண்டும். செம்பருத்தி, தாமரைப் பூக்களால் அர்ச்சிப்பது நல்லது. இன்றைய நைவேத்தியம் தயிர் சாதம். இது செய்வது பத்திச் சொல்லவேண்டாம். சுண்டல் வெள்ளைக்காராமணிச் சுண்டல்.

வெள்ளைக்காராமணியை முதல் நாளே ஊற வைக்கவும்.  உப்புச் சேர்த்துக் குக்கரில் வேக வைக்கவும்.  பின் நீரை வடிகட்டவும்.  வாணலியில் சமையல் எண்ணெய் ஊர்றிக் கடுகு, மி,வத்தல், கருகப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து வெந்த காராமணியைப் போட்டுக் கிளறவும்.  ஏற்கெனவே சொன்ன முறையில் செய்த வறுத்த மிளகாய்/கொத்துமல்லிப் பொடி தூவி தேங்காய்த் துருவல் சேர்த்து நன்கு கிளறவும்  உங்கள் சுண்டல் விநியோகத்துக்குத் தயார். 

துர்கா அஷ்டகம் மூன்றாம் பாடல்

செம்மையானவள் துர்க்கா ஜெயமும் ஆனவள்
அம்மையானவள் அன்பு தந்தையானவள்
இம்மையானவள் துர்க்கா இன்பமானவள்
மும்மையானவள் என்று முழுமை துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே

ஸ்ரீ லலிதையின் படம் மேலே.

லலிதா நவரத்தினமாலையின் இன்றைய ரத்தினம் முத்து!

முத்தே வரும் முத்தொழிலாற்றிஅடவே முன்நின்றருளும் முதல்வி சரணம்
வித்தே விளைவே சரணம் சரணம் வேதாந்த நிவாஸிநியே சரணம்
தத்தேறிய நான் தநயன் தாய் நீ சாகாத வரம் தரவே வருவாய்
மத்தேறுத்திக் கிணை வாழ்வடையேன் மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே!

மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே!

இந்தப் பதிவுக்குரிய வழிபாடுகள் திங்கட்கிழமைக்கானது.



Geetha Sambasivam

unread,
Oct 6, 2013, 3:31:05 AM10/6/13
to மின்தமிழ்
பவளசங்கரி மற்றும் ஷைலஜாவின் பாடலும், சுபாவின்  திருமந்திர விளக்கமும் மிகப் பொருத்தமாக உள்ளது.  பகிர்வுக்கு நன்றி.


2013/10/6 Subashini Tremmel <ksuba...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Oct 6, 2013, 3:33:55 AM10/6/13
to மின்தமிழ்
ஈசனின் மனதுக்குள்ளேயே இருப்பதால் மநோன்மணி என்ற பெயராகச் சொல்வார்கள். எல்லாச் சிவன் கோயில்களிலும்,  மூலஸ்தான லிங்கம் இருக்கும் கருவறையில் லிங்கத்தின் இடப்பக்கம் மநோன்மணி என்ற பெயரில் அம்மன் விக்ரஹம் இருக்கும்.  ஏனெனில் சிவனும் சக்தியும் சேர்ந்தாலே இயக்கம்.  வெறும் சிவன் தனியாக இயங்க முடியாது. சக்தி சேர்ந்தாலே இயக்கம் வரும். ஆகையால் கண்ணுக்குத் தெரியாத மறைவான இடத்தில் (நம் இதயம் இருக்கும் இடம் நமக்குத் தெரியாது அல்லவா? அது போல) இதயம் இருக்கும் இடத்திலே மநோன்மணி இருப்பதாக ஐதீகம்.  இந்தக் கேள்வியைப்பார்த்ததும் தெரிந்த விளக்கம் சொல்லி இருக்கேன்.  ஆனால் இதற்கு இன்னும் மேலதிக விளக்கம் உள்ளது. 


2013/10/6 shylaja <shyl...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Oct 6, 2013, 3:42:38 AM10/6/13
to மின்தமிழ்

அன்னையின் கிளியும், பிரியாவிடையும்! மதுரை அரசாளும் மீனாட்சி!

இது பழைய நாயக்கர் காலச் சித்திரங்களில் ஒன்று. கூகிளாரைக் கேட்டதில் கொஞ்சம் கஷ்டப் பட்டே கிடைத்தது. இப்போ மதுரை மீனாட்சி கோயிலைப் பத்தின சில முக்கிய தகவல்கள் இங்கே கொடுக்கப் போறேன். யாருப்பா அது? புதிரா, புனிதமாவுக்கு பதில் எழுதறது? அவங்களுக்கு இங்கே சில டிப்ஸ் கிடைக்குமே. அந்த சாக்கிலேயாவது வாங்க. :))))))))) அம்மன் கையிலே ஏன் கிளி இருக்குனு கேஆரெஸ் கேட்டிருக்கார் இல்லையா? நாம் நம்மோட குறைகளை அம்மனிடம் சொல்லும்போது, அந்தக் கிளிதான் கேட்டுட்டு அதை அம்மனிடம் சொல்வதாகவும், அம்மன் நம் குறைகளைத் தீர்க்க அது உதவுவதாகவும் ஐதீகம். மேலும் ஐயன் பிரம்மதத்துவத்தைக் கைலை மலைக் குகையில் தனித்திருந்து அம்மைக்கு உபதேசித்தபோது ஒளிந்திருந்து அதைக் கேட்ட கிளிக்குஞ்சு தான் பின்னால் சுகர் ஆகப் பிறந்தார் என்பதும் தெரியும் தானே? அந்தக் கிளியாகவும் இருக்கலாம். அன்னைக்குத் திருமணப்பரிசாய் ஐயன் திருக்கயிலையில் இருந்து எடுத்து வந்து கொடுத்திருக்கலாம். (இது என்னோட கற்பனை மட்டுமே) பொதுவாய்ச் சொல்லப் படுவது கிளி மூலம் நம் குறைகள் தீர்க்கப் படும். கிளி சொன்னதைத்திரும்பச் சொல்லுமல்லவா? ஆகவே அன்னையிடம் நம் முறையீடுகள் கிளி மூலம் கேட்கப் படுகின்றது.

அடுத்து இப்போ ஸ்வாமி சந்நதிக்குப் போனவங்க எல்லாரும் சுந்தரேஸ்வரரை மட்டுமே பார்த்திருப்பீங்க இல்லையா? ஆனால் அங்கே உள்ளேயும் ஒரு அம்மன் இருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்? மதுரைக்காரங்க எல்லாம் வாங்கப்பா, வந்து சொல்லுங்க, உங்களுக்குத் தெரியுமானு! ஹிஹிஹி, நானும் ஒரே ஒரு முறைதான் பார்த்திருக்கேன், ஆனால் கருவறையில் இல்லை. 62-63 கும்பாபிஷேஹம் சமயம். அவ்வளவாய் நினைவிலும் இல்லை. ஆனால் அம்மனைப் பார்த்த நினைவும், பிரியாவிடை இவள் என்று சொன்ன நினைவும் இருக்கு. உற்சவரோடும் பிரியாவிடை வருவாள் ஆதலால், அதைப் பற்றிய ஐதீகத்தை அப்போது கேட்டு அறியவில்லை. இப்போது நண்பர் ஒருவர் மூலம் அது கிடைத்தது. உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன்.

மீனாட்சிக்கும், சுந்தரேஸ்வரருக்கும் திருமணம் ஆனதுமே அம்பிகை தன் ஆட்சியைக் கணவனிடம் கொடுத்துவிடுகின்றாள் அல்லவா? அப்போது அவள் ஐயனுடனேயே ஐக்கியம் ஆகிவிடுகின்றாள் என்றே சொல்கின்றனர். சிவனோடு ஐக்கியமான சக்தி சிவசக்தி சிவத்தை விட்டுப் பிரிவது எங்கனம்? ஆகவே அங்கே சுந்தரேஸ்வரரோடு அவளும் இருக்கின்றாள் கருவறையிலேயே.
ஆனால் அர்ச்சகர்கள் மட்டுமே காணமுடியுமாறு பிரதிஷ்டையின் அமைப்பு உள்ளது. சக்தியானது வெளியே தெரியாது. ஒருத்தரிடம் இருந்த சக்தி வெளிப்படும்போதே நாம் அறிகின்றோம் அல்லவா? ஆஹா, இவர் கிட்டே இத்தனை சக்தியா என்று? அவ்வாறே சிவனிடம் உள்ள சக்தி மறைந்தே இருப்பதால் நம்மால் காணமுடியாதபடிக்குப் பிரதிஷ்டை செய்திருக்கின்றனர். மனோன்மணி என்னும் பெயருடைய இவள் மறைப்பு சக்தியாக இருப்பதால் நாம் இவளைக் காணமுடியாது. ஆனால் இப்போது கும்பாபிஷேஹத்திற்காக வெளியே வந்திருப்பாள். வந்திருக்கின்றாள் எனவும் நண்பர் தகவல் அனுப்பி இருக்கின்றார். யாகசாலையில் பூஜையில் இவளை வைத்திருக்கின்றனர்.

இவளைக் கும்பாபிஷேஹத்தின்போது நடக்கும் யாகசாலை பூஜைகளிலேயே காணமுடியும். மற்ற நாட்களில் மீண்டும் மறைவிடம் சென்றுவிடுவாள். காணமுடியாது. இப்போது வந்து பூஜைகளில் இடம்பெற்ற இவள் மீண்டும் வெளியே வருவது அடுத்த கும்பாபிஷேஹத்தின்போது மட்டுமே. உற்சவரோடு வருபவள் உற்சவப் பிரியாவிடை. அவளை நாம் சாதாரணமாய் எல்லா உற்சவங்களிலும் காணமுடியும். சிவத்தை விட்டு சக்தி பிரியாதவள் என்பதாலேயே எப்போதுமே சிவனுக்கு அருகிலே சக்தியைப் பிரியாவிடை உருவில் தரிசிக்கின்றோம்.


மதுரை மாநகரம் பதிவில் நான்கு வருடங்கள் முன்னர் நடந்த மதுரைக் கும்பாபிஷேஹம் சமயம்  சுந்தரேஸ்வரர் கருவறையின் மநோன்மணியை வெளியே யாகசாலை பூஜையில் வைத்திருந்தபோது எடுத்த படமும், அதற்கு நான் எழுதிய பதிவும் மேலே காணலாம். 




sharadha subramanian

unread,
Oct 6, 2013, 3:49:32 AM10/6/13
to mint...@googlegroups.com
ஐயா இது போன்ற அமைப்பு மதுரை மட்டிம் இல்லை மைலாப்பூரிலும் திரிசூலத்திலும் நான் பார்த்து இருக்கிறேன்



From: Geetha Sambasivam <geetha...@gmail.com>
To: மின்தமிழ் <mint...@googlegroups.com>
Sent: Sunday, 6 October 2013 1:42 PM
Subject: Re: [MinTamil] Fwd: Re: [வல்லமை] Re: [தமிழ் வாசல்] சக்தி ரதம்!

Subashini Tremmel

unread,
Oct 6, 2013, 3:55:15 AM10/6/13
to மின்தமிழ், Subashini Tremmel



2013/10/6 shylaja <shyl...@gmail.com>

மனோன்மணி தெய்வம்  பற்றிய நல்ல பாடல் சுபா.. அந்ததேவிபற்றி  அதிகம்  அறிய ஆவல்  யாருக்காவது தெரிந்தால் விளக்கலாம்

திருமந்திர தருமையாதீன உரையில் குறிப்பு இப்படி அமைகின்றது ஷைலஜா.

