
பட்டினப்பாக்கத்திலும், மருவூர்ப்பாக்கத்திலும் மணிகளைத் துளையிடுவோர், மணி வேலைகளைச் செய்வோர் இருந்ததையும் செப்புகிறது சிலப்பதிகாரம். (இந்திரவிழவூரெடுத்த காதை) மன்னனைப் பார்த்து முறையிட வந்த கண்ணகி,
"நல்திறம்படராக் கொற்கை வேந்தே,
என்காற் பொற்சிலம்பு மணியுடையரியே". (வழக்குரைகாதை - 66 - 67)
என்கிறாள்.
பாண்டிய மன்னனை, "மதுரை வேந்தே!" என்று கண்ணகி சொல்லவில்லை.
கொற்கையில்
விளையும் முத்து உனது உடைமையாக இருக்கும் செருக்கினால்தானே, நீ
கண்மூடித்தனமாக நடந்து கொண்டிருக்கிறாய் என்று இடித்துக் கூறும் பாவனையில்
பேசியவள் கண்ணகி.
காரணம், "என் காற்பொற் சிலம்பின் உள்ளே உள்ள பரல்கள்
மாணிக்கங்கள் தெரியுமா உனக்கு?" என்றாள்.
வழக்காட வந்த கண்ணகி, அரசன் முன்
வைக்கிற வாதமே இது ஒன்று தான்.
முத்தைக் காட்டிலும் மதிப்புமிக்க
மாணிக்கங்களைப் பரல்களாகக் கொண்ட சிலம்பு பெருவணிகக் குடும்பத்தினராகிய
எங்களைத் தவிர அரசனான உன்னிடம் கூட இருக்கமுடியாது என்ற குலச்செருக்கோடு
கூடிய வாதம் கண்ணகியுடையது.
கொற்கை முத்துக்கள், பாண்டிய மன்னனின்
ஏகபோக வாணிப உடைமையாக இருந்த காலம்.
எனவே, "புகார்" நகர வணிகர்கள் கொற்கை
முத்துக்களை வாங்கவோ, அயல் நாட்டினருக்கு விற்கவோ முயலவில்லை.
(புகார் நகர
வணிகர்கள் வேறு முத்துக்களை வாங்கி, விற்ற செய்தி சிலப்பதிகாரத்தில்
உண்டு).
கோவலன் கொலை செய்யப்பட்டபின் கோவலன் கையிலிருந்த சிலம்பு
பாண்டியனிடம் வந்துவிட்டது.
இப்போது பாண்டிய மன்னனிடம் இரண்டு வகைச்
சிலம்புகள் இருக்கின்றன.
இந்த நிலையில், கண்ணகி ஒற்றைச் சிலம்போடு
வருகிறாள்.
இதனைக் கண்டதும், "வையைக்கோன் கண்டளவே தோற்றான்" (வழக்குரைகாதை
வெண்பா).
ஆம்; பாண்டிய மன்னனின் நாடி தளர்ந்து விடுகிறது.
எனினும்
நம்பிக்கையோடு, "யாம் உடைச்சிலம்பு முத்துடை அரியே" என்கிறான்.
கண்ணகி
காற்சிலம்பை உடைத்தாள்.
"கொன்றச் சிலம்பைக் கொணர்க" என்று உத்தரவிட்ட
மன்னனின் வாயிலே போய் கண்ணகி காற்சிலம்பின் மாணிக்கம் தெறித்து விழுந்தது.
மாதர்குல மாணிக்கம் மகத்தான வெற்றி பெற்றாள்.
வேழநாடு - மாணிக்கம் - வணிக வர்க்கம்;
பாண்டியநாடு - முத்து - மன்னர் வர்க்கம்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
க.>
2010/1/22 ananda rasa thiruma <aara...@gmail.com>:
பாண்டிய ராசாமாருங்க முத்து பூராத்தையும் எக்ஸ்போர்ட் பண்ணி லோகல்
மார்க்கட்ல கெடைக்காம
பண்ணிட்டாங்களோ என்னவோ ! கில்லாடிங்க; படிக்க நல்லாதான் இருக்குது
தேவ்
--
திவாஜி
2010/1/31 Kannan Natarajan <thar...@gmail.com>:
> இலக்கிய விவாதத்திற்குரிய இந்த மாதக் கேள்வி!
>
> பாரதியின் "தேசிய கீதங்கள்" பாடலில் - பாரததேசம் பாடல் பகுதியில்,
>
> "வெள்ளிப் பனிமலையின் மீதுலவுவோம் - அடி
>
> மேலைக் கடல் முழுதுங் கப்பல் விடுவோம்..."
>
> தீபகற்ப இந்தியாவில், "மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்" என, "மேலைக் கடலை" மட்டும் பாரதி குறிப்பிட்டு பாடிய காரணம் என்ன?
--
My blogs: [all in Tamil]
http://anmikam4dumbme.blogspot.com/
http://chitirampesuthati.blogspot.com/ photo blog now with english text too!
http://kathaikathaiyaam.blogspot.com/
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
--
"அடி" என்ற சொல்லோடே மேலைக் கடல் என்பதற்குப் பொருள் காண வேண்டும்.
"வெள்ளிப் பனிமலையின் மீதுலவுவோம் - அடி
மேலைக் கடல் முழுதுங் கப்பல் விடுவோம்..."
தீபகற்ப இந்தியாவில், "மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்" என, "மேலைக் கடலை மட்டும் பாரதி குறிப்பிட்டுப் பாடிய காரணம் என்ன?
பாரதியார் ஒரு தீர்க்கதரிசி. அதனால்,
அவர் வாழ்ந்த காலத்தில் இந்தியா
எப்படி இருந்தது?
அதற்கு முன்பு இந்தியா எப்படி இருந்தது?
அவர்
காலத்துக்குப் பின்னர் அது எப்படி இருக்கும்?
என்ற முக்காலச் செய்தியையும், தாம் பாடிய "பாரத தேசம்" என்னும் பாடலில் கூறியுள்ளார்.
"வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம் - அடி
மேலைக் கடல் முழுதுங் கப்பல் விடுவோம்..."
என்னும் அடிகளில், "மேலைக் கடல் முழுதுங் கப்பல் விடுவோம்" என்று
மட்டும் கூறியிருந்தால், "மேலை" என்பதற்கு மேற்குத் திசை எனப் பொருள்
கொண்டு (தீபகற்ப இந்தியாவின் மேற்குத் திசை), தீபகற்ப இந்தியாவின்
மேற்குத் திசையிலுள்ள மேற்குக் கடல், அதாவது, அரபிக்கடல் மீது கப்பல்
ஓட்டுவோம் எனக் கொள்ளலாம்.
ஆனால், மேலைக் கடல் என்று சொல்லாது, "அடி" என்னும் ஒரு சொல்லைப் பெய்து, "அடி மேலைக் கடல் முழுதுங் கப்பல் விடுவோம்"
எனப் பாடியிருப்பதால், "அடிக்கடல், மேலைக்கடல்" என்று கொண்டு கூட்டி,
கடலின் மேலும், கடலின் கீழும் கப்பல் விடுவோம் என்று பொருள் கொள்ளத்தக்கது
சிறப்புடையதாகும்.
அவ்வாறு பொருள் கொண்டால், கடல் நீரின் மேலேயும்
அல்லாமல், கடல் நீருக்குள்ளேயும் கப்பல் ஓட்டுவோம் என்பது தெளிவாகிறதல்லவா?
ஒரு
சமயம், இது குறித்து மூதறிஞர், முனைவர் முத்து கண்ணப்பரோடு உரையாடிபோது,
அன்னார் இதைத் தெரிவித்தார். காந்திய சிந்தனையாளரான அவருக்கு இத்தகைய
சிந்தனை ஏற்பட்டிருப்பது நம்மையெல்லாம் வியப்பில் ஆழ்த்துகிறதல்லவா!
