இப்பொழுது இணையத்தில் ஏராளமான தமிழ் சினிமாக்கள் முழுதுமாய்1940கள் தொடங்கிக் கிடைக்கின்றன. யுட்யூப் உபயம்.முழுப் படங்களின் வலைத்தொடுப்பு நீங்களும் அளித்தால்இவ்விழை சிறப்புறும். நல்ல காட்சிகளின் நிமிஷம் சொன்னாலும்பார்க்கலாம். நன்றி.அரிசோனன் எழுதினார்:>நீண்ட நாள்களுக்குப் பின்னர் நாடோடி மன்னனை (Prisoner of Zendaவின் தமிழாக்கம்) மீண்டும் பார்க்க>வாய்ப்புக் கொடுத்தமைக்கு மிக்க நன்றி. பாட்டுக்கள் மிக அருமையாக இருக்கும்.> முடிந்தால் "நாடோடி மன்னன்" படத்தைப் பாருங்கள். அவரது இயல்பான குரலைக் கேட்கலாம்.நாடோடி மன்னன் முழுப்படமும் இங்கே பார்க்கலாம்:நா. கணேசன்
> முடிந்தால் "நாடோடி மன்னன்" படத்தைப் பாருங்கள். அவரது இயல்பான குரலைக் கேட்கலாம்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
இம்மலருக்கு மருத்துவப் பண்புகளும் குறிப்பிடப்படுகிறது.
..... தேமொழி
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
அன்பொடு
கிருஷ்ணன்,
சிங்கை
தமிழ் எமது மொழி
இன்பத்தமிழ் எங்கள் மொழி
....................
http://ezilnila.com/saivam
http://singaporekovilgal.blogspot.com/
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
” மார்கழிப் பூவே’’
மார்கழி மாதம் பிறந்த நாளிலிருந்து ,அருகிலிருக்கும் ஆலயத்திலிருந்து ஒலிபெருக்கி மூலமாக ஒலிக்கும் திருப்பாவை, திருவெம்பாவை போன்ற பக்திப் பாடல்களைக் கேட்டுக்கொண்டே விடியற்காலையில் என் பெண் எங்கள் வீட்டு வாசலில் போடும் கோலங்களையும் ரசித்துக் கொண்டும், உபன்யாசங்கள்,முடிந்த போது இசைவிழாக் கச்சேரிகள் கேட்டுக்கொண்டும்,நம் அறிஞர்கள் எழுதிய இசைமறுவறல்கள் படித்தும், இத்தனை நாட்கள் எங்கள் ஆழ்வார் ஆண்டாளைப்பற்றி அனைத்து அறிஞர்களும் எழுதிய அமிர்தம் போன்ற விளக்கங்களப் படித்தும், முழுவதும் அனுபவித்து ஆனந்தமடைந்தேன்,
நாளை வைகுண்ட ஏகாதசி ,எல்லா வைணவ ஆலயங்களிலும் வைகுண்ட வாசல் திறக்கும்,வைகுண்ட வாசல்திறக்கும் அந்த சுபமுகுர்த்த வேளையில் மானுடர்களாகிய நாம் மனதும் உடலும் சுத்தமாக, அந்த வாயிலின் வழியே நுழைந்து அங்கு இறைவனை தரிசனம் செய்தால் வைகுண்டம் செல்லலாம் என்னும் ஆத்திக அன்பர்களின் நம்பிக்கையின் படி அனைத்து மக்களும் ஆலயங்களுக்கு சென்று வழிபடும் நாள்,
உத்திரமேரூரிலிருந்து ஒரு உறவுக்காரப் பெண் என் மனைவிக்கு தாழம்பூவை அனுப்பி இருந்தாள்
தாழம்பூ வாசனைக்கு பாம்பு வரும் என்று சொல்லுவார்கள்,மின்னல் தெறிக்கும் வேளையிலே தாழை மடல் விரியும் என்றும் தாழம்பூ பூக்கும் என்றும் சொல்லுவார்கள், அது மட்டுமல்ல தாழம்பூவில் சிறு நாகம் என்று சொல்லக்கூடிய சிறு பாம்பு இருக்கும்,அந்தப் பூநாகம் கடித்தால் பிழைப்பது கடினம் என்றும் சொல்லுவார்கள் ஆகவே தாழம்பூவை நன்கு சோதித்துப் பிறகே கூந்தலில் சூடவேண்டும் என்று என் அன்னையார் சொல்லக் கேட்டிருக்கிறேன்
