பெண்ணை வெறும் கைப்பாவையாக வைத்திருந்த காலம்!

217 views
Skip to first unread message

coral shree

unread,
Apr 21, 2012, 9:49:27 PM4/21/12
to மின்தமிழ், vall...@googlegroups.com, தமிழ் சிறகுகள், தமிழ் வாசல், rajam, Seethaalakshmi Subramanian


//இதுபோன்ற தகவல்கள்தானே நமக்கு வேண்டும்! மிக மிக நன்றியப்பா!

அந்த "ரவுக்கை கழட்டுற" பழக்கம் இடத்துக்கு இடம் வேறுபடுமோ-னு நினைக்கிறேன், பெண்ணே!
இன்னும் சொல்ல நிறைய இருக்கில்லெ -- "சேலை முந்தானையெப் போர்த்திக்கொள்ள" வேண்டிய பழக்கத்திலிருந்து தொடங்கி?!!// ராஜம் அம்மா.


யானை கட்டி போரடித்த காலம்! பொன் விளையும் பூமி. பஞ்சம் வந்த காலத்திலும் ஊருக்கு தானியங்களை படியளந்த வள்ளல். சமுதாயத்தில் தலை நிமிர்ந்து வாழ்ந்த காலம். ஜவஹர்லால் நேரு, காமராசர் என பெருந்தலைவர்களுக்கு வீட்டில் விருந்து வைத்து உபசரித்ததன் சாட்சியாக 8 அடியில் நெடிதுயர்ந்த புகைப்படங்கள். அண்ணாந்து பார்த்தால் கழுத்து வலிக்கும் அளவிற்கு உயரமான சுவர்கள். ஒரு தெருவில் ஆரம்பிக்கும் வாசல், மறு தெருவில் முடிவுறும் பொடக்காளி என்கிற பின்வாசல். சேலம் மாநகரின் சேர்மன் ராமலிங்கம் என்றால் அன்றைய காங்கிரசு வட்டாரத்தில் மிக பிரபலம். இன்றும் ஊரில் பெயர் சொல்லிக் கொண்டிருக்கும் சேர்மன் ராமலிங்கம் மார்க்கெட், சேர்மன் ராமலிங்கம் மெயின் ரோடு, சேர்மன் ராமலிங்கம் பள்ளிக்கூடம் என்று மாளாத சொத்துகளை ஊருக்காக வாரி இறைத்த வள்ளல்தன்மை தந்த பரிசாக பறை சாற்றிக் கொண்டிருக்கும் நிதர்சனம். உக்கிராண அறை என்கிற பொக்கிச அறை! (ஒரு அறையே பீரோவாக இருந்த ஆச்சரியம்) அரசியல் தலைவர்கள், கல்வியாளர்கள் என்று சதாசர்வ காலமும் நிறைந்த சபையாக இருக்கும் இல்லம். இப்படி ஊரின் முக்கிய பிரபலங்களின் ஒருவராய் இருந்த என் தாய் வழித்தாத்தா. இவ்வளவு பெருமையும், புகழும், செல்வாக்கும் தாண்டவமாடிய ஒரு குடும்பத்தில் ஒரு பெண்ணின் நிலை என்ன என்பதைக் காட்டவே இந்த முன்னுரை.

ராஜாராம் மோகன்ராய், திலகர் போன்றோரின் பெரும்போராட்டத்தின் விளைவாக சதி என்னும் உடன்கட்டை ஏறும் வழக்கம் முற்றிலும் ஒழிக்கப்படது. ஆனால் ஒவ்வொரு நாளும், தீக்குளித்து புழுவாய்த் துடித்த வாழ்க்கையில் இருந்து மீள அந்த தலைமுறையினரால முடியவில்லை.  பருவம் எய்துவதற்கே முன்பே ஏழு வயதில் திருமணம். மணமகனுக்கும் இளம் பருவம். திருமணம் முடித்தவுடன், திரும்ப தாய் வீட்டு வாசம். ஆனால் பள்ளிப்படிப்பும், சகஜமாக வெளியில் திரிந்து விளையாடும் அனுமதியும் மறுப்பு. வீட்டில் சமையலும் மற்ற பழக்க வழக்கங்களும் கற்றுக் கொடுக்கப்படும். பருவ வயது வந்தவுடன் நல்ல நாள் பார்த்து கணவர் வீட்டில் கொண்டுபோய் விட்டுவிடுவார்கள். 13 வயதில் ஒரு வாலிபருக்கு மனைவியாக குடும்ப வாழ்க்கைக்குத் தயாராக வேண்டிய கட்டாயம். அன்றிலிருந்து இரவிக்கைக்கு விடுதலை. சில பெண்கள் கச்சை என்ற பெயரில் அணிந்திருப்பார்களாம். இவர்களெல்லாம் தன் சேலை முந்தானையை ஒரு சுற்று உள்ளாடையாக நாணத்தை மறைக்க தாங்களே ஏற்படுத்திக் கொண்ட வழமையாக்கிக் கொண்டிருந்திருக்கிறார்கள். பருவ வயது. வெள்ளை வெளேர் என்ற பளபளப்பான அழகிய தோற்றம். ஒரு பெண் உள்ளாடையும் இரவிக்கையும் அணியக்கூடாது என்றால் அவள் நிலை என்னவாக இருக்கும்? அவமானத்தால் கூனிக்குறுகி கதவின் இடுக்கை விட்டு வெளியே வரவே முடியாத, ஆண்களின் முகத்தில் முழிக்கவே இயலாத நிலை. குடும்பப் பெண்களின் பெர்ம்பாலோனோர் இந்நிலையில் இருக்க வேண்டிய கட்டாயத்தில் கூட தாசிகள், பரத்தையர் என்ற ஒரு கூட்டம் உருவாக்கப்பட்டிருக்கலாம். ஆண்களுக்கு ஒரு வடிகாலாக அவர்கள் இருந்திருக்கலாம். அங்கு சென்று வரும ஆண்களை தவறு சொல்லும் வழக்கமே இல்லாமல் இருந்திருக்கிறது...சில நேரங்களில் அதெல்லாம் அவர்களுக்கு கௌரவமான தோற்றத்தைக் கொடுக்கக் கூடியதாகக்கூட இருந்திருக்கிறது.

இந்நிலையில் ஒரு பெண்ணின் அறிவு வளர்ச்சி எந்த அளவில் இருக்க முடியும் என்று எளிதாக ஊகிக்க முடியும். அதற்கு அடுத்து வந்த காலம் சற்று விழிப்புணர்வு ஏற்பட்ட காலமாக இருந்திருக்கிறது. ஒரு பெண் கல்வி கற்றால் அந்த குடும்பமே அறிவு பெறும் என்பார்கள். ஆனால் கல்வியறிவே இல்லாத ஒரு தாய், பொது வாழ்க்கையில் சதாசர்வ காலமும் உழன்று கொண்டிருக்கும் தந்தை, ஆள் அம்பு என்று பணி செய்ய பலர் இருந்தாலும், குழந்தைகளை படிப்பறிவே சற்றும் இல்லாத ஒரு தாயால் எப்படி நன்கு வளர்க்க முடியும். சமையலறையை விட்டு வெளியே வரவே கூச்சம்... இதுதான் ஆண்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட இயந்திரமாக பெண்ணின் வாழ்க்கை. தன் சட்டங்களுக்கு அடி பணிய வேண்டும், தன் கட்டுப்பாட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என்ற அந்த ஆதிக்க உணர்வு பெண்களின் வாழ்க்கையை அழகுப் பதுமைகளாக சமையலறையுடன் முடக்கிப் போட்டிருக்கிறது. அசுர உழைப்பு இருந்த அவரிடம் மன உறுதியையும் பார்க்க முடியும். தன் 60 வயதில் ஒரு மூட்டை அரிசியை இழுத்துப்போடும் அளவிற்கு சக்தி கொண்டவர்கள். தன் 85 வயதுவரை நல்ல கண் பார்வையுடன் எவருடைய உதவியும் இல்லாமல் தானே சமைத்து சாப்பிட்டு, தவ வாழ்க்கையாக, இரவிக்கை போடாமலே உயிரை விட்ட உத்தமி. அந்த அளவிற்கு மனப்பக்குவம் பெற்றதொரு வாழ்க்கை.

உளவியல் ரீதியாக ஒரு பெண்ணை எளிதாக முடக்கிப்போடும் ஒரு நுழைவாயிலாக இந்த இரவிக்கை மறுப்பு இருந்திருக்க வேண்டும். நாணத்தினால் அந்தப்பெண், கல்வியறிவும் பெறாமல், கைப்பாவையாக, அலங்காரப் பதுமையாக, தனக்கான ஒரு பொக்கிசமாக வைத்துக் கொள்ளும் முயற்சியாகவே இந்த பழக்கம் வந்திருக்க வேண்டும். இதைத் தவிர வேறு காரணங்கள் இருக்க வாய்ப்பிருந்திருப்பதாகத் தெரியவில்லை. வெளி உலக ஞானமே இல்லாத ஒரு பெண்ணால் வளர்க்கப்பட்ட குழந்தைகளின் நிலை என்னவாக இருக்க முடியும். இரவிக்கை போட்டவர்களெல்லாம் ஒழுக்கமான பெண்கள் இல்லை என்ற ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி வைத்திருந்தார்கள். 

நல்ல வேளையாக தான் ஒரு கல்வியாளராக இருந்ததாலும், ஈரோடு கல்வி நிலைய நிறுவனர் மீனாட்சி சுந்தரமுதலியாருடன் நெருங்கிய தொடர்பு கொண்டவராக இருந்ததாலும், தம் ஊர் மக்களும் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் கொண்டதாலும், தாமே ஒரு பள்ளியை நிறுவியதால் ஓரளவிற்கு குழந்தைகளும் கல்வியறிவு பெற முடிந்தாலும், தம்முடைய 50 வயதிற்குள்ளாகவே ஓயாத உழைப்பின் காரணமாகவோ என்னவோ இருதய நோயினால், மரணம் அடைந்த பின்புதான் உலக ஞானமும், கல்வியறிவும் இல்லாத ஒரு தாய் அந்த சொத்தையும் கட்டிக்காக்க இயலாமல், மகனையும் ஒழுங்காக வளர்க்க இயலாமல், கடலில் கரைத்த பெருங்காயமாக அவ்வளவு சொத்தும் கரைந்து போக காலி பெருங்காயப் பெட்டியாக இறுதிவரை ஒரு தவ வாழ்க்கையை வாழ்ந்து சென்ற உத்தமியாக மட்டுமே பார்க்க முடிகிறது. 

இந்த காலகட்டத்திற்குப் பிறகுதான், ஈரோடு மாநகரிலும், சில கல்வியாளர்களின் முயற்சியால ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. முதன்முதலில் ரா.பா தங்கவேலனார் மற்றும் மீனாட்சி சுந்தர முதலியார் அவர்களும், திண்ணைப்பள்ளியாக ஆரம்பித்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் 4 குழந்தைகள், அதுவும் ஆண் குழந்தைகள் மட்டுமே சேர்ந்து, பிறகு இவர்களெல்லாம் ஏற்படுத்திய விழிப்புணர்வின் காரணமாக, செல்வச்சீமான் வீட்டு பெண் குழந்தைகள் மட்டும் மெல்ல வெளியேவர ஆரம்பித்து, பின்பு ஓரளவிற்கு விழிப்புணர்வு ஏற்பட்ட நிலையில் மீனாட்சி சுந்தர முதலியார் அவர்கள் முதன்முதலில் பெண்களுக்கென்று தனி பள்ளியை நிறுவினார். மெல்ல மெல்ல இரவிக்கை அற்றுப்போன வாழ்க்கைக்கும் விடிவு வந்திருக்கிறது,நாகரீகம் வளர ஆரம்பித்து, இன்று அசுர வளர்ச்சியாக பெண்களின் முன்னேற்றம் ஆச்சரியப்படும் வகையில் உள்ளதையும் மறுக்க இயலாது.. இருந்தாலும் இன்றளவிலும் பழைய பண்பாட்டின் மிச்சங்களாக கிராமப்புறங்களில் இரவிக்கை இல்லாத பாட்டிமார்களைக் காண முடிகிறது.


-- அன்புடன்

பவள சங்கரி.

                                                               
                 

Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

rajam

unread,
Apr 21, 2012, 10:00:47 PM4/21/12
to coral shree, மின்தமிழ், vall...@googlegroups.com, தமிழ் சிறகுகள், தமிழ் வாசல், Seethaalakshmi Subramanian
அம்மாடியோ!!!! .... அன்பின் பவளஸ்ரீப் பெண்ணே ... இந்த்க் கட்டுரையைத் தொடர்ந்து எழுதவேண்டும் கண்ணே, அது என் தாழ்மையான வேண்டுகோளப்பா!

Nagarajan Vadivel

unread,
Apr 21, 2012, 10:10:24 PM4/21/12
to mint...@googlegroups.com
http://nadarsangam.com/forum/viewtopic.php?t=358&sid=872177f74896c93c4d758fdbcbe994bd
FROM THE PAGES OF FORGOTTEN HISTORY

People of present day may find it hard to believe the kind of humiliations women were subjected to in the not so distant past, in Kerala. Another obnoxious custom pertaining to Nair women was stopped by Divan Sir.T. Madhava Rao, by the following order.

Circular to Peishcars, Tassildars etc.

“Whereas His Highness the Maharaja deems it quite repugnant to ideas of decency that Nair females should lower the upper cloth in token of respect , when in the presence of men entitled to great deference while such women are doing service in the pagodas and cottarums, you are hereby directed to inform the people concerned that they need not adhere to so objectionable a custom.

All classes of His Highness’ native subjects are to be generally impressed with the desirableness of their dressing in full compliance with the demands of decency.

You are to see that the persons in charge of pagodas and cottarums do not prevent such compliance.”

Sd/T.
Madhava Rao
Diwan

Women in the highest step of the caste ladder too did not enjoy any freedom for dress and movement. Namboodiri women were confined to the small rooms of their Illam and were allowed to go to the temple outside, covered with white cloth from head to foot, escorted by a woman attendant and face hidden under a marakkuda (an Umbrella).

Source : Kerala State Archives Department
Directorate of State Archives
Nalanda, Thiruvananthapuram 695 003


Nagarajan

2012/4/22 rajam <ra...@earthlink.net>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

rajam

unread,
Apr 21, 2012, 10:14:47 PM4/21/12
to mint...@googlegroups.com
IT SUCKS!

Innamburan Innamburan

unread,
Apr 21, 2012, 10:14:39 PM4/21/12
to mint...@googlegroups.com
"அம்மாடியோ!!!! .... அன்பின் பவளஸ்ரீப் பெண்ணே ... இந்த்க் கட்டுரையைத் தொடர்ந்து எழுதவேண்டும் கண்ணே, அது என் தாழ்மையான வேண்டுகோளப்பா!

இதை விட பொருத்தமாக, இந்த கட்டுரையை பாராட்டமுடியாது என்பதால், அதையே மறுபடியும் கூறுகிறேன். என் அத்தை பெரிய போராளி. அதனால், நன்றாக புரிகிறரு.
இன்னம்பூரான்

2012/4/21 rajam <ra...@earthlink.net>

Nagarajan Vadivel

unread,
Apr 21, 2012, 10:18:38 PM4/21/12
to mint...@googlegroups.com
புரியல
IT SUCKS என்பது என்ன பொருளில்?
இப்பெல்லாம் புற்றைவிட்டு வெளியா வரவே பயம்
பட்ம் எடுத்து ஆடவோ சட்டையைக் கழற்றிக்கொள்ளவோ பய்மாக இருக்கிறது
நாகராசன்


2012/4/22 rajam <ra...@earthlink.net>

rajam

unread,
Apr 21, 2012, 10:27:45 PM4/21/12
to mint...@googlegroups.com

On Apr 21, 2012, at 7:18 PM, Nagarajan Vadivel wrote:

புரியல
IT SUCKS என்பது என்ன பொருளில்?
இப்பெல்லாம் புற்றைவிட்டு வெளியா வரவே பயம்
பட்ம் எடுத்து ஆடவோ சட்டையைக் கழற்றிக்கொள்ளவோ பய்மாக இருக்கிறது

எனவே ... இருக்கும் இடத்திலேயே இருங்கள்!

Hari Krishnan

unread,
Apr 21, 2012, 11:17:51 PM4/21/12
to mint...@googlegroups.com


2012/4/22 rajam <ra...@earthlink.net>

எனவே ... இருக்கும் இடத்திலேயே இருங்கள்!

எனக்கு எப்பவுமே I should have the final word.  நான் சொன்னதுக்கு அப்புறம் சம்பந்தப்பட்டவரோ, அல்லது வேற யாராவதோ பதில் சொல்லிட்டா, கொத்திப் புடுங்கிப்புடுவேன்.  பேசாம கருட ஜபம் பண்ணப் போயிருங்க.  

ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
__யரிற்  __யர் இல்.

--
அன்புடன்,
ஹரிகி.

rajam

unread,
Apr 21, 2012, 11:49:55 PM4/21/12
to mint...@googlegroups.com
அரி அரி என அரிக்கும் ஹரியின் மடல் பார்த்து ... சிரி சிரி எனச் சிரித்து மகிழ்ந்தேன்.
என் சொல் என்றும் கடைசிச் சொல் அன்று, அப்பனே!  
பேராசிரியரின் எடுத்து மொழி என்னைத் தடுமாற வைத்தது. அங்கே இங்கே என்று anthropologists பிதற்றிய கூற்றுகளைவிட ... நம் அணுக்கத் தொடர்பில் உள்ள பவளஸ்ரீப் பொண்ணு போன்றவரின் சொற்களைத்தான் நம்புவேன்!
(இப்போ எனக்குத் தூக்கக் கலக்கம். நல்லிரவு எனக்கு.) 


Nagarajan Vadivel

unread,
Apr 22, 2012, 6:53:26 AM4/22/12
to mint...@googlegroups.com

It hurts

Today's overuse is much more disparagingly insulting, to the point of a socially unacceptable vulgarism, yet very popular among both sexes.

http://wiki.answers.com/Q/What_is_the_meaning_of_%27It_sucks%27

What is the meaning of 'It sucks'?


Answer:
 
It sucks is often used as an interjection in a bad situation. If a rock fell on your toe, you'd scream, "THAT SUCKS!" Or if you were watching a boring show on television, you'd say, "This show sucks!" or, alternatively, "This show sucks ." Saying something "sucks" is somewhat vulgar, but very common place, even more so than curse words.

"It sucks" is a phrase usually said when a person does not like what he or she hears, sees, or sometimes they use it on themselves or other people.

Examples:
  • "I suck at bowling" might be used by somebody who says he is not good at bowling.

  • "I think you suck at Algebra" might be used by a person that thinks that his friend is not good at Algebra.

  • "Can't we go somewhere else? This place sucks." could be used when somebody does not like the place he is in.


The word "suck" should not be used very often. It is sometimes considered vulgar or improper.

Originally, it was a mild insult, putting someone down. It came from the idea of piercing a hole (or two at either end) of an uncooked egg, and then sucking or blowing the raw egg outside of the shell, without cracking the shell. Thus the empty eggshell could then be used in some craft activity.

Since no one liked the idea of having to eat an uncooked egg (Yukk!!), "Go suck an egg!" became a popular male slang insult, similar to " Go fly a kite!"

Then its use and meaning decayed and degenerated into the sexual 'blow/suck ' usage termed "Dirty English."

Today's overuse is much more disparagingly insulting, to the point of a socially unacceptable vulgarism, yet very popular among both sexes.

I never expected from a person I treated with respect
One first lady of US said "you cannot be undermined without your permission"
Any how once bitten twice shy
Thanks for your courtesy
IT SUCKS
IT HURTS
Good bye
Nagarajan

2012/4/22 rajam <ra...@earthlink.net>

rajam

unread,
Apr 22, 2012, 10:22:15 AM4/22/12
to mint...@googlegroups.com, Nagarajan Vadivel
My dear Professor Nagarajan Sir,

Kindly understand that the expression I used ("It sucks") was NOT directed at you! Not at all! It's to give expression to my personal aversion toward how women have been treated in some places. 

I reassure you that it was not meant for you. And yet, if you had taken it personally and was "hurt" by that expression, please accept my apologies!

Peace,
rajam

rajam

unread,
Apr 22, 2012, 10:35:35 AM4/22/12
to mint...@googlegroups.com, Nagarajan Vadivel
Read "was hurt" as "were hurt" . sorry for the typo.

++++++++++++++++++++++++++++++++++

My dear Professor Nagarajan Sir,

Kindly understand that the expression I used ("It sucks") was NOT directed at you! Not at all! It's to give expression to my personal aversion toward how women have been treated in some places. 

I reassure you that it was not meant for you. And yet, if you had taken it personally and was "hurt" by that expression, please accept my apologies!

Peace,
rajam




On Apr 22, 2012, at 3:53 AM, Nagarajan Vadivel wrote:

Innamburan Innamburan

unread,
Apr 22, 2012, 11:06:59 AM4/22/12
to mint...@googlegroups.com
அப்பாடா! 


2012/4/22 rajam <ra...@earthlink.net>

N. Kannan

unread,
Apr 22, 2012, 11:28:37 AM4/22/12
to mint...@googlegroups.com
2012/4/22 Innamburan Innamburan <innam...@gmail.com>:

> அப்பாடா!
> இ
>

வர, வர பனிப்போர் (அல்லது அக்கப்போர் :-) அதிகமாகிவிட்டது. எல்லோரும்
`இ`சார் வீட்டில் கூடிக் குதூகலிக்க வேண்டிய நேரம் வந்தாச்சு!

க.>

rajam

unread,
Apr 22, 2012, 11:41:38 AM4/22/12
to mint...@googlegroups.com
எப்போதுமே எனக்குப் பூடக/
மறைமொழி/பரிபாஷை பேச்சு
புரிந்ததில்லை, அதனால்
அவை பிடித்ததும் இல்லை.
இனி, பெரியவர்களின்
சபையிலிருந்து விலகி
நிற்க முயல்வேன், ஆனால்
உறுதியில்லை!





Nagarajan Vadivel

unread,
Apr 22, 2012, 11:50:26 AM4/22/12
to mint...@googlegroups.com
இரண்டு இடங்களிலும் கண்ணனே இருப்பதால் ஏற்படும் குழப்பம்
பிரச்சினை இங்கில்லை.  இங்கு பிரச்சினை என்பது அலைகள் ஓய்வதில்லை மாதிரி
இங்கிருக்கும் கண்னன் இதிகாச காலத்தில் மூலவர் எப்படி முரண்பாடுகளைச் சமாளித்தாரோ அதுபோல் வருடக் கணக்காக சமாளிக்கிறார்
அங்கிருக்கும் கண்ணன் சிக்கலுக்கு ஆளாக வேண்டாம் என்று விலகிக் கொண்டேன்
தயவு செய்து இரண்டையும் குழப்பிக் கொள்ளவேண்டாம்
நான் அங்கிருந்து விலகிக் கொண்டதால் பேராசிரியை தவறாக இங்கே செய்தி கொடுத்துவிட்டார்
இது முடிந்துபோன பிரச்சினை
இங்கு நேரில் சொல்லக் கூசும் வார்த்தைகளை மின் அஞ்சலில் பயன் படுத்தினால் இனி நெத்தியடிதான்
நாகராசன்
2012/4/22 N. Kannan <navan...@gmail.com>

Nagarajan Vadivel

unread,
Apr 22, 2012, 11:55:34 AM4/22/12
to மின்தமிழ்
Forwarded as per the wishes of Porf.V.S.Rajam
Nagarajan
---------- Forwarded message ----------
From: rajam <ra...@earthlink.net>
Date: 2012/4/22
Subject: Re: [MinTamil] Re: பெண்ணை வெறும் கைப்பாவையாக வைத்திருந்த காலம்!
To: Nagarajan Vadivel <radius.co...@gmail.com>


I dearly wish that you'd send your following message to the public forum, just as I did mine.  

Thank you!

Respectfully,
rajam

On Apr 22, 2012, at 8:41 AM, Nagarajan Vadivel wrote:

Most respected and learned professor,
It was indeed a culture shock for me to hear such an expression leave alone that it is aimed at you and not me
It is natural for you to use such expressions sine you are a naturalized citizen of US lived there for more than 30 years
My exposure to USA was only for four days.  My experience was not good and left USA one day ahead without visiting NY
This is the second time I encountered US language of such intensity and velocity to hit as a verbal form
Earlier one youngish fellow sent a mail to WIPRO telling them that they should not take excuses as an escape route
The WIPRO seniors were hurt and for the first time a value based company got the culture shock
Let me nip it in the bud
I am not accustomed to such treatment
If your intention is to encourage some one then it should not be at the cost of undermining another person who is on the know of things
I was familiar with the original research conducted.  I am not a lay person
http://books.google.co.in/books?id=y089AAAAIAAJ&printsec=frontcover#v=onepage&q&f=true
I have the personal contact to two great sengunthars from Tamilnadu.
One person was Mr.V.V.C.R Murugeas Mudaliar from Erode and another person was from Kanjeevaram Mr.Kanjeevaram.Nataraja Mudaliar's son Annadurai Mudaliar
I am sorry to say that there is no level playing field in the forums and people take sides
I am not accustomed to caste prejudices but I have my own suspicion that nice discrimination based on caste is in practice
My eldest brother's wife was a Sivakasi Nadar
My eldest brother's son-in-law is an Iyer
I married into a tribal society where caste is unknown
When they ask about the caste discrimination I feel ashamed
A simple society whose literary products you mastered and taught was segmented by the evil design of the scholar-priest-advisers to the kings
It is an irony that the people who represent a community who were instrumental to design, develop and deploy a group of innocent women of Tamil society as prostitutes discuss the praxis and blame the victims
You are two years senior by age and a greater scholar than me and of higher birth than me
However I hope you will understand that this will not be a license to use an American slang which is least liked by me
I do not know you personally but I never failed to show respect to a Tamil women of your stature
It was a mistake on my part to accept the invitation in the other forum and started getting insulted by a clique
Let it end here.  Thus far and no further
I will not cross the line
Internet based email discussions have etiquette which is totally missing here
It is an occupational hazard and I realize fully well.  I will avoid the land mines on my onward march
Thanks for your clarification and understood that it is an expression of aversion directed towards you and not to me
However I am sorry that such an expression directed to yourself due to aversion on my posting
Therefore I am sorry and my apologies
Thanks
Regards
Nagarajan


http://books.google.co.in/books?id=y089AAAAIAAJ&printsec=frontcover#v=onepage&q&f=true


2012/4/22 rajam <ra...@earthlink.net>

Subashini Tremmel

unread,
Apr 22, 2012, 11:55:55 AM4/22/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel
அன்பு பவளா,

பெண்கள் சம்பந்தமாக ஒரு இழை வந்தால் எனக்குப் பிடிக்கும். அதிலும் இந்த இழை.. அடிப்படை தேவைகளை வலியுறுத்தும் ஒன்று என்பதால் என்னைக் கவர்ந்து விட்டது. இதனை ஒரு பதிவோடு நிறுத்தாமல் மேலும் உங்கள் சூழலில் நீங்கள் பார்த்து கேட்டு அறிந்த பெண்களின் நிலை பற்றி தொடர்ந்து எழுத வேண்டும்.. உங்கள் சூழலில் பெண்களின் அமைப்பில் ஏற்பட்ட வளர்ச்சி பற்றி தொடர்ந்து உங்கள் கருத்துக்களை நீங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதே என் அவா.