ஆகவே இந்தியா, நீர் மூழ்கிக் கப்பலைக்கட்டி, ஆழ்கடலில் அமிழ்ந்து கிடக்கும் அரிய செல்வங்களை மேலே கொண்டு வரத் துணை புரிவதோடு, கடல் வழி நாட்டின் பாதுகாப்புக்கும் அடிகோலும் என்னும் உண்மையைத் தான் "அடி" என்ற சொல்லைக் கொண்டு புலப்படுத்தியுள்ளார் என்பது விளங்குகிறதல்லவா!
தமிழறிஞர் ப. இராமலிங்கம்
--
இலக்கிய விவாதத்திற்குரிய இந்த மாதக் கேள்வி!
தமிழில் ஆயுத எழுத்தாக "ஃ" உள்ளது. அது எப்பொழுது தோன்றியது?
அதற்கு ஏன் ஆயுத எழுத்து என்று பெயர் வந்தது?
--
அகத்தியரிலிருந்து:
<< கல்கண்டுவின் ஆசிரியர் லேனா கரும்புவிலிருந்து சாறெடுக்கப்
பயன்படுத்தும் இரும்புவினால் செய்யப்பட்ட யந்திரம் கொழும்புவிலிருந்து
வந்தது என்று எழுதியிருக்கிறார். இனிப்புவினால் ஈர்க்கப்பட்ட எறும்புவின்
புற்றுவிலிருந்து கிளம்பிய பெரும்படை கரும்புவின் சாறுவிலிருந்து
கனகாம்பரத்தின் அரும்புவின் உள்ளிருக்கும் தேன்வரைக்கும் மொய்த்தது.
முருகுவிடம் கற்றபடி எழுதுகிறேன். ;-)
அன்புவின்,
ஹரிகி. >>
http://www.treasurehouseofagathiyar.net/10500/10564.htm
On Feb 28, 11:08 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com>
wrote:
> 2010/2/28 Kannan Natarajan <thara...@gmail.com>
>
>
>
> > *இலக்கிய விவாதத்திற்குரிய இந்த மாதக் கேள்வி!
>
> > தமிழில் ஆயுத எழுத்தாக "ஃ" உள்ளது. அது எப்பொழுது தோன்றியது?
>
> > அதற்கு ஏன் ஆயுத எழுத்து என்று பெயர் வந்தது?*
>
> அய்யிய்யோஓஓஓஓஓஓ தாங்கலியேஏஏஏஏஏஏ......ணா! யாரவது இந்த டெய்லிபெல் எடிட்டர்
> கிட்ட போயி, மூணு புள்ளி வச்ச எழுத்துக்க எப்பலேந்து ஆயுத எழுத்து என்று பெயர்
> வந்தது அப்டீன்னு மூணாவதா ஒரு கேள்வியையும் சேத்துக் கொல்லச் சொல்லுங்கண்ணா.
>
>
அடடா! கவனிக்காமல் விட்டேன்.
ஆய்த எழுத்து என்பதை நாளிதழ் தவறாக அச்சிட்டிருந்தாலும், அடியேனாவது
எழுத்தின் தவறை மாற்றி குழுமத்திற்கு அனுப்பியிருந்தால் ஆய்த எழுத்து
என்ற பெயர் ஏன் வந்தது என்னும் சிந்தனை நிலையில் இருக்கும் நம்
குழுமத்தினர், தடுமாற்றம் கண்டிருக்க மாட்டார்கள். எழுத்து
தவறிழைத்தமைக்கு மன்னித்தருள்வீராக.


--
'அ' அகரம் எனப்பட்டது போல் 'ஃ' அஃதம் எனப்பட்டது. ஃ க்கு யகர மெய்யொலி உண்டு.
'செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனிற் கூரிய தில்'
என்ற குறளில் எஃகதனில் என்பது, செய்க என்ற சொல்லின் எதுகையாக வந்திருப்பது காண்க.' ஃ' க்கு யகர மெய்யொலி இயல்பானதே. அந்த வழியில் அஃதம் அய்தம் ஆகிப், பின் நீண்ட கால வழக்கில் ஒடுஉருபு, ஓடுருபாகவும், அதுவுருபு, ஆதுருபாகவும் நீண்டிருப்பது போல, முதநிலை நீண்டு, ஆய்தம் என்றாகியிருக்க வேண்டும். இந்த மாற்றங்கள் தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே நிகழ்ந்திருக்க வேண்டும் என்று 'ஆய்த எழுத்தின் வரலாறு' என்ற கட்டுரையில் செந்தமிழ் ஆசிரியர் திருநாராயணையங்கார் குறிப்பிடுகிறார். மு.ராகவையங்கார் எழுதிய 'ஆய்தவோசை' என்கிற கட்டுரையில், ஆய்த எழுத்துப் பற்றிய பல செய்திகளோடு
'அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி' என்ற குறளில், ஆய்தம் குகர ஒலியேற்று, மாமுன் நிரையாகி வெண்டளை அமைவது எடுத்துகாட்டப்பட்டிருந்ததைப் படித்தது நினைவுக்கு வருகிறது.
அ.ரா.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
To unsubscribe from this group, send email to mintamil+unsubscribegooglegroups.com or reply to this email with the words "REMOVE ME" as the subject.
"ஒü" என்ற எழுத்தின்பின் ஆய்தம் மெய்போல் உச்சரிக்கப்பட்டாலும் ஏனைய
மெய்போல ஆய்தம் உயிர் ஏற இடமளிப்பதில்லை. மெய்போல் சொல் இறுதியிலும்
வராது. எனவே ஆய்தத்தைத் "தனிநிலை" என்பர்.
> > புலவர் செ.இராசு
> தயவு செய்து விளக்க முடியுமா?
"ஒü" - this was how Dinamani had printed in the page,which I inferred
as ஔ.
I wanted to clarify the status quo by re-typing the Dinamani's quote.
On Mar 27, 8:47 pm, ananda rasa thiruma <aaraa...@gmail.com> wrote:
> திரு தாரகை,
> ஔ என்னும் எழுத்தின் பின்னால் ஆய்தம் மெய்போல் உச்சரிக்கப்படுகிறது என்பது
> கட்டுரையாளர் திரு இராசின் கருத்து. ஔ நெடில் என்பதால் அதனை அடுத்து ஆய்தம்
> வருவதற்கு வாய்ப்பில்லையே? இதற்குச் சான்றுள்ளதா? என்று கேட்டிருந்தேன். திரு
> இராசு வரிகளையே நீங்கள் திரும்பவும் குறிப்பிட்டதற்கான காரணம் விளங்வில்லை.
> தயவு செய்து விளக்க முடியுமா?
>
> அன்புடன்
> ஆராதி
புலவர் இராசு அவர்களுடன் பேசினேன். சரியாகப் போன் ஒலி கேட்கவில்லை.
தொல்காப்பிய ஔகடிய, அதற்கு அஃகடிய, ... என்று இருப்பதாக்ச் சொன்னார்கள்.
ஔகாரம், தொல்காப்பிய உரைகளில் இருக்கும் என்று நம்புகிறேன்.
நா. கணேசன்
>
> 2010/3/28 தாரகை <thara...@gmail.com>
???
V
On Apr 3, 9:52 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> On Mar 27, 8:47 pm, ananda rasa thiruma <aaraa...@gmail.com> wrote:
>
> > திரு தாரகை,
> > ஔ என்னும் எழுத்தின் பின்னால் ஆய்தம் மெய்போல் உச்சரிக்கப்படுகிறது என்பது
> > கட்டுரையாளர் திரு இராசின் கருத்து. ஔ நெடில் என்பதால் அதனை அடுத்து ஆய்தம்
> > வருவதற்கு வாய்ப்பில்லையே? இதற்குச் சான்றுள்ளதா? என்று கேட்டிருந்தேன். திரு
> > இராசு வரிகளையே நீங்கள் திரும்பவும் குறிப்பிட்டதற்கான காரணம் விளங்வில்லை.
