
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
. அந்த வகையில் சென்ற 2010ம் ஆண்டு இறுதியில் மலேசியா சென்ற போது எங்கு செல்லலாம் என யோசித்த போது மனதில் தோன்றியது ஒரு எண்ணம்...!தொடரும்....


1.அறிமுகம்கலாச்சாரக் கலவையும் அழகும் புதுமையும், நாகரிகமும் இயற்கை எழிலும், தூய்மையும் ஒருங்கே அமைந்த ஒரு நாடு மலேசியா. எனது இளமை காலம் தொட்டு சுதந்திர மலேசியாவின் படிப்படியான வளர்ச்சியை பார்த்தும் அனுபவித்தும் வருகின்றேன். எண்ணற்ற நினைவுகள் அவ்வப்போது மனதில் ஞாபகமாக நிழலாடும் போது அந்தச் சில கணங்கள் நேரத்தில் பின்னோக்கிச் சென்று அக்கணங்கள் அந்த ஞாபங்களில் வாழ்ந்து பின்னர் அவை முடிந்தவை என் தெளிவடைந்து வியந்து நான் நிற்பதுண்டு. மலேசியாவில் அதிலும் குறிப்பாக பினாங்கில் எனது அங்கிருந்த காலகட்டத்திலேயே நான் நினைவு தெரிந்து பார்த்து அனுபவித்த பல விஷயங்கள் மனதில் ஆழத்தில் பதிந்து கிடக்கின்றன.
--
மலேசிய பூர்வ குடிகள் பற்றி பகிர்ந்து கொள்ள பல சுவையான தகவல்கள் இருக்கின்றன. வாய்ப்பு அமையும் போது அம்மக்கள் பற்றிய எனக்குத் தெரிந்த சில தகவல்களை மேலும் பகிர்ந்து கொள்கின்றேன்.தொடரும்....அன்புடன்சுபா
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil




நிறைய பூர்வ குடிகள் இருக்கின்றனர் திருமதி.கீதா.சில அனுபவங்களை இந்த தொடரில் அவ்வப்போது எழுதுகிறேன்.உங்களுக்கு இந்த செய்தியில் ஆர்வம் இருப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.மலேசியாவில் காடுகள் பல மேம்பாட்டு காரணங்களுக்காக அழிக்கபடுவதும் கூட நடக்கின்றது. ஆனாலும் கூட இன்னமும் வனங்கள் பாதுகாக்கப்படுகின்றன. இதில் சுற்றுச் சூழல்/சமூக நல அமைப்புக்களின் பங்கு மிக மிக முக்கியமானது.-சுபா
--


2. மக்கள்பினாங்கு மானிலம் ஏராளமான ஞாபங்களை எனக்கு தந்த ஒரு ஊர். எனது மலேசிய வாழ்க்கையின் பெரும் பகுதி இந்த மானிலத்தில் தான். எனது முந்தைய சில பதிவுகளில் பினாங்கில் எனது சில நினைவுகளை நான் பதிந்திருக்கின்றேன். பினாங்கு மானிலம் மலேசியாவின் தலைநகரமான கோலாலம்பூரிலிருந்து ஏறக்குறைய 450 கிமீ வடக்கில் அமைந்துள்ளது. மலேசியாவைப் பற்றி கேட்டால் முதலில் பலருக்கும் ஞாபகம் வருவது கோலாலம்பூர் தான். நாட்டின் தலைநகரம் அது. ஒட்டு மொத்த மலேசியாவுக்கே சிறப்பை கூட்டும் பல அம்சங்கள் இங்கே உள்ளன. பெரிய கேளிக்கை விடுதிகள், கோயில்கள், மசூதிகள், புத்தர் ஆலயங்கள், விற்பனைக் கூடங்கள் என கண்ணைக் கவரும் பல விஷயங்களுடன் வனங்களும் பாதுகாக்கப்படும் இயற்கையான காடுகளும் கூட அமைந்துள்ள ஒரு பகுதியாக விளங்குகின்றது.






3. சீன சமூகம்
இதே போல இக்காலகட்டத்தில் தென்னிந்தியாலிருந்து வர்த்தகம் புரிய மலாயா அதிலும் குறிப்பாக மலாக்கா வந்தவர்களும் தமது இயல்பு மாறாமல் இன்றளவும் மலாக்காவில் வாழ்கின்றனர். இந்த மக்கள் மலாக்கா செட்டிகள் என அழைக்கப்படுகின்றனர். இவர்களை பற்றி மேலும் தெரிந்து கொள்வதற்கு முன்னர் எனது பயண திட்டத்தைப் பற்றியும் கொஞ்சம் பகிர்ந்து கொள்கின்றேனே..தொடரும்...அன்புடன்சுபா
All of the South East Asia (including Maldives, Malayasia ) was Hindu-Buddhist in the ancient times.They converted to Islam at only a later stage.
இதில் புரிய என்ன உள்ளது? :-))
நா.க
மலாக்கா பற்றிய விக்கிப்பீடியா கட்டுரையில் விபரம் உள்ளது:
> 2011/4/9 Geetha Sambasivam <geetha...@gmail.com>
> > மலாக்காவை நிறுவியர் பெயர் பரமேஸ்வரா என இந்துப் பெயராக உள்ளது. ஆனால் பரம்பரையில் ஆறாவது மன்சூர்ஷா என்ற சுல்தான்???????? புரியலையே???
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE
அப்படியே பரமேசுவரா குறித்த கட்டுரையையும் பாருங்கள். மலாக்கா முத்துகிருஷ்ணன் அழகாக விபரமாக எழுதியிருக்கிறார்:
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE
பேராக் குறித்த கட்டுரை:
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D
அன்புடன்
சிறீதரன்
//நாம் நவராத்திரி கொண்டாடும் அதே வேளையில் சீனர்கள் 9 நாட்களில் தங்களின் ஒன்பது கடவுளர்களை வழிபடும் ஒரு பண்டிகையும் நடைபெறும்//
ஆச்சரியமான தகவல். ஒன்பது கடவுளரும் எப்படி அழைக்கப் படுகின்றனர்?? விரத முறைகளும் நம்மைப் போல் ஒத்திருக்குமா??
மலாக்காவை நிறுவியர் பெயர் பரமேஸ்வரா என இந்துப் பெயராக உள்ளது. ஆனால் பரம்பரையில் ஆறாவது மன்சூர்ஷா என்ற சுல்தான்???????? புரியலையே???
2011/4/9 Subashini Tremmel <ksuba...@gmail.com>3. சீன சமூகம்இதே போல இக்காலகட்டத்தில் தென்னிந்தியாலிருந்து வர்த்தகம் புரிய மலாயா அதிலும் குறிப்பாக மலாக்கா வந்தவர்களும் தமது இயல்பு மாறாமல் இன்றளவும் மலாக்காவில் வாழ்கின்றனர். இந்த மக்கள் மலாக்கா செட்டிகள் என அழைக்கப்படுகின்றனர். இவர்களை பற்றி மேலும் தெரிந்து கொள்வதற்கு முன்னர் எனது பயண திட்டத்தைப் பற்றியும் கொஞ்சம் பகிர்ந்து கொள்கின்றேனே..தொடரும்...அன்புடன்சுபா--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
எனது இளம் வயதில் நீளமான அலகு குத்திக் கொண்டு இவ்வகையில் இந்த விழா நடைபெறுவதை நான் பார்த்ததில்லை. பல மாற்றங்கள் படிப்படியாக சேர்ந்திருகின்றன. ஹிந்துக்கள் கொண்டாடும் தைப்பூச விழாவில் உள்ளது போனற காவடி எடுத்தலின் தாக்கம் தற்சமயம் இந்த விழாவில் ஒரு அங்கமாகியிருப்பது தெரிகின்றது. 1998க்குப் பிறகு இந்த விழாவை நான் நேரில் பார்க்க வாய்ப்பு அமையவில்லை.
நன்றி சுபா. இவ்வளவு விரைவில் வேண்டிய தகவல்களையும் அதற்கான சுட்டிகளையும் கொடுத்ததற்கு மிக்க நன்றி. சுட்டிகளையும் பார்க்கிறேன். ஸ்ரீவிஜய சாம்ராஜ்யத்துப்பரம்பரை மன்னனா பரமேஸ்வரன்?? நன்றி. ஆகத் தமிழ் மன்னன் தான் மலாக்காவை உருவாக்கி இருக்கிறான், இல்லையா?




