மிக அருமையான கட்டுரை. லோகாவின் பின்னூட்டமும் அவசியமான ஒன்று. தமிழ் மொழியைப் பற்றி அறிய, அறிய அது வெறும் மொழியல்ல, ஒரு “வாழ்வியல்” என்பது புரிகிறது. இப்படிச் சுவைத்து பாலிலும், தேனிலும் கலந்து கொடுத்தால் யார்தான் வேண்டாம் என்பார்கள்? நண்பர் முனைவர் திருவேங்கிடமணி சில காலம் முன்பு அவர் தந்தையார் எழுதிய எளிய இலக்கண (பிழை திருத்தம்) நூலை இங்கு தொடர்ந்து வெளியிட்டார். அது மீள் பதிவு காண வேண்டிய காலம் வந்துவிட்டது என்று தோன்றுகிறது.உங்கள் ‘மொழிக்காவல்’ முனைப்பிற்கு வாழ்த்துகள். ஏன் மின் தமிழிலிலேயே ‘பிழை திருத்தம்’ என்றொரு இழையைத் துவங்கி நாங்கள் செய்யும் பிழைகளைத் திருத்தி எங்களை நெறிப்படுத்தக் கூடாது?நா.கண்ணன்2014-07-07 16:55 GMT+08:00 'veera pandian' via மின்தமிழ் <mint...@googlegroups.com>:
--தமிழ்மொழி, தமிழர்கள், தமிழ்நாடு வீழ்ச்சிப் பாதையிலிருந்து மீள வேண்டும் என்பதில் சுயநலமற்ற உண்மையான அக்கறையுள்ள தமிழ்த் தலைவர்களும், தமிழ் ஆர்வலர்களும் மீட்சிவழியைத் தேடும் கவலையுடன் ஆழ்ந்து பரீசிலிக்க வேண்டிய பதிவு முனைவர்.பொன்முடியின் 'புணர்ச்சி' தொடர்பான பதிவு ஆகும். (அவரின் பதிவிலிருந்து மேற்கோள்கள் கீழே சிகப்பில்)“ இதன்படிப்பார்த்தால், இன்று காணக்கிடைக்கின்ற அனைத்துநூல்களும், அவை கதைநூல்களாகட்டும், கவிதைநூல்களாகட்டும், கட்டுரைகளாகட்டும், ஏன் பாடநூல்களும் இலக்கணநூல்களுமேயாகட்டும், இன்று பக்கத்துக்குப்பக்கம் பிழைபட்டேயுள்ளனவென்றால் அது மிகையில்லை!”நிகழ்காலத்தில் உலகில் வேறு எந்த மொழியிலும் " கதைநூல்களாகட்டும், கவிதைநூல்களாகட்டும், கட்டுரைகளாகட்டும், ஏன் பாடநூல்களும் இலக்கணநூல்களுமேயாகட்டும், இன்று பக்கத்துக்குப்பக்கம் பிழைபட்டேயுள்ள" நிலை இருப்பதாகத் தெரியவில்லை.தமிழுக்கு மட்டும் இந்த இழிநிலை 'எப்போது' தொடங்கி, 'எப்படி' வளர்ந்தது? என்ற கேள்விகளைப் புறக்கணித்து தீர்வுகள் தேட முடியாது.தமிழர்களிடையே வளர்ந்து வரும் குற்றங்களும் குழப்பங்களும் , அவர்கள் தம் மொழியில் 'புணர்ச்சி'யில் புரிந்து வரும் கீழ்வரும் விளக்கம் அடிப்படையிலான குற்றங்களுடனும், குழப்பங்களுடனும் தொடர்புடையவையா? இல்லையா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.“சொல்லவரும் பொருளை குற்றமின்றியும் குழப்பமின்றியும் தெளிவாக எவரும் ஒன்றேபோலறிந்துகொள்ளுமாறும் சரியாயெழுதுவதற்கு ஒரு கருவி உண்டென்றால் அது புணர்ச்சியைத்தவிர வேறொன்றுமில்லை.”எழுத்தில் வெளிப்படும் குற்றங்களும் குழப்பங்களும் பேச்சிலும் வெளிப்பட வாய்ப்புண்டு. எனவே தமிழ் எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் பேச்சு ஒலிப்பதிவுகளையும் ஆராய்வதும் அவசியமாகும்.புணர்ச்சி என்பது எழுத்தில் வெளிப்படுவது போல, பேச்சிலும் 'ஒலியியல்' (acoustics) அடிப்படையில் வெளிப்படுவதாகும். யாப்பிலக்கண விதிகளின்படி உருவான பாடல்களில் இசை ஒலியியல் ( musical acoustics) அடிப்படையில் அது வெளிப்படுவதாகும்.தமிழர்களிடையே வளர்ந்து வரும் குற்றங்களும் குழப்பங்களும் , அவர்கள் தம் மொழியில் 'புணர்ச்சி'யில் புரிந்து வரும் குற்றங்களுடனும், குழப்பங்களுடனும் எவ்வாறு தொடர்புடையவை என்பதை இங்கு சுருக்கமாகப் பார்க்கலாம்.நுரையீரலில் துவங்கும் காற்று குரனாணில் (vocal cord ) மோதி துவங்கும் அதிர்வுகள் குரலொலி இயக்கவியல் (vocal dynamics) அடிப்படையில் பேச்சொலிகளையும், இசையொலிகளையும் எழுப்புகின்றன.தொல்காப்பியத்தில் புணர்ச்சி உள்ளிட்ட இலக்கண விதிகள் 'ஒலியியல்' அடிப்படையிலும், 'இசை ஒலியியல்' (Musical Acoustics) அடிப்படையிலும் அமைந்துள்ளவையாகும். (http://musictholkappiam.blogspot.in/ )தொல்காப்பியத்தில் ஒரு பாடலின் எழுத்தின் இசை ஒலிகள் அடிப்படையில் இருவகை அசைகள் (நேரசை, நிரை அசை) சேர்ந்து சீரை உருவாக்கின்றன. அப்பாடலின் பாலை நிலை, பண்ணு நிலை, வண்ணக்கூறுபாடு, தாளக் கூறுபாடு பற்றிய தகவல்களைக் கொண்ட முக்கியத்துவ பணி(significant role) ஆற்றுவது சீர்.ஒரு பாடலின் இசையொலியில் வெளிப்படும் குற்றங்களும் குழப்பங்களும், அப்பாடலில் உள்ள 'சீர்கள்' மூலம் வெளிப்படும். ஒரு ஊரில் வாழும் மக்களின் பண்பை, அந்த ஊர்ப் பாடல்களில் வெளிப்படும் குற்றங்களையும் குழப்பங்களையும் வைத்தே கண்டுபிடிக்க முடியும் என்பதற்கான பழந்தமிழ் இலக்கியச் சான்று வருமாறு:“ பணிவு இல் சீர் மாத்திரை இன்றி நடக்குமேல், வாழும் ஊர் கோத்திரம் கூறப்படும்.”நாலடியார் 3:25;2இதே வழியில் தமிழர்களிடையே வளர்ந்து வரும் குற்றங்களும் குழப்பங்களும் , அவர்கள் தம் மொழியில் 'புணர்ச்சி'யில் புரிந்து வரும் குற்றங்களுடனும், குழப்பங்களுடனும் தொடர்புடையவையாகும்.