கலியனை நினை மனமே!

28 views
Skip to first unread message

shylaja

unread,
Dec 4, 2014, 10:46:53 PM12/4/14
to mintamil, vallamai
கார்த்திகை மாதம் கிருத்திகா நட்த்திரத்தில் அவதரித்தவர் கலியன். 
இன்றைக்கு கலியனின் அவதார தினம்!

இவர் முகத்தில் நல்ல ஒளிகொண்டவராம். வீரத்திருமுகமும் கூட!, எதிரிகளுக்கு எமன்போல தோற்றமளித்ததால்  பரகாலன் எனப்பெயர்  இவருக்கு  உண்டு.
 
 
மகாபுத்திசாலியாய் வளர்ந்த இவரை தஞ்சை மன்னன் தனது அவையில் சேனாதிபதியாக வைத்துக்கொண்டார்.
 
 
இவரது குதிரைக்கு ஆடல்மா என்று பெயர்.நர்த்தனம் செய்யும் குதிரையாம்! இவர் ஏறி உட்கார்ந்தால் நாலுகாலும் பூமியில் இருக்காதாம் அப்படி ஒரு வேகம். இவரது பராக்கிரமங்களைக்கண்டு குறுநிலமன்னராக ஆக்கினான். திருமங்கை மன்னன் எனப்பெயர்பெற்றார் கலியன்.

 நம்மாழ்வாரை அடுத்து அதிகமான பாசுரங்களைப் பாடியவர்.   கவிதைச் சோதனைகளைச் செய்தவர் என்பதால் இவரை ஆசுகவி, சித்திரகவி, மதுரகவி, வித்தாரகவி என்று சிறப்பிப்பர்

பன்னிரு ஆழ்வார்களில் கடைக்குட்டி! அன்பு மனைவியின் ஆணைப்படி  திருமால் கோவில்களுக்குத்திருப்பணி செய்ய  ஆயத்தமானார்  ஆனால்  போதிய நிதி இல்லை. ஆகவே வழிப்பறி கொள்ளை என மேற்கொண்ட  ராபின்ஹுட் ஆழ்வார்  இவரே! அப்படி வழிப்பறி செய்கையில் அண்ணலிடம் மனதைப்பறிகொடுத்து குலம் தரும்  செல்வம் தரும் என ஆரம்பிக்கும் பல இனிய பாசுரங்களைத்தந்த  பரகாலனின் தமிழ்  மிக எளிமை. தன்னைப்பெண்ணாய்  உருவகம் செய்துகொண்டு  அண்ணலைத்தான் காதலிப்பதை மடல் ஏறும் அளவுக்கு உரிமையாய்  கோபித்துக்கொண்டு  சொல்லுவதை பல பாசுரங்களில்பார்க்கலாம்.

 1084 பாசுரங்கள். வேதாந்த ஞானம் ஆதம் ஞானம் தத்துவ ஞானம் நிறைந்த பாசுரங்கள். கலியனின் அறிவியல் விளக்கம் கொண்ட பாசுரங்கள் பல உள்ளன.


கடைக்குட்டிகளுக்கு பெற்றோரிடம் சலுகை அதிகம்தானே இவரும் திருமாலிடம்,’ இதோபார் எனக்கு ஒன்றும் நீ யசோதைக்கு பண்ணினதுபோல லீலை காட்டவேண்டாம் தேவகியிடம் அவதாரமாய் வந்ததைப்பண்ணிக்காட்டவேண்டாம் சத்ருக்களை வதம் செய்து மார்பிலே ரத்தத்தைக்காட்டவேண்டாம் எம்பெருமானே நீ உன் திருமேனியக்காட்டினால் போதும் எனக்கு சேவை சாதிக்கவில்லை என்றால் ஈஸ்வர தத்துவத்தையே அழித்துவிடுவேன்’ என்று மடல் எடுக்கிறார்!
பரகால நாயகியாய் எம்பெருமானிடம் தூது அனுப்ப அன்னம் வேண்டாம் அது பிரிக்கிற இனம் கிளீயை அனுப்பலாமென்றால் அது ரசமான வஸ்துவை கொத்தித்தின்னும். அதுவும் வேண்டாம் என் மனசையே தூது போகச்சொல்கிறேன். ஆனால் தூது போன மனசும் பரகால நாயகியை (அதாவது  பரகாலன் என்னும் திருமங்கை ஆழ்வாரை )மறநது அங்கேயே தங்கிவிட்டதாம்!