,
பொதுவாக என் வீட்டில் இறைபக்தி உண்டு என்னும் காரணத்தால் புதிய துணிமணிகள், நகைகள், வீட்டிலே சமைக்கும் உணவுப் பொருட்கள் அனைத்தையுமே ஸ்வாமிக்கு நிவேதனம் செய்து விட்டு அதன் பின்னர் உபயோகிப்பது வழக்கம், அதேபோல் தாழம்பூவையும் ஸ்வாமிக்கு அணிவித்து பிறகு வீட்டில் உள்ள பெண்மணிகள் சூடிக்கொள்ளுங்கள் என்று சொன்னேன், ஆகவே என்னுடைய இயல்பான எச்சரிக்கையான குணத்தினால் அந்த தாழம்பூவை பிரித்து அதில் நன்கு சோதனையிட்டு பிறகு என் மனைவியிடம் கொடுத்தேன்,
பாசத்தோடு தாழம்பூவை அனுப்பி இருக்கும் அந்தப் பெண்ணின் அன்பில் எனக்கு சந்தேகமில்லை, ஆனால் அந்தப் பெண்ணிற்கு தாழம்பூவின் இயல்புகள் தெரியுமோ தெரியாதோ என்னும் எண்ணத்தில்தான் சோதனை செய்தேன், ஒரு எச்சரிக்கைதான் இதற்கும் காரணம், ஆனால் இந்த எச்சரிக்கைக்குப் பின்னால் இருக்கும் என் சுயநலத்தை எண்ணிப் பார்த்தேன் வெட்கமாக இருந்தது,
நான் என் மனைவியிடம் சொன்னேன் எதற்கும் தாழம்பூவை ஸ்வாமிக்கு சார்த்தி அணிவித்த பிறகு நீ சூடிக்கொள் என்று,
தாழை மடலில் ஒரு செடிக்கு 20 கிளைகள் இருக்கும்
ஆனால் ஐந்து மொக்குகள் மட்டும் தான் இருக்கும்
இது போல்பல செடிகளில் இருக்கும் அத்தனை மொக்குகளும்
மின்னல் அடிக்கும் வேளையிலே ஒரே நேரத்தில் மலரும்
ஒரு பூவில் 20 இதழ்கள் இருக்கும்
சூரிய வெளிச்சம் அந்தச்செடிக்கு போதாது
ஆகவே மின்னலின் ஒளியில்தான் பூக்கும்
மின்னலின் ஒளி தரியில் பட்டுத்தெரித்து தண்ணீரில் பட்டு அந்தப் பூவின் மேல் படும் போது அதிலிருந்து கிடைக்கும் சக்தியை வைத்து தாழம்பூ பூக்கும்
தாழம்பூவின் மகரந்த்த்தை வைத்து வாசனாதி திரவியங்கள் செய்வர்
எப்பொருளையும் ஸ்வாமிக்கு நிவேதனம் செய்துவிட்டு பிறகு நாம் உபயோகிப்பது என்ன காரணத்தால் என்று எண்ணிப் பார்க்கையிலே
அனேக காரணங்கள் தோன்றினாலும் நமக்கு ஒரு பிறப்பையும் தந்து நமக்கு வேண்டிய அனைத்துப் பொருட்களையும் அளித்த இறைவனுக்கு நாம் நன்றி செலுத்தும் விதமாக அவருக்கு நிவேதனம் செய்து விட்டு உபயோகிக்கிறோம் என்பது ஒரு காரணம்
பொதுவான நம்பிக்கை என்னெவென்றால் நாம் உபயோகிக்கும் பொருட்களில் ஏதேனும் தோஷங்கள் இருந்தால் அவைகளை ஸ்வாமி நீக்கிவிட்டு நமக்கு நன்மை அளிக்கக் கூடிய ப்ரசாதமாக மாற்றித் தருவார் என்னும் ஆன்மீகவாதிகளின் நம்பிக்கையின் அடிப்படையிலேயே நாம் எல்லாவற்றையும் ஸ்வாமிக்கு நிவேதனம் செய்கிறோம் என்பது பொதுக் கருத்து
