
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
நம்ப முடியவில்லை!வில்லை! வில்லை!நாம் பெண்களுக்குக் கொடுக்கும் கல்வியில் ஆழமில்லை.
தம்பதிகள் இருவருமே பங்கேற்றால் தான் பலன் கிடைக்கும். அது தானே அடிப்படை இந்துமதக் கொள்கை. சடங்குகளைக் கூர்ந்து கவனித்தால் விளங்கும்.மொழிவளத்தையும் மீறி எதோஒரு சிந்தனை அவர்கள் மூளையை எட்ட வேண்டும்.எனக்கு ஒரு யொசனை.:-
கலந்துகொள்ளும் பெண்கள் அனைவரும் அவர்கள் கணவன் மார்களுடன் பங்கேற்று மண் சோரு சாப்பிடவேண்டும் என்று நிபந்தனை விதித்தால் ,?-
சுபாநிச்சயமாகக் குழந்தை பிறக்காது. வயிற்றுக்குள் மண்தான் போகும்.
நான் சொன்னது, ஒரு சோதனை கணவன்மாருக்கும் அவன் உறவினர்களுக்கும். ஏதாவது ஒருபெண் என் யோசனையைக் கையிலெடுக்கட்டும், அப்புறம் பாருங்கள்!!! . இம்மாதிரிக் கொடுமைப்படுத்தும் ஆண்கள்வழிக்கு வந்துவிடுவார்கள். இஂம்மாதிரி கேவலங்களுக்கு பெண்களை ஈடுபடுத்த மாட்டார்கள். ஏனென்றால் அவர்களும் சேர்ந்தல்லவா மண்சோறு சாப்பிட வேண்டும்?
வயிற்றில்ஒரு புழு பூச்சி இல்லை.சுடு சொல் தாங்காதுவிழுந்து புரண்டுமண் சோறு சாப்பிட்டாள்..இப்போதுவயிற்றுக்குள்"புழு பூச்சி"======================================ருத்ரா
இது எளிய மக்களிந் ஆன்மிகம். தமிழகத்தின் பாரம்பரிய கிராமிய வழிபாடுமுறைகளில் ஒன்று.
ஆன்மிகத்தில் உயர்வு தாழ்வு இல்லை!
மற்றவரை துன்புறுத்தாது தன்னை சிரமத்துக்கு ஆளாக்கும் வகையில் தமிழக நாட்டார் வழிபாட்டு முறைகள் அமைந்திருக்கும்.
அலகு குத்துதல்
காவடி எடுத்த்ல்
பாதயாத்திரை
அங்கபிரதட்சணம்
மண்சோறு
தீமிதி
அந்த மரபில் வராத நமக்கு இதை புரிந்துகொள்வது சிரமமாக இருக்கலாம். தவறாக தோந்றலாம். ஆனால் இது அவர்கள் மரபு சார் வழிபாட்டு முறை. மரபு என்ற முறையில் பர்சனலாக சுயவிருப்பின் பேரில் யாரையும் துந்பத்துக்கு ஆளாக்காமல் இதை அவர்கள் செய்வதில் எந்ன தவறு இருக்குறது?.
ஏனடிநீ பெண்மகவைப் பெற்றாய்?
(ஆந்திராவில் நடந்த நிகழ்ச்சி. பத்திரிகையில் படித்தது)
ஏனடிநீ பெண்மகவைப் பெற்றாய் போ,போ
இவ்வீட்டில் இடமில்லை என்று சொல்லி
ஈனமனப் பாவியவன் மனைவி தன்னை
இளம்பிஞ்சுக் குழந்தையுடன் வெளியே போக்கி
யானுனக்குச் சொந்தமில்லை என்று கூறி
அநியாயம் செய்தானாம், முதல்தா ரத்தில்
ஆனவெலாம் பெண்மகவாம், ஆண்பிள் ளைக்காய்
அடுத்துமணம் கொண்டவளும் பெண்ணைப் பெற்றாள்.
ஆண்மகவைப் பெறமுடியா நிலைக்குத் தானே
ஆதிமுதல் காரணமென் றறியான் மூடன்
ஆண்குழந்தை தரமுடியாப் பாவி யென்றே
அவனையன்றோ வீட்டைவிட் டனுப்ப வேண்டும்
வீண்பழியை மனைவியின்மேல் ஏற்றித் தூற்றல்
மிகக்கொடுமை அறிவியலின் உண்மை தன்னை
ஆண்களுக்கும் பெண்களுக்கும் எடுத்துச் சொல்லி
அவலநிலை போக்கிடவே வேண்டும் வேண்டும்.
வீண்பழியை என்மேலே போடு கின்றாய்
வேண்டுமொரு ஆண்குழந்தை என்றால் குந்தி
பாண்டவரைப் பெற்றதுபோல் வேறோர் ஆண்பால்
படுத்தெழுந்து தானதனைச் செய்ய வேண்டும்
ஈண்டதுவும் சம்மதமா, ஆனால் நானோ
இக்கொடுமைக் கிடந்தாரேன், வேண்டு மென்றால்
ஆண்மகவைத் தத்தெடுத்துக் கொள்வாய் என்றே
அவள்சொன்னால் என்செய்வான் அந்தப் பாவி!
இலந்தை
புதிய 'சதி'
ஆசையுடன் முதலிரவில் அனுபவித்த பின்கணவன் அணைத்துச் சொன்னான்
'வேசியுடன் ஓர்நாளில் விளையாட அவளென்னுள் விதைத்தாள் 'எய்ட்ஸை"
பாசமுடன் நானிருப்பேன், பதறாதே, பணமுண்டு, பகட்டு முண்டு
நீ£சனென எண்ணாதே, நிர்ப்பந்தத் தால்மணந்தேன் நின்னை" என்றான்
கனல்வற்றிப் போயிற்று, கயமையினால், அவளுள்ளே கதித்து வந்த
புனல் வற்றிப் போயிற்று, பூகருகிப் போயிற்று, பொசுக்கும் வேகச்
சினம்முற்றிப் போயிற்று, சிதையடுக்கி வந்துள்ளோன் செயலால், சோகக்
கனம் முற்றிப் போயிற்று, காலனடி ஓசையவள் காதுக் குள்ளே!
பதிசெய்த சதியாலே பாழாகிப் போய்விட்டாள், பாவி, அந்த
விதிசெய்த பிழைதானோ, வினைசெய்த பிழைதானோ, விதைத்த தீயன்
சிதையேறிப் போய்விட்டான், தேகத்தைச் சிதையாக்கிச் செத்துப் போனாள்
புதிதான 'சதி'யிந்தப் பூதத்தை யாரடக்கப் போகின் றாரோ?
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
ராஜம் அம்மா
குடும்பம் என ஆனபின் தனிமனித நன்மை, குடும்ப நன்மை என எதுவும் இல்லை.
மண்சோறு ஆண்களும் உண்பதுண்டு..குழந்தை பிறக்க அலகு குத்க்துதல், காவ்டி எடுத்தல், மண்சோறு உண்ணுதல், பாதயாத்திரை போவது எல்லாம் ஆண்களும் செய்வதே வழக்கம்...கால ஓட்டத்தில் ஆண்கள் கோயிலுக்கு போவதே குறைந்து விட்டது..அதனால் அவர்கள் இம்மாதிரி வேண்டுதல்களை செய்வதும் குறைந்து விட்டது..பெண்களுக்கு ஆன்மிக உணர்வு அதிகம் இருப்பதால் அவர்கள் இம்மரபுகளை விடாது பின்பற்றி வருகிறார்கள்.
பெண்களுக்கு ஆண்களை விட குழந்தை பெறுவதில் விருப்பம் அதிகம். இளவயதில் குழந்தை பொம்மையை வைத்து பெண்கள் தான் விளையாடுவார்கள். ஆண்கள் வில், அம்பு, கத்தி பொம்மைகளை வைத்து விளையாடுவார்கள்...இந்த காலத்தில் யார் குழந்தை இல்லை என இரண்டாம் மணம் செய்கிறார்கள்? அது போன தலைமுறை வழக்கம்...குழந்தை இல்லாத ஆணின் ஆண்மையும் முன்பு கேள்வுக்குள்ளக்கபடும்..பெண்கள் அளவுக்கு அவர்கள் உணர்வுகளை வெளிக்காட்டுவது இல்லை..ஆனால் உணர்வுகள் இருபாலாருக்கும் பொதுதானே?
மற்றபடி ஒரு பெண் அபார்ஷன் செய்வது எப்படி "பாலியல் தேர்வு, ப்ரோ சாய்ஸ்" ஆக கருதபடுகிறதோ அதுபோல் தான் இதுவும் பெண்களின் ப்ரோ சாய்ஸ தேர்வாக எனக்கு படுகிறது. பிள்ளை இல்லை என ஏங்கும் தாய்மார்கள் ஏராளம்...அதை சமூக நிர்ப்பந்தத்தின் விளைவு மட்டுமே என கருத முடியாது. தாய்மை இயல்பான உணர்வு!!!
இலக்கியம் என்பது வாழ்க்கைபதிவு என்பதை உணர்ந்தால் அதில் கொள்கை பிரச்சாரம், அரசியல் பிரச்சாரம், முற்போக்கு போன்ற லேபிள்கள் அவசியமற்றவை என்பதை உணர்வோம்.
நம்மை சுற்றிலும் உள்ள மனிதர்களிடையே அரசியல்சார்பு, மதம், சாதி அனைத்தும் உள்ளது. அவர்களை பற்றிய வாழ்க்கை புனைவை எழுதுகையில் அது அக்கதாபாத்திரங்கள் வாயிலாக பிரதிபலிப்பதை தவிர்க்க இயலாது.
இலக்கியம் என்பது வாழ்க்கைபதிவு என்பதை உணர்ந்தால் அதில் கொள்கை பிரச்சாரம், அரசியல் பிரச்சாரம், முற்போக்கு போன்ற லேபிள்கள் அவசியமற்றவை என்பதை உணர்வோம்.
ரொம்ப நீளமா இருக்கு தேமொழி. படிக்க போரும் அடிக்குது.
போர் என்று சொன்னதற்கு தண்டனை ... கேண்டி மெஷினுக்குச் சென்று ஒரு மிட்டாய் எடுத்து சாப்பிடவும்.
நான் சொன்னதைதான் நீங்களும் இழையில் சொல்லியிருக்கிறீர்கள் சுபா :-)//பெண் என்றால் பொருமையின் எல்லையை தாண்டக்கூடாதுபெண் என்றால் தாய்மையின் இலக்கணம்பெண் என்றால் எல்லா துன்பங்களையும் பொறுத்துக் கொள்பவள்.. அவளே நல்ல பெண்..இப்படி, ஒரு ஆண் எதிர்பார்க்கும் எண்ணங்கள் பெண்ணின் நடத்தையாக, செயல்முறையாக இருக்க வேண்டும் என்பது பொது எதிர்பார்ப்பாக நிலைநாட்டபப்ட்டது. இது கதைகளாக எழுதப்பட்டன. மக்களிடம் நல்ல நீதியாக பிரச்சாரம் செய்யப்பட்டன.//இதை நான் இவ்வாறு குறிப்ப்ட்டிருந்தேன்"..பிற்போக்காளர்கள் கொடுமைக்கார கணவனை அன்பால் திருத்தி குடும்பம் ஒன்றுபடுவது போல் எழுதி சுபமங்களம் போடுவார்கள்...""..
நான் சொன்னதைதான் நீங்களும் இழையில் சொல்லியிருக்கிறீர்கள் சுபா :-)
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
என்ன கொடுமை இது சரவணா ?செல்வன்!!! நான்தான் கிண்டலுக்கு conservative ... orthodox இவர்களை பிற்போக்காளர்கள் என்று கிண்டலாகச் சொல்லி பகடி செய்கிறேன்.நீங்களாவது 'மரபுக் காவலர்கள்' (அல்லது பழமைவாதிகள்?) என்ற பெயரைக் கொடுக்கக்கூடாதா?(என்னாலேயே தாங்க முடியவில்லையே. முற்போக்கு என்பது ஜோக்கு என்பதைவிட இது கொடுமையாக அல்லவா இருக்கிறது. படித்து படித்து என் கண்களில் கண்ணீர் வருகிறது ....விழுந்து விழுந்து சிரிக்கும் காரணத்தால்)
பாரதியின் சந்திரிகையின் கதை என்னும் முடியாத கதைக்கு விமர்சனம்.
யாரையோ ஒட்டுண்ணி என கோபமாக திட்டிக்கொண்டிருக்கிறீர்கள் என புரிகிறது. யாரைன்னு தாந் தெரியலை :-)
ஆக கடைசியில் பெண்களை திட்டுவது தான் பெண்ணியம்னு ஆயிடுச்சு :-)
நாம் நினைப்பது போல எல்லாரும் நினைக்கணும்னு நினைக்ககூடாது. மாற்று கருத்து கொண்டதால் அவர்கள் ஒட்டுண்ணிகள் அல்ல. கருத்தில் டைவர்சிட்டியை மதிக்கணும் :-)
//பாரதியின் சந்திரிகையின் கதை என்னும் முடியாத கதைக்கு விமர்சனம்.//
வேந்தர் இயற்பெயர் இராஜேந்திரன் தான் :-)
//வேந்தர் இயற்பெயர் இராஜேந்திரன் தான் :-)//
On Fri, Aug 26, 2016 at 11:46 AM, செல்வன் <hol...@gmail.com> wrote://வேந்தர் இயற்பெயர் இராஜேந்திரன் தான் :-)//
அதை நானும் அறிவேன், செல்வரே!இந்த "இராஜேந்திரன் இராமசாமியும்",
வேந்தனாரும்

கன்னித்தன்மைப் பரிசோதனை என்பது பெண்களுக்கு எதிரான மனம் மற்றும் உடல்ரீதியான கொடுமை
ஆணாதிக்கம் மிக்க சமூகத்தில் பெண்களின் ஒழுக்கத்தைச் சந்தேகப்படுவது, எந்தக் குற்றவுணர்ச்சியும் இல்லாமல் அரங்கேற்றப்படும் கொடூரம். பெண்களின் ‘கற்பை’ச் சோதனையிடுவதும் நிர்ணயிப்பதும், அதைக் காரணமாகச் சொல்லி அவர்களின் வாழ்க்கையையே சிதைப்பதும் இன்னமும் பல இடங்களில் நடப்பதுதான் இன்னும் வேதனை!
சமீபத்தில் மகாராஷ்டிர மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தின் நாசிக்கில், போலீஸ் வேலையில் சேரப் பயிற்சி எடுத்துக்கொண்டிருந்த 25 வயதுப் பெண் ஒருவருக்குத் திருமணம் நடந்தது. மாப்பிள்ளைக்கு இது இரண்டாவது திருமணம். இருவரும் ‘கஞ்சர்பாத்’ என்ற சமூகத்தைச் சேர்ந்தவர்கள். கடுமையான விதிமுறைகளைப் பின்பற்றும் சமூகம் அது. கண்காணிக்கவும், தண்டனை வழங்கவும் ‘சாதிப் பஞ்சாயத்து’ உள்ளது. அதை மீறி யாரும் காவல்துறைக்கோ நீதிமன்றத்துக்கோ செல்ல முடியாது. திருமணமான அன்றே தனது மனைவியை விவாகரத்து செய்தார் அந்த மனிதர், மனைவி கன்னித்தன்மை இழந்தவர் என்ற புகாருடன். அவருக்குத் துணை நின்றது, அச்சமூகத்தின் விநோதமான ‘விதிமுறை’.
அந்தச் சமூகத்தில் பெண்களின் கன்னித்தன்மைக்கு ‘சாதிப் பஞ்சாயத்து’அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. முதலிரவின்போது, தம்பதிகள் இருக்கும் அறைக்கு வெளியில் பஞ்சாயத்தார் காத்திருப்பார்கள். வெண்மையான துணி விரிப்பின் மீதுதான் முதலிரவு நடக்கும். அவர்களைப் பொறுத்தவரை, துணிவிரிப்பில் படும் ரத்தக் கறைதான் மணப்பெண்ணின் கன்னித்தன்மையை நிரூபிக்கும் சோதனை. உறவின்போது மனைவிக்கு ரத்தம் வரவில்லை. எனவே, அவள் ‘கன்னித்தன்மை அற்றவள்’ என்றார் அந்த நபர். அவருக்கு இது இரண்டாவது திருமணம். இரண்டாவது மனைவியும் கன்னியாகத்தான் வேண்டும். என்ன புனிதம் பாருங்கள்!
கண்டுகொள்ளப்படாத கண்ணீர்
தான் கன்னிதான் என்றும், கடுமையான உடற்பயிற்சி காரணமாக உடலில் மாற்றம் ஏற்பட்டு ரத்தம் வராமல் இருந்திருக்கலாம் என்றும் கதறினார் அந்தப் பெண். அதைக் கேட்பதற்கு யாரும் தயாராக இல்லை. தாலி கட்டிய ஒரே நாளில் திருமணத்தை ரத்து செய்துவிட்டது பஞ்சாயத்து. அடுத்த நாள், போலீஸில் புகார் செய்ய மணப் பெண்ணும் அவர் தாயாரும் தயாரானபோது, சாதிக் கட்டுப்பாட்டுக்குப் பயந்த அப்பெண்ணின் தந்தை, அவர்களிடமிருந்த செல்பேசியைப் பிடுங்கிக்கொண்டு இருவரையும் அறையில் பூட்டிவைத்தார். சம்பவத்தைக் கேள்வியுற்ற பெண்கள் அமைப்பு மூலம்தான், விஷயம் வெளியில் வந்தது.