எழுத்துக்கள் பலவகைப் பட்ட புணர்தல் விதிகளின் அடிப்படையில் சேர்ந்து கதைகள், கவிதைகள்,கட்டுரைகள் போன்றவற்றை உருவாக்குகின்றன. அதே போல் மனிதர்களும் பாரம்பரியம், பண்பாடு அடிப்படைகளிலான பலவகைப் பட்ட புணர்தல் விதிகளின் அடிப்படையில் சேர்ந்து குடும்பம், நட்பு வட்டம்,அமைப்புகள் போன்றவற்றை உருவாக்குகின்றனர்.சமூகத்தில் எந்த துறையிலும் உள்ள குற்றங்களையும் குழப்பங்களையும் அவ்வப்போது அடையாளம் கண்டு களையும் செயல் நெறிகள் ( Functional Checks) வலிவுடன் செயல்படுவது சமூக வளர்ச்சிக்கு வழி வகுக்கும். மாறாக அச்செயல் நெறிகள் வலுவிழப்பது சமூக வீழ்ச்சிக்கு வழி வகுக்கும். அச் செயல்நெறிகளே இல்லாது போனால் அவ்வீழ்ச்சி பள்ளத்தில் கொண்டு சேர்க்கும். அந்த நிலையில் தான் இப்போது தமிழ்நாடு இருக்கிறதா என்பதும் ஆய்விற்குரியதாகும்.இனியும் தாமதியாமல், தமிழ்ச் சமூகத்தில் ஒவ்வொரு துறையிலும் செயல்நெறிகள் செயல்பட துவங்கியாக வேண்டும். அந்த நோக்கில் முதலில் பள்ளி, கல்லூரிகளில் உள்ள தமிழ்ப் பாடப் புத்தகங்களில் உள்ள இலக்கணப் பிழைகளையும், தமிழ்த் தலைவர்கள், முக்கிய பேச்சாளர்கள் ஒலிப்பதிவுகளிலும் உள்ள குறைகளையும் கண்டுபிடித்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவித்து சரி செய்யும் செயல்நெறி முயற்சியாக நான் எனது நண்பர்கள் திருச்சி ('பெல்' பணி நிறைவு பணியாளர்) சமுத்திரராசன், (லண்டன்) தொல்காப்பியன் துணையோடு 'தமிழ்க் கண்காணிப்பு மையம்' துவங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். பணி ஓய்வு பெற்ற தமிழாசிரியர்களை உரிய சன்மானத்துடன் பணியில் அமர்த்தி செயல்பாடுகள் தொடங்க திட்டமிட்டுள்ளோம். இது போன்ற முயற்சிகளில் உள்ளவர்களுடன், தனி மனித முக்கியத்துவம் இன்றி, கூட்டாக செயல்படவும் எண்ணியுள்ளோம்.செ . அ . வீரபாண்டியன்வணக்கம் டாக்டர்.பொன்முடி.இங்கு தொடர்ந்து தாங்கள் தங்களது கட்டுரைகளை இதே போல பகிர்ந்து வரலாம்.அன்புடன்சுபா--
2014-07-06 0:57 GMT+02:00 dr.ponmudi <dr.pon...@gmail.com>:--சொற்களை சேர்த்தெழுதுவது புணர்ச்சியெனப்படும். தனிச்சொற்கள் ஒன்றுடனொன்று புணர்ந்து தொடர்மொழிகளாகின்றன. தனிச்சொற்களோடு தனிச்சொற்களைச்சேர்ப்பதுமட்டுமன்றி, ஒரு பெயர்ச்சொல்லுடன் வேற்றுமையுருபுகளைச்சேர்த்தலும் உம்மையைச்சேர்த்தலும் ஒரு வினைச்சொல்லுடன் (பகுதி) இடைநிலை, சாரியை, விகுதியாகியவற்றைச்சேர்ப்பதும் புணர்ச்சியே. தமிழில் எழுத்தென்பது பாக்களாகமட்டுமேயிருந்தகாலத்தில் புணர்ச்சியானது சரியாயிருந்திருக்கக்கூடும். ஆனால் இக்காலத்தில் உரைநடையில் அது முற்றிலும் கைவிடப்பட்டுவிட்டதென்பதே உண்மை.
வேற்றுமையுருபுகளும், உம்மையும் பகுபதவுறுப்புகளும் சேர்க்கப்பட்டேயிருப்பதால் அவை பிரிக்கப்படுவதில்லை. ஆனால் தனித்தனிச்சொற்களாலானவையான தொடர்மொழிகள் இடத்துக்கேற்றவாறு ஓரிடத்தில் சேர்ந்தும் வேறிடத்தில் பிரிந்தும்நிற்பதால் அவை இக்காலத்தில் அனைத்திடங்களிலும் பிரித்தேயெழுதப்படுகின்றன.புணர்ச்சியென்பது ஏதோ அடுத்தடுத்தசொற்களையெல்லாம் எந்தக்காரணமுமின்றி புணர்த்திவிடுவதன்று. எந்தவிருசொற்கள் புணர்வதானாலும் அதற்கு சரியான காரணமிருக்கவேண்டும்.
சொற்கள் காரணமில்லாமல் புணரும்போதும் காரணமிருந்தும் புணராதபோதும் சொல்லவரும் பொருளில் குற்றமுண்டாவதை தடுக்கமுடியாது. சொல்லவரும் பொருளை குற்றமின்றியும் குழப்பமின்றியும் தெளிவாக எவரும் ஒன்றேபோலறிந்துகொள்ளுமாறும் சரியாயெழுதுவதற்கு ஒரு கருவி உண்டென்றால் அது புணர்ச்சியைத்தவிர வேறொன்றுமில்லை.
வேறாய்ச்சொல்வதானால், புணர்ச்சியின் உதவியில்லாமல் சொல்லவந்த பொருளை சரியாகச்சொல்வதென்பது எவருக்கும் இயலாததாகும். இதன்படிப்பார்த்தால், இன்று காணக்கிடைக்கின்ற அனைத்துநூல்களும், அவை கதைநூல்களாகட்டும், கவிதைநூல்களாகட்டும், கட்டுரைகளாகட்டும், ஏன் பாடநூல்களும் இலக்கணநூல்களுமேயாகட்டும், இன்று பக்கத்துக்குப்பக்கம் பிழைபட்டேயுள்ளனவென்றால் அது மிகையில்லை!
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.comTo unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.--Suba Tremmelhttp://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!http://ksuba.blogspot.com - Suba's Musingshttp://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.comTo unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.comTo unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/
மிகவும் இன்றியமையாத தொடராக, இது தமிழ்த்தொண்டு செய்து வரவேண்டும் என்று நானும் கேட்டுக்கொள்கிறேன்.1.'இன்றியமையாத தொடராக'அல்லது'இன்றியமையாதத் தொடராக'
எது சரி? எது தவறு?
...
இன்றைய +2 தமிழ்ப்பாடநூலில் கதைப்பகுதியில்
மூன்றாவதுகதை ‘சட்டை’. ஜெயகாந்தனெழுதியது. அதில் இவ்வாறுள்ளது:
// அரையில் ஒரு துண்டும்
நெஞ்சுக்குழி வரை அடர்ந்துவிட்ட தாடியும் உண்மையைத் தேடும் அவனது தீட்சண்யமான பார்வையும்
– கொஞ்ச காலத்தில் அவனைப் பூந்தோட்டத்துச் சாமியாராக்கி விட்டது.