விரிந்து நின்ற ஒரு தாமரை மலரின் எட்டிதழின் நடுவில் மேலான சக்தி ஒருத்து இருக்கின்றாள் (இங்கு தாமரை மலர் எனப்படுவது நம் உடலின் குண்டலினி  சக்தி எனக் காண்க)  நான்கு திசைகளிலும் திசைக்கு இரண்டாக உள்ள எட்டிதழ்களில் கிழக்கு முதலாகத் தொடங்கி வலமாக முறையே, 
வாமை
சேட்டை
இரௌத்திரி
காளி
கலவிகர்ணி
பலவிகரணி
பலப்பிரதமனி
சர்வபூத தமனி
என எட்டு கன்னியர் இருந்து காக்கின்றனர். இக்கன்னியருக்கு மையமமாக அமைந்திருக்கும் தாயான இவர்கள் மனோன்மனியை தொழுகின்றனர்.

குண்டலினி சக்தி வழிபாடு என்பதில் குறிக்கப்படும் சக்கரங்களில் மூலாதாரம்,  சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி,  ஆக்ஞாசக்கரம் ஆகியவற்றில் மனோன்மனி தேவி குறிப்பிடப்படுகின்றார். விசுத்தி சக்கரத்தோடு இணைத்து கூறப்படுவதை வாசித்திருக்கின்றேன். திருமந்திரம் 4ம் தந்திரத்தில் சில பாடல்கள் இந்த எல்லா சக்கரங்களின் வழியாகவும் ஆன்மாவை செலுத்தி மெய்ஞானம் காணச் செய்பவள் இந்த மனோன்மனியே எனக் குறிப்பிடுகின்றன. 

மேலும் விஷயம் அறிந்தவர்கள் விளக்கினால் உதவும்.

சுபா

Dhivakar

unread,
Oct 6, 2013, 4:09:29 AM10/6/13
to மின்தமிழ்
சுபா,
மனோன்மணி கோயில் கொண்டுள்ள இடம் வெள்ளியங்கிரி (கோவை அருகே). இங்தக் கோயில் அமைந்துள்ள சூழலே புனிதமாக இருக்கும். சித்தர்கள் பூமி. மனோன்மணிஅம்மன் மிக அழகு.. சென்ற முறை சென்றபோது தரிசித்துவிட்டு வந்தேன். மனோன்மணிக்கும் கன்னியாகுமரிக்கும் சம்பந்தம் உண்டு என்பர்.. கூகுளில் சரியாக முழு விவரமும் கொடுக்கவில்லை யென்றாலும் ஒரு சிறு துளியை இந்த லின்க்க் இல் காணலாம். :http://en.wikipedia.org/wiki/Velliangiri_Mountains

Of all the mountain shrines in Kongunadu, the Siva temple of Velliangiri in the western boundary is considered to be the most famous. Known as Rajathagiri, Velliangiri, Dakshin Kailash or Bhoolok Kailash, this sacred spot, according to legend, is where Siva performed his cosmic dance on the request of his consort Umadevi. The five faces of Lord Shiva, Brahma, Vishnu, Rudra, Maheshwara and Sadasiva, are seen as Panchagiri and as Panchalingas pertaining to the panchabhutas, in Velliangiri. The hill ranges have abundant natural resources, which include rare herbs. Lord Panchalingesa and his Consort Manonmani Amman alias Parvathi, bestow their grace on the devotees who throng here annually between February and May.



2013/10/6 Subashini Tremmel <ksuba...@gmail.com>

shylaja

unread,
Oct 6, 2013, 4:09:57 AM10/6/13
to mintamil, vallamai, தமிழ் சிறகுகள்
மனோமணிதேவியின்  விளக்கத்திற்கு நன்றி கீதா.
இசைக்கவி என்னிடம்  முன்பு  தான் எழுதிய  மனோன்மணி மாலை எனும் புத்தகம்  கொடுத்ததை  எடுத்துப்பார்த்தேன்..
மதுரை திருக்கோயிலில் சொக்கநாதர் கருவறையில் சிவனின் இடப்புறம் வீற்றிருக்கும் மனோன்மணிதேவி பற்றிய அவரது அனுபவம் சிலிர்ப்பானது.
”1985ம்  ஆண்டு   என் சகோதரிவீட்டில்  இருந்தபோது மதியவேளையில் கவிதையும் தரிசன வெறியும் கலந்ததோர் லஹரியில்  எங்கள் எதிரே சுவர் திடீரென்று திரையாகி அவளைக்கண்டோம் ” என்கிறார்  இசைக்கவி. மறக்கமுடியாத  அனுபவத்தில் அவர் எழுதியது மனோண்மணி மாலை என்னும் 100வெண்பாக்கள் கொண்ட  பாமாலை.
 
இரண்டைமட்டும் இங்கு இடுகிறேன். பச்சைக்கற்பூரத்தைக்கிள்ளிப்போட்டாலே போதும்  பாயசம் மணத்துக்கொட்டும்.இசைக்கவியின் இரு பாடல்களே போதும் சக்தி ரதத்தை  இனிதே இழுத்துச்செல்லும்.
 
வாலைக்குமரி ! மனோண்மணி! வாய்த்தவிரு
காலைக்கடைந்தெடுக்கும் கட்டழகி!- வேலன்
கரங்கொண்டான்: நீயெனிலோ கண்கொண்டாய்! கண்ணே!
சிரங்கொண்ட துன்றன் சிரிப்பு!
 
சிரிப்புற்ற   வாழ்வு சிதைவுற்ற சித்தம்
விரிப்புற்ற துள்ள வெறுமை-கரிப்புற்ற
பாதைக் குயிர்தந்த பாதச்சதங்கைக்குத்
தோதாகு மோசெவிகள் சொல்?
 
 


2013/10/6 Geetha Sambasivam <geetha...@gmail.com>
ஈசனின் மனதுக்குள்ளேயே இருப்பதால் மநோன்மணி என்ற பெயராகச் சொல்வார்கள். எல்லாச் சிவன் கோயில்களிலும்,  மூலஸ்தான லிங்கம் இருக்கும் கருவறையில் லிங்கத்தின் இடப்பக்கம் மநோன்மணி என்ற பெயரில் அம்மன் விக்ரஹம் இருக்கும்.  ஏனெனில் சிவனும் சக்தியும் சேர்ந்தாலே இயக்கம்.  வெறும் சிவன் தனியாக இயங்க முடியாது. சக்தி சேர்ந்தாலே இயக்கம் வரும். ஆகையால் கண்ணுக்குத் தெரியாத மறைவான இடத்தில் (நம் இதயம் இருக்கும் இடம் நமக்குத் தெரியாது அல்லவா? அது போல) இதயம் இருக்கும் இடத்திலே மநோன்மணி இருப்பதாக ஐதீகம்.  இந்தக் கேள்வியைப்பார்த்ததும் தெரிந்த விளக்கம் சொல்லி இருக்கேன்.  ஆனால் இதற்கு இன்னும் மேலதிக விளக்கம் உள்ளது. 


2013/10/6 shylaja <shyl...@gmail.com>
மனோன்மணி தெய்வம்  பற்றிய நல்ல பாடல் சுபா.. அந்ததேவிபற்றி  அதிகம்  அறிய ஆவல்  யாருக்காவது தெரிந்தால் விளக்கலாம்


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

Geetha Sambasivam

unread,
Oct 6, 2013, 4:10:29 AM10/6/13
to மின்தமிழ், தமிழ் சிறகுகள், தமிழ் வாசல், Mazalais, Geetha Sambasivam
ஆமாம், சுபா, விசுத்திச் சக்கரத்தோடு தொடர்புடையவள் மநோன்மணி.  அபிராமி அந்தாதியிலும் இவளைக் குறித்துச் சில பாடல்கள் வரும்.  இதை வெகு எளிதாக விளக்குவது கடினம்.  ஒவ்வொரு ஆதாரமாக ஆரம்பித்து விளக்கவேண்டும்.  குரு மூலம் தெரிந்து கொள்வது சிறப்பு.  தெரிந்தவரையில் மேலே விளக்கி இருக்கிறேன்.  லலிதா சஹஸ்ரநாமாவளியிலும் வரும்.

2013/10/6 Subashini Tremmel <ksuba...@gmail.com>



Geetha Sambasivam

unread,
Oct 6, 2013, 4:11:06 AM10/6/13
to மின்தமிழ்
எல்லாச் சிவன் கோயில்களிலும் இருக்கும் திருமதி சாரதா.


2013/10/6 sharadha subramanian <shara...@yahoo.co.in>

Geetha Sambasivam

unread,
Oct 6, 2013, 4:12:35 AM10/6/13
to தமிழ் சிறகுகள், mintamil
முழுசுமே போடுங்களேன், எல்லாருக்கும் பயனாகும்.


2013/10/6 shylaja <shyl...@gmail.com>

shylaja

unread,
Oct 6, 2013, 4:14:02 AM10/6/13
to mintamil, vallamai, தமிழ் சிறகுகள்
 இசைக்கவி   அவர்கள் சொற்பொழிவாளர் , கவிஞர்ரமணன். ஹரிகிஜீயின் ஆத்ம நண்பர் எல்லோர்க்கும்  இனிய பண்பாளர்.

Hari Krishnan

unread,
Oct 6, 2013, 4:25:54 AM10/6/13
to vallamai, mintamil, தமிழ் சிறகுகள்

2013/10/6 shylaja <shyl...@gmail.com>

வாலைக்குமரி ! மனோண்மணி! வாய்த்தவிரு
காலைக்கடைந்தெடுக்கும் கட்டழகி!- வேலன்
கரங்கொண்டான்: நீயெனிலோ கண்கொண்டாய்! கண்ணே!
சிரங்கொண்ட துன்றன் சிரிப்பு!
 
சிரிப்புற்ற   வாழ்வு சிதைவுற்ற சித்தம்
விரிப்புற்ற துள்ள வெறுமை-கரிப்புற்ற
பாதைக் குயிர்தந்த பாதச்சதங்கைக்குத்
தோதாகு மோசெவிகள் சொல்?

யார் பாட்டு?  எங்கேயோ கேட்ட குரல் மாதிரி இருக்கே... அவனேதானோ!

Hari Krishnan

unread,
Oct 6, 2013, 4:27:58 AM10/6/13
to vallamai, mintamil, தமிழ் சிறகுகள்

2013/10/6 shylaja <shyl...@gmail.com>

இசைக்கவி   அவர்கள் சொற்பொழிவாளர் , கவிஞர்ரமணன். ஹரிகிஜீயின் ஆத்ம நண்பர் எல்லோர்க்கும்  இனிய பண்பாளர்.

அப்ப என் மனசு சொன்னது தப்பில்ல.  இதுக்கு முன்னால இந்த வெண்பாக்கள கேட்டதில்ல.. ஆனா, படிக்கறப்பவே அவன் குரலும் சேந்து ஒலிக்குது.  (இதைப் பாக்கறதுக்கு முன்னாடி ஊகம் என்ன வேண்டிக் கிடக்கு சொல்லுங்க!)

shylaja

unread,
Oct 6, 2013, 4:28:11 AM10/6/13
to vallamai, mintamil, தமிழ் சிறகுகள்
ஆமாம்  உங்க நண்பருடையதே!   மனோன்மணிமாலையிலிருந்து  இரண்டு கவிதைப் பூக்களை  இங்கு எடுத்து வைத்தேன்..வாசனை அடித்து வந்துவிட்டீர்களா?:)


2013/10/6 Hari Krishnan <hari.har...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.

ரா.கிருஷ்ணன்

unread,
Oct 6, 2013, 5:00:02 AM10/6/13
to mint...@googlegroups.com

நீங்கள் இட்டிருக்கும் திரு.இரமணனின் வெண்பா நன்றாக இருக்கிறது.

 

ஆனால் அதில் அம்பாளின் பொதுவான தன்மையே உள்ளது! மனோன்மணி எனும் யோக தரிசனம், அன்னையின் தன்மை இதுவல்ல!

