[MinTamil] அம்மா என்றால் அன்பு!

145 views
Skip to first unread message

shylaja

unread,
May 8, 2010, 11:17:06 AM5/8/10
to minT...@googlegroups.com
அவசரச் சமையல் நடுவே
.. அள்ளி  எடுத்தென் அம்மா
அவள்கொடுத்த முத்தம்; இன்றும்
.. அதைநினைத் தால்என் நெஞ்சில்
தவழ்கிற (து) அந்த எண்ணெய்
.. தாளித்த மணமும் முத்தச்
சுவையுடன் அன்னை மணமும்;
.. சொல்ல முடியுமோ பாட்டில் !

என்ற அறுசீர் விருத்தமுடன்(சரியா இருக்கா புலவர் பெருமக்களே?சரியா தான் இருக்கணும் ஏனென்றால் இதை முன்னமே நான்   எழுதி வேறுகுழுவில் வெளியிட்டதும் தட்டி சரி செய்து கொடுத்தவர் மரபுக்கவிஞர்திருசிவசிவா(சுப்ரமண்யன் நியூஜ்ர்சி)அவர்கள்

 

அன்னையர் தினத்திற்கு   இந்த இடுகை சமர்ப்பணம்!

 

    ***************************************************************************************************
அன்னையர்தினம் மேலை நாட்டில் உண்டானது, நமக்கு அவசியமானதா அன்றைக்கு மட்டும்தான் அன்னையை நினைப்பதா என்றெல்லாம் சிலர் கேட்கிறார்கள். கடவுள் எங்கும் இருக்கிறார் ஆனாலும் கோயிலுக்குபோய் வரும்போது தனி அமைதியும் நிம்மதியும் கிடைக்கிறதல்லவா அதுபோல அன்னையோடுதான் வாழ்கிறோம் அடிக்கடிசந்திக்கிறோம் பேசி மகிழ்கிறோம் ஆனாலும் சிறப்புதினம் என்கிறபோது அன்னையை அதிகமாய் நினைக்கிறோம்,நேசத்தை ,பாசத்தை அன்றைக்கு சற்று அதிகப்படியாகத் தெரிவிக்கிறோம். நல்லவைகளை எங்கும் யாரிடமிருந்தும் பெற்றுக்கொள்ளலாம்தானே?

  யாமறிந்த பெண்களிலே அன்னையைப்போல் இனிதானவர் யாரும் இல்லை என நாம் ஒவ்வொருவருமே சொல்லிக் கொள்ளமுடியும்.வளர்ந்து பெரியவர்களாகி நாமும் தாய் தந்தை என ஆகிவிட்டாலும் நம் தாய்க்கு நாம்  என்றும் குழந்தைகளே!

 

 மூன்றுவயது வரை தாயோடு  தான் எல்லாக்குழந்தைகளுக்கும் சிநேகம்.மொழியிலிருந்து
பழக்கவழக்கங்களைபோதிப்பது வரை  முதல் குரு தாயாகிறாள். அதற்குப்பிறகுவாழ்வில் எத்தனையோ பெண்களுடன் அறிமுகம ஆனாலும் மனம்,தாயைவிட உயர்ந்த இடத்தில்  அவர்களை வைக்கமுடிவதில்லை. தாயைப்போல் என்கிறோமே தவிர தாயின் இடத்தை அவர்களுக்குக் கொடுப்பதில்லை.

ஒருத்திமகனாய்ப் பிறந்து ஓரிரவில் ஒருத்திமகனாய் வளர்ந்து..என்கிறது திருப்பாவை. பெறவில்லையாயினும் வளர்த்த பேறுகொண்டவள் யசோதை அதனாலே அவள் வேறொருத்தி என்ற சொல்லில் கட்டுப்படவில்லை. தாய் என்பவள் ஒருத்தி. அவ்வளவுதான்.

பெற்றதாயினும் ஆயின செய்யும் என்கிறார் இறைவனின் கருணையை ஆழ்வாரொருவர். தாயினும் சாலப்பரிந்து என்கிறார் சைவ அடியார்.

அம்மா என்ற சொல்லே மந்திரமாய் நம்மை இன்பத்திற்கும் துன்பத்திற்கும் சுற்றிக்கொண்டிருக்கும். அடிபட்டால் அம்மா! மகிழ்ச்சி அதிகமானால் அம்மா!

 
 
அன்பு என்ற தலைப்பில்
மிகச்சுருக்கமாக்
கவிதை கேட்டார்கள்
’அம்மா’ என்றேன்
கேட்டது அம்மாவாயிருந்தால்
இன்னும் கூட சுருகக்மாய்
சொல்லி இருப்பேன்
’நீ ’என்று !
 
  என்று கவிஞர் ஒருவர் எழுதிய இந்தக்கவிதை  அம்மாவின் மடியின் கதகதப்பிற்குள் நம்மை அழைத்துச்செல்கிறது.
வண்ணம், வாசம் ,வசீகரம் என்பதோடுதான் நாம் ரோஜா மலரை அடையாளம் காண்கிறோம், அதைப்போல அன்பு என்ற சொல்லோடுதான் அம்மாவை நம்மால் அடையாளப்படுத்த முடியும்.
 
 
‘இறைவன் கடல்மடை திறந்தனைய அன்புக்கு எளியன்’ என்கிறார் தாயுமானவர் இறைவைனையே தன் வயமாக்க வல்லது அன்பின் அற்புதம்! அந்த அன்பின் முழுமை தாய்மையில் தான்  விகசிக்கிறது.
 
அம்மாவை நினைத்தவுடன் அன்புவீணயின் நரம்புகள் மீட்டு இனிய இசை எழுந்து நமது வெளியெங்கும் பரவுகிறது அவள் அன்பு ஒரு வற்றாத சிரபுஞ்சி.  அவள் மனம் மட்டுமே நமது  பாதகமான குணங்களையும் மீறி நம்மைப்  பெருமையாக  சிலாகிக்க விஷயங்களை சேமித்துக் கொண்டிருக்கிறது.  அன்பின்  ஒப்புயர்வற்ற பெருமாட்டி அவள்!
 
  
பிரசவ வலிக்கு இணையான வலி உலகில் வேறேதும் இருக்கமுடியாது .இருமுறை எனக்கு அந்த அனுபவம் ஏற்பட்டு இரண்டுதடவையும்  மறுபடி  உயிரோடு திரும்பி வரவே மாட்டேன்  என்றே   தூக்குமேடை நோக்கிப் போகிற கைதிமாதிரி லேபர்வார்டில் நுழைவேன் .அத்தனை தெய்வஙக்ளையும் உரக்க அழைத்து  டாக்டர் மற்றும் நர்சுகளை தலையில் கைவைக்கும் அளவுக்கு கூச்சல்போடுவேன்!. என்கண்வரிடம்’ நான்போனா நல்ல பொண்ணா  பாத்துக்  கட்டிக்குங்கன்னு சொல்வேன்னு எதிர்பாக்காதீங்க ஒழுங்கா தனியா இருங்க ’என்பேன் அவர் பதிலே சொலல்மட்டர்  மனுஷனுக்குத் தெரிந்திருக்கிறது நான் பலகாலம் இருப்பேன் என்று!
 
 எதற்குச்சொல்கிறேன் என்றால் பிரசவ வலி உலகத்திலேயே  மிகையான வலி ஆனபோதிலும் அதையும்  இசைநிரம்பிய வாத்தியமொன்றை சுமப்பதுப் போல  கவனமாய் சுமப்பவள்  தாய் !
 
விரையும்பேருந்தில்
வீறிட்டு குழந்தை அழ 
முந்தியோடு
கூச்சத்தையும்  விலக்கும்
 தாயன்பு
 
என்கிறார் கவிஞர் யுகபாரதி!
 
 
நாம் பெரும்புகழின் சிம்மாசனத்தில் அம்ர்ந்திருந்தாலும் அம்மாவின் எதிரே என்றும் ஒரு சின்னக்குழந்தைதான்! நல்லமரஙக்ள் நல்ல கனிகளைத்  தருவதுபோல ஒருசிறந்த  தாயின் அன்பு, அமைதி,மேன்மை ,வலிமை,திறமை எல்லாம்   அவளது  பிள்ளைகளின்மேல்    குணங்களாகப்படிகிறது. பிள்ளைகளின் முகத்தினைக் காண்கிற  போதெல்லாம் அம்மா   தன்  முகத்தைக்   கண்ணாடியில்     காண்பதைப்   போல உணர்கிறாள்.
 
அமைதியின் இருப்பிடம் தாயன்பே  என்கிறார் தாகூர்.
 

 
 
 
விலைமதிப்பற்ற செலவம் என்று தாயை அரியணையிலேற்றி  வைக்கக்கூடவேண்டாம் நமது ஒப்பற்ற அன்பு பூத்தவெளியில் அம்மாவை நிமம்தியாக  சுவாசிக்க  வைத்தாலே போதுமானது. அவளிடமிருந்து   அந்த    தூய்மையான தாய்மை  உணர்ச்சியை கற்றுக்கொள்வது  இன்னும்  இனிமையானது! நாம்  ஒவ்வொருவரும் தாய்மையுணர்ச்சியுடன் வாழத்தலைப்பட்டால்  அதியசத்தக்க   அற்புதஙக்ள் நிகழும்! தாயுள்ளத்தோடு ஐம்பூதங்களால் ஆன  சுற்றுச்சூழலை அணுகுவோம்!அப்போது  கண்டிப்பாக அதை மாசுபடுத்தமாட்டோம் ,சிதைக்க மாட்டோம்! 
 
மனிதர்கள் அனைவரும்  சகமனிதர்ளை   தாய்மை உணர்ச்சியோடு எதிர்கொண்டால், கலவரங்களோ துப்பாக்கிப்  பிரயோகங்களோ  ,வெடிகுண்டுமுழக்கங்க ளோ கேட்டுவிட முடியுமா என்ன?
 
.
 

பலவருஷங்கள் முன்பு என் அப்பா கிராமத்திற்குச் சென்று தனது தாயை(எனதுபாட்டி)எங்கள் ஊருக்கு அழைத்துவரச் சென்ற நிகழ்ச்சியை அவர் வாயிலிருந்து கூறியதை அப்படியே உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.இதையே அம்மா என்ற தலைப்பில் சற்றே  கற்பனை கதாபாத்திரஙக்ளை அமைத்து சுவைபட சிறுகதையாகவும் எழுதி இருக்கிறார் அது செம்மண் என்னும் அவரது சிறுகதை தொகுப்பில்   உள்ளது
*********************************************************************************************************

' அப்பா போனதும் ஆறுவருஷம் கழிச்சி ஒருவழியா அம்மா கிராமத்தைவிட்டு என்கூட நகரத்துக்கு வந்து தங்க சம்மதிச்சதுல ரொம்ப சந்தோஷமா இருக்கு/ அம்மாவை அழைச்சிட்டுவர உடனே கிளம்பிட்டேன். ஊர்ல நுழையறப்போவே கோயில் தர்மகர்த்தா என்கிட்ட"அம்மாவை அழைச்சிட்டுப்போக வந்துருக்கியாமே, இங்கயே வருஷக்கணக்காய் வாழ்ந்தவளுக்கு அங்கே பொருந்துமா என்ன?'ன்னுகேட்டார்

'அம்மாவுக்கு ஒருகுறையும் இல்லாம நானும் என்குடும்பமும் கவனிச்சிப்போம் ஐயா..நீங்க கவலைப்படாதீங்க..'

