அன்புடைய சுபா அவ்ர்களே
கோவிலூர் ஆதீனத்தின் சிறப்பை வெளியிடத் தொடங்கியமைக்கு நன்றி.
கோவிலூர் என்ற் த்லைப்பில் ஆதீனத்திற்குத் தாங்கள் வ்ந்த போது தங்களுக்கு
வழங்கிய பச்சை வண்ண நூலில் உள்ள் செய்திகளில் இருந்து விவரமாக எழுதி
இருக்கிறீர்கள்.ன நான் மேற்ப்டி ம்டாலயததில் 10 ஆண்லடுகளாக ம்க்கள் தொடர்பு
அலுவ்ல்ராய் இருந்தவ்ன்.அவருடன் பல இட்ங்களுக்கும் சென்றவன்.மடாலயம்
வெளியிடும் திருநெல்லை என்ற் இதழின் ஆசிரியராக இருந்து வ்ருகிறேன்.எனக்கும்
இந்த ம்டாலயத்திற்கும் 9 ஆம் பட்டமான இராமநாத ஞான தேசிகர் காலத்தில்
இருந்து தொட்ர்பு உண்டு.நாச்கியப்ப ஞான தேசிகர் ஆணைப்ப்டி 14 வேதாந்தப்
பாட் நூல்களில் 11 நூல்களுக்கு எளிய முறையில் உரை எழுதியுள்ளேன்.தற்பொழுது
மடத்தில் நடந்து வரும் இலக்கியப் ப்ணிக்ளைக் கவனித்து வ்ருகிறேன்.மடம் ந்லிவுற்ற
கால்த்தையும் பொலிவுற்ற காலத்தையும் அறிவேன்.வேண்டும் போது விவரங்கள்
தருவேன்.தொடர்ந்து காண்போம்.
காப்பியக் க்விஞர.நா.மீனவன்.
On Friday, October 4, 2013 10:56:07 PM UTC+5:30, சொ.வினைதீர்த்தான் wrote:கோவிலூர் மடத்தின் சார்ப்பாக நடைபெற்று வருகிற ஆன்மீக, சமுதாய, கல்விப்
பணிகளைப் பகிர்ந்துகொள்கிற பதிவுகளுக்குத் திருமிகு சுபாவிற்கும்
தட்டச்சுப் பணி சிறப்பாகச் செய்யும் திருமதி கீதாசாம்பசிவம்
அவர்களுக்கும் மிக்க நன்றி.
பன்னிரெண்டாவது ஆதினகர்த்தர் சீர்வளர் சீர் நாச்சியப்ப சுவாமிகளின் பணி
அளப்பரியது. ருக்க்மணி அருண்டேல் அம்மா அவர்களின் அபிமானம்பெற்று
அச்சுக்கலை, புகைப்படக்கலை விற்பன்னராகி வளர்பொருளீட்டி அப்பொருளைக்
கல்வி, மரபுக்கலை, ஆன்மீகப் பணிகளுக்கு உரித்தாக்கிய பெருமகனார் அவர்.
அவருக்கு அருமையான நினைவஞ்சலி இப்பதிவு.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.
--
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
அன்பு மிகக சுபா அவர்களே
தாங்கள் கோவிலூர் வந்த மார்ச்சுத் திங்களில் நான் மடாலயத்திலிருந்து
உடல் ந்லக்குறைவு காரண்மாக வீட்டில் இருந்தேன்.இப்பொழுது வீட்டில்
இருந்தே ப்திப்புப் பணிகளைச் செய்து வ்ருகிறேன்.ம்டாதிபதி அவர்கள்
ஏதேனும் விழாக்கள்,முக்கிய அலுவல்கள் இருப்பின் கார் அனுப்பிக் கூட்டிக்
கொள்வார்.அக்டோபர் 9 ஆம் நாளிலிருந்து 11 ஆம் நாள் முடிய நாச்சியப்ப
சுவாமி அவ்ர்களின் குருபூசை விழா நடந்து வருகின்றது.மேலும் முனைவர்
வ்ள்ளி அவ்ர்கள் கோவிலூர் மடம் வெளியிடும் திருநெல்லை இத்ழில் ம்கா
வித்துவானைப் ப்ற்றி எழுத்வில்லை.அவர் எழுதிய கோவிலூர்ப் புர்ர்ணக்
குறிப்புகளையே எழ்தி வ்ருகின்றார்.நானே முதலில் கோவிலூர்ப் புரர்ணம்
பற்றிய உரை நடையிலான குறிப்புக்களை வெளியிடுகிறேன்.பின்னர் பிள்ளை
அவர்களின் பாடல்களையும் வெளியிடுவேன்.
--
விஷயம் தெரிந்தவர்கள் தக்க விளக்கங்களைத் தந்து உதவினால் மகிழ்வேன்ஆயினும் இந்த நல்ல சிறப்பாக செய்லப்டுகின்றன கோவிலூர் ஆதீனம் போன்று ஏனைய ஆதீனங்களும் இயங்குகின்ற்னவா அல்லது இது கோவிலூர் ஆதினத்திற்கும் மட்டிலும் பொருந்தும் ஒன்றா?அன்பர்களேஇவற்றை எல்லாம் அறிய மிக மகிழ்ச்சியாக இருக்கின்றது. ஞான வளர்ச்சிக்குப் பாடுபட வேண்டிய ஆதீனங்கள் அவ்வாறு செய்வதாக் தெரிய்வில்லை என்று என்னுள் ஓர் கருத்து இருந்தது, அது ஓரளவு தளர்ந்து வருகின்றது,

IT is not easy to see paintings in Tamil Nadu prior to those of the Vijayanagara period. Why? This is because they are either situated in remote places far from the tourist beat, (like Sittannavasal), or are in a terrible state of disrepair that very little is visible (like Pannamalai) or are locked up and visitors kept out (as in Thanjavur). Thus the two books photographed, designed and produced by C. Nachiappan (now Sri-la-Sri Nachiappa Swami of Koviloor Mutt) with assistance from the Rukmini Devi Foundation and published by Kalakshetra Publications, Chennai, are a valuable documentation of the great Tamil heritage of painting.
The first book records the paintings at Sittannavasal, Panamalai and Thanjavur, covering the early Pandya, the early Pallava and the early Chola periods respectively. These sites, which are not easy to visit, were photographed 50 years ago by the Koviloor Swamy. He used an ancient 5"x4" Linhof camera for the Archaelogical Survey of India (ASI) and sent the transparencies to Saraswathy Press in Calcutta for exposing. But they got burnt under powerful lights and were never printed. The Swami retained a set of transparencies that were enhanced by computer technology, recreating the colours that would have brightened up the temples once upon a time. The text is written by the eminent scholar Professor P.R. Srinivasan, although he has quoted extensively from earlier works.
Sittannavasal is an "elongated mass of granite", a remote village 15 km beyond Pudukottai town, not far from the early Chola temples of Narthamalai, consisting of the Eladipattam, a natural cave on top of the hill with beds and pillows cut into the stone floor for use by the monks, and Arivarkovil or the Temple of the (Jaina) Arihants. There is a First Century Tamil Brahmi inscription on a cave bed, and a Ninth Century inscription on a rock nearby informing us of the renovation of the temple. The cave temple has simple pillars and sculptures of Jaina Tirthankaras. The paintings currently visible probably belong to the Seventh Century, since they have Pallava features and are reminiscent of later Ajanta paintings.
The paintings include a dharmachakra on the ceiling, a lotus tank with frolicking animals, creepers and lotuses, young men collecting flowers, dancing apsaras and a barely-visible king and queen, bringing to life the Jaina philosophy of ahimsa and harmony in nature. One apsara, with her right hand in the pataka mudra and the left in the danda hasta, is reminiscent of the bronze figures of the dancing Balakrishna and Balasubrahmanya, while the other is performing thebhujangatrasita karana, associated with the dance of Shiva at Chidambaram. The base of the Sittannavasal paintings is well consolidated, firm yet thin lime plaster, also used for the binding. The painted stucco is made up of three layers: rough plaster, fine plaster and a covering layer of paint.
Little remains of these paintings today, making their appearance in the book a valuable contribution to South Indian art history. As a frequent visitor to Sittanavasal, I have seen the paintings gradually disappear, thanks to the pollution from the stone quarries, which is also probably weakening the hill. The lone watchman belies the archaeological importance of the site, surrounded by ancient dolmens and sacred groves with enormous and elaborately decorated terracotta horses.
The Talagirishvara Temple at Panamalai is rarely visited, but is notable for the single remnant painting of an exquisite female figure, her leg gently bent and resting against a wall, standing beneath a royal umbrella, wearing a tall bejewelled kirita and jewellery typical of the Pallava period. The figure has been shaded to make it appear three-dimensional. This single figure is one of the most beautiful paintings in India, reminiscent of the women of Ajanta, and the photograph brings out all her glory. She resembles Parvati of the Kailasanatha temple, Kanchipuram, and the Ajanta frescoes. There are traces of painting elsewhere in the temple, but nothing identifiable. The fresco secco method was used here as at Sittannavasal.
