



--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
மின் தமிழ் வாசகர்களுக்காகக் காரைக்குடி டாக்டர்.காளைராசன் அவர்கள் ஸ்ரீ ஜகத்குரு திவ்ய சரித்திரம் என்ற நூலினை மின்னாக்கம் செய்து வெளியிட உள்ளார்கள். இந்த நூலினை இங்கே வெளியிடுவதில் மின்தமிழ்-தமிழ் மரபு அறக்கட்டளை மகிழ்கின்றது.- சுபாஷிணி
வணக்கம்.ஸ்ரீ சங்கரர் பாரத பூமி முழுவதையும் மூன்று முறை வலம் வந்து நேபாளம் முதல் திருச்செந்தூர் ஈறாக உள்ள பல புண்ணிய திருத்தலங்களைத் தரிசித்து ஆங்காங்கே ஸ்ரீ சக்ர ப்ரதிஷ்டைகளையும் செய்தருளினார். பத்ரிகாச்ரமத்திலும், துவாரகையிலும், ஜகந்நாதத்திலும், சிருங்ககிரியிலும் மடங்களை ஸ்தாபனம் செய்த பின்னர், அவர் காஞ்சீபுரத்தை அடைந்து, சர்வக்ஞ பீடமேறி, அங்கு காமகோடி பீடித்தையும் ஸ்தாபனம் செய்து அருளியுள்ளார்.
சில அரிய படங்களுடன் ஸ்ரீ ஸு.ஸாம்பமூர்த்தி சாஸ்திரி அவர்கள் தொகுத்து“ஸ்ரீ ஜகத்குரு திவ்ய சரித்திரம்“ என்ற தலைப்பில் நூல் ஒன்று சென்னை பி.ஜி.பால் அண்டு கம்பெனியினரால் மார்ச்சு 1957ஆம் ஆண்டு வெளியிடப்பெற்றுள்ளது.
இந்த பணியை விட புத்தாண்டை துவக்க உகந்த பணி வேறு யாதுமில்லை.யாவருக்கும் சுபிக்ஷம் என்ற நன்நிமித்தமிது.இன்னம்பூரான்
மின் தமிழ் வாசகர்களுக்காகக் காரைக்குடி டாக்டர்.காளைராசன் அவர்கள் ஸ்ரீ ஜகத்குரு திவ்ய சரித்திரம் என்ற நூலினை மின்னாக்கம் செய்து வெளியிட உள்ளார்கள். இந்த நூலினை இங்கே வெளியிடுவதில் மின்தமிழ்-தமிழ் மரபு அறக்கட்டளை மகிழ்கின்றது.- சுபாஷிணி
உங்கள் கைவண்ணம் அசத்தல் தமிழ்த்தேனீ அவர்களே.:)))
நானும் நூலைப் படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
ஒரு கொடுப்பினை இருந்தால்தான் இவரைப் போன்ற மஹான்களின் பதிவுகளை நாம் எடுத்து பதிய முடியும்காளைராசன் கொடுத்து வைத்தவர்வளர்க அவர் தொண்டுபெரியவர் திரு உருவப் படத்தை பெயின்ட் ஆப்ஷனில் போட்டு ஏதோ என்னால் முடிந்த அளவு சரி செய்திருக்கிறேன்.அந்தப் படத்தையும் இணைக்கிறேன்.ஒரு பக்கத்தை நேர் செய்தும் இணைக்கிறேன்அன்புடன்தமிழ்த்தேனீ
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
ஆஹா, அசத்தல் அருமையாக இருக்கிறது பெரியவரின் படம். வாழ்த்துகள்.
2013/1/1 Tthamizth Tthenee <rkc...@gmail.com>
ஒரு கொடுப்பினை இருந்தால்தான் இவரைப் போன்ற மஹான்களின் பதிவுகளை நாம் எடுத்து பதிய முடியும்காளைராசன் கொடுத்து வைத்தவர்
வளர்க அவர் தொண்டு
அன்புச் சகோதரருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களும், நன்றியும்.
உ
ஸமர்ப்பணம்
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு
ஸ்ரீ சந்திர சேகரேந்திர ஸரஸ்வதி
ஸ்வாமிகளின்
பிரதம சிஷ்யர்களாக விளங்கும்
ஸ்ரீமத்
பரமஹம்ஸ பரிவ்ராஜகாசார்யவரய
ஸ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளுக்கு
இந்நூல்
பக்தியுடன் ஸமர்ப்பணம் செய்யப்படுகிறது.
முகவுரை
புண்ணிய பூமியான நம் பரதகண்டத்தில் தருமத்தை நிலை நாட்டுவதற்காகப் பகவானுடைய திரு அவதாரங்கள் பற்பல காலங்களில் நிகழ்ந்ததுண்டு: அவைகளில், திரேதாயுகத்தில் நேர்ந்த ஸ்ரீ ராமாவதாரமும், துவாபர யுகத்தில் நிகழ்ந்த ஸ்ரீ கிருஷ்ணாவதாரமும் எல்லோரும் அறிந்தனவே. இவ்வகையில், இக்கலியுகத்திலும் சில அவதாரங்கள் நிகழ்ந்துள்ளன. அவைகளில் ஸ்ரீ ஆதி சங்கரரது அவதாரம் ஒரு தனிச் சிறப்பு வாய்ந்ததாகும். முன் யுகங்களில் வந்த மேற்கண்ட அவதார புருஷர்கள் மன்னர்களின் வழியில் தோன்றி அதர்மத்தை எதிர்த்துத் தர்ம யுத்தம் புரிந்து சத்தியத்தை நிலைநாட்டினார்கள். ஆனால், ஸ்ரீ பரமேசுவரரின் அவதாரமெனக் கருதப்படும் ஸ்ரீ ஆதி சங்கரரோ, சிவகுரு என்னும் ஓர் அந்தணருக்கும் ஆரியாம்பிகை என்னும் அவர் பத்தினிக்கும் திருமகனாகக் கேரளநாட்டில் காலடி என்னும் தலத்தில் அவதாரம் செய்தார். இந்த மகான் மிக இளம் பருவத்திலேயே துறவுபூண்டு, தம் உபதேசங்களினாலும், பிரசாரங்களினாலும் பாரத பூமியில் தருமத்தை நிலைக்கச் செய்தார். அவர் இவ்வுலகில் வாழ்ந்த காலம் முப்பத்திரண்டு ஆண்டுகளேயாகும்.
ஸ்ரீசங்கரரது அவதார காலம் கலியுகம் 2593 (கி.மு.509) நந்தன வருஷமெனப் பல மேதாவிகள் ஆராய்ச்சிகள் மூலம் முடிவு செய்துள்ளார்கள். இக்கருத்தில் வேறுபாடுகள் பல இருந்தாலும், நம் பெரியோர்கள் சிறந்த ஆராய்ச்சியின்பின் கொண்ட இந்த முடிவே நமக்கும் ஒத்ததாகும். மேலும், ஸ்ரீ ஆதிசங்கரர் ஸ்தாபனம் செய்த மடங்கள் பாரதநாட்டில் எல்லாப் பாகங்களிலும் இன்றும் பிரகாசிக்கின்றன. அந்த மடங்களின் குருபரம்பரைகளைப் பரிசீலனை செய்யும்போதும் ஆதி சங்கரரது காலம் இக் கருத்தையே வலியுறுத்துவதாகும்.
சங்கரர்
பாரத பூமி முழுவதையும் மூன்றுமுறை வலம் வந்து தம் உபதேசங்களால் மக்களது அஞ்ஞான
இருளைப் போக்கி, வேத தர்மங்களுக்கு உட்பட்டிருந்தும், கொள்கைகளிலும் முறைகளிலும்
மாறுபட்டிருந்த சைவம், வைஷ்ணவம், ஸெளரம், சாக்தம், காணபதம், கௌமாரம் முதலான பல
மதங்களையும் சீர்திருத்தம் செய்தார்.
அதனால், அவர் ஷண்மத ஸ்தாபனாசாரியார் என்னும்
பெயரையும் பெற்றார். அவர் நேபாளம் முதல்
திருச்செந்தூர் ஈறாகவுள்ள பல புண்ணிய ஸ்தலங்களையும் தரிசித்து, ஆங்காங்கே ஸ்ரீ
சக்ர ப்ரதிஷ்டைகளையும் செய்தருளினார்.
பத்ரிகாச்ரமத்திலும்,
தொடரும்....
--
//ஆங்கிலப்புத்தாண்டு தினத்தன்று//
ஆங்கிலப் புத்தாண்டு என ஒன்று இல்லை. கிரிகோரி நாட்காட்டிப் புத்தாண்டு
அல்லது கிரிகோரியப் புத்தாண்டு என்பதுதான் மெய். :-o)
On Jan 1, 3:31 am, கி.காளைராசன் <kalairaja...@gmail.com> wrote:
> வணக்கம்.
> இந்த இனிய ஆங்கிலப்புத்தாண்டு தினத்தன்று நல்லதொரு பதிவினை வழங்குமாறு என்னை
> நன்னெறிப்படுத்திய அம்மையார் சுபாஷினிடெர்மல் அவர்களுக்கு நன்றி.
>
> 2013/1/1 Innamburan Innamburan <innambu...@gmail.com>
இணைப்பைப் படிக்கமுடியவில்லை.
தாங்கள் கீதா சில நேரம் செய்வது போல் plain text ஆக ஒரு மின்னஞ்சல் போல்
வழங்குங்கள். இணைப்பைத் தவிர்க்கவும். கட்டாயம் formated text தேவையெனில்
அம்முறையில் பதியவும் (இம்முறையில் படங்கள், வண்ணங்கள் இணைக்கமுடியும்).
plain text ஆக இருந்தால் அப்படியே மரபு விக்கியில் போடவும் முடியும்.
நா.கண்ணன்
2013/1/2 கி.காளைராசன் <kalair...@gmail.com>:
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil
--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/
ஆங்கிலப் புத்தாண்டு என ஒன்று இல்லை. கிரிகோரி நாட்காட்டிப் புத்தாண்டு
அல்லது கிரிகோரியப் புத்தாண்டு என்பதுதான் மெய். :-o)
On Jan 2, 6:33 pm, கி.காளைராசன் <kalairaja...@gmail.com> wrote:
> வணக்கம் ஐயா,
>
> 2013/1/2 பழமைபேசி <pazamaip...@gmail.com>
அன்பின் காளை:
தாங்கள் கீதா சில நேரம் செய்வது போல் plain text ஆக ஒரு மின்னஞ்சல் போல்
வழங்குங்கள். இணைப்பைத் தவிர்க்கவும்.
பெரியவர் சந்திரசேகரசுவாமிகள் பற்றிய நூல் முயற்சிக்கு நண்பர் காளைராசனுக்கு வாழ்த்துக்கள்.
பெரியவர் ஜெயேந்திரருக்குக் கொடுக்கப்பட்டுள்ள பரிவ்ராஜகாசார்யவரய என்ற அடைமொழியின் பொருள் அறிய விருப்பம்.
உ
ஸமர்ப்பணம்
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு
ஸ்ரீ சந்திர சேகரேந்திர ஸரஸ்வதி
ஸ்வாமிகளின்
பிரதம சிஷ்யர்களாக விளங்கும்
ஸ்ரீமத்
பரமஹம்ஸ பரிவ்ராஜகாசார்யவரய
ஸ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளுக்கு
இந்நூல்
பக்தியுடன் ஸமர்ப்பணம் செய்யப்படுகிறது.
முகவுரை
புண்ணிய பூமியான நம் பரதகண்டத்தில் தருமத்தை நிலை நாட்டுவதற்காகப் பகவானுடைய திரு அவதாரங்கள் பற்பல காலங்களில் நிகழ்ந்ததுண்டு: அவைகளில், திரேதாயுகத்தில் நேர்ந்த ஸ்ரீ ராமாவதாரமும், துவாபர யுகத்தில் நிகழ்ந்த ஸ்ரீ கிருஷ்ணாவதாரமும் எல்லோரும் அறிந்தனவே. இவ்வகையில், இக்கலியுகத்திலும் சில அவதாரங்கள் நிகழ்ந்துள்ளன. அவைகளில் ஸ்ரீ ஆதி சங்கரரது அவதாரம் ஒரு தனிச் சிறப்பு வாய்ந்ததாகும். முன் யுகங்களில் வந்த மேற்கண்ட அவதார புருஷர்கள் மன்னர்களின் வழியில் தோன்றி அதர்மத்தை எதிர்த்துத் தர்ம யுத்தம் புரிந்து சத்தியத்தை நிலைநாட்டினார்கள். ஆனால், ஸ்ரீ பரமேசுவரரின் அவதாரமெனக் கருதப்படும் ஸ்ரீ ஆதி சங்கரரோ, சிவகுரு என்னும் ஓர் அந்தணருக்கும் ஆரியாம்பிகை என்னும் அவர் பத்தினிக்கும் திருமகனாகக் கேரளநாட்டில் காலடி என்னும் தலத்தில் அவதாரம் செய்தார். இந்த மகான் மிக இளம் பருவத்திலேயே துறவுபூண்டு, தம் உபதேசங்களினாலும், பிரசாரங்களினாலும் பாரத பூமியில் தருமத்தை நிலைக்கச் செய்தார். அவர் இவ்வுலகில் வாழ்ந்த காலம் முப்பத்திரண்டு ஆண்டுகளேயாகும்.
ஸ்ரீசங்கரரது அவதார காலம் கலியுகம் 2593 (கி.மு.509) நந்தன வருஷமெனப் பல மேதாவிகள் ஆராய்ச்சிகள் மூலம் முடிவு செய்துள்ளார்கள். இக்கருத்தில் வேறுபாடுகள் பல இருந்தாலும், நம் பெரியோர்கள் சிறந்த ஆராய்ச்சியின்பின் கொண்ட இந்த முடிவே நமக்கும் ஒத்ததாகும். மேலும், ஸ்ரீ ஆதிசங்கரர் ஸ்தாபனம் செய்த மடங்கள் பாரதநாட்டில் எல்லாப் பாகங்களிலும் இன்றும் பிரகாசிக்கின்றன. அந்த மடங்களின் குருபரம்பரைகளைப் பரிசீலனை செய்யும்போதும் ஆதி சங்கரரது காலம் இக் கருத்தையே வலியுறுத்துவதாகும்.
சங்கரர் பாரத பூமி முழுவதையும் மூன்றுமுறை வலம் வந்து தம் உபதேசங்களால் மக்களது அஞ்ஞான இருளைப் போக்கி, வேத தர்மங்களுக்கு உட்பட்டிருந்தும், கொள்கைகளிலும் முறைகளிலும் மாறுபட்டிருந்த சைவம், வைஷ்ணவம், ஸெளரம், சாக்தம், காணபதம், கௌமாரம் முதலான பல மதங்களையும் சீர்திருத்தம் செய்தார். அதனால், அவர் ஷண்மத ஸ்தாபனாசாரியார் என்னும் பெயரையும் பெற்றார். அவர் நேபாளம் முதல் திருச்செந்தூர் ஈறாகவுள்ள பல புண்ணிய ஸ்தலங்களையும் தரிசித்து, ஆங்காங்கே ஸ்ரீ சக்ர ப்ரதிஷ்டைகளையும் செய்தருளினார். பத்ரிகாச்ரமத்திலும்,
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
பக்கம் xiiiஸ்வாமிகள் ஸ்ரீ ஆதி சங்கரரின் அவதாரமெனவே கருதப்பட்டு வருவதை உலகம் அறியும். அவர்களுடைய வரலாற்றையும், சநாதன தர்மத்திற்குஅவர்கள் ஆற்றிவரும் பெரும் பணிகளையும் சிறிதளவாகவேனும் எடுத்துக்கூறும் நோக்கத்துடன் இப்புத்தகம் தொகுக்கப்பட்டுள்ளது. அம்மகான் வைதிக மார்க்கத்தையும், வேதாந்த தத்துவத்தையும் பாதுகாக்கச் செய்துவரும் அரிய முயற்சிகளையெல்லாம் இச்சிறு புத்தகத்தில் எழுதிவிடுவதென்பது இயலாத காரியமாகும். ஆனால், அத்துறையில் சிறிய தொரு முயற்சியே யானினும் இதனை உலகம் ஏற்குமென்றே எண்ணுகின்றேன். ஒருபுறம் மடத்தின் அன்றாட நிர்வாகம், மற்றொருபுறம் தம்மை நாடி வரும் சிஷ்யர்களை உய்விக்கச் செய்வதில் அவர்கள் காட்டும் ஆர்வம், தினந்தோறும் பலமணி நேரம் அவர்கள் செய்து வரும் ஸ்ரீசந்திமௌளீச்வர பூஜை, இவற்றிற்கிடையே அவர்கள் தாம் மேற்கொண்ட துறவறத்தைச் சாஸ்திரவிதிகளுக்குச் சிறிதும் மாறுபடாமல் காத்துவரும் சிறப்பு, ஆகிய இவை போன்றவற்றை அவர்களைத் தரிசித்தவர்களே அறிவர். இவற்றோடு அவர்கள் தம் ஆசிரமத்திற்குரிய கடுந் தவத்தினாலும் உபவாசத்தினாலும் தமது சரீரத்தை இளைக்கச் செய்து, பசி, தூக்கம் இவைகளை முற்றிலும் வென்று, ஒவ்வொரு நாளின் முழு நேரத்தையும் சமூகம் சீர்திருத்த வழிகளென்ன என்பதைப்பற்றி ஆலோசித்து, அத்துறைகளுக்கு ஏற்றபடி அவ்வப்போது உபதேசித்தும், ஆற்றியும் வரும் அரும் பணிகளை உலகம் நன்கு அறியும்.1907-வது ஆண்டில் ஸ்வாமிகள், தமது 13-ஆவது பிராயத்தில் பீடத்தி லமர்ந்தார்கள். அக்காலம் முதல் அவர்கள் பல வருடங்கள் தொடர்ந்து யாத்திரைகளில் அமர்ந்து ஆங்காங்குள்ள மக்களுக்குத் தரிசனமளித்தும், அவர்களைக் கருணையுடன் அனுக்கிரகித்தும் வருகிறார்கள். அவர்கள் அவ்வப்போது மேற்கொண்டுள்ள விஜய யாத்திரைகளைப் பற்றிய குறிப்புக்களின் சில பகுதிகள் இப்பதிகத்தில் சேர்க்கப் பெற்றுள்ளன. ஸ்வாமிகள் விஜயம் செய்த ஸ்தலங்களின் விசேஷங்களும் ஆங்காங்கே சுருக்கமாகத் தரப்பட்டுள்ளன. அவர்களின் உபதேச மொழிகள் சிலவும் இதில் காணப்படும். மகாபண்டிதர்களும் வியக்கத்தக்கவாறு சாஸ்திர ஞானம் படைத்த நமது ஸ்வாமிகளின் அருள்மொழிகள், பண்டிதர் பாமரர் யாவருக்கும் பயன் தரக்கூடியனவாயிருக்கும். இவ்வுபதேசங்களில் அவர்களின் மேதை, கருணை, இவற்றின் சிகரங்களை நாம் காணலாம். ஸ்வாமிகளின் அபாரமான ஞாபக சக்தியையும், சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் முதலான பாஷைகளை அவர்கள் எளிதில் கையாளும் வன்மையைபக்கம் xiv... தொடரும்......
