சாதவாகன வேந்தர்கள் உஜ்ஜைனியில் இருந்து ஆந்திர - கருநாடகத்தின் வட பகுதிகளை ஆண்டவர்கள். எனினும் இவர்கள் தலைமுறை தலைமுறையாக வெளியிட்ட காசுகளின் ஒரு பக்கத்தில் தம் பெயரைத் தமிழில் குறித்து வைத்து உள்ளனர். இதுவரை ஆறு காசுகள் கிட்டி உள்ளன..
தேவ்
On Jul 27, 5:16 am, seshadri sridharan <sseshadr...@gmail.com> wrote:
> சாதவாகன வேந்தர்கள் உஜ்ஜைனியில் இருந்து ஆந்திர - கருநாடகத்தின் வட பகுதிகளை
> ஆண்டவர்கள். அசோகன், தன் ஆட்சியின் கீழ் இருந்த சாதவாகனரைத் தான் ஆந்திரர்
> எனக் குறிப்பிடுகிறான். இவர்களுடைய ஆட்சி தமிழகத்தில் நீட்சி பெற்றதற்கான
> சான்று ஏதும் இல்லை. எனினும் இவர்கள் தலைமுறை தலைமுறையாக வெளியிட்ட காசுகளின்
> ஒரு பக்கத்தில் தம் பெயரைத் தமிழில் குறித்து வைத்து உள்ளனர். இதுவரை ஆறு
> காசுகள் கிட்டி உள்ளன.. இவை சங்க கால தமிழக வட எல்லை எது என்பதை
> தீர்மானிப்பதில் முகாமையான பங்கு கொண்டுள்ளது. சாதவாகன மன்னர்களால்
> வெளியிட்ப்பட்ட பிராமி எழுத்தில் பொறிக்கப்பட்ட இரு மொழி நாணயங்கள் தனித்தன்மை
> வாய்ந்தவை (R. Nagaswamy 1981, P. 132 - 139). இவை யாவும் ஆந்திர மாநிலத்தில்
> தான் கிட்டின. நாணயங்களின் முன்பக்கத்தில் அரசனின் உருவமும் அதைச் ச்ற்றி
> நாணயத்தின் ஓரமாக பிராகிருத மொழியில் இவர்களது பெயர் காணப்படுகின்றன. பின்
> பக்கத்தில் பல சின்னங்களும் இவற்றை சுற்றி முன்பக்கத்தில் உள்ளவாறே சாதவாகன
> மன்னர் பெயர் தமிழ் மொழியில் எழுதப்பட்டு உள்ளது.. தமிழ் மன்னர் அல்லாத
> வேற்றவரால் முதன்முதலாக தமிழில் வெளியிடப்படட் மிகப் பழைய நாணயங்கள் இவையே.
> இவற்றை வெளியிட வேண்டிய காரணம் ஆந்திர கருநாடக பகுதிகளில் கி.ரு. 2 ஆம்
> நூற்றாண்டு முதல் கி.பி. 1 ஆம் நூற்றாண்டு வரை தமிழ் மொழியும் அப்பகுதி மக்கள்
> அறிந்த மொழியாக இருந்ததே ஆகும். தமிழ் அறிந்தோருக்கு தமிழிலும் அறியாதாருக்கு
> பிராகிருதத்திலும் இந் நாணயங்களை சாதவாகனர் வெளியிட வேண்டிய தேவை இருந்தது .
> இந்த ஆறு நாணயங்களின் விவரம் கீழே:
>
> 1. ராஞோ வசிடி புதஸ ஸிரி புலுமாவிஸ (பிரா) > அரசனகு வசிட்டி மகனகு திரு
> புலுமாவிகு (தமிழ்)
> 2. ராஞோ வசிடி புதஸ ஸிரி ஸாதகணிஸ (பிரா) > அரசனகு வசிட்டி மகனகு திரு
> சதகணிகு (தமிழ்)
> 3. (ராஞோ) வசிடி புதஸ சிவ ஸிரி புலுமாவிஸ (பிரா) > அரசனகு வசிட்டி மகனகு
> சிவதிரு புலுமாவிகு (தமிழ்)
> 4. ராஞோ வசிடி புதஸ சிறீ கட ஸாத கணிஸ (பிரா) > - - - - - - - - -
> ---- -- - - - - - - - சிட்டி மகனகு (தமிழ்)
> 5. ராஞோ கௌதமி புதஸ சிறீ யஞ்ஞ ஸாத கணிஸ > அரசனகு கௌதமி புதகு ஸிரு யஞ்ஞ
> சதகணிகு (தமிழ்)
> 6. ராஞோ வசிடி புதஸ சிறீ விஜய ஸாத கணிஸ (பிரா) > அரசனகு வசிட்டி புதகு
> திரு விஜய (சதகணிகு)
>
> (R. Nagaswamy 1981, P.132 -134)
>
> தமிழ் இலக்கியம் குறிப்பிடும் தமிழக வட எல்லை இன்று நம்பப்படுவது போல்
> திருப்பதி மலை அல்ல என்ற கருத்து கீழ் உள்ள தலைப்பில் ஏற்கென்வே அலசப்பட்டது.
> அதைக் கீழ் உள்ள மின்தமிழ்த் தொடுப்பில் காணவியலும்.
>
> தென் இந்தியாவில் அசோகன் - தமிழ் மன்னர் ஆட்சி எல்லை
>
> *தென் இந்தியாவில் அசோகன் ஆட்சி எல்லை பகுதிகளும் தமிழ் மன்னர் ஆட்சி
> எல்லையும் குறித்து ஒரு கருத்துரை. அதன் வழி தமிழகத்தின் வட எல்லைத்
> தீர்மானம்*
> **https://groups.google.com/forum/?fromgroups#!topic/mintamil/AJabYo-_XMs