பூந்தோட்டத்துச் சாமியார் என்பதே இப்போது அவனுக்குப் பெயர் எனினும் அவர் சோம்பேறி அல்ல.
செடிகளுக்குத் தண்ணீர் இறைத்துக் கொட்டுவான். மடப்பள்ளிக்கு விறகு பிளந்து போடுவான். கோயில் பிரகாரத்தைக் கூட்டி வைப்பான்.; குருக்கள் வீட்டுத் தென்னை மரத்தில் ஏறித் தேங்காய் பறிப்பான். //
இதை படித்துப்பார்த்தீர்களா? பொதுவாக இதுபோல் ஒரு பகுதியை படிக்கும்போது படிப்பதன் பொருள் இன்னதென்பதை அறிந்துகொள்வதிலேதான் நாம் கவனமாயிருப்போமேயன்றி, அதில் இலக்கணக்குற்றமுள்ளதாவென்பதை பார்ப்பதில்லை. அது நமக்கு தேவையானதுமில்லை.
ஆனால், ஒரு மொழியை இலக்கணக்குற்றமில்லாமல் எழுதுவதற்கு நாம் கற்றிருந்தோமானால், எவராவது அதை குற்றமாயெழுதியிருந்தால் அந்த குற்றம் நம் கண்ணில் படாமற்போகாது.
ஆங்கிலத்தை நாமெல்லாம் கற்றிருக்கிறோமாதலால், அதை எவராவது குற்றமாயெழுதியிருந்தால் அதை பார்த்தவுடன் நம் மனமானது அந்த குற்றத்தை கண்டுபிடித்துவிடும். ஆனால் தமிழில் இன்று காணப்படும் குற்றங்களை நாம் குற்றமென்றே அறியாதிருப்பதனால் நமக்கு அவையெல்லாம் குற்றமாக படுவதேயில்லை.
இப்போது அதில் காணப்படும் இலக்கணக்குற்றங்களை சற்று பார்ப்போம்.
‘அடர்ந்துவிட்ட தாடியும் உண்மையைத் தேடும் அவனது தீட்சண்யமான பார்வையும் – கொஞ்ச காலத்தில் அவனைப் பூந்தோட்டத்துச் சாமியாராக்கி விட்டது.’
இதில் ‘கொஞ்ச’ என்பது என்னபொருளைத்தருமென்பதைப்பாருங்கள். அதென்ன கொஞ்சுவதையாசொல்கிறது?
‘கொஞ்சகாலத்தில்’ என்றெழுதியிருந்தால் இந்த குற்றம் வந்திருக்காது. இது பெயரெச்சத்தொடர்.
‘அவனைப் பூந்தோட்டத்துச் சாமியாராக்கி விட்டது’ என்பதில், ‘அவனைப்பூந்தோட்டம்’ என்பது குற்றமென்பது இப்போது உங்களுக்கு தெரிந்திருக்கும். இரண்டாம்வேற்றுமை பெயரை புணர்த்திக்கொள்ளாதன்றோ?
‘அவனை காட்டினான்’ என்றுவரும், ‘அவனை கேட்டான்’ என்றுவரும். இவற்றை புணர்த்திச்சொல்வதுமுண்டு. ‘அவனைக்காட்டினான்’ என்றும், ‘அவனைக்கேட்டான்’ என்றும் சேர்த்துச்சொல்வது, ‘அவனை’ என்பதை முதன்மைப்படுத்திச்சொல்வது.
ஆனால், அவனைப்பூந்தோட்டம்’ என்று வராது. ‘அவனை பூந்தோட்டத்துக்குவரச்சொன்னான்’ எனச்சொல்வது சரி. இதில் அவனை வரச்சொன்னான் என்பவை நேரடியாய்ப்பொருந்தக்கூடியவை. இவை புணரவுங்கூடும் ஆனால், இடையில் ‘பூந்தோட்டத்துக்கு’ என்பதுவந்ததால், அதையுஞ்சேர்த்துப்புணர்த்தமுடியாது. அப்படி புணர்த்திச்சொல்வதானால்,, ‘அவனைப்பூந்தோட்டத்துக்குவரச்சொன்னான்’ எனவரும். இதில், ‘அவனைப்பூந்தோட்டம்’ என்பது பூந்தோட்டத்தின் பெயராயிருக்கவேண்டும்!
‘சாமியாராக்கிவிட்டது’ என்பதும் ‘சாமியாராக்கி விட்டது’ என்பதும் ஒரேபொருளைத்தருமாவென்பதை எண்ணிப்பாருங்கள். ‘விட்டது’ என்பதை தனித்துச்சொன்னால் விட்டதென்பதை சிறப்பித்துச்சொன்னதாகாதா? இந்த வாக்கியம் விட்டதைப்பற்றியாசொல்கிறது?
‘பூந்தோட்டத்துச் சாமியார் என்பதே இப்போது அவனுக்குப் பெயர்’ என்பதைப்பாருங்கள்.
‘அவனுக்குப்பெயர்’ என்பது பிரிந்திருந்தாலும்
புணர்த்தப்பட்டிருப்பதற்கு அடையாளமாய் வலிமிகுந்திருப்பதால் நாம் அதை தொடர்மொழியாகவேகொள்வோம்.
தொடர்மொழியைப்பொருத்தவரை, நிலைமொழியானது சிறப்பித்துச்சொல்லப்பட்டதாகும். இங்கே ‘அவனுக்குப்பெயரென்பது
‘அவனுக்கு’ என்பதை சிறப்பித்துச்சொன்னது. இங்கே அவனுக்கென்பதை இப்படி சிறப்பித்துச்சொல்லவேண்டிய
தேவை உண்டாகவில்லை. அந்த பெயர் யாருக்கானதென்பதை படிப்போர் அறிந்துதானேபடித்துவருவர்?
எனவே,
‘‘பூந்தோட்டத்துச்சாமியாரென்பதே
இப்போது அவனுக்கு பெயர்’
எனச்சொல்வதே சரியாயிருக்கும். (‘பூந்தோட்டத்துச்சாமியார் என்பதே’ என ‘என்பதே’ என்பதை தனித்துச்சொல்வதும் பொருந்தாதென்பதை எண்ணிக்கொள்க)
‘எனினும் அவர் சோம்பேறி அல்ல’ என்பதைப்பாருங்கள்.
இதை நாம் படிக்கும்போது, ‘எனினும் அவர் சோம்பேறியல்ல’ என்று சேர்த்துப்படித்துவிடுவதால் இது குற்றமாய்ப்படுவதில்லை. ஆனால், ‘எனினும் அவர் சோம்பேறி’ என்பதுடன் இந்த வாக்கியம் முற்றுப்பெற்றுவிடுகிறது. ‘அவர் சோம்பேறி’ என்பது ஒரு முழுமையான வாக்கியமென்பது நமக்கு தெரிந்திருந்தும், இதை நாம் எண்ணிப்பார்க்காமல் சேர்த்துப்படித்துவிடுகிறோம்.