உபமன்யூ வாஸிஷ்ட கோத்திரத்தைச் சேர்ந்த நாகேச்வர சாஸ்திரிகள் ரிக் வேதத்தை லக்ஷணத்துடன் அத்தியயனம் செய்து, தர்ம, சாஸ்திரங்களிலும், பிரயோகங்களிலும் நல்ல தேர்ச்சி பெற்று விளங்கினார்கள். கும்பகோணத்திலும், திருவையாற்றிலும் பல குடும்பங்கள் அவரைத் தம் ஆசார்ய ஸ்தானத்தில் அமர்த்தி மிகவும் மதிப்புடன் ஆதரித்து வந்தன. அக் குடும்பங்களில் கும்ப கோணத்தில் நம் ஸ்வாமிகளின் பாட்டனார் கணபதி சாஸ்திரிகளுடைய குடும்பமும் ஒன்றாகும். நாகேச்வர சாஸ்திரிகள் ஒரு...
------------------(• 1) சரித்திரப் பிரசித்தி பெற்ற இவரது வரலாறு அனந்தப்பூர் அரசாங்கக் கலாசாலையில் ஆங்கிலப் பேராசிரியராயிருந்த என்.கே. வெங்கடேசன் பந்துலுவால் ஆங்கிலத்தில் , சென்ற 1933-வது வருடத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மைசூரைச் சார்ந்த சாமராஜநகர் வித்வான் வேங்கடரமண சாஸ்திரி என்பவர் “தமிழ் நாட்டின் கர்னாடக மந்திரி“ என்னும் பெயருடன் இவரது வரலாற்றைக் கன்னடபாக்ஷையில் வெளியிட்டுள்ளார்.--------------------------------------
உ
ஸமர்ப்பணம்
அன்பன்கி.காளைராசன்
--
அன்பன்கி.காளைராசன்
--
ஆங்காங்கே காணப்படும் எழுத்துப் பிழைகளைக் கவனத்தில் கொள்ளும்படி வேண்டுகிறேன். தவறாக நினைக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன்,
உ
ஸமர்ப்பணம்
கும்பகோணம் நகரில் நேடிவ் ஹைஸ்கூல் என்னும் பெயருடன் விளங்குகிறது. அங்கு சிலகாலம் வேலை பார்த்த பின்னர், சாஸ்திரிகள் திருவாரூருக்கடுத்த காவாலகுடி என்ற கிராமதித்தில்= கிராமத்தில் பிரபல மிராசுதாராக இருந்த தியாகராஜ முதலியாருக்குக் கல்விப் பயிற்சி அளிப்பதற்காக நியமனம் செய்யப்பட்டார். சில வருடங்கள் அவர் அங்கு வேலையில் அமர்ந்திருந்து, பின்னர் சர்க்கார் கல்வி இலாகாவில், முதலில் ஓர் உபாத்தியாயராகவும், பிறகு சூபர்வைசராகவும் அமர்ந்து தென்னர்க்காடு = தென்னாற்காடு ஜில்லாவில் விருத்தாசலம், சிதம்பரம், பரங்கிப் பேட்டை, விழுப்புரம், திண்டிவனம், விக்கிரவாண்டி மஞ்சகுப்பம் முதலான பல ஊர்களில் 30 வருடங்களுக்கு மேல் உத்தியோகம் வகித்துவந்தார். சுப்பிரமண்ய சாதிரிகள் நல்ல கலா ரசிகர். அந்நாளில் சங்கீதத்தில் மிகச் சிறப்புடன் விளங்கிய மகாவித்வான் மகா வைத்யநாத ஐயரின் கச்சேரிகளைக் கேட்பதில் சாஸ்திரியாருக்கு ஆவல் அதிகம் உண்டு. அந்த மகா வித்வானின் கச்சேரியைக் கேட்ட பெருமையினால் அவருக்குப் பிற்கால வித்வான்களின் கச்சேரிகளைக் கேட்பதில் அதிக ஆர்வமும் உண்டாகவில்லை. அவர் தாமே சுத்த கர்னாடக பாணியில் நன்றாகப் பாடும் வன்மையும் பெற்றிருந்தார்.
அன்னை மகாலக்ஷ்மி அம்மாள்
தஞ்சையை அரசாண்ட முதல் நாயக்க மன்னராகிய சேவப்ப நாயக்கரிடம் அமைச்சராக அமைந்து நாட்டின் நிர்வாகத்தைத் திறம்பட நடத்திவந்த ராஜா கோவிந்த தீக்ஷிதரது மரபே நம் ஸ்வாமிகளின் தாய்வழி மரபாகும். கோவிந்த தீக்ஷிதர் மகா வித்வானாக விளங்கி வேள்விகள் பல நடத்தி உள்ளார். மேலும் இவர் தம் காலத்தில் ஐயன் என்னும் சிறப்புப் பெயரையும் பெற்று விளங்கினார். இன்று, ஐயன் வாய்க்கால், ஐயன்குளம், ஐயன் தெரு, ஐயன்கடை எனச் சோழ நாட்டின் பல பாகங்களிலும் விளங்கி வருவனவெல்லாம் இவர் பெயரால் தோன்றியுள்ளவைகளாகும். சோழநாட்டில் காவிரியன்=யின் இரு கரைகளிலும் பல தலங்களில் உள்ள கருங்கல் படிக்கட்டுகளையும், மண்டபங்களையும் அமைத்த பெருமை இந்தக் கோவிந்த தீக்ஷிதரைச் சார்ந்ததாகும். மேலும், சோழ நாட்டிலும் திருவண்ணாமலையிலும் இவர் ஆலயத் திருப்பணிகள் பல செய்துள்ளார், பல....
-----------------------------------.பக்கம் 6 ....இடங்களில் குளங்களையும், நீர்ப்பாசனக் கால்வாய்களையும் இவர் வெட்டியுள்ளார்(• 1).கோவிந்த தீக்ஷிதர் தம் ஓய்வு நாட்களைக் கும்பகோணத்திற்கடுத்த பட்டீசுவரம் என்னும் பாடல் பெற்ற தலத்தில் கழித்து வந்தார். அவருடையதும், அவரது மனைவியாரதுமான முழு உருவக் கற்சிலைகள் அவ்வூர்ச் சிவாலயத்தின் உட்புறத்தில் காணப்பெறுகின்றன. இந்தத் தீக்ஷிதர் பரம்பரையிலே வந்த மகாலக்ஷ்மி அம்மையே நம் ஸ்வாமிகளை உலகுக்கு அளித்த பாக்கியவதியாவார்.திருவையாற்றிற்குக் கிழக்கே 4 மைல் தூரத்தில், காவிரியின் வடகரையிலமைந்துள்ள ஈச்சங்குடி என்னும் அழகிய கிராமத்தில், மகாலக்ஷ்மி அம்மையார், நாகேச்வர சாஸ்திரி என்னும் அந்தணோத்தமருக்கும் அவருடைய தரும பத்னி மீனாட்சி அம்மையாருக்கும் புதல்வியாகத் தோன்றினார். தஞ்சை ஜில்லாவில் ஈச்சங்குடி என்னும் கிராமம் பல மகா வித்வான்களையும், மேதாவிகளையும் நாட்டிறகு அளித்த பெருமையைப் பெற்ற அக்ரஹாரங்களில் ஒன்றாகும். இந்த அக்ரஹாரத்தில் யாவரும் வேதம் பயின்று, நித்ய அக்னிஹோத்திரிகளாக அக்காலத்தில் விளங்கி வந்தனர்.உபமன்யூ வாஸிஷ்ட கோத்திரத்தைச் சேர்ந்த நாகேச்வர சாஸ்திரிகள் ரிக் வேதத்தை லக்ஷணத்துடன் அத்தியயனம் செய்து, தர்ம, சாஸ்திரங்களிலும், பிரயோகங்களிலும் நல்ல தேர்ச்சி பெற்று விளங்கினார்கள். கும்பகோணத்திலும், திருவையாற்றிலும் பல குடும்பங்கள் அவரைத் தம் ஆசார்ய ஸ்தானத்தில் அமர்த்தி மிகவும் மதிப்புடன் ஆதரித்து வந்தன. அக் குடும்பங்களில் கும்ப கோணத்தில் நம் ஸ்வாமிகளின் பாட்டனார் கணபதி சாஸ்திரிகளுடைய குடும்பமும் ஒன்றாகும். நாகேச்வர சாஸ்திரிகள் ஒரு------------------(• 1) சரித்திரப் பிரசித்தி பெற்ற இவரது வரலாறு அனந்தப்பூர் அரசாங்கக் கலாசாலையில் ஆங்கிலப் பேராசிரியராயிருந்த என்.கே. வெங்கடேசன் பந்துலுவால் ஆங்கிலத்தில் , சென்ற 1933-வது வருடத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மைசூரைச் சார்ந்த சாமராஜநகர் வித்வான் வேங்கடரமண சாஸ்திரி என்பவர் “தமிழ் நாட்டின் கர்னாடக மந்திரி“ என்னும் பெயருடன் இவரது வரலாற்றைக் கன்னடபாக்ஷையில் வெளியிட்டுள்ளார்.--------------------------------------பக்கம் 7..... தொடரும்.....
--
உ
ஸமர்ப்பணம்
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு
ஸ்ரீ சந்திர சேகரேந்திர ஸரஸ்வதி
ஸ்வாமிகளின்
பிரதம சிஷ்யர்களாக விளங்கும்
ஸ்ரீமத்
பரமஹம்ஸ பரிவ்ராஜகாசார்யவரய
ஸ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளுக்கு
இந்நூல்
பக்தியுடன் ஸமர்ப்பணம் செய்யப்படுகிறது.
பக்கம் xiமுகவுரை
புண்ணிய பூமியான நம் பரதகண்டத்தில் தருமத்தை நிலை நாட்டுவதற்காகப் பகவானுடைய திரு அவதாரங்கள் பற்பல காலங்களில் நிகழ்ந்ததுண்டு: அவைகளில், திரேதாயுகத்தில் நேர்ந்த ஸ்ரீ ராமாவதாரமும், துவாபர யுகத்தில் நிகழ்ந்த ஸ்ரீ கிருஷ்ணாவதாரமும் எல்லோரும் அறிந்தனவே. இவ்வகையில், இக்கலியுகத்திலும் சில அவதாரங்கள் நிகழ்ந்துள்ளன. அவைகளில் ஸ்ரீ ஆதி சங்கரரது அவதாரம் ஒரு தனிச் சிறப்பு வாய்ந்ததாகும். முன் யுகங்களில் வந்த மேற்கண்ட அவதார புருஷர்கள் மன்னர்களின் வழியில் தோன்றி அதர்மத்தை எதிர்த்துத் தர்ம யுத்தம் புரிந்து சத்தியத்தை நிலைநாட்டினார்கள். ஆனால், ஸ்ரீ பரமேசுவரரின் அவதாரமெனக் கருதப்படும் ஸ்ரீ ஆதி சங்கரரோ, சிவகுரு என்னும் ஓர் அந்தணருக்கும் ஆரியாம்பிகை என்னும் அவர் பத்தினிக்கும் திருமகனாகக் கேரளநாட்டில் காலடி என்னும் தலத்தில் அவதாரம் செய்தார். இந்த மகான் மிக இளம் பருவத்திலேயே துறவுபூண்டு, தம் உபதேசங்களினாலும், பிரசாரங்களினாலும் பாரத பூமியில் தருமத்தை நிலைக்கச் செய்தார். அவர் இவ்வுலகில் வாழ்ந்த காலம் முப்பத்திரண்டு ஆண்டுகளேயாகும்.
ஸ்ரீசங்கரரது அவதார காலம் கலியுகம் 2593 (கி.மு.509) நந்தன வருஷமெனப் பல மேதாவிகள் ஆராய்ச்சிகள் மூலம் முடிவு செய்துள்ளார்கள். இக்கருத்தில் வேறுபாடுகள் பல இருந்தாலும், நம் பெரியோர்கள் சிறந்த ஆராய்ச்சியின்பின் கொண்ட இந்த முடிவே நமக்கும் ஒத்ததாகும். மேலும், ஸ்ரீ ஆதிசங்கரர் ஸ்தாபனம் செய்த மடங்கள் பாரதநாட்டில் எல்லாப் பாகங்களிலும் இன்றும் பிரகாசிக்கின்றன. அந்த மடங்களின் குருபரம்பரைகளைப் பரிசீலனை செய்யும்போதும் ஆதி சங்கரரது காலம் இக் கருத்தையே வலியுறுத்துவதாகும்.
சங்கரர் பாரத பூமி முழுவதையும் மூன்றுமுறை வலம் வந்து தம் உபதேசங்களால் மக்களது அஞ்ஞான இருளைப் போக்கி, வேத தர்மங்களுக்கு உட்பட்டிருந்தும், கொள்கைகளிலும் முறைகளிலும் மாறுபட்டிருந்த சைவம், வைஷ்ணவம், ஸெளரம், சாக்தம், காணபதம், கௌமாரம் முதலான பல மதங்களையும் சீர்திருத்தம் செய்தார். அதனால், அவர் ஷண்மத ஸ்தாபனாசாரியார் என்னும் பெயரையும் பெற்றார். அவர் நேபாளம் முதல் திருச்செந்தூர் ஈறாகவுள்ள பல புண்ணிய ஸ்தலங்களையும் தரிசித்து, ஆங்காங்கே ஸ்ரீ சக்ர ப்ரதிஷ்டைகளையும் செய்தருளினார். பத்ரிகாச்ரமத்திலும்,
பக்கம் xii
(இமாசலத்தில்) துவாரகையிலும், ஜகந்நாதத்திலும், சிருங்ககிரியிலும் மடங்களை ஸ்தாபனம் செய்த பின்னர், அவர் காஞ்சீபுரத்தை அடைந்து, சர்வக்ஞ பீடமேறி, அங்கு காமகோடி பீடத்தையும் ஸ்தாபனம் செய்து, அவ்விடத்திலேயே நிர்விகல்ப சமாதி அடைந்தார்களெனச் சிவ ரகஸ்யம். மார்க்கண்டேய சம்ஹிதை, ஆனந்தகிரி சங்கர விஜயம். முதலிய பழமையான நூல்களிலிருந்தும், சமீப காலத்தில் ராஜசூடாமணிமகி என்பவரால் இயற்றி =றப்பட்ட சங்கராப்யுதயம், இராமபத்ர தீக்ஷிதர் இயற்றிய பதஞ்சலி விஜயம் முதலான காவியங்களிலிருந்தும் தெளிவாகின்றது. வங்காள பாஷையில் 1892-வது ஆண்டில் வெளியிட்ப்பட்ட வங்காள சகல கலா நிகண்டுவின் (The Bengali Encyclopedia) மூன்றாவது பாகத்தில், காஞ்சி என்ற தலைப்பின்கீழ், ‘அது ஸப்த புரிகளில் ஒன்று; ஓர் மகாபீட ஸ்தானம்; மேலும் அது ஸ்ரீ சங்கராசார்ய ஸ்வாமிகளது சமாதி ஸ்தானம்; அந்நகரத்திலுள்ள ஸ்ரீ காமாக்ஷியம்மையின் ஆலயத்தில் பூர்ணபுருஷாகிருதியாக ஸ்ரீ ஆதி சங்கரரது சிலாவிக்ரகம் அமைந்திருக்கிறது' என்று கூறப்பட்டுள்ளது.மேலும் பெரிய காஞ்சீபுரத்திலுள்ள ஸ்ரீ சங்கரமடத்தில் ஸ்ரீ ஆதிசங்கராசாரியரின் பிரதம சீடரான ஸ்ரீ ஸுரேச்வரருக்கு ஆலயமும் பிம்பமும் அமைந்த=துள்ளன. ஸுரேச்வரரது பூர்வஆசிரமப் பெயரான மண்டனமிச்ரரின் பெயரால் காஞ்சியில் அக்ரகாரம் ஒன்றும் இருந்துவருவதை நாம் இன்றும் காணலாம். இன்னும் காஞ்சியில் வரதராஜர், ஏகாம்பரர், காமாக்ஷி முதலான தேவாலயங்களிலெல்லாம் ஸ்ரீ சங்கரரின் பிம்பங்கள் காணப்படுவதுடன், காஞ்சியை அடுத்த திருவொற்றியூர் முதலான தலங்களில் உள்ள வேறு ஆலயங்களிலும் அவை புராதனமாகவே ஸ்தாபனம் செய்யப்பட்டுள்ளன. இக்காரணங்களினால் காஞ்சி நகரத்திற்கும் ஸ்ரீ ஆதிசங்கரருக்கும் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டிருந்தது என்பதை நாம் உணரலாம்.
