தொடுகுறி சாஸ்திரம்

1,405 views
Skip to first unread message

N. Kannan

unread,
Jan 2, 2010, 9:52:14 AM1/2/10
to மின்தமிழ்
காலம் என்பது தொன்றுதொட்டு மனிதனுக்கு சவால் தரும் விஷயம். ஒவ்வொரு
கலாச்சாரமும் காலத்தை உட்புகுந்து அறிய முயன்றிருக்கின்றன. எகிப்து, சீன,
மயன் என்ற பழைய கலாச்சாரங்களில் குறி சொல்வது ஒரு அரசு அங்கீகரித்த
தொழிலாக இருந்துள்ளது. கைரேகை சாஸ்திரம் பற்றி எழுதும் கைரோ
அச்சாத்திரத்தை இந்தியாவிலிருந்து தாம் கற்றதாக எழுதுவார்.
இந்தியாவிலிருந்து சென்ற நாடோடிகள் (ஜிப்சி) குறி சொல்லும் வழக்கை
ஐரோப்பாவிற்கு கொண்டு வந்திருக்கலாம்.

பொதுவாக புது வருடத்தன்று ஏஞ்சல் கார்டு எனும் ஒரு விளையாட்டு
ஜெர்மனியிலுண்டு. அதன் படி தேவதாகுறி கொண்ட சீட்டுகளை பரப்ப வேண்டும்.
அமைதியான, தெய்வீக சூழலை உருவாக்கி மனது சொல்லும் ஒரு அட்டையை எடுத்துப்
புரட்டினால் நம் மனதிலிருக்கும் கேள்விக்கான விடை ஒரு சொல்லில் அட்டையில்
இருக்கும். இந்த வருடமும் குடும்பத்துடன் விளையாண்டோம்.

அப்போதுதான் ஞாபகம் வந்தது, பிரித்தானிய நூலகத்திலிருந்து பாச்சிகை
நூலொன்றை முன்பு வெளியிட்டது. அதில் பஞ்ச பாண்டவர்களில் கணித விற்பன்னரான
சகாதேவர் வழங்கிய தொடுகுறி சாஸ்திரம் ஒன்று உள்ளது. இதை பிரஷ்ணம் என்றும்
சொல்லலாம். நாம் தொடுகின்றன் போதுள்ள கற்றைத் தொடர்பினால் ஒரு பலன்
கிடைக்கும். தொட்டவுடன், முதலில் ஒரு தேவதையின் அட்டை வரும். அதுவே
அப்பொழுதின் பல தேவதை. அது சொல்லும் பலனை வைத்து ஒரு காரிழம் தொடங்கலாமா?
இல்லையா? என அறிந்து கொள்ளலாம்.

நான் இதற்கென ஒரு தேவதா சக்கரம் உருவாக்கியுள்ளேன்.

http://www.tamilheritage.org/uk/bl_thf/tmilpage.html

அங்குள்ள சக்கரத்தில் ஏதாவதொரு இடத்தில் சொடுக்குங்கள். ஒரு அட்டை வரும்
(அதி தேவதை), அதில் மீண்டும் சொடுக்குங்கள், உங்களுக்கான பலன் வரும்.
பலன் சிறு கவிதை நடையிலிருக்கும். சித்தர்களின் நாடி ஜோஸ்யத்தில் வரும்
அதே நடை. எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். (பொருளுரை மூலத்தில் இல்லை).

ஒரே அட்டையை எத்தனை முறை முயன்றாலும் மீண்டும் பெறமுடியாது.
அந்தந்தப்பொழுதிற்கான பலனே கிட்டும்.

முயன்று பாருங்கள்.

கோளறுதிருப்பதிகத்தில் சொல்வது போல் இறைச் சிந்தனையுடன் தொடும் போது நல்ல
பலன்களே இதுவரை கிட்டியுள்ளன!

கண்ணன்

வதால்
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..

Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

Geetha Sambasivam

unread,
Jan 2, 2010, 10:10:25 AM1/2/10
to mint...@googlegroups.com
㱨瑭氾ഊ㱨敡搾ഊ㱴楴汥㹄敶慴桡捨慫牡⁔桯摵歵剩⁓慳瑲慭‭⁔慭楬⁈敲楴慧攠䙯畮摡瑩潮㰯瑩瑬放ഊ㰯桥慤㸍਍਼扯摹㸍਍਼愠桲敦㴢瑥硴〷⹧楦∠瑡牧整㵟扬慮款㱩浧⁳牣㴢灩挰㜮杩昢㸼⽡㸍਍਍਼⽢潤社ഊ㰯//

㱨瑭氾ഊ㱨敡搾ഊ㱴楴汥㹄敶慴桡捨慫牡⁔桯摵歵剩⁓慳瑲慭‭⁔慭楬⁈敲楴慧攠䙯畮摡瑩潮㰯瑩瑬放ഊ㰯桥慤㸍਍਼扯摹㸍਍਼愠桲敦㴢瑥硴ㄷ⹧楦∠瑡牧整㵟扬慮款㱩浧⁳牣㴢灩挱㜮杩昢


இப்படித் தான் வருது எனக்கு எதைச் சுட்டினாலும்! :(  எல்லாத்தையும் பார்த்துட்டேன். தேவதை எதுவும் வரலை!

2010/1/2 N. Kannan <navan...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

360.gif

Selva Murali

unread,
Jan 2, 2010, 10:11:15 AM1/2/10
to mint...@googlegroups.com
எனக்கு சைனா எழுத்தாகத்தான் தெரிகிறது.

2010/1/2 N. Kannan <navan...@gmail.com>
நான் இதற்கென ஒரு தேவதா சக்கரம் உருவாக்கியுள்ளேன்.

http://www.tamilheritage.org/uk/bl_thf/tmilpage.html

அங்குள்ள சக்கரத்தில் ஏதாவதொரு இடத்தில் சொடுக்குங்கள். ஒரு அட்டை வரும்
(அதி தேவதை), அதில் மீண்டும் சொடுக்குங்கள், உங்களுக்கான பலன் வரும்.
பலன் சிறு கவிதை நடையிலிருக்கும். சித்தர்களின் நாடி ஜோஸ்யத்தில் வரும்
அதே நடை. எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். (பொருளுரை மூலத்தில் இல்லை).

முயன்று பாருங்கள்.

கோளறுதிருப்பதிகத்தில் சொல்வது போல் இறைச் சிந்தனையுடன் தொடும் போது நல்ல
பலன்களே இதுவரை கிட்டியுள்ளன!

கண்ணன்



வதால்
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..

Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
M.S.Murali (B+ve)
99430-94945
----------------------------
www.visualmediaa.com

annamalai sugumaran

unread,
Jan 2, 2010, 10:13:37 AM1/2/10
to mint...@googlegroups.com
எனக்கு வந்ததே ! எனக்கு இந்திரன் அதிதேவதையாகவும் அதில் நல்ல  ஒரு பாடல் 
ஆசி கூறி வந்ததே ! மீண்டும் ஒரு முறை பாருங்கள்  
அன்புடன்
ஏ சுகுமாரன்
 


2010/1/2 Geetha Sambasivam <geetha...@gmail.com>



--
A.Sugumaran ,
PONDICHERRY INDIA
MOBILE 09345419948

We never like what we have.
We never get what we want,
360.gif

Selva Murali

unread,
Jan 2, 2010, 10:14:57 AM1/2/10
to mint...@googlegroups.com
ஆமா நீங்க எந்த உலாவி பயன்படுத்தறிங்க

2010/1/2 annamalai sugumaran <amirth...@gmail.com>



--
360.gif

annamalai sugumaran

unread,
Jan 2, 2010, 10:16:52 AM1/2/10
to mint...@googlegroups.com
IE  தான்


 
2010/1/2 Selva Murali <mural...@gmail.com>
360.gif

Selva Murali

unread,
Jan 2, 2010, 10:18:21 AM1/2/10
to mint...@googlegroups.com
நினைச்சேன், அடியேன் நெருப்பு உலாவி.... அதான் ப்ரச்னைன்னு நினைக்கிறேன்

2010/1/2 annamalai sugumaran <amirth...@gmail.com>
360.gif

Tthamizth Tthenee

unread,
Jan 2, 2010, 10:25:40 AM1/2/10
to mint...@googlegroups.com
எனக்கும் துர்கை  ஆசி வந்ததே
 
ஒங்கியப்பொருளுண்டாம் உயர்ந்ததோர் செல்வமுண்டாம்
தேங்கியக் கருமம் நன்றாம் சேரிடம் செல்வமுண்டாம்
பாங்கதாய்ப்பதியுமுண்டாம் பயமில்லை நன்மையாகும்
தாங்கிய துர்கைதனை தன்மையாய்த் தொட்டதாலே
 
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 
2-1-10 அன்று, annamalai sugumaran <amirth...@gmail.com> எழுதினார்:



--
மனிதமும்,உலகமும் காப்போம்,

மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புள்ள
தமிழ்த்தேனீ

http://www.peopleofindia.net
rkc...@gmail.com
http://thamizthenee.blogspot.com
360.gif

Selva Murali

unread,
Jan 2, 2010, 10:37:58 AM1/2/10
to mint...@googlegroups.com
அடியேன் குறுமுனி அகத்தியனைச்சொடுக்கினேன்  சொடுக்கியவுடனே வந்தது கீழே இருக்கிறது இதற்கு என்ன பொருள் என்று தெரிந்துகொள்ள ஆவல்

பொன்பொருள் வந்துசேரும் போதவேகருமம் நன்றாம்
தன்கிளைக்குுட்டமுண்டாம் தருமமே தழைத்துடாமும்
 வன்பையில்லைத்தானே வாழ்வது மெத்தவுண்டாம்
அன்புகள் மெத்தவுண்டு அகத்தியனைத்தொட்டதாலே...

2010/1/2 Tthamizth Tthenee <rkc...@gmail.com>



--
360.gif

வினோத் ராஜன்

unread,
Jan 2, 2010, 10:46:19 AM1/2/10
to மின்தமிழ்
இது போன்ற பிரசன்ன ஜ்யோதிஷம் சமாச்சாரங்களுக்கான பின்புலத்தை எவரேனும்
விளக்கினால் நன்றாக இருக்கும்.

கிரஹ அமைப்பினால் பலன் சொல்வது பொருத்தமாக தெரிகிறது. ஆனால் இந்த பிரசன்ன
ஜோதிடம் ஏனோ பிட பட மாட்டேங்கிறது.. :-(
பிரசன்ன ஜ்யோதிஷம் எந்த அளவுக்கு நம்பகத்தன்மையானது ?

கிளி ஜோசியம், எலி ஜோசியம், டாரட் கார்ட் (Tarot Card) முதலியவையும்
பிரசன்ன ஜோதிடத்தின் கீழ் தான் வருமா ?

V

Satheesh kumar R

unread,
Jan 2, 2010, 10:49:02 AM1/2/10
to mint...@googlegroups.com
ஆஹா, நினைத்தது அத்தனையும் நடக்கும் என்று சொல்லிவிட்டது...

சதீஷ்

Tirumurti Vasudevan

unread,
Jan 2, 2010, 10:52:48 AM1/2/10
to mint...@googlegroups.com


2010/1/2 Geetha Sambasivam <geetha...@gmail.com>

㱨瑭氾ഊ㱨敡搾ഊ㱴楴汥㹄敶慴桡捨慫牡⁔桯摵歵剩⁓慳瑲慭‭⁔慭楬⁈敲楴慧攠䙯畮摡瑩潮㰯瑩瑬放ഊ㰯桥慤㸍਍਼扯摹㸍਍਼愠桲敦㴢瑥硴ㄷ⹧楦∠瑡牧整㵟扬慮款㱩浧⁳牣㴢灩挱㜮杩昢


இப்படித் தான் வருது எனக்கு எதைச் சுட்டினாலும்! :(  எல்லாத்தையும் பார்த்துட்டேன். தேவதை எதுவும் வரலை!


அது சீன தேவதை! :P


--
My blogs: [all in Tamil]
http://anmikam4dumbme.blogspot.com/
http://chitirampesuthati.blogspot.com/ photo blog now with english text too!
http://kathaikathaiyaam.blogspot.com/

BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
360.gif

Astrologer Vighnesh சென்னை

unread,
Jan 2, 2010, 10:55:48 AM1/2/10
to mint...@googlegroups.com
இதிலிருந்து தெரிகிறது எவ்வளவு பேருக்கு ஜோதிடத்தில் ஆர்வம் இருக்கு என்று
. எனக்கு இப்படி வருகிறது. இதை தமிழ் தெரிந்தவர்கள் பொருள் கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்

 

போனதோர்க் கருமம் நன்றாம் போவிடம் நன்மையாகும்

வானமும் மழையுமுண்டாம் வான்பொருள் வந்து சேரும்

யீனமுமிரக்கமாகும் யியலுடன்வாழ்வார்பிள்ளை

ஆனதோர்ப்பிணியும்போகும் அருந்துதிதனைத்தொட்டாலே

K V.Vighnesh
Chennai-93
mbl: +919382633377 or 9444961820
kvvig...@yahoo.co.in
http://astrologicalremedies.blogspot.com
http://in.groups.yahoo.com/group/Astro-Health-Remedies/join
skype: astrovighnesh
Sent from Mumbai, Maharashtra, India

Tirumurti Vasudevan

unread,
Jan 2, 2010, 11:00:21 AM1/2/10
to mint...@googlegroups.com
:-)))))))))

அது ஒரு மாதிரி க்யூரியாசிடி.
நம்பாதவங்க கூட என்னதான் சொல்லுது பாக்கலாம்ன்னு பார்ப்பாங்க!
இங்கெ போய் எத்தனி பேர் இத பாத்து இருக்காங்கன்னு கவுண்டரை பாருங்க!
http://classroom2007.blogspot.com/

திவாஜி

2010/1/2 Astrologer Vighnesh சென்னை <lakshmi...@gmail.com>

இதிலிருந்து தெரிகிறது எவ்வளவு பேருக்கு ஜோதிடத்தில் ஆர்வம் இருக்கு என்று
. எனக்கு இப்படி வருகிறது.

Innamburan Innamburan

unread,
Jan 2, 2010, 11:12:27 AM1/2/10
to mint...@googlegroups.com
சுகுமாரன், இந்திராணி வந்தாளோ? தேனீ, துர்க்கை தக்ஷ்நேஸ்வரிலிருந்தா?
 

2010/1/2 Tirumurti Vasudevan <agni...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
இன்னம்பூரான்

Tthamizth Tthenee

unread,
Jan 2, 2010, 11:28:52 AM1/2/10
to mint...@googlegroups.com

ஜோதிடம்  என்றவுடன்  நான் எழுதிய கட்டுரை நினைவுக்கு வந்தது

 

அன்பு நண்பர்களே ஜோதிடம் என்பது பொய்யல்ல
உண்மை,

விஞ்ஜானம் வளராத ஒருகாலத்தில்
வான சாஸ்த்திரம் என்னும் ஒரு வகை கணக்கை கொண்டு ,அன்று பெரியவர்கள்
கணித்து வைத்த விஷயங்கள்தான் இன்றும்,முழுநிலவுநாள்,மறை நிலவு
நாள்,சந்திர க்ரகணம் ,சூரிய க்ரகணம்
வருடம் ,மாதம், ,வாரம் ,தேதி ,மற்றும்
எல்லாவித வானசாஸ்திரங்களையும்
இன்றும் நாம் கடைப்பிடிக்க உதவியாய் இருக்கிறது
இன்று விக்ஞானிகள் கூறும் ப்ரபஞ்ஜ ரகஸ்யங்கள் அன்றே, நம் முன்னோர்களால்
வான சாஸ்திரம் என்று  எழுதி வைக்கப் பட்டதுதான்,
ஆகவே பெரியவர்கள் கண்டு பிடித்த ஜோதிடம் பொய்யல்ல ,உதாரணமாக அப்போது
ஒரு ஜனனம் நிகழும் போது ,உடனே அக் குழந்தையின் அழுகுரலை வைத்து ,அல்லது
அக்குழந்தையின் தலை வெளியே வருவதை வைத்து ,உடனே வானிலையை ஆராய்ந்து
அக்குழந்தை என்ன நக்ஷத்திரத்தில் என்ன வேளையில் பிறந்திருக்கிறது ,அக்
குழந்தையின் எதிர்காலம் எப்படி இருக்கும் ,என்பதை துல்லியமாக கணித்து
எழுதி வைக்கும் வல்லுனர்கள் இருந்தார்கள்,
அப்படிப்பட்ட வல்லுனர்களால் கணிக்கப் பட்டது ஜ்யோதிடம்,ஆனால்
தற்காலத்தில் அது மிகவும் தவறான முறையில்,பணம் சம்பாதிக்கப் பயன்
படுவதால்,யார் வேண்டுமானாலும் ,ஜ்யோதிடம் சொல்லலாம் என்று மாறிவிட்ட
காரணத்தால்
சரியான முறையில் சொல்லப்படாத காரணத்தால்,நாம் நம்பாத அளவுக்கு ஜ்யோதிடம்
மாறிப் போய் உள்ளது
அப்போது குழந்தையின் பிறப்பை துல்லியமாகக் கணித்தார்கள்,ஆனால் இப்போது
குழந்தை பிறக்கும் போது ,அக்குழந்தையின் தகப்பனின் கையில் இருக்கும்
கடிகாரத்தில் ஒரு நேரம் , மருத்துவம் பார்த்த வைத்தியரின்
கைக்கடிகாரத்தில் ஒரு நேரம்,
செவிலித்தாயிம்  கைக் கடிகாரத்தில் ஒரு நேரம் என்று ,மாறி இருக்கிற
காரணத்தாலும் ,மற்றும் குழந்தைகள்
வெளிநாட்டில் ,உள்நாட்டில் ,பிறக்கும்போது (latidude)
மாறுவதாலும் ,சரியாக கணிக்கப் படாமல் போகிறது,அதனால் பலன்கள் துல்லியமாக
கணிக்கப்படுவதில்லை,அதை வைத்துக் கொண்டு
ஜ்யோதிடம் பொய் என்று சொல்லுவ்தில் பொருள் இல்லை,ஜ்யோதிடம் உண்மை,இதை
நிரூபிக்க நாம் மேலும் ஆராய்வோம் ,மாற்றுக் கருத்துள்ளவர்கள் தயவு செய்து
தெரிந்த விஷயங்களைச் சொல்லுங்கள்,ஆரோக்கியமாக வாதிடலாம்,கற்றுக்
கொள்வோம்.........

