1950 - 63 காலக்கட்டங்களில் கட்டுரையில் குறிப்பிட்ட காலமும், நிகழ்வும் உண்மையே. இளம் பெண்கள் வெளியில்
வர அஞ்சுவார்கள். இப்போது தமிழ் சினிமாவில் காணப்படும் வெட்டி, குத்து,அரிவாள் வெட்டி சர்வ சாதாரணமாக
நிகழ்ததது. நான் கண்ட காட்சி ஒன்று. 25 வயதுதக்க இந்திய ஆடவர் அரிவாளுடன் சர்வ சாதாரணமாக நடந்து வந்து
அங்கிருந்த ஒரு சீனரை அரிவாளால் சரமாரி வெட்டி விட்டு அருகில் இருந்த தண்ணீர் குழாயில் சுத்தம் செய்து விட்டு
நிதானமாகவே நடந்து சென்றார்.
இப்படி தீவு முழுதும் குண்டர்கள், ரெளடிகள் நீக்கமற இருந்தார்கள். அரசியல் கட்சி கம்மினியூட்ம் ஒரு பக்கம் வேறு மாதிரி சீனாவை பின்பற்றி அரசியல் நடத்தினார்கள்.
1967- 68 ல் நான் குடியிருந்த வாடகை வீட்டிற்கு ஒரு தம்பதியர் குடி வந்தார்கள். அவர்கள் வருமுன்னமே அவரைப் பற்றி செய்தியினை நண்பர் சொன்னார்கள். அவர் ஒரு குண்டர், ரெளடி, தீவில் இருந்தவர்கள் என்று பயமுறுத்தும் வகையில் கூறினார்கள். பின் அத்தம்பதிகள் குடிவந்த பின் சில வாரங்கள் நான் அவரோடு பேசுவதில்லை. சற்று
தள்ளியே இருந்தேன். இதற்கிடையில் எனது மனைவியும், குடி வந்த பெண்ணும் நெருங்கிய தோழியாகிவிட்டார்கள்.
அதன் வழி நானும் அவரோடு பழக ஆரம்பித்தேன். அப்போதுதான் அவரின் உண்மை சொரூபம் தெரிந்தது. உள்ளபடி மிக நல்ல மனிதர். பிறர்க்கு உதவி செய்யும் நல்ல உள்ளம் படைத்தவர்.
தீவிலிருந்து கடல் மார்க்கமாக தப்பி வந்து, பாதி வழியில் கைது செய்யப்பட்டு..., தூக்கு தண்டனை வரை போய் பின்
தெய்வீகத்தால் தப்பி வந்தவர். அந்தமான் தீவு போல் இந்த தீவுக் குறித்தும் பல செய்திகளை கதை,கதையாக சொல்வார். அவர் இறக்கும் வரை என்னை மறவாது வந்து சந்திப்பார்.இரண்டு மகன் இப்போது இருக்கிறார்கள். மனைவியும் இறந்து விட்டார்கள்.
டாக்டர். ஜான்சன் கூறியவை சரிதான். ஆனால், நண்பர் கூறிய செய்திபடி காவல் அதிகாரி டட்சன் ஒரு முரட்டு அதிகாரி என்றுதான் சொன்னார். அதே சமயம் இன்னொரு சுவையான செய்தியும் கூறினார். கைதிகளின் குற்ற பையில் (FILE)- களை ஒரு நூலில் கட்டி அவரின் ஆபீஸ்சில் தொங்கவிட்டு இருப்பாராம். அது, (FILE எப்போது தானாக அறுந்து விடுகிறதோ அப்போது விடுதலை அளிப்பாராம். அங்கு விளையும் கத்திரிகாய், வெள்ளரி இன்னும் பல
காய்கறிகளை எண்ணி வைத்திருபாராம். ஒன்று குறைந்தால் கூட மறுநாள் எல்லோரையும் அழைத்து கூட்டம் போட்டு விசாரிபபாராம்.