தாலாட்டு

172 views
Skip to first unread message

N. Ganesan

unread,
May 8, 2009, 9:49:34 PM5/8/09
to மின்தமிழ்

அழகான தாலாட்டு - மீனா முத்து அவர்களே!
http://thalatu.blogspot.com/2009/05/blog-post.html

“தமருவெட்டத் தூண் நிறுத்தி” ?

’தருவெட்டித் தூண் நிறுத்தி” என்பதோ?

நா. கணேசன்

V, Dhivakar

unread,
May 9, 2009, 1:50:43 AM5/9/09
to minT...@googlegroups.com
தமரு வெட்டத் தூண்நிறுத்தி

சரிதான்.. தமர் என்றால் அடியார் என்றும் வேலை செய்பவர் என்றும் பொருள் கொள்ளலாம்.

ஆனால் இங்கு தமிழ் கொஞ்சி விளையாடுது!

அழகான தாலாட்டு..

கண்ணதாசன் புத்தகங்களில் (அவர் சினிமாப் பாடல்கள் தவிர்த்தவை) அடிக்கடி இத்தகைய பாடல்களை செட்டிநாட்டுத் தாய்க்குலம் தாங்களாகவே தமிழ் பாடுவதாகவும் அதைவிட சிறந்த தமிழை கேட்டறியேன் என்று எழுதுவார்.

உண்மைதான். மீனாம்மாவின் தமிழ் வெங்கடேசனைக் கூட உறங்கவைக்கும் (அவன் தானே தூங்காமல் சதா நின்றுகொண்டிருப்பவன்!)

திவாகர்

2009/5/9 N. Ganesan <naa.g...@gmail.com>

N. Ganesan

unread,
May 9, 2009, 6:39:51 AM5/9/09
to மின்தமிழ்

On May 9, 12:50 am, "V, Dhivakar" <venkdhiva...@gmail.com> wrote:
> கண்ணதாசன் புத்தகங்களில் (அவர் சினிமாப் பாடல்கள் தவிர்த்தவை) அடிக்கடி இத்தகைய
> பாடல்களை செட்டிநாட்டுத் தாய்க்குலம் தாங்களாகவே தமிழ் பாடுவதாகவும் அதைவிட
> சிறந்த தமிழை கேட்டறியேன் என்று எழுதுவார்.
>

செட்டிநாட்டுத் தாலாட்டுப் பாடல்கள் தொகுப்புகள் சில வெளியாகியுள்ளன.

பல்கலைக்கழகங்களில் சில ஆய்வேடுகளும் உள்ளன. தமிழண்ணல் (பேரா., மதுரை)
சில நூல்களை எழுதியுள்ளார். நெற்குப்பை அவர் ஊர். சோமலெ அவர்களும்
எழுதினார்.
இருவரும் ஒரே ஊர், தாயாதிகள்.

நா. கணேசன்

கிருஷ்ணமூர்த்தி

unread,
May 9, 2009, 9:12:35 AM5/9/09
to மின்தமிழ்
செட்டி நாட்டுத் தாய்க் குலங்கள் என்று மட்டுமில்லை, சிவகங்கைச் சீமை
உள்ளிட்ட பாண்டிய மண்ணுக்கே உரித்தான திறமை, இந்த இட்டுக் கட்டி எதுகை
மோனையுடன் பாட்டுக் கட்டுவது. சொல்லப் போனால், பெண்ணே படைப்புத் திறம்
மிக்க மகா சக்தி தானே!

கவியரசர் தயாரித்து வெளியிட்ட சிவகங்கைச் சீமை படத்தில் இந்தக் கருத்தை
முன்வைத்து ஒரு நெகிழ வைக்கும் காட்சியும் இடம் பெற்றிருக்கிறது.

அதே வகையில், இங்கே தாலாட்டுப் பதிவுகளில், பல ஏற்கெனெவே
அறிந்திருந்தாலும், இங்கே ஆச்சியின் சொந்த வார்த்தைகளும் சேர்ந்து ஒரு
புதிய சுவையைத் தாங்கி இருப்பதைப் பார்த்தேன்.

அன்புடன்
கிருஷ்ணமூர்த்தி

Subashini Tremmel

unread,
May 9, 2009, 9:24:52 AM5/9/09
to minT...@googlegroups.com
மீனா,
 
இந்தப் பாடலை உங்கள் குரலிலேயே வாசித்து( /பாடி) அனுப்பி வையுங்களேன். மண்ணில் குரலில் பதிவு செய்து வைக்கலாம்.
 