 

வெளியே இதுவரை எந்தப் புத்தகங்களிலும் வராத ஒரு சில பெரிய விஷயங்களில் மனோன்மணியும் ஒன்று.

 

திருமந்திரத்திலேயே வெகு சில இடங்களில் அந்த விஷயம் இலைமறை காயாகத் தெரியும்.

 



2013/10/6 shylaja <shyl...@gmail.com>
மனோன்மணி தெய்வம்  பற்றிய நல்ல பாடல் சுபா.. அந்ததேவிபற்றி  அதிகம்  அறிய ஆவல்  யாருக்காவது தெரிந்தால் விளக்கலாம்

Hari Krishnan

unread,
Oct 6, 2013, 5:03:33 AM10/6/13
to mintamil

2013/10/6 ரா.கிருஷ்ணன் <krish...@gmail.com>

நீங்கள் இட்டிருக்கும் திரு.இரமணனின் வெண்பா நன்றாக இருக்கிறது.

 

ஆனால் அதில் அம்பாளின் பொதுவான தன்மையே உள்ளது! மனோன்மணி எனும் யோக தரிசனம், அன்னையின் தன்மை இதுவல்ல!


நண்பரே,

அவையிரண்டும் ஒரு முழு மாலையிலிருந்து எடுக்கப்பட்ட இரண்டே இரண்டு பூக்கள்.  ரமணனுடைய தந்தை தசமகா வித்யாவைப் பற்றி (காலமாவதற்கு சிலகாலம் முன்னால்) புத்தகமே எழுதியிருக்கிறார்.  தந்தை வழியில் தமயனுக்கும் பயிற்சி உண்டு. :)

ரா.கிருஷ்ணன்

unread,
Oct 6, 2013, 5:22:30 AM10/6/13
to mint...@googlegroups.com
திரு.ஹரிகிருஷ்ணன் ஜி
 
இந்த விஷயத்தில் இதற்கு மேல் சொல்லத் தயக்கமாக இருக்கிறது.
 
உங்களிடம் தைரியமாக ஒரே ஒரு வரியை வேண்டுமானால் சொல்கிறேன்.
 
மனோன்மணியை அறிந்தவர்கள் பரமசிவனுக்கு இணையானவர்கள். சித்தர்கள் வரிசையில் இருப்பர்.
 
 
இன்னும் அழுத்தமாகச் சொல்வதனால் அவர்கள் சித்தபுருஷர்களே!
 
 
 
அதனாலேயே அப்படிச் சொன்னேன்.
 
இதற்கு மேல் சொல்ல எனக்கு சற்றும் தகுதியில்லை. எனக்கு திரு.இரமணன் அவர்களை நானிருந்த சில குழுமங்களின் வழியாகத்தான் தெரியும். எனவே அறியாதவரைப் பற்றி பேச அடியேனுக்கு எந்த உரிமையும் இல்லை.
 
 


2013/10/6 Hari Krishnan <hari.har...@gmail.com>
--

shylaja

unread,
Oct 6, 2013, 5:42:21 AM10/6/13
to mintamil
திரு கிருஷ்ணன் அவர்களுக்கு
இசைக்கவிரமணனைப்பற்றி  சொல்லவும் தகுதி வேண்டும் எனக்கு  ஆனால்    அவருடனானநட்புதரும் உரிமையில் அவரைப்பற்றி  ஒரே வரியில் சொல்வேன்  மலருக்குள் தேனாக அவர் மகிமை ஒளிந்துள்ளது
 அறிந்தோர் அவரை அறிவார்!
  அவர் எழுதிய வெண்பா  பாமாலையில் அனைத்தையும் தட்டச்ச  இயலாதென்று  இரண்டைமட்டும் இங்கு அளித்தேன்,அவளைப்பற்றி  முழுமையாய  தனது நூலில்  எழுதி இருக்கிறார்!
 
மனோன்மணி..சித்தர்களின் கண்மணி
குமரிமுனைப்பெண்மணி  யோகத்தின் தாய்
தோற்றத்தில் சேய் ஞானத்தின் சாகரம்
தேகத்தில் சிறுகவிதை  விவரிக்கமுடியாத
வெற்றி எந்தவித்தைக்கும் இவளருளே உத்தி
 
இப்படி நூலின் கடைசிபக்கம்  சிலவரிகள்  எழுதி உள்ளார்..நூலில் உள்ள  பாமாலைகளோ  அன்னையின் சக்தியை  நமக்கு  விளக்குகின்றன.எளிமையும்  இனிமையும் கொண்ட வெண்பாக்கள்!
 
 

Hari Krishnan

unread,
Oct 6, 2013, 5:43:59 AM10/6/13
to mintamil
2013/10/6 ரா.கிருஷ்ணன் <krish...@gmail.com>
மனோன்மணியை அறிந்தவர்கள் பரமசிவனுக்கு இணையானவர்கள். சித்தர்கள் வரிசையில் இருப்பர்.
 
 
இன்னும் அழுத்தமாகச் சொல்வதனால் அவர்கள் சித்தபுருஷர்களே!
 
 
 
அதனாலேயே அப்படிச் சொன்னேன்.
 

நன்றி திரு ரா. கிருஷ்ணன் அவர்களே. உங்களுடைய கருத்தைப் புரிந்து கொண்டேன்.  ஏனெனில்,

எனக்குமுன்னே சித்தர்பலர் இருந்தா ரப்பா!
யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டில்; 
மனத்தினிலே நின்றிதனை எழுது கின்றாள் 
மனோன் மணியென் மாசக்தி வையத்தேவி; 
தினத்தினிலே புதிதாகப் பூத்து நிற்கும் 
செய்யமணித் தாமரை நேர் முகத்தாள்

அப்படி தன்னைத் தானே சித்த புருஷனாக அறிவித்துக் கொள்ளும் சமயத்தில்தான்...

மனத்தினிலே நின்றிதனை எழுது கின்றாள் 
மனோன் மணியென் மாசக்தி 

என்ற பாரதியோடு கொஞ்சம் பரிச்சயமும் உண்டல்லவா!

என் பள்ளித் தோழன், பதின்மூன்று வயதிலிருந்து அந்தரங்கங்களைப் பகிர்ந்து கொண்டவன் என்ற வகையில், கவிஞனின் சித்தத்தை அறிவேன்.  சித்த புருஷனா என்றறியேன்.

இதற்குமேல் அவனைப் பற்றி சபையில் சொல்வதும் நான் தற்பெருமை பேசிக் கொள்வதும் ஒன்றுதான் என்பதனால், இதற்கு மேல் சொல்லக் கூச்சமாக இருக்கிறது.

மீண்டும் நன்றி நண்பரே.

ரா.கிருஷ்ணன்

unread,
Oct 6, 2013, 5:44:29 AM10/6/13
to mint...@googlegroups.com
நீங்கள இந்த சக்தி இரதத்தைத் தொடருங்கள். அன்னையின் நினைப்பு எல்லோர் உள்ளிலும் நிறையட்டும்.


2013/10/6 shylaja <shyl...@gmail.com>
திரு கிருஷ்ணன் அவர்களுக்கு

ரா.கிருஷ்ணன்

unread,
Oct 6, 2013, 5:46:12 AM10/6/13
to mint...@googlegroups.com
உங்களின் நல்ல மனம் தெரிகிறது. நண்பரை எச்சமயத்திலும் விட்டுக் கொடுக்காத தன்மையே தெய்வீகமானதுதான்! அதுதான் முறையும் கூட! மிகவும் மகிழ்ச்சி!


2013/10/6 Hari Krishnan <hari.har...@gmail.com>

--

K. Loganathan

unread,
Oct 6, 2013, 7:56:05 AM10/6/13
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com
நின்னா சுபா

சித்தர்கள் மனோன்மணியை சதாசிவ மூர்த்தியின் துணையாக ஆக்ஞா சக்கரத்தில் இருப்பதகக் கொள்வர்,

காணக; இவை போகரின் வாக்குகள், இவற்றை எல்லாம் விளக்க வேண்டுமானால்  சாதாசிவ  மூர்த்தியின் ஆறு முகங்களையும் கொண்டு வரவேண்டும் சற்று சிக்கலானது; எனது அழிவிலுண்மை எனும் நூலில் விளக்கி இருக்கின்றேன்

போகரைப் பற்றி முழு கட்டுரை கீழே:

https://sites.google.com/site/baktitamil/pokar---cakras-and-mantras

உலகன்

ஆக்கிணை

69

மேலேறி இருபுருவ நடு மையத்தில்
    மிகையான அண்டம்போல் நிற்குமப்பா
வாலேறி வட்டமாம் வீடு போல 
    வளையம் ஒன்று இரண்டு இதழ் தான் ஹ ள வாகும்
ஆலேறி யங்கென்ற அட்சரந்தான்  நடுவே 
    ஆகாச பூதமாம் வங் பூத  பீசம்
ஆலேறிய மனோன்மணியும் சதாசிவனும் நிற்பார்
    அவத்தைத்தான் சாக்கிரத்தின் வீடுமாமே

Agnja Cakra

69.

meeleeRi irupuru nadu maiyattil
    mikaiyaana aNdampool niRkumappaa
vaaleeRi vaddmaam Viidu poola
    vaLaiyam onRu irandu itaztaan ha La vaakum
aaleeRi yang-enRa adsarantaan naduvee 
    aakaasa puutamaam vaG puuta piisam
aaleeRiya ManoonmaNiyum Cataacivanum niRpar
    avattaittaan caakkirattin viidumaamee

Meaning:

When you ascend further and reach the region between the eyes, the Aknja Cakra will stand there like a huge Globe with a bright circular band around. It has only TWO petals with the aksaras ha and La. In the center is the very powerful mantra syllable of ‘yaG' and that of ‘vaG' and which are the seed mantras of Space, one of the five the basic element of the cosmos.  Along with these seed mantras will stand the immensely powerful ManonmaNi and Cataaciva installing the state of being Cakkiraatiitam, a state of absolute transcendence while being awake

குருபதம்

75.

தானான மனோன்மணியைத் தாண்டி அப்பால்
    தனித்ததோர் எட்டுவிரல் மேலே கேளு
கோனான குருபதந்தான் கூடிப் பாரு
    குறிப்பான இதழ்தான் ஓர் ஆயிரத்தெட்டு
ஆனான நடுமையம் ஐங் கோணமாகும்
    அகாரமாம் உகாரமொடு மகார மாகும்
நானான நாதமொடு விந்து ஐந்தும்
    நலத்த ஐங்கோணத்தில் நிற்கும் பாரே

 Gurupatam ( Sakasrat Talam)

75.

taanaana manOnmaNiyait taaNdi appaal
    tanittatoor edduviral meelee keeLu
koonaana gurupatattaan kuudippaaru
    kuRippaana itaztaam oor aayiratteddu
aanaana nadumaiyam aiG kooNamaakum
    akaaramaam ukaaramodu makaaramaakum
naanana naatamodu Vintu aintum
    nalatta aiGkooNattil niRkum paaree

Meaning:

If you ascend eight inches above the Aknja Cakra of ManonmaNi and investigate the abode there, you will reach the Sahasra Talam, or Gurupatam,the abode with 1008 lotus petals. But in the center you will find a Pentagon with each corner having akaaram ukaaram makaaram and Siva Tatvas Natam and Bindu. These five will stands as the Logos, Om, that which provide all the goodness in the wolrd.
    







2013/10/6 Subashini Tremmel <ksuba...@gmail.com>

ரா.கிருஷ்ணன்

unread,
Oct 6, 2013, 8:45:15 AM10/6/13
to mint...@googlegroups.com
எண்டிசை விரிந்து ஏழுல காகி
அண்ட அகண்ட ஆதியே அருளே
தங்க மேனி தாயென யென்னுள்
தங்க வந்தாய் தாங்கிட வந்தாய்

2013/10/6 shylaja <shyl...@gmail.com>
வாராத  கல்விவரும் வளர்பிறைபோல் பொருளும் வரும்
கூராகும் புத்தியும் நல்லோர் கூட்டமும் சேர்ந்துவரும்
யாராலும் பயமில்லை நம் அன்னை மீனாட்சிதன்
பாதார விந்தங்களை ப்பற்றிப்பணிவோர்க்கு என்றும்!
 