எனக்குத் தெரிந்து  நான் கேள்விப்பட்ட ஒரு கதையை இங்கு சொல்லுகிறேன்

ஒரு மஹாராஜா, அவருக்கு இளவரசன் பிறக்கப் போகிறான் என்று அறிந்து ,பல
நாட்டிலிருந்தும் ,
அந்த நாட்டின் ஜ்யோதிட வல்லுனர்களும்  அரசவையில் கூடி இருக்கிறார்கள்

அப்போது அந்த நாட்டின் தலைமை ஜ்யோதிடர்
இளவரசன் பிறந்தவுடன் ஜாதகம் குறிக்கிறார்
குறித்து அதை அவர் படிக்கிறார்,
இளவரசன் வருங்காலத்தில் எப்படி இருப்பான்
என்று என்று சொல்லுகிறார், வருங்காலத்தில்
அந்த இளவரசன்,நாட்டை சிறப்பாக ஆளுவான்
ஒரு பெரிய சாம்ராஜ்யத்தைப் படிப்பான் என்றெல்லாம் அவர்
கூறுகிறார் ,அத்தனை ஜ்யோதிடர்களும்  அதை ஆமோதிக்கிறார்கள்
மன்னன் சந்தோஷமாக அனைவருக்கும் பரிசுகள் அளிக்கிறான், இந்த வேளையில்
வறுமையின் வடிவாக எலும்ப்பும் தோலுமாக ஒரு பெரியவ்ர் வருகிறார் .......
அவர் அரசனிடம் வந்து அத்தனை ஜ்யோதிடர்களும்
அவன் அளிக்கும் பரிசுகளுக்காக பொய் சொல்லுகிறார்கள்,பிறந்திருக்கும்
குழந்தை இன்னும் சரியாக ஒரே வருடத்தில் ஒரு பன்றி முட்டி இறந்து
போகும்,என்கிறார் ,அரசன் வெகுண்டெழுந்து
அச் ஜோசியனை சிறையில் இடச் சொல்லி உத்தரவு போடுகிறான்,அவனை சிறையில்
இடுகிறார்கள்
உடனே மன்னன் நாட்டிலிருக்கும் அத்தனை பன்றிகளையும் ஒன்றுகூட விடாமல்
கொல்லும்படி உத்தரவு போடுகிறான்,அனைத்துப் பன்றிகளும் கொல்லப் படுகின்றன,

ஒரு வருடம் ஓடுகிறது ,அந்த  இளவரசனின்  பிறந்த நாள் வெகு விமரிசையாகக்
கொண்டாடப்படுகிறது,விழா இனிதே முடிகிறது
அரசன் மகிழ்வுடன் இருக்கிறான் குழந்தைக்கு தங்கத் தொட்டிலிட்டு
தாலாட்டிக் கொண்டிருக்கிறார்கள்
திடீரென்று எப்போதோ மன்னனால் , வேட்டையாடப்பட்டு மண்டபத்தில் மேலே
மாட்டப்பட்டிருக்கும்  ஒரு காட்டுப் பன்றியின்
தலை கீழே விழுந்து தங்கத் தொட்டிலில், இருக்கும் இளவரசனைக்
கொல்கிறது........!!!!!!

அதிர்கிறான்  மன்னன், குழந்தை  இறந்த துக்கத்தையும்  தாங்கிக் கொண்டு
சிறையில் இருக்கும் தீர்கதரிசியை அழைத்து வரச் செய்து அவரை உட்கார வைத்து
மண்டியிட்டு தன்னை மன்னிக்கும் படி வேண்டிக் கொண்டு அவர் எப்படி ஜாதகம்
கணித்தார் என்று கேட்க்கிறான் அதற்க்கு அந்த முதியவர் முதலில் உன்னுடைய
ஆஸ்தான ஜ்யோதிடனைக் கூப்பிட்டு அவர் எப்படிக் கணித்தார் என்று கேள்
என்கிறார்......!

ஆஸ்தான ஜ்யோதிடர் வரவழைக்கப் படுகிறார்
அவர் நடுங்கிக் கொண்டே மன்னா எப்படி தவறு நேர்ந்தது என்று
புறியவில்லை ,என்று சொல்லிவிட்டு ,ப்ரசவ நேரத்தில் அந்தப்புரத்தில்
இருந்த ஒரு தாதியை வரவழைக்கிறார் .அவளிடம்
எப்படி தான் ஜாதகம் கணித்தேன் என்னும் வழி முறையை விளக்கச் சொல்லுகிறார்
அதற்கு அவள் ஐய்யா தாங்கள் கூறிய படி
எலுமிச்சை பழத்தை குழந்தையின் தலை வெளியே கண்டவுடன் வெளியில்
எறிந்தேன்,அதை வைத்து உள்ளே நான் இருந்த இடத்திலிருந்து வெளியே
இருக்கும் தூரத்தை கணக்கிட்டு தாங்கள் கணித்தீர்கள் என்றாள்
உடனே சிறையிலிருந்த முதியவ்ர் சரி ஆனால் நீ முதல் தரமே சரியாக வெளியில்
எலுமிச்சை பழத்தை வீசி அடித்தாயா என்று வினவ ,அதற்கு அந்த தாதி இல்லை
ஐய்யா ஒருமுறை வெளியில் எறிந்தேன் ,அது கதவின் மேல் பட்டு உள்ளே
விழுந்தது,அதனால் மீண்டும் எறிந்தேன் என்றாள்

உடனே முதியவ்ர் சொன்னார் அதுதான் தவறான கணிப்புக்கு காரணம் என்றார் ,ஆகவே
ஒரு வினாடி கூட ஒருவனின் தலையெழுத்தை மாற்றவல்லது
இப்போது நினைத்துப்பாருங்கள் ஜ்யோதிடத்தின் மகிமையை

அன்புடன்

தமிழ்த்தேனீ

 



 
2-1-10 அன்று, Innamburan Innamburan <innam...@googlemail.com> எழுதினார்:



--

Tthamizth Tthenee

unread,
Jan 2, 2010, 11:30:04 AM1/2/10
to mint...@googlegroups.com

இப்போது நினைத்துப்பாருங்கள் ஜ்யோதிடத்தின் மகிமையை

அன்புடன்

தமிழ்த்தேனீ

 

2-1-10 அன்று, Innamburan Innamburan <innam...@googlemail.com> எழுதினார்:
சுகுமாரன், இந்திராணி வந்தாளோ? தேனீ, துர்க்கை தக்ஷ்நேஸ்வரிலிருந்தா?



--

Innamburan Innamburan

unread,
Jan 3, 2010, 2:47:42 AM1/3/10
to mint...@googlegroups.com
 என்னை வம்புக்கு இழுக்காவிட்டால்,தேனியாருக்கு பொழுது  போகாது.  

 
2010/1/2 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

N. Kannan

unread,
Jan 3, 2010, 3:37:04 AM1/3/10
to mint...@googlegroups.com
வினோத்

இவ்வறிவியல் கற்றை (குவாண்டம்) இயலுடன் தொடர்புடையதாக உள்ளது. நம் மனது,
நமது தியானநிலை, உளப்பாங்கு இவை சார்ந்து செயல்படும் ஒரு வித்தையாக
உள்ளது. சும்மா materialisticஆக இதை நோக்கினால் இதற்கும் கிளி
ஜோஸ்யத்திற்கும் வித்தியாசமில்லாமல் பாமரத்தனமாய் படும்! இதை சகாதேவன்
உருவாக்கியிருக்கிறான் எனில் இது கணித அடிப்படையில் அமைகிறது என்று
பொருள். கணியன் பூங்குன்றன் இந்த வழியில் வந்தவராக இருக்க வேண்டும்.

க.>

Tthamizth Tthenee

unread,
Jan 3, 2010, 5:10:53 AM1/3/10
to mint...@googlegroups.com
கணியன் பூங்குன்றன் இந்த வழியில் வந்தவராக இருக்க வேண்டும்.

 
 
தமிழில் "கணி" என்ற சொல்லுக்கும் "கணக்கு" என்ற சொல்லுக்கும் 
சற்று வேறுபாடு உண்டு.

        "கணி" என்றால் "Computation" என்றுதான் பொருள்படும்.

        அது எப்படி என்பதை சற்றுப் பார்ப்போமே? பழங்காலத்தில் "கணியன்"
அல்லது "கணி" என்னும் ஒரு குறிப்பிட்ட வகைத் தொழில் புரிவோர்
இருந்தனர். தொல்காப்பியத்தில், பொருளதிகாரத்தில், புறத்திணையியலில் 
ஓரிடத்தில், 

        "மறுவில் செய்தி மூவகைக்காலமும்
         நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும்...."  77-78

என்று வருகிறது.

        இந்நூலுக்கு உரை எழுதியவர்களில் ஒருவரான இளம்பூரணர்
இவ்வாறு கூறுகிறார்....

        "அறிவன் என்பது கணியனை.
        மூவகைக் காலமும் நெறியினால் ஆற்றுதலாவது, பகலும் இரவும்
இடை விடாது ஆகாயத்தைப்பார்த்து, ஆண்டு நிகழும் வில்லும், மின்னும்,
ஊர்கோளும், தூமமும், மின்வீழ்வும், கோள்நிலையும்,மழைநிலையும்
பார்த்துப் பயன் கூறல்; ஆதலால் "மூவகைக் காலமும் நெறியின் ஆற்றிய
அறிவன்" என்றார்".

இது இளம்பூரணர் கூற்று.

        சுருக்கமாகக் கூறினால், "அறிவன்" அல்லது "கணியன்" என்பவர்கள்
வானநூலை நன்கு அறிந்து இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம்
முதலியவற்றைக்  கணித்துக்கூறுபவர்கள்.மேற்கூறிய விஷயங்களை
யெல்லாம்(வில்,மின்,etc.)  நோக்கி observation, சேகரித்து collection
and input, தொகுத்து compilation, ஆய்ந்து analysis, கணித்தல் computation.
        இதுதான் கணியனின் வேலை.
        அதாவது கணித்தல் வேலை.

        "புரிவின்றி யாக்கைபோற் போற்றுவ போற்றிப்
        பரிவின்றிப் பட்டாங் கறியத் - திரிவின்றி
        விண்ணில் உலகம் விளைவிக்கும் விளைவெல்லாம்
        கண்ணி உரைப்பான் கணி"

என்று வேறொரு பாடலையும் இளம்பூரணர் மேற்கோள் காட்டுகிறார்.

    கணியர்கள் பலவகையான கருவிகள் கொண்டு வானவீதியில்
கிரகங்களைக் கண்டும், அவற்றின் போக்கைக் கணக்கிட்டும்
கூறியதோடல்லாமல், அன்றாடம் நடக்கும்  ஆண்டு, மாதம், கிழமை,
திதி,சாமம், நாழிகை முதலியவற்றையும் கணித்துக் கூறினர்.
    பஞ்சாங்கத்தையும் அவர்களே கணித்தனர்.

       இதற்காகப் பல வகையான கணிதமுறைகளையும் அவர்கள்
கற்றிருந்தனர்.

       சங்க காலத்தில் "யாதும் ஊரே, யாவரும் கேளிர்"-புகழ்
கணியன் பூங்குன்றனார்,கணி மேதாவியார் என்றெல்லாம் புலவர்கள்
இருந்திருக்கின்றனர். பின்னவர் சற்றுப் பிற்பட்டவர்- காலத்தால்.
"ஏலாதி, திணைமாலை நூற்றைம்பது" ஆகியவற்றை எழுதியவர்.
ஆகவே சங்கம் மருவிய காலத்தைச் சேர்ந்தவர்.

        கணித நூலைக் கணியர்கள் கணிப்புக்குப் பயன்படுத்தினர்.

        இது எட்டு அங்கங்களைக் கொண்டது. சங்கலிதம்(கூட்டல்),
விபகலிதம்(கழித்தல்), குணனம்(பெருக்கல்), பாகாரம்(வகுத்தல்), வர்க்கம்,
வர்க்கமூலம், கனம்,கனமூலம் ஆகியவை அவை.
        கணக்கு என்பது சற்று வித்தியாசமானது.இதில் நான்கு
simple functions of Arithmetic ஆகிய கூட்டல், கழித்தல், பெருக்கல்,
வகுத்தல் ஆகியவற்றுடன் எண்ணுதலும் இடம் பெறும்.

        "Accounts" என்ற பொருளிலும் "கணக்கு" என்ற சொல் பயன்படும்.

        "கணக்கன்" என்ற சொல் கணக்கப்பிள்ளையாகிய Accountantஐக்
குறிக்கும்.

        கணக்கிட்டு அறிவோரையும் 'கணக்கர்' என்பர்.

        Logic என்னும் தர்க்க சாஸ்திரத்தில் வல்லவரான சமயவாதிகள் -
"சமயக் கணக்கர்".

        ஆகவே, "கணித்தல்" என்பதுதான் "Computation" என்பதனை
நேரடியாகக் குறிப்பிடும் சொல்.

    தற்சமயம்,"ஜாதகம் கணித்தல்" என்பதனை "Computation of
Horoscope" என்றுதான் கூறுகிறோம். "பஞ்சாங்கம் கணித்தல்" என்பதை
"Computation of Ephemeris or Almanac" என்றும் கூறுகிறோம்.  

டாக்டர் விஜயபாரதி

 

அன்புடன்

தமிழ்த்தேனீ

 

 
 
 


 
3-1-10 அன்று, N. Kannan <navan...@gmail.com> எழுதினார்:
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Innamburan Innamburan

unread,
Jan 3, 2010, 6:23:06 AM1/3/10
to mint...@googlegroups.com
For a change, not in GoogleTamil, but in English. I perceive Kannan's perspective and never do I cease to wonder at the amazing and incredible  contributions of the type mentioned. Again, my guide in most such matters is Joseph Campbell. 
My levity was aimed merely at trapping TamilthEni. He promptly walked into it. But, had redeemed himself handsomely in his latest posting. One achievement of MinTamil is to create such bondages amongst us such that levity, impertinence, friendly poking of fun, are all taken in the stride, as part of the game.
Regards to all and with deep respect to the heritage that we are heir to.
innamburan

2010/1/3 Tthamizth Tthenee <rkc...@gmail.com>



--

Subashini Tremmel

unread,
Jan 3, 2010, 8:08:41 AM1/3/10
to mint...@googlegroups.com
நானும் முயன்று பார்த்தேன் கண்ணன். அகஸ்தியன் அழகான பாடலுடன் வந்தார். இப்படி குறி பார்ப்பதிலும் ஒரு சந்தோஷம் இருக்கின்றது..:-)
 
சுபா

2010/1/2 N. Kannan <navan...@gmail.com>

shylaja

unread,
Jan 3, 2010, 8:35:46 AM1/3/10
to mint...@googlegroups.com
காரார் குழல் கொண்டை கட்டுவிச்சி கட்டேறி
சீரார் சுளகில் சில நெல் பிடித்தெறியா
வேரா விதிர் விதிரா மெய்சிலிரா கைமோ வா
பேராயிரம் உடையான் என்றாள்
 
 
 
 சிறிய திருமடலில் திருமங்கை ஆழ்வார்  இந்த கட்டுவிச்சி(குறத்தி) சோதிடம் பற்றி எழுதி இருக்கிறார்/ பாடலின்முழு அர்த்தம்  இன்னும் பிடிபடவில்லை
 
பத்மாவதி கல்யாணத்தில்  ஸ்ரீனிவாசரே குறத்தி வேஷம்போட்டு  குறி சொல்லி இருக்கிறார்!
 


2010/1/3 Subashini Tremmel <ksuba...@gmail.com>

N. Kannan

unread,
Jan 3, 2010, 11:37:15 AM1/3/10
to mint...@googlegroups.com
On 1/3/10, shylaja <shyl...@gmail.com> wrote:
> காரார் குழல் கொண்டை கட்டுவிச்சி கட்டேறி
> சீரார் சுளகில் சில நெல் பிடித்தெறியா
> வேரா விதிர் விதிரா மெய்சிலிரா கைமோ வா
> பேராயிரம் உடையான் என்றாள்
>
>
>
> சிறிய திருமடலில் திருமங்கை ஆழ்வார் இந்த கட்டுவிச்சி(குறத்தி) சோதிடம் பற்றி
> எழுதி இருக்கிறார்/


கட்டுவிச்சி பற்றிய குறிப்பு திருவாய்மொழியிலும் உண்டு. ஆண்ட்டள்
திருக்கல்யாணத்தில் பெருமாளே கள்ளழகர் கோயில் கட்டுவிச்சியாக வருவதாக
ஐதீகம். (இது குறித்து ஆழ்வார்க்கடியேனில் ஒரு கட்டுரையுண்டு).

க.>

Innamburan Innamburan

unread,
Jan 3, 2010, 2:40:19 PM1/3/10
to mint...@googlegroups.com
மெய் சிலிர்க்கிறது. மனத்திலோ நிறைவு.
இன்னம்பூரான்


 
2010/1/3 N. Kannan <navan...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

V, Dhivakar

unread,
Jan 4, 2010, 2:30:52 AM1/4/10
to mint...@googlegroups.com
இந்த நாடி ஜோதிஷக்காரர்கள்தான் இப்படி ஒரு ஓலையைத் தேடிப் பிடித்து அழகான தமிழில் படிப்பார்கள். பிறகு பொருளும் சொல்வார்கள்.
 