இப்படிப் பார்க்கும் போது இறைவனை தோஷங்கள் எதுவும் தாக்காது, அவன் சர்வ வல்லமை படைத்தவன் என்று நாம் மதிக்கிறோம் என்று தோன்றினாலும், நாம் செய்வது சரியா என்று ஒரு எண்ணம் தோன்றுகிறது, ஏனென்றால் என் தாயார் குளித்து சுத்தமாக தன் கையாலே சமைத்த உணவுப் பொருட்களை ஸ்வாமிக்கு நிவேதனம் செய்துவிட்டு பிறகே எங்களுக்கு அளிப்பார்கள், அது வரை என்னதான் பசித்தாலும் காத்துக் கொண்டிருக்க வேண்டியதுதான் என்னும் வழக்கத்தை எங்களிடையே விதைத்தார்கள்
அந்த வழக்கத்தினால், பசித்திரு ,தனித்திரு,விழித்திரு என்று விவேகானந்தர் கூறிய என்னும் மூன்று சொற்களின் பயன் என்னவென்று எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது, நல்ல வேளை என் மனைவியும் அதே வழக்கத்தை கடைப்பிடிக்கிறாள்
ஆனால் புதியதாக திருமணம் ஆன என் மகள் சமைத்துக் கொண்டிருக்கும் போது அவள் சமைக்கும் ஒவ்வொரு உணவுப் பண்டத்தையும் முதலில் கொஞ்சம் ருசிபார்த்துவிட்டு வைப்பதைப் பார்த்து அவளிடம் கேட்டேன், முதலில் ஸ்வாமிக்கு நிவேதனம் செய்யாமல் இதுபோல நீ ருசித்துப் பார்க்கிறாயே இது நியாயமா என்று கேட்டேன் ,
அதற்கு அவள் சாமர்த்தியமாக என்னிடம் சொன்ன பதில் என்னை யோசிக்க வைத்தது, அப்பா நானே சமையல் கலைக்கு புதியவள் ஏதோ ஒரு தைரியத்தில் சமைக்கிறேன் ,அதன் ருசி சரியில்லாமல்,என் கணவருக்கு அளிப்பதற்கு என் மனம் இடம் கொடுக்கவில்லை,நாம் மரியாதை அளிக்க நினைப்பவருக்கு பதமான சுவையோடு கூடிய குற்றமில்லாத உணவை அளிப்பதுதானே நியாயம், அதனால்தான் நான் ருசித்து விட்டு அந்த உணவுப் பொருட்களில் இருக்கும் குறைகளைக் களைந்து சுவையாக மாற்றி பிறகு அவருக்கு அளிக்கிறேன் என்றாள்,
சாதாரண மானுடப் பெண்ணிற்கே தான் காதலிக்கும் தன் கணவன் மேல் உள்ள மரியாதையாலும் தன்னுடைய அக்கரையினாலும் கணவனுக்கு எந்த விதத்திலும் ஒரு குறையும் வந்துவிடக் கூடாது என்று , தான் ருசி பார்த்துவிட்டு குற்றம் களைந்து பிறகு கணவனுக்கு அளிக்கவேண்டும் என்னும் நல்லெண்ணம் இருக்கிறதே!!
அப்படியானால் ஆண்டாள் எப்படியெல்லாம் அரங்கனை போற்றி இருப்பாள் என்று நினைக்கையிலே மனம் தழுதழுக்கிறது,
ஆத்மார்த்தமாக காதலித்து, பக்தி செய்த அடியவர்களான ஆழ்வார்கள் இறைவனை, மூலப்பொருளை எவ்வளவு உயர்வாக வைத்திருந்தார்கள், என்பதைக் காட்டும் இலக்கியங்கள் நமக்கு பக்தியை உணர்த்துகின்றன,
தான் கடித்துப் பார்த்துவிட்டு குற்றம் நீக்கி ஸ்ரீராமனுக்கு வண்ணமாகவே ,சபரி அவைகளை அளித்தாள் என்பதில் வியப்பேதுமில்லை, குற்றமும் இல்லை என்றே தோன்றுகிறது,
இச்செய்கை சபரியின் அளவிடமுடியாத பக்தியைக் காட்டுகிறது,