The best paintings are, of course, those found inside the vimana in the Brihadishvara temple at Thanjavur. The delicate nature of the paintings and the gradual erosion due to pollution have resulted in the ASI locking them up. Today they can only be seen by special permission. The paintings depict scenes from the Shiva Purana. But the elaborate tableaux of domestic, public and palace scenes are an excellent source of information about the Chola period and the court of Rajaraja, who commissioned them. The paintings are huge and animated, bringing alive the greatness of the Lord who destroys evil and ensures peace.
There is a barely-visible Dakshinamurti beneath a banyan tree on which monkeys are playing, while rishis and animals live together in the forest. There is a stillness of body and reverence on the face of the sages worshipping Dakshinamurti, in contrast to the vivacious animals. Flying apsaras and gandharvas complete the scene of palatial proportions.
The Sundaramurty Nayanar story depicts a magnificent Cheraman Perumal on a bejewelled white horse, while an angry Sundaramurti Nayanar wears a white coat! Shiva, in this scene, is an old man. A beautiful tableau is that of Rajaraja listening to his preceptor Karur Devar, the two faces a study of intense concentration.
In another panel, dancing apsaras — their faces a study of abhinaya— and Rajaraja and his wives watch in awe the magnificent ananda tandava, the dance of Nataraja performed in the golden mandapamof Chidambaram. Exquisite jewellery, jasmine-bedecked hairstyles, and beautifully featured people with eyebrows like a bow and compassionate eyes bring alive the massive compositions in bright colours.

The best painting is that of Tripurantaka, Shiva as the destroyer of the demon Tripura. With wide-open eyes and raised arms, Shiva prepares to slay the demon. An animated Durga seated on her roaring lion prepares to attack the demon's hordes with her raised sword. Brahma is a charioteer, while Shukracharya leads the asuras(demons).
What is significant about the Chola paintings of Thanjavur is that there is great emotion in all the faces, whether it is the compassion of the guru counselling Rajaraja, or a contemplative rishi, a devout queen, an animated dancer or an angry Shiva. The photos bring out the varied emotions on the many faces, a feature rarely seen in Indian art.
During the reign of king Vijayaraghava Nayak, the Chola paintings were covered with plaster and painted over, a happy circumstance that probably preserved the earlier Chola murals.
Apart from the paintings, 80 karanas of Bharatanatyam sculpted in granite are printed in black-and-white. Each karana is accompanied by the relevant verse from the Natya Shastra written in the Roman script, with a translation, description and remarks about the figure and the karana. This documentation is an important contribution to both art and dance.
The book includes photographs of the caves and the temples where the paintings are situated, along with some bronzes and sculptures found therein. The stone objects have been printed in black-and-white, thereby emphasising the granular content of the stone and providing a stark contrast to the colourful paintings.
The second book contains a documentation of the paintings in Thanjavur style in the collection of the Koviloor math. Over 100 years ago, a temple and tank were constructed in Koviloor by Sri-la-Sri Veerasekara Gnanadesika Swami of the Koviloor math. He was a great builder whose sense of aesthetics resulted in the construction of 12 beautiful vahanas and an extensive collection of Thanjavur paintings about his Lord Shiva, whose Thiruvilayadal Puranam is depicted in 64 paintings. The collection also includes paintings of Vaishnavite, Kaumara, Ganapatya and Sakta themes. Besides a large Nataraja and Dattatreya, there is also a rare depiction of Sri Narasimha Bharati, the much revered ascetic Shankaracharya of Sringeri Math who lived in the first half of the 20th Century. The paintings are not significant for their age: they are important in that they are a record of the religious preferences and iconographic developments at the beginning of the 20th Century. It is not often that one gets to see a private art collection: Swami Nachiappa has done a great service to art lovers by publishing this book.
Besides the paintings mentioned above, the collection includes the famous story of Kannappa Nayanar and several dynamic forms of Shiva, such as Nataraja, Gajasarmambeswarar and Veerabhadra. Harihara is represented as Sankaranarayana, while Ardhanarishvarar, Dakshinamoorthi and the other forms of Shiva display similar facial and decorative features.
Like all Thanjavur paintings, the central figures are much larger and generally white, plump and round-faced, while the subsidiary figures are relatively smaller, with smaller panels at the bottom or sides of the painting. The gesso relief work typical of Thanjavur paintings comes out in the borders and mandapams that frame the figures, while many are framed by oval cameos.
Like the Thanjavur paintings in the Sarasvati Mahal Palace collection, the paintings are very two-dimensional, with a gentle roundness and depth created by a range of shades from a light central colour to dark edges. While the first book is well written, the paintings in the second book do the talking: the Koviloor paintings are only labelled, with little description, leaving the reader time to study them in depth.
The books are well printed and bring out the riot of colours that characterise Indian painting. Both are one-of-a-kind collections of photographs that have made a great contribution to our knowledge of Indian art. They are essential additions to the library of a lover of Indian art.
Tanjavur Paintings in Koviloor
Sittannavasal Panamalai, Tanjavur Early Chola Paintings;
Narasiah
பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா.தஞ்சாவூர் பெயிண்டிங் நூலை திருமிகு சுபா அவர்கள் கோவிலூர் வந்தபோது ஒளிப்படமாக எடுத்துச் சென்றுள்ளார்கள். மின்னாக்கம் செய்வதற்கும் சுவாமிகளிடம் அனுமதி பெற்றுள்ளார்கள். ஒளிப்படங்கள் நேர்த்திக்கிணங்க அப்பணியை அவர்கள் நிறைவேற்றுவார்கள் என எண்ணுகிறேன். அவர்களுக்குப் பணிச் சுமையையும் காண்கிறேன். பணி நிறைவேறினால் அளப்பரிய பயனாக அமையும். ஏனென்றால் அப்படங்களை எல்லோரும் காண இயலாது. பெரும்பான்மையான படங்கள் சுவாமிகள் பிரத்யேகப் பூசனை அறையில் உள்ளவை. நாச்சியப்ப சுவாமிகள் புகைப்படக் கலைஞர் என்பதால் நுணுக்கமாகப் பார்க்கௌலகோர்க்கு நற்பேறு.
நன்றி.அன்புடன்சொ.வினைதீர்த்தான்.
ஊருக்குப் போனது, விருந்தினர் வருகை என்று வேலைகள் இருந்ததால் தாமதம் ஆனதற்கு மன்னிக்கவும்.
புனித நீராட்டு விழா நடந்து முடிந்த உடனே இதுவரை இப்பகுதி காணாத அளவில் மழை பொழிந்து விண்ணோர்கள் ஆசியினைத் தெரிவித்தது நெகிழ்வான, மறக்க முடியாத அனுபவம்.
திருமிகு சுபா அவர்களே
கோவிலூர் மடாலயத்தின் சார்பில் நிகழ்ந்த வேதம் திருமுறை ஆகமம் நாதஸ்வரக் கருத்தரங்குகள்.சுதர்சன வேள்வி
நாச்சியப்ப சுவாமிகளின் முத்துவிழா போன்றவை நடந்த பொழுது அதன் அமைப்பாள்ராக இருந்து சிற்ப்புற நடத்தியதில்
எனக்குப் பெரிய பங்கு உண்டு.மடாலயத்தின் இலக்கியப் பதிப்புப் பணிகளிலும் இன்றும் நான் பெரும் பங்காற்றி வருகிறேன்,
கோவிலூர் ஆதீனம் என்றும் உதவிடும் ஒரு ஆலயமாக சாசுவதமாக இருக்கும் என்பதை மட்டும் நிச்சயமாகக் கூறிக் கொள்கிறேன். என்று சுவாமிகள் கூறியதும்...சமூகச் சிந்தனையும், ஏழை, பணக்காரர் என்ற பாகுபாட்டை மாற்ற வேண்டும். இளைஞர்களின் கல்விக்கும், முதியோர்களின் அந்தக் கடைசி வாழ்க்கைக்கும் உதவ வேண்டும் என்ற சிந்தனை கொண்டவராக மடாலயத்திலிருந்து மறுமலர்ச்சி கொண்ட ஒரு மகா புருஷர் நகரத்தாருக்குக் கிடைத்திருக்கிறார் என்பதைக் கூட்டத்தினர் முகத்தில் தோன்றிய நம்பிக்கை ஒளியில் காண முடிந்தது.
நம்மை வளர்த்து ஆளாக்கிய பெற்றோர்களை முதியோர் இல்லங்களில் தள்ளிவிடக் கூடாது... அவர்களுக்கு உதவுவது நமது தலையாய கடமை என்ற எண்ணம் வளர வேண்டும். உண்மையிலேயே பெற்றோர்களை வைத்துக் காப்பாற்ற முடியாது கஷ்டப்படும் பிள்ளைகள் முதியோர் இல்லங்களுக்கு அனுப்பலாம். அப்படிப்பட்ட முதியோர்களுக்குத் தான் உதவிடும் திட்டம் உள்ளது.
