வறுமை ஒழிந்ததாக புள்ளி விவரச் சூழ்ச்சி! - ராகினி

9 views
Skip to first unread message

தேமொழி

unread,
Jan 9, 2026, 8:49:09 PM (2 days ago) Jan 9
to மின்தமிழ்
வறுமை ஒழிந்ததாக புள்ளி விவரச் சூழ்ச்சி!
 - ராகினி
ஜனவரி 6, 2026

வறுமை ஒழிந்ததாக புள்ளி விவரச் சூழ்ச்சி!

உலக வங்கி அண்மையில் வெளியிட்ட 2025-ஆம் ஆண்டு அறிக்கையில், உலகில், குறிப்பாக ஆசியாவில் ‘கடும் வறுமை’ (Extreme Poverty) மிக வேகமாகச் சரிந்துள்ளதாகக் கூறியுள்ளது. இது உண்மை யாக இருந்தால் மகிழ்ச்சிதான்; ஆனால் துரதிர்ஷ்ட வசமாக இது முற்றிலும் பொய்யான தகவல். உலக வங்கியும் பல்வேறு நாடுகளின் அரசாங்கங்களும் கடந்த பல தசாப்தங்களாகத் தொடர்ந்து செய்து வரும் ஒரு புள்ளிவிவர மோசடியே (Statistical Legerdemain) இத்தகைய ‘வறுமை வீழ்ச்சி’ உரிமை கோரல்களுக்குப் பின்னணியில் உள்ளது. வறு மைக்கோட்டுச் செலவினங்களைச் செயற்கையாகக் குறைத்து மதிப்பிடுவதன் மூலம், மனிதர்கள் உயிர்வாழவே முடியாத ஒரு புள்ளியை ‘வறு மைக்கோடு’ என்று உலக வங்கி வரையறுக்கிறது.

நிஜமான வறுமைக்கோடும்  போலிக் கணக்குகளும் இந்தியாவில் வறுமைக்கோடு என்பது ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு வெறும் 62 ரூபாய் என உலக வங்கி நிர்ணயித்துள்ளது. இதைப் பயன் படுத்தி, இந்தியாவில் 5.25 சதவீத மக்கள் மட்டுமே கடும் வறுமையில் இருப்பதாக அது கூறுகிறது. இதே போல், நிதி ஆயோக் அமைப்பு கிராமப்புறத்திற்கு 57 ரூபாயும், நகர்ப்புறத்திற்கு 69 ரூபாயும் வறு மைக்கோடாகக் கொண்டு இந்தியாவில் வெறும் 5 சதவீத மக்களே ஏழைகள் என அறிவித்துள்ளது. இந்தத் தொகையைக் கொண்டு ஒரு நாளைக்கு 3 லிட்டர் பாட்டில் குடிநீரை மட்டுமே வாங்க முடியும். ஆனால், வறுமைக்கோடு என்பது உணவு மட்டுமல்லாமல் மருத்துவம், கல்வி, மின்சாரம், வாடகை, போக்குவரத்து என அனைத்தையும் உள்ளடக்கியிருக்க வேண்டும். இந்தத் தொகையில் தெருவில் வாழும் யாசகர்கள் கூட உயிர்வாழ முடி யாது. வறுமைக்கோட்டில் ஒருவரும் உயிருடன் இல்லாத நிலையை, ‘வறுமை ஒழிக்கப்பட்டுவிட்டது’ என்று இந்த அமைப்புகள் கொண்டாடுகின்றன. உண் மையில், குறைந்தபட்ச ஊட்டச்சத்தைப் பெறுவ தற்கான நிஜமான வறுமைக்கோடு என்பது அதிகா ரப்பூர்வ அளவை விட மூன்று மடங்கு அதிகமாக இருக்க வேண்டும்.

