--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
2011/8/21 seshadri sridharan <ssesh...@gmail.com>:
> இங்க் பாட்டில் (ஆங்) மைப்புட்டில்
>
Bottle என்பதுதான் புட்டில் என்பதும். எனவே மை பாட்டில் தவறு மை புட்டில்
தமிழ் என்றால் நகைப்பாகும்.
> இந்திரலோகம் (சமற்) தேவருலகம், துறக்கம்
>
தேவருலகில் வரும், ‘தேவன்’ எனும் சொல்லும் சமிஸ்கிருதம்தான்.
> இந்துஸ்தானம் (உருது) சிந்தகம்
>
அது என்ன சிந்தகம்? இந்தியா என்பதை சிந்தகம் என்கின்றனரா? புரியவில்லை?
> இயந்திரம் (சமற்) எந்திரம்
>
வேடிக்கையாக இல்லை. இயந்திரம் சமிஸ்கிருதமாம். எந்திரம் தமிழாம்.
உண்மையில் ‘இ’ ஒட்டுடன் வரும் இயந்திரம் எனும் சொல்தான் தமிழ் போல
இருக்கிறது :-)
> இயமம் (சமற்) தடை
>
யாரும் இயமம் என்றெல்லாம் சொல்வதில்லை. தடை எனும் சொல்லே பயன்பாட்டில் உள்ளது.
> இரசவா த சாலை (சமற்) வேதியல் ஆய்வகம்
>
அடக்கடவுளே! இது எக்காலத்தில் தயாரிக்கப்பட்டது? இரசவாதம் என்பது
alchemy அது வேதியல் (வேதியியல் என்று வர வேண்டுமோ) அல்ல.
> இரத்தினம் (சமற்) அரத்தினம், செம்மணி
>
என்ன இது! பெரிய ஜோக்! இரத்தினம் சமிஸ்கிருதம், அரத்தினம் தமிழ்!!
இரத்தினம் என்ற சொல் இந்தியா தாண்டி ஆசியா முழுவதும் பயன்பாட்டில் உள்ள
சொல். அதில் நாம் ‘தீட்டு’ பார்த்தல் கூடாது.
> இருஷி (சமற்) முனிவன்
>
இருஷி என்பவர் முனி அல்ல. முனி என்பதும் சமிஸ்கிருதச் சொல்லே.
> இலாபம் (சமற்) ஊதியம், பயன்
>
இலாபம் என்றால் ஊதியமா? ஒருதொழிலில் லாப, நஷ்டக்கணக்கு என்பது ஊதியமல்ல.
> இளந்தாரி (சமற்) இளைஞன், வாலியன்
>
யாரப்பா! இளந்தாரி என்று சொல்கிறார்கள்? இளந்தாரி எனும் சொல் தமிழ்ச்சொல்
போல் உள்ளதே! சமிஸ்கிருதத்தில்தான், ‘ள’ இல்லை என்று சொல்கிறார்களே!
இம்மாதிரி முயற்சிகள்தான் என்னைச் சோர்வடையச் செய்கின்றன.
இது உண்மையான தமிழ் சொல் எது என்றறியாத ஒருவர் செய்தது போல் படுகிறதே!
வேர்ச்சொல் ஆய்வு என்பது மிகவும் எளிதான ஒன்றல்ல.
தமிழகத்தில் இரு பெரும் போக்குகள் கடந்த 50-60ஆண்டுகளில் முன்னெடுத்து
நடத்தப்பட்டுள்ளன.
1. தாழ்வு மனப்பான்மையால் புழக்கத்திலுள்ள ஆயிரக்கணக்கான சொற்களை,
‘தீட்டு’ என்று சொல்லி தீண்டாமையை வலிந்து முன்னிருத்தும் போக்கு.
2. அதீதப் பெருமையால், அப்படி விலக்கிய சமிஸ்கிருதச் சொற்களும் தமிழில்
இருந்து வந்ததே என்று நிருவ முயலுதல்.
நான் முன்பே சுட்டிக்காட்டியபடி தமிழனுக்கு சமிஸ்கிருதம் வாயில் நுழையாது
என்றெல்லாம் கற்பிதம் செய்து கொள்ளுதல் கூடாது. சேரர்கள் வாயில்
ஸ்பஷ்டமாக சமிஸ்கிருதம் நுழைகிறது. எனவே புழக்கத்தில் உள்ள சொற்களை
அப்படியே ஏற்றுக்கொள்ளலாம்.
ஜெயகாந்தன் சுட்டியுள்ளபடி, தனித்தமிழ் என்பதோர் முயற்சி. அவ்வளவுதான்.
அது எவ்வளவுதூரம் வெல்லும் என்பதைக் காலம்தான் சொல்லும்.
”தமிழ் ஒரு மொழி. தனித்தமிழ் ஒரு முயற்சி – ஒரு விளையாட்டு. அது
சிருஷ்டிமேதை அவசியப்படாத சில வாத்தியார்களுக்கும், ஒரு தற்காலிகக்
கவர்ச்சியை நாடும் சில மாணவர்களூக்கும் ஒரு வேளை உகந்ததாய் இருக்கலாம்.
மொழி என்பது சில வாத்தியார்களிடத்திலும் இல்லை; சில மாணவர்களிடத்திலும்
இல்லை. அது வாழ்க்கையில் இருக்கிறது. எனவே இந்தத் தனித்தமிழ்
யதார்த்தத்திற்கும் ஒத்துவராது; இலக்கியத்திற்கும் ஒத்துவராது;
எழுதுபவனுக்கும் ஒத்துவராது. எனினும் தனித்தமிழ் என்பது ஒரு ரசிக்கத்தக்க
முயற்சிதான்!”
ஜெயகாந்தன்
நா.கண்ணன்
நானும் சில வார்த்தைகளை தமிழ் இல்லையோ என நினைத்திருந்தேன். தேடியதிலும்
அறிஞர்களை கேட்டதிலும் அவைகள் தமிழ் தான் என அறிந்தேன். ஏது என்ற
வார்த்தை செங்கிருதம் என நினைத்து மின் தமிழில் அதற்கு சரியான
தமிழ்ச்சொல் ஏது என கேட்டதும் உண்டு.
இந்த வேர்ச்சொல் ஆராய்ச்சி செய்பவர்கள் எல்லாம் மக்களோடு பழகாதவர்கள்
அல்லது பாமர மக்கள் பேசும் தமிழை கொச்சை என கருதுபவர்கள். செங்கிருதம்
போல் தமிழையும் அறிவுசீவிகளின் மொழியாக ஆக்க முயல்பவர்கள்.
தமிழுக்கு இருக்கும் சிறப்பே அதை பாமரர்களும் பேசலாம், கொண்டாடலாம்,
கவிதை எழுதலாம். ஆகச்சிறந்த அறிஞர்களும் பேசலாம், ஆராயலாம். முறையாக
படிக்காதவர்கள் பேசுவதால் தான் தமிழ் இன்னும் உயிரோடு இருக்கிறது.
ராஜசங்கர்
அன்புடன்,
விவேக் பாபு
> ...
>
> read more »
நல்ல வேளை! 'இராஜகம்' 'அராஜகம்' ஆகாமல் இருந்தததே!
இ--
இது இது "அயற்சொற்கள்" என சொல்கின்றீர்கள். இப்படி பட்டியல் போடுவதால்
பயன் என்ன?
விஜயராகவன்
இது இது "அயற்சொற்கள்" என சொல்கின்றீர்கள். இப்படி பட்டியல் போடுவதால்
பயன் என்ன?
தமிழ்ச் சொற்கள் என்ன என்றே பலருக்கும் தெரியாத நிலையில்
தேவையான பணியை சேசாத்திரி செய்கிறார். தமிழில்
ஆங்கிலம், ... மற்ற மொழிகள் ஆதிக்கம் செலுத்துவதை
ஓரளவு குறைக்க இம்முயற்சிகள் உதவும்.
நா. கணேசன்
தமிழ்ச் சொற்கள் என்ன என்றால் சேசாத்திரியின் பட்டியலைப் பார்ப்பது வீண்
அல்லவா? நீங்கள் ஒரு சொல் ஆங்கிலமா இல்லையா என பார்ப்பதற்க்கு என்ன
செய்வீர்களோ அதையே தமிழுக்கும் செய்யுங்கள் - அதாவது டிக்ஷனரியில்
பாருங்கள், அல்லது ஆங்கில புத்தகங்கள் அல்லது பத்திரிக்கைகளில்
தேடுங்கள்.
அதே போல் தான் ஒரு வார்த்தை தமிழா என கண்டுபிடிக்க, அகராதிகளைப்
பாருங்கள், எவ்வளவோ அகராதிகள் இருக்கின்றன. அகராதிகள் அர்த்தங்களையும்
கொடுக்கும். அல்லது தமிழ் பேசும் ஒருவரை கேளுங்கள்.
விஜயராகவன்
> தமிழ்ச் சொற்கள் என்ன என்றே பலருக்கும் தெரியாத நிலையில்
> தேவையான பணியை சேசாத்திரி செய்கிறார். தமிழில்
> ஆங்கிலம், ... மற்ற மொழிகள் ஆதிக்கம் செலுத்துவதை
> ஓரளவு குறைக்க இம்முயற்சிகள் உதவும்.
நல்ல முயற்சிதான்.
உம் போன்ற புலமை உடையோர் இப்பட்டியலைக் கவனமாகப் பரிசீலிக்க வேண்டும்.
இல்லையெனில், எது `தமிழ்` வார்த்தை என்ற குழப்பத்தை இது கூட்டும் போலுள்ளது.
நான் கண்ணில் பட்ட சில உதாரணங்கள் கொடுத்தேன்.
அஸ்கோ பர்ப்போலா, முனைவர் ராஜம் போன்றோருடன் பல காலம் பழகியவர் நீங்கள்.
எது நம் சொல், எது பிற சொல் என்பதில் தெளிவு இருக்க வேண்டும்.
இல்லையெனில் இச்சொற்பட்டியலுக்குப் பழகியர்களைத் திருத்த இன்னொரு
தனித்தனி தமிழ் முயற்சி தேவைப்படும்
செய்வன திருந்தச் செய் என்பது தரக்கட்டுப்பாட்டிற்கு தமிழ் போட்ட முதல் விதி.
நா.கண்ணன்
அது பதார்த்தத்திற்குக் கூட ஒத்து வார மாட்டேங்குதுங்க!
நான் பங்குச்சந்தையில் டெக்னிக்கல் அனாலிஸஸ் (தொழில் நுட்பப்
பகுப்பாய்வுன்னு ரொம்ப அழகா மக்கள் தொலைக்காட்சியில் சொல்கிறார்கள்)
பற்றி ஒரு வலைப்பூ தொடங்கியுள்ளேன். (காளையும் கரடியும் என்ற பெயரில்).
அப்போது ஒரு சில தொழில்நுட்ப வார்த்தைகளை, பதங்களைத் தமிழில் எழுத
முயற்சிக்கும்போது நான் அன்னியனாகிறேனோ அப்படீன்னு ஒரு பயந்தாங்க எனக்கு
வருது. பாருங்களேன்
Target Zone - டார்கெட் சோன்- இலக்கு மண்டலம்
Divergence??