உண்மையில் நமக்கெல்லாம் படிக்கத்தெரியவில்லையென்றுதான்சொல்லவேன்டும்! ஏனென்றால், புணர்த்தப்பட்டிருப்பவற்றையன்றி, புணர்த்தப்படாதசொற்களை நாம் நாமாகப்புணர்த்திக்கொள்வது நமக்கு படிக்கத்தெரியவில்லையென்பதையேகாட்டும்.
புணர்த்திப்படிக்கவேண்டியவையென்றால் அவற்றை புணர்த்தியிருக்கவேண்டுமென்பதால், புணத்தாமலெழுதியது எழுதியவரதுகுற்றம். அதை அறியாதிருப்பது நம்முடைய அறியாமை. நாம் விழித்துக்கொண்டால் எவராலும் இப்படியெல்லாம் எழுதமுடியாது.
‘செடிகளுக்குத் தண்ணீர் இறைத்துக் கொட்டுவான்’ என்பதைப்பாருங்கள்.
இதை எப்படிப்படிப்பது? ‘செடிகளுக்குத்தண்ணீர் இறைத்துக்கொட்டுவான்’ என்றாபடிப்பது”
‘செடிகளுக்குத்தண்ணீர்’ என்பது செடிகளுக்கென்பதை சிறப்பித்தது. இந்த வாக்கியம், தண்ணீரை எதற்கிறைத்துக்கொட்டுவானென்பதையாசொல்கிறது?
தண்ணீரை’ என்றிருக்கவேண்டாமா? ஐயுருபை மறைத்தெழுதினால் சொற்களை சேர்த்தெழுதவேண்டாமா? ‘செடிகளுக்கு தண்ணீரிறைத்துக்கொட்டுவான்’ என்றெழுதியிருக்கவேண்டாமா?
‘விறகு பிளந்து போடுவான்’ என்பது ‘விறகுபிளந்துபோடுவான்’ என்றிருக்கவேண்டாமா? ‘விறகுபிளந்து’ என்பது இரண்டாம்வேற்றுமையின் தொகைநிலைத்தொடரன்றோ? ‘போடுவான்’ என்பதை ஏன் தனித்துச்சொல்லவேண்டும்? பிளந்து என்னசெய்வானென்பதற்கு விடையாயிது? போடுவானென்பதை சிறப்பித்துச்சொல்லவேண்டிய தேவையென்ன?
‘கோயில் பிரகாரத்தைக் கூட்டி வைப்பான்’ என்பதைப்பாருங்கள்.
இதில் ;கோயில்’ என்பதை என்னவென்றுகொள்வது? அதென்ன கூட்டியவனுடைய பெயரா? ‘கோயிற்பிரகாரத்தை’ என்றிருந்தால் இந்த குழப்பம் வராதன்றோ? இப்படியெழுதவேண்டாமென்றால் ‘கோயிலின் பிரகாரத்தை’ என்றெழுதியிருக்கலாம்.
‘பிரகாரத்தைக்கூட்டிவைப்பான்’ என்பது எதைக்கூட்டிவைப்பானென்பதைச்சொல்வது. பிரகாரத்தைக கூட்டிவைப்பான்’ என்பதோ பிரகாரத்தை என்னசெய்வானென்பதைச்சொல்வது. இங்கே எதைச்சொல்லவேண்டுமென்பதை எண்ணிப்பாருங்கள். எதைக்கூட்டுவானென்பதை சொல்லவேண்டியதில்லையென்பதும் என்னசெய்வானென்பதையே சொல்லியிருக்கவேண்டுமென்பதும் புரிகிறதன்றோ?
இதைப்பாருங்கள்:
‘குருக்கள் வீட்டுத் தென்னை மரத்தில் ஏறித் தேங்காய்
பறிப்பான்’
இது என்னசொல்கிறது? வீட்டுத்தென்னைமரத்தில் குருக்களென்பவன் ஏறித்தேங்காய்பறிப்பானா? அதென்ன ஏறித்தேங்காய்? தேங்காயில் இப்படியொருதேங்காயா?
‘ஏறி’ என்பது
வினையெச்சமென்பதும் அது தன்னுடன் பெயரை புணர்த்திக்கொள்ளாதென்பதும் நாம் அறிந்திருக்கிறோம்.
‘குருக்களுடையவீட்டில்’ என்பது
ஆறாம்வேற்றுமையின் விரிநிலைத்தொடர். இதை தொகையாக்கினால், ‘குருக்கள்வீட்டில்’ என்று ஒன்றாகத்தான்வரும்.
தொகைநிலைத்தொடர் பிரிந்தால் பொருள் குற்றப்படும்.
இன்னும், ‘குருக்கள் வீட்டுத்தென்னை’
என்பதுடன் இந்த வாக்கியம் முற்றுப்பெற்றுவிடும்! ஆம் இது
பெயர்ப்பயனிலையென்பதாகும். இரண்டேயிரண்டு பெயர்ச்சொற்கள் வாக்கியமாகும். ‘கண்ணன்
பாடகன்’ கந்தன் மருத்துவன்’ என்பவை
இவ்வாறானவாக்கியங்களே.
‘தென்னைமரத்தில்’ என்பதை
பிரித்தெழுதியிருப்பதைப்பாருங்கள்! ‘தென்னை மரத்தில்’ என்றால் பொருள் வேறாகிவிடும். அதாவது
ஏதோவொருமரத்தில் தென்னையானது இருப்பதாயாகும். ‘தென்னைமரம்’ என்பது, ‘தமிழ்மொழி’ என்பதைப்போல் ‘இருபெயரொட்டுப்பண்புத்தொகை’ எனப்படுவதாகும்.
(தென்னையாகியமரம், தமிழாகியமொழி)
‘தேங்காய் பறிப்பான்’ என்பது
இரண்டாம்வேற்றுமைத்தொகையென்பதும் இதை ‘தேங்காய்பறிப்பான்’ என்று சேர்த்துத்தானெழுதவேண்டுமென்பதும்
இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும்.
‘குருக்கள்வீட்டுத்தென்னைமரத்தில் ஏறி தேங்காய்பறிப்பான்’’
என்பதன்றோ சரியானது?
தமிழ் இன்று
எவ்வாறெழுதப்பட்டுவருகிறதென்பதை இதில் பார்த்தோம். இதிலுள்ள குற்றங்களை நாம்
எண்ணிப்பார்ப்பதில்லை. அறிஞர்களும் இவ்வாறேயெழுதிவருகிறார்களென்பது
இன்னும்வேதனைக்குரியது.
இதை படிக்கும் தங்களைப்போன்றோர் ஆதரவளித்தால், தமிழை மீட்டுவிடமுடியும்!
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
...
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
...
வேற்றுமைப்புணர்ச்சி – ஒரு விளக்கம்:
ஐயுருபீற்றுநிலைமொழியுடன் வல்லினமுதலல்லாதமொழிகள் புணர்ந்துவருவதுமுண்டு; வல்லினமுதன்மொழிகள் புணராதுவருதலுமுண்டு. வல்லினம்வந்தால்மட்டுமே புணருமென்பதுமில்லை, பிறவெல்லாம் புணராவென்பதுமில்லை.
வல்லினமானால் வலிமிகுந்துபுணருமென்பதும், வல்லினமல்லாதவை இயல்பாய்ப்புணருமென்பதும் தாங்கள் அறிந்ததேயன்றோ?