இவர் கால்படாத திருத்தலம் தான் உண்டா? .
மிக அதிகமான திவ்ய தேசங்களைப் பாடியது இவர் ஒருவர் தான்!
இன்று திருவரங்கம் கோவில் இப்படிப் பரந்து விரிந்து நிற்கிறது என்றால், அதற்கு முழுக்காரணம் இவரே!


தன் குலதெய்வம் என்று திருமங்கைஆழ்வார் யாரைச்சொல்கிறார் தெரியுமா?
தான் அவதரித்த அருகில் உள்ள திவய்தேசமாகிய திருவாலிதிருநகரப்பெருமானையா?
திருக்குடந்தை ஆராவமுதனையா?
நரையூர் நின்ற நம்பியையா?
திருக்கண்ணபுரம் பெருமாளையா?
கலியுகத்தெய்வம் வேங்கடவனையா
தனக்கு நிதிகாட்டிக்கொடுத்த பேரருளாளனையா
பூலோக வைகுந்தம் ஆளும் அரங்கனையா?


இவர்களில் யாரையுமே இல்லை!
யாரைத் தன் குலதெய்வம் என்கிறார்?
///
எதிரிகளை அழித்து அவர்களுடைய உடல்களை   விலங்குகள்: விரும்பிஉண்ணும்படியாகவும் மெல்லிய லார் பெண்கள் தங்களே விரும்பி அணைக்க மிடுக்குடைய இலங்கேஸ்வரனான ராவணனுடைய நெஞ்சகத்தை அக்கினியானது ஏறி வதம் செய்துகொடுமையான யுத்தத்தைப்பலரும் காணும்படிசெயதவராய் அந்த சிரமம் தீரும்படி திருக்கடல் மல்லையில் ஸ்தல சயனத்தில் பள்ளிகொண்டிருக்கும் எம்பெருமானை மனதாரக்கொண்டாடும் அடியவர்கள் எவர்களோ அவர்கள் எங்கள் குலத்துக்கு தெய்வர்கள் ஆவார்கள்.

விண்டாரை வென்றாவி விலங்குண்ண . மெல்லியலார்
கொண்டாடும் மல்லகலம் அழலேற வெஞ்சமத்துக்
கண்டாரை, கடல்மல்லைத் தலசயனத்துறைவாரை
கொண்டாடும் நெஞ்சுடையாரவர்கள் எங்கள் குலதெய்வமே 


 என்கிறார்  .மேலும்

சந்தப்பூ மலர்ச்சோலை தண் சேறை எம்பெருமான் தாளை நாளும்
சிந்திப்பார்க்கு என் உள்ளம் தேனூறி எப்பொழுதும் தித்திக்குமே!


என்று  இனிமையாய் அருள்கிறார்!



 

Dhivakar

unread,
Dec 5, 2014, 1:17:24 AM12/5/14
to vallamai, mintamil
வழக்கம்போல அருமை. சரி, கலியனுக்கு திருமங்கை மன்னன் என்ற பெயர் ஏன் வந்தது?

அன்புடன்
திவாகர்

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

shylaja

unread,
Dec 5, 2014, 1:34:58 AM12/5/14
to vallamai, mintamil
திருமங்கை  என்ற  இடத்தை  ஆண்டதால் இருக்குமோ   என் யூகம் இது தவறானால் ஆழ்வாரோடு அடியார்களும் மன்னிக்க.
--
 
அன்புடன்
ஷைலஜா




N. Kannan

unread,
Dec 5, 2014, 1:54:58 AM12/5/14
to மின்தமிழ்
2014-12-05 14:34 GMT+08:00 shylaja <shyl...@gmail.com>:
திருமங்கை  என்ற  இடத்தை  ஆண்டதால் இருக்குமோ   என் யூகம் இது தவறானால் ஆழ்வாரோடு அடியார்களும் மன்னிக்க.


