தியாகு,
இந்த முதல் பெயர் இறுதி பெயர் எல்லாம் அந்த ஊர் பண்பாட்டை சார்ந்தவை.
லாஸ்ட் நேம் , சர் நேம் , பேமலி நேம் என்ற மூன்றும் ஒன்று தான். இது குடும்ப அல்லது பரம்பரைப்பெயர் என தமிழில் சொல்லலாம். பரம்பரை பெயர் என்றாலே பரம்பரையாக குடும்பத்தில் இருக்கும் அனைவரின் பெயருக்கு பின்னாலும் இது இருக்கும். தமிழ்நாட்டில் சொல்லவேண்டும் என்றால் ரங்கராஜன் குமாரமங்கலம், அவருடைய அப்பா பெயர் மோகன் குமாரமங்கலம். இங்கு குமாரமங்கலம் என்பது ஒரு ஊரின் பெயராக இருந்தாலும் ஆங்கில முறைப்படி குடும்ப்பெயர் ஆகிவிடுகிறது. இதை தமிழ் முறைப்படி குமாரமங்கலம் மோகன் என்று எழுதினால் தான் சரி.
தமிழ் முறைப்படி எழுதும் போது ஊரின் பெயர், வாங்கிய பட்டம் பின்பு அவரின் பெயர். ஆங்கிலத்தில் இது தலை கீழ்.
முதலில் அவருடைய பெயர். இது முதல் பெயர். இந்த பெயருக்கும் முன்னால் மிஸ்டர் போடக்கூடாது. தனிப்பட்ட முறையில் தெரியாதவர்கள் இந்த பெயரை சொல்லி அழைக்க கூடாது.
அடுத்து முதல் பெயரை கொஞ்சம் நீளமாக இருந்தால் மிடில் நேம்.
கடைசியாக வருவது பரம்பரை பெயர். இதற்கு முன்னால் தான் மிஸ்டர் போடவேண்டும். பேரா, டாக்டர் என்ற பட்டங்கள் எல்லாம் இந்த பெயருக்கு முன்னால் தாம் போடப்படவேண்டும்.
தமிழ் நாட்டில் சாதிப்பெயர் உண்டு அப்புறம் குலப்பெயர் உண்டு அதற்கு பிறகு தனிப்பெயர் உண்டு. இங்கு குலப்பெயர் தான் பரம்பரை பெயராக வரவேண்டும். மேற்கில் ஒரே பரம்பரை பெயர் கொண்டவர்கள் ஒரே வம்சம் என்று வெகு காலம் இருந்தது. இன்றைக்கும் மெக்டொனால்டு என்ற வம்சங்கள் ஸ்காட்லாண்டில் உண்டு. அதற்கு வம்சத்தலைவர் உண்டு. கொடி, கோட்டை கூடவும் உண்டு.
கேரளாவில் குடும்பபெயராக வீட்டுப்பெயர் உண்டு. கொங்கில் இன்னமும் காட்டுப்பெயர் வீட்டுப்பெயர்கள் உண்டு. வளுவுக்கு பெயரும் உண்டு. பழங்கால கல்வெட்டுகளில் ஊர்ப்பெயர் சாதிப்பெயர் குலப்பெயர் எழுதி பின்பு அவரின் சொந்த பெயர் சொல்லப்படும்.
இது புரியாத பத்திரிக்கைகள் மிஸ்டர் பழனியப்பன் என உள்துறை அமைச்சரையும் மிஸ்டர் ராமதாஸ் என அன்புமணி ராமதாஸையும் போடுகின்றன.
ராஜசங்கர்