Price band - விலைப் பட்டை
Trend & Trend line ??? மற்றும் பல.
ரொம்பக் கஷ்டமாத்தாங்க இருக்குது, தமிழிலேயே எழுதறதுக்கு. ஏன்னா, "இப்ப
டைம் என்னங்க?"ன்னு கேட்குற யுகத்துலதான் நாம வாழ்ந்துக்கிட்டுருக்கோம்.
பாபு கோதண்டராமன்
https://kaalaiyumkaradiyum.wordpress.com
On Aug 21, 3:32 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> இம்முயற்சி எதற்கு என்று யோசிக்க வைக்கும் இடுகைகள் கீழே:
>
> 2011/8/21 seshadri sridharan <sseshadr...@gmail.com>:
தனித்தமிழ் என்பதோர் ஆசை. விருப்பம். ஆனால் யதார்த்தம் என்பது வேறு.
வள்ளுவன் மிகவும் யதார்த்தமான ஆள். அவன் குறளைத் தனித்தமிழில்
எழுதவில்லை. இலக்கியம் செய்வோரால் முடியாது. இயல்பான மொழி நடையே முன்னால்
வந்து நிற்கும்.
வாழ்வில் நாம் ஆசைப்படாமல் இருக்கமுடியாது. அது தவறில்லை. ஆனால்
ஆசைப்பட்டதெல்லாம் கிடைப்பதில்லை என்பது யதார்த்தம்.
வள்ளுவன், கம்பன், பாரதி இல்லாமல் தமிழ் இல்லை. அவர்கள் தேர்ந்தெடுத்துக்
கையாண்ட சொற்களை நான் சுத்தப்படுத்த நினைப்பது எந்த அளவில் பொருந்தும்
என்று தெரியவில்லை. அதனால் என்ன பெரிய பயன் வந்துவிடப்போகிறது என்றும்
தெரியவில்லை.
எது நல்ல தமிழ்ச் சொல் என்பதை நாம் எப்படித் தீர்மானிப்பது? இறைவன் வந்து
சொன்னால் உண்டு. அகரமுதலிகளை நம்பமுடியாத சூழல் என்பது ஒரு மொழிக்கு
பயனுள்ளதா? இல்லை அகரமுதலி செய்யும் திறமை தமிழனுக்கு இல்லையா?
நிறைய யோசிக்க வேண்டியுள்ளது.
நா.கண்ணன்
2011/8/22 காளையும் கரடியும் <babukoth...@gmail.com>:
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/
ஏன் திறமை இல்லை. மெட்ராஸ் லெக்சிகாம் இந்திய மொழி அகராதிகளில் ஒரு
சிகரம்
http://groups.google.com/group/mintamil/msg/16fc81c8c9aaba0a?hl=en
தமிழ் அகராதிகள் may suffer from sins of omission than sins of
commission
விஜயராகவன்
>
> நிறைய யோசிக்க வேண்டியுள்ளது.
>
> நா.கண்ணன்
>
> 2011/8/22 காளையும் கரடியும் <babukothandara...@gmail.com>:
> ...
>
> read more »- Hide quoted text -
>
> - Show quoted text -
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
இந்தத் தொகுப்புக்கான அடிப்படை ஆவணங்கள் பற்றிய குறிப்பு இருந்தால நல்லது.
தாம் அடிப்படையான ஆவணங்கள். இந்த தொகுப்பை தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக தூயதமிழ்ச் சொல்லாக்கத் துறையினர் உருவாக்கியவை
இச்சொற்கள் சொல்லகராதியிலிருந்து எடுக்கப்பட்டதா அல்லது இலக்கியத்திலிருந்து எடுக்கப்பட்டதா?
பல சொற்கள் செப்புமொழி சார்ந்த்தாகத் தோன்றுகிறதேபேச்சு வழக்கில் குமுகாயத்தின் ஒரு பகுதியினரால் பயன்படுத்தும் சொற்கள் (சமஸ்கிரிதம், ஆங்கிலம்) தமிழில் இப்போதும் வழக்கில் உள்ளதா?
இதுபோன்ற அயல்மொழிச் சொற்கள் பற்றிய அகரமுதலித் தொகுப்பு புதிய வரவேற்கத்தக்க முயற்சி
ஆயினும் அட்டவணையில் உள்ள சொற்களில் எது தமிழ் எது சமஸ்கிரிதம் என்று முடிவெடுத்ததிலும் அயற்சொற்களுக்கு இணையாகத் தமிழ்ச் சொற்களைக் கண்டுபிடித்து இவற்றை இனிமேல் பயன்பாட்டுக்குக் கொண்டுவரவேண்டும் என்பதும் நெருடலாக இருக்கிறதுநாகராசன்
நம் போன்ற சிலரும் ஊடகத் துறையும் இவற்றை பயனுக்கு கொண்டுவர இயலும்.
தமிழ்ச் சொற்கள் என்ன என்றால் சேசாத்திரியின் பட்டியலைப் பார்ப்பது வீண்
அல்லவா? நீங்கள் ஒரு சொல் ஆங்கிலமா இல்லையா என பார்ப்பதற்க்கு என்ன
செய்வீர்களோ அதையே தமிழுக்கும் செய்யுங்கள் - அதாவது டிக்ஷனரியில்
பாருங்கள், அல்லது ஆங்கில புத்தகங்கள் அல்லது பத்திரிக்கைகளில்
தேடுங்கள்.
அகராதிகளில் பொருள் தான் இருக்கும். இன்னமொழி என்று இருக்காது
அதே போல் தான் ஒரு வார்த்தை தமிழா என கண்டுபிடிக்க, அகராதிகளைப்
பாருங்கள், எவ்வளவோ அகராதிகள் இருக்கின்றன. அகராதிகள் அர்த்தங்களையும்
கொடுக்கும். அல்லது தமிழ் பேசும் ஒருவரை கேளுங்கள்.
அகராதிகளைப் புரட்டுவது வீண் வேலை. அயற்சொல் அகராதியில் மட்டுமே எந்த மொழிச் சொல் என்பது சுட்டப்பட்டிருக்கும். விசயராகவன் தமிழ் பேசுவாரா? அவரிடம் கேட்டுவிடலாம். அவர்தாம் தந்தை மொழி சமற்கிருதம் என்று சொல்லிவிட்டாரே. எனவே அவர் நம்பத்தககவர் அல்லர்!
விஜயராகவன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
காரணி, பலகாரணி

On Aug 22, 6:23 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
> 2011/8/22 Thevan <apthe...@gmail.com>
>
> > காரணி, பலகாரணி
>
> காரணம் வடமொழி சொல்:-)
> --
> செல்வன்
அதனால் பாவாணர் கண்டுபிடித்துப் பயன்படுத்தும் சொல்:
கரணியம். தனித்தமிழ் நூல்களில் ஏதாவது விளக்கம்
இருக்கலாம்.
நா. கணேசன்
>
> வெள்ளிப் பனிமலையின் மீது உலவுவோம் - அடி
> மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்
> பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம் - எங்கள்
> பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்
>
> https://www.facebook.com/holyape<http://www.facebook.com/holyape>
Price band - விலைப் பட்டை

அதனால் பாவாணர் கண்டுபிடித்துப் பயன்படுத்தும் சொல்:
கரணியம். தனித்தமிழ் நூல்களில் ஏதாவது விளக்கம்
இருக்கலாம்.

காரணம் வடமொழி சொல்:-)
ஒரு விளக்கமும் இருக்காது. பாவாணரே சொல்லிவிட்டார் என சொல்லிகொண்டு பயன்படுத்த வேண்டியதுதான்:-)
--
On Aug 22, 9:36 pm, rajam <ra...@earthlink.net> wrote:
> > காரணம் வடமொழி சொல்:-)
>
> அதற்கு ஈடான அழகு
> தமிழ்ச்சொல் ஒன்று
> இருக்கிறதே,
> சிலப்பதிகாரத்தில்!
>
> "தலைக்கீடு"
>
> ஏன் பலரும் அதைப்
> பயன்படுத்தியதில்லை?!!
>
ஒரு வேளை, பாவாணர் எம்டிஎல் பார்த்து
பொருள் எடுத்து பாப்புலரைஸ் ஆக்காமல்
விட்டுவிட்டாரோ?
”தலைக்கீடு talaikkīṭu
, n. < தலை + இடு-. 1. Pretext, alleged cause; போலிக்காரணம். புள்
ளோப்புத றலைக்கீடாக (சிலப். 7, 9). 2. Turban, warrior's head-dress;
தலைப்பாகை. (சிலப். 26, 137.)”
நா. கணேசன்
> On Aug 22, 2011, at 6:23 PM, செல்வன் wrote:
>
>
>
>
>
>
>
>
>
> > 2011/8/22 Thevan <apthe...@gmail.com>
> > காரணி, பலகாரணி
>
> > காரணம் வடமொழி சொல்:-)
> > --
> > செல்வன்
>
> > வெள்ளிப் பனிமலையின்
> > மீது உலவுவோம் - அடி
> > மேலைக் கடல் முழுதும்
> > கப்பல் விடுவோம்
> > பள்ளித் தலமனைத்தும்
> > கோயில் செய்குவோம் - எங்கள்
> > பாரத தேசமென்று தோள்
> > கொட்டுவோம்
>
> >www.holyox.blogspot.com
>
> >http://twitter.com/#holyox
>
> >https://profiles.google.com/holyape/buzz
>
> >https://www.facebook.com/holyape
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you
> > may like to visit our Muthusom Blogs at: http://
> >www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
> > send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to minTamil-
>> "தலைக்கீடு"
>>
>> ஏன் பலரும் அதைப்
>> பயன்படுத்தியதில்லை?!!
பேரா. வேணுகோபாலனுடன் பேசும் போது `சந்தேகம்` என்று சொல்ல வந்தால்
`ஐயப்பாடு` என்று சொல்லுங்கள் என்பாராம்.
நல்ல தமிழ்ச் சொற்களை உலாவ விடுதல் தமிழ் அறிஞர்கள் கடமை.
இணையம் வந்த பிறகு, உச்சரித்தல் என்று யாரும் சொல்வதே இல்லை. பலுக்குதல்
நடைமுறைக்கு வந்துவிட்டது.
செந்தமிழும் நாப்பழக்கம்! முடியாது என்றில்லை! அன்பாய், பண்பாய்
சொல்லத்தெரிய வேண்டும்!
ஆயினும் வேர்ச்சொல் ஆய்வில் நிறைய சந்தேகங்கள் உள்ளன. ‘விஷ்ணு’ என்று
சொன்னவுடன் வடமொழி என்று சொல்லிவிடுகிறோம். அதன் வேர்ச்சொல் தமிழ் என்று
இ.பா எழுதுவார். (வி = வியாபித்தல், பரவுதல்).