ஷைலூ! பிச்சு உதறிட்டீங்க. என்ன அழகாக, ஒன்றையும் விடாமல் முத்தாய்ப்பாய் தமரர் தாள் சென்னிக்கு உவப்பு என்று முடித்திருக்கும் பாங்கு. அடடா!

நம்ம திவாகர் ஊர்க்காரர் அவர்.  எல்லாம் உறவுகள். அவர் சொல்லும் கேட்போம்.

நா.கண்ணன்

Dhivakar

unread,
Dec 5, 2014, 2:01:02 AM12/5/14
to மின்தமிழ்


திருமங்கை வேறு யாருமல்ல, குமுதை நாச்சியார்தான். 
குமுதாவுக்கு எத்தனை பெருமை தெரியுமா? ஸ்ரீலக்ஷ்மிக்கு சமமாக இன்னமும் பூஜை செய்யப்படுபவள். ஆழ்வார் எப்போதும் அகலகில்லேன் குமுதா’ என்று அவள் பக்கத்திலேயே இருப்பார். திருமங்கை குமுதா இவரை எப்படியெல்லாம் ஆட்டிப்படைத்திருக்கிறாள்? ஆயிரம் நாட்கள் அன்னதானம் என்றால் வேடிக்கையா.. பரகாலன் போன்ற குறுநிலமன்னர்களுக்கு சாதாரணமாக இந்த மூன்று வருட கால அன்னதானம் என்பது சர்வ சாதாரணமானதுதான். ஆனால் ஏன் பரகாலனால் தடுமாறித் தடுமாறி, செல்வங்களெல்லாம் இழந்து, கொள்ளையில் ஈடுபட்டு செய்யவேண்டும் என்பது இந்த இடத்தில் சிந்திக்கப்படவேண்டும்? குமுதா நாச்சியார் முன்னரே அந்த ரகசியத்தை அறிவாளோ என்னவோ.. இத்தனைக்கும் பெரிய ஸ்திரீலோலனாகௌஉர்களில் அறியப்பட்டுப் பின்னர் குமுதாவைப் பார்க்க, குமுதாவின் அமுதவிழிகள் இவரை ஆட்கொண்டுவிட்டன.

தன்னைத் திருமணம் செய்ய வேண்டுமானால் ஆயிரம் நாட்கள் அடியார்களுக்கு அன்னதானம் செய்யவேண்டும் என்ற வேண்டுகோள் (?) குமுதா வேண்டியபோதும் அந்த குறுநிலமன்னன் சாதாரணமாக் நினைத்தான்.. ஃபூ என ஊதிவிடலாம் என நினைத்தாரோ என்னவோ.. ஆனால் அந்த அன்னதானமானது நாள் ஆக ஆக அடியார் கூட்டங்களை அதிகம் கவர்ந்தது.. சாப்பாட்டுக்கு பஞ்சமா அந்தக் காலத்தில் என்றால் அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை.. என்ன காரணம்.. என்ன சிறப்பு இந்த அன்னதானத்தில் இருக்கிறது.. திருமங்கை மணாளனான பரகாலன் அன்னதானத்தில் ஏதோ தெய்வீக சிறப்பு இருக்கிறது என்பதை அறிந்து கொண்ட அடியார்கள் நாடு முழுவதும் அந்த சிறப்பைப் பரப்பியதும், கூட்டம் ஒவ்வொரு நாளும் அலைமோதியது.. அப்படியென்ன சிறப்பு.. அமுதம் குமுதாவின் ஆணையால் பறிமாறப்படுகிறது என்பது ஒரு சிறப்பு என்றால், பரகாலனின் பிரசாதத்தை ஒரு கைப்பிடியாவது சாப்பிடவில்லையானால் ஈதென்ன இக வாழ்க்கை என மக்கள் ஆங்காங்கே நினைக்க ஆரம்பித்ததும் ஒரு காரணமாக இருந்ததால் கூட்டம் ஒவ்வொரு நாளும் அலைமோதியது..