என்னைக்கண்டதும் அம்மாவுக்குக்கண் சிரிச்சது,'வாடா வா..உனக்குப்பிடிச்ச வத்தக்குழம்பும் வாழப்பூ உசுலியும் பண்ணிவச்சிருக்கேன்?ன்னு ஆசைஆசையா பரிமாறினாள் அம்மா.

சாப்பிடறப்போ'அம்மா உனக்கு பூரண சம்மதமா இந்தவீட்டைவிட்டுவரதுக்கு? உனக்கு வயசாச்சும்மா தள்ளாமைவேற.. தனியே நீ இங்க இனிமேயும் இருக்கவேண்டாம்னுதான் அழைச்சிட்டுபோறேன் ... உனக்கு அங்க நம்ம வீட்லயே கோயில்மாதிரி பெரியபூஜை ரூம்   இருக்கு........நம்ம தெரு வாசல்லயே பந்தல்போட்டு அடிக்கடி  ...உபந்ந்யாசம், கச்சேரிநடக்கிறதால அதுக்க்கெல்லாம் அழைச்சிட்டுபோறோம்.. உன்னை கவலையேஇல்லாம சந்தோஷமா  வச்சிப்போம்மா' அப்படீன்னு சொன்னேன்

'அதுல எனக்கு சந்தேகமே இல்லடா.. இருக்கறவ்ரைக்கும் இங்க இருப்போம்னு இருந்தேன்..நினைவுச்சுமைகள் தான் அதிகமாகிறது தனிமையில்  இருந்தான்னும் தெரிகிறது....உடம்பும் இனிமே இங்கதனியே இருக்க இடம் கொடுக்கலயே சந்தோஷமா வரேன் உன்கூட'

'சரிம்மா...பகல்ல உக்காந்து போவது கஷ்டம்னு ராத்திர ரயில்ல பர்த் ரிசர்வ் பண்ணி இருக்கேன்.. பத்துமணிக்கு வண்டி ஏறினா கார்த்தால 4மணிக்கு ஊருபோயிடும்மா..ராத்திரி நீ தூங்கிடுவியா ஒண்ணூம் சிரமம் இருக்காது..'

'சரிப்பா'

 
ஊரில் எல்லோரிடமும் இனி நாந்தான் அம்மாவை  இனிமேல்பார்த்துக்கொள்ளப்போவதாக பெருமையாய்கூறி விடைபெற்றேன்.

நானும் அம்மாவும் ரயிலில் ஏறினோம்.

 

ஸ்டேஷன்மாஸ்டர்கிட்ட பெருமையா சொல்லிட்டேன்..' எங்கம்மா இனி என்கூடதானாக்கும்!  என்ன இருந்தாலும் ஒரு அம்மாவை பெத்தமகன் பாதுக்கறமாதிரிஆகுமா சொல்லுங்க ?'

ரயில்ல ஏறினதும் அம்மாவுக்கு கீழ் பர்த்துல நல்லா மெத்துனு மூணு விரிப்பு போட்டுபடுக்கை தயாரித்து,  சின்னதலையணைவச்சி  போர்வைகொடுத்தேன்.

'அம்மா!எல்லாம் வசதியா இருக்கா?  ரிசர்வ்ட் கபார்ட்மெண்ட்..யாரும் வரமாட்டாங்க..ஜம்முனு படுத்துத் தூங்கு.. நான் மேல்பெர்த்ல போயிபடுக்கறேன் ..கார்த்தால நானே உன்னை எழுப்பறேன்.இறங்கி  டாக்ஸில ஏறி ஊருக்குபோகலாம் என்ன?'

தலை அசைத்து அம்மா படுத்தாள்.

நான் போயி  மேலேபோய்படுத்தவன் தான் அடுத்த நிமிஷமே நல்லதூக்கம்!

திடீர்னுமுழிப்பு வரவும்எழுந்து  கைகடிகாரத்தை பார்த்தேன். மணி 3.இன்னும் ஒருமணி நேரத்துல ஊர்வந்துடும்..டாய்லெட் போய்வரலாமென கிழே இறங்கினேன்.

கீழ்பர்த்தில் அம்மா கொட்டகொட்ட முழித்தபடி உட்காந்திருக்கவும் கலவரமாய்,

 

'என்னம்மா எழுந்திட்டியா சீக்ரமா?'

'இல்லடா நான் தூங்கவெ இல்ல'

'அய்யய்யோ என்னாச்சு படுக்கை சரீ இல்லயா?காத்து வரலயா? பசிச்சிதா? போர்வை கனமா இல்லையா?'

'எல்லாம் சரியாத்தான் இருக்குப்பா..நீ போயி மேலே படுத்துட்டதும் எனக்கு பயமாபோச்சுப்பா..சின்ன வய்சுல திண்ணைல படுத்து தூங்க்றப்போ ராத்திரி  கீழே அடிக்கடி விழுந்திடுவே..  கண்முழிச்சிட்டே பாத்து தூக்கி நான் மேலே விடுவேன்.. அதுமாதிரி இவ்வளோ உயரத்திலேந்து நீ எப்போ விழுந்திடுவியோன்னு கவலையா மேலேயே பாத்துட்டே உக்காந்திருந்தேன்..'

அம்மா இப்படிச்சொன்னதும் என்னவோ அவளை நான் தான் இனிமே கவனிச்சி காலமெல்லாம் பேணப்போவதா நினச்ச என் கர்வம் அப்படியே தலைகுப்புற விழுந்தது.'
************************************************************************************************



--


--
ஷைலஜா..
.../////
//
‘’மறுவில் தூவிச் சிறு கருங் காக்கை
 அன்புடை மரபின் நின் கிளையோடு ஆரப்
 பச்சூன் பெய்த பைந்நிண வல்சி
 பொலம்புனை கலத்தில் தருகுவென் மாதோ
 வெஞ்சின விறல் வேல் காளையோடு
 அஞ்சில் ஓதியை வரக் கரைந்தீமே’’

ஐங்குறு நூறுப்பாடல்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

N. Ganesan

unread,
May 8, 2010, 11:22:02 AM5/8/10
to மின்தமிழ்

On May 8, 10:17 am, shylaja <shylaj...@gmail.com> wrote:
> அவசரச் சமையல் நடுவே
> .. அள்ளி  எடுத்தென் அம்மா
> அவள்கொடுத்த முத்தம்; இன்றும்
> .. அதைநினைத் தால்என் நெஞ்சில்
> தவழ்கிற (து) அந்த எண்ணெய்
> .. தாளித்த மணமும் முத்தச்
> சுவையுடன் அன்னை மணமும்;
> .. சொல்ல முடியுமோ பாட்டில் !
>
> என்ற அறுசீர் விருத்தமுடன்(சரியா இருக்கா புலவர் பெருமக்களே?சரியா தான்
> இருக்கணும் ஏனென்றால் இதை முன்னமே நான்   எழுதி வேறுகுழுவில் வெளியிட்டதும்
> தட்டி சரி செய்து கொடுத்தவர் மரபுக்கவிஞர்திருசிவசிவா(சுப்ரமண்யன்
> நியூஜ்ர்சி)அவர்கள்
>
>

சிவசிவா பார்த்தபின்னர் வேறொருவர் வேண்டுமோ?

நா. கணேசன்

>
>
>
> >  அன்னையர் தினத்திற்கு   இந்த இடுகை சமர்ப்பணம்!
>

> > ***************************************************************************­************************

> > வாயிலிருந்து கூறியதை அப்படியே உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.இதையே *அம்மா*என்ற தலைப்பில் சற்றே  கற்பனை கதாபாத்திரஙக்ளை அமைத்து சுவைபட சிறுகதையாகவும்


> > எழுதி இருக்கிறார் அது செம்மண் என்னும் அவரது சிறுகதை தொகுப்பில்   உள்ளது

> > ***************************************************************************­******************************

> > ***************************************************************************­*********************


>
> > --
>
> --
> ஷைலஜா..
> .../////
> //
> ‘’மறுவில் தூவிச் சிறு கருங் காக்கை
>  அன்புடை மரபின் நின் கிளையோடு ஆரப்
>  பச்சூன் பெய்த பைந்நிண வல்சி
>  பொலம்புனை கலத்தில் தருகுவென் மாதோ
>  வெஞ்சின விறல் வேல் காளையோடு
>  அஞ்சில் ஓதியை வரக் கரைந்தீமே’’
>
> ஐங்குறு நூறுப்பாடல்
>
> --

> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group, send email to minT...@googlegroups.com


> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

> For more options, visit this group athttp://groups.google.com/group/minTamil- Hide quoted text -
>
> - Show quoted text -- Hide quoted text -
>
> - Show quoted text -- Hide quoted text -
>
> - Show quoted text -

Tthamizth Tthenee

unread,
May 8, 2010, 12:12:45 PM5/8/10
to mint...@googlegroups.com
கற்பெனும் தரத்தை கண்ணியமாய்க் காத்து 
அப்பனின் விந்தை  யற்புதப் பந்தில்
வாங்கித்  தாங்கி கருவாக்கி  உருவாக்கி
இடிபோன்ற  வலிதாங்கி இடைவழியே
வெளிவாங்கி கனக முலைவழியே
உதிரத்தைப் பாலாக்கி அன்போடு
அரவணைத்தூட்டி   கைகால் முளைக்க
வைத் தறிவும் ஆயுளும் அணுக்குள்
நுணுக்கி   அற்புதமாய் காத்து
அப்பனையும் அடையாளம் காட்டிய
அற்புதப் படைப்பாளி  அம்மா!
அம்மா  என்றால்  அம்மா
 
இலக்கணத் தவறுகளை சுட்டினால்  உணர்வேன்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
 
 
 
 
 
 
 
-5-10 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதினார்:
--
மனிதமும்,உலகமும் காப்போம்,  மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net

Venkatachalam Subramanian

unread,
May 8, 2010, 12:43:16 PM5/8/10
to mint...@googlegroups.com

அவசரச் சமையல் நடுவே
> .. அள்ளி  எடுத்தென் அம்மா
> அவள்கொடுத்த முத்தம்; இன்றும்
> .. அதைநினைத் தால்என் நெஞ்சில்
> தவழ்கிற (து) அந்த எண்ணெய்
> .. தாளித்த மணமும் முத்தச்
> சுவையுடன் அன்னை மணமும்;
> .. சொல்ல முடியுமோ பாட்டில் !
>
 ஓம்.
அன்பார்ந்த ஷைலஜா!
உங்கள் எழுத்து பிரசித்தம்.தமிழ் தெரிந்த மொழி ,எழுதுவதும்  தெரிந்ததே! எளிய சொற்களில் அன்பைக் குழைத்துப் பூசி  நாரில் வாசமிகு மலர்களைத் தொடுத்து மாலைகள் உருவாக்குவது போன்று பதிவு உருவாக்குகிறீர்கள்.

புட்டப் பருத்திக்கு ஒருமுறை சேவாதலாகப் போயிருந்தபோது  ஊருக்குத் திரும்புகையில் பகவான் தர்சனத்திற்கு என எங்கள் குழுவை தனி வரிசையில் அமர்த்திவைத்து காத்திருக்கையில் எங்கள் குழுவின் தலைவர் திரு ரமணியுடன் பகவான்  செய்த உரையாடல்:
பகவான்: எப்ப வந்தாச்சு?
ரமணி: பதினைந்து நாள் ஆச்சு,
பகவான்: எதுக்கு வந்தாச்சு?
ரமணி: செக்யூரிடி
பகவான்: எவருக்கு?
ரமணி: பதில் சொல்ல முடியவில்லை.
மௌன காத்துத் தலை கவிழ்ந்தார் முறுவலுடன். பாதம் பணிந்தொம்.
யாருக்கு யார் செக்யூரிட்டி.!? பகவானுக்கு பக்தன் செக்யூரிட்டியா? பக்தனுக்கு பகவான் செக்யூரிடியா? கோபுரத்தை அதில் சுதை வடிவில் இருக்கும் பொம்மைகள் தாங்குகின்றனவா? பொம்மைகளைக் கோபுரம் தாங்குகின்றதா?

