1. க௬. தமிழர் செய்ய வேண்டுவன?-திருத்துறைக் கிழார் ++ 2. வெருளி நோய்கள் 836-840: இலக்குவனார் திருவள்ளுவன்

4 views
Skip to first unread message

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Dec 17, 2025, 4:53:17 PM (2 days ago) Dec 17
to thiru thoazhamai, Thamizh Pavai, ara...@aol.com, Akar Aadhan, Paramasivam Marudanayagam, Casmir Raj, Vani Aravanan, pthang...@gmail.com, Bala subramanian, Anna Centenary Library Librarians, wsws sl, Raju Krishnaswamy, விவேக் பாரதி, Lalitha Sundaram, vidya chandran chandran, kalvet...@gmail.com, Neethi Vallinayagam, Sampath Singara, Kumanan K.b. Kanji, madhiyazhagan subbarayan, LION.R. MOURALY, Kandaih Mukunthan, Office, kandasamy santharupi, Tamil Mar Laie, Palanichamy V, HAMIDIA BROWSING CENTRE, raman kannusamy, பூங்குழலி Poonkuzhali, annac...@yahoo.co.in, Karunkal kannan, Solidarity For Malayagam, Manimekalai Prasuram, pandian M.T, Dr. Namadhu MGR, CHERALATHAN A, msvoimaie...@gmail.com, dgvcmut...@gmail.com, Kirubanandan Srinivasan, jainol...@gmail.com, Jeeva Kumaran, mega digital4, mohan raj, Swathi Swamy, Senthilnarayanan Arunachalam, Chitraleka V, Dr Seenivasan Sappani, Rajan Krishnan, Umarani Pappusamy Mysore

க௬. தமிழர் செய்ய வேண்டுவன?-திருத்துறைக் கிழார்



(கரு.  தடைச்சட்டமும் தமிழ் இனமும் 3/3: தொடர்ச்சி)

திருத்துறைக்கிழார் கட்டுரைகள்

புலவர் வி.பொ.பழனிவேலனார்

ஆ.தமிழர்

க௬. தமிழர் செய்ய வேண்டுவன?

க. விலைகள் உயர்வை எதிர்த்து மறியல் செய்தல்.

உ. மதுக்கடைகளை எடுக்கக் கோரி ஆர்ப்பாட்டம்
செய்தல்
௩. உப்பு காய்ச்சுதல், உப்பு அள்ளுதல் போராட்டம்
நடத்தல்.
௪. வரிகொடாப் போராட்டம் நடத்தல்.
ரு. காவிரிநீர் கொடாமலும், திருவள்ளுவர் படிமம்
நாட்ட இசைவு கொடாமலும், கருநாடகத் தமிழர்
பலரைக் காவு கொடுத்த கருநாடக அரசுடன்
தமிழக அரசு எவ்வகை உறவும் வைத்துக்
கொள்ளக் கூடாதென்று தமிழக அரசை
வற்புறுத்தல்.
௬. தமிழ்நாட்டில் வாழும் அயலாரையெல்லாம்
வெளியேற்றுமாறும், இனி எவரையும்
தமிழ்நாட்டில் குடியமர விடக் கூடாதென்றும்
தமிழக அரசை வலியுறுத்திப் போராடல்.

எ. தாழ்த்தப்பட்ட தமிழ் மக்களை மேல்குடியினர் வாழுமிடங்களிலும், கோவில்களின் சுற்றுச் சுவர்களிடையிலும் குடியமர்த்துமாறு புரட்சி செய்தல்.

அ. கோவில்களில் முடக்கப்பட்டுள்ள செல்வங்களை (பொன், வெள்ளிநகைகள்) எல்லாம் எடுத்து நாட்டுநலத்திட்டங்கட்குப் பயன்படுத்துமாறு அரசை வற்புறுத்தல்.
௯. தமிழ்நாட்டுக் கோவில்களில் பூசார்த்திகளாக
எல்லாத் தமிழர்களையும் அமர்த்துமாறு
நடுவணரசை வற்புறுத்த கோவில்களின் முன்
மறியல் போராட்டம் நடத்தல்.

க0.   தமிழகத்திலுள்ள வானொலி, வானொளி 
நிலையங்களுக்கு முன் தமிழ்க் கொலை
செய்யாதே! சீர்திருத்தம் பற்றிப் பேச வாய்ப்பு
கொடு என்று மறியல் ஆர்ப்பாட்டம் செய்தல்.

கக. தமிழகத்திலிருந்து தெரிவு செய்யப்பட்டு
மக்களவை, மாநிலங்களவைக்குச் செல்லும்
உறுப்பினர் தமிழில்தான் பேச வேண்டுமென்று
வற்புறுத்தி கிளர்ச்சி செய்தல்.

        கஉ.  தமிழ்நாட்டில் விளையும் எல்லாப்    
      பொருள்களையும் தமிழ்நாட்டு மக்கட்கே 
      பயன்படுத்துதல் வேண்டும். எஞ்சிய 
      பொருள்களை மட்டுமே அயல்நாடுகட்கு 
      அனுப்புதல் வேண்டுமென்று அரசை 
      வற்புறுத்தி மறியல் செய்தல்.

க௩.   வட்டிக்கடைகளும், வட்டிக்குப் பணங் 
      கொடுப்பவரும் அரசு விதித்துள்ள 
      முறைப்படியே வட்டி வாங்குதல் வேண்டும். 
      அதிகமாக வாங்குபவர் மீது அரசு 
      நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று 
      வற்புறுத்தி மறியல் செய்தல்.