கற்பு என்பது மனம் தொடர்பானது. கன்னித்தன்மை என்பது உடல் சம்பந்தப்பட்டது. தன் விருப்பம் இல்லாமல், சூழ்நிலை காரணமாகப் பலாத்காரம் செய்யப்பட்டவரைக் கற்பிழந்தவராகக் கருத முடியாது. கற்பும் கன்னித்தன்மையும் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானது. அதனால்தான் ‘கற்பு நிலை என்று சொல்லவந்தார் / இரு கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்’ என்றார் பாரதி. ஆனால், கற்பும் கன்னித்தன்மையும் பெண்ணுக்கு மட்டுமே உரியது என்று பொதுப் புத்தியில் உறைந்துபோயிருக்கிறது.
‘கஞ்சர்பாத்’ சமூகத்தில் மட்டுமல்ல, பல சமூகங்களில் இந்தக் கொடூரமான முட்டாள்தனம் பின்பற்றப்படுகிறது. சோதனையில் தோல்வியுறும் பெண்ணின் திருமணம் உடனடியாக ரத்து செய்யப்படும். அவர் யாருடன் முதல் உறவு கொண்டார் என்று கேட்டு, அவரைச் சித்ரவதையும் செய்வார்கள். அவர்களைப் பொறுத்தவரை கன்னிப் பெண் என்றால், முதல் உறவின்போது ரத்தம் வர வேண்டும். சைக்கிள் ஓட்டுவதன் மூலமோ அல்லது உடற்பயிற்சியின்போதோ கன்னித்திரை கிழியும் என்பதை ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள். ஏற்கெனவே, உறவுகொண்டதாக ஒப்புக்கொண்டால், அந்தப் பெண்ணின் தந்தைக்குப் பஞ்சாயத்து அபராதம் விதிக்கும்.
இதுதொடர்பாக வந்த புகார்களைத் தொடர்ந்து, விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க மாநில போலீஸாருக்கு மகாராஷ்டிர பெண்கள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நகைமுரண் என்னவென்றால், இந்தியாவிலேயே முதன்முதலாக, சமூகப் புறக்கணிப்புக்கு எதிராகவும், சாதிப் பஞ்சாயத்துகளுக்கு எதிராகவும் 2016-ல் சட்டம் நிறைவேற்றியது மகாராஷ்டிர மாநிலம்தான். இந்தச் சட்டம் அமலுக்கு வந்த பிறகு, சட்டத்துக்குப் புறம்பான இது போன்ற அமைப்புகளுக்கும், மனிதத்தன்மையே இல்லாத விதிகளுக்கும் முடிவு கட்டப்படலாம்.
அநாகரிகம்
2013-ல் மத்தியப் பிரதேச முதல்வர் ஷிவராஜ் சிங் சவுஹான் தலைமையில், ‘கன்யா தான் யோஜனா’ என்ற திட்டத்தின்படி 100-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு இலவசமாகத் திருமணம் செய்துவைக்கப்பட்டது. அப்போது, அப்பெண்களில் பலர், மாவட்ட அதிகாரிகளால் கன்னித்தன்மை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்கள். 2009-லும் இதே போன்ற சம்பவம் நடந்திருக்கிறது.
இந்தியாவில், சமீபகாலம் வரை பாலியல் வல்லுறவு வழக்குகளில், பாதிக்கப்பட்ட பெண்களுக்குக் கன்னித்தன்மை பரிசோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில், ‘கன்னித்தன்மை அற்றவர்கள் உறவுக்குச் சம்மதித்திருக்கலாம் என்ற அனுமானம் தவறானது. எனவே, கன்னித்தன்மை பரிசோதனையை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று 2013-ல் பி.எஸ்.சவுஹான் மற்றும் எம்.எம்.கலிபுல்லா ஆகியோரைக் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு சொல்லிவிட்டது. ஆனாலும், சில நீதிமன்றங்கள் கன்னித்தன்மை பரிசோதனையைப் பின்பற்றுகின்றன.
பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளானவர்களிடம் அவர்களது கன்னித்தன்மையை உறுதிசெய்ய பெண்களின் பிறப்பு உறுப்பில் நடத்தப்படும் இரு விரல் சோதனை அறிவியல் பூர்வமற்றது என்று கூறி அதைத் தடைசெய்தது மத்திய சுகாதார அமைச்சகம்.
பல நாடுகளில் கன்னித்தன்மை பரிசோதனை உள்ளது. பெரும்பாலும் பெண்களின் கன்னித்தன்மை குறித்துச் சந்தேகம் எழுப்புவது கணவர்கள்தான். சில நாடுகளில் அரசுத் துறைகளே அந்தக் கேள்வியைக் கேட்கின்றன. தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில், ஒவ்வொரு வருடமும் ‘ரீட் டான்ஸ்’ என்ற அரை நிர்வாணக் கலை நிகழ்ச்சி நடக்கும். அதில் கலந்துகொள்ளப் பெண்கள் கன்னித்தன்மை சான்றிதழ் கொடுக்க வேண்டும். 2016-ம் ஆண்டு புதிய விதியின்படி, இந்தோனேசிய ராணுவத்தில் சேர, ஒரு பெண் கன்னித்தன்மையுடன் இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டுவரை அந்நாட்டு போலீஸில் பெண்கள் சேர கன்னித்தன்மை சான்றிதழ் கட்டாயமாக இருந்தது. சர்வதேச மனித உரிமை இயக்கம் ஆட்சேபணை செய்ததால் இந்த நிபந்தனை நீக்கப்பட்டது.
பட்டியல் இன்னும் முடியவில்லை. ஈரானில், ஏடெனா ஃபர்கடானி என்ற கார்ட்டூனிஸ்ட், தன் ஆண் வழக்கறிஞருடன் கைகுலுக்கினார் என்ற குற்றச்சாட்டின்பேரில், கன்னித்தன்மை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். 1970-களில் திருமண விசாவில் பிரிட்டனுக்கு வந்த வெளிநாட்டுப் பெண்களுக்கு அந்த நாட்டு அரசு கன்னித்தன்மை பரிசோதனை நடத்திய வரலாறு உண்டு.
பெண்கள் உலகமெங்கும், எல்லாத் துறைகளிலும் பல தடைகளை உடைத்து முன்னேறி நாட்டை ஆள்கிறார்கள். இயக்கங்களை வழிநடத்துகிறார்கள். எத்தனையோ சாதனைகளைச் செய்துவருகிறார்கள். ஆனால், திருமணம் என்று வரும்போது, தங்கள் ஒழுக்கத்தை நிரூபிக்க இப்படியெல்லாம் நிர்ப்பந்திக்கப் படுகிறார்கள். கன்னித்தன்மை பரிசோதனை என்பது பெண்களுக்கு எதிரான மனம் மற்றும் உடல்ரீதியான கொடுமை என்பதைச் சமூகம் உணர வேண்டும். இது அவர்களது தனி உரிமையில் தலையிடும் விஷயம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். உண்மையில், இதற்கெனத் தனியான சட்டமோ அல்லது சிறப்புச் சட்டமோ தேவையில்லை. இருக்கும் சட்டங்களின் அடிப்படையில் கடுமையான நடவடிக்கை எடுக்க முடியும். அதைச் செய்ய வேண்டியது அரசின் பொறுப்பு மட்டுமல்ல, மக்களின், சமுதாயத்தின் பொறுப்பும்கூட!
- என்.ரமேஷ், வழக்கறிஞர்.
தொடர்புக்கு: nramesh...@gmail.com
--
2016-09-10 8:33 GMT+02:00 தேமொழி <jsthe...@gmail.com>:பூஜா என்ற ஒரு அழகான இளம்பெண், ”பணக்கார ஆண்மகனை திருமணம் செய்து கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்” என்று இணையதளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.ஞாயிறு, 4 செப்டம்பர் 2016 (10:31 IST)மேலும், இது குறித்து பூஜா கூறியதாவது, ”என் வயது 25. நான் பார்க்க மிகவும் அழகாக இருப்பேன். ஸ்டைல் மற்றும் நல்ல ரசனை உள்ள பெண். நான் வருடத்திற்கு நூறு கோடிக்கு மேல் சம்பாதிக்கும் ஆண்மகனை திருமணம் செய்துக் கொள்ள விரும்புகிறேன். அதற்கு என்ன செய்ய வேண்டும்?.” என்றார்.இந்த பதிவை பார்த்த முகேஷ் அம்பானி அப்பெண்ணிற்கு பதில் அளித்து கூறியதாவது, “உங்களை போல பல பெண்கள் இந்த சந்தேகத்துடன் உலாவி வருகிறார்கள். ஒரு முதலீட்டாளராக உங்கள் இந்த சந்தேகத்திற்கு, ஒரு நல்ல தீர்வை தர நான் விரும்பிகிறேன். எனது வருட சம்பாத்தியமும் நூறு கோடிக்கு மேலானது தான். ஆனால், உங்களை போன்ற ஒரு பெண்ணை தேர்வு செய்வது என் பார்வையில் தவறு என்று தான் நான் கருதுவேன். காரணம், அழகு என்பதை பெண்ணாகவும், பணம் என்பதை ஆணாகவும் வைத்துக் கொண்டால். இங்கு ஒரு பெரிய பிரச்சனை எழும். அழகு வருடத்திற்கு வருடம் குறைந்துக் கொண்டே போகும் ஒன்று.பணம் என்பது வருடத்திற்கு, வருடம் உயர்ந்துக் கொண்டே போகும் ஒன்று. பொருளாதார பார்வையில் இதை கண்டால், பணம் எனும் ஆண் (நான்) அதிகரிக்கும் சொத்து, அழகு எனும் பெண் (பூஜா) தேய்மானம் அடையும் சொத்து. ஒரு பத்து வருடம் கழித்து பார்க்கும் போது உங்களுக்கான மதிப்பு மிகவும் குறைந்திருக்கும். செழிப்படையும் ஒரு சொத்தை, தேய்மானம் அடையும் சொத்துடன் சேர்க்க எந்த முதலீட்டாளரும் முனைய மாட்டார். வர்த்தக நிலையில் பார்க்கையில் நூறு கோடிக்கு மேல் சம்பாதிக்கும் எந்த ஒரு நபரும் உங்களுடன் டேட்டிங் செய்வாரே தவிர, திருமணம் செய்துக் கொள்ள மாட்டார்.எனவே, உங்கள் அழகு தோற்றத்தையும், நூறு கோடி சம்பாதிக்கும் ஆண்மகன் தான் வேண்டும் என்பதை மறந்து விட்டு நீங்கள் நூறு கோடி சம்பாதிக்கும் பெண்ணாக வளருங்கள்.” என்றார்.இவ்வகைப் போக்கு ஆண்களிடத்திலும் வேறு மாதிரி வெளிப்படும் செல்வன்.
நான் மிக அழகான ஒரு நடிகையை அல்லது ஒரு அழகான ரதி போன்ற பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும். அது தான் என் வாழ்க்கை லட்சியம் என ஒரு கனவில் மிதக்கும் ஆண்களும் பலர் இருக்கின்றனர்.என்ன சொல்ல வருகின்றேன் என்றால், அதிக பணம் ஈட்டும் ஒரு ஆணை விரும்பும் பெண் என்பவர் அதன் வழி தான் பயன்பெற எப்படி நினைக்கின்றாரோ அதே போல மிக அழகான பெண்ணை அடைந்து விட்டோம் என்ற கனவில், பெருமையில் இருக்க விரும்பும் இளஞர்கள் தங்கள் வீரத்திற்கு ஒரு மதிப்பளிக்கும் விசயமாக அழகான பெண்ணத் தேடுவர்.பெண் தேடும் மாப்பிள்ளைகளைக் கேளுங்கள். பொதுவாக நல்ல
- படித்த
- அழகான
- குடும்பத்துக்கு அடக்கமான
- சொன்னதைக் கேட்டு நடக்கும்
- குணமுள்ள
...பெண் வேண்டும் என்பது பொதுவாக கல்யாணத்துக்கு காத்திருக்கும் மாப்பில்ளை பையன்கள் வைக்கும் பட்டியல் தானே.இதனை பொதுவான பெண்கள், நல்ல
- உத்தியோகத்தில் இருக்கின்ற
- பணம் சம்பாதிக்கின்ற
- தன்னை விரும்புகின்ற
..மாப்பிள்ளை வேண்டும் என எதிர்ப்பார்க்கின்றார்கள்.இந்த மேற்குறிப்பிட்ட பொதுமைப் படுத்தலை மீறி பல விசயங்கள் உள்ளன.ஒவ்வொரு நபருக்கும் கிடைக்கும் வாழ்க்கை அனுபவமும் விரிவான சிந்தனையும் நமக்குப் பொறுத்தமான துணையைத் தேடும் போது நாம் முன்வைக்கும் காரணங்களை நமக்கு அமைக்கும் நிலையைத் தருகின்றன.இது தனி நபர் சார்ந்ததாகவும் அமைகின்றது என்பதையும் கருத்தில் எடுத்துக் கொள்ளதான் வேண்டும்.சுபா
2016-09-10 10:25 GMT+02:00 Suba <ksuba...@gmail.com>:2016-09-10 8:33 GMT+02:00 தேமொழி <jsthe...@gmail.com>:பூஜா என்ற ஒரு அழகான இளம்பெண், ”பணக்கார ஆண்மகனை திருமணம் செய்து கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்” என்று இணையதளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.ஞாயிறு, 4 செப்டம்பர் 2016 (10:31 IST)மேலும், இது குறித்து பூஜா கூறியதாவது, ”என் வயது 25. நான் பார்க்க மிகவும் அழகாக இருப்பேன். ஸ்டைல் மற்றும் நல்ல ரசனை உள்ள பெண். நான் வருடத்திற்கு நூறு கோடிக்கு மேல் சம்பாதிக்கும் ஆண்மகனை திருமணம் செய்துக் கொள்ள விரும்புகிறேன். அதற்கு என்ன செய்ய வேண்டும்?.” என்றார்.இந்த பதிவை பார்த்த முகேஷ் அம்பானி அப்பெண்ணிற்கு பதில் அளித்து கூறியதாவது, “உங்களை போல பல பெண்கள் இந்த சந்தேகத்துடன் உலாவி வருகிறார்கள். ஒரு முதலீட்டாளராக உங்கள் இந்த சந்தேகத்திற்கு, ஒரு நல்ல தீர்வை தர நான் விரும்பிகிறேன். எனது வருட சம்பாத்தியமும் நூறு கோடிக்கு மேலானது தான். ஆனால், உங்களை போன்ற ஒரு பெண்ணை தேர்வு செய்வது என் பார்வையில் தவறு என்று தான் நான் கருதுவேன். காரணம், அழகு என்பதை பெண்ணாகவும், பணம் என்பதை ஆணாகவும் வைத்துக் கொண்டால். இங்கு ஒரு பெரிய பிரச்சனை எழும். அழகு வருடத்திற்கு வருடம் குறைந்துக் கொண்டே போகும் ஒன்று.பணம் என்பது வருடத்திற்கு, வருடம் உயர்ந்துக் கொண்டே போகும் ஒன்று. பொருளாதார பார்வையில் இதை கண்டால், பணம் எனும் ஆண் (நான்) அதிகரிக்கும் சொத்து, அழகு எனும் பெண் (பூஜா) தேய்மானம் அடையும் சொத்து. ஒரு பத்து வருடம் கழித்து பார்க்கும் போது உங்களுக்கான மதிப்பு மிகவும் குறைந்திருக்கும். செழிப்படையும் ஒரு சொத்தை, தேய்மானம் அடையும் சொத்துடன் சேர்க்க எந்த முதலீட்டாளரும் முனைய மாட்டார். வர்த்தக நிலையில் பார்க்கையில் நூறு கோடிக்கு மேல் சம்பாதிக்கும் எந்த ஒரு நபரும் உங்களுடன் டேட்டிங் செய்வாரே தவிர, திருமணம் செய்துக் கொள்ள மாட்டார்.எனவே, உங்கள் அழகு தோற்றத்தையும், நூறு கோடி சம்பாதிக்கும் ஆண்மகன் தான் வேண்டும் என்பதை மறந்து விட்டு நீங்கள் நூறு கோடி சம்பாதிக்கும் பெண்ணாக வளருங்கள்.” என்றார்.
இவ்வகைப் போக்கு ஆண்களிடத்திலும் வேறு மாதிரி வெளிப்படும் தேமொழி
இவ்வகைப் போக்கு ஆண்களிடத்திலும் வேறு மாதிரி வெளிப்படும் தேமொழிஆமாம் சுபா... எனக்கு அம்பானி சொன்னது ....குறிப்பாக ...உங்கள் அழகு தோற்றத்தையும், நூறு கோடி சம்பாதிக்கும் ஆண்மகன் தான் வேண்டும் என்பதை மறந்து விட்டு நீங்கள் நூறு கோடி சம்பாதிக்கும் பெண்ணாக வளருங்கள்என்றது மிகவும் பிடித்தது.