நா.கண்ணன்
On Aug 22, 10:39 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> 2011/8/23 N. Ganesan <naa.gane...@gmail.com>:
தமிழ் வேர்ச்சொற்களைப் பார்க்க -ள்-/-ண்-/-ட்- விதி உதவும்.
உதாரணமாய், விள்ளு-/விண்ணு- (விஷ்ணு-)/விட்டு-
எழுதியிருப்பேன்.
தலைக்கீடு = காரணம்? பொருந்துமா என்று பார்க்கணும்.
தலைப்பாகை என்ற பொருளிலும் இளங்கோவடிகள்
பயன்படுத்துகிறார். தலைக்கு சூடும் அணிபோல,
உள்ளே உள்ள காரணமா? இல்லை, தலைப்பாகை
போன்ற தோற்றக் காரணமா (போலிக்காரணமா)?
சிலம்பின் அடிகளைப் பார்க்கணும்.
நா. கணேசன்
இணையம் வந்த பிறகு, உச்சரித்தல் என்று யாரும் சொல்வதே இல்லை. பலுக்குதல்நடைமுறைக்கு வந்துவிட்டது.
நல்ல தமிழ்ச் சொற்களை உலாவ விடுதல் தமிழ் அறிஞர்கள் கடமை.
--"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.comTo unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> எழுத்துத் தமிழில் மட்டுமே அதன் "கன்னித்" தன்மை (என்று ஒன்று இருந்தால்)
> இருக்க முடியும். பேச்சுத் தமிழ் வகைகளில் முடியாது. இது நடைமுறை உண்மை.
ஹி..ஹி..நான் எழுதுவது போலவே பேசுபவன். ஒருமுறை சென்னையில் ‘நீட்சி’
என்று சொல்லப்போய் ஒருவர் அப்படியே அதிசயத்துவிட்டார். பெரும்பாலான
வெளிநாட்டுக்காரர்கள் தமிழ் கற்றுக்கொண்டு பேசும் போது பலுப்பல்
(பலுக்குதல்) இப்படித்தான் இருக்கும். சமீபத்திய லண்டன் நேர்காணலில் நான்
வேதியியல் என்று சொல்லப்போய் நடத்துபவர் ஈழத்து வாசகர்களுக்கு, ‘ஐயா!
ரசாயணம்’ என்று சொல்கிறார்கள் என்று மேல்விளக்கமளித்தார் :-))
என்ன செய்ய? நான் தமிழ் பேசினால் தமிழர்களுக்கு தமிழ் மொழிபெயர்ப்பு
செய்ய வேண்டியிருக்கிறது. பாவாணர் எப்படிப் பொழைச்சார் :-))?
நா.கண்ணன்
2011/8/23 rajam <ra...@earthlink.net>:

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
புட்டி என்பதும் தமிழ் வார்த்தைதானா என்பதைஅறிஞர்கள்தான் விளக்க வேண்டும்.
ஏனெனில் பாட்டில்தான் புட்டியாக மாறியிருக்க வேண்டும் என்று கருதுகிறேன்.
எனவே பாட்டில் வேறு புட்டில் வேறு
அதேபோல சேஷாத்ரி அவர்கள் இயந்திரத்தை எந்திரம் என்று கூறியதுஏன் என்று தெரியவில்லை.
பொறி என்ற சொல் இருக்கிறதே. பொறி கருவி எனும் பொருளில் பொதுவாக வழங்குகிறது.
அப்ப ... தன்னை அறியாமலே ... தனித் தமிழ்லெ பேசணும்னா ... ஐயாவுக்குக் கலக்கம் ("தூக்கக் கலக்கம்" போல) ஏதாவது இருக்கணுமோ? :-)மேலும் விளக்கம் வேண்டுகிறேன்! :-)
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
நம் தமிழ்நாட்டு பெண்களும் அதே மாதிரி கணவன் பெயரை மனசுக்குள் தான் வைத்திருப்பார்கள். பெயரை சொல்ல மாட்டார்கள்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
எந்தக் காலம் செல்வன் ?? அதெல்லாம் காணாம போயாச்சு
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
ஹ்ம்ம் கிராமத்திலும் நிலை மாறுது செல்வனாரே
ஒருநாள் தூக்ககலக்கத்தில் ஏதோ கனவு கண்ட அரசர் "ராமா,ராமா" என கத்தினார்.ராணிக்கு அதை கேட்டு ஒரே சந்தோஷம்.கணவனை எழுப்பி "இத்தனைநாளா நீங்க ராமநாமம் உச்சரிப்பதில்லை என்ற வருத்தம் இருந்துச்சு.இப்ப போயிடுச்சு.நீங்க கனவில் ரா
மா,ராமா என கத்தினீர்கள்" என்றார்
உடனே அரசர் "இத்தனைநாளா ராமனை மனதில் வைத்து வெளியே விடாமல் பூசித்து வந்தேன்.இப்ப வெளீயே வந்துட்டானா?" என சொல்லி உயிர்நீத்து வைகுந்தம் போனதாக கதை.
--
ஒழுங்கா மரியாதெயா எல்லாரும் மொத்தமா வீடுவந்து சேந்தீங்களே, நட்ட நடு ராத்திரிலெ ... அதுக்கே ஒங்களுக்கு ஒரு "தனித் தமிழ்ப்" பெருவிழா நடத்தலாம்போல!சரி, இனிமேலெயாவது ... அவ்வளவு நேரம் தொடர்ந்து வண்டி ஓட்டவேண்டாம். எப்படியும் ஒங்களுக்கும் வயசாகும்; ஒங்க பொண்ணுகளும் வண்டி ஓட்டத் தொடங்கும். அப்பொ ... ஐயா ... பின் சீட்டுலெதான்! :-)
செல்வன் சாமர்த்தியசாலி. பின்சீட்டில் அமர்ந்து வண்டி விடமாட்டார். ஆனால், சமயத்தில் கார்லெ உக்காந்து ரயில் விடுவார்!இன்னம்பூரான்
செல்வன் சாமர்த்தியசாலி. பின்சீட்டில் அமர்ந்து வண்டி விடமாட்டார். ஆனால், சமயத்தில் கார்லெ உக்காந்து ரயில் விடுவார்!இன்னம்பூரான்
aaammaam! ஸ்கைப்பிலே வரது! கூப்டா! கமுக்கம்!
>பேரா. வேணுகோபாலனுடன் பேசும் போது `சந்தேகம்` என்று சொல்ல வந்தால்
>`ஐயப்பாடு` என்று சொல்லுங்கள் என்பாராம்.
In civilized societies, that will be considered very rude. Venugopalan is
making himself a jerk, if the above is true. What if somebody says "Go to
hell and first change your name to குழல் மாட்டுக்காரன் .
Vijayaraghavan
புட்டி என்பதும் தமிழ் வார்த்தைதானா என்பதைஅறிஞர்கள்தான் விளக்க வேண்டும்.
In civilized societies, that will be considered very rude. Venugopalan is making himself a jerk, if the above is true. What if somebody says "Go to hell and first change your name to குழல் மாட்டுக்காரன் .
பேரா. வேணுகோபாலனுடன் பேசும் போது `சந்தேகம்` என்று சொல்ல வந்தால்
`ஐயப்பாடு` என்று சொல்லுங்கள் என்பாராம்.
நன்றி ஹரிகி, சேசாத்திரி.
பாட்டில் > புட்டில் உச்சரிப்பில் நெருக்கம். மேலும் பாட்டில் என்பதைப்
போத்தல் எறும் பலுக்குவதுண்டு. எனவே குழப்பம்.
க.>
நான் பின்னூட்டமிட்டது, முனைவர் ராஜம் அவர்களின் இடுகைக்கு துணையாக.
இதற்கும் மொழிக்காழ்ப்பிற்கும் சம்பந்தமே இல்லை.
பேராசிரியர் போன்ற பலர் தமிழ்ப் பயன்பாட்டில் கவனமாக இருந்ததால் தமிழ்ப்
பிழைத்தது என்று சொல்ல வந்தேன்.
நாம ஒண்ணு சொல்ல இழை எங்கேயோ பிச்சுக்கிட்டுப் போகுதே!
ஆனாலும் ஒன்று, பிறரைப் பற்றி அவையில் பேசும் போது நாகரீகமாகப் பேசுங்கள்.
அவர் யாரென்றே தெரிந்து கொள்ளாமல் அவதூறு செய்வது அழகல்ல.
நா.கண்ணன்
2011/8/23 Hari Krishnan <hari.har...@gmail.com>:
Because I was not sure of the veracity , I added "if the above is
true" . Since it is not true, it does not apply to him
Vijayaraghavan
புட்டி என்பதும் தமிழ் வார்த்தைதானா என்பதைஅறிஞர்கள்தான் விளக்க வேண்டும்.தெலுங்கு மொழியில் கூடையை புட்ட என்பார்கள். புல் என்பது துளைப் பொருள். அதினின்று கிளைத்தவையே புல, பூண். புண் போன்ற சொற்கள். புல்லன் புல்லைய்யா போல புட்டி புட்டண்ணா என்ற பெயர்கள் கன்னடத்தில் வழங்குவதை நோக்குக. இவை திரட்சிப் பொருளில் வழங்குபவை.ஏனெனில் பாட்டில்தான் புட்டியாக மாறியிருக்க வேண்டும் என்று கருதுகிறேன்.எனவே பாட்டில் வேறு புட்டில் வேறுஅதேபோல சேஷாத்ரி அவர்கள் இயந்திரத்தை எந்திரம் என்று கூறியதுஏன் என்று தெரியவில்லை.இய் என்பது உழற்சிக்கான வேர். அதினின்று உருவானதே. இயக்கம், இயற்கை போன்ற சொற்கள். இய் > எய் எனத் திரிந்து எந்திரம் உருவானது.பொறி என்ற சொல் இருக்கிறதே. பொறி கருவி எனும் பொருளில் பொதுவாக வழங்குகிறது.