3. சீன சமூகம்மலேசியா ஒரு பண்பாட்டுக் கலவையான் ஒரு நாடு. இங்கு ரமடான் பண்டிகை எவ்வாறு சிறப்பாக கொண்டாடப் படுகின்றதோ அதேபோல நம்மவர்களின் தீபாவளி தைப்பூசப் பண்டிகையும் ஒரு நாள் அரசாங்க விடுமுறையுடன் கொண்டாடப்படுகின்றது. சீனப் புத்தாண்டும் புத்தரின் பிறந்த தினமான விசாக தினமும், கிற்ஸ்மஸ் பண்டிகையும் அரசாங்க விடுமுறையுடன் பாகு பாடின்றி இங்கே கொண்டாடப்படுகின்றன.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil




4. பெர்லிஸுக்குப் பயணம்மலேசியாவில் 13 மானிலங்கள் உள்ளன என்று அறிமுகப் பகுதியில் குறிப்பிட்டிருந்தேன். கிழக்கு மலேசியா (போர்னியோவில்) மலேசியாவின் மானிலங்களான சபா சரவாக் இரண்டும் உள்ளன. இதைத் தவிர்த்து புருணை என்னும் தனி ஒரு நாடும் தெற்கு போர்னியோவின் முழுமையும் ஆக நான்கு நாடுகளைக் கொண்ட ஒரு தீவு இந்த போர்னியோ தீவு. போர்னியோ தீவின் 73% பகுதி இந்தோனிசியாவைச் சேர்ந்தது. இப்பகுதி களிமந்தான் எனப் பெயர் கொண்டது. இத்தீவு உலகின் மூன்றாவது பெரிய தீவு. களிமந்தான் (இந்தோனிசியப் பகுதி) புருணை, மலேசியாவின் இந்த இரண்டு மானிலங்கள் ஆகிய இவற்றிற்கு அதிகாரப்பூர்வ மொழி மலாய் மொழியாகும். ஆயினும் பழங்குடி மக்களின் பல்வேறு மொழிகள் இங்கு இன்றளவும் வழக்கில் உள்ளன என்பது குறிப்பிட வேண்டிய ஒரு விஷயம். போர்னியோ. சபா சரவாக் மானிலங்களைப் பற்றி பின்னர் மேலும் பார்க்கலாம். இப்போது எனது பயண திட்டத்திற்கு மீண்டும் வருகின்றேன்.
//இந்தப் பச்சை மிளகாயை மட்டும் எடுத்து தனியாக அறைந்து அதை மிளகாய் விழுதாக பயன்படுத்தி அதிக தேங்காய்ப்பால் அத்துடன் "அசாம் கெப்பிங்" (Asam keping) ( இதற்கு தமிழ் பதம் தெரியவில்லை) சேர்த்து குழம்பு வகைகளை சமைக்கின்றனர். //



--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
அன்பு சுபா,மலேசியா பற்றிய செய்திகள் மிக விபரமாக சுவாரஸ்யமாக எழுதிவருகிறீர்கள்!பொருத்தமான புகைப்படங்களும் அழகு!
பாடாங் பெசார் பற்றி படித்ததும் பழைய நினைவுகள்! நாங்கள் கப்பளாபத்தாஸில்இருக்கும்பொழுது நான்கு குடும்பங்கள் ஒன்று சேர்ந்து பாடாங் பெசார் சென்றுவந்தோம்.அது பொழுது நான் வாங்கியது வித விதமான பயரெக்ஸ்( Pyrex kitchen cookware)தான்!மலேசியாவில் உள்ளதை விட பாதி விலைதான்!(தரமானதும்கூட)//கடைகளின் தரம், விற்கப்படும் பொருட்களின் தரம் என பார்க்கும் போது மலேசியாவில் உள்ளூரில் தயாரிக்கப்படும் பொருட்களின் தரத்துடன் ஒப்பிட முடியாத நிலையில் உள்ளது உண்மை. //ஏன் இப்பொழுது அப்படி எதுவும் இல்லையா!?
//இவர்கள் உணவில் பயன்படுத்தும் சிறிய மிளகாய் சில்லி பாடி (cili padi) வித்தியாசமான சுவையைத் தரக்கூடிய ஒன்று.இவை மிகச் சிறியதாக ஏறக்குறைய மூன்றிலிருந்து ஐந்து செண்டிமீட்டர் அளவில் பச்சை, சிவப்பு இரண்டு நிறங்களிலும் கிடைக்கும். //சில்லி பாடி இந்தியாவில் ஊசிமிளகாய்! ஊரில்(இங்கும் ஓரிரு இடங்களில் கிடைக்கின்றது) வெள்ளை நிறத்திலும் கிடைக்கும்.
//நமது சமையலில் எப்படி மல்லி தழைகளைப் பயன்படுத்துகின்றோமோ அது போல இவர்கள் பயன்படுத்தும் துளசி மிக வித்தியாசமானது; மிகச் சுவை சேர்ப்பது.//இந்த துளசி நம்ம திருநீற்று பச்சைதான் சுபா!
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
இந்தக் கேண்டி அசாம்கோ தானே.. மறப்பேனா..
இது சாப்பிடாத மலேசியர் உண்டா என்று தான் கேட்க வேண்டும் இல்லையா..? :-)
அப்படியா? இதனை நாம் மலேசியாவில் சமைப்பதில்லை இல்லையா?
எங்கள் வீட்டில் சமையலில் இதனை சேர்த்ததில்லை. ஆனால் இப்போது இதன் சுவை பிடித்த பின்னர் இங்கே ஜெர்மனியில் ஒவ்வொரு ஆண்டும் சம்மரில் வாங்கி வைத்து விடுவேன். தாய் சமையல் செய்யும் போது இதனையும் சேர்த்துக் கொள்வேன். அவ்வளவு சுவை தருகின்றது
மேலும், நீங்களும் என்னுடைய தொடருடன் சேர்ந்த சில தகவல்களை எழுதுங்கள்.