அதேதான்.. ஓலை கொடுத்துவிட்டீர்கள். பொருள் எங்கே சார்..
 
அருந்துதியார் (அருந்ததி?) அழகான தமிழில் வாழ்த்திவிட்டுப் போய்விட்டார்..
'வானமும் மழையுமுண்டாம்.. வான்பொருள் வந்து சேரும்' என்று வேறு சொல்லிவிட்டார்.. வான்பொருள் என்றால் ராக்கெட்டா, விமானமா.. அப்படியென்றால் புஷ்பக விமானமாக அனுப்பவும்.. எரிபொருள் செலவில்லை..
 
தி
--
Dhivakar
http://www.vamsadhara.blogspot.com
http://aduththaveedu.blogspot.com

Tirumurti Vasudevan

unread,
Jan 4, 2010, 3:22:06 AM1/4/10
to mintamil

எரி கல்லா இருக்கும்!
:-))))

2010/1/4 V, Dhivakar <venkdh...@gmail.com>

. வான்பொருள் என்றால் ராக்கெட்டா, விமானமா.. அப்படியென்றால் புஷ்பக விமானமாக அனுப்பவும்.. எரிபொருள் செலவில்லை..

V, Dhivakar

unread,
Jan 4, 2010, 4:28:18 AM1/4/10
to mint...@googlegroups.com
அடடே! எப்பேர்ப்பட்ட ஆசை..
 
எரி கல்லாக இருந்தால்தான் என்ன? நல்லா போகுமே.. ஒழுங்காக வியாபாரம் செய்து பிழைக்கலாம்..
 
தி

 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

devoo

unread,
Jan 4, 2010, 5:10:10 AM1/4/10
to மின்தமிழ்
Jan 4, 1:30 am, "V, Dhivakar"

>>வான்பொருள் என்றால் ராக்கெட்டா<<

மேவரும் *வான்பொருள்* தந்துநின் தோள்நம்பி
யாவர் அடைந்தவர்க்கு அவையும் புரைய. 51

(வளையாபதி)

வான்புகழ் கொண்ட தமிழ்நாடு - பாரதி

வான்புகழ் வள்ளுவம்

மரவடியைத் தம்பிக்கு வான்பணயம் வைத்ததை அருளிச் செயல்
போற்றுகிறது

தேவ்

V, Dhivakar

unread,
Jan 4, 2010, 5:24:52 AM1/4/10
to mint...@googlegroups.com
ஓ! சரி.. வந்ததை ஏன் மறுப்பானேன்.. பெற்றுக் கொள்வோம்!!
 
தி

 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

S.Partha sarathy

unread,
Jan 5, 2010, 10:54:31 AM1/5/10
to mint...@googlegroups.com
தமீழ்தேனீ அவர்களே!
கடந்தமாதம் பாரதியை நினைவுகூர்ந்த மின்தமிழ் நண்பர்கள் 

ஜோதிடம் தனை இகழ்!

என ஆத்திச்சூடியில் அவர் கூறியதை மறந்திருக்கமாட்டார்கள் என நம்புகிறேன்.

விஞ்ஜானம் வேறு வான சாஸ்த்திரம் வேறு அல்ல. உண்மையில் வானவியலே அனைத்து அறிவியல்களுக்கும் தாய் ஆகும். ஜோதிடம் அதிலிருந்து பிறந்த மூடக்குழந்தை. அதன் பிறப்பிடம் இந்தியாவும் அன்று. எனவே அதை இந்தியரின் கண்டுபிடிப்பு என்று கருதி அதற்கு ஆதரவாக ஆயிரம் கதைகளை கூறினாலும் மயங்கவேண்டாம்.
அன்புடன்,
பார்த்தசாரதி


2010/1/2 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

Tthamizth Tthenee

unread,
Jan 6, 2010, 10:09:14 AM1/6/10
to mint...@googlegroups.com
திரு பார்த்தசாரதி அவர்களே

விஞ்ஞானம் வேறு வானசாத்திரம் வேறல்ல
என்று இப்போது  நீங்கள் கூறியதை  உணரும் பகுத்தறிவு இப்போது ந்மக்கிருக்கிறது
அந்தக் காலத்தில்  மக்கள்  விஞ்ஞானம் என்று சொன்னால்   புறிந்துகொள்வார்களா

அதுமட்டுமல்ல

ஜோதிடம்  என்பது  நம் முன்னோர்களால் ஒப்புக்கொள்ளப்பட்ட  கணிதம்

முந்தைய காலத்தில்  வானத்தைப் பார்த்து கோள்களின் இருப்பை வைத்தே
ஒவ்வொரு  கணத்தையும்   கணித்தனர் நம் முன்னோர்
அப்போது தொலைநோக்கிக் கருவி இல்லை

ஆகவே ஜோதிடம் என்பது வானவியல் என்னும் தாய்க்குப்  பிறந்த
 மூடக் குழந்தை என்னும் வாதத்தை ஒப்புக்கொள்ள முடியவில்லை


அன்புடன்
தமிழ்த்தேனீ


5-1-10 அன்று, S.Partha sarathy <spsar...@gmail.com> எழுதினார்:

Tirumurti Vasudevan

unread,
Jan 6, 2010, 10:30:57 AM1/6/10
to mint...@googlegroups.com


2010/1/5 S.Partha sarathy <spsar...@gmail.com>

தமீழ்தேனீ அவர்களே!
கடந்தமாதம் பாரதியை நினைவுகூர்ந்த மின்தமிழ் நண்பர்கள் 

ஜோதிடம் தனை இகழ்!

என ஆத்திச்சூடியில் அவர் கூறியதை மறந்திருக்கமாட்டார்கள் என நம்புகிறேன்.

எப்பொருள் யார் யார்....
 
 ஜோதிடம் அதிலிருந்து பிறந்த மூடக்குழந்தை.

உங்களூக்கு அதில் அனுபவம் சரியாக அமையவில்லை போலும்.
 
அதன் பிறப்பிடம் இந்தியாவும் அன்று.
ஏன் இல்லாமல் என்ன? வராஹமிஹிரருக்கு முந்தைய காலத்தில் வேறு எங்கே இருந்ததுன்னு சொல்லுங்களேன்!
:-))
திவாஜி

devoo

unread,
Jan 6, 2010, 12:27:19 PM1/6/10
to மின்தமிழ்
வால்மீகி ராமாயணத்தில் கோள்நிலைக் குறிப்பு பல இடங்களில் வருகிறது;
’பூர்வ பாராசர்யம்’ வராஹ மிஹிரருக்கும் முற்பட்டது

தேவ்

On Jan 6, 9:30 am, Tirumurti Vasudevan <agnih...@gmail.com> wrote:
> 2010/1/5 S.Partha sarathy <spsarath...@gmail.com>


>
> > தமீழ்தேனீ அவர்களே!
> > கடந்தமாதம் பாரதியை நினைவுகூர்ந்த மின்தமிழ் நண்பர்கள்
>
> > ஜோதிடம் தனை இகழ்!
>
> > என ஆத்திச்சூடியில் அவர் கூறியதை மறந்திருக்கமாட்டார்கள் என நம்புகிறேன்.
>
> எப்பொருள் யார் யார்....
>
> >  ஜோதிடம் அதிலிருந்து பிறந்த மூடக்குழந்தை.
>
> உங்களூக்கு அதில் அனுபவம் சரியாக அமையவில்லை போலும்.
>
> > அதன் பிறப்பிடம் இந்தியாவும் அன்று.
>
> ஏன் இல்லாமல் என்ன? வராஹமிஹிரருக்கு முந்தைய காலத்தில் வேறு எங்கே இருந்ததுன்னு
> சொல்லுங்களேன்!
> :-))
> திவாஜி
>
> --

> My blogs: [all in Tamil]http://anmikam4dumbme.blogspot.com/http://chitirampesuthati.blogspot.com/photo blog now with english text too!http://kathaikathaiyaam.blogspot.com/

S.Partha sarathy

unread,
Jan 6, 2010, 9:12:08 PM1/6/10
to mint...@googlegroups.com
 அந்தக்காலத்தில் கூறிய அனைத்தும் தற்போது நாம் நம்பத்தேவையில்லை.
உதாரணத்திற்கு என நம்பினார்கள், இன்று அது உண்மையில்லை என நாம் எல்லோரும் அறிவோம். நம் முன்னோர்கள் கூறியதற்காக வறட்டு பிடிவாதமாக பூமி தட்டையானது என நாம் வாதிடுவதில்லை.
அதுபோல் இயற்கையைப் பற்றி தெளிவில்லாது அதைக்கண்டு பயந்த காலத்தில் கூறிய கருத்துகள் இக்காலத்தில் நாம் பின்பற்றுவது தேவை இல்லாதது.

அன்புடன்,
பார்த்தசாரதி

2010/1/6 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

Tirumurti Vasudevan

unread,
Jan 6, 2010, 10:28:39 PM1/6/10
to mint...@googlegroups.com
பாரதீயர் யார் பூமி தட்டையானது என்று சொன்னார்கள்?

2010/1/7 S.Partha sarathy <spsar...@gmail.com>

. நம் முன்னோர்கள் கூறியதற்காக வறட்டு பிடிவாதமாக பூமி தட்டையானது என நாம் வாதிடுவதில்லை.

Tthamizth Tthenee

unread,
Jan 7, 2010, 12:57:55 AM1/7/10
to mint...@googlegroups.com
அதுபோல் இயற்கையைப் பற்றி தெளிவில்லாது அதைக்கண்டு பயந்த காலத்தில் கூறிய கருத்துகள் இக்காலத்தில் நாம் பின்பற்றுவது தேவை இல்லாதது.


இப்போது  இயற்கையைப் பற்றி தெளிவு வந்து விட்டதா..?

நாம் இப்போது இயற்கையைப் பார்த்து பயப்படவில்லையா..?

நம் முன்னோர்களைவிட  நாம் அறிவாளிகள்தானா...?



அன்புடன்
தமிழ்த்தேனீ






7-1-10 அன்று, Tirumurti Vasudevan <agni...@gmail.com> எழுதினார்:
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Innamburan Innamburan

unread,
Jan 7, 2010, 1:03:14 AM1/7/10
to mint...@googlegroups.com
பார்த்தசாரதி,
எதற்கு இந்த வாதம், விதண்டாவாதம்  எல்லாம்? எல்லாருக்கும் எல்லாம் தெரிந்திருக்க முடியாது? மூடநம்பிக்கைகளை களைய விரும்பும் யான், வியந்து புரிந்து கொள்ளாத/கொள்ளமுடியாத  விஷயங்கள் பல. அறிவியலின் அடித்தளமே,தீர விசாரித்து, அறிவை வளர்ப்பது அல்லவோ? ஒரு வினா: இயற்கையை கரைத்து குடித்து விட்டோமா?
அன்புடன்,
இன்னம்பூரான்

 
2010/1/7 Tirumurti Vasudevan <agni...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Geetha Sambasivam

unread,
Jan 7, 2010, 1:05:53 AM1/7/10
to mint...@googlegroups.com
//நம் முன்னோர்கள் கூறியதற்காக வறட்டு பிடிவாதமாக பூமி தட்டையானது என நாம் வாதிடுவதில்லை.//

குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும், விஞ்ஞானம் சொல்லும் முன்னே நம் முன்னோர்கள் பூமி உருண்டை என்று சொல்லிவிட்டார்கள். தவறான கருத்தைக் கூறுகிறீர்கள். :((((((((((((((

2010/1/7 S.Partha sarathy <spsar...@gmail.com>

Tthamizth Tthenee

unread,
Jan 7, 2010, 1:32:55 AM1/7/10
to mint...@googlegroups.com
இன்றைய  காலகட்டத்திலும் ஏற்படும் சூரிய கிரகணம், சந்திர கிரகணம்
போன்ற அனைத்தையுமே  நம் முன்னோர்கள்  விஞ்ஞானம் வளராத அக்காலத்திலேயே  கணித்து வைத்துவிட்டார்கள்

அவர்கள் கணித்ததைப் போலவே  இன்றும் அனைத்தும் ஏற்படுகின்றன

நம்  முன்னோர்கள்  அறிந்து வைத்திருந்த பல இயற்கை ரகசியங்கள்  இன்றும் நம்மால் அறியமுடியவில்லை என்பதே உண்மை

அவர்கள்  முறையாக  அடுத்த வாரிசுகளுக்கு அவற்றின் ரகசியங்களை  கற்றுக்கொடுக்காமல் போனதுதான்
நம் முன்னோர்கள் செய்த  ஒரு தவறான  காரியம்

இப்போதும் ஒன்றும் கெட்டுப் போய்விடவில்லை

நம்முடைய  முன்னோர்கள் சொன்னதையெல்லாம்  முறையாக ஆராய்ந்தால்

நாம் இன்னும் பல கண்டுபிடிப்புகள் நிகழ்த்தலாம்

அறிவியலில்  முன்னே நிற்கும்  பல நாடுகள்

நம்முடைய  நால்வகை  வேதங்களையும்  முறையாக ஆராய்ந்துதான்
இன்றும் கண்டுபிடிப்புகள்  நிகழ்த்துகிறார்கள்

நம் வேதங்களில் இல்லாத  அறிவியல் ஏதுமில்லை என்பது என்னுடைய தாழ்மையான கருத்து




அன்புடன்
தமிழ்த்தேனீ

7-1-10 அன்று, Geetha Sambasivam <geetha...@gmail.com> எழுதினார்:

S.Partha sarathy

unread,
Jan 7, 2010, 9:30:40 AM1/7/10
to mint...@googlegroups.com
அனைவருக்கும் எனது தாழ்மையன பதில்:
விஞ்ஞானம் என்பது ஒரு அணுகுமுறை (Methodology). அதாவது ஒரு பிரச்சனையை
1. உற்றுநோக்குதல் (Observation)
2. அதன் மூலம் கிடைத்த தகவல்களை ஆராய்தல் (Data Analsis)
3.ஆராய்ச்சி முடிவுகளை பரிசோதனை செய்து பார்த்தல் ( Experimentation)
4.பரிசோதனை முடிவுகள் எதிர்பார்த்த விளைவோடு ஒத்துப் போதல்

நம் முன்நோர்கள் சூரிய கிரகணம், சந்திர கிரகணம் போன்ற வற்றை பல வருடங்கள் உற்றுநோக்கி, அதில் கிடைத்தத் தகவல்களை ஆராய்ந்து, முடிவில்   அதற்கான தோறாய வாய்பாட்டை( Emperical formula) உருவாக்கி, அதன்படி எதிர்பார்த்த நேரதில் கிரகணங்கள் தோன்றுவதை உறுதிப்படுத்தினர்.

எனவேதான் வானவியலை அறிவியலின் தாய் என்கின்றோம்.
அறிவியல் சிந்தனை என்பது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே மனிதனிடத்திலேயே ஆரம்பித்துவிட்டது.

ஜோதிடம் என்பது பிற்காலதில் வானவியலை ”தனிமனதினின்” வாழ்க்கையோடு தொடர்புபடுத்தி பிறந்தால் அதை மூடக்குழந்தை எனலாம்.

நம்முன்னோர்கள் ஆரம்பித்துவைத்த வானவியல் எக்காலத்திற்கும் பொருந்துவதால் அது அறிவியல்.
அதிலிருந்து பிறபிக்கப்பட்ட ஜோதிடம் எக்காலத்திற்கும் பொருந்த்தாததால் அது மூடநம்பிக்கை.

எண்கணிதம் (Number system) - அறிவியல் 
அதிலிருந்த பிறந்த Numerology - மூடநம்பிக்கை 

விஞ்ஞானம் என்பது ஆய்வுக்கூடத்தில் தற்காலத்தில் கண்டுபிடித்தது என்ற தவறான பிரம்மை நம்மில் பலருக்கு இருப்பதால் முதலில் அதை உச்சரித்தாலே அலர்ஜி ஏற்படுகின்றது.

மிகஎளிதாக சொல்லவேண்டுமானால் விஞ்ஞானம் என்பது
வள்ளுவரின் மொழியில்
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.
படிக்காத ஒரு குடும்பத்தலைவியும் தனது வாழ்க்கைப்பிரச்சனைகளை மேற்கூறிய முறையில் அணுகினால் அதுவும் அறிவியல் முறையே!
அன்புடன்,
பார்த்தசாரதி



2010/1/7 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

Tirumurti Vasudevan

unread,
Jan 7, 2010, 10:48:40 AM1/7/10
to mint...@googlegroups.com
உங்களுக்கு அனுபவம் ஏற்படவில்லை என்றேன், நீங்க ஒரு நல்ல ஜோதிஷரை சந்தித்து அவரிடம் ஜோதிடம் கேட்டு இருந்தால் இப்படி ஒரு முடிவு செய்யமாட்டீர்கள்.

உங்க வழிக்கே வரேன்.


2010/1/7 S.Partha sarathy <spsar...@gmail.com>

அனைவருக்கும் எனது தாழ்மையன பதில்:
விஞ்ஞானம் என்பது ஒரு அணுகுமுறை (Methodology). அதாவது ஒரு பிரச்சனையை
1. உற்றுநோக்குதல் (Observation)
நல்ல ஜோதிடர் ஜாதகங்களை உற்று நோக்குகிறார்.
 
2. அதன் மூலம் கிடைத்த தகவல்களை ஆராய்தல் (Data Analsis)
தான் கற்ற சாஸ்திரப்படி ஆராய்கிறார்.

3.ஆராய்ச்சி முடிவுகளை பரிசோதனை செய்து பார்த்தல் ( Experimentation)
தன் கணிப்பை சொல்லுகிறார். பின்னால் அது சரியாக வருகிறதா என்று  கவனிக்கிறார்.
சிலர் கணிப்பை சொல்லு முன்  இது வரை நடந்ததை சொல்லி உறுதி படுத்திக்கொள்வதும் உண்டு.