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தில் இதுவரை 68 ஆசாரியர்கள் எழுந்தருளியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. அவர்களில் பலர் பெரிய தவசிகள்; பலர் சிறந்த கவிஞர்கள்; பலர் தலைசிறந்த யோகிகள்; பலர் சாஸ்திரங்கள் பல கற்றவர்கள்; பலர் பக்திமார்க்கத்தை உலகிற் பரப்பியவர்கள்.இப்பொழுது ஸ்ரீ காமகோடி பீடத்தில் 68ஆவது ஆசார்ய ஸ்வாமிகளாகப் பிரகாசிக்கும் ஸ்ரீ சந்திர சேகரேந்திர ஸரஸ்வதி
பக்கம் xiiiஸ்வாமிகள் ஸ்ரீ ஆதி சங்கரரின் அவதாரமெனவே கருதப்பட்டு வருவதை உலகம் அறியும். அவர்களுடைய வரலாற்றையும், சநாதன தர்மத்திற்குஅவர்கள் ஆற்றிவரும் பெரும் பணிகளையும் சிறிதளவாகவேனும் எடுத்துக்கூறும் நோக்கத்துடன் இப்புத்தகம் தொகுக்கப்பட்டுள்ளது. அம்மகான் வைதிக மார்க்கத்தையும், வேதாந்த தத்துவத்தையும் பாதுகாக்கச் செய்துவரும் அரிய முயற்சிகளையெல்லாம் இச்சிறு புத்தகத்தில் எழுதிவிடுவதென்பது இயலாத காரியமாகும். ஆனால், அத்துறையில் சிறிய தொரு முயற்சியே யானினும் இதனை உலகம் ஏற்குமென்றே எண்ணுகின்றேன். ஒருபுறம் மடத்தின் அன்றாட நிர்வாகம், மற்றொருபுறம் தம்மை நாடி வரும் சிஷ்யர்களை உய்விக்கச் செய்வதில் அவர்கள் காட்டும் ஆர்வம், தினந்தோறும் பலமணி நேரம் அவர்கள் செய்து வரும் ஸ்ரீசந்திரமௌளீச்வர பூஜை, இவற்றிற்கிடையே அவர்கள் தாம் மேற்கொண்ட துறவறத்தைச் சாஸ்திரவிதிகளுக்குச் சிறிதும் மாறுபடாமல் காத்துவரும் சிறப்பு, ஆகிய இவை போன்றவற்றை அவர்களைத் தரிசித்தவர்களே அறிவர். இவற்றோடு அவர்கள் தம் ஆசிரமத்திற்குரிய கடுந் தவத்தினாலும் உபவாசத்தினாலும் தமது சரீரத்தை இளைக்கச் செய்து, பசி, தூக்கம் இவைகளை முற்றிலும் வென்று, ஒவ்வொரு நாளின் முழு நேரத்தையும் சமூகம் சீர்திருத்த வழிகளென்ன என்பதைப்பற்றி ஆலோசித்து, அத்துறைகளுக்கு ஏற்றபடி அவ்வப்போது உபதேசித்தும், ஆற்றியும் வரும் அரும் பணிகளை உலகம் நன்கு அறியும்.1907-வது ஆண்டில் ஸ்வாமிகள், தமது 13-ஆவது பிராயத்தில் பீடத்தி லமர்ந்தார்கள். அக்காலம் முதல் அவர்கள் பல வருடங்கள் தொடர்ந்து யாத்திரைகளில் அமர்ந்து ஆங்காங்குள்ள மக்களுக்குத் தரிசனமளித்தும், அவர்களைக் கருணையுடன் அனுக்கிரகித்தும் வருகிறார்கள். அவர்கள் அவ்வப்போது மேற்கொண்டுள்ள விஜய யாத்திரைகளைப் பற்றிய குறிப்புக்களின் சில பகுதிகள் இப்பதிகத்தில் = இங்கே பதிகமா, புத்தகமா? சேர்க்கப் பெற்றுள்ளன. ஸ்வாமிகள் விஜயம் செய்த ஸ்தலங்களின் விசேஷங்களும் ஆங்காங்கே சுருக்கமாகத் தரப்பட்டுள்ளன. அவர்களின் உபதேச மொழிகள் சிலவும் இதில் காணப்படும். மகாபண்டிதர்களும் வியக்கத்தக்கவாறு சாஸ்திர ஞானம் படைத்த நமது ஸ்வாமிகளின் அருள்மொழிகள், பண்டிதர் பாமரர் யாவருக்கும் பயன் தரக்கூடியனவாயிருக்கும். இவ்வுபதேசங்களில் அவர்களின் மேதை, கருணை, இவற்றின் சிகரங்களை நாம் காணலாம். ஸ்வாமிகளின் அபாரமான ஞாபக சக்தியையும், சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் முதலான பாஷைகளை அவர்கள் எளிதில் கையாளும் வன்மையை
பக்கம் xivயும் கண்டு வியப்படையாதார் இலர். பாமரர்களும் அறியும் வண்ணம் அத்வைத சித்தாந்தத்திற்கு ஸ்வாமிகள் விளக்கம் கூறிவருவது தனிச் சிறப்பு வாய்ந்ததாகும்.
இந்நூலைத் தொகுக்கப் பல வெளியீடுகள் உதவியாக இருந்தன. ஸ்வாமிகளின் யாத்திரையின் தினசரிக் குறிப்புக்களும் பெரிதும் பெ=பயன்பட்டன. ஸ்வாமிகள் அவர்களின் யாத்திரைகள் சம்பந்தமாய், வா=வடமொழி, ஹிந்தி, தெலுங்கு முதலான பாஷைகளில் வெளிவந்துள்ள கட்டுரைகள் பலவற்றைத் தமிழில் மொழி பெயர்ப்பதில் புலமை வாய்ந்த பல அன்பர்கள் மனமார இப்பணியில் உதவியுள்ளார்கள். இத்துறையில் புதுக்கோட்டை மல்லாதி ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி சாஸ்திரிகளின் சேவை குறிப்பிடத் தக்கது. அவர்கள் யாவர்க்கும் அடியேனது நன்றி உரித்தாகும்.மேலும் அடியேன் பல வருடங்களாகச் சேகரித்துவைத்த நிகழ்ச்சிக் குறிப்புகளை ஓர் புத்தகவடிவமாக அமைப்பதில் எனக்கு அவ்வப்போது ஆலோசனைகள் பலகூறி, புத்தகம் முழுவதையும் பரிசீலனை செய்து ஆங்காங்கு பொருத்தமான தலைப்புகள் அமைத்தும், அச்சில் ஏறிய பொழுது பிழைகள் திருத்தியும் பேருதவிபுரிந்த சென்னைஇராசதானிக் கல்லூரியின் முன்னாள் தமிழ்ப் பேராசிரியர் ஸ்ரீ ஆர். விச்வநாத ஐயர், எம்.ஏ., அவர்களுக்கும், இப்புத்தகத்தை வெகு சீரிய முறையில் மிக விரைவில் அச்சிட்டுக் கொடுத்த சென்னை லிபர்ட்டி அச்சகத்தின் உரிமையாளர் ஸ்ரீ டி.ஆர்.ஸ்ரீநிவாஸாசாரியார் அவர்களுக்கும், இதைவெளியிடும் பணியை மிகுந்த ஆர்வத்துடன் ஏற்று மக்களுக்குப் பேருபகாரம் செய்த சென்னைப் பிரசுரகர்த்தர்கள் B.G.பால் அண்டு கம்பெனியின் நிர்வாகி ஸ்ரீ K. நீலகண்ட ஐயர், B.A. அவர்களுக்கும் எனது நன்றி உரியதாகும். இதை ஸ்வாமிகளின் பொன்விழா நினைவு மலராக வெளியிட அனுமதித்த அவ்விழாக் கமிட்டியாருக்கும் நான் என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன்.
இந்நூலைத் தொகுக்கும் காலத்தில் அயர்வு, மறதி முதலியவற்றால் பல அரிய சம்பவங்களும், ஸ்ரீ மடத்தின் தொண்டில் ஈடுபட்ட பல அன்பர்களின் பெயர்கள் முதலியனவும் விடப்பட்டிருக்கக்கூடும். நூலில் சில பிழைகளும் புகுந்திருக்கக் காரணமுண்டு. இவைபோன்ற எல்லாக் குறைகளையும் அன்பர் உலகம் க்ஷமிக்க வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன்.ஸு.ஸாம்பமூர்த்தி சாஸ்திரிசென்னை2 மார்ச்சு 1957.--------------------------------------------------------
ஸ்ரீ ஜகத்குரு திவ்ய சரித்திரம்
பக்கம் 1 மற்றும் 2 கிடைக்கப்பெறவில்லை.பக்கம் 3...இளமையும் கல்வியும்
...வாங்கி வைத்து விடவேண்டுமென்று எண்ணம் கொண்டார். 1850-வது வருடத்தில், அப்போழுது இருந்த ஆசாரிய ஸ்வாமிகள் கும்பகோணத்திலிருந்து திருவையாற்றிற்கு ஒரு முறை ஸ்வாமி தரிசனத்திற்குச் சென்றார்கள். பிறகு, அவர்கள் பங்காருகாமாக்ஷி அம்னையும் தரிசிக்க விரும்பித் தஞ்சைக்கும் விஜயமானார்கள். தஞ்சையில் கடைசியாக அரசாண்ட சிவாஜி மகாராஜா அவர்கள் ஸ்வாமிகளைத் தமது அரண்மனைக்கு அழைத்து, அவர்களுக்குரிய மரியாதைகளை யெல்லாம் செய்து, அவர்களுக்குக் கனகாபிஷேகமும் செய்தார். தங்க நாணயங்களால் அபிஷேகம் செய்வதையே கனகாபிஷேகம் என்பர். அன்று மன்னர் செய்த கனகாஷேகத்தில் ஐயாயிரம் தங்க வராகன் நாணயங்கள் இருந்தன. அந்த நாயணங்கள் யாவற்றையும் கணபதிசாஸ்திரிகள் மிகுந்த ஜாக்கிரதையுடன் சேகரித்துப் பத்திரப்படுத்தி வைத்தார். ஆனால், ஸ்வாமிகளோ மடத்தில் அதிகப் பொருளிருந்தால் அதைக் காப்பாற்றுவதில் மிகுந்த அக்கரை =கறை கொள்ளவேண்டி வருமென்றும், ஆத்ம விசாரத்திற்கு அது இடையூறாக இருக்குமென்றும், அதனால் அப்பொருள் முழுவதையும் வித்வான்களுக்கு அப்பொழுதே பகிர்ந்து கொடுத்து விடலாமென்றும் கருதினார்கள்.
ஆனால், கணபதி சாஸ்திரிகளின் உள்ளமோ அப்பணத்தைக் கொண்டு மடத்திற்கு நிலம் வாங்குவதில் ஈடுபட்டிருந்தது. இவ்விஷயத்தில் சாஸ்திரிகள் ஸ்வாமிகளது அநுமதியை ஒருவாறு பெற்றுப் பிறர் அறியாதவாறு அப்பொற்காசுகளுடன் குதிரை மீது அமர்ந்து கபிஸ்தலம் என்னும் ஊருக்கு வந்து சேர்ந்தார். கபிஸ்தலத்தில் இருந்த மூப்பனார் என்னும் பெரிய பிரமுகர் இவரை மிகுந்த மரியாதையுடன் வரவேற்று உபசரித்து இவரது எண்ணத்தையும் கேட்றிந்தார். அக்காலத்தில் கும்பகோணத்துக்குக் கிழக்கே உள்ள அணக்குடி என்ற ஊரிலிருந்த அணக்குடிப்பிள்ளை என்ற மிராசுதார் தம் நிலங்கள் சிலவற்றை விற்க எண்ணம் கொடிருந்ததாக மூப்பனார் கேள்வியுற்றிருந்தார். அந்த மிராசுதாரை அணக்குடிப் பிள்ளை என்று மரியாதைப் பெயருடனேயே குறிப்பிடுவது வழக்கம். மூப்பனார் சாஸ்திரிகளுக்குத் தகுந்த பந்தோபஸ்துக்களைச் செய்து அளித்து, தமது காரியஸ்தர் ஒருவருடன் அவரை அணக்குடிக்கு அனுப்பிவைத்தார். சாஸ்திரிகள் அணக்குடிக்குச் சென்று பிள்ளை அவர்களிடம்....-------------------------------------------------------------பக்கம் 4....தாம் கொண்டுவந்த நிதியைக் கொடுத்து, அதற்கு ஈடாக மடத்திற்கு எவ்வளவு நிலம் சாஸனம் செய்ய முடியுமோ அவ்வளவு நிலத்தைச் சாஸனம் செய்யும்படி கேட்டுக் கொண்டு, மேலும் அதிக நேரம் அங்கே தங்காமல் தஞ்சைக்குச் சென்றுவிட்டார். சாஸ்திரிகளது தூய எண்ணத்தையும், அவருக்கு மடத்திலிருந்த அபிமானத்தையும் கண்டு வியந்த பிள்ளை அவர்களும் சில மாதங்களில் கும்பகோணத்திற்கு இரண்டு மைல்கள் தூரத்திலுள்ள கருப்பூர் என்னும் கிராமத்தில் தமக்குச் சொந்தமாயிருந்த 40 வேலி பூமியை மடத்திற்குச் சாஸனம் செய்து கொடுத்தார். இன்று மடத்திற்குச் சொந்தமாயுள்ள கிராமங்களுள் அதிக வருமானம் தருவது இந்தக் கருப்பூர்க் கிராமமே ஆகும்.கணபதி சாஸ்திரிகளுக்குக் குமாரர்கள் மூவர். அவர்களுள் மூத்தவரான சுப்பிரமணிய சாஸ்திரிகளே நம் ஸ்வாமிகளின் தந்தையாவார். சுப்பிரமணிய சாஸ்திரிகள் பிறந்த வருடம் 1855. கணபதி சாஸ்திரிகள் தம் குமாரருக்கு உரிய காலத்தில் உபநயனம் செய்வித்து வேதப் பயிற்சியையும் அளித்தார். பின்னர் அவர், அவருக்கு ஆங்கிலக் கல்வியிலும் பயிற்சி செய்வித்தார். 1872-ஆவது ஆண்டில் சுப்பிரமணிய சாஸ்திரிகள் கும்பகோணம் கவர்ன்மெண்டு கலாசாலையில் மெட்ரிகுலேஷன் பரீக்ஷையில் முதன்மையாகத் தேறினார். கலாசாலையில் அவருக்கு இணைபிரியா நண்பராக அப்பொழுது பழகிவந்தவர், பிற்காலத்தில் பிரபல இஞ்சினீயராக விளங்கிய திருவிசைநல்லூர் ஸ்ரீநீலகண்ட சாஸ்திரிகளாவார். இருவரும் பிராயம் முதிர்ந்து ஓய்வு பெற்ற பிறகும் பல முறை சந்தித்து வருவது வழக்கம்.கலாசாலையை விட்ட பின்னர் சுப்பிரமணிய சாஸ்திரிகள் கும்பகோணத்தில் ராவ்பகதூர் எஸ்.அப்பு சாஸ்திரிகள், சுவாமி நாத ஐயர் முதலான பிரமுகர்கள் கும்பேச்வர ஸ்வாமி தெற்கு வீதியில் ஆரம்பித்திருந்த பள்ளியில் ஓர் உபாத்தியாயராக அமர்ந்தார். அக்காலத்தில் கும்பகோணம் கவர்ன்மெண்டு கலாசாலையின் தலைவராக இருந்த ஸ்ரீ கோபால ராவின் சிபார்சினால் இந்த உத்தியோகம் இவருக்குக் கிடைத்தது. அந்தப் பள்ளியே இன்று....-----------------------------------------------------பக்கம் 5....தொடரும்....
பக்கம் 7.......முறை கணபதி சாஸ்திரிகளின் வீட்டில் நடைபெற்ற ஒரு விசேஷத்திற்குக் கும்பகோணம் வந்தபொழுது, அவர் தம் குமாரி மகாலக்ஷ்மியைக் கணபதி சாஸ்திரிகளின் புதல்வரான சுப்ரமணியத்திற்குக் கன்னிகாதானம் செய்து கொடுக்கத் தாம் விரும்புவதாகவும், அந்தத் தானத்தைக் கணபதி சாஸ்திரிகள் ஏற்றுக் கொண்டு தம்மைப் பெருமைப்படுத்த வேண்டு மென்றும் விண்ணப்பித்துக் கொண்டார். அச் சொற்களைக் கேட்ட கணபதி சாஸ்திரிகள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. தானாக வந்த மகாலக்ஷ்மியைத் தள்ளுவாரும் உண்டோ? மேலும், ஆசாரிய ஸ்தானத்திலுள்ள பெரியார் தம் குமாரியைத் தம் புதல்வனுக்குக் கன்னிகாதானம் செய்து கொடுப்பதாகத் தாமே கூறியதில் அவர் மிகப் பெருமை கொண்டார். பிள்ளைகளுக்குத் தகுந்த பெண்களைத் தேடி யாசிக்கும் காலமாக அக்காலம் அமைந்திருந்தது. மாக=மஹாலக்ஷ்மி அம்மையாரது ஏழாவது பிராயத்திலும், சுப்ரமணிய சாஸ்திரிகளது பதினெட்டாவது வயஸிலும் அவ்விருவருக்கும் வேதோக்தமாக ஈச்சங்குடியில் விவாகம் நடந்தேறியது.தம் கணவருடன் இல்லறத்தைச் செவ்வையாய் நடத்தி வந்த மகாலக்ஷ்மி அம்மையார் அடக்கமே உருவானவர். அவர் தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம் முதலான பாஷைகளில் தோத்திரப் பாடல்களைப் பாடி மகிழ்வதிலும், கணவருக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்வதிலும், குழந்தைகளை நல்லவழியில் பராமரித்து வருவதிலும் தம் காலத்தைச் செலவிட்டு வந்தார். மேலும் பெண்களுக்குரிய விருரதங்கள் யாவற்றையும் ஒன்று விடாது, அவ்வக் காலங்களில், அந்த அம்மையார் அனுஷ்டித்து வந்தார். சுகங்கள் வரும் காலத்தில் அதிகச் சந்தோஷத்தையும், துக்கம் ஏற்படும் பொழுது அதிகக் கவலையையும் அடையாமல், எல்லாம் கடவுள் செயல் என்ற நம்பிக்கையுடன் நல்ல விவேகியாக அந்த அம்மையார் வாழ்ந்து வந்தார். அவருடன் பிறந்தவர்கள் ஐவர். அவர்களில் இருவர் பெண்கள், மூவர் ஆண்கள். அம்மையரின் கடைசிச் சகோதரர் சுப்ரமண்ய சாஸ்திரிகள் ரிக் வேதம் நன்கு பயின்று, சாஸ்திரங்களிலும் தேர்ச்சி பெற்றுத் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஆங்கிலம் முதலான பாஷைகளையும் கற்று, அறுபது வருடங்களுக்கு மேலாக மடத்தின் ஆஸ்தான வித்வத் சபையில் இருந்து கொண்டு இன்றும் பணியாற்றிவருகிறார்.
பக்கம் 8 ..... தொடரும்...