சுபா,
தாய்லாந்து உணவகங்கள் பலவற்றில் உண்டிருக்கிறேன். கேரளா சமையலை நினைவுபடுத்தும். ஆனால் இங்கிருக்கும் உணவகங்களில் மண்மணம் கமழும் தாய் உணவுகள் கிடைப்பதில்லை.மேற்கத்திய நாவுகளுக்கு ஏற்ப மாற்றப்பட்ட தாய் உனவுகள் தான் கிடைக்கின்றன.
சிவப்பு கறி (red curry), யெல்லோ கறி (yellow curry), மோசுமான் கறி என மூன்று விதமான கறிகளை தாய் ஜாஸ்மின் அரிசியுடன் தருவார்கள்.சிவப்பு கறி நீங்கள் போட்ட மிளகாயில் செய்யபட்டதாக இருக்கலாம். நல்ல காரம்.பேட் தாய் (pad thai) எனும் நூடில்ஸ் கிடைக்கும். தாய் பப்பிள் டீ என ஒன்றை தருவார்கள்.பெரும்பாலும் அனைத்து கறிகளும் தேங்காய் பாலில் செய்யபட்டவையே.
சீன உனவுகளை தின்று அலுத்து போன மேற்கத்தியர்களுக்கு தாய் உணவு நல்ல வெரைட்டியாக இருக்கும். தென் இந்தியர்களுக்கு தாய் உணவு ரொம்ப நெருக்கமானதாக இருக்கும். பெரிய வித்தியாசம் தெரியாது.
(எங்கூரு தாய் உணவக வலை தளத்திலிருந்து எடுத்தது)
--
செல்வன்
"அவர்கள் சண்டையில் கத்தியை உருவினால் நாஙக்ள் துப்பாக்கியை உருவுவோம்.அவர்கள் எங்க ஆள் ஒருத்தனை ஆஸ்பத்திரிக்கு அனுப்பினால் நாங்கள் அவர்கள் ஆள் ஒருவனை பிணவறைக்கு அனுப்பி வைப்போம். இது தான் சிகாகோ வழிமுறை" - ஒபாமா
www.holyox.blogspot.com
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil






5. பாடாங் பெசார்
மலேசியாவின் வடக்கில் தாய்லாந்து நாட்டின் எல்லையில் அமைந்திருக்கும் மானிலங்களில் பெர்லிஸ் மானிலமும் ஒன்று. இந்த எல்லைப் பகுதி முழுக்க அடர்ந்த காடுகள் அமைந்துள்ளன. தாய்லாந்திலிருந்து மலேசியா நுழைவதற்கும் இங்கிருந்து தாய்லாந்து செல்வதற்கும் பாடாங் பெசார் நகரின் வழியாகச் செல்ல வேண்டும். பாடாங் பெசார் செல்வதற்கு முன்னர் பெர்லிஸ் மானிலத்தில் பார்க்கக் கூடிய இடங்களைப் பற்றி சற்று தெரிந்து கொள்வோம்.
மலேசியா பற்றிய கட்டுரை அதைப் பற்றி இதுவரை வெளிநாட்டார் அறியாத பல
அரிய தகவல்களை சுவையாக வழங்குகிறது. நம் தாய் நாடு பற்றிய உங்கள்
அக்கறையும் அன்பும்
போற்றுதற்கு உரியவை. வாழ்த்துகள்.
சீனர்கள் இந்துக் கோயில்களில் வழிபாடு நடத்துவது பற்றிய புதிய செய்தி
ஒன்று உள்ளது. வழிபாட்டினும் மேலான ஒருமைப்பாடு. இந்த உரலியில்
பார்க்கலாம்:
http://www.malaysiakini.com/news/162076
மலேசியாவில் இன்னும் சில இடங்களிலும் சிங்கப்பூரிலும் கூட இம்மாதிரி
கோயில்கள் உருவாகி வருவதாக அறிகிறேன். வள்ளலார் சொன்ன சமரச
சன்மார்க்கத்திற்கு ஒருவழி போலும்.
இந்த இழையில் ஆர்வமுள்ளோர் கவனத்துக்கு.
ரெ.கா.
On Apr 9, 4:38 pm, Geetha Sambasivam <geethasmbs...@gmail.com> wrote:
> //நாம் நவராத்திரி கொண்டாடும் அதே வேளையில் சீனர்கள் 9 நாட்களில் தங்களின்
> ஒன்பது கடவுளர்களை வழிபடும் ஒரு பண்டிகையும் நடைபெறும்//
>
> ஆச்சரியமான தகவல். ஒன்பது கடவுளரும் எப்படி அழைக்கப் படுகின்றனர்?? விரத
> முறைகளும் நம்மைப் போல் ஒத்திருக்குமா??
>
> //சீன பாரம்பரிய வழிபாட்டினை பின்பற்றுபவர்களும் பெறுவாரியாக உள்ளனர்.//
>
> இவர்கள் வணங்கும் கடவுளின் பெயர்???
>
> //சுமத்ரா பலேம்பாங்கிலிருந்து வந்த பரமேஸ்வரா மலாக்கவை நிறுவினார். அவரது
> பரம்பரையில் ஆறாவதாக வந்த மன்சூர் ஷா என்ற சுல்தான் //
>
> மலாக்காவை நிறுவியர் பெயர் பரமேஸ்வரா என இந்துப் பெயராக உள்ளது. ஆனால்
> பரம்பரையில் ஆறாவது மன்சூர்ஷா என்ற சுல்தான்???????? புரியலையே???[?][?][?][?][?]
> [?]
>
> 2011/4/9 Subashini Tremmel <ksubash...@gmail.com>
>
>
>
> > *3. சீன சமூகம்*
http://reka.anjal.net/wp-admin/post.php?action=edit&post=129&message=6
ரெ.கா.
> > > --- Hide quoted text -
>
> - Show quoted text -
முன்னைய இழை சந்தாதாரர்களுக்கு மட்டுமென்று சொல்லுவதால்
என் வலைப்பூவில் போட்டிருக்கிறேன்:
http://reka.anjal.net/wp-admin/post.php?action=edit&post=129&message=6
ரெ.கா.
On May 8, 6:06 pm, karthi <karthige...@gmail.com> wrote:
> சுபா,
>
> மலேசியாபற்றிய கட்டுரை அதைப் பற்றி இதுவரை வெளிநாட்டார் அறியாத பல
> அரிய தகவல்களை சுவையாக வழங்குகிறது. நம் தாய் நாடு பற்றிய உங்கள்
> அக்கறையும் அன்பும்
> போற்றுதற்கு உரியவை. வாழ்த்துகள்.
>
> சீனர்கள் இந்துக் கோயில்களில் வழிபாடு நடத்துவது பற்றிய புதிய செய்தி
> ஒன்று உள்ளது. வழிபாட்டினும் மேலான ஒருமைப்பாடு. இந்த உரலியில்
> பார்க்கலாம்:
>
> http://www.malaysiakini.com/news/162076
>
> மலேசியாவில் இன்னும் சில இடங்களிலும் சிங்கப்பூரிலும் கூட இம்மாதிரி
> கோயில்கள் உருவாகி வருவதாக அறிகிறேன். வள்ளலார் சொன்ன சமரச
> சன்மார்க்கத்திற்கு ஒருவழி போலும்.
>
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
ரெ.கா.
On May 9, 7:45 pm, Subashini Tremmel <ksubash...@gmail.com> wrote:
> http://reka.anjal.net/இந்த லிங்கில் தான் உங்கள் பதிவுகளைப் பார்க்க
> முடிகின்றது.
>
> ஹிந்து-தாவோ ஆலயம் - தற்போதைய பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு விரைவில்
> கட்டுமானப்பணி முடிய வேண்டும். எந்த மானிலத்தில் உள்ளது இந்த கம்போங்
> சிம்பாங்க் கெராயூங் பகுதி?
>
> -சுபா
> 2011/5/8 karthi <karthige...@gmail.com>
> Suba Tremmelhttp://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!http://subahome2.blogspot.com- ஜெர்மனி நினைவலைகள்..!http://subaillam.blogspot.com- மலேசிய நினைவுகள்..!http://ksuba.blogspot.com- Suba's Musings- Hide quoted text -