4.பரிசோதனை முடிவுகள் எதிர்பார்த்த விளைவோடு ஒத்துப் போதல்

இதை ஜோதிடம் கேட்டவர் செய்கிறார்.
இப்படிப்பார்த்தால் ஜோதிடம் அறிவியல் சார்ந்தது.
பல நூறு ஆண்டுகள் சேகரித்த ஸ்டாடிஸ்டிக்ஸ் அடிப்படையாக இருக்கலாம் என்பதையும் மறுக்க முடியாது.

Tthamizth Tthenee

unread,
Jan 7, 2010, 11:44:57 AM1/7/10
to mint...@googlegroups.com
விஞ்ஞானம் என்பது ஒரு அணுகுமுறை (Methodology). அதாவது ஒரு பிரச்சனையை
1. உற்றுநோக்குதல் (Observation)
2. அதன் மூலம் கிடைத்த தகவல்களை ஆராய்தல் (Data Analsis)
3.ஆராய்ச்சி முடிவுகளை பரிசோதனை செய்து பார்த்தல் ( Experimentation)
4.பரிசோதனை முடிவுகள் எதிர்பார்த்த விளைவோடு ஒத்துப் போதல்


என்று நீங்கள் மேலே  கூறிய  அனைத்தையுமே  செய்துதானே  நம்  முன்னோர்கள்  ஜோதிடத்தையும்  ஏற்படுத்தினர்

அவர்கள்  ஜோதிடம், கணிதம், வானசாத்திரம், நாம் ஆரோக்கியமாக வாழ வேண்டிய முறைகள்,  வருங்காலத்தில் எப்படி நடந்து கொள்ளவேண்டும்  என்னும் வழி முறைகள், மருத்துவம்,  எல்லாவற்றையுமே  ஆராய்ந்து  அனுபவித்து ,கவனித்து  அதன் விளைவுகளை  மனதில் வாங்கி  அதன் மூலமாகவே  எல்லாவற்றையும்  தங்கள்  அனுபவ பூரவமாக  உணர்ந்து   பிறகுதான்  அவற்றை நாம் கடைப்பிடிக்கும் முறைகளாக ஏற்படுத்தி வைத்தனர்

அதனால்  ஜோதிடம் வான சாத்திரத்தில் ஒரு பகுதி என்று வேண்டுமானால் சொல்லலாம்

அனைத்தும் அறிவியலே


அன்புடன்
தமிழ்த்தேனீ








7-1-10 அன்று, S.Partha sarathy <spsar...@gmail.com> எழுதினார்:

S.Partha sarathy

unread,
Jan 7, 2010, 11:10:13 AM1/7/10
to mint...@googlegroups.com
திருமதி வாசுதேவன் அவைகளே,
 
1. உற்றுநோக்குதல் (Observation)
நல்ல ஜோதிடர் ஜாதகங்களை உற்று நோக்குகிறார்

பதில்:
ஜாதகம் என்பதே மூடநம்பிக்கை என்கின்றபோது அதை உற்றுநோக்குவதால் என்ன பயன்?
அன்புடன்
பார்த்தசாரதி

2010/1/7 Tirumurti Vasudevan <agni...@gmail.com>

S.Partha sarathy

unread,
Jan 7, 2010, 11:35:54 AM1/7/10
to mint...@googlegroups.com
இன்னம்பூரான் அவர்களுக்கு,

ஒரு வினா: இயற்கையை கரைத்து குடித்து விட்டோமா?
பதில்:
இயற்கை பின்பற்றும் வழிமுறைகளை முறைப்படி ஆராய்வதே ஆதிகாலத்திலிருந்து இக்காலம் வரை அறிவியலின் தலையாய நோக்கமாகும்.
எனவேதான் உண்மையான விஞ்ஞானி இயற்கையின் பிரம்மாண்டத்தை நன்கு அறிந்த்ததால் மற்றவர்களைக் காட்டிலும் பல மடங்கு இயற்கையை நேசிப்பவனாக இருக்கின்றான்.
மனிதன் (விஞ்ஞானி) இயற்கையை வெல்ல ஒருபோதும் நினைத்து கிடையாது. இயற்கைஅழிவுகளிலிருந்து தன்னைக் காத்துக்கொள்ளவே விழைகின்றான்.
உதரணமாக காட்டில் வாழ்ந்த மனிதன் விலங்குகளிலிருந்து தன்னைக் காத்துக்கொள்ள வீடு கட்டி வாழத்துவங்கினான்.
வெயிலிருந்தும் குளிரிலிருந்தும் காத்துக்கொள்ள அதற்கேற்ற ஆடைகள் அணியத்துவங்கினான்,
ஏன்? மழையில் நனையமல் செல்ல குடை கண்டுபிடித்தான். 
இக்கண்டுபிடிப்புகளால் நாம் இயற்கையை வென்றுவிடவில்லை நம்மை அதன் இடையூருகளிலிருந்து முடிந்த அளவு காத்து கொள்ளவே முற்படுகின்றோம்.

அன்புடன்,
பார்த்தசாரதி




2010/1/7 Innamburan Innamburan <innam...@googlemail.com>

S.Partha sarathy

unread,
Jan 7, 2010, 12:29:14 PM1/7/10
to mint...@googlegroups.com
தமிழ்த்தேனீ அவர்களே!
உலகில் யார் செய்தாலும் ஒரே விளைவு ஏற்படுவதுதான் அறிவியல்.
அதேபோல் உலகில் யாரிடம் கேட்டாலும் ஒரே பலன் ஏற்பட்டால் நான் ஏன் ஜோதிடத்தை மறுக்கப்போகின்றேன்.
ஏதேனும் ஒரு சாக்கு...
ஒன்று ஜாதகம் எழுதியவரை கணிப்பவர் தவறு என்பார்..
அல்லது கணிப்பவரை ஜாதகம் எழுதியவர் தவறு என்பார்... பல நூற்றண்டுகளாக தொடரும் கதை!
காக்கா உட்கார பனம்பழம் விழுந்தகதையாக ஆயிரத்தில் ஒருவர் அதுவும் ஒரேஒருமுறை மார்த்தட்டிக் கொள்வார்.....

S.Partha sarathy

unread,
Jan 7, 2010, 2:22:09 PM1/7/10
to mint...@googlegroups.com
திவாஜி அவர்களே!
உங்கள் கேள்வியிலேயே பதில் உள்ளது.

கேள்வி:

 உங்களூக்கு அதில் அனுபவம் சரியாக அமையவில்லை போலும்.
அதன் பிறப்பிடம் இந்தியாவும் அன்று.
ஏன் இல்லாமல் என்ன? வராஹமிஹிரருக்கு முந்தைய காலத்தில் வேறு எங்கே இருந்ததுன்னு சொல்லுங்களேன்!

பதில்:
 வராஹமிஹிரின் காலம் கி.பி.505- 587. விக்கிரமாதித்தனின் அவையில் இருந்தவர். அதாவது புராணகாலத்திற்கு துளியும் சம்மந்தம் இல்லாதவர்.
அதனால்தான் நம் புராணங்களில், இதிகாசங்களில் இராசி பற்றிய பேச்சு கிடையவே கிடையாது.
 சகுனங்கள் பற்றிய குறிப்புகள் மட்டும் உண்டு. 
ஆனால் சகுணம் வேறு.ஜாதகம் மூலம் கணிக்கும் ஜோதிடம் வேறு.
அவர்கள் உபயோகபடுத்தியது ஒரு நாட்காட்டியை (Calendar) உருவாக்க தேவையான் காரணிகள் மட்டுமே!
அதாவது,
வானில் நிலவின் இடத்தைச் சொல்ல 27 நட்சத்திரங்கள். ( அதாவது, நிலா வானில் ஒரு நட்சத்திரத்திற்கு அருகிலிருந்து மீண்டும் அதே இடத்திற்கு வர 27நாட்கள் ஆகும். இதை siderial motion என்பர்)

 மாததின் நாட்களைக்குறிக்க திதி மற்றும் பஷ்சம்.( நிலா பூமியை சுற்றிவர சுமார் 30நாட்கள் ஆவதால்.இன்றும் சிலர் இதை பின்பற்றுகிறோம். கிழமைகளை எங்கும் காணஇயலாது  )


முழுக்க முழுக்க வானவியல். எதிர்கால கணிப்பு எங்கும் கிடையாது.

அப்படியானால் ஜோதிடம் எப்படி இந்தியவில் ஆரம்பித்தது?
இந்தியாவில் மட்டும் அல்லாது உலகம் முழுதும் 12 இராசிகளின் பெயர்களும்  ஒன்றுபோல் இருப்பது ஏன்? (உ.ம்.) சிம்மம் - Leo

....ஒரு சின்ன (விடுமுறை) விண்ணப்பம் 
மீண்டும் திங்கள் அன்று சந்திப்போம்,
அன்புடன்,
பார்த்தசாரதி



2010/1/6 Tirumurti Vasudevan <agni...@gmail.com>

Innamburan Innamburan

unread,
Jan 7, 2010, 11:33:46 PM1/7/10
to mint...@googlegroups.com
எந்த அறிவியல் சாதனை அவரை திருமதி என விளிக்க சொன்னது?
இன்னம்பூரான்
 

2010/1/7 S.Partha sarathy <spsar...@gmail.com>

Innamburan Innamburan

unread,
Jan 7, 2010, 11:34:11 PM1/7/10
to mint...@googlegroups.com


2010/1/8 Innamburan Innamburan <innam...@googlemail.com>

S.Partha sarathy

unread,
Jan 8, 2010, 12:45:33 AM1/8/10
to mint...@googlegroups.com


2010/1/8 Innamburan Innamburan <innam...@googlemail.com>

எந்த அறிவியல் சாதனை அவரை திருமதி என விளிக்க சொன்னது?
இன்னம்பூரான்
 because he/she has register the name as given below.:
2010/1/7 Tirumurti Vasudevan <agni...@gmail.com>
உங்களுக்கு அனுபவம் ஏற்படவில்லை என்றேன், நீங்க ஒரு நல்ல ஜோதிஷரை சந்தித்து அவரிடம் ஜோதிடம் கேட்டு இருந்தால் இப்படி ஒரு முடிவு செய்யமாட்டீர்கள்.

உங்க வழிக்கே வரேன்.
I dont know his orginal name. (pl. forgive me.Tamil Font is not working)
regards,
S.Parthasarathy
 

S.Partha sarathy

unread,
Jan 8, 2010, 12:48:32 AM1/8/10
to mint...@googlegroups.com
Oh! sorry!! Thirumurthi not Thirumathi as I read.
Thank you Innamburan Innamburan for correcting me! (pl. forgive me.Tamil Font is not working)
regards,
S.Parthasarathy

2010/1/8 S.Partha sarathy <spsar...@gmail.com>

Raja sankar

unread,
Jan 8, 2010, 12:49:16 AM1/8/10
to mint...@googlegroups.com
//அதனால்  ஜோதிடம் வான சாத்திரத்தில் ஒரு பகுதி என்று வேண்டுமானால் சொல்லலாம்

அனைத்தும் அறிவியலே//

அன்பின் தமிழ்த்தேனீ மற்றும் ஜோதிடத்தை ஆதரிக்கும் அனைத்து அன்பர்களுக்கும்,

கீழே இருக்கும் கேள்வி கோவூர் என்பர் கேட்டது, நானும் இதை மற்ற குழுமங்களிலும், நேரில் சந்தித்த ஜோதிடர்களிடமும் கேட்டிருக்கிறேன். சரியான விடை இதுவரை இல்லை.

"ஒருவருடைய ஜாதகத்தை கொண்டு, ஆணா, பெண்ணா உயிரோடு இருக்கிறாரா என அறிய முடியுமா?"

எனக்கு தோன்றிய மற்றகேள்விகள்,

ஏன் நம்முடைய நாட்டின் மீது அன்னிய படையெடுப்பை, போரில் வெற்றி தோல்விகளை ஜோதிடர்களால் கண்டறிய முடியாமல் போனது? பார்த்து சொல்லியிருந்தால் ஒரு 800 ஆண்டுகாலம் அன்னியர்களுக்கு அடிமைப்பட்டிருக்க மாட்டோம் அல்லவா?

பஞ்சங்கள், மழை பெய்யாதது போன்றவற்றையும் இதில் கணிக்க முடியுமா?


ராஜசங்கர்



2010/1/7 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

Innamburan Innamburan

unread,
Jan 8, 2010, 1:01:30 AM1/8/10
to mint...@googlegroups.com
அதில் பெண்பால் எங்கிருந்து வந்தது?


 
2010/1/8 S.Partha sarathy <spsar...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Jan 8, 2010, 1:50:13 AM1/8/10
to mint...@googlegroups.com
தாங்கலை!!!!

2010/1/8 Innamburan Innamburan <innam...@googlemail.com>
360.gif

N. Kannan

unread,
Jan 8, 2010, 2:11:53 AM1/8/10
to mint...@googlegroups.com
திருமூர்த்தியில் "திரு" இருப்பதால் அது பெண் பால் :-))
மேலும் இந்த ஜெர்மன் மொழியிலும், நம் சமிஸ்கிருதத்திலும் ஆண்பால், பெண்பால் எப்படிச் சொல்கிறார்கள் என்பது புரியாத விஷயம். ஜெர்மனியில், Der Mont என்பான், Die Sonne என்பான். சந்திரன் ஆண்பால், சூரியன் பெண்பால்.
 
ஆனா இந்த இழை பிரஷ்னம் பற்றிப் பேசாமல் எங்கெங்கோ திக்குத்தெரியாமல் அலைகிறது :-))
வேளை சரியில்லை போலும் ;-)
 
க.>

2010/1/8 Geetha Sambasivam <geetha...@gmail.com>
360.gif

Innamburan Innamburan

unread,
Jan 8, 2010, 2:27:38 AM1/8/10
to mint...@googlegroups.com
வேளை வந்துவிட்டது, நற்திசை நோக்கி, கண்ணன், இன்று 'சந்துஷ்டி' என்ற பொருள்பட ஒரு புத்தகம் படிக்கத் தொடங்கினேன்.திபெத்திய பெளத்த நோக்கில், ஒரு விஞ்ஞனியின் பயணம். அவர் தொடுகுறிசாத்திரம் பற்றி பேசாவிடினும், தீர  விசாரிக்காமல் புராதனத்தை தகர்க்கும் தவறை வெளிப்படுத்துகிறார். 

இன்னம்பூரான்

2010/1/8 N. Kannan <navan...@gmail.com>
360.gif

Tirumurti Vasudevan

unread,
Jan 8, 2010, 3:54:56 AM1/8/10
to mintamil
2010/1/8 N. Kannan <navan...@gmail.com>
திருமூர்த்தியில் "திரு" இருப்பதால் அது பெண் பால் :-))

ஹிஹி!
அது த்ரி மூர்த்தி! மருவி விட்டது.
 
மேலும் இந்த ஜெர்மன் மொழியிலும், நம் சமிஸ்கிருதத்திலும் ஆண்பால், பெண்பால் எப்படிச் சொல்கிறார்கள் என்பது புரியாத விஷயம். ஜெர்மனியில், Der Mont என்பான், Die Sonne என்பான். சந்திரன் ஆண்பால், சூரியன் பெண்பால்.
 
பிரெஞ்சு காரங்களும் ஜெர்மானியரும் ஒத்து போறாங்களா?

--
உடம்பு சரியில்லை. பக்கத்து தெரு டாக்டர்கிட்டே போறோம். ஏதோ ஒரு டயக்னோசிஸ் சொல்லறார். மருந்த தரார். சரியாகலை. இன்னொரு டாக்டர்கிட்டே போறோம். அங்கேயும் அதே கதைதான். வேற டயக்னோசிஸ் வேற மருந்து. பல இடங்களிலே சுத்தி அப்புறம் தானே சரியா போச்சு.

அப்ப மருத்துவ சாஸ்திரமே தப்பு இல்லையா?

Tthamizth Tthenee

unread,
Jan 8, 2010, 4:06:12 AM1/8/10
to mint...@googlegroups.com
அன்புள்ள    திரு  பார்த்தசாரதி  அவர்களே

வலுவான  அடைப்படை  ஒன்றை வைத்துக்கொண்டுதான்

ஜோதிடத்தைப்  பற்றி   எ்ழுத  ஆரம்பித்திருக்கிறீர்கள்  என்று நினைக்கிறேன்

தொடர்ந்து   எழுதுங்களேன்  என்ன தயக்கம்


தெரிந்து கொள்ளக் காத்திருக்கிறோம்

S.Partha sarathy

unread,
Jan 8, 2010, 7:27:05 AM1/8/10
to mint...@googlegroups.com
ஊக்குவிப்பதற்கு நன்றி தமிழ்தேனீ அவர்களே!

 கலந்துரையாடல் தொடர்வதற்கு என்னுடைய முந்திய வினாவிற்கு பதில் யாரேனும் அளித்தால் நன்றாக இருக்கும்

//இந்தியாவில் மட்டும் அல்லாது உலகம் முழுதும் அனைத்து 12 இராசிகளின் பெயர்களும்  ஒன்றுபோல் இருப்பது ஏன்? (உ.ம்.) சிம்மம் - Leo, கன்னி - Virgo, etc.


மீண்டும் திங்கள் அன்று சந்திப்போம்,
அன்புடன்,
பார்த்தசாரதி


2010/1/8 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

Raja sankar

unread,
Jan 8, 2010, 7:42:00 AM1/8/10
to mint...@googlegroups.com
கீழே இருக்கும் கேள்வி கோவூர் என்பர் கேட்டது, நானும் இதை மற்ற குழுமங்களிலும், நேரில் சந்தித்த ஜோதிடர்களிடமும் கேட்டிருக்கிறேன். சரியான விடை இதுவரை இல்லை.

"ஒருவருடைய ஜாதகத்தை கொண்டு, ஆணா, பெண்ணா உயிரோடு இருக்கிறாரா என அறிய முடியுமா?"

