ஆணியத்திற்கு சில வரைமுறைகளையும் பெண்ணியத்திற்கு சில வரை முறைகளையும் நிர்ணயிக்க வேண்டி இருக்கிறது. இந்த வரையறைகளே பிரச்சனைகளுக்கு அடிப்படை காரணமாக அமைந்து விடுகிறது. வரையறைகள் மனத்திற்கு மனம் மாறுபாடு அடைகிறது. எப்போது இந்த வரையறைகள் களையப்படுகிறதோ அப்போதே ஆண், பெண் பிரச்சனைகள் களையப்பட்டுவிடும்.
பெண்ணியம்:ஆணியம் பிரச்சனைகள் தீர்க்கப்பட பெண், ஆண் பாகுபாடுகள் தீர்க்கப்பட வேண்டும்.
ஆண்கள் கல்லூரி, பெண்கள் கல்லூரி என்பதில் அதாவது கல்விக் கூடங்களே பாகுபாட்டை விதைக்கின்றன. கல்வியில் இருந்து பிரச்சனை ஆரம்பமாகிறது. உலகம் வளர்ந்து விட்டது என கூறிக் கொள்ளும் போதும் ஏன் இன்னும் இந்தப் பிரிவினைகள் தேவைப்படுகின்றது? பிரிவினைதான் பிரச்சனைக்குக் காரணம்.
எனக்குத் தெரிந்தவரை இருபாலர் கல்விக்கூடத்தில் படித்த மாணவமாணவியருக்கும், ஒருபாலர் கல்விக்கூடத்தில் படித்த மாணவமாணவியருக்கும் மனஅளவில் வேறுபாடுகள் இருப்பதைக் காண முடியுகிறது.
சமுதாயத்தில் பெண்ணியம் எனச் சொல்லி அரசியல் நடத்தியோர் பலரிருக்க ஏன் இன்றும் ஆண் பெண் இடையே உரசல்கள் இருக்கின்றன? எனவேதான் நான் கூறுகின்றேன், பெண்ணியம் என்ற சொல்லாடலே தவறானது. பெண்ணுக்கு பிரச்சனை ஏற்பட்டால் அதை ஒருவருக்கு இப்படிப்பட்ட பிரச்சனை ஏற்பட்டது எனச் சொல்வோம், ஆணுக்கு பிரச்சனை ஏற்பட்டால் அதை ஒருவருக்கு இப்படிப்பட்ட பிரச்சனை ஏற்பட்டது எனச் சொல்வோம் அதை விடுத்து பெண்இனத்திற்கே எதிரானது என்றும், ஆண்இனத்திற்கே எதிரானது என்றும் கூறுவது என்பது ஒரு இயக்கம் வைத்துக் கொண்டு ஒருசாரர் ஆண் இனத்திற்கு எதிராக செயல்படுவோர் மாதிரியும், மற்றொருசாரர் திட்டம் தீட்டிக் கொண்டு பெண் இனத்திற்கு எதிராக செயல்படுவோர் மாதிரியும் கூறுவது முன்னேற்றம் அடையாத மனப்பான்மையையேக் காட்டுகிறது. மனப்பான்மை மாறும் போதுதான் ஒரு நற்சமுதாயம் உருவாகும்.
உலகில் தோன்றிய உயிர்கள் சமம் என்ற மனப்பான்மை எப்போது வருகிறதோ அப்போதுதான் ஒரு நேர்த்தியான சமுதாயம் அமையும். ஆண் பெண் இருவரும் சேர்ந்தது தானே உலகம்!
ஆண்களுக்கு நிகராக இப்போது பெண்களும்.. என்ற சொல்லாடலும் தவறு போன்றே தெரிகிறது. எப்படி என்றால் ஒரு பெண்ணின் உழைப்பை ஆண்களுக்கு நிகர் எனக் கூற முடியும்? அது போன்றே ஒரு ஆணின் உழைப்பை பெண்ணுக்கு நிகர் எனக் கூற முடியும்? அப்பெண்ணின் உழைப்பு அவருக்கே தெரியும். ஆணின் உழைப்பு அவருக்கே தெரியும்.
பெண்ணின் உழைப்பையும் அதில் உள்ள சிறப்பு அம்சங்களைப் பற்றியும் கூறுவதை விடுத்து ஒப்பிடு செய்வது ஏனோ? உழைப்பைப் பற்றிக் கூறுவதைவிடுத்து, ஆண்களுக்கு நிகர் என ஒப்பிடு செய்வது, கூறுவது மேலும் பாகுபாட்டையே ஏற்படுத்தும். மேலும் அப்பெண்ணின் உழைப்பை ஒப்பீடு செய்வதும் கூட ஒரு இனப்பாகுபாடு காரியமேயன்றி வேறு இல்லை. அவரது உழைப்பை குறைத்து மதிப்பிடுவதற்குச் சமம் ஆகும்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் பற்றி மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது நம் நாட்டின் மக்கள் தொகை ,மற்றும் வெப்ப நிலை இவற்றை நினைவில் கொள்ள வேண்டும்.கி வ வண்ணன்
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
////இப்போது ஆண்களுக்கு சமமாக கெட்டுபோவது தான் பெண்ணியம் என்ற அளவில் வந்து நிற்கிறது.பெண்ணியம் என்பது பெண்களை உயர்த்துவதாக இருக்கவேண்டுமே ஒழிய தாழ்த்துவதாக அமையகூடாது.///இவற்றுக்கு என்ன ஆதாரங்கள் உள்ளன ?சி. ஜெ.
பெண்ணியம் என்றால் முதலில் பெண்களின் மனதில் என்ன இருக்கின்றது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
--
///மேலைநாடுகளில் இதனால் பெண்கள் ஆண்களுக்கு சமமாக தண்ணி அடித்து, சிகரெட் பிடித்து இப்போது கஞ்சாவும் அடிக்கிரார்கள்.சிகரெட் பிடிப்பது தப்பு, மது அருந்துவது தப்பு என சொல்பவர்கள் பழைய பஞ்சாங்கம் ஆகி இப்போது இந்தியாவிலும் இந்த லிவிங் டுகெதர், கலாயனம் செய்துகொள்ளாமல் கர்ப்பம் தரிப்பது, பெண்கள் பார், பப்புக்கு போவது பேஷன் ஆகி வருகிறது.///இவர்கள் விதிவிலக்குப் பெண்டிர். விதிவிலக்குப் பெண்டிர் எத்தனை சதவீதம் இருப்பார் ??? விதிவிலக்குகளைப் பொதுவிதிக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது ! தமிழகத்தில் பொதுவிதிப் பெண்டிர் ஒழுக்கமானவர். அவரைச் சீண்டி அவமதிப்பவர் ஆணாதிக்க ஆடவர்.தமிழ் நாட்டில் அதிக எண்ணிக்கையில் உள்ள கயவர் [%] ஆடவரா ? பெண்டிரா ? ஆடவர் அதிக அளவில் கயவராய் இருப்பதால்தான் , பெண் வன்முறை நிகழ்ச்சிகள் எண்ணிக்கையில் மிகுதி.பத்துக் கயவர் மாணவராக இருப்பதால் பல்கலைக் கழகத்தின் பெயர் கெடலாம். ஆனால் தரம் கெடாது.சி. ஜெயபாரதன்
--
2018-04-26 2:51 GMT-04:00 vannan vannan <vanna...@gmail.com>:பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் பற்றி மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது நம் நாட்டின் மக்கள் தொகை ,மற்றும் வெப்ப நிலை இவற்றை நினைவில் கொள்ள வேண்டும்.கி வ வண்ணன்
'வெப்பம்' சப்பைக்கட்டு, சார்/மேடம்.இ
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
யு.எஸ்.பெண்ணியம் வேறு ;நம் நாட்டு பெண்ணியம் வேறு.சுருங்கி வரும் உலகில் மேலைப் பெண்ணியம் நம் நாட்டைத் தாக்கி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியுள்ளது .மணிரத்னம் கூட 'live to-gether culture' பற்றிப் படமெடுத்த போது இறுதியில் திருமணத்தின் அவசியத்தைத் தான் வலியுறுத்தினார்.கண்மணி
The Counseling and Mental Health Center at the University of Texas at Austin recently launched a new program to help male students “take control over their gender identity and develop a healthy sense of masculinity.”
Treating masculinity as if it were a mental health crisis, “MasculinUT” is organized by the school’s counseling staff and most recently organized a poster series encouraging students to develop a “healthy model of masculinity.”
The program is predicated on a critique of so-called “restrictive masculinity.” Men, the program argues, suffer when they are told to “act like a man” or when they are encouraged to fulfill traditional gender roles, such as being “successful” or “the breadwinner.”
Though you might enjoy “taking care of people” or being “active,” MasculinUTwarns that many of these attributes are actually dangerous, claiming that “traditional ideas of masculinity place men into rigid (or restrictive) boxes [which]... prevent them from developing their emotional maturity.”
“If you are a male student at UT reading this right now, we hope that learning about this helps you not to feel guilty about having participated in these definitions of masculinity, and instead feel empowered to break the cycle!” the program offers.
https://pjmedia.com/trending/university-of-texas-to-treat-masculinity-as-a-mental-health-issue////யு.எஸ்.பெண்ணியம் வேறு ;நம் நாட்டு பெண்ணியம் வேறு.///
பெண்ணியம் குறித்து விவாதிக்கும் பொழுது, முதலில் பெண்ணியம் என்றால் என்ன என்று அதை வரையறுத்து, அதன் புரிதலுடன் விவாதிப்பது பொருள் கொண்டதாக இருக்கும்.பாலின வேறுபாட்டால் உரிமை இழப்பது, கட்டுப்படுத்தப்படுவது, அந்த வேறுபாட்டால் பொருள் பதவி உரிமை ஆகியன கைவிட்டுப்போவது குறித்த விழிப்புணர்வுடன் அதனை மாற்றியமைக்கும் நோக்கில் பெண்ணுக்கு சமவுரிமை வேண்டுவது பெண்ணியம்.குறிப்பாகப் பெண்ணியம் என்றால் என்னவென்று ஒவ்வொருவரும் தங்கள் கருத்தை தெளிவாகக் கூறிவிட்டு தொடர்வது சரியாக இருக்கும்.நான் பார்த்தவரை ஆண்களுக்குச் சமமாக உரிமை எதிர்பார்க்கிறார்கள் என்று கண்டிப்பது ஒருசிலரின் பெண்ணிய வரையறை. அதில் என்ன தவறு? என்று மறுகேள்விதான் கேட்கப்பட வேண்டும்.
