எள்ளில் இருந்து எண்ணெய் எடுத்தல் போல, இலக்கியங்கள் எழுதப்பெற்றபின்னர் இலக்கணம் உருவாகிறது என்கிறது பழஞ்செய்யுள். பச்சையப்பன் கல்லூரித் தமிழ்ப் பேரா. இராம. சுப்பிரமணியனின் விளங்காயும், விளாங்காயும் அத்தகைய இலக்கணவிதிகளில் ஒன்றின் விளக்கக் கட்டுரை. அதனைத் தேடித் தந்தேன். இலக்கணம், இலக்கியம் முறையே லக்ஷணம், லக்ஷியம் என்னும் வடசொற்களில் இருந்து உருவாகிப் பிராகிருதம், தமிழ் போன்றவற்றில் வழங்கும் என்று அறிஞர்கள் இந்தியச் செம்மொழிகளின் உறவுகளைத் துலங்கச்செய்துள்ளனர். கமில் சுவெலெபில் இலக்கணம், இலக்கியம் என்ற சொற்கள் உருவாதலை விரிவாக ஆராய்ந்துள்ளார். அவரது நூல்களிலும் கட்டுரைகளிலும் பல்லாண்டு முன்னர் படித்துள்ளேன். தமிழ்ப் பேராசிரியர்கள் எழுதிய தமிழ்க் கட்டுரைகளில் இச் செய்தியை விரிவாக எழுதியிருப்பவர் பேரா. இராம. சுப்பிரமணியன் தான். அக்கட்டுரையைச் சில நாட்களில் பகிர்கிறேன்.
நேற்று ஆர். பாலகிருஷ்ணன் சிந்து நாகரீகம் தமிழகம், தென்னிந்தியா வந்த வரலாற்றைப் பேசும் சொற்பொழிவைக் கேட்க நேரம் எடுத்துக்கொண்டேன். Interesting lecture about Indus valley culture's ceramic traditions appearing in Megalithic period pottery of Tamil Nadu. பொறுமையாய்க் கேட்கவேண்டிய காணொளி இஃது:
https://www.youtube.com/watch?v=93mqRKgoezUபட்டுப்பாதை (SIlk Route), மணக்கறிப் பாதை (Spice Route, கறி = கறிமிளகு) போல, பானைப் பாதை (Pot Route) என்பது Bronze Age Civilization of North India reaching Tamil country in the Iron Age, 1000 years later & starting of Paddy agriculture, Horses, Iron smelting (that gave birth to Damascus steel technology) in Tamil Nadu.
ஆர். பாலகிருஷ்ணன், I.A.S அவர்களின் குரு ஐராவதம் மகாதேவன் நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார். அவர் 50+ ஆண்டுகள் உழைத்து தமிழ் நாட்டுக்கு ப்ராமி வந்த வரலாறும், தமிழ் எழுத ப்ராமி எழுத்து மூன்று முறை மாறிய படிநிலைகளும், அதில் புள்ளி உருவாவதும், வரிவடிவம் பற்றிப் பேசும் தொல்காப்பியத்தில் புள்ளி இடம்பெறும் உன்னத நிலையும், அதனால் தொல்காப்பியர் காலம் கி.பி. 2-ஆம் நூற்றாண்டு என நாணயங்கள், கல்வெட்டுக்களால் உறுதிபடத் தொல்லியல் தரும் செய்தியை தன் க்ளாஸிக் நூலில் (Early Tamil Epigraphy) விளக்கியுள்ளார்கள். தொல்லியலும், கல்வெட்டுகளும் காட்டும் தொல்காப்பியர் காலம் இதுதான். ஐராவதத்தின் ஆய்வுக்கொடையை ரிச் சாலமன் (Jl. of American Oriental Society) விரிவாக எழுதியுள்ளார். பெர்க்கிலி, ஹார்வர்ட், இனி ஹூஸ்டன் என்று பல பல்கலைக்கழகங்களில் தமிழ்ப் பேராசிரியர் பீடங்கள் அமைந்துள்ள நிலையில் ஐராவதம் போன்ற முன்னோடிகளின் ஆய்வுகள் இன்னும் விரிவாகும். தொல்காப்பியமும் படிக்கப்பெறும். பொருள் அதிகாரம், அதன் வடமொழி தொடர்புகள், ...
விளாங்காய்ச் சீரை விலக்குதற்காக, இராசிபுரம் முதுபுலவர் கி. அரங்கசாமி பாடிய அண்ணா அறுபது நூல்வாழ்த்துக்கு “அரங்க சாமி” என வகையுளி ஆக்கியுள்ளார் மகாவித்துவான் மே. வீ. வேணுகோபாலப்பிள்ளை:
அண்ணா அறுபதெனும் அன்புமகு டஞ்சூட்டிப்
பண்ணார் கவிதை பலதந்தான் - நண்பார்
கவியரங்க சாமியெனும் கண்ணியன்மற் றிந்நூல்
புவியிற் சிறக்கப் புகழ்ந்து.
- மகாவித்துவான் மேவீவே.
இராசைப் புலவர் கி. அரங்கசாமி திராவிடப் பரணி, கலிங்கத்துப் பரணி போற் பாடியவர்.
அதுவும், தமிழ் எண்ம நூலகத்தில் கிடைக்கிறது. அரிய படைப்பு.