ஆதீனம் என்றும் உதவிடும் ஒரு ஆலயமாக சாசுவதமாக இருக்கும் என்பதை மட்டும் நிச்சயமாகக் கூறிக் கொள்கிறேன். என்று சுவாமிகள் கூறியதும்...சமூகச் சிந்தனையும், ஏழை, பணக்காரர் என்ற பாகுபாட்டை மாற்ற வேண்டும். இளைஞர்களின் கல்விக்கும், முதியோர்களின் அந்தக் கடைசி வாழ்க்கைக்கும் உதவ வேண்டும் என்ற சிந்தனை
"சமூகப் பணிகளோடு நின்றுவிடாமல் இலக்கியப் பணியையும் ஆற்றப் போகிறேன். சங்க இலக்கியங்களான தொல்காப்பியம், மணிமேகலை, சிலப்பதிகாரம், அகநானூறு, புறநானூறு இன்னும் பிற இலக்கியங்களையும் சாதாரண மக்களும் படிக்கக் கூடிய அளவிற்கு எளிய தமிழில் வடித்து, நூலாக அச்சிட்டு மக்கள் பதிப்பாக வெளியிடப்படும்
சங்க இலக்கியங்களை மக்கள் பதிப்பாக வெளிவருவதற்கு முனைவர் தமிழண்ணல் தலைமையில் ஒரு குழு அமைக்கப்படவுள்ளது என பலத்த கரவொலிகளில் அதிர அரங்கத்தில் இவ்வாறு அருளுரை நிகழ்த்தினார்.
நகரத்தார் சமுதாய வளர்ச்சிக்காக 'நகரத்தார் நல்வாழ்வு அறநிலை'(Nagaraththar Welfare Trust) துவங்கப்படவுள்ளது. இந்த அறநிலைக்கு ரூபாய் 7 கோடி நிதி சேர்த்திடும் திட்டமும் உள்ளது எனக் கூறிய சுவாமிகள் இந்த அறநிலைக்குத் தனது சார்பில் ரூபாய் ஒரு கோடி ரூபாய் வழங்கப்படுகிறது என்று கூறியதும் கூட்டத்தினரின் மகிழ்ச்சி ஆரவாரம் அடங்க வெகுநேரமாயிற்று.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
மெய்யறி வின்ப ரூபம்மேயபூ ரணியே போற்றிபொய் அகல் சிவத்தின் நீங்காப்புண்ணியப் பொருளே போற்றி,ஐயபல் சக்தி ஆகிஅடியாரைக் காப்பாய் போற்றி,மையகல் அடியார் எண்ணம்முடித்திட வல்லாய் போற்றி!"காமரு கூந்தல் போற்றிகவின் பொழி வதனம் போற்றி,மாமரு விழிகள் போற்றி,வண்தொடிக்கரங்கள் போற்றி,தேமரு கொங்கை போற்றி,சிறுகிய மருங்குல் போற்றி,நாமரு புகழ்சால் நெல்லைநாயகி திருத்தாள் போற்றி!"நெல்லைக் காத்ததனால் அம்பிகைக்கு நெல்லை நாயகி என்ற திருநாமம் உண்டாயிற்று. சிவகுப்தனும் சுதன்மையும் இறுதியில் சிவபதம் அடைந்தார்கள்.****************************************************************************************************மதுராபுரியை ஆண்ட சூரதன்மா என்பவனுடைய மனைவி சுகுணை என்பவள். சமண சமயத்தினர் அங்கே வந்து அரசனைச் சமணன் ஆக்கினார். அவன் சைவத்தைப் புறக்கணித்துச் சமண சமயத்தைப் பரப்பலானான். சமணர்களுக்கே ஆதரவு தந்தான். அது கண்டு வருந்திய சுகுணை அவனுக்குப் பலவகையில் அறிவுரை புகன்றும் அவன் கேட்கவில்லை. அரசன் இறந்தான். அவனுடன் சுகுணையும் உயிர் நீத்தாள்.சுகுணை அகளங்கபுரத்து மன்னன் மகளாகப் பிறந்தாள். சூரதன்மாவும் சாகலபுரத்து மன்னன் மகனாகப்பிறந்தான். அவனுக்கு முற்பிறவியிற் செய்த பாவத்தால் குட்ட நோய் வந்தது. மன்னன் மகளாகப் பிறந்த சுகுணைக்கு மணப்பருவம் வந்ததும், சுயம்வரம் நடைபெற்றது. பல தேசத்து அரச குமாரர்களும் வந்திருந்தனர். சாகலபுரத்து மன்னன் மகனாகப் பிறந்து குட்ட நோயால் வருந்திய சூரதன்மாவும் வந்தான். அவன் தன் முற்பிறவியில் கணவனாக இருந்தவன் என்பதை உணர்ந்த மன்னன் மகள் யாவரும் நகைக்கவும் மன்னன் வருந்தவும் அவனுக்கே மாலையிட்டாள். அவனும் அவளும் சாகலபுரத்தை அடைந்தார்கள். மருந்துகளால் அவனுடைய நோய் தீரவில்லை. அந்தப் பெண்மணி அவனுடன் தல யாத்திரையாகப் புறப்பட்டுக் காசி முதலிய ஊர்களுக்குச் சென்றும் நோய் தீரவில்லை. இறுதியில் சமிவனம் அடைந்து மதுபுஷ்கரிணியில் நீராடவே அவனுடைய நோய் தீர்ந்தது.**********************************************************************************************
காளிபுரத்தில் (காளிபுரம் என்பது காளையார்கோயிலைக் குறிக்கும்) இருந்த வீரசேனன் என்னும் பாண்டியன் வேட்டையாடக் கானகம் சென்றான். அங்கே கண்வ முனிவர் ஆசிரமத்துக்கருகில் ஒரு கவரிமானைக் கண்டு அதன் மேல் அம்புவிட அது இறந்து போயிற்று. கண்வர் வளர்த்த மான் ஆதலால் முனிவர் அது இறந்ததை அறிந்து வருந்தி மன்னனைப் பார்த்துக் கோபத்துடன், "நீ வேடனாகித் திரிக!" என்று சாபமிட்டார். உடனே அவன் வேடனாகி மிருகங்களை வேட்டையாடிக் கொண்டு காட்டில் திரிந்தான்.
மந்திரி முதலியோர் அரசன் வராததை அறிந்து அவன் மகனாகிய இராசசேகரனை மன்னனாக்கினார்.
வேடனான அரசன் பல இடங்களில் திரிந்து சமிவனம் வந்தான். மது தீர்த்தத்துக்கு அருகில் ஒரு மர நிழலில் தங்கினான். அந்தத் தீர்த்தத்தில் இருந்த கெண்டை மீன்கள், "இவன் நம்மைக் கொடியாகக் கொண்ட பாண்டியன், இவன் பாவத்தைப் போக்குவோம்." என்று தம்மில் பேசிக் கொண்டு, துள்ளிக் குதித்தன;
அப்போது அந்த நீர் மேலே பட்டதும், அவனுக்குக் கொலை புரியும் எண்ணம் நீங்கியது. புண்ணிய நினைவு உண்டாயிற்று. அந்தத் தீர்த்தத்தில் மூழ்கி வேட்டுருவம் நீங்கி இறைவனையும் இறைவியையும் இறைஞ்சினான்.காளியாபுரத்திலிலுள்ளவர்கள் இதனை அறிந்து அவனை வந்து கண்டு தம் நகருக்கு அழைத்து ஏகினர். மகன் அரசாள, அவன் யோகம் துய்த்து வாழ்ந்தான் பிறகு சிவபதம் அடைந்தான். அன்று முதல் மதுபுட்கரிணிக்குச் சாபவிமோசனம் என்ற பெயரும் அமைந்தது.**************************************************************************************************************இந்த வரலாறுகளையெல்லாம் அகத்திய முனிவர் வாயிலாகக் கேட்ட வீரபாண்டியன் திரிபுவனேசனை வழிபட்டான். அகத்தியர் அவனுக்குப் பிரம ஞானம் உபதேசித்தார். அவன் இறுதியில் விதேக முக்தியை அடைந்தான்.சொற்கலை, பொருட்சுவை மலிய இந்தப் புராணத்தை இயற்றி இருக்கிறார்,பிள்ளை அவர்கள். வேதாந்த மடத்தைச் சார்ந்த கோயிலாதலின் அத்துவித வேதாந்தக் கருத்துக்களையும் பரிபாஷைகளையும் அங்கங்கே அமைத்திருக்கிறார். வருணனைகளும் ஐந்திணை இயல்புகளும் இருதுக்களின் இயல்பும், துதிகளும் இப்புராணத்தில் வருகின்றன.பாயிரத்தில் கோயிலூர் வேதாந்த மடத்தின் முதல் ஞானாசிரியரைப் போற்றுகிறார்.மேயபெருங்கழனி நகர் கோயிலூர் எனும் பேர்மேவ இறை ஆலயத்தை விரித்த அருட் பெரியோன்பாயபுனல் திரண்டாலி ஆயதெனச் சுத்தபரப்பிரமம் இவ்வுருக் கொண்டுற்றதெனும் புரணன்,ஆயபுகழ் வேதாந்த சிரவணம் செய்துலகில்அளவிலர்சை தன்னியமா சுப்புரிந்த அறவோன்தூய முத்தி ராமலிங்க தேசிகன் என்றுரைக்கும்சோதிலிங்க சொரூப னென்னும் சோதியை ஏத்தெடுப்போம்இந்நூலைச் செய்வித்த சிதம்பர தேசிகனைப் பற்றி ஒருசெய்யுளில் சொல்கிறார்.மேலாய துறவினுக்கோர் துணையாகி உள்ளான்,விரிந்து பல புவனமும் காண்றிடு சோற்றிற் கண்டோன்நாலாய மறைமுடிவின் பொருள் விளங்க எடுத்துநல்மாணவர்க்கருளித் தன்மயமாக்கிடுவோன்;பாலாய சிவ தருமம் பற்றப்பாலிப்போன்;பரப்பிரம சுவாநுபூதியிற் சிறந்த மேலோன்,நூலாய யாவும் உணர்ந்த தவர்மனுவினெடுத்துநுவலுமொரு சிதம்பர தேசிகனெனும்மா பெரியோன்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
தொடர்ந்து தட்டச்சு செய்து நம் வாசிப்பிற்கு வழங்கி வரும் கீதாவிற்கு என் நன்றி.சுபா
தத்துவராய சுவாமிகள் மடம், எறும்பூதூர்
..