--
பக்கம் 9 .......நடத்தி வைத்தார். உபநயன காலத்தில் பீடத்தின் 66-வது ஆசாரிய ஸ்வாமிகள் சுவாமிநாதரை ஆசீர்வதித்துப் பிரஸாதம் அனுப்பி யிருந்தார்கள். சாஸ்திரிகளின் நண்பரான சூணாம்பட்டு ஜமீன்தார் திவான்பகதூர் அருணாசல முதலியாரும், பாலகருக்குகந்ததோர் பரிசை அளித்தார். சுவாமிநாதரின் மேதா விலாஸத்தை இளமைப் பருவத்திலேயே கண்ட சாஸ்திரிகள், பாலகரின் எட்டாவது பிராயம் வரை அவரைப் பள்ளிக்கு அனுப்பாமல், தாமாகவே அவருக்குக் கல்வி கற்றுக் கொடுத்து வந்தார். மேலும் தம் மைந்தருக்கு வெகு இளை=ளமைப் பருவத்திலேயே சங்கீதத்தில் பயிற்சியும் அளித்து வந்தார். விளையும் பயிர் முளையிலேயே என்னும் முதுமொழிப்படி ஒரு முறை கண்டதையும், ஒரு முறை கேட்டதையும் சிறிதும் மறவாத நுண்ணறிவு படைத்த தன்மையுடன் சுவாமிநாதர் விளங்கினார். மகாலக்ஷ்மி அம்மாள் தம் குழந்தைகளுக்குத் தாம் அறிந்த ஸ்தோத்திரச் செய்யுட்களை யெல்லாம் சொல்லிவைப்பார். இளஞ் சுவாமிநாருக்கு அவற்றை மனப்பாடம் செய்வதில் விருப்பம் அதிகம். சம்ஸ்கிருதம் கற்க அப்பொழுது சுவாமிநாதருக்குச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. தந்தையார் திண்டிவனத்தில் இருந்தபொழுது, அவர் அவ்வூர் ஆர்க்=ற்காடு அமெரிக்கன் மிஷன் ஹைஸ்கூலில் இரண்டாவது பாரத்தில் தம் மைந்தரை முதன் முதலாகப் பள்ளிப் படிப்புக்குச் சேர்த்தார். சுவாமிநாதர் தம் இளைமைப் பருவத்திலேயே மிகுந்த ஹாஸ்யச் சுவையுடன் பேசிவருவது வழக்கம். ஒரே மொழியில் பல பொருள்களையும் அடக்கியும் பேசுவார்கள். தந்தையார் தமது தனயர்களுள் அவரை மிகுந்த பிரேமையுடன் வளர்த்து, ஓர் கிளியின் பெயரை அவருக்குச் செல்வப் பெயராக இட்டிருந்தார்.
பள்ளிப் படிப்பும், பரிசுக் குவியல்களும்சுவாமிநாதர் ஒவ்வொரு வகுப்பிலும் முதன்மையாக விளங்கி, முதன்மையாகவே தேறி, வருட இறுதிப் பரிசளிப்பு விழாக்களில் எல்லாம் முதல் பரிசுகளையும் தாமே பெற்று வந்ததார். பைபிள் என்னும் கிறிஸ்தவ மதநூலில் தேர்ச்சி பெற்றதற்கு முதல் பரிசும் அவருக்கே கிடைத்து வந்தது. பரிசு பெற்ற புத்தகங்கள் பல வீட்டில் குவிந்து விடும்.அக்காலத்தில் அப்பள்ளியில் இருந்த கிறிஸ்துவ ஆசிரியர்களெல்லாரும் சுவாமிநாதரிடம் மிகுந்த அன்பு காட்டி வந்தனர்.பக்கம் 10 .... தொடரும்.
ஸ்வாமிகளின் தந்தை சுப்ரமண்ய சாஸ்திரிகள் விழுப்புரத்தில் சாலைகளின் மேற் பார்வையாளராக உத்தியோகம் வகித்து வந்த சமயம் அவருக்கு இரண்டாவது புதல்வராக, சாலியவாகன சகாப்தம் 1817-ஜய வருடம் வைகாசி மாதம் 8-ஆம் தேதி (1894-மே-மாதம் 20-ஆம் தேதி) விழுப்புரம் என்னும் நகரில் நம் ஸ்வாமிகள் அவதரித்தார். அவர்களின் ஜாதக நகலைப் பிற்சேர்ப்பில் காண்க. முதல் குமாரருக்குக் கணபதி எனப் பெயரிட்டிருந்தமையை ஒட்டித் தந்தையார் தம் இரண்டாவது குமாரருக்கு முருகப் பெருமான் திருநாமமான சுவாமிநாதன் என்று பெயரிட்டார். சுப்ரமண்ய சாஸ்திரிகளின் குல தெய்வமும் சுவாமி மலையில் எழுந்தருளி இருப்பவருமான ஸ்ரீ சுவாமிநாத சுவாமியே, ஆகையால், குலதெய்வத்தின் பெயரையே சாஸ்திரியார் தம் மகவுக்கிட்டு மகிழ்ந்தாரெனவும் கூறலாம்(•1).சாஸ்திரிகளுக்கு நம் ஸ்வாமிகளைத் தவிர நான்கு புதல்வர்களும், ஒரு பெண்ணும் உண்டு. அவர்கள் முறையே ஸ்வாமிகளுக்கு மூத்தவரான கணபதி சாஸ்திரி, இளையவர்களான, லலிதாம்பாள் அம்மையார், சாம்பமூர்த்தி சாஸ்திரி, சிவம் என்றழைக்கப்படும் சதாசிவ சாஸ்திரி, குஞ்சு சாஸ்திரி என அழைக்கப்படும் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரி என்பவர்களாவர். கிருஷ்ண மூர்த்தி சாஸ்திரிகள் மடத்தின் பரம்பரைப் புரோகிதராக இருந்த மாயவரம் பிரம்மஸ்ரீ கிருஷ்ண சாஸ்திரிகளிடம் ரிக் வேதம் கற்று, நம் ஸ்வாமிகளின் பிரதான சிஷ்யராக இப்பொழுது விளங்கும் ஸ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளுக்கும், அவர்களது இளமைப் பருவத்தில் வேதம் கற்பித்த பாக்கியத்தைப் பெற்றார்கள். சுப்பிரமண்ய சாஸ்திரிகள் 1329-வது வருடம்ஜூலை மாதம் தமது 74-வது வயதில் இம்மண்ணுலகை நீத்தார்.தந்தையார் தம் குலத்திற்குரிய சம்ஸ்காரங்களையெல்லாம் அவ்வக்காலங்களில் சுவாமிநாதருக்குச் செய்வித்து, உரிய காலத்தில் (1905-வது வருடம், திண்டிவனத்தில்) உபநயனத்தையும்.....--------------------(•1) விழுப்புரத்தில் ஸ்வாமிகள் ஜனித்த வீட்டை விலைக்கு வாங்கி அதை ஓர் சங்கராலயமாக அமைக்க வேண்டுமென ஆவ்வூர் பிரமுகர் வக்கீல் சிதம்பர ஐயரும், மற்ற சீடர்களும் முயற்சித்து வருகிறார்கள்.)பக்கம் 9 ....
...நடத்தி வைத்தார். உபநயன காலத்தில் பீடத்தின் 66-வது ஆசாரிய ஸ்வாமிகள் சுவாமிநாதரை ஆசீர்வதித்துப் பிரஸாதம் அனுப்பி யிருந்தார்கள். சாஸ்திரிகளின் நண்பரான சூணாம்பட்டு ஜமீன்தார் திவான்பகதூர் அருணாசல முதலியாரும், பாலகருக்குகந்ததோர் பரிசை அளித்தார். சுவாமிநாதரின் மேதா விலாஸத்தை இளமைப் பருவத்திலேயே கண்ட சாஸ்திரிகள், பாலகரின் எட்டாவது பிராயம் வரை அவரைப் பள்ளிக்கு அனுப்பாமல், தாமாகவே அவருக்குக் கல்வி கற்றுக் கொடுத்து வந்தார். மேலும் தம் மைந்தருக்கு வெகு இளை=ளமைப் பருவத்திலேயே சங்கீதத்தில் பயிற்சியும் அளித்து வந்தார். விளையும் பயிர் முளையிலேயே என்னும் முதுமொழிப்படி ஒரு முறை கண்டதையும், ஒரு முறை கேட்டதையும் சிறிதும் மறவாத நுண்ணறிவு படைத்த தன்மையுடன் சுவாமிநாதர் விளங்கினார். மகாலக்ஷ்மி அம்மாள் தம் குழந்தைகளுக்குத் தாம் அறிந்த ஸ்தோத்திரச் செய்யுட்களை யெல்லாம் சொல்லிவைப்பார். இளஞ் சுவாமிநாருக்கு அவற்றை மனப்பாடம் செய்வதில் விருப்பம் அதிகம். சம்ஸ்கிருதம் கற்க அப்பொழுது சுவாமிநாதருக்குச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. தந்தையார் திண்டிவனத்தில் இருந்தபொழுது, அவர் அவ்வூர் ஆர்க்=ற்காடு அமெரிக்கன் மிஷன் ஹைஸ்கூலில் இரண்டாவது பாரத்தில் தம் மைந்தரை முதன் முதலாகப் பள்ளிப் படிப்புக்குச் சேர்த்தார். சுவாமிநாதர் தம் இளைமைப் பருவத்திலேயே மிகுந்த ஹாஸ்யச் சுவையுடன் பேசிவருவது வழக்கம். ஒரே மொழியில் பல பொருள்களையும் அடக்கியும் பேசுவார்கள். தந்தையார் தமது தனயர்களுள் அவரை மிகுந்த பிரேமையுடன் வளர்த்து, ஓர் கிளியின் பெயரை அவருக்குச் செல்வப் பெயராக இட்டிருந்தார்.
பள்ளிப் படிப்பும், பரிசுக் குவியல்களும்சுவாமிநாதர் ஒவ்வொரு வகுப்பிலும் முதன்மையாக விளங்கி, முதன்மையாகவே தேறி, வருட இறுதிப் பரிசளிப்பு விழாக்களில் எல்லாம் முதல் பரிசுகளையும் தாமே பெற்று வந்ததார். பைபிள் என்னும் கிறிஸ்தவ மதநூலில் தேர்ச்சி பெற்றதற்கு முதல் பரிசும் அவருக்கே கிடைத்து வந்தது. பரிசு பெற்ற புத்தகங்கள் பல வீட்டில் குவிந்து விடும்.அக்காலத்தில் அப்பள்ளியில் இருந்த கிறிஸ்துவ ஆசிரியர்களெல்லாரும் சுவாமிநாதரிடம் மிகுந்த அன்பு காட்டி வந்தனர்.
பக்கம் 10...அவர்கள் தங்களை அறியாமலே, பிற்காலத்தில் பெரியதோர் மேதாவியாக வரக்கூடிய மாணவர் ஒருவரைத் தம் பள்ளி பெற்றிருந்ததை உணராமல் உணர்ந்து பெருமை கொண்டார்கள் போலும். சுவாமிநாதர் மூன்றாவது பாரத்தில் படித்துக் கொண்டிருந்த பொழுது, அக்காலத்தில் பள்ளிக்கூட உதவி இன்ஸ்பெக்டராக இருந்த மஞ்சக்குப்பம் சிங்காரவேலு முதலியார் என்றவர் பள்ளியின் மேற்பார்வையின் பொருட்டு ஒரு முறை அங்கே வந்திருந்தார். முதலியார் சுவாமிநாதரது முகத்தோற்ற ஒளியில் ஈடுபட்டு, அவரைச் சில கேள்விகள் கேட்க, அவைகளுக்கெல்லாம் தங்கு தடையின்றிச் சுவாமிநாதர் பதிலளித்ததைக் கண்டு வியப்படைந்தார். சுவாமிநாதரை அவர் பிற மேல் வகுப்புகளுக்கும் அழைத்துச் சென்று, அங்குள்ள ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் அச்சிறுவரை அறிமுகப்படுத்தி, அவர்களின் வகுப்புக்களுக்குரிய பாடங்களிலிருந்தும் கேள்விகளை அம்மாணவரிடம் கேட்கச் சொல்ல, சிறுவர் சுவாமிநாதர் தயங்காமல் அவைகளுக்கும் விடையளித்தார். அப்பொழுது அந்த மேலதிகாரி தமக்குக் கீழ் உத்தியோகம் வகித்து வந்த சுப்ரமணிய சாஸ்திரிகளின் புதல்வரே அச் சிறுவர் என்பதை ஆசிரியர்கள் மூலமாக அறிந்து, சாஸ்திரிகளை அழைத்து, ‘உமது புதல்வன் பெரிய மேதாவியாக விளங்கப் போகிறான்‘ எனக் கூறினார். அந்த மொழிகளைக் கேட்ட சாஸ்திரிகள் மனம் மகிழ்ந்து, தம் முகக் குறிப்பினால் தம் நன்றியை அவருக்குத் தெரிவித்துக் கொண்டார். தம் புதல்வர் உலக ஞான குருவாகப் பின்னர் விளங்கப் போகிறார் என்ற எண்ணம் சாஸ்திரிகளது உள்ளத்தில் அப்பொழுது தோன்றவில்லை. அரசாங்கத்தில் பெரியதொரு உத்தியோத்தை வகித்துச் சீரும், சிறப்பும் பெற்றுத் தம் தனயர் விளங்குவார் என்ற எண்ணம் மட்டிலும் அப்பொழுது சாஸ்திரிகளுக்கு உதித்தது. அரசாங்க உத்தியோகத்தையே வாழ்க்கையின் லக்ஷ்யமாகப் பெரும்பாலோரும் எண்ணியிருந்த காலம் அது.
ஷேக்ஸ்பியர் நாடகம் நடித்தது
சுவாமிநாதர் பள்ளியில் 1906-வது ஆண்டில் நான்காவது பாரத்தில் பயின்று வந்தபொழுது, மாணவர்கள் பள்ளியின் வருடாந்தக=ரக் கொண்டாட்டத்திற்கென ஷேக்ஸ்பியர் என்னும் ஆங்கில மகா கவி எழுதிய, “ஜான் மன்னர்“ என்னும் நாடகத்தை நடிக்க ஏற்பாடு செய்திருந்தனர். அந்த நாடகத்தில் ஆர்தர் இள...
பக்கம் 11... தொடரும்....

தொடர்ந்து படித்து வருகிறேன் காளைராசன் ஐயா. தொடருங்கள்

2. குருநாதரின் சந்திப்பும், துறவும், பீடாதிபத்தியமும்
காமகோடி பீடி=டத்தின் 66-ஆவது பீடாதிபதிகளும், ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸ்வாமிகள் என்ற பெயரையே தாங்கியவர்களுமான பரமகுரு ஸ்வாமிகள் தென்னார்க்=ற்காடு ஜில்லா, திண்டிவனம் தாலூ=லுகா, பெருமுக்கல் என்னும் சிற்றூரில் விசுவாவசு வருடம் (1906) சாதுர்மாஸ சங்கல்பத்தை நடத்தி . வருங்கால், சிறுவர் ஸ்வாமிநாதரது தந்தையார் குடும்பத்துடன் ஸ்வாமிகளைத் தரிசிக்கச் சென்றிருந்தார்கள். அப்பொழுது நித்திய பூஜையில் வீற்றிருந்த ஸ்வாமிகளின் கருணாகடாக்ஷம் பாலகர் சுவாமிநாதர் மீது விழுந்தது. பூஜை முடிந்ததும் ஸ்வாமிகள் சுப்ரமணிய சாஸ்திரிகளிடம் அவரது குடும்ப நலனைப்பற்றிப் பரிவுடன் விசாரித்தார்கள். தமக்குப் பின்னர் காமகோடி பீடத்தை அலங்கரிக்கப் போகும் ஒரு மகா புருஷனை இந்தப் பாலகர் உருவத்தில் அவர்கள் கண்டார்கள் போலும். தம் உள்ளத்தில் அவ்விதத் தீர்மனத்தையே அவர்கள் அப்பொழுதே செய்து கொண்டார்களோ என்றும் பின் நிகழ்ச்சிகளிலிருந்து நாம் தீர்மானிக்க வேண்டியிருக்கிறது. சாஸ்திரிகளின் குடும்பம் ஸ்வாமிகளின் தரிசனத்துக்கென இரண்டு நாட்கள் பெருமுக்கலில் தங்கியிருந்தது. அப்பொழுது ஸ்வாமிகள் இளைஞர் சுவாமிநாதரை அடிக்கடிச் சந்தித்துப் பல கேள்விகளை யெல்லாம் கேட்டு, அதிசயிக்கத் தக்க அப்பாலகரது மறுமொழிகளாலும், அவரது வசீகர முகத் தோற்றத்தினாலும, மேதையினாலும் மகிழ்ச்சிபெற்று, ‘இவன் ஒரு மகாபுருஷனாக விளங்கப் போகிறான்‘ என்று அங்குக் கூடியிருந்தவர்களிடம் தெரிவித்தார்கள். இம்மொழிகளைக் கேட்ட தந்தையாரின் மகிழ்ச்சிக்கு அளவே யில்லை. ஆனால் 13 வயதுள்ள தம் புதல்வர் துறவு பூண்டு தம்மையும், தம் குடும்பத்தையும் விட்டுப் பிரிந்து விடுவாரென அவர் அப்பொழுது சிறிதும் எண்ணவில்லை. சாஸ்திரிகள் ஸ்வாமிகளிடம் விடை பெற்றுக் கொண்டு தாம் அப்பொழுது உத்தியோகம் பார்த்து வந்த திண்டிவனத்திற்குப் போய்ச் சேர்ந்தார். ஆயினும் ஸ்வாமிகள் சுவாமிநாதரை அடிக்கடி மடத்தின் முகாமிற்கு அழைத்து வரும்படி கட்டளையிட்டு வந்தார்கள். அவ்விதமே சாஸ்திரிகளும் பின் பல முறை தம் குமாரரை ஸ்வாமிகளிடம் ....
பக்கம் 13.... தொடரும்....
பிழைகள் குறைந்துள்ளன. பிழைகள் உள்ள இடத்தில் கொஞ்சம் bold எழுத்தில் காட்டியுள்ளேன்.