எக்கச் சக்கம் (தெலு) தாறுமாறு, ஒழுங்கின்ம, இசகுபிசகு,
மிகப் பேராளம்
எக்கனாமிக்ஸ் (ஆங்) பொருளியல்
எக்கோ (ஆங்) எதிரொலி
எக்ச்சேன்ஜ் (ஆங்) பரிமாற்றம், மாற்றுகை
எக்ஸர்சைஸ் (ஆங்) பயிற்சி, உடற்பயிற்சி
எக்செப்ஷன் (ஆங்) நெறிவிலக்கு, புறனடை
எக்ஸ்க்யூஸ் (ஆங்) மன்னி, பொறு
எக்ஸ்கர்ஷன் (ஆங்) வெளியுலா
எக்ஸ்ட்ரா (ஆங்) மேம்படி, அதிகப்படி, கூடுதல்
எக்ஸ்டன்ஷன் (ஆங்) விரிவாக்கம், நீட்டிப்பு
எக்ஸ்பிரஸ் (ஆங்) விரைவஞ்சல், விரைவான்
எக்ஸ்பர்ட (ஆங்) வல்லுநர்
எக்ஸ்பீரியன்ஸ் (ஆங்) பட்டறிவு
எக்ஸ்ஸர்வீஸ்மேன் (ஆங்) முற்பணியாளி, முற்பணிமகன்
எக்ஸெஸ் (ஆங்) மிகை
எக்ஸாமினேஷன் (ஆங்) தேர்வு
எக்ஸைஸ் (ஆங்) ஆயத்துறை, உல்கு
எகத்தாளம் (கன்னட) பகடிபண்ணுதல், கிண்டல் செய்தல்
எச். பி (horse powr) பரிதிறன்
எசமான் (சமற்) தலைவன், முதலாளி,
மேலோன், முதல்வன்
எஞ்சின் (ஆங்) எந்திரம்
எஞ்சினீர் (ஆங்) பொறிஞர், பொறியாளர்
எடிட்டர் (ஆங்) பதிப்பர், பதிப்பாசிரியர்
எடிட்டிங் (ஆங்) பதிப்பு
எடிட்டோரியல் (ஆங்) ஆசிரியவுரை
எத்தனம் (சமற்) முயற்சி, கருவி, அணியப்பாடு
எதிர்வாதம் (தமிழ்+சமற்) எதிர் வழக்குரை
எதிராசன் (சமற்) முனிவகோன், முனிவர்க்கரசன்
எதேச்சாதிகாரம் (சமற்+தமிழ) தன் விருப்பதிகாரம்
எதேச்சை (சமற்) தன்னியல்பு
விருப்பம், எழுவிழைவு
எம்ப்ராய்டரி (ஆங்) பூத்தையல்
எம்ப்ளம் (ஆங்) வகையக்குறி
எம்பஸி (ஆங்) தூதரகம்
எம்போரியம் (ஆங்) மலிகையகம்
எலக்ட்ரானிக்ஸ் (ஆங்) மின்துகளியல், மின் துகளகம், மின்னகம்
எலாஸ்டிக் (ஆங்) ஞெகிழி
எவர்சில்வர் (ஆங்) நிலை வெள்ளி
என்கரேஜ்மெண்ட் (ஆங்) ஊக்கப்பாடு
என்டர்ட்டெயின்மெண்ட் விருந்தோம்பல், விருந்தளிப்பு, பொழுதுபோக்கு
என்டர்ப்ரைஸ் (ஆங்) முனைவகம்
என்லார்ஜ் (ஆங்) விரிவடை, விரிவாகு
எனாமல் (ஆங்) பற்சிப்பி,
மிளிரி(paint)
எஸ்கார்ட் (ஆங்) வழிகாப்பாளர்
எஸ்டேட் (ஆங்) பண்ணைச் சொத்து,
உடைமை, சொத்துரிமை
ஏக்கர் (ஆங்) குறுக்கம்
ஏகசிந்தை ஒத்தமனம் ஒரே நினைவு
ஏகபோகம் (சமற்) தனி நுகர்ச்சி,
முழுவுரிமைத் துய்ப்பு
ஏட்டு (ஆங்) தலைமைக்
காவலர், மேற் காவலன்
ஏர்கண்டீஷன்டு (ஆங்) தணப்பாடிட்டது
ஏர்கண்டீஷனர் (ஆங்) காற்பதனி (கால்>காற்று)
ஏர்பஸ் (ஆங்) வானியங்கி
ஏர்ஃபோர்ஸ் (ஆங்) வான்படை
ஏர்போர்ட் (ஆங்) வானுர்திக்களம்
ஏர்மெயில் (ஆங்) வானஞ்சல்
ஏர்லைனைஸ் (ஆங்) வான்வழிகள்
ஏராளம் (தெலு) பேராளம்
(கன்னடத்தில்>herala)
ஏரியல் (ஆங்) வான்கமபி
ஏரியா (ஆங்) பரப்பிடம், பரப்பகம்
ஏரோகிராம் (ஆங்) வான்வழி-அஞ்சல்
ஏரோடிராம் (ஆங்) வானூர்தி நிலையம்
ஏலம் (சமற்) மணகம (ஏலக்காய்)
ஏளனம் (சமற்) இகழ்ச்சி
ஏஜண்ட் (ஆங்) முகவர்
ஏஜன்ஸி (ஆங்) முகவாண்மை
ஏஷ்யம் (சமற்) காரணம்,
கருதுகோள், சான்று
ஐக்கியம் (சமற்) ஒற்றுமை, ஒன்றாந்தன்மை
ஐகோர்ட் (ஆங்) உயர் நயன்மன்றம்
ஐங்கரன் (சமற்) ஐங்கையன்
ஐட்டம் (ஆங்) இனவகை, இனம்
ஐடியா (ஆங்) ஏடல், நுண்கருத்து
ஐதிகம் (சமற்) உலகமுறை,
உலகவழக்கு தொடர்வழக்கு
ஐப்பசி (சமற்)) துலாம் ,, துலை
ஐரோடு (ஆங்) நெடுஞ்சாலை
ஐஸ் (ஆங்)
பனிக்கட்டி, பனிகம், பனித்திரள், குளிர்ச்சி
ஐஸ்கிரீம் (ஆங்) பனிப்பாகு
ஐஸ்வரியம் (சமற்) செல்வம்,
சொத்து, பேறு, திரு
2011/8/22 seshadri sridharan <ssesh...@gmail.com>
>
> உ, ஊ வரிசை
>
> உக்கா (உருது) புகைப்புக் குழல்
>
> உக்கிரம் (சமற்) கடுமை, கொடுமை, உச்சி, தலைக்காவல்
>
> உக்கிராணம் (சமற்) சரக்கறை, பொருட்கிடங்கு
>
> உச்சரி-த்தல் (சமற்+தமிழ்) பலுக்குதல்
>
> உச்சரி-ப்பு (சமற்+தமிழ்) பலுக்கல்
>
> உச்சவம் (சமற்) விழா, செழுமை, செழிப்பு
>
> உசிதம் (சமற்) தகுதி, பொருத்தம், மேன்மை
>
> உஞ்சவிருத்தி (சமற்) அரிசியிரவு வாழ்க்கை, தவசம் பொறுக்கி
> (தவசம் - கூலம்) வாழ்க்கை
>
> உடான்சு (உருது) பகடிப் பொய், விளையாட்டுரை
>
> உத்தம புருஷன் (சமற்) மீயாண், நற்பண்பாளன்
>
> உத்தமம் (சமற்) மீச்சிறப்பு, மேன்மை, நற்பண்பு, நன்மை
>
> உத்தமி (சமற்) கற்புடையாட்டி, குணத்தி
>
> உத்தமோத்தமம் (சமற்) சிறப்புமேற்சிறப்பு
>
> உத்தரக்-கிரியை (தமிழ்+சமற்) உத்தரக்கருமம், மேற்சடங்கு
>
> உத்தர-வாதம் (தமிழ்+சமற்) பொறுப்புறுதி, பிணை, ஈடு, உத்தரவுரைப்பு
>
> உத்தராயணம் (சமற்) உத்தரச் செலவு
>
> உத்தரீயம் (சமற்) மேலாடை
>
> உத்தி(ukti) (சமற்) பேச்சு
>
> உத்தியானவனம் (சமற்) பூங்கா
>
> உத்தியோகம் (சமற்) முயற்சி, வேலை, அலுவல்
>
> உத்தியோகஸ்தன் (சமற்) அலுவலன்
>
> உத்தேசம் (சமற்) நோக்கம், கருதுகை, மதிப்பு, அளவு
>
> உத்தேசித்தல் (சமற்) கருதுதல், மதிப்பிடுதல்
>
> உதய சூரியன் (சமற்) எழு ஞாயிறு
>
> உதயம் (சமற்) தோன்றுகை, உதிப்பு, புலப்பாடு, எழுகை
>
> உதயராகம் (சமற்) காலைப்பண்
>
> உதரம் (சமற்) வயிறு
>
> உதாசனித்தல் (சமற்) புறக்கணித்தல்
>
> உதாசினம் (சமற்) பொருட்படுத்தாச் சொல், அவமதிப்பு, இகழ்வு
>
> உதார் (சமற்) வெற்று வீம்பு, அலம்பல், போலிப்பெருமை
>
> உதார-குணம் (சமற்+தமிழ்) கொடைக்குணம், வள்ளன்மை
>
> உதாரணம் (சமற்) காட்டு, எடுத்தக்காட்டு, ஈடு காட்டல், ஒப்பு
> நோக்கு
>
> உதிரம் (சமற்) குருதி, அரத்தம்
>
> உப்பசம் (தெலு) ஈளை, வீக்கம்
>
> உப (சமற்) உவ(தமிழ்) > உப = ஒவ்வ (உவ்வு>ஒவ்வு > ஒவ்வ
>
> உபக்கிரகம் (சமற்) துணைக் கோள், குறுங்கோள்
>
> உபகரணம் (சமற்) துணைக்கருவி
>
> உபகரித்தல் (சமற்) உதவுதல்
>
> உபகாரம் (சமற்) உதவி, கொடை, ஒப்பரவு
>
> உபகாரி (சமற்) உதவுநன், கொடைஞன்
>
> உபசரணை (சமற்) பணிவிடைச் செய்கை
>
> உபசரித்தல் விருந்தோம்புதல், மதிப்பளித்து பேணுதல்
>
> உபசாரம் (சமற்) பணிவிடை, படையலீடு
>
> உபத்திரவம் (சமற்) தொந்தரவு, தொல்லை, துன்பம், இடுக்கண்
>
> உபதேசம் (சமற்) அறிவுரை, நல்லுரை, அறிவளிப்பு, கற்பிப்பு
>
> உபதேசித்தல் (சமற்) மந்திரங்கற்பித்தல், அறிவுரை கூறுதல்
>
> உபநதி (சமற்) துணையாறு
>
> உபநயனம் (சமற்) பூணூல் மாட்டல், பூணூல் பூட்டு
>
> உபநிஷதம் (சமற்) அடியருகமர்வு, ஓத்து, மறைமம்
>
> உபமானம் (சமற்) உவமை, உவமானம் (தமிழ் - மானம்)
>
> உபயம் (சமற்) திருப்பணிக் கொடை, இரண்டு
>
> உபயோகம் (சமற்) உதவி, பயன்பாடு, உதவிப் பொருள்
>
> உபவசித்தல் (சமற்) உணாநோற்பு
>
> உபவனம் (சமற்) சோலை
>
> உபாத்தியாயன் (சமற்) ஆசான், ஆசிரியன், குரு, பயிற்றுவிப்போன்
>
> உபாதை (சமற்) வலித்துயர், நோய், இடையூறு
>
> உபாயம் (சமற்) வழிவகை, சூழ்ச்சி, ஆம்புடை
>
> உயில் (ஆங் - will) விருப்பாவணம், விள்ளாவணம், இறுதிமுறி
>
> உருது (அரபி) படை, பாசறை, பாசறை மொழி
>
> உரூஸ் (அரபி) திருவிழா
>
> உரோகம் (சமற்) நோய்
>
> உரோமம் (சமற்) மயிர்
>
> உல்லாசம் (சமற்) களிப்பு, அகமகிழ்வு, உவப்பு, உவகை
>
> உலகப்-பிரசித்தி (தமிழ்+சமற்) உலகப் பெரும்புகழ்
>
> உலாமா (அரபி) குரு
>
> உலுத்தன் (சமற்) இவறி, கஞ்சன், இழிஞன்
>
> உலோகம் (சமற்) மாழை, மாழைத்தாது (metal)
>
> உலோகாயதம் (சமற்) உலகியங்கியல், இயங்கியல்
>
> உலோபி (சமற்) கொடாக்கண்டன், பேராசையன், இவறி
>
> உற்சவம் (சமற்) திருவிழா, கொண்டாட்டம்
>
> உற்சாகம் (சமற்) ஊக்கம்,, ஏக்கெழுச்சி, உளவெழுச்சி
>
> உற்பத்தி (சமற்) விளைவாக்கம், உருவாக்கம்
>
> உன்-மத்தம் (சமற்+தமிழ்) வெறி, மயக்கம், பித்து
>
> உன்-மத்தன் பித்தன், வெறியன், பித்தியக்காரன்
>
> உன்னதம் (சமற்) உயர்வு, மேன்மை, பெருமை
>
> உஷ்ணம் (சமற்) வெப்பம், உண்ணம்
>
> உஷ்ணமானி (சமற்) தெறுமமானி (Thermometer)
>
> உஷார் (உருது) கவனம், எச்சரிக்கை, விழிப்பு, அணியம்
>
> ஊக்கி (ஆங் - Hook) கொக்கி
>
> ஊகம் (சமற்) உன்னிப்பு, உத்தி
>
> ஊகித்தல் உன்னித்தல், ஆழ்ந்து கருதுதல்
>
> ஊதா (உருது) செந்நீலம்
>
> ஊதாரி (சமற்) மீச்செலவாளி, வீண்செலவுக்காரன்
>
> ஊர்ஜிதம் (சமற்) உறுதிப்பாடு, நிலைப்பு
>
> ஊனம் (சமற்) குறைவு, குற்றம்,
>
> ஊனன் (சமற்) முடவன், உடற்குறையாளி
>
>
>
>
> 2011/8/21 seshadri sridharan <ssesh...@gmail.com>
இது இது "அயற்சொற்கள்" என சொல்கின்றீர்கள். இப்படி பட்டியல் போடுவதால்
பயன் என்ன?