பொன்னம்பல சுவாமிகளுக்கு, தத்துவ ராயரின் நூல்களில் ஈடுபாடு இருந்ததால் அவருடைய சமாதி எங்கு உள்ளது என வினவி, எறும்பூருக்குச் சென்று பார்த்தபோது மேற்கண்டவாறு சமாதிக்கோயில் அழிந்தும், அழிக்கப்பட்டும், இலைக்கள்ளி புதர்களுக்குள் மறைந்தும் இருப்பதைக் கண்டார்.அதைத் திருப்பணி செய்ய முடிவு செய்தபோது உய்யக்கொண்டான் சிறுவயல் சுப்பிரமணியன் செட்டியார் என்பார் கண் நோய் வாய்ப்பட்டிருந்தார். மருத்துவம் செய்யாமலே பொன்னம்பல சுவாமிகள் அருளால் மேற்படி சுப்பிரமணியன் செட்டியார் மீண்டும் கண்ணொளி பெற்றார். அவர் பர்மாவுக்குச் சென்று தாமே பெரும்பொருள் ஈட்டி அதைப் பொன்னம்பல சுவாமிகளுக்கு அனுப்பினார். சுவாமிகள் இவ்வாறு செட்டியார் பர்மிய நாட்டிலிருந்து அனுப்பிய பணத்தைக் கொண்டு தத்துவராயருக்குக் கருங்கற் கோயில் கட்டி முடித்தார். கோயில் காரியங்கள் முட்டின்றி நடைபெறுவதற்காக, அவ்வூரில் விளை நிலங்களும் வாங்கினார். ஆடி மாதத்துச் சதய நட்சத்திரத்தில் தத்துவராயர் குரு பூசை சிறப்பாக நடைபெறுவதற்கு ஏற்பாடுகளையும் செய்தார்.கர்ப்பக்கிரகம், விமானம், அர்த்த மண்டபம், நந்தி மண்டபம், பிராகார மண்டபம் ஆகியவற்றைக் கட்டி முடித்து ஶ்ரீ பொன்னம்பல சுவாமிகள் கி.பி. 1895 அளவில் ஶ்ரீ தத்துவராய ஞான தேசிக சுவாமிகளின் அதிஷ்டானக் கோயிலுக்குக் கும்பாபிஷேகம் செய்து வைத்தார்கள். அதன் பிறகு, கோயிலைக் கோவிலூர் ஆதீனத்தில் ஒப்படைத்தார்கள். அதிஷ்டானத்துக்கு அன்று முதல் நித்திய பூஜை, குரு பூஜை முதலியன கோவிலூர் ஆதீனத்தின் வாயிலாக நடைபெற்று வருகின்றன.மேற்படி கோவிலில் விமானம், முன்மண்டபம், பிராகார மண்டபங்களில் சில பகுதிகள் ஆகியவை பழுது பட்டிருந்ததைச் சீர் செய்து சர்வதாரி ஆண்டு ஆனித் திங்கள் 11 ஆம் நாள் (24--6--1948) கோவிலூர் ஆதீனம் எட்டாவது குருமூர்த்தியான ஶ்ரீலஶ்ரீ சோமசுந்தர ஞான தேசிகர் அருளாட்சியில் அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் செய்விக்கப்பட்டது.சிதம்பரம் கோ.சித. மடாலயத்தார் தத்துவராய சுவாமிகள் அருளிச் செய்த பாடுதுறை என்னும் அந்நூலை 1953இல் வெளியிட்டுள்ளார்கள். இந்நூலில் சுவாமிகளின் சரித்திரச் சுருக்கம் உள்ளது.கோவிலூர் ஆதீனம் ஒன்பதாவது குருமூர்த்திகளான ஶ்ரீலஶ்ரீ இராமநாத ஞான தேசிகர் அவர்களுடைய அருளாட்சியில் ஶ்ரீ தத்துவராய சுவாமிகளின் அதிஷ்டானம் நன் முறையில் பாதுகாக்கப் பெற்று குரு பூஜை முதலியன மிகச் சிறப்பாக நடத்தப்பட்டு வந்தன.இப்போது கோவிலூர் மடாலயத்தின் நேரடி பார்வையில் உள்ளது. சமீபத்தில் 2007 மே மாதம் 4 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.எறும்பூர் ஶ்ரீமத் தத்துவராய சுவாமிகள் திருக்கோவில் 2005 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பாலஸ்தாபனம் செய்யப் பெற்றுத் திருப்பணி தொடங்கப் பெற்றது.கர்ப்பக் கிரஹத்தைத் தவிர மற்ற அர்த்த மண்டபம், மஹாமண்டபம், திருமதில் போன்ற எல்லாவற்றையும் முழுதுமாக இடித்துப் புதிய கல் உத்திரங்கள், தூண்கள் செய்து முற்றும் புதிய கல் திருப்பணியாக ஏறக்குறைய 28 லட்சம் செலவில் இரண்டாண்டுக்கு மேல் திருப்பணி செய்து முடிக்கப் பெற்றது. மேற்படி திருப்பணியை அனுபவம் மிக்க சிற்பக் கலாமணி பத்மஶ்ரீ முத்தையா ஸ்தபதிகளைக் கொண்டு மிக நேர்த்தியாகச் செய்யப் பெற்றுள்ளது.2007 ஆம் ஆண்டு மே மாதம் 4 ஆம் தேதி ஆறுகால யாக சாலை பூஜைகளுடன் கும்பாபிஷேகம் நடைபெற்றது. சிதம்பரம் நடராஜர் கோவில் தீக்ஷிதர்களால் கும்பாபிஷேஹம் நடத்தி வைக்கப்பட்டது. வேதாந்த இலக்கியக் கருத்தரங்குகள் இன்னிசை நிகழ்ச்சிகளுடன் ஏறக்குறைய 6 லட்சம் செலவில் குமாபிஷேகம் செய்யப் பெற்றது. மேற்படி கும்பாபிஷேஹத்தினை நம் குருமகா சந்நிதானம், ஜகத்குரு பூஜ்யஶ்ரீ தயானந்த சரஸ்வதி மற்றும் பல ஞானத் துறவிகள் முன்னிலையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திருவருளும் குருவருளும் பெற்றார்கள். தற்போது எறும்பூர் திருக்கோவிலுக்கு பக்தர்கள் வருவது மிக அதிகரித்துள்ளது.
சாலிவாடி என்றும் கழனிவாசல் என்றும் பெயருடைய ஊரில் சிவகுப்தன் என்ற தன வணிகன் இருந்தான்.
வேதாந்த வடமொழி நூல்களை வடமொழி அறியாதாரும் பயிலத் தமிழாக்கம் செய்து தமிழில் பாடம் சொல்லும் முறையைத் தொடங்கிய ஊர்.
கோவிலூர் கொற்றவாளீசர் திருக்கோயில்
..