ஆண்கள் தங்கள் கோணத்தில் வரையறுத்து இது பெண்ணியம் என்று சொல்வதைப் பெண்கள் ஏற்றுக் கொண்டு அதே வழியிலேயே நாட்டுக்கு நாடு, ஊருக்கு ஊர் பெண்ணியம் என்பது வேறுபடுகிறது அவர்கள் என்று இழுப்புக்குப் பதில் கொடுத்துக் கொண்டிருப்பது பெண்ணியம் அல்ல.
பொறுக்கியெடுத்த ஓரிரு மாறுபட்ட நிகழ்வைக் காட்டி, அடுத்தவர் கருத்தை திசை திருப்பும் வகையில் பெண்ணியச் சிந்தனை என்பது கேவலமானது என்ற கோணத்தை முன்னிறுத்தும் வகையில் ஒரு கோணம் வைக்கப்பட்டால் அதன் வழியே சென்று பெண்ணியம் என்ன என்பதை விளக்கிக் கொண்டிருப்பது, அதுவும் பெண்கள் செய்வது குறித்து இங்கு சிந்திக்க வேண்டும்.
உணர்வுகள் அனைவருக்கும் ஒன்றே, எல்லோருக்கும் பசிக்கும், தாக்கினால் வலிக்கும் போன்ற அடிப்படை உயிரின வேறுபாட்டில் ஒருவருக்கும் மறுக்கப்படும் உரிமை, அல்லது வாய்ப்பு குறித்து பேசினால் அது பெண்ணியம்.அமெரிக்காவோ... ஆப்பிரிக்காவோ பெண்கள் அனைவரும் ஒருவரே, உணர்ச்சிகள் வாழ்வின் எதிர்பார்ப்புகள் ஒன்றே. அந் பரந்த உரிமை/சமத்துவம் எதிர்பார்ப்புக் கற்றையில் யார் எந்த அளவு தங்கள் உரிமைகளைப் பெற்றுள்ளார்கள் என்பதே வேறுபாடு.
சொத்தில் உரிமை இல்லை, திருமணத்தில் உரிமை இல்லை, குழந்தையாகப் பெண் பிறந்தாலோ உயிரே இல்லை என்பது போன்றவை ஒரு இடத்தில் கூக்குரலாக இருக்கும்.
அதற்குப் போராட வேண்டிய நிலையே மற்றொரு நாட்டில் தேவையிருக்காது. கல்வி, சொத்து, உரிமை, மருத்துவ உதவி, அதிகாரப் பதவி போன்றவை பெண் என்ற அடிப்படையில் மறுக்கப்படுவது நாட்டுக்கு நாடு கலாச்சாரப் பின்னணியில் அளவில் மாறுபடும். பெண்களுக்கு அது சமமாகக் கிடைப்பதற்கு வழியில் இடையூறு செய்பவர்கள் பழமையில் ஊறி அவ்வாறு வளர்க்கப்பட்ட பெண்களாகவேயும் இருப்பார்கள்.
நிர்மலாதேவி..இங்கு நினைவு வரவேண்டும்.அதைவிட்டு பெண்கள் உரிமை கேட்பதை நையாண்டி செய்து கொண்டிருக்கும், அந்த உரிமைக்குரலைக் கேவலமாக சித்தரிக்கும் சூழ்ச்சி நிறைந்த செய்கைகளைக் கூர்ந்து நோக்காது அமெரிக்க பெண்ணியம், ஆஸ்திரேலிய பெண்ணியம் என்பது தேவையற்ற திசைதிருப்பும் முயற்சி.நேற்றுவரை பெண்கள் எப்படி உடை உடுத்தவேண்டும் என்று காட்ட, ஐபோன்-செல்போன் வாங்கி அதற்கு சேப்டி கார்ட் போடும் மகளுக்கு "தந்தை" அறிவுறுத்தும் வாட்சப் செய்திகள் பரப்பப்படுகின்றன. இதனைப் படித்த பெண்கள் பகிரமாட்ட்ர்கள் என்ற சீண்டுதல் வேறு பதிவின் இறுதியில் வைக்கப்படுகிறது.பெண்களின் உரிமையை மதிக்கும்படி வாழ மகனுக்கு அறிவுரை கூறும் கதைகளை ஆசீஃபா, மதராசா நிகழ்வுகளுக்குப் பின்னரும் இன்னமும் பார்க்க இயலவில்லை நான்.மாறாக, அது போன்ற செய்திகள் வந்தால் உடனே பெண்கள் உடை நடை போன்றவற்றை "பாதுகாப்பு" என்ற பெயரில் கூறிக் கட்டுப்படுத்தும் பதிவுகள்தான் வேகமெடுக்கின்றன.
இடத்திற்கு இடம் கலாச்சார பின்னணி மாறுபடும் என்பது தெரிந்தாலும் பெண்கள் அடிப்படையில் ஒன்று என்பது புரிந்து கொள்வது அடிப்படை.
அடுத்த நாட்டில் நிலைமையை நன்கு தெரிந்து கொண்டு வாழ்ந்தாலும், செர்ரி பிக்கிங் செய்து தங்கள் கோணத்தில் செய்திகளை வழங்குகிறார்கள் என்பது குறித்து தெளிவாக இருப்பது தேவை.அமெரிக்காவில் பிரஸ்ட் பம்ப வைத்து தாய்ப்பாலை குழந்தைக்குச் சேகரித்து வைத்துவிட்டு வேலைக்குப் போகும் பெண்கள் இருக்கிறார்கள், அது போன்ற கருவிகள் வழக்கத்தில் உள்ள நாடு அமெரிக்கா என்று அறிவது முக்கியம்.வணிகமயமான ஒரு நாட்டில் இது போன்ற கருவிகள், தயாரித்து இவ்வளவு விற்கப்படுகிறது என்றால், அதற்கு வாடிக்கையாளர் இல்லாமல் நடக்காது என்ற அடிப்படைப் புரிதல் இருக்க வேண்டும்.தாங்களே தங்கள் போக்கில் அடுத்த நாட்டுப் பெண்களை உண்மை அறியாது கூறுவதையோ , அல்லது தங்கள் கொள்கைகளைத் திணிக்க அடுத்த கலாச்சார வாழ்வினரைக் கேவலப்படுத்தி, உண்மையை மறைத்து தங்கள் இனம் உயர்வு எனக் காட்டுவதோ தவறு.உண்மையான கேவலம், இறந்த கணவனுடன் பெண்ணை எரிப்பது, widows of vrindavan என்ற கலாச்சாரம் வேண்டுபவர்கள் அறுத்துக் கட்டுபவர் என்று மறுமணத்தை நையாண்டிதான் செய்வார்கள்.அப்படிச் செய்தால்தான் பெண்களின் மறுமண உரிமை துளிர் விடாது. கேவலம் என்று புறக்கணிக்கும் சூழ்நிலை உருவாகும்.இதனால் யாருக்கு நன்மை என்பதைச் சிந்திக்க மறுக்கும் கூட்டம் பெண்ணியம் என்பதன் அரிச்சுவடி கூட படிக்கத் தகுதியற்ற ஒன்று.
காலச்சாரக் காவலர்கள் பெண்கள் மட்டும் என்று எண்ணுவதை முதலில் நிறுத்த வேண்டும். காலச்சாரம் ஆடையில் இல்லை. அதுவும் அது பெண்களின் ஆடையில் மட்டும் இல்லை. காலச்சாரம் மனிதர்களை நடத்தும் விதத்தில் இருக்கிறது. மாட்டைக் காப்பாற்றுகிறேன் என்று மனிதரைக் கொள்ளும் நாட்டிற்கு கலாச்சாரக் காவலர்கள் பெண்களின் நடை உடை பாவனையா?நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும் திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால் செம்மை மாதர் திறம்புவது இல்லையாம் என்பதை வெறுப்பவர்கள்தான் பெண்களின் அச்சம் மேடம் நாணம் பயிர்ப்பு குறித்து அதிகம் பேசுவார்கள்.
![]() | ||
இங்கு அமெரிக்காவில் பட்டமளிப்பு விழாவைப் பல்கலைக்கழகங்களில் அன்னையர் தினம் அன்று வைக்க விரும்புவார்கள். இதுவும் யூஎஸ் பெண்ணியம்.பாஸ்போர்ட் வாங்கவேண்டுமென்றாலோ, இன்னமும் பிள்ளைகள் குறித்த சில முக்கியமான ஆவணங்களில் கையெழுத்து வேண்டுமென்றாலோ அம்மா கையெழுத்தும் இல்லாமல் அனுமதி பெற முடியாது என்பது யூஎஸ் பெண்ணியம்.
இங்கு அமெரிக்காவில் பட்டமளிப்பு விழாவைப் பல்கலைக்கழகங்களில் அன்னையர் தினம் அன்று வைக்க விரும்புவார்கள். இதுவும் யூஎஸ் பெண்ணியம்.
Tom Cruise and Katie Holmes
Taking a page out of Larry Fortensky's book, Katie Holmes used a prenup to make marrying Tom Cruise a more lucrative proposition. The details: for each year the couple stays married, Holmes collects $3 million or they've been together for 11 years, whichever comes first. The best part? If they do last that long, the prenup is null and void and Holmes receives half of Cruise's entire fortune. One has to wonder what attorney told Cruise this would be a good idea!
6. Catherine Zeta-Jones and Michael Douglas
Next in the "making marriage pay" category is Catherine Zeta-Jones. Her prenup with "Wall Street" star Michael Douglas entitles her to $2.8 million per each year the marriage remains in effect. When Zeta-Jones was asked about the agreement she had the following to say:
"I think prenups are brilliant," Zeta-Jones chirps in the January issue of Vanity Fair, admitting that under her prenup with Douglas, "I get taken care of very well."
Prenups for pets, babysitters, and pool guys
Strange as it may sound, some prenuptial agreements even cover what happens to pets: both dead and alive! According to attorney Leon F. Bennett, who has represented Marlon Brando, Kelsey Grammer and Dennis Hopper, this is quite common. From Newsday:
Bennett once handled a case that dictated the destination of a couple's taxidermied horse. Even gardeners, baby sitters and pool men have been addressed.