இச்சொற்களைப் பயன் கொள்பவருக்கு அவை என்ன பயன் என்பது சொல்லாமலேயே விளங்கும். வீண் வம்பு செய்பவருக்கு அது ஒரு காலக் கழிவு தான் பயன் ஏதும் இராது.
விஜயராகவன்
அதாவது என்ன பயன் இருக்கு என சொல்லமுடியாது என்பதை சுத்தி வளைத்து
சொல்கிறீர்கள்
விஜயராகவன்
விஜயராகவன்
என்னுடைய thrust ஐ நீங்கள் புரிந்து கொள்ளவில்லை.
ஒவ்வொரு பாஷையில் இருந்தும் மற்ற பாஷைகலுக்கு பரவிய வார்த்தைகலை பட்டியல்
இடலாம்.
சேசாத்திரி , அருளி போன்றவர்களின் "அயல் மொழிச் சொற்கள்" நோக்கம் வேற.
அது தூய்மை வாதத்துடன் , அதாவது சலவை செய்யும் நோக்கம் கொண்டது.
உண்மையான மொழியியலாளர், உண்மையான எடமாலஜிஸ்டுகளின் மொழிப்
படிப்பிற்க்கும், சேசாத்திரி, அருளி மொழிப் படிப்பிற்க்கும் பெரிய
வித்தியாசம் உண்டு.
உண்மையான மொழியியலாளர், உண்மையான எடமாலஜிஸ்டுகள் மொழியை ஒரு
க்யூரியாசிடியுடன் அணுகுகின்றனர் . எந்த மொழியிலும் எந்த சொல் மேலும்
கழ்ப்போ, 'சுத்திப்பு' மனப்பான்மையோ இல்லை. சேசாத்திரி போன்றோர்
சுத்திப்பு மனப்பன்மையுடம் மொழியை, தமிழை அணுகுகின்றனர், எது 'அயன்மொழி'
சொற்கள் என்பதன் நோக்கம் அதை களைவது - முடிந்தால்.
எக்கச்செக்கம் என்பது எல்லோரும் பிரயோகம் படுத்துகிறோம், ஆனால் அதன்
"தமிழ் மொழி" பெயர்பு கொடுப்பது வீண் வேலைதானே.
என்னைப்பொருத்தவரை தமிழர்கள் தங்களுக்குள் பேசி புரிந்து கொள்வதெல்லாம்
தமிழ்தான், அயன்மொழி இல்லை.
ஸ்பூன், ஸ்பான்னர், எக்கச்செக்கம், மராமத்து , மேஜை எதுவாக இருந்தாலும்
சரி.
விஜயராகவன்
On 23 Aug., 15:29, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:
> இச் சொற்களுக்கான வேர்ச்சொல் சமஸ்கிரிதத்தில் இருந்து தமிழில் இல்லாமல்
> இருந்தாlல் இவை அயற்சொற்கள் என்று கூறலாம்.
> இதைப்போலவே தமிழில் வேர்ச்சொற்கள் இருந்து சமஸ்கிரிதத்துக்குப் பரவிய
> அயற்சொற்களையும் நீங்கள் பட்டியலிடலாமே
> நாகராசன்
>
> 2011/8/23 விஜயராகவன் <viji...@gmail.com>
>
>
>
> > On 22 Aug., 15:24, seshadri sridharan <sseshadr...@gmail.com> wrote:
> > > > இது இது "அயற்சொற்கள்" என சொல்கின்றீர்கள். இப்படி பட்டியல் போடுவதால்
> > > > பயன் என்ன?
> > > > இச்சொற்களைப் பயன் கொள்பவருக்கு அவை என்ன பயன் என்பது சொல்லாமலேயே
> > > > விளங்கும். வீண் வம்பு செய்பவருக்கு அது ஒரு காலக் கழிவு தான் பயன் ஏதும்
> > > > இராது.
>
> > அதாவது என்ன பயன் இருக்கு என சொல்லமுடியாது என்பதை சுத்தி வளைத்து
> > சொல்கிறீர்கள்
>
> > விஜயராகவன்
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > post to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil- Zitierten Text ausblenden -
>
> - Zitierten Text anzeigen -
On Aug 22, 10:00 pm, seshadri sridharan <sseshadr...@gmail.com> wrote:
> > புட்டி என்பதும் தமிழ் வார்த்தைதானா என்பதை
> > அறிஞர்கள்தான் விளக்க வேண்டும்.
>
> தெலுங்கு மொழியில் கூடையை புட்ட என்பார்கள். புல் என்பது துளைப் பொருள்.
> அதினின்று கிளைத்தவையே புல, பூண். புண் போன்ற சொற்கள். புல்லன் புல்லைய்யா போல
> புட்டி புட்டண்ணா என்ற பெயர்கள் கன்னடத்தில் வழங்குவதை நோக்குக. இவை திரட்சிப்
> பொருளில் வழங்குபவை.
>
"புல் என்பது துளைப் பொருள்" - Is this correct? I'm afraid not.
புல், புள் இரண்டும் அடிப்படையில் வேறு பொருள் கொண்டன.
புல்(லுதல்) = தழுவுதல். எனவே, நிலத்தைத் தழுவி நிற்கும்
தாவரம் புல் என்றானது. எப்பொழுதும் சுவரைப் புல்லி(தழுவி) வாழும்
உயிரி புல்லி(> பல்லி).
------------
புள்ளுதல் என்றால் துளைப்பது. புள் = துளைப்பொருளின் வேர்.
புள்ளாங் குழல். புள்ளு-/பொள்ளு- பொள்ளாப்பிள்ளையார், ....
நிலத்தை, பழக்கொட்டைகளை துளைக்கும் பறவைகளின்
அலகு = புள். எப்போதும் கொத்தித் தின்பதால் புள் பறவைக்கே
சினையாகுபெயர் ஆனது.
-ள்-/-ட்-/-ண்- வித்தியில் தமிழ்ச் சொற்கள் இதற்கும் பொருந்தும்.
விள்ளு-/விண்ணு-/விட்டு- போல,
புள்ளு-(பறவை)/புண்ணு-(குழி கொண்டதால்)/புட்டு- (உ-ம்: புட்டில்).
பூண்டு எனதும் புள்- என்பதன் வேரே. பிறப்புறுப்புக்களின்
பேர்களிலும் (இடக்கர்ச்சொற்கள்) புள்- புதைந்துள்ளது.
நா. கணேசன்
> > ஏனெனில் பாட்டில்தான் புட்டியாக மாறியிருக்க வேண்டும் என்று கருதுகிறேன்.
> > எனவே பாட்டில் வேறு புட்டில் வேறு
>
> > அதேபோல சேஷாத்ரி அவர்கள் இயந்திரத்தை எந்திரம் என்று கூறியது
> > ஏன் என்று தெரியவில்லை.
>
> இய் என்பது உழற்சிக்கான வேர். அதினின்று உருவானதே. இயக்கம், இயற்கை போன்ற
> சொற்கள். இய் > எய் எனத் திரிந்து எந்திரம் உருவானது.
>
>
>
> > பொறி என்ற சொல் இருக்கிறதே. பொறி கருவி எனும் பொருளில் பொதுவாக வழங்குகிறது.
>
> > 2011/8/21 seshadri sridharan <sseshadr...@gmail.com>
> ...
>
> read more »- Hide quoted text -
>
> - Show quoted text -
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
மேலும், ஒரு அன்னியத்துறையிலே புழங்குகிற அயல் வார்த்தைகளை நம் மொழியிலே
ஈடாகச் சொல்ல முற்படும்போது வரும் புது வார்த்தைகளைப் பார்க்கும்போது,
மெய்யாலுமே ஒரு ரௌசா கீது! :-)
-பாபு கோதண்டராமன்
On Aug 23, 12:48 am, Thevan <apthe...@gmail.com> wrote:
> நீங்கள் அன்னியன் இல்லை நீங்கள் கையாளும் துறை அன்னியமானது. இதற்கு துறை
> நிபுணர்கள் மற்றும் மொழி பெயர்ப்பார்கள் இணைந்து முயற்சி செய்தால் சரியான
> வார்த்தைகளை கண்டறியலாம்.
>
> Target Zone - டார்கெட் சோன்- இலக்கு மண்டலம்
> Divergence - பல்வேறு காரணி, பலகாரணி,
> Price band - விலைப் பட்டை
> Trend & Trend line - போக்கு, போக்கு வரிசை
>
> *டைவர்ஜன்ஸ் (பலகாரணி) (Divergence)* என்றால் என்னவென்று முதலில் பார்ப்போம்.