6. குவா கெலாம்
.1970களில் இருந்த மலேசியா, பின்னர் 1980களில் அதற்குப் பின்னர் 1990களில் பின்னர் 2000ம் ஆண்டுகளில் என பகுத்துப் பார்த்தால் மலேசியாவின் வளர்ச்சி என்பது மிக அபரிதமானது. 1969ம் ஆண்டு நிகழ்ந்த இனக்கலவரம் சுதந்திர மலேசியாவின் சரித்திரத்தில் மறைக்கப்பட முடியாத ஒரு துயர நிகழ்வு. 13 மே என்பது மலேசியாவை பொறுத்தவரை இன்றளவும் கூட ஒரு துரதிஷ்டம் தரும் நாளாக கருதப்படும் ஒன்று. மலேசிய மக்கள் தொகையில் இரண்டு பெரிய குழுக்களான மலாய் இன மக்களுக்கும் சீன இன மக்களுக்கும் இடையே நிகழ்ந்த கலவரத்தில் பலர் கொல்லப்பட்டனர்.
அரசாங்கம் அமுல்படுத்திய புதிய அரசாங்கக் கொள்கை மலாய் இனத்தவருக்குப் பல சலுகைகளை வழங்கும் வகையில் அமைக்கப்பட்டதை தொடர்ந்தும் மலாயன் யூனியன் அமைப்பின் தொடர்பிலும் எழுந்த அதிருப்தி இனக்கலவரமாக வெடித்தது. நாடெங்கும் பயங்கரம் சூழ்ந்திருந்ததாக எனது தந்தையார் கூறுவார். தமிழர்கள் நேரடியாக இந்த கலவரத்தில் பாதிக்கப்படவில்லையென்றாலும் ஒரு வகையில் நாட்டு மக்கள் அனைவருமே பாதிக்கப்பட்டிருந்த கால கட்டம் தான் அது. சாலையில் செல்லும் போதே மிகக் கோரமாக, பார்க்கும் சீனர்களை வெட்டிசாய்த்து விட்டும் செல்லும் மலாய் இனத்து மக்களையும், பார்க்கும் மலாய் இனத்தவரை தாக்கி வாளால் வெட்டும் சீனர்களைப் பார்த்தது பற்றிய தகவல்கள் என் தந்தையார் கூறிக் கேட்டிருக்கின்றேன். இந்த காலகட்டத்தில் மலேசியாவில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு சில மாதங்கள் அவசரகாலம் பிரகடனப்படுத்தப்பட்டு மக்கள் பீதியுடன் சில காலம் இருந்திருக்கின்றனர். மலேசியாவின் சுதந்திரத் தந்தை என அழைக்கப்படும் துங்கு அப்துல் ரஹ்மான் இந்த இனக்கலவரத்தின் அடிப்படையில் தனது பிரதமர் பதவியைத் துறந்தார்.அதற்குப் பிறகு அவ்வப்போது உள்பூசல்கள் பல இருந்தாலும் கலவரம் மலேசியாவில் மீண்டும் தோன்றியதில்லை. 1969 மே 13 என்பதை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு வளர்ச்சி நோக்கி மலேசியாவை கொண்டு செல்ல அனைவரும் பயணம் செய்த காலம் அது. எனது மலேசிய அனுபவம் முழுதும் இந்த காலகட்டத்தில் தான் அமைந்தது. ஆனாலும் கடந்த சில ஆண்டுகளில் மீண்டும் இனங்களுக்கிடையிலான சலுகைகள் தொடர்பில் சிறு சிறு கலவரங்கள், போராட்டங்கள் தோன்றி மறைவதை பலரும் நாளிதழ்களிலும் இணையத்திலும் கூட வாசித்தும் கேள்விப்பட்டும் இருக்கலாம். இவை ஒரு புறம் இருப்பினும் மலேசியாவின் வளர்ச்சியும் அதன் எழிலான சூழலும் அனைவரையும் பிரமிக்க வைப்பது என்பதை மறுக்க முடியாது.மலாயா 1957ல் ஆங்கிலேய காலணித்துவ ஆட்சியிலிருந்து மீண்டு சுதந்திரம் பெற்றது. மலாயா தீபகற்பம், சிங்கப்பூர் தீவு, வடக்கு போர்னியோ பகுதியான சபா, மேற்கு போர்னியோவின் பெரும் பகுதியான சரவாக் ஆகியவற்றை உள்ளடக்கி மலேசியாவாக 1963ல் உருபெற்றது. அதற்கு அடுத்த ஆண்டில் ஏற்பட்ட இணங்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளில் ஏற்பட்ட திருப்தியின்மை அதனால் ஏற்பட்ட உள்ளூர் கலவரங்களால் சிங்கப்பூர் மலேசியாவிலிருந்து பிரிந்து செல்ல முடிவாகி தனி நாடாக 1965ல் தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டது.மலேசியக் கொடியை உற்று நோக்கினால் அதில் இருக்கும் நட்சத்திரம் 14 கதிர்களைக் காட்டுவதைக் காணலாம். அவை 14 மானிலங்களைக் குறிப்பது. சிங்கப்பூர் இந்த அமைப்பிலிருந்து வெளியேறிய பின்னர் 13 மானிலங்கள் மட்டுமே இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.நான் மலேசியாவிலேயே பிறந்து வளர்ந்து கல்வி கற்றிருந்தாலும் கூட மலேசியா முழுமையையும் இது வரை பார்த்ததில்லை. அதிலும் தற்சமயம் தாய்நாட்டை விட்டு அயல்நாட்டில் குடியேறிய பின்னர் இதற்கான வாய்ப்பு சற்று குறைந்து விட்டது. அவ்வப்போது மலேசியா செல்லும் போது நான் இதுவரை சென்றிராத சில மானிலங்களுக்குச் சென்று பார்த்திராத புதிய இடங்களை காண நான் முயற்சிப்பதுண்டு. அந்த வகையில் சென்ற 2010ம் ஆண்டு இறுதியில் மலேசியா சென்ற போது எங்கு செல்லலாம் என யோசித்த போது மனதில் தோன்றியது ஒரு எண்ணம்...!தொடரும்....