பெண்ணிடம் வரதட்சிணை வாங்குவது, பெண் பிறந்தால் இனி வீட்டுக்கு வராதே என்பது, கள்ளிப்பால் ஊற்றிக் கொன்றுவிடுவது போன்றவைதான் அசிங்கமும், அவமானமும் ஆகும்
இந்தியாவில் ப்ரீ நுப்டியல் ஒப்பந்தம் வந்தால் நல்லதுதான். வரவேற்கப்பட வேண்டிய மாறுதலாக இருக்கும்.
2018-05-02 19:03 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:பெண்ணிடம் வரதட்சிணை வாங்குவது, பெண் பிறந்தால் இனி வீட்டுக்கு வராதே என்பது, கள்ளிப்பால் ஊற்றிக் கொன்றுவிடுவது போன்றவைதான் அசிங்கமும், அவமானமும் ஆகும்நிச்சயமாக.ஆனால் இதற்கான தீர்வு கல்யாணமே வேண்டாம் என்பதும், குடும்ப அமைப்பு வேண்டாம் என்பதும், ஆண்கள் எனக்கு அவசியமே இல்லை என்பதும் அல்ல.
திருமணத்திற்கு பிறகு பெரிய பணக்கார ஆண்கள், மற்றொரு இளவட்டம் கிடைத்துச் சென்று ஏமாற்றாமல் இருக்க பெண்கள் செய்ய வேண்டிய வேலை ப்ரீ நுப்டியல்.
அமெரிக்காவில் ஐந்து கல்யாணம் செய்தால் அரசனும் போண்டியாவான். பெண்களுக்குப் பாதுகாப்பு உள்ள எதையும் வெறுப்பது நமது மக்கள் வழக்கம்.
On Wednesday, May 2, 2018 at 5:08:15 PM UTC-7, செல்வன் wrote:2018-05-02 19:03 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:பெண்ணிடம் வரதட்சிணை வாங்குவது, பெண் பிறந்தால் இனி வீட்டுக்கு வராதே என்பது, கள்ளிப்பால் ஊற்றிக் கொன்றுவிடுவது போன்றவைதான் அசிங்கமும், அவமானமும் ஆகும்நிச்சயமாக.ஆனால் இதற்கான தீர்வு கல்யாணமே வேண்டாம் என்பதும், குடும்ப அமைப்பு வேண்டாம் என்பதும், ஆண்கள் எனக்கு அவசியமே இல்லை என்பதும் அல்ல.பெண்ணியம் என்றால் என்னவென்று தெரியாதவர்களுடன் பேசுவது வீண் வேலை.
2018-05-02 19:20 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:திருமணத்திற்கு பிறகு பெரிய பணக்கார ஆண்கள், மற்றொரு இளவட்டம் கிடைத்துச் சென்று ஏமாற்றாமல் இருக்க பெண்கள் செய்ய வேண்டிய வேலை ப்ரீ நுப்டியல்.அதே ஒரு ஆண் "உனக்கு எந்த ஜீவனாம்சமும் இல்லை." எனகூட ப்ரீநூபிடல் அக்ரிமெண்ட் போடமுடியும். சட்டபடி வரும் சொற்ப உரிமையும் பறிபோகும்.
ஆணும் பெண்ணும் சமம் என்பதுதான் பெண்ணியம் என டிக்சனரையில் போட்டுள்ளது. அவ்வளவுதான்., அதான் பெண்ணியம் என மட்டையடி அடிப்பது யதார்த்தத்தை புரிந்துகொள்ளாத nuance அற்ற நிலையையே காட்டுகிறது
On Wednesday, May 2, 2018 at 5:24:20 PM UTC-7, செல்வன் wrote:2018-05-02 19:20 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:திருமணத்திற்கு பிறகு பெரிய பணக்கார ஆண்கள், மற்றொரு இளவட்டம் கிடைத்துச் சென்று ஏமாற்றாமல் இருக்க பெண்கள் செய்ய வேண்டிய வேலை ப்ரீ நுப்டியல்.அதே ஒரு ஆண் "உனக்கு எந்த ஜீவனாம்சமும் இல்லை." எனகூட ப்ரீநூபிடல் அக்ரிமெண்ட் போடமுடியும். சட்டபடி வரும் சொற்ப உரிமையும் பறிபோகும்.செய்யட்டுமே, அடுத்தவர் பணத்திற்கு ஏங்கி ஏமாற்ற நினைக்கும் பெண்களும் காணாது போவார்கள்.அது நல்ல முறை ஆணையும் பாதுகாக்கும்.இல்லை உண்மையாகவே காதலிக்கும் பெண்ணிற்கும், தரமுடியாது என்று சொல்லும் ஆணின் உள்நோக்கம் என்னவாக இருக்கும் என்று சிந்திக்க ஒரு வாய்ப்பும் கிடைக்கும்.வெட்டுச் சீட்டாட்டம் என்று தெரிந்து ஒப்பந்தம் போட்டால் யாரும் எதுவும் செய்ய வழியில்லை.அது எல்லோருக்கும் நன்மை பயக்கும் ஒப்பந்த முறை.மற்றும் அது பணம் என்ற அடிப்படையில் மற்றும் பார்க்கப்படுவதல்லஒருவர் உரிமையில் மற்றவர் தலையிடுவது எதுவரை என்று விளக்கம் அளித்து ஒப்பந்தம் செய்து கொள்வது. பின்னால் ஏமாற்றப் பட்டோம் என்ற உணர்வு வரக்கூடாது என்ற முன்னெச்சரிக்கை உடன்பாடு.
அடடா பரிதவிக்கும் இந்தியப் பெண்கள் வாழ்வில் என்ன ஒரு அக்கறை. புல்லரிக்கிறது.
காப்பியெல்லாம் அடிக்க வேண்டியத் தேவை இந்தியப் பெண்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை.
ஆண்களைவிட அதிக அளவு படிப்பும் அதிக எண்ணிக்கையில் படித்த பெண்கள் உள்ளனர். இந்தியப் பெண்கள் யாரும் பாப்பாக்கள் அல்ல. அவர்கள் திட்டம் போட்டுத் தங்களுக்கு எது தேவை தேவையில்லை என முடிவெடுப்பார்கள். அவர்கள் போக்கில் தடையிடாமல் இருந்தாலே போதும்.
அயல்நாட்டுக் கூகுள் உருவாக்கிய தளத்தைப் பயன்படுத்திக் கொண்டே மேலைநாட்டு வழக்கங்களை ஈயடிச்சான் காப்பி அடித்துக் கொண்டுவரும் விசயத்தைத் தான் இழையில் கண்டித்து வருகிறேன் எனக் கூறுவதை ... நானும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
Google LLC[5] is an American multinational technology company that specializes in Internet-related services and products, which include online advertising technologies, search engine, cloud computing, software, and hardware. Google was founded in 1998 by Larry Page and Sergey Brin while they were Ph.D. students at Stanford University, California.
///ஏன் ப்ரிநூபிடல் ஒப்பந்தம் இந்தியாவுக்கு வரவேண்டும் என்கிறீர்கள்? அது காப்பி அல்லாமல் என்ன?////
யார் இவர்கள்?
தங்களுக்கு வேண்டியதை பின்பற்றும் இக்காலப் பெண்கள்
///கூகிள் இந்தியா என்பது இந்திய கம்பனி என்பதாவது தெரியுமா, தெரியாதா? :-)///Google LLC[5] is an American multinational technology company that specializes in Internet-related services and products, which include online advertising technologies, search engine, cloud computing, software, and hardware. Google was founded in 1998 by Larry Page and Sergey Brin while they were Ph.D. students at Stanford University, California.
///ஏன் ப்ரிநூபிடல் ஒப்பந்தம் இந்தியாவுக்கு வரவேண்டும் என்கிறீர்கள்? அது காப்பி அல்லாமல் என்ன?////
யார் இவர்கள்?
தங்களுக்கு வேண்டியதை பின்பற்றும் இக்காலப் பெண்கள்
2018-05-02 22:05 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:///கூகிள் இந்தியா என்பது இந்திய கம்பனி என்பதாவது தெரியுமா, தெரியாதா? :-)///Google LLC[5] is an American multinational technology company that specializes in Internet-related services and products, which include online advertising technologies, search engine, cloud computing, software, and hardware. Google was founded in 1998 by Larry Page and Sergey Brin while they were Ph.D. students at Stanford University, California.
இந்தியாவில் பயனாகும் கூகிள் தேடுபொறி கூகிள் இந்தியாவினுடையது. இந்திய அரசின் கட்டுபாட்டில் இருப்பதுஅமெரிக்காவில் பயனாகும் கூகிள் தேடுபொறி கூகிள் அமெரிக்காவினுடையது. அமெரிக்க அரசின் கட்டுபாட்டில் இருப்பது
///ஏன் ப்ரிநூபிடல் ஒப்பந்தம் இந்தியாவுக்கு வரவேண்டும் என்கிறீர்கள்? அது காப்பி அல்லாமல் என்ன?////
யார் இவர்கள்?
தங்களுக்கு வேண்டியதை பின்பற்றும் இக்காலப் பெண்கள்
இவர்கள் தான் ப்ரிநூபிடல் ஒப்பந்தத்தை புறக்கணித்துவிட்டார்களே? பிறகு ஏன் அதை பிடித்துக்கொண்டு "இந்தியாவுக்கு வேண்டும், வேண்டும்" என்கிறீர்கள்? :
உண்மையைத் திரிக்கும் முயற்சியை ஊக்குவித்துத் தொடர்வதில் எனக்கு உடன்பாடில்லை.
இவர்கள் தான் ப்ரிநூபிடல் ஒப்பந்தத்தை புறக்கணித்துவிட்டார்களே? பிறகு ஏன் அதை பிடித்துக்கொண்டு "இந்தியாவுக்கு வேண்டும், வேண்டும்" என்கிறீர்கள்? :தேவை தரவுகள்,தரவுகள் அளிக்க வேண்டிய பிற பட்டியலுடன் இதையும் இணைத்து 'file 13' இல் வைக்கவும்
50 பவுன் நகை வேண்டும், ஐம்பது லட்சம் வேண்டும், அப்பொழுதுதான் கழுத்தில் தாலி ஏறும் என்பதெலாம் "திருமணத்திற்கு முன் போடும் ஒப்பந்தம்" எல்லாம் ஒப்பந்தமே இல்லையா?என்னே என் அறியாமை!!!