வலிமிகுமென்பதன்படி, வல்லினம்வந்தால் வலிமிகுந்துபுணர்வதுபோல் வல்லினமல்லாதவை வலிமிகாமற்புணரவேண்டுமென்பதன்படி அவையெல்லாம் புணர்த்தப்படுகின்றனவாவென்பதை எவரும் எண்ணிப்பார்ப்பதில்லை!
ஐயுருபின்முன்வரும் வல்லினமல்லாத பிறமுதன்மொழிச்சொற்கள் எதனால் புணர்த்தப்படுவதில்லை? அவை புணரக்கூடிய தேவை எழுவதேயில்லையா? வல்லினமுதன்மொழியென்றால் புணர்ந்துதான்வரவேண்டுமா? அவை புணராமல்வருவதென்பது இல்லவேயில்லையா?
இரண்டாம்வேற்றுமைத்தொடரென்பது எதனாலமையும்? வருமொழியின் முதலெழுத்தைப்பொருத்தா, அல்லது, சொல்லும் பொருளைப்பொருத்தா?
எவ்வினமானாலும், சொல்லவரும் பொருளுக்கு தேவையாயிருந்தால் புணர்ந்துவரும், தேவையில்லையென்றால் புனராதுவரும். அவ்வளவுதான். புணரவேண்டியிருந்தால், வல்லினம் வலிமிகுந்துபுணருமென்பது விதி.
இந்த எடுத்துக்காட்டை எண்ணிப்பாருங்கள்:
“அரைக்கீரையை கடைவதைவிட பொரியலாய்ச்செய்யலாம்.
ஆனால், முளைக்கீரையை கடைவதுதான்சுவையாயிருக்கும்.”
இதில் ஐயுருபின்முன் ‘கடைவது’ என்னும் வல்லினமுதன்மொழியேவந்திருந்தும் புணர்த்திச்சொல்லப்படவில்லை. ஏனெனில், இங்கு புணர்த்திச்சொல்வது சொல்லும் பொருளுக்கு பொருந்தாது. புணர்த்தினால், இதில் ‘கடைவது’ என்பதற்கிருக்கும் பொருளழுத்தம் இல்லாமற்போய்விடும்.
புணர்த்திச்சொல்வதானால் அதெப்படியிருக்குமென்பதைப்பாருங்கள்:
“அரைக்கீரையைக்கடைவதைவிட முளைக்கீரையைக்கடையலாம்.”
இதில் கடைவதென்பது இந்த தொடர்மொழியகளில் வருமொழியாயிருப்பதால், அது அழுத்தமின்றி இயல்பாய்ச்சொல்லப்படுவதையும் தனித்துச்சொல்லப்பட்டபோதிருந்த அந்த அழுத்தம் இப்போது அதற்கு இல்லாமற்போய்விட்டதையும்பாருங்கள்.
நாம் பேசும்போது, பொதுவாக ஒவ்வொருதனிமொழியையும் அதன் முதலசைக்கு சற்று அழுத்தங்கொடுத்துப்பேசுவது இயல்பு.. தொடர்மொழிகளைப்பேசும்போதும் முதலசைக்குமட்டுமேயழுத்தந்தருவதால், வருமொழிகள் அழுத்தம்பெறுவதில்லை.
‘அரைக்கீரையைக்கடைவதைவிட’ என்பதையும், ‘அரைக்கீரையை கடைவதைவிட’ என்பதையும் நாம் எப்படிச்சொல்லுவோமென்பதை எண்ணிப்பாருங்கள். சேர்த்துச்சொல்லும்போது ‘கடைவதைவிட’ என்பதற்கு அழுத்தமிருக்காது. ஆனால் பிரித்துச்சொல்லும்போதோ அதற்கு ஓர் அழுத்தம் இருக்கும்.
உச்சரிப்பில் உண்டாகின்ற இந்த வேறுபாடே, சொற்களை தொடர்மொழியாய்ச்சொல்வதற்கும் தனிமொழிகளாய்ச்சொல்வதற்குமுள்ள வேறுபாடாகும். இந்தவேறுபாடே சொல்லும் பொருளையும் வேறுபடுத்திக்காட்டுகிறதென்பது எண்ணிப்பார்க்கத்தக்கது.
‘அரைக்கீரையைக்கடைவதைவிட’ என்று சேர்த்துச்சொல்லும்போது, ‘அரைக்கீரை’ என்பது சிறப்பித்துச்சொல்லப்படுகிறது, ‘கடைவதைவிட’ என்பது அப்படி சிறப்பிக்கப்படவில்லை. ஆனால், ‘அரைக்கீரையை கடைவதைவிட’ என்று பிரித்துச்சொல்லும்போது, ‘கடைவதைவிட’ என்பது சிறப்பித்துச்சொல்லப்படுகிறதென்பதை சொல்லத்தேவையில்லை.
வேற்றுமையில் சொற்களை புணர்த்தி தொடர்மொழியாய்ச்சொல்வதா, அல்லது புணர்த்தாமல் தனிமொழிகளாய்ச்சொல்வதாவென்பது, நாம் சொல்லவரும் பொருளுக்கு முதற்சொல்லைச்சிறப்பிப்பதா, அல்லது இரண்டாவதுசொல்லைச்சிறப்பிப்பதாவென்பதே காரணமாயிருக்கும்.
இந்த அடிப்படையானகாரணத்தை இன்று நாம் அறிந்திராததால், வல்லினம்வந்தால் வலிமிகுமென்பதை பொதுவாய்க்கொண்டு, எல்லாவிடங்களிலும்புணர்த்திவிடுகிறோம்!
புணர்ச்சியென்பது பொருளையடிப்படையாய்க்கொண்டதேயன்றி வல்லினத்தையடிப்படையாய்க்கொண்டதன்று.
இதை எண்ணிப்பார்த்து, இனி நாம்
எழுதும்போது வேற்றுமையுருபுகள் வந்தால், அங்கே சொல்லவரும் பொருளுக்கு
புணர்த்திச்சொல்வதுபொருந்துமா, அல்லது புணர்த்தாமற்சொல்வதுபொருந்துமாவென்பதை
எண்ணிப்பார்த்து அதற்கேற்றவாறெழுதினால், வேற்றுமைப்புணர்ச்சியில் குற்றமுண்டாவதை
தவிர்க்கமுடியும்.
வேற்றுமைப்புணர்ச்சிமட்டுமன்றி,
வினையெச்சத்தொடர், பெயரெச்சத்தொடர் போன்றவையும் இன்னும்பிறவுமான
அல்வழித்தொடர்களிலும் தேவையைப்பொருத்தே புணர்ச்சி அமையுமென்பதை எண்ணிப்பார்த்தால்
எளிதாயறிந்துகொள்ளலாம்.
இதற்கெல்லாம் அடிப்படைக்கருத்துமட்டும் ஒன்றுதான். அதாவது, புணர்த்திச்சொன்னால்
நிலைமொழிக்குச்சிறப்பு, பிரித்துச்சொன்னாலோ வருமொழிக்குச்சிறப்பு. அவ்வளவுதான்.
இதற்கெல்லாம் விதியைக்காட்டுங்களென்றால், காட்டமுடியாது!