2013/10/6 shylaja <shyl...@gmail.com>


2013/10/5 Hari Krishnan <hari.har...@gmail.com>

2013/10/5 ரா.கிருஷ்ணன் <krish...@gmail.com>

‘எங்கெங்கு காணினும் சக்தியடா’ என பாடியது பாரதிதாசன் அல்லவா?!

ஆமாம்.  இந்தப் பாடலைக் கேட்டுதான் பாரதி, ‘பாண்டியா!  நீ புலவனடா!’ என்று மகிழ்ந்தான்.  உடனடியாக, சுப்பிரமணிய பாரதியின் கவிதாமண்டலத்தைச் சேர்ந்த கனகசுப்புரத்தினம் இயற்றிய பாடல் என்ற குறிப்புடன் சுதேசமித்திரன் பத்திரிகைக்கு அனுப்பியும் வைத்தான்; அது பிரசுரமும் ஆனது.

முழுப்பாடலையும் தரலாம் என்று இணையத்தில் தேடினால் கிடைக்கவில்லை--அல்லது கிடைக்கும்படியாகத் தேடத் தெரியவில்லை.  அச்சுப் புத்தகம் இருக்கவே இருக்கிறது.  ஒளிவருடி இணைத்திருக்கிறேன்.

ஷைலஜா,

சின்ன மாற்றம் செய்துவிட்டால் போகிறது... ஒற்றை அடியோடு, துணுக்கோடு நிறுத்திக் கொள்ளாமல்

எண்ணுங் காரியங்க ளெல்லாம் வெற்றி
ஏறப்புரிந்தருளுமாறு - சக்தி
தன்னைப் பணிந்தவன் பாரதி - எண்ணம்
யாவையுமே அவட் காவுதி*

(அவளுக்கு ஆகுதி)

அப்படிங்கறா மாதிரி பாரதி பாட்டுலேந்து எதையாவது எடுத்து முன்னால லைன் கரக்.ஷன் பண்ணினா தீந்துது வேல!

(சக்தி பெறும்) பாவாணர் சாற்றுபொருள் யாதெனினும்
சித்திபெறச் செய்வாக்கு வல்லமைக்கே - முத்தான
தங்கைக்குப் பஞ்சமிலை; சட்டென்று கைகொடுக்க
சிங்கக் கருப்பனுளான் தேர்!
>>  நேத்து  வெளியூர்  போன இடத்தில் சட்டென  எழுதி  சரி பார்க்காமல்  சக்தி ரதமதில் ஏற்றியவள் ஊர் வந்து இப்பதான் கவனிக்கிறேன்.அறியாமல் செய்த பிழை திரு கிருஷ்ணன் ஐயா மன்னிக்க... சட்டென்று கைகொடுத்த சிங்கக்கருப்பருக்கு நன்றிமிக.


--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

--

shylaja

unread,
Oct 6, 2013, 8:52:17 AM10/6/13
to mintamil

தங்க வந்தாய் தாங்கிட வந்தாய்! 
 
அர்த்தமுள்ள அழகிய வரி!
2013/10/6 ரா.கிருஷ்ணன் <krish...@gmail.com>
எண்டிசை விரிந்து ஏழுல காகி
அண்ட அகண்ட ஆதியே அருளே
தங்க மேனி தாயென யென்னுள்
தங்க வந்தாய் தாங்கிட வந்தாய்

2013/10/6 shylaja <shyl...@gmail.com>
ஏறப்புரிந்தருளுமாறு - சக்தி

Subashini Tremmel

unread,
Oct 6, 2013, 8:56:49 AM10/6/13
to மின்தமிழ், Subashini Tremmel
இத்தகவலுக்கு நன்றி. வெள்ளியங்கிரி கேள்விப்பட்டதில்லை. மலைப்பிரதேசம் பார்க்க மிக அழகாக இருக்கின்றது. வாய்ப்பு அமைந்தால் நேரிலேயே சென்று தரிசித்து வருகின்றேன்.

சுபா


2013/10/6 Dhivakar <venkdh...@gmail.com>

Nagarajan Vadivel

unread,
Oct 6, 2013, 8:57:35 AM10/6/13
to மின்தமிழ்
நாங்களுந்தேந் தாங்கிப் புடிச்சு எழுதினோம்

சக்தி கண்டுக்கலியே

நாங்க என்ன தில்லானா மொஹனாங்கியா

வெறும் கருப்பாயி என்ற ஜில்லு ஜில்லு ரமாமணிதானே

மிஞ்ஞானி


2013/10/6 shylaja <shyl...@gmail.com>
--

Subashini Tremmel

unread,
Oct 6, 2013, 8:57:59 AM10/6/13
to மின்தமிழ், Subashini Tremmel

2013/10/6 Geetha Sambasivam <geetha...@gmail.com>

ஈசனின் மனதுக்குள்ளேயே இருப்பதால் மநோன்மணி என்ற பெயராகச் சொல்வார்கள். எல்லாச் சிவன் கோயில்களிலும்,  மூலஸ்தான லிங்கம் இருக்கும் கருவறையில் லிங்கத்தின் இடப்பக்கம் மநோன்மணி என்ற பெயரில் அம்மன் விக்ரஹம் இருக்கும்.  ஏனெனில் சிவனும் சக்தியும் சேர்ந்தாலே இயக்கம்.  வெறும் சிவன் தனியாக இயங்க முடியாது. சக்தி சேர்ந்தாலே இயக்கம் வரும். ஆகையால் கண்ணுக்குத் தெரியாத மறைவான இடத்தில் (நம் இதயம் இருக்கும் இடம் நமக்குத் தெரியாது அல்லவா? அது போல) இதயம் இருக்கும் இடத்திலே மநோன்மணி இருப்பதாக ஐதீகம்.  இந்தக் கேள்வியைப்பார்த்ததும் தெரிந்த விளக்கம் சொல்லி இருக்கேன்.  ஆனால் இதற்கு இன்னும் மேலதிக விளக்கம் உள்ளது. 

அழகான விளக்கம். கூடுதல் தகவ்லுக்கு நன்றி கீதா. 

2013/10/6 shylaja <shyl...@gmail.com>
மனோன்மணி தெய்வம்  பற்றிய நல்ல பாடல் சுபா.. அந்ததேவிபற்றி  அதிகம்  அறிய ஆவல்  யாருக்காவது தெரிந்தால் விளக்கலாம்


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

Subashini Tremmel

unread,
Oct 6, 2013, 8:59:09 AM10/6/13
to மின்தமிழ், Subashini Tremmel



2013/10/6 K. Loganathan <k.ula...@gmail.com>

நின்னா சுபா

சித்தர்கள் மனோன்மணியை சதாசிவ மூர்த்தியின் துணையாக ஆக்ஞா சக்கரத்தில் இருப்பதகக் கொள்வர்,

காணக; இவை போகரின் வாக்குகள், இவற்றை எல்லாம் விளக்க வேண்டுமானால்  சாதாசிவ  மூர்த்தியின் ஆறு முகங்களையும் கொண்டு வரவேண்டும் சற்று சிக்கலானது; எனது அழிவிலுண்மை எனும் நூலில் விளக்கி இருக்கின்றேன்

போகரைப் பற்றி முழு கட்டுரை கீழே:

https://sites.google.com/site/baktitamil/pokar---cakras-and-mantras
கட்டுரை  பகிர்வுக்கு மிக்க நன்றி. நேரம் கிடைக்கும் போது நிச்சயம் வாசிக்கின்றேன்.

சுபா

ரா.கிருஷ்ணன்

unread,
Oct 6, 2013, 9:09:06 AM10/6/13
to mint...@googlegroups.com
என்னை இப்படி மோஹனாங்கி ஆக்கி புட்டீங்களே ...
 
நியாம்தானா நியாயம்தானா....இப்படி பண்ணுவது நியாயம்தானா
 
பிப்பிப்பிப்பீ டும்முடக்கடும்


2013/10/6 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

Subashini Tremmel

unread,
Oct 6, 2013, 9:12:05 AM10/6/13
to மின்தமிழ், Subashini Tremmel
2013/10/6 ரா.கிருஷ்ணன் <krish...@gmail.com>
என்னை இப்படி மோஹனாங்கி ஆக்கி புட்டீங்களே ...

இல்லைங்க.. மொஹனாங்கி ஆக்கியிருந்தார்.. அதற்கு ஏதாவது பொருளிருக்கும். அதனை ஆராய்ந்து தனியாக ஒரு கட்டுரையும் சமர்ப்பிப்பார் பாருங்கள்.

சுபா



--

Subashini Tremmel

unread,
Oct 6, 2013, 9:13:46 AM10/6/13
to மின்தமிழ், Subashini Tremmel



2013/10/6 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

நாங்களுந்தேந் தாங்கிப் புடிச்சு எழுதினோம்

சக்தி கண்டுக்கலியே

நாங்க என்ன தில்லானா மொஹனாங்கியா

வெறும் கருப்பாயி என்ற ஜில்லு ஜில்லு ரமாமணிதானே

இப்படி வம்பு செய்வதற்காக இழையின் சொந்தக்காரர் ஷைலஜா வந்து ஏதும் உங்களுக்கு தண்டனை கொடுப்பதற்கு முன்னர்  பராசக்தியை வேண்டி வணங்கிக் கொள்ளுங்கள்.:-))

சுபா


Nagarajan Vadivel

unread,
Oct 6, 2013, 9:37:43 AM10/6/13
to மின்தமிழ்

2013/10/6 Subashini Tremmel <ksuba...@gmail.com>

இப்படி வம்பு செய்வதற்காக இழையின் சொந்தக்காரர் ஷைலஜா வந்து ஏதும் உங்களுக்கு தண்டனை கொடுப்பதற்கு முன்னர்  பராசக்தியை வேண்டி வணங்கிக் கொள்ளுங்கள்.:-))

​சும்மா சொல்லக் கூடாது இப்புடியே பில்டப்புலேயே ஒங்க இடத்தைத் தக்கவச்சுகுறீங்க

இப்பெல்லாம் அவங்க வகுப்பிலயும் தூங்கி இணையத்தில் தப்பா எழுதி எனக்கு எதிர்க்கடை வச்சிக்கிட்டிருக்காங்க

நான் எப்பவுமே வீட்டில் இருக்கும் பராசக்திக்கு அடங்கிப் போவதால் எழுந்து வணங்க முடிவதில்லை

மிஞ்ஞானி

Nagarajan Vadivel

unread,
Oct 6, 2013, 9:42:49 AM10/6/13
to மின்தமிழ்
ஐய்யோ கோபால் இணையத்தில் இப்புடி தப்புத் தப்பா மின் அஞ்சல் அணுப்புறீங்களே கோபால்

கோபால் கிருஷ்ணன் ஐயா கோபக்காரர் கோபால் 

அவர்கிட்ட என்னை மாட்டி விட்டுடீங்களே கோபால்

ஷைலஜா அம்மகிட்ட கொடுங்கன்னு படிச்சுப் படிச்சு சொன்னேனே கோபால்

எல்லாததியும் மறந்துட்டு இப்படி இணையத்தில் என்னைச் சிக்கலில் மாட்டிவிட்டீங்களே கோபால் மாட்டிவ்விட்டீங்களே கோபால்

நான் விக்கி விக்கி அழுகுறேன் கோபால் அதைக் கேட்டுட்டு நீங்க மரபு விக்கிக்கு அணுப்பீடாதீங்க கோபால்

மிஞ்ஞானி




2013/10/6 Subashini Tremmel <ksuba...@gmail.com>

shylaja

unread,
Oct 6, 2013, 9:58:29 AM10/6/13
to mintamil
நவராத்திரி  மும்முரத்தில்  வீடுவீடா போகவேண்டி இருக்கு:)  (இன்னிக்கு ஊதா கலர் புடவை....ஊதாகலரு சேலை  இது எந்தக்கடைல எடுத்த சேலை என்று  சிநேகிதிகள் கிண்டல்பாட்டுவேற:)
 
கொலுக்குப்போய் பாடிப்படுத்திட்டு  வீட்லவேற  சுண்டல்   செய்துவிட்டு  நடுல  சக்திரதமிழுக்க வந்தா   அப்ப  டக்குனு கண்லபடறதைப்பத்தி ஒருவார்த்தை சொல்றேன் அஷ்டே  ...இதுக்குபோயி பத்தவைக்கறீங்கபுரபசர்!