On Wednesday, May 2, 2018 at 8:31:37 PM UTC-7, செல்வன் wrote:2018-05-02 22:27 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:50 பவுன் நகை வேண்டும், ஐம்பது லட்சம் வேண்டும், அப்பொழுதுதான் கழுத்தில் தாலி ஏறும் என்பதெலாம் "திருமணத்திற்கு முன் போடும் ஒப்பந்தம்" எல்லாம் ஒப்பந்தமே இல்லையா?என்னே என் அறியாமை!!!வரதட்சிணை ஒப்பந்தம் யார் போடுகிறார்கள்? பெண்ணும், மாப்பிள்ளையுமா அல்லது சம்பந்திகள் இருவரும் அவர்களுக்குள் போட்டுகொள்வதா?சட்டபடி அது செல்லுபடி ஆகுமா?இந்தியாவில் சட்டத்திற்கும் மதிப்பிருகிறதா? அப்புறம் இந்தக் காவிரி என்பது .. சரி ...சரி ...அது இசையினியன் இழை...இன்றைய இந்தியாவில் திருமணங்கள் ஆகப் பெரும்பான்மை பெற்றோர் முன்னெடுப்பதில் உள்ளது.அதனால் ப்ரீ நுப்டியல் என்பது அதுதான்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
On Wed, May 2, 2018 at 10:43 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
On Wednesday, May 2, 2018 at 8:31:37 PM UTC-7, செல்வன் wrote:2018-05-02 22:27 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:50 பவுன் நகை வேண்டும், ஐம்பது லட்சம் வேண்டும், அப்பொழுதுதான் கழுத்தில் தாலி ஏறும் என்பதெலாம் "திருமணத்திற்கு முன் போடும் ஒப்பந்தம்" எல்லாம் ஒப்பந்தமே இல்லையா?என்னே என் அறியாமை!!!வரதட்சிணை ஒப்பந்தம் யார் போடுகிறார்கள்? பெண்ணும், மாப்பிள்ளையுமா அல்லது சம்பந்திகள் இருவரும் அவர்களுக்குள் போட்டுகொள்வதா?சட்டபடி அது செல்லுபடி ஆகுமா?இந்தியாவில் சட்டத்திற்கும் மதிப்பிருகிறதா? அப்புறம் இந்தக் காவிரி என்பது .. சரி ...சரி ...அது இசையினியன் இழை...இன்றைய இந்தியாவில் திருமணங்கள் ஆகப் பெரும்பான்மை பெற்றோர் முன்னெடுப்பதில் உள்ளது.அதனால் ப்ரீ நுப்டியல் என்பது அதுதான்.ஆக பெற்றொர் போட்டுகொள்ளும் வரதட்சிணை ஒப்பந்தங்கள் தான் ப்ரீநூபிடல் ஒப்பந்தங்கள். அவற்றுக்கு சட்டபூர்வ் அங்கீகாரம் அளிக்கவேண்டுவது தான் பெண்ணியம்...நான் சரியா தான் புரிந்துகொண்டுள்ளேனா???
--ப்ரீ நுப்டியலில் உள்ள கன்டென்ட் என்ன என்பது அந்தந்த நாட்டில் வாழும் பெண்கள் வாழ்வின் நிலைக்குச் சான்று இந்தியாவோ...அது அமெரிக்காவோ ...இல்லை அன்டார்டிக்காவோ
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
இன்று தொலைகாட்சி விளம்பர மோகம்.
///குடும்ப அமைப்பு குலையாமல் இருப்பது ஆண் பெண் இருவர் பொறுப்பு./// themozhi wrote on 2.5.18இது நூற்றில் ஒரு வார்த்தை .அதாவது நூற்றுக்கு நூறு உண்மை.///அது பெண்ணியத்தின் கீழ் வருவதில்லை ///ஒரு பெண் விட்டு விடுதலையாக முடிவு செய்யும் போது அது பெண்ணியத்தின் கீழ் தான் வருகிறது . இல்லை என்று சொல்வது தப்பிக்க நினைக்கும் மனப்போக்கு.
///ஏன் வீட்டில் இருக்கும்பொழுது இப்பெண்கள் வழக்கமான முறையில்தானே குழந்தைக்குப் பாலூட்டுகிறார்கள். தாய் சேய் உறவு இதில் கேள்விக்குறியாகவோ, கேலியாக்கவோ வழியில்லையே. அறிவியல் தொழில்முறை வளர்ச்சியில் தங்கள் தாய்ப்பாலையே சேமித்து குழந்தைக்கு வைக்க முடியும் என்ற நிலையை வாய்ப்பாகப் பயன் படுத்திக் கொள்வதில் தவறென்ன? வாழ்வையும் வேலையையும் தங்கள் தேவைக்கேற்ப கையாளுகிறார்கள் என்பதுவே புரிந்து கொள்ளப்பட வேண்டியது. நானும் என்னுடன் பணிபுரிந்த 'ஹெதர்' என்ற பெண்ணுக்கு குழந்தை பிறந்த பொழுது பிரஸ்ட் பம்ப் ஒன்றுதான் பரிசளித்தேன், அவர் அதை வாங்க வேண்டும் என்றும் அது குறித்தும் அடுத்தவரிடம் கேள்விகள் கேட்டுக் கொண்டிருப்பதைக் கவனித்து அதையே பரிசளிக்க எண்ணினேன்.///வாழ்வையும் வேலையையும் தேவைக்கேற்ப கையாளும் போது தாய் சேய் உறவுக்குரிய இடம் பின்னுக்குத் தள்ளப்படுவது ஏன்?அறிவியல் தொழில் முறை வளர்ச்சி மனித உறவுகளை பாதிப்பதற்கு ஏன் இடம் கொடுக்க வேண்டும்?வீட்டில் இருக்கும்போது வழக்கமான முறையில் பாலூட்டும் பெண்கள் அன்றாடம் வேலைக்குப்போகும் போது குழந்தைப்பராமரிப்பை இரண்டாம் பட்சமாக்குவது ஏன்?பட்டவர்த்தனமாகக் கேட்கிறேன்.நானும் 40 ஆண்டுகாலம் பணிக்குச் சென்றவள். இரண்டு மக்களைப் பெற்று வளர்த்து இன்று மூன்று பேரன்பேத்திகளைக் கொஞ்ச பிள்ளைப்பேறு பார்த்தவள்.எல்லாம் பணிக்காலத்தில் தான்.காலையிலோ /மாலையிலோ ---எப்போது வேலைக்குக் கிளம்புவதாக இருந்தாலும் அரை மணி நேரத்திற்கு முன் பிள்ளைக்குப் பாலூட்டுவது தானே பெற்றவளின் முதல் கடமையாக இருக்க வேண்டும். அப்படி நினைத்து ---அதற்கேற்ப தனது work scheduleஐ மாற்றிக் கொண்டால் இந்த இயந்திர மயமான தாய்ப்பாசம் இல்லாமல் குழந்தைக்கு வயிறு நிறைவதுடன் உண்மையான மனநிறைவு கிடைக்குமே.புட்டிப்பால் கொடுப்பதைப் பற்றிச் சுட்டியுள்ளீர்கள்.அதுவும் அறியாமையின் விளைவாகத் தானே நிகழ்ந்தது. அதற்கு யாரும் பெண்ணியக்கொடி பிடிக்கவில்லை .புட்டிப்பால் கொடுப்பது பெண்ணுரிமை என்று............ சொல்லியிருந்தால் அதுவும் கண்டனத்திற்குரியதே.
கண்மணி
///உங்கள் பேரக்குழந்தைகளோ, உங்கள் குழந்தைகளோ கூட்டுக் குடும்பத்தில் பாட்டிகள் (கவனிக்கவும் தாத்தாக்கள் அல்ல) கவனிப்பில் பராமரிக்கப்பட வாய்ப்பிருந்திருக்கலாம். ///ஒன்றுமில்லை தேமொழி ---உங்களுக்கு அனுபவமின்மைஇன்னும் 10 ஆண்டுகள் கழித்து உங்கள் கொள்கை மாறும்.அப்போது தனிக்குடித்தனம் நடத்தினால் கூட --------தாத்தா எப்படி பேரக் குழந்தைகளோடு ஒன்றுவார் என்று புரியும்.யு.எஸ்.வாழ்க்கை எப்படியோ ?!------இப்போது என் மகன் தனிக்குடித்தனம் தான் ......ஆனாலும் நீங்கள் மேலே சொல்லியிருக்கும் கருத்து அடியோடு தவறு.வயோதிகத்தில் இந்த இன்பத்திற்கு மேல் வேறு என்ன வேண்டும்?அதனால்தான் யு.எஸ்.பெண்ணியம் வேண்டாம் என்கிறேன்.கண்மணி
///புத்தர் துறவு வாழ்வு மேற்கொள்ளக் குடும்பத்தை விட்டு வெளிநடந்ததை எந்த இயத்தில் வகைப்படுத்திப் பார்ப்பீர்கள்?அதற்குக் கூறும் பதிலை மனநிம்மதி வேண்டி ஒரு பெண்ணும் தனது குடும்ப வாழ்வில் இருந்து வெளியேறும் சூழ்நிலைக்கு இணையாக ஒப்பிடலாம். இந்த இடத்திலும் ஆண் பெண் எடுக்கும் முடிவை நான் ஒருங்கே வைத்துப் பார்க்கிறேன்.///புத்தர் செய்த தவறை சாக்காகக் காட்டி; பெண்ணியம் என்ற பெயரில் பெண்கள் எல்லோரும் குடும்பத்தை உடைத்தால் அது சரி என்று ஆகி விடாது.பெண்ணியத்தை குடும்பத்தை உடைப்பதற்கு உரிய கருவியாகப் பயன்படுத்தக் கூடாது.