ஏனெனில், இலக்கணநூல்கள் இதையெல்லாம் சொல்லவில்லை. அவற்றை உணர்ந்துகொள்ளுமளவுக்கு
தமிழின் இயல்பானது நமக்கு தெரியுமென்பதால் அவர்கள் அதையெல்லாம் சொல்லாமல்விட்டனர்!
நாமோ, தமிழின் இயல்பை இன்றுவரை பேச்சைப்பொருத்தவரை மிகச்சரியாயுணர்ந்து
பேசினாலும், எழுதும்போது அதை மறந்து கண்டபடியெல்லாமெழுதிக்கொண்டிருக்கிறோம்!
அன்புடன் பொன்முடி
...
ஐயா சொ. வினைதீர்த்தானவர்கள் கேட்டுக்கொண்டதன்படி வேற்றுமைப்புணர்ச்சிகள் ஆறையும் ஒவ்வொன்றாய் இங்கு விளக்கமுற்படுகிறேன்.
வேற்றுமைத்தொடர்கள் ஆறென்பதை அறிவோம். அவை தொடராகவருவதும் தொடராகாமல் தனிச்சொற்களாய்வருவதும் சொல்லவேண்டிய பொருளுக்கு முறையே நிலைமொழியைச்சிறப்பித்துச்சொல்லவேண்டுமா, அல்லது வருமொழியைச்சிறப்பித்துச்சொல்லவேண்டுமாவென்பதே அடிப்படை. அது எவ்வாறென்பதை இதில் சற்று விளக்கமாய்பார்ப்போம்.
இரண்டாம்வேற்றுமை:
இதில் பெயரும் வினையுமட்டுமேபுணரும். இந்த உருபை ஏற்றிருக்கும் ஒரு பெயருடன் இன்னொருபெயர்ச்சொல் புணர்ந்துவராது. இந்தவேற்றுமைக்கு ‘செயப்படுபொருள்வேற்றுமை’ என்பது பெயர். இதை ஏற்கும் பெயரை இது செயப்படுபொருளாயாக்குவதால் இதற்கு அந்த பெயர்.
பொது:
ஒரேயொருபொருளைப்பற்றிச்சொல்லும்போது இரண்டாம்வேற்றுமையை புணர்த்திச்சொல்லவேண்டியதாயிருக்காது. இரண்டுபொருள்களிருக்குமானால் அப்போது ஒன்றிலிருந்து மற்றதை வேறுபடுத்திக்காட்டும்பொருட்டு புணர்த்திச்சொல்வது தேவைப்படுவதாயிருக்கும்.
வல்லினவருமொழி:
ஒரு வண்டியில் நீங்கள் எங்கோ போவதற்கென்று புறப்பட்டு போய்க்கொண்டிருக்கிறீர்கள், சற்றுதுரத்துக்கு போனபின் பெட்டியை மறந்துவிட்டது நினைவுக்குவந்துவிடுகிறது, இப்போது வண்டியை திருப்பச்சொல்லவேண்டுமென்றால் எப்படிச்சொல்வீர்கள்?
‘வண்டியத்திருப்பு’ என்பீர்களா, ‘வண்டிய திருப்பு’ என்பீர்களா?
இங்கே ‘வண்டியை திருப்பு’ என தனித்தனியாய்ச்சொல்லி, ‘திருப்பு’ என்பதை சிறப்பித்துச்சொல்வதே சரியாயிருக்கும். அன்றோ? ஏனெனில், திருப்புவதற்கு வண்டியைத்தவிர வேறொன்றுமில்லையன்றோ?
ஆனால், கண்ணனென்பவனை தேடிச்செல்லும் ஒருவர், தான் தேடுவது ஒருவரைத்தானென்பதால், ‘கண்ணனை பார்த்தாயா?’ என்று தனித்தனியாய்க்கேட்கமாட்டார். ‘கண்ணனைப்பார்த்தாயா?’ என்று சேர்த்துத்தான்கேட்பார்! அப்படி தனித்தனியாய்க்கேட்டால், ‘பார்த்தாயா?’ என்பதை சிறப்பித்துக்கேட்டதாய்ப்பொருள். அதாவது அவன் பார்த்திருக்கமாட்டானென்றெண்ணி, அவ்வாறு சிறப்பித்துக்கேட்பதாகும். ‘கண்ணனை பார்த்தாயா!’ என வியப்பாய்க்கேட்பதுமுண்டு.
‘அங்கே கந்தனைப்பார்த்தாய், கடம்பனைப்பார்த்தாயென்பதெல்லாமிருக்கட்டும், கண்ணனைப்பார்த்தாயா?’
இதில் ‘கண்ணனைப்பார்த்தாயா?’ என்பது ‘கண்ணனை’ என்பதை சிறப்பித்துச்சொல்வதைப்பாருங்கள். இதுபோலவே, கண்ணனை தேடிப்போகும்போதும், ‘கண்ணனைப்பார்த்தாயா?’ எனக்கேட்டதும்.
இரண்டுபொருட்களிருக்கும்போது புணர்த்திச்சொல்வது:
நீ கந்தனைப்பார்த்தாயா, கண்ணனைப்பார்த்தாயா?’
இதில் ஒவ்வொன்றும் நிலைமொழியை சிறப்பித்துச்சொன்னதாகிறது. இதை இவ்வாறு சேர்த்துச்சொல்லாமல், நீ கந்தனை பார்த்தாயா, கண்ணனை பார்த்தாயா?’ என பிரித்துச்சொல்வது பொருந்தாதென்பதை சொல்லத்தேவையில்லை.
‘நீ கண்ணனைப்பார்த்தாயா, அல்லது அவன் உன்னைப்பார்த்தானா?’
இதிலும் நிலைமொழிகள் சிறப்பித்துச்சொல்லப்படுவதைப்பாருங்கள்.
‘நீ கண்ணனை பார்த்தாயா, இல்லை, பார்க்காமலேவந்துவிட்டாயா?’
இதில் வருமொழியானதுசிறப்புறுவதைப்பாருங்கள்! இங்கே ‘கண்ணனைப்பார்த்தாயா?’ என புணர்த்திச்சொல்வது பொருந்துமாவென்பதை எண்ணிப்பாருங்கள்.
ஆகவே, வேற்றுமைப்புணர்ச்சியைப்பொருத்தவரை புணர்த்துவதென்றால் அது நிலைமொழியைச்சிறப்பிப்பதென்பதும், புணர்த்தாமல் பிரித்துச்சொல்வதென்றால் அது வருமொழியைச்சிறப்பிப்பதென்பதும் நாம் அறிந்துகொள்ளத்தக்கது.
இரண்டாம்வேற்றுமையைப்பொருத்தவரை வல்லினவருமொழியானால் அனைத்திடங்களிலும் இன்று புணர்த்திவிடுகிறோம். ஆதலால், என்னபொருளில் அது புணராமல்வருமென்பதையே நாம் அறிந்துகொள்ளவேண்டியதாயிருக்கிறது.
இரண்டாம்வேற்றுமையின்முன்வரும் எதிர்மறைவினைமுற்றுகள் அதன் பெயருடன் இன்னொருபெயரை சொல்லாமற்சொன்னதாக ஒரு பொருளை வெளிப்படுத்துவதாயிருக்கும்.