எனக்கு தோன்றிய மற்றகேள்விகள்,

ஏன் நம்முடைய நாட்டின் மீது அன்னிய படையெடுப்பை, போரில் வெற்றி தோல்விகளை ஜோதிடர்களால் கண்டறிய முடியாமல் போனது? பார்த்து சொல்லியிருந்தால் ஒரு 800 ஆண்டுகாலம் அன்னியர்களுக்கு அடிமைப்பட்டிருக்க மாட்டோம் அல்லவா?

பஞ்சங்கள், மழை பெய்யாதது போன்றவற்றையும் இதில் கணிக்க முடியுமா?

ராஜசங்கர்



2010/1/8 S.Partha sarathy <spsar...@gmail.com>

வி. சு.

unread,
Jan 8, 2010, 8:17:39 AM1/8/10
to மின்தமிழ்
On Jan 7, 9:35 pm, "S.Partha sarathy" <spsarath...@gmail.com> wrote:
...

> வெயிலிருந்தும் குளிரிலிருந்தும் காத்துக்கொள்ள அதற்கேற்ற ஆடைகள்
> அணியத்துவங்கினான்,
> ஏன்? மழையில் நனையமல் செல்ல குடை கண்டுபிடித்தான்.
...

அந்தக் காலத்தில், மழையில் நனைந்தாலும் குடையோ உடையோ தேவைப் படாத
அளவிற்கு உடல் நலத்துடன் மக்கள் இருந்தனர். எது சிறப்பு ? :-)

Tirumurti Vasudevan

unread,
Jan 8, 2010, 8:53:52 AM1/8/10
to mint...@googlegroups.com


2010/1/8 Raja sankar <errajasa...@gmail.com>

கீழே இருக்கும் கேள்வி கோவூர் என்பர் கேட்டது, நானும் இதை மற்ற குழுமங்களிலும், நேரில் சந்தித்த ஜோதிடர்களிடமும் கேட்டிருக்கிறேன். சரியான விடை இதுவரை இல்லை.

"ஒருவருடைய ஜாதகத்தை கொண்டு, ஆணா, பெண்ணா உயிரோடு இருக்கிறாரா என அறிய முடியுமா?"

முடியும். நேரிலேயே இந்த கணிப்பை பார்த்து இருக்கிறேன்.
 

ஏன் நம்முடைய நாட்டின் மீது அன்னிய படையெடுப்பை, போரில் வெற்றி தோல்விகளை ஜோதிடர்களால் கண்டறிய முடியாமல் போனது? பார்த்து சொல்லியிருந்தால் ஒரு 800 ஆண்டுகாலம் அன்னியர்களுக்கு அடிமைப்பட்டிருக்க மாட்டோம் அல்லவா?

நாடுகளுக்கு ஜாதகம் இல்லையே?
பலரும் நாடு சுதந்திரம் அடைந்த நாள் என்றூ கணித்து பலன் சொல்ல முயல்கிறார்கள்.அ து அவ்வளவு சரியாக அமைவதில்லை.

பஞ்சங்கள், மழை பெய்யாதது போன்றவற்றையும் இதில் கணிக்க முடியுமா?

போன கேள்விக்கான விடையே.
பலன் சொல்ல சரியான பிறந்த நேரம், இடம் தெரிவது அவசியம்.

திவாஜி

ஆமாச்சு|amachu

unread,
Jan 8, 2010, 12:10:34 PM1/8/10
to mint...@googlegroups.com
On Fri, 2010-01-08 at 19:23 +0530, Tirumurti Vasudevan wrote:
> ஏன் நம்முடைய நாட்டின் மீது அன்னிய படையெடுப்பை, போரில் வெற்றி
> தோல்விகளை ஜோதிடர்களால் கண்டறிய முடியாமல் போனது? பார்த்து
> சொல்லியிருந்தால் ஒரு 800 ஆண்டுகாலம் அன்னியர்களுக்கு
> அடிமைப்பட்டிருக்க மாட்டோம் அல்லவா?

இளங்கோவடிகள் தான் மன்னராவார்ன்னு சோதிடம் சொல்லியது - பலிக்கவில்லை.

சித்தார்த்தன் புத்தனாவான்னு சோதிடம் சொல்லிச்சு - தந்தை தடுக்க தீவிரமா
முயற்சி செய்தார் - ஒன்னும் பலிக்கலை ;-)

ஊழின் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான்முந் துறும்

--

ஆமாச்சு

Hari Krishnan

unread,
Jan 8, 2010, 10:21:15 PM1/8/10
to mint...@googlegroups.com


2010/1/7 Tirumurti Vasudevan <agni...@gmail.com>
பாரதீயர் யார் பூமி தட்டையானது என்று சொன்னார்கள்?

2010/1/7 S.Partha sarathy <spsar...@gmail.com>

. நம் முன்னோர்கள் கூறியதற்காக வறட்டு பிடிவாதமாக பூமி தட்டையானது என நாம் வாதிடுவதில்லை.




இப்போதுதான் சற்று நேரம் கிடைத்தது.  இவற்றையெல்லாம் இப்போதுதான் பார்க்கிறேன்.

நம் புராணங்கள் எப்போதுமே பூமி தட்டையானது என்று சொன்னதில்லை.  மாறாக, உருண்டை என்றுதான் சொல்லி வந்திருக்கின்றன.  பூமியை மட்டுமல்லாது, நம்மைச் சூழ்ந்திருக்கும் ஒவ்வொரு கிரகத்தையும் விண்மீனையும் கூட உருண்டை என்றுதான் சொல்லியிருக்கிறார்கள்.  அண்டம், அண்டகோளம் என்றுதானே இந்த யுனிவர்ஸை அழைக்கிறோம்?  அண்டம் என்றாலே முட்டைதானே?  கோளம் என்றால் என்ன என்று சொல்லித் தெரியவேண்டியதில்லை.  எதற்கும் இருக்கட்டும் என்று கோளம் என்றால் that which is spherical என்று தமிழில் விளக்கம் சொல்லிவிடுகிறேன்.

கம்பராமாயணத்தில் ஒரு இரணியன் வதைப் படலம் உண்டு.  வால்மீகியில் இல்லை.  விபீஷணன், இரணியன் கதையை ராவணனுக்குச் சொல்லி, ‘எலே, ஒன்னவிட பெரிய பலசாலி, மூர்க்கன், முரடன், கடவுள் இல்லைனு கூத்தாடினவன், நாராயண நம: அப்படின்னு யாரும் சொல்லக்கூடாதுன்னு சொல்லி, தன் பெயரையே எல்லோரையும் உச்சரித்து அர்ச்சிக்க வைத்தவன்.  உன்னைவிட ஆயிரம் பங்கு பராக்கிரமம் உடைய அவனே போய்ச் சேந்துட்டாண்டா அண்ணா’ என்று சொல்லிக் கொண்டு வரும்போது, நரசிம்மம் வெளிப்படும் காட்சியைச் சொல்கிறான் அல்லவா, அப்போது இந்தப் பாடல் வருகிறது: 

'பிளந்தது தூணும்; ஆங்கே பிறந்தது, சீயம்; பின்னை
வளர்ந்தது, திசைகள் எட்டும்; பகிரண்டம் முதல மற்றும்
அளந்தது; அப் புறத்துச் செய்கை யார் அறிந்து அறையகிற்பார்?
கிளர்ந்தது; ககன முட்டை கிழிந்தது, கீழும் மேலும்.
 
தூண் பிளந்தது.  அங்கே சிங்கம் வெளிப்பட்டது.  வெளிப்பட்ட கணத்திலிருந்து வடிவத்தில் வளர்ந்துகொண்டே போனது.  எட்டு திசைகளையும், திக்குகளை நிறைக்கும் அண்டம் (கோளம்) முதலான மற்றவற்றையும் தன் பெருத்த வடிவத்தாலே அளந்தது.  அண்டத்தைக் கடந்தும் வளர்ந்தது என்றால், அண்டத்துக்கு வெளியே நடந்தனவற்றை யாரால்தான் அறிந்துசொல்ல முடியும்?  அண்டமாகிய இந்தப் பொன்மயமான முட்டையின் (ஹிரண்ய கர்ப்பத்தின்) ஓடு, மேலும் கீழும் உடைந்து தெறித்தது.

நாம அண்டகோளம் என்று சொல்லும் இந்த யுனிவர்சை வர்ணிக்கிறான் பாருங்க: 

'குயிற்றிய அண்டம் குஞ்சை இட்டிலா முட்டைக் கூட்டில்
பயிற்றிய பருவம் ஒத்த காலத்துள், -அமுது பல்கும்
எயிற்று வன் பகு வாயுள் புக்கு இருக்குந - இருக்கை எய்தி,
வயிற்றின் வந்து, அந்நாள், இந்நாள் வாழும் மன்னுயிர்கள் மன்னோ.

இந்தச் சிங்கப்பிரான்தான் பல்லாயிரம் கோடிகளான இந்த முட்டைகளைத் தன் வயிற்றில் வைத்துக் காக்கிறான்.  அவனால் படைக்கப்பட்ட இந்தக் கோடிக்கோடி அண்டங்கள், இன்னமும் குஞ்சு பொரிக்காத நிலையில் முட்டையாக இந்தப் பிரானுடைய வயிற்றில் வைத்துக் காக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.  அப்படி ஒரு முட்டை நிறைந்த பறவைக்கூட்டைப் போன்றது இவனுடைய வயிறு.

திருப்புகழ்ல மயிலுடைய நர்த்தன கதியில் அண்ட முட்டைகள் வெடித்துச் சிதறும் வருணனையையும் படித்துப் பார்க்கலாம்.  தமிழ், சமஸ்கிருத, இந்திய இலக்கியங்கள் எல்லாமே அண்டத்தை மு்ட்டை, உருண்டை என்றுதான் வர்ணிக்கின்றன.  அதையும் படிக்கலாம்.

when Einstein began to apply his theory to the structure of the universe, he was dismayed to find that it predicted either an expanding or contracting universe--something entirely incompatible with the prevailing notion of a static universe. In what he would later call "the greatest blunder of my life," Einstein added a term called the cosmological constant to his equations that would make his calculations consistent with a static universe

என்று சொல்லப்படும் இதையும் படித்துப் பார்க்கலாம். (ஐன்ஸ்டீன் உலகம் தட்டையானது என்று சொ்ன்னதாகச் சொல்லவில்லை.  ஆனால் எக்ஸ்பாண்டிங் யுனிவர்ஸ் என்ற கருதுகோளும் நம் இலக்கியத்தில் உண்டு.)

பூமி தட்டையானது என்று நம் முன்னோர்கள் ஒருபோதும் சொன்னதில்லை.  அண்டகோளம் என்ற சொல்லைப் பலரும் பொருள் தெரியாமலேயே பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.  அவ்வளவுதானுங்கோ மேட்ரு. :-))

--
அன்புடன்,
ஹரிகி.

karthi

unread,
Jan 8, 2010, 11:33:46 PM1/8/10
to mint...@googlegroups.com
ஹரி,
 
பூமி தட்டையானது என்ற நம்பிக்கை மேல்நாடுகளில் கூட இருந்ததா என்பதில்
எனக்கு ஐயமுண்டு. அது ஒரு சமய (கத்தோலிக்க) நம்பிக்கையாக மட்டுமே
இருந்து வந்திருக்கிறது. அதுவே அறிவியலாளர்களைக் கொடுமைப் படுத்தவும்
வழி கோலியது.
 
ரெ.கா.

Innamburan Innamburan

unread,
Jan 8, 2010, 11:50:45 PM1/8/10
to mint...@googlegroups.com
இன்றைய பொழுது நன்றாக விடிந்தது, நற்செய்திகள் செவியில் தேன் பாய்ந்தாற்போல..
அன்புடன்
,இன்னம்பூரான்

2010/1/9 karthi <karth...@gmail.com>

Hari Krishnan

unread,
Jan 8, 2010, 11:55:05 PM1/8/10
to mint...@googlegroups.com


2010/1/9 karthi <karth...@gmail.com>

ஹரி,
 
பூமி தட்டையானது என்ற நம்பிக்கை மேல்நாடுகளில் கூட இருந்ததா என்பதில்
எனக்கு ஐயமுண்டு. அது ஒரு சமய (கத்தோலிக்க) நம்பிக்கையாக மட்டுமே
இருந்து வந்திருக்கிறது. அதுவே அறிவியலாளர்களைக் கொடுமைப் படுத்தவும்
வழி கோலியது.
 
ரெ.கா.

இருக்கலாம் ரெகா.  

கல்லாத மேற்கொண்டு ஒழுகல், கசடற 
வல்லதூஉம் ஐயம் தரும்.

அதனால, இந்த விஷயத்துக்குள்ள அதிகம் போகல.  நீங்க சொல்லுங்க கேட்டுக்கறேன்.  விக்கிபீடியாவில் கலிலியோவைப் பற்றிச் சொல்லும்போது இப்படிச் சொல்லப்பட்டுள்ளது:

========================
Western Christian biblical references Psalm 93:1, Psalm 96:10, and 1 Chronicles 16:30 include (depending on translation) text stating that "the world is firmly established, it cannot be moved." In the same tradition, Psalm 104:5 says, "the LORD set the earth on its foundations; it can never be moved." Further, Ecclesiastes 1:5 states that "And the sun rises and sets and returns to its place" etc.[96]

Galileo defended heliocentrism, and claimed it was not contrary to those Scripture passages. He took Augustine's position on Scripture: not to take every passage literally, particularly when the scripture in question is a book of poetry and songs, not a book of instructions or history. The writers of the Scripture wrote from the perspective of the terrestrial world, and from that vantage point the sun does rise and set.
By 1616 the attacks on the ideas of Copernicus had reached a head, and Galileo went to Rome to try to persuade the Church authorities not to ban his ideas. In the end, Cardinal Bellarmine, acting on directives from the Inquisition, delivered him an order not to "hold or defend" the idea that the Earth moves and the Sun stands still at the centre. The decree did not prevent Galileo from discussing heliocentrism hypothesis (thus maintaining a facade of separation between science and the church). For the next several years Galileo stayed well away from the controversy.  http://en.wikipedia.org/wiki/Galileo#Church_controversy
========================

நம்முடைய இலக்கியங்களில் கூட, சூரியன் மலைவாயில் விழுந்தான், சூரியனும் சந்திரனும் மேருவைச் சுற்றி வருகின்றன என்றெல்லாம் காணப்பட்டாலும், அவற்றுக்கு இப்படிப்பட்ட (அதாவது மேற்சொல்லப்பட்ட திருச்சபை சார்ந்த நம்பிக்கைக்கு உட்பட்ட) பொருள் கிடையாது.  அவையெல்லாம் உருவகங்கள்.  உண்மையில் உலகம்தான் சூரியனைச் சுற்றுகிறது என்ற கருதுகோள் பாகவத புராணத்திலேயே உண்டு. பூமியின் ஒரு பகுதி இரவாகவும் மற்றொரு பகுதி பகலாகவும் இருப்பதாக பாகவத புராணம் சொல்கிறது.  

ராகு கேது என்ற பாம்புகள் சூரிய சந்திரர்களை விழுங்குவதால் கிரகணம் ஏற்படுகிறது என்று நாம் நம்புவதாகப் பரிகசிக்கிறார்கள்.  ஆனால், ராகு கேது என்ற இரண்டும் சாயா (chAyA) கிரகங்கள் என்று அழைக்கப்படுவதைச் சௌகரியமாக மறந்துவிடுகிறார்கள்.  சாயா என்றால் நிழல் என்று பொருள்.  நிழல் கிரகங்கள் என்றார்களே, எதனுடைய நிழல் என்று சொன்னார்கள் என்று நாம் தேடமாட்டோம்.  ஏனென்றால் நாம் நிறையப் படித்துவிட்டோம்.  முன்னோர்கள் முட்டாள்கள்.  (ரெகா, தயவுசெய்து இதை பர்சனலாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.  மற்ற யாரும் இதை பர்சனலாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.)

இப்போது, சாயா (நிழல்) விழுங்குவதால் கிரகணம் ஏற்படுகிறது என்பது உண்மைதானே?  பாம்பு எனப்படுவது உருவகம்தானே?  வோல்தாங்கோ.  மேற்கை விட நாம ஒசத்தி அப்டின்னு சொன்னாதானே தப்பு?  வேணாம்.  நாம ஒசத்தி இல்லை.  ஆனா மேற்கில் இபப சொல்ற விஷயங்களை எல்லாம் என்னவோ ஒருமாரி பூடகமா சொல்லிட்டுப் பூட்டாங்கோ நம்மாளுங்கோ.  உப்ப சரியா கீதா? :-))

Geetha Sambasivam

unread,
Jan 9, 2010, 2:13:50 AM1/9/10
to mint...@googlegroups.com
உப்ப சரியா கீதா? :-))//

என்னைத் தானே கேட்டீங்க??? கீது கீது!!!
--

2010/1/9 Hari Krishnan <hari.har...@gmail.com>
360.gif

N. Kannan

unread,
Jan 9, 2010, 6:27:46 AM1/9/10
to mint...@googlegroups.com
அற்புதமான இடுகை ஹரியண்ணா.

நம்மாழ்வார் பாசுரங்களில் தனியனாக, `அண்டகோளத்து ஆரணுவாகி` என்ற பாசுரம்
உண்டென்பார் பேரா.ராகவய்யங்கார்.

திருவாய்மொழியில், `அண்டம் மோழை எழ` என்று bubble theory பற்றி கோடி காட்டுவார்.
http://thirumozi.blogspot.com/2007/02/090.html
நீங்கள் காட்டும் கம்பன் கவிதையில் paralell universe பற்றிய வருணனை வருகிறது!

கம்பனின் நரசிம்ம வைபவம் மெய்சிலிர்க்க வைக்கிறது. திருவிக்கிரமனைக்
கொண்டு வந்து கோர்க்கும்விதம் அற்புதம்.