இங்கே ஓரோர் மனிதர் நாலு குழந்தையோடு மனைவியை நடுத்தெருவில் விட்டுவிட்டு இமயமலைக்கு ஓடிப் போய்விடுகிறார்கள். நாலு சம்ஸ்கிருத சுலோகங்களைக் கற்றுக்கொண்டு நாடெங்கும் பூஜிக்கத்த தக்க சாமியாராக வலம் வருகிறார்கள். இதில் நதிமூலம் ,ரிஷிமூலம் பார்க்கக்கூடாது என்று சொலவடை வேறு.புத்தர் குடும்பத்தைப் பிரிந்து வெளியேறிய ஆண் என்பது முற்றிலும் உண்மை..... அவர் வேறு பெண்ணைத் தேடிப் போகவில்லை; அவரிடம் குடி இல்லை;போதை இல்லை;... நோயைப் பார்த்தார்;இறப்பைப் பார்த்தார்;வயோதிகத்தைப் பார்த்தார்;மனநோய் மிகுந்தது......அமைதியைத் தேடி சீக்கிரமாகவே வனப்பிரஸ்தம் மேற்கொண்டார்......தனக்குப் பிறகு ஆட்சியில் அமர வேண்டிய வாரிசைப் பெற்றுக் கொடுத்த நிம்மதியில் வாழ்க்கையையே விட்டு விலகினார்.மனைவியையும் மகனையும் அவர்களுக்கு உரிமை உடைய அரண்மனையில் விட்டுவிட்டுத் தான் துறந்தார்.இங்கே பாதிக்கப்பட்ட அவரது மனைவிக்கும் குழந்தைக்கும் ஒரு பிடிமானம் இருந்தது.புத்தர் தான் மட்டும் அரண்மனையில் இருந்துகொண்டு மனைவியையும் மகனையும் ஓட்டி விட்டிருந்தால் அவரைச் சான்றுகாட்டிப் பேசலாம் .ஒரு மனநோயாளி செய்த தவறை நம் இயலாமைக்குச் சப்பைக்கட்டு கட்ட துணைக்கு அழைக்கக் கூடாது.
///இங்கே சட்டப்படி குடும்ப விடுப்பு (maternity leave) மூன்று மாதங்கள். குழந்தை பிறக்கும் நாள் வரை வேலை செய்துவிட்டு, குழந்தை பிறந்த மூன்று மாதங்களுக்கு விடுமுறையைப் பயன்படுத்தி தாய்ப்பால் கொடுத்து இரவு, பகல் என்று பராமரித்துவிட்டு, அதற்குப் பிறகு குழந்தை திட உணவு உட்கொள்ளும் காலத்தில் பால் கொடுக்கும் இடைவெளி நீண்ட பிறகு பணிக்குத் திரும்பும் பெண்களுக்கு இந்தப் பழிச்சொல் தேவைதானா என்பது எனது கேள்வி. ///மறைந்த முதல்வர் பெண் என்பதாலோ .....என்னவோ கொஞ்சம் பிள்ளை வளர்ப்பதற்கு நல்லது செய்தார்......மகப்பேறு விடுப்பை 6மாத காலமாக்கினார்.குழந்தை பிறக்கும் நாள்வரை வேலை செய்வது தான் சுகப்பிரசவத்திற்கு நல்லது.ஆரோக்கியமில்லாத தாய்க்குத்தான் பெட்ரெஸ்ட் தேவைதாய்ப்பால் கொடுத்து இரவுபகல் பிள்ளையைப் பராமரிப்பதை சொல்லிக் காட்ட வேண்டிய தேவை என்ன?அது ஆண்டாண்டு காலமாக நடந்து கொண்டுதானே இருக்கிறது.எது பழிச்சொல்?பிள்ளைக்குத் தாய் வேலைக்குச் செல்லுமுன் பால் கொடுத்தால் என்ன என்று கேட்பதா?
ஒருநாள் வேலையிலிருந்து திரும்பி மறுநாள் வேலைக்குச் செல்லும்வரை ஒழுங்காக 3 மணி நேரத்திற்கு ஒருமுறை பாலூட்டியிருந்தால் (தூங்கும் நேரம் தவிர) பிள்ளைக்கு தேவையான திட உணவே போதுமானதல்லவா?இங்கே எல்லாம் அப்படித்தான் நடக்கிறது.தவிரவும் குழந்தைக்கு தாயின் அரவணைப்புக்கும் பிறரது கையாளலுக்கும் நன்கு வேறுபாடு தெரியும்.வேலைக்காரி ஊட்டி வளர்க்கும் பிள்ளை வேலைக்காரியிடம் தான் ஒட்டுகிறது என்று இங்கு என்னிடம் நிறையபேர் அழுதிருக்கிறார்கள் .அறிவியல் சாதனம்(இயந்திரம் ) ஊட்டி வளர்க்கும் பிள்ளை யாரிடம் ஓட்டும்?அதுவும் இயந்திரத்தன்மை பெற்றுவிடாதா?இந்தத் தொல்லையிலிருந்து விடுபடத்தான் என் மகன் பிறந்தவுடன் 3ஆண்டுகள் சம்பளமில்லா விடுப்பு எடுத்தேன்.break of service ஆனாலும் பரவாயில்லை .4இன்க்ரிமெண்ட் கட் ஆனது.எடுத்த விடுமுறையில் வீணாக்காமல் பிஹெச் .டி .தொடங்கினேன்.அரசு குறிப்பிட்ட காலத்திற்கு முன் ஆய்வை முடித்ததால் நஷ்டமான இன்க்ரிமெண்ட் சரியாகி விட்டது.எனக்கு உங்கள் breast pump பற்றியும் அதை பயன்படுத்தும் முறை பற்றியும் ரொம்பத் தெளிவு இல்லை .
///ஆனால் அவ்வாறு பார்த்து பார்த்து வளர்த்த பச்சைக்குழந்தை; பிறந்த கொஞ்ச நாளுக்குத் தாயை உறங்கவே விடாமல் செய்து, இடைவிடாமல் அழுது மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை படுக்கையை நனைத்து (டையாப்பர் மாற்றி), தாய்ப்பால் கொடுக்கப்பட்டு பார்த்துப் பார்த்து வளர்த்தவர்களின் தாய்கள்தான் இன்று முதியோர் இல்லத்திலும் விடப்படுகிறார்கள் என்றால்.....தாய்கள் பலன் எதிர்பார்க்காமல் கடமைச் செய்தார்கள்/செய்கிறார்கள்.அந்தத் தாய் சேய் உறவு என்ன பலனளித்தது என்றும் நாம் வாழும் காலத்திலேயே அறிந்து கொள்ள நல்ல வாய்ப்பும் கிடைக்கிறது.அதனால் அந்த மாயையில் இருந்து விடுபடுவோம்.///குழந்தை பெற்றால் கொஞ்ச நாளைக்குத் தூக்கம் கெடத்தான் செய்யும்.இதை இப்போது சொல்லிக் காட்ட வேண்டிய தேவை என்ன?தாய் சேய் உறவு மாயையா???!!!
தேமொழி ---உங்கள் அம்மாவுக்கும் உங்களுக்கும் இடையில் இருக்கும் உறவு மாயையா?நீங்களோ உங்கள் உடன்பிறந்தவர்களோ பெற்றோரை சுமையாகக் கருதி ஒதுக்கினீர்களா?இந்தத் தலைமுறையில் அந்த எண்ணிக்கை மிகுதியாவது கலாச்சாரச் சீரழிவைக் காட்டுகிறது.தனிக்குடித்தன அவலத்தின் மிச்சம்.
அது சீர்திருத்தப்பட வேண்டிய ஒன்று.பெண்கள் விவாகரத்து வாங்கி சுதந்திரமாக வெளியேறியவுடன் அந்தச் சிக்கல் தீர்ந்து விடுமா?நீங்கள் பெண்ணியத்துடன் பிரச்சினைகளையும் போட்டுக் குழப்புகிறீர்கள்.
கண்மணி
///உங்கள் பேரக்குழந்தைகளோ, உங்கள் குழந்தைகளோ கூட்டுக் குடும்பத்தில் பாட்டிகள் (கவனிக்கவும் தாத்தாக்கள் அல்ல) கவனிப்பில் பராமரிக்கப்பட வாய்ப்பிருந்திருக்கலாம். ///ஒன்றுமில்லை தேமொழி ---உங்களுக்கு அனுபவமின்மைஇன்னும் 10 ஆண்டுகள் கழித்து உங்கள் கொள்கை மாறும்.அப்போது தனிக்குடித்தனம் நடத்தினால் கூட --------தாத்தா எப்படி பேரக் குழந்தைகளோடு ஒன்றுவார் என்று புரியும்.யு.எஸ்.வாழ்க்கை எப்படியோ ?!------இப்போது என் மகன் தனிக்குடித்தனம் தான் ......ஆனாலும் நீங்கள் மேலே சொல்லியிருக்கும் கருத்து அடியோடு தவறு.வயோதிகத்தில் இந்த இன்பத்திற்கு மேல் வேறு என்ன வேண்டும்?அதனால்தான் யு.எஸ்.பெண்ணியம் வேண்டாம் என்கிறேன்.
கண்மணி
///அமெரிக்க வாழ்வு நிலை வேறு. பள்ளி முடிந்த பின்னர் ஆணோ பெண்ணோ தங்கள் சொந்தக்காலில் நின்று உழைத்து, தனது கல்விச்செலவை தானே ஏற்றுப்படித்து, வேலைக்குச் சென்று, பிற்காலத்திலும் பெற்றெடுத்த பிள்ளைகள் உதவியில் வாழ விரும்பாத மக்களின் கலாச்சாரம்.அவ்வாறு வாழும் கூட்டத்திலேயே தாய்க்குக் கொடுக்கப்படும் மதிப்பு நம் இந்தியப் பின்புலத்தில் காணவில்லை என்பதுதான், நினைவு தெரிந்த நாள் முதல் கொண்டு சுமார் ஒரு கால் நூற்றாண்டு இந்தியாவிலும் ஒரு கால்நூற்றாண்டு அமெரிக்காவிலும் வாழ்ந்த நான் ஒப்பிட்டு அறிந்து கொண்டிருப்பது.///ஒரு தற்காலிக அலை அடிப்பதை பெரிதுபடுத்துகிறீர்கள்.ஊடகமும் ,உலகமயமாக்கலும் ,நுகர்வோர் கலாச்சாரமும் நம் வாழ்க்கை முறையை பாதிக்கின்றன.அது நிரந்தரமில்லை.
பாட்டி தாத்தா மாணவர் குழு ஒன்றை நானே 4ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கி வைத்து விட்டுத்தான் ஒய்வு பெற்றேன் .பேரன்கள் பள்ளிகளில் தவறாமல் ஆண்டுதோறும் நடக்கும் பாட்டி தாத்தா கூட்டத்திற்குப் போகிறேன்.நீங்கள் நினைப்பது போல் இந்தியப் பின்புலம் கெட்டு விடவில்லை.சுருங்கிய உலகத்தில் ஊடகங்களின் தாக்கம் நம்மை பயமுறுத்துகிறது.அவ்வளவு சீக்கிரத்தில் இந்தப் பண்பாட்டை மாற்றி விட முடியாது........அதனால் தான் யு.எஸ்.பெண்ணியம் வேண்டாம்.