க௪.   இருப்பூர்தித்துறை, அஞ்சல்துறை, வருமான 
      வரித்துறை, சுங்கத்துறை முதலிய 
      நடுவணரசின் ஆளுமையில் 
      உள்ளவற்றையெல்லாம் தமிழக 
      அரசிடம்விட்டுவிடுமாறு நடுவணரசை வலியுறுத்த 
      மறியல் போராட்டம் நடத்தல்.

கரு.   தமிழ்நாட்டிலுள்ள கனிமங்களையும், 
      அவை சார்பான நிறுவனங்களையும் தமிழக 
      அரசிடமே ஒப்படைக்குமாறு நடுவணரசை 
      வற்புறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தல்.


  க௬.  “வெள்ளையனே வெளியேறு” என்று முன் 
       சொன்னபடி இன்று ‘வடவனே வெளியேறு’ 
       என்று குரலெழுப்பல்.  வடவர் வாழும் 
       இடங்களின் முன்னும் வடவர் தொழிலகம் 
       முன்னும் மறியல் செய்தல்.

  கஎ.   தமிழக அலுவலகங்களில் அயலாரை 
       அமர்த்தக் கூடாதென்று புரட்சி செய்தல்.

  கஅ.  இந்தியா விடுதலை பெற்றுவிட்டதென்று 
       பெருமையடித்துக் கொள்ளும் வடவர், 
       தமிழ்நாட்டை ஆண்டான் அடிமை நிலையில் 
       வைத்திருப்பதை எதிர்த்துப் போராடல். இது 
       நம் பிறப்புரிமை.

(தொடரும்)

திருத்துறைக்கிழார் கட்டுரைகள்

தொகுப்பு – முனைவர் வி.பொ.ப.தமிழ்ப்பாவை

--

வெருளி நோய்கள் 836-840: இலக்குவனார் திருவள்ளுவன்

 



(வெருளி நோய்கள் 831-835:  தொடர்ச்சி)

வெருளி நோய்கள் 836-840

  1. குமளி வெருளி – Milophobia

குமளிப் பழம் / சீமை இலந்தம் பழம் (Apple) தொடர்பான அளவு கடந்த பேரச்சம் குமளி வெருளி.
ஆப்பிள் பழம் என்பது பொதுவாகச் சீமை இலந்தை என அழைக்கப் பெறுகிறது. அரத்த(இரத்த) நிறத்தில் இருப்பதால் அரத்தி என்கின்றனர் சிலர். ஆனால் செவ்வல்லியின் பெயர் அரத்தி. எனவே, இதற்குப் பொருந்தாது. ‘உன்னாம்’ என்றும் ‘குமளி’ என்றும் அகராதிகளில் உள்ளன. பயன்பாட்டுவிவரம் தெரியவில்லை. ஓர் அகராதியில் குறிப்பிடப்படும் சொல் வேறு அகராதிகளில் இருப்பதில்லை. ஏதேனும் ஒரு சொல்லை நாம் பரவலாகப் பயன்படுத்தினால் நிலைத்து விடும். எனினும் குறைந்த எழுத்தில் உள்ள குமளி என்பது இங்கே பயன்படுத்தப்பட்டுள்ளது.
Milo என்னும் கிரேக்கச் சொல்லிற்குக் குமளி(Apple) எனப் பொருள்.
00

  1. குமளிச் சாறு வெருளி – Chymomilouphobia

குமளிச் சாறு / சீமை இலந்தைச் சாறு(apple juice) குறித்த வரம்பற்ற பேரச்சம் சீமை குமளிச் சாறு வெருளி.
காண்க: குமளி வெருளி(Milophobia)
00

  1. குமிழி வெருளி – Ebulliophobia

குமிழி தொடர்பான அளவுகடந்த பேரச்சம் குமிழி வெருளி.
குமிழ்கள் வரக்கூடிய நீர்மங்கள், சவக்காரம்/ சவுக்காரம்/ சவர்க்காரம்/ வழலை(soap)நீர், அதக்கு பண்டம்(chewing gum) முதலானவற்றைப் பார்த்தாலே பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.
ebullio என்னும் இலத்தீன் சொல்லிற்கு நீர்க்குமிழி, கொப்புளம் எனப் பொருள்கள்.
00

  1. குமிழ் விளக்கு வெருளி – Dengpaophobia

ஒளி விளக்கு / குமிழ் விளக்கு(lightbulb) குறித்த வரம்பற்ற பேரச்சம் குமிழ் விளக்கு வெருளி.
00

  1. குமுக ஊடக வெருளி – SocialMediaphobia/Socmephobia

குமுக ஊடகங்கள் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் குமுக ஊடக வெருளி.
சுட்டுரை வெருளி(Twitterphobia), முகநூல் வெருளி(Facebookphobia), மதிப்புக் கேட்டு வெருளி/ கெடுமதிப்பு வெருளி
(Oppugnophobia(2)) எல்லாம் இணைந்த வெருளியாக இவ்வெருளி உள்ளது. தனிப்பட்ட நிறுவனங்களுக்கும் குமுக ஊடக வெருளி உள்ளது.
நம்முடைய கணக்கில் தவறாக வேறு சிலர் உள்நுழைந்து தவறான தகவல்களைப் பரப்பி கெட்ட பெயர் ஏற்படுத்தித் தருவார்கள் என்ற பேரச்சமும் இருக்கும். நம் கணக்கில் போலித் தளங்களைத் தொடங்கியும் அவப்பெயர் ஏற்படுத்துவார்கள் என்ற பெருங்கவலை இருக்கும்.
00

(தொடரும்) 

இலக்குவனார் திருவள்ளுவன் 

வெருளி அறிவியல் 2/5

--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

Reply all
Reply to author
Forward
0 new messages