கோவிலூர்ப் புராணத்தில் உள்ள பலகதைகளில் இதுவும் ஒன்று. காரைக்குடிக்குச் சமீபத்திலுள்ள கோவிலூர். மதுப்ரிய முனிவர் தவம் செய்த தலம். அவருடைய தவச் சிறப்பால் இந்த ஊர்க்குளத்துக்கு மது புஷ்கரிணி என்றும் அருகில் ஓடும் ஆற்றுக்குத் தேனாறு என்றும் பெயர் விளங்குகிறது.
கோவிலூர் இன்னும் பல காரணங்களால் பெருமை பெற்றிருக்கிறது. கோவிலை வைத்துத் தோன்றிய ஊர் இது. திரிசிரபுரம் மகாவித்வான் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளையவர்கள் தெள்ளு தமிழில் தலபுராணம் பாடிய ஊர். வேதாந்த வடமொழி நூல்களை வடமொழி அறியாதாரும் பயிலத் தமிழாக்கம் செய்து தமிழில் பாடம் சொல்லும் முறையைத் தொடங்கிய ஊர். ஆண்டவர் என்ற மகான் வேதாந்த மடம் நிறுவிய ஊர். ஞான மார்க்கத்தை, ஆதிசங்கர பகவத் பாதருடைய அத்வைத தத்துவத்தை உணர்ந்த ஞானியர் மடத் தலைவர்களாக விளங்கிய ஊர்.
(தொடரும்)
வேதாந்த நூல்கள் பல கற்றபின் கடைசியாக ஞான வாசிட்டம் படித்துப் பூர்த்தி செய்வது முறை. வசிஷ்ட முனிவர் ஶ்ரீராமபிரானுக்கு உபதேசித்ததன் சாரம் இந்த நூல். வாசிட்டம் படித்த பின்னர் குருவுக்கு தக்ஷிணை கொடுத்து மரியாதை செய்து அவர் அனுக்ரஹம் பெற வேண்டும். ஆண்டவர் தம் தந்தையிடம் குரு தக்ஷிணைக்குப் பொருள் கேட்டார். தகப்பனார் காதில் விழாத மாதிரி இருந்தார். கோபம் கொண்ட ஆண்டவர், "காது செவிடாகி விட்டதா?" என்று கேட்டார். அந்த விநாடி முதல் தந்தைக்குக் காது கேட்கவில்லை. பிறகு உகந்தலிங்க சுவாமிகள் கூறியபடி ஆண்டவர் திருநீறு கொடுக்கவே மறுபடியும் காது கேட்க ஆரம்பித்தது.
ஏழகப் பெருமாள் விண்ணகரம்.இவை அல்லாமல் கொற்றவை கோயில்கள் சிலவும் இங்கு இருந்தன. இன்றைய தினம் பிரபலமாக உள்ள காரைக்குடி நகரம் இதனுடைய ஒரு பகுதியே ஆகும்.இன்று வரலாற்றுப் பெருமை மிக்கதும், மிக்க வீரம் செறிந்ததுமான ஏழகப்பெரும்படை இங்குதான் இருந்தது. அந்தப் பெரும்படைதான் மூன்றாம் குலோத்துங்க சோழனுக்கும் குலசேகர பாண்டியனுக்கும் நடைபெற்ற பெரும்போரில் சதுர்வேதமங்கலம் என்று இன்று வழங்கும் மட்டியூருக்குப் பக்கத்தில் பொருதி சோழப்படைக்குப் பெருஞ்சேதத்தை உண்டாக்கியதாகும்.
வணக்கம்.தமிழகத்தின் கோவிலூர் ஆதீனம் நிகழ்த்திவரும் சமூக சமயத்தொண்டினை பகிர்ந்து கொள்ளும் சில விழியப் பதிவுகளை அண்மையில் வெளியிட்டிருந்தோம்.1. கோவிலூர் ஆலயம் - http://www.youtube.com/watch?v=7NWm8iE1_642. கோவிலூர் மடத்தின் ஆதீனகர்த்தர் பேட்டி பகுதி 1 - http://www.youtube.com/watch?v=_AyS-caSqHE3. கோவிலூர் மடத்தின் ஆதீனகர்த்தர் பேட்டி பகுதி 2 - http://www.youtube.com/watch?v=oS3z72NHsgU4. கோவிலூர் ஆதினத்தின் செட்டிநாடு அருங்காட்சியகம் பகுதி 1 - http://www.youtube.com/watch?v=vFQ03XapRwY5. கோவிலூர் ஆதினத்தின் செட்டிநாடு அருங்காட்சியகம் பகுதி 2 - http://www.youtube.com/watch?v=v2YON-8xKigஅதன் தொடர்ச்சியாக இவ்வாதீனத்தை அறிமுகப்படுத்தும் தகவல்களின் தொகுப்பாக பல தகவல்களை ஒவ்வொன்றாக இந்த இழையில் பதிந்து வெளியிட உள்ளோம். இப்பதிவுகள் அடங்கிய நூலினை ஆதீனத்தின் திருமடத்திற்கு நான் நேரில் சென்றிருந்த போது ஆதீனகர்த்தரவர்கள் தமிழ் மரபு அறக்கட்டளைக்காக வழங்கினார்கள். இந்த நூலில் ஆதீனத்தை அறிமுகப்படுத்தும் பெரிய சிறிய கட்டுரைகளும் பதிவுகளும் அடங்கியிருக்கின்றன. வரலாற்றுப் பதிவு என்றும் இதனைக் குறிப்பிடலாம். இக்கட்டுரைகளை மின்தமிழ் வாசகர்கள் வாசித்து அறிந்து கொள்ளும் வகையில் தொடர்ந்து இங்கு வெளியிட உள்ளோம்.இக்கட்டுரைகளைத் தட்டச்சும் பணியை கீதா சாம்பசிவம் அவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள். முதல் பதிவின் முதல் பகுதி இன்று வெளியிடப்படுகின்றது. நவராத்திரி விஷேஷம் தொடங்கும் நன்னாளில் இப்பதிவுகள் தொடங்கப்படுவதை தனி விஷேஷமாகக் கருதுகின்றேன்.இப்பதிவுகளில் வெளியிடப்படும் செய்திகள் தொடர்பான வாசகர்களின் கருத்துக்கள் இவ்விழையில் எதிர்பார்க்கப்படுகின்றன.சுபாஷிணி ட்ரெம்மல்[தமிழ் மரபு அறக்கட்டளை]பதிவு 1தவத்திரு நாச்சியப்ப ஞான தேசிக சுவாமிகள்கோவிலூர் ஆதீனத்தின் வேதாந்தப் பரம்பரையில் பனிரண்டாவது பட்டத்தில் அருளாட்சி செலுத்தும் தவத்திரு நாச்சியப்ப ஞான தேசிக சுவாமிகள் உலக வரைபடத்தில் கோவிலூருக்கு உயர்ந்த இடத்தைப் பெற்றுத் தந்த உத்தமராவார்கள். வேதாந்தத்தை யாவருக்கும் பொதுவுடமையாக்கிய புதுமைச் சித்தரான கோவிலூர் ஆண்டவரின் மகன் வழியில் ஆறாவது தலைமுறைப்பேரனான நாச்சியப்ப சுவாமிகள் உலகெலாம் உணர்ந்து ஓதற்கரிய பெருமான் புகழை உலகெலாம் பரப்பும் உறுதி பூண்டவர். வேகமும் விவேகமும் கொண்ட சுவாமிகள் வாழ்க்கை வியக்கத்தக்க நிகழ்ச்சிகளின் தொகுப்பாக விளங்குகிறது.காரைக்குடிக்கு அருகில் உள்ள மானகிரி என்ற சிற்றூரில் 29--5--1923 இல் கோவிலூர் ஆண்டவரின் குடும்பத்தில் மகன் வழியில் ஆறாவது தலைமுறையில் பேரனாகத் தோன்றினார் நாச்சியப்பர். மானகிரியில் திண்ணைப்பள்ளிக்கூடத்திலும் காரைக்குடியில் ஶ்ரீ மீனாக்ஷி சுந்தரேசுவரர் உயர்நிலைப்பள்ளியிலும் கல்வி கற்றார். அடையாறு பெசன்ட் நினைவுப் பள்ளியில் படித்துப் பள்ளி இறுதித் தேர்வை முடித்து, மாநிலக் கல்லூரியில் இன்டர்மீடியட் படிப்பை முடித்தார். அப்போழுது கிடைத்த அறிவியல் அறிவு அவர் வாழ்க்கை சிறக்க உதவி செய்தது. உலகம் போற்றும் கலாக்ஷேத்ரா நிறுவனத்தை 1936-இல் தொடங்கி நடனக்கலைக்கும் இசைக்கலைக்கும் பெருந்தொண்டாற்றிப் பாரத நாட்டின் கலை வரலாற்றில் சிறப்பிடம் பெற்ற அன்னை ருக்மிணி அருண்டேல் அவர்களின் பேராதரவால் சென்னையில் பள்ளிப் படிப்பையும் கல்லூரிப் படிப்பையும் பெற்ற நாச்சியப்பர் மேலை நாடுகளுக்குச் சென்று கற்று அச்சுக்கலையிலும் நிழற்படக் கலையிலும் நிகரற்றவரானார். 