கண்மணி
///பெற்ற தாய்,தந்தையை இப்படி பார்க்கவேண்டிய நிலையை எண்ணி வருத்தமாக இருந்தது. ஆனால் இதுதான் அமெரிக்க பெண்ணியம்///தாய் வேறொருவரை மணந்து கொள்கிறார் சரி. அதாவது கல் புல் என்று கூறிக்கொண்டு ஒரு புருசன் பின்னால் போகாமல் வேறொரு புருசன் பின் போனார் என்கிறீர்கள், இதை அமெரிக்கப் பெண்ணியம் என்றும் சொல்கிறீர்கள் சரி. புரிந்து கொள்ள முயல்கிறேன்.தந்தையும் வேறொருவரை மணந்து கொள்கிறார் சரி. இதைப் பார்த்து வருத்தப்படும் பொழுது, அந்தத் துக்கத்தைப் பொருட்படுத்தாமல் இந்தத் தந்தையின் மறுமணம் எப்படி அமெரிக்க பெண்ணியத்தின் கீழ் வருகிறது என்றும் எனக்கு விளக்கவும்
சுருக்கமாக...கண்மணி கோணத்தில் போகிறீர்கள் ...."பெற்றோர் மணவிலக்கு பெறுவதால் குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள்" என்பது மையக் கருத்து.அதாவது பெற்ற குழந்தையுடன்; அம்மாவும் அப்பாவும் இணைந்து அவர்களை வளர்க்க வேண்டும்(திருமணம்/அல்லது புரிந்து கொண்ட ஒரு உடன்பாடு அது அவரவர் விருப்பம்)என்பது வேண்டப்படுவது.அவரவர் பிள்ளை அவரவர் பொறுப்புதான், குழந்தைகளின் எதிர்காலமும் பெற்றோர் பொறுப்புதான்.இதுவரை யாருக்கும் கருத்து வேறுபாடில்லை.இவ்வாறு இருவரும் பொறுப்பேற்கவேண்டும் என்று சொல்வதைவிட்டு இதற்குப் பெண்ணியத்தை இடையில் நுழைக்க என்ன தேவை.இதற்கு ஏன் குறிப்பாக பெண்களைச் சுட்டுகிறீர்கள்?அந்த அப்பாவின் மறுமணத்திற்கு பெண்ணியத்தைக் காரணம் சொன்னதை இன்னமும் விவரிக்கவில்லையே ...
பாலியல் சுதந்திரத்திற்கும் தனது குழந்தையை வளர்க்கும் கடமையைச் செய்வதற்கும் என்ன தொடர்பு.குடிப்பது எல்லாம் ஒளவை காலத்திலேயே இருந்ததே, களவு நெறி என்பதும்தான் தமிழகத்தில் இருந்ததே.இதை ஏன் இறக்குமதி என்கிறீர்கள்.
விளங்கவில்லை மீண்டும் விளக்குங்கள், பாலியல் சுதந்திரத்திற்கும் பெண்ணியத்திற்கும் என்ன தொடர்பு?
மீண்டும்.... ஒரு முறை முயல்வேன் ... கோனார் நோட்ஸ் எழுதுவதில் எனக்குத் திறமை இல்லை என்பது எனது பொறுப்புத் துறப்பு நிலைமைஒரு அப்பாவும் அம்மாவும் மணவிலக்கு பெறுகிறார்கள்.அந்த அம்மா பிறகு மறுமணம் செய்கிறார்.காரணம்: இந்தக் கொடுமைக்கெல்லாம் காரணம் "அமெரிக்கப்" பெண்ணியம்தான்...அந்த அப்பாவும் மறுமணம் செய்கிறார் .காரணம்: இந்தக் கொடுமைக்குக் காரணமும்கூட "அமெரிக்கப்" பெண்ணியம்தான்...எப்படி ? விளக்குக.
On Friday, May 4, 2018 at 2:59:23 PM UTC-7, செல்வன் wrote:2018-05-04 16:53 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:The feminist movements insisted and focused on the sexual liberation for women, both physical and psychological. The pursuit of sexual pleasure for women was the core ideology, which subsequently was to set the foundation for female independence.விளங்கவில்லை மீண்டும் விளக்குங்கள், பாலியல் சுதந்திரத்திற்கும் பெண்ணியத்திற்கும் என்ன தொடர்பு?பாலியல் சுதந்திரத்தை முன்னெடுத்ததே பெண்ணிய இயக்கங்கள் தான்விக்கிபிடியாவில் விளக்கமான கட்டுரை உள்ளதுCoinciding with second-wave feminism and the women's liberation movement initiated in the early 1960s, the sexual liberation movement was aided by feminist ideologues in their mutual struggle to challenge traditional ideas regarding female sexuality and queer sexuality.--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
On Fri, May 4, 2018 at 5:37 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:மீண்டும்.... ஒரு முறை முயல்வேன் ... கோனார் நோட்ஸ் எழுதுவதில் எனக்குத் திறமை இல்லை என்பது எனது பொறுப்புத் துறப்பு நிலைமைஒரு அப்பாவும் அம்மாவும் மணவிலக்கு பெறுகிறார்கள்.அந்த அம்மா பிறகு மறுமணம் செய்கிறார்.காரணம்: இந்தக் கொடுமைக்கெல்லாம் காரணம் "அமெரிக்கப்" பெண்ணியம்தான்...அந்த அப்பாவும் மறுமணம் செய்கிறார் .காரணம்: இந்தக் கொடுமைக்குக் காரணமும்கூட "அமெரிக்கப்" பெண்ணியம்தான்...எப்படி ? விளக்குக.இதற்கு அமெரிக்க பெண்ணியவாதிகள் முன்னெடுத்த ப்ரி செக்ஸ் கலாசரம் தான் காரணம் என முந்தைய மடல்களில் விளக்கபட்டுள்ளது
ஜென்டர் டிப்ரன்ஸ் எதுவும் இதில் கிடையாது. குந்தியை கணவனே பிற ஆண்களிடன் அனுப்பி பிள்ளை பெற வைக்கிறான். அவள் கற்புடையவளாக தான் கருதபட்டாள். ஐவரை மணந்த திருவுபதியும் பத்தினி தெய்வமாகவே வழிபடபடுகிராள்.
--
On Friday, May 4, 2018 at 2:59:23 PM UTC-7, செல்வன் wrote:2018-05-04 16:53 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:The feminist movements insisted and focused on the sexual liberation for women, both physical and psychological. The pursuit of sexual pleasure for women was the core ideology, which subsequently was to set the foundation for female independence.விளங்கவில்லை மீண்டும் விளக்குங்கள், பாலியல் சுதந்திரத்திற்கும் பெண்ணியத்திற்கும் என்ன தொடர்பு?பாலியல் சுதந்திரத்தை முன்னெடுத்ததே பெண்ணிய இயக்கங்கள் தான்விக்கிபிடியாவில் விளக்கமான கட்டுரை உள்ளதுCoinciding with second-wave feminism and the women's liberation movement initiated in the early 1960s, the sexual liberation movement was aided by feminist ideologues in their mutual struggle to challenge traditional ideas regarding female sexuality and queer sexuality.--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
எனக்கென்னவோ கீழுள்ள முறை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாகத் தோன்றுகிறது.
தேமொழி முன்னே நடந்த மடலாடல்களிலிருந்து நான் புரிந்து கொண்டது :யு.எஸ். பெண்ணியம் என்ற தொடர் உங்களுக்குத் பிடிக்கவில்லை.ஒரு குடும்பச்சிக்கலை மனைவி கோணத்தில் இருந்து பார்க்கிறீர்கள் /கணவன் கோணத்திலிருந்து பார்க்கிறீர்கள்
ஏற்கெனவே பெண்ணியம் பற்றிய எனது கொள்கையைக் கேட்டிருந்தீர்கள் ;நானும்சொல்லியிருந்தேன்.வருங்கால சந்ததிக்கு ஊறு நிகழாத வகையில் செயல்படும் பெண்ணியம் மட்டுமே ஏற்றுக்கொள்ளக்கூடியது .அதனால் தான் கணவன் மனைவி பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சியில் கூட குழந்தை குறுக்கே வருகிறது.அந்தக் குழந்தையின் எதிர்காலத்திற்கு எது நல்லதோ அதை சிந்தித்து முடிவு எடுக்க வேண்டிய கடமை பெற்றோர் இருவருக்கும் உண்டு. இதைத்தான் பாரம்பரியம் /பண்பாடு என்று சொல்கிறோம்.
நான் சிறுமியாக இருந்த காலத்தில் பாட்டிமார் பேசக் கேட்டிருக்கிறேன்.யாராவது புதிதாகத் திருமணம் ஆன பெண்ணைப் பற்றிப் பேசினால் அவர்களுக்குள் எழும் முதல் கேள்வி "உண்டாயிட்டாளா? சும்மா தான் இருக்காளா?" என்பது தான்...... ஒரு பெண் குழந்தைப்பேறு அடைந்து விட்டால் அவளது குடித்தனத்தில் என்ன பிரச்சினை வந்தாலும் அங்கே இணைக்கும்பாலமாகக் குழந்தை இருக்கும் என்னும் விளக்கமும் தெளிவும் நான் முதிர்ச்சி அடைந்த பிறகு தான் எனக்குப் புரிந்தது .நான் பிறந்து வளர்ந்து வாழ்ந்த சமூகத்தில் இது தான் ஆண்டாண்டு காலமாகப் போற்றப்படும் விழுமியம்/மதிப்பீடு .இதைத் தான் பெண்ணியத்திற்கும் அடிப்படை ஆதாரமாக/அஸ்திவாரமாக நான் கருதுகிறேன். இந்த கோட்பாட்டு வானத்தை மெத்திக் கட்டப்படும் கட்டிடம் தான் நிலையாக,வலுவாக இருக்கும் .இதிலிருந்து மாறுபட்ட கோணத்தை நீங்கள் கூறிய போது அதை யு,எஸ்.பெண்ணியம் என்றேன்.அந்தத் தொடர் பிடிக்கவில்லை என்றால் வாபஸ் வாங்கிக் கொள்கிறேன்.வேறு என்ன பெயர் நீங்கள் கொடுத்தாலும் எனக்கு ஆட்சேபனை இல்லை.