அனைவரும் என் வீட்டுக்கு வாருங்கள் என்று அழைத்தும் ,நம் வீட்டுக்கு வா கண்ணா ,என்று பக்தியுடன் அழைத்த விதுரரின் அழைப்பை ஏற்று, அவர்தம் குடிலுக்கு சென்ற பகவான் கிருஷ்ணனைக் கண்ட விதுரர் தன்னை மறந்த நிலையில் வாழைப்பழத் தோல்களை கிருஷ்ணனுக்கு அளித்து பழத்தை கீழே போட்டுவிட்டு நெக்குருகி ஆனந்தக் கண்ணீர் வழிய பரவச நிலையிலிருந்த விதுரரின் நிலையை எண்ணிப்பார்த்து பரவசமடைந்தேன், அப்படி பக்தியோடு அடியவன் அளித்த பழத்தோல்களை சற்றும் முகம் சுளிக்காமல், திருப்தியோடு உண்ட வெண்ணையுண்ட வாயன் கிருஷ்ணனின் லீலை நம்மை வியக்கவைக்கிறது,
சுய நிலை அடைந்து பதறிப்போய் தான் செய்த தவறுக்கு வருந்தி விதுரர் பூரண உணர்வோடு பழத்தை அளித்த போது அதை மறுத்து, தன்னை மறந்த நிலையில் விதுரர் அளித்த வாழைப்பழத்தோலே தனக்கு உவப்பானது என்று அருளி, அடியவர்களின் பக்தி எப்படி இருக்க வேண்டும் என்று நமக்குணர்த்திய கிருஷ்ணனின் லீலையை அனுபவிக்கிறோம்,
அப்படி இருக்க ஸ்ரீரங்கன் மேல்பக்தியும் , அளவிடமுடியாத காதலும் கொண்ட ஆழ்வார் ஆண்டாள் திருவரங்கனுக்கு எந்த ஒரு தீங்கும் வந்து விடக் கூடாது என்று எண்ணம் கொண்டதால்தானோ தான் சூடி மாலை அவனுக்களித்தாளோ என்று தோன்றுகிறது
என்னதான் பெரியாழ்வார் பக்தியோடு சுத்தம் செய்த மலர்களைக் கொண்டு மாலை கட்டி இருந்தாலும் அம்மாலையை கழுத்தில் அணிந்து கொண்டு சற்றும் உறுத்தல் இல்லாமல் இருக்கிறதா என்று சோதித்துப் பார்த்து பிறகு ஸ்ரீரங்கனுக்கு அளிக்கலாமே என்னும் எண்ணத்தால் தான் சூடி மாலை தந்தாளோ கோதை என்று தோன்றுகிறது
இன்னமும் அந்த மாலைகளில் ஏதேனும் குற்றம் இருந்து விடப் போகிறதே,அந்தக் குற்றங்கள் தன்னை பாதித்தாலும் பரவாயில்லை, அரங்கனைப் பாதித்து விடக்கூடாது, அதனால் குறைகளைக் கண்டுணர்ந்து களைய வேண்டுமே என்று நினைத்து குறை ஒன்றுமில்லாத கோவிந்தனுக்கு குறை களைந்து தான் சூடி மாலைதனை அளித்தாளோ ஆண்டாள் என்று தோன்றுகிறது
ஸ்ரீரங்கனுக்கு ஆண்டாள் ஆழ்வாரா,இரண்டறக் கலந்த பாகம் பிரியாளா, அல்லது தாய்மையோடு கூடிய பாசத்தோடு கூடிய தாயாகவும் ஆனாளோ ஆண்டாள்
அவன் மடியில் தழும் சேயாகவும் ஆனாளோ ஆண்டாள்
அடடா என்னே பெரியாழ்வார் கண்டெடுத்த சின்னாழ்வார் ஆண்டாளின் பெருமை..?
அதனால்தான் தாய்க்குப் பின் தாரம் என்னும் சொல்வழக்கு ஏற்பட்டதோ என்று தோன்றுகிறது
அன்புடன்
தமிழ்த்தேனீ
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
///சம்ஸ்கிருதத்தில் கேதகி என்பர் இதை. கேது என்பது மின்னலையும் குறிப்பதாகச் சொல்வதாலேயே தாழைக்கு இந்தப் பெயர் வந்தது என்னும் கூற்று உண்டு.///கைதை என்பதற்கும் கேதகி என்பதற்கும் தொடர்பு இருக்கலாம் எனத் தோன்றுகிறது...
சிங்கை கிருஷ்ணன் ஐயா சொன்ன நாடோடிமன்னன் பாட்டு மாத்திரம் தனியாகயுட்யூபில் இருக்கிறதா? எந்த மணி, நிமிஷம் முழுப்பட யுட்யூபில் வருகிறது? - என சொல்லமுடியுமா?
--
--
இருந்தமிழே உன்னால் இருந்தோம்! இமையோர்,
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டோம்!