இந்த சிந்தனையை நீங்கள் முன் வைக்கும் போது நான் வாசித்து கேட்டு தெரிந்து கொண்ட விஷயங்களிலிருந்து பெண்களின் நிலை முன்னர் தமிழகத்தில் எவ்வாறு இருந்தது என்பதனையும் சற்று அலசலாம் என நினைக்கின்றேன். 

சங்க காலத்திலேயே சில குறிப்பிடத்தகு பெண்பாற் புலவர்கள் இருந்திருக்கின்றனர். ஒரு சிலரைப் பற்றி நமக்குத் தெரிகின்றது. பலரைப் பற்றி நமக்குத் தெரியவில்லை.

களப்பிறர் காலத்திலே.. அதற்கு சற்று முற்பட்ட காலத்திலேயும் கூட சமண பள்ளிகளில், சமணக் குறவர்களோடு சமணக் குறத்தியர்களும் (பெண் பால் சமண முனிவர்கள்/ஆசிரியர்கள்) இருந்திருக்கின்றனர் என்பதை டாக்டர்.பத்மாவின் களப்பிரர் காலம் ஆய்வு ஒலிப்பதிவு பேட்டிகளில் அவர் தரும் சான்றுகளிலிருந்து தெரிந்து கொள்ள முடிகின்றது.

சோழர் காலத்து பெண்டிர்கள் குறிப்பிடத்தக்க வகையில் பல திருப்பணிகள், அறச்சாலைகள் ஏற்படுத்தி சமுதாயத்தில் முன் நின்று மக்கள் தொண்டு செய்திருக்கின்றனர். செம்பியன் மாதேவி, குந்தவை போன்றோரை இப்படி குறிப்பிடலாம். பெண்களை ஒதுக்கும் ஒரு சமுதாயமாக தமிழ் சமுதாயம் இருந்திருந்தால் இவையெல்லாம் சாத்தியமாகியிருக்காது. ஆக எனது சிந்தனைப்படி முன்னர் தமிழ் சமூகத்தில் பெண்களுக்கு கல்வியிலும் சமூகத்திலும் பங்கு வகிக்கும் உரிமை இருந்திருக்கின்றது. 

இது இஸ்லாமிய படையெடுப்பு காலத்தில் ஏற்பட்ட பற்பல அசம்பாவிதங்களின் வழியாகத்தான் தமிழக சமூகத்தில் பெண்களை ஒளித்து வைக்கும் நிலை ஏற்பட்டிருக்கலாம் என்று நான் நினைக்கின்றேன். 

காலப்போக்கில் போர் அசம்பாவிதங்கள் குறைந்தாலும் பெண்களின்பால் ஏற்படுத்தப்பட்ட இந்த "பாதுகாப்பு" மட்டும் மாறாமல் அவர்களை அப்படியே கட்டுப் பெட்டிகளாக வைத்திருப்பதை குலப்பெருமையாக ஆக்கிக் கொண்டுவிட்டது. மீண்டும் புரட்சி, பெண்கள் சிந்தனையிலேயே ஏற்பட்டதன் விளைவாலும் சில நற்சிந்தனையாளர்களின் துணையாலும் பெண்களின் வாழ்வில் கல்வி எனும் ஒன்று அங்கம் வகிக்க ஆர்மபித்திருக்கின்றது.

தொடர்ந்து எழுதுங்கள் பவளா.. என்னைப் போல பலரும் கூட பல கருத்துக்கலை பகிர்ந்து கொள்வார்கள்.

சுபா

2012/4/22 coral shree <cor...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com -  ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
 
 

rajam

unread,
Apr 22, 2012, 12:23:23 PM4/22/12
to mint...@googlegroups.com, Nagarajan Vadivel
//You are two years senior by age and a greater scholar than me and of higher birth than me
However I hope you will understand that this will not be a license to use an American slang which is least liked by me
I do not know you personally but I never failed to show respect to a Tamil women of your stature //
ஐயா, அன்புடைய பேராசிரியர் ஐயா,
நான் பயன்படுத்திய அமெரிக்கன் ஸ்லாங் (American slang) உங்களைப் பற்றியது அன்று என்று எத்தனை முறை திரும்ப திரும்பச் சொல்லவேண்டும்? அது உங்களைப் பற்றியது இல்லை. பெண்களைக் கொடுமைப்படுத்திய சமூகத்தைப் பற்றியது. இதை எத்தனை முறை நான் சொல்லவேண்டும்? உங்களுக்குப் புரியாததா?
வணக்கத்துடன்,
ராஜம் 

Dhivakar

unread,
Apr 22, 2012, 12:24:57 PM4/22/12
to mint...@googlegroups.com
இது இஸ்லாமிய படையெடுப்பு காலத்தில் ஏற்பட்ட பற்பல அசம்பாவிதங்களின் வழியாகத்தான் தமிழக சமூகத்தில் பெண்களை ஒளித்து வைக்கும் நிலை ஏற்பட்டிருக்கலாம் என்று நான் நினைக்கின்றேன். 

That is it Subha!

Ammanga, the daughter of Rajendra did rule both the kingdom of Vengi and Chola indirectly for years together. Ammanga was also a queen for Vengi and made her son to the throne of Chola empire. have some materials from Telugu land and I am using for my next project.

I already wrote about one Nagamaamba who was the reason for Palnati war series in Min Tamil. Then Rudramma followed just before the arrival of Kilji into South.

There were several Heroins in South country.

Dhivakar




2012/4/22 Subashini Tremmel <ksuba...@gmail.com>

Subashini Tremmel

unread,
Apr 22, 2012, 1:33:45 PM4/22/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel
முனைவர்.காளைராசன்,

இதனை எழுதும் போதும் பவளாவின் கட்டுரையை வாசித்தபோதும் மேலும் ஒரு சிந்தனை தோன்றியது. டாக்டர்.வள்ளி அவர்களையும் இச்சிந்தனைத் தொடர்பாக  ஒரு பேட்டி ஒன்று கேட்டு ஒலிப்பதிவு செய்து தர முடியுமா..

சுபா

2012/4/22 Subashini Tremmel <ksuba...@gmail.com>

Subashini Tremmel

unread,
Apr 22, 2012, 1:39:52 PM4/22/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel
Thanks for your comment and additional information Mr.Dhivakar. Yes I remember this series of article and I've added them in Heritagewiki. 

Suba

2012/4/22 Dhivakar <venkdh...@gmail.com>

Innamburan Innamburan

unread,
Apr 22, 2012, 2:19:43 PM4/22/12
to mint...@googlegroups.com

‘எல்லோரும் `இ`சார் வீட்டில் கூடிக் குதூகலிக்க வேண்டிய நேரம் வந்தாச்சு!’

~என்று கண்ணன் சொன்னதாலும், ஏகாக்ரஹசிந்தையுடன் ஸுபாஷிணி இவ்விழையின் திசையை, துருவ நக்ஷத்திரம் போன்று போற்றியதாலும், நேற்றிரவு கவலையுடன் ஒரு நண்பர் அளவளாவியதாலும், ராஜம், நாகராஜன் இருவர் மீதும் எனக்கு உள்ள நன்மதிப்பாலும், வயது ஏற, ஏற வந்துள்ள விட்டேற்றி ஸ்வபாவம்  இழையடக்கத்தை ஆதரிப்பதாலும்,:

  1. வருக! வரூக! என்று யாவரையும் அழைக்கிறேன். குதூகலம் உத்திரவாதம்.
  2. ஒரு நிமிடம், ராஜத்தின் இடுகை என்னை திகைக்கவைத்தது. அவர் சொல்லை கிளிப்பிள்ளை மாதிரி நான் திருப்பிக்கூறியதை நிந்திக்கிறார். என்று வருந்தினேன்.  பிறகு சுதாரித்துக்கொண்டேன், இடுகைகள் இடுக்கு இல்லாமல் வந்து கிடுக்குப்பிடி போட்டதை, அலசிய பின். அவர் பயன்படுத்திய அமெரிக்கன் ஸ்லாங் (American slang)  பெண்களைக் கொடுமைப்படுத்திய சமூகத்தைப் பற்றியது என்று நான் நண்பரிடம் நேற்றே சொன்னதை, அவரே உறுதிபடுத்தியுள்ளார்.
  3. நாகராஜன் தவறாக புரிந்து கொண்டதை நான் பெரிது படுத்தமாட்டேன். அவருடைய நிலையில் எனக்கும் அப்படித்தான் பட்டிருக்கும். வேறு இடத்துக் கவலையை அவருடைய இடுகை பிரதிபலிக்கிறது. இனி இந்த விஷயத்தை மறந்து விடுவோம்.
  4. ஏனெனில், ராஜம் எரும்பை வருத்தக்கூட துரும்பை கிள்ளிப்போடாதவர் என்பது யாவரும் அறிந்ததே. நாகராஜன், ராஜன், நான் எல்லாரும் கிட்டத்தட்ட ஒரே சமயத்தில், பவளசங்கரியின் இலக்கிய வரவால், தாக்கம் அடைந்து இருக்கிறோம். அவ்வளவு தான். அதை விட்டு விட்டு, ஸுபாஷிணியின் பாதையில் செல்வோம்.
  5. ஒரு தெளிவு தேவை. கண்ணன் சொன்ன மாதிரி பனிப்போரும் அக்கப்போரும் அதிகமாகிவிட்டது. அந்த போக்கு, மின் தமிழுக்குத் தேவையில்லை. பனிப்போர் கூட குறைவு. ஆனால், குத்தல், கிளறுதல், பிறாண்டுதல் போன்ற காழ்ப்புணர்ச்சி இடுகைகளை, அது நக்கீரனிடமிருந்து வந்தாலும், மட்டுறுத்தல் செய்ய வேண்டும். அப்படி செய்வது தான், மின் தமிழுக்கும், த.ம.அ. வுக்கும் தற்காப்புக் கவசம். அக்கப்போரை குறைக்க அவரவர் தான் முயலவேண்டும். மட்டுறுத்தல் இயலாது.


நன்றி, வணக்கம்,

இன்னம்பூரான்

22 04 2012 

N. Kannan

unread,
Apr 22, 2012, 2:25:21 PM4/22/12
to mint...@googlegroups.com
2012/4/22 Innamburan Innamburan <innam...@gmail.com>

> ஒரு தெளிவு தேவை. கண்ணன் சொன்ன மாதிரி பனிப்போரும் அக்கப்போரும்
> அதிகமாகிவிட்டது. அந்த போக்கு, மின் தமிழுக்குத் தேவையில்லை. பனிப்போர் கூட
> குறைவு. ஆனால், குத்தல், கிளறுதல், பிறாண்டுதல் போன்ற காழ்ப்புணர்ச்சி
> இடுகைகளை, அது நக்கீரனிடமிருந்து வந்தாலும், மட்டுறுத்தல் செய்ய வேண்டும்.
> அப்படி செய்வது தான், மின் தமிழுக்கும், த.ம.அ. வுக்கும் தற்காப்புக் கவசம்.
> அக்கப்போரை குறைக்க அவரவர் தான் முயலவேண்டும். மட்டுறுத்தல் இயலாது.
>

மட்டுறுத்தலில் இல்லாதோர் பனிப்போரில் ஈடுபடும் போது எங்கள் நிலை
தகிடுதித்தோம். இதே கோஷ்டிதானே வல்லமை குழுவிலும் இருக்கிறது. பவளா
எப்படி சமாளிக்கிறார் என்று பார்ப்போம் :-)

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது!

க.>

rajam

unread,
Apr 22, 2012, 2:35:29 PM4/22/12
to mint...@googlegroups.com

> திருடனாய் பார்த்து
> திருந்தாவிட்டால்
> திருட்டை ஒழிக்க முடியாது!
>

ஆமாம் ஸ்வாமீ! ஆமாம்,
ஆமாம். என் தலைகுனிந்து
அடி பணிந்த வணக்கம், அய்யனே!
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you
> may like to visit our Muthusom Blogs at: http://
> www.tamilheritage.org/how2contribute.html To post to this group,
> send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-
> unsub...@googlegroups.com

N. Kannan

unread,
Apr 22, 2012, 3:02:36 PM4/22/12
to mint...@googlegroups.com
2012/4/22 rajam <ra...@earthlink.net>:

>
>> திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது!
>>>
> ஆமாம் ஸ்வாமீ! ஆமாம், ஆமாம். என் தலைகுனிந்து அடி பணிந்த வணக்கம், அய்யனே!
>

ஹ..ஹா! இது என்ன எங்கப்பன் குதிருகுள்ளே இல்லே! என்பது போல்!

நான் பொதுவாய் மட்டுறுத்தர் பிரச்சனை பற்றிச் சொன்னேன். குறிப்பாக
மட்டுறுத்தல் என்பது ஏதோ மந்திரக்கோல் போன்ற ஒரு பிரமையை உருவாக்குவதால்.

நான் அல்லவோ அடிபணிய வேண்டும், பெரியோர் முன்.

நா.கண்ணன்

பிகு: It sucks! என்று தாங்கள் சொலியிருப்பது கருத்தைக் குறித்த
விளித்தல் என்பது என்னைப் பொறுத்தவரை தெளிவு.

கி.காளைராசன்

unread,
Apr 22, 2012, 4:17:35 PM4/22/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel
வணக்கம்.

2012/4/22 Subashini Tremmel <ksuba...@gmail.com>

முனைவர்.காளைராசன்,
இதனை எழுதும் போதும் பவளாவின் கட்டுரையை வாசித்தபோதும் மேலும் ஒரு சிந்தனை தோன்றியது. டாக்டர்.வள்ளி அவர்களையும் இச்சிந்தனைத் தொடர்பாக  ஒரு பேட்டி ஒன்று கேட்டு ஒலிப்பதிவு செய்து தர முடியுமா..

நல்லது.
அம்மா அவர்களுடன் தொடர்பு கொண்டு அவர்களது கருத்தினைப் பதிவு செய்கிறேன்.

அன்பன்
கி.காளைராசன்

coral shree

unread,
Apr 22, 2012, 7:21:50 PM4/22/12
to mint...@googlegroups.com
அன்பின் சுபா,

மிக்க நன்றி. எனக்கு தெரிந்தவைகளை பகிர்ந்து கொள்ளலாம் என்றுதான் ராஜம் அம்மாவின் அறிவுரைப்படி இந்த இழையை தொடங்கினேன்... அதனால்தான் ஆரம்பத்திலேயே, சங்க இலக்கியங்களையும், வரலாற்று செய்திகளையும் கொடுக்காமல், நான் கண்ணால் கண்ட, என் மனதை பெரிதும் பாதித்த விசயத்தை முன்னிறுத்தி இக்கட்டுரையை ஆரம்பித்தேன். நாகராசன் ஐயா குறிப்பிட்டுள்ள வி.வி.சி.ஆர். முருகேச முதலியார் அவர்களும் என் கணவரின் குடும்பத்திற்கு மிக நெருங்கிய உறவினர். என் கணவருக்கு ஆயா முறையாகிய அவருடைய மிக நெருங்கிய உறவினர்... அந்த அம்மையாரும் இரவிக்கை அணியவில்லை, சான்றாக புகைப்படங்கள் இன்றும் உள்ளது.

2012/4/22 Subashini Tremmel <ksuba...@gmail.com>
அன்பு பவளா,

பெண்கள் சம்பந்தமாக ஒரு இழை வந்தால் எனக்குப் பிடிக்கும். அதிலும் இந்த இழை.. அடிப்படை தேவைகளை வலியுறுத்தும் ஒன்று என்பதால் என்னைக் கவர்ந்து விட்டது. இதனை ஒரு பதிவோடு நிறுத்தாமல் மேலும் உங்கள் சூழலில் நீங்கள் பார்த்து கேட்டு அறிந்த பெண்களின் நிலை பற்றி தொடர்ந்து எழுத வேண்டும்.. உங்கள் சூழலில் பெண்களின் அமைப்பில் ஏற்பட்ட வளர்ச்சி பற்றி தொடர்ந்து உங்கள் கருத்துக்களை நீங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதே என் அவா.

நன்றி சுபா... 
 
இந்த சிந்தனையை நீங்கள் முன் வைக்கும் போது நான் வாசித்து கேட்டு தெரிந்து கொண்ட விஷயங்களிலிருந்து பெண்களின் நிலை முன்னர் தமிழகத்தில் எவ்வாறு இருந்தது என்பதனையும் சற்று அலசலாம் என நினைக்கின்றேன். 
 
மகிழ்ச்சி. சுவையான விவாதங்களாக கட்டாயம் அமையும் என்பதில் ஐயமில்லை. 

சங்க காலத்திலேயே சில குறிப்பிடத்தகு பெண்பாற் புலவர்கள் இருந்திருக்கின்றனர். ஒரு சிலரைப் பற்றி நமக்குத் தெரிகின்றது. பலரைப் பற்றி நமக்குத் தெரியவில்லை.

களப்பிறர் காலத்திலே.. அதற்கு சற்று முற்பட்ட காலத்திலேயும் கூட சமண பள்ளிகளில், சமணக் குறவர்களோடு சமணக் குறத்தியர்களும் (பெண் பால் சமண முனிவர்கள்/ஆசிரியர்கள்) இருந்திருக்கின்றனர் என்பதை டாக்டர்.பத்மாவின் களப்பிரர் காலம் ஆய்வு ஒலிப்பதிவு பேட்டிகளில் அவர் தரும் சான்றுகளிலிருந்து தெரிந்து கொள்ள முடிகின்றது.

உண்மைதான். அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை முறைகளை அலசினால் தெளிவு பிறக்கலாம். 

சோழர் காலத்து பெண்டிர்கள் குறிப்பிடத்தக்க வகையில் பல திருப்பணிகள், அறச்சாலைகள் ஏற்படுத்தி சமுதாயத்தில் முன் நின்று மக்கள் தொண்டு செய்திருக்கின்றனர். செம்பியன் மாதேவி, குந்தவை போன்றோரை இப்படி குறிப்பிடலாம். பெண்களை ஒதுக்கும் ஒரு சமுதாயமாக தமிழ் சமுதாயம் இருந்திருந்தால் இவையெல்லாம் சாத்தியமாகியிருக்காது. ஆக எனது சிந்தனைப்படி முன்னர் தமிழ் சமூகத்தில் பெண்களுக்கு கல்வியிலும் சமூகத்திலும் பங்கு வகிக்கும் உரிமை இருந்திருக்கின்றது. 

ராஜவம்சத்தின் பெண்டிருக்கு இது போன்ற விசயங்கள் சாத்தியமாகியிருக்கிறது என்பது வரலாறு. நாம் பேசுவது சாதாரணமான, வெளிச்சத்திற்கு வராத பெண்டிரின் வாழ்க்கை முறைகளைப்பற்றி... அக்கால குருகுல முறைகளில் பெண்களின் நிலை பற்றி சிந்தித்தால் இதற்கான தெளிவு பிறக்கலாம்.
 

இது இஸ்லாமிய படையெடுப்பு காலத்தில் ஏற்பட்ட பற்பல அசம்பாவிதங்களின் வழியாகத்தான் தமிழக சமூகத்தில் பெண்களை ஒளித்து வைக்கும் நிலை ஏற்பட்டிருக்கலாம் என்று நான் நினைக்கின்றேன். 
ஒளித்து வைக்கும் நிலைக்கும், இவிக்கை அணிய அனுமதி அளிக்காததற்கும் என்ன சம்பந்தம் என்று புரியவில்லை... தற்காப்புக் கலையை கற்றுக் கொடுத்திருக்கலாம்... வேலு நாச்சியார் போன்ற சில பெண்டிர் அதற்கு ஆதாரமாக உள்ளன்ர்... அவர் வரலாறு கூறும் சத்தியம் இது. 

காலப்போக்கில் போர் அசம்பாவிதங்கள் குறைந்தாலும் பெண்களின்பால் ஏற்படுத்தப்பட்ட இந்த "பாதுகாப்பு" மட்டும் மாறாமல் அவர்களை அப்படியே கட்டுப் பெட்டிகளாக வைத்திருப்பதை குலப்பெருமையாக ஆக்கிக் கொண்டுவிட்டது. மீண்டும் புரட்சி, பெண்கள் சிந்தனையிலேயே ஏற்பட்டதன் விளைவாலும் சில நற்சிந்தனையாளர்களின் துணையாலும் பெண்களின் வாழ்வில் கல்வி எனும் ஒன்று அங்கம் வகிக்க ஆர்மபித்திருக்கின்றது.

ஆம். இதைத்தான் நான் சொல்ல வந்தேன். அந்த கல்வியறிவு என்ற விழிப்புணர்வை அவர்களுக்கு ஏற்படுத்தவே பெரும் போராட்டங்களும் இருந்திருக்கின்றன..... 
 
தொடர்ந்து எழுதுங்கள் பவளா.. என்னைப் போல பலரும் கூட பல கருத்துக்கலை பகிர்ந்து கொள்வார்கள்.

நாம் அனைவரும் சேர்ந்து இதை நல்ல முறையில் தொடர்ந்தால் ஒரு அரிய ஆவணமாகலாம் இல்லையா... நன்றி சுபா.

coral shree

unread,
Apr 22, 2012, 7:25:00 PM4/22/12
to mint...@googlegroups.com
டாக்டர் வள்ளி அவர்களின் ஆதாரங்கள் நமக்கு பெரிதும் உதவலாம். கலைச்சிற்பங்களின் ஆதாரங்கள் பல.... பெண்களின் சிற்பங்களே ஆயிரம் கதைகள் பேசக்கூடும்... வாருங்கள் .....நன்றி.

2012/4/22 Subashini Tremmel <ksuba...@gmail.com>
முனைவர்.காளைராசன்,

coral shree

unread,
Apr 22, 2012, 7:26:39 PM4/22/12
to mint...@googlegroups.com
அன்பின் காளைராசன் சார்,

வணக்கம். மிக்க நன்றி சகோதரரே.

2012/4/23 கி.காளைராசன் <kalair...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Nagarajan Vadivel

unread,
Apr 22, 2012, 7:33:56 PM4/22/12
to mint...@googlegroups.com
கண்ணன் அவர்களே
இது மட்டுருத்தல் தொடர்பானதோ அல்லது திருடர்கள் சிர்திருத்தம் தொடர்பானதோ அல்ல
இது பொதுமன்றில் மடலாடற்குழுவில் பின்பற்றவேண்டிய நயத்தகு நாகரிகம் சிலரிடம் இல்லை அவர்கள் வரம்பு மீறிப் போகிறார்கள் என்பதைப் பற்றியது
பேராசிரியர் ராஜம் அவர்கள் IT SUCKS என்று எழுதியவுடன் அதை என்ன பொருளில் எழுதியிருக்கிறார்கள் என்று விளக்கம் கேட்டேன்
அவர் உறங்கப் போயிருக்கலாம் என்றெண்ணி அதன் பொருளை அறிந்துகொண்டு அந்த வார்த்தைக்கு எதிர்ப்புத் தெரிவித்தேன்.  அதற்கு அவர்கள் தன்னிலை விளக்கம் கொடுத்துவிட்டார்கள்.  அத்தோடு அது முடிந்துவிட்டது.  இது நடந்தது வல்லமை மடலாடல் குழுவில்
நான் இனிமேலும் அந்த மடலாடற்குழுவில் இருக்க வேண்டாம் என்று என்ணி விலகிக் கொண்டேன்
அங்கே அவர்கள் பயன்படுத்திய வசை மொழி எனக்குப் பிடிக்கவில்லை இம்மொழி இதுபோன்ற மன்றங்களில் பயன்படுத்த ஏற்ற சொல் அல்ல என்பது என் தனிக்கருத்து அவ்வளவே
இங்கே மின் தமிழில் தொடர்ந்துவரும் தனி மனிதத் தாக்குதல்கள் உங்கள் மடலாடற்குழுவுக்குப் பெருமை சேர்ப்பதாகத் தெரியவில்லை
உங்கள் மடலாடற்குழு ஒன்றும் சிதம்பர ரகசியம் அல்ல.
நான் எழுதிய மறுவினாடி இணையத் தேடலில்
இங்கு சிலர் நடத்துவது மடலாடல் அன்று அது ஃப்ளேம் என்ற வெறுப்பை நெருப்பாய் உமிழ்தல்
ஃப்ளேம் தொடர்பான பக்கங்கள் இணைப்பில்
இங்கு எழுதப்படும் சில வரிகளை அடிவாங்காமல் ஒருவரின் முகத்துக்கு நேர் சொல்லமுடியுமா
ஒரு திருக்குறள் இலைமறைகாயாகச் சொல்லப்பட்டது.  அதன் ஆங்கில  மொழி பெயர்ப்பும் விளக்கமும் கீழே
Translation:

    The sacred law he reads and learns, to other men expounds,-
    Himself obeys not; where can greater fool be found? .

Explanation:

    There are no greater fools than he who, though he has read and understood (a great deal) and even taught it to others, does not walk according to his own teaching.
என்னை முட்டாள் என்று சொல்ல எவ்வளவு புலமை வேண்டியிருக்கிறது
என் வாழ்வில் முதன் முறையாக ஒருவரின் தனிப்பட்ட கருத்து தவறு என்றும் சரி என்றும் இங்கே விவாதிப்பதைப் பார்க்கிறேன்
என் கருத்தைப் பதிய எனக்கு ஓர் உறுப்பினர் என்ற முறையில் உரிமை இருப்பதாகக் கருதுகிறேன்
நான் எல்லை மீறினால் நீங்கள் மட்டுறுத்தலாம்
நான் தொல்லை என்றால் கழட்டிவிடுங்கள்
ஒரு நாடறிந்த ஆராய்ச்சியாளனின் கட்டுரை இங்கே ஆவணக்குப்பை என்று சொல்லும்போது எனக்கு வருத்தமாக இருக்கிறது அவ்வளவே
நாகராசன்



2012/4/22 N. Kannan <navan...@gmail.com>
2012/4/22 Innamburan Innamburan <innam...@gmail.com>
emailett.ppt

rajam

unread,
Apr 22, 2012, 7:52:24 PM4/22/12
to mint...@googlegroups.com, Nagarajan Vadivel
கடவுளே, கடவுளே, கடவுளே!  

வல்லமை மடலாடல் குழுவுக்கும் எனக்கும் ஒரு தொடர்பும் இல்லை, ஐயா! அது என்ன என்றுகூட எனக்குத் தெரியாது. இது சாமி சத்தியம்! 

நான் இங்கே மின்தமிழில் பயன்படுத்திய 'it sucks' என்பது இங்கே அமெரிக்காவில் நான் இருக்குமிடத்தில் வசை மொழியாகக் கருதப்படுவதில்லை. தன் அருவருப்பைத் தெரிக்கும் ஒன்றாகவே கருதப்படுகிறது.
எப்படியும் ... நான் பயன்படுத்திய 'it sucks' என்ற தொடர் உங்களை நோக்கியது அன்று என்று ஏற்கனவே தெரிவித்தாயிற்று! இதற்கும் மேல் நான் என்ன செய்யவேண்டும் ஐயா?


For more options, visit this group at http://groups.google.com/group/minTamil<emailett.ppt>

rajam

unread,
Apr 22, 2012, 8:02:29 PM4/22/12
to mint...@googlegroups.com, coral shree
அன்பின் பவளஸ்ரீ,
இலக்கிய, கல்வெட்டு செய்திகள் ஒரு புறம் இருக்கட்டும். அதுதானே பல புத்தகங்களின் வழி வெளியே தெரிந்திருக்கிறது. அதொண்ணும் பெரிய விஷயமில்லெ. ஆனால், நம் வீடுகளில், நம் முன்னோர் எப்படி இருந்தார்கள் என்பது நம்மில் பலருக்கும் தெரிவதில்லையப்பா! எனவே ... வீட்டுச் செய்திகளை வெளிக்கொணரவும்! தயக்கம் வேண்டாம். நன்றி!
அன்புடன்,
ராஜம் 

Subashini Tremmel

unread,
Apr 23, 2012, 3:58:20 AM4/23/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel


2012/4/22 N. Kannan <navan...@gmail.com>
வல்லமை குழு.. ???? 
 