‘நான் அவனை கூப்பிடவில்லை’ என்பது ஒருவனை கூப்பிடவில்லையென்பதைமட்டுஞ்சொன்னது.
‘நான் அவனைக்கூப்பிடவில்லை’ என்பதோ, ஒருவனை கூப்பிடவில்லையென்பதைமட்டுஞ்சொல்லாமல், வேறொருவனை கூப்பிட்டதையும் சொல்லாமற்சொன்னது. அதாவது, ‘நான் அவனைக்கூப்பிடவில்லை, அவனது அண்ணனைத்தான்கூப்பிட்டேன்’ என்பது முழுமையானபொருளைக்கொடுக்கும்.
ஆனால், ‘நான் அவனைக்கூப்பிடவில்லை’ என்றுமட்டுஞ்சொன்னால், அதை கேட்பவர், ‘அவனைக்கூப்பிடவில்லையென்றால் வேறு யாரைக்கூப்பிட்டாய்?’ எனக்கேட்பார். அன்றோ?
இதைப்பாருங்கள்:
‘நான் பணத்தை திருடவில்லை!’
என்பது திருடவில்லையென்பதைச்சொன்னது. இதை கேட்பவர், ‘திருடவில்லையென்றால், யாரைக்கேட்டு அந்த பணத்தை எடுத்தாய்?’ என்றுகேட்கலாம்.
ஆனால், ‘நான் பணத்தைத்திருடவில்லை!’ எனச்சொன்னால், ‘பணத்தைத்திருடவில்லையானால் வேறெதைத்திருடினாய்?’ எனக்கேட்பார். அன்றோ?
ஆகவே, எதிர்மறைவினைமுற்றுவருமிடங்களில் வருமொழிமுதலானது வல்லினமென்பதற்காக புனர்த்திவிடுவது சொல்லவரும் பொருளை மாற்றிவிடுமென்பது அறிந்துகொள்ளத்தக்கது.
பொன்னியின்செல்வனில் வந்தியத்தேவன்சொல்வதாக,
‘நான் ஆதித்தகரிகாலனைக் கொல்லவில்லை’
என்றுவரும். இதில் வலிமிகுந்ததால், ‘நான் ஆதித்தகரிகாலனைக்கொல்லவில்லை’ என்றாகும். இப்போது என்னாயிற்றென்றால், வந்தியத்தேவன் ஆதித்தகரிகாலனைக்கொல்லவில்லையென்றும், அவன் கொன்றது வேறுயாரையோவென்றுமாகிறது! இதன்படி, அவன் யாரோவொருவரை கொன்றானென்றாகிவிடுவதைப்பாருங்கள்!
வல்லினமல்லாதமுதன்மொழிகள்:
வல்லினமல்லாத பிறமுதன்மொழிகளும் இதுவரை நாம் பார்த்துவந்ததுபோல் பொருளுக்கேற்பவேபுணரும். இக்காலத்தில் வல்லினமல்லாதவை புணர்த்தப்படுவதில்லையென்பது நாம் அறிந்ததே. புணர்த்திச்சொல்லவேண்டியவிடங்களில் புணர்த்தாமற்சொல்வதால் பொருளில் மாறுபாடுண்டாகுமென்பதை சொல்லத்தேவையில்லை.
‘இங்கே நாயைவைத்திருக்கலாம், பூனையைவைத்திருக்கலாம் புறாவைக்கூடவைத்திருக்கலாம்; ஆனால் மாட்டைவைத்திருக்கமுடியாது!’
இதில் புணர்த்திச்சொல்லப்பட்டவிடங்களில் பிரித்துச்சொன்னால் பொருள் பொருந்தாதென்பதை இதிற்பாருங்கள்:
‘இங்கே நாயை வைத்திருக்கலாம், பூனையை வைத்திருக்கலாம்; ஆனால் மாட்டை வைத்திருக்கமுடியாது!’
இது சொல்லும் பொருளை சரியாய்ச்சொன்னதாயிருக்கிறதாபாருங்கள்!
ஆனால், இதைப்பாருங்கள்:
‘இங்கே நாயை வைத்திருக்கலாம், ஆனால் வெளியேவிடக்கூடாது! வீட்டுக்குள்ளேதான்வைத்திருக்கவேண்டும்!’
இதில் பிரித்துச்சொன்னது சரியானபொருளைத்தருவதையும் இதையே சேர்த்துச்சொல்லியிருந்தால் பொருளுக்கு பொருந்தாமற்போய்விடுமென்பதையும் எண்ணிப்பாருங்கள்.
எனவே, வல்லினவருமொழியானாலும் பிறமுதன்மொழியானாலும் புணர்ச்சியென்பது பொருளைப்பொருத்ததாகவேயிருக்குமென்பது அறிந்துகொள்ளத்தக்கதாயிருக்கிறதன்றோ?
பெயர்வந்தால் புணர்ச்சி வராது:
‘பணத்தை பெட்டியில் எண்ணிவை.’ ‘கண்ணை தண்ணீரில் கழுவு’ ‘காலை தரையில் ஊன்றிவை, வழுக்கிவிடப்போகிறது!’
இவற்றில் புணர்ச்சி வராதென்பதை எண்ணிப்பாருங்கள். ‘பணத்தைப்பெட்டியில்’ ‘கண்ணைத்தண்ணீரில்’ ‘காலைத்தரையில்’ என்பவை பொருளற்றவையன்றோ?
‘காலை பனித்துளி நனைத்தது’ என்பதும் ‘காலைப்பனித்துளி நனைத்தது’ என்பதும் ஒரேபொருளைத்தருவனவல்லவென்பதை எண்ணிப்பாருங்கள். புணராதவிடத்தில் ‘காலை’ என்பது இரண்டாம்வேற்றுமையேற்ற ‘கால்’ என்னும்பெயராயிருப்பதையும், அதுவே புணர்ந்திருக்கும்போது, பொழுதைக்குறிக்கின்ற ‘காலை’ என்னும் வேறுபெயராயாகிவிடுவதையும்பாருங்கள்.
எனவே, இரண்டாம்வேற்றுமையின்முன் பெயர் புணராதென்பது அறியத்தக்கதாயிருக்கிறதன்றோ?
இதுவரை நாம் கண்டுவந்தபடி இரண்டாம்வேற்றுமைப்புணர்ச்சியை இடமும் பொருளுமறிந்து
அதற்கேற்பவேசெய்யவேண்டுமென்பதை அறிந்து அனைவரும் சரியாயெழுதினால் தமிழ்
எத்துணைச்சிறப்பாயிருக்கும்! இதை இனி நாம் எண்ணிப்பார்த்து புணர்ச்சியை
சரியாய்ச்செய்வோமாக!
அடுத்ததில் மூன்றாம்வேற்றுமைப்புணர்ச்சியைப்பார்ப்போம்.
...
சிலர் தெரிந்தோ, தெரியாமலோ இப்பிழையை எழுதி வருகிறார். நான் பலமுறைச் சொல்ல நினைத்து இப்படி ஓர் வாய்ப்புக்குப்
பொறுத்
திருந்தேன்.