அடித்தளப் படுக்கையில் அம்மா இருந்து மேற்தளத்தில் படுத்த மகனைக் காத்து விழித்திருந்தாராம். என்னே தாய்மையின் பேரன்பு. சொற்கள் இங்கே  செயல் இழந்து போகின்றன.
ஆசிகள் அன்புடன் வெ.சுப்பிரமணியன் ஓம்.


/

PENNESWARAN KRISHNA RAO

unread,
May 9, 2010, 1:07:55 AM5/9/10
to mint...@googlegroups.com

மாத்வ பிராமணர்கள் மடி ஆச்சாரத்தில் ரொம்பவும் கெட்ட பெயர்  வாங்கியவர்கள்.  அதாவது தங்களுlடய கடுமையான மடி ஆச்சாரத்தினால் மற்றவர்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்கிறவர்கள்.   பல நேரங்களில் மனித வதையின் எல்லைவரை இவர்களின் மடி ஆச்சாரம் செல்லும். 

தாத்தா பாட்டிக்கு அப்பா ஆண்டு தோறும் திவசம் கொடுப்பார்.  கடும் பட்டினியாக இருந்து திவசம் கொடுப்பார்.  பிராமணார்த்தத்துக்கு வரும் பிராமணர்களும் கடும் பட்டினியுடன் வரவேண்டும் என்று எதிர்பார்ப்பார். நிபந்தனைகள் விதிப்பார்.  கொஞ்சம் மடி ஆச்சாரம் குறைந்தவர் போல இவருடைய அபிப்ராயத்தில் அந்த மனிதரைக் கூப்பிட மாட்டார்.

அப்பா மற்றும் அம்மாவின் பட்டினி திவசத்துக்கு முந்தைய இரவில் துவங்கும்.  திவசம் எல்லாம் முடித்து பசுமாட்டுக்கும் மீன்களுக்கும் காக்கைகளுக்கும் பிண்டம் கொண்டுத்து சாப்பாட்டு இலை முன்பு உட்கார மறுநாள் மாலை ஐந்து மணி ஆகிவிடும்.

இந்தக் கடுமையான பட்டினி குழந்தைகளான எங்களுக்கும் விதிக்கப்படும்.  நான் அம்மாவுக்கு ஒன்பதாவது பையன்.  கடைக்குட்டி.

என்னால் பசி தாங்க முடியாது.  துடித்துப் போவேன்.  மடி ஆச்சாரக் கட்டுப்பாடுகளால் யாரையும் தொடமுடியாது.  சமையலறைக்குப் போக முடியாது.  ஏக்கத்துடன் கண்கள் செருகிக் கொண்டு உட்கார்ந்து இருப்பதுதான் ஒரே வழி.

ஏதோ காரியமாக புறக்கடை வழியாக வருவது போல வருவாள் அம்மா.  அங்கு வரச்சொல்லி கண்ணால் ஜாடை காட்டுவாள்.

அங்குபோனால் அவள் முந்தானையில், திவச பட்சணங்கள் ஒளித்து வைத்து இருப்பாள்.  நைவேத்தியம் பண்ணுவதற்கு முன்பு, பிராமணர்கள் சாப்பிடுவதற்கு முன்பு அப்பாவின் எல்லா அனுஷ்டானங்களையும் தவிடுபொடியாக்கி விடுவாள்.  அவசர அவரசமாக என் கைகளில் திணித்து எங்கேயாவது ஒளிஞ்சு நின்னு சாப்பிடு.   அப்பா பார்த்தா கொன்னுடுவார் என்று கைகளில் திணித்து என்னை விரட்டுவாள்.

மதம் விதிக்கும் கடுமையான கட்டுப்பாட்டினால் திவசம் முடிகிறவரை அடுத்தவர்களைத் தொடக்கூடாது என்கிற மடிக் கட்டுப்பாடு - திவச பிராமணர்கள் சாப்பிடுவதற்கு முன்பு, நைவேத்தியம் செய்வதற்கு முன்பு யாரும் சாப்பிடக்கூடாது என்கிற கடுமையான அனுஷ்டானங்களையும் தன் பிள்ளையின் பசிக்கு ஒன்றுமே இல்லை என்று  காலில் போட்டு மிதிக்கிறவள் அன்னையாக மட்டுமே இருக்க முடியும்.

இப்போதும் ஆண்டு தோறும் என் அன்னைக்கு திவசம் செய்யும்போது  இந்த வயதிலும் நேரம் கடந்தால் பசி வயிற்றைப் பிடுங்கும்.  என் குழந்தைப் பருவத்தில் என்னை அரவணைத்த அம்மாவின் ரகசிய கிசுகிசுப்பும் கையில் திவச பட்சணங்களைக் கையில் திணித்த அவசரமும் நினைவில் வந்து மனதெல்லாம் நெகிழ்ந்து நெக்குருகும்.

அன்புடன்

பென்னேஸ்வரன்

 


2010/5/8 Venkatachalam Subramanian <v.dot...@gmail.com>



--
http://www.vadakkuvaasal.com/

meena muthu

unread,
May 9, 2010, 1:40:04 AM5/9/10
to mint...@googlegroups.com
என்ன இது!ஆளாளுக்கு இப்படி நெகிழவைக்கிறீர்கள்..
தாயை நினைத்து..கண்கள் பனிக்க..

மீனா

2010/5/9 PENNESWARAN KRISHNA RAO <penne...@gmail.com>

Annakannan

unread,
May 9, 2010, 1:58:23 AM5/9/10
to மின்தமிழ்
தாய்மையின் ஒளிக்கீற்றுகளை உணர்வுபூர்வமாகப் பதிந்தமை நன்று. அந்தக்
கருணை அளவற்றது. அன்னையின் ஆற்றலோ, இணையற்றது.

இந்தக் குறும்படத்தைப் பாருங்கள்:

http://www.flixxy.com/game-of-survival.htm

அன்புடன் என்றும்,
அண்ணாகண்ணன்.

N. Kannan

unread,
May 9, 2010, 3:28:16 AM5/9/10
to mint...@googlegroups.com
மிக அழகான நினைவுகள். சற்றேறக்குறைய இது பெரும்பாலான வீடுகளில்
நடைபெறுவதுதான். எங்கள் வீட்டில் திவசம் என்றால் இதே கதைதான். எங்கள்
தாத்தா ரொம்ப கெடுபிடி. எல்லாம் கொலை பட்டினி. உங்களைப் போல் நானும்
கடைக்குட்டி. தென்பாண்டி நாட்டில் திவசம் போது வெள்ளையப்பம் என்றொரு
பண்டம். மிக சுவையாக இருக்கும் (கீதா ரெசிப்பி ப்ளீஸ்). அதிலே இரண்டு
சத்தம் போடாமல் என் கை மாறும். அப்புறம் நான் ஆற்றங்கரையை நோக்கி ஓடிவிட
வேண்டும். இதுதான் ஏற்பாடு. பக்கத்துவீட்டில் ஒரு மொட்டைப் பாட்டி.
அத்யானபட்டர் அம்மா. மடியென்றால் அப்படியொரு மடி! அந்தப் பாட்டி வந்தாலே
நாங்கள் நாலு அடி தள்ளி நடக்க வேண்டும். ஆனால் என் அன்னை அப்படியெல்லாம்
இருந்ததில்லை. In fact, அந்தப்பாட்டி குழந்தைகளுக்குச் செய்யும்
வன்முறைக்காக அவளைத்திட்டுவாள். ஒருமுறை, எங்கள் பள்ளி, ஒரு விழாவில்
பங்கு கொள்ள மானாமதுரையிலிருந்து தள்ளி ஒரு கிராமத்திற்கு எங்களை
அனுப்பிவிட்டது. நாங்கள் ஒயிலாட்டம் ஆடிக்கொண்டிருந்தோம். விழா முடியும்
சமயம் ஒரு டவாலி வந்து என்னிடம் ஒரு பொட்டலத்தைக் கொடுத்துவிட்டுப்
போனார். அம்மா கொடுத்தாங்க என்று. அதில் வெல்லச்சீடை வகையறா. அன்று
கோகுலாஷ்டமி! அவளின் கண்ணனுக்கு எங்கிருந்தாலும் படைக்கும் தாய் அவள்!
அம்மா என்றால் அன்புதான். அவள் போல் இனிமேல் எனக்கு யாரும் தலை துவட்ட
முடியாது. பூ போல மேவும் அவள் கைகள். அந்த அழுத்தமற்ற மெல்லிய விரல்கள்.
நம்பெருமாளுக்கு அபிஷேகம் செய்யும் போது இதே கவனம் வேண்டும் என்பது
கோயில் ஒழுகு!

கண்ணன்

2010/5/9 PENNESWARAN KRISHNA RAO <penne...@gmail.com>:


> மதம் விதிக்கும் கடுமையான கட்டுப்பாட்டினால் திவசம் முடிகிறவரை அடுத்தவர்களைத்
> தொடக்கூடாது என்கிற மடிக் கட்டுப்பாடு - திவச பிராமணர்கள் சாப்பிடுவதற்கு
> முன்பு, நைவேத்தியம் செய்வதற்கு முன்பு யாரும் சாப்பிடக்கூடாது என்கிற கடுமையான
> அனுஷ்டானங்களையும் தன் பிள்ளையின் பசிக்கு ஒன்றுமே இல்லை என்று  காலில் போட்டு
> மிதிக்கிறவள் அன்னையாக மட்டுமே இருக்க முடியும்.

Subashini Tremmel

unread,
May 9, 2010, 4:33:22 AM5/9/10
to mint...@googlegroups.com
இன்று அன்னையர் தினத்தில் மட்டுமல்ல, பல நாட்கள் அம்மாவின் நினைவு மனதில் எட்டி பார்க்கும் போது அது ஒரு வித்தியாசமான, மகிழ்ச்சி, சோகம், பிரமிப்பு போன்ற உணர்வுகளின் கலவையாக எனக்கு தோன்றும்.  1.7.2004, திடீர் என அவர் மறைந்து போய் சில ஆண்டுகளும் ஆகிவிட்டன. ஆனால் இருப்பது போன்ற உணர்வு எனக்கு இன்றும் உள்ளது.
 
அம்மாவின் கருத்துக்களோடு சில வேளை ஒத்துப் போவதும் பல நேரங்களில் மாறுபட்டு இருந்ததும் தான் உண்மை. அம்மாவின் இறுதிக் காலங்களில் இந்த எங்கள் உறவைப் பற்றி பேசி சிரித்திரிக்கின்றோம், தொலை பேசி உரையாடலில்.
 
அம்மாவிடம் பிடித்தது அவரது அழகு, சமையல், முற்போக்கு எண்ணம் என பல வரிசையாக இருந்தாலும் புதிய முயற்சிகளில் ஈடுபட அவர் காட்டிய ஆர்வம், எதற்கும் கவலைப்படாமல் ஏதாவது செய்து கொண்டே இருக்கும் அவர் தன்மை என்னை மிகவும் கவர்ந்தவை. தஞ்சாவூர் தான் அவருக்கு பூர்வீகம். திருமணம் செய்து பினாங்கு வந்தவர். சமையலில் அபாரமான திறமை கொண்டவர். மலேசியா செல்லும் போது என் சகோதரி செய்யும் சமையலில் அந்த சுவையை உணர முடிகின்ற போது மனசுக்கு இதமாக இருக்கும்.
 