சுபா

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது!

க.>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Subashini Tremmel

unread,
Apr 23, 2012, 4:27:43 AM4/23/12
to மின்தமிழ், Subashini Tremmel
அன்புள்ள  டாக்டர். நாகராசன்.

தனி மனித தாக்குதல் என்று வரும் போது தாராளமாக உங்கள் நியாயத்தை விளக்கி கேளுங்கள். எப்படி அந்த உரையாடல் தொடங்கியதோ அதே போல முடித்து வைத்துக் கொள்ள வேண்டியதும் உங்கள் பொருப்பு. இதனை உங்களுக்கு மட்டும் நான் சொல்லவில்லை.. பிரச்சனை பிரச்ச்னை என்று சொல்லி மின் தமிழை இழுப்பவர்கள் அனைவருக்குமே சொல்லிக் கொள்கின்றேன்.

ஆனால் பலர் புரிந்து கொள்ளாமல் இருப்பது மின் தமிழை நடத்தவும் மின்னாக்கப்பணிகளைச் செய்யவும் நம்மில் ஒரு சிலர் எவ்வளவு நேரத்தை செலவழிக்கின்றோம், எவ்வளவு முயற்சிகள் செய்கின்றோம் என்பதனை. சண்டை, பிரச்சனை, கடும் சொல் என்று வரும் போது நாம் செய்யும் பணிகளின் சிறப்புக்களெல்லாம் மறைந்து போய் விடுகின்றன. காழ்ப்புணர்ச்சியும், மனவருத்தமும் தான் மிஞ்சி நிற்கின்றது.

இதனை விடுத்து ஏன் நாம் ஆக்கப் பணிகளை மட்டுமே யோசிக்கக் கூடாது? பிறரை வருத்தும் சொற்களை எல்லோருமே கவனமாகத் தவிர்த்து விட்டால் இப்படி பிரச்சனையே வராதே. 

இது ஒரு முக்கியமான இழை. இதில் இனி இழை தொடர்பான சிந்தனைகளை மட்டுமே பகிர்ந்து கொள்வோம். உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் எப்போதும் தேவை.

அன்புடன்
சுபா
2012/4/23 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

coral shree

unread,
Apr 23, 2012, 4:28:11 AM4/23/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel
அன்பின் சுபா,

திரு அண்ணாகண்ணன் வல்லமைக்காக ஒரு குழு ஆரம்பித்திருக்கிறார். அதைத்தான் கண்ணன் சார் சொல்கிறார். 

2012/4/23 Subashini Tremmel <ksuba...@gmail.com>



--

                                                               
                 

Take life as it comes.

Nagarajan Vadivel

unread,
Apr 23, 2012, 4:36:58 AM4/23/12
to mint...@googlegroups.com
அன்புள்ள சுபா
அரங்கேற்றத்தில் பாலச்சந்தர் படம்பிடித்துக்காட்டியதுபோல் மின் தமிழில் தனி மனிதத் தாக்குதலால் எல்லாம் மரத்துப்போச்சு
கேட்டால் பதில் வராது
என் முகத்துக்கு நேர் சொல்ல இயலாத வாசகங்களைத் தவிர்க்கச் சொல்லுங்கள் அது போதும்
தனி மனிதக் கருத்துக்ளை முன் வைக்க வழியிருந்தால் போதும்
என் நோக்கம் என் தாய்மொழியில் தவறின்றி எழுதப் பயிற்சி பெற வேண்டும்
அதற்காகச் சில சவால்களைச் சமாளிக்கவேண்டும் என்பதை உணருகிறேன்
நன்றி’
நாகராசன்


2012/4/23 Subashini Tremmel <ksuba...@gmail.com>

N. Kannan

unread,
Apr 23, 2012, 4:37:46 AM4/23/12
to mint...@googlegroups.com
2012/4/23 coral shree <cor...@gmail.com>:

> டாக்டர் வள்ளி அவர்களின் ஆதாரங்கள் நமக்கு பெரிதும் உதவலாம். கலைச்சிற்பங்களின்
> ஆதாரங்கள் பல.... பெண்களின் சிற்பங்களே ஆயிரம் கதைகள் பேசக்கூடும்... வாருங்கள்
> .....நன்றி.
>

அன்பின் பவளா:

மிக அருமையான எண்ணப்பகிர்வு. வாழ்த்துக்கள்.

இரவிக்கை அவிழ்த்தல் என்பது ஒருவகையில் அடிமைப் படுத்தல்தான். கூச்ச
உணர்வை ஊட்டிப் பணிய வைத்தல்.

ஆனால் இந்தியா போன்ற உஷ்ணப்பிரதேசத்தில் மேற்சட்டை இல்லாமல் இருத்தல்
இயல்பானதுதானே? நான் அறிந்தவரை குடியானவ வீட்டுப் பெண்கள் ரவிக்கை
அணிந்து பார்த்ததில்லை. அதனால் அவர்கள் அடிமைப் பட்டது போலவும்
தெரியவில்லை. கிராமத்து ஆண்கள் வயக்காட்டில் வேலை செய்யும் போது வெறும்
கோமணத்துடன்தான் அலைகிறான். அது சௌகர்யமும் கூட. தமிழக மக்கள் சட்டை
இல்லாமல் இருப்பதைக் கண்டு காந்திஜியே சட்டையைக் கழட்டி புரட்சி
செய்யவில்லையா? இந்தியாவின் வடமாநிலங்களில் பெண்களின் நிலை தமிழகத்தை விட
மேம்பட்டு உள்ளது என்று சொல்லமுடியாது. ஆனால் அங்கு ரவிக்கை அணிந்துதான்
ஆகவேண்டும். ஏனெனில் குளிர்.

இது உயிரியல் சார்ந்த ஒரு மாற்றுக்கருத்து. அவ்வளவுதான். உங்கள்
கட்டுரையின் காரத்தைக் குறைக்க எழுதவில்லை :-)

நா.கண்ணன்

coral shree

unread,
Apr 23, 2012, 4:50:57 AM4/23/12
to mint...@googlegroups.com
நன்றி சார்.

2012/4/23 N. Kannan <navan...@gmail.com>

2012/4/23 coral shree <cor...@gmail.com>:
> டாக்டர் வள்ளி அவர்களின் ஆதாரங்கள் நமக்கு பெரிதும் உதவலாம். கலைச்சிற்பங்களின்
> ஆதாரங்கள் பல.... பெண்களின் சிற்பங்களே ஆயிரம் கதைகள் பேசக்கூடும்... வாருங்கள்
> .....நன்றி.
>

அன்பின் பவளா:

மிக அருமையான எண்ணப்பகிர்வு. வாழ்த்துக்கள்.

இரவிக்கை அவிழ்த்தல் என்பது ஒருவகையில் அடிமைப் படுத்தல்தான். கூச்ச
உணர்வை ஊட்டிப் பணிய வைத்தல்.

ஆனால் இந்தியா போன்ற உஷ்ணப்பிரதேசத்தில் மேற்சட்டை இல்லாமல் இருத்தல்
இயல்பானதுதானே? நான் அறிந்தவரை குடியானவ வீட்டுப் பெண்கள் ரவிக்கை
அணிந்து பார்த்ததில்லை. அதனால் அவர்கள் அடிமைப் பட்டது போலவும்
தெரியவில்லை. கிராமத்து ஆண்கள் வயக்காட்டில் வேலை செய்யும் போது வெறும்
கோமணத்துடன்தான் அலைகிறான். அது சௌகர்யமும் கூட. தமிழக மக்கள் சட்டை
இல்லாமல் இருப்பதைக் கண்டு காந்திஜியே சட்டையைக் கழட்டி புரட்சி
செய்யவில்லையா? இந்தியாவின் வடமாநிலங்களில் பெண்களின் நிலை தமிழகத்தை விட
மேம்பட்டு உள்ளது என்று சொல்லமுடியாது. ஆனால் அங்கு ரவிக்கை அணிந்துதான்
ஆகவேண்டும். ஏனெனில் குளிர்.

ஆண்களால் கோவணத்துடன் அலைய முடியும் ஒப்புக்கொள்கிறேன். பெண்களுக்கு அதுசாத்தியமல்ல.. தமிழ்நாட்டிலும், மதுரை அதை சார்ந்த வறட்சி மிகுந்த தென் மாவட்டங்களில் விவசாய விளை நிலங்களே குறைவு.. வறுமையின் காரணமாக மேல்சட்டை கூட இல்லாமல் சிரமப்பட்ட மக்களைக் கண்டு மனம் நொந்துதான் காந்திஜி மேல்சட்டையைக் கழற்றினார், அதற்கும் பெண்கள் இரவிக்கை இல்லாமல் இருப்பதற்கும் சம்பந்தம் இல்லை என்றே நினைக்கிறேன். கோடை வெய்யில் தகிப்பதற்காகவெல்லாம் மேல் சட்டை இல்லாமல் இருக்கக்கூடிய பண்பாடு கொண்டவர்கள் அல்ல தமிழகப் பெண்கள்... இதை ஒப்புக் கொள்ள இயலாது..

அன்புடன்

பவளா.

இது உயிரியல் சார்ந்த ஒரு மாற்றுக்கருத்து. அவ்வளவுதான். உங்கள்
கட்டுரையின் காரத்தைக் குறைக்க எழுதவில்லை :-)

நா.கண்ணன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Nagarajan Vadivel

unread,
Apr 23, 2012, 4:51:20 AM4/23/12
to mint...@googlegroups.com
கண்ணன் ஐயா
உங்களுடைய கருத்துக்கு உடன் படுகிறேன்
கொஞ்சம் பென்ணியம் தூக்கலாகச் சிந்திக்கும்போது பெண் மேல்  ரவிக்கையைக் கழட்டியதால் அடிமைப்பட்டார்கல் என்ற சிந்தனை எழுவது இயல்பு
பவளா அவர்கள் கட்டுரையில் கருத்தில் கொள்ள வேண்டியது இடங்கை வலங்கை பிரிவில் பெண்கள் உடை அணிந்த முறை பற்றியது. இடங்கை கைக்கோளர்கள் வலங்கை வேளாளர்கள் இதற்கிடையே சில பகுதிகலில் கொங்கு கவுண்டர்கல்
விதவைகளில் சில பிரிவினர் வெள்ளைச் சேலை அணிவதும் சில பிரிவினர் கலர்ச் சேலை அணிவதும் உண்டு
சிக்கல் எழுவது இப்பெண்டிர் பொது இடங்களில் தோன்றும் போது நடமாடும்போது நிகழ்ந்தசம்பவங்கள் அதன் பாதிப்பும்
அதுபற்றிய தகவல் திரட்ட வேண்டும்
நாகராசன்


2012/4/23 N. Kannan <navan...@gmail.com>

N. Kannan

unread,
Apr 23, 2012, 5:16:02 AM4/23/12
to mint...@googlegroups.com
ஐயா:

இதன் சமூக முக்கியத்துவத்தை எவ்வகையிலும் நான் கேலியோ, கேள்வியோ
கேட்கவில்லை. அதை உணர்ந்து மதிக்கிறேன்.

சட்டை இல்லாமல் பெண்களால் இருக்க முடியாது என்பது ஏற்றுக்கொள்வதாய்
இல்லை. நான் சிறுவனாய் இருந்தவரை கேரளப் பெண்கள் ஜாக்கெட் அணிந்ததில்லை.
சமூகம் ஏற்றுக்கொண்டால் எதுவுமே பிரச்சனை இல்லை. இங்கிருந்து மலேசியா போன
பெண்களும் ரவிக்கை இல்லாமல் இருந்த நிலையை பரிசு பெற்ற ஒரு நாவல் பதிவு
செய்கிறது. பார்க்க:
http://video-thf.blogspot.co.uk/2012/04/blog-post_13.html

அங்கு சமூக அடிமை ஆக்கலுக்கு அது பயன்பட்டதாகத் தெரியவில்லை. அதுவொரு
பழக்கம் என்று இருந்திருக்கிறது. எனக்குத் தெரிந்த ஒரு பெரியவர்
வீட்டில். இப்போதும் தாய் ரவிக்கை இல்லாமல் சென்னை மாநகரில் வாழ்கிறாள்.

மீண்டும், இவையெல்லாம் மாற்றுக் கருத்துக்கள் என்று மட்டும் காண்க. பவளா
அவர்களின் வாதத்தை வலுப்படுத்தக் கூட இவை உதவலாம்.

நா.கண்ணன்


2012/4/23 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:

--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..

Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

DEV RAJ

unread,
Apr 23, 2012, 5:22:01 AM4/23/12
to மின்தமிழ்
இதை வேறு ஒருவகையில் அணுகலாம்.
தைத்த ஆடைகளை அணிவது இந்தியாவில்
குறிப்பாகத் தென்னகத்தில் மிகவும் பிற்கால
வழக்கம். தைத்த ஆடை தூய்மைக் குறைவு
எனும் சமய வழக்கம் காரணமாக இருந்திருக்க

வேண்டும்.

வைதிகரும், சமணரும் மத வழிபாடுகளில்
இன்றும் சட்டை அணிவதில்லை. இஸ்லாமியரும்
ஹஜ் கடமையான கல்லெறியும் சடங்கில்
சட்டை, குல்லா அணிவதில்லை -

http://www.youtube.com/watch?v=NAlpoMgxO10


தேவ்

On Apr 23, 1:51 am, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:


> கண்ணன் ஐயா
> உங்களுடைய கருத்துக்கு உடன் படுகிறேன்
> கொஞ்சம் பென்ணியம் தூக்கலாகச் சிந்திக்கும்போது பெண் மேல்  ரவிக்கையைக்
> கழட்டியதால் அடிமைப்பட்டார்கல் என்ற சிந்தனை எழுவது இயல்பு
> பவளா அவர்கள் கட்டுரையில் கருத்தில் கொள்ள வேண்டியது இடங்கை வலங்கை பிரிவில்
> பெண்கள் உடை அணிந்த முறை பற்றியது. இடங்கை கைக்கோளர்கள் வலங்கை வேளாளர்கள்
> இதற்கிடையே சில பகுதிகலில் கொங்கு கவுண்டர்கல்
> விதவைகளில் சில பிரிவினர் வெள்ளைச் சேலை அணிவதும் சில பிரிவினர் கலர்ச் சேலை
> அணிவதும் உண்டு
> சிக்கல் எழுவது இப்பெண்டிர் பொது இடங்களில் தோன்றும் போது நடமாடும்போது
> நிகழ்ந்தசம்பவங்கள் அதன் பாதிப்பும்
> அதுபற்றிய தகவல் திரட்ட வேண்டும்
> நாகராசன்
>

> 2012/4/23 N. Kannan <navannak...@gmail.com>
>
>
>
>
>
>
>
> > 2012/4/23 coral shree <cora...@gmail.com>:

> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,

coral shree

unread,
Apr 23, 2012, 5:22:20 AM4/23/12
to mint...@googlegroups.com


2012/4/23 N. Kannan <navan...@gmail.com>

ஐயா:

இதன் சமூக முக்கியத்துவத்தை எவ்வகையிலும் நான் கேலியோ, கேள்வியோ
கேட்கவில்லை. அதை உணர்ந்து மதிக்கிறேன்.

சட்டை இல்லாமல் பெண்களால் இருக்க முடியாது என்பது ஏற்றுக்கொள்வதாய்
இல்லை. நான் சிறுவனாய் இருந்தவரை கேரளப் பெண்கள் ஜாக்கெட் அணிந்ததில்லை.
சமூகம் ஏற்றுக்கொண்டால் எதுவுமே பிரச்சனை இல்லை. இங்கிருந்து மலேசியா போன
பெண்களும் ரவிக்கை இல்லாமல் இருந்த நிலையை பரிசு பெற்ற ஒரு நாவல் பதிவு
செய்கிறது. பார்க்க:
http://video-thf.blogspot.co.uk/2012/04/blog-post_13.html

அங்கு சமூக அடிமை ஆக்கலுக்கு அது பயன்பட்டதாகத் தெரியவில்லை. அதுவொரு
பழக்கம் என்று இருந்திருக்கிறது. எனக்குத் தெரிந்த ஒரு பெரியவர்
வீட்டில். இப்போதும் தாய் ரவிக்கை இல்லாமல் சென்னை மாநகரில் வாழ்கிறாள்.

சார் இது பழக்கமாக ஏற்படுத்தப்பட்டது என்றுதான் சொல்ல வருகிறேன். கட்டாயப்படுத்தி இப்படி ஒரு பழக்கத்தை ஏற்படுத்தி அதை அப்படியே பழக்கத்தில் கொண்டுவந்திருக்கிறார்கள். இப்படி யோசிக்கலாமே.. பருவ வயதில் மறைக்க வேண்டிய வயதில் இரவிக்கை அணியக் கூடாது என்ற கட்டுப்பாட்டினால், சிரமப்பட்டு பழகிய பின்பு, வயதான பிறகு அதைக்கேட்க ஆளை இல்லை என்றாலும்  அது வேண்டியிருக்காது அல்லவா.. மனிதமனமே பழக்கத்திற்குத்தானே அடிமை... 



--

                                                               
                 

Take life as it comes.

coral shree

unread,
Apr 23, 2012, 5:24:32 AM4/23/12
to mint...@googlegroups.com
இதுவும் ஒரு வகையில் ஏற்றுக் கொண்டாலும், ராஜகுல பெண்டிரும், சீமான் வீட்டு பெண்டிரும் கச்சை அணியும் வழக்கம் இருந்திருக்கிறதே.. கச்சை என்பது தையல் தேவை இல்லாத ஒரு துணிதான்.

2012/4/23 DEV RAJ <rde...@gmail.com>
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

DEV RAJ

unread,
Apr 23, 2012, 5:28:08 AM4/23/12
to மின்தமிழ்
On Apr 23, 2:24 am, coral shree <cora...@gmail.com> wrote:
> இதுவும் ஒரு வகையில் ஏற்றுக் கொண்டாலும், ராஜகுல பெண்டிரும், சீமான் வீட்டு
> பெண்டிரும் கச்சை அணியும் வழக்கம் இருந்திருக்கிறதே.. கச்சை என்பது தையல் தேவை
> இல்லாத ஒரு துணிதான்.


ஆம், மார்க்கச்சு இருந்துள்ளது


தேவ்

> > > >http://www.tamilheritage.org/how2contribute.htmlTopost to this group,


> > > > send email to minT...@googlegroups.com
> > > > To unsubscribe from this group, send email to
> > > > minTamil-u...@googlegroups.com
> > > > For more options, visit this group at
> > > >http://groups.google.com/group/minTamil
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> > to visit our Muthusom Blogs at:
> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
> > send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil
>
> --
>

N. Kannan

unread,
Apr 23, 2012, 5:38:22 AM4/23/12
to mint...@googlegroups.com
இதுவொரு ஆணடிமை உத்தி என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

ஆனால் மார்புக்கச்சு என்பது ஒரு social value. அந்தமான் நிக்கோபர்
ஆதிவாசிகளிடம் அது இன்றளவும் இல்லை. அவர்களும் இந்தியர்கள்தான். நமது
கோயில் சிற்பங்கள் இந்நிலை பரவலாக தமிழகத்தில் இருந்ததைக் காட்டுகிறது.
கேரளாவில் சமீக காலம்வரை இருந்தது. ஆப்ரகாமிய மதங்கள் ஒருவகையான பரிசுத்த
விழுமியத்தை (puritanical value) இங்கு கொண்டு வந்தன. ஆங்கிலேய விக்டோரிய
விழுமியங்கள் (Victorian values) மேற்சட்டை போடுதலை வலியுறுத்தின.
அதையும் மீறி நீண்டகாலம் தாக்குப் பிடித்த நாம் இறுதியில்
இப்பழக்கத்திற்கு இணங்கிவிட்டோம்.

மீண்டும், இதுவொரு மாற்று எண்ணோட்டம். அவ்வளவே.

நா.கண்ணன்

2012/4/23 coral shree <cor...@gmail.com>:

coral shree

unread,
Apr 23, 2012, 5:48:12 AM4/23/12
to mint...@googlegroups.com
கல்வியறிவில்லாத ஆதிவாசிகள் இன்றளவும் மேலாடை இல்லாமல்தான் இருக்கிறார்கள்.அவர்களிலேயே இன்று படித்து வெளியே வரும் பெண்கள், குறவர் சமூகத்தில் கூட சொல்லலாம், அவர்களெல்லாம் இன்றைய நாகரீகத்திற்கு மாறிக்கொண்டுதான் இருக்கிறார்கள். 

2012/4/23 N. Kannan <navan...@gmail.com>

இதுவொரு ஆணடிமை உத்தி என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

ஆனால் மார்புக்கச்சு என்பது ஒரு social value. அந்தமான் நிக்கோபர்
ஆதிவாசிகளிடம் அது இன்றளவும் இல்லை. அவர்களும் இந்தியர்கள்தான். நமது
கோயில் சிற்பங்கள் இந்நிலை பரவலாக தமிழகத்தில் இருந்ததைக் காட்டுகிறது.
கேரளாவில் சமீக காலம்வரை இருந்தது.

இதைத்தான் சார் நானும் சொல்கிறேன். பெண்கள் கல்வியறிவு பெற்று சுயசிந்தனை கொள்ள அனுமதி பெறும்வரை அடக்கி, ஒடுக்கி வைக்கப்பட்டார்கள் . அதற்கான போராட்டங்களுக்கு முன்னோடியாக பல பெண்களும் இருந்திருக்கிறார்கள். முத்துலட்சுமி ரெட்டி போன்றவர்கள் சாதித்தும் காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

ஆப்ரகாமிய மதங்கள் ஒருவகையான பரிசுத்த
விழுமியத்தை (puritanical value) இங்கு கொண்டு வந்தன. ஆங்கிலேய விக்டோரிய
விழுமியங்கள் (Victorian values) மேற்சட்டை போடுதலை வலியுறுத்தின.
அதையும் மீறி நீண்டகாலம் தாக்குப் பிடித்த நாம் இறுதியில்
இப்பழக்கத்திற்கு இணங்கிவிட்டோம்.

மீண்டும், இதுவொரு மாற்று எண்ணோட்டம். அவ்வளவே.

நா.கண்ணன்

2012/4/23 coral shree <cor...@gmail.com>:
> இதுவும் ஒரு வகையில் ஏற்றுக் கொண்டாலும், ராஜகுல பெண்டிரும், சீமான் வீட்டு
> பெண்டிரும் கச்சை அணியும் வழக்கம் இருந்திருக்கிறதே.. கச்சை என்பது தையல் தேவை
> இல்லாத ஒரு துணிதான்.
>
>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Maravanpulavu K. Sachithananthan

unread,
Apr 23, 2012, 5:48:14 AM4/23/12
to மின்தமிழ்
"தனி மனித தாக்குதல் என்று வரும் போது தாராளமாக உங்கள் நியாயத்தை விளக்கி
கேளுங்கள். எப்படி அந்த உரையாடல் தொடங்கியதோ அதே போல முடித்து வைத்துக்
கொள்ள

வேண்டியதும் உங்கள் பொருப்பு. இதனை உங்களுக்கு மட்டும் நான்
சொல்லவில்லை..
பிரச்சனை பிரச்ச்னை என்று சொல்லி மின் தமிழை இழுப்பவர்கள் அனைவருக்குமே
சொல்லிக் கொள்கின்றேன்.

"ஆனால் பலர் புரிந்து கொள்ளாமல் இருப்பது மின் தமிழை நடத்தவும்
மின்னாக்கப்பணிகளைச் செய்யவும் நம்மில் ஒரு சிலர் எவ்வளவு நேரத்தை
செலவழிக்கின்றோம், எவ்வளவு முயற்சிகள் செய்கின்றோம் என்பதனை. சண்டை,

பிரச்சன்னை,


கடும் சொல் என்று வரும் போது நாம் செய்யும் பணிகளின் சிறப்புக்களெல்லாம்
மறைந்து போய் விடுகின்றன. காழ்ப்புணர்ச்சியும், மனவருத்தமும் தான் மிஞ்சி
நிற்கின்றது.

"இதனை விடுத்து ஏன் நாம் ஆக்கப் பணிகளை மட்டுமே யோசிக்கக் கூடாது? பிறரை
வருத்தும் சொற்களை எல்லோருமே கவனமாகத் தவிர்த்து விட்டால் இப்படி
பிரச்சனையே
வராதே.

"இது ஒரு முக்கியமான இழை. இதில் இனி இழை தொடர்பான சிந்தனைகளை மட்டுமே
பகிர்ந்து
கொள்வோம். உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் எப்போதும் தேவை."

எனத் திருமதி சுபா சொன்னதை முன்பு பலமுறை நான் வலியுறுத்திவந்துள்ளேன்.
மின்தமிழில் தொடரவேண்டுமா என்ற வினா என்னுள் எழும். பிற குழுமங்கள்
சிலவற்றில் இருந்து விலக இதுவும் எனக்குக் காரணம்.

சில அன்பர்கள் திட்டமிட்டுச் செய்திகளைக் குழப்புகிறார்களோ என்ற ஐயமும்
வரும். கருத்தியலுக்குள் மட்டும் புகும் மேன்மையாளர்களாக கருத்தியலைப்
பரிமாறும் மென்மையாளர்களாக மாறுவோம்.