7. பெர்லிஸ் தமிழ்ப் பள்ளியும் தமிழ்ச்சங்கமும்2005ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்குப்படி பெர்லிஸ் மானிலத்தின் மக்கள் தொகையில் 1.3 விழுக்காட்டினர் தமிழர்கள். பெரும்பாலும் அரசாங்க வேலை, மருத்துவம், மற்றும் தேசிய பாதுகாப்புப் படை ஆகிய துறைகளில் பணி நிமித்தமாக வந்தவர்களும் சூப்பிங் சீனி ஆலையில் உழைக்கும் தொழிலாளர்களும் இங்கு வசிக்கின்றனர். கெடா மானிலம் போல இங்கு வர்த்தகம், ரப்பர் மரத்தோட்டங்களிலோ அல்லது செம்பனைக் காடுகளிலோ வேலை செய்ய வந்தவர்கள் இங்கு மிக மிக குறைவு என்றே குறிப்பிட வேண்டும்.
கண்ணன்
2011/5/15 Subashini Tremmel <ksuba...@gmail.com>
ஆக பெர்லிஸ் மானிலத்தை சுற்றிபார்த்து வர திட்டமிட்டு ஒரு சிறிய கஞ்சில் (Kancil) வாகனம் ஒன்றை வாடகைக்கு எடுத்துக் கொண்டு பினாங்கிலிருந்து நானும் என் கணவரும் கங்கார் நோக்கி புறப்பட்டோம்.தொடரும்..
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
5. பாடாங் பெசார்
இந்த துளசி ஜெர்மனியிலும் கூட கிடைக்கின்றது. இதற்கு Thai Basilica என்று பெயர். தாயலாந்து உணவு வகைகளை இதுவரை சுவைத்திராதவர்கள் ஒரு முறை முயற்சி செய்து பாருங்களேன். அதிலும் குறிப்பாக தாய்லாந்து துளசி சேர்த்த உணவை சுவைக்க மறக்க வேண்டாம்!
தொடரும்..அன்புடன்சுபா
2011/4/17 Subashini Tremmel <ksuba...@gmail.com>
சரவாக் மானிலங்களைப் பற்றி பின்னர் மேலும் பார்க்கலாம். இப்போது எனது பயண திட்டத்திற்கு மீண்டும் வருகின்றேன்.
--Suba Tremmelhttp://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!http://ksuba.blogspot.com - Suba's Musings
குறிப்பு- காக்கி புக்கிட் என்பதற்கு தமிழில் மலையடிவாரம் என்பது பொருள்.தொடரும்...அன்புடன்சுபா2011/5/7 Subashini Tremmel <ksuba...@gmail.com>5. பாடாங் பெசார்
மலேசியாவின் வடக்கில் தாய்லாந்து நாட்டின் எல்லையில் அமைந்திருக்கும் மானிலங்களில் பெர்லிஸ் மானிலமும் ஒன்று. இந்த எல்லைப் பகுதி முழுக்க அடர்ந்த காடுகள் அமைந்துள்ளன. தாய்லாந்திலிருந்து மலேசியா நுழைவதற்கும் இங்கிருந்து தாய்லாந்து செல்வதற்கும் பாடாங் பெசார் நகரின் வழியாகச் செல்ல வேண்டும். பாடாங் பெசார் செல்வதற்கு முன்னர் பெர்லிஸ் மானிலத்தில் பார்க்கக் கூடிய இடங்களைப் பற்றி சற்று தெரிந்து கொள்வோம்.
--Suba Tremmelhttp://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!http://ksuba.blogspot.com - Suba's Musings
முன்னைய இழை சந்தாதாரர்களுக்கு மட்டுமென்று சொல்லுவதால்
என் வலைப்பூவில் போட்டிருக்கிறேன்:
http://reka.anjal.net/wp-admin/post.php?action=edit&post=129&message=6
ரெ.கா.
8. பெர்லிஸ் மானிலத்தில் கோயில்கள்
மேலும் சில படங்களுடன் இப்பதிவைக் காண http://subaillam.blogspot.com/ செல்க..!தொடரும்..அன்புடன்சுபா
--
பெர்லிஸ் மானிலம் அளவில் சிறிதெனினும் தனி சுல்தான், மானிலக்கொடி, சட்டமன்றம் என அனைத்து அதிகாரத்துவ தகுதிகளும் கொண்டு விளங்கும் ஒரு மானிலம். இந்த மானிலத்தின் தலைநகரம் கங்கார். //
என்றால் இந்த மாநிலத்தில் சுயாட்சி முறையா??
நெல்வயல்கள் கண்ணுக்குக் குளிர்ச்சியாக இருக்கின்றன. அழகான பசுவும். குளத்தில் மலர்ந்திருப்பது அல்லியா, செந்தாமரையா?
2011/4/17 Subashini Tremmel <ksuba...@gmail.com>ஆக பெர்லிஸ் மானிலத்தை சுற்றிபார்த்து வர திட்டமிட்டு ஒரு சிறிய கஞ்சில் (Kancil) வாகனம் ஒன்றை வாடகைக்கு எடுத்துக் கொண்டு பினாங்கிலிருந்து நானும் என் கணவரும் கங்கார் நோக்கி புறப்பட்டோம்.தொடரும்..--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
தாய் உணவு குறித்த செய்தி புதியது. துளசி போன்ற இலைகளைச் சேர்த்துச் சமைப்பதும் கேள்விப் பட்டதில்லை. நன்றி பகிர்வுக்கு. சாலையின் அழகும், சுத்தமும் கண்ணையும் மனதையும் பறிக்கிறது. இந்தியாவின் சாலைகளை எண்ணி மனம் நொந்தும் போகிறது. :(
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



8. பெர்லிஸ் மானிலத்தில் கோயில்கள்கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று எண்ணம் கொண்டு செல்லும் இடங்களிலெல்லாம் கோயில்களை அமைத்து வளம் சேர்ப்பவர்கள் தமிழர்கள். மலேசியாவிலேயே மிகக் குறைவாக தமிழர்கள் வாழும் இச்சிறிய மானிலமான பெர்லிஸிலும் ஆலயங்கள் உள்ளன என்பதை தெரிந்து கொள்ளும் போது மனம் பரவசமடைகின்றது இல்லையா?