பெண்ணியம் உலகம் முழுமைக்கும் பொது...........ஒத்துக்கொள்ள வேண்டிய கருத்து............ஆனால் அதை நடைமுறைப்படுத்தும் போது சூழ்நிலைக்கும் பண்பாட்டுப் பின்னணிக்கும் ஏற்ப அது மாற்றமடைகிறது..........அதனால் தான் வேறு பெயர்கள் தேவைப்படுகின்றன.
பேசுகின்ற பெண்ணியம் ஏட்டளவில் இருக்கும்........வலுவற்றதாகும்..... வேற்று ஆரவாரமாகி விடக்கூடும் .செயல்படும் பெண்ணியம் தான் உயிரோட்டமுடையது.தமிழகப் பெண்ணியம் என்ற தொடருக்கு நேரான அமெரிக்க இயக்கத்திற்கு என்ன பெயர் ?சொல்லுங்கள் ;அதையே பயன்படுத்துகிறேன்.நீங்கள் தான் சரியான ஆள்;25 ஆண்டுக்காலம் தமிழகத்தில் .....இன்னோரு 25 ஆண்டுக்காலம் யு.எஸ்.இல்.....
செல்வன் அவர்கள் தன் மனதைப் பாதித்த தொலைக்காட்சி நிகழ்ச்சியிலிருந்து ஒரு நிஜமான சான்றாதாரம் காட்டினார்..........அவரது ஆதங்கத்தின் காரணம் அங்கே குழந்தையின் மன ஆரோக்கியம் பற்றியோ ; மகிழ்ச்சி பற்றியோ ;நிறைவு பற்றியோ பெற்றோர் இருவரும் நினைத்துப் பார்க்கவில்லை. வாழ்க்கை முழுவதும்; அந்தக் குழந்தைக்கு எத்தனை வயதானாலும் ; எவ்வளவு சம்பாதித்தாலும் ;எவ்வளவு உயரே உயரே பறந்தாலும் -----------நிரப்பப்படாத பள்ளமாக அந்த சோகமும் ஏக்கமும் இருக்கும்.
நீங்கள் உங்கள் பாலிசிக்கேற்ப வெற்றி பெற்ற சான்றாதாரம் காட்டுங்கள் -----------case study
நான் ரசித்த வெற்றிகரமான பெண்ணியவாதியை ---------x,yஎன்று பெயரிட்டு நானும் காட்டுகிறேன்.நாம் கலந்து மடலாடுவது தெளிவடையத்தானே.
கண்மணி
எந்த ஒரு முடிவிலும் யாருக்கு இழப்பு என்பது என்பது ஆராயத் தேவை. அது அவரவர் தனிப்பட்ட விருப்பத்தில் வரும்.செல்வன் மனதைப் பாதித்த அந்த நிகழ்வு, முதலில் பெற்றோருக்குத் தனித்தனியே விருந்து கொடுத்த பெண்ணைப் பாதித்ததா என்பதுதான் முதல் கேள்வியாக இருந்திருக்க வேண்டும்.அப்பொழுதும் அவர் பாதிக்கப்படவில்லை என்பதுதான் அவர் தொலைக்காட்சி வரை புகழ் பெற்ற நிலை காட்டுகிறது.அவ்வாறு பெற்றோர் பிரிந்து போனதால் அந்தப் பெண் வாழ்வு பாதித்தது என்பதை அந்தப் பெண் நினைத்து, இதற்கு யார் பொறுப்பு என்று அந்தப் பெண் ஆராய வேண்டும். அப்படிப் பார்த்த பொழுது அவருக்குப் பெற்றோர் இருவர் கோணமுமே சரி என்று புரிந்ததால்தான் அவர் இருவருடனும் தொடர்புடன் இருக்கிறார்.
According to court documents, Drummond’s dad did not want out of the marriage.
“The defendant desires to continue to live in a loving and supportive marriage with the plaintiff,” William Smith’s response stated.
William ultimately caved. According to court docs, the divorce was finalized on March 7, 1997. Although it was 20 years ago, the insider admitted the affair is still talked about today in Bartlesville.
இவ்வார வல்லமையாளர்கள்
வல்லமைமிகு “வழிகாட்டும் ஒளி” குழுவினர்
வல்லமைமிகு பிரேமா, ரேவதி, சுஜாதா, வைதேகி ஆகியோர்

பெண்களுக்கெதிரான கொடுமைகளில் இருந்து அவர்களைக் காக்கும் நோக்குடன் ‘வழிகாட்டும் ஒளி’நிறுவனத்தைத் துவக்கி வழிநடத்தும் பிரேமா, ரேவதி, சுஜாதா குழுவினர் மற்றும் அவர்களது சேவையை நமக்கு தனது கட்டுரையின் மூலம் அறிவித்த ‘குங்குமம் தோழி’யின் பொறுப்பாசிரியர் ஆர்.வைதேகி ஆகியோர் இவ்வார வல்லமையாளர்களாக வல்லமை இதழ் குழுவினரால் பாராட்டப்படுகிறார்கள்.
இவ்வார வல்லமையாளர் விருதிற்காக “வழிகாட்டும் ஒளி” குழுவினரைப் பரிந்துரைத்தவர் வல்லமையின் வாசகர் கவிஞர் காவிரிமைந்தன் அவர்கள். வாழ்க்கையில் வஞ்சிக்கப்பட்ட பெண்களுக்காக ஒருங்கிணைந்து செயலாற்றும் இப்பெண்மணிகளை இவ்வாரத்தின் வல்லமையாளர்களாக அறிவிப்பதில் வல்லமை குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.
‘வழிகாட்டும் ஒளி’யை ஆரம்பித்து, வழிநடத்தும் பிரேமா, ரேவதி, சுஜாதா ஆகிய மூவருமே வாழ்க்கையில் வஞ்சிக்கப்பட்டவர்கள்.
நல்ல வாழ்க்கைத் துணை கிடைத்து அமைதியான குடும்ப வாழ்வை எதிர்நோக்கும் பெண்களில் பலருக்கு அவர்களின் எதிர்பார்ப்பிற்கு மாறாக வாழ்க்கை அமைந்துவிடுகிறது. பலருக்குக் கிடைத்த துணையே துன்பத்திற்கு துவக்க விழாநடத்தும் வேலையைச் செவ்வனே செய்பவர்களாக அமைகிறார்கள். உதவி இல்லாவிட்டாலும் உபத்திரவத்திற்கு உத்திரவாதம் தருகிறார்கள். போதும் இந்த வாழ்க்கை என்று சலிப்படையும் பெண்கள் பலர். இவர்களில் ஒருவர் வழிகாட்டும் ஒளியின் தலைவி பிரேமா.
இவர் காதலித்துக் கைபிடித்து பதினைந்து ஆண்டுகள் குடும்பம் நடத்திய கணவரால் அடைந்த துன்பங்கள் பல. வேறுவழியின்றி கணவரைப் பிரிந்து வாழ்ந்தவருக்கு கணவராலும் சமூகத்தாலும் தொடர் தொல்லைகள். ஆதரவு தந்த அன்புள்ளங்களால் மீண்ட இவருக்கு மீண்டும் சோதனையாக ஒரு விபத்து. அதிலிருந்து உயிர் பிழைத்த இவர் தனக்கு மறுவாழ்வு கிடைத்ததன் காரணம் பிறருக்கு உதவுவதற்காக என்ற முடிவெடுத்து ‘நேசம்’ என்ற அமைப்பைத் தொடங்கி, இயலாத மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்குவதிலும், மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுவதிலும் கவனம் செலுத்தி இருக்கிறார். அப்பொழுது பெண்களுக்கெதிரான கொடுமைகளில் சிக்கிக் கொண்ட தன்னைப் போன்ற பெண்கள் பலரை சந்திக்க நேர்ந்ததால் அவர்களுக்கு ஆதரவுதர விரும்பி ‘வழிகாட்டும் ஒளி’யை ஆரம்பித்து வாழ்க்கையில் வஞ்சிக்கப்பட்டும், உறவுகளின்றியும் தனித்துவிடப்பட்ட பெண்களுக்காக தனது பணியைத் தொடங்கி இருக்கிறார். ‘வழிகாட்டும் ஒளி’ அமைப்பின் வழியாக அந்தப் பெண்களின் தகுதிக்கேற்ற பணியில் அவர்களை அமர்த்தி, அவர்கள் தங்களது சொந்தக் காலில் நிற்க உதவியிருக்கிறார். குடும்பத்தாரால் கைவிடப்பட்டு தனிமையில் தவிக்கும் பெண்களுக்கு ஆறுதலையும், வாழ்க்கையில் வெளிச்சத்தையும் காட்டுகிற ஓர் அமைப்பு இவருடைய ‘வழிகாட்டும் ஒளி’.
இந்த அமைப்பின் செயலாளர் ரேவதி, எம்.ஏ படித்தவர், பெற்றோர் பார்த்து மணமுடித்து வைக்கப்பட்டவர். இவரது கணவருக்குப் படித்த பெண்களின் மேல் நம்பிக்கை இல்லாத காரணத்தினால் இவரைச் சந்தேகித்து சித்திரவதை செய்திருக்கிறார். மனஉளைச்சல் தாள முடியாது தனது படிப்பை மட்டும் நம்பி மூன்று வயது மகனுடன் வீட்டைவிட்டு வெளியேறியிருக்கிறார். தனியாக உன்னால் வாழ்ந்து விட முடியுமா என்று கணவர் இட்ட சவாலைப் ஏற்று, ஆசிரியத் தொழில் புரிந்து தனது மகனை வளர்த்து எம்.பி.ஏ. வரை படிக்க வைத்துள்ளார். தனது அண்ணனுடன் பணிபுரியும் பிரேமாவின் தொடர்பு கிடைக்க, தன்னைப் போன்று துன்புறுத்தப்பட்ட பெண்களுக்கு உதவ ‘வழிகாட்டும் ஒளி’ அமைப்புடன் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.