ஓர் இழை, ஒரு சிந்தனையைச் சுற்றியதாக இருப்பதால் சிதறி வேறாக மாறாதமையால்
அறிவு வளரும். மின்தமிழ்க் குழும நோக்கம் நிறைவுறும்.
நன்றி
On Apr 22, 7:22 pm, rajam <ra...@earthlink.net> wrote:
> My dear Professor Nagarajan Sir,
>
> Kindly understand that the expression I used ("It sucks") was NOT
> directed at you! Not at all! It's to give expression to my personal
> aversion toward how women have been treated in some places.
>
> I reassure you that it was not meant for you. And yet, if you had
> taken it personally and was "hurt" by that expression, please accept
> my apologies!
>
> Peace,
> rajam
>
> On Apr 22, 2012, at 3:53 AM, Nagarajan Vadivel wrote:
>
>
>
>
>
>
>
> > It hurts
>
> > Today's overuse is much more disparagingly insulting, to the point
> > of a socially unacceptable vulgarism, yet very popular among both
> > sexes.
>
> >http://wiki.answers.com/Q/What_is_the_meaning_of_%27It_sucks%27
>
> > What is the meaning of 'It sucks'?
>
> > Answer:
>
> > It sucks is often used as an interjection in a bad situation. If a
> > rock fell on your toe, you'd scream, "THAT SUCKS!" Or if you were
> > watching a boring show on television, you'd say, "This show sucks!"
> > or, alternatively, "This show sucks ." Saying something "sucks" is
> > somewhat vulgar, but very common place, even more so than curse words.
>
> > "It sucks" is a phrase usually said when a person does not like
> > what he or she hears, sees, or sometimes they use it on themselves
> > or other people.
>
> > Examples:
> > "I suck at bowling" might be used by somebody who says he is not
> > good at bowling.
>
> > "I think you suck at Algebra" might be used by a person that thinks
> > that his friend is not good at Algebra.
>
> > "Can't we go somewhere else? This place sucks." could be used when
> > somebody does not like the place he is in.
>
> > The word "suck" should not be used very often. It is sometimes
> > considered vulgar or improper.
>
> > Originally, it was a mild insult, putting someone down. It came
> > from the idea of piercing a hole (or two at either end) of an
> > uncooked egg, and then sucking or blowing the raw egg outside of
> > the shell, without cracking the shell. Thus the empty eggshell
> > could then be used in some craft activity.
>
> > Since no one liked the idea of having to eat an uncooked egg
> > (Yukk!!), "Go suck an egg!" became a popular male slang insult,
> > similar to " Go fly a kite!"
>
> > Then its use and meaning decayed and degenerated into the sexual
> > 'blow/suck ' usage termed "Dirty English."
>
> > Today's overuse is much more disparagingly insulting, to the point
> > of a socially unacceptable vulgarism, yet very popular among both
> > sexes.
>
> > I never expected from a person I treated with respect
> > One first lady of US said "you cannot be undermined without your
> > permission"
> > Any how once bitten twice shy
> > Thanks for your courtesy
> > IT SUCKS
> > IT HURTS
> > Good bye
> > Nagarajan
>
> > 2012/4/22 rajam <ra...@earthlink.net>
> > IT SUCKS!
>
> > On Apr 21, 2012, at 7:10 PM, Nagarajan Vadivel wrote:
>
> >>http://nadarsangam.com/forum/viewtopic.php?
> >> t=358&sid=872177f74896c93c4d758fdbcbe994bd
> >> FROM THE PAGES OF FORGOTTEN HISTORY
>
> >> People of present day may find it hard to believe the kind of
> >> humiliations women were subjected to in the not so distant past,
> >> in Kerala. Another obnoxious custom pertaining to Nair women was
> >> stopped by Divan Sir.T. Madhava Rao, by the following order.
>
> >> Circular to Peishcars, Tassildars etc.
>
> >> “Whereas His Highness the Maharaja deems it quite repugnant to
> >> ideas of decency that Nair females should lower the upper cloth in
> >> token of respect , when in the presence of men entitled to great
> >> deference while such women are doing service in the pagodas and
> >> cottarums, you are hereby directed to inform the people concerned
> >> that they need not adhere to so objectionable a custom.
>
> >> All classes of His Highness’ native subjects are to be generally
> >> impressed with the desirableness of their dressing in full
> >> compliance with the demands of decency.
>
> >> You are to see that the persons in charge of pagodas and cottarums
> >> do not prevent such compliance.”
>
> >> Sd/T.
> >> Madhava Rao
> >> Diwan
>
> >> Women in the highest step of the caste ladder too did not enjoy
> >> any freedom for dress and movement. Namboodiri women were confined
> >> to the small rooms of their Illam and were allowed to go to the
> >> temple outside, covered with white cloth from head to foot,
> >> escorted by a woman attendant and face hidden under a marakkuda
> >> (an Umbrella).
>
> >> Source : Kerala State Archives Department
> >> Directorate of State Archives
> >> Nalanda, Thiruvananthapuram 695 003
>
> >> Nagarajan
>
> >> 2012/4/22 rajam <ra...@earthlink.net>
> >> அம்மாடியோ!!!! .... அன்பின்
> >> பவளஸ்ரீப் பெண்ணே ...
> >> இந்த்க் கட்டுரையைத்


> >> தொடர்ந்து எழுதவேண்டும்

> >> கண்ணே, அது என்
> >> தாழ்மையான வேண்டுகோளப்பா!


>
> >> On Apr 21, 2012, at 6:49 PM, coral shree wrote:
>
> >>> //இதுபோன்ற தகவல்கள்தானே
> >>> நமக்கு வேண்டும்! மிக மிக
> >>> நன்றியப்பா!
>
> >>> அந்த "ரவுக்கை கழட்டுற"
> >>> பழக்கம் இடத்துக்கு
> >>> இடம் வேறுபடுமோ-னு
> >>> நினைக்கிறேன், பெண்ணே!
> >>> இன்னும் சொல்ல நிறைய
> >>> இருக்கில்லெ -- "சேலை

> >>> முந்தானையெப்
> >>> போர்த்திக்கொள்ள"
> >>> வேண்டிய
> >>> பழக்கத்திலிருந்து


> >>> தொடங்கி?!!// ராஜம் அம்மா.
>
> >>> யானை கட்டி போரடித்த
> >>> காலம்! பொன் விளையும்
> >>> பூமி. பஞ்சம் வந்த
> >>> காலத்திலும் ஊருக்கு
> >>> தானியங்களை படியளந்த
> >>> வள்ளல். சமுதாயத்தில்

> >>> தலை நிமிர்ந்து


> >>> வாழ்ந்த காலம்.
> >>> ஜவஹர்லால் நேரு,
> >>> காமராசர் என
> >>> பெருந்தலைவர்களுக்கு
> >>> வீட்டில் விருந்து
> >>> வைத்து உபசரித்ததன்
> >>> சாட்சியாக 8 அடியில்
> >>> நெடிதுயர்ந்த
> >>> புகைப்படங்கள்.
> >>> அண்ணாந்து பார்த்தால்
> >>> கழுத்து வலிக்கும்

> >>> அளவிற்கு உயரமான


> >>> சுவர்கள். ஒரு தெருவில்
> >>> ஆரம்பிக்கும் வாசல்,
> >>> மறு தெருவில்
> >>> முடிவுறும் பொடக்காளி
> >>> என்கிற பின்வாசல்.
> >>> சேலம் மாநகரின்
> >>> சேர்மன் ராமலிங்கம்
> >>> என்றால் அன்றைய
> >>> காங்கிரசு
> >>> வட்டாரத்தில் மிக
> >>> பிரபலம். இன்றும் ஊரில்

> >>> பெயர் சொல்லிக்


> >>> கொண்டிருக்கும்
> >>> சேர்மன் ராமலிங்கம்
> >>> மார்க்கெட், சேர்மன்
> >>> ராமலிங்கம் மெயின்
> >>> ரோடு, சேர்மன்
> >>> ராமலிங்கம்
> >>> பள்ளிக்கூடம் என்று
> >>> மாளாத சொத்துகளை
> >>> ஊருக்காக வாரி இறைத்த
> >>> வள்ளல்தன்மை தந்த

> >>> பரிசாக பறை சாற்றிக்


> >>> கொண்டிருக்கும்

> >>> நிதர்சனம். உக்கிராண அறை


> >>> என்கிற பொக்கிச அறை! (ஒரு
> >>> அறையே பீரோவாக இருந்த
> >>> ஆச்சரியம்) அரசியல்
> >>> தலைவர்கள்,

> >>> கல்வியாளர்கள் என்று


> >>> சதாசர்வ காலமும்
> >>> நிறைந்த சபையாக
> >>> இருக்கும் இல்லம்.
> >>> இப்படி ஊரின் முக்கிய
> >>> பிரபலங்களின் ஒருவராய்
> >>> இருந்த என் தாய்
> >>> வழித்தாத்தா. இவ்வளவு
> >>> பெருமையும், புகழும்,
> >>> செல்வாக்கும்

> >>> தாண்டவமாடிய ஒரு
> >>> குடும்பத்தில் ஒரு


> >>> பெண்ணின் நிலை என்ன
> >>> என்பதைக் காட்டவே இந்த
> >>> முன்னுரை.
>
> >>> ராஜாராம் மோகன்ராய்,

> >>> திலகர் போன்றோரின்


> >>> பெரும்போராட்டத்தின்
> >>> விளைவாக சதி என்னும்
> >>> உடன்கட்டை ஏறும்

> >>> வழக்கம் முற்றிலும்


> >>> ஒழிக்கப்படது. ஆனால்
> >>> ஒவ்வொரு நாளும்,
> >>> தீக்குளித்து
> >>> புழுவாய்த் துடித்த
>

> ...
>
> read more »

N. Kannan

unread,
Apr 23, 2012, 7:42:15 AM4/23/12
to mint...@googlegroups.com
2012/4/23 coral shree <cor...@gmail.com>:

> இதைத்தான் சார் நானும் சொல்கிறேன். பெண்கள் கல்வியறிவு பெற்று சுயசிந்தனை கொள்ள


> அனுமதி பெறும்வரை அடக்கி, ஒடுக்கி வைக்கப்பட்டார்கள் . அதற்கான
> போராட்டங்களுக்கு முன்னோடியாக பல பெண்களும் இருந்திருக்கிறார்கள்.
> முத்துலட்சுமி ரெட்டி போன்றவர்கள் சாதித்தும் காட்டி விழிப்புணர்வு
> ஏற்படுத்தினார்கள்.


ஏற்றுக்கொள்கிறேன். விக்டோரியன் வேல்யூஸ் வந்த பிறகுள்ள காலக்கட்டம்
நீங்கள் பேசுவது. காலத்திற்கு ஏற்ற நாகரீகத்தில் இருப்பது அவசியம்.

இப்பேச்சு வரும் போது பெருவுடையார் கோயில் ஓவியங்கள் நினைவிற்கு
வருகிறது. தஞ்சைப் பல்கலைக் கழகம் வெளியிட்ட நூல். அதில் இராஜராஜனின்
தேவியர் மூவர் மேல்கச்சு இல்லாமல் இருக்கின்றனர். கூடுதல் சுவாரசியமாக
ஒரு ராணி கால்சட்டை போட்டிருக்கிறாள், திறந்த மார்புடன் இருக்கிறாள்.
இங்குள்ள ஓவியங்களில் கோமணம் கட்டி மேற்சட்டை போட்ட சிவனடியார்கள் (?)
உள்ளனர். இறைத்தேவியரைச் சுட்டும் போது முலைக்காம்பை மறைக்க ஒரு கச்சு
வருகிறது. அது 10ம் நூற்றாண்டு நாகரீகம் எனக் கொள்ளலாம்.

நா.கண்ணன்

பிகு: அது இராஜராஜன் என்பது என் ஊகம். புத்தகத்தில் ஒரு இராஜன், மூன்று
தேவியர் படம் மட்டும் உள்ளது.
அதே போல் சமயாச்சார்யர்கள் சிவனடியார்கள் என்று நம்புகிறேன். சமணர்கள்
போன்றவரின் ஓவியமும் உள்ளது.

coral shree

unread,
Apr 23, 2012, 7:54:55 AM4/23/12
to mint...@googlegroups.com
இது மிக சுவாரசியமான தகவல்... நாம் இதையும் ஆய்ந்து பார்த்தால் பல செய்திகள் கிடைக்கலாம். கால்சட்டை போட்ட ராணி என்றால் வேற்று நாட்டிலிருந்து திருமணம் செய்து கூட்டி வந்தவராக இருக்கலாமோ என்னவோ,அவருக்கும் மேலாடை இல்லாமல் கூட்டி வந்திருக்கிறார்களோ அல்லது வந்த இடத்திலிருந்தும் அப்படித்தானோ என்னவோ ... பொதுவாக சிவனடியார்கள் கோவணம் மட்டும் கட்டியிருப்பார்கள். மேல்சட்டை போட்டிருப்பதும் புதுமையாக இருக்கிறது....

அன்புடன்
பவளா.

2012/4/23 N. Kannan <navan...@gmail.com>
2012/4/23 coral shree <cor...@gmail.com>:
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Innamburan Innamburan

unread,
Apr 23, 2012, 7:56:29 AM4/23/12
to mint...@googlegroups.com

விளக்கங்களையோ, எழுப்பிய குறிப்பிட்ட வினாக்களையோ அணுகாமல், இழை தழைத்து வருகிறது.

’...சமையலறையை விட்டு வெளியே வரவே கூச்சம்... இதுதான் ஆண்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட இயந்திரமாக பெண்ணின் வாழ்க்கை. தன் சட்டங்களுக்கு அடி பணிய வேண்டும், தன் கட்டுப்பாட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என்ற அந்த ஆதிக்க உணர்வு பெண்களின் வாழ்க்கையை அழகுப் பதுமைகளாக சமையலறையுடன் முடக்கிப் போட்டிருக்கிறது.’


~ இதற்கு பதிலை காணவில்லை. இந்த ஆணாதிக்கம், காமாந்தகாரம் எல்லாம் அநாகரீகம், அசிங்கம், அசட்டுத்தனம், திமிரு.

இன்னம்பூரான்

Innamburan Innamburan

unread,
Apr 23, 2012, 7:56:50 AM4/23/12
to mint...@googlegroups.com
பவளசங்கரியின் முதல் இடுகையையோ, அல்லது அவர் ஆணித்தரமாகக் கூறிய விளக்கங்களையோ, எழுப்பிய குறிப்பிட்ட வினாக்களையோ அணுகாமல், இழை பிழைத்து வருகிறது.

2012/4/23 Maravanpulavu K. Sachithananthan <tami...@gmail.com>

coral shree

unread,
Apr 23, 2012, 8:05:08 AM4/23/12
to mint...@googlegroups.com
அன்பின் இ ஐயா,

வணக்கம். பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டு சமையலறையில் முடக்கி வைக்கப்பட்டிருந்த காலத்தின் இறுதியும் அடுத்து கல்வியறிவு பெற்று விழிப்புணர்வு பெறும் அந்த கால கட்டத்தின் ஆரம்பத்தையும் இணைக்கும் அந்த பாலத்தைப்பற்றித்தான் நான் பேச ஆரம்பித்தேன். இப்போது அதற்கு முற்பட்ட காலங்களையும் நோக்கி சென்று கொண்டிருக்கிறது இந்த இழை.அதுவும் நல்லதுதானே.. சம்பந்தப்பட்ட விசயம்தானே ஐயா.

அன்புடன்
பவளா.

2012/4/23 Innamburan Innamburan <innam...@gmail.com>

Hari Krishnan

unread,
Apr 23, 2012, 8:30:44 AM4/23/12
to mint...@googlegroups.com


2012/4/23 N. Kannan <navan...@gmail.com>

சட்டை இல்லாமல் பெண்களால் இருக்க முடியாது என்பது ஏற்றுக்கொள்வதாய்
இல்லை. நான் சிறுவனாய் இருந்தவரை கேரளப் பெண்கள் ஜாக்கெட் அணிந்ததில்லை.
சமூகம் ஏற்றுக்கொண்டால் எதுவுமே பிரச்சனை இல்லை.

உண்மை கண்ணன்.  என்னுடைய சிறிய வயதில் சென்னையின் இதயப் பகுதியான எல்லிஸ் ரோட்டில் (சாந்தி தியேட்டருக்குப் பின்புறம்) அமைந்துள்ள எல்லிஸ்புரம் (பழைய பெயரைச் சொன்னால் அடிக்க வருவார்கள். இருந்தாலும் சொல்கிறேன்.  அதனுடைய பழையபெயர் வாழைப் பறச்சேரி.) என்னுடைய விளையாட்டுக் களம்.  எதிர்ச்சாரியில்தான் எங்கள் வீடு.  அங்கே ஜாக்கெட் அணியும் வழக்கமே மிகச் சிறுபான்மையினரிடம்தான் இருந்தது.  என் நினைவுக்குத் தெரிந்தே, நகர்ப்புறத்திலேயே நடைமுறையில் இருந்த வழக்கம் இது.  யாருக்கும் அப்போது இந்தக் காரணத்தால் கூச்சமோ, பாலுணர்வுத் தூண்டலோ இருந்ததாகத் தெரியவில்லை. எங்கள் வீட்டுக்கு வரும் வேலைக்காரி ஜாக்கெட் இல்லாமல்தான் பெருக்குவாள்.  (நினைவிருக்கட்டும்.  எங்கள் வீட்டில் டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட் இருந்தது.  எப்போதும் நூறு பேருக்குக் குறையாத இளைஞர்கள் டைப்ரைட்டிங் பழகிக் கொண்டிருப்பார்கள். இன்னொரு பகுதியில் ஷார்ட்ஹேண்ட் வகுப்பு நடந்துகொண்டிருக்கும்.  வேலைக்காரி இவர்களுக்கிடையில்தான் நுழைந்து குனிந்து நிமிர்ந்து பெருக்குவாள்.  யாரும் அதைப் பொருட்படுத்தியதாக எனக்கு நினைவில்லை.  அது ஒரு வாழ்க்கை முறையாகத்தான் பார்க்கப்பட்டது.  

இப்போது என்னடாவென்றால்--போன வாரம் வீட்டில் உறவுக்காரப் பையன் அமெரிக்காவில் பிறந்த பெண்ணுக்கு மூன்று வருடம் கழித்து இந்தியாவுக்கு வந்து, விட்டுப்போன  ஜாதகர்ம, நாமகரண, அன்னப் ப்ராசன, ஆயுஷ்ஹோமாதிகளை ஒட்டுக்கா ஒரே தொடர் சீரியலாக நடத்திவிட்டான்!  ஹோமம் செய்ய ஒருவர் குறைந்த காரணத்தால் என்னை அங்கே அமர்ந்து ஹோமகர்மங்களில் கலந்துகொள்ளச் சொன்னார்கள்.  நானும் மேல்வேஷ்டியை இடுப்பில் கட்டிக்கொண்டு அமர்ந்து எல்லாவற்றையும் செய்து முடித்துவிட்டு, என் வீட்டுக்குள் வந்தால் சின்னவன், பதினெட்டு வயதுப் பையன் திட்டுகிறான்!

‘என்ன பெரிய பாடிபில்டராட்டம் மாரக் காட்டிட்டு திரியற? போயி மொதல்ல சட்டயப் போடு!‘

என்ன பண்றது!  இது அவங்க காலம்.  வாங்கிக் கட்டிக்கொள்ள வேண்டியது அப்பன் கடமை.  வாங்கிக் கட்டிக் கொண்டேன். :))  

--
அன்புடன்,
ஹரிகி.

Tthamizth Tthenee

unread,
Apr 23, 2012, 8:35:40 AM4/23/12
to mint...@googlegroups.com

‘என்ன பெரிய பாடிபில்டராட்டம் மாரக் காட்டிட்டு திரியற? போயி மொதல்ல சட்டயப் போடு!‘
 
 
ஹ்ஹ்ஹ்ஹ்ஹஆ   
 
 கண் படுமே பிறர் கண்படுமே என்று  யோசித்திருப்பார்
 
இந்தக் காலத்துப் பிள்ளைகள் சொல்வதிலும் உண்மை இருக்கிறது
 
அவர்கள் வழியில் அவர்கள் சொல்கிறார்கள்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
2012/4/23 Hari Krishnan <hari.har...@gmail.com>

N. Kannan

unread,
Apr 23, 2012, 9:38:57 AM4/23/12
to mint...@googlegroups.com
2012/4/23 Hari Krishnan <hari.har...@gmail.com>:

> என் நினைவுக்குத் தெரிந்தே, நகர்ப்புறத்திலேயே நடைமுறையில் இருந்த
> வழக்கம் இது.  யாருக்கும் அப்போது இந்தக் காரணத்தால் கூச்சமோ, பாலுணர்வுத்
> தூண்டலோ இருந்ததாகத் தெரியவில்லை.

நன்றி. இதைத்தான் சொல்ல வந்தேன். நடைமுறையில் ஒரு வழக்கம் இருக்கும் போது
விகல்பமாகப் பார்க்கத்தோன்றாது. பெண்களுக்குச் சொல்வதுதானே ஆண்களுக்கும்.
இவன் கோமணத்தோடு அலைகிறான். அது பால் உணர்ச்சியைத் தூண்டாதா? :-))
கிராமத்தில் ஈதெல்லாம் சகஜம். அப்படியே வம்பு பண்ணினாலும் வாங்கி
விடுவார்கள் என்று தெரியும் :-)


> ‘என்ன பெரிய பாடிபில்டராட்டம் மாரக் காட்டிட்டு திரியற? போயி மொதல்ல சட்டயப்
> போடு!‘
>

ஸ்வேதா குழந்தையாய் இருந்தபோது குழந்தையை மார்பில் அணைத்த வண்ணம் நான்
ஈசிசேரில் இருப்பதாக ஒரு படம். கோடை காலமோ, குளித்து வந்தேனோ
தெரியவில்லை. சட்டை போடவில்லை. இப்போதைய வாண்டுகள் பார்த்துவிட்டு uncle
is naked என்று சிரிக்கின்றன :-) என்ன செய்ய!!

நா.கண்ணன்

Nagarajan Vadivel

unread,
Apr 23, 2012, 1:29:47 PM4/23/12
to mint...@googlegroups.com
இந்தக் கட்டுரை ஆசிரியர் தன் குடும்ப நிகழ்வை வைத்து எழுதப்பட்டது என்று தெரிவிக்கிறார்.
முதல் வினா
ரவிக்கை கழட்டப் பட்டது என்ற கருத்து முன்னர் அவர்கள் ரவிக்கை போட்டிருந்தது போலவும் பின்னர் குமுக மாற்றத்தால் ஆணியம் ரவிக்கை அணிய அனுமதி மறித்தது என்ற பொருளில் எழுதப் பட்டதாக எடுத்துக் கொள்ளலாமா?
 
இரண்டாவது வினா
ஆணியம் பெண்ணைச் சமயலறையில் அடைத்துவைத்துப் பெண்ணின் முன்னேற்றத்தைத் தடை செய்ததாகவும் குறிப்பிட்டதாக எடுத்துக்கொள்ளலாமா?
 
19-ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் ஆங்கிலேயர்ள் எழுதிய, அதற்குமுன்
பல்லவ ஒரிஸ்சா கல்வெட்டு ஆதாரங்களைத் திரட்ட்டிப் பார்த்தபோது மேலாடை உயர் ஜாதியினர் குறிப்பாக அந்தண அரச குடும்பப் பெண்டிர் அணிந்திருப்பது தெரிகிறது
 
தென் நாடடில் குறிப்பாகத் தமிழகத்தில் நாடார், சானார் பெண்டிர்  மேலாடை அணியத் தடை இருந்ததாகத் தெரிகிறது
 
இதுபோன்ற கட்டுப்பாடே நாடார்களின் பெருபாலோர் குறித்துவத்துக்கு மாற வழி வகுத்தது என்பது தெரிகிறது
 
இந்தக் கட்டுரை எழுதப்பட்ட காலம் வரையறுத்தால் மேலும் தரவுகள் திரட்ட உthaviயாக இருக்கும்
நாகராசன்
2012/4/23 N. Kannan <navan...@gmail.com>
2012/4/23 Hari Krishnan <hari.har...@gmail.com>:

coral shree

unread,
Apr 23, 2012, 1:55:57 PM4/23/12
to mint...@googlegroups.com
வணக்கம் ஐயா.

2012/4/23 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

இந்தக் கட்டுரை ஆசிரியர் தன் குடும்ப நிகழ்வை வைத்து எழுதப்பட்டது என்று தெரிவிக்கிறார்.
முதல் வினா
ரவிக்கை கழட்டப் பட்டது என்ற கருத்து முன்னர் அவர்கள் ரவிக்கை போட்டிருந்தது போலவும் பின்னர் குமுக மாற்றத்தால் ஆணியம் ரவிக்கை அணிய அனுமதி மறித்தது என்ற பொருளில் எழுதப் பட்டதாக எடுத்துக் கொள்ளலாமா?

சிற்றாடை கட்டும் பருவத்தில் இரவிக்கை அணிந்திருக்கிறார்கள். திருமணம் ஆனபின்பு இரவிக்கை அணிவது ஏற்கப்படவில்லை. ஊரோடு ஒத்து வாழும் பொருட்டும் இது போன்று இரவிக்கை அணியாதிருக்கும் வழக்கம் வந்திருக்கலாம். 
 
இரண்டாவது வினா
ஆணியம் பெண்ணைச் சமயலறையில் அடைத்துவைத்துப் பெண்ணின் முன்னேற்றத்தைத் தடை செய்ததாகவும் குறிப்பிட்டதாக எடுத்துக்கொள்ளலாமா?

பெண்ணின் முன்னேற்றத்திற்கு வழியே இல்லாதவாறு ,  படுக்கையறைப் பதுமைகளாகவும் மற்றும் சமையலறைப் பாவைகளாகவும்,  இருந்து வந்திருக்கின்றனர்.. வேலு நாச்சியார் மற்றும் முத்துலட்சுமி ரெட்டி போன்றோர் இதற்கு விதிவிலக்கு.
 
19-ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் ஆங்கிலேயர்ள் எழுதிய, அதற்குமுன்
பல்லவ ஒரிஸ்சா கல்வெட்டு ஆதாரங்களைத் திரட்ட்டிப் பார்த்தபோது மேலாடை உயர் ஜாதியினர் குறிப்பாக அந்தண அரச குடும்பப் பெண்டிர் அணிந்திருப்பது தெரிகிறது
 
தென் நாடடில் குறிப்பாகத் தமிழகத்தில் நாடார், சானார் பெண்டிர்  மேலாடை அணியத் தடை இருந்ததாகத் தெரிகிறது
 
இதுபோன்ற கட்டுப்பாடே நாடார்களின் பெருபாலோர் குறித்துவத்துக்கு மாற வழி வகுத்தது என்பது தெரிகிறது
 
இந்தக் கட்டுரை எழுதப்பட்ட காலம் வரையறுத்தால் மேலும் தரவுகள் திரட்ட உthaviயாக இருக்கும்

19ம் நூற்றண்டிலிருந்து ,20ம் நூற்றாண்டின் மையப்பகுதி வரை இது போன்ற நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்தன... அதற்குப்பிறகு பெண்கல்வி என்ற விழிப்புணர்வு வர ஆரம்பித்தவுடன், நிலைமைகளில் சற்றே மாற்றம் ஏற்பட ஆரம்பித்திருக்கிறது.....

அன்புடன்
பவளா.

rajam

unread,
Apr 23, 2012, 7:09:15 PM4/23/12
to mint...@googlegroups.com
எல்லாரும் எதைப் பற்றிப் பேசுகிறீர்கள் என்று எனக்கு உண்மையிலேயே புரியவில்லை -- பனிப்போர் (cold war), அக்கப்போர் பற்றி எனக்கு எதைப் பற்றியும் தெரியாது; அதோடு எதிலும் அக்க்றை இல்லை.

1. என் சொல்லின் வெளிப்பாடு என் மனத்தின் ஆழமான கருத்தில் இருந்தே.
2 விளக்கமான உரை (== authoritative statement) அல்லது "guidelines" என்று ஒன்று இல்லாதவரைக்கும் இப்படித்தான் மடலாடல் குழுக்கள் மக்களைப் பாடுபடுத்தும் என்று நினைக்கிறேன்.
3. என் சொல்லின் பயன்பாடு  (It sucks) Dr. Nagarajan அவர்களை வருத்தப்படுத்திய உண்மை அறிந்தேன்; வருந்தினேன். அது என் தவறில்லை!
4. அதே சமயம். அதே பயன்பாடு எப்படித் தவறாகும் என்றும் அறிந்துகொள்ள இயல முயலலாம். தமிழகம் இப்போது பன்னாட்டு மொழிப் பயன்பாட்டை ஏற்றுக்கொள்வதாகத் தெரிகிறதே! 
  