2. குருநாதரின் சந்திப்பும், துறவும், பீடாதிபத்தியமும்காமகோடி பீடி=டத்தின் 66-ஆவது பீடாதிபதிகளும், ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸ்வாமிகள் என்ற பெயரையே தாங்கியவர்களுமான பரமகுரு ஸ்வாமிகள் தென்னார்க்=ற்காடு ஜில்லா, திண்டிவனம் தாலூ=லுகா, பெருமுக்கல் என்னும் சிற்றூரில் விசுவாவசு வருடம் (1906) சாதுர்மாஸ சங்கல்பத்தை நடத்தி . வருங்கால், சிறுவர் ஸ்வாமிநாதரது தந்தையார் குடும்பத்துடன் ஸ்வாமிகளைத் தரிசிக்கச் சென்றிருந்தார்கள். அப்பொழுது நித்திய பூஜையில் வீற்றிருந்த ஸ்வாமிகளின் கருணாகடாக்ஷம் பாலகர் சுவாமிநாதர் மீது விழுந்தது. பூஜை முடிந்ததும் ஸ்வாமிகள் சுப்ரமணிய சாஸ்திரிகளிடம் அவரது குடும்ப நலனைப்பற்றிப் பரிவுடன் விசாரித்தார்கள். தமக்குப் பின்னர் காமகோடி பீடத்தை அலங்கரிக்கப் போகும் ஒரு மகா புருஷனை இந்தப் பாலகர் உருவத்தில் அவர்கள் கண்டார்கள் போலும். தம் உள்ளத்தில் அவ்விதத் தீர்மனத்தையே அவர்கள் அப்பொழுதே செய்து கொண்டார்களோ என்றும் பின் நிகழ்ச்சிகளிலிருந்து நாம் தீர்மானிக்க வேண்டியிருக்கிறது. சாஸ்திரிகளின் குடும்பம் ஸ்வாமிகளின் தரிசனத்துக்கென இரண்டு நாட்கள் பெருமுக்கலில் தங்கியிருந்தது. அப்பொழுது ஸ்வாமிகள் இளைஞர் சுவாமிநாதரை அடிக்கடிச் சந்தித்துப் பல கேள்விகளை யெல்லாம் கேட்டு, அதிசயிக்கத் தக்க அப்பாலகரது மறுமொழிகளாலும், அவரது வசீகர முகத் தோற்றத்தினாலும, மேதையினாலும் மகிழ்ச்சிபெற்று, ‘இவன் ஒரு மகாபுருஷனாக விளங்கப் போகிறான்‘ என்று அங்குக் கூடியிருந்தவர்களிடம் தெரிவித்தார்கள். இம்மொழிகளைக் கேட்ட தந்தையாரின் மகிழ்ச்சிக்கு அளவே யில்லை. ஆனால் 13 வயதுள்ள தம் புதல்வர் துறவு பூண்டு தம்மையும், தம் குடும்பத்தையும் விட்டுப் பிரிந்து விடுவாரென அவர் அப்பொழுது சிறிதும் எண்ணவில்லை. சாஸ்திரிகள் ஸ்வாமிகளிடம் விடை பெற்றுக் கொண்டு தாம் அப்பொழுது உத்தியோகம் பார்த்து வந்த திண்டிவனத்திற்குப் போய்ச் சேர்ந்தார். ஆயினும் ஸ்வாமிகள் சுவாமிநாதரை அடிக்கடி மடத்தின் முகாமிற்கு அழைத்து வரும்படி கட்டளையிட்டு வந்தார்கள். அவ்விதமே சாஸ்திரிகளும் பின் பல முறை தம் குமாரரை ஸ்வாமிகளிடம் ....
சும்மா....தொடர்ந்து படித்து வரக்கூடாது.ஏதாவது பிழைத்திருத்தம் இருந்தால் சொல்ல வேண்டும்.
உங்களுக்கு பிழைதிருத்தம் சொல்லும் அளவுக்கு எனக்கு தமிழ் தெரியாது காளைராசன் ஐயா:-). அதனால் தான் ப்ரூப் ரீடிங், பிழைதிருத்தத்தில் எல்லாம் நான் இறங்குவதில்லை
பொதுவாக ஆசாரிய ஸ்வாமிகள் ஓர் ஊருக்கு விஜயம் செய்கிறார்களென்றால் அவ்வைபவம் அந்த ஊர் முழுவதுமே ஒரு திருவிழாவாகக் கொண்டாடப்படும். ஒரு வாரத்திற்கு முன்னதாகவே ஸ்வாமிகளை வரவேற்கத்தக்க ஏற்பாடுகளை ஊர் மக்கள் செய்யத் தொடங்குவார்கள். மக்களெல்லோரும் கூட்டம் கூட்டமாக ஸ்வாமிகளைத் தரிசிக்க வருவார்கள். எங்கும் வேத கோஷமும், வாத்ய ஒலியும் முழங்கும். ஸ்வாமிகள் யானை மீதோ, பல்லக்கின் மீதோ, பவனி வரும் காட்சியைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள். மடத்தின் பரிவாரங்களாக வரும் யானை, குதிரை, ஓட்டகம் இவைகளைக் காணக் குழந்தைகளின் கூட்டம் ஆங்காங்கே....
2. குருநாதரின் சந்திப்பும், துறவும், பீடாதிபத்தியமும்
காமகோடி பீடி=டத்தின் 66-ஆவது பீடாதிபதிகளும், ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸ்வாமிகள் என்ற பெயரையே தாங்கியவர்களுமான பரமகுரு ஸ்வாமிகள் தென்னார்க்=ற்காடு ஜில்லா, திண்டிவனம் தாலூ=லுகா, பெருமுக்கல் என்னும் சிற்றூரில் விசுவாவசு வருடம் (1906) சாதுர்மாஸ சங்கல்பத்தை நடத்தி . வருங்கால், சிறுவர் ஸ்வாமிநாதரது தந்தையார் குடும்பத்துடன் ஸ்வாமிகளைத் தரிசிக்கச் சென்றிருந்தார்கள். அப்பொழுது நித்திய பூஜையில் வீற்றிருந்த ஸ்வாமிகளின் கருணாகடாக்ஷம் பாலகர் சுவாமிநாதர் மீது விழுந்தது. பூஜை முடிந்ததும் ஸ்வாமிகள் சுப்ரமணிய சாஸ்திரிகளிடம் அவரது குடும்ப நலனைப்பற்றிப் பரிவுடன் விசாரித்தார்கள். தமக்குப் பின்னர் காமகோடி பீடத்தை அலங்கரிக்கப் போகும் ஒரு மகா புருஷனை இந்தப் பாலகர் உருவத்தில் அவர்கள் கண்டார்கள் போலும். தம் உள்ளத்தில் அவ்விதத் தீர்மனத்தையே அவர்கள் அப்பொழுதே செய்து கொண்டார்களோ என்றும் பின் நிகழ்ச்சிகளிலிருந்து நாம் தீர்மானிக்க வேண்டியிருக்கிறது. சாஸ்திரிகளின் குடும்பம் ஸ்வாமிகளின் தரிசனத்துக்கென இரண்டு நாட்கள் பெருமுக்கலில் தங்கியிருந்தது. அப்பொழுது ஸ்வாமிகள் இளைஞர் சுவாமிநாதரை அடிக்கடிச் சந்தித்துப் பல கேள்விகளை யெல்லாம் கேட்டு, அதிசயிக்கத் தக்க அப்பாலகரது மறுமொழிகளாலும், அவரது வசீகர முகத் தோற்றத்தினாலும, மேதையினாலும் மகிழ்ச்சிபெற்று, ‘இவன் ஒரு மகாபுருஷனாக விளங்கப் போகிறான்‘ என்று அங்குக் கூடியிருந்தவர்களிடம் தெரிவித்தார்கள். இம்மொழிகளைக் கேட்ட தந்தையாரின் மகிழ்ச்சிக்கு அளவே யில்லை. ஆனால் 13 வயதுள்ள தம் புதல்வர் துறவு பூண்டு தம்மையும், தம் குடும்பத்தையும் விட்டுப் பிரிந்து விடுவாரென அவர் அப்பொழுது சிறிதும் எண்ணவில்லை. சாஸ்திரிகள் ஸ்வாமிகளிடம் விடை பெற்றுக் கொண்டு தாம் அப்பொழுது உத்தியோகம் பார்த்து வந்த திண்டிவனத்திற்குப் போய்ச் சேர்ந்தார். ஆயினும் ஸ்வாமிகள் சுவாமிநாதரை அடிக்கடி மடத்தின் முகாமிற்கு அழைத்து வரும்படி கட்டளையிட்டு வந்தார்கள். அவ்விதமே சாஸ்திரிகளும் பின் பல முறை தம் குமாரரை ஸ்வாமிகளிடம் ....பக்கம் 13...அழைத்துச் சென்றார். குருநாதரின் அருளும் சிறுவருக்குப் பெருகத் தொடங்கிற்று.இவ்வாறு நிகழ்ந்து வந்த காலத்தில் ஒரு நாள், திண்டிவனத்தில் சுவாமிநாதரை வீட்டில் காணவில்லை. பெற்றோர்கள் தவித்தார்கள். ஊரிலுள்ள குளம், கிணறுகள் எல்லாம் துருவிப் பார்த்தாகிவிட்டன. அருமைப் புதல்வரும் அகப்படவில்லை. இவ்வாறு இரண்டு நாட்கள் உணவு உறக்கமின்றிப் பெற்றோர்கள் தவித்தனர். மறுநாள் 5-மைல் தூரத்திலுள்ள ஸ்வாமிகளின் முகாமிலிருந்து ஒருவர் திண்டிவனத்திற்கு வந்து, சுவாமிநாதர் ஸ்வாமிகளைக் காண அவ்விடம் வந்திருப்பதாகவும், சௌக்கியமாயிருப்பதாகவும் கூறி, இந்தச் செய்தியைச் சொல்லி வரும்படி ஸ்வாமிகள் கட்டளையிட்டார்களென்றும் தெரிவித்தார். அப்பொழுது பெற்றோர்களும் அவருடைய நண்பர்களும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. சுவாமிநாதரும் மேலும் இரண்டு நாட்கள் கழித்து வீட்டிற்குத் திரும்ப அனுப்பப்பட்டார்.துறவும் பீடாதிபத்தியமும்1907-ஆவது வருடம் பிப்ரவரி முதல் வாரத்தில் ஸ்ரீ ஸ்வாமிகளின் முகாமிலிருந்து திண்டிவனத்திற்கு, சுப்ரமண்ய சாஸ்திரிகள் பெயருக்கு ஒரு தந்திச் செய்தி கிடைத்தது. அதில் சுவாமிநாதரை அழைத்துக் கொண்டு சாஸ்திரிகள் உடனே புறப்பட்டு வரவேண்டும் எனக் கண்டிருந்தது. இச்செய்தி கிடைக்குங்கால் சுப்ரமண்ய சாஸ்திரிகள் உத்தியோக அலுவலாகத் திருச்சி சென்றிருந்தார். ஏதோ முக்கியமான காரியமாகத்தான் ஸ்வாமிகள் அழைத்திருக்க வேண்டுமென எண்ணிய சாஸ்திரிகள் நண்பர்கள், அவரது குடும்பத்தை ரெயில் மூலம் காஞ்சீபுரத்திற்கு அனுப்பி வைத்தார்கள். காஞ்சீபுரத்திற்கு 30 மைல் தூரத்திலுள்ள கலவை என்னும் ஊரில் அப்பொழுது ஸ்வாமிகள் முகாம் செய்திருந்தார்கள். காஞ்சீபுரத்தில் இருந்த மடத்தின் அதிகாரிகள் மகாலக்ஷ்மி அம்மையாரிடம் யாதொரு விஷயமும் தெரிவிக்காமல், சிறுவர் சுவாமிநாதரை மட்டிலும் நேராகக் கலவைக்கு ஒரு குதிரை வண்டியில் அழைத்துச் சென்று விட்டார்கள். மற்றவர்கள் இரண்டு நாட்கள் கழித்துக் கலவையை அடைந்தார்கள்.திண்டிவனத்திற்குச் செய்தி தந்தி மூலமாக அனுப்பிய பொழுது ஆசாரிய ஸ்வாமிகளின் உடலில் வைசூரி கண்டிருந்தது,பக்கம் 14... தொடரும்...
அவர்கள் தாம் இன்னும் அதிக நாட்கள் ஜீவித்திருக்கமுடியாது என்னும் எண்ணத்துடன் தமக்குப் பின் பீடத்தில் சுவாமிநாதரையே அமர்த்தவேண்டுமென்று தீர்மானித்தவராகி, இளைஞர் சுவாமிநாதரைக் கலவைக்கு அழைத்துவரும்படிக் கட்டளையிட்டிருந்தார்கள். ஆனால் எதிர்பாராத வகையில் சிறுவர் வந்து சேரும் முன்னரே ஸ்வாமிகள் (பராபவ வருடம் மாசி கிருஷ்ண அஷ்டமியில்) சித்தி அடைந்து விட்டார்கள். தாம் சித்தி அடைவதற்கு முன், அவர்கள் தம்முடைய சீடராயிரந்தவரும= சீடராயிருந்தவரும் ருக் வேதத்தை நன்கு பயின்றவருமான லக்ஷ்மீகாந்தன்(•) என்னும் 18 பிராயமுள்ள பிரும்மசாரிச் சிறுவருக்கு உபதேசம் செய்து வைத்தார்கள். காமகோடிபீ டத்திலமரும் ஆசாரியர்கள் பிரும்மசரியத்திலிருந்தே சந்நியாசம் பெற வேண்டுமென்றும் ருக் வேதத்தைச் சார்ந்தவர் களாயிருக்க வேண்டுமென்றும் நியதி உண்டு.காமகோடி பீடத்தில் இவ்வாறு உபதேசம் பெற்றுப் பட்டமேறி, 67-ஆவது ஆசாரிய ஸ்வாமிகளாக விளங்கிய பெரியாரும் பீடமேறி 8 நாட்களே அதில் அமரும்படியான பாக்யத்தைப் பெற்றார்கள். தம் குருநாதரின் சரீரத்திற்கு ஏற்பட்ட அதே நோயால் இவர்களும் பீடிக்கப்பெற்று எதிர்பாராத விதமாகச் சித்தி அடைந்து விட்டார்கள். சித்தி அடையுமுன் அவர்கள் தம் குருவின் எண்ணத்தை நிறைவேற்றும் பணியை நினைத்தவர்களாகி, இளைஞர் சுவாமிநாதரையே தமக்கு அடுதத பீடாதிபதியாக அங்கீகரித்தார்கள். பின்னர் அவருக்கு முறைப்படி ஆசிரமும்=ஆசிரமமும் கொடுக்கப்பட்டது. இவ்வைபவம் பராபவ வருடம் மாசி மாதம் 2-ஆம் தேதி புதன்கிழமை (13-2-1907) அன்று நிகழ்ந்தது. அப்பொழுது அவருக்குப் பிராயம் 13. அன்று முதல் நம் ஸ்வாமிகள் ஆதி சங்கரரால் நிறுவப்பெற்ற ஸ்ரீ காமகோடி பீடத்தின் 68-ஆவது பீடாதிபதியாக அமர்ந்து, ஜகத்துக்கு அருள் புரிந்து வருகிறார்கள். அவர்கள் ஏற்றுக்கொண்ட தீக்ஷாநாமம் ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி என்பதாகும்.
ஸ்வாமிகள் சந்நியாசம் ஏற்றுக் கொள்ளுமுன் நிகழ்ந்த நிகழ்ச்சி எவர் மனத்தையும் உருக்குவதொன்றாகும். பதின்மூன்....(•) இந்த லக்ஷ்மீகாந்தன் என்னும் இளைஞர் நமது ஸ்வாமிகளின் தாயாரான மகாலக்ஷ்மி அம்மாளின் மூத்த சகோதரியின் புதல்வராவார்.இவர் கும்பகோணத்திற்கடுத்த திருவிசைநல்லுரைச் சார்ந்தவர்.
பக்கம் 15......றாவது பிராயத்தில் துறவு பூண்டு, மிகக் கடுமையான தவம், த்யானம், பூஜை, வைராக்யம், ஆகார நியமம் இவைகளை மேற்கொள்ளுவதென்பது சாமான்யமாக யாராலும் எளிதில் ஏற்றுக் கொள்ளக்கூடியதன்று, தாய், தந்தையருக்கோ தாம் மிகவும் அருமையாகப் போற்றி வளர்த்த தம் சுவாமிநாதரை இக்கடுமையான தவத்தில் ஈடுபடுத்தவும் அவரைப் பிரிந்து வாழவும் மனம் தாங்வில்லை. மடத்தின் அதிகாரிகளோ, ‘உங்களுக்கு மற்ற மூன்று புதல்வர்களிருக்க, இவ்வொரு மைந்தரை உலக க்ஷேமத்தின் பொருட்டும், சிஷ்யர்களின் நம்மை=நன்மையின் பொருட்டும ஏன் உதவக்கூடாது?‘ என்று வினவி வற்புறுத்தினார்கள். அவர்களுக்கு யாது விடை கொடுப்பதென அவர்களுக்கு விளங்க வில்லை. இக்கடுமையான சோதனையில் அவர்கள் மனம் உழன்றது. இந்த மனக் கவலையை நீக்கும் வகையில் நம் ஸ்வாமிகள் அப்பொழுது அவர்களை வணங்கி, ‘நீங்கள் ஏன் தயங்க வேண்டும்? எனக்கோ குருநாதன் அருள் பரிபூரணமாக இருக்கிறது. நான் இதைக் காப்பாற்றுவேன். நீங்கள் எனக்கு முழு மனஸுடன் அனுமதி கொடுங்கள்‘ எனப் பணிவுடன் தெரிவித்தார்கள். குழந்தையின் இவ்வறிவுடைச் சொற்கள் பெற்றோர்களின் உள்ளத்தை உருக்கிவிட்டனவென்பதில் ஐயமில்லை. பின் அவர்கள் ஒருவாறு மனஸைத் தேற்றிக்கொண்டு சந்நியாசத்திற்கு அனுமதியும் தந்தார்கள். இதுவரையில் சாமிநாதராக விளங்கியவர் முண்டனம், தண்டம், கமண்டலு, காஷாயம் இவைகளை ஏற்றுக் கொண்டு, ஆதி சங்கரர் போலவே சந்நியாசி ஆகித் தேஜோ மயமாய் விளங்கிய தங்கள் அருமைப் புதல்வரைப் பெற்றோர்கள் பின்னர் சந்திக்கவேயில்லை. ஆசாபாசங்களை நீக்கவே துறவு ஏற்றுக் கொள்ளப்படுவதால் தாய் தந்தையர் போன்ற நெருங்கிய உறவினர் சந்நியாசிகளை நேரில் காணும் வழக்கமில்லை. நம் ஸ்வாமிகளின் பெற்றோர் தங்கள் புதல்வர் மக்களின் துன்பங்களைப் போக்கி அவர்களை நல்வழிப்படுத்த அவதரித்த மகான் என்ற எண்ணம் பெற்றுத் தங்கள் உள்ளத்தில் பெருமை கொண்டார்களோ, அல்லது உலகெல்லாம் போற்றும் அவரைத் தங்களால் காணமுடியவில்லையே என நினைந்து வருந்தினார்களோ, யார் அறிவர்? ஆனால் ஒன்று மாத்திரம் இவ்விஷயத்தில் தெளிவாயிற்று. பிற்காலத்தில் யாரேனும் அப்பெற்றோர்களை....
பக்கம் 16....தொடரும்....