2013/10/6 Subashini Tremmel <ksuba...@gmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

shylaja

unread,
Oct 6, 2013, 9:59:45 AM10/6/13
to mintamil


2013/10/6 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>


2013/10/6 Subashini Tremmel <ksuba...@gmail.com>
இப்படி வம்பு செய்வதற்காக இழையின் சொந்தக்காரர் ஷைலஜா வந்து ஏதும் உங்களுக்கு தண்டனை கொடுப்பதற்கு முன்னர்  பராசக்தியை வேண்டி வணங்கிக் கொள்ளுங்கள்.:-))

​சும்மா சொல்லக் கூடாது இப்புடியே பில்டப்புலேயே ஒங்க இடத்தைத் தக்கவச்சுகுறீங்க

இப்பெல்லாம் அவங்க வகுப்பிலயும் தூங்கி இணையத்தில் தப்பா எழுதி எனக்கு எதிர்க்கடை வச்சிக்கிட்டிருக்காங்க>>>>>
 
:):) உங்க கடைக்கென்ன புரபசர்  இ இ இ   எல்லாம் உங்க பக்கம்  கலக்குங்க:) 

நான் எப்பவுமே வீட்டில் இருக்கும் பராசக்திக்கு அடங்கிப் போவதால் எழுந்து வணங்க முடிவதில்லை<<வெரிகுட்..இப்படியே இருங்க:)

மிஞ்ஞானி

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

Subashini Tremmel

unread,
Oct 6, 2013, 10:03:28 AM10/6/13
to மின்தமிழ், Subashini Tremmel

2013/10/6 shylaja <shyl...@gmail.com>

நவராத்திரி  மும்முரத்தில்  வீடுவீடா போகவேண்டி இருக்கு:)  (இன்னிக்கு ஊதா கலர் புடவை....ஊதாகலரு சேலை  இது எந்தக்கடைல எடுத்த சேலை என்று  சிநேகிதிகள் கிண்டல்பாட்டுவேற:)

ஆஹா.. அப்படின்னா ஒன்பது நாளும் ஒன்பது வீடுகள்.. ஒன்பது வர்ணத்தில் புடைவைகளா.. கலக்குக்க ஷைலஜா..

சுபா

shylaja

unread,
Oct 6, 2013, 10:08:46 AM10/6/13
to mintamil, Subashini Tremmel
 
ஆமா  இப்பதானே சான்ஸ்?  தீம் பேசிவச்சிட்டு  கலக்கலாம்னு:):) மலைமகள் தினங்களுக்கு பச்சை  சிவப்பு  ஊதா  அடுத்த   திருமகள் தினத்துக்கு  அரக்கு செந்தூரம் மஞ்சள் அல்லது மஸ்டட் அல்லது ரஸ்ட்  கடசி மூன்று தினங்களுக்கு வெண்பட்டு  க்ரீம்கலர்  ஹாஃப் ஒயிட் கலைமகளுக்கு!
 
 


2013/10/6 Subashini Tremmel <ksuba...@gmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

shylaja

unread,
Oct 6, 2013, 10:10:24 AM10/6/13
to mintamil


2013/10/6 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>
நாங்களுந்தேந் தாங்கிப் புடிச்சு எழுதினோம்

சக்தி கண்டுக்கலியே

நாங்க என்ன தில்லானா மொஹனாங்கியா

வெறும் கருப்பாயி என்ற ஜில்லு ஜில்லு ரமாமணிதானே

மிஞ்ஞானி

>>>>>>:):)  ஏன் புரபசர் இப்படி?:)

coral shree

unread,
Oct 6, 2013, 11:05:10 PM10/6/13
to தமிழ் வாசல், mintamil, vallamai, தமிழ் சிறகுகள்
வாராதுவந்த மாமணியே வாரணாம்பிகையே!

வற்றாத வரமருளும் நாயகியே வாரணாம்பிகையே
பொற்கோவிலில் ஆருத்ரா கபாலீசுவரனுடமர் வாரணாம்பிகையே
வற்றாத காவிரியின் வரமானவளே வாரணாம்பிகையே
பொற்பாதம் போற்றுகின்றேன் வாராணாம்பிகையே!


கோட்டையில் குடிகொண்ட குடிகாக்கும் வாரணம்பிகையே
கோளாறு நீங்கவே  சோதியானவளே வாரணாம்பிகையே
கோதைநாயகியே கோலமயிலே கோயில்புறாவே வாரணாம்பிகையே
திருத்தொண்டீசுவரத்தில் கோயில்கொண்ட நாயகியே வாரணாம்பிகையே!

ஈரோடைகளுக்கிடையே ஈசனோடுறையும் ஈசுவரியே வாரணாம்பிகையே
ஈரோடை மாநகரின் மாதவமே மாதேவியே வாரணாம்பிகையே
ஈரேழுலகும் காணாத கருணைவள்ளலே வாரணாம்பிகையே
ஈருயிரை தாசிவயிற்றில் ஏற்றி விமோசனமளித்த வாரணாம்பிகையே

ஓருயிரும் நீயின்றி உய்யும் வகையறியாதே வாரணாம்பிக்கையே
பனிதூங்கும் மலர்தனிலே பட்டொளியானாய் வாரணாம்பிகையே
கனியின்ரசமாய் கார்முகில் வண்ணமாய் வந்துதித்த வாரணாம்பிகையே
சரணம் உனை அடைந்திட்டேன் சடுதியில் வாருமம்மா வாரணாம்பிகையே!


நன்றி
அன்புடன்
பவள சங்கரி


2013/10/4 shylaja <shyl...@gmail.com>
 சக்தி ரதமிழுக்க  வடத்தில் முதல் கரமாக  இக்கவிதை நவராத்திரி நன்னாளில்..மேலும் கரங்கள்  இழுக்கட்டும்.!
 
காப்பு
 
ஆனைமுகங்கொண்ட ஞான முதலோனே
பானை வயிற்றுக்குள்ளே பாரைக்காப்போனே
ஞானமேதுமின்றிலும் பாடமுனைகின்றேன்
தேனாய்ப் பெருகிடவே  தேவே அருள்வீரே!

-
_____________________________________________
 
 நெல்லுக்குள் மணியாக இருக்கின்றாள் -சக்தி
நீருக்குள் சுவையாக  இனிக்கின்றாள்-அவள்
பண்ணுக்குள்பாட்டாக இசைக்கின்றாள்-இசைப்
பாட்டுக்கு யாழாக ஒலிக்கின்றாள்
 
சொல்லுக்குப்பொருளாக திகழ்கின்றாள்-சக்தி
சோர்வுக்குத் தெம்பைத் தருகின்றாள்-அவள்
கற்பகத்தருவெனக் கொடுக்கின்றாள்-கரு
காப்பதைப் பணியாகக் கொள்கின்றாள்
 
பேரொளியின் ஜோதியாய் நிற்கின்றாள் -சக்தி
பேர்தனிலே வலிமை சேர்க்கின்றாள் அவள்
கார்வண்ணக்காளியாய் சிரிக்கின்றாள் -எல்லைக்
காவல்தெய்வமாயும் காக்கின்றாள்!
___________________
நவராத்திரி குறிப்பு...
 
உடுப்பிகிருஷ்ணன்  கோவிலில் நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் கிருஷ்ணருக்கு புடவை அணிவித்து அலங்கரிப்பார்கள் இவைகள் மைசூர் மகராஜா வழங்கினார் என்று சொல்லப்படுகிறது.

. .

Reply
Forward
 

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--

                                                               
                 

Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

shylaja

unread,
Oct 6, 2013, 11:16:29 PM10/6/13
to தமிழ் வாசல், mintamil, vallamai, தமிழ் சிறகுகள்
 
 
அவளோ?
 
ஷைலஜா

-- உமையவளோ உண்மைப்பரம்பொருளோ
எமைக்காக்கும் சமயபுரத்தவளோ
உக்கிரம் கொண்டவளோ  உலகில் நிறைந்திருக்கும்
வக்கிரமனத்தோரின் வலிமையை அழிப்பவளோ
சக்கரசங்கக்கரத்தானின் சகோதரியோ   சகலகலாவல்லியோ
எக்கரம் ஏந்தி நிற்பினும்  அருள்பிச்சையை  ஈந்திடும் எம் தாயோ?
 
 
மாவிளக்கேற்றிவைப்போர் வாழ்வில் மனையிலே வளம் வைப்பவளோ
பாவிளக்கேற்றிவைத்தால்  பாழும் இருள் அகற்றி ஞானத்
தூவிளக்கேற்றிவைத்து துயரெனும் இருட்டைத்துரத்து்பவளோ
காலம் முழுதும் நம்மைக்காப்பவளோ காவலாய் இருப்பவளோ
ஞாலம் அனைத்திற்கும் மூலமோ
 ஞானமின்றி நான் இன்னும் புலம்புவதோ?!
 
 

. .

Reply
Forward
 


2013/10/7 coral shree <cor...@gmail.com>



--
 
 

. .

Reply
Forward
 

Geetha Sambasivam

unread,
Oct 6, 2013, 11:51:20 PM10/6/13
to மின்தமிழ்
நவராத்திரியில் நவ துர்க்கைகள் - சந்திரகாந்தா, ஸ்கந்த மாதா, 4-ம் நாள்!

இன்றைய அலங்காரம் ஜயதுர்கை!


சந்திரகாந்தா: மூன்று கண்களை உடைய இவளை வணங்கினால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்படும். சந்திரகாந்தக் கல் எப்படி சந்திரனின் குளுமையைத் தன்னுள் வாங்கிக் கொண்டு நீரைப் பொழிகின்றதோ அப்படியே அம்பாள் நம் வெம்மையைத் தன்னுள் வாங்கிக் கொண்டு குளுமையான கருணை நீரைப் பொழிகின்றாள். இங்கே வெம்மை என்பது நம் வினைகளைக் குறிக்கின்றது. நம் தீவினைகளால் ஏற்படும் வெப்பத்தைத் தணிவித்துத் தன் கருணை மழையால் நம்மைக் குளிர்விப்பவள் இவளே. முக்கண்ணனின் பத்தினியான இவளும் முக்கண்களைக் கொண்டு தலையில் பிறைச்சந்திரனைச் சூடிக் கொண்டு காக்ஷி கொடுக்கின்றாள். நாம் செய்யும் தீவினைகள் ஆகிய அசுரர்களைத் தடுக்கக் கையில் பல்வேறு ஆயுதங்களை ஏந்தியவண்ணம் காக்ஷி கொடுக்கின்றாள். ராகுவினால் துன்பம் நேருமோ என அஞ்சுபவர்கள் இவளைத் துதிக்கலாம். செவ்வாய்க்கிழமைகளில் இவளைத் துதித்தல் துன்பம், தடைகள் நீங்கி வாழ்வில் வளம் பெறுவார்கள். திருவாலங்காட்டில் காளியைத் தோற்கடிக்க ஈசன் ஆடிய ஆட்டம் ஊர்த்துவ தாண்டவம் எனப்படும். ஒரு காலைத் தரையில் ஊன்றி, மறு காலைத் தோளுக்கு இணையாக உயர்த்தி ஈசன் ஆடிய இந்த ஆட்டத்தில் இருந்து தோன்றியவளே சந்திரகாந்தா தேவி.