ஸ்வாமி தேசிகன், எப்படி வாமனன், திருவிக்கிரமகனாக வளர்ந்தான் என்று
சித்தரிப்பார். தூரத்தே தெரிந்த நட்சத்திரக்கூட்டங்கள் நொடியில் அவன்
இடுப்பு அங்கியாகி, அடுத்த நொடியில் நெஞ்சு ஹாரமாகிவிடுகிறதாம்.
அப்படிப்போகிறது அவன் வளர்ச்சி. இதை வெறும் கற்பனை என்று
சொல்லிவிடமுடியுமா?

ரங்கன் தயவால் பூகோளபகோள விஷயம் என்ற அற்புதச் சரக்கொன்று கிடைத்தது.
அதில் சூரிய சாஸ்திரக்காரர்கள் என்று ஒரு கூட்டத்தையே சொல்கிறார்கள்.
சாஸ்திரப்பிரமாணத்தை வைத்தே நம்மவர் கவிதை யாத்திருக்கின்றனர்.

வராக அவதாரத்தை சிற்பமாக்கும் போது சிற்பி கோட்டிடை ஒரு கோளத்தைத்தான்
காட்டுகிறான். தட்டையான பிளெட்டை அல்ல. சிற்பிக்கு பூகோள அறிவு உண்டா
என்றால், அங்கும் அதற்கு முன்பு உள்ள சாஸ்திரப்பிரமாணமே காரணமென்று கொள்ள


வேண்டும்.

சில படங்கள்: http://our_legacy.pitas.com/

கண்ணன்

2010/1/9 Hari Krishnan <hari.har...@gmail.com>:


> 'பிளந்தது தூணும்; ஆங்கே பிறந்தது, சீயம்; பின்னை
> வளர்ந்தது, திசைகள் எட்டும்; பகிரண்டம் முதல மற்றும்
> அளந்தது; அப் புறத்துச் செய்கை யார் அறிந்து அறையகிற்பார்?
> கிளர்ந்தது; ககன முட்டை கிழிந்தது, கீழும் மேலும்.
>
>

shivan .

unread,
Jan 9, 2010, 6:34:50 AM1/9/10
to mint...@googlegroups.com
ஹரிகிருஷ்ணருடைய சொற்களில் என்ன அழகான தெளிவு!  அருமை!

//நம்முடைய இலக்கியங்களில் கூட, சூரியன் மலைவாயில் விழுந்தான், சூரியனும் சந்திரனும் மேருவைச் சுற்றி வருகின்றன என்றெல்லாம் காணப்பட்டாலும்,//

சமஸ்க்ருத மொழி புரிந்தவர்கள் குழம்ப மாட்டார்கள். சமஸ்க்ருதத்தை விடுங்கள்;  தெய்வ மொழியான நம் தமிழ் மொழியை புரிந்தவரும் குழம்ப மாட்டார்கள்.

கல் இடித்து விட்டது என்று சொல்லவில்லையா?! கல்லா வந்து இடித்தது. 

அவன் மரணத்தை அடைந்தான் என்று சொல்வதில்லையா? உண்மையில் மரணம் அல்லவா ஒருவனை வந்து அடைகிறது?!

அதே போல் காணும் காட்சியை கண்டாற் போல் சொல்வது வழக்கம்தான்.

உண்மையான ஆத்மீகம் இப்போதிருக்கும் அறிவியல் வழியில் செல்வதில்லை; அதுனுடைய வழியே தனி. அதற்கு அறிவியல் ஆதாரமும் தேவையில்லை.

அரவிந்தர் சொல்வது போல்,
"அறிவியில் பூமி தத்துவத்தின் முதலடியிலேயே இன்னும் வளர்ந்துக் கொண்டிருக்கிறது; ஆகாச தத்துத்தை கடந்த இடத்திலோ உண்மை  இருக்கிறது. அங்கிருந்துதான் பெரியோர்களின் மெய்ஞானம் வெளிப்படுகிறது"





2010/1/9 Hari Krishnan <hari.har...@gmail.com>

Banukumar Rajendran

unread,
Jan 11, 2010, 10:39:08 AM1/11/10
to mint...@googlegroups.com
ஜினேந்திர மாலை என்ற நூல் பிரஸ்ஸன வகையைச் சார்ந்த ஜோதிட நூல் என்று ஜெபி ஐயா சொன்னதாக நினைவு. இது தவிர வேறேதும் நூல் தமிழில் உண்டா? நா.கணேசனார் மேலும் ஒரு சமண நூல் அகத்தியத்தில் எழுதும்போது சொன்னார். பெயர் மறந்துவிட்டது.
 
இரா.பா

S.Partha sarathy

unread,
Jan 12, 2010, 8:27:00 AM1/12/10
to mint...@googlegroups.com
 
         //ராகு கேது என்ற பாம்புகள் சூரிய சந்திரர்களை விழுங்குவதால் கிரகணம் ஏற்படுகிறது என்று நாம் நம்புவதாகப் பரிகசிக்கிறார்கள்.  ஆனால், ராகு கேது என்ற இரண்டும் சாயா (chAyA) கிரகங்கள் என்று அழைக்கப்படுவதைச் சௌகரியமாக மறந்துவிடுகிறார்கள்.  சாயா என்றால் நிழல் என்று பொருள்.  நிழல் கிரகங்கள் என்றார்களே, எதனுடைய நிழல் என்று சொன்னார்கள் என்று நாம் தேடமாட்டோம்.  ஏனென்றால் நாம் நிறையப் படித்துவிட்டோம்.  முன்னோர்கள் முட்டாள்கள்.  (ரெகா, தயவுசெய்து இதை பர்சனலாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.  மற்ற யாரும் இதை பர்சனலாக எடுத்துக்கொள்ள வேண்டாம்//
 
ஹரி அவர்களே,
நம் முன்னோர்கள் (அனைத்துநாட்டினர்) இயற்கை நிகழ்வுகளை உற்றுநோக்கி அறிவியலின் முதல்படியை ஆரம்பித்து வைத்தனர். அதாவது இயற்கை நிகழ்வுகள் எப்பொழுது நடக்கும் என கூற முடிந்தது. ஆனால் விளக்கம் தருவதில்தான் சிக்கல். அந்தப் பணி அன்று முதல் இன்றுவரை தொடர்கிறது..தொடரும்..
அவர்களால் இயற்கை நிகழ்வுகள் எப்பொழுது நடக்கும் என கூற முடிந்ததால் அவர்கள் புத்திசாலிகள்..
சிலவற்றிர்க்கு ஏன் என விளக்கம் அளித்து உள்ளதால் அவர்களின் பரம்பரைகள் புத்திசாலிகள்..
அன்புடன்
பார்த்தசாரதி
 
 


 

karthi

unread,
Jan 12, 2010, 10:47:42 PM1/12/10
to mint...@googlegroups.com
ஹரி,
 
நமது முன்னோர்கள் எனச் சகட்டு மேனிக்குச் சொல்லிவிட்டால் போதாது.
நாம் இன்றைக்கு எப்படி வெவ்வெறு கலவி, அறிவு, அனுபவப் படிநிலைகளில்
இருக்கிறோமோ, அப்படித்தான் நம்து முன்னோர்களும் இருந்திருக்க வேண்டும்.
 
ராகு கேதுவுக்கு ச்சாயா என்று அறிந்து பெயரிட்டவர்களும், ராகுவும் கேதுவும்
சந்திரனை விழுங்குகின்றன என்று சொன்னவர்களும் ஒரே முன்னோர்களாக
இருக்க முடியாது. முன்னவர்கள் அறிவாளிகள்.
 
ரெ.கா.
----- Original Message -----
Sent: Tuesday, January 12, 2010 9:27 PM
Subject: Re: [MinTamil] Re: தொடுகுறி சாஸ்திரம்

 

Hari Krishnan

unread,
Jan 12, 2010, 11:49:58 PM1/12/10
to mint...@googlegroups.com


2010/1/13 karthi <karth...@gmail.com>


ராகு கேதுவுக்கு ச்சாயா என்று அறிந்து பெயரிட்டவர்களும், ராகுவும் கேதுவும்
சந்திரனை விழுங்குகின்றன என்று சொன்னவர்களும் ஒரே முன்னோர்களாக
இருக்க முடியாது. முன்னவர்கள் அறிவாளிகள்.
 
ரெ.கா.

ம்? இரண்டுமே ஒரே பாரதத்தில் சொல்லப்பட்டிருந்தால்? வியாசரை எந்த வகையில் சேர்க்கலாம்? 

srirangammohanarangan v

unread,
Jan 13, 2010, 1:02:52 AM1/13/10
to mint...@googlegroups.com
ம்  நல்ல  கேள்வி  நல்ல  பதில்  :--)))

devoo

unread,
Jan 13, 2010, 1:17:11 AM1/13/10
to மின்தமிழ்
ஒரே உண்மைக்கே இருவிதமான வடிவங்கள் கொடுத்து வந்துள்ளனரோ ?

தேவ்


On Jan 12, 10:49 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com>
wrote:
> 2010/1/13 karthi <karthige...@gmail.com>

Hari Krishnan

unread,
Jan 13, 2010, 1:25:15 AM1/13/10
to mint...@googlegroups.com


2010/1/13 devoo <rde...@gmail.com>

ஒரே உண்மைக்கே இருவிதமான வடிவங்கள் கொடுத்து வந்துள்ளனரோ ?

தேவ்

ஒன்று உண்மை மற்றொன்று உருவகம்.

உருவகத் தாலே உணர்ந்து, உணராது
பலவகை யாகப் பரவிடும் பரம்பொருள்
ஒன்றே அதனியல் ஒளியுறும் அறிவாம்;

 என்ற பாரதி வாக்கு இங்கும் பொருந்தும்.  

karthi

unread,
Jan 13, 2010, 1:39:35 AM1/13/10
to mint...@googlegroups.com
ஆம் ரங்கன், ஹரிகி என்னைப் போட்டு மாட்டிவிட்டாரல்லவா?
 
ஹரிகி, அந்த ரெண்டு contextஐயும் கொஞ்சம் விளக்கலாமே! தெரிந்து கொள்ளத்தான்
கேட்கிறேன். வாதிடவல்ல!
 
ரெ.கா.
----- Original Message -----
Sent: Wednesday, January 13, 2010 2:02 PM
Subject: Re: [MinTamil] Re: தொடுகுறி சாஸ்திரம்

Hari Krishnan

unread,
Jan 13, 2010, 1:49:56 AM1/13/10
to mint...@googlegroups.com


2010/1/13 karthi <karth...@gmail.com>

ஆம் ரங்கன், ஹரிகி என்னைப் போட்டு மாட்டிவிட்டாரல்லவா?
 
ஹரிகி, அந்த ரெண்டு contextஐயும் கொஞ்சம் விளக்கலாமே! தெரிந்து கொள்ளத்தான்
கேட்கிறேன். வாதிடவல்ல!
 
ரெ.கா.

தலைவா!

மஹாபாரதம் கிட்டத்தட்ட ஏழாயிரம் பக்கம் கொண்டது.  நான் இந்த இரண்டு வகையான (உண்மையும் உருவகமும்) செய்திகளைப் படித்த நினைவிருக்கிறது.  நினைவிலிருந்து சொன்னேன்.  ஆங்காங்கே போகிற போக்கில் சொல்லிக்கொண்டு போவார்கள். அதுவும், இந்த விஷயம் கதையோடு நேரடியாகச் சம்பந்தப்பட்டதில்லை.  முக்கியமானவை என்று எனக்குப் பட்டதை எல்லாம் குறித்து வைத்திருக்கிறேன்.  இது என் குறிப்பில் (புக்மார்க்) இல்லை.  

ஆதாரபூர்வமாகச் சொன்னால்தான் ஏற்றுக்கொள்வேன் என்றால், கட்டாயம் சொல்கிறேன்.  முடியாத காரியம் இலலை.  ஆனால் அவகாசம் தேவை.   இப்போதைக்கு இந்த ஒன்றைத் தருகிறேன்: 


chaya graha, mahabharata என்று கூகி்ள் செய்யவும்.  1,450 பக்கங்கள் வருகின்றன.  

karthi

unread,
Jan 13, 2010, 1:55:05 AM1/13/10
to mint...@googlegroups.com
தேவ், ஹரி, ரங்கன்,

இது கிளைச் செய்தி. "ச்சாயா" என்ற சொல்லுக்கு நிழல் என்று பொருள் என
ஹரிகி சொன்னாரல்லவா? எங்கள் மலாய் மொழியில்
chahaya என்றால் ஒளி. நிழலுக்கு bayangan.

மலாயில் ஏராளமான சமஸ்கிருதச் சொற்கள் உள்ளன. (தெரிந்த விஷயம்தானே!)
பெரும்பாலானவை அதே பொருளில் வருகின்றன. இந்தச் ச்சஹாயா மட்டும்
பிறழ்ந்திருப்பது போலத் தோன்றுகிறது.

எங்கள் வெளிநாட்டுத் துறைத் தலைமையகக் கட்டிடத்துக்கு "Wisma Putra"
என்று பெயர். அதன் பொருள் "வாயு புத்திரன்". இந்தக் கட்டிடத்திற்குப்
பக்கத்தில் எங்கள் மொழி இலக்கிய வளர்ச்சி நிறுவனம் உள்ளது. அதற்குப் பெயர்
"தேவான் பஹாசா டான் புஸ்த்தாக்கா". ("dan" = மற்றும்).

Proton என்பது எங்கள் தேசியக் கார். அதன் மாடல்கள்:
சாகா, வீரா, சத்திரியா, புத்ரா, பெர்தானா. (நான் வைத்திருப்பது பெர்தானா.)
அதன் பின் ஐரொப்பியப் பேர்களுக்குப் போய்விட்டார்கள்:
Arena, Savvy, Persona, Exora.

ரெ.கா.


--------------------------------------------------------------------------------

karthi

unread,
Jan 13, 2010, 1:56:11 AM1/13/10
to mint...@googlegroups.com
ஆம், அருமையாகச் சொல்லியிருக்கிறான் பாரதி.
நன்றி.
 
ரெ.கா.
----- Original Message -----
Sent: Wednesday, January 13, 2010 2:25 PM
Subject: Re: [MinTamil] Re: தொடுகுறி சாஸ்திரம்



karthi

unread,
Jan 13, 2010, 1:59:43 AM1/13/10
to mint...@googlegroups.com
இல்லை ஹரிகி, ஆதாரமெல்லாம் கேட்கவில்லை.
அறிந்து கொள்ளச் சுவையான விஷயம் என்பதால்
கேட்டேன். ஆறுதலாகச் சொல்லுங்கள். நேரமும் விருப்பமும்
இருக்கும்போது சொல்லுங்கள். ஒன்றும் emergency இல்லை.
 
ரெ.கா.
----- Original Message -----
Sent: Wednesday, January 13, 2010 2:49 PM
Subject: Re: [MinTamil] Re: தொடுகுறி சாஸ்திரம்



Hari Krishnan

unread,
Jan 13, 2010, 2:01:45 AM1/13/10
to mint...@googlegroups.com


2010/1/13 Hari Krishnan <hari.har...@gmail.com>



chaya graha, mahabharata என்று கூகி்ள் செய்யவும்.  1,450 பக்கங்கள் வருகின்றன.  


இந்தப் பக்கத்தில் கிரகம் என்ற சொல்லுக்கான உண்மைப் பொருள் சொல்லப்பட்டுள்ளது.  அருமையான குறிப்பு.  


 மொழிபெயர்ப்பில் ஏற்படும் தவறுகள், பிறழ்வுகள் எல்லாம் ஆங்கில-வழி ஸமஸ்கிருத அறிவாளிகளை எங்கெல்லாம் இட்டுச் செல்கின்றன என்பதையும் பார்க்கலாம்.

Tirumurti Vasudevan

unread,
Jan 13, 2010, 2:22:27 AM1/13/10
to mint...@googlegroups.com


2010/1/13 karthi <karth...@gmail.com>

எங்கள் மலாய் மொழியில்
chahaya என்றால் ஒளி.

சூரியனுக்கு இரு மனைவியர். சுவர்ச்சலா, ச்சாயா.
எங்கேனும் கோவில்களில் மூவருக்கும் சிலாரூபம் இருந்து அதன் தொடர்பாக வந்து இருக்கலாம்.

N. Kannan

unread,
Jan 13, 2010, 2:34:12 AM1/13/10
to mint...@googlegroups.com
சூரியனின் மனைவியர் உஷை, ச்சாயா இல்லையோ?

மலாய் 'சாயா' சமிஸ்கிருத மூலம்தானா? அப்படியெனில் தமிழில் எப்படி
அர்த்தப் பிறழ்வு நிகழ்கிறதோ அது போல் நடந்திருக்கலாம்!

க.>

2010/1/13 Tirumurti Vasudevan <agni...@gmail.com>:

devoo

unread,
Jan 13, 2010, 2:48:41 AM1/13/10
to மின்தமிழ்
* சூரியனின் மனைவியர் *

ச்சாயா - ஸம்ஜ்ஞா
உஷா – ச்சாயா
உஷா – ஸ்வர்ச்சலா
உஷா – ப்ரத்யுஷா

என்று பலவிதங்களில் சொல்லப்படுகிறது;

தேவ்

Chandra sekaran

unread,
Jan 13, 2010, 2:53:14 AM1/13/10
to mint...@googlegroups.com
ரெ.கா,
 
> Proton என்பது எங்கள் தேசியக் கார். அதன் மாடல்கள்:
சாகா, வீரா, சத்திரியா, புத்ரா, பெர்தானா. (நான் வைத்திருப்பது பெர்தானா.)