தனது 19 வயதிலிருந்து 58 வயதில் மறையும் வரை பல கட்டுரை, கவிதை, சிறுகதை, தொடர்கதைகளை மலேசிய பத்திரிகைகளில் எழுதியவர். வானொலி நிகழ்ச்சிகளில் பல படைப்புக்கள்;  7 நூல்கள் வெளியிட்டவர்; என் அம்மா ஜனகாவைப் பற்றி ஓரளவு இன்று இங்கு பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சியளிக்கின்றது.
 
அன்புடன்
சுபா
 
2010/5/9 N. Kannan <navan...@gmail.com>

srirangammohanarangan v

unread,
May 9, 2010, 4:38:52 AM5/9/10
to mint...@googlegroups.com
திருமதி சுபாஷினி,
 
தங்கள் தாயின் முழு நூல் தொகுப்பைக் கொண்டுவர தாங்கள் ஏன் முயற்சி செய்யக் கூடாது?

Subashini Tremmel

unread,
May 9, 2010, 5:07:38 AM5/9/10
to mint...@googlegroups.com
திரு.ரங்கன்,
 
சில ஆண்டுகளுக்கு முன்னர் இதனை யோசித்து சில முயற்சிகளில் ஈடுபட்டேன். தொடர முடியவில்லை. இப்போது நீங்கள் சொல்வதை வாசிக்கும் போது மீண்டும் முயற்சியை தொடங்க வேண்டும் என்று மனம் சொல்கின்றது.
 
அம்மா தனது எழுத்துக்கள் பத்திரமாக சேகரிக்கவில்லை.  இது எனக்கு அவரிடம் பிடிக்காத குணங்களில் ஒன்று..:-) எனது கண்டிப்பின் காரணமாக அவர் மறைவுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் கணினி என் தோழி ஒருவரின் துணையோடு அறிமுகம் செய்து வைத்து தட்டச்சு பழக ஆரம்பித்தார். ஆனால் அவரது மறைவு இதற்கும் ஒரு தடையாக அமைந்து விட்டது. 
 
பத்திரிகையில் வெளிவந்த அனைத்து படைப்புக்களையும் மலேசிய National Archiveல்  தேடினால் தொகுக்கலாம். அதற்கு நேரம் தேவை. இதனை 2007ல் ஒரு முறை மலாயா பல்கலைக் கழகத்து ஆசிரியர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போது ஒரு மாணவர் திட்டமாக செய்யலாம் என பேசினோம். ஆனால் திட்டம் செயல்பட வில்லை. மீண்டும் முயற்சிக்கிறேன்.
 
அன்புடன்
சுபா

2010/5/9 srirangammohanarangan v <ranga...@gmail.com>

Tthamizth Tthenee

unread,
May 9, 2010, 5:58:07 AM5/9/10
to mint...@googlegroups.com

நான் லூகாஸ் டீ வீ எஸ்ஸில் போட்ட ஒரு நாடகத்துக்கு தலைமை தாங்க வந்து
அந்த நாடக மேடையிலென்னை அழைத்து என் தோளிள் கைபோட்டுக்கொண்டு
எதிரே உட்கார்ந்திருந்த என் தாயாரைக் காட்டி  அதோ உட்கார்ந்திருக்கிறார்களே  எழுத்தாளர் கமலம்மாள்  அவர்களுக்கு  இந்தப் பிள்ளை பிறக்கும் போது ப்ரசவம் பார்த்த  மருத்துவச்சி நான்தான்  , அதனால்  இந்தக் கிருஷ்ணமாச்சாரி 
“என் கையில் பூத்த  மலர் ” என்று வர்ணித்தார்கள்

என் தாயாரின் எழுத்துக்களை  அந்தக் காலம் தொட்டு நான் சேகரித்து வைத்திருக்கிறேன்
அவைகளை தட்டச்சு  செய்து கொண்டிருக்கிறேன்
ஒரு நல்ல காலம் வரும் அப்போது அந்தப் பொன்னெழுத்துக்களை வெளியிடுவேன்
என் தாயார் எழுதிய  பாடல்கள், கதைகள், நாடகங்கள்  வெளிவராத பத்த்ரிகைகளே  ஒரு காலத்தில் இல்லை எனலாம்
அவர்கள் வாய் திறந்தாலே  வார்த்தைகள் தாமாக வந்து அணிவகுக்கும்

ஒரு மாலைச் சூரியனைப் பார்த்துவிட்டு

அவர்கள் கூறிய பாடல்

மரகதப் பச்சைக் கரை வரைந்த
வைரக் கிரணங்கள் இழை சேர்த்து
செந்தூரச் செந்தழல் சேலை கட்டி
மாலை மயங்கும் வேளையிலே
மலைமுட்டின் சிகரத்திலே காதலன்
காவலன் காரிளோன் வரக் காத்திருக்கும்
வண்ண மாலை பெண்ணே

இது  முதல் பாரா மட்டுமே

என்னும் பாடல் உட்பட ஒன்பது பாடல்களை
எல் கிருஷ்ணன் இசையமைத்து,திருமதி பம்பாய் சகோதரிகள்  பாடி
சங்கீதா நிறுவனத்தார் வெளியிட்டார்கள்
 
” தெய்வீகப் பாமாலை “ என்னும் பெயரில்
 
நம்முடைய மண்ணின் குரல் பகுதியில் என் தாயார் ஆர் கமலம்மாள் அவர்களின் தெய்வீகப் பாமாலை  பாடல்களைக் கேட்டு மகிழலாம்

அவர்கள் போட்ட நல் விதைதான்  இன்று உங்கள் முன்னால்  ஒரு சிறு செடியாக நான் நிற்கிறேன், அன்னையர் தினத்தில் மட்டுமல்ல  எப்போதும் எங்கள் நெஞ்சில் நிறைந்திருக்கும் எங்கள் தாயார்  ஆர் கமலம்மாள் அவர்களுக்கு  நான் இப்போது எழுதிக்கொண்டிருக்கும் அனைத்தும் சமர்ப்பணம்

அன்புடன்
தமிழ்த்தேனீ



9-5-10 அன்று, Subashini Tremmel <ksuba...@gmail.com> எழுதினார்:

--
மனிதமும்,உலகமும் காப்போம்,  மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net

srirangammohanarangan v

unread,
May 9, 2010, 6:23:36 AM5/9/10
to mint...@googlegroups.com
மிக நல்ல பணி திரு தமிழ்த் தேனி சார்,
 
தங்கள் தாயார் எழுத்தாளர் கமலம்மாளைப்பற்றி ஓர் உரைச்சித்திரம் வரையுங்களேன் நேரம் கிடைக்கும் பொழுது.
 
வெகு விரைவில் தங்கள் தாயாரின் படைப்புகளின் தொகுப்புகளை வெளிக்கொணர்வதில் தாங்கள் வெற்றி பெற என் வாழ்த்துகள்.

 
--

Tthamizth Tthenee

unread,
May 9, 2010, 6:32:14 AM5/9/10
to mint...@googlegroups.com
நிச்சயமாக செய்வேன்
என் வாழ்க்கையின் குறிக்கோள்களில் தலையாய குறிக்கோள்  அது
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 
9-5-10 அன்று, srirangammohanarangan v <ranga...@gmail.com> எழுதினார்:

--
மனிதமும்,உலகமும் காப்போம்,  மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ

Geetha Sambasivam

unread,
May 9, 2010, 7:11:10 AM5/9/10
to mint...@googlegroups.com
உங்கள் முயற்சி அனைத்திலும் உங்கள் தாய் தெய்வம் போல் துணை நிற்கிறார். வாழ்த்துகள் சுபாஷிணி. உங்கள் அன்னையைப் பற்றிய குறிப்புகளைத் தொகுக்கும் முயற்சி வெற்றி பெறவும் வாழ்த்துகள்.

2010/5/9 Subashini Tremmel <ksuba...@gmail.com>

Innamburan Innamburan

unread,
May 9, 2010, 10:01:59 AM5/9/10
to mintamil, Innamburan Innamburan
நாம் நினைத்ததை எல்லாம் எழுத முடிவதில்லை. இந்த இழை உலா வரும்போது (மே 7ம் தேதி) ஒரு அன்னையை நினைத்து மனம் கனத்து இருக்கும் நாள், என் சுற்றத்தில். மேலும், பல அன்னைகளை பற்றிய மென்மையான நினைவலைகள் மிதந்து வரும்போது குறுக்கிட மனம் இடம் கொடுக்கவில்லை.  நண்பர் தமிழ்த்தேனியை ஒரு நாள் உரிமையுடன் கோபித்துக்கொண்டேன். ஏனென்றால், அவரின் அன்னையின் கையெழுத்துப்பிரதிகள் சிலவற்றை காணும் தருணம் அன்று கிடைத்தது. அவர் என்னை தப்பாக நினைத்தாரோ என்னமோ? மின் தமிழரரில் சிலர் 'அம்மா சொல்படி ராஜு' படித்திருப்பார்கள். ஒரு அவசரகதியில், அதற்கான பதிவுகளை மூலத்திலிருந்து தட்டச்சு செய்து உதவியவர் தமிழ்த்தேனி. அந்த தொகுப்பின் முகவுரையிலிருந்து ஒரு சொற்றொடர்,"...என் மேல் ருக்மிணி தனிப்பரிவு காட்டினார் என்பதும், நான் அதை  எதிர்த்ததை அவர் பொருட்படுத்தவில்லை என்பதும் உண்மை...". இந்த நினைவோட்டம் சகோதர சகோதரிகளுக்குள் அலசப்பட்டது. ஒவ்வொருவரும் அம்மா தன்னிடம் மட்டும் தான் தனிப்பரிவு காட்டினார் என்று நினைத்துக்கொண்டிருந்தது அப்போது தெரிந்தது.  அப்போது தான் புரிந்தது, அவர் என் எதிர்ப்பை ஏன் பொருட்படுத்தவில்லை என்று. 
இன்னம்பூரான்

2010/5/9 Innamburan Innamburan <innam...@googlemail.com>
I shall gladly do a diligent search for you, Subashini,  and send the
results only to you. Please give me basic clues, if you agree. In our
family, I am the search party for my daughter in law's art, dance,
pottery inputs, select medical book reviews for my son and so on. I am
also the research assistant for my grand daughter's home work.
Regards,
Innamburan

2010/5/9 Subashini Tremmel <ksuba...@gmail.com>:

Tthamizth Tthenee

unread,
May 9, 2010, 10:32:43 AM5/9/10
to mint...@googlegroups.com

பெரியோர் சொல் வேதம்
என் குரு போன்ற உங்களை நான் தவறாக நினைக்க  இடமே இல்லை
 
அழ அழச் சொல்பவர் தமர்
தெரியாதா  எனக்கு
 
நீங்கள்  உங்கள் தாயாரைப் பற்றி எழுதும்போது
நானும் என் தாயாரைப் பற்றி எழுதினால்  உங்கள் மடலிலிருந்து கவனம் சிதறும் என்பதால் எழுதவில்லை  அவ்வளவே
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
 
 
 
 
 
 
 

 
9-5-10 அன்று, Innamburan Innamburan <innam...@googlemail.com> எழுதினார்:

--
மனிதமும்,உலகமும் காப்போம்,  மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net

srirangammohanarangan v

unread,
May 9, 2010, 10:53:41 AM5/9/10
to mint...@googlegroups.com
திரு தமிழ்த்தேனி சார்,
 
அப்படி இல்லை. அம்மா என்றால் எத்தனை அம்மாவின் சரிதம் படித்தாலும் எப்படி ஒன்றிலிருந்து ஒன்று கவனம் சிதறும்? இது நாவல் அல்லவே!
 