> > தயவு செய்து விளக்க முடியுமா?
>
> > அன்புடன்
> > ஆராதி
>
> புலவர் இராசு அவர்களுடன் பேசினேன். சரியாகப் போன் ஒலி கேட்கவில்லை.
>
> தொல்காப்பிய ஔகடிய, அதற்கு அஃகடிய, ... என்று இருப்பதாக்ச் சொன்னார்கள்.
>
> ஔகாரம், தொல்காப்பிய உரைகளில் இருக்கும் என்று நம்புகிறேன்.
>
> நா. கணேசன்
>
>
>
>
>
> > 2010/3/28 தாரகை <thara...@gmail.com>
>
> > > > ஔகாரம் நெடில் அல்லவா? அதன் பின்னர் எவ்வாறு ஆய்தம் வரும்?
>
> > > "ஒü" என்ற எழுத்தின்பின் ஆய்தம் மெய்போல் உச்சரிக்கப்பட்டாலும் ஏனைய
> > > மெய்போல ஆய்தம் உயிர் ஏற இடமளிப்பதில்லை. மெய்போல் சொல் இறுதியிலும்
> > > வராது. எனவே ஆய்தத்தைத் "தனிநிலை" என்பர்.
>
> > > > > புலவர் செ.இராசு
> > > > > நன்றி:- தினமணி
>
> > > --
> > > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > > Visit our website:http://www.tamilheritage.org;youmay like to visit our
> ???
> V
Though raising our eye-brows, that concept is considered the
evolutionary process for "ஆய்தம்" according to certain Tamil scholars.
I am not talking about Aytham at all.
The author says Pazhanthamizh (Not Tamil Brahmi) has /i/ has 3 dots.
But the fact is Brahmi (Asokan & Tamil) does have /i/ as 3 dots. I am
not sure what he means by Pazhantamizh. He has got something seriously
wrong in this part.
V
Patience Vinod.
Pulavar Rasu may have an explanation.
If we could get one,that would be worthwhile.
After which,making a comment is anyone's decision.
//முப்பாற் புள்ளி என்பது ஆய்தத்தைக் குறிப்பது என்றும்
சார்பெழுத்துக்கள்
மூன்றையும குறிப்பது என்றும் இரு வகையாகவும் உரைகாண்பர். அதற்கான
தடைவிடைகளைத்
தனியே ஏனையோர் விரும்பினால் பேசலாம். //
This seems to be correct.
Most probably all the three: KuRRiligaram, kuRRilugaram & Aytam used a
dot (Viraama).
Do note that, Malayalam script still preserves the tradition using
Viraama (Chandrakkala - The Malayalam Equivalent of Pulli) to
represent the kuRRilugaram (Samvrita-ukaara in Malayalam).
V

தெள்ளாறு ந.பானு
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
To unsubscribe, reply using "remove me" as the subject.
ஆய்த எழுத்தின் இம்முப்புள்ளி வடிவம் சமீபத்தில் ஏற்பட்டது. இந்த
தத்துவத்துக்காகத்தான் முப்புள்ளியாக்கப்பட்டது என்பதெல்லாம் கொஞ்சம்
ரீல்.. இதில் பாவம் ஏன் சித்தர்களை இழுக்க வேண்டும்.
ஆய்த எழுத்தின் வடிவத்தின் மூலம் தத்துவம் கூற நேர்வது வேறு.. இந்த
தத்துவத்துக்காகத்தான் ஆய்த எழுத்து படைக்கப்பட்டது என்பது ரொம்ப ஓவர்.
முன்னது மட்டுமே ஏற்றுக்கொள்ளத்தக்கது. பௌத்த வஜ்ரயானத்தில் (சித்தம்)
அக்ஷர லிபி தியானம் நிறையவே இது போல் உண்டு.
V
> 2010/4/4 ananda rasa thiruma <aaraa...@gmail.com>
>
>
>
> > அவ் + கடிய=அஃகடிய என்பதற்கும் ஔ என்னும் எழுத்தின் பின்னால் ஆய்தம் வரும்
> > என்பதற்கும் தொடர்பில்லை. அவ், இவ், உவ் என்பன பன்மைப் பொருள் உணர்த்தும்
> > சுட்டுச் சொற்கள். எழுத்தன்று. அவற்றின் பின் வல்லெழுத்து வரின் ஆய்தமாகும்
> > என்பது விதி. இதில் ‘வ்‘ என்னும் எழுத்து ஆய்தமாக மாறியுள்ளது. அதற்கு முன்
> > உள்ளது தனிக் குறில். புணர்ச்சியில் தோன்றும் ஆய்தம் பற்றிக் கூறும் போது இது
> > இடம் பெற்றுள்ளது. இச்சொற்களுடன் ஐகாரச் சாரியை சேர்ந்து அவை, இவை, உவை என
> > வழங்கப்பெறுகின்றன.
>
> > கூடுதலாக ஒரு செய்தி. தமிழில் ‘வ்’ என்னும் எழுத்தில் முடியும் சொற்கள்
> > நான்குதாம் உள்ளன எனத் தொல்காப்பியர் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். அவற்றில்
> > மேலே குறிப்பிட்ட பன்மைப் பொருள் உணர்த்தும் சுட்டுப் பெயர்கள் மூன்று. தெவ்
> > என்னும் பகைப் பொருளில் வரும் சொல் ஒன்று.
>
> > அன்புடன்
> > ஆராதி
>
> > 2010/4/3 வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com>
> >> > > > Visit our website:http://www.tamilheritage.org;youmaylike to visit
> >> our
> >> > > > Muthusom Blogs at:
>
> ...
>
> read more »
http://www.kamalagaanam.blogspot.com
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
To unsubscribe, reply using "remove me" as the subject.
Get your new Email address!
Grab the Email name you've always wanted before someone else does!
http://mail.promotions.yahoo.com/newdomains/sg/
Grab the Email name you've always wanted before someone else does!
http://mail.promotions.yahoo.com/newdomains/sg/
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
தொல்காப்பிய காலத்தில் முப்புள்ளி வடிவமாக இருந்தது இகரம் தான். ஆய்தம்
இல்லை.
V
On Apr 4, 10:31 am, Nakinam sivam <naki...@gmail.com> wrote:
> அன்பு சகோதரி கமலம் அவர்களுக்கு,
> நன்றி பல.
> மேலும் அன்பு சகோதரர் வினோத் ராஜன் அவர்கள் மூன்று புள்ளி என்பது இடையில்
> ஏற்பட்டது என்று கூறி இருக்கிறார்
> அவருக்காக
> "முப்பாற் புள்ளியும் எழுத்தோரன்ன'' (தொல்.2)
>
> தொல்காப்பியத்தில் உள்ளது எனவே தொல்காப்பியம் வருவதற்கு முன்பே ஆய்த எழுத்து
> மூன்று புள்ளிகளால் குறிக்கப்பட்டுள்ளது என்பதை அறியலாம்.
> அன்புடன்
> நக்கினம் சிவம்
>
> 2010/4/4 Kamala Devi <saahith...@yahoo.com.sg>
> ...
>
> read more »
கிட்டத்தட்ட எல்லா ஆசிய - கிழக்காசிய எழுத்துமுறைகளில் அனுஸ்வாரமும்
விஸர்க்கமும் புள்ளியாகத்தான் அமைந்துள்ளன.
இத்தனைக்கும் தாய் எழுத்துமுறையில் தமிழ் போலவே புள்ளி பிரயோகம் உண்டு.