ஸ்கந்தமாதா; இவளும் நவராத்திரியின் செவ்வாய்க்கிழமைகளிலேயே துதிக்கப் படவேண்டியவள். ஸ்கந்தனுக்கு உகந்த நாளும் செவ்வாய்க்கிழமையே. ஸ்கந்தனின் மாதாவான இவளுக்கும் செவ்வாயே உகந்த நாள். அக்னி சொரூபம் ஆன ஸ்கந்தனின் திரு அவதாரத்திற்குக் காரணகர்த்தா இவளே. அக்னி எவ்வாறு அனைத்துப் பொருட்களையும் சுட்டெரிக்கின்றதோ அவ்வாறே நம்மைச் சூழ்ந்து சுட்டெரிக்கும் துன்பத்தை இவள் சுட்டெரிப்பாள். அங்காரகனால் ஏற்படும் தோஷங்களையும் போக்குபவள் இவளே. நவராத்திரி செவ்வாய்க்கிழமைகளில் இவளை வணங்குதல் நன்மை பயக்கும். பாற்கடலை அசுரர்களும் தேவர்களும் கடையும்போது முதலில் வந்தது கடும் விஷமே. அந்த ஆலகாலவிஷத்தை உண்ட ஈசனின் கண்டத்தைப் பிடித்தாள் அன்னையவள். நீலகண்டனான ஈசன் அப்போது ஆடிய தாண்டவம் புஜங்க தாண்டவம் என அழைக்கப் படும். அந்தத் தாண்டவத்தின் போது தோன்றியவளே ஸ்கந்தமாதா ஆவாள்.


நான்காம் நாளான இன்று படிக்கட்டுக் கோலம் போடவேண்டும். தேவியை இன்று விஷ்ணுவின் அம்சமான வைஷ்ணவியாக சங்கு, சக்ர, கதாதாரியாக வழிபடவேண்டும். சிறு பெண் குழந்தையை இன்று “சுமங்கலி” என்னும் நாமத்திலும், ஐந்து வயதுள்ள பெண் குழந்தையை ரோகிணி என்ற நாமத்துடனும் வழிபடலாம். வழிபட்டு கல்கண்டு சாதமும், பச்சைப்பட்டாணிச் சுண்டலும் நிவேதனம் செய்யலாம்.  செய்முறை கீழே வரும்.

ஒரே உடலின் வலப்பக்கம் ஈசன் எனில் இடப்பக்கம் அம்பாள். அம்பாளின் நிறம் உதிக்கின்ற செங்கதிர்களைப் போன்ற சிவந்த நிறம் எனில் ஈசனின் நிறம் ஸ்படிகம் போன்றது. ஸ்படிகத்தின் அருகே வேறு நிறக்கற்களை வைத்தால் எவ்வாறு அது அந்தக் கல்லின் நிறத்தைத் தனதாக்கிக் கொள்கிறதோ அவ்வாறே அம்பாளைத் தன் இடப்பாகத்தில் வைத்த ஈசனும் மறைந்து போய் அம்பாளோடு ஐக்கியமாகி அவளாகவே ஆகிவிடுகிறான். ஆகவே தேவி வழிபாடே ஈசனுக்கும் உகந்ததாகிவிடுகிறது. இங்கே அவன் தேவியோடு ஐக்கியமாகித் தனக்கென ஒரு வடிவமும் இல்லாமல், தொழிலும் இல்லாமல் அவளாகவே ஆகிவிடுகின்றான். 
எவளை வழிபட்டால் அனைத்துத் தேவதைகளையும் வழிபட்டதற்குச் சமானம் ஆகிறதோ அந்த மூலப் பொருள் அம்பிகை. இவளே ஐந்து தொழில்களையும் நடத்துகிறாள் என்பதையும் ஏற்கெனவே பார்த்தோம். இதையே லலிதா சஹஸ்ரநாமமும், ஸ்ருஷ்டி கர்த்ரீ, ப்ரஹ்மரூபா, கோப்த்ரீ, கோவிந்த ரூபிணீ, 
சம்ஹாரிணி, ருத்ரரூபா, திரோதானகரீஸ்வரீ, ஸதாசிவா அனுக்ரஹதா, பஞ்ச க்ருத்ய பராயணா!” என்று கூறுகிறது. 

நான்காம் நாள் படிக்கட்டுக் கோலம் போட்டு, ஐந்து வயதுள்ள பெண் குழந்தையை ரோகிணி என்ற நாமத்துடன் வழிபடவேண்டும். ரோகங்கள் அனைத்தும் நீங்க இவ்வழிபாடு மிகவும் சிறந்தது. இன்றைய அலங்காரமாய் அம்பிகையை ஜயதுர்கை கோலத்தில் அலங்கரிக்கலாம். அனைத்துத் தடைகளும் நீங்கிய கோலத்தில் சிங்காதனத்தில் தேவர்களும், முனிவர்களும் இவள் தாள் பணிந்து சொல்லும் தோத்திரங்களை ஏற்கும் கோலத்தில் உள்ள இவளை ரோகிணி என்பார்கள். சிவப்பு மலர்களால் நான்கு, ஐந்து, ஆறாம் நாட்களில் அர்ச்சிக்கவேண்டும் என்பது நியதி. என்றாலும் இன்றைய வழிபாட்டுக்குச் செந்தாமரைப் பூ மிகவும் உகந்தது.

இன்றைய நிவேதனம் கல்கண்டுப் பொங்கல். அரிசி, பருப்பை மிதமாக வாசனை வரும்படி வறுத்துக் கொண்டு, பால் விட்டுக் குழைய வைத்து, கட்டிக் கல்கண்டைச் சேர்த்து நன்கு சுருள வந்ததும், ஏலக்காய், முந்திரிப்பருப்பு, திராட்சி நெய்யில் வறுத்துப் போடவும்.  குங்குமப் பூக் கிடைத்தால் பாலில் ஊற வைத்துச் சேர்க்கலாம். குழந்தைகளுக்கு மிகவும் பிரியமான ஆகாரம் இது. உடலுக்கும் கேடு விளைவிக்காது.

இன்றைய சுண்டல் பட்டாணிச் சுண்டல்.  பச்சைப்பட்டாணியை நன்கு ஆறு மணி நேரத்துக்குக் குறையாமல் ஊற வைக்கவும்.  ஊறும் போதே நான்கைந்து முறை கழுவி நீரை மாற்றவும்.  பட்டாணி கொழ,கொழவென ஆவதைத் தவிர்ப்பதோடு ஊறிய பட்டாணியின் வாடையும் வராது.  நேரடியாகவோ அல்லது குழைய வேண்டுமெனில் குக்கரிலேயோ உப்புச் சேர்த்து வேக வைக்கவும்.  இஞ்சி, பச்சை,மிளகாய், மாங்காய் பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்,  தேங்காயையும் பல்லு, பல்லாகக் கீறவும். கடாயில் எண்ணெய் ஊற்றிக் கொண்டு கடுகு, கருகப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து, நறுக்கிய இஞ்சி, பச்சைமிளகாய் சேர்க்கவும்.  வெந்த பட்டாணியைச் சேர்த்துத் தேவையானால் அரை ஸ்பூன் மிளகாய்ப் பொடி போடவும்.  காரம் தேவையில்லை எனில் மாங்காய், தேங்காயைச் சேர்த்து நன்கு கிளறவும். விநியோகத்துக்குச் சுண்டல் தயார்.

துர்காஷ்டகம்:

உயிருமானவள் துர்கா உடலுமானவள்
உலகமானவள் எந்தன் உடமையானவள்
பயிருமானவள் துர்கா படரும் கொம்பவள்
பண்பு பொங்கிட என்னுள் பழுத்த துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே

லலிதா நவரத்தின மாலையின் இன்றைய ரத்தினம் பவளம்

அந்தி மயங்கிய வானவிதானம் அன்னை நடம் செய்யும் ஆநந்த மேடை
சிந்தை நிரம்ப வளம் பொழிவாளோ தேன்பொழிலாமிது செய்தவளாரோ
எந்த இடத்தும் மனத்தும் இருப்பாள் எண்ணுபவர்க்கருள் என்ணமிகுந்தாள்
மந்திர வேதமயப் பொருளானாள் மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே!

மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே, மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே, மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே!



Geetha Sambasivam

unread,
Oct 6, 2013, 11:53:33 PM10/6/13
to தமிழ் சிறகுகள், தமிழ் வாசல், mintamil
//ஈருயிரை தாசிவயிற்றில் ஏற்றி விமோசனமளித்த வாரணாம்பிகையே//


இதைக் குறித்துக் கேள்விப் படவில்லை பவளசங்கரி,  நேரம் இருக்கையில் விளக்குங்கள். 



2013/10/7 coral shree <cor...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Oct 6, 2013, 11:54:33 PM10/6/13
to மின்தமிழ், தமிழ் வாசல், தமிழ் சிறகுகள்
ஞானமின்றித் தான் புலம்பறோம். :))))

சமயபுரத்தாளுக்கு அருமையான பாமாலை.


2013/10/7 shylaja <shyl...@gmail.com>
 
 
அவளோ?
 
ஷைலஜா

Dhivakar

unread,
Oct 7, 2013, 12:35:57 AM10/7/13
to vallamai, மின்தமிழ், தமிழ் வாசல், தமிழ் சிறகுகள்

மீனாட்சி உமையே

கார்முகிலே கருமைநிறத்தாளே கண்ணுக்கினியாளே கற்கண்டே

பார்முழுதும் ஆளும் பருப்பதநாயகியே பரதேவதையே

சீர்பெற்ற தென்மதுரைதேவியே தென்றலே தேவர்க்கரசியே       10

நேர்வந்து நின்றெமையாட் கொண்டருளும் அம்மையே போற்றி!!

 

ஞானப்பாலருளித் தமிழ்வேதம் தந்தாயேதாயே தலைவன்

மோனத்தவம் கலைத்து ஞாலத்தை ரட்சித்தாயேதாயே

கானகத்தே வந்துகாமம் குலைத்த காமேசுவரன்காதலியே         11

மான்விழியாளே எமையாட் கொண்டருளும் அம்மையே போற்றி!

 

மங்கையரும் மயங்கும் மெல்லிடையாளே மகேசுவரியே

அங்கயற்கண்ணால் ஆதிசிவனைக் கவர்ந்தவளே ஆதியே

எங்கும்நிறைந்த சோதியே சோமசேகரன் இடம்கொண்டமாதே  12

பங்கயப்பாதம் தந்தெமையாட் கொண்டருளும் அம்மையே போற்றி!



2013/10/6 Dhivakar <venkdh...@gmail.com>

மீனாட்சியுமையே - 7,8,9

அங்கமெல்லாம் மின்னும் தங்கமே தங்கத்தினொளியே

சங்கத்தமிழ்தந்த செல்வமே செல்வத்தின் ஊற்றே

மங்காப்புகழ் மதுரையின்கண் மதுரமாய் அமர்ந்தவளே               7

சிங்காரவல்லியே எமையாட்கொண்டருளும் அம்மையேபோற்றி!!

 

தந்தையுந்தாயுமாய் இருப்பவளே  தாமரையின் மென்மையே

சிந்தைதனிலே உறையும் செண்பகநாயகியே செல்வமே

செந்தேனாயினிக்கும் சொக்கநாதன் திருவருளே அருமருந்தே  8      

உந்தனிருபாதம் தந்தெமையாட்கொண்டருளும் அம்மையேபோற்றி!!