---
You received this message because you are subscribed to the Google Groups "தமிழாயம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizayam+...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
மின்னல் கண்டு தாழை மலர்வதாகச் சொல்வதை கவிமரபு, என்று சொல்வதும் உண்டு. வைரமுத்து, 'மின்னொளியில் மலர்வன தாழம்பூக்கள்' (பாடல்: வெள்ளி மலரே..படம்:ஜோடி), என்றும், விவேகா "மின்னல் கண்ட தாழை போல உன்னால் நானும் பூத்தாட" (பாடல்: இப்பவே இப்பவே..படம்: ராமன் தேடிய சீதை (சேரன் நடித்தது) என்றும் எழுதியிருக்கிறார்கள்.திருத்தொண்டர் திருவந்தாதியில், நம்பியாண்டார் நம்பி, " கொண்டல் கொண்டேறிய மின்னுக்குக் கோல மடல்கடொறும் கண்டல்வெண் சோறளிக்குங்கடற் காழி" என்று சீர்காழியைக் குறிக்கிறார். கவி காளிதாசனும் இந்த உவமையை மேகதூதத்தில் கையாண்டிருக்கிறார்.சம்ஸ்கிருதத்தில் கேதகி என்பர் இதை. கேது என்பது மின்னலையும் குறிப்பதாகச் சொல்வதாலேயே தாழைக்கு இந்தப் பெயர் வந்தது என்னும் கூற்று உண்டு. மதுரை ஸ்பெஷல் தாழம்பூ குங்குமம் பிரசித்தி பெற்றது. அர்ச்சனைக்கு இதை உபயோகப்படுத்துவது வழக்கம்.
இந்த இழையின் தலைப்பைப் பார்த்ததால் கேட்கிறேன்..யாராவது அபூர்வ ராகங்கள் முழு திரைப்படத்தை நெட்டில் பார்த்தால் எனக்கு லிங் அனுப்பி வைக்கவும்.
நன்றிசுபா
கேது என்றால் மின்னல் என்ற பொருள் வடமொழியில் இல்லை.
केतु [ ketu ] bright appearance , clearness , brightness ,lamp , flame , torch
தேவ்
தேவ்
நன்றிசுபா
மின்னல் கண்டு தாழை மலர்வதாகச் சொல்வதை கவிமரபு, என்று சொல்வதும் உண்டு. வைரமுத்து, 'மின்னொளியில் மலர்வன தாழம்பூக்கள்' (பாடல்: வெள்ளி மலரே..படம்:ஜோடி), என்றும், விவேகா "மின்னல் கண்ட தாழை போல உன்னால் நானும் பூத்தாட" (பாடல்: இப்பவே இப்பவே..படம்: ராமன் தேடிய சீதை (சேரன் நடித்தது) என்றும் எழுதியிருக்கிறார்கள்.திருத்தொண்டர் திருவந்தாதியில், நம்பியாண்டார் நம்பி, " கொண்டல் கொண்டேறிய மின்னுக்குக் கோல மடல்கடொறும் கண்டல்வெண் சோறளிக்குங்கடற் காழி" என்று சீர்காழியைக் குறிக்கிறார். கவி காளிதாசனும் இந்த உவமையை மேகதூதத்தில் கையாண்டிருக்கிறார்.சம்ஸ்கிருதத்தில் கேதகி என்பர் இதை. கேது என்பது மின்னலையும் குறிப்பதாகச் சொல்வதாலேயே தாழைக்கு இந்தப் பெயர் வந்தது என்னும் கூற்று உண்டு. மதுரை ஸ்பெஷல் தாழம்பூ குங்குமம் பிரசித்தி பெற்றது. அர்ச்சனைக்கு இதை உபயோகப்படுத்துவது வழக்கம்.வரலக்ஷ்மி விரத பூஜையில் தாழை மலர் கண்டிப்பாக இடம் பெறும். பூஜை நிறைந்த பின், மறு நாள் மாலை, பூஜையில் வைத்த தாழை மலரைக் கொண்டு எங்களுக்கு ஜடை பின்னுவார்கள். பொட்டி ஜடை (தாழை மடல்களை உட்புறமாக மடக்கி வைத்து ஜடையில் தைப்பது), கத்தி ஜடை (மடல்கள் வெளிப்புறமாக நீட்டிக் கொண்டிருக்குமாறு வைத்துத் தைப்பது) என்று ஜடையில் இருவகைகள் உண்டு. அம்மன் அலங்காரத்தின் போதும் இம்மாதிரி சவுரி முடியில் தைத்து கலசத்தின் பின்புறம் வைத்து அலங்கரிப்பது வழக்கம்.