10. பண்டைய பெர்லிஸில் ஹிந்து, புத்த மதங்களின் தாக்கம்பெர்லிஸ் மானிலத்தைப் பொருத்த வரையில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்திற்கு முன்னர் வரை எழுதப்பட்ட ஆவணங்கள் குறைவாகவே கிடைத்துள்ளன என்ற போதிலும், இப்பகுதிக்கு வந்து சென்ற இந்திய, அராபிய, சீன வணிகர்களின் குறிப்புக்களில் பல செய்திகள் பதிவாக்கப்பட்டுள்ளன என்பதை அருங்காட்சியகத்தில் உள்ள குறிப்பிலிருந்து அறிந்து கொள்ள முடிகின்றது. அதிலும் குறிப்பாக ஸ்ரீ விஜய பேரரசு செழிப்புற்றிருந்த கால கட்டத்தில் இங்கு ஹிந்து மதமும் புத்த மதமும் மிகப்பரவலாக வழக்கில் இருந்துள்ளது. ஐ.ஹெச்.என்.இவான்ஸ், ஹெச்.டி.கொலின்ஸ் இருவரது தொல்பொருள் ஆய்வுகள் பெர்ஹாலா குகை, பிந்தோங், கூரூங் பத்தாங் குகை போன்ற பகுதிகளில் புத்த, ஹிந்து மத இறை வழிபாட்டு சின்னங்கள் கிடைக்கப்பட்டிருப்பதைக் குறிப்பிடுகின்றன.
--
மீண்டும் 3 மாதங்களுக்குப் பிறகு இந்தப் பயணக் கட்டுரையைத் தொடர்கின்றேன். இத்தொடரின் முந்தைய பதிவுகளை http://subaillam.blogspot.com/ வலைப்பூவில் காணலாம்.குவாலா பெர்லிஸ்பெர்லிஸ் மானிலத்தில் கங்காருக்கு அடுத்த பெரிய நகரம் குவாலா பெர்லிஸ். பெர்லிஸுக்குச் சுற்றுப் பயணம் செய்பவர்கள் கொசுக்கடிக்கு பயப்படுபவர்களாக இருந்தால் நிச்சயமாக நீங்கள் குவாலா பெர்லிஸ் நகரில் தங்கி பெர்லிஸ் மானிலத்தைச் சுற்றிப் பார்ப்பது சிறந்தது என்பது என் அனுபவப் பூர்வமான கருத்து. முதலில் இணையத்தின் வழியாக தங்கும் விடுதியைத் தேடி பதிவு செய்திருந்த நானும் என் கணவரும் முதல் நாள் நாங்கள் பதிவு செய்திருந்த அந்த அழகான காட்டுப் புற தங்கும் விடுதியில் தங்க வேண்டாம் என முடிவெடுத்து குவாலா பெர்லிஸுக்கு மாறினோம். பச்சை பசுமையான காட்டின் ஓரமாக அமைந்திருந்த அந்த சுற்றுப் பயணிகள் தங்கும் விடுதியில் அத்தனை கொசுக்கள். குளிர்சாதன வசதியிருந்தாலும் அதனையும் மீறி அறைக்குள் வந்து சாகசம் செய்யும் அசுர கொசுக்கள் அவை. :-)குவாலா பெர்லிஸ் ஒரு கடற்கரையோர நகர். துறைமுகம் உண்டு. இங்கிருந்து நேராக பெர்ரி மூலம் லங்காவித் தீவுக்காண பயணச் சேவையும் தினம் பலமுறை என்ற வகையில் வழங்கப்படுகின்றது. தாய்லாந்துக்கு அருகில் என்பதாலும் இங்கே வியாபரத்திற்காக வந்து போவோரும் இருப்பதால் கூட்டம் நிறைந்த ஒரு நகராக இது இருக்கின்றது.



இந்தப் பதிவுக்குத் தொடர்பான மேலும் சில படங்களை இணைத்திருக்கின்றேன். இந்தப் பதிவோடு படங்களையும் காண http://subaillam.blogspot.com/-சுபா2011/9/4 Subashini Tremmel <ksuba...@gmail.com>மீண்டும் 3 மாதங்களுக்குப் பிறகு இந்தப் பயணக் கட்டுரையைத் தொடர்கின்றேன். இத்தொடரின் முந்தைய பதிவுகளை http://subaillam.blogspot.com/ வலைப்பூவில் காணலாம்.
உள்ளூர் மலாய் மக்கள் கடல் உணவுகளை ரசித்து ருசித்து உண்பவர்கள். இங்குள்ள கடைகளில் அன்று கடலில் பிடிக்கப்பட்ட கடல் உயிரிணங்களைக் கடைக்காரர்கள் வைத்திருக்கின்றனர். அதில் அவரவருக்குத் தேவையான மீன், இரால், கடல் சிப்பி என தேர்ந்தெடுத்து கொடுத்தால் அதனை விரும்பும் வகையில் சமைத்துக் கொடுக்கின்றனர்.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
மலேசிய வரலாற்று,புவியியல் சார்பான தகவல்கள் பலவற்ரையும் அறியதந்த கட்டுரைகளுக்கு நன்றி சுபா.
2011/9/4 Subashini Tremmel <ksuba...@gmail.com>
உள்ளூர் மலாய் மக்கள் கடல் உணவுகளை ரசித்து ருசித்து உண்பவர்கள். இங்குள்ள கடைகளில் அன்று கடலில் பிடிக்கப்பட்ட கடல் உயிரிணங்களைக் கடைக்காரர்கள் வைத்திருக்கின்றனர். அதில் அவரவருக்குத் தேவையான மீன், இரால், கடல் சிப்பி என தேர்ந்தெடுத்து கொடுத்தால் அதனை விரும்பும் வகையில் சமைத்துக் கொடுக்கின்றனர்.
இந்த புகைப்படத்தை கண்டதும் தாய்லாந்து,வியட்னாம் பகுதிகளில் உள்ள தெருவோர கடைகள் ஞாபகம் வருகிறது.தாய்லாந்தில் பூச்சிகளையும், கைக்கு கிடைக்கும் அனைத்து மிருகங்களையும் சமைத்து உண்ணுவார்கள்.மலேயா தாய்லாந்தின் அண்டைநாடு என்பதால் அத்தகைய வழக்கங்கள் மலேயாவின் எல்லைபகுதிகளில் உள்ளதா?
--
செல்வன்
ரிக் பெர்ரி 2012
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
கண்ணில் ஒற்றிக் கொள்ளும் படங்கள்! அருமையான பதிவு சுபா. பொறுமையாக செய்திருக்கிறீர்கள். பாராட்டுகள்.மலாய் மக்களின் உணவுப் பழக்கங்கள் புதிய செய்தி....ஊடுறுவிய பார்வை சுவை.மொத்தத்தில் வழக்கம் போல அருமை.
2011/9/4 Subashini Tremmel <