அதாவது சொற்களிலோ, சொல் தொடரிலோ இரு வல்லின ஒற்றுகள் சேர்ந்து வரா.புணர்ச்சிப் பிழைகள் - சரியானவைபாற்க்கடல். --> பாற்கடல்விற்ப்பனை --> விற்பனைசொற்த்திறம் ----> சொற்திறம் ---> சொற்றிறம்ஆட்க் கொல்லி --> ஆட்கொல்லிகாதற்ச் சிறப்பு ---> காதற் சிறப்புமக்கட்ப் பேறு ----> மக்கட் பேறுவினைத் திட்ப்பம் ----> வினைத் திட்பம்மணற்க்கேணி ---> மணற்கேணிசொற்ப்படி செய் ---> சொற்படி செய்செயற்க்கரிய ---> செயற்கரியபொற்க்குடம் --> பொற்குடம்
சிலர் தெரிந்தோ, தெரியாமலோ இப்பிழையை எழுதி வருகிறார். நான் பலமுறைச் சொல்ல நினைத்து இப்படி ஓர் வாய்ப்புக்குப் பொறுத்திருந்தேன்.
அதாவது சொற்களிலோ, சொல் தொடரிலோ இரு வல்லின ஒற்றுகள் சேர்ந்து வரா.
...
...
சிலர் தெரிந்தோ, தெரியாமலோ இப்பிழையை எழுதி வருகிறார். நான் பலமுறைச் சொல்ல நினைத்து இப்படி ஓர் வாய்ப்புக்குப் பொறுதிருந்தேன்.அதாவது சொற்களிலோ, சொல் தொடரிலோ இரு வல்லின ஒற்றுகள் சேர்ந்து வரா.புணர்ச்சிப் பிழைகள் - சரியானவைபாற்க்கடல். --> பாற்கடல்
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram.
மிக அவசியமான ஒரு இழையாக இது இருக்கும் என்பதால் இத்தலைப்பிலேயே தொடங்கியிருக்கின்றேன். புணர்ச்சி விதிகள் தொடர்பாக ஐயம் உள்ளவர்கள் தொடர்ந்து இந்த இழையில் தங்கள் கேள்விகளையும் ஐயங்களையும் பகிர்ந்து கொள்ள டாக்டர்.பொன்முடி அவர்கள் தமது கருத்துக்களை இங்கே வழங்கினால் சிறப்பாக இந்த இழை அமையும்.அன்புடன்சுபா
இனியும் தாமதியாமல், தமிழ்ச் சமூகத்தில் ஒவ்வொரு துறையிலும் செயல்நெறிகள் செயல்பட துவங்கியாக வேண்டும். அந்த நோக்கில் முதலில் பள்ளி, கல்லூரிகளில் உள்ள தமிழ்ப் பாடப் புத்தகங்களில் உள்ள இலக்கணப் பிழைகளையும், தமிழ்த் தலைவர்கள், முக்கிய பேச்சாளர்கள் ஒலிப்பதிவுகளிலும் உள்ள குறைகளையும் கண்டுபிடித்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவித்து சரி செய்யும் செயல்நெறி முயற்சியாக நான் எனது நண்பர்கள் திருச்சி ('பெல்' பணி நிறைவு பணியாளர்) சமுத்திரராசன், (லண்டன்) தொல்காப்பியன் துணையோடு 'தமிழ்க் கண்காணிப்பு மையம்' துவங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். பணி ஓய்வு பெற்ற தமிழாசிரியர்களை உரிய சன்மானத்துடன் பணியில் அமர்த்தி செயல்பாடுகள் தொடங்க திட்டமிட்டுள்ளோம். இது போன்ற முயற்சிகளில் உள்ளவர்களுடன், தனி மனித முக்கியத்துவம் இன்றி, கூட்டாக செயல்படவும் எண்ணியுள்ளோம்.செ . அ . வீரபாண்டியன்
வணக்கம் டாக்டர்.பொன்முடி.
இங்கு தொடர்ந்து தாங்கள் தங்களது கட்டுரைகளை இதே போல பகிர்ந்து வரலாம்.அன்புடன்சுபா
2014-07-06 0:57 GMT+02:00 dr.ponmudi <dr.pon...@gmail.com>:
சொற்களை சேர்த்தெழுதுவது புணர்ச்சியெனப்படும். தனிச்சொற்கள் ஒன்றுடனொன்று புணர்ந்து தொடர்மொழிகளாகின்றன. தனிச்சொற்களோடு தனிச்சொற்களைச்சேர்ப்பதுமட்டுமன்றி, ஒரு பெயர்ச்சொல்லுடன் வேற்றுமையுருபுகளைச்சேர்த்தலும் உம்மையைச்சேர்த்தலும் ஒரு வினைச்சொல்லுடன் (பகுதி) இடைநிலை, சாரியை, விகுதியாகியவற்றைச்சேர்ப்பதும் புணர்ச்சியே. தமிழில் எழுத்தென்பது பாக்களாகமட்டுமேயிருந்தகாலத்தில் புணர்ச்சியானது சரியாயிருந்திருக்கக்கூடும். ஆனால் இக்காலத்தில் உரைநடையில் அது முற்றிலும் கைவிடப்பட்டுவிட்டதென்பதே உண்மை.
வேற்றுமையுருபுகளும், உம்மையும் பகுபதவுறுப்புகளும் சேர்க்கப்பட்டேயிருப்பதால் அவை பிரிக்கப்படுவதில்லை. ஆனால் தனித்தனிச்சொற்களாலானவையான தொடர்மொழிகள் இடத்துக்கேற்றவாறு ஓரிடத்தில் சேர்ந்தும் வேறிடத்தில் பிரிந்தும்நிற்பதால் அவை இக்காலத்தில் அனைத்திடங்களிலும் பிரித்தேயெழுதப்படுகின்றன.புணர்ச்சியென்பது ஏதோ அடுத்தடுத்தசொற்களையெல்லாம் எந்தக்காரணமுமின்றி புணர்த்திவிடுவதன்று. எந்தவிருசொற்கள் புணர்வதானாலும் அதற்கு சரியான காரணமிருக்கவேண்டும்.
சொற்கள் காரணமில்லாமல் புணரும்போதும் காரணமிருந்தும் புணராதபோதும் சொல்லவரும் பொருளில் குற்றமுண்டாவதை தடுக்கமுடியாது. சொல்லவரும் பொருளை குற்றமின்றியும் குழப்பமின்றியும் தெளிவாக எவரும் ஒன்றேபோலறிந்துகொள்ளுமாறும் சரியாயெழுதுவதற்கு ஒரு கருவி உண்டென்றால் அது புணர்ச்சியைத்தவிர வேறொன்றுமில்லை.
வேறாய்ச்சொல்வதானால், புணர்ச்சியின் உதவியில்லாமல் சொல்லவந்த பொருளை சரியாகச்சொல்வதென்பது எவருக்கும் இயலாததாகும். இதன்படிப்பார்த்தால், இன்று காணக்கிடைக்கின்ற அனைத்துநூல்களும், அவை கதைநூல்களாகட்டும், கவிதைநூல்களாகட்டும், கட்டுரைகளாகட்டும், ஏன் பாடநூல்களும் இலக்கணநூல்களுமேயாகட்டும், இன்று பக்கத்துக்குப்பக்கம் பிழைபட்டேயுள்ளனவென்றால் அது மிகையில்லை!
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--Suba Tremmelhttp://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!http://ksuba.blogspot.com - Suba's Musingshttp://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.