நாம் எழுத்துக்கு மேலே புள்ளி வைப்போம், அவர்கள் எழுத்துக்கு கீழே புள்ளி
வைக்கிறார்கள்.
மறுபடியும் சும்மா.. இஷ்டத்துக்கும்.. ரீல் விடக்கூடாது..
தினமணி கட்டுரையின் காகிதப்பிரதியை பார்க்கவும்.. ஆய்தத்தின் இடைக்கால
கல்வெட்டு வடிவத்தை (தற்கால வகுத்தல் குறி போன்றது) அச்சிட்டு உள்ளனர்.
ஆயுத எழுத்து என்ற பெயர் திரிபு பெற்ற ஒன்று. அதற்கு ஆய்தத்துக்கு
தொடர்பில்லை. Its nothing more than a Literary Urban Legend.
குற்றியலுகரம் குற்றிலிகரம் ஆய்தம் ஆகிய மூன்றும் புள்ளியை கொண்டிருந்தது
என்பதே சரியான பொருள். மகரக்குறுக்கத்திற்கும் உட்புள்ளி இருந்ததாக
கூறுவர்.
V
On Apr 4, 11:54 am, Nakinam sivam <naki...@gmail.com> wrote:
> *ஆய்தம் ஒரு மரபு எழுத்தாகும். தொன்றுதொட்டு முன்னோர்களால் பயன்படுத்தும்
> பண்பாடே மரபு. ஆய்த எழுத்தும் இந்த மரபுப் பண்பாட்டை காலங்காலமாகப் பெற்று
> வருகிறது. எனவே, வடிவத்தால் மிகப் பழமையானது ஆய்த எழுத்து.
> ஆய்த எழுத்து அடுப்புக்கூடுபோல அமைந்திருப்பதால் இது "அடுப்புக் கூட்டு
> எழுத்து" என்றும், மூன்று புள்ளிகளைக் கொண்டதால் "முப்பாற்புள்ளி" என்றும்
> பழங்காலப் போரில் பயன்படுத்திய ஆய்தமான கேடயத்தின் மூன்று புள்ளிகளைப் போல்
> உள்ளதால், இது "ஆய்த எழுத்து" என்றும், உயிர் எழுத்துக்கும் மெய்யெழுத்துக்கும்
> நடுவில் தோன்றி, மொழியிடைச் சார்ந்து நடுவில் வந்ததால் "நடுவுவாங்கிய எழுத்து"
> எனவும் பெயர் பெறும்.
>
> "முப்பாற் புள்ளியும் எழுத்தோரன்ன'' (தொல்.2)
>
> "பத்தென் கிளவி ஒற்றிடைக் கொடுவழி
>
> நிற்றல் வேண்டும் ஆய்தப் புள்ளி'' (தொல்.350)
>
> என ஆய்த எழுத்தின் வடிவங்களைத் தொல்காப்பியர் தெளிவுபடுத்துகிறார்*
> *
> *
> *anbudan*
> *நக்கினம் சிவம்
> *
> 2010/4/4 Kamala Devi <saahith...@yahoo.com.sg>
>
>
>
> > அன்பு சிவம்
> > தொல்காப்பியம் பற்றிய ஆண்டின் விளக்கம் , 2 நூல்களில் 2 விதமாக
> > எழுதப்பட்டுள்ளது.
> > இதுகுறித்து ஞான் சந்தித்த தமிழறிஞர்கள் பலரிடமும் விளக்கம்
> > கேட்டிருக்கிறேன்.
> > முக்கியமாக,கூடலூர் கிழாரின் அபிமானியாக தன்னை ஸ்தாபித்துக்கொண்ட அருமையான,
> > தமிழறிஞர் வாசுதேவகிழார், எழுதிய நூல், history of tamil, 3பகுதிகளாக வெளி
> > வந்துள்ளது.
> > நிச்சயம் நிங்ஙள் படிக்கவேண்டும். பல அரிய தகவல்கள் உண்டு.
> > அன்பு கமலம்
>
> >http://www.kamalagaanam.blogspot.com
>
> > ------------------------------
> > *From:* Nakinam sivam <naki...@gmail.com>
> > *To:* mint...@googlegroups.com
> > *Sent:* Sunday, 4 April 2010 13:31:13
> > *Subject:* Re: [MinTamil] Re: தமிழ்மணி - மாதம் ஒரு (இலக்கிய) விவாதம்!
>
> > அன்பு சகோதரி கமலம் அவர்களுக்கு,
> > நன்றி பல.
> > மேலும் அன்பு சகோதரர் வினோத் ராஜன் அவர்கள் மூன்று புள்ளி என்பது இடையில்
> > ஏற்பட்டது என்று கூறி இருக்கிறார்
> > அவருக்காக
> > "முப்பாற் புள்ளியும் எழுத்தோரன்ன'' (தொல்.2)
>
> > தொல்காப்பியத்தில் உள்ளது எனவே தொல்காப்பியம் வருவதற்கு முன்பே ஆய்த எழுத்து
> > மூன்று புள்ளிகளால் குறிக்கப்பட்டுள்ளது என்பதை அறியலாம்.
> > அன்புடன்
> > நக்கினம் சிவம்
>
> > 2010/4/4 Kamala Devi <saahith...@yahoo.com.sg>
> ...
>
> read more »
> ...
>
> read more »
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
தேவ்
On Apr 4, 2:23 am, Nakinam sivam <naki...@gmail.com> wrote:
> அன்பு சகோதரர் வினோத் உங்களுடைய எதிர்ப்பு சிந்தனை
> மாறவில்லை என்பதனை மிக தெளிவாக காட்டி விட்டீர்கள்
> எதோ குறை கண்டுபிடித்து பேர் வாங்கும் புலவர் ஆக மாறி விட்டீர் என்பது
> புலனாகிறது.
> வேறு எந்த
> மொழியிலும் இவ்வாறு புள்ளி எழுத்து இல்லை என்பது தமிழ் மொழிக்குச் சிறப்பாகும்.
> இது நான் சொன்னதல்ல
> நீங்கள் சொன்ன தினமணி கட்டுரைதான்.
> உங்களுக்காக மேற்கண்ட கட்டுரையை மீண்டும் தருகிறேன்
> நன்றாக படிக்கவும்
>
> *இசை உருவும், மொழி மரபும்!*
>
> ஆய்த எழுத்து ஒரு சார்பெழுத்து. சார்பெழுத்து என்பது ஒன்றைச் சார்ந்து வருவது.
> ஒன்றினிடத்து பற்றுக்கோடாக வருவது. சார்த்தப்படுவதாலே சார்பெழுத்து என்றானது.
> இவ்வெழுத்து மொழிக்கு முதலிலும், இறுதியிலும் வராது, தனித்தும் வராது. ஆய்தம்
> அரை மாத்திரை அளவு ஒலிக்கும் தன்மையுடையது.