அவ்வாறு கணக்கிட்டால், இந்தியாவின் 65 சதவீத மக்கள் வறுமைக்கோட்டி ற்குக் கீழேதான் உள்ளனர். சீனாவுக்கும் தவறாக  வழிகாட்டிய உலக வங்கி சீனாவின் வறுமைக்கோட்டு மதிப்பீட்டிற்கு உலக வங்கிதான் பயிற்சி அளித்தது. 1978-ஆம் ஆண்டின் 100 யுவான் என்ற அளவை அடிப்படையாகக் கொண்டு,  2019-இல் சீனா ‘பூஜ்ஜிய வறுமை’ (Zero Poverty) எட்டப்பட்டதாக அறிவித்தது. அப்போது நிர்ண யிக்கப்பட்ட ஒரு நாளைக்கு 8.8 யுவான் என்பது 2 லிட்டர் குடிநீருக்கு மட்டுமே சமமானது. இந்தச் செலவினத்தில் எவரும் உயிருடன் இல்லாததை, வறுமை ஒழிப்பு எனத் தவறாகப் புரிந்துகொண்டனர். நிஜமான ஆய்வாளர்கள் கூற்றுப்படி, சீனாவில் குறைந்தபட்சம் ஐந்தில் ஒரு பங்கு மக்கள் அடிப்ப டைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாத நிலை யில் இருப்பதை, உடனடியாக உணர்ந்து, தனது திட்டத்தை மாற்றியது சீன அரசு. பின்தங்கிய கிராமங்க ளுக்குத் தன்னார்வலர்களை அனுப்பி, மிகவும் பின்தங்கிய குடும்பங்களை நேரடியாக அடையாளம் கண்டு அவர்களை வறுமையில் இருந்து வெளிக் கொணரும் திட்டங்களைத் தீவிரமாக செயல்படுத்து கிறது. இதேபோல் கேரளாவும் தனது வலுவான உள்ளூர் அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் ஏழைகளை அடையாளம் கண்டு அவர்களை மறுவாழ்வு பெறச் செய்வதில் வெற்றி கண்டுள்ளது. ஊட்டச்சத்து அளவுகோலை  கைவிட்ட சூழ்ச்சி உலக வங்கியின் வறுமை மதிப்பீட்டில் உள்ள  அடிப்படைத் தவறு என்னவென்றால், அது வறு மையை ‘ஊட்டச்சத்து’ (Nutrition) அளவுகோலில் இருந்து பிரித்துவிட்டது. ஆரம்பத்தில் இந்தியாவில் வறுமைக்கோடு என்பது ஒரு நபர் ஒரு நாளைக்குத் தேவையான கலோரிகளை (கிராமப்புறம் 2200, நகர்ப்புறம் 2100) பெறுவதற்கான செலவைக் கொண்டு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் 1973-க்குப் பிறகு, ஊட்டச்சத்து அளவைப் பரிசோதிக்காமல், வெறும் ‘விலைவாசி குறியீட்டை’ (Laspeyres Price Index) மட்டும் வைத்து வறுமைக்கோடு மாற்றப்பட்டது. 1973-இல் கிராமப்புற இந்தியாவில் 2200 கலோரி உணவைப் பெற 49 ரூபாய் தேவைப்பட்டது; அப்போது 56.4 சதவீத மக்கள் ஏழைகளாக இருந்தனர். 2011-12-இல் அதே அளவு கலோரியைப் பெற 1320 ரூபாய்  தேவைப்பட்டது. உண்மையில் அக்காலத்தில் 66.8  சதவீத மக்கள் ஏழைகளாக இருந்தனர். ஆனால், அரசு பழைய முறையைப் பின்பற்றி 816 ரூபாயை வறு மைக்கோடாக நிர்ணயித்தது. இதனால் வறுமை விகிதம் வெறும் 25.7 சதவீதமாகக் குறைந்தது போலத் தோன்றியது. நகர்ப்புறத்திலும் இதே நிலைதான்; நிஜமான வறுமை 62 சதவீதமாக உயர்ந்திருந்த போது, அரசு வெறும் 13.7 சதவீதம் எனப் பொய்க் கணக்கு காட்டியது. அரை நூற்றாண்டு கால பழைய கூடை 1973 மற்றும் 1978-ஆம் ஆண்டுகளின் நுகர்வு முறையை (Consumption Basket) இன்றும் அடிப்ப டையாகக் கொள்வது கேலிக்கூத்தானது. 50