சிறுவயதில் திருமணமான பொழுது பத்தாம் வகுப்பிற்கு மேல் படித்திராதவர் பொருளாளர் சுஜாதா, வேலைவெட்டி இன்றி நாள்முழுவதும் குடிபோதையில் இருந்த அவரது கணவரால் குடும்பத்தில் அமைதி இன்றிப் புழுங்கியபடி வாழ்ந்திருக்கிறார். அதன் உச்சக்கட்டமாக, குடிபோதையில் சச்சரவு ஏற்பட்டு நடுஇரவில் கணவனால் துரத்தப்பட்டு நடுத்தெருவிற்கு இவர் வந்த பொழுது இவருடன் வெளியேற்றப்பட்டவர்கள் இவரது பத்து வயது மகளும், ஒன்றேகால் வயது கைக்குழந்தையான மகனும். நீ தற்கொலை செய்து கொள்ளும் வரை உன்னைத் துன்புறுத்துவேன் என்று அச்சுறுத்திய கணவனுக்கு எதிராக தனது குழந்தைகளுக்காக வாழவேண்டி, பள்ளித் தோழி உதவியுடன் வேலை பெற்று பணி செய்து கொண்டே படித்து எம்.ஏ. முடித்திருக்கிறார். தற்பொழுது பொதுமக்கள் தொடர்புப் பணியாளராக பணிபுரிகிறார். ஒரு சந்திப்பு நிகழ்ச்சியில் இவர் பிரேமாவை எதிர்கொள்ள, அவரது பணியால் ஈர்க்கப்பட்டு ‘வழிகாட்டும் ஒளி’யின் பொருளாளராக அந்த அமைப்புடன் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.
வழக்கறிஞர், உளவியல் நிபுணர்கள் போன்றவர்களை தங்கள் அமைப்பில் கொண்டு முடிந்தவரை பெண்கள் தங்கள் நிலையைக் கையாள ஆலோசனைகள் வழங்கும் ‘வழிகாட்டும் ஒளி’ அமைப்பு, அவை உதவாத நிலையில் பெண்களுக்கு மாற்றுவழியாக அவர்களது திறனுக்கேற்ற பணியில் அமர்த்தி தன்னிறைவுடன் வாழ உதவி செய்து வருகிறது. அல்லல்களில் இருந்து மீண்ட இந்த மூன்று பெண்மணிகளும் தங்களைப் போன்று வாழ்வில் அல்லலுறும் பெண்களுக்கு வழிகாட்டியாக இருக்க விரும்புகிறார்கள். இவர்களது கதைகளையும் ‘வழிகாட்டும் ஒளி’ அமைப்பு பற்றியும் குங்குமம் தோழி இதழில் கட்டுரை எழுதி மக்களுக்கு இவர்களது சேவையை அறிமுகப்படுத்தி இருக்கிறார் குங்குமம் தோழி பொறுப்பாசிரியர் ஆர்.வைதேகி அவர்கள்.
பெண்களுக்கு எதிரான வன்முறை, பெண்களுக்கு எதிரான கொடுமைகள் மற்றும் சிசுக்கொலைக்கு எதிராக தேசிய அளவில் விழிப்புணர்வுப் பிரசாரங்களை மேற்கொண்டு வரும் பாப்புலேஷன் ஃபர்ஸ்ட் என்ற தன்னார்வ அமைப்பு ‘லாட்லி ஊடக விருது’ என்று அழைக்கப்படும் விருதுகளை வழங்கிவருகிறது. இந்த அமைப்பின் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு பெண்களுக்கு எதிரான கொடுஞ்செயல்களை வெளிக்கொணரும் விழிப்புணர்வுச் செய்திக் கட்டுரைகள், தொலைக்காட்சி, வானொலி விளம்பரங்கள், ஆவணப்படங்கள் ஆகியவற்றை தேர்வு செய்து, சிறந்த படைப்புகளுக்கு கடந்த 5 ஆண்டுகளாக ‘லாட்லி ஊடக விருது’கள் (Laadli Media and Advertising Awards for gender sensitivity) இந்த அமைப்பால் வழங்கப்பட்டு வருகிறது. குங்குமம் தோழி இதழின் பொறுப்பாசிரியர் ஆர்.வைதேகி, தாம் எழுதிய ‘வழிகாட்டும் ஒளி’ என்ற கட்டுரைக்காக தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளுக்கான லாட்லி ஊடக விருதினைப் (ஃபார் பெஸ்ட் கேம்ப்பெயின்) பெற்றார். ஆந்திர உயர்நீதி மன்ற நீதிபதி திரு சந்திரகுமாரும், பாப்புலேஷன் ஃபர்ஸ்ட் அமைப்பின் இயக்குனர் டாக்டர் ஏ.எல்.சாரதாவும் சென்ற 2013 டிசம்பர் 13 அன்று ஹைதராபாத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் இவ்விருதை வைதேகிக்கு வழங்கினார்கள்.
பெண்கொடுமைகளுக்கெதிராக பெண்களைப் பாதுகாக்கும் நோக்கில் அவர்களுக்கு ஆதரவான செயல்களைப் புரிந்துவரும் இப்பெண்மணிகள் யாவருமே, தற்கால இளம்பெண்கள். தன்னம்பிக்கையுடன் வாழ்வை எதிர்கொள்ள நல்ல வழிகாட்டிகளாக இருப்பதற்காகப் பாரட்டப்பட வேண்டியவர்கள். இக்கருத்தை மிக அழகாக தனது பரிந்துரை மடலில் முன்வைத்துள்ளார் கவிஞர் காவிரிமைந்தன். இதோ அவருடைய ஆக்கப்பூர்வமான பரிந்துரை:
படங்கள் உதவி:
ஆர்.சந்திரசேகர் & http://tamilscreen.com/laadli-media-award-for-gender-sensitivity-r-vaidehi/
தகவல் உதவி:
ஆர்.வைதேகி, குங்குமம் தோழி இதழ்
நன்றி:
குங்குமம் தோழி இதழ் வலைத்தளம்
https://kungumamthozhi.wordpress.com/
வழிகாட்டும் ஒளி!
https://kungumamthozhi.wordpress.com/2014/01/04/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF/
குங்குமம் தோழி பொறுப்பாசிரியருக்கு விருது!
https://kungumamthozhi.wordpress.com/2013/12/16/%E0%AE%95%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A/
வழிகாட்டும் ஒளி!
http://dinakaran.com/Ladies_Detail.asp?cat=501&Nid=1210
குங்குமம் தோழி பொறுப்பாசிரியருக்கு விருது!
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=72023
பயோனிர் வுமன் கதை குறித்து எடுத்துக்காட்டு காட்டுவதற்கு எனது மறுமொழி ...அந்தந்த பகுதி மக்களே அதன் கொள்கைகளை முடிவு செய்வார்கள். எத்தனைகெத்தனை அளவு அது பிறமக்களால் ஏற்கபடுகிறதோ அத்தனைகத்தனை அளவு அது பரவி பொதுக்கொள்கையாக நிலைபெறும். இப்படி ஒரு ஜனநாயக வழிமுறை இங்கே உள்ளது. [...]இது அந்தந்த ஊர் மரபு என தான் கொள்ளவேண்டும். [...] இது இம்மண்ணின் ஜனநாயகத்திற்கான சான்றுsounds familiar ? >>> https://groups.google.com/d/msg/mintamil/PJ4VZtovZEM/FVnr7Pw1BgAJ apply this statement here
நீங்கள் பெண்களைக் குறித்தும் அவர்கள் உரிமைகளைக் குறித்தும் காட்டும் எடுத்துக்காட்டுகளுக்கும் (முற்போக்கு ஜோக்கு போன்ற இழைகளில்) அவர்கள் உரிமைகள் சுதந்திரம் குறித்து விமர்சிப்பதற்கும் ....நான் பெண்களைக் குறித்தும் அவர்கள் உரிமைகளைக் குறித்தும் காட்டும் எடுத்துக்காட்டுகளுக்கும் உள்ள "அடிப்படை வேற்றுமை" என்னவென்று விளக்கிக் காட்டுகிறேன் புரிந்து கொள்ளுங்கள்.உங்கள் நோக்கம் பெண்கள் தனது சொந்த காலில் நின்று தனக்கென அமைத்துக் கொள்ளும் வாழ்க்கைக்குத் தடைகளை உருவாக்கும் நோக்கில்....எக்ஸ்ட்ரீம் கேசஸ் போல பொறுக்கியெடுத்த சில நிகழ்வுகளைக் காட்டி இதனால் எல்லாமே கெட்டுவிடும் என்று அச்சுறுத்தும் முறை, இது வழக்கமான பழமை விரும்பும் கன்செர்வேடிவ்கள்முன்னெடுக்கும் முறை.
2018-05-05 12:12 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:பயோனிர் வுமன் கதை குறித்து எடுத்துக்காட்டு காட்டுவதற்கு எனது மறுமொழி ...அந்தந்த பகுதி மக்களே அதன் கொள்கைகளை முடிவு செய்வார்கள். எத்தனைகெத்தனை அளவு அது பிறமக்களால் ஏற்கபடுகிறதோ அத்தனைகத்தனை அளவு அது பரவி பொதுக்கொள்கையாக நிலைபெறும். இப்படி ஒரு ஜனநாயக வழிமுறை இங்கே உள்ளது. [...]இது அந்தந்த ஊர் மரபு என தான் கொள்ளவேண்டும். [...] இது இம்மண்ணின் ஜனநாயகத்திற்கான சான்றுsounds familiar ? >>> https://groups.google.com/d/msg/mintamil/PJ4VZtovZEM/FVnr7Pw1BgAJ apply this statement here
///அந்த ஊரில் அவருக்கு தெரிந்தவர்கள், உறவினர்கள், சொந்தம், பந்தம், பொதுமக்கள் அவரது தாயை எப்படி கேவலமாக பேசுவார்கள் எனகூட புரிந்து கொள்ள முடியாத அளவில் தான் உங்கள் பெண்ணியம் சார்ந்த புரிதல் உள்ளது.பெண்கள், மக்களின் மனோநிலையை கூட புரிந்துகொள்ளாமல் இம்மாதிரி விசயங்களை பூசிமெழுகுவதும், கண்டிக்க முன்வராதத்தும் நீங்கள் எந்த அளவு இந்திய/அமெரிக்க மக்களின் மெய்ன்ஸ்ட்ரிம் கருத்தில் இருந்து விலகி இருக்கிறீர்கள் என்பதையே காட்டுகிறது.///
--
நன்றி இந்தக் கேஸ் ஸ்டடிக்கு... இதனை இரண்டாகப் பிரித்து விவாதத்திற்கு எடுப்போம்.குறிப்பாகச் செல்வன் தனது கோணத்தில் விவரிக்கலாம், அது மேலும் அவருக்குப் பல உண்மைகளைத் தெளிவு படுத்தும்...நான் x ...y... க்கு பெயர் கொடுத்துவிடுகிறேன். குறிப்பிட உதவியாக இருக்கும்.