>
> "எழுத் தெனப் படுப அகர முதல் னகர இறுவாய் முப்பஃதென்ப
>
> சார்ந்து வரல் மரபின் மூன்றலங்கடையே" (தொல்.1)
>
> சார்ந்துவரும் குற்றியலுகரம், குற்றியலிகரம், ஆய்தம் எனும் மூன்றும் மொழியின்
> மரபிலக்கணமாக வழிவழியாக வந்ததாகும் என தொல்காப்பியர் முதற்பாவிலேயே
> குறிப்பிடுகிறார். அவ்வாறாயின், ஆய்தம் ஒரு மரபு எழுத்தாகும். தொன்றுதொட்டு
> முன்னோர்களால் பயன்படுத்தும் பண்பாடே மரபு. ஆய்த எழுத்தும் இந்த மரபுப்
> பண்பாட்டை காலங்காலமாகப் பெற்று வருகிறது. எனவே, *வடிவத்தால் மிகப் பழமையானது
> ஆய்த எழுத்து. வேறு எந்த மொழியிலும் இவ்வாறு புள்ளி எழுத்து இல்லை என்பது தமிழ்
> மொழிக்குச் சிறப்பாகும்.*
>
> ஆய்த எழுத்து அடுப்புக்கூடுபோல அமைந்திருப்பதால் இது "அடுப்புக் கூட்டு
> எழுத்து" என்றும், மூன்று புள்ளிகளைக் கொண்டதால் "முப்பாற்புள்ளி" என்றும்
> பழங்காலப் போரில் பயன்படுத்திய ஆய்தமான கேடயத்தின் மூன்று புள்ளிகளைப் போல்
> உள்ளதால், இது "ஆய்த எழுத்து" என்றும், உயிர் எழுத்துக்கும் மெய்யெழுத்துக்கும்
> நடுவில் தோன்றி, மொழியிடைச் சார்ந்து நடுவில் வந்ததால் "நடுவுவாங்கிய எழுத்து"
> எனவும் பெயர் பெறும்.
>
> *"முப்பாற் புள்ளியும் எழுத்தோரன்ன'' (தொல்.2)
>
> "பத்தென் கிளவி ஒற்றிடைக் கொடுவழி
>
> நிற்றல் வேண்டும் ஆய்தப் புள்ளி'' (தொல்.350)
>
> என ஆய்த எழுத்தின் வடிவங்களைத் தொல்காப்பியர் தெளிவுபடுத்துகிறார்.*
> 2010/4/4 வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com>
அன்புடன்
முனைவர் துரை.மணிகண்டன்.
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
நாற்காலி என்பதைக் காரண இடுகுறிப் பெயர் என வகைப்படுத்துவர்; அதை
மனத்தில்கொண்டு வினவினேன்.
ஆய்த எழுத்துத் தொடர்பான சில கருத்துக்கள் –
http://ve.bdu.ac.in:8080/tamil/mat/matt02/html/mat02003mp2b.htm
‘ஆய்தப் புள்ளி’ என்பதனால் அதனை மெய்போலக் கொள்ள வேண்டும் என்கிறார்
இளம்பூரணர்.
புணர்மொழி ஆய்தம்
இரு சொற்களின் புணர்ச்சியில் ஆய்தம் வருவதுண்டு.
(எ-டு)
அல் + திணை -> அஃறிணை
பல் + தொடை-> பஃறொடை
கல் + தீது -> கஃறீது
முள் + தீது -> முஃடீது
இங்கு நிலைமொழியீற்றில் உள்ள லகரமும் ளகரமும் வருமொழி முதலில் உள்ள
தகரத்தோடு புணரும் போது ஆய்தமாகத் திரிந்துள்ளன. இவ்வாறு வருவதே
புணர்மொழி ஆய்தம்.
நூற்பா
ஈறியல் மருங்கினும் இசைமை தோன்றும். (தொல். எழுத்து, மொழி. 6)
ஈறியல் மருங்கு = நிலைமொழியீறும் வருமொழி முதலும் புணர்தல்.
இசைமை = ஆய்த எழுத்தின் ஓசை.
தனிமொழி ஆய்தம் தொடர்பான மற்றொரு கருத்து -
ஆய்த எழுத்தைப் பற்றித் தொல்காப்பியர் மற்றொரு கருத்தையும் கூறுகிறார்.
நிறத்தையும், ஓசையையும் குறிக்கும் குறிப்பு மொழிகளில் ஆய்தம் இடம்
பெறும். இது அருகிய வழக்கே என்கிறார்.
(எ-டு) கஃறு (நிறம்), சுஃறு (இசை)
நச்சினார்க்கினியர் ஆய்தம் அளபெடுத்து வருவதை இங்குக் குறிப்பிடுகிறார்.
(எ-டு) கஃறென்னும் கல்லதர் அத்தம்
சுஃறென்னும் தண்தோட்டுப் பெண்ணை
நூற்பா
உருவினும் இசையினும் அருகித் தோன்றும்
மொழிக்குறிப் பெல்லாம் எழுத்தின் இயலா
ஆய்தம் அஃகாக் காலை யான. (தொல். எழுத்து. மொழி. 7)
ஆய்தம் தொடர்பான மொழியியல் கருத்துகள் -
ஆய்தத்தை உரசொலி என்பர் மொழியியலார். புணர்மொழியில் வரும் ஆய்தங்கள்
வெடிப் பொலிகளின் (வல்லினமெய்) மாற்று வடிவங்கள் என்கிறார் தெ.பொ.மீ.
(தமிழ்மொழி வரலாறு, ப. 94,95)
கல் + தீது = கற்றீது; முள் + தீது = முட்டீது என வரும் புணர்ச்சிகளில்
ற், ட் எனும் வல்லினங்களுக்கு மாற்று வடிவமாக வருவது ஆய்தம். அதாவது
‘கற்றீது’ என்பது ‘கஃறீது’ எனவும் ‘முட்டீது’ என்பது முஃடீது எனவும்
வரும் போது ற், ட் ஒலிகளுக்கு ஃ மாற்று வடிவமாக வருவது காணலாம். இந்த
ஆய்த ஒலி வல்லெழுத்து ஆறன் மேல்நின்று அவற்றின் வல்லோசையை மென்மையாக்கி
விடுகிறது. ‘அக்கு’ என்பதில் உள்ள ‘கு’வையும் அஃகு என்பதில் உள்ள ‘கு’
வையும் உச்சரித்து ஒப்பிடுங்கள். இதனை உணர்ந்த மாணிக்கநாயகர்
பிறமொழிக்கண் காணப்படும் சில ஒலிகளை மென்மைப் படுத்த ஆய்தத்தைப்
பயன்படுத்தலாம் என்று கூறிக் ‘காப்பி’யை காஃபி என்று எழுத
வழிகாட்டினார்.
ஆய்தம் தொடர்பான கருத்துகளின் தொகுப்பு -
*ஆய்தம் உயிரும் மெய்யும் அல்லாத தனிநிலை எழுத்து.
*எனினும் மெய்க்குரிய அரை மாத்திரை பெறுவதால் ஒருவகையில் மெய் போலக்
கொள்ளப்படும்.
*ஆய்தம் தனிமொழியிலும் வரும்; புணர்மொழியிலும் வரும்.
*குற்றெழுத்தின் பின்னாலும் வல்லின உயிர்மெய்க்கு முன்னரும் வரும்.
இதுவே ஆய்தத்துக்கு இடம்.
*ஆய்தம் அளபெடுத்தும் வருவதுண்டு.
*மொழியியலார் ஆய்தத்தை வெடிப்பொலிகளின் மாற்று வடிவங்களாகக்
கொள்கின்றனர்.
*ஆய்த எழுத்தைப் பிறமொழிச் சொற்களில் உள்ள வல்லெழுத்துகளை மென்மையாக்கப்
பயன்படுத்தும் முயற்சி தமிழில் சிலரால் புகுத்தப்பட்டது.
தேவ்
> ...
>
> read more »
http://www.kamalagaanam.blogspot.com
http://ve.bdu.ac.in:8080/tamil/mat/matt02/html/mat02003mp2b.htm
தேவ்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
To unsubscribe, reply using "remove me" as the subject.
New Email names for you!
Get the Email name you've always wanted on the new @ymail and @rocketmail.
Hurry before someone else does!
Get the Email name you've always wanted on the new @ymail and @rocketmail.
Hurry before someone else does!