..... தேமொழி
2016-09-10 10:34 GMT+02:00 தேமொழி <jsthe...@gmail.com>:இவ்வகைப் போக்கு ஆண்களிடத்திலும் வேறு மாதிரி வெளிப்படும் தேமொழிஆமாம் சுபா... எனக்கு அம்பானி சொன்னது ....குறிப்பாக ...உங்கள் அழகு தோற்றத்தையும், நூறு கோடி சம்பாதிக்கும் ஆண்மகன் தான் வேண்டும் என்பதை மறந்து விட்டு நீங்கள் நூறு கோடி சம்பாதிக்கும் பெண்ணாக வளருங்கள்என்றது மிகவும் பிடித்தது.ஐயமில்லை. எனக்கும் இந்த வரி மிகப் பிடித்தது.எதற்காக வேறொருவரை மனம் நாடுகின்றதோ, அந்த திறனை நாமே பெற்று விட்டால் ச்றைார்யுப்மு என்பது மறையும்..தானே உழைக்கு பொருளீட்டி தன் வாழ்க்கையைப் பார்த்துக் கொள்ளும் பலமும் ஆர்வமும் பெண்களுக்கு வேண்டும்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/fq3GvlU4Fmw/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
கருவுக்கு வலி தெரியாத 20வது வாரம் வரை கருவை கலைக்க அனுமதிக்கலாம். 21வது வாரத்திற்கு பின்னான கருக்கலைப்பு தடுக்கபடவேண்டும் (தாயின் உயிர்காக்க மட்டும் விதிவிலக்கு அளிக்கலாம்)
One of the issues that often arises in the Citizen Advice Bureaux in the UK is that of young unmarried girl-children, wanting to abort the pregnancy, without the knowledge of the parents. The Law behoves us to aid the process and help her to go the Marie Stopes Abortion Centres, keeping the parents out of the picture, if she passes the Gillick test. I had acted according to the Law,when such clients were referred to me. The test is about her competence to decide whether is able to consent to his or her own medical treatment, without the need for parental permission or knowledge.
Lady Justice Purvis decided so in Gillick v West Norfolk and Wisbech Area Health Authority [1985] (1985) 3 All ER 402 (HL). The case is binding in England and Wales, and has been approved in Australia, Canada and New Zealand. Similar provision is made in Scotland by The Age of Legal Capacity (Scotland) Act 1991.
The Gallic case, which is available in the House of Lords website, involved a health departmental circular advising doctors on the contraception of minors (for this purpose, under sixteens). The circular stated that the prescription of contraception was a matter for the doctor's discretion, and that they could be prescribed to under sixteens without parental consent. This matter was litigated because an activist, Mrs. Victoria Gillick ran an active campaign against the policy. Mrs Gillick sought a declaration that prescribing contraception was illegal because the doctor would commit an offence of encouraging sex with a minor, and that it would be treatment without consent as consent vested in the parent.
The issue before the House of Lords was only whether the minor involved could give consent. 'Consent' here was considered in the broad sense of consent to battery or assault: in the absence of patient consent to treatment, a doctor, even if well-intentioned, might be sued/charged.
The House of Lords focused on the issue of consent rather than a notion of 'parental rights' or parental powers. In fact, the court held that 'parental rights' did not exist, other than to safeguard the best interests of a minor. The majority held that in some circumstances a minor could consent to treatment, and that in these circumstances a parent had no power to veto treatment.
Lord Scarman and Lord Fraser proposed slightly different tests (Lord Bridge agreed with both). Lord Scarman's test is generally considered to be the test of 'Gillick competency'. He required that a child could consent if he or she fully understood the medical treatment that is proposed:
"As a matter of Law the parental right to determine whether or not their minor child below the age of sixteen will have medical treatment terminates if and when the child achieves sufficient understanding and intelligence to understand fully what is proposed." Lord Scarman
In Northern Ireland, although separate legislation applies, the then Department of Health and Social Services Northern Ireland stated that there was no reason to suppose that the House of Lords' decision would not be followed by the Northern Ireland Court.
Innamburan
24 09 2016
கருவுக்கு வலி தெரியாத 20வது வாரம் வரை கருவை கலைக்க அனுமதிக்கலாம். 21வது வாரத்திற்கு பின்னான கருக்கலைப்பு தடுக்கபடவேண்டும் (தாயின் உயிர்காக்க மட்டும் விதிவிலக்கு அளிக்கலாம்)
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
//கன்னியாகுமரி - மாவட்டம் அருமனையில் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தி மனனவி விஜி என்ற ராக்கோகிலா மீது மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்து கொலை செய்த வழக்கில் கணவன் ராஜ்குமாருக்கு 12 ஆண்டு ஜெயில், 26 ஆயிரம் அபராதம் - நாகர்கோவில் மகிளா கோர்ட் நீதிபதி கயல்விழி தீர்ப்பு. //
வரதட்சணைக் கொடுமைகள் இன்னும் இருக்கின்றதே. வேதனை .... சமூகத்திற்கே இது வெட்கம் தரும் செயல்பாடு.
-சுபா
என் மனைவியின் சகோதரி என் மகளை கொஞ்சும் போது மதுரை மீனாட்சி, காஞ்சி காமாட்சி என்று போன வாரம் கொஞ்சி கொண்டு இருந்தார், உள்ளுக்குள் சிரிப்போடு நான் நினைத்து கொண்டது, "அப்போ என் பொண்ணு வாயை தொறக்காம, நீங்க சொல்றதை எல்லாம் கேட்டுகிட்டே சாந்தமா உக்காந்து இருக்கணுமா" என்பது தான்! ஆசையை வெளிப்படுத்த அவ்வாறு ஒப்பிட்டு கொஞ்சுவது அவர்களுக்கு ஒரு வித உச்ச ஸ்தானம் என்பதை அடிப்படையில் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது, ஆனால்,
பெண்ணை தெய்வமாக கொண்டாடிய தேசமிது என சொல்வார்கள் இல்லையா, அது பெண்ணுக்கு ஒரு இலக்கணம் கொடுத்து "அவள் இப்படி தான் இருக்க வேண்டும் என வாயை பூட்டுவதற்காக கூட இருக்கலாம், ரொம்ப exaggeration லாம் வேணாம், மனுஷனா, மனுஷியா மதியுங்க போதும்!
ஆண் பிள்ளை தான் பெற்றோர் கனவுகளை நிவர்த்தி செய்யும் வாரிசு என்கிற சராசரி மனநிலை கொண்ட ஒரு சமூகத்தின் மல்யுத்த அப்பாவுக்கு அடுத்தடுத்து பெண் குழந்தை பிறப்பது அதிர்ச்சி. தன் லட்சியத்திற்காக தனக்கு பிறந்த பிள்ளையை அதை நோக்கி ஓட வைப்பது தவறு என்கிற இரண்டாம் கட்ட பிரச்னையை விட, முதல் கட்ட பிரச்சனையான ஆண் / பெண் பேதத்தை அடிப்படையாக கொண்டு ஆரம்பிக்கிறது கதை!
பெண் இப்படி தான் இருக்கவேண்டுமென காலம் காலமாக படிந்து விட்டு போன அமைப்பில் இருந்து, மல்யுத்தத்துக்கு தயாராகும் பெண் பிள்ளைகள் வழக்கமான மரபுகளை, உடை ரீதியாகவம், தோற்றத்திலும் மாறும் போது கேலிக்கு உண்டாவதை பார்த்து நொந்து போகும் தாய்,
"நம்ம பொண்ணுங்க மல்யுத்தம் பண்ணா, யாரு கல்யாணம் கட்டிப்பா"னு கேக்கும் போது,
"பையனுங்க என் பெண்ணை தேர்ந்து எடுக்க மாட்டாங்க, என் பொண்ணுங்க பையனை தேர்ந்து எடுப்பாங்க"ன்னு சொல்லுற காட்சியில, ஒரு பெண்ணை பெற்ற அப்பாவா சந்தோச திமிறுல பின் சீட்டுல சாய்ஞ்சி உக்காந்தேன்"
இது இன்றைய இந்திய சமூகத்தில் நடந்து கொண்டு இருக்கிற முன்னேற்றம் தான் என்றாலும், பீரியட் படம், முப்பது வருஷம் முன்னால ஒரு அப்பா அப்படி சொல்றது எவ்ளோ பெருமிதம்! எவ்ளோ முன்னேறினாலும் நவீனமாய் பெண்கள் அடக்குமுறைக்கு ஆளாவதிலும், சித்தரிக்க படுவதிலும் இருந்து மீள நாம் நெடுந்தூரம் பயணிக்க வேண்டி இருப்பதால், அந்த காட்சி இன்றைய தேதியில் இருந்தும் எனக்கு சிலிர்ப்பை தந்ததில் ஆச்சரியமில்லை!
Trailer பார்த்தவர்களே கதையை யூகிப்பார்கள், மற்றபடி இது சத்தியமாக Review கிடையாது, அதன் பெயரில் முழு கதையும் சொல்ல போவது கிடையாது, முதற் கட்டம் பெண்களை கொண்டு வருவதற்கான போராட்டம் என்றால், இரண்டாம் பாதி வெற்றியின் இலக்கை நோக்கி ஓடுகிற சுவாரசியமான காட்சிகளை கொண்டு வேகமாக நகர்கிற திரைக்கதை,
நான் சொல்ல வருவது எல்லாம், படத்தை பார்த்து சபாஷ் சொல்லி விட்டு வெளியில் வந்து அதில் இருந்து நாம் என்ன எதை எடுத்து கொள்கிறோம் என்பதில் தான் ஒரு மாமூலான சமூகத்தில் இருந்து மாறுவதற்கு நாம் எப்படி ஆயுத்தமாகிறோம் என்பதில் மட்டுமே அந்த படைப்பின் வெற்றி இருக்கிறது!
பெண்ணுக்கான இலக்கணத்தை நாம் வகுக்க கூடாது, பெண்ணுக்கு மரியாதை செலுத்துவதற்கான காரணங்கள் பாலின சட்ட திட்டங்களை கொண்டோ, நம் அபிப்பிராயத்தை கொண்டோ இருக்க கூடாது, சக ஆண்களை எப்படி பொது நீரோட்ட அரசியலை வைத்து அணுகுகிறோமோ அதே போல தான் அவர்களையும் அணுக வேண்டும்.
ஒரு பெண், இரவில் பணியில் இருந்து வீடு திரும்புவதற்கு பெற்றோர்கள் காத்திருக்கிறார்கள் என்றால் அந்த பெண்ணுக்கு ஒண்ணுன்னா பார்க்கிறவர்கள் காப்பாற்ற மாட்டார்களா என்கிற பொது அறத்தை நம்பி தான், ஆனால் அந்த சூழலையும் நம்பாமல் ஒரு பெண் தன்னை தானே காப்பாற்றி கொள்ள இந்த சமூகத்தில் ஆயத்தமாக வேண்டுமென்றால், ஆண் வகுத்த இலக்கணங்கள் உடைக்கப்பட வேண்டும். இன்னார் இப்படி நினைப்பாரோ என்கிற அச்சம் நீங்கினாலே நெஞ்சுரம் வந்து விடும், அதற்கு நம் அணுகுமுறை மாற வேண்டும், மாற வேண்டுமென்பதை விட உணர வேண்டும்!
"I Measure the Progress of a community by the degree of progress which women have achieved" என டாக்டர் அம்பேத்கர் சொன்னபடி தான் இந்த சமூக வளர்ச்சியை அளவிட முடியும்.
ஆனா இன்னமும் பெண் ஒரு விவாகரத்திற்கு React செய்தால் கூட பீதி ஆவுது சமூகம்!
முதல் பாதி சமூகம் / இரண்டாம் பாதி ஸ்போர்ட்ஸ், கண்டிப்பாக படம் பாருங்கள்
:)
...
Dangal: https://www.youtube.com/watch?v=roavzGfXkYA <<< பாடல் காட்சி
Hidden Figures: https://www.youtube.com/watch?v=RK8xHq6dfAo <<< இந்தப் படத்தைத் தமிழகத்தில் வெளியிட்டாலும் பாருங்கள் ஐயா.
..... தேமொழி
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
சமீபத்தில் உலகத்தரத் திரைப்படமாகக் கொண்டாடப்படும் ஒரு திரைப்படம் பார்த்தேன். ஆனால், நடு ஹாலில் அமர்ந்து பார்க்கும் படமாக அது இல்லை. என் இளைய மகன் எப்போதும் என்கூடவே இருப்பதால், அவன் பார்க்கக் கூடாத படங்களை நான் பெரும்பாலும் லேப்டாப் மற்றும் டி.வியில் பார்ப்பதில்லை. குழந்தைகளுக்கான கார்ட்டூன், அல்லது கணவருக்கான செய்தி சேனல்களுக்கு மட்டுமே ஹாலில் இருக்கும் டிவியில் அனுமதி உண்டு.
சம்பந்தப்பட்ட படத்தின் கதையம்சம், ஆண்களின் உலகை அப்பட்டமாகக் காட்டுவதாக ஒரு விமர்சனம் படித்தேன், ஒவ்வொரு மனிதருக்கும், மறைக்கப்பட்ட எதிர்பாலின பக்கங்களைக் காண ஒரு பேராவல் எழும்தானே ..?!
இத்தாலியில் ஒரு சிறு நகரத்தில் நடக்கும் கதை. அழகிய பெண், அவள் கணவனுக்கு ராணுவத்தில் வேலை, போர்ச்சூழல். இந்நிலையில், அந்தப் பெண்ணை யாரும் மனுஷியாகவே பார்ப்பதில்லை. அவளின் உடல், அழகு... இதுதான் ஆண்களுக்கு 'அவள்'. ஆண்கள் அவளைப் பற்றி பேசுவதும், பரவசப்படுவதும், பெண்கள் அவளை அந்த, இந்த ஆண்களுடன் தொடர்புபடுத்திப் பேசுவதும், பொறாமை கொள்வதும்... இதுதான் அவளைச் சுற்றிய உலகம். இவற்றையெல்லாம் காதில் வாங்காமல் அவள் தன் வேலையை கவனிப்பாள். தன் கணவனின் வருகைக்காக காத்திருப்பாள்.
இந்தப் படத்தின் ஹீரோ, ஒரு பதின் வயதுச் சிறுவன். அவள் மேல் பைத்தியமாகி அவளைத் தொடர்வான். சாவித் துவாரம்வரை விடுவதில்லை. அவளின் இரவுகள், பகல்கள் இவனுக்கு அத்துப்படி. டீன் ஏஜ், ஹார்மோன்கள் வேகம் காரணமாக, அவளைப் பார்க்கும்போதெல்லாம் உரித்துதான் பார்க்கத் தோன்றும் அவனுக்கு. இந்தப் படம் பற்றிய ஒரு விமர்சனம் நினைவுக்கு வருகிறது. 'ஆண்கள் பார்வையில், அவர்களுக்கு மிகப்பிடித்துப் போனால் இப்படித்தான் செய்வார்கள்'.
அது வெளிநாட்டுக் கதை என்று ஒதுக்கிவிட முடியவில்லை. அதன் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. ஒரு பெண், அழகாக ஆண்கள் கண்ணுக்குத் தெரிந்துவிட்டால், அவர்கள் உலகத்தில் அந்தப் பெண் மீதான கற்பனை எப்படி கட்டுக்கடங்காமல் போகும் என்று அந்தப் படத்தில் உரித்துக்காட்டி இருப்பார்கள். இது அனைவருக்கும் பொது என்று சொல்லமுடியாவிட்டாலும், பெரும்பாலும் என்றே கவனிக்கலாம்.
பெண்ணோ, ஆணோ... மற்றவர்களுடன் தன்னம்பிக்கையோட பழக தன்னை சிறிதளவேனும் அழகுபடுத்திக்கொள்ளுதல் மிக அவசியம். தன்னைச் சரியாக வெளிக்காட்டிக் கொள்வது, தன் மீதான நன்மதிப்பை அதிகரிக்கும் செயல். ஆனால், ஒரு பெண் ஒருவனுக்கு என்று ஏற்பட்டவுடன் வரும் முதல் கட்டுப்பாடு, அழகாக அலங்கரித்தாலும் அது அவனுக்காக என்றே நினைக்க வேண்டும் என்ற திணிப்பு. இதைச் சென்ற தலைமுறையில் அதிகம் கவனித்து இருப்போம். அதில்தான், தனியாக வாழும் பெண்கள், விதவைகள் சிறிது கூடுதலாக தங்களை அலங்கரித்துக்கொண்டால், சக பெண்களே அவர்களை விமர்சிப்பதைக் கண்டிருக்கிறேன். 'இவளுக்கு இந்த அலங்காரம் தேவையா? பார்க்கிறவன் எப்படிப் பார்ப்பான்?' என்பார்கள். அவளின் நுண்ணிய உணர்வுகளை கவனிக்கத் தவறுவார்கள். இப்போதும் சில இடங்களில் நடந்துகொண்டிருக்கும் விஷயம்தான் இது.

இந்தத் தலைமுறைப் பெண்கள், 'அவள் அலங்காரம் அவனுக்காகத்தான்' என்ற திணிப்பைத் தாண்டி இருக்கிறார்கள். ஆனால் ஆண்கள் வேறு வடிவில் அவர்களின் அந்தச் சுதந்திரத்தை முடக்குகிறார்கள். முகநூலில் பெண்கள் தங்கள் புகைப்படத்தைப் பதிவிட்டாலே, ஆண்களுக்கு ஒரு கிளர்ச்சி ஏற்படும். 'ஆண்கள் உங்களை தவறாகத்தான் பார்ப்பார்கள். பெண்கள் படம் லைக்ஸ் வாங்குவதற்குக் காரணம், பெண் முகம் பார்த்த அவர்களின் கிளர்ச்சிதான்' என்று ஆண் சமூகத்தின் பிரதிநிதியாக, சம்பந்தப்பட்ட பெண்ணின் நண்பனோ, காதலனோ எச்சரிப்பார்கள். அறிவுரை சொல்லுவார்கள். அவர்கள் சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை. ஏனென்றால், அவர்களுக்கு ஆண்கள் உலகம் பற்றித் தெரியும்.
அப்படியெனில், ஆண்களின் கண்ணுக்கு அழகாக, கவர்ச்சியாகத் தட்டுப்படும் பெண்களை வேறு பார்வையில்தான் பார்ப்பார்களா? ஆம்... பார்ப்பார்கள். அது ஏன்? அவர்களுக்கு அதைத் தவிர, பெண்களுடனான ஆரோக்கியமான அணுகுமுறை எதுவும் கற்றுத்தரப்படவில்லை.