அது நீங்க வெச்ச `பேர்தானா'? :) ;)
தெரியாமல் கேட்கும்
சந்திரா
 
To save culture & heritage visit:
www.conserveheritage.org
http://templesrevival.blogspot.com
http://reachhistory.blogspot.com
join http://groups/yahoo.com/temple_cleaners

to do your bit to uplift the society visit
www.dreamindia2020.org

Swarna Lakshmi

unread,
Jan 13, 2010, 2:49:57 AM1/13/10
to mint...@googlegroups.com
Samagnya alias Usha alias Suvarchala
 
when it was immensely hot in summer, she left Surya and ashed her shadow to be his wife - this lady is called Chaaya alias Pratyusha etc.,


From: N. Kannan <navan...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Wed, 13 January, 2010 1:04:12 PM
Subject: Re: [MinTamil] Re: தொடுகுறி சாஸ்திரம்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil


The INTERNET now has a personality. YOURS! See your Yahoo! Homepage.

karthi

unread,
Jan 13, 2010, 3:07:58 AM1/13/10
to mint...@googlegroups.com
Proton என்னும் சொல் ஒரு acronym.
Perusahaan Otomobil Nasional
Pr = Perusahaan
oto = otomobil
n = nasional.
 
ஏங்க அப்படிச் சொல்றிங்க? அந்த மூணு சொல்லில முதல் சொல்
எங்கள் சொல் ஆச்சே! (அப்படித்தான் நினைக்கிறேன்.)
usaha = உழைப்பு.
 
மலேசியக் கார் தொழிலுக்கு பொருத்தமான பெயர் வைக்க ஒரு போட்டி
நடத்தி இந்தப் பெயரை அனுப்பியவருக்குப் பெரிய பரிசெல்லாம்
கொடுத்தாங்க!
 
ரெ.கா,

Tirumurti Vasudevan

unread,
Jan 13, 2010, 3:35:53 AM1/13/10
to mint...@googlegroups.com
;-)))
அவர் பெர்தானா - பேர்தானா ன்னு பகடி பண்ணுறார்!

2010/1/13 karthi <karth...@gmail.com>

Proton என்னும் சொல் ஒரு acronym.

N. Kannan

unread,
Jan 13, 2010, 3:36:50 AM1/13/10
to mint...@googlegroups.com
2010/1/13 karthi <karth...@gmail.com>:

> Proton என்னும் சொல் ஒரு acronym.
> Perusahaan Otomobil Nasional

> Peru = peru usaha = உழைப்பு.

பெரு உழைப்பு என்று ஆகுமா? ;-)

ka.>

Hari Krishnan

unread,
Jan 13, 2010, 4:05:17 AM1/13/10
to mint...@googlegroups.com


2010/1/13 devoo <rde...@gmail.com>
சீதையைக் கானகத்துக்கு அழைத்துச் செல்லச் சம்மதிக்கிறான் அல்லவா ராமன், அப்போது சொல்கிறான்:

dharmaH tu gaja naasa uuru sadbhir aacaritaH puraa |
tam ca aham anuvarte adya yathaa suuryam suvarcalaa || 2-30-30

"Oh Seetha, with thighs like the posteriors of an elephant! Earlier, righeousness (like fulfilling the father's command) was practised by good men. Now, I shall follow that righteousness, like Suvarchala(wife of the sun) following the sun."

நீயும் நானும் சூரியனும் அவனுடைய மனைவி சுவர்ச்சலையையும் போல ஒன்றாகவே செல்வோம்.

இது வால்மீகியில் மட்டும்தான் வருகிறது.  கம்பனில் இந்தக் கட்டம் இல்லை.  


--

அன்புடன்,

ஹரிகி.

shivan .

unread,
Jan 13, 2010, 4:10:38 AM1/13/10
to mint...@googlegroups.com
இராகு, கேது என்ற பெயருக்கே முதலில் வரும் பொருளை ஆழ்ந்து நோக்க வேண்டும்.

இராகு, கேது விழுங்குகிறார்கள் என்பது கூட தவறில்லை. சமஸ்கிருதத்தில் அந்த சொல்லாடல் எந்த விதத்தில் வருகிறது என்பதும் முக்கியம்.

தமிழில் கூட 'இவன் மொத்த லாபத்தையும் வாயில் போட்டுக் கொண்டான்' என சொல்வதில்லையா?

இராகு கேது சம்பந்தப்பட்ட வரிகளை இடும்போது  உங்களுக்கே குழப்பம் நீங்கி விடும்.

முன்னோர்கள் மிக மிக அறிவாளிகள்; ஏனெனில் மனித அறிவின் அளவிற்குட்பட்ட தன்மையை அறிந்து, அளவிலா அறிவோடு தன்னை பிணைத்துக் கொள்ள வேண்டும் என்ற சூக்ஷுமத்தையும் அறிந்தவர்கள்.

2010/1/13 karthi <karth...@gmail.com>

ஆமாச்சு|amachu

unread,
Jan 13, 2010, 11:04:34 AM1/13/10
to mint...@googlegroups.com
On Tue, 2010-01-12 at 22:17 -0800, devoo wrote:
> ஒரே உண்மைக்கே இருவிதமான வடிவங்கள் கொடுத்து வந்துள்ளனரோ ?

Haven't you seen people wondering the imagination (without asking how
come it possible?) in Hollywood movies ridiculing Puranic
Imaginations :-)

--

ஆமாச்சு

S.Partha sarathy

unread,
Jan 14, 2010, 2:15:04 AM1/14/10
to mint...@googlegroups.com
/// //இந்தியாவில் மட்டும் அல்லாது உலகம் முழுதும் அனைத்து 12 இராசிகளின் பெயர்களும்  ஒன்றுபோல் இருப்பது ஏன்? (உ.ம்.) சிம்மம் - Leo, கன்னி - Virgo, etc///

யாராவது சரியான விளக்கம் அளித்தால் நன்றாக இருக்கும்.

பார்த்தசாரதி

2010/1/8 S.Partha sarathy <spsar...@gmail.com>
ஊக்குவிப்பதற்கு நன்றி தமிழ்தேனீ அவர்களே!

 கலந்துரையாடல் தொடர்வதற்கு என்னுடைய முந்திய வினாவிற்கு பதில் யாரேனும் அளித்தால் நன்றாக இருக்கும்

//இந்தியாவில் மட்டும் அல்லாது உலகம் முழுதும் அனைத்து 12 இராசிகளின் பெயர்களும்  ஒன்றுபோல் இருப்பது ஏன்? (உ.ம்.) சிம்மம் - Leo, கன்னி - Virgo, etc.


மீண்டும் திங்கள் அன்று சந்திப்போம்,
அன்புடன்,
பார்த்தசாரதி


2010/1/8 Tthamizth Tthenee <rkc...@gmail.com>
அன்புள்ள    திரு  பார்த்தசாரதி  அவர்களே

வலுவான  அடைப்படை  ஒன்றை வைத்துக்கொண்டுதான்

ஜோதிடத்தைப்  பற்றி   எ்ழுத  ஆரம்பித்திருக்கிறீர்கள்  என்று நினைக்கிறேன்

தொடர்ந்து   எழுதுங்களேன்  என்ன தயக்கம்


தெரிந்து கொள்ளக் காத்திருக்கிறோம்



அன்புடன்
தமிழ்த்தேனீ

7-1-10 அன்று, S.Partha sarathy <spsar...@gmail.com> எழுதினார்:
தமிழ்த்தேனீ அவர்களே!
உலகில் யார் செய்தாலும் ஒரே விளைவு ஏற்படுவதுதான் அறிவியல்.
அதேபோல் உலகில் யாரிடம் கேட்டாலும் ஒரே பலன் ஏற்பட்டால் நான் ஏன் ஜோதிடத்தை மறுக்கப்போகின்றேன்.
ஏதேனும் ஒரு சாக்கு...
ஒன்று ஜாதகம் எழுதியவரை கணிப்பவர் தவறு என்பார்..
அல்லது கணிப்பவரை ஜாதகம் எழுதியவர் தவறு என்பார்... பல நூற்றண்டுகளாக தொடரும் கதை!
காக்கா உட்கார பனம்பழம் விழுந்தகதையாக ஆயிரத்தில் ஒருவர் அதுவும் ஒரேஒருமுறை மார்த்தட்டிக் கொள்வார்.....

அன்புடன்,
பார்த்தசாரதி

2010/1/7 Tthamizth Tthenee <rkc...@gmail.com>
விஞ்ஞானம் என்பது ஒரு அணுகுமுறை (Methodology). அதாவது ஒரு பிரச்சனையை
1. உற்றுநோக்குதல் (Observation)
2. அதன் மூலம் கிடைத்த தகவல்களை ஆராய்தல் (Data Analsis)
3.ஆராய்ச்சி முடிவுகளை பரிசோதனை செய்து பார்த்தல் ( Experimentation)
4.பரிசோதனை முடிவுகள் எதிர்பார்த்த விளைவோடு ஒத்துப் போதல்


என்று நீங்கள் மேலே  கூறிய  அனைத்தையுமே  செய்துதானே  நம்  முன்னோர்கள்  ஜோதிடத்தையும்  ஏற்படுத்தினர்

அவர்கள்  ஜோதிடம், கணிதம், வானசாத்திரம், நாம் ஆரோக்கியமாக வாழ வேண்டிய முறைகள்,  வருங்காலத்தில் எப்படி நடந்து கொள்ளவேண்டும்  என்னும் வழி முறைகள், மருத்துவம்,  எல்லாவற்றையுமே  ஆராய்ந்து  அனுபவித்து ,கவனித்து  அதன் விளைவுகளை  மனதில் வாங்கி  அதன் மூலமாகவே  எல்லாவற்றையும்  தங்கள்  அனுபவ பூரவமாக  உணர்ந்து   பிறகுதான்  அவற்றை நாம் கடைப்பிடிக்கும் முறைகளாக ஏற்படுத்தி வைத்தனர்

அதனால்  ஜோதிடம் வான சாத்திரத்தில் ஒரு பகுதி என்று வேண்டுமானால் சொல்லலாம்

அனைத்தும் அறிவியலே


அன்புடன்
தமிழ்த்தேனீ








7-1-10 அன்று, S.Partha sarathy <spsar...@gmail.com> எழுதினார்:
அனைவருக்கும் எனது தாழ்மையன பதில்:
விஞ்ஞானம் என்பது ஒரு அணுகுமுறை (Methodology). அதாவது ஒரு பிரச்சனையை
1. உற்றுநோக்குதல் (Observation)
2. அதன் மூலம் கிடைத்த தகவல்களை ஆராய்தல் (Data Analsis)
3.ஆராய்ச்சி முடிவுகளை பரிசோதனை செய்து பார்த்தல் ( Experimentation)
4.பரிசோதனை முடிவுகள் எதிர்பார்த்த விளைவோடு ஒத்துப் போதல்

நம் முன்நோர்கள் சூரிய கிரகணம், சந்திர கிரகணம் போன்ற வற்றை பல வருடங்கள் உற்றுநோக்கி, அதில் கிடைத்தத் தகவல்களை ஆராய்ந்து, முடிவில்   அதற்கான தோறாய வாய்பாட்டை( Emperical formula) உருவாக்கி, அதன்படி எதிர்பார்த்த நேரதில் கிரகணங்கள் தோன்றுவதை உறுதிப்படுத்தினர்.

எனவேதான் வானவியலை அறிவியலின் தாய் என்கின்றோம்.
அறிவியல் சிந்தனை என்பது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே மனிதனிடத்திலேயே ஆரம்பித்துவிட்டது.

ஜோதிடம் என்பது பிற்காலதில் வானவியலை ”தனிமனதினின்” வாழ்க்கையோடு தொடர்புபடுத்தி பிறந்தால் அதை மூடக்குழந்தை எனலாம்.

நம்முன்னோர்கள் ஆரம்பித்துவைத்த வானவியல் எக்காலத்திற்கும் பொருந்துவதால் அது அறிவியல்.
அதிலிருந்து பிறபிக்கப்பட்ட ஜோதிடம் எக்காலத்திற்கும் பொருந்த்தாததால் அது மூடநம்பிக்கை.

எண்கணிதம் (Number system) - அறிவியல் 
அதிலிருந்த பிறந்த Numerology - மூடநம்பிக்கை 

விஞ்ஞானம் என்பது ஆய்வுக்கூடத்தில் தற்காலத்தில் கண்டுபிடித்தது என்ற தவறான பிரம்மை நம்மில் பலருக்கு இருப்பதால் முதலில் அதை உச்சரித்தாலே அலர்ஜி ஏற்படுகின்றது.

மிகஎளிதாக சொல்லவேண்டுமானால் விஞ்ஞானம் என்பது
வள்ளுவரின் மொழியில்
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.
படிக்காத ஒரு குடும்பத்தலைவியும் தனது வாழ்க்கைப்பிரச்சனைகளை மேற்கூறிய முறையில் அணுகினால் அதுவும் அறிவியல் முறையே!
அன்புடன்,
பார்த்தசாரதி



2010/1/7 Tthamizth Tthenee <rkc...@gmail.com>
இன்றைய  காலகட்டத்திலும் ஏற்படும் சூரிய கிரகணம், சந்திர கிரகணம்
போன்ற அனைத்தையுமே  நம் முன்னோர்கள்  விஞ்ஞானம் வளராத அக்காலத்திலேயே  கணித்து வைத்துவிட்டார்கள்

அவர்கள் கணித்ததைப் போலவே  இன்றும் அனைத்தும் ஏற்படுகின்றன

நம்  முன்னோர்கள்  அறிந்து வைத்திருந்த பல இயற்கை ரகசியங்கள்  இன்றும் நம்மால் அறியமுடியவில்லை என்பதே உண்மை

அவர்கள்  முறையாக  அடுத்த வாரிசுகளுக்கு அவற்றின் ரகசியங்களை  கற்றுக்கொடுக்காமல் போனதுதான்
நம் முன்னோர்கள் செய்த  ஒரு தவறான  காரியம்

இப்போதும் ஒன்றும் கெட்டுப் போய்விடவில்லை

நம்முடைய  முன்னோர்கள் சொன்னதையெல்லாம்  முறையாக ஆராய்ந்தால்

நாம் இன்னும் பல கண்டுபிடிப்புகள் நிகழ்த்தலாம்

அறிவியலில்  முன்னே நிற்கும்  பல நாடுகள்

நம்முடைய  நால்வகை  வேதங்களையும்  முறையாக ஆராய்ந்துதான்
இன்றும் கண்டுபிடிப்புகள்  நிகழ்த்துகிறார்கள்

நம் வேதங்களில் இல்லாத  அறிவியல் ஏதுமில்லை என்பது என்னுடைய தாழ்மையான கருத்து




அன்புடன்
தமிழ்த்தேனீ

7-1-10 அன்று, Geetha Sambasivam <geetha...@gmail.com> எழுதினார்:
//நம் முன்னோர்கள் கூறியதற்காக வறட்டு பிடிவாதமாக பூமி தட்டையானது என நாம் வாதிடுவதில்லை.//

குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும், விஞ்ஞானம் சொல்லும் முன்னே நம் முன்னோர்கள் பூமி உருண்டை என்று சொல்லிவிட்டார்கள். தவறான கருத்தைக் கூறுகிறீர்கள். :((((((((((((((

2010/1/7 S.Partha sarathy <spsar...@gmail.com>
 அந்தக்காலத்தில் கூறிய அனைத்தும் தற்போது நாம் நம்பத்தேவையில்லை.
உதாரணத்திற்கு என நம்பினார்கள், இன்று அது உண்மையில்லை என நாம் எல்லோரும் அறிவோம். நம் முன்னோர்கள் கூறியதற்காக வறட்டு பிடிவாதமாக பூமி தட்டையானது என நாம் வாதிடுவதில்லை.
அதுபோல் இயற்கையைப் பற்றி தெளிவில்லாது அதைக்கண்டு பயந்த காலத்தில் கூறிய கருத்துகள் இக்காலத்தில் நாம் பின்பற்றுவது தேவை இல்லாதது.

அன்புடன்,

பார்த்தசாரதி

2010/1/6 Tthamizth Tthenee <rkc...@gmail.com>
திரு பார்த்தசாரதி அவர்களே

விஞ்ஞானம் வேறு வானசாத்திரம் வேறல்ல
என்று இப்போது  நீங்கள் கூறியதை  உணரும் பகுத்தறிவு இப்போது ந்மக்கிருக்கிறது
அந்தக் காலத்தில்  மக்கள்  விஞ்ஞானம் என்று சொன்னால்   புறிந்துகொள்வார்களா

அதுமட்டுமல்ல

ஜோதிடம்  என்பது  நம் முன்னோர்களால் ஒப்புக்கொள்ளப்பட்ட  கணிதம்

முந்தைய காலத்தில்  வானத்தைப் பார்த்து கோள்களின் இருப்பை வைத்தே
ஒவ்வொரு  கணத்தையும்   கணித்தனர் நம் முன்னோர்
அப்போது தொலைநோக்கிக் கருவி இல்லை

ஆகவே ஜோதிடம் என்பது வானவியல் என்னும் தாய்க்குப்  பிறந்த
 மூடக் குழந்தை என்னும் வாதத்தை ஒப்புக்கொள்ள முடியவில்லை


அன்புடன்
தமிழ்த்தேனீ


5-1-10 அன்று, S.Partha sarathy <spsar...@gmail.com> எழுதினார்:
தமீழ்தேனீ அவர்களே!
கடந்தமாதம் பாரதியை நினைவுகூர்ந்த மின்தமிழ் நண்பர்கள் 

ஜோதிடம் தனை இகழ்!

என ஆத்திச்சூடியில் அவர் கூறியதை மறந்திருக்கமாட்டார்கள் என நம்புகிறேன்.