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
என் பங்குக்கு இணையம் தரும் இன்தமிழ்ச் சொற்கள் சிலவற்றை இங்கு இடுகிறேன்
-
அஃதை ( சோழ இளவரசி ஒருத்தி), அஃகம் ( grain), அஃகரம் (வெள்ளெருக்கு),
அஃகல் ( சுருங்குதல்), அஃகு (ஊறுநீர்), அஃகுள் (அக்குள்), அஃது
(அது), இஃகுதல் (இழுத்தல்), இஃது (இது), உஃது (உது), எஃகம் (கூர்மை),
எஃகு (உருக்கு), எஃகுதல் (நெகிழ்தல்), ஒஃகல் (ஒதுங்குதல்), கஃசு (காற்
பலம் எடை), கஃறு (கறுத்தது), சஃகுல்லி (சிற்றுண்டி வகை), சுஃறு (ஓலை
எரியும் போது உண்டாகும் ஓசை), பஃது (பத்து), பஃதி (பகுதி), பஃறி (படகு-
பட்டினப்பாலை), வெஃகல் (விரும்புதல்)
தேவ்
On Apr 3, 7:54 pm, ananda rasa thiruma <aaraa...@gmail.com> wrote:
> அவ் + கடிய=அஃகடிய என்பதற்கும் ஔ என்னும் எழுத்தின் பின்னால் ஆய்தம் வரும்
> என்பதற்கும் தொடர்பில்லை. அவ், இவ், உவ் என்பன பன்மைப் பொருள் உணர்த்தும்
> சுட்டுச் சொற்கள். எழுத்தன்று. அவற்றின் பின் வல்லெழுத்து வரின் ஆய்தமாகும்
> என்பது விதி. இதில் ‘வ்‘ என்னும் எழுத்து ஆய்தமாக மாறியுள்ளது. அதற்கு முன்
> உள்ளது தனிக் குறில். புணர்ச்சியில் தோன்றும் ஆய்தம் பற்றிக் கூறும் போது இது
> இடம் பெற்றுள்ளது. இச்சொற்களுடன் ஐகாரச் சாரியை சேர்ந்து அவை, இவை, உவை என
> வழங்கப்பெறுகின்றன.
>
> கூடுதலாக ஒரு செய்தி. தமிழில் ‘வ்’ என்னும் எழுத்தில் முடியும் சொற்கள்
> நான்குதாம் உள்ளன எனத் தொல்காப்பியர் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். அவற்றில்
> மேலே குறிப்பிட்ட பன்மைப் பொருள் உணர்த்தும் சுட்டுப் பெயர்கள் மூன்று. தெவ்
> என்னும் பகைப் பொருளில் வரும் சொல் ஒன்று.
>
நன்றி. திரு. ஆராதி.
அன்புடன்,
நா. கணேசன்
> அன்புடன்
> ஆராதி
>
> 2010/4/3 வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com>
> > > > > Visit our website:http://www.tamilheritage.org;youmaylike to visit
> > our
> > > > > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > > > > post to this group, send email to minT...@googlegroups.com
> > > > > To unsubscribe from this group, send email to
> > > > > minTamil-u...@googlegroups.com
> > > > > For more options, visit this group at
> > > > >http://groups.google.com/group/minTamil
>
> > > > > To unsubscribe from this group, send email to mintamil+
> > > > > unsubscribegooglegroups.com or reply to this email with the words
> > "REMOVE
> > > > > ME" as the subject.
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > post to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil
>
திரு சிவம்,
மேற்கண்ட சுப்ரமணியரின் சுத்த ஞானம் பதஞ்சலி யோக சூத்திர முறையில் கூறப்பட்ட சக்கரங்கள் மேலேற்றும் பாவனையால் ஞான நிலையினை அடைய முடியாது என்று தெளிவாக கூறுகிறார்.
இப்போது உள்ள தொல்காப்பியம் பலர் படியெடுத்து, அதன் பின் அச்சேறி
வந்திருக்கிறது.
இதை வைத்து தொல்காப்பியர் ஆய்த எழுத்தில் மூன்று புள்ளிகளை
வைத்திருப்பார் என்று சொல்ல முடியாது. :-)

அட! எங்க அம்மா சங்க மரபு என்று தெரிகிறது.
ஒரு நாள் என் அண்ணன் (சித்தி பையன்) என் அப்பாவுடன் சாப்பிடும் போது
“பெரியப்பாவிற்கு மட்டும் நீ நிறைய சர்க்கரைப் பொங்கல் வைக்கிறாய்” என்று
சொல்லப்போக (அப்போது அவனுக்கு 10 வயது இருக்கலாம்), வந்ததே எங்க
அம்மாவிற்குக் கோபம். அவனைத் தரதரவென்று இழுத்து ஒரு ரூமில் பூட்டி,
அன்று பண்ணிய அத்தனை சர்க்கரைப் பொங்கலையும் (ஒரு குண்டான் பொங்கல்) அவன்
முன்னே வைத்து, தின்று முடித்தால்தான் கதவைத்திறப்பேன் என்று
சொல்லிவிட்டாள்! பாவம் சேது! வாழ்நாளுக்கும் மறக்கமுடியாத படிப்பிணை அது
;-)
க.>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
To unsubscribe, reply using "remove me" as the subject.
http://www.kamalagaanam.blogspot.com
----- Original Message ----
From: N. Kannan <navan...@gmail.com>
Subject: Re: [MinTamil] தமிழ்மணி - மாதம் ஒரு (இலக்கிய) விவாதம்!
2010/4/12 Kannan Natarajan <thar...@gmail.com>
து."
அட! எங்க அம்மா சங்க மரபு என்று தெரிகிறது.
ஒரு நாள் என் அண்ணன் (சித்தி பையன்) என் அப்பாவுடன் சாப்பிடும் போது
“பெரியப்பாவிற்கு மட்டும் நீ நிறைய சர்க்கரைப் பொங்கல் வைக்கிறாய்” என்று
சொல்லப்போக (அப்போது அவனுக்கு 10 வயது இருக்கலாம்), வந்ததே எங்க
அம்மாவிற்குக் கோபம். அவனைத் தரதரவென்று இழுத்து ஒரு ரூமில் பூட்டி,
அன்று பண்ணிய அத்தனை சர்க்கரைப் பொங்கலையும் (ஒரு குண்டான் பொங்கல்) அவன்
முன்னே வைத்து, தின்று முடித்தால்தான் கதவைத்திறப்பேன் என்று
சொல்லிவிட்டாள்! பாவம் சேது! வாழ்நாளுக்கும் மறக்கமுடியாத படிப்பிணை அது
;-)
க.>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
To unsubscribe, reply using "remove me" as the subject.
Send instant messages to your online friends http://asia.messenger.yahoo.com
ஆமா, சேது எவ்வளவு பொங்கல் சாப்பிட்டான்? அவனுக்குத்தான் தெரியும்!
ஊருக்குப் போகும் போது கேட்டுச் சொல்கிறேன். அம்மா இப்போதெல்லாம்
எப்போதாவது கனவில் வந்தால் உண்டு. வந்தாலும் இப்போதெல்லாம் விட்டேத்தியாக
இருக்கிறாள். அவள் உலகு வேறு போலும். ஆயினும் விட்ட குறை தொட்ட குறைக்கு
வந்து போகிறாள்!
க.>
2010/4/12 Kamala Devi <saahi...@yahoo.com.sg>:
http://www.kamalagaanam.blogspot.com
7Subject: Re: [MinTamil] தமிழ்மணி - மாதம் ஒரு (இலக்கிய) விவாதம்!
மகாபாரதமெல்லாம் எங்கஊரிலேயே பார்த்தாச்சு கமலம்.
.
அம்மா இப்போதெல்லாம் எப்போதாவது கனவில் வந்தால் உண்டு. வந்தாலும் இப்போதெல்லாம் விட்டேத்தியாக
இருக்கிறாள். அவள் உலகு வேறு போலும். ஆயினும் விட்ட குறை தொட்ட குறைக்கு
வந்து போகிறாள்!