ஆண்டு களுக்கு முன்பு கல்வி, மருத்துவம் மற்றும் போக்கு வரத்து ஆகியவை பெரும்பாலும் பொதுத்துறை யின்கீழ் இலவசமாகவோ அல்லது குறைந்த விலை யிலோ கிடைத்தன. ஆனால், கடந்த மூன்று தசாப்த கால நவீன தாராளமயமாக்கல் கொள்கையினால் இவை அனைத்தும் தனியார்மயமாக்கப்பட்டு விலை கள் பன்மடங்கு உயர்ந்துள்ளன. ஒரு குடும்பம் தனது வருமானத்தில் பெரும்பகுதியை மருத்துவத்திற் கும் கல்விக்கும் செலவிட வேண்டியிருப்பதால், அவர்கள் தங்களின் உணவு மற்றும் ஊட்டச்சத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளனர். இந்தியாவில் சராசரி கலோரி மற்றும் புரத உட்கொள்ளல் தொடர்ந்து குறைந்து வருவதை ‘என்.எஸ்.எஸ்’ (NSS) தரவுகள் காட்டுகின்றன. ஒலிம்பிக் சாதனையும் உலக வங்கியும் ஒரு தடகள வீரர் ‘தாண்டும் கம்பியின்’ (Bar) உய ரத்தைக் குறைத்துக்கொண்டே சென்று, தான் சாதனை படைத்ததாகக் கூறினால் அவர் தகுதி நீக்கம் செய்யப் படுவார். ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர் தேர்ச்சி  மதிப்பெண்ணை 50-இல் இருந்து 2-ஆகக் குறைத்து விட்டு, 100 சதவீத தேர்ச்சி எனக் கூறினால் அவர் பதவி நீக்கம் செய்யப்படுவார். ஆனால், உலக வங்கி ஆசியாவில் உயிர்வாழ்வதற்கான அளவிற்கும் கீழாக வறுமைக்கோட்டைக் குறைத்துவிட்டு, வறுமை ஒழிந்துவிட்டதாகக் கூறுவதை எந்தச் சர்வதேச அமைப்பும் கேள்வி கேட்கவில்லை. ‘கடும் வறுமை மற்றும் மனித உரிமைகள்’ குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புத் தூதர் பிலிப் ஆல்ஸ்டன் (2020), உலக வங்கியின் இந்த உண்மையற்ற வறு மைக்கோட்டைச் சுட்டிக்காட்டியபோது, அதனை உலக வங்கி நிராகரித்துவிட்டது. கடனில் மூழ்கும் ஏழைகள் கோடிக்கணக்கான மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுவிட்டதாக உலக வங்கி கூறும் கதைகள் வெறும் மாயை. எதார்த்தத்தில்,

பெருகி வரும் மருத்து வச் செலவுகளாலும், அத்தியாவசியத் தேவைகளின் விலை உயர்வினாலும் இந்தியக் குடும்பங்கள் பெரும்  கடனில் மூழ்கி வருகின்றன. ஊட்டச்சத்து குறைபா டும், வறுமையும் மறைந்துவிடவில்லை; அவை புள்ளி விவரக் கணக்குகளால் தற்காலிகமாக மறைக்கப் பட்டுள்ளன. வறுமையை ஒழிக்க வேண்டுமானால், முதலில் அத்தியாவசியச் சேவைகளைத் தனியார்மய மாக்குவதை நிறுத்தி, ஊட்டச்சத்து அடிப்படையிலான நேர்மையான வறுமைக்கோட்டை நிர்ணயிக்க வேண்டும். வறியவர்களைப் பார்த்து “நீங்கள் ஏழை கள் அல்ல” என்று கேலி செய்வதை உலக வங்கி நிறுத்திக்கொள்ள வேண்டும்.

பீப்பிள்ஸ் டெமாக்ரசி டிச.28  
தமிழ்ச் சுருக்கம் : ராகினி

நன்றி : தீக்கதிர் - ஜனவரி 6, 2026
https://theekkathir.in/News/tamilnadu/madurai/statistical-manipulation-that-poverty-has-been-eradicated-----ragini

Reply all
Reply to author
Forward
0 new messages