--
பக்கம் 16.....அடைந்து ஸ்வாமிகளைப் பற்றி ஏதாவது கேட்டால், அவர்கள் மௌனத்தையே மேற்கொண்டிருந்தார்கள். உலகினில் புதல்வனைப் பெற்ற பயனை அடைந்த உத்தமர்கள் அல்லரோ அவர்கள்?கும்பகோணத்திற்கு விஜயம்பதினெட்டாவது நூற்றாண்டில் நம் நாட்டில் நடைபெற்ற யுத்தத்தின் காரணமாகத் தஞ்சை மகாராஷ்டிர மன்னர்களின் காலத்தில், காமகோடி பீடத்தின் நிர்வாக ஸ்தலமானது காஞ்சியிலிருந்து கும்பகோணத்திற்கு மாற்றப்பட்டது என்ற செய்தியை முன்பே கூறினோம். அந்நிகழ்ச்சி 62-ஆவது ஆசாரிய ஸ்வாமிகள் காலத்தில் ஏற்பட்டது. அவர்கள் காஞ்சியிலிருந்து கும்பகோணத்துக்குச் செல்லும் வழியில் உடையார்பாளையச் சமஸ்தானாதிபதியின் வேண்டுகோளுக்கிணங்கி, அவ்வூரில் சிலகாலம் தங்கியிருந்தார்களெனத் தெரிகிறது. பிறகு அவர்கள் தஞ்சையிலும் சில காலம் தங்கினார்கள். பின்னரே அவர்கள் கும்பகோணத்தில் காவிரி நதிக்கரையில் ஒரு மடத்தை நிறுவிக்கொண்டு அங்கே தங்கினார்கள். அதுமுதல் கும்பகோணமே மடத்தின் நிர்வாக ஸ்தானமாக அமைந்தது.நம்ஆசாரிய ஸ்வாமிகள் ஆசாரிய பீடம் ஏற்றுக் கொண்டது வட ஆர்க்காடு ஜில்லாவிலுள்ள கலவை என்ற கிராமத்தில் என்று கூறினோம். அவர்கள் அப்பதவியை மேற்கொண்ட அவ்வாண்டிலேயே கும்பகோணத்திற்குப் பிரயாணமானார்கள். வழியில் தம் தாய் தந்தையர் வசித்துவந்த ஊராகிய திண்டிவனத்தில ஸ்வாமிகள் மூன்று நாட்கள் தங்கினார்கள்.பொதுவாக ஆசாரிய ஸ்வாமிகள் ஓர் ஊருக்கு விஜயம் செய்கிறார்களென்றால் அவ்வைபவம் அந்த ஊர் முழுவதுமே ஒரு திருவிழாவாகக் கொண்டாடப்படும். ஒரு வாரத்திற்கு முன்னதாகவே ஸ்வாமிகளை வரவேற்கத்தக்க ஏற்பாடுகளை ஊர் மக்கள் செய்யத் தொடங்குவார்கள். மக்களெல்லோரும் கூட்டம் கூட்டமாக ஸ்வாமிகளைத் தரிசிக்க வருவார்கள். எங்கும் வேத கோஷமும், வாத்ய ஒலியும் முழங்கும். ஸ்வாமிகள் யானை மீதோ, பல்லக்கின் மீதோ, பவனி வரும் காட்சியைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள். மடத்தின் பரிவாரங்களாக வரும் யானை, குதிரை, ஓட்டகம் இவைகளைக் காணக் குழந்தைகளின் கூட்டம் ஆங்காங்கேபக்கம் 17... தொடரும்...
--
பக்கம் 17......காணப்பெறும். மடத்தின் அதிஷ்டான தெய்வமாகிய ஸ்ரீ சந்திரமௌளீச்வரர், ஸ்ரீ திரு=ரிபுரசுத்தரி அம்மன் இவர்களுக்கு ஸ்ரீ ஸ்வாமிகள் செய்யும் பூஜைகளைக் காண ஏராளமான ஜனங்கள் நீராடித் தூய்மையான மனஸுடன் கூடியிருப்பர். பூஜை முடிந்ததும் ஸ்வாமிகளால் கொடுக்கப்பெறும் அபிஷேக தீர்த்தத்தைப் பக்தர்கள் மிகுந்த பணிவுடன் தங்கள் உள்ளங் கைகளில் பெற்று உட்கொள்ளுவர். இந்தத் தீர்த்தத்தை ஏற்குமுன்னர், வேறு ஆகாரம் எதையும் கொள்ளாமலேயே பக்தர்கள் அதற்காகக் காத்திருப்பார்கள். இந்தத் தீர்த்தத்தால் உடலின் அழுக்குகள் நீங்குவதுடன், மனஸும் மாசு அகன்று தூய்மை அடையுமென்று பக்தர்கள் நம்புகிறார்கள். பல அடியார்கள் கோஷ்டி கானமாகப் பஜனை செய்வார்கள். புலவர்கள் ஸ்வாமிகளைத் தரிசித்து அவர்களிடம் தங்கள் புலமையைக் காட்டிப் பொன்னாடை முதலிய சன்மானங்களைப் பெற்றுப் போவார்கள். பணம் படைத்தவர்கள் பொன்னால் அமைக்கப்பெற்ற ஸ்ரீ ஆதி சங்கரரது பாதுகைகளுக்குப் பொற்காசுகளினாலோ, வெள்ளி நாயணயங்களினாலோ அர்ச்சனை செய்வார்கள். இதற்குப் பாதபூஜை என்பது பெயர். மத பேதமின்றியும், ஜாதி பேதமின்றியும் ஸ்ரீ ஸ்வாமிகளை வரவேற்கும் பணியில் யாவரும் கலந்து கொள்வர். இவ்வைபவம் எல்லாம் ஸ்வாமிகள் முகாம் செய்யும் ஒவ்வோர் ஊரிலும் சாதாரணமாக நடைபெறும் காட்சிகளாகும்.
நம் ஸ்வாமிகள் திண்டிவனத்திற்கு 1907-இல் விஜயம் செய்த காட்சியோ ஒரு தனிச் சிறப்பைப் பெற்றது. அதுவரை குழந்தைப் பருவத்திலும், பன்னிரண்டு வயது வரையிலுள்ள பாலகன் பருவத்திலும் பார்த்துப் பழகிய சுவாமிநாதரை அவ்வூர்வாசிகள் அப்பொழுது உலகத்தை உய்விக்கும் ஞானாசிரியராகக் கண்டார்கள். சந்திரன் போன்ற முக மண்டலம், பால சூரியனை ஒத்த தேஜஸ், புதனை ஒத்த ஞானம், இவைகளெல்லாம் ஒருங்கே அடைந்த ஓர் உருவம் அவர்களுக்கு காட்சியளித்தது. இவ்வுருவத்தைக் கண்டதுமே பெரியோர் சிறியோர், பெண்டிர் யாவரும், ஸ்வாமிகள் தங்கள் ஊரைச் சேர்ந்தவரென்ற பெருமையினால், ஏராளமாகக் கூடி, அவரை வணங்கத் தொடங்கினார்கள். ஸ்வாமிகள் கல்வி பயின்ற திண்டிவனம், ஆர்க்காடு அமெரிக்கன் மிஷன் உயர்நிலைப்பள்ளியின் கிறிஸ்தவ ஆசிரியர்களும், உடன் பயின்ற....பக்கம் 18......மாணவர்களும் ஸ்வாமிகளைக் காண ஆவல் கொண்டார்கள். ஸ்வாமிகளும் ஒவ்வொரு ஆசிரியரிடத்திலும் தனித்தனியே உரையாடி, அவர்கள் யாவரையும் மகிழ்வித்து, அவர்களுக்குத் தக்க வெகுமதிகளையும் அளித்தார்கள். பள்ளி மாணவர்களுக்கெல்லாம் தரிசனம் கொடுத்து அவர்கள் யாவருக்கும் சிற்றுண்டிகளும், பரிசுகளும் வழங்கினார்கள்.பட்டாபிஷேகம்
ஆசாரிய பீடத்தில் அமர்கிறவர்கள் சந்நியாசிகளே ஆனாலும் அவர்கள் ஜகத் ரக்ஷணையே மேற்கொண்டவர்களாகையால் அவர்களைச் சக்ரவர்த்திகளைப் போலப் பாவிப்பதே இந்நாட்டின் தொன்றுதொட்டு வரும் வழக்கமாகும். ஆதி சங்கரர் காலத்திலேயே, அவருக்கு அக்காலத்தில் காஞ்சியில் அரசாண்ட இராஜசேன மன்னர் பல அரசாங்க விருதுகளை அளித்திருந்தார். அவற்றுள் முக்கியமானவை யானை மீது ஏறிப் பவனி வருவதற்கு உரிய அம்பாரி, தந்தச் சிவிகை, வெண்சாமரம், வெண்பட்டுக் குடைகள், கட்டியம் கூறுவோர் தோள்களில் தாங்கி வரும் தங்கத்தடி, வெள்ளித்தடி முதலியனவும், நகரா, பேரி, காளம், கடகம், சங்கம், மிருதங்கம்,வீணை, புல்லாங்குழல் போன்ற வாத்யங்கள் முதலியனவும் ஆகும்.நம் ஸ்வாமிகளுக்கு முறைப்படியே பட்டாபிஷேகம் செய்து, அவ்வைபவத்தைச் சிறப்பாகக் கொண்டாட வேண்ட=டுமென்று சீடர்கள் பல்லோரும் விரும்பினார்கள். இவ்வைபவம் பிலவங்க வருடம் சித்திரை மாதம் 27-ந்தேதி (9-5-1907) வியாழக்கிழமை, கும்பகோணம் மடத்தில் மிக விமரிசையாகக் கொண்டாடப்பெற்றது. நாட்டின் நாலா பக்கங்களிலிருந்தும் கணக்கற்ற மக்கள் இவ்விழாவில் கலந்துகொண்டார்கள். அரசாங்க உத்தியோகஸ்தர்களும், வித்வத் ஜனங்கள் பல்லோரும்அங்கு வந்திருந்தார்கள். தஞ்சையின் கடைசி மன்னரான சிவாஜி மகாராஜாவின் இராணிகள் இருவரும் தங்கள் பிரதிநிதிகளை அனுப்பி ஸ்வாமிகளுக்கு எல்லாவிதமான இராஜ மரியாதைகளையும் செய்வித்தார்கள். விழா நாட்களாகிய மூன்று தினங்களிலும், அறுபது பேர்கள் அடங்கிய தஞ்சைப் பாண்டு கோஷ்டியார் தம் இன்னிசைகளால் மக்களுக்கு மகிழ்ச்சியூட்டி வந்தனர். தேவாலயங்களிளெல்லாம் விசேஷ பூஜைகள் நடந்தன. அன்று ஸ்வாமிகள் எல்லாக் கோயில்களுக்கும் சென்று ஸ்வாமி தரிசனம் செய்து...
1909, 1910 இந்த இரண்டு வருடங்களிலும், மடத்தின் ஆஸ்தான பண்டிதர்களால் கும்பகோணத்திலேயே ஸ்வாமிகளுக்குச் சம்ஸ்கிருத காவியங்கள், நாடகங்கள் இவைகளில் பயிற்சியும், வேதப் பயிற்சியும் செய்து வைக்கப்பட்டன. இந்த இரண்டு வருடங்களா=ளிலேயே ஸ்வாமிகளின் அறிவின் பெருமையைப் பண்டிதர்கள் கண்டு ஆச்சரிய மடைந்தனர். பக்தர்களும், மடத்தின் சீடர்களும் அதிகமாக ஸ்ரீ ஸ்வாமிகளைத் தரிசிக்க வரத் தொடங்கினார்கள். அதனால் சாஸ்திரப் பயிற்சிக்கும் கும்பகோணத்தில் வசிப்பது சிறிது இடையூறாகக் காணப்பட்டது. வித்தியாப்பியாஸத்தை உத்தேசித்து ஏகாந்தமான ஓர் இடம் நிர்ணயிக்கப்பட வேண்டியது அவசியமாகிவிட்டது. அகண்ட காவேரியின் வடகரையில், முசிரிக்கு மேற்கே ஐந்து மைலில், இயற்கை அழகுகள் அமைந்த மகேந்திர மங்கலம் என்னும் கிராமத்தை இதற்கென மடத்தின் அதிகாரிகள் குறிப்பிட்டார்கள். அந்தக் கிராமத்தில் அன்னதானக் கட்டளைக்கென மடத்திற்கு மதுரையில் அரசாண்ட கடைசி நாயக்க மன்ன விஜய ரங்க சொக்கநாத நாயக்கர் சாலிவாகன சகம் 1603-ஆம் ஆண்டில், (1708) பூதானம் செய்திருந்தார்.
மகேந்திர மங்கலம் திருச்சி, நாமக்கல் ரஸ்தாவில், தொட்டியத்திற்கு இப்பால் உள்ளது. அக்காலத்தில் அதற்குப் போக்குவரத்து வசதிகள் அதிகமாக இல்லை. அக்கிராமத்தை அடை வேண்டுமானால், காவிரியின் தென் கரையிலுள்ள லாலாபேட்டை என்னும் ரயில் நிலையத்தில் இறங்கி, ஒரு மைல் அகலமுள்ள காவிரியைப் பரிசலில் கடந்து செல்ல வேண்டும். இவ்வளவு சிரமத்தையும் பொருட்படுத்தாது ஸ்வாமிகளின் தரிசனத்துக்கு வரக்கூடியவர்கள் சிலரே இருப்பர். ஆகையால் இந்த இடம் ஸ்வாமிகளின் வித்தியாப்பியாஸத்திற்கு மிகவும் ஏற்றதெனத் தெரிந்தெடுக்கப் பெற்றது. பூஜையும், மடத்தின் மற்ற நிர்வாக ஸ்தலங்களும் அக்ரஹாரத்தில் தனிகர், சிங்கம் ஐயங்கார் இல்லத்தில் வைக்கப்பட்டன. காவிரியின் கரையில், தண்ணீர் நிலைக்கு அருகிலேயே ஒரு சிறு பர்ணசாலை நிர்மாணிக்கப் பெற்றது.1911-ஆம் வருடம் கும்பகோணத்திலிருந்து அந்தக் கிராமத்திற்கு ஸ்வாமிகள் பயணமானார்கள். மகேந்திர மங்கலத்துக்குச்...பக்கம் 24...
...செல்லும் வழியில் ஸ்வாமிகள் லால்குடி என்ற ஊரில் தங்கி, அங்குச் சங்கராலயத்தையும், ஒரு குருகுலத்தையும் ஸ்தாபனம் செய்தார்கள். அந்தக் குருகுலத்திலிருந்து வித்தியாப்யாஸம் செய்த பலர் இன்று மகா வித்வான்களாக விளங்குகிறார்கள்.கல்விமுறைஸ்வாமிகள் வித்யாப்யாஸம் செய்த முறை தனிமையானது. சாதாரணமாக மக்கள் தமக்குக் கல்வி கற்பிக்கின்றவர்களைத் தம் ஆசாரியர்களென மதித்து, அவர்களிடம் பக்தி செலுத்திக் கல்வி பெறுவார்கள். ஸ்வாமிகளுக்குக் கல்வி கற்பித்த பண்டிதர்களோ ஸ்வாமிகளைத் தம் குருவாக ஏற்றுக் கொண்டவர்கள். பாடம் ஆரம்பிக்கும் முன்னரும், முடிந்த பின்னரும், அவர்கள் ஸ்வாமிகளை வணங்குவார்கள். இப்படிப்பட்ட ஓர் நிலையிலிருந்தும், ஸ்வாமிகள் பாடங்கள் கற்கும்பொழுது மிகுந்த கவனத்துடனும் அக்கரை=கறையுடன் கல்வியில் முன்னேற வேண்டுமென்ற எண்ணத்துடனும், வித்துவான்களிடம் மிகுந்த மரியாதையுடன் கல்வி கற்று வந்தார். அக்காலத்தில் அவர்கள் கற்ற கலைகள் வியாகரணம், தர்க்கம், வேதாந்தம் ஆகியவைகளாகும். பின்னர், மீமாம்சையும் கற்றுக் கொள்ளப் பெற்றது. ஸ்வாமிகளின் மேதையினால் பண்டிதர்களின் பணி வெகு எளிதாகி விட்டது. 1911, 1912, 1913 ஆகிய இந்த மூன்று வருடங்களில் நம் நாட்டில் பிரசித்திபெற்ற பண்டிதர்களுக்கும், தலைவர்களுக்கும் அந்தக் கிராமம் ஒரு யாத்திரை ஸ்தலம் ஆயிற்று. இக்காலத்தில், ஸ்ரீ ஸ்வாமிகளுக்கு முறையாகக் கல்வியில் உதவியவர்களுள், பைங்காநாடு பஞ்சாபகேச சாஸ்திரிகள், மஹாமஹோபாத்யாய சாஸ்திர ரத்னாகர தி.வெங்கடசுப்பா சாஸ்திரிகள், சாஸ்திர ரத்னாகர விஷ்ணுபுரம் சாமி சாஸ்திரிகள், திருவிசை நல்லூர் வெ.வேங்கடராம சாஸ்திரிகளும் குறிப்பிடத் தக்கவர்கள். இன்னும் அக்காலத்தில் மடத்து ஆஸ்தான வித்வான்களாக இருந்து ஸ்வாமிகளின் வித்யாப்யாஸத்தில் ஊக்கமளித்தவர்களுள், மஹாமஹோபாத்யாய பைங்கா நாடு கணபதி சாஸ்திரிகள், மஹாமஹோபாத்யாய கருங்குளம் கிருஷ்ண சாஸ்திரிகள், கோடி கன்னிகாதானம் உபயவேதாந்த ராஜகோபல தாதாச்சாரியார் முதலானவர்கள் முக்கியமானவர்கள்.
இவ்வளவு கல்விகளோடு, ஸ்வாமிகள் ஆங்கிலத்துடன் பிரஞ்சு பாஷையும் கூடக் கற்றுவந்தாரென்றால், அது யாவருக்கும்....பக்கம் 25...தொடரும்....