 

ஆருயிரே அங்கயற்கண் நாயகியே அகிலாண்டேஸ்வரியே

ஓருடலானவனின் இடபாகமாண்டவளே இதயமாய் இயங்குபவளே

ஓருருவம் தனக்கில்லா எவ்வுருவுமானவளே ஒப்பிலாதவளே   9    

சேரும்வினை தீர்த்தெமையாட்கொண்டருளும் அம்மையே போற்றி!!



2013/10/5 Dhivakar <venkdh...@gmail.com>

அகத்தினுள்ளே இகபரசுக நாயகியாய் நிறைந்தவளே

சகமனைத்தும் ரட்சிக்கும் சகன்மோகினியே சங்கரியேயுன்

மகத்துவம் முழுவதும் சகத்தினில்தான் யாரறிவார்

திகம்பரனின் சுந்தரியே ஆட்கொண்டருளும் அம்மையேபோற்றி!!

 

மாசிலாமணியே மலயத்துவசன்மகளே மண்ணாண்ட மீனாளே

காசினியின் அன்னையாய் கருணைக்கடலாய் வந்தவளே

வீசுதென்றலாய் மதுரையீசன் மனதிற்குளிர்ந்த தாயே                5

பசுமைநாயகியே எமையாட்கொண்டருளும் அம்மையேபோற்றி!!

 

காமனை எரித்தவனுக்கு காமத்தைக்கொடுப்பவளே கற்பகமே

சோமசுந்தரன் மனங்கவர்ந்த மங்கையே மீனாட்சியுமையே

பாமரனைக் காத்தருளும் தென்மதுரைத் தேனிலவே                    6

எமபயம் தீர்த்து எமையாட்கொண்டருளும் அம்மையே போற்றி!!

 



2013/10/4 Dhivakar <venkdh...@gmail.com>
அடியேனும் உண்டு சக்தி ரதத்தை இழுப்பதில் //


மீனாட்சியுமையே 

அம்மையே அப்பனின் இடரூபவதியே மீனாட்சியுமையே

செம்மையே செவ்விதழ்நாயகியே சிவகாமசுந்தரியே

இம்மையின்இயக்கமே இன்பத்தின் ஊற்றே  இன்னிசையே

எம்மையும் ஆட்கொண்டருளும் அம்மையே போற்றி!!                1

 

திண்ணமாய் உள்ளத்திலூறும் எண்ணமாய் திளைப்பவளே

எண்ணயெண்ண என்னிரண்டு கண்ணநீர் பெருகுதும்மா

கண்ணின்மணியே மணியினொளியே ஒளிரும் கீற்றே

மண்ணில் வநது ஆட்கொண்டருளும் அம்மையேபோற்றி!!      2

 

காற்றோடு கலந்து அனலாகி புனலாகித் தோன்றி

ஆற்றுமணலென மலையென வளமிகு பூமியாய்மாறி

மற்றுமொன்றறியா விண்ணாகி தொலைவாகிப் போனாலும்  3

பற்றோடு வந்தெமை ஆட்கொண்டருளும் அம்மையேபோற்றி!!



2013/10/4 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>
செய்து விட்டேன் தோழி!. மிக்க நன்றி!


2013/10/4 coral shree <cor...@gmail.com>
அன்பின் பார்வதி,

உங்கள் படையலையும் சமர்ப்பிக்கலாமே?

அன்புடன்
பவளா


2013/10/4 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>
////தஞ்சம் தஞ்சமென அலைந்தேனுக்கு அடைக்கலம் அருளுமம்மா
நஞ்சையும் புஞ்சையும் செழித்து வளர வாருமம்மா
பஞ்சமும் பசியும் பாரினில் அறவேஒழிய தயைதாருமம்மா
வஞ்சம் தீண்டாமல் வஞ்சியே காத்தருளுமம்மா///

திருமகளைப் போற்றும் அருமையான பாடல்!!.. வளம் பெருக வரம் தருக என்று போற்றித் தொழுகின்றேன் நானும்.

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.


2013/10/4 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>

///நெல்லுக்குள் மணியாக இருக்கின்றாள் -சக்தி
நீருக்குள் சுவையாக  இனிக்கின்றாள்-அவள்
பண்ணுக்குள்பாட்டாக இசைக்கின்றாள்-இசைப்
பாட்டுக்கு யாழாக ஒலிக்கின்றாள்////

'எங்கெங்கு காணினும் சக்தியடா' வை நினைவுபடுத்தும் அருமையான வரிகள். மிக அருமையான சொல்லாட்சி அக்கா!. 

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.


2013/10/4 coral shree <cor...@gmail.com>
அன்பின் ரஞ்சனி மேடம்,


மிக்க நன்றிங்க. தங்களுடைய அன்பான ஊக்க்மான வார்த்தைக்களுக்கு மனமார்ந்த நன்றி.

அன்புடன்
பவளா


2013/10/4 Ranjani Narayanan <ranjanid...@gmail.com>

// பாற்கடல் நாயகி கற்பகவல்லி புறப்பட்டாள்!

அற்புதங்கள் புரியவே அருள்மழை பொழியவே//

என்று ஆரம்பித்து அழகாக, பெருகும் அன்புடன்  அவளை வாருமம்மா, வாருமம்மா என்று வரவேற்க கவிதை பாடி - நவராத்திரி பற்றிய சிறப்பு செய்திகளையும் சொல்லி எங்களை ஆனந்த வெள்ளத்தில் மூழ்கடித்து விட்டீர்கள், பவளா!

பாராட்டுக்கள்.

இனிய நவராத்திரி வாழ்த்துக்கள்.



2013/10/4 Ranjani Narayanan <ranjanid...@gmail.com>
காப்பு செய்யுளுடன் சக்தியை அமர்க்களமாக 
// நெல்லுக்குள் மணியாக
நீருக்குள் சுவையாக 
பண்ணுக்குள்பாட்டாக
சொல்லுக்குப்பொருளாக// திகழும் சக்தியை உங்கள் பாமாலை என்னும் ரதத்தில் எழுந்தருளப் பண்ணிவிட்டீர்கள், ஷைலஜா!
தேவியின் பரிபூரண அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும். பாராட்டுக்கள். இனிய நவராத்திரி வாழ்த்துக்கள்!


2013/10/4 shylaja <shyl...@gmail.com>
கவிதையும் நவ்ராத்திரிக்குறிப்பும்  சிறப்பு பவழா!


2013/10/4 coral shree <cor...@gmail.com>

வளம் தரும் நாயகியே வருகவே!


பாற்கடல் நாயகி கற்பகவல்லி புறப்பட்டாள்!
அற்புதங்கள் புரியவே அருள்மழை பொழியவே
பொற்பதங்கள் பணிந்து கருத்தாய் வழிபடவே
நற்கதியருளி  ஆனந்தமழை பொழியவே
பொற்சலங்கைகள் ஜல்ஜல்லென தாளமிட
கற்சிலையாய் வீற்றிருந்தவள் கலகலவென புறப்பட்டாள்!

நித்ய கல்யாணியே நிதம் வாருமம்மா
சத்ய சொரூபமாய் சாந்தமாய் வாருமம்மா
சிந்தை கலங்காமல் நின்பதம்பாட வாழ்த்தியருளுமம்மா
முந்தைவினை தீண்டாமல் முத்தாய் பதமருளுமம்மா
பந்தத்தில் கிடந்துழலாமல் பரிவாய் காத்தருளுமம்மா
பைந்தமிழ்ப்பாமாலை பாடியுனைத் துதிக்கும் வரமருளுமம்மா

அஞ்சி அஞ்சி நிற்பவருக்கு ஆறுதலாய் வாருமம்மா
கெஞ்சி கெஞ்சி தவமிருப்போரை காத்தருளுமம்மா
தஞ்சம் தஞ்சமென அலைந்தேனுக்கு அடைக்கலம் அருளுமம்மா
நஞ்சையும் புஞ்சையும் செழித்து வளர வாருமம்மா
பஞ்சமும் பசியும் பாரினில் அறவேஒழிய தயைதாருமம்மா
வஞ்சம் தீண்டாமல் வஞ்சியே காத்தருளுமம்மா

ரஞ்சனியே  தாயே தயாபரயே ரட்சித்தருளுமம்மா!
பிரதமை திதியில் பிரியமாய்வந்து காத்தருளுமம்மா!


வேதம் படிப்பதால் கிடைக்கும் அத்தனை ஞானமும், நலனும், வளமும் விரதங்களால் கிடைக்கின்றன என்று புராணங்கள் கூறுகின்றன. ‘சிவனுக்கு ஒரு இராத்திரி சிவராத்திரி, அம்மனுக்கு ஒன்பது இராத்திரி, நவராத்திரி’ என்பார்கள். அன்னை பராசக்தியை புரட்டாசி மாதத்தில்  ஒன்பது தினங்கள் முறையாக வழிபடும்  அற்புத விரதம் நவராத்திரி விரதம். அன்னையின்  விரதங்களுள் மிகச் சிறந்த ஒன்றாகும் இவ்விரதம். நலங்கள் யாவும் அள்ளித்தரும் நாயகியின் நவராத்திரி விரத மகிமையை கந்தபுராணமும் எடுத்துரைக்கிறது . நவராத்திரி வழிபாடு அன்னை சக்தியின் மகிமையை பார் புகழ விளங்கச்செய்யும்.  மனிதரின் வாழ்க்கை நலமான,  கல்வி, செல்வம், வீரம் ஆகிய இம்மூன்றையும் வேண்டி அம்மனின் அவதாரங்களான  சரசுவதி, இலக்குமி, துர்காதேவி என மூன்று சக்தி அம்சங்களையும் உளம் குளிர வழிபடுதலே இவ்விரதத்தின் நோக்கம்.  முதல் மூன்று நாட்களில் வீரத்தையும், தைரியத்தையும் வேண்டி அன்னை பராசக்தியை வழிபடுகிறோம்.  அடுத்த மூன்று நாட்கள் வாழ்வாதாரமான செல்வம் வேண்டி மகாலட்சுமியைத் துதிக்கிறோம். இறுதி மூன்று நாட்களும் கல்வி, ஞானம், சகல கலைகள் என அனைத்தும் வேண்டி  சரசுவதி தேவியை வழிபடுகிறோம். 

அனைவருக்கும் இனிய நவராத்திரி வாழ்த்துகள்! நன்றி.

அன்புடன்
பவளா

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--

                                                               
                 

Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--

                                                               
                 

Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.

shylaja

unread,
Oct 7, 2013, 1:34:21 AM10/7/13
to vallamai, மின்தமிழ், தமிழ் வாசல், தமிழ் சிறகுகள்
சக்தி ரதத்தை பாடல் வரிகளில் ஏற்றியுள்ள விதம்  மிகப்பொருத்தம்! அழகும் கூட!


2013/10/7 sathiya mani <sathi...@yahoo.com>
சக்தி ரதம் தமிழ் பாசுரத் தோரணங்களால் சுபிட்சமாக நகர்வலமல்ல ...உலக வலம் வருகிறது. மீனாட்சி உமையே பதிகம் ரதத்தின் மீன்கொடி , வளம் தரும் நாயகியே  வாழை மரம்..சக்தி ரதமிழுக்க  வடத்தில் முதல் கரமாக  தமிழ்க்கவிதை...
மேலும் அழகு சேர்க்கும் முகமாக‌

சக்தி ரதத்தில் முத்தேவியர்களுக்காக‌ என்னுடைய எளியத்  தமிழ் தோரணங்கள் !  