இன்னொன்று... கவர்ச்சி. எதன் மேல் கவர்ச்சி வரும்? சுவாரஸ்யமான, மர்மமான விஷயம் மேல் கவர்ச்சி வரும். எதிர்பாலினம் மேல் ஈர்ப்பு ஏற்படுவது, இயற்கையின் ஏற்பாடு. ஆனால், அந்த ஈர்ப்பை வன்முறையில் வெளிப்படுத்தவும், முடிக்கவும் நாம் காட்டில் வாழவில்லை இன்று. காட்டிலும்கூட, கண்களைக் கவரத்தான் இயற்கை அழகைப் படைத்திருக்கிறதே தவிர, சொந்தம் கொண்டாட, வன்முறை, ஆதிக்கம் செலுத்த அல்ல.
வெளிநாட்டில் வாழும் தோழி ஒருவர் சொன்னார்: இந்தியக் குழந்தைகள் நம் நாட்டில் வேறுவிதமாக வளர்ந்துவிட்டு வெளிநாடு வரும்போது, இங்குள்ள பெண்களை எப்படிப் பார்ப்பது, அணுகுவது என்றுகூடத் தெரியாமல் சிக்கல்களில் மாட்டிக் கொள்கின்றனர். வெளிநாடுகளில் இந்திய மாணவர்கள் என்றால், 'அவர்கள் அப்படித்தான்' என்ற எண்ணத்தை விதைக்கிறார்கள். எனவே, இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்குக் கிளம்பும் மாணவர்களுக்கும் ஆண்களுக்கும், பெண்களைப் பற்றிய சரியான பார்வையையும் கற்றுக்கொடுத்து அனுப்பவேண்டிய தேவை இருக்கிறது!

வெளிநாட்டில் படிக்கும் என் பையனுடைய பல்கலைக்கழகத்தில், ஜூன் மாத வெயிலில் சில மாணவிகள் சண் பாத் எடுத்துக்கொண்டு இருந்தனர். நான் கொஞ்சம் நேரம் அவர்களை கவனித்ததை என் பையன் பார்த்துவிட்டு, 'யாரையும் இப்படி உற்று பார்க்காதேம்மா... தவறு' என்று என் கைப்பிடித்து அழைத்து வந்துவிட்டான். இதே இந்தியாவில் என்றால், பல்கலைக்கழகத்தில் சன் பாத் எடுக்கும் அளவுக்கெல்லாம் வேண்டாம்... மினி ஸ்கர்ட், ட்ரவ்ஸர், ஸ்லீவ்லெஸ் அணிந்த பெண்களை, வெளிநாட்டு மாணவர்கள் போல இங்குள்ள கல்லூரி மாணவர்கள் சலனமின்றி கடந்து போவார்களா? ஆண்களை விடுங்கள்... பெண்கள் அந்தப் பெண்களைப் பற்றி என்ன பேசுவார்கள்? பல கேள்விகள் மனதுக்குள் ஓடின.
ஒரு சமூகம் பெண் மீது கொண்டுள்ள பார்வையை வைத்தே, அச்சமூகத்தின் நாகரிக வளர்ச்சியை எடைபோட இயலும். பெண்ணின் உடல் சார்ந்த அரசியல் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமாக இருக்கிறது. அளவில் கூடுதலோ, குறைவோ... அந்த அரசியலில் இருந்து எந்தப் பெண்ணும் தப்புவதில்லை.
'எல்லாவற்றிலும் வளரும் சமுதாயம் நாங்கள்' என்று சொல்லிக்கொண்டு, மாண்புமிகு இந்தியர்கள் என்ன செய்கிறோம்? காதலர் தினம் அன்று கண்ணில் படும் ஜோடிகளை எல்லாம் தாலிகட்டச் சொல்லி தடியுடன் வருகிறார்கள் கலாசாரக் காவலர்கள். எல்லாக் கலாசாரங்களும் பெண்களை இம்சிக்கும் நுண்ணிய பிரச்னைகளைக் கொண்டுள்ளன. உறவு ரீதியாக பலப்பட்ட திருமண பந்தங்கள்கூட விவாகரத்தில் முடியும் காலத்தில், அப்போதுதான் ஒருவரை ஒருவர் தெரிந்துகொள்ள, புரிந்துகொள்ள ஆரம்பித்திருக்கும் காதல் காலத்தில், 'லவ்வர்ஸ்னா அப்போ தாலி கட்டு' என்று நாட்டாமை செய்யும் கேலிக் கூத்தை நடத்திப் பார்க்கும் ஒரு போலி கலாசார அமைப்பை, இந்தக் காலத்திலும் அனுமதித்து இருக்கிறோம்.
உண்மையில் காலாசாரம் என்ற பெயரில் இந்தச் சமூகம் வலியுறுத்துவது என்ன தெரியுமா? ஆண் மனது... ஆண் பார்வை. இங்கு பெண்களின் சுதந்திரம் பற்றி கேள்வி இல்லை. அவள் முகம் மூடிக்கொள்ள வேண்டியவள். அச்சம், மடம், நாணம், பயிர்ப்புடன் இந்த இணையக் காலத்தில் இன்னொன்றும் சேர்ந்திருக்கிறது அவளுக்கான பட்டியலில். தங்கள் முகம் தோன்றா புகைப்படங்களை ப்ரொஃபைல் பிக்சராக செட் செய்வது, தங்களின் படங்களை பதிவிடாமல் இருப்பது... இதுதான் குடும்பப்(!) பெண்களுக்கு அழகு. இது மீண்டும் மீண்டும் ஒவ்வொரு பெண்ணுக்கும் பலரால் வலியுறுத்தப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

இன்னும் சில ஆண் குரல்களும் மனங்களும் இங்கே...
'டெல்லியில் நிர்பயா இரவில் சென்றது தவறு. ஒரு போலிஸ் அதிகாரி வீட்டில் பார்ட்டிக்குச் சென்றது பெண்ணின் தவறு. அரசியலுக்கு வந்தால் சேலையைப் பிடித்தும் இழுப்போம், இதெல்லாம் சகஜம். துணிவிருந்தால் மட்டுமே வரவேண்டும். சினிமா நடிகையென்றால் பொது இடம் என்றுகூட பார்க்க மாட்டோம்... காசு கொடுத்து சினிமா பார்க்கிற நாங்கள் கொஞ்சம் தொட்டுப் பார்ப்போம். இதுதான் ஆண்மை.
ஒரு பெண்ணை, மனதில் அழுக்குடன் பார்க்கும் பார்வை ஆண்மை. அவளைத் தொட்டால் அது பேராண்மை. அதை பெருமையாக நண்பர்களிடமும் சொல்வோம். பெண்ணை பொய்யாக மயக்குவோம். அன்பு என்று சொல்லி அவளை மனம் மாற்றுவோம். சிதைப்போம். அடிமையாக்குவோம். ஒரு பொன்னாளில், 'நீ வேண்டாம் போ' என்போம். இன்னொரு பெண் தேடுவோம். எதுவுமே தவறில்லை.'
ஏனென்றால், பெண் என்ற புனித பிம்பம் எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்வாள். ஆம் ஆண்களே... அவளுக்கு ஆசிட் வீசத் தெரியாது. தன் காதலை மறுப்பவனை நடுரோட்டில் வைத்து வெட்டத் தெரியாது. ஆணை கதறக் கதற வலுக்கட்டாயமாக சேதப்படுத்த அவளுக்கு வலுவோ, மனமோ இல்லை. ஒரே சமயத்தில் மூன்று, நான்கு ஆண்களைக் காதலித்து, 'அனைவரும் தன் இணை' என்று பெருமையாக வெளியே சொல்லிக்கொள்வது கிடையாது.
பலதார மணம், இங்கு ஆண்களுக்கு மட்டுமே அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. ஒரு பெண்ணுக்கு இரண்டாம் திருமணமும் முறிந்து, மூன்றாவது உறவை அவள் நேர்மையாகத் தேர்ந்தெடுத்தால், சமூக வலைதளங்களில் இஷ்டத்துக்கு அவளை நோக்கிக் கேள்விகள் கொட்டப்படும். ஒருவனுக்கு ஒருத்தி என்பது அவசியமில்லை. ஒருத்திக்கு ஒருவன் இல்லாவிடில், மிகப்பெரும் சமூகக்கேடு.
'ஏன்... ஆண்களுக்கு இருக்கும் உணர்வு பெண்களுக்கும் இருக்கும்தானே?' என்றெல்லாம் இங்கு நாம் கேள்வி எழுப்பக்கூடாது. ஏனென்றால் நாம் பெண். சமூகக் கோட்பாடுகளை தாங்கிப்பிடிக்க வேண்டும். எல்லைக் கோட்டை சிறிது தாண்டினாலும் சமூகம் குலையும். 'வேற்றுப் பெண்களிடம் நான் எப்படியும் பழகலாம். எனக்கு உரிமை, சலுகை உண்டு. என் மனைவியோ, காதலியோ என்னிடம் மட்டுமே பழக வேண்டும். எனக்கு உண்மையாக இருக்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் வேண்டாம்' என்ற ஆண் மனதுக்கு, பெண் அடிமை சாசனம் எழுதப்பட்டவள்.
பெண் உடலிடம் வெளிப்படையாக வன்முறை நிகழ்த்தும் ஆண்கள் ஒருபுறம் என்றால், அவள் கூடவே இருந்து வாழ்க்கை நடத்தும் ஆண்களின் மன வன்முறைகள், ஆதிக்கங்கள் உக்கிரமானவை. தாங்கள் அவளைச் சந்தேகப்படுவதைக்கூட, 'அவளுக்கு ஒன்றும் தெரியாது, நான்தான் பார்த்துக்கணும்' என்ற போர்வையில் நுட்பமாகச் செய்பவர்கள். அதுவே பெண், தன் கணவர் இன்னொரு பெண்ணிடம் பழகுவதைப் பற்றி கேள்வி எழுப்பினால், 'சந்தேகப்பிராணி, வாய்க்கொழுப்பு, பொறாமைபிடிச்சவ' என்று ஆயிரம் சொற்கள் அவளைக் கரிக்கும். அதிலும் ஒரு சுயபச்சாதாபத்தை தேடிக்கொள்ளும் சில ஆண்களின் உலகம், மிக சுயநலமானது.
பெண்களுக்குத் தேவை பாதுகாப்பு இல்லை. ஏன் என்றால், அவளுக்கு ஆபத்து என்று சொல்பவர்களும், அவளைப் பாதுகாக்கிறேன் என்று சொல்பவர்களும் ஒரே இடத்தில் இருந்துதான் வருகிறார்கள். ஒன்றே ஒன்று செய்யுங்கள்... உங்கள் வீட்டு, தெரு, சமூக, ஊர், மொழி, நாட்டு, உலகப் பெண்களைப் பாதுகாக்க ஆசையிருந்தால்... பெண்ணின் உடலை எப்படிக் கடக்க வேண்டும் என்று ஒவ்வொரு ஆணுக்கும் சொல்லித்தாருங்கள். எழும் உணர்வுகள் இயற்கையாக இருந்தாலும்கூட, அதை ஆரோக்கியமாக எதிர்கொண்டு, சக பெண்ணைக் காயப்படுத்தாமல் எப்படிப் பேசி, பழக வேண்டும் என்று கற்றுத்தாருங்கள்.
ஆண், பெண் என்ற திரைகளுக்குப் பின்னால் இருக்கும் பிரமிப்பு அழகு, சுவாரஸ்யம் என்பதைவிட, நாளுக்கு நாள் அது ஆபத்தாக மாறி வருகிறது. எனவே ஆண், பெண் என்பதை உடைத்து சக மனிதர்கள் என்ற நட்புப் பார்வையில், பேச , பழக ஆண் பிள்ளைகளுக்குச் சொல்லித்தாருங்கள். பள்ளி, கல்லூரிகளில் ஆண், பெண்களை விலக்கிவைத்திருக்கும் கட்டுப்பாடுகளை தகர்த்து எடுங்கள். ஒவ்வொரு பெண்ணுக்கும் தன்னைப் பார்த்துக்கொள்ள நன்றாகவே தெரியும். ஒவ்வொரு ஆணும் தன் மனதைப் பார்த்துக்கொள்ளவேண்டிய சமூகக் கட்டாயத்தில் இருக்கிறோம்.
அந்தப் படத்தில் கதாநாயகியை ஆண்கள் வன்புணர்வு செய்ய, சக பெண்கள் நடுரோட்டில் அவளைக் கதற, கதற அவள் தலைமுடியை வெட்டி அவமானப்படுத்தி வன்மம் தீர்ப்பார்கள். ஆனால், அவள் கணவன் அவளை ஏற்றுக்கொள்ள, அதன் பிறகுதான் ஊர் அவளுக்கு மரியாதை கொடுக்க ஆரம்பிக்கும். தமிழ் சினிமாவில் கதாநாயகன் தன் அம்மாவைப் பத்தினி என்று நிரூபிக்கப் போராடும் அபத்தத்திற்கு சிறிதும் குறைவே இல்லாமல் இருக்கிறது இந்த வெளிநாட்டுப் படத்தின் க்ளைமாக்ஸ். ஆண்கள் அனுமதித்தால் மட்டுமே பெண்களால் சமூகத்தில் தலை நிமிர்ந்து வாழ முடியும் என்பதை, நுட்பமாகக் காட்டிக்கொடுத்து உள்ளார்கள்.

இதற்கு முடிவு என்ன? உறவுகள் குறித்து குழப்பிக்கொள்ள வேண்டாம். நம் வீட்டில்தான், நம்மைச் சுற்றிதான் பெண்கள் உள்ளார்கள். அவர்களுக்கு நல்லது நடக்க வேண்டும், அன்பானவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் ஆண்கள்... என்ன செய்யலாம்?!
பெண் என்றதுமே அவளின் உடல்தான் எனும் கருத்தாக்கத்தில் இருப்போர் முதலில் வெளியே வாருங்கள். ஆணுக்கும் பெண்ணுக்கும் கோயில் மட்டுமில்லை, கல்லூரி முதல் கழிப்பறை வரையில்கூட தூரம் விலகும் அளவுக்கு சமநிலையை உருவாக்குவோம். ஒரு பெண்ணை எந்தச் சலனமுமின்றி, ஆரோக்கியமாகப் பார்க்கும் கண்களும் மனதும் அமையப்பெற்ற ஆண்களை உருவாக்குவோம், பெருக்குவோம்.
சக மனுஷியை நேர்மையான பார்வையுடன் கூடுதலாக நேசிப்பதில் என்ன குறைந்துவிடப் போகிறது?!
இந்த கதையை மனித உரிமை கோணத்தில் ஆராய்வோம்.கண்ணுசாமி ஒரு அப்பாவி தொழிலாளி. அவன் மனைவிக்கும் அவருக்கும் ஏதோ சண்டை.கணவர் சம்பளத்தை தனக்கு கொடுக்க சொல்லி ஆபிஸில் சட்டவிரோத கோரிக்கை வைக்கிறார் மனைவி.மேனேஜர் அதை நிராகரிக்கிறார். "என் குடும்ப விசயத்தில் தலையிடாதே" என்ற சரியான பதிலை சொல்கிறார் கண்ணுசாமி.அதன்பின் ஆபிஸ் வாசலில் கணவரை தாக்குகிறார் மனைவி.கண்ணுசாமி அந்த கோபத்தில் மனைவியை திருப்பி அடிக்கிறார்.குறுக்கே சமாதானம் பேசவருபவர்கள் கண்ணுசாமியை பலமாக தாக்கி பொலிஸில் ஒப்படைக்க முன்வருகிரார்கள்.கணவர் சிறைக்கு போனால் வேலை, சம்பளம் போய் தானும், குழந்தைகளும் பாதிக்க்படுவோம் என்ற எண்னத்தில் அதை வேன்டாம் என தடுக்கிறார் மனைவிஇதில் பாதிக்கபட்டவர் யார்?கண்ணுசாமியின் கோணம் இதில் என்ன என பார்ப்பது அவசியமில்லையா?
பெண் என்றால் அவள் உடல் மட்டும்தானா..? - சமூகத்துக்கு ஒரு கேள்வி!
கிருத்திகா தரன்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
சிந்தனைக் களம் » வலைஞர் பக்கம்
March 22, 2017
________________________________________________________________________________________________
HER - "LET THE VOICE BE YOURS". WOMEN'S DAY SHORT FILM
https://www.youtube.com/watch?v=_BkG2llPJGs
Published on Mar 7, 2017
One Woman can make a difference...but together...we can ROCK THE WORLD!! Speak your Mind even if you Voice shakes. Let the voice be your's!!!
________________________________________________________________________________________________
அரசு அலுவலகம் போலத் தென்படுகிறது அந்தச் சூழல். ஊழியர்கள் அங்குமிங்கும் பேசிச் சிரித்துக் கொண்டிருக்கின்றனர். சிலர் அங்குமிங்கும் நடக்க, அந்த இடமே சந்தைக்கடை போலக் காட்சியளிக்கிறது.
மேலாளர் போன்ற தோற்றத்தில் இருக்கும் ஒருவர், யாரிடமோ போனில் பேசிக்கொண்டிருக்கிறார். வேறு மாதிரியான பழக்கவழக்கங்கள் (பாலியல் ரீதியில்) தொடர்பான உரையாடல் என்று தெரியவருகிறது. இடையில் தனக்கு 10 வயதில் மகள் இருப்பதையும் குறிப்பிடுகிறார். பின்னர் அவரின் கவனம் அங்கு பணிபுரியும் இளம்பெண் மீனாட்சி மேல் படுகிறது.