தசையும் இரத்தமும் இதயமும் கொண்டு உயிரை உருவாக்கிய மஹா அன்னையின் அம்ச பூதர்கள் தாமே நம் அம்மா என்ற ரூபங்கள் தாங்கி வருவது.
 
ஏன் நம் எதிரில் ரூபம் தாங்கி நடமாடிப் பேசி நம்முடன் பல விதங்களில் பழகும் பெண் ஸ்வரூபங்களும் அதே அம்மா என்னும்  நிஜம்தானே? நாம் தானே குருட்டுத்தனத்தால் ஏதோ பெண்ணுடன் பேசுவதாய் நினைத்துக் கொண்டிருக்கிறோம். 
 
கண்ணின் படலம் அகல பல அம்மாக்களின் சரிதமும் ஏக புராணம் ஆகாதோ? 

 
On 5/9/10, Tthamizth Tthenee <rkc...@gmail.com> wrote:

பெரியோர் சொல் வேதம்
என் குரு போன்ற உங்களை நான் தவறாக நினைக்க  இடமே இல்லை
 
அழ அழச் சொல்பவர் தமர்
தெரியாதா  எனக்கு
 
நீங்கள்  உங்கள் தாயாரைப் பற்றி எழுதும்போது
நானும் என் தாயாரைப் பற்றி எழுதினால்  உங்கள் மடலிலிருந்து கவனம் சிதறும் என்பதால் எழுதவில்லை  அவ்வளவே
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
 
 

--

Tthamizth Tthenee

unread,
May 9, 2010, 11:03:36 AM5/9/10
to mint...@googlegroups.com
கண்ணின் படலம் அகல பல அம்மாக்களின் சரிதமும் ஏக புராணம் ஆகாதோ? 
 
ஸ்ரீரங்கத்து தேவதையே 
 
ஒவ்வொரு அம்மாவும் இறைவனின் ஒவ்வொரு ரூபம் போலே
ஒவ்வொரு சரித்திரம்
, அல்லது ஒவ்வொரு புராணம், அல்லது ஒவ்வொரு நாவல் தான்
 
ஒரே நேரத்தில்
 
தசாவதாரமும் தோன்றினால்
 
கண்ணின் படலம் மட்டும் அல்ல  கண்ணே இடம் மாறிவிடும்
 
 
 
தோள் கண்டார் தோளே கண்டார்  ராமனுக்கு மட்டுமே  பொருந்தும்
 
ஒரு சேர  பலதாய்களைப் பார்த்த அனுபவம் அவனுக்கு மட்டுமே கிடைத்தது
 
 
ஒரே நேரத்தில் பல அம்மாக்கள்  வலம் வந்தால்  எப்படி
 
சற்றே இடைவெளி விட்டு வந்தால்  கவனிக்க முடியும் என்பதைக் கூறினேன்
 
 
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 
9-5-10 அன்று, srirangammohanarangan v <ranga...@gmail.com> எழுதினார்:
திரு தமிழ்த்தேனி சார்,

--
மனிதமும்,உலகமும் காப்போம்,  மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ

srirangammohanarangan v

unread,
May 9, 2010, 11:07:25 AM5/9/10
to mint...@googlegroups.com
அதைத்தான் கூறுகிறேன்!
 
ஒரே அம்மாவை உங்களால் எப்படி அனைத்து சரிதங்களிலும் தரிசிக்க முடியாமல் போகிறது? இது எனக்கு விசித்திரமாக இருக்கிறது! 
 
சரி உம்மோடு இந்த விஷயத்தில் வாக்குவாதம் பண்ண வரவில்லை. மெள்ள மெள்ள நீரே விஷயத்தைப் புரிந்துகொண்டால் சரி. 
:--))) 

 

Innamburan Innamburan

unread,
May 9, 2010, 11:16:06 AM5/9/10
to mint...@googlegroups.com
"Cascading stream of collective consciousness"  (மொழி தழுவி) = கண்ணின் படலம் அகல பல அம்மாக்களின் சரிதமும் ஏக புராணம் ஆகாதோ?


2010/5/9 srirangammohanarangan v <ranga...@gmail.com>

srirangammohanarangan v

unread,
May 9, 2010, 11:41:30 AM5/9/10
to mint...@googlegroups.com
இதையொட்டி ஒரு சிந்தனம் --
 
ஸ்ரீலலிதா ஸஹஸ்ர நாமம் 457 ஆவது நாமா ‘மாதா’ என்பது.
உயிர்க்குப் பிறப்பளிக்கும்
தாயின் வடிவம் அவளே என்கிறது.
 
தொடக்கத்திலேயே அம்மா என்று சொல்லித்தான் ஆரம்பிக்கிறது.
 
இவ்வளவும் நம் கண்களின் படலத்தை அகற்றுவதற்காகத்தான்.
 
அஞ்ஞானத்தில் அல்லல்படும் உயிர் எந்த நாமாவைச் சொன்னாலும் விடாமல் சொல்லாது
என்றுதான் போலும் ‘அம்மா’ என்ற நாமாவை அனிச்சை உச்சாடனமாக வைத்திருக்கிறது ச்ருஷ்டி. எந்த உயிரும் அநவரதம் தன்னை மறந்து கூவுவது ‘அம்மா’.

 
On 5/9/10, Tthamizth Tthenee <rkc...@gmail.com> wrote:
கண்ணின் படலம் அகல பல அம்மாக்களின் சரிதமும் ஏக புராணம் ஆகாதோ? 
 

--

Tthamizth Tthenee

unread,
May 9, 2010, 11:49:38 AM5/9/10
to mint...@googlegroups.com
புரிந்துகொள்கிறேன்

Innamburan Innamburan

unread,
May 9, 2010, 11:51:50 AM5/9/10
to mint...@googlegroups.com
Good show

2010/5/9 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

Venkatachalam Subramanian

unread,
May 9, 2010, 10:12:22 PM5/9/10
to mint...@googlegroups.com
ஓம்.
ஆராவமுதனை உங்களுக்குத் தெரியுமா! அவன் ஒரு மூங்கைப் பிள்ளை. மாற்றுத்திறன் கொண்டவன், குள்ளமான சிறிய உருவம் படைத்தவன். உறவு என்று சொல்லி அவனுக்குத் தெரிந்தவர் அன்னை ஒருத்திமட்டுமே. வயது முதிர்ந்து, வறுமையின் பிடியில் சிக்கி, சுற்றத்தாரால் முழுவதும் புறக்கணிக்கப்பட்டு, கைவிடப் பட்டு, தன் பிள்ளை ஆரவமுதனுக்காக மட்டுமே உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு, எப்படித்தான் இவன் வாழப்போகிறான் என்ற விடைதெரியா கேள்வியினை மனத்தகத்தே கொண்டு, சதா சர்வ காலமும் அவனுக்கு வேண்டி பிரார்த்தனை செய்துகொண்டே நாட்களை எண்ணிக் கொண்டிருப்பவள் அந்த அன்னை

ஆராவமுதன் ஒரு தன்னை மறந்த தியாகப் பிரம்மம் போன்றவன். எவர் என்னசொன்னாலும் அதை மனதுவந்து முடித்துக் கொடுக்கும் பேரறிவாளன். அந்த ஊரிலேயே உள்ள ஒரு உயர்ந்த சாப்பாட்டுக் கடை முதலாளி அவனை தன்னிடம் பணியில் வைத்துக் கொண்டார். ஏதோ ஒரு சில பண்டங்களையும் சோற்றையும் தின்று மூவர் செய்யும் பணியை தான் ஒருவனாகவே செய்து முடிக்கும் அயராத உழைப்பு அவனுடையது, உழைப்பினைப் பார்த்து அவனுக்கு மேலும் ஓய்வு தருவதற்குப் பதிலாக அவனுடைய யதர்த்தமான அப்பாவித் தன்மையைக் கண்டு இரக்கம் சிறிதும் கொள்ளாமல் அவனை மேலும் சிரமப்பணிகளைச் செய்யுமாறு சுமையேற்றும் சக ஊழியர்களை அவன் உணர்ந்து கொள்வதுமில்லை,  அவர்களின் மிது வருத்தம் கொள்வதுமில்லை. எங்கேயோ இடி இடிக்கிறது, எங்கேயோ மழை பொழிகின்றது என்றாற் போன்று எப்போதுதான் அவனுக்கு அந்தக் கடையினின்றும் பணி ஓழிந்து வீட்டுக்குப் போவான் என்பது தெரிவதில்லை.. ஒரு கிழமைத் தாய் அங்கே இவனுக்காக மட்டுமே காத்திருக்கிறாள் என்பதைக் கூட உணராதவனாய் உடல் சோர்ந்து அங்கு வீட்டுக்குத் திரும்பும் போது, ,”மகனே! வந்தாயா?! என்று வினவும்கும் தாயிடம் தன் முகத்தைத் தூக்கி அவளைப் பார்க்காமலேயே ஒரு உறுமலைக் காட்டிவிட்டு, கிழவியின் வற்புறுத்தலுக்காக மட்டும் குளிர்ந்த நீரில் முகம் கைகால் கழுவி கிழிந்து தரையில் விரிக்கப்பட்டிருக்கும் கோரம் பாயில்  சற்று அமர்வான் . கிழவிதரும் ஏதோ ஒரு கஷாயத்தை வாங்கி அனாயாசமாக வயிற்றினுள் கொட்டிவிட்டு, நிமிர்ந்தோ, மல்லாக்கவோ படுத்து அப்படியே தூங்கிப் போவான்.கிழவி அவன் அருகில் உட்கார்ந்து எவரும் விரும்பிப் பார்க்காத தன் மகனின் கடின உழைப்பால் உரமேறிய அவன் புஜங்களில் தன் வலிமையிழந்து பலம் குறைந்த கைகளால் தடவுவாள். அவன் அதை உணர்கிறானா? அன்றி  மறந்துபோவானா? என்று உணர்ச்சியற்ற கட்டையாய் அவன் கிடப்பதைப் பார்த்து ஒளியிழந்த இரு கண்களும் அருவியாய்ப் பொழிய தூங்காது அவனைப் பர்த்தபடியே வெகு நேரம் விழித்திருந்து  கண்ணீர் வழிந்தோடிய முகத்தை அவன் மீது வைத்துக்கொண்டு சாய்ந்து தூங்கியிருப்பாள்.

விடிந்ததும் அவன் காலைக் கடன் முடித்து கடைக்குச் சென்றால் இரவு 7-00 மணிக்கோ, 8-00 அல்லது 9-00 மணிக்கோ திரும்பி வருவான். அப்போதிலிருந்து ஒரு மாய இருள் அங்கு சூழ்ந்தால் போல் கிழ அன்னை  சுருங்கி போவாள். அவன் வரும் நேரம் எதிர் நோக்கி காத்திருப்பது மட்டும் தான் அவளுடைய பிரார்த்தனை. இன்னும் எத்தனை நாட்கள் இவனுடன் நான் இருப்பேன் ஈச்வரா, அவனை காத்துக்கொள்”

அவன் வாய் பேசமாட்டான். வாயினால் சில ஓசைகளை மட்டுமே எழுப்பமுடியும். அவன். நன்மையோ பிறர் தரும் துன்பமோ, தீமையோ எதுவும்  தெரிந்து கொள்ள முடியாதவன்.