1957-இல் நியூயார்க்கில் நிழற்படக் கலையைக் கற்று 1963 இல் உலகப் புகழ் பெற்ற கோடக் கம்பெனியில் பணியாற்றினார். ஜெர்மனியிலும் லண்டனிலும் நிழற்பட நுட்பங்களைக் கற்றார். லண்டன், நியூயார்க், டெட்ராய்ட் ஆகிய நகரங்களில் மேடைக்கலை--அரங்க ஒளியமைப்பு ஆகியவை கற்றுத் தேர்ந்தார்.1944-இல் கலாக்ஷேத்ராவில் தம்மை வளர்த்த ருக்மிணி அருண்டேல் அம்மையாரிடம் நேர்முக உதவியாளராகச் சேர்ந்தார். 1946-இல் கலாக்ஷேத்ரா பதிப்பகம் தொடங்கி மரியா மாண்டிசோரி அம்மையாரின் குழந்தைக்கல்வித் திட்டத்துக்கான புத்தகங்களை வெளியிடத் தொடங்கினார். 1947--இல் கலாக்ஷேத்ராவில் அரங்க நிர்வாகப் பொறுப்பேற்றார். ஒளியமைப்பில் புதுமை செய்து புகழ் பெற்றார். 1953--இல் தம்முடைய 30 ஆவது வயதில் வண்ணப் புகைப்படங்கள் சம்பந்தப்பட்ட பெரிய சோதனைச் சாலையை உருவாக்கிப்புகைப்படக் கலையின் மூலம் விளம்பரக் கலையும் வளர உதவினார். 1955 முதல் 1972 முடிய கலாக்ஷேத்ராவின் நிர்வாகக் குழுவில் பெரும்பணி ஆற்றினார். குவாலியரில் குற்றாலக் குறவஞ்சி நாட்டிய நாடகம், தில்லியில் குமாரசம்பவம், அயல்நாடுகளில் பரதநாட்டியம் என்று உலகம் முழுவதும் கலைப்பணியாற்றச் சென்ற ருக்மிணி அருண்டேல் அவர்கள் குழுவுடன் மேடை நிர்வாகியாகவும், பயண அமைப்பாளராகவும், ஒளியமைப்பு வல்லுநராகவும் சென்று பணியாற்றினார். கிழக்கு ஐரோப்பா, இந்தோனேஷியா, காம்போடியா, ஜாவா, பெஜியம், இத்தாலி, சுவிட்சர்லாந்து, ரஷ்யா, ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின் என்று உலக நாடுகளில் இவர் கால்படாத இடமில்லை என்று கூறுமாறு கலாக்ஷேத்ராப் பணி செய்தார். 1979 முதல்1984 முடிய நியூயார்க்கில் அச்சுக்கலை, நிழற்படக் கலை ஆகியவற்றில் வல்லுநர்களாகத் திகழ்ந்த திறமையாளர்களுடன் இணைந்து பணியாற்றி உலகப் புகழ் பெற்றார். கலாக்ஷேத்ராவின் மதிப்பு மிக்க தூண்களில் குறிப்பிடத்தக்கவராக விளங்கி, அங்கே மாணவராகவும், உதவியாளராகவும், கலைஞராகவும், அச்சக உரிமையாளராகவும், மேடை நிர்வாகியாகவும், அறக்கட்டளைச் செயலாளராகவும், ஒல்லும்வாரெல்லாம் அறவீனை ஓவாது சொல்லும் வாயெல்லாம் செயவல்லவராகத் திகழ்ந்து , அந்த நிறுவனத்தில் புகழ்க்கொடி பட்டொளி வீசிப் பறக்கச் செய்தார்.இவ்வாறு சேர்த்த திறமையும் அதிகம். சேர்த்த செல்வமும் அதிகம். தேடி வந்த புகழும் அதிகம் என்று வாழ்ந்து வந்த சித. நாச்சியப்பரை தவத்திரு நாச்சியப்ப ஞான தேசிகராக்கிக் கோவிலூர் ஆதீனத்துக்குக் கொண்டு வர வேண்டுமென்று அன்னை திருநெல்லையம்மை திருவுள்ளம் கொண்டாள். இது இவருடைய வாழ்க்கையின் இரண்டாம் பாகம். பொன்னைக் கொடுத்த இறைவன் மெய்ப்பொருளும் கொடுக்க நினைத்தான். இந்த ஞான வாழ்க்கைக்குப் பன்றிமலை சுவாமிகள் குறிப்புக் காட்டினார்.1975 ஆம் ஆண்டில் ஆன்மிகச் செல்வர் டி.எஸ்.பாலகிருஷ்ண சாஸ்திரிகள் நாச்சியப்பரைக் காஞ்சி மாமுனிவரிடம் அறிமுகப் படுத்தினார். காஞ்சி முனிவர், "நீ நகரத்தார் இல்லையோ! கோவிலூரார் குடும்பம் என்கிறாய். கோவிலூர் மடத்துடன் சம்பந்தம் வைத்துக் கொள்." என்றார். அந்த வாக்கு இருபதாண்டுகளில் பலித்தது.கல்கியின் திருமகளார் ஆனந்தி ராமச்சந்திரன் அவர்கள் கூறியது போல விதி மாற்றியமைக்கப்பட்டு விட்டது. கோபால கிருஷ்ண பாரதி பாடியபடிவிதியின் எழுத்தைக் கிழித்தாச்சு-- முன்னம்விட்டகுறை வந்து தொட்டாச்சுஅன்று நந்தனுக்கு நடந்தது இன்று நாச்சியப்பருக்கு நடந்து விட்டது. அதனால் தானே நாச்சியப்ப சுவாமிகள் அமெரிக்காவில் நடராசருக்குக் கோயில் கட்ட எண்ணினார்?மக்கள் பிணி தீர்க்கும் இயற்கை மருத்துவராகவும் சிலகாலம் பணியாற்றிய நாச்சியப்பர் மனப்பிணி தீர்க்கும் மருத்துவரானார்.ஆண்டவர் மரபில் பிறந்த புண்ணியத்தால் மீண்டும் பிரம்ம சபையில் ஆண்டவரே வந்து உட்கார்ந்து விட்டார்.1995- ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14 ஆம் நாள் சிதம்பர செட்டியார் சீதாலக்ஷ்மி ஆச்சியின் திருமகன், ஆண்டவரின் அருட்பேரனாக, வேதாந்த பீடத்தில் வித்தகத் தலைமையேற்று தவத்திரு நாச்சியப்ப ஞான தேசிகராக, மக்கள் போற்ற மனத்துறவும் தவத்துறவும் கொண்டார். கோவிலூர் மடத்தின் பொற்காலம் கொற்றவாளீஸரால் எழுதப் பட்டு விட்டது."எதிலும் விருப்பமின்றி எவரிடத்தும் பகையில்லாமல், சமநோக்குடன் இருந்துவரும் மகாத்மாவின் பின்னே, அவருடைய பாதத்தின் தூசி என் மீது விழுந்து நான் உய்ய மாட்டேனா என்று ஆவலில் நான் போய்க் கொண்டிருக்கிறேன்." என்று பாகவதத்தில் கண்ணன் கூறியபடி பாரதநாட்டுக்கு இன்னொரு துறவு--தமிழகத்துக்கு ஒரு விவேகானந்தர்-- கிடைத்துவிட்டார். சனாதன தர்ம உலகப் பல்கலைக் கழகம் தமிழகத்தில் நிறுவப்பட வேண்டும் என்று இறைவன் தீர்மானித்துவிட்டான். கோவிலூர் ஆண்டவர் நிகர்நிலைப் பல்கலைக் கழகம் (Koviluur Andavar Deemed University) தமிழகக் கோயிற்கலைகளையும் பண்பாட்டையும் சிவநெறியையும் வளர்க்கும் வகையில் தோன்ற இருக்கிறது.இவர்கள் ஆற்றி வரும் பணிகள் விளக்கமாக எழுதப்பட்டுள்ளன.கோவிலூர் ஆதீனம் குருமகா சந்நிதானம் சீர்வளர்சீர் நாச்சியப்ப ஞானதேசிகர் தெளிவான சிந்தனையோடும் தொலைநோக்குடனும் திட்டங்களை வகுத்துச் செய்து வருகிறார்கள்.தாம் பட்டத்திற்கு வந்ததும் முதற்காரியமாக, குழந்தைகள் பள்ளி தொடங்கினார்கள். சிறு வயது முதலே குழந்தைகள் நல்ல கல்வி கற்க வேண்டும். குழந்தைகளே சமுதாயத்தின் பெருமைக்குரிய சொத்து--மூலதனம்--தூண்கள் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கையும் குழந்தைகள் பால் பேரன்பும் கொண்டவர்கள். ஆதலால் கல்விப் பணியைத் தலையாய பணியாகக் கருதுகிறார்கள். ஆகவே தான் இளைஞர்கள் உயர்கல்வி பெற்று உயர்ந்தால் சமூகமும் தானே உயர்ந்து நன்னிலை அடையும் என்பதனால் பெரும் தொகை ஒதுக்கி உதவுகிறார்கள்.