பியூனை அழைத்து, ''நம் மடோனாவைக் கூப்பிடு!'' என்றும் கூறுகிறார். வந்துநிற்பவரிடம் அவர் கேட்கும் கேள்விகள் 'ஏ'க ரகமாய் இருக்கின்றன. கவனமாய் அலுவல் சம்பந்தமாய் மட்டும் பேசுகிறார் மீனாட்சி. அதைக் கண்டுகொள்ளாதவரின் கண்கள் வேறெங்கோ மேய்கின்றன. என்ன செய்தார் மீனாட்சி?
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஒவ்வொரு நொடியும் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. இதுகுறித்த புள்ளிவிவரங்கள் நம்மை அதிரவைக்கின்றன. அலுவலகத்தில், பேருந்தில், கடையில், திரையரங்கில், கூட்டத்தில், ஏன் வீட்டிலே கூட அத்துமீறல் தொடர்கிறது. இதற்கெல்லாம் என்னதான் வழி? கதையின் நாயகி மீனாட்சியைப் பாருங்கள்.
அவரைப் போலவே உங்களின் குரலையும் உயர்த்துங்கள். அப்போதும், மீனாட்சி வெறுமனே நடிக்காதே என்று அவர் பசப்பியது போல நடக்கக்கூடும். கவலை கொள்ளாதீர்கள், தடுக்கச் செல்ல முயன்றவரைத் தடுத்து நிறுத்தும் பெண் போல ஒருவர் துணைக்கு வருவார்.
இந்த முறை எழுவது உங்களின் சுயமரியாதையாக இருக்கட்டும்!
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
“பெண்ணை போதை வஸ்துபோல, அடக்க வேண்டிய கொடிய மிருகத்தைப் போலச் சித்திரிக்கும் சமயமும் மதமும் நமக்கு அவசியமா? எனும் கேள்வி, என்னையும் அறியாமல் எனக்குள் வேரூன்றிவிட்டது. அது மட்டும் அல்லாமல் இங்கே மதங்களின் பேரால் நிகழும் உயிர்ப்பலிகளும் கலவரங்களும் என்னை கடவுள் மறுப்பாளராக மாற்றி விட்டன. ஆனால், என் குடும்பத்தினர், நான் ஏதோ வழிதவறிப் போய் விட்டதாகக் குற்றம் சாட்டுகிறார்கள். என்னை பூசாரியிடம் அழைத்துச் சென்று, ‘பேயோட்ட வேண்டும்’, ‘மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்’ என்றெல்லாம் கூறினர்” என வருத்தமாகப் பேசினாள். எவ்வளவோ முன்னேறிவிட்ட சமூகத்தில், ஒரு பெண் கடவுள் மறுப்பாளராக இருப்பதை ஏற்றுக் கொள்ள ஏன் மறுக்கிறோம்? ஏன் மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்கிறோம்?
நம் வரலாறு நெடுகவே ஆன்மிகமோ, துறவறமோ அல்லது ‘கடவுள் இல்லை’ என்று வாதிடும் நாத்திகமோ, தனக்கான மார்க்கத்தைத் தேர்வு செய்யும் உரிமையை ஆணுக்கு வழங்கப்பட்டது போல பெண்ணுக்கும் வழங்கப்பட் டிருந்தால், எத்தனையோ பகுத்தறிவு வாதிகளும் பெண் துறவிகளும் இதே மண்ணில் உதித்திருப்பார்கள். ஒரு வேளை, புத்தனுக்குப் பதிலாக அவனது மனைவியே துறவறம் பூண்டிருக்கலாம். அவர்களால் எழுதப்படும் புனித நூல்களில் பெண்ணின் விலா எலும்பில் இருந்து ஆண் உதித்தான் என எழுதப்பட் டிருக்கும். பகுத்தறிவு கொண்ட பெண்ணின் வளர்ப்பில் வளரும் அடுத்த தலைமுறையில், மதத்தின் பெயரால் நிகழும் தீவிரவாதம் குறைந்து போயிருக்கலாம்.
நான் இந்த நிமிடத்தில் கல்வி நாடும் தேடும் முன்னேறும் புதுமை பெண்கள் இருக்கும் கூட்டத்தில் இருக்கிறேன்
இன்னம்பூரான்
பெண் இனவெறுப்பு அரசியலும் கறுப்புத்தோல் ஆண்களும்
நிறைய புரட்சிகளைப் பேசியாயிற்று, பார்த்தாயிற்று, எழுதியாயிற்று. நடைமுறையில் முற்போக்கும், சமூக மாற்றமும் இன்னும் ஒவ்வாத விடயங்களாகவே இருக்கின்றன.
என்ன இருந்தாலும், வெள்ளைத் தோல் பெண்களுக்கு இணையாக கறுப்புத்தோல் பெண்கள் சமூகத்தில் அங்கீகரிக்கப்படுவதில்லை, மதிக்கப்படுவதில்லை. சமீபத்தில் நிறைய பெண்கள் விடயத்தில் இதை வெளிப்படையாகப் பார்க்கிறேன்.
வெள்ளைத்தோல் பெண்கள் வெள்ளை நிறத்தில் இருப்பது ஒன்றே அங்கீகாரங்களுக்குப் போதுமானது. கறுப்புத்தோல் பெண்கள், சினிமா முதல் இலக்கியம் உள்ளீடாக, அரசியல், கலை வரை என்ன குட்டிக்கரணம் போட்டு படைப்பாற்றலை, சாதனைகளை, ஒழுக்கங்களை நிரூபித்துக்காட்டினாலும் சமூகத்தின் முன்னால் தங்கள் சுயமரியாதையை நிறுவ இன்னும் போராட வேண்டிய தூரமும் காலமும் நீளமானது. ஆனால், வெள்ளைத்தோல் பெண்கள் வெள்ளை நிறமாக இருப்பது ஒன்றே போதுமானது.
கறுப்புத்தோல் ஆண்கள், தங்கள் மீதான தாழ்வு மனப்பான்மையைத் தீர்த்துக்கொள்ள திரையிலிருந்து வாழ்வின் உள்ளறைகள் வரை வெள்ளைப்பெண்களை முன்னிறுத்தியே வாழ்க்கையைப் பின்னிக்கொள்கிறார்கள்.
இதனால், என்ன இழப்பு என்று கேட்கலாம். நம் மண்ணின் பகுத்தறிவு அரசியலும் நாம் முன்வைக்கும் தெருமுனைப்போராட்டங்களும் நாம் எதிர்கொள்ளும் சமூக அரசியல் சிக்கல்களும் சமூகத்தின் முன்னரங்கில் வெகுவாகப் பேசப்பட்டாலும், உண்மையில், நடைமுறை அளவில் பெருத்த பின்னடைவையே தந்துகொண்டிருக்கின்றன.
வெள்ளைத்தோல் பிம்ப அரசியல்களிலிருந்து கறுப்புத்தோல் ஆண்கள் விடுபடாமல், நம் சமூகவிடுதலையைப் பேசுவதில் எந்த அர்த்தமுமில்லை. மனமாற்றம் பெறுங்கள். உலகம், எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறது. கண்களைப் பிடரியில் இருந்து எடுத்து, அறிவின் முன்பக்கம் பொருத்துங்கள்.
தற்பொழுதைய சவால்கள் எதிரிகள் நம் கையில் திணிப்பதில்லை. நமக்கு நாமே உருவாக்கிக்கொள்பவை தாம்.
திரையில் எப்படி கறுப்பு நிற கதாநாயகி மின்னமுடியாதோ அப்படித்தான் சமூகச்சூழல்களிலும். திரைமுதல் தெருவில் ரசிக்க வரை வெள்ளைத்தோல் பெண்கள் தான் வேண்டும். பின் எங்கே சமூகப்புரட்சி.
பெண் மீதான வெறுப்பு முதலில், கறுப்பு நிறத்தை முன்வைத்து தான். பின் தான் மற்றெல்லா கருத்துகளையும் கொண்டுவருவார்கள். ஏனெனில், நிறத்தின் வழியாக, அங்கே 'சாதி'தான் பதிவாகிறது.
கறுப்புத்தோல் ஆண்கள் முதலில் தாழ்வு மனப்பான்மையிலிருந்து வெளியே வாருங்கள்!
சமீபத்தில் இரண்டு செய்திகளை நாளிதழ்களில் பார்க்க நேர்ந்தது. ஒன்று இளம்பெண் ஒருவர் கணவரது கொடுமைக்குப் பயந்து அந்த வன்முறையிலிருந்து தப்பித்துக்கொள்ளத் தற்கொலை செய்துகொள்ள முடிவுசெய்தார். அப்படிச் செய்துகொள்வதற்கு முன்பாக செல்போனில் பேசிவிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
மற்றொரு செய்தி, காதல் திருமணம் செய்துகொண்டு வீட்டை விட்டு வெளியேறிய ஒரு செவிலியப் பெண் தன் பெற்றோரால் எரித்துக் கொல்லப்பட்டது. இந்த இரண்டுமே வெவ்வேறு செய்திகள் என்கிற தோற்றத்தைத் தந்தாலும் சொல்கிற செய்தி ஒன்றுதான். அது, குடும்ப கவுரவம் என்கிற கண்ணுக்குத் தெரியாத ஒரு விஷயம்.
குடும்ப அமைப்பு, தனக்கான கவுரவத்தைக் காப்பாற்றவோ, கெடுக்கவோ பெண்ணால் மட்டும்தான் முடியும் என்றும், அது அவளது பொறுப்பு மட்டுமே என்றும் சொல்லிச் சொல்லித்தான் இந்தச் சமூகம் பெண்ணை உருவாக்குகிறது. அந்த நம்பிக்கையின் அடிப்படைதான் இன்று தான் பெற்ற பெண்ணையே பெற்றோர் எரித்துக் கொல்வதற்கும், மருமகனால் கடுமையான வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு விவாகரத்து கோரிய மகளை வலுக்கட்டாயமாக அதே கொடியவனோடு வாழ அனுப்பி அவளது மரணத்தை உறுதி செய்ததற்கும் பின்னணியாக இருக்கிறது.
தொடரும் கேள்விகள்
நான் எனது பதிமூன்றாவது வயதில் பள்ளியிலிருந்து நிறுத்தப்பட்டேன். பெண்கள் அதற்கு மேல் படிக்க வேண்டாம் என்று நம்பிய சமூகத்தில் பிறந்தவள் நான். பள்ளிக் கல்வியைத் தொடர என் பெற்றோரிடம் கெஞ்சினேன். குடும்ப கவுரவத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற பதில்தான் எனக்குக் கிடைத்தது. பின்னாளில், நான் எழுத விரும்பிய கவிதைகளுக்காகவும் கெஞ்சினேன். அப்போதும் இதே பதில்தான் கிடைத்தது. உள்ளாட்சித் தேர்தலில் நின்றபோதும் நான் எதிர்கொள்ள நேர்ந்தது இதே வார்த்தைகளைத்தான். அதே சொற்கள்தான் இன்றைக்கும் இந்த பெண்களின் மீது கவிழ்ந்து, அவர்களைக் காவுகொள்கின்றன. கண்ணுக்குப் புலப்படவே முடியாத அந்த ஒற்றை வார்த்தையான கவுரவம் என்பது பெண்ணின் உயிரைவிட அத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததா என்கிற கேள்வி வருகிறது.
விவாகரத்து பெற்றுவிட்ட பிறகு பெண்ணை இந்தச் சமூகம் பார்க்கும் அல்லது நடத்தும் விதம், ஒரு பெண் தான் விரும்பியவனோடு சென்ற பிறகு அந்தக் குடும்பம் கொள்கிற அளவற்ற கோபம் இந்த இரண்டுக்கும் பின்னணியில் இருப்பது என்ன? பெண்ணின் தேர்வு என்பது குடும்ப கவுரவத்தை அழிக்கக்கூடியதொரு விஷயம் என்னும் பார்வைதானே?
இந்தப் பூமி உருண்டையானது என்பதிலோ கிரகங்கள் சூரியனைச் சுற்றி வருகின்றன என்பதிலோ உலகத்தில் யாருக்கும் எந்தச் சந்தேகமும் கிடையாது. காரணம் அவை அறிவியல் உண்மைகளாக நிறுவப்பட்டுவிட்டன. ஆனால் பெண்ணுக்கான இடம் எது என்பதில் மட்டும்தான் இன்னும் இந்த உலகம் தீராத சந்தேகத்தை இன்றைக்கும் கொண்டிருக்கிறது. அதனால்தான் இன்றும் பெண்ணின் இடம் என்பது குடும்ப அமைப்பை, அதன் கவுரவத்தினைக் கட்டிகாப்பதாக மட்டுமே நிலைபெற்றிருக்கிறது.
தனக்கான தேர்வைச் செய்வதற்கும்
அதன் அடிப்படையில் வாழ்வதற்கும், பிரிவதற்கும் இயலாத நிலையில் இருக்கும் பெண்ணின் இடம் எத்தனை கொடுமையானது? தான் நம்புகிற, காக்க விரும்புகிற கவுரவத்துக்காக பெற்ற மகளை ஒரு கொலைகாரனோடு வாழ வற்புறுத்தவோ, தானே கொலை செய்யவோ பெற்றவர்களால் இயலும் என்றால் அந்தக் குடும்ப அமைப்பு பாதுகாப்பானது என்கிற பிம்பம் சரியானதுதானா?
பெற்றோர் வழங்குகிற அல்லது வடிவமைக்கிற இடத்தில் புழங்கித் தனது இருப்பை நிலைபடுத்துவதுதான் ஒரு பெண்ணுக்கான வாழ்வா? இது எத்தனை பெரிய வன்முறை? ஆணுக்கும் பெண்ணுக்கும் கற்பைப் பொதுவில் வைக்கச் சொன்னான் பாரதி. நாமோ கவுரவம் என்கிற ஒரு வார்த்தையைப் பெண்ணின் தோளேற்றி இந்த நூற்றாண்டிலும் அவளைச் சுமக்கவைத்துக் கொண்டிருக்கிறோம். ஆண் குரங்கு மரம் ஏறலாம், பெண் குரங்கு ஏறக் கூடாது என இயற்கை கட்டுப்படுத்துகிறதா என்ன?
பால் அடையாளத்தின் பொருட்டு பெண் இழந்துவிட்ட எண்ணற்ற விஷயங்களை அவளுக்கானதாகக் கை மாற்றும் காலமாக இனி வரும் காலம் இருக்கட்டும். ஆணும் பெண்ணுமே இந்த வாழ்வை, குடும்ப அமைப்பின் விழுமியங்களை, தோளில் ஏற்றவோ அல்லது உதறித் தள்ளவோ இணையட்டும். இந்த வாழ்வென்பது வாழ்ந்து கடக்கவே. வன்முறையினால் வீழ்ந்து கிடக்க அல்ல.
கட்டுரையாளர், கவிஞர்
தொடர்புக்கு: write...@gmail.com
http://tamil.thehindu.com/society/women/ஒரு-பிரபலம்-ஒரு-பார்வை-வீழ்ந்து-கிடக்க-அல்ல-வாழ்க்கை/article9714235.eceசமூகம் » பெண் இன்றுPublished: May 28, 2017ஒரு பிரபலம் ஒரு பார்வை: வீழ்ந்து கிடக்க அல்ல வாழ்க்கைகுட்டி ரேவதி
சமீபத்தில் இரண்டு செய்திகளை நாளிதழ்களில் பார்க்க நேர்ந்தது. ஒன்று இளம்பெண் ஒருவர் கணவரது கொடுமைக்குப் பயந்து அந்த வன்முறையிலிருந்து தப்பித்துக்கொள்ளத் தற்கொலை செய்துகொள்ள முடிவுசெய்தார். அப்படிச் செய்துகொள்வதற்கு முன்பாக செல்போனில் பேசிவிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
மற்றொரு செய்தி, காதல் திருமணம் செய்துகொண்டு வீட்டை விட்டு வெளியேறிய ஒரு செவிலியப் பெண் தன் பெற்றோரால் எரித்துக் கொல்லப்பட்டது. இந்த இரண்டுமே வெவ்வேறு செய்திகள் என்கிற தோற்றத்தைத் தந்தாலும் சொல்கிற செய்தி ஒன்றுதான். அது, குடும்ப கவுரவம் என்கிற கண்ணுக்குத் தெரியாத ஒரு விஷயம்.
குடும்ப அமைப்பு, தனக்கான கவுரவத்தைக் காப்பாற்றவோ, கெடுக்கவோ பெண்ணால் மட்டும்தான் முடியும் என்றும், அது அவளது பொறுப்பு மட்டுமே என்றும் சொல்லிச் சொல்லித்தான் இந்தச் சமூகம் பெண்ணை உருவாக்குகிறது. அந்த நம்பிக்கையின் அடிப்படைதான் இன்று தான் பெற்ற பெண்ணையே பெற்றோர் எரித்துக் கொல்வதற்கும், மருமகனால் கடுமையான வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு விவாகரத்து கோரிய மகளை வலுக்கட்டாயமாக அதே கொடியவனோடு வாழ அனுப்பி அவளது மரணத்தை உறுதி செய்ததற்கும் பின்னணியாக இருக்கிறது.
தொடரும் கேள்விகள்
நான் எனது பதிமூன்றாவது வயதில் பள்ளியிலிருந்து நிறுத்தப்பட்டேன். பெண்கள் அதற்கு மேல் படிக்க வேண்டாம் என்று நம்பிய சமூகத்தில் பிறந்தவள் நான். பள்ளிக் கல்வியைத் தொடர என் பெற்றோரிடம் கெஞ்சினேன். குடும்ப கவுரவத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற பதில்தான் எனக்குக் கிடைத்தது. பின்னாளில், நான் எழுத விரும்பிய கவிதைகளுக்காகவும் கெஞ்சினேன். அப்போதும் இதே பதில்தான் கிடைத்தது. உள்ளாட்சித் தேர்தலில் நின்றபோதும் நான் எதிர்கொள்ள நேர்ந்தது இதே வார்த்தைகளைத்தான். அதே சொற்கள்தான் இன்றைக்கும் இந்த பெண்களின் மீது கவிழ்ந்து, அவர்களைக் காவுகொள்கின்றன. கண்ணுக்குப் புலப்படவே முடியாத அந்த ஒற்றை வார்த்தையான கவுரவம் என்பது பெண்ணின் உயிரைவிட அத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததா என்கிற கேள்வி வருகிறது.
