கடலின் நீலத்தில்
சூரிய மஞ்சள் மூழ்கிய மாலையில்
நீண்ட நாளின் விளிம்பிலேறி
இரவுக்குள் குதித்தேன்
பொறுக்கவியலாத
ஆக்கிரமிப்பின் உச்சத்தில்
காற்றின் கரங்களைப் பற்றி
சில விளக்குகளைக் கவிழ்த்தேன்
முழு இரவிலும் என் தனிமையை
எட்டிப்பார்க்கும் தெருவிளக்குகள்
தலைகுனிந்தே நிற்கின்றன
அத்தனையொன்றும்
கோரமானவன் அல்ல நான்
வெளிச்சங்களைக் கொத்திவந்த
மின்மினிப்பூச்சிகளை உள்ளங்கையில்
கதகதப்பாய்ப் போர்த்தினேன்
உயிரை உருக்கி எரியும்
மெழுகுவர்த்தியின் வலி அறிந்தே
கருஞ்சிறகுகள் போர்த்தாதிருந்தேன்
கடைசித்துளியும் கரைந்து
எனக்கு வழி திறந்தன அவை
சூரிய விளக்கின் வெளிச்சத்தில்
புராதனம் பேசி எனை இகழ்ந்தவர்கள்
தமது இரகசியங்களுக்கென
கருப்புத் திரைகளில் ஒளிந்தார்கள்
எனது பின்புறத்தில் விளைகிறது
அவர்களுக்கான தனிமை
கோகுலரே
குனிந்தே நின்ற தெருவிளக்குகள்
தங்கள் ஓரக்கண்ணால்
தங்கள் அழகுடலை சீண்டுவது
அறிந்தும் அறியாதது போல் கேட்பதேனோ?
தங்கள் உடையாளின்
ஊடல் தவிர்க்கும் நோக்கோ?
அன்புடன்
.கவி.
கோகுலரே
குனிந்தே நின்ற தெருவிளக்குகள்
தங்கள் ஓரக்கண்ணால்
தங்கள் அழகுடலை சீண்டுவது
அறிந்தும் அறியாதது போல் கேட்பதேனோ?
தங்கள் உடையாளின்
ஊடல் தவிர்க்கும் நோக்கோ?அன்புடன்
.கவி.
2009/4/7 Gokulan <gokula...@gmail.com>
முழு இரவிலும் என் தனிமையை
எட்டிப்பார்க்கும் தெருவிளக்குகள்
தலைகுனிந்தே நிற்கின்றனஅத்தனையொன்றும்
கோரமானவன் அல்ல நான்