முதல்வர் பொறுப்பேற்ற பொழுதே நடந்த முதல் பாராட்டுக் கூட்டம்!

9 views
Skip to first unread message

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
May 11, 2026, 5:43:25 AM (yesterday) May 11
to thiru thoazhamai, Thamizh Pavai, ara...@aol.com, Akar Aadhan, Paramasivam Marudanayagam, Casmir Raj, Vani Aravanan, pthang...@gmail.com, Bala subramanian, Anna Centenary Library Librarians, wsws sl, Raju Krishnaswamy, விவேக் பாரதி, Lalitha Sundaram, vidya chandran chandran, kalvet...@gmail.com, Neethi Vallinayagam, Sampath Singara, Kumanan K.b. Kanji, madhiyazhagan subbarayan, LION.R. MOURALY, Kandaih Mukunthan, Office, kandasamy santharupi, Tamil Mar Laie, Palanichamy V, HAMIDIA BROWSING CENTRE, raman kannusamy, பூங்குழலி Poonkuzhali, annac...@yahoo.co.in, Karunkal kannan, Solidarity For Malayagam, Manimekalai Prasuram, pandian M.T, Dr. Namadhu MGR, CHERALATHAN A, msvoimaie...@gmail.com, dgvcmut...@gmail.com, Kirubanandan Srinivasan, jainol...@gmail.com, Jeeva Kumaran, mega digital4, mohan raj, Swathi Swamy, Senthilnarayanan Arunachalam, Chitraleka V, Dr Seenivasan Sappani, Rajan Krishnan, Umarani Pappusamy Mysore, Guberan Rajan, Dr. Ku.Muthukumar

முதல்வர் பொறுப்பேற்ற பொழுதே நடந்த முதல் பாராட்டுக் கூட்டம்!


ஃஃஃ      அகரமுதல     இலக்குவனார் திருவள்ளுவன் 
     11 May 2026      


முதல்வர் பொறுப்பேற்ற பொழுதே நடந்த

முதல் பாராட்டுக் கூட்டம்!

நேற்று ஞாயிறு 10.05.2026 காலை 10.00 மணிக்குத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மாண்புமிகு ச.சோ.விசய் முதல்வராகப் பொறுப்பேற்ற நிகழ்வு நடந்ததை அனைவரும் அறிவோம்.

நேற்று அதே நேரம் அவருக்குத் தமிழ்காப்புக் கழகம் சார்பில் பாராட்டுக் கூட்டம் நடைபெற்றது. இதுவே முதல் பாராட்டுக் கூட்டம். அதுவும் தமிழ் அமைப்பு நடத்திய பாராட்டுக் கூட்டம்.

தமிழ்க் காப்புக் கழகத் தலைவர் திரு இலக்குவனார் திருவள்ளுவன் தலைமையில் இக்கூட்டம் நிகழ்ந்தது.

தேர்தல் கணிப்புகளையும் திணிப்புகளையும் பொய்யாக்கித் தன்னம்பிக்கையால் வெற்றி பெற்றார் எனப் பாராட்டினார்.

மேலும் சிக்கல் எதுவும் வந்தால் முறியடித்து ஐந்தாண்டு காலம் முழுமையாக ஆட்சி நடத்த வாழ்த்தினார்.

குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு வழி வகுக்காமல் த.வெ.கழகத்திற்கு ஆதரவு தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் பாராட்டும் நன்றியும் தெரிவித்தார்.

தொடர்ந்து நடைபெற்ற கவியரங்கில், முனைவர் புத்தேரி தானப்பன், முனைவர் வி.பொ.தமிழ்ப்பாவை, செல்வி முசிபூர் அமீரா, செல்வி பி.முகில் ஆகியோர் வாழ்த்துப் பா பாடினர்.

நிறைவாக முனைவர் செ.இராசேசுவரி எழுதிய, “பண்பாட்டு நகர்வுகள் – தமிழ்நாட்டில் இருந்து சப்பானுக்கு” என்னும் நூல் குறித்து ஆய்வுரை வழங்கினார்.

தொடக்கத்தில் முனைவர் மா.போ.ஆனந்தி வரவேற்புரையாற்றினார். செல்வி முகிற்செல்வி நன்றி நவின்றார்.

கவியரங்கத்தில் பங்கேற்றோர் மாண்புமிகு முதல்வர் விசய்யின் திறமைகள் குறித்தும் வாக்குறுதிகளைச் சிறப்பாக நிறைவேற்றுவார் என்னும் நம்பிக்கை குறித்தும் தமிழ், தமிழர் நலன் குறித்தும் சிறப்பாக எடுத்துரைத்தனர்.

– தாய் 11.05.26


--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

Reply all
Reply to author
Forward
0 new messages