விவாகரத்து பெற்றுவிட்ட பிறகு பெண்ணை இந்தச் சமூகம் பார்க்கும் அல்லது நடத்தும் விதம், ஒரு பெண் தான் விரும்பியவனோடு சென்ற பிறகு அந்தக் குடும்பம் கொள்கிற அளவற்ற கோபம் இந்த இரண்டுக்கும் பின்னணியில் இருப்பது என்ன? பெண்ணின் தேர்வு என்பது குடும்ப கவுரவத்தை அழிக்கக்கூடியதொரு விஷயம் என்னும் பார்வைதானே?
இந்தப் பூமி உருண்டையானது என்பதிலோ கிரகங்கள் சூரியனைச் சுற்றி வருகின்றன என்பதிலோ உலகத்தில் யாருக்கும் எந்தச் சந்தேகமும் கிடையாது. காரணம் அவை அறிவியல் உண்மைகளாக நிறுவப்பட்டுவிட்டன. ஆனால் பெண்ணுக்கான இடம் எது என்பதில் மட்டும்தான் இன்னும் இந்த உலகம் தீராத சந்தேகத்தை இன்றைக்கும் கொண்டிருக்கிறது. அதனால்தான் இன்றும் பெண்ணின் இடம் என்பது குடும்ப அமைப்பை, அதன் கவுரவத்தினைக் கட்டிகாப்பதாக மட்டுமே நிலைபெற்றிருக்கிறது.
தனக்கான தேர்வைச் செய்வதற்கும்
அதன் அடிப்படையில் வாழ்வதற்கும், பிரிவதற்கும் இயலாத நிலையில் இருக்கும் பெண்ணின் இடம் எத்தனை கொடுமையானது? தான் நம்புகிற, காக்க விரும்புகிற கவுரவத்துக்காக பெற்ற மகளை ஒரு கொலைகாரனோடு வாழ வற்புறுத்தவோ, தானே கொலை செய்யவோ பெற்றவர்களால் இயலும் என்றால் அந்தக் குடும்ப அமைப்பு பாதுகாப்பானது என்கிற பிம்பம் சரியானதுதானா?
பெற்றோர் வழங்குகிற அல்லது வடிவமைக்கிற இடத்தில் புழங்கித் தனது இருப்பை நிலைபடுத்துவதுதான் ஒரு பெண்ணுக்கான வாழ்வா? இது எத்தனை பெரிய வன்முறை?
ஆணுக்கும் பெண்ணுக்கும் கற்பைப் பொதுவில் வைக்கச் சொன்னான் பாரதி. நாமோ கவுரவம் என்கிற ஒரு வார்த்தையைப் பெண்ணின் தோளேற்றி இந்த நூற்றாண்டிலும் அவளைச் சுமக்கவைத்துக் கொண்டிருக்கிறோம். ஆண் குரங்கு மரம் ஏறலாம், பெண் குரங்கு ஏறக் கூடாது என இயற்கை கட்டுப்படுத்துகிறதா என்ன?
பால் அடையாளத்தின் பொருட்டு பெண் இழந்துவிட்ட எண்ணற்ற விஷயங்களை அவளுக்கானதாகக் கை மாற்றும் காலமாக இனி வரும் காலம் இருக்கட்டும். ஆணும் பெண்ணுமே இந்த வாழ்வை, குடும்ப அமைப்பின் விழுமியங்களை, தோளில் ஏற்றவோ அல்லது உதறித் தள்ளவோ இணையட்டும். இந்த வாழ்வென்பது வாழ்ந்து கடக்கவே. வன்முறையினால் வீழ்ந்து கிடக்க அல்ல.
கட்டுரையாளர், கவிஞர்
தொடர்புக்கு: write...@gmail.com
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
ref:
பாஜக ஆளும் மாநிலங்களில் குழந்தை திருமணங்கள் அதிகம் !
http://www.vinavu.com/2017/06/13/increasing-child-marriages-in-north-indian-urban-areas/
உலகில் நடக்கும் குழந்தைத் திருமணங்களில் மூன்றில் ஒன்று இந்தியாவில் நடப்பதாக யூனிசெப் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. ‘ஜப்பானில் கல்யாணராமன்’ நடத்திய கூத்துகளை வெளியிடுவதில் மும்முரமாக இருந்த ஊடகங்கள் இந்த செய்தியை கண்டு கொள்ளவில்லை.
உலகில் நடக்கும் குழந்தைத் திருமணங்களில் கிட்டத்தட்ட பாதி அதாவது 42% தெற்காசியாவில் நடப்பதாகவும், தெற்காசியாவில் குறிப்பாக இந்தியாவில் மட்டும் 33% நடப்பதாகவும், மற்ற தெற்காசிய நாடுகளின் பங்கு 9% ஆகவும் உள்ளது எனத் தெரிவிக்கிறது அந்த அறிக்கை.
இந்தியாவில் திருமணமான பெண்களில் (20 முதல் 49 வயது வரை) 58 சதவீதத்தினர் தனக்கு குழந்தையாக இருக்கும் போதே திருமணம் செய்து வைத்து விட்டனர் என்று தெரிவித்துள்ளனர். குழந்தைத் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ள சிறுமிகளுக்கு முறையான மருத்துவ வசதிகள் கிடைப்பதில்லை என்றும் தெரியவந்துள்ளது.
பீகாரில் அதிக அளவில் (68% திருமணங்கள்) குழந்தைத் திருமணங்கள் நடைபெறுகின்றன். மற்ற ‘முன்னோடி’ மாநிலங்களாக ராஜஸ்தான், பீகார், மத்தியபிரதேசம், உத்திரபிரதேசம், ஜார்கண்ட், மேற்கு வங்கம் உள்ளன. இங்கும் அதிக அளவில் அதாவது 51.9% முதல் 68.2 % வரை குழந்தைத் திருமணங்கள் நடைபெறுகின்றன. இந்த மாநிலங்களில் 20-24 வயதுக்குட்பட்ட திருமணமான பெண்களில் இரண்டில் ஒரு பெண் குழந்தைத் திருமணம் செய்து வைக்கப்பட்டவர் என்கிறது அந்த அறிக்கை.
தென்னிந்தியாவில் ஒப்பீட்டளவில் குழந்தைத் திருமணங்கள் குறைவாக இருக்கிறது. அதே சமயத்தில் கேரளாவில் குழந்தைத் திருமணங்களின் எண்ணிக்கை வளர்ந்து வருவதாக கவலை தெரிவித்துள்ளது அந்த அறிக்கை. கேரளாவில் வடஇந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் அதிகரித்து வருவதால் இந்த புள்ளிவிவரம் உயருவதாக கூறுகிறார் யூனிசெஃபின் இந்திய அதிகாரி டோரா ஜியுஸ்டி.
இந்த புள்ளிவிவரத்தை நோக்கும் போது பார்ப்பனியத்திற்கு பல்லக்கு தூக்கும் வடஇந்திய இந்தி மாநிலங்கள் பிற்போக்கு பழக்கங்களுக்கு பலியாகி வீழ்ந்து கிடப்பது தெரிகிறது. அதே சமயம் சுயமரியாதை இயக்கம் போன்ற பார்ப்பன எதிர்ப்பு பாரம்பரியம் கொண்ட பழைய சென்னை மாகாண மாநிலங்கள் ஒப்பீட்டளவில் முன்னேறியுள்ளன என்பதையும் இது காட்டுகிறது.
குழந்தைத் திருமண ஒழிப்பு கண்ணுக்கெட்டிய தூரத்தில் கூட இல்லை என்கிறது அந்த அறிக்கை. “குழந்தைத் திருமணம் கடந்து இருபது ஆண்டுகளில் ஆண்டுக்கு ஒரு சதவீதம்தான் குறைந்துவருகிறது. இப்படியே போனால் குழந்தைத் திருமணத்தை முற்றிலுமாக ஒழிக்க ஐம்பது வருடங்களுக்கு மேலாக ஆகும்” என்று கவலை தெரிவித்துள்ளார் யுனெஸ்கோவின் இந்திய அதிகாரி டோரா.
குழந்தைத் திருமண ஒழிப்பு குறித்து அக்கறை கொண்டவர்கள் இந்திய வரலாற்றில் குழந்தைத் திருமண ஒழிப்பு தொடர்பாக இதுவரை நடந்துள்ள நிகழ்வுகளை திரும்பிப் பார்ப்பது அவசியம். அப்பொழுது தான் உண்மையான எதிரியை இனங்கண்டு எதிர்த்து போராட முடியும்.
இந்தியாவில் நடக்கும் குழந்தைத் திருமணங்களுக்கு வேதகாலம் தொடங்கி இன்று வரை ஒரு நெடிய பாரம்பரியம் இருக்கிறது. ‘பெண்குழந்தை பூப்பெய்தும் முன் திருமணம் செய்து வைக்கா விட்டால் பெற்றோர் நரகத்திற்கு செல்ல நேரிடும்’ என்றும் ‘பூப்பெய்திவிட்ட பின்னர் கணவன் இல்லை என்றால் பெண்கள் நடத்தை கெட்டு விடுவார்கள்’ என பலப்பல காரணங்களை கூறி மக்களை நம்ப வைத்திருக்கிறது பார்ப்பன இந்துமதம்.
அதே போல இதை எதிர்த்த போராட்டத்திற்கும் ஒரு பாரம்பரியம் இருக்கிறது. குறிப்பாக இன்று நடைமுறையில் உள்ள குழந்தைத் திருமண தடைச் சட்டமும் அதற்கு முந்தைய சம்மத வயது சட்டமும் எளிதில் நிறைவேறி விடவில்லை. பெரியார், மலபாரி போன்றவர்கள் தொடர்ந்து இதற்காக குரல்கொடுத்து வந்தார்கள்.
1889-ம் ஆண்டு வங்காளத்தைச் சேர்ந்த புலோமினி என்ற 11 வயது சிறுமியுடன் அவளது 31 வயது கணவன் உடலுறவில் ஈடுபட்டு கொலை செய்தான். சிறுமிகளை திருமணம் செய்து உடலுறவு கொள்ளுதல் என்பது அன்று வழக்கத்தில் இருந்த ஒன்று. இதைத் தொடர்ந்து குழந்தைகளுடன் உடலுறவில் ஈடுபடுவதை தடை செய்யக் கோரினர்கள் முற்போக்காளர்கள். இந்த விவகாரம் விவாதப் பொருளாகியது.
ஆங்கிலேய அரசு சம்மத வயது சட்டத்தை (Age of Consent Act, 1891) தாக்கல் செய்தது. இதன்படி 12 வயதுக்கு உட்பட்ட பெண்களுடன் உடலுறவில் ஈடுபடுவதை பாலியல் வன்முறை என்று அறிவித்தது. இங்கு ஒன்றை கவனிக்க வேண்டும். திருமண வயதை அல்ல, உடலுறவில் ஈடுபடுவதற்கான வயதைத் தான் அரசு உயர்த்தியிருந்தது.
குழந்தைகளுடன் உடலுறவில் ஈடுபடக்கூடாது என்றதும் வெகுண்டெழுந்தார்கள் இந்து ‘தேசியவாதிகள்’. இந்த சட்டம் இந்து மதவிவகாரத்தில் தலையிடுவதாகவும், இது ஒரு ஆபத்தான முன்னுதாரணமாக ஆகிவிடும் என்றும் கூறி இந்த சட்டத்தை கடுமையாக எதிர்த்தவர் யார் தெரியுமா? ஆர்.எஸ்.எஸ்-ன் மூதாதையர்களின் ஒருவரும் மாபெரும் தேசியவாதி என்று பார்ப்பன இந்துமத வெறியர்களால் பாராட்டப்படும் ‘லோகமானிய’ திலகர் தான் அவர்.
திலகர் தன்னுடைய கேசரி இதழில் இந்தச் சட்டத்தை எதிர்த்து கட்டுரைகளை எழுதினார். இந்து மதத்தின் அடிப்படை கூறுகளில் கைவைப்பதற்கு வெள்ளைக்காரர்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்று முழங்கினார். மேலும் இந்த சட்டத்திற்காக போராடிய மலபாரி என்பவர் பார்சி இனத்தவர் என்பதால் அவர் இந்து மதவிவகாரங்களில் தலையிடாமல் தன்னுடைய பார்சி இனப் பெண்கள் விசயத்தில் மட்டும் கவனம் செலுத்துமாறு அவரை கண்டித்தார் திலகர்.
விளக்குமாற்றுக்கு பட்டுகுஞ்சம் கட்டுவது போல இன்று திலகரை தேசியவாதியாக காட்ட இந்துத்துவா ஆதரவாளர்கள் பகீரத முயற்சி செய்கிறார்கள். அரவிந்தன் நீலகண்டன் ஆங்கிலய அரசு கொண்டு வந்ததால் தான் அந்த சட்டத்தை திலகர் எதிர்த்தார் என்று கேலிக்குரிய வாதங்களை வைத்தாவது திலகருக்கு முட்டுக்கொடுக்க முடியுமா என்று பார்க்கிறார்.
அன்றைய சட்டசபைகளில் இருந்த பார்ப்பன இந்துமத வெறியர்களாலும் அந்த சட்டம் எதிர்க்கப்பட்டது. ஆயினும் இவர்களின் எதிர்ப்புகளை மீறி சட்டம் நிறைவேறியது.
பின்னர் 1929-ல் திருமண வயதை 10 லிருந்து 14 ஆக அதிகரிக்கும் குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதற்கும் இந்து சனாதனவாதிகள், குறிப்பாக ஆர்.எஸ்.எஸ் சின் மூதாதையர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். சம்மத வயது சட்டத்தை திலகர் எதிர்த்தாரென்றால் குழந்தைத் திருமண தடுப்பு சட்டத்தை மாளவியா, முன்ஷி போன்ற இந்து மதவாதிகள் கடுமையாக எதிர்த்தார்கள். இந்த சட்டத்திற்கு எதிராக அன்றைய இந்து மன்னர்கள், சங்கராச்சாரிகள் பிரிட்டிஷ் அரச பிரதிநிதியிடம் தூது சென்றார்கள். தி இந்து உள்ளிட்ட பார்ப்பன பத்திரிகைகள் குழந்தைத் திருமணத்திற்கு ஆதரவாக செயல்பட்டார்கள். சில இஸ்லாமிய தலைவர்களும் இந்த சட்டத்திற்கு எதிராக மனு செய்துள்ளார்கள்.
‘மதத்திற்கு ஆபத்து’ என்பது முதல் ‘பெண்கள் ஒழுக்கம் கெட்டுவிடுவார்கள்’ என்பது வரை பலவிதமான காரணங்களை கூறி பார்ப்பனர்கள் எதிர்த்தார்கள். சிலர் இன்னும் நுணுக்கமான வழிகளில் பல்வேறு சூழ்ச்சிகளுடன் சட்டத்தை ஒழிக்க களமிறங்கினார்கள். குறிப்பாக மருத்துவ அடிப்படையில் குழந்தைத் திருமணம் தவறு தான் என்று ஏற்றுக் கொண்டுவிட்டு ஆனால் ‘பார்ப்பன இந்து மதம் குழந்தைத் திருமணம் செய்ய வலியுறுத்துவதால் தடைசட்டம் கொண்டு வரக்கூடாது, இது மதவிவகாரம்’ என்று சிலர் எதிர்த்தனர். இன்று அனைத்து சாதி அர்ச்சகர் பிரச்சனை வரையில் பார்ப்பன இந்துத்துவவாதிகளின் வாதம் இதுதான்.
இந்த காலகட்டம் பெரியாரின் சுயமரியாதை இயக்க காலகட்டமாகும். இவர்களை பெரியார் அம்பலப்படுத்தினார். குடியரசு இதழில் இது குறித்து பல கட்டுரைகளை எழுதினார். “பார்ப்பனர்கள் சட்டத்தை எதிர்த்து கூட்டம் போட்டால் அதே இடத்தில் நீங்களும் சட்டத்தை ஆதரித்து கூட்டம் போடுங்கள்” என்று தொண்டர்களுக்கு அறிவுறுத்தினார்.
“குழந்தைத் திருமண தடுப்பு விஷயமானது சுமார் 20 வருடத்திற்கு முன்பிருந்து சட்டசபைகளில் பிரஸ்தாபித்து வந்திருப்பது யாவருக்கும் தெரியும். ஆனால் ஒவ்வொரு சமயத்திலும் வைதீகர்கள் என்பவர்களும், இந்து மதத்தை பின்பற்றுகிறவர்கள் என்பவர்களும், தேசியவாதிகள் என்பவர்களும் ஆட்சேபணை செய்துகொண்டே தான் வந்திருக்கிறார்கள். இந்த சமயத்திலும் தேசியவாதிகளே பெரும் முட்டுக்கட்டையாக நின்று எவ்வளவோ சூழ்ச்சிகளுடன் ஆட்சேபித்து பார்த்திருக்கின்றார்கள்.