12. பெர்லிஸ் சயாமியர் ஆட்சியில்இத்தொடரின் முந்தைய பகுதிகளில் மலேசிய சுதந்திரத்திற்கு முன்னர் பெர்லிஸ் முன்னர் கெடா மானிலத்தின் இணைந்த நிலப்பரப்பாகவும் பின்னர் சில காலம் சயாமின் (தாய்லாந்து) ஒரு பகுதியாகவும் இருந்தது என்று குறிப்பிட்டிருந்தேன். இதனை சற்று விரிவாக இப்பகுதியில் விளக்க முயற்சிக்கிறேன்.பெர்லிஸ் மானிலத்தின் முந்தைய பெயராக குறிப்பிடப்படுவது கோத்தா இந்திரா காயாங்கான் (Kota Indera Kayangan). இதனை தமிழில் "இந்திரனின் சுவர்க்க நகரம்" எனச் சொல்லலாம். 17ம் நூற்றாண்டில் ஆட்சியில் இருந்த கெடா நாட்டின் (இன்றைய கெடா மானிலத்தின்) மன்னர் சுல்தான் தியாவுடின் அல்-முக்கராம் ஷா இப்னி அல்மர்ஹூம் சுல்தான் முஹையிடின் மன்சூர் ஷா 1661 - 1678க்கிடையில் உருவாக்கிய நகரம் தான் கோத்தா இந்திரா காயாங்கான். கெடா (கடாரம்)வின் தலைநகரமாக கோத்தா இந்திரா காயாங்கான் அமைந்திருந்தது.இந்த நகரம் அரச நகரமாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. இதற்கு மிக முக்கிய காரணம் இந்த நகர் அமைந்திருக்கும் பகுதி. இயற்கை அழகு நிறம்பியதோடு சியாமிற்கு அருகாமையிலும் இருந்ததால் இந்த நகரம் மன்னரின் தலைநகர தேர்விற்கு மிக முக்கிய இடம் வகித்தது. இந்த நகரில் அப்போது இரண்டு பெரிய நுழைவாயில்களும் அமைக்கப்பட்டன.




13. கோத்தா காயாங் அருங்காட்சியகம்
கோத்தா இந்திரா காயாங்கான் (Kota Indera Kayangan) எனப் பெயர் சூட்டி இந்த நகரை வளமாக்கி இதனை அன்றைய கெடா நாட்டின் தலநகரமாக மன்னர் சுல்தான் தியாவுடின் அல்-முக்கராம் ஷா இப்னி அல்மர்ஹூம் சுல்தான் முஹையிடின் மன்சூர் ஷா அவர்கள் ஆக்கினார்கள் என்று நேற்றைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன். இந்த மன்னரின் பெயர் மிக நீளமாக அமைந்திருப்பதை கவனித்திருப்பீர்கள் என நம்புகின்றேன். இவ்வாறான நீண்ட அடைமொழிகளுடன் கூடிய அரச சிறப்புப் பெயர் இன்றளவும் அரசருக்குச் சிறப்பாக வழங்கப்பட்டாலும் நடைமுறையில் சுருக்கி சிறிதாக்கி அழைக்கும் வழக்கம் தான் தற்சமயம் பயன்பாட்டில் உள்ளது.மன்னர் சுல்தான் தியாவுடின் அல்-முக்கராம் ஷா இப்னி அல்மர்ஹூம் சுல்தான் முஹையிடின் மன்சூர் ஷா அவர்கள் பெர்லிஸை கெடா நாட்டின் தலைநகரமாக ஆக்கியதோடு மட்டும் இருந்து விடவில்லை. அன்றைய கெடா நாட்டில் பல மேம்பாடுகளை உருவாக்கியவர் என்ற பெறுமையும் இவருக்கு உண்டு.









15. தாமான் மெலாத்தி ஏரிஇயற்கை அழகு மட்டும் போதாது. செயற்கையாகவும் இந்த இந்திரனின் கனவு உலகத்தை அழகு படுத்த வேண்டும் என்ற எண்ணம் பெர்லிஸ் அரசாங்கத்திற்கு போலும். சூப்பிங்கிலிருந்து தெற்கு நோக்கி கங்கார் செல்லும் சாலையில் வந்தால் 20 நிமிடத்திற்குள் தாமன் மெலாத்தி ஏரிக்கரைக்கு வந்து விடலாம். பெர்லிஸ் மானிலத்தின் சுற்றுலா தலங்களின் பட்டியலில் இந்த ஏரியின் பெயரும் இடம் பெற்றிருக்கின்றது.
<arau1.jpg>அரச குடும்பத்தினரின் படம்
<arau2.jpg>அரச மாளிகை
<arau3.jpg>அரச மயானம்
<arau4.jpg>
அரச அருங்காட்சியகம்.இந்த அரச மாளிகை, அருங்காட்சியகம், மயானம் அனைத்துமே ஆராவ் நகரின் மையத்திலேயே அமைந்துள்ளன.நாளை இறுதிப் பகுதி..!அன்புடன்சுபா2011/9/9 Subashini Tremmel <ksuba...@gmail.com>--
15. தாமான் மெலாத்தி ஏரிஇயற்கை அழகு மட்டும் போதாது. செயற்கையாகவும் இந்த இந்திரனின் கனவு உலகத்தை அழகு படுத்த வேண்டும் என்ற எண்ணம் பெர்லிஸ் அரசாங்கத்திற்கு போலும். சூப்பிங்கிலிருந்து தெற்கு நோக்கி கங்கார் செல்லும் சாலையில் வந்தால் 20 நிமிடத்திற்குள் தாமன் மெலாத்தி ஏரிக்கரைக்கு வந்து விடலாம். பெர்லிஸ் மானிலத்தின் சுற்றுலா தலங்களின் பட்டியலில் இந்த ஏரியின் பெயரும் இடம் பெற்றிருக்கின்றது.
Suba Tremmelhttp://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!http://ksuba.blogspot.com - Suba's Musings
இந்தக் குறிப்பை உங்கள் தொகுப்பின்போது அழித்துவிடவும்! ஏனென்றால் ... இது ஓர் அன்பார்ந்த நன்றி நவிலல் மட்டுமே.எல்லாரும் படித்துப் பயன்பெறக்கூடிய கட்டுரைத் தொடர் இது!மலேசியாவின் பழமை, பரம்பரைப் பண்பாடு, புது வளமை, ... எல்லாவற்றையும் மிகத் தெளிவாக, அழகாக எடுத்துக் கொடுத்தமைக்கு நன்றி, சுபா!அன்புடன்,ராஜம்On Sep 9, 2011, at 11:57 PM, Subashini Tremmel wrote:16. ஆராவ், அரச நகரம்இவ்வளவு தூரம் போய்விட்டு சுல்தானை பார்க்காமல் வரலாமா..?பெர்லிஸ் பயணத்தின் இறுதி நாள். காலை உணவுக்குப் பின் தங்கும் விடுதியில் செக் அவுட் செய்துவிட்டு குவாலா பெர்லிஸிலிருந்து ஆராவ் சென்று அரச நகர வலம் வந்து விட்டு அரண்மனையையும் பார்த்து விட்டு பின்னர் கெடா வழியாக திரும்பி பினாங்கு செல்வதாக எங்கள் திட்டம்.
இனிய சொற்களுக்கு நன்றி அம்மா.மலேசியாவைப் பற்றிய தகவல்களை இங்கு எல்லோருடனும் பகிர்ந்து கொள்வது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. முன்னர் மின் தமிழில் நாம் உரையாடிய மணிமேகலை, புத்த பிக்குகளின் கடற்பயணங்கள் போன்ற கலந்துரையாடல்களை நாம் மீண்டும் தொடங்க வேண்டும் என நான் விரும்புகின்றேன். தாய்லாந்து, கம்போடியப் பகுதிகளில் தென்னிந்தியாவில் பல்லவ மன்னர்களின் தாக்கம், தமிழ் வணிகர்களின் கடல் பயணங்கள் அதனால் கிழக்காசியத் தீவுகளான இந்தோனீசியா, மற்றும் மலாயா தீபகற்பம் ஆகியவை பற்றிய ஆய்வுகளையும் செய்திகளையும் நாம் பகிர்ந்து கொள்வதும் ஆய்வுகளைத் தொடர்வதும் முக்கியம்.அன்புடன்சுபா
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
முன்னர் மின் தமிழில் நாம் உரையாடிய மணிமேகலை, புத்த பிக்குகளின் கடற்பயணங்கள் போன்ற கலந்துரையாடல்களை நாம் மீண்டும் தொடங்க வேண்டும் என நான் விரும்புகின்றேன்.