க.>
க.>
2010/4/12 Kamala Devi <saahi...@yahoo.com.sg>:
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>
> To unsubscribe, reply using "remove me" as the subject.
>
--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/
என்ன கமலம், அதில் தொணிக்கும் அறிவியல் புதினம் எப்படி உங்கள்
கண்ணிலிருந்து தப்பியது? உங்களுக்காக ஒரு குறுங்கதை அது! ;-)
நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா!
என்பதுதான் தினமும் நடக்கிறதே!
எழுதவுடன் மூன்றுமுறை ஹரி, ஹரி, ஹரி என வேண்டும்.
ஆண்டாள் சொல்லும் அரி என்ற பேரரவம் அதுதான் :-)<<<<<>>.ஹரிஹரிஹரி என்கிறோமோ இல்லையோ காலைல எழுந்ததும் இந்தப்பசங்களை பள்ளிக்கூடம் அனுப்பும் அம்மாக்களின் hurry up என்ற குரல் பலவீடுகளில் கேட்கிறது ‘க’!
http://www.kamalagaanam.blogspot.com
----- Original Message ----
From: N. Kannan <navan...@gmail.com>
கம்பருக்கு முன்பே தமிழில் இராமாயண நூல்கள் இருந்திருக்கின்றன என்பதை, சங்கம் மற்றும் சங்கம் மருவிய நூல்கள் வழி அறிய முடிகிறது.
பாரதம் பாடிய பெருந்தேவனார் என்பவர்,"பாரதம் - சீராமகதை" எனக் குறிப்பிடுகிறார்.
இராமாயணத்தைச்"சீராமகதை"என்றே முன்பு வழங்கினர் என்கிறார் பெரும்புலவர் மு.இராகவையங்கார்.
கம்பர் விருத்தப்பாவில் இராமாயணம் பாடினார்.
ஆனால்,வெண்பாவிலும் இராமாயணம் இருந்தது என்ற தகவலை,"யாப்பருங்கலவிருத்தி" என்னும் யாப்பிலக்கண நூல் கூறுகிறது.
மேலும்,"பஃறொடை வெண்பாவில்" இராமாயணம்
எழுதப்பட்டதாகவும் கூறுவது நோக்கத்தக்கது.
"வீரசோழியம்" என்ற இலக்கண நூல்உரையாசிரியர்,
"இராமாயண வெண்பா" உண்டு என்கிறார்.
வீரசோழியம் உரையில் காணப்படும் இராமாயண வெண்பா
பின் வருமாறு:-
"மற்றிவனை மாலென்று அறிந்தால்
அவ்வாளரக்கன்
பெற்றிதருவதென் பேதையர்காள்
மற்றிவன் தன்கண்டான் கடைசிவத்தற்கு
- உண்டோ
கடலிலங்கை வண்டார் அரக்கன்வலி''!
இவ்வெண்பா யாப்பின் மூலம்,கம்பருக்கு முன்பு
இராமாயண நூல் இருந்தது என்பதை அறிய முடிகிறது.
புறத்திரட்டில்,"ஆசிரியமாலை" என்ற நூலில்,கம்பருக்கு முன்பே இராமாயண நூல் உண்டு என்பதும் அறியப்படுகிறது.
"ஸ்ரீபுராணம்" என்ற ஜைன நூல் மூலம் முன்பே
இராமாயணம் உண்டு என்பதை அறியலாம்.
மணிப்பிரவாள நடையில் அமைந்த இந்நூலில்,இராமாயணம்
பற்றிய நிகழ்ச்சிகள் எழுதப்பட்டுள்ளன.
ஸ்ரீபுராணத்தில் காணப்படும் ஆசிரியப்பா வரிகள் பின் வருமாறு:-
"மாற்றிவன் செய்தமாயா மானின்
நோற்றிலாதே நோக்கிய நோக்கின்
அருவினையேனை அருளிய மனத்தால்
மருவிய மாயஉருவுதரற்கு எழுந்த
மான்மறி தொடர்ந்து செல்வாள் அரிபோலக்
கான்நெறி விடுத்துக் கடுவனம் புகுந்து
மாயாப்புணர்ப்பின் மன்னனை நினைந்து
ஆயரும் தாயமும் தோழியும் இன்றியோர்
நொதுமல் ஆனவன் விதிவழி ஒழுகி
இடனிடையிட்ட சேய் மைத்தன்றியும்
கடலிடையிட்டகாப்பிற்றாகிய
இலங்கை மூதூர் இடு சிறைப்பட்டு..''!
தமிழ்நாடு அரசின் கையெழுத்துப் புத்தகச்சாலையில்,
"பலதிரட்டு" என்ற சுவடியில்,"இராமாயண வெண்பாக்கள்"
உள்ளதையும் மு.இராகவையங்கார் குறிப்பிட்டுள்ளார்.
அந்த வெண்பா இதுதான்.
"வசிட்டனும் கோசிகனும் மன்னவனும் கூடி
விசித்திரமா மங்கலச்சொல்விண்டு-
சசிக்கு நிகர்
மாமுகத்துச் சீதைக்கும் வாழும் உருமிளைக்கும்
மாமுகுர்த்தம் இட்டார் மகிழ்ந்து!''
நச்சினார்க்கினியர்,தொல்காப்பியப் பொருளதிகார உரையில்
மேற்கோள் வரிகளாக,
"ஆள்வினை முடித்த அருந்தவ
முனிவன்
வேள்வி போற்றிய இராமன் அவனோடு
மிதிலைமூதூர் எய்திய ஞான்றே
மதியுடம்பட்ட மாக்கண் சீதை
கடுவிசைவில் நாண்இடி ஒலிகேளா
கேட்ட பாம்பின் வாட்டம் எய்தித்
துயில் எழுந்து மயங்கினன் அதான்று''.
என்ற இராமாயணச் செய்திகளைக் கூறியுள்ளார்.
வால்மீகி இராமாயணத்தில்,இராமனும் சீதையும்
திருமணத்துக்கு முன்பு சந்திக்கவில்லை என்ற குறிப்பு உள்ளது.
ஆனால்,கம்பர் காட்டிய இராமனும் சீதையும்
திருமணத்துக்கு முன்பே நோக்குகின்றனர்.
"அண்ணலும் நோக்கினான்,அவளும் நோக்கினாள்''
என்பது கம்பர் வரி.
இது தமிழ்மரபு.
இதனாலேயே, மேற்காணும் நச்சினார்க்கினியர் உரையின்
மேற்கோள் பாடலும் காட்டுகிறது.
சங்க இலக்கியமான அகநானூறு,
"வெல்போர் இராமன்
அருமறைக்கு அவித்த
பல்வீழ் ஆலம்போல''.
என,ஆலமர நிழலில் இராமன் ஆலோசனை செய்த தகவல்
கூறப்படுகிறது.
"இந்தத்தகவல் அகநானூறு காலத்துக்கு முன்பே தமிழில்
இராமாயண நூல் இருந்திருக்க வேண்டும்",என்ற
உண்மையைப் புலப்படுத்துகிறது.
புறநானூற்றிலும்,
"கடுந்தேர் இராமன் உடன்புணர்
சீதையை
வலித்தகை அரக்கன் வவ்விய
ஞான்றை
நிலஞ்சேர்மதுரணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை இழைப்பொலிந்தாங்கு''
என்ற வரிகள் மூலம்,"இராவணன் சீதையைக் கவர்ந்து சென்றபோது,தன் அணிகலன்களை சீதை வழியில் போட்டுவிட,அவற்றை வானர வீரர்கள் கண்டெடுத்து அணிந்த நிகழ்வை''அறியலாம்.
இந்நிகழ்ச்சியைக் கம்பராமாயணத்திலும் காணலாம்.