எந்த நாகரிகத்துக்கும் பண்பாட்டிற்கும் அது சார்ந்து நிற்கும் மரபுகளும் கோவில்களும்தான் அடிப்படை. எல்லா அறங்களும் கலைகளும் கோவிலிற்தான் நடத்தப்பட்டன. எனவே கோவிலைக் காப்பாற்ற வேண்டும். அது சார்ந்த கலைகளைக் காப்பாற்ற வேண்டும். கோவில்கள் நடைபெற வேண்டும் எனில் அதற்குரிய சிப்பந்திகளூம் சடங்குகளை நிறைவேற்றுகிற கலைஞர்களும் தேவை என்பதால் நசிந்து வரும் அனைத்துக் கலைகட்கும் புத்துயிர் ஊட்டி வளர்ப்பதற்காகவே கோவிலூரில் கலைகளுக்கான கல்லூரிகள், பெரும் பொருட்செலவில் நடத்தி வருகிறார்கள். அவற்றை ஒருங்கிணைத்து ஒரு பல்கலைக் கழகமாக நிறுவ வேண்டும் என்ற கனவும் சாமிகட்கு உண்டு. அது நிறைவேறும் நாள் அதிக தூரத்தில் இல்லை.உணவின்றி யாரும் துயர்படக் கூடாது என்ற மனித நேய உள்ளத்தால் ஆதரவில்லாத அனைவர்க்கும் உதவி வருகிறார்கள். நமது பெண்கள் திருமணம் ஆகாமல் இருந்தால் சமுதாயமே நசிந்துவிடும் என்ற உனர்வால் பெண்கள் திருமணத்திற்கு தாராளமாக உதவுகிறார்கள்.கோவிலூர் சார்ந்த எல்லா மடங்களும் தற்சார்புடையதாக, சொந்தக்காலில் நிற்கக் கூடியதாக காலகாலத்திற்கும் வளர்ந்து உயரக்கூடிய நிலையில் இருக்க வேண்டும் என்ற உறுதியான எண்ணத்தினால் எல்லா மடங்களிலும் திருமண மண்டபமோ, கடைகளோ கட்டி நிரந்தர வருவாய்க்கு ஏற்பாடு செய்து வருகிறார்கள்.எல்லா மடங்கட்கும் வருகின்ற அன்பர்கள் தங்கித் தரிசிக்கவும் உணவு உண்ணவும் வசதியான தங்கும் அறைகள் கட்டி எல்லா மடங்களிலும் அன்னதானம் நடைபெறவும் ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள்.மடத்தைச் சார்ந்த, மடத்தின் பொறுப்பில் உள்ள கோவில்கள், அதிஷ்டானங்கள் யாவற்றையும் ஒவ்வொன்றாகச் செப்பனிட்டு புதிய மெருகுடன் வசதிகளையும் கூட்டிக் கும்பாபிஷேஹங்கள் செய்து வருகிறார்கள். ஒவ்வொரு கோவிலும் பனிரண்டு ஆண்டுகட்கு ஒருமுறைஅ பழுது நீக்கவும் கும்பாபிஷேஹங்கள் நடத்தவும் வேண்டுமென அருள் ஆணை இட்டுள்ளார்கள்.கோவிலூரை ஒரு கல்வி நகரமாக ஆக்கப் பெரிதும் விருப்பம் கொண்டுள்ளார்கள். செய்யும் எதனையும் செம்மையாகச் செய்ய வேண்டும் என்பதில் மிக உறுதியாக உள்ளவர்கள் ஆதலால், தரமான கல்வி தந்து இளைஞர்கட்கு ஏற்றம் தர வேண்டும் என்பதில் மிகவும் குறியாக உள்ளார்கள். அவர்கள் கனவுகள் மிகவும் பெரியவை, சிறந்தவை, அவை யாவும் நிறைவேற ஆண்டவர் அருள் பாலிக்க வேண்டும்.சீர் வளர் சீர் நாச்சியப்ப ஞான தேசிக சுவாமிகள் பொருள் உதவியால் நடைபெற்று வரும் பணிகள் தொடர்ந்து தரப்பட்டுள்ளன.பதிவு 1 தொடரும்..!
இராம நாததேசிகர் காலத்தில் நிகழ்ந்த திருக்குட நீராட்டின் போது வெளியிட்ட அவர் ஏழகப் பெருமாள் விண்ணகரம் பற்றி கல் சொன்ன கதை என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினார்கள்.
கழனி வாசற் பகுதியில் அய்யுளி அம்மன் என்ற கொற்றவை கோவில் உள்ளது.
என்ன காரணம் என்று தெரியவில்லை.சிதைநத நிலையில் உள்ள விண்ணகரம் இதுவரை யாராலும் திருப்பணி செய்யப் பெற
வில்லை.பல ஆலயத் திருப்பணிகள் செய்த ஆதீன கர்த்தர்களும் செய்ய முன் வரவில்லை,
நகரத்தார்களின் ஒன்பது கோவில் பிரிவுகளில் ஒரு கோவிலில் ஏழகப்பெருந்தெரு என்ற சொல்லோடு கோவிலூரின் ஆதிப்பெயரான வீரபாண்டிய புரம் என்றும் சேர்த்துச் சொல்லப் பெற்றுள்ளது.அவை நகரத்தார் தங்கள் திருமணங்களில் எழுதும் ஒப்புதல் பத்திரமான் இசை குடிமானத்தில் எழுதுவர்.அவ்வாறு எழுதுவது ஒரு பிரிவினர் மட்டுமே.அது
1.கேரள சிங்க வளநாடாகிய ஏழகப் பெருந்திருவான வீரபாண்டிய புரத்தில் (வைரவன் கோவில்)
குறிப்பு - திருநெல்லை கோவிலைக் கட்ட நினைத்த ஆண்டவர் அதற்கெனத் தயாரித்த் வ்ரைபடத்தில் வடமேற்கு மூலையில்
ஓர் இடத்தை ஒதுக்கிக் காட்டியிருந்தார்.ஆனால் கட்டவில்லை.பன்னிரண்டாம் ஆதீனமும் கோவிலூரை உலகறியச் செய்தவரும்
ஆன சீர் வள்ர் சீர் நாச்சியப்ப ஞான தேசிகர் கொற்ற வாளீசர் கோவில் திருப்பணி செய்தகாலை ஆண்டவர் எழுதிய குறிப்பின் படி
பெருமாளுக்கு ஒரு சந்நதியை ஏற்படுத்தினார்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/
நடராஜன் கல்பட்டு
எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி
வேறொன் றறியேன் பராபரமே
படங்கள் எடுக்க வில்லையா?
படங்கள் எடுக்க வில்லையா?
படங்கள் சுபா பகிர்வார்கள்.
2014-01-29 Natrajan Kalpattu Narasimhan <knn...@gmail.com>:
படங்கள் எடுக்க வில்லையா?
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
சாதாரண மக்கள் தேவர் என்றும் வன்னியர் என்றும் செட்டியார்கள் என்றும் இன்னும் பலவாறு சாதிப் பெருமைகளைப் பேசி பெருமைபடுவது தவறு என்றாலும் மன்னிக்கலாம். ஆனால ஓர் ஆதீன கர்த்தார் இப்படிப்பேசுவது எப்ப்டி பொருந்தும் என்று தெரியவில்லை,
ஆயினும் ஓர் சாதியினருக்கே பாடுபடும் வகையில் ஓர் ஆதீனத்தை வழி நடாத்தி செல்வது ஆன்மீகம் அல்ல என்றே படுகின்றது. இப்படிப்பட்டோர் காவி உடுத்டுவவதின் பொருள் என்ன? எதை அவர்கள் துறந்துள்ளார்கள்?
இப்படி ஓர் ஆதீனமே இயங்கினால் 'ஒன்றே குலமும் ஒருவனேத் தேவனும்" என்பதெல்லாம் என்ன ஆவது? இது போன்ற ஞான வாக்குகளை ஆதரிக்காத போற்றாத ஆதீனங்கள உண்மையான ஆதீனங்கள் என்று கூற வருமா?
மேலும் காரைக்கால அம்மையார் பட்டினத்ததடிகள் போன்றோரை நகரத்தார் அல்லது செட்டியார்கள் என்கின்றீர்கள், யான் அறிந்த வரையில் இவ்விருவரும் அப்படி எங்கும் கூறியதில்லை, அவர்கள் சாதியை போற்றியவர்கள் இல்லை, அப்படியிருக்க அவர்களை நகரத்தார் சாதியில் அடக்குவது நியாயமா?