> NSE-யிலிருந்து நமக்கு ஓபன்(துவக்கம்), ஹை(உயர்வு), லோ(குறைவு),
> க்ளோஸ்(நெருக்கம்), வால்யூம்(அளவு) என ஒவ்வொரு நாளும் (அவ்வளவு ஏன்? இண்ட்ரா டே
> (நாள்பொழுதில்) என்றால், ஒவ்வொரு வினாடியும்) நமக்கு டேட்டா (தரவு) எனப்படும்
> விலை விபரங்கள் கிடைக்கின்றன. இந்த விலை விபரங்களில் இருந்து பல்வேறு வகையான
> புள்ளியியல் கணக்கீடுகள் (statistical calculations) மூலம் வெவ்வேறு
> வகையான *இண்டிகேட்டர்களும்
> (காட்டிகள்) (Indicators), ஆசிலேட்டர்களும் (உருவாக்கிகள்) (Oscillators) (இ &
> ஆ *என்று செல்லப் பெயரிட்டு அழைப்போம்*)* கணக்கிடப்படுகின்றன.
>
> 2011/8/21 காளையும் கரடியும் <babukothandara...@gmail.com>
>
>
>
>
>
>
>
> > // இந்தத் தனித்தமிழ் யதார்த்தத்திற்கும் ஒத்துவராது; இலக்கியத்திற்கும்
> > ஒத்துவராது; எழுதுபவனுக்கும் ஒத்துவராது. எனினும் தனித்தமிழ் என்பது ஒரு
> > ரசிக்கத்தக்க முயற்சிதான்!” ஜயகாந்தன் //
>
> > அது பதார்த்தத்திற்குக் கூட ஒத்து வார மாட்டேங்குதுங்க!
>
> > நான் பங்குச்சந்தையில் டெக்னிக்கல் அனாலிஸஸ் (தொழில் நுட்பப்
> > பகுப்பாய்வுன்னு ரொம்ப அழகா மக்கள் தொலைக்காட்சியில் சொல்கிறார்கள்)
> > பற்றி ஒரு வலைப்பூ தொடங்கியுள்ளேன். (காளையும் கரடியும் என்ற பெயரில்).
> > அப்போது ஒரு சில தொழில்நுட்ப வார்த்தைகளை, பதங்களைத் தமிழில் எழுத
> > முயற்சிக்கும்போது நான் அன்னியனாகிறேனோ அப்படீன்னு ஒரு பயந்தாங்க எனக்கு
> > வருது. பாருங்களேன்
> > Target Zone - டார்கெட் சோன்- இலக்கு மண்டலம்
> > Divergence??
> > Price band - விலைப் பட்டை
> > Trend & Trend line ??? மற்றும் பல.
>
> > ரொம்பக் கஷ்டமாத்தாங்க இருக்குது, தமிழிலேயே எழுதறதுக்கு. ஏன்னா, "இப்ப
> > டைம் என்னங்க?"ன்னு கேட்குற யுகத்துலதான் நாம வாழ்ந்துக்கிட்டுருக்கோம்.
>
> > பாபு கோதண்டராமன்
> >https://kaalaiyumkaradiyum.wordpress.com
>
> > On Aug 21, 3:32 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> > > இம்முயற்சி எதற்கு என்று யோசிக்க வைக்கும் இடுகைகள் கீழே:
>
> > > 2011/8/21 seshadri sridharan <sseshadr...@gmail.com>:
>
> > > > இங்க் பாட்டில் (ஆங்) மைப்புட்டில்
>
> > > Bottle என்பதுதான் புட்டில் என்பதும். எனவே மை பாட்டில் தவறு மை புட்டில்
> > > தமிழ் என்றால் நகைப்பாகும்.
>
> > > > இந்திரலோகம் (சமற்) தேவருலகம், துறக்கம்
>
> > > தேவருலகில் வரும், ‘தேவன்’ எனும் சொல்லும் சமிஸ்கிருதம்தான்.
>
> > > > இந்துஸ்தானம் (உருது) சிந்தகம்
>
> > > அது என்ன சிந்தகம்? இந்தியா என்பதை சிந்தகம் என்கின்றனரா? புரியவில்லை?
>
> > > > இயந்திரம் (சமற்) எந்திரம்
>
> > > வேடிக்கையாக இல்லை. இயந்திரம் சமிஸ்கிருதமாம். எந்திரம் தமிழாம்.
> > > உண்மையில் ‘இ’ ஒட்டுடன் வரும் இயந்திரம் எனும் சொல்தான் தமிழ் போல
> > > இருக்கிறது :-)
>
> > > > இயமம் (சமற்) தடை
>
> > > யாரும் இயமம் என்றெல்லாம் சொல்வதில்லை. தடை எனும் சொல்லே பயன்பாட்டில்
> > உள்ளது.
>
> > > > இரசவா த சாலை (சமற்) வேதியல் ஆய்வகம்
>
> > > அடக்கடவுளே! இது எக்காலத்தில் தயாரிக்கப்பட்டது? இரசவாதம் என்பது
> > > alchemy அது வேதியல் (வேதியியல் என்று வர வேண்டுமோ) அல்ல.
>
> > > > இரத்தினம் (சமற்) அரத்தினம்,
> > செம்மணி
>
> > > என்ன இது! பெரிய ஜோக்! இரத்தினம் சமிஸ்கிருதம், அரத்தினம் தமிழ்!!
> > > இரத்தினம் என்ற சொல் இந்தியா தாண்டி ஆசியா முழுவதும் பயன்பாட்டில் உள்ள
> > > சொல். அதில் நாம் ‘தீட்டு’ பார்த்தல் கூடாது.
>
> > > > இருஷி (சமற்) முனிவன்
>
> > > இருஷி என்பவர் முனி அல்ல. முனி என்பதும் சமிஸ்கிருதச் சொல்லே.
>
> > > > இலாபம் (சமற்) ஊதியம்,
> > பயன்
>
> > > இலாபம் என்றால் ஊதியமா? ஒருதொழிலில் லாப, நஷ்டக்கணக்கு என்பது ஊதியமல்ல.
>
> > > > இளந்தாரி (சமற்) இளைஞன்,
> > வாலியன்
>
> > > யாரப்பா! இளந்தாரி என்று சொல்கிறார்கள்? இளந்தாரி எனும் சொல் தமிழ்ச்சொல்
> > > போல் உள்ளதே! சமிஸ்கிருதத்தில்தான், ‘ள’ இல்லை என்று சொல்கிறார்களே!
>
> > > இம்மாதிரி முயற்சிகள்தான் என்னைச் சோர்வடையச் செய்கின்றன.
>
> > > இது உண்மையான தமிழ் சொல் எது என்றறியாத ஒருவர் செய்தது போல் படுகிறதே!
>
> > > வேர்ச்சொல் ஆய்வு என்பது மிகவும் எளிதான ஒன்றல்ல.
>
> > > தமிழகத்தில் இரு பெரும் போக்குகள் கடந்த 50-60ஆண்டுகளில் முன்னெடுத்து
> > > நடத்தப்பட்டுள்ளன.
>
> > > 1. தாழ்வு மனப்பான்மையால் புழக்கத்திலுள்ள ஆயிரக்கணக்கான சொற்களை,
> > > ‘தீட்டு’ என்று சொல்லி தீண்டாமையை வலிந்து முன்னிருத்தும் போக்கு.
>
> > > 2.
>
> ...
>
> read more »
எது எப்படியோ! நான் தமிழில் எழுத முயற்சி செய்த பிறகுதான், தமிழிலே
இருக்கும் நூற்றுக்கணக்கான வலைப்பூக்கள் மற்றும் பதிவர்களின் அறிமுகமும்,
இதுவரையிலும் இவற்றைப் பற்றி அறிந்துகொள்ளாமல் விட்டு விட்டோமே என்ற
ஆதங்கமும், ஆங்கிலத்தை விடுத்து தமிழிலே தட்டச்சின் மூலம் எழுதுவது
எவ்வளவு கடினமாக இருக்கிறது என்பதையும் தெரிந்து கொண்டுள்ளேன்.
மேலும் எனக்கு ஒரு நிறைவான சமாச்சாரம் என்னவென்றால், MSE - மெட்ராஸ்
ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் நடைபெற்ற எனது கட்டணப் பயிற்சி வகுப்பிற்கு,
என்னாலும் ஒரு 24- பக்க கையேடு தமிழில் எழுத முடிந்ததென்பதுதான். அதையே
அவர்கள் ஆங்கிலத்திலும் வேண்டுமென்று கேட்டபோது, தமிழ் மூலத்திலிருந்து
மொழி மாற்றம் செய்தது மேலும் மகிழ்ச்சியாயிருந்தது. (ஏனெனில், நம்ம
இதுவரைக்கும் ஃபர்ஸ்ட் இங்க்லிஷ்ல ரைட்டிட்டு அப்புறம்தான் தமிழில் எழுதி
வந்தோம். எங்கே நம்ம = நான்)
நன்றிகள் பல (என்னுடைய சுய புராணத்தை படித்ததற்கு)
-பாபு கோதண்டராமன்
On Aug 23, 6:28 am, செல்வன் <holy...@gmail.com> wrote:
> 2011/8/22 Thevan <apthe...@gmail.com>
>
> > Price band - விலைப் பட்டை
>
> இங்கே சொல்லபடும் பேண்ட் என்பது கையில் அணியும் பேண்ட் அல்ல:-)பட்டை என்ற
> மொழிபெயர்ப்பு பொருந்தாது.பேண்ட் என்பது ஒரு ரேஞ்சை குறிக்கும்.
>
> இப்படி ஒரு துறையை பற்றி அறியாமல் அதில் உள்ள சொற்களை மொழிபெயர்ப்பதுக்கு பதில்
> பிரைஸ் பேண்ட் என்ற மூலசொல்லையே பயன்படுத்துவது தான் தமிழ் மொழியை
> வலுவாக்கும்,..
>
> --
> செல்வன்
>
> வெள்ளிப் பனிமலையின் மீது உலவுவோம் - அடி
> மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்
> பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம் - எங்கள்
> பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்
>
> https://www.facebook.com/holyape<http://www.facebook.com/holyape>
காக
நீங்கள் எழுதும் வழிதான் சரி.
ஒவ்வொரு துறையிலும் வேலைபார்ப்பவர்தான் அந்த துறையில் உள்ள வார்த்தைகளை
தமிழில் மொழிபெயர்க்க வேண்டும். அதை எப்படி மொழி பெயர்ப்பார் என்பதை அவர்
தேர்வுக்கு விட்டுவிட வேண்டும். பொதுவாக ஸ்டாக் எக்ஸ்சேங்கில் வேலை
செய்யும் தமிழர்கள் எப்படி வார்த்தைகளை பிரயோகிக்கின்றன்ரோ, அப்படியே
அதைப் எழுத வேண்டும்.
விஜயராகவன்
--
இம்முயற்சி எதற்கு என்று யோசிக்க வைக்கும் இடுகைகள் கீழே:
இங்க் பாட்டில் (ஆங்) மைப்புட்டில்
Bottle என்பதுதான் புட்டில் என்பதும். எனவே மை பாட்டில் தவறு மை புட்டில்
தமிழ் என்றால் நகைப்பாகும்.