அன்னதானம் என்றால் சாதாரணமாகவா என்று முதலில் நினைத்த பரகாலன் செல்வம் முழுவதும் அதற்கே செல்வழித்தாலும் குமுதாவின் வாக்கை எப்படியாவது நிறைவேற்ற வேண்டுமென்ற குறிக்கோளைக் கைவிடவே இல்லை. கடைசியில் கொள்ளையில் ஈடுபட்டு சாட்சாத் நாராயணனின் பொற்பாதத்தையே வாயில் பட, ஞான ஒளி எங்கும் பரகாலனிடம் பரவி கலியனாக திருமாலால் திருநாமம் சூட்டப்பட்டாலும், குமுதா இல்லாவிடில் கலியன் எங்கே, திருமாலில் பொற்பாத சேவை எங்கே.. ஆயிரம் சூரியன்கள் ஒளிவீசும் அவரது ஆயிரம் பாடல்கள் எங்கே.. நாராயண நாமத்துக்கு அடுத்த நாமம் ஆழ்வாருக்கு குமுதா குமுதா குமுதா என்பதுதான்.. 

திருநகரி கோயிலில் இருவருக்கும் இன்று திருமஞ்சனம் கோலாகலத்துடன் கொண்டாடப்பட, கலியன் நா நாராயணனைப் பாட, அவர் கண்களோ குமுதாவையே பார்த்துக் கொண்டு இருக்க, குமுதா நாச்சியார் சமேத திருமங்கை மன்னரின் பாத சேவை ஒன்றே நமக்கு பரமகதியைக் கொடுக்குமே!

அன்புடன்
திவாகர்

shylaja

unread,
Dec 5, 2014, 2:13:09 AM12/5/14
to mintamil
ஆழ்வார்க்கடியாரான  நீங்க சொல்லுவதைவிடவா நான் சொல்லமுடியும்? நன்றி கண்ணன்
திவாகர்  மடலைவாசிக்கவேண்டும் .

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

shylaja

unread,
Dec 5, 2014, 2:24:00 AM12/5/14
to mintamil
2014-12-04 23:00 GMT-08:00 Dhivakar <venkdh...@gmail.com>:


திருமங்கை வேறு யாருமல்ல, குமுதை நாச்சியார்தான். >>>
அப்படியா மங்கையர்கோன் என்று தன்னை சொல்லிக்கொள்வார் என  வாசித்திருக்கிறேன்..அந்த மங்கை  சொந்த மங்கைதானா?!
 
குமுதாவுக்கு எத்தனை பெருமை தெரியுமா? ஸ்ரீலக்ஷ்மிக்கு சமமாக இன்னமும் பூஜை செய்யப்படுபவள். ஆழ்வார் எப்போதும் அகலகில்லேன் குமுதா’ என்று அவள் பக்கத்திலேயே இருப்பார். திருமங்கை குமுதா இவரை எப்படியெல்லாம் ஆட்டிப்படைத்திருக்கிறாள்? ஆயிரம் நாட்கள் அன்னதானம் என்றால் வேடிக்கையா.. பரகாலன் போன்ற குறுநிலமன்னர்களுக்கு சாதாரணமாக இந்த மூன்று வருட கால அன்னதானம் என்பது சர்வ சாதாரணமானதுதான். ஆனால் ஏன் பரகாலனால் தடுமாறித் தடுமாறி, செல்வங்களெல்லாம் இழந்து, கொள்ளையில் ஈடுபட்டு செய்யவேண்டும் என்பது இந்த இடத்தில் சிந்திக்கப்படவேண்டும்? குமுதா நாச்சியார் முன்னரே அந்த ரகசியத்தை அறிவாளோ என்னவோ.. இத்தனைக்கும் பெரிய ஸ்திரீலோலனாகௌஉர்களில் அறியப்பட்டுப் பின்னர் குமுதாவைப் பார்க்க, குமுதாவின் அமுதவிழிகள் இவரை ஆட்கொண்டுவிட்டன.>>>>

கொள்ளையில் அண்ணலின் மனத்தையும் கொள்ளைகொண்டுவிட்டாரே!  

தன்னைத் திருமணம் செய்ய வேண்டுமானால் ஆயிரம் நாட்கள் அடியார்களுக்கு அன்னதானம் செய்யவேண்டும் என்ற வேண்டுகோள் (?) குமுதா வேண்டியபோதும் அந்த குறுநிலமன்னன் சாதாரணமாக் நினைத்தான்.. ஃபூ என ஊதிவிடலாம் என நினைத்தாரோ என்னவோ.. ஆனால் அந்த அன்னதானமானது நாள் ஆக ஆக அடியார் கூட்டங்களை அதிகம் கவர்ந்தது.. சாப்பாட்டுக்கு பஞ்சமா அந்தக் காலத்தில் என்றால் அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை.. என்ன காரணம்.. என்ன சிறப்பு இந்த அன்னதானத்தில் இருக்கிறது.. திருமங்கை மணாளனான பரகாலன் அன்னதானத்தில் ஏதோ தெய்வீக சிறப்பு இருக்கிறது என்பதை அறிந்து கொண்ட அடியார்கள் நாடு முழுவதும் அந்த சிறப்பைப் பரப்பியதும், கூட்டம் ஒவ்வொரு நாளும் அலைமோதியது.. அப்படியென்ன சிறப்பு.. அமுதம் குமுதாவின் ஆணையால் பறிமாறப்படுகிறது என்பது ஒரு சிறப்பு என்றால், பரகாலனின் பிரசாதத்தை ஒரு கைப்பிடியாவது சாப்பிடவில்லையானால் ஈதென்ன இக வாழ்க்கை என மக்கள் ஆங்காங்கே நினைக்க ஆரம்பித்ததும் ஒரு காரணமாக இருந்ததால் கூட்டம் ஒவ்வொரு நாளும் அலைமோதியது..

அன்னதானம் என்றால் சாதாரணமாகவா என்று முதலில் நினைத்த பரகாலன் செல்வம் முழுவதும் அதற்கே செல்வழித்தாலும் குமுதாவின் வாக்கை எப்படியாவது நிறைவேற்ற வேண்டுமென்ற குறிக்கோளைக் கைவிடவே இல்லை. கடைசியில் கொள்ளையில் ஈடுபட்டு சாட்சாத் நாராயணனின் பொற்பாதத்தையே வாயில் பட, ஞான ஒளி எங்கும் பரகாலனிடம் பரவி கலியனாக திருமாலால் திருநாமம் சூட்டப்பட்டாலும், குமுதா இல்லாவிடில் கலியன் எங்கே, திருமாலில் பொற்பாத சேவை எங்கே.. ஆயிரம் சூரியன்கள் ஒளிவீசும் அவரது ஆயிரம் பாடல்கள் எங்கே.. நாராயண நாமத்துக்கு அடுத்த நாமம் ஆழ்வாருக்கு குமுதா குமுதா குமுதா என்பதுதான்.. 

திருநகரி கோயிலில் இருவருக்கும் இன்று திருமஞ்சனம் கோலாகலத்துடன் கொண்டாடப்பட, கலியன் நா நாராயணனைப் பாட, அவர் கண்களோ குமுதாவையே பார்த்துக் கொண்டு இருக்க, குமுதா நாச்சியார் சமேத திருமங்கை மன்னரின் பாத சேவை ஒன்றே நமக்கு பரமகதியைக் கொடுக்குமே!>>>>>>கண்டிப்பாக...  ஆழ்வார்களில் தம்பதி சமேதராய்  இவர்தான் காட்சிகொடுக்கிறார்!  அருமையான விவரங்கள்  திவாகர் மிக்க நன்றி

அன்புடன்
திவாகர்
2014-12-05 12:04 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:
திருமங்கை  என்ற  இடத்தை  ஆண்டதால் இருக்குமோ   என் யூகம் இது தவறானால் ஆழ்வாரோடு அடியார்களும் மன்னிக்க.
2014-12-04 22:17 GMT-08:00 Dhivakar <venkdh...@gmail.com>:
வழக்கம்போல அருமை. சரி, கலியனுக்கு திருமங்கை மன்னன் என்ற பெயர் ஏன் வந்தது?