‘பழுத்த தேசாபிமானிகளும் பிரபல தேசியத் தலைவர்’ களுமாகிய திருவாளர்கள் மாளவியா, கேல்கார், மூஞ்சி, எம்.கே.ஆச்சாரியார், கே.வி.ரங்கசாமி ஐயங்கார், ஏ.ரெங்கசாமி ஐயங்கார், மோதிலால் நேரு ஆகியவர்கள் எல்லாருமே இந்த இருபதாம் நூற்றாண்டில் இடையூறாக இருந்திருக்கிறார்கள் …..
மேற்கூறிய எல்லா தேசியவாதிகளும் மசோதாவின் தத்துவத்தை ஒப்புக்கொள்வதாக சொல்லிக்கொண்டே ஆட்சேபித்திருக்கிறார்களென்றால் இனி ஒப்புக்கொள்ள முடியாத விசயத்தில் இவர்கள் ஆட்சேபணை எப்படி இருக்கும் என்பதை யோசித்து பார்த்தால் விளங்காமல் போகாது.”
திரு மாளவியா அவர்கள் ஆட்சேபணைக்கு சொல்லப்பட்ட காரணமென்றால் “14 வயதுக்கு மேற்பட்டு கல்யாணம் செய்வது நல்லது தான். ஆனாலும் ராஜியை முன்னிட்டு 12 வயதாக இருக்க வேண்டும்” என்றார்.
திரு. மூஞ்சே சொன்ன ஆட்சேபணையை கவனிப்போம். இவர் பார்ப்பன – பார்ப்பன மாணவர்களை மாமிசம் சாப்பிடவேண்டுமென்று சொல்பவர் – வைத்தியர் – வைத்திய சாஸ்திரப்படியும் உடற்கூறு சாஸ்திரப்படியும் பெண்களுக்கு 18 வயதுக்கு முன் விவாகம் செய்வது கெடுதி என்ற அபிப்பிராயம் கொண்டவர். அப்படி இருந்தும் இந்த மசோதா விசயத்தில் 12 வயதுக்கு மேல் கலியாண வயது இருக்கக் கூடாது என்று வாதம் செய்தார்.
திரு கேல்கர் திலகரின் ஸ்தானத்திற்கு வந்தவர். அவரோ மசோதாவின் தத்துவத்தை ஒப்புக்கொள்வதாக சொல்லி ஆனால் வைதீகர்கள் இஸ்டத்திற்கு விரோதமாய் சட்டம் செய்யக்கூடாது என்றனர். இனி சென்னை “தலைவர்களை” பற்றி நாம் சொல்ல வேண்டிய அவசியமிருக்காதென்றே நினைக்கிறோம்…
எனவே நமது நாட்டிற்கென்றோ சமூகத்திற்கென்றோ எவ்வித திருத்தம் கொண்டு வந்தாலும் இந்தக் கூட்டத்தவர்களே அதாவது பார்ப்பனர்களே ஒருபுறம் தேசியத்தின் பெயராலும், மற்றொரு புறம் மதத்தின் பெயராலும், மற்றொரு புறம் சாஸ்திரத்தின் பெயராலும், மற்றொரு புறம் மனசாட்சியின் பெயராலும் தொல்லை விளைவித்து வருவதை வெகுகாலமாக பார்த்து வருகின்றோம்.”
முன்காலத்தில் அதாவது ‘இந்து'(மூட) ராஜாக்கள் அரசாங்கத்திலும் இப்படியே செய்துவிட்டு இப்பொழுது வெள்ளைக்கார (அறிவாளிகள்) அரசாங்கத்திலும் இப்படியே செய்து நமது சமூகத்தை மிதித்துக்கொண்டிருக்க கருதுவதை இனி அரை நிமிஷமும் நம்மால் சகித்துக்கொண்டிருக்க முடியாது என்பதை வெளிப்படையாகவும் உறுதியாகவும் சொல்லித்தீர வேண்டி இருக்கிறது அதற்காகவே சர்க்காருக்கு ஜே! என்றும் பார்ப்பனீயம் வீழ்க! என்றும் சொல்லுகின்றோம்.
– குடியரசு – தலையங்கம்- 29.09.1929
தமிழகத்தை பொறுத்தவரை பார்ப்பனர்கள் இச்சட்டத்தை மூர்க்கமாக எதிர்த்துள்ளார்கள். இந்த மசோதாவிற்கு எதிராக பேசிய அன்றைய பாராளுமன்றத்தின் தமிழக பிரதிநிதியும், பார்ப்பன வருணாசிரம ஆதரவாளருமான ஆச்சாரியார் “பால்ய விவாகமில்லா விட்டால் உண்மையான கற்பு சாத்தியமில்லை”, “பெண்களின் வாழ்க்கை நாசமடைந்துவிடும்”, என்றும் குழந்தைத் திருமணம் செய்துகொள்ளும் ஆண்கள் கைது செய்யப்படும்படி சட்டவிதி இருப்பதை காட்டி “புருஷர்களுக்கு சிறைத்தண்டனை அளித்து விடுவதால் பெண்கள் நடத்தையும் அதிக கேவலமாக மாறிவிடும். பாலிய விவாகம் இருந்தாலொழிய வாழ்க்கையில் உண்மையான ஒழுக்கம் ஏற்படுவது அசாத்தியம்” என்றும் பேசியிருக்கிறார். இதை அன்றைய சுதேசமித்திரன் நாளேடு பாராட்டி செய்தி வெளியிட்டுள்ளதை சுட்டிக்காட்டி குடியரசில் கண்டித்து எழுதியுள்ளார் பெரியார்.
“இது பார்ப்பனர்களுக்காக என்றோ அல்லது அய்யங்கார் கூட்டத்திற்காக என்றோ திருவாளர் ஆச்சாரியார் பேசி இருப்பாரானால் நமக்கு அதைப்பற்றி அவ்வளவு கவலையில்லை. ஆனால் நம்மெல்லோருக்குமே பிரதிநிதி என்கிற முறையில் பேசியிருப்பதால் நாம் அதை கண்டிக்காமல் இருக்க முடியவில்லை…
ஒரு சமயம் தாம் மற்றவர்களைப் பற்றித்தான் சொன்னதாக சொல்வாரானால் தம் சமூகத்துப் பெண்களும் பக்குவமடைந்து விட்டால் அவர்கள் கலியாணமில்லாமல் கற்புடனிருக்க முடியாதென்று கருதி சொன்னவராகவே நினைக்க வேண்டியிருக்கிறது. இதனால் அவர் எப்படியும் பெண்கள் சமூகத்தையே இழிவுபடுத்தியதாகத்தான் கொள்ள வேண்டியிருக்கிறது.
திரு. ஆச்சாரியார் இப்படி சொல்ல நேர்ந்தது பார்ப்பனியத் தன்மையேயொழிய வேறல்ல. ஏனெனில் பார்ப்பன தன்மையான இந்து மதம் என்பதில் பெண்கள் காவலில்லாமல் கற்புடனிருக்க முடியாதென்றே சொல்லப்படுகிறது. உதாரணமாக இந்துக்கள் என்பவர்கள் கல்யாண காலத்தில் கல்யாணப் பெண்களுக்கு கற்புக்கு உதாரணம் காட்டி உறுதிவாங்க வழங்கும் மகா பதிவிரதையென்று சொல்லப்படும் அருந்ததி என்னும் ‘உத்தம ஸ்திரீ’ யின் யோக்கியதையை பார்த்தால் மற்ற பெண்களுடைய நிலைமை தானாகவே விளங்கும். அதாவது ஒரு சத்தியம் சொல்ல வேண்டிய சந்தர்ப்பத்தில் அருந்ததி சொல்வதாக :-
“ஸ்த்ரீகளுக்கு மறைவான இடமும் புருஷர்களின் சந்திப்பும் கிடைக்கும்வரையில் தான் ஸ்திரீகள் பதிவிரதைகளாகாயிருக்க முடியுமாதலால் பெண்களை வெகு ஜாக்கிரதையாக காவல்காக்க வேண்டும்”.
என்பதாக தேவர்களிடத்தில் சொல்லி சத்தியத்தை காப்பாற்றினதாக இந்துமதம்- அதிலும் சைவர்களுக்கு ஆதாரமான மகாசிவபுராணம் சொல்லுகிறது.
இதற்கு ஆதாரமாக மற்றொரு இடத்திலும் அதாவது திரௌபதையும் அருந்ததி சொன்னதைத்தான் சொல்லி சத்தியத்தை நிரூபித்ததாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது:
“ஆண்கள் இல்லாதிருந்தாலொழிய பெண்கள் கற்புடையவர்களாக இருக்க முடியாது” என்பதாக பாரதத்தில் இதைப்பற்றி சொல்லும் போது “வசிஷ்டர் நல்லற மனைவியை அணையா” அதாவது அருந்ததிக் கொப்பானவள் சொன்னாள் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
இந்த கொள்கைகளையுடைய இந்துமத பிரதிநிதியிடம் அதிலும் வருணாசிரம தர்மியிடம் வேறு என்ன எதிர்பார்த்திருக்க முடியும்.
புருஷர்கள் சிறைக்குப் போய்விட்டால் பெண்களின் நடத்தை கேவலமாகி விடுமென்றும் சொல்கிறார். இவை எவ்வளவு தூரம் பெண்களை இழிவுபடுத்துவதாகிறது. இந்துமதமும், வேதமும், புராணமும், வைதீகமும், வருணாசிரமும், பெண்களை அடிமைப்படுத்துவதையும் கேவலப்படுத்துவதையும் அஸ்திவாரமாக கொண்டதால் இம்மாதிரியான வார்த்தை நமது இந்திய சட்டசபை பிரதிநிதிகளிடமிருந்து வருவது ஒரு அதிசயமல்ல.
உதாரணமாக கடவுளுடைய அவதாரமாக சொல்லப்படும் ராமனே கடவுள் பெண்சாதியின் அவதாரமென்று சொல்லப்படும் சீதையின் கற்பில் சநதேகப்பட்டு அவள் நெருப்பில் பொசுக்கப்படவும் பூமியில் புதைக்கப்படவும் செய்ததிலிருந்து ……. திரு ஆச்சாரியார் மற்ற பெண்கள் புருஷனை விட்டு நீங்கியிருந்தால் ஒழுக்கம் கெட்டு விடுவார்கள் என்று சொல்வதில் ஆச்சரியமொன்றுமில்லை.
-குடியரசு – தலையங்கம் -23.09.1928
அன்று பெரியார் உள்ளிட்ட சீர்த்திருத்திருத்தகாரர்கள் குழந்தைத் திருமண தடை சட்டத்திற்கு எதிராக முட்டுக்கட்டை போட்ட அன்றைய இந்துத்துவாவினருடன் போராடிக் கொண்டிருக்கும்போது பார்ப்பன பத்திரிகைகள் குழந்தைத் திருமணத்தை ஆதரித்து எழுதின. சுதேசமித்திரன் பத்திரிகை சத்தியமூர்த்தி, ஆச்சாரியார் போன்றோரின் கருத்துக்களை வரவேற்று எழுதியிருக்கிறது. போராட்ட காலத்தில் மவுண்ட் ரோடு மகா விஷ்ணு “தி இந்து” பத்திரிகை 10 அல்லது 12 வயது மணமகள் தேவை என விளம்பரம் செய்தது.
இதை எதிர்த்துக் கேட்ட சுயமரியாதை இயக்கத்தவர்களுக்கு பின்வருமாறு அயோக்கியத்தனமாக பதிலளித்தது தி இந்து.
“10 அல்லது 12 வயது பெண்களை இப்போது விவாகம் செய்வது என்பதாக காணப்படுவது விவாகச் சடங்கல்ல. அது நிச்சயதார்த்தத்திற்கு ஒப்பானது. பெண்ணையும் மாப்பிள்ளையையும் வீட்டிற்குள் விட்டு கதவு சாத்துகின்றோமே அது தான் விவாகம்.” என்று திமிர்த்தனமாக கூறியது.
சீர்திருத்தக்காரர்கள் இதற்கு என்ன மறுமொழி சொல்லவேண்டும் என்பதையும் கோடிட்டுகாட்டி ஒரு உரையாடல் போல பின்வருமாறு எழுதுகிறார் பெரியார்.
“ஓ இந்துவே 10 வயதிலும் 12 வயதிலும் கல்யாணம் செய்வது போல கண்ணுக்கு தெரிவதெல்லாம் கல்யாணம் அல்ல. அது நிச்சயதார்த்தம் என்று சொல்ல வருவாயானால் அந்த 10,12 வயது பெண்களின் நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட புருஷன் செத்தால் தாலி அறுபட்டதாக பெயர் செய்து மொட்டையடித்து முக்காடு போட்டு மூலையில் உட்கார வைப்பதேன்? அது கூட உங்கள் நிச்சயதார்த்த சடங்கில் சேர்ந்த நிபந்தனையா?” என்று கேட்டார்.
உப்புக்கண்டம் பறிகொடுத்த பார்ப்பனத்தி போல “இந்து” இதற்கு ஒரு மறுமொழி சொல்லாமல் வாயை மூடிக்கொண்டது. மற்றும் பல சமயங்களில் அது நம்மவர்களுக்கு விரோதமாக எவ்வளவோ கொலை பாதகத்திற்கு ஒப்பான கொடுமைகளைச் செய்திருக்கின்றது. செய்கின்றது. செய்யக் காத்திருக்கிறது.”
-குடியரசு தலையங்கம் 11.03.1928
இன்று ஆர்.எஸ்.எஸ் அம்பிகளால் விதந்தோதப்படும் பாலகங்காதர திலகர், முன்ஷி, மாளவியா போன்ற பார்ப்பன இந்துமதவாதிகளின் உண்மையான முகம் இதுதான்.
குழந்தைகளுடன் உடலுறவில் ஈடுபடக் கூடாது, 14 வயதுக்குள் திருமணம் செய்யக்கூடாது போன்ற இன்று நாம் சாதாரணமாக நினைக்கும் விசயங்களுக்கே கூட திலகர் போன்ற பார்ப்பன பயங்கரவாதிகளுக்கு எதிராக கடுமையான போராட்டம் தேவைப்பட்டிருக்கிறது. பார்ப்பன பிற்போக்குத்தனங்களுக்கு எதிராக சளைக்காமல் போராடியிருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.
இன்று பார்ப்பன பாசிசம் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருக்கும் நிலையில் திலகரின் வாரிசுகள் தெருவெங்கும் விநாயகரை வைத்து பார்ப்பனீயத்திற்கு உயிரூட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
இவர்களை முறியடித்து பிற்போக்குத்தனத்தின் ஆணிவேராக இருக்கும் பார்ப்பனியத்தை வீழ்த்தாமல் இந்த மண்ணில் குழந்தைத் திருமணமல்ல, எந்த பிற்போக்குத் தனத்தையும் வீழ்த்த முடியாது.
//இந்த புள்ளிவிவரத்தை நோக்கும் போது பார்ப்பனியத்திற்கு பல்லக்கு தூக்கும் வடஇந்திய இந்தி மாநிலங்கள் பிற்போக்கு பழக்கங்களுக்கு பலியாகி வீழ்ந்து கிடப்பது தெரிகிறது. அதே சமயம் சுயமரியாதை இயக்கம் போன்ற பார்ப்பன எதிர்ப்பு பாரம்பரியம் கொண்ட பழைய சென்னை மாகாண மாநிலங்கள் ஒப்பீட்டளவில் முன்னேறியுள்ளன என்பதையும் இது காட்டுகிறது.//
குழந்தை உரிமைக பாதுகாப்புக்கான தேசிய கமிசன், மற்றும் எங் லைவ்ஸ் இந்தியா என்ற அமைப்பும் நடத்திய சமீபத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. 2011-ம் ஆண்டின் அரசின் சென்சஸ் புள்ளிவிவரத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஆய்வு மேற்க்கொள்ளப்பட்டுள்ளது.
தேசிய அளவில் ஆண் குழந்தைகளில் 1.32%, பெண் குழந்தைகளில் 1.9% பேர்களுக்கு குழந்தை திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.இருப்பதிலேயே மோசமான மாநிலமாக இருப்பது இராஜஸ்தான் தான் என்கிறது இவ்வாய்வு. பெண் குழந்தைகளில் 10-17 வயது குழந்தைகளில் 8.3% குழந்தைகளும், 10-20 வயதுடைய ஆண் குழந்தைகளில் 8.6% குழந்தைகளும் குழந்தை திருமணத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
குழந்தை திருமணங்கள் அதிகம் நடைபெறும் முதல் 20 மாவட்டங்கள் இராஜஸ்தான், குஜராத், மத்தியப்பிரதேசம், உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருப்பது தற்செயலானது அல்ல. இவ்வாய்வில் குழந்தை திருமணங்கள் மிகமிக குறைவாக நடைபெறும் முன்னேறிய மாநிலங்களாக தமிழ்நாடு உள்ளிட்ட தென் இந்திய மாநிலங்கள், காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. தொழில் துறையில் முன்னேறிய மாநிலமாக அறியப்படும் மகாராஷ்டிர மாநிலத்தில் பந்தாரா மாவட்டத்தில் 2001-ஐ விட ஐந்து மடங்கு குழந்தை திருமணம் அதிகரித்துள்ளது.
குழந்தை திருமணங்களில் முதல் 70 மாவட்டங்கள் எடுத்துக்கொண்டால் ஆந்திராவில் சில மாவட்டங்கள் வருகின்றன. ஆனால் தமிழகம் அப்பட்டியலில் இல்லை. மாட்டு மூத்திரத்தை குடிக்கும் மாநிலங்களைவிட மாட்டுக்கறி சாப்பிடும் தமிழகம்,கேரளா போன்ற மாநிலங்கள் குழந்தை திருமணங்களை தடுப்பதில் மிகவும் முன்னேறி இருப்பதை இப்புள்ளிவிவரம் காட்டுகிறது.