On Apr 22, 2012, at 11:19 AM, Innamburan Innamburan wrote:


‘எல்லோரும் `இ`சார் வீட்டில் கூடிக் குதூகலிக்க வேண்டிய நேரம் வந்தாச்சு!’
~என்று கண்ணன் சொன்னதாலும், ஏகாக்ரஹசிந்தையுடன் ஸுபாஷிணி இவ்விழையின் திசையை, துருவ நக்ஷத்திரம் போன்று போற்றியதாலும், நேற்றிரவு கவலையுடன் ஒரு நண்பர் அளவளாவியதாலும், ராஜம், நாகராஜன் இருவர் மீதும் எனக்கு உள்ள நன்மதிப்பாலும், வயது ஏற, ஏற வந்துள்ள விட்டேற்றி ஸ்வபாவம்  இழையடக்கத்தை ஆதரிப்பதாலும்,:
  1. வருக! வரூக! என்று யாவரையும் அழைக்கிறேன். குதூகலம் உத்திரவாதம்.
  2. ஒரு நிமிடம், ராஜத்தின் இடுகை என்னை திகைக்கவைத்தது. அவர் சொல்லை கிளிப்பிள்ளை மாதிரி நான் திருப்பிக்கூறியதை நிந்திக்கிறார். என்று வருந்தினேன்.  பிறகு சுதாரித்துக்கொண்டேன், இடுகைகள் இடுக்கு இல்லாமல் வந்து கிடுக்குப்பிடி போட்டதை, அலசிய பின். அவர் பயன்படுத்திய அமெரிக்கன் ஸ்லாங் (American slang)  பெண்களைக் கொடுமைப்படுத்திய சமூகத்தைப் பற்றியது என்று நான் நண்பரிடம் நேற்றே சொன்னதை, அவரே உறுதிபடுத்தியுள்ளார்.
  3. நாகராஜன் தவறாக புரிந்து கொண்டதை நான் பெரிது படுத்தமாட்டேன். அவருடைய நிலையில் எனக்கும் அப்படித்தான் பட்டிருக்கும். வேறு இடத்துக் கவலையை அவருடைய இடுகை பிரதிபலிக்கிறது. இனி இந்த விஷயத்தை மறந்து விடுவோம்.
  4. ஏனெனில், ராஜம் எரும்பை வருத்தக்கூட துரும்பை கிள்ளிப்போடாதவர் என்பது யாவரும் அறிந்ததே. நாகராஜன், ராஜன், நான் எல்லாரும் கிட்டத்தட்ட ஒரே சமயத்தில், பவளசங்கரியின் இலக்கிய வரவால், தாக்கம் அடைந்து இருக்கிறோம். அவ்வளவு தான். அதை விட்டு விட்டு, ஸுபாஷிணியின் பாதையில் செல்வோம்.
  5. ஒரு தெளிவு தேவை. கண்ணன் சொன்ன மாதிரி பனிப்போரும் அக்கப்போரும் அதிகமாகிவிட்டது. அந்த போக்கு, மின் தமிழுக்குத் தேவையில்லை. பனிப்போர் கூட குறைவு. ஆனால், குத்தல், கிளறுதல், பிறாண்டுதல் போன்ற காழ்ப்புணர்ச்சி இடுகைகளை, அது நக்கீரனிடமிருந்து வந்தாலும், மட்டுறுத்தல் செய்ய வேண்டும். அப்படி செய்வது தான், மின் தமிழுக்கும், த.ம.அ. வுக்கும் தற்காப்புக் கவசம். அக்கப்போரை குறைக்க அவரவர் தான் முயலவேண்டும். மட்டுறுத்தல் இயலாது.

நன்றி, வணக்கம்,
இன்னம்பூரான்
22 04 2012 

rajam

unread,
Apr 23, 2012, 8:52:31 PM4/23/12
to mint...@googlegroups.com
Basically, I'm just getting tired. 

Bye to you all! 

+++++++++++++++++++++++++++++++++++++++ 

rajam

unread,
Apr 23, 2012, 9:51:17 PM4/23/12
to mint...@googlegroups.com
Read tired as tierd.

Basically, I'm just getting tired. 

Bye to you all! 

+++++++++++++++++++++++++++++++++++++++ 

எல்லாரும் எதைப் பற்றிப் பேசுகிறீர்கள் என்று எனக்கு உண்மையிலேயே புரியவில்லை -- பனிப்போர் (cold war), அக்கப்போர் பற்றி எனக்கு எதைப் பற்றியும் தெரியாது; அதோடு எதிலும் அக்க்றை இல்லை.

1. என் சொல்லின் வெளிப்பாடு என் மனத்தின் ஆழமான கருத்தில் இருந்தே.

2 விளக்கமான உரை (== authoritative statement) அல்லது "guidelines" என்று ஒன்று இல்லாதவரைக்கும் இப்படித்தான் மடலாடல் குழுக்கள் மக்களைப் பாடுபடுத்தும் என்று நினைக்கிறேன்.

3. என் சொல்லின் பயன்பாடு  (It sucks) Dr. Nagarajan அவர்களை வருத்தப்படுத்திய உண்மை அறிந்தேன். அது என் தவறில்லை!

Kamala Devi

unread,
Apr 23, 2012, 11:24:17 PM4/23/12
to mint...@googlegroups.com
பவழம், முனைவர் கண்ணன்
கேஎளத்தில் இன்றும் மூத்த தம்பிராட்டிகள் கச்சைதான் அணிகிறார்கள்.ஆனால் விகல்பமாக யாரும் எண்ணி விடாதீர்கள்,
கச்சை என்றால் அவ்வளவு கனத்த மறைப்பு, அதுவும் அழகான பீதாம்பரத்தில் தான்.
அதற்குமேல் ஸ்வர்ண ஆபரணங்கள் சார்த்தி அவர்கள் வீற்ரிருப்பதைப்பார்க்கவே அழகு .அதை எப்படி எழுதுவது என்று தெரியவில்லை.
அன்பு கமலம்

http://www.kamalagaanam.blogspot.com

--- On Mon, 23/4/12, N. Kannan <navan...@gmail.com> wrote:

DEV RAJ

unread,
Apr 24, 2012, 12:00:37 AM4/24/12
to மின்தமிழ்
http://tinyurl.com/bu5cv6r

கமலம் அவர்கள் சொல்வது சரியே; சென்ற நூற்றாண்டின்
முற்பகுதிவரை பெரும்பாலும் எல்லா வகுப்பிலும் பெண்களுக்கு இதுதான்
நிலை


தேவ்

On Apr 23, 8:24 pm, Kamala Devi <saahith...@yahoo.com.sg> wrote:
> பவழம், முனைவர் கண்ணன்
> கேஎளத்தில் இன்றும் மூத்த தம்பிராட்டிகள் கச்சைதான் அணிகிறார்கள்.ஆனால் விகல்பமாக யாரும் எண்ணி விடாதீர்கள்,
> கச்சை என்றால் அவ்வளவு கனத்த மறைப்பு, அதுவும் அழகான பீதாம்பரத்தில் தான்.
> அதற்குமேல் ஸ்வர்ண ஆபரணங்கள் சார்த்தி அவர்கள் வீற்ரிருப்பதைப்பார்க்கவே அழகு .அதை எப்படி எழுதுவது என்று தெரியவில்லை.
> அன்பு கமலம்
>
> http://www.kamalagaanam.blogspot.com
>

> --- On Mon, 23/4/12, N. Kannan <navannak...@gmail.com> wrote:


>
> From: N. Kannan <navannak...@gmail.com>
> Subject: Re: [MinTamil] பெண்ணை வெறும் கைப்பாவையாக வைத்திருந்த காலம்!
> To: mint...@googlegroups.com
> Date: Monday, 23 April, 2012, 8:37 AM
>

> 2012/4/23 coral shree <cora...@gmail.com>:


>
> > டாக்டர் வள்ளி அவர்களின் ஆதாரங்கள் நமக்கு பெரிதும் உதவலாம். கலைச்சிற்பங்களின்
> > ஆதாரங்கள் பல.... பெண்களின் சிற்பங்களே ஆயிரம் கதைகள் பேசக்கூடும்... வாருங்கள்
> > .....நன்றி.
>
> அன்பின் பவளா:
>
> மிக அருமையான எண்ணப்பகிர்வு. வாழ்த்துக்கள்.
>
> இரவிக்கை அவிழ்த்தல் என்பது ஒருவகையில் அடிமைப் படுத்தல்தான். கூச்ச
> உணர்வை ஊட்டிப் பணிய வைத்தல்.
>
> ஆனால் இந்தியா போன்ற உஷ்ணப்பிரதேசத்தில் மேற்சட்டை இல்லாமல் இருத்தல்
> இயல்பானதுதானே? நான் அறிந்தவரை குடியானவ வீட்டுப் பெண்கள் ரவிக்கை
> அணிந்து பார்த்ததில்லை. அதனால் அவர்கள் அடிமைப் பட்டது போலவும்
> தெரியவில்லை. கிராமத்து ஆண்கள் வயக்காட்டில் வேலை செய்யும் போது வெறும்
> கோமணத்துடன்தான் அலைகிறான். அது சௌகர்யமும் கூட. தமிழக மக்கள் சட்டை
> இல்லாமல் இருப்பதைக் கண்டு காந்திஜியே சட்டையைக் கழட்டி புரட்சி
> செய்யவில்லையா? இந்தியாவின் வடமாநிலங்களில் பெண்களின் நிலை தமிழகத்தை விட
> மேம்பட்டு உள்ளது என்று சொல்லமுடியாது. ஆனால் அங்கு ரவிக்கை அணிந்துதான்
> ஆகவேண்டும். ஏனெனில் குளிர்.
>
> இது உயிரியல் சார்ந்த ஒரு மாற்றுக்கருத்து. அவ்வளவுதான். உங்கள்
> கட்டுரையின் காரத்தைக் குறைக்க எழுதவில்லை :-)
>
> நா.கண்ணன்
>
> --

> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group, send email to minT...@googlegroups.com

coral shree

unread,
Apr 24, 2012, 1:45:28 AM4/24/12
to mint...@googlegroups.com
அன்பின் கமலம் சேச்சி,

மிக்க நன்றி சேச்சி. சேச்சி இவர்களின் வாழ்க்கை முறைகள் - அதாவது 19ம் நூற்றாண்டின் இறுதியிலும், 20ம் நூற்றாண்டின் இடைக்காலம் வரையிலும், சமுதாயத்தில் பெண்களின் பங்கு + குடும்ப சூழல் , கல்வியறிவு, இவைகள் குறித்தும் பகிர்ந்து கொண்டால் நலம் சேச்சி.

அன்புடன்
பவளா.



2012/4/24 Kamala Devi <saahi...@yahoo.com.sg>

N. Kannan

unread,
Apr 24, 2012, 5:26:04 AM4/24/12
to mint...@googlegroups.com
2012/4/23 coral shree <cor...@gmail.com>:

> கல்வியறிவில்லாத ஆதிவாசிகள் இன்றளவும் மேலாடை இல்லாமல்தான்
> இருக்கிறார்கள்.அவர்களிலேயே இன்று படித்து வெளியே வரும் பெண்கள், குறவர்
> சமூகத்தில் கூட சொல்லலாம், அவர்களெல்லாம் இன்றைய நாகரீகத்திற்கு
> மாறிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
>

கல்வி அறிவிற்கும் ஆடை உடுத்தலுக்கும் சம்பந்தமில்லை. ஆடை, அணிகலன்
என்பதோர் நாகரீக வெளிப்பாடு. அந்தமான் நிக்கோபார் மக்கள் மேல்சட்டை
போடவில்லை அதனால் ஆதிவாசிகள் என்று புறம் தள்ள முடியாது. ஏனெனில் தஞ்சை
ஓவியங்கள் மிகத்தெளிவாக நாகரீக உச்சியிலிருந்த சோழப்பேரரசில் ஆண்களும்,
பெண்களும் சட்டை இல்லாமல் சகஜமாக இருப்பதைத் தெளிவாய் காட்டுகின்றன.
தஞ்சை ஓவியங்களுக்கென தனி இழை தொடங்க வேண்டிய அவசியம் வருகிறது.

நம் நாகரீகமல்லாத பேண்ட், சர்ட் போட்டுக்கொள்வதுதான் அந்நியம் என்று
தோன்றுகிறது. கேரளாவிலும், இலங்கையிலும் இயல்பாய் இருப்பதாய் படுகிறது.
நாம் மேற்குலக நாகரீகத்தை உள்வாங்கிக்கொண்டு அது நாகரீகம் என்கிறோம்.
இதுவும் மாற்றம்தான்.

நா.கண்ணன்

N. Kannan

unread,
Apr 24, 2012, 5:43:49 AM4/24/12
to mint...@googlegroups.com
2012/4/24 rajam <ra...@earthlink.net>:

> எல்லாரும் எதைப் பற்றிப் பேசுகிறீர்கள் என்று எனக்கு உண்மையிலேயே புரியவில்லை
> -- பனிப்போர் (cold war), அக்கப்போர் பற்றி எனக்கு எதைப் பற்றியும் தெரியாது;
> அதோடு எதிலும் அக்க்றை இல்லை.
>
> 1. என் சொல்லின் வெளிப்பாடு என் மனத்தின் ஆழமான கருத்தில் இருந்தே.
> 2 விளக்கமான உரை (== authoritative statement) அல்லது "guidelines" என்று ஒன்று

அன்பின் அக்கா:

மின்தமிழ் குழுப்பண்பாடு குறித்து தெளிவான விளக்கங்கள் நம் குழு
வலைப்பக்கத்தில் உள்ளன. பலமுறை இங்கு சுற்றுக்கு வந்திருக்கிறது.
மின்தமிழ் குழுமத்து உருப்பினர் ஒவ்வொருவரும் இதை வாசித்து அறிந்த பின்
இணைய வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறோம். மேலும் ஏன் மின்தமிழில்
இணைகிறேன் என்ற தெளிவான குறிப்பு சொல்லாமல் யாரையும் இணைத்துக்
கொள்வதுமில்லை. எனவே பிழையை எம் மீது போடுவது ஏற்றுக்கொள்ளமுடியாதது.

குறிப்பாக:

//மின்தமிழை உங்கள் மடலாடற்குழுவாக நினைத்து உறவு கொள்ளுங்கள். ஆனால் அது,
உங்களுக்கே மட்டுமுள்ள மடலாடற்குழு என்பது போல் செயல்படாதீர்கள். கவன
ஈர்ப்பு நமது செயல்களுக்கான டானிக் என்பதை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால்
வெறும் கவன ஈர்ப்பை மட்டும் மனதில் கொண்டு மின்தமிழின் மீது குதிரை
ஏறாதீர்கள் :-)) (அப்படிச் செய்யும் போதுதான் மட்டுறுத்தல் அவசியமாகிறது) //

http://groups.google.com/group/mintamil/browse_thread/thread/239138c12ae6030c

தமிழ்ப்பண்பாட்டில் திளைப்பவர்க்கு authoritative statement எதற்கு?
சங்கம் வளர்த்த தமிழ்மக்களுக்கு சங்கத்தில் எப்படி நடந்து கொள்ள
வேண்டுமென்று தெரியாதா?

மேலே சொன்ன எல்லாம் `உங்களுக்கு`ச் சொல்வதல்ல. பொதுவாய் கேட்ட
கேள்விக்கு, பொதுவான பதில்கள். அவ்வளவே.

நா.கண்ணன்

Tthamizth Tthenee

unread,
Apr 24, 2012, 5:53:53 AM4/24/12
to mint...@googlegroups.com
மன்னர்கள் ஆண்ட காலத்திலேயே குறத்திகள் மேலாடையில்லாமல் வாழ்ந்தனர்
 
அதற்கு ஆதாரமாக திருநெல்வேலியிலுள்ள கிருஷ்ணாபுரத்தில் நான் எடுத்த
 
புகைப்படம் இணைக்கிறேன்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
 
 

 
2012/4/24 N. Kannan <navan...@gmail.com>
குறத்தி ராஜகுமாரனைக் கடத்தும் காட்சி.jpg

Nagarajan Vadivel

unread,
Apr 24, 2012, 6:20:02 AM4/24/12
to mint...@googlegroups.com
ஆங்கிலேயர் வரவுக்குமுன் தொடக்கக் கல்வி பரவலாக இருந்தது.  ஆனால் உயர் கல்வி ஒரு சிலருக்குமட்டும் என்று எல்லையைச் சுருக்கிக்கொண்டது.
உயர் கல்வி ஆங்கில அறிவு ஆங்கில அரசில் வேலை வாய்ப்பை வழங்கி சமூகத்தில் புதிய மரியாதையை அளித்தது. 
ஆயினும் பெண்கள் உயர் கல்வி பெறுவது தடை செய்யப்பட்டு அவர்களின் குமுகச் சூழல் ஆணாதிக்கத்துக்குள் அடக்கி வைக்கப்பட்டது
பறையர்கள் மள்ளர்கள் சானார் நாடார் பெண்கள் கோவில் பொது இடங்களில் இழிவு படாமல் நடமாடத் தடை இருந்தது
தென் தமிழ் நாட்டில் பெரும் கோவில்களில் (வைணவம் தவிர) மற்ற் கோவில்களில் நுழைய வணங்க அனுமதி இல்லை
இந்த வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்தி  பாதிரிகள்ஆயிரக்கணக்கானவர்களை கிறித்துவத்துக்கு மதம் மாற்றி நாடார் கிறித்துவர்கள் என்ற புதிய பிரிவைத் தோற்றுவித்தனர்
கிறித்துவர்களாக மதம் மாறியோர் இந்துக் கட்டுப்பாடுகளுக்கு ஆளாகாமல் புதிய ஆங்கில உடை அலங்காரத்தில் பவனி வந்தனர்
19ஆம் நூற்றாண்டில் உலகமெங்கும் பெண்கள் கைப்பாவையாகக் கண்ணாடிக் கூட்டுக்குள் இருந்தனர்
நாகராசன்
2012/4/24 N. Kannan <navan...@gmail.com>

N. Kannan

unread,
Apr 24, 2012, 6:29:12 AM4/24/12
to mint...@googlegroups.com
உண்மை!

உடை என்பதைக் கூட சமூக அடிபணிதலுக்கு உட்படுத்திய தமிழக முறைகள் ஆச்சர்யமிக்கவை.
கீழ்சாதி இந்துக்களுக்கு மேற்சட்டை அணியும் உரிமை பறிக்கப்பட்டது
மட்டுமல்ல, உயர்சாதி இந்துக்களைக் கண்னுறும் போது மேல்துண்டை எடுத்து
கக்கத்தில் திணிக்கும் பழக்கத்தைக் கண்டிருக்கிறேன். இது பணிவின்
நிமித்தமாக. இதுபோல்தான் இரவிக்கை கழற்றுதலா என்பதில் எனக்கு இன்னும்
தெளிவில்லை. ஆனால் பவளா பேசும் உளவியல் காரணங்கள் கூர்ந்து நோக்கத்தக்கன.

நா.கண்ணன்

2012/4/24 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:

DEV RAJ

unread,
Apr 24, 2012, 9:24:23 AM4/24/12
to மின்தமிழ்
On Apr 24, 2:53 am, Tthamizth Tthenee <rkc1...@gmail.com> wrote:
>>>> மன்னர்கள் ஆண்ட காலத்திலேயே குறத்திகள் மேலாடையில்லாமல் வாழ்ந்தனர் <<<<


பவளஸ்ரீ அவர்கள் இன்னும் ஆழமாக இப்பிரச்னை குறித்துப்
பேச இருப்பதாக எனக்குப் படுகிறது; மடலாடலோ மேலாடை
அளவில் மேலோட்டமாகச் செல்வதாக உள்ளது.

இச்சோழர்காலப் படிமம் அரசனையும், அரசியையும்
மேலாடை இல்லாதவராகக் காட்டுகிறது -
http://tinyurl.com/78958wl


ஸ்ரீ கிருஷ்ண தேவராயர் மனைவியருடன் -
http://www.panoramio.com/photo/21420588

தேவ்

On Apr 24, 2:53 am, Tthamizth Tthenee <rkc1...@gmail.com> wrote:
> மன்னர்கள் ஆண்ட காலத்திலேயே குறத்திகள் மேலாடையில்லாமல் வாழ்ந்தனர்
>
> அதற்கு ஆதாரமாக திருநெல்வேலியிலுள்ள கிருஷ்ணாபுரத்தில் நான் எடுத்த
>
> புகைப்படம் இணைக்கிறேன்
>
> அன்புடன்
> தமிழ்த்தேனீ
>

> 2012/4/24 N. Kannan <navannak...@gmail.com>
>
>
>
>
>
>
>
> > 2012/4/23 coral shree <cora...@gmail.com>:


> > > கல்வியறிவில்லாத ஆதிவாசிகள் இன்றளவும் மேலாடை இல்லாமல்தான்
> > > இருக்கிறார்கள்.அவர்களிலேயே இன்று படித்து வெளியே வரும் பெண்கள், குறவர்
> > > சமூகத்தில் கூட சொல்லலாம், அவர்களெல்லாம் இன்றைய நாகரீகத்திற்கு
> > > மாறிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
>
> > கல்வி அறிவிற்கும் ஆடை உடுத்தலுக்கும் சம்பந்தமில்லை. ஆடை, அணிகலன்
> > என்பதோர் நாகரீக வெளிப்பாடு. அந்தமான் நிக்கோபார் மக்கள் மேல்சட்டை
> > போடவில்லை அதனால் ஆதிவாசிகள் என்று புறம் தள்ள முடியாது. ஏனெனில் தஞ்சை
> > ஓவியங்கள் மிகத்தெளிவாக நாகரீக உச்சியிலிருந்த சோழப்பேரரசில் ஆண்களும்,
> > பெண்களும் சட்டை இல்லாமல் சகஜமாக இருப்பதைத் தெளிவாய் காட்டுகின்றன.
> > தஞ்சை ஓவியங்களுக்கென தனி இழை தொடங்க வேண்டிய அவசியம் வருகிறது.
>
> > நம் நாகரீகமல்லாத பேண்ட், சர்ட் போட்டுக்கொள்வதுதான் அந்நியம் என்று
> > தோன்றுகிறது. கேரளாவிலும், இலங்கையிலும் இயல்பாய் இருப்பதாய் படுகிறது.
> > நாம் மேற்குலக நாகரீகத்தை உள்வாங்கிக்கொண்டு அது நாகரீகம் என்கிறோம்.
> > இதுவும் மாற்றம்தான்.
>
> > நா.கண்ணன்
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> > to visit our Muthusom Blogs at:

> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,


> > send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil
>
>
>

>  குறத்தி ராஜகுமாரனைக் கடத்தும் காட்சி.jpg
> 946KViewDownload

Tthamizth Tthenee

unread,
Apr 24, 2012, 9:34:02 AM4/24/12
to mint...@googlegroups.com
நான் போட்ட படத்தில் குறத்தி ராஜ குமாரனையே கடத்தும் வல்லமை கொண்டவள், ஆனால் இவளைப் பொறுத்தவரை  மேலாடை இல்லாத நிலை  எந்த ஒரு தாழ்வுணர்ச்சியையும் இவளுக்கு  அளிக்கவில்லை  என்பதைக் குறித்தே   அந்தப் படம் போட்டேன்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

2012/4/24 DEV RAJ <rde...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

Innamburan Innamburan

unread,
Apr 24, 2012, 9:37:15 AM4/24/12
to mint...@googlegroups.com
பவளஸ்ரீ அவர்கள் இன்னும் ஆழமாக இப்பிரச்னை குறித்துப்
பேச நினைத்தாலும் இயலாது. விடமாட்டார்கள், 
 மேலோட்டமாக 
மடலாடுவோர், உமது மேலாடை உவமை உள்பட, திரு தேவ்.

rajam

unread,
Apr 24, 2012, 12:16:36 PM4/24/12
to mint...@googlegroups.com, Dev Raj
இனி, மின்தமிழில் பேசாமடந்தையாக இருக்கவேண்டும் என்று எடுத்த என் முடிவை தேவ அவர்களின் கூற்று மாற்றியது.
தைத்த ஆடைகளை அணிவது  இந்தியாவில்
குறிப்பாகத் தென்னகத்தில் மிகவும் பிற்கால
வழக்கம்.

சங்க / சங்க மருவிய தமிழ்ப் பாடல்களில் "துன்னகாரர்" "மெய்ப்பை" "கஞ்சுகம்" என்ற சொல்லாட்சிகளைப் பார்க்கவும்.
"துன்னகாரர்" என்பவர் தைத்த ஆடைகளைத் தயார் செய்தவர்கள்.
"தையல்" என்ற சொல்லும் மேற்பட்ட ஆராய்ச்சிக்கு உட்பட்டது. "தை" என்ற வேர்ச்சொல்லின் பொருள் தங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன் -- அஃது ஒரு பொருளை, உடலைத் தழுவுவது.
நன்றி! 


On Apr 23, 2012, at 2:22 AM, DEV RAJ wrote:

இதை வேறு ஒருவகையில் அணுகலாம்.
தைத்த ஆடைகளை அணிவது  இந்தியாவில்
குறிப்பாகத் தென்னகத்தில் மிகவும் பிற்கால
வழக்கம். தைத்த ஆடை தூய்மைக் குறைவு
எனும் சமய வழக்கம் காரணமாக இருந்திருக்க
வேண்டும்.

வைதிகரும், சமணரும் மத வழிபாடுகளில்
இன்றும் சட்டை அணிவதில்லை. இஸ்லாமியரும்
ஹஜ் கடமையான கல்லெறியும் சடங்கில்
சட்டை, குல்லா அணிவதில்லை -



தேவ்

On Apr 23, 1:51 am, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:
கண்ணன் ஐயா
உங்களுடைய கருத்துக்கு உடன் படுகிறேன்
கொஞ்சம் பென்ணியம் தூக்கலாகச் சிந்திக்கும்போது பெண் மேல்  ரவிக்கையைக்
கழட்டியதால் அடிமைப்பட்டார்கல் என்ற சிந்தனை எழுவது இயல்பு
பவளா அவர்கள் கட்டுரையில் கருத்தில் கொள்ள வேண்டியது இடங்கை வலங்கை பிரிவில்
பெண்கள் உடை அணிந்த முறை பற்றியது. இடங்கை கைக்கோளர்கள் வலங்கை வேளாளர்கள்
இதற்கிடையே சில பகுதிகலில் கொங்கு கவுண்டர்கல்
விதவைகளில் சில பிரிவினர் வெள்ளைச் சேலை அணிவதும் சில பிரிவினர் கலர்ச் சேலை
அணிவதும் உண்டு
சிக்கல் எழுவது இப்பெண்டிர் பொது இடங்களில் தோன்றும் போது நடமாடும்போது
நிகழ்ந்தசம்பவங்கள் அதன் பாதிப்பும்
அதுபற்றிய தகவல் திரட்ட வேண்டும்
நாகராசன்

2012/4/23 N. Kannan <navannak...@gmail.com>







2012/4/23 coral shree <cora...@gmail.com>:
டாக்டர் வள்ளி அவர்களின் ஆதாரங்கள் நமக்கு பெரிதும் உதவலாம்.
கலைச்சிற்பங்களின்
ஆதாரங்கள் பல.... பெண்களின் சிற்பங்களே ஆயிரம் கதைகள் பேசக்கூடும்...
வாருங்கள்
.....நன்றி.

அன்பின் பவளா:

மிக அருமையான எண்ணப்பகிர்வு. வாழ்த்துக்கள்.

இரவிக்கை அவிழ்த்தல் என்பது ஒருவகையில் அடிமைப் படுத்தல்தான். கூச்ச
உணர்வை ஊட்டிப் பணிய வைத்தல்.

ஆனால் இந்தியா போன்ற உஷ்ணப்பிரதேசத்தில் மேற்சட்டை இல்லாமல் இருத்தல்
இயல்பானதுதானே? நான் அறிந்தவரை குடியானவ வீட்டுப் பெண்கள் ரவிக்கை
அணிந்து பார்த்ததில்லை. அதனால் அவர்கள் அடிமைப் பட்டது போலவும்
தெரியவில்லை. கிராமத்து ஆண்கள் வயக்காட்டில் வேலை செய்யும் போது வெறும்
கோமணத்துடன்தான் அலைகிறான். அது சௌகர்யமும் கூட. தமிழக மக்கள் சட்டை
இல்லாமல் இருப்பதைக் கண்டு காந்திஜியே சட்டையைக் கழட்டி புரட்சி
செய்யவில்லையா? இந்தியாவின் வடமாநிலங்களில் பெண்களின் நிலை தமிழகத்தை விட
மேம்பட்டு உள்ளது என்று சொல்லமுடியாது. ஆனால் அங்கு ரவிக்கை அணிந்துதான்
ஆகவேண்டும். ஏனெனில் குளிர்.