அன்புடன்
சுபா

2009/5/9 N. Ganesan <naa.g...@gmail.com>

Chandra sekaran

unread,
May 9, 2009, 1:08:51 PM5/9/09
to minT...@googlegroups.com
புலம்பெயர்ந்த தமிழர் தலைப்பில் ஒரு போட்டி இணையத்தில் வந்திருந்தது. ஒரு தாலாட்டு  இயற்றி அனுப்பிவைத்தேன். பரிசும் அறிவிக்கவில்லை, செய்தியும் வெளி வரவில்லை. அந்தப் பாடல்:
புலம் பெயர்ந்த தமிழனின் தாலாட்டு
சூழ்நிலை:

கணவன் வெளிநாட்டில் உள்ளான்; 
மனைவி இந்தியாவில் உள்ளாள். அவள் 
கையில் குழந்தை. அந்தக் குழந்தைக்கு 
இருவருமே தாலாட்டுப் பாடுகிறார்கள்!! 
இருவரும் மறுகரையை நோக்கிப் பாடுவதாக 
அமைத்துள்ளேன்!


பெண்:

அழகிய கண்விருந்தே, அம்மாவின் அருமருந்தே
அணைச்ச கைய உதறாம, பிடிச்சுகிட்ட கண்ணுறங்கு..!
அக்கரைப் பச்சையின்னு அவசரமாப் போனவரே
அக்கரை இருந்தும் அக்கரையில் என்ன செய்வீர்?

ஆண்:

இன்பம் தந்த அற்புதமே, அப்பனுக்கு அச்சரமே
இலமறவு காய்மறவா இருக்குதடீ எந்தன் பணி
இக்கரைப் பச்சையின்னு இங்கு வந்த அப்புறந்தான்
இனிக்கப் பேசி இடித்துரைப்பார் எப்படின்னு நானறிஞ்சேன்!

பெண்:

உமக்கென்ன மகராசா குளிர்வசதி மச்சுவீடு
உய்யாரமாயுலவ உயர்தர பிளைமூத்தூ!
உக்கார்ந்து சாப்பிடவே உயர்ந்த ரகம் நாக்காலி
உலகம் மறந்திடவே ஒரு சாண் சொகுசு மெத்தை

ஆண்:

உண்மையை நானுரைச்சா, உன் தூக்கம் போகுமடி
உசுரிருந்தும் இல்லாதான் போல ஒரு வாழ்க்கையடி
உள்ள தள்ளும் உணவெல்லாம் உழைச்சு நான் பணிசெய்ய
உன்ன காண வாரையிலே, உன்னதப் பொன் சேர்த்திடவே..

பெண்:

புள்ள பேரு வெக்கையிலே, சோறூட்டும் போதினிலே
அள்ளிக் கொஞ்ச வாராம அய்ய என்ன வேலையதோ
தெள்ளுதமிழ் பேசுதய்யா, மழலை மழை பெய்யுதய்யா
கொள்ளையழகு காணவாச்சும் எப்போநீ வாரீக?

ஆண்:

காலையெது மாலையெது எக்கணமும் தெரியாம
வேலையொண்ணே வேதமென வேதனைகள் நான்மறந்து
லீலைசெய்யும் மாயமது கைநிறையக்காசிருந்தா
சோலையாகும் நம்வாழ்வு சொல்லிடுவேன் சத்தியமா

பெண்:

காசுமட்டும் போதாது கடுதாசு நிதம் போடுமய்யா
காதல்மட்டும் மாராம கவலைகள் ஏறாம
கானலிலே கால் பரப்ப கனிவுடனே போனமாமன்
கணநொடியில் வந்திடுவான் கண்மணியே கண்ணுறங்கு

ஆண்:

ஊர்பேச்சு கேக்காத, உடன்பிறந்தார் ஏசாத
உண்மையன்பு உள்ளமட்டும் உலகமது நம்ம கையில்
உயிர் உனையே உள்ளவெச்சு உமிழ்நீர் பருகிவர்றேன்
உடன் இருக்க ஓடிவர்றேன், பாப்பாகிட்டச் சொல்லிவெய்யி!