சங்கம் மருவிய நூலான சிலப்பதிகாரத்திலும்,
"பெருமகன் ஏவல் அல்லதுயாங்கணும்
அரசே தஞ்சமென்று அருங்கான் அடைந்த
அருந்திறல் பிரிந்த அயோத்தி போலப்
பெரும்பெயர் மூதூர்பெரும்பே துற்றதும்''.
என்றும்,
"தாதை ஏவலின் மாதுடன் போகிக்
காதலி நீங்கக்கடுந்துயர் உழந்தோன்
வேத முதல்வற் பயந்தோன் என்பது
நீ அறிந்திலையோ நெடுமொழி அன்றோ''
என்றும் கூறப்ப கள்,இராமாயணத் தகவல்களை எடுத்தியம்புகிறது.
தந்தை சொல் ஏற்று,சீதையைப் பிரிந்து,இராமன்
கானகம் அடைந்த செய்தி இவ்வரிகளில் காணப்படுகிறது.
மணிமேகலைக் காப்பியத்திலும்,
"நெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றி
அடலரு முந்நீர் அடைந்த ஞான்று
குரங்கு கொணர்ந்து எறிந்த நெடுமலை
எல்லாம்
அணங்குடை அரக்கர் வயிறுபுக்காங்கு''.
இவ்வரிகள்,இராமபிரான்,குரங்குகளின் துணையுடன் சேதுபந்தனம்(சேதுபாலம்) கட்டியதை எடுத்துக்காட்டுகிறது.
ஆழ்வார் பாடல்களின் தாக்கமும்,கம்பன் காவியத்தில் பல
இடங்களில் காணப்படுகின்றன.
எனவே,அகநானூறு,புறநானூறு,சிலப்பதிகாரம்,மணிமேகலை,
ஆழ்வார் பாசுரங்கள் ஆகியவற்றின் மூலம் கம்பனுக்கு முன்பே இராமாயண நூல்கள் இருந்திருக்க வேண்டும் என்பது
தெளிவாகிறது.
கம்பனுக்கு முன்பிருந்த இராமாயண நூல்கள்
காலவெள்ளத்தால் அழிந்திருக்கக்கூடும் என்றே
கருத வேண்டியுள்ளது.
அருமையான கட்டுரை. போலா ரிச்மன் என்று நினைவு -- ஆயிரக்கணக்கான ராமாயணங்கள் என்று எழுதினார்.
2010/5/3 srirangammohanarangan v <ranga...@gmail.com>
அருமையான கட்டுரை. போலா ரிச்மன் என்று நினைவு -- ஆயிரக்கணக்கான ராமாயணங்கள் என்று எழுதினார்.
Many Ramayanas, Paula Richman. The book in its digital version is available here:
I strongly differ with many of the conclusions arrived at in the collection of essays. (Btw, this is a collection of essays by different authors and Paula Richman is only the Editor). I have debated a few points mentioned in the book and established the invalidity of the conclusions arrived at, in my Ramayana series. Many of them are misconstrued, baseless and contorted arguments. Only natural. If you have to understand an Epic from this land, you have to first understand the culture from which it germinated. When your cultural glasses have a different colour, how can you look at my culture in its right colour!
Anyway, I am after all an Indian, non-academician, with no degrees and Ph D-s to stand in queue behind my name.....a book worm at that, not a scholar :-))
(That way...the laughter at the end of the last line shows how irritable I can get, is that not so Rangan?)
--
அன்புடன்,
ஹரிகி.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
3 small circles.
because, it is difficult to put dots on 'olai suvadi'.
ஆத்திசூடியை மாற்றுவது! ஆலயங்களை தெரிந்தோ,தெரியாமலோ புறக்கணிப்பது!
புராண இதிகாசங்களைப் பழிப்பது! சங்க இலக்கியங்களிலும் கடவுள்
சார்பில்லாதக் கருத்துக்களை பரப்புவது! அதென்ன, அரசாங்க சின்னங்களில்
கோயில் கோபுரத்தை இன்னும் வைத்திருக்கலாம் என்று பிறரைக் கேட்பது.
ஆட்சிக்கு வந்த பிறகு கடவுள் படங்களை எல்லாம அகற்றியது. இப்படியான
பொருண்மைகளில், வீழ்ந்துகிடந்தவர்கள் எழுந்து நிமிரும் போது நடக்கும்!
தென்னாப்பிரிக்ககாரர்கள் நாம் படிக்க பயப்படுகிற அளவிற்கு வெள்ளையர்களை
குற்றம்சாட்டி வருவது பல்வேறு தொகுதிகளாக வந்தவண்ணமாகவுள்ளது.
தொல்காப்பியம் வடமொழியிலிருந்து வந்தது, சங்க இலக்கியத்தில் வேதக்
கருத்துக்கள் பல உண்டு, திருக்குறள் அர்த்தசாஸ்தரத்தை தழுவியது, தமிழேக்
கூட சம்ஸ்கிருதம் இல்லாமற் போனால் நொண்டும் எனக் கூறுபவர்கள்
இருக்கிறார்கள். நல்ல வேளை, இந்த வெள்ளை மனோபாவம் உடையவர்கள்,கறுப்பு
மனோபாவம் உடையவர்களால் முழுவதும் புறக்கணிக்க முடியாமல் இருக்கிறார்கள்".
இந்த மேற்கோள் - தென்னாப்பிரிக்க மேம்பாடு - மறுபரிசீலனை என்ற
கட்டுரையின் கருத்தை தமிழிய தழுவலாக எழுதப்பட்டுள்ளது.
2010/6/20 Kannan Natarajan <thar...@gmail.com>:
--
இதிகாசத்துக்கும், காப்பியத்துக்கும் என்ன வேறுபாடு என்பதை விளக்க முடியுமா என்று கேட்டுக் கொள்கிறேன்.நன்றி.
காவியம் , காப்பியம் , போன்றவைகளுக்கும் என்ன வேறுபாடுஅன்புடன்தமிழ்த்தேனீ
உரை.) 2. An ancient village near Cīkāḻi; சீகாழிக்கு அயலிலுள்ள ஓர் ஊர். (சிலப். 30, 83, கீழ்க்குறிப்பு.)காப்பியம் kāppiyam, n. < kāvya. A narrative poem dealing with aṟam, poruḷ, iṉpam and vīṭuperu-ṇ-kāppiyamciṟu-kāppiyam;
‘இதி’, ‘ஹ’, ‘ஆஸ’ (इति+ह+आस) மூன்று சொற்கள் கொண்ட தொகைச்சொல்.
இதி – இவ்வாறு
ஹ – அன்றோ
ஆஸ – (முன்பு) நிகழ்ந்தது,
என்று பொருள் கொள்ள வேண்டும்; ஹ என்பது அசை
வரலாறு என எடுத்துக்கொள்ளலாம் - इति ह पुरावृत्तमास्ते यस्मिन् स इतिहासः
தேவ்
On Jul 12, 3:12 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2010/7/12 Geetha Sambasivam <geethasmbs...@gmail.com>
>
> > இதிகாசத்துக்கும், காப்பியத்துக்கும் என்ன வேறுபாடு என்பதை விளக்க முடியுமா
> > என்று கேட்டுக் கொள்கிறேன்.நன்றி.
>
> இதி ஹாச என்றால் ‘இது நடந்தது’ என்பது பொருள். ராமாயணமும் மஹாபாரதமும்
> இதிஹாசங்கள். இரண்டைத் தவிர வேறு எதையும் இந்தப் பிரிவில் எனக்குத் தெரிந்து
> யாரும் அடக்கியதாகத் தெரியவில்லை. இதிஹாசம் என்றால் என்னவென்று கௌடில்யருடைய
> வரையறை இங்கே:
>
> http://ancientindians.net/2009/05/28/what-is-itihasa-kautilyas-defini...