இது உயிரியல் சார்ந்த ஒரு மாற்றுக்கருத்து. அவ்வளவுதான். உங்கள்
கட்டுரையின் காரத்தைக் குறைக்க எழுதவில்லை :-)

நா.கண்ணன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
to visit our Muthusom Blogs at:
To unsubscribe from this group, send email to
For more options, visit this group at

rajam

unread,
Apr 24, 2012, 9:16:18 PM4/24/12
to மின்தமிழ்
"தையல்" என்ற சொல்லையும் புறக்கணிக்க வேண்டாம்!
முக்கியமாக ... "இழை" "ஆடை" "கஞ்சுகம்" 'தையல்" "துன்னகாரர்" என்ற சொற்கள் மிக மிக முந்தைய காலத்தவை.
அஜந்தா, எல்லோராவுக்குப் போகத் தேவையில்லை என்று நினைக்கிறேன். தென்னாட்டிலேயே இருந்து பார்ப்போம்.
"ஆடை" என்பது சங்க இலக்கியத்தில் (எட்டுத்தொகை, பத்துப்பாட்டு) எங்கே எப்படி வழங்குகிறது என்று யாராவது சொல்லுங்களேன், பார்ப்போம்! :-) அதே போல "இழை" என்பதும் பற்றி! பார்ப்போமே, நம் தமிழரின் தமிழ் அறிவு பற்றி!!
மகிழ்க! 


Begin forwarded message:

Hari Krishnan

unread,
Apr 24, 2012, 9:51:10 PM4/24/12
to mint...@googlegroups.com


2012/4/25 rajam <ra...@earthlink.net>

"ஆடை" என்பது சங்க இலக்கியத்தில் (எட்டுத்தொகை, பத்துப்பாட்டு) எங்கே எப்படி வழங்குகிறது என்று யாராவது சொல்லுங்களேன், பார்ப்போம்! :-) அதே போல "இழை" என்பதும் பற்றி! பார்ப்போமே, நம் தமிழரின் தமிழ் அறிவு பற்றி!!
மகிழ்க

தைக்குநற் குப்பாயம்--பாரதி, பாஞ்சாலி சபதம்--சட்டை

காழமிட்ட குறங்கினன்--கம்பன், குகனைப் பற்றிய வர்ணனை. பெர்மூடா போட்டிருந்தான் குகன். புலிவாலை நறுக்கி இடுப்பில் பெல்ட் அணிந்திருந்தான்.

இது எங்க காலம், அதுக்குக் கொஞ்ச முந்திய காலம்.

சங்ககாலத்தில் பக்குடுக்கை நன்கணியனார் (ஓரில் நெய்தல் கறங்க என்ற புறநானூற்றுப் பாடல் இவர் இயற்றியது என்று ஞாபகம்) பக்குடுக்கை என்ற தொளதொள சட்டை, ஒருவேளை ஜிப்பாவாக இருந்திருக்கலாம் என்று தோன்றச் செய்கிறது.

விலங்குநடைச் செலவின் மெய்ப்பை புக்கு--சிலம்பில் பொற்கொல்லன் வர்ணனை.  சட்டை.  சட்டை என்பது ஒரு ஸ்டேடஸ் சிம்பல் என்பது இந்த இடத்தால் விளங்குகிறது.

பெரும்பாணாற்றுப் படையில் கவைத்தாம்பு தொடுத்த காழூன்று அல்குல் என்று waist என்ற பொருளில் அல்குல் ஆளப்படும்போது பேசப்படுவது.  கவைத்தாம்பு என்றால் slip knot, noose--அதாவது சுருக்கு முடிச்சு.  இடுப்பில் சுருக்கு முடிச்சு எதுக்குப் போடுவாங்க?  பாவாடைக்கு--அல்லது உள்பாவாடைக்கு.  இது பாவாடை என்பதைக் குறி்கும் பெயர் எது?  (எனக்கேன் தலவலி?  கேட்ட டாக்டரே சஸ்திர சிகிச்சை பண்ணிக்கட்டும் :D)

இவ்ளதான் இப்போதைக்கு நினைவுக்கு வந்தது.  அப்பாலிக்கி உன்னும் தாஸ்தியா நென்புக்கு வந்தாக்கா வந்து ஸொல்றேன்... னா?

Nagarajan Vadivel

unread,
Apr 24, 2012, 10:27:50 PM4/24/12
to mint...@googlegroups.com

rajam

unread,
Apr 24, 2012, 11:08:09 PM4/24/12
to mint...@googlegroups.com
On Apr 24, 2012, at 6:51 PM, Hari Krishnan wrote:



2012/4/25 rajam <ra...@earthlink.net>
"ஆடை" என்பது சங்க இலக்கியத்தில் (எட்டுத்தொகை, பத்துப்பாட்டு) எங்கே எப்படி வழங்குகிறது என்று யாராவது சொல்லுங்களேன், பார்ப்போம்! :-) அதே போல "இழை" என்பதும் பற்றி! பார்ப்போமே, நம் தமிழரின் தமிழ் அறிவு பற்றி!!
மகிழ்க

தைக்குநற் குப்பாயம்--பாரதி, பாஞ்சாலி சபதம்--சட்டை

காழமிட்ட குறங்கினன்--கம்பன், குகனைப் பற்றிய வர்ணனை. பெர்மூடா போட்டிருந்தான் குகன். புலிவாலை நறுக்கி இடுப்பில் பெல்ட் அணிந்திருந்தான்.

இது எங்க காலம், அதுக்குக் கொஞ்ச முந்திய காலம்.

சங்ககாலத்தில் பக்குடுக்கை நன்கணியனார் (ஓரில் நெய்தல் கறங்க என்ற புறநானூற்றுப் பாடல் இவர் இயற்றியது என்று ஞாபகம்) பக்குடுக்கை என்ற தொளதொள சட்டை, ஒருவேளை ஜிப்பாவாக இருந்திருக்கலாம் என்று தோன்றச் செய்கிறது.

விலங்குநடைச் செலவின் மெய்ப்பை புக்கு--சிலம்பில் பொற்கொல்லன் வர்ணனை.  சட்டை.  சட்டை என்பது ஒரு ஸ்டேடஸ் சிம்பல் என்பது இந்த இடத்தால் விளங்குகிறது.

பெரும்பாணாற்றுப் படையில் கவைத்தாம்பு தொடுத்த காழூன்று அல்குல் என்று waist என்ற பொருளில் அல்குல் ஆளப்படும்போது பேசப்படுவது.  கவைத்தாம்பு என்றால் slip knot, noose--அதாவது சுருக்கு முடிச்சு.  இடுப்பில் சுருக்கு முடிச்சு எதுக்குப் போடுவாங்க?  பாவாடைக்கு--அல்லது உள்பாவாடைக்கு.  
இது நம் பிற்கால அறிவை முற்காலத்துக்குப் பொருத்துவதுபோல இருக்கு! அதுக்கென்ன, இருக்கட்டும். 
இது பாவாடை என்பதைக் குறி்கும் பெயர் எது?  (எனக்கேன் தலவலி?  கேட்ட டாக்டரே சஸ்திர சிகிச்சை பண்ணிக்கட்டும் :D)
இவ்ளதான் இப்போதைக்கு நினைவுக்கு வந்தது.  அப்பாலிக்கி உன்னும் தாஸ்தியா நென்புக்கு வந்தாக்கா வந்து ஸொல்றேன்... னா?

செய்ங்கோ, செய்ங்கோ, கவிஞரே! ஆனாலும் ... தங்களைப் போன்றவரிடமிருந்து நமக்குத் திட்டவட்டமாக "இழை" "ஆடை" "தை'யல்" பற்றிய செய்திகள் வேண்டும்! என்னிடம் இருக்கு. ஆனாலும் ... மற்றவரும் என் கருத்துக்கு அரண் செய்யவேண்டும்! :-) அதனாலே இந்தக் கொக்கி! :-) 


--
அன்புடன்,
ஹரிகி.

Hari Krishnan

unread,
Apr 24, 2012, 11:59:20 PM4/24/12
to mint...@googlegroups.com


2012/4/25 rajam <ra...@earthlink.net>

செய்ங்கோ, செய்ங்கோ, கவிஞரே! ஆனாலும் ... தங்களைப் போன்றவரிடமிருந்து நமக்குத் திட்டவட்டமாக "இழை" "ஆடை" "தை'யல்" பற்றிய செய்திகள் வேண்டும்! என்னிடம் இருக்கு. ஆனாலும் ... மற்றவரும் என் கருத்துக்கு அரண் செய்யவேண்டும்! :-) அதனாலே இந்தக் கொக்கி! :-) 

தையல்?  தையலுக்கு என்ன வேணும்?  ஊசிதானே?

சங்க இலக்கிய ஊசி: 

அகநானூறு: 048x09 ஊசி போகிய சூழ் செய் மாலையன் 

அகநானூறு: 199x08 அரம் தின் ஊசி திரள் நுதி அன்ன 

==========================================================================

பதினெண்கீழ்க்கணக்கு: 42x03 சிரல் பெயர்ந்தன்ன நெடு வெள் ஊசி 

பதினெண்கீழ்க்கணக்கு: 70x07 குவி முகிழ் ஊசி வெள் தோடு கொண்டு 

==========================================================================

புறநானூறு: 082x04 போழ் தூண்டு ஊசியின் விரைந்தன்று மாதோ 

புறநானூறு: 100x04 உச்சி கொண்ட ஊசி வெள் தோட்டு 

புறநானூறு: 229x09 பாசி செல்லாது ஊசி துன்னாது 

==========================================================================

சிலப்பதிகாரம்: 15x213 ஐயவித் துலாமும் கை பெயர் ஊசியும் 

(சிலப்பதிகாரத்தையும் சேர்த்திருக்கிறேன்.)

ஊசியை வச்சிட்டு என்ன பண்ணுவாங்க? தைக்கத்தான செய்வாங்க?  அப்ப தையற்காரனும் தைத்த ஆடையும் இருந்தது ஊர்ஜிதம்தானே?

ஸூஸ்யா தீக்ஷண்ய--ஊசிமுனை நிலமும்--மஹாபாரதம்.  வஜ்ர ஸூசிகை--வைர ஊசி.

ஊசி இருந்தது என்றால், தைக்கும் தொழில் இருந்தது என்பது தெளிவு.

அப்புறம் நம்ம கால அறிவை அந்தக் காலத்தில் பொருத்துவது பற்றி. கான்டெக்ஸ்ச்சுவல் ரீடிங்கையும் வைத்துக்கொண்டு இதையும் செய்துதான் ஆகவேண்டும் என்பது நான் நினைப்பது.  இரண்டையும் இணைத்தால்தான் புரிந்துகொள்ள ஒரு வழி கிடைக்கும் என்பது என் எண்ணம்.  அப்புறம் டாக்டர் பெருமக்கள் தீர்மானப்படி. :)

Tthamizth Tthenee

unread,
Apr 25, 2012, 2:25:59 AM4/25/12
to mint...@googlegroups.com
காதறுந்த ஊசியும் வாரதுகாண் கடைவழிக்கே
 
பட்டிணத்தார்
 
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

2012/4/25 Hari Krishnan <hari.har...@gmail.com>

--

coral shree

unread,
Apr 25, 2012, 2:46:14 AM4/25/12
to மின்தமிழ், vall...@googlegroups.com, தமிழ் சிறகுகள், தமிழ் வாசல்


தடைக்கல்லையும் படிக்கல்லாக மாற்றிய மங்கையர்கள்!


மங்கையர்க்கு அரசியார் 
பூசல் அயில்தென்ன னார்க்கன லாகப் பொறாமையினால் 
வாச மலர்க்குழல் பாண்டிமா தேவியாம் மானிகண்டீர் 
தேசம் விளங்கத் தமிழா கரர்க் கறி வித்தவரால் 
நாசம் விளைத்தாள் அருகந் தருக்குத் தென் னாட்டகத்தே

1. மங்கையர்க்குத் தனி அரசி எங்கள் தெய்வம் வளவர் திருக்குலக் கொழுந்து வளைக்கைமானி
செங்கமலத் திருமடந்தை கன்னிநாடாள் தென்னர்குலப் பழிதீர்த்த தெய்வப் பாவை 
எங்கள் பிரான் சண்பையர் கோன் அருளினாலே இருந்தமிழ் நாடுற்ற இடர் நீக்கித் தங்கள் 
பொங்கொளி வெண் திருநீறு பரப்பினாரை போற்றுவார் கழல் எம்மால் போற்றலாமே 

2. பூசுரர் சூளா மணி ஆம் புகலி வேந்தர் போனக ஞானம் பொழிந்த புனித வாக்கால் 
தேசுடைய பாடல் பெறும் தவத்தினாரைச் செப்புவது யாம் என் அறிந்து தென்னர் கோமான் 
மாசில் புகழ் நெடுமாறன் தனக்குச் சைவ வழித்துணையாய் நெடும் காலம் மன்னிப் பின்னை 
ஆசில் நெறியவரோடும் கூட ஈசர் அடி நிழல் அமர்ந்திருக்க அருளும் பெற்றார் 

3. வரும் நாள் ஒன்றும் பிழையாத் தெய்வப் பொன்னி வளம் பெருக்க வளவர் குலம் பெருக்கும்தங்கள் 
திருநாடு போற் செழியர் தென்னர் நாடு சீர் விளக்கும் செய்ய சீறடிகள் போற்றி 
ஒரு நாளும் தம் செயலில் வழுவாது அன்பர்க்கு உடைகீளும் கோவணமும் நெய்து நல்கும் 
பெருநாமச் சாலியர் தம் குலத்தில் வந்த பெருந்தகையார் நேசர் திறம் பேசல் உற்றாம்                          மங்கையர்க்கரசியார் புராணம்

சைவ ஒழுக்கத்தை எத்தகையதோர் நிலையிலும் காக்கக் கூடிய மரபில் வந்தவர், மங்கையரில் மாணிக்கமான, சோழமன்னனின் தவப்புதல்வியாக அவதரித்தவர், மங்கையர்கரசியார்.  நின்றசீர் நெடுமாறன் என்னும் பாண்டிய மன்னருக்கு மணம் முடித்து வைத்தார் சோழ மன்னர். பாண்டிய மன்னனோ, சமண சமயத்தில் ஈடுபாடு கொண்டவனாக இருந்தான். அரசவையில் குலச்சிறையார் என்ற ஒரு அமைச்சரைத்தவிர ஏனையோர் அனைவரும், சமண சமயததை தொடர்பவர்களாகவே இருந்தனர். சைவநெறியில் சிறந்து ஒழுகுபவரான அம்மையார் திருநீறு இடுவதற்கும் வழியின்றி நொந்து போனவராகிறார். சிவனடியார்களைக் கண்டாலோ, அவரிடம் பேசினாலோ, தீட்டு என்பதாக, ‘கண்டு முட்டு - கேட்டு முட்டு’ என்று வாழ்ந்த மன்னவனின் கட்டளைப்படி அதற்கான அனுமதியின்றி, அவர் மன்னன் அறியாதவாறு திருமண்ணை மார்பின் மத்தியில் மறைவிடத்தில் வைத்துக் கொண்டிருந்தார்.. இச்சமயத்தில் திருஞானசம்பந்தர் தம் அடியார் குழுவுடன் பாண்டிய நாட்டிற்கு வருது தங்கியிருப்பது அறிந்து, சமணர்களின் விருப்பிற்கிணங்க அவர்களைத் தீயிட்டுக் கொளுத்த ஆணையிடுகிறார். ஆளுடைய பிள்ளையார் தம் அடியார்களுடன் தங்கியிருந்த மடத்திற்கு தீ வைத்தனர். ஞானசம்பந்தப்பெருமானார் “பையவே சென்று பாண்டியருக்கு ஆகவே” என்று பணித்திட, அவருக்கு வைத்த தீ திரும்பி வந்து, அரசருக்கு வெப்பு நோயாக மாறி வாட்டியது. சமணர்கள் எவ்வளவோ மருந்து, மாயம் செய்தும், மன்னரை சுர நோயிலிருந்து காக்க முடியவில்லை. மங்கையற்கரசியாரின் மாதவத்தினால், திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய திருநீறு மூலமாக வெப்பு நோய் நீங்கி சைவ சமயத்தை போற்றிப் பரவினார். குடிமக்களும் மன்னன் வழியே சிவநெறியைப் போற்றி வாழலாயினர். மகாராணியாக இருந்த போதும் தாம் விருப்பம் போல் தெய்வத்தை வணங்கும் அனுமதி கூட மறுக்கப்பட்ட போதும், தம் பொறுமை மற்றும் பதிபக்தி மூலம் கணவனை நல்வழிப்படுத்தும் வல்லமை பெற்றிருந்தார், மங்கையர்கரசியார் என்பது புராணம் கூறும் உண்மை.

'செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்”
என்பார் வள்ளுவப் பெருந்தகை.

சோழவள நாட்டின் கடற்துறைப்பட்டிணமான காரைக்கால் எனும் திருத்தலத்தில் வணிகர் குலத்தில் தனதததன், தர்மவதி தம்பதிருக்கு, மகாலட்சுமியைப் போன்ற தோற்றம் கொண்ட புனிதவதியார் அவதரித்தார். திருமண வயதில் பரமதத்தன் என்பவருக்கு திருமணம் முடித்து வைத்தனர். சைவநெறியில் தவறாது ஒழுகி கணவருக்கும் அருஞ்சேவைகள் புரிந்து கற்புடைநாயகியாக வாழ்ந்து காட்டியவ்ர் புனிதவதியார். ஒரு முறை தனதத்தன் தனக்கு ஒரு வியாபாரி மூலம் கிடைத்த இரண்டு மாங்கனிகளைத் தன் வீட்டிற்கு கொடுத்தனுப்பினார். சிவனடியார் ஒருவர் அவர்தம் இல்லம் நாடிவர, அவரை அன்போடு உபசரித்து கையில் இருந்த மாங்கனிகளில் ஒன்றை அவருக்குப் படைத்தார். கணவர் வீடு வந்து மதிய உணவுடன் தாம் கொடுத்தனுப்பிய மாங்கனியைக் கேட்க அம்மையாரும் கையிலிருந்த அந்தக்கனியைக் கொண்டுவந்து கொடுத்தார். பழம் மிகவும் சுவையாக இருப்பதாகவும் அந்த மற்றொரு கனியும் தனக்கே வேண்டும் என்றும் கேட்கிறான். அம்மையார், கணவர் விரும்பிக் கேட்கும் கனியை தம்மால் கொடுக்க முடியவில்லையே என்று மனம் வருந்தி, சிவபெருமானை மனமுறுகி வேண்டிக்கொள்ள், புனிதவதியாருக்கு ஆண்டவனிடமிருந்து அற்புதமானதொரு மாங்கனி கிடைக்கிறது. மனமகிழ்ச்சியுடன் கணவருக்குக் கொடுக்க, அதை உண்ட கணவனோ நான் அனுப்பிய கனியை விட பன்மடங்கு சுவையான இக்கனி எங்கனம் வந்தது என வினவ, புனிதவதியார் நடந்ததைக் கூறி, இறைவன் அருளால் தாம் கனி பெற்றதைக் கூற, நம்பிக்கையற்ற கணவனோ அதனை சோதிக்க விரும்பி, “அங்கனமாயின் மற்றொரு கனியை உம் இறைவனிடம் பெற்று தா” என்று கேட்கிறார். திரும்பவும் சிவபெருமானை வேண்டி நிற்க, மீண்டும் கனி கிடைக்கும் வரம் பெறுகிறார். இதைக்கண்ட கணவன் இத்தகைய மாட்சிமை வாய்ந்த மங்கையுடன் உறைய தனக்குத் தகுதியில்லை என்றுணர்ந்து , பாண்டி மாநகர் சென்று அங்கு வேறு பெண்ணை மணந்து, அதன் மூலம் பிறந்த பெண் குழந்தைக்கு அம்மையாரின் திருப்பெயரையே வைக்கிறார்.
அவரைச் சந்திக்கும் வேளையில் தம் மனைவி, குழந்தையுடன் வந்து புனிதவதியாரின் காலில் வீழ்ந்து ஆசீர்வாதம் வாங்குகிறார், தம் மனைவி குழந்தையுடன். அந்நொடியே, தமக்கு இந்த அழகுருவம் நீங்கி, பேய் வடிவைப் பெற வேண்டும் என்று ஆண்டவனிடம் வரமும் பெறுகிறார். உடம்பில் அழகைக் கொடுக்கும் அத்துனை சதைகளையும் உதறி எறிந்து சிவகண வடிவை விரும்பி ஏற்கிறார்.
"பிறவாமை வேண்டும், மீண்டும் பிறப்புண்டேல் இறைவா உனையென்றும் மறவாமை வேண்டும்" என்று வேண்டுகிறார்.

‘காலையே போன்று இயங்கும் மேனி, கடும்பகலின்
வேலையே போன்று இலங்கும் வெண்ணீறு - மாலையின்
தாங்குருவே போலும் சடைக்கற்றை மற்றவர்க்கு
வீங்கு இருளே போலும் மிடறு’ - 
காரைக்கால் அம்மையின் பாடல்.

Inline image 1
நம் தமிழகம் எத்துனையோ வீரப்பெண்மணிகளின் வரலாறுகளைக் கண்டிருக்கிறது. ஆயினும், இப்பெண் சாதாரண வீர மங்கை அல்ல. ஆம் ராணி வேலு நாச்சியார் என்றால் சாதாரண வீரம் அல்ல. மாபெரும் படையை எதிர்கொண்டு ஆயுதம் தாங்கி எதிரிகளை வீழ்த்திய, வீராங்கனை! 1730 ஆம் ஆண்டு, இராமநாதபுரத்தில் பிறந்தவர். விஜயரகுநாத செல்லத்துரை சேதுபதி மற்றும் முத்தாத்தாள் நாச்சியாரின் ஒரே செல்வமகள். சகல கலைகளையும் கற்றுத் தேர்ந்திருந்தவர். 18ம் நூற்றாண்டிலேயே ஆங்கிலேயரின் ஆட்சிக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண் போராளி என்ற பெரும் பேறு பெற்றவர். வேலுநாச்சியார் வாள்வீச்சு, அம்பு விடுதல், ஈட்டி எறிதல், குதிரையேற்றம், யானையேற்றம் என்று அனைத்து போர்க் கலைககளிலும் கற்றுத் தேர்ந்தவர். வீர சாகசம் மட்டுமன்றி, கல்வியறிவிலும் சிறந்து விளங்கியதற்கு ஆதாரம் அவர் பத்து மொழிகள் திறம்பட அறிந்திருந்ததோடு, மகாபாரதம், இராமாயணம் போன்ற இதிகாசங்களும் கற்றறிந்திருந்தார்.. இப்படி வீரத்திலும், கல்வியிலும் சிறந்து, வளர்ந்த இளம் பெண் வேலு நாச்சியாரின் அழகிலும் தீரத்திலும் மனதைப் பறிகொடுத்த சிவகங்கை மன்னர் முத்து வடுகநாதர், வேலு நாச்சியாரை 1746ம் வருடம் மணமுடித்தார்.

திருமண வாழ்க்கை இனிதாக ஆரம்பமாகியது. சில காலங்களில், இராமநாதபுரத்தைத் தாக்கி கைப்பற்றிய ஆற்காடு நவாப்பின் அடுத்த குறி சிவகங்கையாக இருந்தது. ஆங்கிலேயப் படைகள் நவீனரக ஆயுதங்கள் மூலம் நவாப்பிற்கு உதவ முன்வர, சமயம் பார்த்துக் காத்திருந்தவன், முத்துவடுகநாதர் காளையர் கோவிலில் வழிபட்டுக் கொண்டிருந்த சமயம் பார்த்து அக்கோவிலைச் சுற்றி வளைத்து கொடூரமாய்த் தாக்கத் துவங்கினர். ஆங்கிலேயரின் நவீனரக ஆயுதங்களின் சக்தியால், அந்தத் தாக்குதலைச் சமாளிக்க இயலாமல் மன்னனும், உடன் சென்ற இளவரசியாரும் அநியாயமாகக் கொல்லப்பட்டு, காளையார் கோவில் கோட்டையும் நவாப் வசமானது. இதனை அறிந்த வேலு நாச்சியார் பதைபதைத்து கணவர் மற்றும் இளவரசியைக் காண கோவிலுக்குச் செல்லும் வழியில் வேலு நாச்சியாரைக் கைது செய்ய நவாப் அனுப்பிய படை நாச்சியாரை வழியிலேயே மடக்க அவர்களை எதிர்த்து வீராவேசத்துடன் ஆயுதம் ஏந்திப் போராடிய வீரமங்கை அவர். 
தன் கணவரின் உடலை உடனே சென்று காண வேண்டுமென்ற வெறியில் வீராவேசமாக போராடி,முன்னேறிச் சென்ற வேலு நாச்சியாரிடம், தளபதிகளான மருது சகோதரர்கள், மன்னரும் கொல்லப்பட்ட நிலையில் நாட்டைக் காப்பாற்ற அரசியார் வாழ்ந்தாக வேண்டும் என்று வலியுறுத்திய ஆலோசனையையும் சட்டை செய்யாமல் காளையார் கோவில் சென்று பிணக்குவியலுக்கு இடையில் தம் கணவரும், இளவரசியும் இரத்த வெள்ளத்தில் கிடந்த காட்சியைக் கண்டு கதறி அழுததோடு நிற்காமல் தம் கணவரையும், இளவரசியையும் கொன்ற கயவர்களை பழி வாங்கியேத் தீருவது என்ற சபதமும் மேற்கொண்டார். மருது சகோதரர்களின் உதவியால் குதிரையின் மீது ஏறி மேலூர் சென்று சமயோசிதமாக, ஆங்கிலேயருக்கும், நவாபிற்கும் எதிரியான ஹைதர் அலியுடன் நட்புப்பாலம் அமைத்தார். தம் நிலையை தெளிவாக விளக்கிய வேலு நாச்சியாரின் வீரத்திருமுகம் கண்டு அவரைத் தம் அரண்மனையிலேயேத் தங்கவும் அனுமதி அளித்தார். தலைப்பாகையுடன் ஆண் வேடத்தில் வந்து தன்னிடம் உருது மொழியில் மிகச்சரளமாக உரையாடிய நாச்சியாரைக் கண்டு பேராச்சரியம் கொண்டார் ஹைதர் அலி. ஹைதர் அலியின் பாதுகாப்பிலேயே, மருது சகோதரர்களின் உதவியுடன், திண்டுக்கல் ம்ற்றும் விருப்பாட்சி கோட்டைகளில் 8 ஆண்டுகள் தங்கி தம் படைபலத்தை பெருக்கிக் கொண்டிருந்தார். ஆங்கிலப் படையையும், நவாப்பையும் ஒழித்து, தம் பரம்பரைச் சின்னமான அனுமன் கொடியை  தம் சிவகங்கைச் சீமையில் பறக்கவிட்டேத் தீர வேண்டும் என்ற வெறியுடன் தருணம் பார்த்து காத்துக் கொண்டிருந்தார். அதற்கான தருணமும் வந்தது. காளையார் கோவிலை போரிட்டு முதலில் கைப்பற்றினார்.. சிவகங்கையையும், திருப்பத்தூரையும் ஆங்கிலேய மற்றும் நவாப்பின் படைகள் சுற்றி வளைத்திருந்தன. இளைய மருது சகோதரரை தளபதியாகக் கொண்டு ஒரு படையை திருப்பத்தூருக்கு அனுப்பி, வெற்றி கொள்ளச் செய்தார். வேலு நாச்சியாரின் தலைமையிலான மற்றொரு படை பெரிய மருது சகோதரரை தளபதியாகக் கொண்டு ஆங்கிலேயப் படைகளை வீழ்த்தியது. 