 கடைக்கு சரக்கு விற்பனை செய்பவர்சிலர் ஓடிவந்து ஆராவமுதனின் தாய் இறந்து போய்விட்டதாகச் சொன்னார்கள். முதலாளி  கேட்டார், ஆராவமுதனிடம் சொன்னீர்களா? இல்லை யென்றனர். நான் அவனிடம் பக்குவமாகச் சொல்கிறேன் என்று சொன்னவர் கல்லாப் பெட்டியைத் திறந்து பணம் தந்து  சிலரை அனுப்பி அந்திமக் கிரியைகள் செய்வதற்கான பொருள்கள், உப பொருள்கள்  வாங்கி வருவதற்கும் , கொள்ளி போடுவதற்கும் ஏற்பாடு செய்யச்சொல்லிவிட்டு ஆராவமுதனை அழைத்து வரச்சொன்னார்.

 பார்வையற்ற ஒருவனிடம் அழகைப் பற்றி எப்படி விவரிக்கமுடியாதோ அது போல அம்மா இறந்து போய்விட்டாள் என்ற செய்தியை  அறிவிக்க  முதலாளிக்கு முடியவில்லை.
அவனைக் கட்டி யிழுத்தாற்போன்று அவன் கையிலிருந்த பணியைப் பிடுங்கிவைத்துவிட்டு அவனுடைய வீட்டிற்கு   அழைத்துச் சென்றார்கள்.

எப்போதும் போவது போன்று அந்த வீட்டிற்குள் ஆராவமுதன் சென்றான். வழக்கமாக அவன் வரும்போது வழிமேல்  விழிவைத்திருக்கும் அன்னை ஏன் தரையில் படுத்திருக்கிறாள். அவனுக்கு உணர்த்துவது யார்? இழுத்து வைத்து அவனைக் குளிப்பாட்டி சில சாங்கியங்களின் உச்சாடனத்துடன் இறுதிப் பயணமாக காட்டிற்கு அனுப்பிவைத்தார்கள். கையில் எரி சுமந்து அன்னைக்கு எரியூட்டினான். ஏதோ கூட்டமாகப் பலர் வந்து ஏதோ சொல்லி ஏதோ செய்து அவனைத்  தனியே விட்டுவிட்டு ஏகினார்கள்.

அது வரை அங்கு என்ன நிகழ்ந்தது என்று உணராமல் இருந்தான். ஏதோ ஒரு பொட்டலம் அவனுக்குப் பசியமர்த்தியது.
படுத்தான் தூங்கிப் போய்விட்டான்.

ஏதோ ஒன்று அங்கு நிகழ்ந்திருக்கின்றது, என்ன? ஏன்? எப்படி? எதுவும் புரியவில்லை. ஏதோ ஒன்று குறைகின்றது? என்னவென்று  சிந்திக்கக் கூட இயலாதவன்.. தூக்கம் பிடிக்கவில்லை. என்ன நடந்தது? ஏன் எல்லோரும் உடன் வர எங்கேயோ போய்வந்தோம்! ஏன் அம்மா என்னோடு அப்போது பேசவில்லை இன்று? ஏதாவது கலந்து கஷாயம் போல காரமாய்த் தருபவள் தரவில்லையே? கண்ணைக் கலக்கமாய்க் கொண்டு எல்லோரும் என்னையே பார்த்து அழுவது போல் தெரிந்ததே! ஏன்?  ஏன் அம்மாவை நடக்கவிடாமல் சுமந்து சென்றனர்? ஒரே கலக்கமாக் இருந்தது. சாப்பிடவும் முடியவில்லை. அப்படியே உட்கார்ந்து கொண்டே தூணில் சாய்ந்து தூங்கிப் போனான்.

 உடல் சரிந்து தரையில் படுத்தபோது உடல் வலித்தது. என்றும் ஆதரவாகத் தடவும் மெல்லிய கரம் ஏன் இன்று தோள்களையும் நடு முதுகினையும் தடவி வருடவில்லை? எங்கே அந்த மெல்லிய உருவம்? இதுவரை நடந்த அனைத்தும் அவன் நெஞ்சில் இப்போது தூக்கம் கலைந்தபோது நினைவில் இல்லை. பின் கட்டில் எட்டிப் பார்த்தான். அம்மா உட்கார்ந்து சாய்ந்துகொண்டிருக்கும் பலகை காலியாக இருந்தது. கண்களை உயர்த்திப் பார்த்தான். அம்மா உடுத்தி நனைத்து கூரையின் இரண்டு ஓரமூங்கில்களில்  காயப்போட்டு தொங்கும் வண்ணம் சிதைந்து பழைமையாய் ஆகிவிட்ட சேலை காணப்பட்டது.  சற்றே எழுந்து அந்தச் சேலையைக் கையில் உருகி எடுத்து முகத்தோடு வைத்துக்கொண்டான். ஏதோ ஒன்று தன்னை விட்டு விலகி, விலகிப் போயே போய்விட்டது என்பது சான்றளிக்கப்பட்டது போன்று உணர்ந்தான், அவன் மூங்கை வாயால் ”அம்மா ! அம்மா!!‘’ என்று அழுதான். அவன் உடலும் உள்ளமும் அம்மாவின் பிரிவை அவன் உடலில் ஊடுருவித் திணித்தது. ஏதோ ஒன்று புரிந்தது. இதுவரை அழாத ஆராவமுதன் விக்கி விக்கி அழுதான்.
ஓம்

N. Kannan

unread,
May 10, 2010, 12:33:52 AM5/10/10
to mint...@googlegroups.com
அடடா! அற்புதம்.

இவ்வலியை உணர்தவரால் மட்டுமே இதைப் புரிந்து கொள்ள முடியும்.

எங்கிருந்து வருகிறது இத்தகைய எழுத்து! ? அடடா!

க.>

2010/5/10 Venkatachalam Subramanian <v.dot...@gmail.com>:


> ஓம்.
> ஆராவமுதனை உங்களுக்குத் தெரியுமா!

Kasumi chan

unread,
May 10, 2010, 12:43:15 AM5/10/10
to மின்தமிழ்
விளாம்பழம்

உன்னைக்கருவுற்ற போது
ஒரு காட்சி கண்டேன்
புற உலகின் மாயை நீக்கி
அக உலகின் அசுத்தம் நீக்கி
வெண் சாம்பல் மேனியனாய்
வந்து பிட்சை கேட்கும் சாதுவாய்
நீ உட்புகுவது போல்
நீ பிறந்தபின்
உலகம் உன்னை அதிசயக்
குழந்தை என்று காணவில்லை.
அவர் உலகில் நீ ஒட்டவில்லை.
அது உன் தவறில்லை
எங்கள் தவறென்றும் சொல்வதற்கில்லை
எம் இச்சையால் நீ பிறக்கவில்லை
உன் இச்சையால் வந்து பிறந்தாய்
கரியாய் கிடந்த நான் இன்று
வைரமாய் மின்னுகிறேன்
நீ ஒரு யோகி என்று
நான் சொல்கிறேன்
உன்னைப் பெற்று வளர்ப்பதால்
நானே யோகி என்று
தோழி சொல்லுகிறாள்.
நீ வாழி.


காசுமி

On May 10, 11:12 am, Venkatachalam Subramanian <v.dotth...@gmail.com>
wrote:

>
>  பார்வையற்ற ஒருவனிடம் அழகைப் பற்றி எப்படி விவரிக்கமுடியாதோ அது போல அம்மா
> இறந்து போய்விட்டாள் என்ற செய்தியை  அறிவிக்க  முதலாளிக்கு முடியவில்லை.
> அவனைக் கட்டி யிழுத்தாற்போன்று அவன் கையிலிருந்த பணியைப் பிடுங்கிவைத்துவிட்டு
> அவனுடைய வீட்டிற்கு   அழைத்துச் சென்றார்கள்.
>
> எப்போதும் போவது போன்று அந்த வீட்டிற்குள் ஆராவமுதன் சென்றான். வழக்கமாக அவன்
> வரும்போது வழிமேல்  விழிவைத்திருக்கும் அன்னை ஏன் தரையில் படுத்திருக்கிறாள்.
> அவனுக்கு உணர்த்துவது யார்? இழுத்து வைத்து அவனைக் குளிப்பாட்டி சில

> சாங்கியங்களின் உச்சாடனத்துடன் ...
>
> read more »

Tthamizth Tthenee

unread,
May 10, 2010, 2:51:11 AM5/10/10
to mint...@googlegroups.com
ஆஹா உணராத ஜடத்தைக் கூட  உணரவைக்க
 
அசைய வைக்க  நெக்குருக வைக்க ஒரு தாயன்பினால்தான் முடியும்
 
உருகவைத்துவிட்டீர்கள்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
10-5-10 அன்று, Venkatachalam Subramanian <v.dot...@gmail.com> எழுதினார்:

--
மனிதமும்,உலகமும் காப்போம்,  மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net

Tthamizth Tthenee

unread,
May 10, 2010, 2:53:13 AM5/10/10
to mint...@googlegroups.com
விளாம்பழம்  கனிந்தால் ஓட்டிலிருந்து பிரிந்துவிடும்
 
நாம்  கனிவதும் இல்லை பிரிவதும் இல்லை
 
அருமையான கவிதை  திரு காசுமி அவர்களே
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 
10-5-10 அன்று, Kasumi chan <kasum...@gmail.com> எழுதினார்:

--
மனிதமும்,உலகமும் காப்போம்,  மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net

Saravana Rajendran

unread,
May 10, 2010, 1:02:15 AM5/10/10
to mint...@googlegroups.com
     மும்பை தானேவில் இருந்து கடந்த சில நாட்களாக தன்னுடைய வயதான பெற்றோரை ஒருவர் ஊனமுற்றோர் பெட்டியில் CST அழைத்து வருவார் மீண்டும்  மாலையில் அதே பெட்டியில் வைத்து மீண்டும் தானேவிற்கு அழைத்து செல்வார், மொத்தமும் உழைத்து உருகிப்போன அந்த ஜீவன்கள் எந்த ஒரு சஞ்சலமும் இன்றி காலையும் மாலையும் ஒருவித சந்தோச முகத்துடனே போய்க்கொண்டு இருந்தனர், 

  எனக்கு ஒரு சந்தேகம் வந்து விட்டது, ஒருவேளை இந்த நபர் அந்த பெரியவர்களை பிச்சை எடுப்பதற்காக அழைத்து வந்தாரா, என்ற சந்தேகமும் தோன்றியது,   கடந்த சனிக்கிழமை அன்று அவரிடம் கேட்டே விட்டேன், 
  அவர் நிதானமாக சொன்னார், 
நான் நரிமர் பாயிண்டில் உள்ள ஒரு அலுவலகத்தில் எடுப்பிடியாக பணியாற்றுகிறேன், என்னுடைய தாய் தந்தையர்கள், வருடத்திற்கு ஒரு முறை மும்பை அழைத்து வருவேன், (அவருக்கு சொந்த ஊர் பீகார்) அங்கு கோடை அதிகம் இருப்பதால் மும்பை அழைத்து வருவேன், என்னுடைய வீடு மிகவும் சிறியது, நான் எனது மனைவி, 3 குழைந்தைகள் என அனைவரும்  இருப்பார்கள், வீட்டில் அதிகம் வெப்பம் இருக்கும் அதனால் அதிக்காலையில் எனது அம்மா அப்பாவை மரைன் டிரைவ் வரை அழைத்து சென்று விடுவேன், 
அங்கு அவர்கள், கடற்கரை காற்று, மர நிழல் வருவோர் செல்வோரை பார்த்து கொண்டு நாட்களை கழிப்பார்கள் மதிய உணவு எனக்கு உணவு இடைவேளையின் நான் உணவு வாங்கி கொடுத்து விட்டு வருவேன், 