--
பக்கம் 32 ....தேவார கோஷ்டி, பஜனை கோஷ்டி, நான்கு யானைகள், நாட்டியக் குதிரைகள் இவைகளுடன் அன்று தேஜோமயமாய் விளங்கிய ஸ்வாமிகளின் திருமேனியைத் தரிசித்து அனைவரும் பாக்யசாலிகளானார்கள்.-----------------------7. கல்விக்கும் கலைகளுக்கும் ஊக்கமளித்தமை - அத்வைத சபைக்கூட்டமும் பண்டிதர்களுக்குப் பாராட்டும்1917-ஆவது வருட ஆகஸ்ட் மாதம், கும்பகோணம் அத்வைத சபையின் வருடாந்தக் கூட்டம் முடிவு பெற்றவுடன், ஸ்வாமிகள் ஒரு வித்வத் சபையைக் கூட்டி, அக்காலத்தில் மகா வித்வான்களாக விளங்கிய பிரும்மஸ்ரீ பழமார்நெறி இராமஸ்வாமி சாஸ்திரிகள், பிரும்மஸ்ரீ திருவிசைநல்லூர் வேங்கட சுப்பா சாஸ்திரிகள், ஆகிய இவர்களுக்குச் சாஸ்திர ரத்னாகரம் என்னும் பட்டத்தை வழங்கி, இரட்டை சால்வை, வெள்ளிஜாரி முதலிய சன்மானங்கள் செய்து அவர்களைக் கௌரவித்தார்கள். இந்தப் பட்டத்தை அதன் பிறகு நாளது வரையில் பல வித்வான்கள் பெற்றிருக்கிறார்கள். அவர்களின் பெயர்கள் கீழே குறிப்பிட்டுள்ளன.1. மன்னார்குடி மகாமகோபாத்யாய யக்ஞசாமி சாஸ்திரிகள்2. சிதம்பரம் மகாமகோபாத்யாய தண்டபாணிசாமி தீக்ஷிதர்.3. புதுக்கோட்டை சமஸ்தான தானாதிகாரி திருவையாறு விச்வநாத சாஸ்திரிகள்4. தேதியூர் சுப்ரமண்ய சாஸ்திரிகள்5. விஜயநகரம் மகாமகோபாத்யாய தாத சுப்பராய சாஸ்திரிகள்6. குண்டீர் திண்டுகூரி நரசிம்ம சாஸ்திரிகள்7. கல்கத்தா சர்வ கலாசாலை மகாமகோபாத்யாய என். எஸ். அனந்த கிரஷ்ண சாஸ்திரிகள்.8. கல்கத்தா சர்வ கலாசாலை மகாமகோபாத்யாய ஏ.சின்னசாமி சாஸ்திரிகள்9. காசி ஹிந்து சர்வகலாசாலை டி.இராமச்சந்திர தீக்ஷிதர்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
நான் தினமும் வாசிக்க முடியாவிட்டாலும் தொகுப்பாக அவ்வப்போது வாசித்துக் கொண்டே வருகின்றேன். உங்கள் சீரிய இப்பணிக்கு என் நல்வாழ்த்துக்கள்.
திருப்பழனம் பஞ்சாபகேச சாஸ்திரிகள் கும்பகோணத்திலேயே வசித்து வந்ததால் அவருடைய கதாகாலக்ஷேபங்களும் அக்காலத்தில் அடிக்கடி மடத்தில் நடைபெறுவதுண்டு. ஒலிபெருக்கி இல்லாத அந்த நாளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் அவரது கதையைக் கேட்டு மகிழ்ச்சியுறுவார்கள். ரசிகர்களின் தன்மையை அறிந்து அவர்களின் ருசிக்குத் தக்கவாறு பேசுவதிலும், பாடுவதிலும் சாஸ்திரிகளுக்கு இணை வேறு எவரையும் கூற முடியாது. அவர் கதைக்கு அந் நாளில் வித்வான் அழகநம்பிப்பிள்ளையும், அவருக்குப்பின் கோதண்டராம ஐயரும் மிருதங்கம் வாசித்து வந்தார்கள். இனிய சாரீரம் படைத்த குஞ்சு என்னும் சௌராஷ்டிரரும், நல்லூர் விசுவநாத ஐயரும், மாதிரிமங்கலம் நடேச ஐயரும் சாஸ்திரிகளுக்குப் பின் பாட்டுக்களைப் பாடிவந்தனர். சாஸ்திரிகள் தாம் சங்கரரது சரித்திரத்தைக் கதாகாலக்ஷேபம் செய்யும் முறையில் கீர்த்தனங்களாகவும், வசனங்களாவும் சிறந்த வித்வான்களின் உதவியைக் கொண்டு அமைந்திருப்பதாயும், அதனை ஸ்வாமிகளும் கேட்டருள வேண்டுமென்றும் விக்ஞாபித்துக் கொண்டார். ஸ்வாமிகளும் அவரது கோரிக்கையை அகமகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டு, மடத்தில் சங்கர விஜயத்தைக் காலக்ஷேபம் செய்ய அனுமதித்தார்கள். சாஸ்திரிகள் ஏழு பாகங்களாக அக்கதையைப் பிரித்து, ஏழு நாட்கள் மடத்தில் பிரவசனம் செய்தார். சாஸ்திரிகள் மிகவும் அருமையாகச் செய்த இந்தக் கதா காலக்ஷேபத்திற்கு வெளியூர்களிலிருந்தும், உள்ளூரிலிருந்தும் ரசிகர்கள் ஆயிரக்கணக்காகக் கூடி, அதுவரை யாவராலும் நிகழ்த்தப்படாத அந்தக் கதையைக் கேட்டு மகிழ்ந்தனர். ஒவ்வொரு நாளும் ஸ்வாமிகள் முழு நேரமும் கதையில் அமர்ந்திருந்து சாஸ்திரிகளைப் பெருமைப்படுத்தினார்கள். சாஸ்திரிகளது மேதையை மெச்சி முடிவு நாளன்று அவருக்குப் பீதாம்பரம், தோடா முதலான சன்மானங்களை ஸ்வாமிகள் செய்து அவரைக் கௌரவித்தார்கள்.மேலும் அந்த நாளில் கதாகாலக்ஷேபங்கள் செய்வதில் மிகப் பிரசித்தியுடன் விளங்கிய சூலமங்கலம் வைத்தியநாத பாகவதர், தஞ்சாவூர் பஞ்சாபகேச பாகவதர், பாலக்காடு அனந்தராமன பாகவதர், ஹரிகேசவநல்லூர் முத்தையா பாகவதர், கல்லிடைக்குறிச்சி வேதாந்த பாகவதர், மாங்குடி சிதம்பர பாகவதர், பழனி சுப்பிரமண்ய பாகவதர், ஸ்ரீரங்கம் சடகோபாச்சாரியார் முதலான...
...பட்டினத்திற்கு விஜயம் செய்து, அவ்விடம் பொதுமக்களால் நன்கு வரவேற்கப்பட்டு நீலாயதாக்ஷி அம்மன் கோயிலில் தங்கினார்கள். கோயிலில் ஸ்வாமிகளை வரவேற்கும்பொழுது பல்லாயிரக்கணக்கான மக்கள் அங்குக் கூடியிருந்தனர். நாகை நீலலோசனி பத்திராதிபர் ஜி.சதாசிவம் பிள்ளை ஸ்வாமிகளின் பேரில் ஐந்து பாட்டுக்கள் தொகுத்து அக் கூட்டத்தில் படித்தார்.மாயவரத்தில் 1920- ஆவது வருடத்து வியாஸ பூஜை1920-ஆவது வருடத்து வியாஸ பூஜையை ஸ்வாமிகள் மாயவரத்தில் நடத்திப் பின்னர் மூன்று மாதங்கள் அவ்விடம் தங்கியிருந்ததும் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியாகும். அப்பொழுது பள்ளிகளில் பயிலும் பிரம்மசாரிச் சிறுவர்கள் சுமார் முந்நூறுபேருக்கு வேத வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. அவர்கள் யாவரும் சூரியயோதயத்திற்கு முன்பு காவிரியில் நீராடி, சந்தியாவந்தனம் செய்து, ராஜான் தோட்டத்தில் அமைந்திருந்த கொட்டகைகளில் சமிதாதானம் என்னும் ஹோமத்தைச் செய்து, தகுந்த ஆசிரியர்கள் மூலம் வேதப் பயிற்சி பெற்றுவந்த அழகை அன்று கண்டவர்கள் என்றும் மறப்பதற்கில்லை. அப்பொழுது அந்த இடம் பழமையான ரிஷி ஆசிரமங்களையும் அவைகளில் பயின்ற ரிஷி புதல்வர்களையும் நினைவிற்குக் கொண்டு வந்தது. 2-11-1920 அன்று, அப்பொழுதிருந்த தருமபுரம் ஆதினம் ஸ்ரீலஸ்ரீ பண்டார சந்நிதிகள் ஸ்வாமிகளை மாயவரத்தில் சந்தித்து அவர்களுக்குத் தக்க மரியாதைகளைச் செய்தனர்.ஸ்வாமிகள் மாயவரத்தில் தங்கியிருந்த பொழுது குரானில் நல்ல தேர்ச்சி பெற்ற இஸ்லாமியர் ஒருவர் ஸ்வாமிகளிடம் நேரில் உரையாட வேண்டுமென்ற அவாவைத் தெரிவித்தார். அவரோ இரண்டு கண்களும் தெரியாதவர். ஆனால் நல்ல சொல்வன்மை படைத்தவர். ஸ்வாமிகள் அவரை மாலை நான்கு மணிக்கு வரும்படி கட்டளையிட்டிருந்தார்கள். அதன்படி குறித்த காலத்திற்கு மடத்திற்கு அவர் வந்து சேர்ந்தார். அப்பொழுது வித்வான்களின் சபை ஒன்று கூடியிருந்தது. இந்துமதத் தத்துவங்களைப் பற்றி அந்த வித்வான்கள் விளக்கம் செய்து கொண்டிருந்தார்கள். பக்தர்களின் கூட்டமும் அதிகமாயிருந்தது. வித்வான்கள் பேசி முடித்ததும், ஸ்வாமிகள் இஸ்லாமியரைத் தம் பக்கத்தில் ......(சில எழுத்துக்கள் கிடைக்கப் பெற வில்லை)....
பக்கம் 25....ஆச்சரியத்தையே அளிக்கும். காலஞ்சென்ற கீர்த்தனாச்சாரிய ஸி.ஆர்.சீனிவாச ஐயங்கார் அக்காலத்தில் அடிக்கடி ஸ்வாமிகளிடம் வந்து போவதுண்டு. மகாராஷ்டிர பாஷையையும் அதிலுள்ள நூல்களையும் கற்பதில் ஸ்வாமிகளுக்கு அவா மிகுதியாய் இருந்ததால், பம்பாய் மாகாகணத்திலிருந்து மகாராஷ்டிர பண்டிதர் ஒருவரைத் தருவித்து மூன்று வருடங்களுக்கு மேல் அவரை மடத்தில் தங்கச் செய்து வைத்தனர். அவரிடம் ஸ்வாமிகள் பல மகாராஷ்டிர நூல்களையும் ஆராய்ச்சி செய்துள்ளார். தமிழில் ஸ்வாமிகளுக்கு இருந்த ஆர்வம் எல்லாவற்றையும் விட அதிகமாகும். ஓய்வு நேரங்களில் ஆஅவர்கள் சில புலவர்களின் துணைகொண்டு தமிழ் இலக்கண, இலக்கியங்களையும் பயின்று வந்தார்கள். தேவாரம், திருவாசகம், பெரிய புராணம், திருவிளையாடற் புராணம், திருக்குறள் ஆகியவைகளையும் அவர்கள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வந்தார்கள். கலைகளுக்குத் தனிமையான காலத்தை அவர்கள் ஒதுக்கிக் கொள்ளவில்லை. கலைகளில் தேர்ச்சி பெற்றவர்களுடன் ஓய்வு கிடைக்கும் நேரங்களிலெல்லாம் பேசிக்கொண்டுவரும் பொழுதே, அக்கலைகளின் நுட்பங்களை அவர்கள் அறிந்து கொள்வார்கள். அவற்றுள் சங்கீதக்கலை ஸ்வாமிகளின் மனஸை மிகவும் கவர்ந்தது.அடிக்கடி ஸ்வாமிகள் தம் பர்ணசாலையை விட்டு அகண்ட காவிரியின் நடுவில் அமைந்த திட்டுக்களுக்குச் சென்று, அவ்விடம் நெடுநேரம் தங்கி, இயற்கைக் காட்சிகளைக் கண்டு களித்திருப்பார்கள், ஆஅநேக சமயங்களில் அவர்கள் தனிமையில் தியானத்திலும் அங்கு அமர்ந்து விடுவார்கள். இயற்கைக் காட்சிகளையெல்லாம் படம் பிடிப்பதில் ஸ்வாமிகளுக்கு மிகுந்த ஆசையுண்டு. அக்காலத்தில் ஒருவர் போட்டோ காமிராவுடன் ஸ்வாமிகளைத் தெடாதொடர்ந்து வருவது வழக்கம். அவரைக் கொண்டு பல இயற்கைக் காட்சிகளைப் படம் எடுக்கும்படி ஸ்வாமிகள் கட்டளை இடுவார்கள். காமிராவிலிருக்கும் நுட்பங்களெல்லாம் ஸ்வாமிகளுக்கு நன்கு தெரியுமாதலால், படம் நன்றாக விழக்கூடிய ஆலோசனைகளைப் படம் பிடிப்போருக்கு ஸ்வாமிகள் அடிக்கடி கூறுவதுண்டு. மேலும் மாற்றுக் கண்ணாடியைக் கழுவுதல், பிரதிகள் எடுத்தல், இவைகளிலும் தம் அரிய யோசனைகளை ஸ்வாமிகள் அவருக்குக் கூறுவார்கள். கணிதம், சோதிடம், வானசாஸ்திரம், இவைகளிலும் ஸ்வாமிகள் நல்ல விற்பன்ன...பக்கம் 26......ராக ஆனார்கள். இவைகளில் பயிற்சி பெறுவதற்கென அவர்கள் திருவையாறு சுந்தரேச ச்ரௌதிகளின் சீடரான மரூர், இராமஸ்வாமி சாஸ்திரிகளைப் பல வருடங்கள் மடத்திலேயே இருக்கும்படி செய்து, அவரது குடும்பத்தையும் ஆதரித்து வந்தார்கள். தேவாரம் பாடம் கேட்பதில் ஸ்வாமிகளுக்கு ஆர்வம் அதிகம். நல்ல இசையுடன் பாடுகிறவர்கள் மடத்துக்கு வரும்பொழுதெல்லாம், ஸ்வாமிகள் பல மணி நேரம் அவர்களுடன் கூட இருந்து, தம் மனஸிற்கிசைந்த தேவாரங்கள் பலவற்றைப் பாடச்சொல்லிக் கேட்டுக்கொண்டே இருப்பார்கள். திருவாய்மொழி முதலிய வைணவப் பிரபந்தங்களிலும் ஸ்வாமிகளுக்கு நல்ல பற்று உண்டாயிற்று.மகேந்திர மங்கலத்தில் நம் ஸ்வாமிகள் தங்கியது 1911 முதல் 1914வரையிலுள்ள காலமாகும். 1914-இல் ஸ்வாமிகள் கும்பகோணம் திருப்பினார்கள். அவர்களுக்கு வித்தியாப்யாஸ இடமாயிருந்த மகேந்திரமங்கலத்தில், அதன் ஞாபகார்த்தமாகக் காவிரியின் கரையில் ஒரு சங்கர ஆலயம் நிறுவப்பெற்றது. ஸ்வாமிகள் மகேந்திர மங்கலத்திலிருந்து திரும்பியபோது அவர்களுக்குப் பிராயம் இருபது. இக்காலத்தினுள் அவர்கள் பல துறைகளிலும் அறிவு நிரம்பி விளங்கினார்கள். புராணங்கள், ஸ்தல வரலாறுகள், கல்வெட்டுக்கள் ஆகியவறைப் பற்றிய அறிவு, நவீன உலக ஞானம் ஆகிய பல துறைகளிலும் அவர்களுக்கு நல்ல பரிச்சயம் ஏற்பட்டிருந்தது. ஒருமுறை அறிந்தவற்றை அவர்கள் என்றும் மறப்பதில்லை. தம்மைக் காண வரும் அறிஞர்களிடமிருந்து தாம் அறிந்தவற்றோடு, தம் ஊகத்தால் ஒவ்வொரு அறிவின் தத்துவத்தையும் ஆராய்ந்து உண்மையைக் கண்டு கொள்வதில், நம் ஸ்வாமிகள் மகா மேதைகளுள் ஒருவராகத் திகழ்கின்றார்கள். பிறரோடு பழகும் திறமைகளிலும் ஒவ்வொருவருடைய தாரதம்யத்தைச் சீர்தூக்கி அறியும் நிபுணத்துவத்திலும் அவர்களுக்கு இணையாக மிகச் சிலரையே கூறலாம்.ஸ்வாமிகள் கும்பகோணத்தில் தங்கியிருந்தபொழுது, சுமார் 30 மைல் தூரத்திலுள்ள கங்கைகொண்டசோழபுரத்திற்கு வருடத்திற் கொருமுறை விஜயம் செய்து, தஞ்சைப் பெரிய கோவிலின் அமைப்பில் கட்டப்பட்டுள்ள அவ்வாலயத்தின் மிகப் பெரிய சிவலிங்கத்தைத் தரிசித்து, சிதிலமடைந்த அக்கோவிலின் ...பக்கம் 27.....சிலாசாஸனங்களையெல்லாம் ஆராய்ச்சி செய்துவருவார்கள். இவ்வாராய்ச்சியில் ஸ்வாமிகளுக்கு உதவியவர்களில், சிலாசாஸன இலாகா பி.வி. ஜகதீச ஐயரையும், இஞ்சினீயர் அனந்தாழ்வாரையும் குறிப்பிடலாம். இவ்வாறு நம் ஸ்வாமிகள் தம் இருபதாவது பிராயத்துக்குள்ளேயே தம் பதவிக்கேற்ற வித்யா விலாஸத்துடன் விளங்கலானார்கள்.5. 1911-முதல் 1915-வரையில் மடத்தின் நிர்வாகம்.ஜில்லா கோர்ட்டு நிர்வாகத்தில் மடம்அக்காலத்தில் ஸ்வாமிகள் மைனராக இருந்ததால், அவர்களுக்கு இருபத்தோராவது பிராயம் பூர்த்தியாகும்வரையில், மடத்து நிர்வாகம் ஜில்லா கோர்ட்டின் பாதுகாப்பில் இருக்க வேண்டுமென்று மடத்தில் அக்கரைகறை கொண்ட சில சீடர்கள் சென்னை அரசாங்கத்தாருக்கு விண்ணப்பித்துக் கொண்டிருந்தார்கள். கோர்ட்டு நிர்வாகத்தில் கொண்டு வரக்கூடிய அளவில் மடத்தின் சொத்துக்கள் இல்லாமலிருந்தும், அதன் நன்மையைக் கருதி மடத்தைக் கார்டியன் அண்டு வார்ட்ஸ் சட்டப்படி நடத்தக் கோர்ட்டார் உத்திரவு இட்டார்கள். கோயம்புத்தூர் ஜில்லா கொளிஞ்சிவாடி கிராமத்தைச் சார்ந்த ஸ்ரீமான் ஸி.