வேலு நாச்சியார் மிக சாணக்கியத்தனமாக செய்த ஒரு செயல் வெள்ளையர் படையில் பலரையும் வெட்டுண்டு உயிரிழக்கச் செய்தது. ஆம், சிவகங்கை ராஜராஜேஸ்வரி ஆலயத்தில் நவராத்திரி, விஜயதசமி அன்று பெண்கள் கூட்டம் கூட்டமாகச் சென்று வழிபடுவது வழக்கம். ஆங்கிலேயப் படைகள் பாதுகாப்பாக அங்கு இருக்கும். இச்சமயத்தில், வேலு நாச்சியாரும் தம் படைகளுடன் கூட்டத்தோடு கூட்டமாக நுழைந்து, அவர்கள் எதிர்பார்க்காத நேரத்தில் சரமாரியாக தாக்குதல் நடத்தி, ஆங்கிலேயப் படைகளை நிலை குலையச் செய்தனர். உயிர் பிழைத்தவர்களும் தப்பியோடினர். கொஞ்ச நாட்களிலேயே, வேலு நாச்சியாரின் படையில் இருந்த குயிலி என்றொரு பெண்ணின் வீர சாகசத்தால் தம் உயிரைப் பணயம் வைத்து, தம்மீது தீ வைத்துக் கொண்டு வெள்ளையரின் ஆய்தக்கிடங்கையே முழுவதுமாக அழித்ததும் குறிப்பிடத்தக்கது. தம் கணவனைக் கொன்றவர்களை பழி வாங்க தாம் எடுத்த சபதத்தை நிறைவேற்றி, தம்முடைய ஐம்பதாவது வயதில் சிவகங்கையின் கோட்டையின் மீது பறந்து கொண்டிருந்த ஆங்கிலேயக் கொடியை இறக்கிவிட்டு, தம் சிவகங்கைச் சீமையின் அனுமன் கொடியை ஏற்றினார். பத்து ஆண்டுகள் அவருடைய நல்லாட்சி நடந்து கொண்டிருந்தது......

தடைகளையும் மீறி சாதித்தப் பெண்களின் வரலாறு இது போன்று ஏராளம்.....

அன்புடன்
பவள சங்கரி.
DSC00015.JPG

Nagarajan Vadivel

unread,
Apr 25, 2012, 2:50:30 AM4/25/12
to mint...@googlegroups.com

http://www.svabhinava.org/hinducivilization/dialogues/ToplessCasteKerala-frame.php 

'KuppAyam' is the Malayalam form (tadbhava) of the Sanskrit 'kUrpAsa' meaning a stitched upper garment. The IITS Cologne Digital Sanskrit Lexicon gives the meaning as:

kUrpAsa m. a cuirass or quilted jacket (worn as armour) L. ; (= % {cola}) a jacket Comm. on Naish. xxii , 42.

The 15th century Malayalam poet Cherusseri Namboodiri (Cherusseri is his family name; his given name remains unknown) mentions 'kUrpAsam' in his 'Krishna GAthA' when he speaks of "kArpAsam koNDuLLa kUrpAsam" (jacket made of 'kArpAsam', i.e., cotton) worn in "s'eetam tazhappOru hEmanta kAlam" , i.e., in the season of hemanta (autumn) when the cold (s'eetam) increases.

There really is no noticeable autumn or winter in tropical Kerala. And the s'eetam (cold) there never increases to the extent of needing any upper garment, especially in the KOlattu nADu (coastal Kannur district in north Kerala) of Cherusseri. Hardly anybody would have worn a kUrpAsam in Cherusseri's Kerala. He might have borrowed the concept of kUrpAsam from Sanskrit works. He is likely to have seen stitched upper garments worn by GOsAyi-s (Gosai - Goswami - north Indian mendicants). Or, he might have been to Kashi and other parts of north India and seen people wearing cotton and woollen upper garments.

Yes, the Syrian Christian and Muslim ladies did wear kuppAyam, the stitched upper garment. Early Syrian Christians are unlikely to have worn kuppAyam. It might have become popular around the 17th century when the presence of Europeans - Portuguese, French, Dutch and the English - became significant because the word used for the upper garment is 'chaTTa', probably from 'shirt'. Islam became a noticeable presence on the Kerala coast only around 15th century. (It was in the early 18th century, during the military adventures of Tipu Sultan in the Malabar region, that large scale forced conversion to Islam took place and Muslims became a significant presence there.) Arabian and other foreign Muslim travellers who came to the Kerala coast (and Lakshadweep) in the early days of Islam there lament about the bare breastedness of Muslim women. So, kuppAyam wearing Muslim women might have appeared on the Kerala scene only after the 15th century.

Re: History of Indian clothing  3

Re: History of Indian clothing  3

Re: History of Indian clothing  5

Re: History of Indian clothing  5

Re: History of Indian clothing  7

Re: History of Indian clothing [and the (il-) legitimacy of caste-identitiies - SV] 10

Re: Topless women and caste cruelty (was Re: History of Indian clothing) 12

Re: History of Indian clothing and the (il-) legitimacy of caste-identities 15

Topless women and caste cruelty (was Re: History of Indian clothing) 16

Re: History of Indian clothing [and the (il-) legitimacy of caste-identitiies - SV] 18

Topless women and caste cruelty (was Re: History of Indian clothing) 20

Caste-names, group-solidarity, and pride in being oneself (was re: History of Indian clothing) 23

Re: Topless women and caste cruelty (was Re: History of Indian clothing) 25

Topless women and caste cruelty (was Re: History of Indian clothing) 27

Re: Topless women and caste cruelty (was Re: History of Indian clothing) 29

[Re: Warrior-caste status and kingship in Kerala-style Hindu acculturation - SV] 30

Re: Warrior-caste status and kingship in Kerala-style Hindu acculturation  32

Re: Warrior-caste status and kingship in Kerala-style Hindu acculturation  32

Topless women and caste cruelty; question re: anuloma  33

Re: Topless women and caste cruelty; question re: anuloma  33

To bare or not to bear? Sexual freedom, caste regulations, and Hindu acculturation in Kerala  35

Nagarajan

2012/4/25 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

coral shree

unread,
Apr 25, 2012, 2:55:59 AM4/25/12
to mint...@googlegroups.com
நம் தமிழகம் எத்துனையோ வீரப்பெண்மணிகளின் வரலாறுகளைக் கண்டிருக்கிறது. ஆயினும், இப்பெண் சாதாரண வீர மங்கை அல்ல. ஆம் ராணி வேலு நாச்சியார் என்றால் சாதாரண வீரம் அல்ல. மாபெரும் படையை எதிர்கொண்டு ஆயுதம் தாங்கி எதிரிகளை வீழ்த்திய, வீராங்கனை! 1730 ஆம் ஆண்டு, இராமநாதபுரத்தில் பிறந்தவர். விஜயரகுநாத செல்லத்துரை சேதுபதி மற்றும் முத்தாத்தாள் நாச்சியாரின் ஒரே செல்வமகள். சகல கலைகளையும் கற்றுத் தேர்ந்திருந்தவர். 18ம் நூற்றாண்டிலேயே ஆங்கிலேயரின் ஆட்சிக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண் போராளி என்ற பெரும் பேறு பெற்றவர். வேலுநாச்சியார் வாள்வீச்சு, அம்பு விடுதல், ஈட்டி எறிதல், குதிரையேற்றம், யானையேற்றம் என்று அனைத்து போர்க் கலைககளிலும் கற்றுத் தேர்ந்தவர். வீர சாகசம் மட்டுமன்றி, கல்வியறிவிலும் சிறந்து விளங்கியதற்கு ஆதாரம் அவர் பத்து மொழிகள் திறம்பட அறிந்திருந்ததோடு, மகாபாரதம், இராமாயணம் போன்ற இதிகாசங்களும் கற்றறிந்திருந்தார்.. இப்படி வீரத்திலும், கல்வியிலும் சிறந்து, வளர்ந்த இளம் பெண் வேலு நாச்சியாரின் அழகிலும் தீரத்திலும் மனதைப் பறிகொடுத்த சிவகங்கை மன்னர் முத்து வடுகநாதர், வேலு நாச்சியாரை 1746ம் வருடம் மணமுடித்தார்.

திருமண வாழ்க்கை இனிதாக ஆரம்பமாகியது. சில காலங்களில், இராமநாதபுரத்தைத் தாக்கி கைப்பற்றிய ஆற்காடு நவாப்பின் அடுத்த குறி சிவகங்கையாக இருந்தது. ஆங்கிலேயப் படைகள் நவீனரக ஆயுதங்கள் மூலம் நவாப்பிற்கு உதவ முன்வர, சமயம் பார்த்துக் காத்திருந்தவன், முத்துவடுகநாதர் காளையர் கோவிலில் வழிபட்டுக் கொண்டிருந்த சமயம் பார்த்து அக்கோவிலைச் சுற்றி வளைத்து கொடூரமாய்த் தாக்கத் துவங்கினர். ஆங்கிலேயரின் நவீனரக ஆயுதங்களின் சக்தியால், அந்தத் தாக்குதலைச் சமாளிக்க இயலாமல் மன்னனும், உடன் சென்ற இளவரசியாரும் அநியாயமாகக் கொல்லப்பட்டு, காளையார் கோவில் கோட்டையும் நவாப் வசமானது. இதனை அறிந்த வேலு நாச்சியார் பதைபதைத்து கணவர் மற்றும் இளவரசியைக் காண கோவிலுக்குச் செல்லும் வழியில் வேலு நாச்சியாரைக் கைது செய்ய நவாப் அனுப்பிய படை நாச்சியாரை வழியிலேயே மடக்க அவர்களை எதிர்த்து வீராவேசத்துடன் ஆயுதம் ஏந்திப் போராடிய வீரமங்கை அவர். 
தன் கணவரின் உடலை உடனே சென்று காண வேண்டுமென்ற வெறியில் வீராவேசமாக போராடி,முன்னேறிச் சென்ற வேலு நாச்சியாரிடம், தளபதிகளான மருது சகோதரர்கள், மன்னரும் கொல்லப்பட்ட நிலையில் நாட்டைக் காப்பாற்ற அரசியார் வாழ்ந்தாக வேண்டும் என்று வலியுறுத்திய ஆலோசனையையும் சட்டை செய்யாமல் காளையார் கோவில் சென்று பிணக்குவியலுக்கு இடையில் தம் கணவரும், இளவரசியும் இரத்த வெள்ளத்தில் கிடந்த காட்சியைக் கண்டு கதறி அழுததோடு நிற்காமல் தம் கணவரையும், இளவரசியையும் கொன்ற கயவர்களை பழி வாங்கியேத் தீருவது என்ற சபதமும் மேற்கொண்டார். மருது சகோதரர்களின் உதவியால் குதிரையின் மீது ஏறி மேலூர் சென்று சமயோசிதமாக, ஆங்கிலேயருக்கும், நவாபிற்கும் எதிரியான ஹைதர் அலியுடன் நட்புப்பாலம் அமைத்தார். தம் நிலையை தெளிவாக விளக்கிய வேலு நாச்சியாரின் வீரத்திருமுகம் கண்டு அவரைத் தம் அரண்மனையிலேயேத் தங்கவும் அனுமதி அளித்தார். தலைப்பாகையுடன் ஆண் வேடத்தில் வந்து தன்னிடம் உருது மொழியில் மிகச்சரளமாக உரையாடிய நாச்சியாரைக் கண்டு பேராச்சரியம் கொண்டார் ஹைதர் அலி. ஹைதர் அலியின் பாதுகாப்பிலேயே, மருது சகோதரர்களின் உதவியுடன், திண்டுக்கல் ம்ற்றும் விருப்பாட்சி கோட்டைகளில் 8 ஆண்டுகள் தங்கி தம் படைபலத்தை பெருக்கிக் கொண்டிருந்தார். ஆங்கிலப் படையையும், நவாப்பையும் ஒழித்து, தம் பரம்பரைச் சின்னமான அனுமன் கொடியை  தம் சிவகங்கைச் சீமையில் பறக்கவிட்டேத் தீர வேண்டும் என்ற வெறியுடன் தருணம் பார்த்து காத்துக் கொண்டிருந்தார். அதற்கான தருணமும் வந்தது. காளையார் கோவிலை போரிட்டு முதலில் கைப்பற்றினார்.. சிவகங்கையையும், திருப்பத்தூரையும் ஆங்கிலேய மற்றும் நவாப்பின் படைகள் சுற்றி வளைத்திருந்தன. இளைய மருது சகோதரரை தளபதியாகக் கொண்டு ஒரு படையை திருப்பத்தூருக்கு அனுப்பி, வெற்றி கொள்ளச் செய்தார். வேலு நாச்சியாரின் தலைமையிலான மற்றொரு படை பெரிய மருது சகோதரரை தளபதியாகக் கொண்டு ஆங்கிலேயப் படைகளை வீழ்த்தியது. 

வேலு நாச்சியார் மிக சாணக்கியத்தனமாக செய்த ஒரு செயல் வெள்ளையர் படையில் பலரையும் வெட்டுண்டு உயிரிழக்கச் செய்தது. ஆம், சிவகங்கை ராஜராஜேஸ்வரி ஆலயத்தில் நவராத்திரி, விஜயதசமி அன்று பெண்கள் கூட்டம் கூட்டமாகச் சென்று வழிபடுவது வழக்கம். ஆங்கிலேயப் படைகள் பாதுகாப்பாக அங்கு இருக்கும். இச்சமயத்தில், வேலு நாச்சியாரும் தம் படைகளுடன் கூட்டத்தோடு கூட்டமாக நுழைந்து, அவர்கள் எதிர்பார்க்காத நேரத்தில் சரமாரியாக தாக்குதல் நடத்தி, ஆங்கிலேயப் படைகளை நிலை குலையச் செய்தனர். உயிர் பிழைத்தவர்களும் தப்பியோடினர். கொஞ்ச நாட்களிலேயே, வேலு நாச்சியாரின் படையில் இருந்த குயிலி என்றொரு பெண்ணின் வீர சாகசத்தால் தம் உயிரைப் பணயம் வைத்து, தம்மீது தீ வைத்துக் கொண்டு வெள்ளையரின் ஆய்தக்கிடங்கையே முழுவதுமாக அழித்ததும் குறிப்பிடத்தக்கது. தம் கணவனைக் கொன்றவர்களை பழி வாங்க தாம் எடுத்த சபதத்தை நிறைவேற்றி, தம்முடைய ஐம்பதாவது வயதில் சிவகங்கையின் கோட்டையின் மீது பறந்து கொண்டிருந்த ஆங்கிலேயக் கொடியை இறக்கிவிட்டு, தம் சிவகங்கைச் சீமையின் அனுமன் கொடியை ஏற்றினார். பத்து ஆண்டுகள் அவருடைய நல்லாட்சி நடந்து கொண்டிருந்தது......

தடைகளையும் மீறி சாதித்தப் பெண்களின் வரலாறு இது போன்று ஏராளம்.....

அன்புடன்
பவள சங்கரி.

 

2012/4/25 rajam <ra...@earthlink.net>



--

                                                               
                 

Take life as it comes.

SINGANENJAM SAMBANDAM

unread,
Apr 25, 2012, 3:46:37 AM4/25/12
to mint...@googlegroups.com
1087 கடாஅக் களிற்றின்மேற் கட்படா மாதர்
படாஅ முலைமேற் றுகில்.
மு.வரதராசனார் உரை
மாதருடைய சாயாத கொங்கைகளின்மேல் அணிந்த ஆடை, மதம் பிடித்த
ஆண்யானையின்மேல் இட்ட முகபடாம் போன்றது.
*************************************

N. Kannan

unread,
Apr 25, 2012, 5:17:52 AM4/25/12
to mint...@googlegroups.com
2012/4/25 coral shree <cor...@gmail.com>

>
> வேலு நாச்சியார் மிக சாணக்கியத்தனமாக செய்த ஒரு செயல் வெள்ளையர் படையில்

> வேலு நாச்சியாரின் படையில் இருந்த குயிலி என்றொரு பெண்ணின் வீர
> சாகசத்தால் தம் உயிரைப் பணயம் வைத்து, தம்மீது தீ வைத்துக் கொண்டு வெள்ளையரின்
> ஆய்தக்கிடங்கையே முழுவதுமாக அழித்ததும் குறிப்பிடத்தக்கது. தம் கணவனைக்
> கொன்றவர்களை பழி வாங்க தாம் எடுத்த சபதத்தை நிறைவேற்றி, தம்முடைய ஐம்பதாவது
> வயதில் சிவகங்கையின் கோட்டையின் மீது பறந்து கொண்டிருந்த ஆங்கிலேயக் கொடியை
> இறக்கிவிட்டு, தம் சிவகங்கைச் சீமையின் அனுமன் கொடியை ஏற்றினார். பத்து
> ஆண்டுகள் அவருடைய நல்லாட்சி நடந்து கொண்டிருந்தது......
>


இவள் அல்லவோ வீரமறத்தி. முறத்தால் புலியை விரட்டியவள். இவள்தான் உண்மையான
தமிழினத் தலைவி. யாரை, யாரையோ கொண்டாடுகிறோம். சிவகங்கைக் கோட்டையில்
முனைவர்.காளைராஜன் காட்டிய பணிவு ஒரு வீரமிகு சரித்திரத்திற்கு என்று
புரிகிறது. அந்த மண்ணின் மைந்தன் நான் என்பதில் பெருமையாக உள்ளது!

கொஞ்சு மொழிப் பெண்களுக்கு அஞ்சா நெஞ்சம் வேண்டுமடி!
வஞ்சகரை எதிர்த்திடவே வாளும் ஏந்த வேண்டுமடி!

நன்றி, பவளா! தொடருங்கள்...

நா.கண்ணன்

பிகு: ஜப்பானியரின் காமிகாசே, புலிகளின் அதிரடி இவைகளுக்கு முன்னுதாரணம்
குயிலி. அவள் நினைவு வாழ்க!

coral shree

unread,
Apr 25, 2012, 8:13:52 AM4/25/12
to mint...@googlegroups.com
அன்பின் கண்ணன் சார்,

நன்றி.

2012/4/25 N. Kannan <navan...@gmail.com>

2012/4/25 coral shree <cor...@gmail.com>

>
> வேலு நாச்சியார் மிக சாணக்கியத்தனமாக செய்த ஒரு செயல் வெள்ளையர் படையில்
> வேலு நாச்சியாரின் படையில் இருந்த குயிலி என்றொரு பெண்ணின் வீர
> சாகசத்தால் தம் உயிரைப் பணயம் வைத்து, தம்மீது தீ வைத்துக் கொண்டு வெள்ளையரின்
> ஆய்தக்கிடங்கையே முழுவதுமாக அழித்ததும் குறிப்பிடத்தக்கது. தம் கணவனைக்
> கொன்றவர்களை பழி வாங்க தாம் எடுத்த சபதத்தை நிறைவேற்றி, தம்முடைய ஐம்பதாவது
> வயதில் சிவகங்கையின் கோட்டையின் மீது பறந்து கொண்டிருந்த ஆங்கிலேயக் கொடியை
> இறக்கிவிட்டு, தம் சிவகங்கைச் சீமையின் அனுமன் கொடியை ஏற்றினார். பத்து
> ஆண்டுகள் அவருடைய நல்லாட்சி நடந்து கொண்டிருந்தது......
>


இவள் அல்லவோ வீரமறத்தி. முறத்தால் புலியை விரட்டியவள். இவள்தான் உண்மையான
தமிழினத் தலைவி. யாரை, யாரையோ கொண்டாடுகிறோம்.

உண்மைதான் சார். ஏனோ வேலு நாச்சியார் பற்றி அதிகம் வெளியில் பரவவில்லை. மறத்தமிழ்ச்சி என்பதற்கான முழு ஆதாரம் வேலு நாச்சியாரின் வரலாறு.


சிவகங்கைக் கோட்டையில்
முனைவர்.காளைராஜன் காட்டிய பணிவு ஒரு வீரமிகு சரித்திரத்திற்கு என்று
புரிகிறது. அந்த மண்ணின் மைந்தன் நான் என்பதில் பெருமையாக உள்ளது!

கொஞ்சு மொழிப் பெண்களுக்கு அஞ்சா நெஞ்சம் வேண்டுமடி!
வஞ்சகரை எதிர்த்திடவே வாளும் ஏந்த வேண்டுமடி!

நன்றி, பவளா! தொடருங்கள்...

நா.கண்ணன்

பிகு: ஜப்பானியரின் காமிகாசே, புலிகளின் அதிரடி இவைகளுக்கு முன்னுதாரணம்
குயிலி. அவள் நினைவு வாழ்க!
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

ARTHANARI RAMASAMY

unread,
Apr 25, 2012, 9:52:00 AM4/25/12
to mint...@googlegroups.com
இதை இன்றைய பெண் சமுதாயம் படித்து உணரவேண்டும்
நாகரிகம், பெண் விடுதலை,சம அந்தஸ்து,புத்திசாலி தனம் , திறமைசாலிகள் என்று
பல செயல்களிலும் பெண் உயர்ந்து இருக்கிறாள்
ஆனல்
வெட்கி தலை குனியும் நிறைய செயல்களும் நிகழ்கின்றன
அதிகரித்துவிட்டன

தொலைகாட்சியும்,சினிமாவும்
இன்றைய பெண் இனத்தை சீரழித்து
இழிவான நிலைக்கு தள்ளிக்கொண்டு இருக்கிறது

இதை சங்கரி போன்ற பெண்கள்தான் மாற்ற வேண்டும்

அன்புடன்
அர்த்தநாரி








2012/4/22 coral shree <cor...@gmail.com>


//இதுபோன்ற தகவல்கள்தானே நமக்கு வேண்டும்! மிக மிக நன்றியப்பா!

அந்த "ரவுக்கை கழட்டுற" பழக்கம் இடத்துக்கு இடம் வேறுபடுமோ-னு நினைக்கிறேன், பெண்ணே!
இன்னும் சொல்ல நிறைய இருக்கில்லெ -- "சேலை முந்தானையெப் போர்த்திக்கொள்ள" வேண்டிய பழக்கத்திலிருந்து தொடங்கி?!!// ராஜம் அம்மா.


யானை கட்டி போரடித்த காலம்! பொன் விளையும் பூமி. பஞ்சம் வந்த காலத்திலும் ஊருக்கு தானியங்களை படியளந்த வள்ளல். சமுதாயத்தில் தலை நிமிர்ந்து வாழ்ந்த காலம். ஜவஹர்லால் நேரு, காமராசர் என பெருந்தலைவர்களுக்கு வீட்டில் விருந்து வைத்து உபசரித்ததன் சாட்சியாக 8 அடியில் நெடிதுயர்ந்த புகைப்படங்கள். அண்ணாந்து பார்த்தால் கழுத்து வலிக்கும் அளவிற்கு உயரமான சுவர்கள். ஒரு தெருவில் ஆரம்பிக்கும் வாசல், மறு தெருவில் முடிவுறும் பொடக்காளி என்கிற பின்வாசல். சேலம் மாநகரின் சேர்மன் ராமலிங்கம் என்றால் அன்றைய காங்கிரசு வட்டாரத்தில் மிக பிரபலம். இன்றும் ஊரில் பெயர் சொல்லிக் கொண்டிருக்கும் சேர்மன் ராமலிங்கம் மார்க்கெட், சேர்மன் ராமலிங்கம் மெயின் ரோடு, சேர்மன் ராமலிங்கம் பள்ளிக்கூடம் என்று மாளாத சொத்துகளை ஊருக்காக வாரி இறைத்த வள்ளல்தன்மை தந்த பரிசாக பறை சாற்றிக் கொண்டிருக்கும் நிதர்சனம். உக்கிராண அறை என்கிற பொக்கிச அறை! (ஒரு அறையே பீரோவாக இருந்த ஆச்சரியம்) அரசியல் தலைவர்கள், கல்வியாளர்கள் என்று சதாசர்வ காலமும் நிறைந்த சபையாக இருக்கும் இல்லம். இப்படி ஊரின் முக்கிய பிரபலங்களின் ஒருவராய் இருந்த என் தாய் வழித்தாத்தா. இவ்வளவு பெருமையும், புகழும், செல்வாக்கும் தாண்டவமாடிய ஒரு குடும்பத்தில் ஒரு பெண்ணின் நிலை என்ன என்பதைக் காட்டவே இந்த முன்னுரை.

ராஜாராம் மோகன்ராய், திலகர் போன்றோரின் பெரும்போராட்டத்தின் விளைவாக சதி என்னும் உடன்கட்டை ஏறும் வழக்கம் முற்றிலும் ஒழிக்கப்படது. ஆனால் ஒவ்வொரு நாளும், தீக்குளித்து புழுவாய்த் துடித்த வாழ்க்கையில் இருந்து மீள அந்த தலைமுறையினரால முடியவில்லை.  பருவம் எய்துவதற்கே முன்பே ஏழு வயதில் திருமணம். மணமகனுக்கும் இளம் பருவம். திருமணம் முடித்தவுடன், திரும்ப தாய் வீட்டு வாசம். ஆனால் பள்ளிப்படிப்பும், சகஜமாக வெளியில் திரிந்து விளையாடும் அனுமதியும் மறுப்பு. வீட்டில் சமையலும் மற்ற பழக்க வழக்கங்களும் கற்றுக் கொடுக்கப்படும். பருவ வயது வந்தவுடன் நல்ல நாள் பார்த்து கணவர் வீட்டில் கொண்டுபோய் விட்டுவிடுவார்கள். 13 வயதில் ஒரு வாலிபருக்கு மனைவியாக குடும்ப வாழ்க்கைக்குத் தயாராக வேண்டிய கட்டாயம். அன்றிலிருந்து இரவிக்கைக்கு விடுதலை. சில பெண்கள் கச்சை என்ற பெயரில் அணிந்திருப்பார்களாம். இவர்களெல்லாம் தன் சேலை முந்தானையை ஒரு சுற்று உள்ளாடையாக நாணத்தை மறைக்க தாங்களே ஏற்படுத்திக் கொண்ட வழமையாக்கிக் கொண்டிருந்திருக்கிறார்கள். பருவ வயது. வெள்ளை வெளேர் என்ற பளபளப்பான அழகிய தோற்றம். ஒரு பெண் உள்ளாடையும் இரவிக்கையும் அணியக்கூடாது என்றால் அவள் நிலை என்னவாக இருக்கும்? அவமானத்தால் கூனிக்குறுகி கதவின் இடுக்கை விட்டு வெளியே வரவே முடியாத, ஆண்களின் முகத்தில் முழிக்கவே இயலாத நிலை. குடும்பப் பெண்களின் பெர்ம்பாலோனோர் இந்நிலையில் இருக்க வேண்டிய கட்டாயத்தில் கூட தாசிகள், பரத்தையர் என்ற ஒரு கூட்டம் உருவாக்கப்பட்டிருக்கலாம். ஆண்களுக்கு ஒரு வடிகாலாக அவர்கள் இருந்திருக்கலாம். அங்கு சென்று வரும ஆண்களை தவறு சொல்லும் வழக்கமே இல்லாமல் இருந்திருக்கிறது...சில நேரங்களில் அதெல்லாம் அவர்களுக்கு கௌரவமான தோற்றத்தைக் கொடுக்கக் கூடியதாகக்கூட இருந்திருக்கிறது.