2009/5/9 Subashini Tremmel <ksuba...@gmail.com>



--
To save culture & heritage visit:
www.conserveheritage.org
http://templesrevival.blogspot.com
http://reachhistory.blogspot.com
join http://groups/yahoo.com/temple_cleaners

to do your bit to uplift the society visit
www.dreamindia2020.org

kamaladevi aravind

unread,
May 9, 2009, 1:41:54 PM5/9/09
to minT...@googlegroups.com
அன்பின் மீனா,
இப்பொழுதுதான்  தாலாட்டுகேட்டேன்,
மனத்திலிருத்திப் பாடிப் பார்க்கத்தூண்டும் அழகிய வரிகள்
சுபாஷினி கூறியதுபோல் குரலிலும் கேட்க ஆவல்
கமலம்


From: N. Ganesan <naa.g...@gmail.com>
To: மின்தமிழ் <minT...@googlegroups.com>
Sent: Saturday, May 9, 2009 9:49:34 AM
Subject: [MinTamil] தாலாட்டு

நா.கண்ணன்

unread,
May 9, 2009, 7:51:11 PM5/9/09
to மின்தமிழ்
மீனா:

அடக்கமாக ஏதாவது செய்து கொண்டு இருப்பவர் நீங்கள். இப்படியொரு வலைப்பூ
உருவானதே இப்போதுதான் அறிந்தேன். பேத்திக்குப் பரிசு போலும்!

த.ம.அ `குரல்வளை` எனும் திட்டம் வரைந்து தமிழ் வட்டார வழக்கை, குரல்
பதிவாக்கியபோது மீனா செட்டிநாட்டு வழக்கைப் பேசி அனுப்பினார்.

http://urdialect.pitas.com/

அதே போல் இத்தாலாட்டுப்பாட்டையும் ஒலிப்பதிவு செய்து அனுப்பினால் நல்ல
சேகரமாக அமையும்!

ஆமாம், இப்பாடலில் வரும் `தளிகை` என்பது `சாப்பாடு` என்ற பொருளில்தானே
வருகிறது?

கண்ணன்

On May 9, 10:24 pm, Subashini Tremmel <ksubash...@gmail.com> wrote:
> மீனா,
>
> இந்தப் பாடலை உங்கள் குரலிலேயே வாசித்து( /பாடி) அனுப்பி வையுங்களேன். மண்ணில்
> குரலில் பதிவு செய்து வைக்கலாம்.
>
> அன்புடன்
> சுபா
>

> 2009/5/9 N. Ganesan <naa.gane...@gmail.com>


>
>
>
>
>
> > அழகான தாலாட்டு - மீனா முத்து அவர்களே!

> >http://thalatu.blogspot.com/2009/05/blog-post.html- Hide quoted text -
>
> - Show quoted text -

karth...@gmail.com

unread,
May 9, 2009, 10:37:35 PM5/9/09
to மின்தமிழ்
சந்திரா,

தாலாட்டு மிக அருமை!

பிளைமூத்தூ! = Plymouthஆ? எங்களூரில் கண்ணிலேயே காண்பதில்லை.
ஆனால் இந்த செட்டிநாட்டுப் பெண் தானறிந்ததைச் சொல்லுகிறாள்.
அப்படித்தானே!

இப்படி ஒண்ணு சேத்துக்கலாமா?

ஆண்:
உய்யாரமாயுலாவ பிளைமூத்தும் பார்க்கவில்லை
உக்காந்து சாப்பிடவோ ஒரு நிமிஷ நேரமில்லை.
உள்ளதுவோ கைப்பெட்டி உடுத்துவது முழவேட்டி
உருக்குலைந்து போகுதடி உன்நினைவில் என்னுடம்பு.

ரெ.கா.

On May 10, 1:08 am, Chandra sekaran <plasticschan...@gmail.com> wrote:
> புலம்பெயர்ந்த தமிழர் தலைப்பில் ஒரு போட்டி இணையத்தில் வந்திருந்தது. ஒரு
> தாலாட்டு  இயற்றி அனுப்பிவைத்தேன். பரிசும் அறிவிக்கவில்லை, செய்தியும் வெளி
> வரவில்லை. அந்தப் பாடல்:

> *புலம் பெயர்ந்த தமிழனின் தாலாட்டு*
> *சூழ்நிலை:*


>
> கணவன் வெளிநாட்டில் உள்ளான்;
> மனைவி இந்தியாவில் உள்ளாள். அவள்
> கையில் குழந்தை. அந்தக் குழந்தைக்கு
> இருவருமே தாலாட்டுப் பாடுகிறார்கள்!!
> இருவரும் மறுகரையை நோக்கிப் பாடுவதாக
> அமைத்துள்ளேன்!
>

> *பெண்:*

Chandra sekaran

unread,
May 10, 2009, 11:55:24 AM5/10/09
to minT...@googlegroups.com
ரெ.கா,
உங்கள் வரிகளும் அருமை. பிளைமூத்து - கார் என்பதும், அவளுக்குத் தெரிந்த பெரிய கார் என்பதும் சரியே
சந்திரா

Tthamizth Tthenee

unread,
May 10, 2009, 12:01:16 PM5/10/09
to minT...@googlegroups.com
தாலாட்டு பாடலின் வரிகளின் சுகத்தில் எனக்கே சுகமாய்த் தூக்கம் வருகிறது
 
அருமையான பாடல்
 
மீனா முத்து அவர்களே
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 

v.dotthusg

unread,
May 11, 2009, 10:07:23 AM5/11/09
to minT...@googlegroups.com
 
ஓம்.
அனபுடன்
நான் முயன்று பாடிய ஒரு தமிழ் தாலாட்டு இத்துடன் எம்.பி.3 படிவத்தில் இணைத்து அனுப்பியுள்ளேன்.
 
 திரு கவிமணி தேசிகவினாயகம் பிள்ளை அவர்கள் இயற்றியது.
 
 இந்தப் பாடலின் அளவு
 
அதன் பாடல் வரிகள் பின்வருமாறு:
-=-=-=-=-=-=-=-=-=-
 ஆராரோ- ஆராரோ ஆரிவரோ ஆராரோ!
ஆராரோ ஆராரோ ஆரிவரோ ஆராரோ!!
 
தெள்ளமுதுமுண்டு தெவிட்டாக் கன்னியுமுண்டு
 உள்ளங்குளிர உரையாடும் பைங்கிளியோ(ஆராரோ ஆராரோ)
 
நெஞ்சில் கவலைஎல்லாம் நீங்கித் திருமுகத்தே
புன்சிரிப்பைக் காட்டிஎம்மைப் போற்றும் இளவரசோ!(ஆராரோ ஆராரோ)
 
யாரடித்தார் உன்னை அடித்தாரைச் சொல்லியழு
சீரெடுத்த செல்வ சீமான் திருக்குமரா! (ரி!)(ஆராரோ ஆராரோ)
 
பாலை விரும்பினையோ பணிகாரம் வேண்டினையோ
சோலைப் பசுங்கிளியே! சுந்தரமே சொல்லியழு.(ஆராரோ ஆராரோ)
 
சப்பாணி கொட்டித் தளர்ந்தனையோ அல்லதுன்றன்
கைப்பாவைக்காகக் கலங்கி அழுதனையோ.
(ஆராரோ ஆராரோ)
 
மாங்கனியும் நல்ல வருக்கைப் பலாக்கனியும்
வாங்கியுன் மாமன் வருவார் அழவேண்டாம். (ஆராரோ ஆராரோ)
 
 
 
 
 
 
-------Original Message-------
FREE Animations for your email - by IncrediMail! Click Here!
Araro.mp3

Subashini Tremmel

unread,
May 11, 2009, 3:39:17 PM5/11/09
to minT...@googlegroups.com
நல்ல முயற்சி.
 
நமது வலைப்பக்கத்தில் நாட்டார் கலைகளைப் பிரதிபலிக்கும் ஒரு பக்கம் உள்ளது.  http://www.tamilheritage.org/natar/natarin.html இங்கு சில பாடல்களைச் சேர்த்திருக்கின்றோம் கேட்டுப் பாருங்கள். மேலும் இந்தப் பக்கத்திற்கு விஷயங்களைக் கூட்ட வேண்டும். நண்பர்கள் சேர்ந்து முயற்சித்தால் இதனை மேலும் மேம்படுத்தலாம்.
 
அன்புடன்
சுபா

2009/5/11 v.dotthusg v.dot...@gmail.com
Reply all
Reply to author
Forward
0 new messages