எச். வேங்கடரமண ஐயர் என்னும் பிரமுகர் கார்டியனாக நியமிக்கப்பட்டார். 1911-ஆம் வருடம் முதல் 1915-ஆம் வருட மே மாதம்வரை, மடத்தின் நிர்வாகம் அவர் மூலம் நடைபெற்று வந்தது. 1915ஆம் வருடம் மே மாதம் நடைபெற்ற சங்கர ஜயந்தி அன்று, ஸ்வாமிகளுக்கு இருபத்தோராவது ஆண்டு பூர்த்தியாகவே, அன்று முதல் மடத்தின் நிர்வாகத்தை ஸ்வாமிகளே நேரில் ஏற்றுக் கொண்டார்கள். பெயரளவில் நிர்வாகம் ஏற்றுக் கொள்ளப்பட்டதே யொழிய, சர்வமுக்கியார்நாமா என்னும் அதிகாரம் பெற்ற ஏஜண்டு ஒருவராலேயே மடத்தின் நிர்வாகக் காரியங்களெல்லாம் கவனித்து வரப்பட்டன. அக்காலத்தில், பாலப்பருவம் தொடங்கியே ஸ்வாமிகளிடம் விசேஷப் பற்றும் பக்தியும் கொண்டிருந்த திருப்பாதிரிப்புலியூர் வாசியான பசுபதி ஐயர் என்னும் சீடர் ஊதியமின்றி மடத்தின் நிர்வாகத்தை ஏற்று, எல்லாத் துறைகளிலும் திறம்பட பணியாற்றி வந்தார். பழைய கால வழக்கப்படி எந்தத் தஸ்தா....பக்கம் 28......வேஜுவிலும் ஸ்வாமிகள் கையெழுத்திடுவதில்லை. ஏஜண்டுகளுக்குப் பவர் கொடுக்கும் பொழுதும், மடத்தின் ஸ்ரீமுக முத்திரையே உபயோகப்படுத்தப்பட்டு வருவது வழக்கம்.இந்த முறையில் 1915-ஆவது வருட சங்கர ஜயந்தி மடத்தில் மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. நாட்டின் பல பாகங்களிலிருந்தும் சீடர்கள் பெருந்திரளாகக் கூடியிருந்தனர். வேத நூல்களின் சாரங்களை யாவரும் எளிதில் அறியும் பொருட்டு, ஆரிய தருமம் என்னும் தமிழ்ச் சஞ்சிகையை மடத்தின் மாதவெளியீடாக அன்று ஸ்வாமிகள் ஆரம்பித்து வைத்தார்கள். ஸ்ரீரங்கம் வாணிவிலாஸ் அச்சகத்திலிருந்து ஸ்ரீ டி.கே. பாலசுப்ரமணிய ஐயர் மேற்பார்வையில் அந்தச் சஞ்சிகை உயரிய முறையில் வெளிவந்தது. மடத்தின் நிர்வாகத்திலும் பல சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன. சிஷ்யர்களின் நன்மையின் பொருட்டுப் பல பாஷைகளில் மடத்தின் சரித்திரம் வெளியிடப் பெற்றது. மடத்திலுள்ள தாமிரப்பட்டயங்கள் திருவனந்தபுரம் சிலாசாஸனப் பரிசோதகர் ஸ்ரீ டி.ஏ.கோபிநாத ராஜ் அவர்களால் பரிசீலனை செய்யப்பட்டுப் புத்தக வடிவமாக வெளிவந்தது.---------------6. நவராத்திரி உற்சவம்லக்ஷதீபம், லக்ஷார்ச்சனை1916-ஆவது வருடம் அக்டோபர் மாதத்தில் கும்பகோணம் ஸ்ரீ மடத்தில் நவராத்திரி விழாவானது மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இந்த ஒன்பது நாட்களிலும் அம்பிகைக்கு லக்ஷார்ச்சனை செய்யப்படும், நெய்யினால் லக்ஷ விளக்குகள் ஏற்றப்பட்டும், லக்ஷம் பிராமணர்களுக்கு அன்னமளிக்கப்பட்டும் இவ்விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவைப் பற்றி ஸ்ரீ சி.சுப்ரமண்ய பாரதியார் தமது கட்டுரை ஒன்றில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.“உலகத்தார் பராசக்தியை நல்ல மழை அருள்புரியும் சரத் காலத்தின், முதல் ஒன்பது இரவும், வணங்கிப் பூஜைகள் செய்ய வேண்டும் என்பது பூர்வீகர் ஏற்பாடு, மிகப் பயனுடைய காரியம், மேலானவழி. கும்பகோணம் சங்கர மடத்தில் இந்தப் பூஜை மிகவும் கோலாகலமாக நடத்தப்....பக்கம் 29......போவதாகப் பத்திரிகையில் ஒரு தந்தி போட்டிருந்தது. சகஜமான விசேஷம். தேசம் முழுவதும் இப்படி நடப்பது நல்லது. சங்கர மடத்திலும் எனக்கு ஒருவிதமான ஆவல் உண்டானதால் தந்தியை வாசித்துப் பார்த்தேன். அந்தத் தந்தியிலே பாதி சாஸ்திரம், வர்த்தமான தந்திக்குள்ளே சாஸ்திரத்தை நுழைத்தது ஒரு வினோதம். ஆனால் அதில் கண்ட சாஸ்திரம் உண்மையாக இருந்தது. நான் எதிர் பார்க்கவில்லை. எனவே தந்தியைப் படித்த பொழுது எனக்கு மகிழ்ச்சி உண்டாயிற்று.கும்பகோணத்துத் தந்தி பேசுகிறது - இந்த பூஜைகளின் நோக்கம் உலக நன்மை. நவராத்திரி காலத்தில் யோகமாயை துர்க்கை, லக்ஷ்மி, ஸரஸ்வதி என்ற மூன்று வித வடிவம் கொண்டு துஷ்டரையெல்லாம் அழித்து, மனித ஜாதிக்கு மகிழ்ச்சி பெருக வைத்தாள். மனிதர் படும் துன்பத்தைத் தீர்க்கும் பொருட்டாக, தேவி அவ்வாறு அவதாரம் செய்த காலம் முதல் இன்றுவரை பாரத தேசத்தில் எல்லாப் பக்கங்களிலும் ஆரியர் இந்தத் திருவிழாவைக் கொண்டாடி வருகிறார்கள். தேவி உலகம் முழுவதிலும் பரவி இருக்கிறாள். இவளே மாயை, இவளே சக்தி, செய்பவளும் செய்கையும் செய்கைப் பயனும் இவளே, தந்தையும் தாயும் இவள், இவளே பரப்ருமம்“ (பாரதி நூல்கள், கட்டுரை- பக்கம் 32, 33)இவ்விழாவை ஏற்பாடு செய்தவர்களில் முதன்மையானவர்கள் தஞ்சை ஜில்லா மிராசுதார்களான பில்லூர் அபிராமி ஐயர், வில்லியனூர் வைத்தியநாத ஐயர், கோட்டூர் கிருஷ்ணஐயர், கொத்தங்குடி ஸ்ரீநிவாச ஐயர், கல்லூர் வெங்கப்ப ஐயர், சென்னை கணேஷ் கம்பெனியின் சொந்தக்காரர் ஸ்ரீ எம்.ஆர்.ராமசேஷ ஐயர், சித்தமல்லி சுப்ரமண்ய ஐயர் ஆகியோராவர். இவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சிக்கு ஊக்கம் அளித்து விசேஷமாகப் பொருளுதவி புரிந்தவர்களில், திருப்பனந்தாள் காசிமடம் அதிபர் ஸ்ரீலஸ்ரீ சொக்கலிங்கத் தம்பிரான் ஸ்வாமிகள் அவர்களையும், ஆண்டிப்பட்டி ஜமீன்தார் சா.ராம.மு.சித.பெத்தாச்சி செட்டியார் அவர்களையும், நந்தவரம் இராஜாப்பையர் அவர்களையும் முதன்மையாகக் குறிப்பிடலாம். மடத்தின் முதல் முற்றத்தில்...பக்கம் 30..சித்திர வேலைகள் அமைந்த அற்புதமான ஒருபெரிய கொட்டகை அமைக்கப்பெற்றிருந்தது.துர்க்கை, லக்ஷ்மி, ஸரஸ்வதி இம்மூன்று தேவிமார்களும் கிழக்கு நோக்கி ஆவாகனம் செய்யப்பெற்றிருந்தனர். அன்றாடம் புஷ்பங்களும் மலைபோல் வந்து குவிந்தன. தேவியின் பூஜையில் தேர்ச்சி பெற்றிருந்தவர்கள் லலிதா ஸஹஸ்ரநாமத்தைச் சொல்லி ஒவ்வொரு நாளும் பலமுறை அர்ச்சனை செய்தனர். பித்தளையினால் செய்யப்பட்ட 12,000 அகல் விளக்குகளை சுவரில் லிங்க வடிவமாகவும், ரிஷப வடிவமாகவும், யானை வடிவமாகவும், துவாரபாலகர் வடிவமாகவும் அமைத்து, அவற்றில் நெய் ஊற்றி விளக்குகள் ஏற்றிப் பத்து இரவிலும் எரிய விட்டிருந்தனர். ஒருபுறம் ஆழமான ஓம குண்டங்களில் புரோகிதர்கள் கொழுந்து விட்டெரியும் அக்னி .ஜ்வாலையை எழுப்பிச் சண்டீஹோமம், ஸ்ரீவித்யா ஹோமம் இவைகளைச் செய்து வந்தனர். நூற்றுக்கணக்கான வித்வான்கள் இராமாயணம், பாகவதம், தேவிமகாத்மியம், சௌந்தர்யலஹரி, பகவத்கீதை இவைகளைப் பாராயணம் செய்தனர் மூன்று வேதங்களிலும் வல்லவர்கள் வேத கோஷத்தை ஒருபுறம் ஒலிக்கச் செய்தனர். புலவர்கள் தங்கள் புலமையை விளக்கி மற்றொரு புறம் சொற்பொழிவுகள் ஆற்றிவந்தனர்.அப்பிகைக்குப் பிரியமான வீணை முதலான வாத்தியங்களின் நாதம் எப்பொழுதும் ஒலித்தவண்ணமாக இருந்தது. அக்காலத்தில் நம் நாட்டில் வாழ்ந்த எல்லாச் சங்கீத வித்வான்களும், பாகவத சிகாமணிகளும் போட்டியிட்டுக்கொண்டு தங்கள் தங்கள் கலைத்திறன்களைத் தேவிக்கு அர்ப்பணம் செய்தார்கள். சரஸ்வதிபூஜை யன்று இராமநாதபுரம் பூச்சி ஐயங்காரென்னும் ஸ்ரீநிவாஸ ஐயங்கார் அவர்களின் கச்சேரியும், மதுரை புஷ்பவனம் ஐயரின் கச்சேரியும் மிகவும் சோபையை அளித்தன. அந்த விழாவில் இராமனாதபுரம் பூச்சி ஸ்ரீநிவாஸ ஐயங்கார் அவர்களின் கச்சேரி தஞ்சை ஜில்லா ரசிகர்களைப் பரம ஆனந்தத்தில் ஆழ்த்திவிட்டது. ஸ்வாமிகள் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் அவ்வப்போது நேரில் விஜயம் செய்து, அடியார்களை மகிழ்வித்த காட்சி என்றும் மறக்க முடியாததாகும். ஏறக்குறை 300 தொண்டர்கள் இவ்விழாவில் தொண்டாற்றினார்கள். ரூபாய் 50,000 வரையில் (அன்னதானம் நீங்கலாக) இவ்விழாவுக்குச் செலவு செய்யப்பட்டது. லக்ஷம் பேர்...பக்கம் 31...தொடரும்...
பக்கம் 31......களுக்கு மேல் அன்னதானம் செய்யும் பணியை மகான் தேப்பெருமாள் நல்லூர் சிவன் அவர்கள் ஏற்று நடத்தினார்கள். ஒவ்வொரு நாளும் பதினாயிரம் மக்களுக்குமேல், சேர்ந்தாற்போல் பத்து நாட்களுக்கு அறுசுவையுடன் அன்னமிட வேண்டிய உணவுப் பொருள்களைச் சேகரிக்க எவ்வளவு பிரயாசை வேண்டுமென ஆலோசித்தால் அஃது ஓர் ஆச்சர்யத்தையே விளைக்கும். திவான் சேஷையா சாஸ்திரிகள் வீட்டில் ஒரு பண்டக சாலை நிறுவப் பெற்றது. தஞ்சை ஜில்லா மிராசுதார்களும், வியாபாரிகளும் ஒரு மாதத்துக்கு முன் தொடங்கியே தங்கள் காணிக்கைகளாக உணவுப் பொருள்களை இவ்விழாவுக்கென அனுப்பிவைத்தார்கள். அரிசி மூட்டைகள் ஆயிரக்கணக்காக வந்து குவிந்தன. நுற்றுக்கணக்கான மரப் பீப்பாய்களில் மோரை அடைத்து அவற்றைத் தண்ணீரில் மிதக்க விட்டிருந்தார்கள். சுமார் 200 சமையல் சிப்பந்திகள் பணிசெய்தனர். மடத்தின் தோட்டத்தில் ஒரே தடவையில் 1000 பேர்கள் உட்கார்ந்து புசிக்கும் வசதியுடன் பெரிய பந்தல்கள் அமைக்கப் பெற்றிருந்தன. பனிக்குன்று போன்ற அன்னக் குவியல்கள், யானைகளை முழுகடிக்கும் அண்டாக்களில் சாம்பார், ரசம் முதலிய மற்ற உணவுப் பொருள்கள் ஆகியவை தாயதயாரிக்கப் பெற்றன. இவையெல்லாம் சிவனது தனிமையான மேல் பார்வையில் நடைபெற்றன. எல்லாம் அமைதியுடன் யாவருக்கும் எவ்விதமான குறைவுமின்றி நடந்தேறியது. ஒழுங்கைப் பாதுகாப்பதில் சிவன் மிகவும் கண்டிப்பானவர். எந்தச் சிப்பந்தியும் அல்லது உணவருந்த வருபவரும் அவரது கட்டுப்பாட்டுக்கு அடங்கியே நடக்கவேண்டும்.பத்தாவது நாளாகிய விஜயதசமி அன்று இரவில், ஸ்ரீஸ்வாமிகள் உள்ளூர்த் தேவாலயங்களுக்கு விஜயம் செய்து ஸ்வாமி தரிசனம் செய்து கொண்டார்கள். அனறு யானைமீது அம்பாரியில் ஸ்வாமிகள் பவனி வந்த காட்சியைப் பல்லாயிர மக்கள் கண்டு களித்தனர். சுமார் ஒரு மைல் நீளமுள்ள அந்த ஊர்வலத்தை ஆண்டிப்பட்டி ஜமீன்தார் பெத்தாச்சி செட்டியாரும், திருப்பனந்தாள் காசி மடம் ஸ்ரீலஸ்ரீ சொக்கலிங்கத் தம்பிரான் ஸ்வாமிகளும் முன்னின்று நடத்தி வைத்தனர். இருபுறமும் நூற்றுக்கணக்கான பவர் விளக்குகள், கண்ணைக் கவரும் வாண வேடிக்கை, ஆறு ஜதை நாயனம், மூன்று ஜதை பாண்டு, வேத பாராயணம்....பக்கம் 32 ....தொடரும்...
7. கல்விக்கும் கலைகளுக்கும் ஊக்கமளித்தமை - அத்வைத சபைக்கூட்டமும் பண்டிதர்களுக்குப் பாராட்டும்1917-ஆவது வருட ஆகஸ்ட் மாதம், கும்பகோணம் அத்வைத சபையின் வருடாந்தக் கூட்டம் முடிவு பெற்றவுடன், ஸ்வாமிகள் ஒரு வித்வத் சபையைக் கூட்டி, அக்காலத்தில் மகா வித்வான்களாக விளங்கிய பிரும்மஸ்ரீ பழமார்நெறி இராமஸ்வாமி சாஸ்திரிகள், பிரும்மஸ்ரீ திருவிசைநல்லூர் வேங்கட சுப்பா சாஸ்திரிகள், ஆகிய இவர்களுக்குச் சாஸ்திர ரத்னாகரம் என்னும் பட்டத்தை வழங்கி, இரட்டை சால்வை, வெள்ளிஜாரி முதலிய சன்மானங்கள் செய்து அவர்களைக் கௌரவித்தார்கள். இந்தப் பட்டத்தை அதன் பிறகு நாளது வரையில் பல வித்வான்கள் பெற்றிருக்கிறார்கள். அவர்களின் பெயர்கள் கீழே குறிப்பிட்டுள்ளன.1. மன்னார்குடி மகாமகோபாத்யாய யக்ஞசாமி சாஸ்திரிகள்
2. சிதம்பரம் மகாமகோபாத்யாய தண்டபாணிசாமி தீக்ஷிதர்.3. புதுக்கோட்டை சமஸ்தான தாதனாதிகாரி திருவையாறு விச்வநாத சாஸ்திரிகள்
4. தேதியூர் சுப்ரமண்ய சாஸ்திரிகள்5. விஜயநகரம் மகாமகோபாத்யாய தாத சுப்பராய சாஸ்திரிகள்6. குண்டீர் திண்டுகூரி நரசிம்ம சாஸ்திரிகள்7. கல்கத்தா சர்வ கலாசாலை மகாமகோபாத்யாய என். எஸ். அனந்த கிரஷ்ண சாஸ்திரிகள்.8. கல்கத்தா சர்வ கலாசாலை மகாமகோபாத்யாய ஏ.சின்னசாமி சாஸ்திரிகள்9. காசி ஹிந்து சர்வகலாசாலை டி.இராமச்சந்திர தீக்ஷிதர்
பக்கம் 33.. தொடரும்....
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
காளைராஜன், கீதா இருவரின் இழைகள் முந்தியபக்கம், பிந்தியபக்கம் என்ற வகையில் கொஞ்சம் குழப்பம். அது சரி செய்து கொள்ளலாம். பிரச்னையில்லை.
நன்னிலம் தாலுகாவிலுள்ள கிராமங்களில் யாத்திரையை முடித்துக் கொண்டு ஸ்வாமிகள் மன்னார்குடி தாலுகாவிலுள்ள கிராமங்களில் பெரும்பான்மையாக யாத்திரையைத் தொடர்ந்து நடத்தி வந்தார்கள். ஸ்வாமிகள் விஜயம் செய்த ஒவ்வொரு ஊரிலும் சமுகத்தினர் யாவரும் மிகவும் ஒற்றுமையுடன் ஸ்வாமிகளது பணியில் ஈடுபட்டிருந்தனர். மன்னார்குடி....(சில எழுத்துகள் கிடைக்கவில்லை)...