இந்நிலையில் ஒரு பெண்ணின் அறிவு வளர்ச்சி எந்த அளவில் இருக்க முடியும் என்று எளிதாக ஊகிக்க முடியும். அதற்கு அடுத்து வந்த காலம் சற்று விழிப்புணர்வு ஏற்பட்ட காலமாக இருந்திருக்கிறது. ஒரு பெண் கல்வி கற்றால் அந்த குடும்பமே அறிவு பெறும் என்பார்கள். ஆனால் கல்வியறிவே இல்லாத ஒரு தாய், பொது வாழ்க்கையில் சதாசர்வ காலமும் உழன்று கொண்டிருக்கும் தந்தை, ஆள் அம்பு என்று பணி செய்ய பலர் இருந்தாலும், குழந்தைகளை படிப்பறிவே சற்றும் இல்லாத ஒரு தாயால் எப்படி நன்கு வளர்க்க முடியும். சமையலறையை விட்டு வெளியே வரவே கூச்சம்... இதுதான் ஆண்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட இயந்திரமாக பெண்ணின் வாழ்க்கை. தன் சட்டங்களுக்கு அடி பணிய வேண்டும், தன் கட்டுப்பாட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என்ற அந்த ஆதிக்க உணர்வு பெண்களின் வாழ்க்கையை அழகுப் பதுமைகளாக சமையலறையுடன் முடக்கிப் போட்டிருக்கிறது. அசுர உழைப்பு இருந்த அவரிடம் மன உறுதியையும் பார்க்க முடியும். தன் 60 வயதில் ஒரு மூட்டை அரிசியை இழுத்துப்போடும் அளவிற்கு சக்தி கொண்டவர்கள். தன் 85 வயதுவரை நல்ல கண் பார்வையுடன் எவருடைய உதவியும் இல்லாமல் தானே சமைத்து சாப்பிட்டு, தவ வாழ்க்கையாக, இரவிக்கை போடாமலே உயிரை விட்ட உத்தமி. அந்த அளவிற்கு மனப்பக்குவம் பெற்றதொரு வாழ்க்கை.

உளவியல் ரீதியாக ஒரு பெண்ணை எளிதாக முடக்கிப்போடும் ஒரு நுழைவாயிலாக இந்த இரவிக்கை மறுப்பு இருந்திருக்க வேண்டும். நாணத்தினால் அந்தப்பெண், கல்வியறிவும் பெறாமல், கைப்பாவையாக, அலங்காரப் பதுமையாக, தனக்கான ஒரு பொக்கிசமாக வைத்துக் கொள்ளும் முயற்சியாகவே இந்த பழக்கம் வந்திருக்க வேண்டும். இதைத் தவிர வேறு காரணங்கள் இருக்க வாய்ப்பிருந்திருப்பதாகத் தெரியவில்லை. வெளி உலக ஞானமே இல்லாத ஒரு பெண்ணால் வளர்க்கப்பட்ட குழந்தைகளின் நிலை என்னவாக இருக்க முடியும். இரவிக்கை போட்டவர்களெல்லாம் ஒழுக்கமான பெண்கள் இல்லை என்ற ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி வைத்திருந்தார்கள். 

நல்ல வேளையாக தான் ஒரு கல்வியாளராக இருந்ததாலும், ஈரோடு கல்வி நிலைய நிறுவனர் மீனாட்சி சுந்தரமுதலியாருடன் நெருங்கிய தொடர்பு கொண்டவராக இருந்ததாலும், தம் ஊர் மக்களும் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் கொண்டதாலும், தாமே ஒரு பள்ளியை நிறுவியதால் ஓரளவிற்கு குழந்தைகளும் கல்வியறிவு பெற முடிந்தாலும், தம்முடைய 50 வயதிற்குள்ளாகவே ஓயாத உழைப்பின் காரணமாகவோ என்னவோ இருதய நோயினால், மரணம் அடைந்த பின்புதான் உலக ஞானமும், கல்வியறிவும் இல்லாத ஒரு தாய் அந்த சொத்தையும் கட்டிக்காக்க இயலாமல், மகனையும் ஒழுங்காக வளர்க்க இயலாமல், கடலில் கரைத்த பெருங்காயமாக அவ்வளவு சொத்தும் கரைந்து போக காலி பெருங்காயப் பெட்டியாக இறுதிவரை ஒரு தவ வாழ்க்கையை வாழ்ந்து சென்ற உத்தமியாக மட்டுமே பார்க்க முடிகிறது. 

இந்த காலகட்டத்திற்குப் பிறகுதான், ஈரோடு மாநகரிலும், சில கல்வியாளர்களின் முயற்சியால ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. முதன்முதலில் ரா.பா தங்கவேலனார் மற்றும் மீனாட்சி சுந்தர முதலியார் அவர்களும், திண்ணைப்பள்ளியாக ஆரம்பித்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் 4 குழந்தைகள், அதுவும் ஆண் குழந்தைகள் மட்டுமே சேர்ந்து, பிறகு இவர்களெல்லாம் ஏற்படுத்திய விழிப்புணர்வின் காரணமாக, செல்வச்சீமான் வீட்டு பெண் குழந்தைகள் மட்டும் மெல்ல வெளியேவர ஆரம்பித்து, பின்பு ஓரளவிற்கு விழிப்புணர்வு ஏற்பட்ட நிலையில் மீனாட்சி சுந்தர முதலியார் அவர்கள் முதன்முதலில் பெண்களுக்கென்று தனி பள்ளியை நிறுவினார். மெல்ல மெல்ல இரவிக்கை அற்றுப்போன வாழ்க்கைக்கும் விடிவு வந்திருக்கிறது,நாகரீகம் வளர ஆரம்பித்து, இன்று அசுர வளர்ச்சியாக பெண்களின் முன்னேற்றம் ஆச்சரியப்படும் வகையில் உள்ளதையும் மறுக்க இயலாது.. இருந்தாலும் இன்றளவிலும் பழைய பண்பாட்டின் மிச்சங்களாக கிராமப்புறங்களில் இரவிக்கை இல்லாத பாட்டிமார்களைக் காண முடிகிறது.


-- அன்புடன்

பவள சங்கரி.

                                                               
                 

Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
HORIZONS
25/2 POSTAL COLONY
COLLEGE ROAD
TIRUPUR 641602

N. Ganesan

unread,
Apr 25, 2012, 9:14:44 AM4/25/12
to மின்தமிழ்

On Apr 25, 12:46 am, SINGANENJAM SAMBANDAM <singanen...@gmail.com>
wrote:


> 1087    கடாஅக் களிற்றின்மேற் கட்படா மாதர்
> படாஅ முலைமேற் றுகில்.
> மு.வரதராசனார் உரை
> மாதருடைய சாயாத கொங்கைகளின்மேல் அணிந்த ஆடை, மதம் பிடித்த
> ஆண்யானையின்மேல் இட்ட முகபடாம் போன்றது.
> *************************************
>

இதனைக் கொங்குநாட்டில் மாராப்பு என்கிறோம். இந்தத் தோள்சீலையை
அணிதற்குத் தென் தமிழ்நாட்டில் பெரும் போராட்டமே சில சமூகத்தவர்கள்
நடத்த வேண்டியிருந்தது,

ஆடை - சாடா (சாடீ/சாரீ)- வடசொல்லில் பிறந்தது. சமணர் > அமணர் போல.

நா. கணேசன்

seshadri sridharan

unread,
Apr 24, 2012, 11:25:03 AM4/24/12
to mint...@googlegroups.com
வடநாட்டில் தென்னாட்டில் போல் பெண்கள் தலைக்கு முக்காடு இடாமல் தான் இருந்தனர்.  ஆனால் இசுலாமியர் படைஎடுப்பின் பின் இசுலாமியப் பெண்கள் போல் முக்காடு போடும் வழக்கம் அவர்களுக்கும் திணிக்கப்பட்டது. இது இன்றும் தொடர்கின்றது.

சேசாத்திரி

2012/4/24 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

coral shree

unread,
Apr 25, 2012, 11:37:48 AM4/25/12
to mint...@googlegroups.com
அன்பின் திரு அர்தனாரி ராமசாமி,

உண்மைதான். இன்றைய பெண்களின் அபரிமித வளர்ச்சியைப் பார்க்கும் போது மனதிற்கு உற்சாகமாகத்தான் இருக்கிறது. ஊடகங்களின் கவர்ச்சியால் சில பாதிப்புகள் ஏற்பட்டாலும், நல்ல விழிப்புணர்வும் பெண்களிடையே இருப்பதையும் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.. தங்கள் கருத்திற்கு நன்றி.

அன்புடன்
பவள சங்கரி.

2012/4/25 ARTHANARI RAMASAMY <ramasamy....@gmail.com>

Tthamizth Tthenee

unread,
Apr 25, 2012, 11:45:11 AM4/25/12
to mint...@googlegroups.com
அடேயப்பா !
 
பொறிந்து தள்ளிவிட்டீர்கள் 
 
 
 
கட்டுரை  மிக அருமை
 
நாளுக்கு நாள் மெருகேறும்  நளினமான  எழுத்து நடை
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
 

2012/4/25 coral shree <cor...@gmail.com>

coral shree

unread,
Apr 25, 2012, 12:13:35 PM4/25/12
to mint...@googlegroups.com
மிக்க நன்றி தமிழ்த்தேனீ ஐயா.

அன்புடன் 
பவள சங்கரி.

2012/4/25 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

rajam

unread,
Apr 25, 2012, 12:31:22 PM4/25/12
to mint...@googlegroups.com, Hari Krishnan
தனி இழை தொடங்கவேண்டியதாயிற்று.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ 

நன்றி, கவிஞரே! "ஊசி" பற்றி யாமும் அறிவோம். பொது மன்றத்துக்குத் தாங்கள் எடுத்துச் சொன்னமைக்கு நன்றி!  
ஆயினும் ... சில வேண்டுகோளும் கருத்தும் இந்த அறுவையாள் (டாக்டர் ஆனாலும் சரி, ரம்பத்தாள் ஆனாலும் சரி, அவள்) பக்கலிலிருந்து:
1. "இழை" "ஆடை" "தையல்" "மெய்ப்பை" "கஞ்சுகம்" "குப்பாயம்" "உடுக்கை" "காழகம்" "கலிங்கம்" இன்ன பிற சொற்கள் எல்லாமே காரணப் பெயர்கள் என்பது தாங்கள் அறியாதது அன்று. எனவே இந்தச் சொற்களின் பயன்பாடுகளைத் தொடக்கத்திலிருந்து பார்த்தல் நலம் என்பது அடியாள் கருத்து. காலப்போக்கில் எந்தச் சொல் எப்படி வேறுபட்ட பொருளைத் தரத் தொடங்கியிருக்கிறது என்பது என்போன்ற அறுவையர்க்கு உதவும்! :-)  

2. "தையல்" என்ற ஆகுபெயர் ஏன் ஒரு பெண்ணை மட்டும் குறிக்கிறது?  
3. எப்படி இருந்தாலும் ... "இழை" "ஆடை" என்ற சொற்கள் நமக்குக் கிடைத்திருக்கும் பழைய இலக்கியங்களில் குறிப்பிட்ட பொருளை உணர்த்தியிருக்கின்றன. அதைத் தாங்களாகக் கண்டுகொண்டு சொல்லாதவரை இந்த அறுவையாளும் சொல்லமாட்டாள்! :-)

4. 
அப்புறம் நம்ம கால அறிவை அந்தக் காலத்தில் பொருத்துவது பற்றி. கான்டெக்ஸ்ச்சுவல் ரீடிங்கையும் வைத்துக்கொண்டு இதையும் செய்துதான் ஆகவேண்டும் என்பது நான் நினைப்பது.  இரண்டையும் இணைத்தால்தான் புரிந்துகொள்ள ஒரு வழி கிடைக்கும் என்பது என் எண்ணம்.  அப்புறம் டாக்டர் பெருமக்கள் தீர்மானப்படி. :)
கான்டெக்ஸ்ச்சுவல்  ரீடிங்க் அடிப்படைத் தேவை! அதுவே என் வழிகாட்டி! அதோடு ... ஒரு இத்துனூண்டு methodology சிக்கல் எனக்கு. எப்படிப் போறோம்-னு. 'தொடக்க காலத்திலிருந்து இக்காலத்துக்குப் போவதா? இல்லெ, இப்போதிலிருந்து பின்னாலெ போவதா?' என்று. ping-pong ஆட்டம் இருக்கும், இங்கேயிருந்து அங்கே போய் அங்கேயிருந்து இங்கே வந்து ... இப்பிடி. ஆனாலும் ... "நம்ம கால அறிவு" சில சமயம் நம்ம கண்ணெ மூடி மறைக்கும்! ஒரு குமுகம் என்பது ஒரு பிசைந்த மாவு போன்றது. மாவைப் பிசைந்து வைத்து அதைத் தேன்குழலாகப் பிழியலாமா, தட்டையாகத் தட்டலாமா, cookie cutter-இல் விருப்பப்பட்ட வடிவாக்கிப் பொறிக்கலாமா? எல்லாம் செய்யலாம்! என் புத்தகத்தில் (A Reference Grammar of Classical Tamil Poetry) இந்தச் சிக்கலை விளக்கியிருக்கிறேன். 
+++++++++++++++++++++++++++++++ 

ஆனாலும் ... அரிஞர்களையும் (தட்டுப் பிழையில்லை!) பொரிஞர்களையும் (தட்டுப் பிழையில்லை!) மீண்டும் கேட்கிறேன் -- சங்க இலக்கியங்களில் (8-தொகை, 10-பாட்டு) "இழை" என்ற சொல்லும் "ஆடை" என்ற சொல்லும் பிற சொற்களும் ("மெய்ப்பை" போன்றவை) குறிப்பிட்ட பொருட்களையும் அவற்றை அணியும் மக்களையும் குறிக்கின்றன. அவை பற்றிச் சொல்லுங்களேன்! 
நன்றி!
ராஜம் 

கி.காளைராசன்

unread,
Apr 25, 2012, 1:04:24 PM4/25/12
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
அன்பிற்குரிய சகோதரிக்கு வணக்கம்.

2012/4/25 coral shree <cor...@gmail.com>

மங்கையர்க்கு அரசியார் 
இல்லையெனில் இன்று நாம் எல்லாம் அமணர்களாக மாறியிருந்திருப்போம்
பொங்கொளி வெண் திருநீறு பரப்பினாரை போற்றுவார் கழல் எம்மால் போற்றியதற்கு நன்றி
 
மகாலட்சுமியைப் போன்ற தோற்றம் கொண்ட புனிதவதியார் பேய் வடிவைப் பெற்று
"பிறவாமை வேண்டும், மீண்டும் பிறப்புண்டேல் இறைவா உனையென்றும் மறவாமை வேண்டும்" என்று வேண்டுகிறார்.
இறைவனுக்கே தாயானவள்.
இப்பேறு இனி யாருக்குக் கிடைக்கும்?
 

Inline image 1
சமயோசிதமாக, ஆங்கிலேயருக்கும், நவாபிற்கும் எதிரியான ஹைதர் அலியுடன் நட்புப்பாலம் அமைத்தார்.  
 காளையார் கோவிலை போரிட்டு முதலில் கைப்பற்றினார். இளைய மருது சகோதரரை தளபதியாகக் கொண்டு ஒரு படையை திருப்பத்தூருக்கு அனுப்பி, வெற்றி கொள்ளச் செய்தார். வேலு நாச்சியாரின் தலைமையிலான மற்றொரு படை பெரிய மருது சகோதரரை தளபதியாகக் கொண்டு ஆங்கிலேயப் படைகளை வீழ்த்தியது. 

இந்த வீரம் இந்த மண்ணில் இன்றும் உள்ளது.
 தாம் எடுத்த சபதத்தை நிறைவேற்றி, தம்முடைய ஐம்பதாவது வயதில் சிவகங்கையின் கோட்டையின் மீது பறந்து கொண்டிருந்த ஆங்கிலேயக் கொடியை இறக்கிவிட்டு, தம் சிவகங்கைச் சீமையின் அனுமன் கொடியை ஏற்றினார்.

நல்லோரை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி பல,

அன்பன்
கி.காளைராசன்

DSC00015.JPG
19A.gif

கி.காளைராசன்

unread,
Apr 25, 2012, 1:04:58 PM4/25/12
to mint...@googlegroups.com
வணக்கம் ஐயா,

2012/4/25 N. Kannan <navan...@gmail.com>

இவள் அல்லவோ வீரமறத்தி. முறத்தால் புலியை விரட்டியவள். இவள்தான் உண்மையான
தமிழினத் தலைவி. யாரை, யாரையோ கொண்டாடுகிறோம். சிவகங்கைக் கோட்டையில்
முனைவர்.காளைராஜன் காட்டிய பணிவு ஒரு வீரமிகு சரித்திரத்திற்கு என்று
புரிகிறது. அந்த மண்ணின் மைந்தன் நான் என்பதில் பெருமையாக உள்ளது!

மன்னர்களைப் பெருமாளுக்குச் சமமாக எனது மனம் கண்டது.
அதனால் தான் அந்த மரியாதை.

coral shree

unread,
Apr 25, 2012, 1:08:48 PM4/25/12
to mint...@googlegroups.com
அன்புச் சகோதரருக்கு வணக்கம்.

2012/4/25 கி.காளைராசன் <kalair...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
DSC00015.JPG
19A.gif

Hari Krishnan

unread,
Apr 26, 2012, 2:48:15 AM4/26/12
to mintamil


---------- Forwarded message ----------
From: Hari Krishnan <hari.har...@gmail.com>
Date: 2012/4/26
Subject: Re: "இழை" "ஆடை" .... இன்ன பிற
To: rajam <ra...@earthlink.net>




2012/4/25 rajam <ra...@earthlink.net>

2. "தையல்" என்ற ஆகுபெயர் ஏன் ஒரு பெண்ணை மட்டும் குறிக்கிறது?  
3. எப்படி இருந்தாலும் ... "இழை"

அக்கா மன்னிக்கணும்.  எனக்குப் புரியவில்லை.  ‘பைய’ என்றால் மெதுவாக என்றும் பொருள்தரலாம்; பையனே என்று சிறுவனை அழைப்பதாகவும் இருக்கலாம்; பையை வைத்திருப்பவனே என்றும் பொருள் தரலாம்.

லெக்சிகனில் (ஆன்லைனில் முழுவதுமாக இல்லாததால் படமாக இணைத்திருக்கிறேன்).  இதிலுள்ள பொருள் வைப்பு வரிசையில்:

1) Sewing, stitching, தைப்பு
2) Needlework, embroidery தையல்வேலை
3) Lace அலங்காரத் துணி
4) That which is adorned, decorated, புனையப்படுவது
5) Symmetrical beauty or gracefulness கட்டழகு
6) பெண்
7) மேகம்.

தைப்பதாகிய தொழில், அலங்கார வேலைப்பாடாக மாறி, புனையவும் அணியவும்படுவதாக ஆகி, எதெல்லாம் சிம்மெட்ரிகல் ப்யூட்டி அல்லது க்ரேஸ்ஃபுல்லாக இருக்கிறதோ அதெல்லாம் தையல் என்றாகி, அதன் பின்னரே, இந்த ஐந்தாவது காரணத்தால் பெண்ணைக் குறிக்கத் தொடங்கியிருக்கிறது என்று தோன்றுகிறது.

இழை என்றாலும் பெண்தானே?  ஆயிழை, சேயிழை.....

இலக்கியங்களில் குறிப்பிட்ட பொருளை உணர்த்தியிருக்கின்றன. அதைத் தாங்களாகக் கண்டுகொண்டு சொல்லாதவரை இந்த அறுவையாளும் சொல்லமாட்டாள்! :-)


அடர்தெழு குருதி அடங்காப் பசுந்துணி
பிடர்த்தலைப் பீடமேறிய மடக்கொடி
வெற்றிவேற் தடக்கைக் கொற்றவை அல்லள்....

என்னும் சிலம்படிகளில்

பசுந்துணி என்பதற்கு, அப்போதுதான் துணிக்கப்பட்ட காரணத்தால் இன்னமும் குருதி பீறிட்டெழுந்து ஒழுகிக்கொண்டிருக்கிற (கழுத்தளவான) தலை என்று பொருள்படுகிறது.  துணிக்கப்பட்டதால் துணி. தறியிலிருந்து துணிக்கப்படுவதால், உடுத்துவதும் துணி.  அறுத்தெடுக்கப்படுவதால் அறுவை.  ‘இந்த அறுவையாள்’ நல்லா ட்ரெஸ் போட்டு இருக்காங்கன்னு தெரியுது.  

வேற என்னத்தக் கண்டு சொல்லணும்ங்கறீஙகன்னு புரியவில்லை.  ஏதாவது குறிப்பு கொடுத்தால் எதை நோக்கிச் செலுத்துகிறீர்கள் என்று தெரிந்துகொள்ளலாம்.

-- 

அன்புடன்,
ஹரிகி.
தையல்.jpg

rajam

unread,
Apr 26, 2012, 1:12:44 PM4/26/12
to mint...@googlegroups.com, Hari Krishnan
தம்பீ, மன்னிக்கணும்!

வேற என்னத்தக் கண்டு சொல்லணும்ங்கறீஙகன்னு புரியவில்லை.  ஏதாவது குறிப்பு கொடுத்தால் எதை நோக்கிச் செலுத்துகிறீர்கள் என்று தெரிந்துகொள்ளலாம்.


அதாவது ... "காரணப் பெயருக்கும்" "ஆகுபெயருக்கும்" இடையில் தமிழில் ஏற்பட்ட குழப்பம் பல என்பதை எம் இளைய தலைமுறையினர் புரிந்துகொள்கிறார்களா என்று எனக்குத் தெரியவேண்டும். அதில் தெளிவில்லை.  
1. 
இழை என்றாலும் பெண்தானே?  ஆயிழை, சேயிழை.....

தப்பு, தப்பு, தப்பு! "இழை" என்ற சொல் பெண்ணைக் குறித்தது அன்று. "இழை" என்பது இயற்கைப் பொருள்களிலிருந்து உண்டாக்கிய ஒருவகைச் செயற்கைப் படைப்பு. பெண்கள் அதைத் தம் மேல் போர்த்துக் கொள்ளும் பழக்கம் ஏற்பட்டதினால்  "ஆயிழை" "சேயிழை" என்ற "ஆகுபெயர்" பயன்பாடு வந்திருக்கும். அதாவது ஒரு குறிப்பிட்ட வகையான "இழை"யை அணிந்த பெண்ணைக் குறிப்பது என்று. 

2. திரு (Dr.) அன்புமணியின் தேடல் உரிமை தங்களுக்கு இருப்பதால் ... ஒரு வீட்டுப்பாடம் கொடுக்கிறேன் ... "இழை" "ஆடை" இன்ன பிற சொற்கள் எந்தெந்த வகையில் (contextual reading) பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்று பார்க்கவும். 

4. மேலும் சொல்ல விருப்பம். ஆனால், இங்கே சிலர் தத்தம் தனிப்பதிவில் நான் சொன்ன இந்தக் கருத்தையே ஒருவகையாகத் திருப்பிப்போட்டு ... "புகழ்" வாங்க முனைவார்கள். அது எனக்கு அருவருப்பைத் தரும்.

தனி மடலில் தொடர்பு கொள்ளுவேன், முடிந்தபோது.

அன்புடன்,
ராஜம் 


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil<தையல்.jpg>

கி.காளைராசன்

unread,
Apr 26, 2012, 3:13:47 PM4/26/12
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, தமிழ் சிறகுகள், தமிழ் வாசல்
வணக்கம்.

2012/4/25 coral shree <cor...@gmail.com>

Inline image 1
 
நம் தமிழகம் எத்துனையோ வீரப்பெண்மணிகளின் வரலாறுகளைக் கண்டிருக்கிறது. ஆயினும், இப்பெண் சாதாரண வீர மங்கை அல்ல. ஆம் ராணி வேலு நாச்சியார் என்றால் சாதாரண வீரம் அல்ல.  மருது சகோதரர்களின் உதவியால் குதிரையின் மீது ஏறி மேலூர் சென்று சமயோசிதமாக, ஆங்கிலேயருக்கும், நவாபிற்கும் எதிரியான ஹைதர் அலியுடன் நட்புப்பாலம் அமைத்தார். தம் நிலையை தெளிவாக விளக்கிய வேலு நாச்சியாரின் வீரத்திருமுகம் கண்டு அவரைத் தம் அரண்மனையிலேயேத் தங்கவும் அனுமதி அளித்தார்.

“‘போரில் பயன்படுத்திய ராக்கெட் கு தேவையான் மூல பொருள்கள் திப்புவும் அவரின் தந்தையும்

திண்டுகல்லில் வேலு நாச்சியாரை சந்தித்த பின் தான் செயல் பாட்டில் வந்தது 

மூல பொருளான வெடி உப்பு,graphite மற்றும் நிறைய ராக்கெட் கு தேவையான பொருள்கள்  தமிழ் நாட்டில் கப்பலில் செல்பவர்களால் கடற்கரைகளில் கடலில் விபத்து ஏற்பட்டால் உதவிக்கு ஆட்களை அழைக்க உபயோகிக்க பட்டது

அதை தான் திப்பு பயன் படுத்தினார்“‘

முன்பு வேறுஒரு இழையில் தகவல் வழங்கிய நண்பர் ஒடிசா (ஆமை) பாலு அவர்களுக்கு நன்றி
DSC00015.JPG

MANICKAM POOPATHI

unread,
Apr 27, 2012, 9:22:27 PM4/27/12
to mint...@googlegroups.com
வணக்கம்:  _/\_

நீலகேசி எனும் பழந்தமிழ்
தர்க்க சாஸ்த்திர நூலொன்றில்..

"காராடை போர்த்த வெம்புத்தர்"
என்றொரு..  ஆழ்ந்த பொருள் அடங்கிய...
ஆடை பற்றிய சொல்லாட்சி.. தொண்டு
தொட்டு வழங்கி வருவதனை.. காணலாம்..?

ஆள் பாதி ஆடை பாதி...
(மேற்சட்டை அணிவதெல்லாம்
அன்றைய பழக்கம் இல்லை.. (vitaminD?))

கொங்காடை என்றால்
கோணிப்பையால் அணியும் முக்காடு..
மலைக்காடுகளில் அது ஒரு அவசரக் குடை..?

ஆடை  எனும் பழந்தமிழ்  சொல்லுக்கு
அம்பரம்  என்கிற  பொருளும் உண்டு..

திக்கு + அம்பரம் (திகம்பரர் )
(திக்குத் திசைகளை தொலைத்து
சஞ்சார சமாதி நிலையினை அடைந்தோர்...)

ஞானவொளியாகிய வெண்ணிற ஆடை
தரித்த  துறவியர் = சித் + அம்பரம் = சிதம்பரர்

சரவணம் என்பது
சரபௌண /சிரமணம் என்றெல்லாம் சங்கத/பாளிதப்படும் என்பார்கள்..?

சரவணை என்பதற்கு மஞ்சள் என்று
பிறிதொரு பொருளும் சொல்லுவார்கள்..?

அவ்வாறே..
முந்தானையினை கொசுவி
இடமொரு பாகமாய்..  'சாரி'யாக :-)
ஒரு (தாறு) பாய்ச்சலாக அணிவதால்.. அது புடைவை..   இல்லாவிட்டால்.. அது
வெறும் முண்டு எனப்படும்.. இல்லீங்களா..?

மிக்க நன்றி..!


அன்புடன்.../பூபதி  _/\_


http://tinyurl.com/7qwazzn

coral shree

unread,
Apr 27, 2012, 9:31:04 PM4/27/12
to mint...@googlegroups.com
அருமையான விளக்கங்கள்... தொடருங்கள்..

2012/4/28 MANICKAM POOPATHI <poop...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
It is loading more messages.
0 new messages