விஞ்ஜானம் வேறு வான சாஸ்த்திரம் வேறு அல்ல. உண்மையில் வானவியலே அனைத்து அறிவியல்களுக்கும் தாய் ஆகும். ஜோதிடம் அதிலிருந்து பிறந்த மூடக்குழந்தை. அதன் பிறப்பிடம் இந்தியாவும் அன்று. எனவே அதை இந்தியரின் கண்டுபிடிப்பு என்று கருதி அதற்கு ஆதரவாக ஆயிரம் கதைகளை கூறினாலும் மயங்கவேண்டாம்.
அன்புடன்,
பார்த்தசாரதி


2010/1/2 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

ஜோதிடம்  என்றவுடன்  நான் எழுதிய கட்டுரை நினைவுக்கு வந்தது

 

அன்பு நண்பர்களே ஜோதிடம் என்பது பொய்யல்ல
உண்மை, விஞ்ஜானம் வளராத ஒருகாலத்தில்

வான சாஸ்த்திரம் என்னும் ஒரு வகை கணக்கை கொண்டு ,அன்று பெரியவர்கள்
கணித்து வைத்த விஷயங்கள்தான் இன்றும்,முழுநிலவுநாள்,மறை நிலவு
நாள்,சந்திர க்ரகணம் ,சூரிய க்ரகணம்
வருடம் ,மாதம், ,வாரம் ,தேதி ,மற்றும்
எல்லாவித வானசாஸ்திரங்களையும்
இன்றும் நாம் கடைப்பிடிக்க உதவியாய் இருக்கிறது
இன்று விக்ஞானிகள் கூறும் ப்ரபஞ்ஜ ரகஸ்யங்கள் அன்றே, நம் முன்னோர்களால்
வான சாஸ்திரம் என்று  எழுதி வைக்கப் பட்டதுதான்,
ஆகவே பெரியவர்கள் கண்டு பிடித்த ஜோதிடம் பொய்யல்ல ,உதாரணமாக அப்போது
ஒரு ஜனனம் நிகழும் போது ,உடனே அக் குழந்தையின் அழுகுரலை வைத்து ,அல்லது
அக்குழந்தையின் தலை வெளியே வருவதை வைத்து ,உடனே வானிலையை ஆராய்ந்து
அக்குழந்தை என்ன நக்ஷத்திரத்தில் என்ன வேளையில் பிறந்திருக்கிறது ,அக்
குழந்தையின் எதிர்காலம் எப்படி இருக்கும் ,என்பதை துல்லியமாக கணித்து
எழுதி வைக்கும் வல்லுனர்கள் இருந்தார்கள்,
அப்படிப்பட்ட வல்லுனர்களால் கணிக்கப் பட்டது ஜ்யோதிடம்,ஆனால்
தற்காலத்தில் அது மிகவும் தவறான முறையில்,பணம் சம்பாதிக்கப் பயன்
படுவதால்,யார் வேண்டுமானாலும் ,ஜ்யோதிடம் சொல்லலாம் என்று மாறிவிட்ட
காரணத்தால்
சரியான முறையில் சொல்லப்படாத காரணத்தால்,நாம் நம்பாத அளவுக்கு ஜ்யோதிடம்
மாறிப் போய் உள்ளது
அப்போது குழந்தையின் பிறப்பை துல்லியமாகக் கணித்தார்கள்,ஆனால் இப்போது
குழந்தை பிறக்கும் போது ,அக்குழந்தையின் தகப்பனின் கையில் இருக்கும்
கடிகாரத்தில் ஒரு நேரம் , மருத்துவம் பார்த்த வைத்தியரின்
கைக்கடிகாரத்தில் ஒரு நேரம்,
செவிலித்தாயிம்  கைக் கடிகாரத்தில் ஒரு நேரம் என்று ,மாறி இருக்கிற
காரணத்தாலும் ,மற்றும் குழந்தைகள்
வெளிநாட்டில் ,உள்நாட்டில் ,பிறக்கும்போது (latidude)
மாறுவதாலும் ,சரியாக கணிக்கப் படாமல் போகிறது,அதனால் பலன்கள் துல்லியமாக
கணிக்கப்படுவதில்லை,அதை வைத்துக் கொண்டு
ஜ்யோதிடம் பொய் என்று சொல்லுவ்தில் பொருள் இல்லை,ஜ்யோதிடம் உண்மை,இதை
நிரூபிக்க நாம் மேலும் ஆராய்வோம் ,மாற்றுக் கருத்துள்ளவர்கள் தயவு செய்து
தெரிந்த விஷயங்களைச் சொல்லுங்கள்,ஆரோக்கியமாக வாதிடலாம்,கற்றுக்
கொள்வோம்.........

எனக்குத் தெரிந்து  நான் கேள்விப்பட்ட ஒரு கதையை இங்கு சொல்லுகிறேன்

ஒரு மஹாராஜா, அவருக்கு இளவரசன் பிறக்கப் போகிறான் என்று அறிந்து ,பல
நாட்டிலிருந்தும் ,
அந்த நாட்டின் ஜ்யோதிட வல்லுனர்களும்  அரசவையில் கூடி இருக்கிறார்கள்

அப்போது அந்த நாட்டின் தலைமை ஜ்யோதிடர்
இளவரசன் பிறந்தவுடன் ஜாதகம் குறிக்கிறார்
குறித்து அதை அவர் படிக்கிறார்,
இளவரசன் வருங்காலத்தில் எப்படி இருப்பான்
என்று என்று சொல்லுகிறார், வருங்காலத்தில்
அந்த இளவரசன்,நாட்டை சிறப்பாக ஆளுவான்
ஒரு பெரிய சாம்ராஜ்யத்தைப் படிப்பான் என்றெல்லாம் அவர்
கூறுகிறார் ,அத்தனை ஜ்யோதிடர்களும்  அதை ஆமோதிக்கிறார்கள்
மன்னன் சந்தோஷமாக அனைவருக்கும் பரிசுகள் அளிக்கிறான், இந்த வேளையில்
வறுமையின் வடிவாக எலும்ப்பும் தோலுமாக ஒரு பெரியவ்ர் வருகிறார் .......
அவர் அரசனிடம் வந்து அத்தனை ஜ்யோதிடர்களும்
அவன் அளிக்கும் பரிசுகளுக்காக பொய் சொல்லுகிறார்கள்,பிறந்திருக்கும்
குழந்தை இன்னும் சரியாக ஒரே வருடத்தில் ஒரு பன்றி முட்டி இறந்து
போகும்,என்கிறார் ,அரசன் வெகுண்டெழுந்து
அச் ஜோசியனை சிறையில் இடச் சொல்லி உத்தரவு போடுகிறான்,அவனை சிறையில்
இடுகிறார்கள்
உடனே மன்னன் நாட்டிலிருக்கும் அத்தனை பன்றிகளையும் ஒன்றுகூட விடாமல்
கொல்லும்படி உத்தரவு போடுகிறான்,அனைத்துப் பன்றிகளும் கொல்லப் படுகின்றன,

ஒரு வருடம் ஓடுகிறது ,அந்த  இளவரசனின்  பிறந்த நாள் வெகு விமரிசையாகக்
கொண்டாடப்படுகிறது,விழா இனிதே முடிகிறது
அரசன் மகிழ்வுடன் இருக்கிறான் குழந்தைக்கு தங்கத் தொட்டிலிட்டு
தாலாட்டிக் கொண்டிருக்கிறார்கள்
திடீரென்று எப்போதோ மன்னனால் , வேட்டையாடப்பட்டு மண்டபத்தில் மேலே
மாட்டப்பட்டிருக்கும்  ஒரு காட்டுப் பன்றியின்
தலை கீழே விழுந்து தங்கத் தொட்டிலில், இருக்கும் இளவரசனைக்
கொல்கிறது........!!!!!!

அதிர்கிறான்  மன்னன், குழந்தை  இறந்த துக்கத்தையும்  தாங்கிக் கொண்டு
சிறையில் இருக்கும் தீர்கதரிசியை அழைத்து வரச் செய்து அவரை உட்கார வைத்து
மண்டியிட்டு தன்னை மன்னிக்கும் படி வேண்டிக் கொண்டு அவர் எப்படி ஜாதகம்
கணித்தார் என்று கேட்க்கிறான் அதற்க்கு அந்த முதியவர் முதலில் உன்னுடைய
ஆஸ்தான ஜ்யோதிடனைக் கூப்பிட்டு அவர் எப்படிக் கணித்தார் என்று கேள்
என்கிறார்......!

ஆஸ்தான ஜ்யோதிடர் வரவழைக்கப் படுகிறார்
அவர் நடுங்கிக் கொண்டே மன்னா எப்படி தவறு நேர்ந்தது என்று
புறியவில்லை ,என்று சொல்லிவிட்டு ,ப்ரசவ நேரத்தில் அந்தப்புரத்தில்
இருந்த ஒரு தாதியை வரவழைக்கிறார் .அவளிடம்
எப்படி தான் ஜாதகம் கணித்தேன் என்னும் வழி முறையை விளக்கச் சொல்லுகிறார்
அதற்கு அவள் ஐய்யா தாங்கள் கூறிய படி
எலுமிச்சை பழத்தை குழந்தையின் தலை வெளியே கண்டவுடன் வெளியில்
எறிந்தேன்,அதை வைத்து உள்ளே நான் இருந்த இடத்திலிருந்து வெளியே
இருக்கும் தூரத்தை கணக்கிட்டு தாங்கள் கணித்தீர்கள் என்றாள்
உடனே சிறையிலிருந்த முதியவ்ர் சரி ஆனால் நீ முதல் தரமே சரியாக வெளியில்
எலுமிச்சை பழத்தை வீசி அடித்தாயா என்று வினவ ,அதற்கு அந்த தாதி இல்லை
ஐய்யா ஒருமுறை வெளியில் எறிந்தேன் ,அது கதவின் மேல் பட்டு உள்ளே
விழுந்தது,அதனால் மீண்டும் எறிந்தேன் என்றாள்

உடனே முதியவ்ர் சொன்னார் அதுதான் தவறான கணிப்புக்கு காரணம் என்றார் ,ஆகவே
ஒரு வினாடி கூட ஒருவனின் தலையெழுத்தை மாற்றவல்லது
இப்போது நினைத்துப்பாருங்கள் ஜ்யோதிடத்தின் மகிமையை

அன்புடன்

தமிழ்த்தேனீ

 



 
2-1-10 அன்று, Innamburan Innamburan <innam...@googlemail.com> எழுதினார்:
சுகுமாரன், இந்திராணி வந்தாளோ? தேனீ, துர்க்கை தக்ஷ்நேஸ்வரிலிருந்தா?
 

 
2010/1/2 Tirumurti Vasudevan <agni...@gmail.com>

:-)))))))))

அது ஒரு மாதிரி க்யூரியாசிடி.
நம்பாதவங்க கூட என்னதான் சொல்லுது பாக்கலாம்ன்னு பார்ப்பாங்க!
இங்கெ போய் எத்தனி பேர் இத பாத்து இருக்காங்கன்னு கவுண்டரை பாருங்க!
http://classroom2007.blogspot.com/

திவாஜி

2010/1/2 Astrologer Vighnesh சென்னை <lakshmi...@gmail.com>

இதிலிருந்து தெரிகிறது எவ்வளவு பேருக்கு ஜோதிடத்தில் ஆர்வம் இருக்கு என்று
. எனக்கு இப்படி வருகிறது.



--
My blogs: [all in Tamil]
http://anmikam4dumbme.blogspot.com/
http://chitirampesuthati.blogspot.com/ photo blog now with english text too!
http://kathaikathaiyaam.blogspot.com/

BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!

--
 
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
இன்னம்பூரான்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
மனிதமும்,உலகமும் காப்போம்,

மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புள்ள
தமிழ்த்தேனீ

http://www.peopleofindia.net
rkc...@gmail.com
http://thamizthenee.blogspot.com

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--

"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
மனிதமும்,உலகமும் காப்போம்,

மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புள்ள
தமிழ்த்தேனீ

http://www.peopleofindia.net
rkc...@gmail.com
http://thamizthenee.blogspot.com

--

"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--

"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
மனிதமும்,உலகமும் காப்போம்,

மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புள்ள
தமிழ்த்தேனீ

http://www.peopleofindia.net
rkc...@gmail.com
http://thamizthenee.blogspot.com

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--

"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
மனிதமும்,உலகமும் காப்போம்,

மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புள்ள
தமிழ்த்தேனீ

http://www.peopleofindia.net
rkc...@gmail.com
http://thamizthenee.blogspot.com

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--

"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
மனிதமும்,உலகமும் காப்போம்,

மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புள்ள
தமிழ்த்தேனீ

http://www.peopleofindia.net
rkc...@gmail.com
http://thamizthenee.blogspot.com

Banukumar Rajendran

unread,
Jan 14, 2010, 11:36:50 PM1/14/10
to mint...@googlegroups.com
திரு.பார்த்தசாரதி,
 
இதையே தங்களின் ஆராய்ச்சிக்கு குறிப்பாக எடுத்துக் கொண்டு மேலும் ஆராய்ச்சி செய்யலாமே?
 
 
//யாராவது சரியான விளக்கம் அளித்தால் நன்றாக இருக்கும்//
 
 
யாரும் பதில் அளிக்க மாட்டார்கள். வீண் வேலை.
 
 
இரா.பா

2010/1/14 S.Partha sarathy <spsar...@gmail.com>

Swarna Lakshmi

unread,
Jan 15, 2010, 1:34:27 AM1/15/10
to mint...@googlegroups.com
ராசிகளின் பெயர்களும் (சில கலாசாரங்களில்) மாதப்பெயர்களும்  உலகெங்கிலும் வாழ்ந்த வானவியல் அறிஞர்களால் உருவாக்கப்பட்டவை என்றும் வெவ்வேறு காலங்களில் விண்மீன்களின் தொகுப்புகளைப் பார்த்து பெயரிடப்பட்டவை என்றும் கேள்விப்பட்டிருகிறேன். அத்தொகுப்புகள் பூமியில் எங்கிருந்து பார்த்தாலும் ஒரெ வகையிலேயே தெரியும் அல்லவா, அதனாலேயே பெயர்களும் அவ்வாறே அமைந்திருக்கலாம். அவ்வாறில்லாமல், வேத கலாசாரம் உலகில் எல்லா இடங்களிலும் பரவியிருந்ததினாலும், ஜ்யொதிஷம் என்ற வேத அங்கம் எல்லா இடங்களிலும் அறியப்பட்டிருந்ததாலும் இவ்வாறு பெயர்கள் ஒரெ பொருளை கொண்டிருக்கலாம். நம் குழுமத்தில் உள்ள ஜோதிட வல்லுனர்களின் கருத்தை அரிய ஆவல்.
 
லக்ஷ்மி


From: Banukumar Rajendran <banuk...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Fri, 15 January, 2010 10:06:50 AM

Subject: Re: [MinTamil] Re: தொடுகுறி சாஸ்திரம்

N. Kannan

unread,
Jan 15, 2010, 1:46:17 AM1/15/10
to mint...@googlegroups.com
2010/1/15 Swarna Lakshmi lakshm...@yahoo.com

>
>  அத்தொகுப்புகள் பூமியில் எங்கிருந்து பார்த்தாலும் ஒரெ வகையிலேயே தெரியும் அல்லவா,

இப்படி முன்பும் சொல்லப்பட்டது.
நட்சத்திர மண்டலங்களின் தோற்றம் வட புலம், தென் புலம் இவைகளில்
வேறுபடும். தென் புலத்தில் மட்டும் தெரியும் சில கூட்டங்களுண்டு (உம்.
southern cross).
பாரதவர்ஷம் என்று இந்த உலகையே நம் சாஸ்திரங்கள் கூறுகின்றன.
இந்தியாவிலிருந்து ஆசீயவிற்கு புலம் பெயர்ந்திருப்பதை சமீபத்திய ஆய்வுகள்
சுட்டுகின்றன.
விவேகாநந்தர் எகிப்திய, சுமேரிய நாகரீகங்கள் தென்னகத்திலிருந்து போனவை என்கிறார்.
மாயா, அஸ்த்தகா கலாச்சாரங்கள் 'பாதாள லோகம்' என்கிறார் காஞ்சி முனி.
வரும் காலம் விடை தரலாம்.

க.>

Tthamizth Tthenee

unread,
Jan 15, 2010, 2:14:07 AM1/15/10
to mint...@googlegroups.com
கோள்கள் சுழன்றுகொண்டே இருப்பது போல

பூமியும்  சுழன்றுகொண்டே இருப்பதால்

பூமியிலிருந்து  எந்தப் பாகத்திலிருந்து பார்த்தாலும்   அத் தொகுப்புகள்  ஒரே மாதிரி தோற்றமளிக்க  வாய்ப்புண்டு

கால நேர விதயாசங்கள் வேண்டுமானல்  மாறுபடலாம்  ஓரிடத்திலிருந்து  மற்றோர் இடத்துக்கு

அதனால்தான்  பிறந்த நாட்டை வைத்து     ( லாட்டிட்யூட்)  க்குத் த்குந்தாற்போல்  ஜாதகங்கள்  கணிக்கப் படுகின்றன
 துருவ நக்ஷத்திரம்  எங்கிருந்து பார்த்தாலும்   வட திசையிலேயே  தெரியும்


அன்புடன்
தமிழ்த்தேனீ



15-1-10 அன்று, N. Kannan <navan...@gmail.com> எழுதினார்:
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

N. Kannan

unread,
Jan 15, 2010, 2:57:17 AM1/15/10
to mint...@googlegroups.com
கொஞ்சம் இங்கே பார்க்கவும். அறிவியல் சுவாரசியமானது:

http://domeofthesky.com/clicks/constlist.html

2010/1/15 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:


> கோள்கள் சுழன்றுகொண்டே இருப்பது போல
>

பூமியும் ஒரு கோள்தான். கொஞ்சம் கோணலாகச் சுற்றுகிறது.


> பூமியும்  சுழன்றுகொண்டே இருப்பதால்
> பூமியிலிருந்து  எந்தப் பாகத்திலிருந்து பார்த்தாலும்   அத் தொகுப்புகள்  ஒரே
> மாதிரி தோற்றமளிக்க  வாய்ப்புண்டு
>

இல்லை என்பதுதானே கருத்து!

>  துருவ நக்ஷத்திரம்  எங்கிருந்து பார்த்தாலும்   வட திசையிலேயே  தெரியும்
>

துருவ நட்சத்திரம் என்பது Constellation அல்ல. நாம் பேசுவது constellation.

க.>

It is loading more messages.
0 new messages