குழந்தை திருமணங்கள் அதிகம் நடைபெறும் மாநிலங்களை பாஜக ஆள்வதும், அங்கே செல்வாக்கோடு இருப்பதும் தற்செயலானதல்ல. ஆதிக்க சாதிவெறி, அகமணமுறை இறுக்கம், லவ்ஜிகாத் பெயரில் முசுலீம் மக்களை அச்சுறுத்துவது என பார்ப்பனியம் இங்கே கோலேச்சுகிறது.
தமிழகத்தில் ஏன் குழந்தை திருமணம் குறைவு? இதற்கான விடையை பெரியாரின் குடியரசு தொகுப்புகளின் வாயிலாக அறியமுடிகிறது.
குழந்தை திருமணத்தை ஒழிப்பது இந்துக்களின் மனதை புண்படுத்துகிறது என்று காரணம் கூறி ஆங்கில திருமண வயது சட்டத்தை எதிர்த்த திலகர், மாளவியா, மூஞ்சே உள்ளிட்ட அந்த கால ஆர்.எஸ்.எஸ் முன்னோர்களை எதிர்த்து பெரியார் நடத்திய போராட்டத்தை பெரியாரின் மொழியிலேயே வினவில் வெளியிட்டிருந்தோம். அதை இந்த இணைப்பில் படிக்கலாம். (இந்த இணைப்பில் கண்ட வரலாற்றுப் பின்னணி கொண்டதை மட்டுமே காட்டியுள்ளேன்...)
செய்தி ஆதாரம்:
முன் அறிவிப்புக்கு முந்தைய அறிவிப்பு: இப்போதைய டிரெண்டுக்குக் காமெடியாக இருந்தால்தான் பப்ளிக் எதையுமே 'என்ன... ஏது..?’ என்று விசாரிக்கிறார்கள்!
முன் அறிவிப்பு: காமெடியாக இருந்தாலும் இந்தக் கட்டுரை பல பேச்சுலர்களின் கண்ணீர்ப் புலம்பல்கள் மற்றும் தண்ணீர் சலம்பல்களின் பின்னணியில் அலசி ஆராய்ந்து எழுதப்பட்டது. கட்டுரையில் வரும் சம்பவங்கள் அனைத்தும் உண்மை!
''உன்னைக் காணோம்னதும் பதறிப்போய்ட்டேம்மா. நீ வழக் கமா வர்ற அஞ்சரை மணி பஸ்ஸை மிஸ் பண்ணிட்டேனு தகவல் தெரியாம, ஒவ்வொரு நிமிஷமும் செத்துச் செத்துப் பிழைச்சேம்மா. இப்போ உன்னைப் பார்க்கவும்தான் போன உயிர் திரும்ப வந்த மாதிரி இருக்கு!'' - இது தழுதழுப்பான 80’ஸ் சினிமா.
''நாம என்ன பொம்பளைப் பிள்ளையாடி பெத்துவெச்சிருக்கோம்... ஆம்பளைப் பிள்ளையைப் பெத்துவெச்சிருக்கோம். வயித்துல நெருப்பைக் கட்டிட்டு அலைஞ்சுட்டு இருக்கேன்!'' - இது 2013 தமிழ் சினிமா.
தமிழ் சினிமாவே மாறும்போது, தற்காலத் தமிழகத்தின் சிச்சுவேஷன் மட்டும் மாறாதா என்ன? 'சி.பி.ஐ. எங்கே..? தேடச் சொல்லு கொஞ்சம்...’ கணக்காகக் கல்யாணத்துக்குப் பெண் தேடி அலைந்துகொண்டிருக்கிறார்கள் தமிழகப் பேச்சுலர்கள். காரணம், திருமணத்துக்குப் பெண் கிடைப்பது இப்போது 'அரிதிலும் அரிதாகி’விட்டது. 'அது நம்மளை நோக்கித்தான் வருது... சீக்கிரம் எல்லாரும் ஒளிஞ்சுக்கங்க’ என்று டைனோசர் டப்பிங் பட அறிவிப்புபோல, எதிர்காலத் தமிழ் பேச்சுலர்களை அலர்ட் செய்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம்!
'ஏன், என்ன பிராப்ளம்?’ என்று கேட்டால், நீங்கள் 25 வயதுக்கு உட்பட்ட சிங்கிள் பேச்சுலராகவோ அல்லது 35 வயதுக்கு மேற்பட்ட அங்கிள் பேச்சுலராகவோ இருப்பீர்கள். பிரச்னையே அந்த 25-35க்குள்தான். கடந்த 10 ஆண்டுகளில் புற்றீசல்கள்போலப் பொறியியல் கல்லூரிகள் அதிகரித்ததன் மிக மோசமான பக்கவிளைவு, தமிழகத்தில் மாப்பிள்ளை வரன்களின் குறைந்தபட்சத் தகுதியே 'பி.இ.’ என்றாகிவிட்டது. அப்போ கலைக் கல்லூரி மாணவர்கள்? 'கற்றது தமிழ்’ ஜீவாவின் கதைதான்! (தமிழ் சினிமாவில் தகுதியும் அழகும் நிறைந்த அமெரிக்க மாப்பிள்ளைகளுக்கு ஹீரோயின் கைகூடாமல் போவதற்கு கலைக் கல்லூரியில் படித்த இயக்குநர்களின் வன்மமும் ஒரு காரணம்!)
முந்தின பாராவைக் கவனமாக வாசிக்கவும்... அங்கு குறிப்பிடப்பட்டிருப்பது 'குறைந்தபட்சத் தகுதி’! அதையும் தாண்டிப் பையனுக்கு அவனுடைய பந்துமித்ருக்களும் இன்னும் நிறைய நிபந்தனைகளைப் பூர்த்திசெய்ய வேண்டும். ஒரு மாப்பிள் ளையின் பயோ-டேட்டாவையோ ஜாதகத் தையோ சுற்றுக்குவிட்டதுமே, பெண் வீட்டார் பொதுவாக விசாரிக்கும் சில கேள்விகள் இவை...
'பையனுக்கு எம்.என்.சி-யில் வேலையா?’
'வெளிநாடு செல்லும் வாய்ப்பு இருக்கிறதா?’
'பையனுக்குச் சொந்தமாக வீடு இருக்கிறதா... மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு?’
'மாப்பிள்ளையின் அப்பாவுக்குக் கடன் இருக்கிறதா?’
'ஒருவேளை கடன் இருந்தால், அந்தக் கடனுக்கு யார் ஜவாப்தாரி?’
'பையனுக்கு எத்தனை சகோதரிகள்? அவர்களுக்குத் திருமணம் ஆகிவிட்டதா? அவர்கள் எங்கு தங்கியிருக்கிறார்கள்?’ (இதன் உட்பொருள்... அடிக்கடி அக்கா, தங்கைகள் வீட்டுக்கு வர போக இருப்பார்களா என்று தெரிந்துகொள்ள!)
இதுவும் இன்னபிறவுமாக ஏகப்பட்ட கேள்விகள், விசாரணைகள், சந்தேகங்கள், உண்மை அறியும் குழுக்கள் என்று படலம் படலமாக விரியும் அந்த பரஸ்பர அறிமுகம்!
என் அப்பா, எட்டாம் வகுப்பு வரையே படித்தவர். சென்னை என்றுகூடச் சொல்லத் தெரியாமல் இன்னமும், 'என் பையன் மெட்ராஸ்ல இருக்கான்’ என்று அப்பாவியாகச் சொல்பவர். விடுமுறையில் வீட்டுக்குச் சென்றுவிட்டு மீண்டும் சென்னைக்குக் கிளம்பும்போது, 'ஊருக்குப் போயிட்டு தாக்கல் அனுப்புடா!’ என்று செல்போன் பயன்பாடுபற்றி பரிச்சயம் இல்லாதவர். ஆனால் அவரே, 'அவனுங்கோ பையன் ஒண்ணு யூ.எஸ்ல இருக்கணும்... இல்லை யூ.கே-ல இருக்கணும்னு கேக்குறாங்கப்பா!’ என்று சலிப்பான குரலில் அலுத்துக்கொள்கிறார். சென்னையை இன்னமும் மெட்ராஸ் என்று மட்டுமே சொல்லத் தெரிந்த அந்தக் கிராமத்து மனிதருக்கு அமெரிக்காவை யூ.எஸ். என்றும், இங்கிலாந்தை யூ.கே. என்றும் சொல்லக் கற்றுக் கொள்ளவைத்திருக்கிறது எனக்கான பெண் பார்க்கும் படலம்!
என் நண்பன், சேல்ஸ் ரெப். ஏழு கழுதை வயதைத் தாண்டிவிட்ட அவனுக்கும் பெண் பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால், அந்தப் படலம் உண்டாக்கிய மன உளைச்சலில் அன்று ஃபுல் சார்ஜ் ஏற்றிக்கொண்டு என்னிடம் புலம்பித் தள்ளிவிட்டான். ''ஏன் மச்சான்... எல்லாப் பொண் ணுங்களும் ஹீரோவையே கல்யாணம் பண்ணிக்க நினைச்சா எப்படி? அப்போ இந்த கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் எல்லாம் என்னதான் பண்றது? வேலைக்கு ஆள் கிடைக்கலைன்னா, அஸ்ஸாம், பீகார், மேற்கு வங்காளத் தில் இருந்து ஆளுங்களைப் பிடிச்சுட்டு வரலாம். கல்யாணத்துக்குமா அப்படிலாம் புள்ளை புடிக்க முடியும்?'' என்றான். ஒரு நாள் போதையில் வந்து விழுந்த வார்த்தை கள் அல்ல அவை. இதுவே 30 வருடங் களுக்கு முன் என்றால், விசு போன்ற இயக்குநர்களிடம் போய் எங்கள்வேதனை யைக் கொட்டலாம். இப்போது யாரிடம் இந்த மன பாரத்தை இறக்கிவைப்பது?
இப்போதைய டிரெண்ட்படி பெண் மனது ஆழமானது. ஆனால், ஆண்கள் மனது காயமானது. 'என் பையனுக்கு கல்யாணம் தள்ளிப்போய்ட்டே இருக்கு சாமி’ என்று ஆன்லைனில் அப்பாயின்மென்ட் பெற்று அந்த கார்ப்பரேட் சாமியாரைச் சந்தித்தார் இன்னொரு நண்ப னின் அம்மா. 'பையனுக்கு தோஷம். அதைத் தீர்க்கணும்னா... ஸ்டார்ட் மியூஸிக்!’ என்று அவர் ரூட் போட, இப்போது எப்போது அழைத்தாலும் அந்த நண்பன் காள ஹஸ்தி, திருநாகேஸ்வரம், திருச்செந்தூர், திருமோகூர் என்று தோஷ நிவர்த்தி ஸ்பாட்களில் இருந்துதான் பேசுகிறான். குழந்தைகளைக் கையிலும் தோளிலுமாகப் பிடித்துக்கொண்டு ஒரு தந்தையாகப் பெருமிதமாக நடக்க வேண்டிய வயதில், கையில் நெய் விளக்கைப் பிடித்துக்கொண்டு வெட்கமும் கூச்சமு மாகக் கோயிலைச் சுற்றிச் சுற்றி வருகிறான் அந்த நண்பன்.
அட, மற்றவர்களை விடுங்கள். இது எனது கதை. 'இனி யும் அப்பாவுக்கு வேலை வைக்க வேண்டாம்!’ என்று முடிவெடுத்து, 'ஆபரேஷன் மேரேஜ்’ என்று எனக்கு நானே பெண் பார்க்கும் படலத்தில் இறங்கினேன். அதாவது, எனது பழைய தோழிகளில் யாராவது ஒருவரை மனைவி ஆக்கிக்கொள்வதுதான் 'ஆபரேஷன் மேரேஜ்’. ஃபேஸ்புக்கில் நன்றாக 'சாட்’டிக்கொண்டிருந்த தோழி ஒருத்திக்கு, 'நான் உன்னைக் காதலிக்கிறேன்’ என்று அனுப்ப, 'எதுவா இருந்தாலும் தருண்கிட்ட பேசு. அவர்தான் என் வுட்பீ’ என்று ஃபேஸ்புக் லிங்க்கோடு பதில் வந்தது. முதல் முயற்சியே முழு பல்பு.
அடுத்த தோழியிடம், 'உங்களைக் கல்யாணம் பண்ணிக்கலாம்னு நினைக்கிறேன். உங்க விருப்பம் என்ன?’ என்றேன் ஜென்டிலாக. பதில் இப்படி வந்தது... 'நான் ஏற்கெனவே ரெண்டு பேரை நம்பி ஏமாந்துட்டேன். இப்போ உடனே மூணாவது காதலுக்கு நான் மனசளவில் ரெடியா இல்லை. வெயிட் பண்ணு... பார்ப்போம்!’ அன்றே அவளை அன்ஃப்ரெண்ட் பண்ணிவிட்டு, 'இதுதான் கடைசி!’ என்று முடிவெடுத்து, பள்ளிக் காலத் தோழியிடம் புரபோஸ் செய்தேன். 'ஓ.கே... நான் எனக்கு வரப்போறவன் இப்படிலாம் இருக்கணும்னு எதிர்பார்க் கிறேன்’ என்று 'கண்டிஷன்ஸ் அப்ளைடு’ போட்டு அவள் வாசித்த பட்டியல், கல்யாண விருந்துக்கான மளிகைக் கடை பட்டியலைவிட நீளம். 'ஐ.டி. கம்பெனியில் வேலை. வருட வருமானம் குறைந்தபட்சம் ஏழு லட்சம் ரூபாய். வங்கி இருப்பு குறைந்தது 30 லட்ச ரூபாய்... ஒரே சாதி. கார், ஹோம் அவசியம். ஹோம் தியேட்டர் நிச்சயம். ஆறடி உயரம், சுருள் முடி’... இப்படி இன்னும் நீண்டுகொண்டே சென்றது. 'ஸாரி சிஸ்டர்’ என்று எகிறி ஓடினேன்.
இன்னொரு நண்பன் வேலைக்குக்கூட அத்தனை நேர்முகத் தேர்வுகளை எதிர்கொண்டிருக்க மாட்டான். பெண்ணின் அண்ணனும், அவனுடைய 'விவரமான’ நண்பர்களும் என் நண்பனை 'இன்டர்வியூ’ என்ற பெயரில் புரட்டிப் பரோட்டா போட்டுவிட்டார்கள். முதலில் மெயில் தேர்வு. அடுத்தது அலைபேசித் தேர்வு. அப்புறம் நேர்முகத் தேர்வு. மூன்றிலும் மீண்டும் மீண்டும் ஒரே கேள்விகள். கடைசியாக நேர்முகத் தேர்வு முடிந்தவுடன், 'நான் நேரா போய் ஹெச்.ஆரைப் பார்க்கணுமா?’ என்று நண்பன் சீரியஸாகக் கேட்க, கொஞ்ச நேரம் புரியாமல் விழித்திருக்கிறார்கள் அண்ணன் அண்ட் கோ. அந்த அளவுக்கு நொந்து வெந்து விட்டான் நண்பன்.
''நண்பா... எல்லாரும் மாப்பிள்ளை இன்ஃபோசிஸ்ல வேலை பார்க்கணும்னு நினைக்கிறாங் களே தவிர, இன்னொரு இன்ஃபோசிஸை உருவாக்கப் போற திறமை இருக்கிறவனை மதிக்க மாட்டேங்கிறாங்க. சமூகத்துல சம்திங் ஃபண்டமென்டலி ராங்... மாத்தணும்... எல்லாத்தையும் மாத்தணும்!'' என்று பெண் பார்க்கும் படலங்களில் தோற்று ஒருவித யோகநிலைக்குப் போய்விட்ட நண்பன் சொன்னான்.
நான் பெருமூச்சுவிட்டபடி, என் மேட்ரிமோனி பக்கத்தை ரெஃப்ரெஷ் செய்தேன்!
''வரதட்சணை ஒழியும்!''
முருகவேல் ஜானகிராமன், பாரத் மேட்ரிமோனி.
''பெண்களிடம் கேட்டால், 'ஆண்களின் எதிர்பார்ப்பு அதிகமாகிவிட்டது. பெண் அழகாக இருக்க வேண்டும், படித்திருக்க வேண்டும். வீட்டைப் பார்த்துக்கொள்ள வேண்டும். வேலைக்கும் போக வேண்டும் என்றெல்லாம் கண்டிஷன் போடுகிறார்கள்’ என்கிறார்கள். ஆண்களிடம் கேட்டால் இதே கதையைக் கொஞ்சம் மாற்றிச் சொல்கிறார்கள். முக்கியமான ஒரு விஷயம்... பொதுவாகவே, ஆண்களுக்கான பெண்களின் விகிதாசாரம் குறைஞ்சுட்டே வருது. எதிர்காலத்தில் இது இன்னும் அதிகரித்து ஒரு பெண்ணிடமோ அல்லது பெண்ணின் பெற்றோரிடமோதான் ஒரு திருமணத்தை நிச்சயிக்கும் அதிகாரம் இருக்கும். சமீபமாகப் பெண்கள் வரதட்சணை கொடுக்க விரும்பவில்லை என்பதை அழுத்தமாக, உரிமையாக சொல்லத் தொடங்கி இருக்கிறார் கள். அதை ஏற்றுக்கொள்ளும் போக்கும் ஆண்களிடையே அதிகரித்திருக்கிறது!''
The moral of the story: what goes around comes aroundபெண்களிடம் வரதட்சிணை கொடுமைகள் >>> அதன் விளைவாக பெண் குழந்தைகளைத் தவிர்க்க நினைத்தது ....கருவில் பெண்குழந்தை அழிப்பு, பெண் சிசுக் கொலை, கள்ளிப்பால் என்று முடிவெடுத்த பண்பாட்டின் விளைவு.