அன்புடன்
திவாகர்


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

N. Kannan

unread,
Dec 5, 2014, 4:14:52 AM12/5/14
to மின்தமிழ்
2014-12-05 15:12 GMT+08:00 shylaja <shyl...@gmail.com>:
ஆழ்வார்க்கடியாரான  நீங்க சொல்லுவதைவிடவா நான் சொல்லமுடியும்? நன்றி கண்ணன்


இப்போதெல்லாம் நேரமே கிடைப்பதில்லை!
குள்ளக்குளிர நீங்களெல்லாம் குளிர்வித்தாலுண்டு.
எப்படி இருந்தாலென்ன? பகவத் அனுபவம் கிட்டணும் ;-)

நானல்லவோ நன்றி சொல்ல வேண்டும்!

அந்த வேலும் கையுமாக அவர் இருப்பதைப் பார்த்துவிட்டு குயூபெக் ஸ்ரீநிவாசன் (ஆதமி நினைவிருக்கிறதா? ஆதிகாலத்து தமிழ் எழுத்துமுறை) சொல்லுவார், ‘ஸ்வாமி! இவர்தான் அந்த முருகப்பெருமான்!’ என்று. பொருந்தும். கலியனின் தமிழ் ஆளுமை அப்படி!

நா.கண்ணன் 

--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
 
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

நா.ரா.கி.காளைராசன்

unread,
Dec 5, 2014, 10:18:40 AM12/5/14
to mintamil

வணக்கம் .
திருமங்கைமன்னன் பற்றிய தங்களது பதிவும், திருமங்கை பற்றிய ஐயா திவாகர் அவர்களது பதிவும் அருமையிலும் அருமை.
இன்று இதனை வாசிக்கப் பெரும் பேறு பெற்றேன்.

--

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Dec 8, 2014, 1:16:04 AM12/8/14
to வல்லமை, மின்தமிழ்
நல்லதொரு இடுகை..நேரங்கடந்தாவது படிக்க முடிந்ததே!.. இறையன்பர்களைப் பற்றி எப்போதும் நினைக்க ஆவல்..அத்தனை தகவல்களையும் அமுதக் குடமாய் நிறைத்துத் தந்திருக்கிறீர்கள்!.. தேனூறும் இடுகை!..


அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Dec 8, 2014, 1:19:04 AM12/8/14
to வல்லமை, மின்தமிழ், V. Dhivakar
ஆழ்வாரின் அன்னதானச் சிறப்பை இத்துணை விரிவாகப் படிக்கும் பேறு கிடைத்தது!..திவாகர்ஜி!.. திருமங்கை மன்னரின் பாதசேவையை மானசீகமாகப் பெற வைத்து விட்டீர்கள்!.. வணங்குவது ஒன்றே இயலும் என்னால்!..

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.


2014-12-05 12:30 GMT+05:30 Dhivakar <venkdh...@gmail.com>:
​ 
​  
​ 
​   
​   
​  
​ 
​ 
​ 
​ 
​    
​   
​           
​  
​   
​  
​ 
​ 
​  
​  
​   
​      
​  
​   
​     
​           

Geetha Sambasivam

unread,
Dec 8, 2014, 7:00:55 AM12/8/14
to மின்தமிழ்
மிக அருமையான பகிர்வை அளித்த ஷைலஜாவுக்கும் திவாகருக்கும் நன்றி.  பல விஷயங்களைத் தெரிந்து கொண்டேன். திருமங்கை ஆழ்வார்  மங்காசாசனம் செய்யாத கோயில்களே (திவ்ய தேசங்கள்) இல்லை என்னலாம். 

2014-12-05 9:16 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:

shylaja

unread,
Dec 8, 2014, 8:00:52 AM12/8/14
to mintamil
காளைராசன் பார்வதி கீதா அனைவர்க்கும் நன்றி...

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
 
அன்புடன்
ஷைலஜா
புன்னகையைத்தூவினேன்,
நட்பு மலர்ந்தது!
மன்னிக்கப்பழகினேன்,
மன அமைதிவந்தது!
**ஷைலஜா**


Reply all
Reply to author
Forward
0 new messages