ஆதீனத்தின் சொத்துக்கள் அனைத்தும் நகரத்தாருடைய நன்கொடை. வேறு சமுதாயத்தினர் கொடை ஏதும் நான் அறிந்து இல்லை.
கொடையில் நகரத்தார் சமுதாய மக்கள் அனைவரும் ஈடுபட வேண்டும் என்பது கீழ்க்கண்ட கட்டுரையாளரின் குறிக்கோள். ஏனென்றால் 1930 வரை காரைக்குடி மேலமடத்தில் நகரத்தார் கூடி ஊர்வாரியாக அனைவரும் நன்கொடை அளித்துள்ளனர். அச்சமுதாயக் கடமை கட்டுரையில் வலியுறுத்தப் படுகிறது. இன்று பெரும்பகுதிப் பணி நாச்சியப்ப சுவாமிகள் என்ற ஒருவர் பங்களிப்பாக உள்ள நிலையில் சமுதாயக் கடமையாக வழிபாடும் கொடையும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அக்கொடை ஊருக்கானது. அந்தச் சமுதாயத்திற்கானது மட்டும் அல்ல. ஒருநாள் உணவு வேளையில் கலந்துகொண்டால் பொதுமைப்படித்திப் பேசுவது எவ்வளவு முரண் என்பது தெரியவரும்.
2014-02-03 Geetha Sambasivam <geetha...@gmail.com>:
கோவிலூர் ஆதீனமும் நகரத்தார் கடமையும்
இவ்வளவு புகழ்மிக்க ஓர் ஆதீனத்தைப் பற்றி நம்மவர் இன்னும் அதிகமாகத் தெரிந்து கொள்ள வேண்டும். இந்நோக்கத்தை நிறைவேற்றவே இந்த மலர் வெளியிடப் பெறுகிறது.
ஒன்பது நகர்க் கோவிலாரும் காரைக்குடி மேலமடத்தில் கூடி, கோவிலூர் ஆதீனத்துக்கு நன்கொடை எழுதும் பழக்கம் 1930 வரை இருந்து வந்தது. இதைப் புதுப்பிக்க வேண்டும்.நகரத்தார்கள் தங்களுடைய ஊர்களில் நடைபெறும் பொது நிகழ்ச்சிகளுக்கும், கும்பாபிஷேகம் முதலியவற்றிற்கும் கோவிலூர் ஆதீனகர்த்தர்களை அழைத்து, நகரக் கோயிலில் பூரண கும்பத்துடன் வரவேற்றுப் பாத காணிக்கை முதலியன வைத்து மரியாதை செய்ய வேண்டும். உலகியல் ஈடுபாடும் போலி நாகரிக முதிர்ச்சியும் நம்மை மயக்கியிருப்பதால் நாம் நமது பண்பாடுகளை நல்ல மரபுகளை அடியோடு மறந்துவிட்டோம்.மேற்கண்டவாறு நாம் நடந்து கொள்வது நம் நன்மைக்காகவே ஆகும். ஞானச் செல்வர்களை மதிப்பதாலும் போற்றுவதாலும் அவர்கள் ஒரு பயனும் பெறப் போவதில்லை.
வயதான காலத்தில் ஓர் ஊன்றுகோல் தேவைப்படுகிறது. ஓர் ஊன்றுகோல் தனி ஒருவனுக்குச் செய்யும் உதவிகளை, அருளாளர்கள் சமுதாயம் முழுமைக்கும் செய்கிறார்கள்.
மேலும் காரைக்கால அம்மையார் பட்டினத்ததடிகள் போன்றோரை நகரத்தார் அல்லது செட்டியார்கள் என்கின்றீர்கள், யான் அறிந்த வரையில் இவ்விருவரும் அப்படி எங்கும் கூறியதில்லை, அவர்கள் சாதியை போற்றியவர்கள் இல்லை, அப்படியிருக்க அவர்களை நகரத்தார் சாதியில் அடக்குவது நியாயமா?இப்படி ஓர் ஆதீனமே இயங்கினால் 'ஒன்றே குலமும் ஒருவனேத் தேவனும்" என்பதெல்லாம் என்ன ஆவது? இது போன்ற ஞான வாக்குகளை ஆதரிக்காத போற்றாத ஆதீனங்கள உண்மையான ஆதீனங்கள் என்று கூற வருமா?இது கோவிலூர் ஆதினத்தை நோக்கி மாத்திரம் நான் கேட்க வில்லை, தமிழ் நாட்டில் இயங்கும் பல ஆதீனங்கள் இப்படித்தான் என்று கேள்விப்ப்டுகின்றேன்இப்படிப்பட்டோர் காவி உடுத்டுவவதின் பொருள் என்ன? எதை அவர்கள் துறந்துள்ளார்கள்?சாதாரண மக்கள் தேவர் என்றும் வன்னியர் என்றும் செட்டியார்கள் என்றும் இன்னும் பலவாறு சாதிப் பெருமைகளைப் பேசி பெருமைபடுவது தவறு என்றாலும் மன்னிக்கலாம். ஆனால ஓர் ஆதீன கர்த்தார் இப்படிப்பேசுவது எப்ப்டி பொருந்தும் என்று தெரியவில்லை, சிவஞானத்தில் ஆத்ம ஞானத்தில் சிறப்புற்றிருப்போரே ஆதீனங்களாக இருப்பதற்கு தகுதியுடையவர்கள். ஆயினும் ஓர் சாதியினருக்கே பாடுபடும் வகையில் ஓர் ஆதீனத்தை வழி நடாத்தி செல்வது ஆன்மீகம் அல்ல என்றே படுகின்றது.இதைப் படித்ததும் என்னுள் ஓர் கேள்வி எழுந்தது. இப்படிக்கேட்கின்றானே என்று சினந்து ஏதாவது சொல்லமாட்டீர்கள் என்று நம்புகின்றேன்.நின்னா கீதா அவர்களே
மீண்டும் கூறுகின்றேன்இந்தக் கேள்விகள் எல்லாம் உண்மையான ஓர் ஆதீனம் எப்படி இயங்க வேண்டும் என்பதைப் பற்றி நாம் இன்னும் ஆழமாக சிந்திக்க வேண்டும் என்பதற்காகவே. சாதி அடிப்படையில் இயங்கௌம் ஆதீனம் ஓர் உண்மையான ஆதீனமாக இருக்க முடியாது.
உலகன்
ஆதீனத்தின் சொத்துக்கள் அனைத்தும் நகரத்தாருடைய நன்கொடை. வேறு சமுதாயத்தினர் கொடை ஏதும் நான் அறிந்து இல்லை.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
கீழே அந்த கட்டுரையிலிருந்து ஓர் பகுதி.//ஆதீனத்தின் சொத்துக்கள் அனைத்தும் நகரத்தாருடைய நன்கொடை. வேறு சமுதாயத்தினர் கொடை ஏதும் நான் அறிந்து இல்லை.
//
மேற்கண்ட சொற்கள் என்னுடைய சொற்கள். கட்டுரைச் சொற்கள் இவையல்ல. முழுமையாக அறிந்துகொண்டு கருத்துரையுங்கள் என்பதே மீண்டும் என் வேண்டுகோள். கொடை நகரத்தாருடையது. பயன் சாதிசமய வேறுபாடற்ற சமுதாயத்திற்கானது என்று நான் கண்டதைப் பகிர நான் பயன்படுத்திய சொற்கள்.
பினாங்கிலு இதே கதைதான். செட்டியார் கோயில்களால் செட்டியார் அல்லாதாருக்கு எந்த நன்மையும் இல்லை,
இதனால. யாரையும் புண்படுத்தும் இந்த கேள்விகளை நான் கேட்கவில்லை, உண்மைச் சமய வாழ்க்கை மலர வேண்டும் என்பதற்காக்வே இவை.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
கோவிலூர் திருமடத்தின் கிளை மடங்கள்குறிப்பு: கோவிலூர் என்னும் பெயரில் தஞ்சை மாவட்டத்தில் இரு ஊர்களும் மதுரை மாவட்டத்தில் ஓர் ஊரும், சேலம் மாவட்டத்தில் ஓர் ஊரும் உள்ளன. பிற மாவட்டங்களிலும் கோவிலூர்கள் இருக்கக் கூடும். எனவே காரைக்குடியை அடுத்த கோவிலூர் என்று குறிப்பிடுவது, ஐயப்பாட்டைத் தவிர்க்க உதவும். அஞ்சல்களில், கோவிலூர்--630 307, காரைக்குடி(அருகில்) என்று குறிப்பிட வேண்டும்.
10. காசிகாநந்த சுவாமி மடம்மதுரை முதன்மைச் சாலை
திருப்பூவணம் --630 611
சிவகங்கை மாவட்டம்தொலைபேசி: 04575--265684பொறுப்பாளர்: திரு இராமநாதன் செட்டியார்
(தொடரும்)



--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.