கொலுவிருக்க வந்தனளே

கொலுவிருக்க வந்தனளே புவனேஸ்வரி - ராஜ‌
கொலுவீற்று  அரியணையில் ராஜேஸ்வரி
தொழுமடியார்  அன்பில் சக்திரதமேறி - தினம்
பொழிந்தனளே தமிழ்சிந்தும் ஞானேஸ்வரி ()

படியென்று பலகலைகள் பயில வைத்தாய்
படிபடியாய் படியேற்றி உயர‌ வைத்தாய்
அடியெடுத்து உள்நுழைந்து அலங்கரித்தாய் - சக்தி
வடிவெடுத்து அடியார்க்கு  நலம‌ளித்தாய் ( )

மலைமகளாய் வீரத்தை எமக்களித்தாய்
அலைமகளாய் அருட்செல்வப் பெருக்களித்தாய்
கலைமகளாய் இசைக்கவிதைச் செவிக்களித்தாய்
நிலைமகளாய் கீர்த்திபுகழ் சிசுக்களித்தாய் ( )

நவராத்ரி நோன்பிருக்க மனமளித்தாய்
நவமணியாய் சுண்டலெனச் சுவையளித்தாய்
தவமியற்ற தெரியாது! துதியளித்தாய் - அதைத்
தவமென்று நிறைவேற்றி  அருளளித்தாய்()
 
S.Sathiyamani,
Director (Technical)
NIC, DIT, M/o IT And Communcation,
New Delhi
9868126406


From: Dhivakar <venkdh...@gmail.com>
To: vallamai <vall...@googlegroups.com>; மின்தமிழ் <minT...@googlegroups.com>; தமிழ் வாசல் <thamiz...@googlegroups.com>; தமிழ் சிறகுகள் <tamizhs...@googlegroups.com>
Sent: Monday, 7 October 2013 10:05 AM
Subject: Re: [வல்லமை] Re: [தமிழ் வாசல்] சக்தி ரதம்!



--
 
 

. .

Reply
Forward
 

Subashini Tremmel

unread,
Oct 7, 2013, 2:18:07 AM10/7/13
to மின்தமிழ், Subashini Tremmel
நவராத்திரி நாளில் இன்றைய சிந்தனைக்கு திருமந்திரத்திலிருந்து 3 பாடல்கள்.

நூல் : திருமந்திரம் - தருமையாதீனப் பதிப்பு

பாடல் 1047

அளியொத்த பெண்பிள்ளை ஆனந்த சுந்தரி
புளியுறு புன்பழம் போலுள்ளே நோக்கித்
தெளியுறு வித்துச் சிவகதி காட்டி
ஒளியுற வைத்தென்னை உய்யஉண் டாளே

பொருள் சுருக்கமாக
நமது உள்ளமெனும் தாமரையில் வண்டுபோல விரும்பி உறைகின்றவள் அவள். ஆனந்தமே உருவாக அழகொடு நிற்கும் திரிபுரை அவள். என் உள்ளம் புளிய மரத்தில் இருக்கும் பழுத்த பழம் போல பக்குவம் பெறும்படி அருள் நோக்கம் செய்து மெய்ஞானத்தைக் காட்டி சிவத்தன்மை பெறவைத்து என்னை தன்னுள்ளே அடக்கிக் கொண்டாள். இது கருணையல்லவோ!


பாடல் 1092

அஞ்சொல் மொழியாள் அருந்தவப் பெண்பிள்ளை
செந்சொல் மடமொழி சீருடைச் சேயிழை
தஞ்சமென் றெண்ணித்தன் சேவடி போற்றுவார்க்
கின்சொல் லளிக்கும் இறைவிஎன் றாரே.

பொருள் சுருக்கமாக
மகாசக்தியாகிய அன்னை தன்னை தஞ்சமென்று தேடி வருவோர்க்கு அருள்புரியும் இயல்பு கொண்டவள். இவள் அருளை வேண்டிப் போற்றி நற்கதியடைவோம்.


பாடல் 1169

அதுஇது என்னும் அவாவினை நீக்கித்
துதியது செய்து சுழியுற நோக்கில்
விதியது தன்னையும் வென்றிடலாகும்
மதிமல ராள்சொன்ன மண்டலம் மூன்றே

எனக்கு அது வேண்டும் இது வேண்டும் என்று ஆசைப்படுகின்றது மனது. அந்த ஆசையை விடுத்து சந்திர மண்டலத்தில் உள்ள ஆயிர இதழ் தாமரையில் விளங்குபவளாகிய சக்தி விளக்கியருளிய மூன்று மண்டலங்களில் உள்ள பொருள்களைப் போற்றி செய்து சுழுமுனையில் நின்று பொருந்த நோக்கினால் விதியையும் வெல்லுதல் கூடும்.


அன்புடன்
சுபா


2013/10/6 Subashini Tremmel <ksuba...@gmail.com>
--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

Subashini Tremmel

unread,
Oct 7, 2013, 2:20:17 AM10/7/13
to மின்தமிழ், Subashini Tremmel



2013/10/7 shylaja <shyl...@gmail.com>
 
 
..
காலம் முழுதும் நம்மைக்காப்பவளோ காவலாய் இருப்பவளோ
ஞாலம் அனைத்திற்கும் மூலமோ
 ஞானமின்றி நான் இன்னும் புலம்புவதோ?!
இவ்வரிகள் மனதைத் தொடுகின்றன.

சுபா
 
 
 

. .

Reply
Forward
 
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--

shylaja

unread,
Oct 7, 2013, 2:21:33 AM10/7/13
to mintamil, Subashini Tremmel
ஏனிப்படி  புலம்பல்மட்டும் எல்லாரையும் தொடுகிறது?:) 


2013/10/7 Subashini Tremmel <ksuba...@gmail.com>



--
 
 

. .

Reply
Forward
 

Subashini Tremmel

unread,
Oct 7, 2013, 2:22:16 AM10/7/13
to மின்தமிழ், Subashini Tremmel



2013/10/7 coral shree <cor...@gmail.com>

வாராதுவந்த மாமணியே வாரணாம்பிகையே!

வற்றாத வரமருளும் நாயகியே வாரணாம்பிகையே
பொற்கோவிலில் ஆருத்ரா கபாலீசுவரனுடமர் வாரணாம்பிகையே
வற்றாத காவிரியின் வரமானவளே வாரணாம்பிகையே
பொற்பாதம் போற்றுகின்றேன் வாராணாம்பிகையே!


கோட்டையில் குடிகொண்ட குடிகாக்கும் வாரணம்பிகையே
கோளாறு நீங்கவே  சோதியானவளே வாரணாம்பிகையே
கோதைநாயகியே கோலமயிலே கோயில்புறாவே வாரணாம்பிகையே
திருத்தொண்டீசுவரத்தில் கோயில்கொண்ட நாயகியே வாரணாம்பிகையே!

ஈரோடைகளுக்கிடையே ஈசனோடுறையும் ஈசுவரியே வாரணாம்பிகையே
ஈரோடை மாநகரின் மாதவமே மாதேவியே வாரணாம்பிகையே
ஈரேழுலகும் காணாத கருணைவள்ளலே வாரணாம்பிகையே
ஈருயிரை தாசிவயிற்றில் ஏற்றி விமோசனமளித்த வாரணாம்பிகையே
உங்கள் ஊரோடு சேர்த்து அன்னையை துதிக்கும் வரிகள் மிக இனிமை பவளா.
 

ஓருயிரும் நீயின்றி உய்யும் வகையறியாதே வாரணாம்பிக்கையே
பனிதூங்கும் மலர்தனிலே பட்டொளியானாய் வாரணாம்பிகையே
பனிதூங்கும் மலர் எனும் சொல் மிக அருமை.

சுபா 
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--

Subashini Tremmel

unread,
Oct 7, 2013, 2:24:11 AM10/7/13
to shylaja, மின்தமிழ், Subashini Tremmel

2013/10/6 shylaja <shyl...@gmail.com>

 
ஆமா  இப்பதானே சான்ஸ்?  தீம் பேசிவச்சிட்டு  கலக்கலாம்னு:):) மலைமகள் தினங்களுக்கு பச்சை  சிவப்பு  ஊதா  அடுத்த   திருமகள் தினத்துக்கு  அரக்கு செந்தூரம் மஞ்சள் அல்லது மஸ்டட் அல்லது ரஸ்ட்  கடசி மூன்று தினங்களுக்கு வெண்பட்டு  க்ரீம்கலர்  ஹாஃப் ஒயிட் கலைமகளுக்கு!
ஆகா. .அருமை. சந்தோஷமாக விதம் விதமாக அலங்கரித்துக் கொண்டு மகிழுங்கள் ஷைலஜா.

நம் பண்டிகைகளின் சிறப்புக்களில் இதுவும் ஒன்று. எவ்வளவு மகிழ்ச்சியும் குதூகலமும் தருகின்றன பண்டிகைகள். 

சுபா
 
 


2013/10/6 Subashini Tremmel <ksuba...@gmail.com>

2013/10/6 shylaja <shyl...@gmail.com>
நவராத்திரி  மும்முரத்தில்  வீடுவீடா போகவேண்டி இருக்கு:)  (இன்னிக்கு ஊதா கலர் புடவை....ஊதாகலரு சேலை  இது எந்தக்கடைல எடுத்த சேலை என்று  சிநேகிதிகள் கிண்டல்பாட்டுவேற:)

ஆஹா.. அப்படின்னா ஒன்பது நாளும் ஒன்பது வீடுகள்.. ஒன்பது வர்ணத்தில் புடைவைகளா.. கலக்குக்க ஷைலஜா..

சுபா

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--
 
 

. .

Reply
Forward
 

shylaja

unread,
Oct 7, 2013, 2:24:06 AM10/7/13
to mintamil


2013/10/7 Subashini Tremmel <ksuba...@gmail.com>

நவராத்திரி நாளில் இன்றைய சிந்தனைக்கு திருமந்திரத்திலிருந்து 3 பாடல்கள்.

நூல் : திருமந்திரம் - தருமையாதீனப் பதிப்பு

பாடல் 1047

அளியொத்த பெண்பிள்ளை ஆனந்த சுந்தரி
புளியுறு புன்பழம் போலுள்ளே நோக்கித்
தெளியுறு வித்துச் சிவகதி காட்டி
ஒளியுற வைத்தென்னை உய்யஉண் டாளே

பொருள் சுருக்கமாக
நமது உள்ளமெனும் தாமரையில் வண்டுபோல விரும்பி உறைகின்றவள் அவள். ஆனந்தமே உருவாக அழகொடு நிற்கும் திரிபுரை அவள். என் உள்ளம் புளிய மரத்தில் இருக்கும் பழுத்த பழம் போல பக்குவம் பெறும்படி அருள் நோக்கம் செய்து மெய்ஞானத்தைக் காட்டி சிவத்தன்மை பெறவைத்து என்னை தன்னுள்ளே அடக்கிக் கொண்டாள். இது கருணையல்லவோ!


பாடல் 1092

அஞ்சொல் மொழியாள் அருந்தவப் பெண்பிள்ளை
செந்சொல் மடமொழி சீருடைச் சேயிழை
தஞ்சமென் றெண்ணித்தன் சேவடி போற்றுவார்க்
கின்சொல் லளிக்கும் இறைவிஎன் றாரே.

பொருள் சுருக்கமாக
மகாசக்தியாகிய அன்னை தன்னை தஞ்சமென்று தேடி வருவோர்க்கு அருள்புரியும் இயல்பு கொண்டவள். இவள் அருளை வேண்டிப் போற்றி நற்கதியடைவோம்.


பாடல் 1169

அதுஇது என்னும் அவாவினை நீக்கித்
துதியது செய்து சுழியுற நோக்கில்
விதியது தன்னையும் வென்றிடலாகும்
மதிமல ராள்சொன்ன மண்டலம் மூன்றே>>>>
 
எவ்வளவு எளிமை அதில்தான் எத்தனை  ஆழ்ந்தபொருள்!  உயர்ந்தோரால் மட்டுமே இப்படி எழுத இயலும்.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.
It is loading more messages.
0 new messages