இந்திரலோகம் (சமற்) தேவருலகம், துறக்கம்
தேவருலகில் வரும், ‘தேவன்’ எனும் சொல்லும் சமிஸ்கிருதம்தான்.
தேய்வு > தேவு > தேவன் என்பது வேர்ச் சொல் ஆய்வு. தேய்ப்பதால் வருவது தீ. தீயை மாந்தன் தெய்வம் என வணங்கினான்.
இந்துஸ்தானம் (உருது) சிந்தகம்
அது என்ன சிந்தகம்? இந்தியா என்பதை சிந்தகம் என்கின்றனரா? புரியவில்லை?
சிந்து ஆறு பாயும் நிலம் என்பதே Indus > Hindus என ஆனதாக சொல்லாக்க அறிஞர் முடிபு.
இயந்திரம் (சமற்) எந்திரம்
வேடிக்கையாக இல்லை. இயந்திரம் சமிஸ்கிருதமாம். எந்திரம் தமிழாம்.
உண்மையில் ‘இ’ ஒட்டுடன் வரும் இயந்திரம் எனும் சொல்தான் தமிழ் போல
இருக்கிறது :-)
யந்தரம் என்பதை இயந்திரம் என எழுதினாலும் அது சமற்கிருதமே
இயமம் (சமற்) தடை
யாரும் இயமம் என்றெல்லாம் சொல்வதில்லை. தடை எனும் சொல்லே பயன்பாட்டில் உள்ளது.
ஐயா இந்த இயமம் என்பது எண்உறுப்பு ஓகத்தில் நியமம் யமம் என்பர்.
இரசவா த சாலை (சமற்) வேதியல் ஆய்வகம்
அடக்கடவுளே! இது எக்காலத்தில் தயாரிக்கப்பட்டது? இரசவாதம் என்பது
alchemy அது வேதியல் (வேதியியல் என்று வர வேண்டுமோ) அல்ல.
வேதியல் என்ற சொல் பயனுக்கு வருவதற்கு முன் சமற்கிருத அறிஞர்கள் தமிழுக்கு செய்த தொண்டில் விளைந்த சொல்ல இது.
இரத்தினம் (சமற்) அரத்தினம், செம்மணி
என்ன இது! பெரிய ஜோக்! இரத்தினம் சமிஸ்கிருதம், அரத்தினம் தமிழ்!!
இரத்தினம் என்ற சொல் இந்தியா தாண்டி ஆசியா முழுவதும் பயன்பாட்டில் உள்ள சொல். அதில் நாம் ‘தீட்டு’ பார்த்தல் கூடாது.
அர் என்பது செம்மையைக் குறிக்கும் வேர். அரத்தி +அனம் என உருவாக்கி உள்ளனர்.
இருஷி (சமற்) முனிவன்
இருஷி என்பவர் முனி அல்ல. முனி என்பதும் சமிஸ்கிருதச் சொல்லே.
முனேவர் என அர் ஈறு போட்டு வடநாட்டு மொழிகளில் வழங்குவதில் இருந்தே அது தமிழ் என்பதை அறிக. சமற்கிருதம் தமிழில் இருந்து கடன் கொண்ட சொல் முனிவர்
இலாபம் (சமற்) ஊதியம், பயன்
இலாபம் என்றால் ஊதியமா? ஒருதொழிலில் லாப, நஷ்டக்கணக்கு என்பது ஊதியமல்ல.
திருக்குறளில் எந்த பொருளில் ஆளப்பட்டு உள்ளது என்பதைக் காண்க
புல் என்பது துளைப் பொருள்" - Is this correct? I'm afraid not.
புல், புள் இரண்டும் அடிப்படையில் வேறு பொருள் கொண்டன.
புல்(லுதல்) = தழுவுதல். எனவே, நிலத்தைத் தழுவி நிற்கும்
தாவரம் புல் என்றானது. எப்பொழுதும் சுவரைப் புல்லி(தழுவி) வாழும்
உயிரி புல்லி(> பல்லி).
புல் என்ற வேருக்கு பல பொருள் உள்ளன. புற்று அதினின்று வந்த துளைக் கருத்து. பூல் என்பது வடக்கே மலரைக் குறிக்கும். அதுவே கடைக் குறையாக பூ என்றானது தென்னக மொழிகளில். இதை பாவாணர் தம் வேர்ச் சொல் ஆய்வில் குறிப்பிட்டு உள்ளார்.
புள்ளுதல் என்றால் துளைப்பது. புள் = துளைப்பொருளின் வேர்.
புள்ளாங் குழல். புள்ளு-/பொள்ளு- பொள்ளாப்பிள்ளையார், ....
நிலத்தை, பழக்கொட்டைகளை துளைக்கும் பறவைகளின்
அலகு = புள். எப்போதும் கொத்தித் தின்பதால் புள் பறவைக்கே
சினையாகுபெயர் ஆனது.
சேசாத்திரி
--
அலகு = புள். எப்போதும் கொத்தித் தின்பதால் புள் பறவைக்கே
சினையாகுபெயர் ஆனது.
ஆம். புள் என்னும் விகுதி கொப்புள்/தொப்புள் என்னும் சொல்லில் உள்ளது.
கொப்பூள்/தொப்பூழ் என்பவை பூண்டு (< புள்-).
-ள்-/-ண்-/-ட்- இரண்டாம் எழுத்த்தாக உடைய 20௩0
சொற்றொகுதி தந்திருப்பேன். தமிழ்/த்ராவிட
சொற்பிறப்பியலில் ஒரு முக்கிய விதி இது எனக் கருதுகிறேன்.
நா. கணேசன்
http://groups.google.com/group/mintamil/msg/3c4a4ddc70c5e88c
> அலகு = புள். எப்போதும் கொத்தித் தின்பதால் புள் பறவைக்கே
> > சினையாகுபெயர் ஆனது.
-ள்-/-ண்-/-ட்- இரண்டாம் எழுத்த்தாக உடைய 20௩0
சொற்றொகுதி தந்திருப்பேன். தமிழ்/த்ராவிட
சொற்பிறப்பியலில் ஒரு முக்கிய விதி இது எனக் கருதுகிறேன்.
On Aug 24, 7:08 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2011/8/24 N. Ganesan <naa.gane...@gmail.com>
புள்- என்பதற்கு அடிப்படைப் பொருள் என்ன? அத்தோடு தொடர்புடைய
சொற்கள் எவை? பரிமேலழகர் சொல்லி இருக்கிறாரா? இருந்தால்
தாருங்கள்.
நா. கணேசன்
On Aug 24, 7:10 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2011/8/24 N. Ganesan <naa.gane...@gmail.com>
ராஜம் அக்கையாருக்கு நான் என்ன அறிவுரை சொன்னேன்?
பரிமேலழகர் சொல்லி இருக்கிறாரா? இருந்தால்
தாருங்கள்.
> 2011/8/24 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
> > -ள்-/-ண்-/-ட்- இரண்டாம் எழுத்த்தாக உடைய 20௩0
> > சொற்றொகுதி தந்திருப்பேன். தமிழ்/த்ராவிட
> > சொற்பிறப்பியலில் ஒரு முக்கிய விதி இது எனக் கருதுகிறேன்.
>
On Aug 24, 7:10 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> அடேயப்பா! 2030 சொற்களைத் தொகுத்துத் தந்திருக்கிறீர்களா?
Typo corrected: pl. read 20௩0 as 20/30.
> > -ள்-/-ண்-/-ட்- இரண்டாம் எழுத்த்தாக உடைய 20/30
> > சொற்றொகுதி தந்திருப்பேன். தமிழ்/த்ராவிட
> > சொற்பிறப்பியலில் ஒரு முக்கிய விதி இது எனக் கருதுகிறேன்
You can search in this group archives with -ள்-/-ண்-/-ட்-
& find them.
N. Ganesan
ராஜம் அக்கையாருக்கு நான் என்ன அறிவுரை சொன்னேன்?
On Aug 24, 7:17 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2011/8/24 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
> > ராஜம் அக்கையாருக்கு நான் என்ன அறிவுரை சொன்னேன்?
>
> அவருடைய ஆய்வை பிடிஎஃப் வடிவத்தில் வெளியிடுமாறு. நீங்கள் சொன்னது. அவர்
> கேட்டுக்கொண்டது; எதிர்த்தது.
>
> பாவம். ஒரே நாளைக்குள் எழுதியதெல்லாம் மறந்துவிடுகிறது. அவ்வளவு மன அழுத்தம்!
>
aRivuraiyaa? It was a request.
You can search in this group archives with -ள்-/-ண்-/-ட்-
& find them.
On Aug 24, 7:19 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2011/8/24 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
> > You can search in this group archives with -ள்-/-ண்-/-ட்-
> > & find them.
>
> ம்ம்மம்...... வைக்கோற்போரில் ஊசியைத் தேடுவதைவிடவும் எளிய முயற்சி ஏதேனும்
> இருக்கிறதா?
>
> உங்கள் கையிலேயே தொகுதியை வைத்துக்கொண்டு, 3020 என்று துல்லியமாக எண்ணைக்
> குறிப்பிட்டுவிட்டு, கொடுக்க மறுப்பது நியாயமா?
>
3020? This is typical of your research capacity, Manickavasakar 3rd
century, Valluvar is not a Jain, ...
where did I write 3020?
N. Ganesan
aRivuraiyaa? It was a request.
On Aug 24, 7:16 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2011/8/24 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
ok, sir. niinga thaan kaazppu illaatha periya aaraaychchiyaaLar.
naanga veeRa yaaraiyum paarththathillai.
Best wishes,
N. Ganesan
I have Rajam's thesis with me. You can also get my researches if you
try.
N. Ganesan
3020? This is typical of your research capacity, Manickavasakar 3rd
century, Valluvar is not a Jain, ...
where did I write 3020?
N. Ganesan
On Aug 24, 7:29 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2011/8/24 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
> > 3020? This is typical of your research capacity, Manickavasakar 3rd
> > century, Valluvar is not a Jain, ...
> > where did I write 3020?
>
> > N. Ganesan
>
> Dr. Most Ganesan,
>
> What does this mean: ள்-/-ண்-/-ட்- இரண்டாம் எழுத்த்தாக உடைய 20௩0
>
> > > சொற்றொகுதி
>
> உங்கள் 2030 என் தட்டுப் பிழையாக 3020 ஆகிவிட்டது.
>
Did you not see my mail? It is a typo for 20/30. where do I ever use a
Tamil number
in my mails?
> வெறுப்பின் வெளிப்பாட்டை நிறுத்துங்கள் நண்பரே. அளவுக்கதிகமாக வெறுப்பையும்
> நஞ்சையும் உமிழ்கிறீர்கள். எதையும் பர்சனலாக எடுத்துக் கொண்டால் இப்படித்தான்
> ஆகும். வள்ளுவர் சமணர் இல்லாவிட்டால் அல்லது மாணிக்க வாசகரின் காலம்
> மாறிவிட்டால், நாசாவின் ஸ்பேஸ் ஷட்டில் பறக்காதா?