மாலை வீட்டிற்கு செல்லும் போது அவர்களை அழைத்து கொண்டு செல்வேன் என்று நிதான மாக கூறினார், 
                 மொபைலில் அந்த தம்பதியினரை படம் பிடிக்க ஆசை தான் ஆனால் நம் கண் பட்டிவிடக்கூடாதே என்பதற்காக மனம் வரவில்லை, 
           அங்கு வருவோரில் சிலர் ஏதாவது உண்ண கொடுப்பார்களாம் அதை பத்திரமாக வைத்து தனது பேரன் மார்களுக்கு கொண்டு செல்வார்களாம், 
 இது தான் உண்மையான அன்னையர் தினக்கொண்டாட்டம்

2010/5/10 N. Kannan <navan...@gmail.com>

meena muthu

unread,
May 10, 2010, 6:14:16 AM5/10/10
to mint...@googlegroups.com
தெரியும் ஆராவமுதனை எனக்குத்தெரியும்

இந்த அன்னையை அழவைத்துவிட்டீர்களே 

2010/5/10 Venkatachalam Subramanian <v.dot...@gmail.com>
ஓம்.
ஆராவமுதனை உங்களுக்குத் தெரியுமா! .
 
இதுவரை அழாத ஆராவமுதன் விக்கி விக்கி அழுதான்.
ஓம்


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

PENNESWARAN KRISHNA RAO

unread,
May 10, 2010, 6:59:47 AM5/10/10
to mint...@googlegroups.com
இந்தக் குழுவில் அழுவதற்குக் கூட கடும்போட்டி துவங்கி விட்டது பாருங்கள்.
 
 
 
பென்னேஸ்வரன்

2010/5/10 meena muthu <ranga...@gmail.com>



--
http://www.vadakkuvaasal.com/

meena muthu

unread,
May 10, 2010, 7:29:34 AM5/10/10
to mint...@googlegroups.com
..... எனக்குத்தெரிந்த ஆராவமுதனுக்கு தாயின் மறைவை உணரத்தெரியுமா என்பதே

2010/5/10 PENNESWARAN KRISHNA RAO <penne...@gmail.com>


"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

N. Kannan

unread,
May 10, 2010, 8:13:42 AM5/10/10
to mint...@googlegroups.com
2010/5/10 meena muthu <ranga...@gmail.com>:

> ..... எனக்குத்தெரிந்த ஆராவமுதனுக்கு தாயின் மறைவை உணரத்தெரியுமா என்பதே
>

ஆழமான கேள்வி!

Rain Man எனும் படத்தில் உணர்ச்சிகள் இல்லாத மனிதராக Dustin Hoffman
நடிப்பார். உணர்ச்சிகளைக் காட்டத்தெரியாததால் உணரமுடியாது என்று பொருளா?
இல்லை இக்கதையில் சொல்வது போல், ஏதொவொன்று போய்விட்டது என்ற உணர்வு
வருமா? இக்கதையில் ஆராவமுதன் அழுவது போல் வருகிறது. எனவே அவன் Rain Man
அல்ல. அவனால் அழமுடிகிறது. உணர்ச்சிகளைக் காட்டமுடிகிறது. ஆனால்
உணர்ச்சிகளை வெளிக்காட்ட முடியாது ஊனமுற்றோரின் புரிதல் என்னவாக
இருக்குமென்று நமக்கு எப்படித்தெரியும்? ஊடுருவி தாயுள்ளம் அதையும்
புரிந்து கொள்ளுமோ என்னமோ?

வாழ்வு நிலைகள் புரிபடுவது போலும் புரிபடாதது போலும் உள்ளன.

க.>

Innamburan Innamburan

unread,
May 10, 2010, 8:53:47 AM5/10/10
to mint...@googlegroups.com
'...வாழ்வு நிலைகள் புரிபடுவது போலும் புரிபடாதது போலும் உள்ளன...'

ஆபரேஷன் தியேட்டரில், டாக்டர்கள் சகஜமாக பேசிக்கொள்வதை பார்த்திருக்கிறேன். சில சமயம், அது மயக்க நிலையில் இருக்கும் நோயாளி, அவர் விழிப்புடன் இருந்தால், கூறப்படாததாகவும் இருக்கலாம். கோமா நிலையில் உள்ளவர்களால், எதுவும் கேட்க இயலாது; புரிந்து கொள்ள இயலாது என்றும் சில டாக்டர்கள் நினைக்கலாம். ஆனால், மயக்கம் கொடுக்கும் ஸ்பெஷலிஸ்ட டாக்டர்கள் இதை ரசிப்பதில்லை; மிகவும் பக்குவத்துடன் நடந்து கொள்கிறார்கள்.
இன்னம்பூரான்

2010/5/10 N. Kannan <navan...@gmail.com>

Venkatachalam Subramanian

unread,
May 10, 2010, 11:50:55 AM5/10/10
to mint...@googlegroups.com
ஓம் .
.என்னுடைய இடது கண்ணில் புரை நோயிக்கென (கேட்ராக்ட்) அறுவை சிகிச்சை மேற்கொண்டேன்.காதிற்குக் கீழே ஒரு ஊசி போட்டனர். கண்ணின் வெண்மை விழியில் ஒரு ஊசி இட்டனர். ஊசி என்னுடைய தோலின் மேற்பகுதியில் காதின் அடிப்புறத்தில் நுழையஆரம்பிக்கும் முதல் தொடுகையின் சிறிது அழுத்தம் வலித்தது. பின்னர் வலியின்றி உள்ளே நுழைந்தது என்பதை வுணர்ந்து கொண்டேன். கண்ணின் வெள்ளை விழியிலும் ஊசி குத்தப்போகின்றது என்பதை நினைக்கும் போதே வலித்தது. ஊசியைத் தயார்செய்து வெண்மை விழியினைக் கூர்நுனி தொடும்போது கண் மிகவும் எதிர்பார்த்து வலியினை உள்வாங்கிக் கொண்டிருக்கையில் சிறிது சிறிதாய் ஊசியின் அழுத்தம் ஆழமாய் இட்டுச் சென்றது. காதின் அடியில் இட்ட ஊசி லோக்கல் மயக்கத்திற்கு. கண்ணில் இட்ட ஊசி மேல்இமை அசைவை நிறுத்தி ஆடாமல் வைக்க, கண்கள் மட்டுமே மயக்கத்தில் இருந்ததால் மருத்துவர்கள் பேசும் மொழி புரியமுடிந்தது ஓரளவு. அறுவை சிகிச்சை நடக்கும் போது கண்ணில் கருவிகள் படும் போது வலியற்ற ஒரு ஓசையினை ’கரட் கரட்’ என உணர முடிந்தது.
ஓம்

2010/5/10 Innamburan Innamburan <innam...@googlemail.com>

Innamburan Innamburan

unread,
May 10, 2010, 12:07:05 PM5/10/10
to mint...@googlegroups.com
நீங்கள் சொல்வது சரி. மூன்று உபரி தகவல்கள்:

1. எனக்கு இந்த அறுவை சிகிச்சை நடந்த போது, கண்ணின் முன்னே வண்ணஜாலங்கள் நடம் ஆடின. சிலநாட்களுக்கு பிறகு மனக்கண்ணில் பதிந்துவிட்ட வரை கணினியில் சித்திரம் வரைந்து டாக்டரிடம் கொடுத்தேன். அவர்களுக்குள் அது ஆய்வு வகையில் பேசப்பட்டதாக சொன்னார்கள்.
2. நான் குறிப்பிட்டது முழுமயக்க நிலை என்று நான் விளக்கியிருக்கவேண்டும். அது கிட்டத்தட்ட என்.டி.ஈ. (Near Death Experience). பரந்த வானம். வெளிர்நீலம், மெல்லிய மணி ஓசை அல்ல; இசை. இன்பமான அமைதி. விலகி நின்று விட்டேற்றியாகப் பார்ப்பது.
3. கோமா தெளிந்தவர்கள், கோமாவில் கேட்ட சம்பாஷணைகளைப்பற்றி பேசியது உண்டு.
இன்னம்பூரான்

2010/5/10 Venkatachalam Subramanian <v.dot...@gmail.com>

Venkatachalam Subramanian

unread,
May 10, 2010, 12:25:49 PM5/10/10
to mint...@googlegroups.com
ஓம்.
சுவைமிக்க அனுபவங்கள் பகிர்ந்தமைக்கு நன்றி.ஓம்.

2010/5/10 Innamburan Innamburan <innam...@googlemail.com>

N. Kannan

unread,
May 10, 2010, 8:33:04 PM5/10/10
to mint...@googlegroups.com
சமீபத்திய கற்றையியல் புரிதலின் படி ஏறக்குறைய 14 பரிமாணங்களில்
பிரபஞ்சம் உள்ளது என்கின்றனர்.

நீங்கள் சொல்கின்ற அனுபவங்களை ஒரு சாதாரண மனிதன் தூக்கம் கொள்ளும் முன்
அனுபவிக்கத் தொடங்குகிறான். நேற்று என்னையே நான் கவனித்தேன்! நிஜம்
நழுவுதல் என்பது சுவாரசியமாக உள்ளது. பனிமூட்டத்தில் இருக்கும் போது
தெளிந்தும் தெளியாமலும் தெரியும் காட்சிகள் போலும், வண்ணக்கலவைகள்
கலக்கும் போது சேரும் அதிசய வர்ணங்கள் போலும் ஒரு நிகழ்வு. சில
நிமிடங்களில் நாம் நிஜ உலகிலிருந்து நழுவி சொப்ன உலகிற்குள்
போய்விடுகிறோம். பிறகு என்னென்னமோ நாடகங்கள்.

மரணத்துள் வாழ்ந்து திரும்பும் அனுபவமும் ஏறக்குறைய இது போல் இருக்கலாம்
(எனக்கு நேரடி அனுபவமில்லை). ஆயின் இது குறித்து நிரம்ப வாசித்து
இருக்கிறேன்.

உறங்குவது போலும் சாக்காடு என்று இதைத்தான் வள்ளுவன் சொல்லியிருக்க
வேண்டும். உறக்கம் கொள்ளுதல் போலவே சாவு நிகழ்கிறது. கோமா என்பது slumber
என்பது போன்றதோ?

வலி வருவதற்கு முன்பே வலிக்க ஆரம்பிக்கிறதே! இந்த மனதை என்ன சொல்வது?
ஜெர்மன் மருத்துவர் ஒருவர் என்னிடம் வேடிக்கையாகக் கேட்டார், மருந்து
போடாமல் பல்லைச் சுரண்டவா என்று. அவர் சொல்லும் போதே கூசி, பிராணன்
போய்விட்டது. ;-)

கண்ணன்

2010/5/11 Innamburan Innamburan <innam...@googlemail.com>:

--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..

Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

Hari Krishnan

unread,
May 10, 2010, 9:51:05 PM5/10/10
to mint...@googlegroups.com


2010/5/11 N. Kannan <navan...@gmail.com>


உறங்குவது போலும் சாக்காடு என்று இதைத்தான் வள்ளுவன் சொல்லியிருக்க
வேண்டும். உறக்கம் கொள்ளுதல் போலவே சாவு நிகழ்கிறது. கோமா என்பது slumber
என்பது போன்றதோ?


நேற்று இரவு நான் உறங்கப் போனேன்.  இன்று காலை நான் விழித்தெழுந்தேன்.  நாள் மாறுகிறது; நான் தொடர்கிறேன்.  எனில், உறங்குவது போன்ற இறப்பில் யார் உறங்கச் செல்கிறார்கள், உறங்கி விழிப்பது போன்ற பிறப்பில் யார் பிறக்கிறார்கள்?  இறந்த பிறகு இந்த உடலை விட்டு நீங்கிய நான், எதுவாக, யாராக விழிகிக்கிறேன்?

இரண்டாவது கேள்வி.  பிறப்புதான் முதலில் நிகழ்கிறது.  இறப்பு அதற்கு அடுத்ததாகத்தான் வருகிறது.  (இதுதானே கண்ணெதிரே காணப்படும் நிதரிசனம்?  இதைத்தானே விஞ்ஞானம் ஒப்புக்கொள்கிறது?)  நான் பிறந்தேன்; எனக்கு ஹரி என்று பெயரிட்டார்கள்.  நான் இறந்தால், ஹரி இறந்துவிட்டார், அவருடைய உடல் இங்கே இருக்கிறது என்று சொல்கிறார்கள்.  அப்படியானால், ஹரி உடலில்லை.  பிறப்புதான் முதலில் நிகழ்கிறது, இறப்பு அதைத் தொடர்ந்து வருகிறது என்றால்

உறங்கி விழிப்பது போலும் பிறப்பு
உறங்குவது போலும்சாக் காடு

என்றல்லவா இந்தக் குறளின் வரிசைக் கிரமம் இருந்திருக்க வேண்டும்?  ஏன் இறப்பிலிருந்து தொடங்குகிறார்?  குறளில் ஏன் இறப்பு முதலில் சொல்லப்பட்டு, பின்னர் பிறப்பு சொல்லப்படுகிறது?  நான் எதுவாக இறக்கிறேன் அல்லது எவனாக இறக்கிறேன் என்பது தெரிகிறது.  உறங்கி விழிக்கும்போது, (நேற்றிரவு நானாகவே தூங்கி, இன்று காலை நானாகவே கண்விழித்த நான்) பிறக்கும்போது என்னவாகப் பிறக்கிறேன்?

திருவள்ளுவர் சிண்டு அவ்வளவு லேசில் கையில சிக்கிடுமா கண்ணரே! :-)

 
--
அன்புடன்,
ஹரிகி.

srirangammohanarangan v

unread,
May 10, 2010, 9:55:58 PM5/10/10
to mint...@googlegroups.com
To die....to sleep...to sleep! ... perchance to dream...
Aye  there's the rub.
For in that sleep of death what dreams may come!
 
(William Shakespeare)

 

Hari Krishnan

unread,
May 10, 2010, 10:24:04 PM5/10/10
to mint...@googlegroups.com


2010/5/11 srirangammohanarangan v <ranga...@gmail.com>

To die....to sleep...to sleep! ... perchance to dream...
Aye  there's the rub.
For in that sleep of death what dreams may come!
 
(William Shakespeare)

முட்டை இறந்து ஆம்லெட் ஆகிறது.  ஆம்லெட் இறந்தால் என்ன ஆகும்?  To be, or not to be?

:P
 

N. Kannan

unread,
May 11, 2010, 3:02:20 AM5/11/10
to mint...@googlegroups.com
வள்ளுவ சூத்திரம் உங்களுக்கு அத்துபடியென்று தெரியும். அதனால் மேலும்
அறிந்து கொள்ள ஆவலாய் உள்ளேன்.

ஆயின் இங்கு வள்ளுவர் ஒரு சுழற்சி பற்றிப் பேசுகிறார். எனவே எங்கு
தொடங்கினால் என்ன? வள்ளுவ சூத்திரங்கள் எல்லாமே இந்திய சிந்தனை மரபின்
சாரமாக அமைகின்றன. எனவே இங்கு ‘உளன் ஒருவன்’ என்பது ஆன்மாவைக்
குறிப்பதாகக் கொள்ளலாம்? ஏன் ‘அன்’ விகுதி? ஆன்மாவிற்கு பால் வேறுபாடு
கிடையாதே? இப்படிக் கேட்டால், ஏன் நம்மாழ்வார் ‘அவன் ஆணல்லன்,
பெண்ணல்லன், அலியுமல்லன்’ என்று ‘அன்’ விகுதி போட்டுக்கொண்டே போகிறார்
என்று வரும்! ஆன்மா ஈஸ்வர சம்பந்தமுடையது. கீதையில் ஆன்மாவை உடலின்
ஈஸ்வரன் என்றே பகவத்பாதாள் சொல்கிறார்.

இவ்வளவுதான் நம்ம சரக்கு ;-)

நீங்கள் வித்தியாசமாக நோக்குவீர்கள் என்று தெரியும். முடிச்சை தாங்களே
அவிழ்க்கவும்.

க.>

2010/5/11 Hari Krishnan <hari.har...@gmail.com>:


> திருவள்ளுவர் சிண்டு அவ்வளவு லேசில் கையில சிக்கிடுமா கண்ணரே! :-)
>

--

Geetha Sambasivam

unread,
May 11, 2010, 3:14:04 AM5/11/10
to mint...@googlegroups.com
தங்கள் உடல்நிலை தற்போது பரிபூரணமாய்க் குணம் அடைந்திருக்கும் என நம்புகிறேன். இறைவனைப் பிரார்த்திக்கிறோம். நன்கு ஓய்வு எடுங்கள்.

2010/5/10 Venkatachalam Subramanian <v.dot...@gmail.com>

N. Kannan

unread,
May 11, 2010, 7:33:55 AM5/11/10
to mint...@googlegroups.com
சாரி! இரண்டு குறள்களைக் குழப்பிவிட்டேன் என் முந்தைய இடுகையில்.

ஹரிகியின் கேள்விகளை மீண்டும் வாசித்தேன்.

உறக்கம் என்பது ஏன் முதன்மைப்படுத்தப்படுகிறது? என்பதா கேள்வி. உறக்கம்
denotes the transitional status. ஒரு நிலையிலிருந்து மெல்ல நழுவுவது.
எனவே அங்கிருந்து தொடங்குவதில்தான் கவிதை உள்ளது. பிறப்பு என்பது,
கமலஹாசன் பாஷையில் சொல்வதானால் violence. அங்கு எல்லாமே உரக்க நடக்கிறது.
அம்மாவின் கதறல். மருத்துவச்சியின் பதட்டம். பின் குழந்தையின் கதறல்.
எனவே அங்கு தொடங்க முடியாது. That does not represent the mystical
transitional moment. மேலும் பிறக்கும் முன்னமே குழந்தையின் இருப்பு
உணரப்பட்டு அதன் வருகை எதிர்பார்க்கப்படுகிறது. உறக்கம், இறப்பு என்பது
அப்படியல்ல.

உறக்கம் என்பது நாடகத்தில் சீன் மாற்றுவது போல. படுதா விழுகிறது. படுதா
தூக்கப்படும் போது இன்னொரு நாள் இன்னொரு நாடகம். கதாநாயகன் ஒருவனாக
இருக்கலாம். ஆனால் நாடகம் வேறு. நாளை என்ன நடக்குமென்று யாருக்கும்
தெரியாது. அந்த விதத்திலும் உறக்கத்திலிருந்து தொடங்குவது சரியே.

நினைவுகள்தான், நான் நானாக மீண்டும் விழித்து வாழ்வதற்கு சாட்சி. சில
ஊனங்களில் இந்த நான் என்ற உணர்வு இல்லாமல் போய்விடுகிறது. அவர்களைப்
பொறுத்தவரை உறங்குவது போலும் சாக்காடு, உறங்கி விழிப்பது போலும் பிறப்பு.
தான்தான் மீண்டும் பிறந்திருக்கிறோமென்று தெரியாது. உண்மையில் நாம்
எல்லோரும் அப்படித்தான் இருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் புதிய மனிதனாய்
பிறக்க வேண்டும். ஆனால் நாம் பழைய ஆளாகவே சாகும்வரை இருக்கிறோம்.

ஆன்மாவின்முன் நடக்கும் நாடகத்தில் அது கண்ணனாகவும், ஹரிகியாகவும் வேடம்
போடுகிறது. கனவில் இருப்பது ஒரே ஆள்தான் என்றாலும் கனவில் பலபேரை
உருவாக்க முடிகிறது. அதுபோல் இருப்பு/மூலம் ஒன்றுதான். அங்கிருந்து
பல்கிப்பெருகி பல வடிவம் கொண்டு, பல நாமம் பூண்டு, நாடகம் ஆடிவிட்டு
ஒடுங்கும் போது ஒன்றில் தங்கிவிடுகிறது.

எனவே இங்கே நான் என்று மார் தட்டுவதெல்லாம் நாடகத்தில் பேசப்படும் வெட்டி
வசனம். ராஜா மாதிரி வசனம் பேசினால் அதற்காக ராஜாவாக முடியுமா என்ன?
அடுத்த நாள் நாடகத்தில் பிச்சைக்காரனாக நடிப்பதால் அவன் பிச்சைக்காரனா
என்ன? எனவே உறக்கம், பிறப்பு என்பது ஒரு சுழல் மேடை நாடகத்தில் மாறி,
மாறி வரும் காட்சிகள்.

இதுவே இம்மாலைப் புரிதல். (நடிகர் சூப்பரா நடிச்சா எல்லோரும் ஜோராக் கை
தட்டணும் :-)

அடியேன்


2010/5/11 N. Kannan <navan...@gmail.com>:


> வள்ளுவ சூத்திரம் உங்களுக்கு அத்துபடியென்று தெரியும். அதனால் மேலும்
> அறிந்து கொள்ள ஆவலாய் உள்ளேன்.
>
> ஆயின் இங்கு வள்ளுவர் ஒரு சுழற்சி பற்றிப் பேசுகிறார். எனவே எங்கு
> தொடங்கினால் என்ன? வள்ளுவ சூத்திரங்கள் எல்லாமே இந்திய சிந்தனை மரபின்
> சாரமாக அமைகின்றன. எனவே இங்கு ‘உளன் ஒருவன்’ என்பது ஆன்மாவைக்
> குறிப்பதாகக் கொள்ளலாம்? ஏன் ‘அன்’ விகுதி? ஆன்மாவிற்கு பால் வேறுபாடு
> கிடையாதே? இப்படிக் கேட்டால், ஏன் நம்மாழ்வார் ‘அவன் ஆணல்லன்,
> பெண்ணல்லன், அலியுமல்லன்’ என்று ‘அன்’ விகுதி போட்டுக்கொண்டே போகிறார்
> என்று வரும்! ஆன்மா ஈஸ்வர சம்பந்தமுடையது. கீதையில் ஆன்மாவை உடலின்
> ஈஸ்வரன் என்றே பகவத்பாதாள் சொல்கிறார்.
>
> இவ்வளவுதான் நம்ம சரக்கு ;-)
>
> நீங்கள் வித்தியாசமாக நோக்குவீர்கள் என்று தெரியும். முடிச்சை தாங்களே
> அவிழ்க்கவும்.
>
> க.>

Reply all
Reply to author
Forward
0 new messages