16. ஆராவ், அரச நகரம்இவ்வளவு தூரம் போய்விட்டு சுல்தானை பார்க்காமல் வரலாமா..?
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
Terima Kasih சுபா!
இதுவரை மேலோட்டமாக அறிந்திருந்த சில தகவல்கள் இதன் மூலம்நன்கு தெரிந்துகொண்டேன்.சில சுத்தமாக தெரியாது அதையும் தெரிந்துகொள்ளமுடிந்தது.ஒரு புத்தகமாக கொண்டுவரலாம் அவ்வளவு அருமையாக எழுதியுள்ளீர்கள்!அடுத்த தடவை வரும்போது இன்னும் மற்ற இடங்களுக்கும் சென்று அதுகுறித்தும் எழுத உங்களுக்கு இறையருள் துணைநிற்க ப்ரார்த்திக்கிறேன்.
2011/9/11 Subashini Tremmel <ksuba...@gmail.com>இதுவரை என்னுடன் சேர்ந்து பயணித்த உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள் (Terima Kasih!)
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
அன்பின் சுபா,நிறைய வரலாற்றுத் தகவல் கொடுத்துள்ளீர்கள் படங்கள் அருமை. வாழ்த்துகள்.
2011/9/11 Subashini Tremmel <ksuba...@gmail.com>இதுவரை என்னுடன் சேர்ந்து பயணித்த உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள் (Terima Kasih!)--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
Suba Tremmelhttp://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!http://ksuba.blogspot.com - Suba's Musings
--"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
sama sama. >>>>>என்ன பாஷைல மீனாவும் நீங்களூம்பேசிக்றீங்க மலாய்தானே?
உங்க பயணத்துல நிறைய தெரிஞ்சிட்டோம் சுபா..சுவையாய் எழுதுவதில் நீங்களும் மன்னியா இருக்கீங்க!!
2011/9/14 shylaja <shyl...@gmail.com>
sama sama. >>>>>என்ன பாஷைல மீனாவும் நீங்களூம்பேசிக்றீங்க மலாய்தானே?ஆமாம். மலாய் தான்.உங்க பயணத்துல நிறைய தெரிஞ்சிட்டோம் சுபா..சுவையாய் எழுதுவதில் நீங்களும் மன்னியா இருக்கீங்க!!அப்படியா.. ஷைலஜாவுக்கு இந்தத் தொடர் பிடித்ததில் எனக்கும் சந்தோஷம்.ஐரோப்பா மட்டும் சுத்தினா போதுமா.. எங்க ஊருக்கும் போயிட்டு வாங்க..அங்கே போய் ஐஸ்கச்சாங் செண்டோல் இது இரண்டையும் சாப்பிட்டா திரும்ப உங்களுக்கு ஊருக்குத் திரும்ப மனசு வராது..:-)சுபா
<<<<<>ஆமா சிங்கப்பூர் மலேசியாக்கு கமலம் மீனாவைப்பார்க்கவும் போகணும்...செண்டோல் என்னது? ஸ்வீட்டா இல்ல காரமா?
அன்பு சுபா அவர்களுக்கு
இந்த இழையை விரும்பி படிக்கிறேன்
மலேசியாவில் உள்ள ஜலன் ராஜ சுழன என்ற சாலைக்கு ஏன் அந்த பெயர் வந்தது ?
செண்டோல் என்பது ..தேங்காய்ப்பாலில் சர்க்கரை சேர்த்து அதில் அரிசி மாவில் செய்த சின்ன சின்ன ஏதோ ஒன்றைக் கலந்து ஐஸ் சேர்த்து உள்ள குளிர் பானம். மீனாவுக்கு இதனை விரிவாகச் சொல்லத் தெரியும். எனக்கு சாப்பிட மட்டும் தான்.. :-)<<<<<<<<
மலேசியாவுக்குப் போறதுக்கு முன்னாலே எனக்கும் சொல்லுங்க.. தவறாமல் நீங்கள் பார்க்க வேண்டிய சில இடங்களைக் குறிப்பிட்டு ஒரு பட்டியல் தருகிறேன்..<<>>கண்டிப்பா சுபா.நன்றிசுபா
செண்டோல் என்பது ..தேங்காய்ப்பாலில் சர்க்கரை சேர்த்து அதில் அரிசி மாவில் செய்த சின்ன சின்ன ஏதோ ஒன்றைக் கலந்து ஐஸ் சேர்த்து உள்ள குளிர் பானம். மீனாவுக்கு இதனை விரிவாகச் சொல்லத் தெரியும். எனக்கு சாப்பிட மட்டும் தான்.. :-)
தோழி சுபா அவர்களுக்கு
மலேசிய பர்மா உறவுகள் பற்றி தெரிந்து கொள்ள ஆசை
..
குலசேகர பட்டினத்தில் வாழ்ந்த பல வயதானவர்கள்
நான் வசிக்கும் கெருகம்பாக்கம் பகுதியில் மளிகை கடை வைத்து கொண்டு பழைய நினைவில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் .
அவர்களிடம் பழைய தோணிகளை பற்றி வாய் திறந்து கேட்டு கொண்டு இருக்கலாம்
http://www.penang-traveltips.com/chulia-street.htm
பினாங்கு இல் உள்ள சுழியா தெருவை பற்றிய தகவல்கள் தேவை
பினாங்கு சோழர்களுடன் தொடர்பு கொண்ட நகரமா
73 ஆம் வர்டத்தில் என் அத்தை மாமா மேடன் செல்வதற்காக பினாங்கு சிதம்பரம் கப்பலில் சென்று அங்கிருந்து அவர்கள் ஊர்க்கு செல்வார்கள்
விவரம் தேவை
அன்புடன்
பாலு
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
அன்புள்ள சுபா அவர்களுக்குகடற்கரைகள் தொடர்பாக தொடர்ந்து இணையத்தில் தேடும் போது இந்த மடல் கண்ணில் பட்டதுஉங்கள் அனைவரின் பார்வைக்கு