>
> உங்களுடைய வெறுப்பைக் காட்ட வேண்டிய இடத்தில் காட்டுங்கள். உங்களை நேரடியாக
> துரோகி என்பதுபோன்ற சொற்களைப் பயன்படுத்தி வெளிப்படையாகத் திட்டுபவர்களுடைய
> மடல்கள் உங்கள் கண்களில் படக்கூட இல்லாதது மாதிரியான பாவனையைக் காட்டிக்
> கொள்கிறீர்கள். ஊருக்கு இளச்சவன் பிள்ளையார் கோவிலாண்டி நான் கிடச்சேன்னு
> எல்லா வெறுப்பையும் காழ்ப்பையும் என்மேல் காட்டுகிறீர்கள். போய்
> போடவேண்டியவங்க கிட்ட சண்டை போடுங்கள்.
>
> நான் இந்த மடலிலிருந்து, இந்த இழையில், உங்கள் விஷயத்தில் ஆஃப்.
>
You have said this many times this week. Please continue to write &
show
your research. what is the vaRuppu, kaazppu for me on ParimElazakar,
Maanikkavaasakar, ....
thay are all dead & gone centuries ago.
Please don't portray that these are veRuppu & kaazppu issues -
ParimElazakar views
w/o telling. Manikkavasakar as 3rd cenury, ... And, as tho' I
mentioned ThoMuSi stuff
to Geetha,
Anbudan,
N. Ganesan
On Aug 24, 2:00 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2011/8/24 seshadri sridharan <sseshadr...@gmail.com>
>
> > அலகு = புள். எப்போதும் கொத்தித் தின்பதால் புள் பறவைக்கே
> > சினையாகுபெயர் ஆனது.
>
> அப்ப கிட்டிப்புள்ளில் வரும் புள்? (பாருங்க எவ்வளவு நாயமா கேட்டிருக்கேன்.
> தொப்புள்ள வர புள்ளை பற்றி எதுவும் கேக்கல பாருங்க.)
>
> --
> அன்புடன்,
> ஹரிகி.
தமிழ்ச் சொற்களின் வேரியல் ஆய்வுகள் முன்னேறாத காரணம்
உங்களைப் போன்ற அறிஞர்களின் பங்கு அதிகம் இடம் பெறாததே.
பாவாணர் முயன்றார். நல்லூர் வண. ஞானப்பிரகாசர் என்னும்
பாதிர்யார் தொடங்கிவைத்தார். இணையத்தில் சிலர் மேற்கொண்டுள்ளார்கள் -
அவற்றில் ஆங்கிலம் பிறந்தது தமிழால் என்ற பாவாணர் கோட்பாடும்
உண்டு. ஆனால், வேரியல் ஆய்வுகளும் தொடர்கின்றன. தமிழ்ப்
பல்கலைக் கழகம் போன்றவற்றில்.
எந்தப் புதுத் துறையிலும் சில பிழைகள் இருப்பது
இயல்புதான். பல ஆராய்ச்சியாளர்கள் பார்க்கிறபோது
சரியான பாதை அமையும். உதவுங்கள்.
அன்புடன்,
நா. கணேசன்
On Aug 24, 7:29 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2011/8/24 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
Dr. Most Hariki,
I understand your knowledge & research capacities & respect them well.
I know the mails written by folks calling me Dhurohi etc., It is fun
to read.
Is it because I wrote the first proposal to encode Grantha that Tamil
brahmins
and kings used on the temple walls of Tamil Nadu, Kerala, Sri
Lanka, ...
for 1500 years. have shown that Grantha has been used to write
Dravdian languages like Tamil, Malayalam, for 1000+ years.
Grantha is getting encoded in the ISCII model in SMP, the way
I asked for in my proposal. FYI, Grantha is the only SMP script
in ISCII model like India's major scripts like Tamil, Malayalam,
Hindi, etc., The main shouts against me was their claim that
Dravidian languages should not be written in Grantha script.
Govt. of India clearly has said Dravidian langauges can be
written in Grantha script. As we know it all takes time
to do anything in Unicode encoding, like Tamil Om, SHA letter
(needed to write pa'schima banga, the new name for West Bengal state),
Tamil zero. will definitely have the Grantha script capability
to write Dravidian langauges, - Hindu sacred hymns like
Thevaram, Naalaayiram, ... - in Grantha Unicode.
Nowadays, there is not much mails saying that
Dravidian cannot be written in Grantha script.
Then, I will take up writing an essay about
the J. Filliozat/Neelakanta Sharma book
- N. Sharna seem to have converted all alveloar n's
into dental n's. This may be because the Chillu
concept is not described by J. R. Marr.
There is a chillu form for alveolar n, zha, ...
in Grantha script that is missing in J. R. Marr
and Filliozat/Neelakanta S. publications
will definitely write a paper on this.
So, please don't worry about net uuLai-s,
just like you leave out Mathimaran's
or Valaja Vallavan's writings on Bharati .
Anbudan,
N. Ganesan
ஆகு பெயர்களும் தமிழ்ச்சொற்களும் என ஏதேனும் தனித்தமிழ் அறிஞர்கள் ஆராய்ந்துள்ளனரா? இல்லை ஆகு பெயருக்கும் பெயருக்கும் இருக்கும் வித்தியாசம் ஆவது எங்கேனும் விளக்கப்பட்டுள்ளதா??
இன்னின்ன அயற்சொற்களுக்கு இன்னின்னவை தாம் தமிழ்ச் சொற்கள் என்ற குறிப்புமட்டுமே தரப்படுள்ளது.
ஏன்னா நீங்க சும்மா போட்டுட்டே போறீங்க. ஏதாச்சும் அடிப்படையில் ஆராய்ந்தாரா என சந்தேகம் வருகிறது.
வேர்ச் சொல் ஆய்பவர்களால் உருவாக்கப்பட்டவை இச்சொற்கள். எனவே கட்டாயம் அடிப்படை உண்டு.
சேசாத்திரி
2011/8/24 seshadri sridharan <ssesh...@gmail.com>
புல் என்ற வேருக்கு பல பொருள் உள்ளன. புற்று அதினின்று வந்த துளைக் கருத்து. பூல் என்பது வடக்கே மலரைக் குறிக்கும். அதுவே கடைக் குறையாக பூ என்றானது தென்னக மொழிகளில். இதை பாவாணர் தம் வேர்ச் சொல் ஆய்வில் குறிப்பிட்டு உள்ளார்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
On Aug 25, 4:23 am, திருத்தம் பொன்.சரவணன் <vaend...@gmail.com> wrote:
> கணேசன் ஐயா
>
> நீங்கள் நினைப்பது போல பாவாணரின் வேரியல் ஆய்வு முறை முற்றிலும் சரியன்று.
> அதில் பல கோளாறுகள் உள்ளன.
>
> தமிழில் எனது முதல் ஆய்வே இந்த வேரியல் தான்.
>
> அதில் பல ஆய்வுகள் செய்துள்ளேன். ஆனால் இன்னும் எதையும் வெளியிடவில்லை. எதையும்
> அவசரப்பட்டு வெளியிட்டு மாட்டிக் கொள்பவனல்லன் நான். அதைக் கண்ணுற்ற பின்
> நிச்சயம் நீங்கள் உண்மையினை அறிவீர்கள். அதுவரை தயவுசெய்து பொறுத்திருங்கள்.
>
> பாவாணர் உரையை நீங்கள் எதற்கெடுத்தாலும் மேற்கோள் காட்டுவதில் தவறில்லை தான்.
> ஆனால் அதை தலைமேல் தூக்கிக் கொண்டாட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
>
பாவாணர் எழுத்துக்களில் அடிப்படைத் தவறு
ஆங்கிலம் தமிழில் இருந்து பிறந்தது என்று
அவர் எழுதி ஆங்கிலச் சொற்களைக் காட்டுவது.
இதைப் பலமுறை எழுதியுள்ளேனே.
தமிழ்ச் சொற்கள் பலவற்றுக்கும் அவர் சரியான
வேரைக் காட்டியுள்ளார். அதில் மறுப்பில்லை.
நா. கணேசன்
> நாளை அவை தவறு என உறுதிசெய்யப்படும் பட்சத்தில் நீங்கள் வருந்தக் கூடும்.
> அதனால் தான் சொல்கிறேன்.
>
> தகுந்த நேரத்தில் எனது ஆய்வுகள் கண்டிப்பாக வெளிவரும் உரிய ஆதாரங்களுடன்.
>
> அன்புடன்,
>
> தி.பொ.ச
>
> 2011/8/24 N. Ganesan <naa.gane...@gmail.com>
இந்தத் தொகுப்புக்கான அடிப்படை ஆவணங்கள் பற்றிய குறிப்பு இருந்தால நல்லது.ஐயா, தமிழ் இலக்கியஙகளில் பதிவானவை, இதழ்கள் மாதிகைகளில் வருபவைதாம் அடிப்படையான ஆவணங்கள். இந்த தொகுப்பை தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக தூயதமிழ்ச் சொல்லாக்கத் துறையினர் உருவாக்கியவைஇச்சொற்கள் சொல்லகராதியிலிருந்து எடுக்கப்பட்டதா அல்லது இலக்கியத்திலிருந்து எடுக்கப்பட்டதா?இவை தமிழல்ல என்னும் அயற்சொல் அகராதியில் இருந்து எடுக்கப்பட்டவை.பல சொற்கள் செப்புமொழி சார்ந்த்தாகத் தோன்றுகிறதேபேச்சு வழக்கில் குமுகாயத்தின் ஒரு பகுதியினரால் பயன்படுத்தும் சொற்கள் (சமஸ்கிரிதம், ஆங்கிலம்) தமிழில் இப்போதும் வழக்கில் உள்ளதா?ஆம்! நான் செப்பும் மொழிச் சொற்களை மட்டுமே நான் தெரிப்பு செய்து போட்டுள்ளேன். நான் கொடுத்த 120 சொற்களை 1,000 சொற் தொகுதியில் இருந்து எடுத்துள்ளேன்.இதுபோன்ற அயல்மொழிச் சொற்கள் பற்றிய அகரமுதலித் தொகுப்பு புதிய வரவேற்கத்தக்க முயற்சிபாவலேறு பெருஞ்சித்திரனார் பாசறையினர் உருவாக்கம் இவை.ஆயினும் அட்டவணையில் உள்ள சொற்களில் எது தமிழ் எது சமஸ்கிரிதம் என்று முடிவெடுத்ததிலும் அயற்சொற்களுக்கு இணையாகத் தமிழ்ச் சொற்களைக் கண்டுபிடித்து இவற்றை இனிமேல் பயன்பாட்டுக்குக் கொண்டுவரவேண்டும் என்பதும் நெருடலாக இருக்கிறதுநாகராசன்நம் போன்ற சிலரும் ஊடகத் துறையும் இவற்றை பயனுக்கு கொண்டுவர இயலும்.
சேசாத்திரி
2011/8/21 Innamburan Innamburan <innam...@gmail.com>
நல்ல வேளை! 'இராஜகம்' 'அராஜகம்' ஆகாமல் இருந்தததே!இ--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil