மயான தெய்வம் - நடுஜாமத்தில் படிங்க.. ;)

4,173 views
Skip to first unread message

வினோத்-VINOTH

unread,
Aug 31, 2010, 2:22:55 PM8/31/10
to தமிழ்நண்பர்கள், minT...@googlegroups.com

பதிவிற்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை..




நடுஜாமத்தில் படிங்க.. ;)


மயான தெய்வம்

Submitted by
sriramanandaguruji
sriramanandaguruji's படம்
on செவ்வாய், 31/08/2010 - 11:23pm


   வி உலகவழிபாடும் சிறுதெய்வ வழிபாடும் மிக பழங்காலம் தொட்டே ஒன்றுக்கொன்று பேதங்கள் தெரியாமல் பின்னி பினைந்து இருப்பதை பகுத்து தொகுத்து அறியவேண்டும் என்றால் நமது தொண்மைக்கால மக்களின் வாழ்வியல் பண்பாட்டுக் கூறுகள் இன்று எங்கேனும் சற்று ஆழமாக தெரிந்தால் அதை வைத்துக்கொண்டே இந்த விஷயத்தில் ஓர் தெளிவான முடிவுக்கு வரலாம் என்று நான் எண்ணி இருந்தபோது யாழ்கூடா நாட்டின் பேராசிரியர் ஒருவர் எழுதி இருந்த ஓர் கருத்துக் கோவையை படிக்க நேரிட்டது,
    இன்டர்நெட்யுகத்தை நோக்கி மனித சமுதாயம் முன்னேறிவிட்டாலும் லெமுரியா காலத்திய பண்பாட்டுக் கூறுகள் இன்னும் யாழ்பாணத்து தமிழ் மக்களிடமும் கனனியாகுமரி. திருநெல்வேலி ஆகிய பகுதி மக்களிடமும் இன்றும் கொஞ்சம் ஒட்டி இருக்கிறது என்ற அவர் கூற்று ஓர் புதிய நம்பிக்கை நட்சத்திரத்தை எனக்குள் உதயமாக்கியது.
   எனது நீண்ட நாள் நண்பர் நடுவக்குறிச்சி கருணாகரனும் அவரால் அறிமுகமான பேராசிரியர் இராமச்சந்திரன் மூலமும் மற்றும் பக்தர் வலநாடு கோபாலகிருஷ்ணனும் திருநெல்வேலியில் பல பகுதிகளிலிருந்து அரும்பாடுபட்டு சிறு தெய்வம் மற்றும் ஆவி உலக தகவல்களை சேகரித்து அனுப்பி இருந்தார்கள்,
  அந்த தகவல்களும் நான் ஏற்கனவே அனுபவரீதியாக அறிந்து இருந்த பல விஷயங்களையும் ஒருங்கிணைத்து பார்த்தபோது மிக துல்லியமாக பல விஷயங்கள் புலப்பட்டன, அந்த விஷயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் நான் பெருமையும் சந்தோஷமும் அடைகிறேன்.
கன்னியாகுமரி மற்றும் நெல்லை பகுதியில் பெருவாரியான மக்களால் அறியப்படும் தெய்வம் “சுடலைமாடன்” ஆகும், சுடலைமாடனுக்கு இந்தப் பகுதிகளில் பெரும் பக்தர்களம் அதே நேரம் பயந்தவர்களும் ஏராளமானவர்கள் இருக்கின்றார்கள், சுடலைமாடன் விஷயத்தில் எனக்கு ஓர் நேரடி அனுபவம் உண்டு
    எனது பூர்வாசிரம காலத்தில் பதினைந்து வருடங்களுக்கு முன்பு என எண்ணுகிறேன், நாகர்கோவிலில் எனத உறவினர் ஒருவர் வீட்டில் தங்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது, அவர் வீட்டிற்கு நேர்எதிரரே ஓர் கோவில் இருந்தது, அது என்ன கோவில்? அது என்ன தெய்வம்? என்று எனக்கு தெரியாது, அதை தெரிந்துகொள்ளும் ஆவலும் எனக்கு இல்லை, காரணம் எனக்கு அப்போது அசதியினால் உறக்கம் மட்டுமே தேவையாக இருந்தது, வீட்டிற்கு வெளித்திண்மையில் காற்றுக்காக படுத்து உறங்கினேன், உறங்கிக் கொண்டிருந்த எனக்குள் மூளை நரம்புகள் கிடுகிடுவென நடுங்கின மண்டைக்குள் கைவிட்டு யாரோ மூளையை பிசைவது போல் இருந்தது, ஆழ்ந்த உறக்கத்தில் மூச்சுத்திணறல் திடீரென ஏற்பட்டது, மூச்சுக்காற்றுக்காக ஏங்கி துடித்து அதள பாதாளத்தில் விழுவது போன்ற ஓர் உணர்வு ஏற்பட்டது, என் உட்புற சக்திகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து வலுகொண்டு எழுந்து உட்கார முனைந்தேன், ஆனால் முடியவில்லை, மார்கழி மாதத்தின் குளிரிலும் வியர்த்துக் கொட்டியது அதை மாற்றுவதற்கோ என்னவோ ஊதல் பனி காற்று மெதுவாக வீசியது, அந்த காற்றின் நடையோடு “கலீர், கலீர்” என சலங்கை சத்தம் கேட்டது, அந்த சலங்கை சத்தம் என் அடி வயிற்றுக்குள் ஓர் அச்சப்பந்தை உருட்டிவிட்டது, இரும்பு வாள்களும். கேடயங்களும் ஒன்றோடு ஒன்று உராய்வது போன்ற ஓர் பெரும் சத்தம் அதனோடு பலவிதமான மணி ஓசைகளும் திடீரென என்னை கடந்து சென்றது, அந்த ஒலிகள் என்னை கடக்கும்போது திடகாத்திரமான இரண்டு கால்கள் நடந்து சென்றதை நான் பார்த்தேன்.
    உருண்டு திரண்ட முறுக்கேறிய தசைகள் ஏறி இறங்கும் கெண்டைக்கால்களும். யானையின் பாதம் பூமியை தொடுவதுபோல் நின்று நிதானமாக அழுத்தம் திருத்தத்துடன் பூமியில் பதிந்து இருந்த பாதங்களும் கடைந்து எடுத்த பாறாங்கற்கள் போன்ற தொடைகளும் மலையின் சிறு பட்டை தவழவிட்டது போன்ற இடுப்புக்கச்சையும் அந்த கச்சையில் பதிந்திருந்த விதவிதமான வண்ணங்களையும் வெளிச்சமாக வாரி இறைக்கும் கற்களும்,குதிகால்களை தொட்டு வளைந்து நெளிந்து இருந்த வீர கழல்களும். அந்த கழல்கள் எழுப்பிய “கலீர். கலீல் ” ஒலியும் இன்றும் என் நினைவில் இருந்து முற்றிலுமாக விலகிவிடவில்லை,
    அந்த அழகிய கம்பீர முழு உருவத்தை தரிசித்து இருக்க வேண்டுமென்றால் நான் மிக வேமாக எழுந்து இருக்க வேண்டும், ஆனால் என் உடல்நிலை அதற்கு இடம் தராததாலும் தாழ்வான முன்பக்க கூரைமேல் அமைப்பை மறைத்து விட்டதாலும் என்னால் இடுப்புவரையே அக்காட்சியை காணமுடிந்தது, காலை எழுந்தவுடன் என் உறவினரிடம் கண்ட அற்புதக் காட்சியை சொன்னேன், அவர் சுடலை மாடசாமி சாரி போய் இருப்பார், அதை பார்த்து இருக்கிறீர்கள், இப்படி சாரி போவது அவ்வளவு சுலபமாக யாராலும் பார்க்க முடியாது, ஒரு ஒரு பெரும் பாக்கியம்தான் பயப்படுவதற்கு இதில் ஒன்றும் இல்லை என்றார்,
    நான் அன்று நேரில் கண்ட காட்சியும் என் நண்பர்களும் பக்தர்களும் கொடுத்த சுடலை மாடன் உருவத்தை பற்றிய வர்ணனைகளையும் ஏறக்குறைய ஒன்றாகவே இருந்ததனால் நான் மிகவும் சந்தோஷப்பட நேரிட்டது
  சுடலை மாடனைப்பற்றிய வரலாறுகளை. வழிபாட்டு முறைகளையும். மந்திரப்பிரயோகங்களையும் துல்லியமாக அறிந்து கொள்ளும் வழி ஏற்பட்டது, இந்த இடத்தில் மிக்க அதிர்ச்சி தரக்கூடிய விஷயத்தையும் நான் தெரிந்துகொண்டேன், அதாவது சுடலைமாடன் என்ற பெயரில் “ சுடலை ” என்று தெய்வத்தையும் “ மாடன் ” என்பது புண்ணிய ஆத்மாக்களின் ஆவிகளை குறிப்பதாக அமைந்து உள்ளது பெரும் வியப்பை தந்தது.
தமிழ் மக்களின் வாழ்வு வேளாண்மையை ஒட்டியே அமைகிறது உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை என்ற கூற்றின் உண்மையை உணர்ந்த நமது முன்னோர்கள் உழவுக்கு உறுதுணை செய்யும் மாடுகளையும் பெரும் செல்வமாக கருதினர், மாடு என்ற சொல் செல்வத்தை குறிப்பதை நாம் அறிவோம், செல்வமாக கருதிய மாட்டினை நமது முன்னோர்கள் தெய்வமாகக் கருதினர், எருமைக் கொம்பினை நட்டு அதை தெய்வமாக மக்கள் வணங்கிய விதத்தினை “முல்லைக்கனி” யில் நச்சினார்க்கினியர் உரை வாயிலாக நாம் அறிய முடிகிறது, மேலும் கறவு என்ற மீனின் கொம்பைக் கூட நட்டு தெய்வமாக வணங்கிய காட்சியை பழந்தமிழ் இலக்கியங்கள் பலவாறு குறிப்பிடகின்றன
  தெய்வமாக கருதும் ஆநிறையை காப்பது தங்களது முழுமுதற்கடன் என அக்கால மன்னர்களும் மக்களும் கருதினர், பகைவர் நாட்டு பசுக்கூட்டங்களை போருக்கு முன்னர் அரசர்கள் கவர்ந்து வருவார்கள், பசுக்களை கவரச் செல்லும் வீர மறவர்கள் “வெட்சி” எனும் பூவை அணிந்து செல்வதாகவும். தங்கள் நாட்டு பசுக்களை மாற்றார் கவறாமல் தடுக்க போர்புரியும் வீரர்கள் “கரந்தை” எனும் பூவை சூடிச் செல்வதாகவும் தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார்,
   கவரும்போதும் கவருவதை தடுக்கும்போதும் அங்கே பெரும்போர் உருவாகி ஆற்றலுடைய மறவர்கள் பலர் விழுப்புண் பட்டு வீர மரணம் அடைவர், இவர்களே “ தொறுமீட்டுப்பட்டான் ” என்று கல்வெட்டுக்கள் குறிப்பிடுகிறது,தொறு என்பது பசுவை குறிக்கும்சொல் ஆகும்,
  இவ்வாறு வீர மரணம் எய்திய வீரர்களின் நினைவிடங்கள் “மாடன்கள் ” என நாட்டுப்புற மக்களால் அழைக்கப்பட்டது, மாடன் என்ற வார்த்தைக்கு மாடுகளை காப்பவன். மேய்ப்பவன் என பொருள் கொள்ளலாம், எனது பூர்வாசிரம கிராமத்தில் ஊரார் மாடுகளை மேய்ப்பவரை “ மாடக்கோன் ” என்று அழைப்பார்கள், மாடன் என்ற தெய்வம் மாடுகளோடு சம்பந்தப்பட்டது என்பதற்கு தொழு மாடன். காளை மாடன் என்ற பெயர்கள் சான்றாக கொள்வதோடு சில மாடன் கோவில்களில் மாட்டுத்தலையோடு மனித உருவத்தில் தளவாய் மாடசாமி என்ற தெய்வம் இருப்பதை இன்றும் அறியலாம் எனவே மாடுகளுக்காக உயிர்நீத்தவனை மாடன் என்ற அழைக்கலானார்கள்.
  பண்டைய கால எகிப்தியரும். கிரேக்கர்களும் பசுக்களை தெய்வமாக போற்றி வந்தனர். மொஹஞ்சதாரோ. ஹரப்பா நாகரீக சுவடுகள் பசுவழிபாடு வரலாற்று காலத்திற்கு முன்பே இந்தியாவில் இருந்ததாக நமக்கு காட்டுகிறது, தெய்வத்தன்மை பொருந்திய பசுவை கோர்த்தன மலையை குடையாக பிடித்து கோபாலன் காப்பாறியதாகவும் அந்த ஆநிறைகளை மேய்த்து ஆனந்த நடனம் புரிந்து ஆத்மாக்களை கண்ணன் உய்வித்ததாகவும் பாகவதம் முதலிய புராணங்கள் கூறுகின்றன, வடநாட்டில் ஆநிரை காத்த கிருஷ்ணனை தெய்வமாக வழிபாடுவதை போல் தென்நாட்டில் ஆநிறை காக்க உயிர்விட்ட வீர மறவர்களை மாடன்களாக மக்கள் பலகாலமாக வழிபட்டு வருகின்றார்கள்,
இத்தகைய மாடன்கள் 20 வகையானவர்கள் உள்ளார்கள், முன்டன். சுத்தவீரன். பலவேசக்காரன். அன்னாவி. மாசானமுத்து. மாசான போற்றி. கட்டை ஏறும் பெருமாள். பன்றிமாடன். குழிதோண்டி. மாடன். கல்லடி மாடன். கௌதல மாடன். காட்டு மாடன். ஆறுகுலபோற்றி. சீவலப்பேரிமாடன். ஊசிக்காட்டு மாடன். ஆறுமுகமங்கல மாடன். தளவாய்மாடன். வண்ணார மாடன். புலமாடன். கசமாடன் ஆகிய இவர்கள் அனைவருமே பூமியில் மனிதராக பிறந்து ஆநிறை காப்பதற்காக வீரமரணம் அடைந்தவர்களே ஆவார்கள், இவர்களை சில மந்திரப்பிரயோகங்கள் மூலம் வசப்படுத்தி எதிரிகளின்மீது ஏவி அவர்களை முற்றிலுமாக கொடூரமான முறையில் அழித்து விடுகிறர்கள்,

   இரண்டு மாதங்களுக்கு முன்பு தென்தமிழ்நாட்டிலிருந்து ஓர் அன்பர் என்னிடம் வந்தார், தனது ஒரே மகளுக்கு பேய் பிடித்து இருந்தபோது அந்த பேயை விரட்ட தங்கள் ஊருக்கு அருகில் உள்ள ஓர் மாந்திரீகரை அணுகியபோது இவரின் செல்வநிலையை நன்கு அறிந்து கொண்ட மாந்தரீகர் அந்த பெண்ணிடமிருந்து ஆவியை விலக்கிவிட்டு வேறு ஒரு தீய சக்தியை அப்பெண்ணிற்குள் புகுத்தி பல தொல்லைகளை கொடுக்க ஏற்பாடு செய்து விட்டான், நாளடைவில் மகள் படும் துயரம் அதிகரித்தாலும் அதை எல்லாம் மீறி தனது வீட்டின்மேல் கற்கள் வந்து விழுவதாகவும் சாப்பிடும் போது மனித கழிவுகள் வந்து விழுவதாகவும் இன்னும் பல துயரங்களை தான் அனுபவிப்பதாகவும் அந்த தெற்கத்திய அன்பர் மனத்துயர் தாளாது கண்ணீர் மல்க கூறினார்,
  அவர் பிரச்சனையின் முழு தாத்பரியத்தை உணர்ந்து கொண்ட நான் அந்த மாந்தரீகன் “ பன்றி மாடன் ” என்ற மாடனை ஏவி இத்தகைய காரியங்களை செய்துகொண்டு இருக்கிறார் என்பதை புரிந்துகொண்டேன், பன்றிமாடன் அவர்கள் குடும்பத்திலிருந்து விலக்குவதற்கான பிரத்யேக பூஜைகளை செய்து பன்றி மாடனை விரட்டி அதன்பின் அந்த அன்பரை அனுப்பி வைத்தேன் இதிலிருந்து ஓர் உண்மையை உங்களிடம் பகிர்ந்துகொள்ள நான் விரும்புகிறேன், “சுடலை” என்பது “தெய்வம்” அந்த தெய்வம் மந்திரத்திற்கு கட்டுப்பட்டாலும் தீய செயல்களை செய்யாது.
ஆனால் மாடன்கள் மந்திரவாதியின் அனைத்து கட்டளைக்கும் அடிபணிந்து யாருக்கு வேண்டுமென்றாலும் எத்தகைய தீங்கும் செய்வார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்,
    மாடன் வேறு. சுடலை வேறு அது மாடன்கள் வரலாறோடு முற்றிலும் இணைந்து வராது, ஆவிகள் வழிபாட்டையும் சிறு தெய்வ வழிபாட்டையும் ஒருங்கிணைத்து மக்கள் வழிபாடு செய்து வருவதனால் தெய்வத்திற்கும் ஆவிகளுக்கும் வித்தியாசம் தெரியாமல் சிறுகுழப்பம் இன்றும் நிலவி வருகிறது,
   மயான பூமியில் தெய்வம் இருக்கும் என்ற நம்பிக்கை தொழ் பழங்காலம் தொட்டே மக்களிடம் இருந்து வருகிறது, பெரும் தெய்வ வழிபாட்டில் வரும் சிவனை மக்கள் அழிக்கும் தெய்வமாக கருதுகிறார்கள், இதனால் சிவனுக்கு “கொலைவன்” என்ற பெயர் உள்ளதாக கலித்தொகை பாடல் குறிப்பிடுகிறது, கொலைவனான சிவனை காடுடைய சடலை பொடி பூசியவன் என்று திருஞ்ஞான சம்பந்தரும் நடுச்சாமத்தில் மயானத்தில் சிவன் நடனம்புரிவதாக காரைக்கால் அம்மையாரும் குறிப்பிடுகின்றார்கள், சிவனை போன்றே சுடலைக்கு பிணமாலை சூடும் பெருமாள் மயானச்சுடலை. எலும்புச்சுடலை என்ற பெயர்களும் உண்டு,
  இந்த இடத்தில் மிக முக்கியமான விஷயத்தை சொல்ல விரும்புகிறேன், குமரி மற்றும் நெல்லை பகுதிகளில் ஒருசில சுடலை கோவில்களில் திருவிழாவின்போது “கோமரத்தடிகள்” என்று அழைக்கப்படும் சாமிக்கொண்டாடிகள் மயானத்திற்கு சென்று எலும்புகளையும் பிணத்தின் பகுதிகளையும் எடுத்துக்கொண்டு வந்து சாமி ஆடுவது வழக்கம், இத்தகைய காட்சிகளை தென்காசி பகுதியில் உள்ள வேதம்புதூர் என்ற ஊரில் சுடலைக் கோவிலில் இன்றும் காணலாம்,சுடலைக்கும் சுடுகாட்டிற்கும் இத்தகைய தொடர்பு இருப்பதாகவும் சிவன் நள்ளிரவில் அங்கு நடனம் புரிவதாகவும் சுடலை பொடியினை சிவன் பூசிக் கொள்வதாலும். சுடலையும் சிவனும் ஒன்று ஒன்று என்ற வழக்கம் இன்றும் சில மக்களிடையே நம்பிக்கை உள்ளது, ஆனால் வரலாறு உண்மையில் வேறு விதமானது,
   கஜமுகனை அழிப்பதற்கு கணபதியை உருவாக்கியதுபோல் சூரனைக் கூறுபடக்கிழிக்க வேலை படைத்ததைப் போல் சுயநல எண்ணம் கொண்ட மனித மிருகங்களை அழிக்க சுடலையை உருவாக்கி பூமிக்கு அனுப்பி வைத்தான் எல்லாம் வல்லா சிவவெருமான், பூமிக்கு வந்த சுடலை அன்னை பகவதியின் காவலனாகவும். ஏவலனாகவும் பணிபுரிந்து வருகிறார்,
  கன்னியாகுமரி பகவதி அம்மன் ஆலயத்தில் பெரும் பொருள் இருப்பதை மைமூலமாக அறிந்துகொண்ட காளிப்புலையன் என்னும் மலையாள மாந்திரீகன் சுடலை. அன்னையின் பணிக்கு வெளியில் சென்று இருந்தபோது கோவில் பொருளை கொள்ளை இட்டு சென்றானாம், இதை அறிந்த சுடலை காளிப்புலையணை வதைத்து குற்றாலம் வழியாக சீவலப்பேரிக்க வந்து குடி கொண்டானாம், அங்கிருந்து பிடி மண் மூலம் தென் தமிழ் நாடு முழுக்க இன்ற சுடலை ஆண்டவன் பரந்து விரிந்து தன் ஆட்சியை நடத்தி வருகிறான்,
    நல்லோர் மனதை நடுங்க செய்பவர்கள். நட்டாற்றில் கையை நழுவ விடுபவர்கள். வரவு போக்கிற்கு வழி அடைப்பவர்கள். வலிய வழக்கிட்டு மானம் கெடுப்பவர்கள். கற்பு வழி நிற்கும் கன்னியரை அழிப்பவர்கள். பொது சொத்தை கொள்ளை அடிப்பவர்கள். பதவியை பயன்படுத்தி பகட்டு வேஷம் போடுபவர்கள் இன்னும் பல ஆயிரமாயிரம் நரித்தனம் செய்யும் நயவஞ்சக மனிதர்களை கழுவேற்றி காவு கொள்வத போல் கண்ணீருடன் சுடலையிடம் முறையிடுவர்களுக்காக இன்றும் துரோகிகளை பழிதீர்த்து நல்லவர்களை காப்பாற்றி வருகிறான்,
  சுடலை ஆண்டவன் சன்னதியில் பொய் சத்தியம் செய்பவர்களுக்கும் அவர்கள் குடும்பத்தின் தலைமுறையும் பூண்டற்று போய்விடும் என அசைக்க முடியாத நம்பிக்கை இன்னும் மக்களிடம் ஆழமாக வேறூன்றி உள்ளது, அப்படி பொய் சத்தியம் செய்துவிட்டு அழிந்து போன எத்தனையோ குடும்பங்களை நான் நிறைய பார்த்திருக்கிறேன், தனக்கு ஓர் துயர் நேர்ந்துவிட்டது என்று கண்ணீருடன் எந்த அப்பாவியும் முறையிட்டால் சுடலை சும்மாவிடமாட்டான் என்பது வெறும் கதையல்ல ரத்தவரிகளால் எழுதப்பட்ட சரித்திரமாக இன்றும் நிலைத்து நிற்கிறது.
   எல்லா தெய்வங்களுக்கும் போலவே பிரத்யேகமான வழிபாட்டு முறைகள் சுடலைக்கும் உண்டு, இவருக்கு நடு ஜாம படைப்பு என்பது மிக விசேஷமானது ஊன் கலந்த சோறு அர்த்த ஜாம பூஜையில் படைக்கப்பட்டாலும் முட்டை தேங்காய் கலந்த சாவாப்பலி இவருக்கு உண்டு, இவருக்கு ஜாதி பேதமின்றி யார் வேண்டுமென்றாலும் பூஜை செய்யலாம், அந்தணர்கள் உட்பட அனைத்து ஜாதியிலும் பூசாரிகள் உண்டு, இவர் ஆலயத்தில் பிரம்ம சக்தி. சிவனடைந்த பெருமாள். அனைந்த அம்மை. இசக்கி. பேச்சி. முண்டன். லாட சன்னியாசி. முனியன் போன்ற தெய்வங்களும் குடிகொண்டு இருப்பார்கள்.
    இதில் பிரம்ம சக்தி சுடலையின் அன்னை என்றும் அனைந்த அம்மை மனைவியாகவும். சிவனடைந்த பெருமாளை சுடலையின் குருவாகவும் மக்கள் வழிபட்டு வருகிறார்கள், பொதுவாக சுடலை நயவஞ்சகரை அழிப்பவராகவும் பொய் சத்யவாதியை வதைப்பவராகவும். தீய மந்திர சக்திகளை ஒழிப்பவராகவும் இருக்கிறார், பல எதிரிகளுக்கு ஆட்பட்டு வாழ்க்கையில் துயரப்படுபவர்கள் சுடலையை வணங்கினால் சத்ருநாசம் சந்தோஷமான வாழ்வை பெறுவார்கள், சுடலை ஏவப்படும் சக்தி ஈவு இரக்கமற்றவர் என்று மக்கள் கருதுவது மாடன்களையே குறிக்குமே அல்லாது சுடலையை குறிக்காது, காலப்போக்கில் இரண்டையும் ஒன்றாக்கியது நம் தவறே ஒழிய தெய்வங்களின் தவறல்ல,

--
ஸ்ரீ இராமானந்தகுருஜி
http://tamilnanbargal.com/node/27926





--
வினோத் கன்னியாகுமரி
http://tamilnanbargal.com/friends/vinoth


prakash sugumaran

unread,
Aug 31, 2010, 2:49:30 PM8/31/10
to mint...@googlegroups.com
இன்னும் நல்லா திரிங்க.. ஜனங்க இன்னும் நல்லா பைத்தியம் பிடிச்சி திரியட்டும்.. ஆனா இங்கயுமா ?? 

2010/8/31 வினோத்-VINOTH <vino...@gmail.com>


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
prakash sugumaran

Innamburan Innamburan

unread,
Aug 31, 2010, 3:01:10 PM8/31/10
to mint...@googlegroups.com
இந்த தொய்வில்லாத, வியப்புக்குரிய, தகவல்கள் நிறைந்த, மேற்கோள்களை பொருந்திய, ஆனால் நம்புவதற்கு கடினமான கட்டுரையை நடுநிசியில் படிக்கிறேன் என்று பதிலிலிருந்து அறிவீர்கள். சிறு வயதில், பாளையங்கோட்டையில் சுடலை மாடன் பற்றி படித்தது நினைவில் இருக்கிறது, விவரங்கள் மங்கலாக. 

ஒரு தெளிவு வேண்டும். ஒரு நாட்காலை புதுக்கோட்டையில், மயானத்திற்கு அருகில் உள்ள புதுக்குளத்தைச் சுற்றி, உடற்பயிற்சிக்காக ஓடச்சென்றேன். என் சிறுவயது தம்பி கூட வந்திருந்தான். திடீரென்று ஒரு ஜடாமுனி வந்தார். அச்சம் தோன்றவில்லை. ஆனால், உள்ளூர இருந்தது. அவர்,என் தம்பியை பார்த்து, வானம் நோக்கி, இந்த வின்மீன் போல பிரகாசிப்பான் என்றார். அடுத்த வருடம் அவனை இழந்துவிட்டோம். அவர் யார்? ஏன் அப்படிச்சொன்னார்?மற்றொருசெய்தி, சிவபெருமானையும் மயானத்தையும், திருமாலைப்பற்றியும். பிறகு சொல்கிறேன்.
இன்னம்பூரான் 

2010/8/31 வினோத்-VINOTH <vino...@gmail.com>

பதிவிற்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை..

prakash sugumaran

unread,
Aug 31, 2010, 3:12:38 PM8/31/10
to mint...@googlegroups.com
ராமானுஜ குருஜிக்கு இன்னும் பல பக்தர்கள் கிடைக்க வழி செய்த மின் தமிழுக்கு வாழ்த்துக்கள்.. இன்னும் பல குருஜிக்கள் உருவாக கடவது..

2010/9/1 Innamburan Innamburan <innam...@googlemail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
prakash sugumaran

prakash sugumaran

unread,
Aug 31, 2010, 3:13:25 PM8/31/10
to mint...@googlegroups.com


2010/9/1 prakash sugumaran <praka...@gmail.com>



--
prakash sugumaran

வினோத்-VINOTH

unread,
Aug 31, 2010, 10:20:05 PM8/31/10
to mint...@googlegroups.com


2010/9/1 prakash sugumaran <praka...@gmail.com>

ராமானுஜ குருஜிக்கு இன்னும் பல பக்தர்கள் கிடைக்க வழி செய்த மின் தமிழுக்கு வாழ்த்துக்கள்.. இன்னும் பல குருஜிக்கள் உருவாக கடவது..

இதெல்லாம் நமக்குபபெரிய விஷயமா என்ன..
இப்போ வளர்ப்போம். சிக்கல்ல மாட்டினப்புறம் அதுக்கும் 4,5 பதிவுகள் போடுவோம்.
நமக்கு பதிவுகள் தான் முக்கியம் :)



வினோத்-VINOTH

unread,
Aug 31, 2010, 10:26:20 PM8/31/10
to mint...@googlegroups.com


2010/9/1 prakash sugumaran <praka...@gmail.com>

இன்னும் நல்லா திரிங்க.. ஜனங்க இன்னும் நல்லா பைத்தியம் பிடிச்சி திரியட்டும்..

இந்தக்கட்டுரையில் எனக்கு ஒரு பதில் கிடைத்தது. அதாவது

மாடன், சுடலை, சிவன் மூவர்க்கும் உள்ள தொடர்பு. முன்பு மூவரையும் ஒருவரே என நினைத்துக் குழம்பியிருந்தேன். பேய் வழிபாட்டை எவ்வாறு வித்தியாசம் காண்பது என அறியாமல் இருந்தேன்.



 
ஆனா இங்கயுமா ?? 


இங்கே போட்டதுக்கு முக்கியக்காரணம் நம்ம தலைவி சுபா ட்ரெம்மல் அவர்களுக்கு சிறுதெய்வ வழிபாட்டைப்பற்றி விக்கியில் இணைக்க இந்த கட்டுரை உதவியாக இருக்கும் என்று தான்..


கடவுள் இல்லை என்று நம்பிக்கைகளை விதைப்பதும் ஒருவித திரிக்கிறது தானே. :)


coral shree

unread,
Aug 31, 2010, 10:46:20 PM8/31/10
to mint...@googlegroups.com
ஆமாம். இது விடை தெரியாத குழப்பமாகவே பல காலமாக ஓடிக் கொண்டேயிருக்கிறது............நிறைய அனுபவங்கள் புரிந்தும்....புரியாமலும்......

2010/8/31 வினோத்-VINOTH <vino...@gmail.com>

பதிவிற்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை..

விக்ரமன்

unread,
Sep 14, 2010, 2:22:40 AM9/14/10
to மின்தமிழ்

On Sep 1, 7:26 am, வினோத்-VINOTH <vinoth...@gmail.com> wrote:

> மாடன், சுடலை, சிவன் மூவர்க்கும் உள்ள தொடர்பு. முன்பு மூவரையும் ஒருவரே என
> நினைத்துக் குழம்பியிருந்தேன். பேய் வழிபாட்டை எவ்வாறு வித்தியாசம் காண்பது என
> அறியாமல் இருந்தேன்.

யமன் என்றும் கூற்றுவன் என்றும் அழைக்கப்படும் தெய்வம் தான் சுடலை மாடன்
என்ற பெயரில் தமிழ்நாட்டில் வணங்கப்பட்டது, இது சிவன் வழிபாடு
தமிழ்நாட்டில் உருவாவதற்குக் காரணமானது என்ற கருதுகோளின் அடிப்படையில்
ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். அதை இங்கு வெளியிடலாமா?

வினோத்-VINOTH

unread,
Sep 14, 2010, 2:52:31 AM9/14/10
to mint...@googlegroups.com


2010/9/14 விக்ரமன் <ekam...@gmail.com>



யமன் என்றும் கூற்றுவன் என்றும் அழைக்கப்படும் தெய்வம் தான் சுடலை மாடன்
என்ற பெயரில் தமிழ்நாட்டில் வணங்கப்பட்டது,  இது சிவன் வழிபாடு
தமிழ்நாட்டில் உருவாவதற்குக் காரணமானது என்ற கருதுகோளின் அடிப்படையில்
ஒரு கட்டுரை எழுதியுள்ளேன்.

படிக்க ஆவலாய் உள்ளேன்.
ஒரு சந்தேகம். சிவன் தான் யமன் என்றால் மார்க்கண்டேயனை யமனிடமிருந்து காத்த சிவன் என்ற கதை தவறாகுதே


 
அதை இங்கு வெளியிடலாமா?

விக்ரமன்

unread,
Sep 15, 2010, 7:49:58 AM9/15/10
to மின்தமிழ்
தொல்காப்பியர் காலத்தில் தமிழ்நாட்டில் சிவன் வழிபாடு இருந்ததற்கான
சான்றுகள் இல்லை. முதன் முதலாகச் சங்க இலக்கியத்தில் தான் சிவனைப்
பற்றிய குறிப்புகளைக் காண்கிறோம் (சிவன் என்ற பெயர் இல்லாவிடினும்).
சங்க இலக்கியங்களில் சிவன் முது முதல்வன், தொல் முது கடவுள் என்று
குறிக்கப்பட்டிருப்பதிலிருந்து சிவன் வழிபாடு மிகப் பழங்
காலத்திலிருந்தே, தொல்காப்பியர் காலத்திலேயே கூட இருந்திருக்கலாமோ என்று
தோன்றுகிறது. தொல்காப்பியர் அதைக் குறிப்பிடாததற்குக் காரணம் என்னவாக
இருக்கக் கூடும்? அது உயர்குடி மக்களாலும், நடுத்தர மக்களாலும் ஏற்றுக்
கொள்ளப்படாமல் கீழ்த்தட்டு மக்களிடம் மட்டுமே இருந்திருக்கலாம். உலகம்
என்பது உயர்ந்தோர் மாட்டே என்ற கொள்கைப்படி, கீழ்த்தட்டு மக்களிடம்
நிலவிய இந்த வழிபாட்டைத் தன் நூலில் சேர்ப்பதற்குத் தகுதியற்றதாகத்
தொல்காப்பியர் கருதியிருக்கலாம். சங்க காலத்தில் இது மேல் தட்டு
மக்களிடமும் பரவி இருக்கலாம். [கீழ்வகுப்பினரில் சிலர் செல்வமோ, புகழோ
பெற்று மேல்நிலைக்கு வந்துவிட்டால் அவர்களுடன் கூட அவர்களது தெய்வமும்
மேல் நிலைக்கு வருவதை இன்றும் பார்க்கலாம். சில மாரியம்மன்கள் இவ்வாறு
மேல்நிலைக்கு வந்து சிவாசாரியரால் பூசை செய்யப் பெறுவதும் அங்கு
உயிர்ப்பலி நிறுத்தப் பெறுவதும் இதற்கு உதாரணம்.]

தொல்காப்பியத்தில் குறிப்பிடப்படாத சிவன் வழிபாடு சங்க காலத்தில்
எங்கிருந்து வந்திருக்கக்கூடும் என்பதை ஆராயுங்கால் இதற்கு ஆதாரமானவை 1
வேதத்தின் ருத்திரன், 2 சிந்துவெளியின் மஹாயோகி மற்றும் பசுபதி, 3 தொல்
பழம் தெய்வமான சுடலை மாடன் என்று கருத இடமுள்ளது. சங்க காலத்தில் முதல்
இரண்டு அம்சங்களின் சேர்க்கையான முக்கண்ணன் வழிபாடு நிலவியதைக்
காண்கிறோம். மூன்றாவதாகிய சுடலை மாடன் பற்றி இப்பொழுது காண்போம்.

மரணம் தான் அன்று முதல் இன்றுவரை மானிடர்க்குப் புரியாத புதிராகவும்
நமக்கு மேற்பட்ட சக்தி ஒன்று உண்டு என்பதை நிதரிசனமாக நிரூபிப்பதாகவும்
உள்ளது. எனவே ஒவ்வொரு சமயத்திலும் இறைவன் பற்றிய முதல் உணர்வு மரணத்தோடு
தொடர்புடையதாகத் தான் இருக்கிறது.

நீத்தார் தலைவன் கூற்றுவன்

வடமொழியில் யமன் என்றும், தமிழ் இலக்கியத்தில் கூற்றுவன் என்றும்
கூறப்படும் தெய்வமே தொல் பழம் சமயத் தெய்வங்களுள் ஒன்றாகச் சுடலை மாடன்
என்ற பெயரில் வணங்கப்பட்டதாகத் தெரிகிறது.

தமிழ் நாட்டில் நீத்தார் வழிபாடு தொன்று தொட்டு இருந்து வந்துள்ளது.
இறந்த முன்னோர்களிடமிருந்து தீங்கு வராமல் இருக்க வேண்டும், அவர்களது ஆசி
வேண்டும் என்பதற்காக அவர்களை வணங்கிய மக்கள், நாளடைவில் இத்தகைய
முன்னோர்களின் எண்ணிக்கை அதிகமாகவே, நீத்தார்களின் தலைவனை வணங்கினால்
எல்லோரையும் வணங்கியதாகும் என்ற முறையில் கூற்றுவனை வணங்கி இருக்கக்
கூடும். யமன் தான் இறந்தவர்களில் முதலாமவன், எனவே பித்ரு லோகத்தின் முதல்
பிரஜை அவனே என்று வேதம் கூறுவதாக மறைமலை அடிகள் சொல்கிறார். [உரைமணிக்
கோவை- தென்புலத்தார் யார் என்ற கட்டுரை]

சுடலை மாடன் வழிபாடு தமிழ் நாட்டின் தென் மாவட்டங்களில் இன்றும்
தொடர்கிறது. இத்தெய்வத்தின் கோவிலைச் சுற்றிய பகுதிகளில் ஆலமரம்
காணப்படும் நிலையை நாஞ்சில் நாட்டில் பரவலாகக் காணமுடிகிறது என்று
முனைவர் அ.கா.பெருமாள் கூறுகிறார். [தொல் பழம் சமயக் கூறுகள் -
அ.கா.பெருமாள்]

மாடன் வழிபாட்டின் முக்கிய அம்சம், திருநாளின் போது சாமியாடி ஒருவர்,
மக்கள் பின் தொடர நள்ளிரவில் சுடுகாட்டுக்குச் சென்று அங்கு சாம்பலில்
குளித்து, எலும்புகளை அணிந்துகொண்டு ஊருக்குள் திரும்பி வருவது என்று
அவர் கூறுகிறார். சுடலை வாழ்வு, சாம்பல் பூச்சு, அழிக்கும் தொழில்,
கபாலம் ஏந்தி இருத்தல், ஆலமரத்தடியமர்தல் ஆகிய சிவனின் பண்புகள் சுடலை
மாடனிடமிருந்து வந்திருக்கவேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.

சுடலை மாடனின் உருவம் மேலே குறுகிச் செல்லும் ஒரு செவ்வகமும் அதன்மேல்
ஒரு அரைவட்டமுமாக இருப்பதிலிருந்து தான் சிவலிங்க வடிவம் தோன்றி
இருக்கவேண்டும் என்ற அவரது கருத்து சரியாக இருக்கலாம்.

சிவன் வழிபாடு நிலைத்த பின், சிவனுக்குரிய புராணக் கதைகள் சுடலை
மாடனுக்கும் உரியதாக ஆக்கப்பட்டன என்று அவர் கூறுகிறார். அது போல,
முற்காலத்தில் மாடன் நிச்சயமான உருவம் இல்லாத கந்தின் மூலம்
வழிபடப்பட்டு, சிவனுடன் இணைத்துப் பேசப்பட்டபின் லிங்கம் போன்ற உருவம்
வழங்கப்பட்டிருக்கவும் வாய்ப்பு உண்டு.

சோழ நாட்டுப் பகுதிகளில் சுடலை மாடன் வழிபாடு மறைந்து விட்டது. ஆனால்
சிவன் கோவில்கள் பெருமளவில் காணப்படுகின்றன. எனவே இங்கு சுடலை மாடன்
வழிபாட்டைச் சிவ வழிபாடு பின்னுக்குத் தள்ளி இருக்கவேண்டும் எனக்
கருதலாம்.
(இன்னும் வரும்)

kalairajan krishnan

unread,
Sep 15, 2010, 8:30:19 AM9/15/10
to mint...@googlegroups.com
அன்புடையீர் எனக்குத் ​தெரிந்த
தமிழரின்
சிவவழிபாட்டையும் திருமால் வழிபாட்டையும்  இத்துடன் இணைத்தள்​ளேன்,
 
வணங்குதல் - "தென்புலத்தார் தெய்வம்" எனத் திருவள்ளுவர் குறிப்பிடுவதுபோல் ,   இறந்தவரை வணங்குதல்,  இயற்கையை வணங்குதல் ஆகிய இவ்விரண்டு கொள்கைகளுக்கும் பொதுவானது வணங்குதல் என்னும் பண்பாகும். இறந்தவர்களை வணங்குவதினாலும், இயற்கையை வணங்குவதினாலும்    உடலுக்கும் உள்ளத்திற்கும் அப்பாற்பட்ட நிகழ்வுகளையும் சக்திகளையும் ஆட்படுத்த முடியும் என்ற எண்ணமே அது.   ஒரு செயல் நடைபெற்றதற்கான காரணத்தை  அறியமுடியாதபோது,
 
அச்செயல்,
ஒன்று "முன்னோர்களின் ஆன்மாக்களின் செயல்பாட்டினால் நடக்கிறதென்றும்"
 
அல்லது
"இயற்கைச் சக்திகளுக்குத் தலைமை வகிக்கும் தெய்வங்களால் நடக்கிறதென்றும்" நம்புகின்றனர்.  
 
அச்செயல்கள், தனக்குச் சாதகமாக நடைபெற வேண்டுமென்று விரும்புகின்றனர்.  இந்த விருப்பத்தை  முன்னோர்களின் ஆன்மாவோ அல்லது இயற்கைத் தெய்வங்களோ நிறைவேற்றும்  என நம்புகின்றனர்.  
 
"தெய்வங்கள், வழிபடுபவர்களைத் துன்பங்களிலிருந்து  காக்கின்றன"  நம்பிக்கை தமிழரிடம் உண்டு. 
 
"வழிபடு தெய்வம் நிற்புறங்காப்ப"  எனத் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.  வழிபடு தெய்வத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.  மதுரை நகரைக் காத்து வந்த "மதுராபுhpத் தெய்வம்" பற்றிய குறிப்புகள் சிலப்பதிகாரத்தில் உள்ளன.
 
"சடையும் பிறையும் தாழ்ந்த சென்னிக் குவளை உண்கண் தவளவாள் முகத்தி ...  ...  ... பொற்கோட்டு வரம்பன் பொழியிற் பொருப்பன் குலமுதற் கிழத்தி ...  ... மாபெருங் கூடல் மதுரா பதிஎன்பேன்" என்று மதுராபதித் தெய்வம் கட்டுரை காதையில் வருணிக்கப்பெற்றுள்ளது.
   
இதனால், முன்னோர்களை அல்லது தெய்வத்தை உரி ய வழியில் வணங்கினால் அவர்கள் அச்செயலைச் தங்களுக்கு ஏற்புடையதாய்ச் செய்து முடிப்பர் என்று நம்புகின்றனர்.  
 
இத்தகைய கோட்பாடுகளே சமயங்களின் அடிப்படையாய் உலகம் எங்கும் விரவி உள்ளது.

"குடிசெய்வ லென்னு மொருவற்குத் தெய்வ
மடிதற்றுத் தான்முந் துறும்"
 
குடித்தனத்தின் நிலைமையை உயர்த்துவேன் என உறுதி கொள்ளும் ஒருவனுக்கு உதவி செய்யத் தெய்வம் கச்சை கட்டிக் கொண்டு தானே முன்வரும்
 
  என்ற இத்திருக்குறள் தெய்வங்கள் மனிதர்களுக்கான பணிகளைச் செய்கின்றன என்ற கருத்திற்கு ஆதாரமாக உள்ளது.
 
சங்கப் பாடல்களில் சிவன்
சங்கப் பாடல்களில் சிவனைப் பற்றியும் திருமாலைப் பற்றியும் குறிப்புகள் உள்ளன.
சங்கப் பாடல்களில் சிவன் - ”சைவர்களின் முழுமுதற் கடவுளாகக் கருதப் பெறும் சிவபெருமானைப் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. 
 
சிவன் என்ற பெயர் பெற்றில.  பிற காரணப் பெயர்களால் குறிக்கப்பெற்றுள்ளன. 
முக்கட் செல்வன்(அகம் 181;-16,   புறம் 6-18),
ஆதிரையான் (கலி 150-20),
ஆலமர் செல்வன் (கலி 83-14).
முக்கணான்(கலி 2-4, 104-2),
எரிதிகழ் கணிச்சியோன் (கலி 103-25),
சீறருங் கணிச்சியோன்(கலி 1-6),
மூவெயில் முருக்கிய முரண்மிகு செல்வன் (முருகு 154),
ஆதிரை முதல்வன் (பாp 8-6) என்றினைய சொற்கள் சிவபெருமானைக் குறிப்பனவாக அமைந்துள்ளன,

சங்கப் பாடல்களில் திருமால் -
சங்கப் பாடல்களில் திருமாலைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. 
அஞ்சன உருவன்(புறம் 175-5),
நேமியான்(புறம்58-15, கலி105-9,  127-4),
திகிரியான் (கலி 104-78),
மாயவன்(கலி 145, 64),
திகிரிசெல்வன்(பாp 13-50), என்றினைய சொற்கள் திருமாலைக் குறிப்பனவாக அமைந்துள்ளன
 
அன்பன்
 
கி. காளைராசன்
--
அன்னதானம் ​செய்வோம்,  கண்தானம் ​செய்வோம்.  இவ்விருதானங்களையும் சிவபெருமான் ஏற்றுக் ​கொள்கிறார்,

Swarna Lakshmi

unread,
Sep 15, 2010, 11:16:29 AM9/15/10
to mint...@googlegroups.com
திரு விக்ரமன்,
 
சங்க காலம் என்பது 1 ஆம் 2 ஆம் நூற்றாண்டு என்று கொண்டால், இத்தனை இலக்கியங்களில் எங்கேயுமே சிவனைப் பற்றிக் குறிப்பிடப்படவில்லை என்று நீங்கள் உரைப்பது ஆச்சரியமாக இருக்கிறது.
 
ஒரு உதாரணத்திற்கு, காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட லிங்கம் என்று புராணம் சொல்கிறது, அங்கிருக்கும் (சில வருடங்களுக்கு முன் வரை இருந்த) மாமரம் 3000 ஆண்டுகளுக்கு முற்பட்டதென்று சொல்லப்படுகிறது -carbon dating உதவுமா என்று தெரியவில்லை. இவற்றை வாய்வழிச்செய்திகள் என்று எவ்வாறு விட முடியும் - வாய்வழிச் செய்தியாய் இருப்பதினாலேயே அவை உண்மைக்கு புறம்பானவை என்று சொல்ல முடியுமா. இன்னும் பழமையான கோவில்கள் கூட தென்னகத்தில் உண்டு. கீழ்த்தட்டு, மேல்தட்டு என்ற ஒரு பழங்குடிப் பார்வையை விட, தனிப்பட்ட முறையில் சிவனை ஆத்ம லாபத்தோடு இணைத்து (விஷ்ணுவை வாழ்வியலோடு இணைத்தது போல்), இம்மை, மறுமை, முக்தி போன்ற காரணங்களுக்காக வழிபடுவது தான் நீண்ட கால நடைமுறை என்று தோன்றுகிறது.
 
சங்கரர் போன்றவர்களின் காலமே இரண்டாயிரம் ஆண்டுகள் முன்பு என்கிற போது அவர் காலத்திய இலக்கியங்களையும், குறிப்புக்களையும் கூட கணக்கில் கொள்ளலாமே... நாம் குறிப்பிடும் தென் தமிழகத்தின் ஒரு பகுதியாகத் தானே அவர் பிறந்த ஊரும் இருந்தது!!
 
திரு. சுகுமாரன் அவரது சுவடிதேடல் பற்றிய கட்டுரையில் காஞ்சிபுரத்தில் இருக்கும் 4000 வருட பழமையுடைய மடத்தைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார் - அது சைவ மடம் என்றே நினைவு.
 
இது நினைவிலிருந்து எழுதும் விஷயங்கள்தான் - பெரியவர்கள் தவறிருந்தால் குறிப்பிடும்படி வேண்டுகிறேன்.
 
நன்றி
ஸ்வர்ணா


From: விக்ரமன் <ekam...@gmail.com>
To: மின்தமிழ் <mint...@googlegroups.com>
Sent: Wed, 15 September, 2010 5:19:58 PM
Subject: [MinTamil] Re: மயான தெய்வம் - நடுஜாமத்தில் படிங்க.. ;)

Geetha Sambasivam

unread,
Sep 15, 2010, 11:22:10 AM9/15/10
to mint...@googlegroups.com
சிவன், ருத்திரன் என்பவர் இருவரும் ஒருவரே என்பது  பற்றி தெய்வத்தின் குரலில் பரமாசாரியார் அவர்கள் தெளிவாக உரைத்திருக்கிறார். தேடிப் பார்க்கணும். கிடைத்தால் நாளை போடுகிறேன்.

2010/9/15 Swarna Lakshmi <lakshm...@yahoo.com>
திரு விக்ரமன்,
 
சங்க காலம் என்பது 1 ஆம் 2 ஆம் நூற்றாண்டு என்று கொண்டால், இத்தனை இலக்கியங்களில் எங்கேயுமே சிவனைப் பற்றிக் குறிப்பிடப்படவில்லை என்று நீங்கள் உரைப்பது ஆச்சரியமாக இருக்கிறது.
 



--

விக்ரமன்

unread,
Sep 16, 2010, 3:44:10 AM9/16/10
to மின்தமிழ்
அன்புடையீர்,
கால வரிசைப்படி தொல்காப்பியத்திற்குப் பின் சங்க இலக்கியங்கள் அதன்பின்
அம்மையார் பாடல்கள் என்ற வரிசை அமைப்பை அடிப்படையாகக் கொண்டு
பார்க்கும்போது, அம்மையார் காலம் உள்பட எங்கும் சிவன் என்ற பெயர்
பயன்படுத்தப் படவில்லை. அம்மையார் சிவகதி என்ற சொல்லைப்
பயன்படுத்துகிறார். அது முத்தி நிலையைக் குறிப்பதாகவும் அச்சொல் சமணர்கள்
வழக்கிலும் இருப்பதாகவும் திரு.வி. க. கூறுகிறார்.
சிவன் வழிபாடு பழமையானதாக இருக்கலாம். ஆனால் எழுதப்பட்ட இலக்கியங்களில்
சிவன் என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை என்று தான் தெரிகிறது. வாய்மொழி
இலக்கியங்களின் கால வரையறை சிக்கலானது.

விக்ரமன்

unread,
Sep 16, 2010, 9:43:25 PM9/16/10
to மின்தமிழ்
பஞ்ச மயானங்கள்

சோழ நாடாகிய பழைய தஞ்சை மாவட்டத்தில் மயானம் என்ற பெயர் பெற்ற நான்கு
கோவில்கள் உண்டு. அவை திருவீழிமிழலை சீர்காழி, திருக்கடவூர், நாலூர்.
இவற்றுடன் வட தமிழ்நாட்டில் உள்ள காஞ்சியையும் சேர்த்துப் பஞ்ச மயானம்
என்பர். இந்த இடங்களில் தான் முதன் முதலாக யமன் வழிபாடு சிவன் வழிபாடாக
மாற்றம் பெற்றிருக்க வேண்டும்.

திருக்கடவூரில் இரண்டு கோவில்கள் உள்ளன. இரண்டும் பாடல் பெற்றவை.
பழமையானது கடவூர் மயானம் என்றும், மற்றது கடவூர் என்றும்
அழைக்கப்படுகிறது. [இரண்டின் நீள அகலம், அமைப்பு இவற்றிலுள்ள ஒற்றுமையைப்
பார்க்கும்போது, கடற்கரை அருகிலுள்ள பழைய கோவில் கடல் கோளால்
(சுனாமியால்) அழிந்த பின் மூன்று கிலோமீட்டர் மேற்கே தள்ளிப் பாதுகாப்பான
இடத்தில் பழைய அமைப்பை மாற்றாமல் புதிய கோவில் ஒன்றைக் கட்டி இருப்பர்
என்ற முடிவுக்கு வருவது தவிர்க்க முடியாதது.] பழைய கோவில் இருந்த இடம்
முன்பு கூற்றுவன் வழிபாடு நடை பெற்ற மயானமாக இருந்து, பிற்காலத்தில் சிவ
வழிபாட்டிடமாக உருமாறி இருக்கலாம். அதன் காரணமாகவே அந்த இடம் மயானம்
என்று அழைக்கப்பட்டிருக்க வேண்டும்.

திருக்கடவூரில் மார்க்கண்டேயனைக் காப்பதற்காகவும், திருவீழிமிழலையில்
சுவேதகேது என்னும் ராஜரிஷிக்காகவும், திருவையாற்றில் ஔத்தாலதி
என்பவருக்காகவும் சிவன் யமனை சம்ஹாரம் செய்தார் என்ற புராணக் கதைகள், சிவ
வழிபாட்டின் முன் யமன் வழிபாடு தோற்றுப் போனதைக் கூறுவதாகவே இருக்கலாம்.
இதே போன்று வால்மீகி ராமாயணத்தில் 3.30.27 ருத்திரன் அந்தகனை
ஸ்வேதாரண்யத்தில் (திருவெண்காட்டில்?) கொன்றது குறிப்பிடப்பட்டுள்ளது.

திருக்கடவூர் மயானம் என்ற பெயர் மருவி இன்று திருக்கடவூர் மெய்ஞானம்
என்றே வழங்குகிறது. திருநாலூர் மயானமும் இன்று நாலூர் மெய்ஞானம் என்று
வழங்குகிறது. எனவே பேரளம் அருகில் உள்ள திருமெய்ஞானம் என்ற தலம் கூட
முற்காலத்தில் திருமயானமாக இருந்திருக்குமோ என்ற ஐயம் ஏற்படுகிறது. இவை
தவிர வேறு பல தலங்களும் முன்பு மயானம் என்ற பெயர் பெற்றிருந்து தற்போது
வழக்கொழிந்திருக்கக் கூடும்.

குடந்தை அருகிலுள்ள நாலூர் மயானம் என்னும் கோவில் தற்போது எந்தச்
சிறப்பும் இன்றி இருந்தாலும் தேவாரப் பாடல் பெற்ற தலமாகும். இதுவும் யமன்
வழிபாடு நடைபெற்ற இடம் என்று கருத இடமுண்டு.

வீரட்டானத் தலங்கள் என்று போற்றப்படுகின்ற திருக்கடவூர், திருவிற்குடி,
திருப்பறியலூர், திருக்குறுக்கை, திருக்கண்டியூர், வழுவூர்,
திருக்கோவலூர், திருவதிகை ஆகிய எட்டுத் தலங்களில் நடைபெற்றதாகப்
புராணங்கள் கூறும் நிகழ்ச்சிகளைத் தேவாரங்கள் குறிப்பிடவில்லை.
(திருக்கடவூர்ப் பதிகம் ஒன்றில் மட்டும் சிவன் காலனை உதைத்த செய்தியை
அப்பர் பத்துப் பாடல்களிலும் குறிப்பிடுகிறார். ஞானசம்பந்தர் சிறப்பாகக்
குறிப்பிடவில்லை.) சிவபெருமானின் வீரம் வெளிப்பட்ட இடங்களாக
வர்ணிக்கப்படும் இவற்றில் முறையே காலன், சலந்தராசுரன், தக்கன், மன்மதன்,
பிரமனின் ஐந்தாவது தலை, யானை வடிவில் வந்த அசுரன், அந்தகாசுரன்,
திரிபுரங்கள் இவை அழிக்கப்பட்டதாகத் தல புராணங்கள் கூறுகின்றன. இத்தல
புராணங்கள் மூவர் முதலிகட்குப் பிற்காலத்தில் தோன்றியவை என்பது
புலனாகின்றது. தேவாரத்தில் குறிப்பிடப்படும் வீரட்டானம் என்பது வேறு ஏதோ
பொருளைக் குறித்திருக்க வேண்டும்.

திருவிற்குடி வீரட்டம் என்னும் தலம் பிருந்தை மயானம் என்றும்
அழைக்கப்பட்டது. தற்போது இப்பெயர் வழக்கொழிந்துவிட்டது. இது போல, மற்ற
வீரட்டங்களும் மயானங்களாக இருந்திருக்கலாம். எல்லாத் தலங்களிலும் யமன்
சம்ஹரிக்கப்பட்டான் என்று சொல்வதைத் தவிர்த்து ஒவ்வொரு தலத்திலும்
வெவ்வேறு அசுரர்கள் அழிக்கப்பட்டதாகக் கதைகள் தோன்றியிருக்கக் கூடும்.

Geetha Sambasivam

unread,
Sep 17, 2010, 2:02:46 AM9/17/10
to mint...@googlegroups.com
அட்ட வீரட்டானங்கள் அவை.
http://aanmiga-payanam.blogspot.com/2010/08/blog-post.html

திருக்கண்டியூர்-பிரம்மா தலை
திருக்கோயிலூர்-அந்தகாசுரன்
திருவதிகை வீரட்டானம்- திரிபுரம்
திருப்பறியலூர்=தக்ஷன் வதம்
திருவிற்குடி=ஜாலந்தர வதம்
வழுவூர்- கஜாசுரனாக தாருகாவனத்து ரிஷிகள் அனுப்பிய யானையைக் கொன்று தோலை உரித்தத்
திருக்குறுக்கை-காமதகனம்
திருக்கடவூர்- யமனைக் காலால் உதைத்தது.


2010/9/17 விக்ரமன் <ekam...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Sep 17, 2010, 2:04:09 AM9/17/10
to mint...@googlegroups.com
திருவிற்குடி=ஜாலந்தரன் மனைவி பிருந்தை~  இது தொடர்பான புராணச் செய்திகள் மேற்கண்ட சுட்டியில் உள்ள பதிவுகளில் காணலாம்.  விருப்பம் இருப்பின் பாருங்கள். நன்றி.

2010/9/17 Geetha Sambasivam <geetha...@gmail.com>
அட்ட வீரட்டானங்கள் அவை.
http://aanmiga-payanam.blogspot.com/2010/08/blog-post.html

திருக்கண்டியூர்-பிரம்மா தலை
திருக்கோயிலூர்-அந்தகாசுரன்
திருவதிகை வீரட்டானம்- திரிபுரம்
திருப்பறியலூர்=தக்ஷன் வதம்
திருவிற்குடி=ஜாலந்தர வதம்
வழுவூர்- கஜாசுரனாக தாருகாவனத்து ரிஷிகள் அனுப்பிய யானையைக் கொன்று தோலை உரித்தத்
திருக்குறுக்கை-காமதகனம்
திருக்கடவூர்- யமனைக் காலால் உதைத்தது.


Geetha Sambasivam

unread,
Sep 17, 2010, 2:04:33 AM9/17/10
to mint...@googlegroups.com
இந்த பிருந்தை தான் துளசியாக அவதாரம் செய்ததாகவும் ஆன்றோர் வாக்கு.

விக்ரமன்

unread,
Sep 18, 2010, 5:59:18 AM9/18/10
to மின்தமிழ்
Part 3
கோவில்களில் யமன் :-

தமிழ்நாட்டில் யமதீர்த்தம் என்ற பெயரில் திருக்குளங்கள் உள்ள சிவன்
கோவில்கள் சில உண்டு. உதாரணம் - ஸ்ரீவாஞ்சியம், கருவிலி (இது பரணி
தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது), திருவைகாவூர்,
திருச்செங்காட்டங்குடி, தாராசுரம்.

ஸ்ரீவாஞ்சியம் :-

ஸ்ரீவாஞ்சியத்தில் யமனுக்குத் தனிக்கோயில் சிவாலய வளாகத்தின்
தென்கிழக்கில் உள்ளது. மாசி மாதம் பரணி அன்று யமனைச் சிவன் ஆட்கொண்டதன்
நினைவாக யம வாகனத்தில் சிவன் உலா வருகிறார். மாசி மகத்தன்று விழா
முடிவடைகிறது. அவ்வூரில் யமன் க்ஷேத்ர பாலர் என்ற சிறப்புப் பெயரும்
பெற்றுள்ளார். அதாவது, அந்தத் தலத்தின் காவல் தெய்வமான தொல் பழம்
தெய்வம்.

பொதுவாக, பைரவரைத் தான் க்ஷேத்ரபாலர் என்று சொல்வது வழக்கம். ஆனால்
ஸ்ரீவாஞ்சியத்தில் உள்ள யமனுக்குப் பைரவருடைய அம்சங்கள் (நின்ற கோலம்,
நாய் வாகனம், ஆடையின்றி இருத்தல்) இல்லை. கையில் ஜபமாலை, தென்முகமாக
அமர்ந்து இருத்தல், இடது காலை மடித்து வலது காலைக் கீழே ஊன்றி இருத்தல்
கொண்ட அவரது தோற்றம் தட்சிணாமூர்த்தியையே ஒத்து உள்ளது. இங்கு கோவிலுக்கு
நேர் எதிரில் தொலைவில் மயானம் அமைந்துள்ளது. மற்றக் கோவில்கள் போல்
அல்லாமல், இங்கு சுடுகாட்டில் பிணம் எரிந்து கொண்டிருந்தாலும் பூஜை
நிறுத்தப் பெறுவதில்லை என்று அவ்வூர் கைலாச சிவாசாரியர் தெரிவிக்கிறார்.
எனவே இங்கு சுடலை மாடன் வழிபாடே சிவன் வழிபாடாக உருமாறி இருக்க வேண்டும்


என்று கருத இடமுண்டு.

திருவலஞ்சுழி :-

திருவலஞ்சுழி சிவன் கோவிலில் க்ஷேத்ரபாலர் சன்னிதி ஒன்று இருந்தது.
தற்போது இல்லை. இதுவும் கோயில் வளாகத்தின் தென்கிழக்கு மூலையில்
தனிக்கோயிலாக விளங்கியது. இக் கோயிலில் நடைபெற்ற வழிபாடு பற்றிக்
கல்வெட்டு கூறும் தகவலை ஆய்ந்தால் இந்த க்ஷேத்ரபாலரும் யமனே என்பது
தெரிகிறது. இது தொடர்பாக இரா.கலைக்கோவன் கூறுவது கவனிக்கத் தக்கது.
“சேத்ரபாலர் என்றால் ஊர்க்காவலர் என்று பொருள். ... வலஞ்சுழியில்
தென்கிழக்குப் பகுதியைத் தேர்ந்தெடுத்து சேத்ரபாலரை இருத்தியுள்ளார்
முதல் ராஜராஜர்.” இவர் பைரவரிலிருந்து வேறானவர் என்றும் ராஜராஜீசுவரம்,
கங்கை கொண்ட சோழபுரம் ஆகிய ஊர்களிலும் சேத்ரபாலர் வழிபாடு இருந்தது
என்றும் கலைக்கோவன் கூறுகிறார். [வலஞ்சுழி வாணர் - இரா.கலைக்கோவன்,
மு.நளினி, பக்கம் 165] முதலாம் ராஜேந்திரரின் மூன்றாம் ஆட்சியாண்டுக்
கல்வெட்டு ஒன்று, மன்னர் அவ்வாண்டின் 221 ஆம் நாள் எள் மலைப் புகுந்தருளி
சேத்திரபாலரின் திருவடிகளில் பன்னிரண்டு பொற்பூக்களைப் பெய்து
வழிபட்டதாகக் கூறுகிறது. [வலஞ்சுழி வாணர் - இரா.கலைக்கோவன், மு.நளினி,
பக்கம் 171] இது எள் கொண்டு நீத்தார் கடன் செய்ததைக் குறிப்பிடுகிறது.
எனவே நீத்தார் தலைவனாகிய யமனே சேத்திரபாலராக வழிபடப்பட்டார் என்றும்,
யமன் அத் தலத்தின் புராதன தெய்வம் என்றும், புதிய தெய்வம் வந்தபோதும்
பழைய தெய்வம் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்படுவதில்லை என்பதையும்
அறியலாம்.

தனிக் கோயிலாக அல்லாமல் யமன் சன்னிதி கொண்ட கோயில்களும் திருப்பைஞ்ஞீலி,
திருக்கடவூர், திருவாரூர், தருமபுரம் போன்ற சில உண்டு.

யமனுக்கு உரிய நாட்கள் :-

பரணி, மகம் ஆகிய இரண்டு நட்சத்திரங்களும் யமனுக்கு உரியவையாகக்
கருதப்படுகின்றன. வேதத்தில் பரணி யமனுக்கு உரியதாகவும், மகம்
பித்ருக்களுக்கு (இறந்த முன்னோர்களுக்கு) உரியதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஆண்டு தோறும், தாய் தந்தையர் இறந்த மாதத்தில் அந்தந்தத் திதியில் திவசம்
என்ற பெயரில் வழிபாடு நடத்துவது இன்றுள்ள நடைமுறை. இதனுடன் கூட மாசி
மகத்தன்று இறந்த முன்னோர் அனைவருக்குமாகச் சேர்த்துத் திவசம் கொடுப்பதும்
பிராமணர் அல்லாதாரிடையே வழக்கமாக இருந்து வருகிறது. “மறந்து போனது
எல்லாம் மகத்தன்று” என்று பழமொழியும் உண்டு. நட்சத்திரத்தை ஒட்டி நடத்தப்
பெறுவதால் இது பழந் தமிழ் நாட்டுப் பழக்கம் என்பது தெரிகிறது.

தமிழ்நாடு தவிர, பிற பகுதிகளில் கோவிலில் யமன் வழிபடப் படுவதாகத்
தெரியவில்லை. வட இந்தியாவில் தீபாவளிக்கு முதல் நாள் திரயோதசி அன்று
மட்டும் யமனுக்கு வணக்கம் செலுத்தப்படுகிறது. தமிழ் நாட்டில் பிரதோஷம்
திரயோதசியில் நடத்தப் பெறுவது வடக்கிலிருந்து குடியேறியவர்களால்
ஏற்படுத்தப்பட்டிருக்கலாம்.

நாளின் கடைசிக் கால பூசை பெருமாள் கோவில்களில் தூங்க வைத்தல் என்ற
பொருளில் திரு அனந்தல் எனப்படுகிறது. ஆனால் சிவன் கோவில்களில் நள்ளிரவு
என்று பொருள்படும் அர்த ஜாமம் என்ற பெயரில் வழங்கப்படுகிறது. நள்ளிரவில்
பூசை செய்யப் பெறுபவர் சுடலை மாடனே. இது சிவ வழிபாட்டில் ஏற்பட்ட சுடலை
மாடனின் தாக்கங்களுள் மற்றொன்று.

Geetha Sambasivam

unread,
Sep 18, 2010, 9:36:35 AM9/18/10
to mint...@googlegroups.com
கருவிலி (இது பரணி
தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது)//

என் மாமனார், மாமியாருக்குக் கருவிலிதான். யமதீர்த்தம்னு சொல்லித் தான் கேள்விப்பட்டிருக்கேன். இப்போவும் அப்படித் தான் சொல்றாங்க. கேட்கிறேன் மாமியாரை, இப்படி ஒரு மாற்றுப் பெயர் உண்டான்னு.

2010/9/18 விக்ரமன் <ekam...@gmail.com>
Part 3
கோவில்களில் யமன்        :-

தமிழ்நாட்டில் யமதீர்த்தம் என்ற பெயரில் திருக்குளங்கள் உள்ள சிவன்
கோவில்கள் சில உண்டு. உதாரணம் - ஸ்ரீவாஞ்சியம், கருவிலி (இது பரணி
தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது), திருவைகாவூர்,
திருச்செங்காட்டங்குடி, தாராசுரம்.



--

விக்ரமன்

unread,
Sep 20, 2010, 4:15:48 AM9/20/10
to மின்தமிழ்
part 4
ஆலமரம் :-

சுடலை மாடனுக்கும் ஆலமரத்துக்கும் உள்ள தொடர்பு பற்றி முன்பு பார்த்தோம்.
வட இந்தியாவிலும் பித்ருக்களுக்கும் ஆலமரத்துக்கும் நெருங்கிய தொடர்பு
உண்டு. பிதிர்க் கடனுக்குப் புகழ் பெற்ற கயாவில் அக்ஷய வடம் எனப்படும்
ஆலமரத்தடியில் தான் பிண்டம் அளிப்பது வழக்கம். ஆதி சிதம்பரம் எனப் புகழ்
பெற்ற திருவெண்காட்டிலும் இது போலக் கோவிலில் உள்ள ஒரு ஆலமரத்தடியில்
பிதிர்க் கடன் நிறைவேற்றுவது வழக்கமாக உள்ளது.

யமனுக்கு உள்ள பல பெயர்களில் ஔதும்பரன் என்பதும் ஒன்று. உதும்பரத்துடன்
தொடர்பு உள்ளவன் ஔதும்பரன். உதும்பரம் என்பது ஆலமரத்திற்கு உள்ள வடமொழிப்
பெயர்களில் ஒன்று.

தென்முகக் கடவுள் ஆலமரத்தடியில் வீற்றிருப்பதைக் காண்கிறோம். சங்க
காலத்திலேயே சிவன் ஆலமரத்தடியில் அமர்ந்த நிலை கூறப்பட்டது. இது சிந்து
வெளியிலிருந்து வந்திருக்கக் கூடும். அல்லது கூற்றுவன் வழிபாட்டின்
தாக்கம் ஏற்படத் தொடங்கியதன் அறிகுறியாகவும் இருக்கலாம். சுடுகாட்டுப்
பகுதிகளில் மிகுதியாகக் காணப்படும் கள்ளி நிழலில் அமர்ந்துள்ள ஒரு கடவுள்
பற்றிய குறிப்பு புறநானூற்றில் காணப்படுகிறது. [புறநானூறு 260] இது சுடலை
மாடனைக் குறிப்பதாக இருக்கலாம். மாடன் ஆலமர் செல்வனாக உருமாற்றம்
பெறுவதற்கு முந்திய நிலையாக இருக்கலாம்.

பட்டுக்கோட்டைக்கும் முத்துப்பேட்டைக்கும் நடுவில் பரக்கலக்கோட்டை
என்னும் ஊரில் உள்ள பொதுவுடையார் கோவிலில் ஆலமரத்தின் அடிப்பாகமே
சிவலிங்கமாக வணங்கப்படுகிறது. இதற்குத் திங்கட்கிழமைகளி்ல் இரவு 11 மணி
முதல் 1 மணி வரையில் பூசை செய்யப்படுகிறது.

திருவான்மியூரில் உள்ள கைலயங்கிரி ராமலிங்கநாதர் கோவிலிலும் ஒரு ஆலமரமே
பூசிக்கப்பட்டு வந்தது. பின்னர் அங்கு ஒரு சித்தர் சமாதி ஆன பிறகு
ஆலமரத்தின் முன் ஒரு லிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கும் பின்னிரவு 3
மணி முதல் 5 மணிவரை மட்டுமே பூசை நடைபெறுகிறது. பௌர்ணமி அன்று நள்ளிரவில்
வழிபாடு நடைபெறுகிறது.

இரவில் மட்டும் பூசிக்கப்படுவதாலும் ஆலமரத் தொடர்பு உள்ளதாலும் இவை
முதலில் சுடலை மாடன் வழிபாடாக இருந்து சிவ வழிபாடாக மாறியிருக்க
வேண்டும். இது போன்ற கோவில்கள் தமிழ் நாட்டில் பல இருக்கக் கூடும்.

முயலகன் :-

பெரும்பாலான கோவில்களில் தட்சிணாமூர்த்தியின் மற்றும் நடராஜாவின்
காலடியில் முயலகன் அமைந்துள்ளது. சில கோவில்களில் இது இல்லை. எனவே
முயலகன் அமைக்கும் வழக்கம் காலத்தால் பிற்பட்டது எனக் கொள்ள இடமுண்டு.
இது அம்மையாராலும் அவருக்கு முந்தியவர்களாலும் குறிப்பிடப்படவில்லை.
மயானத் தலங்களாகிய திருவீழிமிழலையிலும், நாலூரிலும் ஆலமர் செல்வனின்
காலடியில் முயலகன் காணப்படாதது கொண்டு இவை இரண்டும் பழமையானவை என்று
கொள்ளலாம். சிந்து வெளியின் மஹாயோகி அல்லது தமிழ் நாட்டின் சுடலை மாடன்
இன்றைய தட்சிணாமூர்த்தியாகப் பரிணமித்த காலத்திற்கு முன் இது ஒரு
இடைநிலையாக இருந்திருக்க வேண்டும்.


விக்ரமன்

unread,
Sep 22, 2010, 5:22:01 AM9/22/10
to மின்தமிழ்
நிறைவுப் பகுதி

இலக்கியச் சான்று :-

கலித்தொகை, உமையொருபாகன் ஊழி முடிவில் எமனை நெஞ்சு பிளந்து கூளிக்கு
இட்டதாகக் கூறுகிறது. [கலித்தொகை 101] ஏற்றெருமை நெஞ்சம் வடிம்பின்
இடந்திட்டு [ கலித்தொகை 103] என்று சிவன் யமனைக் கால்விரல் நகத்தால்
கொன்றதையும் குறிப்பிடுகிறது. இவையும் முற்கூறியபடி, எமன் வழிபாடு
மங்கியதைக் கூறுவதாகவே இருக்கலாம்.

கணிச்சிக் கூர்ம்படை கடுந்திறல் ஒருவன்
பிணிக்கும் காலை இரங்குவீர் மாதோ [புறம் 195] என்பதிலிருந்து கணிச்சி
என்னும் மழு முதலில் யமனின் ஆயுதமாகக் கருதப்பட்டது தெரிகிறது. யமனை
வென்ற பின் அது சிவனின் ஆயுதமாகி இருக்க வேண்டும் என்பது
ஏற்றுவலன் உயரிய எரிமருள் அவிர்சடை
மாற்றரும் கணிச்சி மணிமிடற்றோனும் [புறம் 56] என்ற தொடரிலிருந்து
அறியப்படுகிறது. மழு ஏந்திய தட்சிணாமூர்த்தி திருநெடுங்களம் முதலான பல
கோவில்களில் காணப்படுகிறார்.

சந்தியா வந்தனத்தில் யமன் :-

சிவனை வழிபடும் பிராமணர்கள் தினசரி சந்தியா வந்தனத்தில் யமனுக்கு வணக்கம்
செலுத்துகிறார்கள். [யமாய தர்மராஜாய ம்ருத்யவே ச அந்தகாய ச, வைவஸ்வதாய
காலாய ஸர்வபூத க்ஷயாய ச, ஔதும்பராய தத்னாய நீலாய பரமேஷ்டினே, வ்ருகோதராய
சித்ராய சித்ரகுப்தாய வை நம: - இதில் முற்கூறிய ஔதும்பரன் என்ற பெயர்
வருவதைக் காண்க.] இது வைணவப் பிராமணர்களால் அனுசரிக்கப்படுவதில்லை.
பண்டைய யமன் வழிபாட்டின் நினைவுச் சின்னமாக இது உள்ளது.

அரன் :-

தேவாரத்தில் சிவனைக் குறிக்க அரன் என்னும் பெயரும்
பயன்படுத்தப்பட்டுள்ளது. அரன் நாமமே சூழ்க எங்கும் என்று சம்பந்தர்
வாழ்த்துகிறார். இது அம்மையாராலும் ஆளப்பட்டு இருக்கிறது. இப்பெயர்
வேதத்திலும், பழந் தமிழ் இலக்கியங்களிலும் காணப்படவில்லை. [காலத்தால்
பிற்பட்ட ஸ்வேதாஸ்வதார உபநிடதம் 1-10 இல் மட்டும் ஹர என்ற சொல்
அழிவில்லாத பிரும்மத்தின் பெயராகக் கூறப்பட்டுள்ளது.]

இதன் தோற்றம் பற்றி அறியப் போதுமான சான்றுகள் இல்லை. இது ஹர என்ற வட
சொல்லிலிருந்து தோன்றியிருக்கலாம். இதற்கு அபகரிப்பவர் என்பது முதன்மையான
பொருள். இது உயிரை அபகரித்துச் செல்லும் யமனுக்கு உரிய பெயராக முதலில்
பயன்படுத்தப்பட்டிருக்கலாம். கூற்றுவன் வழிபாட்டின் இடத்தை சிவ வழிபாடு
கைப்பற்றிய பின்னர் சிவனுக்கு இந்தப் பெயர் வழங்கப்பட்டிருக்கலாம்.

சிவனுக்கு இப்பெயர் பிற்காலத்தில் மிகுதியாகப் பயன் படுத்தப் பட்டது. ஹர
ஹர சங்கர, ஹர ஹர மஹாதேவா, அரகரோகரா என்ற கோஷங்கள் மூலம் இன்றும்
நம்மிடையே பிரபலமாக உள்ளது.

ஒரு புறம் யமன் வழிபாடு சிவன் வழிபாட்டுடன் இரண்டறக் கலந்து உயர்
வகுப்பாரிடையே பிரபலமாக, மறுபுறம் இன்று பிற்பட்ட வகுப்பினரால் சுடலை
மாடன் என்ற பெயரில் வணங்கப்படுவதும் தொடர்கிறது. தென் மாவட்டங்களில்
வழக்கில் உள்ள இதில் சில உயர் வகுப்பினரும் பங்கு கொள்வதாக
அறியப்படுகிறது.

காரைக்கால் அம்மையார் காலத்தில் சிவன் சுடுகாட்டில் நடனமாடுபவராகக்
கருதப்பட்டார். சிவனை மயான வாசியாகக் கூறும் வழக்கம் சங்க காலத்திலும்
இல்லை, வேத ருத்திரனும் மயான வாசி அல்ல. எனவே சுடலை மாடன் இடத்தை
கறைமிடற்று அண்ணல் பிடித்துக் கொண்ட நிகழ்ச்சி நடைபெற்றது சங்க
காலத்துக்குப் பின்னும் அம்மையார் காலத்துக்கு முன்னும் உள்ள இடைக்
காலத்தில் நடைபெற்றிருக்க வேண்டும்.

சிந்து வெளியின் மஹாயோகி, தமிழ் நாட்டின் கூற்றுவன் மற்றும் வேதத்தின்
ருத்திரன் மூன்றும் கலந்த நிலையில் தான் அம்மையார் காலத்துச் சிவனைக்

devoo

unread,
Sep 22, 2010, 11:51:40 AM9/22/10
to மின்தமிழ்
>> *ஔதும்பராய* தத்னாய<<

ஔதும்பரம் - அத்தி மரம்

ந்யக்ரோத: , ஔதும்பர: , அச்வத்த: - விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் இடம்பெறும்
பெயர்கள்.
விஷ்ணுவோடு இப்பெயர் இணைவது எப்படி ?

வைணவர் திக்வந்தநம் செய்வதில்லை என்பது தவறான தகவல்


தேவ்

devoo

unread,
Sep 22, 2010, 2:48:14 PM9/22/10
to மின்தமிழ்
>>ஒரு புறம் யமன் வழிபாடு சிவன் வழிபாட்டுடன் இரண்டறக் கலந்து உயர்
வகுப்பாரிடையே பிரபலமாக,<<

எதன் ஆதாரத்தில் இந்த முடிவு ?

எந்தப் புள்ளியில் இரண்டும் கலந்தன?

யம தர்மராஜா அறநெறி தவறாதவர்; ரிஷி குமாரனுக்குப் பரம்பொருள் அறிவைப்
புகட்டியவர்.

அவன் வாயிலில் காத்திருக்க நேர்ந்ததற்குக் கழுவாயாக உயர்ந்த
வரங்களை அளிக்க முனைந்தவர். புனிதையான ஸாவித்ரியிடம் மென்மையாகப்
பேசி அறங்களை போதித்தவர். ஆதவனின் மைந்தர்; பாவம் செய்யாதவருக்கு
தேவ வடிவில் காட்சி தருவார்; பாவிகளுக்கு கோர வடிவில்.

யமன் தென் திசைக்கதிபதி; ஈசானர் ஈசான்ய திசைக்கு (வடகிழக்கு) அதிபதி.
ஆகம வழிபாடாகட்டும், வைதிக வழிபாடாகட்டும் ஈசானருக்கும், யமனுக்கும்
தனித்தனியே ஸ்தானம் கொடுக்கப்படுகிறது; இன்றுவரை two in one
ஆக்கவில்லை


தேவ்


On Sep 22, 4:22 am, விக்ரமன் <ekams...@gmail.com> wrote:

விக்ரமன்

unread,
Sep 25, 2010, 8:16:36 AM9/25/10
to மின்தமிழ்
என்னுடைய வைணவ நண்பர்களிடமிருந்து பெற்ற தகவலின் அடி்படையில் அவர்கள் யம
துதி செய்தில்லை என அறிகிறேன். மேலும் விசாரித்துத் தெரிந்துகொள்கிறேன்.
அத்தி, ஆல், அரசு மூன்றும் ஒரே இனத்தைச் சேர்ந்தவை என்று உயிரியல்
தெரிவிக்கிறது. ஸம்ஸ்கிருத அகராதிகளில் இந்த வேறுபாடு
தெளிவுபடுத்தப்படவில்லை..

விக்ரமன்

unread,
Sep 25, 2010, 8:20:36 AM9/25/10
to மின்தமிழ்
வேதத்திலும் புராணஙகளிலும் உள்ள யமன் தமிழ் மண்ணுக்கு வருமுன் இங்கு
நிலவிய சுடலைமாடன் வழிபாடு பற்றித் தான் இங்கு குறிப்பிடப்படுகிறது.

devoo

unread,
Sep 25, 2010, 9:06:44 AM9/25/10
to மின்தமிழ்
>>> அத்தி, ஆல், அரசு மூன்றும் ............ ஸம்ஸ்கிருத அகராதிகளில் இந்த வேறுபாடு தெளிவு படுத்தப் படவில்லை.. <<<

எந்த அகராதிகளிலெல்லாம் தேடினீர்கள் ?

யமாய தர்மராஜாய ம்ருத்யவே ச அந்தகாய ச

வைவஸ்வதாய காலாய ஸர்வபூத க்ஷயாய ச |

ஔதும்பராய தத்னாய நீலாய பரமேஷ்டினே

வ்ருகோதராய சித்ராய சித்ரகுப்தாய வை நம: ||


இந்தப் பிழையற்ற ச்லோகத்தைக் கொடுத்தது நீங்கள் தானே ?
எழுத்துப்பிழை சிறிதும் இல்லாமல் இதைத் தட்டெழுதியதற்கு உங்களுக்குப்
பாராட்டுக்கள்.

ரித(கு)ம் ஸத்யம் பரம் ப்ரம்ஹ புருஷம் க்ருஷ்ண பிங்கலம் |
ஊர்த்வரேதம் விரூபாக்ஷம் விச்வரூபாய வை நமோ நம:||

இந்த ச்லோகம் யாரைக் குறித்து ? பொருள் என்ன ? எப்பொழுது
சொல்லப்படுகிறது ? இது பற்றியும் உங்கள் நண்பர்கள் என்ன சொல்கின்றனர்
என்று தெரிவியுங்கள்.

கண்ணன் -.> கருமை-> காலிந்தி (யமுனை) -> யமன் என்னும் ரீதியில் உங்கள்
ஆராய்ச்சிகளை invade செய்து பார்க்கலாம்.

விஷ்ணு -> ஔதும்பரம் -> யமன் : இதுவும் பொருந்துகிறது. விஷ்ணுவின்
பதுமைகள் அத்தி மரத்தால் செய்யப்படுவதுண்டு. (அத்தி வரதர்)
யமனும், யமுனையும் கதிரவனின் மக்கள்; ‘காலோஸ்மி’ - காலத்தை விபூதியாகக்
கூறுவான் கண்ணன்.
யமுனைக்குக் கண்ணன் வரலாற்றில் தொடர்புண்டு. நிறமும் பொருத்தம்


யமனை சிவபெருமானோடு பொருத்துவதைக் காட்டிலும் இது இன்னும் பொருத்தமாக
இருக்கும்


தேவ்

> ...
>
> read more »

விக்ரமன்

unread,
Sep 26, 2010, 2:35:49 AM9/26/10
to மின்தமிழ்
திரு தேவ்,
தங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி.
Monier Williams அகராதியில் उदुम्बर என்பதற்கு Ficus glomerata
என்றும் औदुम्बर என்பதற்கு coming from ficus religiosa என்றும்
கொடுக்கப்பட்டிருக்கிறது. முன்னது அத்தி. பின்னது அரசு. இவை இரண்டிற்கும்
உள்ள வேறுபாட்டை மோனியர் வில்லியம்ஸ் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.

ஆல் என்பது ficus indica or ficus benghalensis எனப்படுவது. இதற்கும்
உதும்பரவிற்கும் உள்ள தொடர்பு பற்றி எங்கு படித்தேன் என்பது நினைவில்லை.
எனவே உதும்பர என்பது ஆல மரத்தைக் குறிக்கும் என்ற சொற்றொடரை நீக்கிக்


கொள்கிறேன்.

என்னுடைய கட்டுரையின் அடிப்படைக் கருதுகோள் சுடலை மாடன் வழிபாடு அருகி
அந்த இடத்தை சிவன் வழிபாடு பிடித்துக் கொண்டது. தொல் பழம் தெய்வங்களில்
ஒன்றான சுடலை மாடன் சிவனுக்கு வாகனமாகும் அளவுக்கு ஆகிவிட்டது. சிவன்
காலனின் உயிர் பறித்தார் என்பது என்பது முக்கிய வழிபடு தெய்வமாக ஆகி,
காலனின் இடத்தைப் பிடித்துக கொண்டு செல்வாக்கு இழக்கச் செய்த நிகழ்வைக்
கூறுவதாக இருக்கலாம். சங்ககாலத்தில் இல்லாத சிவன் வழிபாடு சங்க காலத்தில்
தலை தூக்கிப் பின்னர் பெரிதாக வளர்ந்ததில், இத்தகைய நிகழ்ச்சி
ஏற்பட்டிருக்கலாம் என்பது தான்..

திருமால் வழிபாடு தொல்காப்பியத்தில் கூறப்பட்டிருக்கிறது. அது பற்றி நான்
இக்கட்டுரையில் எடுத்துக் கொள்ளவில்லை. நீங்கள் குறிப்பிட்ட கீழ்க்கண்ட
சுலோகத்துக்கும் என் கட்டுரைக்கும் தொடர்பில்லை.


ரித(கு)ம் ஸத்யம் பரம் ப்ரம்ஹ புருஷம் க்ருஷ்ண பிங்கலம் |
ஊர்த்வரேதம் விரூபாக்ஷம் விச்வரூபாய வை நமோ நம:||

வேறு தவறுகள் இருந்தால் சுட்டிக் காட்ட வேண்டுகிறேன்.

விக்ரமன்

venkatachalam Dotthathri

unread,
Sep 26, 2010, 3:19:04 AM9/26/10
to mint...@googlegroups.com


ஓம்
அத்தி, இத்தி,ஆல், அரசு, மா, பலா, வாழை ஆகியவை பால் மரங்கள் என்றும், எரி நட்சத்திரங்கள் வானில் இருந்து வீழும்நிலையில் பார்க்க நேர்ந்தவர்கள் இந்த பால் மரங்கள் ஐந்தின் பெயரை உச்சரிப்பது ஒரு பழக்கம் என்றும், அதனால் தோஷ நிவர்த்தி என்றும் கூறுவதுண்டு.
ஓம்.
வெ.சுப்பிரமணியன்

Dhivakar

unread,
Sep 26, 2010, 3:41:30 AM9/26/10
to mint...@googlegroups.com
>>...சங்ககாலத்தில் இல்லாத சிவன் வழிபாடு சங்க காலத்தில்

தலை தூக்கிப் பின்னர் பெரிதாக வளர்ந்ததில், இத்தகைய நிகழ்ச்சி
ஏற்பட்டிருக்கலாம் என்பது தான்<<<

சங்கப்பாடல்கள் என்பது சரித்திர நிகழ்ச்சியாக எடுத்துக் கொள்ள ஏதுவாகுமா என்பதை யார் தீர்மானிப்பது. ?

சங்கப்பாடல்களில் ஒரு தெய்வம் குறிப்பிடப்படவில்லை என்பதால் அந்த தெய்வம் அப்போது இல்லை என்பதை எப்படி தீர்மானிக்கமுடியும்.?

சங்கப்பாடல்கள் அனைத்துமே ஒன்றுவிடாமல் நாம் இதுவரை காப்பாற்றி பத்திரமாக வைத்திருக்கிறோமா என்றால் அதற்கு பதில் திருப்திகரமாக வெளிப்படுமா? 

தமிழ்தாத்தா மட்டும் இல்லையென்றால், அவர் மட்டும் சங்கப்பாடல்களை தேடிக் கண்டிராவிட்டால், ஆதிதமிழனின் வாழ்க்கை காட்டுமிராண்டி என்ற கருத்தை ஏற்றுக் கொள்ளமுடியுமா..?

அவர் தந்த சங்கத் தமிழில் நல்ல காலம், சூரியனும் சந்திரனும் மலையும் உள்ளது.. இவை மட்டும் குறிப்பிடப்படவில்லை என்றால் நடுவில் வந்தவர்களாக இவைகள் சித்தரிக்கப்படுமா?


2010/9/26 விக்ரமன் <ekam...@gmail.com>
திரு தேவ்,
 தங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி.
Monier Williams அகராதியில் उदुम्बर   என்பதற்கு Ficus glomerata
என்றும் औदुम्बर என்பதற்கு  coming from ficus religiosa  என்றும்
கொடுக்கப்பட்டிருக்கிறது. முன்னது அத்தி. பின்னது அரசு. இவை இரண்டிற்கும்
உள்ள வேறுபாட்டை மோனியர் வில்லியம்ஸ் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.

ஆல் என்பது ficus indica or ficus benghalensis  எனப்படுவது. இதற்கும்
உதும்பரவிற்கும் உள்ள தொடர்பு பற்றி எங்கு படித்தேன் என்பது நினைவில்லை.
எனவே உதும்பர என்பது ஆல மரத்தைக் குறிக்கும் என்ற சொற்றொடரை நீக்கிக்
கொள்கிறேன்.

என்னுடைய கட்டுரையின் அடிப்படைக் கருதுகோள் சுடலை மாடன் வழிபாடு அருகி
அந்த இடத்தை சிவன் வழிபாடு பிடித்துக் கொண்டது. தொல் பழம் தெய்வங்களில்
ஒன்றான சுடலை மாடன் சிவனுக்கு வாகனமாகும் அளவுக்கு ஆகிவிட்டது. சிவன்
காலனின் உயிர் பறித்தார் என்பது என்பது முக்கிய வழிபடு தெய்வமாக ஆகி,
காலனின் இடத்தைப் பிடித்துக கொண்டு செல்வாக்கு இழக்கச் செய்த நிகழ்வைக்
கூறுவதாக இருக்கலாம். ..
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com

devoo

unread,
Sep 26, 2010, 5:39:53 AM9/26/10
to மின்தமிழ்
>>>என்னுடைய கட்டுரையின் அடிப்படைக் கருதுகோள் சுடலை மாடன் வழிபாடு அருகி அந்த இடத்தை சிவன் வழிபாடு பிடித்துக் கொண்டது. தொல் பழம் தெய்வங்களில் ஒன்றான சுடலை மாடன் சிவனுக்கு வாகனமாகும் அளவுக்கு ஆகிவிட்டது.<<<


தாமாகவே முன் முடிவு செய்துகொண்டு அதற்கேற்றாற்போல் தரவுகளை அங்கொன்றும்
இங்கொன்றுமாக உருவித் தம் கருதுகோளுக்கு ஏற்பத் தொகுத்து வெளியிடும்
போக்கே உங்கள் பதிவிலிருந்து புலனாகிறது. நீங்கள் சொன்னது யம வந்தநம்;
நான் குறித்தது அதே அந்திதொழுகையில் இடம்பெறும் விரூபாக்ஷனாகிய ஈசனைப்
போற்றும் ச்லோகம் . ஒன்று, மற்றதாக மாறியது என்னும் வாதம் செல்லாது.


>>> தொல் பழம் தெய்வங்களில் ஒன்றான சுடலை மாடன் .....<<<

எந்த ஆதாரத்தில் சுடலை மாடனுக்கு இத்தகைய நீண்ட அடைமொழி ? சங்க
இலக்கியத்தில் சுடலை மாடன் குறிப்பு உள்ளதா ?

சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

பொதுவாகச் சிறு தெய்வ வழிபாடு பல வடிவங்களில் எக்காலத்திலும் எங்கும்
இருந்து வருவது. கண்ணன் நிலவுலகில் உலவிய காலத்திலும் த்வாரகையில்
சிறுதெய்வ வழிபாடு வழக்கில் இருந்ததை பாகவதம் மூலம் அறிகிறோம்.
ஸ்யமந்தக மணியைத் தேடிச்சென்ற கண்ணன் வெகுகாலம் திரும்பி வராததால்
சிறு தெய்வங்களுக்குப் படையல் இட்டு வணங்கினராம். மஹான் துகாராம்
சிறந்த க்ருஷ்ண பக்தராயிருக்க அவர்தம் மனைவியார் சிறு தெய்வ வழிபாட்டில்
நாட்டம் கொண்டிருந்தார் என்று படித்துள்ளேன். ’மங்கலாயி’ என்பது அந்தப்
பெண் தெய்வத்தின் பெயர்.

பராங்குச நாயகியின் பகவத் விரஹத்தை ஒரு நோய் என்று தவறாகப்
புரிந்துகொண்டு தாய்மார்கள் சிறுதெய்வ வழிபாடு செய்தனர் என்று
நம்மாழ்வாரின் பாசுரத்தால் அறிகிறோம். கண்ணனெனும் கருந்தெய்வம் காட்சி
பழகிக் கிடந்த நாச்சியாருக்கும் இதே மருத்துவத்தை நடைமுறைப்
படுத்தினர் போலும் !

இன்றளவும் தென்மாவட்டங்களில் சுடலைமாடன் வழிபாடு இருந்து வருகிறது. அச்சு
வெல்லத்தின் பெரிதாக்கப்பட்ட வடிவம். ஆலமரத்தின் தேவையில்லாமல் வெட்ட
வெளியில் நிற்கும் மாடன் நிறைய. தென்காசியில் கண்ணாடித் துண்டுகள்
பதித்துக் கலையழகோடு கூடிய ஆலயம் ஒன்றையும் அமைத்துள்ளனர். கோடையில்
நடைபெறும் ’மாடன் கொடை’ வட்டாரத்தில் புகழ் பெற்றது. நகரின் மையத்தில்
குடிகொண்டு விளங்கும் விச்வநாதருக்கு வெள்விடை ஊர்தி


தேவ்

> ...
>
> read more »

Hari Krishnan

unread,
Sep 26, 2010, 6:09:48 AM9/26/10
to mint...@googlegroups.com


2010/9/26 Dhivakar <venkdh...@gmail.com>

>>...சங்ககாலத்தில் இல்லாத சிவன் வழிபாடு சங்க காலத்தில்

தலை தூக்கிப் பின்னர் பெரிதாக வளர்ந்ததில், இத்தகைய நிகழ்ச்சி
ஏற்பட்டிருக்கலாம் என்பது தான்<<<

சங்கப்பாடல்கள் என்பது சரித்திர நிகழ்ச்சியாக எடுத்துக் கொள்ள ஏதுவாகுமா என்பதை யார் தீர்மானிப்பது. ?

சங்கப்பாடல்களில் ஒரு தெய்வம் குறிப்பிடப்படவில்லை என்பதால் அந்த தெய்வம் அப்போது இல்லை என்பதை எப்படி தீர்மானிக்கமுடியும்.?

என்ன திவாகர் இப்படிக் கேக்கறீங்க!  

கண்ணி கார்நறுங் கொன்றை காமர்
வண்ண மார்பிற் றாருங் கொன்றை
ஊர்தி வால்வெள்ளேறே சிறந்த
சீர்கெழு கொடியும் அவ்வேறு என்ப;
கறைமிடறு அணியலும் அணிந்தன்று; அக்கறை
மறைநவில் அந்தணர் நுவலவும் படுமே;
பெண்ணுரு ஒரு திறன் ஆகின்று; அவ்வுருத்
தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்;
பிறை நுதல் வண்ணம் ஆகின்று; அப்பிறை
பதினெண் கணனும் ஏத்தவும் படுமே;
எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய,
நீரறவு அறியாக் கரகத்துத்,
தாழ்சடைப் பொலிந்த அருந்தவத் தோற்கே.

இது புறநானூற்றின் முதற்பாட்டு.  சிவன் என்ற பெயர் சொல்லப்படவில்லைதான்.  காமர் என்று சொல்லப்படுகிறார்தான்.  ஆனால், தலைமாலையும் மார்பிலணியும் மாலையும் கொன்றையால் அமைந்திருப்பவன்; வெள்ளை எருதைக் கொடியாக உடையவன், வெள்ளை எருதை ஊர்தியாகக் கொண்டவன்; தொண்டையில் கறையை உடையவன்; ஆனால், அது அவனிடத்திலிருக்கின்ற காரணத்தாலேயே, கறையே என்றாலும் வணங்கப்படுகிறது.  பெண் உருவத்தைத் தன்னுள் அடக்கியவன்........

இதெல்லாம் யாரைக் குறிக்கும்?  

புறநானூறு சங்கப் பாடலா இலலை எங்கப் பாடலா?  இந்த முதற் பாடல் யார் செய்த சதியால் புறநானூற்றுக்குள் புகுந்தது.....

கண்ண மூடிட்டு, திருக்குறளில் கடவுள் இல்லைனு சொல்றவங்க நிறைய பேர் இருக்காங்க.  கடவுள் என்ற சொல் திருக்குறளில் ஆளப்படவில்லை என்பதை உல்ட்டா போட்டு, திருக்குறளில் கடவுள் இல்லை என்று சொல்வது வழக்கமான ஒன்றுதான்.  திருக்குறளில் தாய் இருக்கிறாள்; தந்தை இருக்கிறான் (சான்றோன் எனக்கேட்ட தாய், தந்தை மகற்காற்றும் நன்றி....) அன்னை இருக்கிறாள் (ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல் நீராக நீளும்இந் நோய் என்று ஒரே ஒரு குறளில் அன்னை இருக்கிறாள்).  ஆனா, அப்பா இல்லையே!  ஆகவே வள்ளுவருக்கு அப்பா மேல நம்பிக்கை இல்லை.  அந்த தியரி சரின்னா, இந்தத் தியரியும் சரிதான்.

அப்பா இல்லாட்டி என்ன, தந்தை இருக்கிறாரே என்றால், சிவன் இல்லாட்டி என்ன, காமர் இருக்கிறாரேன்னு பதில் சொல்ல வேண்டியதுதான். :)



--
அன்புடன்,
ஹரிகி.

Raja sankar

unread,
Sep 27, 2010, 12:26:12 AM9/27/10
to mint...@googlegroups.com
ஹரிகி

நீங்கள் சமஸ்கிருதமயமாக்கல் என்று மெத்த படித்த ஸ்காலர்களிடம் அல்லற் படுகிறதே அதைப்பற்றி எங்கேனும் எழுதியிருக்கிறீர்களா? இல்லாவிட்டால் நீங்கள் எழுதுமாறு கேட்கிறேன்.

என்னமோ சமஸ்கிருதம் வருதற்கு முன் தமிழ்நாட்டில் எல்லாரும் இலைதழையை சுற்றிக்கொண்டு இருந்தது போலவும் அவர்கள் வந்தவுடன் அவர்கள் சொல்படி கேட்டு முன்னர் கும்பிட்டு வந்த தெய்வங்களை விட்டுவிட்டது போலவும் பேசப்படுகிறது. 

இதன் இன்னொரு வடிவம் தான் சங்க காலத்தில் சிவன் இல்லை, முருகன் இல்லை, சக்தி வழிபாடு இல்லை எனும் தியரிகளும். 

ராஜசங்கர்

2010/9/26 Hari Krishnan <hari.har...@gmail.com>
--

செல்வன்

unread,
Sep 27, 2010, 12:35:49 AM9/27/10
to mint...@googlegroups.com

சிவமணம் கமழும் சங்கப்பாடல்கள்:

By முனைவர் கோ.ந.முத்துக்குமாரசுவாமி

http://www.thinnai.com/?module=displaystory&story_id=60804107&format=print

எட்டுத்தொகை நூல்களின் கடவுள் வாழ்த்துப் பாடல்கள் அனைத்தும் சிவபரத்துவத்தை விளக்குவனவே. அதனை விளக்கத்தொடங்கினால் அதுவே ஒரு தனிக்கட்டுரையாகும்.

ஐங்குறுநூற்றின் கடவுள் வாழ்த்துப்பாடல், சங்காரகாரணனாகிய சிவபெருமானே மீண்டும் புனருற்பவம் செய்யும் முழுமுதற்கடவுள் என்ற உண்மையைச் சாற்றுகின்றது. தர்க்கத்தின் அடிப்படையில் சங்கார காரணனே முதல் என்ற உண்மையை முதன் முதலில் நிலைநாட்டியவர் சிவஞானபோத ஆசிரியர் மெய்கண்டார் ஆவர். ஆனால் இவருடைய திருவவதாரத்திற்குப் பலநூற்றாண்டுகளுக்கு முன்பே ஐங்குறுநூறு,

“நீல மேனி வாலிழைபாகத்

தொருவ னிருதா ணிழற்கீழ்

மூவகை யுலகு முகிழ்த்தன முறையே”

என்று எடுத்தியம்பிற்று. இவ்வாறு பாரதம் பாடிய பெருந்தேவனார் கொள்கையை மேற்கொண்டதாலல்லவோ, மெய்கண்டதேவர், சிவஞானபோதம் முதற் சூத்திரத்தில்,

“அவனவ ளதுவெனு மவைமூ வினைமையின்

தோற்றிய திதியே யொடுங்கிமலத் துளதா

மந்த மாதி யென்மனார் புலவர்.” என்றருளிச் செய்தார்.

கலித்தொகைக் கடவுள் வாழ்த்துப்பாடல், சிவபராக்கிரமத்தைக் கூறும் பழமரபுக் கதைகள் பலவற்றை எடுத்து இயம்புகின்றது. இப்பாடல் கூறும் ‘ஆறறி அந்தணருக்கு அருமறைபல பகர்ந்தது, தேறுநீர் சடைக் கரந்தது, திரிபுரம் தீ மடுத்தது, மணிமிடற் றந்தணனானது, மதுகையால் நீறணிந்தது, கொலையுழுவைத் தோல் அசைத்தது, பிரமன் தலையை அங்கையிற் கொண்டது’ போன்ற சிவபரத்துவத்தை விளக்கும் பழமரபுக்கதைகளை திருமுறையாசிரியர்கள் தம் திருப்பதிகங்களில் எடுத்தாண்டனர். அவற்றைப் பிற்காலத்தில் சைவ இலக்கியங்கள் காப்பியச் சுவையுடன் விரித்துக் கூறின.

புறநானூற்றுக் கடவுள் வாழ்த்துப்பாடல், ஏனைத்தேவரை விலக்கி சிவன் ஒருவனே வழிபடத்தக்கவன் என்று உணர்த்துகின்றது. அத்தகைய உறுதியுடையோர் சங்ககாலத்தில் இருந்தமையால் அல்லவா, காரிகிழார் என்னும் புலவர் பெருமான், ‘பணியிய ரத்தைநின் குடையே முனிவர், முக்கட் செல்வர் நகர்வலம் வரற்கே” (புறம்6:17-18) எனத் தெருட்டினார்.

அகநானூறின் கடவுள் வாழ்த்துப் பாடல், சிவபரம்பொருளின் தடத்த வடிவத்தை எடுத்துக் காட்டியதுடன், ‘யாழ்கெழு மணிமிடற் றந்தணன், தாவில் தாணிழல் தவிர்ந்தன்றா லுலகே” என்றும் உணர்த்திற்று. உலகு என்றது ஆன்மாக்களுக்காக இறைவன் படைத்த எல்லா உலகங்களையுமாகும். இதனால் சங்காரகாரணனான முதல்வனே படைப்புத் தொழிலுக்கும் முதல்வன் என்பதனோடு, அவனே , `தாள்நிழல்` தரும் காத்தல் தொழிலுக்கும் முதல்வன் என்பதை இப்பாடல் உணர்த்தியது. ‘கார்விரி கொன்றை”எனத் தொடங்கும் இந்த அகநானூறு கடவுள் வாழ்த்துப் பாடலை மேற்கோள்காட்டி உரைவரைந்த இளம்பூரணர்,”-- --- மணிமிடற்று அந்தணனது சிவானுபூதியிற் பேருலகம் தங்கிற்று” எனப் பொருள் உரைத்தார்.(தொல் பொருளியல் 1.) சிவானுபூதி எனும் இளம்பூரணரது சொல்லாட்சியே பின்னர், “தற்போதம் முனையாதவாறு சிவஞானத்துள் அடங்கிச் சிவானுபவம் சுவானுபூதியாம்படி ஞானநிலையில் உறைத்து நிற்றல்” எனச் சிவஞானமுனிவரின் உரையிலும் இடம்பெற்றது.

பதிற்றுப்பத்தின் கடவுள் வாழ்த்துப் பாடலெனக் கருதத்தக்க ஒருபாடலை நச்சினார்க்கினியர், தொல்காப்பியம் –பொருளதிகாரம், புறத்திணை 26 உரையில் மேற்கோளாகக் காட்டியுள்ளார். “சூலம் பிடித்த சுடர்ப்படைக் , காலக் கடவுட் குயர்கமா வலனே”, எனக் கூறி வழுத்துகின்றது. இப்பாடலில் சிவபரம்பொருளின் குணங்குறி கடந்த, காலாதீத, விசுவாதீத நிலை உணர்த்தப்படுகின்றது.

குறுந்தொகைக் கடவுள் வாழ்த்துப்பாடல், குமாரபரமேசுவரனின் கோலத்தைக் கூறி அச் ”சேவலங் கொடியோன் காப்ப, ஏம வைக லெய்தின்றா லுலகே” எனத் துதிக்கின்றது.

இவ்வாறே பரிபாடலிலும் சிவபரத்துவம் பேசப்படுகின்றது என அறிக.

சங்கநூல்களின் பாடுபொருள் அகப்பொருளும் புறப்பொருளுமாகும். உலகியல் வழக்கும் நாடகவழக்கும் கூட்டிப் புலவர்களால் நாட்டிக் கொள்ளப்பட்ட புலனெறி வழக்கைப் பாடும்போதும் போதும் சங்கபுலவர் “அரன் சேவடிக்கே பொருளமைத்து இன்பக் கவிபாடினர்” என்பதற்குத் தக்க சான்றாக அமைந்தது, நெய்தற்கலியில், “அயந்திகழ் நறுங்கொன்றை யலங்கலந் தெரியலான்” எனத்தொடங்கும் 33ஆவது பாடல்.

அந்தப் பாடலில் பொருள்வயிற் பிரிந்த தலைவனை நினைந்து ஆற்றாத தலைவியை ஆற்றுவித்த தோழி, சிவபரத்துவத்தின் குறியீடுகளான கொன்றை, ‘பிறங்குநீர்க் கரந்தசடை, எலும்பணி, புதுத்திங்கட் கண்ணி, பொற்பூணாம் பாம்பணி, விடையூர்தி,(மார்கழித்) திருவாதிரை, அம்மாதத்திற் பூக்கும் சிவனுக்குகந்த செண்பகமலர் என்பனவற்றைக் கையாண்டுள்ள சொற்றிறத்தில் கமழும் சிவமணத்தைச் சிவநெறியாளர் நுகரா தொழிவாரோ?

சங்க இலக்கியமும் பத்தி உணர்வும்:

சங்க இலக்கியங்களின் பாடுபொருளாகப் புலவர்களால் அமைத்துக் கொண்ட புலனெறிவழக்காக அமைந்தன அகப்பொருளும் புறப்பொருளும். பத்தியுணர்வு புறப்பொருளில் அடக்கப்பட்டது.

பத்தியாவது யாது? அஃதொரு மனநிலை. அன்பின் முதிர்ந்த நிலை. “அன்பு, பத்தி, காதல் என்றாற் போல்வன இச்சை மீதூர்தற் பொருளன”(சிவஞானமுனிவர்). அகப்பொருள் இலக்கியங்களில் காணப்படும் அன்புணர்ச்சியே பத்தியுணர்வாகத் திருமுறை இலக்கியங்களில் உயர்நிலை எய்தியுள்ளது;. அல்லது வளர்ந்தது எனலாம். தொல்காப்பியம் கூறும் அகப்பொருள் இலக்கணத்தை அறிந்தாலன்றித் திருமுறைகளில் உள்ள அகப்பொருட் பாடல்களின் பொருளை முழுமையாக அனுபவிக்க இயலாது. பாவை பாடிய வாயால் மணிவாசகப் பெருமான் அருளிய திருக்கோவையாரைச் சங்க அகப்பொருட்பாடல்களின் வழி நின்றே சுவைத்தல் இயலும்.

“தொல்காப்பியத்திலும் சங்கச் செய்யுட்களிலும் தனித்தனித்துறைகளாகக் குறிக்கப்பட்டுள்ள அகத்துணைத் துறைகளையெல்லாம் தெய்வம் கூட்ட ஒருவரையொருவர் கண்ட காட்சி முதலாக இருவரும் ஒருவரையொருவர் இன்றியமையாக் கேண்மையராய் உலகத்தார் அறிய மணஞ் செய்து கொண்டு அன்பினால் ஊடியும் கூடியும் மகிழ்தல் ஈறாக ஒரு கோவைப்படத் தொகுத்துக், கட்டளைக்கலித்துறை யாப்பினால், கூற்றும் மாற்றமும் அமைய நாடகக் காப்பியம் போன்று பொருட்டொடர் நிலைச் செய்யுள் அகத்திணைக் கோவையாகச் செய்யப்பட்டது திருக்கோவையார் எனும் இப்பிரபந்தமாகும்.” என மூதறிஞர் க.வெள்ளைவாரணனார் கூற்று சங்கநூற் பயிற்சி , திருக்கோவையாரைப் பயிலுவதற்கு எத்துணை உதவும் என்பதைக் காட்டும்.

`கல்லாடம்’ கற்றவனோடு சொல்லாடாதே என்று போற்றப்படும் கல்லாடம் என்னும் சைவ இலக்கியமும் அகப்பொருள் மரபினையொட்டிச் சங்க அகப்பொருட்பாடல்களைப்போல அகவற்பா யாப்பினில் அமைந்திருத்தலைத் தமிழ் நாவலர் அறிவர்.

சங்கப்பாடல்களின் மீது சிவநெறியினருக்கு உள்ள ஈடுபாட்டைக் காட்டத் திருக்கோவையாரில் “பாங்கன் வினாதல்” எனும் துறையில் உள்ள ஒருபாட்டே அமையும்.

காதல் வயப்பட்ட தலைமகன் உடல் இளைத்துருகி யிருப்பதைக் கண்ட பாங்கன் அவனை நோக்கி.” சிற்றம்பலத்தும் என் சிந்தையுள்ளும் உறைவான் உயர்மதிற் கூடலின் ஆய்ந்த ஒண்தீந்தமிழின் துறைவாய் நுழைந்தனையோ” என வினவுகின்றான். இந்த வினாவில் இறைவனால் ஆயத்தக்க கருத்தாழமும் பொருட்பரப்பும் உடையது சங்க இலக்கியம் என்ற கருத்தினை உடையவர் மணிவாசகர் என்ற சைவர் என்பதில் ஏதேனும் ஐயமுண்டோ? இத்தகைய சங்க இலக்கியத்தைச் சைவர் புறக்கணித்தனர் என்பது பொருளற்ற வெறுங் கூற்றே.

திருஞானசம்பந்தப் பிள்ளையார் முதலிய திருமுறையாசிரியர்கள் பலரும் சங்கத்தையும் சங்க இலக்கியங்களையும் அறிந்தேயிருந்தனர் என்பதற்கு அவர்தம் அருளிச் செயல்களிலிருந்து சான்றுகள் கிடைக்கின்றன.

ஆளுடையபிள்ளையார் தமிழ்ச்சங்கத்தை, “அங்கழகச் சுதைமாடக் கூடலாலவாய்”(1-7-2), என்றும் “அற்றன்றி அந்தண் மதுரைத் தொகை யாக்கினானும்”(திருப்பாசுரம்) (தொகை- சங்கம்) என்றும் அப்பரடிகள், “நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கமேறி நற்கனகக் கிழிதருமிக் கருளினோன்காண்” என்றும் குறிப்பிடுதல் அறியத்தக்கது. கழகம், மதுரைத்தொகை என்பனசங்கத்தைக் குறிக்கும் சொற்களாம்.

சங்க இலக்கியத் தொடர்களையும் கருத்துக்களையும் திருமுறையாசிரியர்கள் அப்படியே எடுத்தாளுவது அறியத்தக்கது.

பெரும்பாணாற்றுப்படை, மறையோதும் அந்தணர் வாழும் ஊரில், அவர்கள் ஓதும் மறையைக் கேட்டுப் பழகிய வளைந்த வாயையுடைய கிளிகள், அவ்வேதங்களை ஓசைகெடாது மிழற்றுகின்றன என்று கூறும்.

“வளைவாய்க் கிள்ளை மறைவிளி பயிற்றும்

மறைகாப்பாளர் உறைபதி” (300-1)

எனும் பெரும்பாணாற்றுப்படைத் தொடர்,

“பாரிசையும் பண்டிதர்கள் பன்னாளும்

பயின்றோதும் ஓசை கேட்டு

வேரி மலிபொழிற் கிள்ளை வேதங்கள்

பொருட் சொல்லும் மிழலையாமே” (1-132-1)

எனப் பிள்ளையாரின் வாக்கில் இடம்பெறுதல் காண்க.

சிவபெருமானே உலகங்களைப் படைத்த முதற்கடவுள் என்றும் அம்முதல்வனே எல்லாத் தெய்வங்களுக்கும் தலைவன் என மதுரைக் காஞ்சி பாடுகின்றது.

“நீரும் நிலனும் தீயும் வளியும்

மாக விசும்பொடு ஐந்துடன் இயற்றிய

மழுவாள் நெடியோன் தலைவனாக” (மதுரைக் காஞ்சி453-455). இக்கருத்துத் திருமுறைகளில் பரக்கக் காணலாம்.

முழுமுதற்கடவுள் ஒருவரே, அவர் ஒருவரே பல்வேறு உருவில் வணங்கப் பெறுகின்றார் என்றகருத்தில்,

“வேறு பல்லுருவில் கடவுட் பேணி” என்றது குறிஞ்சிப் பாட்டு.

இதனையே, திருவாதவூரடிகள்,

“வேறுவே றுருவும் வேறுவே றியற்கையும்

நூறுநூ றாயிரம் இயல்பின தாகி,

ஏறுடை யீச னிப்புவனியை உய்யக்

கூறுடை மங்கையும் தானும்வந் தருளி” (கீர்த்தித் திருவகவல்-24-26) என்றும்,

காழிப்பிள்ளையார்

“நானாவித உருவாய்நமை யாள்வான்”(1-9-5) என்றும் ஓதினர்.

“வான்பொய்ப்பினும் தான்பொய்யா மலைத்தலைய கடற்காவிரி” என்னும் கடியலூர் உருத்திரங் கண்ணனாரின் வாக்கை, ஆளுடையபிள்ளையார்,

“விலங்கலமர் புயன்மறந்து மீன்சனிபுக் கூன்சலிக்குங் காலந்தானும்

கலங்கலிலா மனப்பெருவண் கையுடைய மெய்யவர் வாழ்கழுமலமே”(1-129-3)

என விரித்தோதினார்.

சங்க இலக்கியங்களில், இரவில் வந்த விருந்தினை “எல்லி வந்த நல்லிசை விருந்து”(நற்றிணை 42), தவிர்த்தலாகாதென்று கூறப்படுகின்றது. இரவில் வந்த விருந்தினைத் தலைமகள் உபசரிக்கும் திறனை அவள் வாழும் ஊருக்கேற்றி, நற்றிணை 142ஆம்பாடல்,

“அல்லி லாயினும் விருந்து வரினுவக்கும்

முல்லை சான்ற கற்பின்

மெல்லியற் குறுமகள் உறைவினூரே”

எனப்பாடுகின்றது.

இக்கருத்தினை ஏற்று வழிமொழிந்து காழிப்பிள்ளையாரும்,

“மஞ்சாரு மாட மனைதோறு மைய முளதென்று வைகி வரினும்

செஞ்சாலி நெல்லின் வளர்சோ றளிக்கொள் திருமுல்லை வாயி லிதுவே”

எனப் பாடினார். இதனையே தெய்வச் சேக்கிழார், “மாரிக் காலத் திரவில் வைகி” என இளையான்குடி மாற நாயனார் புராணத்தில் விரித்துப் பாடினார்.

பதினொன்றாம் திருமுறையில் அகத்துறைப் பாடல்கள் மல்கி உள்ளன. அவற்றின் சிறப்பைச் சங்கப்பாடல்களுடன் ஒப்பு நோக்கினாலன்றி முழுதும் சுவைத்தலரிது.

தலைவன் பரத்தையரில்லில் இருக்கின்றான். தலைவிக்கு அவன் “ஏதிலாளன்” என்று உற்றார் அலர் பேசுகின்றனர். `அவன் பரத்தையரில்லில் இருப்பினும் அவன் என்கணவனே என்பது இவ்வூர் அறியும். அதை யொன்றும் மாற்றிவிட முடியாது. அதுபோதும் எனக்கு` எனத் தலைவி பேசுகின்றாள். தலைவியின் இம் மன நிலையைக் கூறும் அப்பாடல்,

“ஏதிலாளனும் என்ப---- ----

---- ---- --- தெண்கடல்

கண்டல் வேலிய வூர் `அவன்

பெண்டு`என அறிந்தன்று; பெயர்த்தலோ அரிதே” (நற்றிணை 74)

சேரமான் பெருமாள் தலைவியின் இம்மனநிலையை முழுதும் வாங்கித் தாமரைக் குளத்தின் மேல் வைத்துப் பாடுகின்றார். அல்லி குவளை ஆம்பல் எனப் பல பூக்கள் குளத்தில் மலர்ந்திருப்பினும், ஒரேயொரு தாமரை மலர்ந்திருக்கும் சிறப்பான காரணத்தால் அக்குளம் தாமரைக்குளமென்றே அழைக்கப்படும். அதுபோல தலைவனுக்கு எத்துணைப் பெண்களுடன் உறவிருப்பினும் என்னுடைய கணவன் என்றே அவனை உலகம் கூறும் எனத் தலைவி கூறுகிறாள். 11ஆம் திருமுறையில் திருவாரூர் மும்மணிக் கோவையில் அமைந்துள்ள அப்பாடல்,

“திறமலிச் செந்துவர் வாயின ரெங்கையர்க்கே

மறமலி வேலோ னருளுக வார்சடையான் கடவூர்த்

துறைமலி யாம்பல் பல்லாயிரத்துத் தமியே யெழினும்

நறைமலி தாமரை தன்னதென் றேசொலும் நற்கயமே” (24)

கைக்கிளை பெருந்திணை சைவ இலக்கியங்களில் மதிப்புப் பெறல்:

சங்க இலக்கியங்கள் குறிஞ்சி முதலாகிய அகனைந்திணையே தலைமக்களுக்குரியன என்றும் ஏனைக் கைக்கிளை பெருந்திணை இழிந்தகாமமும் பொருந்தாக்காமமு மாதலின் பிறர்க்குக் குற்றேவல் செய்வார், மற்றும், பிறர் ஏவிய தொழிலைச் செய்வார் ஆகிய கீழோருக்கே உரியவென்று பேசும். அகனைந்திணையொழுக்கத்தில் தலைவனொடு தலைவிக்குப் பேச்சு நிகழ்வதேயில்லை. தலைவனே தன் காதலைத் தலைவியிடம் கூறுகிறான். தலைவி தன் அன்பினைக் கூற்றால் வெளிப்படுத்தினால் அது அகனைந்திணைக் காதலாகாது. தோழியுங்கூடத் தலைவியின் காதலை நாணநாட்டம் நடுங்க நாட்டம் முதலிய குறிப்புக்களினால்தான் அறிந்து கொள்ளுகின்றாள். தலைவி தன் காதலைப் பிறர் அறியுமாறு கூற்றாலோ குறிப்பாலோ வெளிப்படுத்தினால், சங்க இலக்கிய மரபின்படி அது புறத்திணையாய்ப் பாடாண்கைக்கிளையாகிவிடும். சங்க இலக்கியங்களில் அகனைந்திணையாக இத்தகைய பாடல்களைக் காண்டலரிது.

ஆனால் பத்தி இலக்கியங்கள், குறிப்பாகத் திருமுறைகள் உயர்மக்களுக்கு ஆகா என விலக்கப்பட்ட கைக்கிளை பெருந்திணைகளை பத்தியுணர்வின் பெருக்கினைப் புலப்படுத்தும் உத்திகளாக மாற்றிக் கொண்டன. உயர்குடி மக்களுக்கு ஆகா எனத் தொல்காப்பியமும் சங்க இலக்கியங்களும் ஒதுக்கிய இத்திணைகளுக்குத் திருமுறைகள் உயர்நிலை யளித்துத் தழுவிக்கொண்டன. இந்த வேறுபாட்டை நன்குணர்ந்தாலன்றித் திருமுறைகளில் பாடாண்கைக்கிளையாக அமைந்த துறைப் பாடல்களை முழுமையாகச் சுவைக்க வியலாது.

திருமுறைகளில் தலைவி கூற்றாக அமைந்த திருப்பதிகங்களும் திருப்பாடல்களும் பல உள்ளன. அவை தலைவனாகிய இறைவனை முன்னிலைப்படுத்தியோ அன்றி தோழியை முன்னிலைப்படுத்தியோ கூறப்பட்டன. பிச்சைத்தேவர் கோலத்தில் வந்த இறைவனிடத்தில் தலைவியின் உரையாடல்களாக அமைந்த பாடல்களெல்லாம் அகனைந்திணை விதிக்குப் புறம்பானவையே. எடுத்துக் காட்டாகச் சிலவற்றைக் காண்போம்.

“நென்னலை ஓரோடேந்திப் பிச்சைக் கென்று

வந்தார்க்கு `வந்தேன்` என்றில்லே புகேன்

அந்நிலையே நிற்கின்றார் ஐயங் கொள்ளார்

அருகே வருவார்போல் நோக்குகின்றார்”

(ஐயம்- பிச்சை)

“நிலைப்பாடே நான்கண்ட தேடீ கேளாய்

நெருநலைநற் பகலிங்கோர் அடிகள்வந்து

கலைப்பாடும் கண்மலரும் கலங்க நோக்கிக்

கலந்து பலியிடுவான் எங்கும் காணேன்

சலப்பாடே யினியொருநாள் காண்பேனாகில்

தன்னாகத்து என்னாகம் ஒடுங்கும் வண்ணம்

உலைப்பாடே படத்தழுவிப் போகவொட்டேன்

ஒற்றியூர் உறைந்திங்கே வருவானையே”

“கள்ளத்தை மனத்தகத்தே கரந்து வைத்தீர்

--- --- இசைபாடிப் பலியுங் கொள்ளீர்

கோளரவும் குளிர்மதியுங் கொடியுங் காட்டி

உள்ளத்தை நீர்கொண்டீர்”

குரவம் நாறிய குழலி னார்வலை

கொள்வ தேதொழில் ஆகிநீர்

இரவும் இம்மனை அறிதி ரேஇங்கே

நடந்து போகவும்வல்லிரே

பரவி நாடொறும் பாடு வார்வினை

பற்ற றுக்கும்பைஞ் ஞீலியீர்

அரவம் ஆட்டவும் வல்லி ரோசொலும்

ஆர ணீய விடங்கரே.

தலைவி தலைவனிடம் உரையாடுவதாக அமைந்த இத்தகைய திருமுறைப்பாடல்களே பிற்காலத்தில் துறைமங்கலம் சிவப்பிரகாசரின் பிட்சாடன நவமணிமாலை, இராமலிங்க சுவாமிகளின் இங்கிதமாலை போன்ற நூல்களுக்கு மூலமாகும்.

இப்பாடல்களெல்லாம் நாயக நாயகி பாவத்தில் பாடப்பட்டன அல்ல. நாயகநாயகி பாவம் சிவநெறியில் இல்லை. விளக்கம்பெற அருணைவடிவேல் முதலியார் எழுதிய திருவெம்பாவை உரையின் முன்னுரை காண்க. திருமுறைகளில் மானிடப்பெண்ணொருத்தியின் கூற்றாக வரும் பாடல்கள் “கடவுள் மாட்டு மானிடப் பெண்டிர் நயந்த பக்கம்” எனப்படும். இம்மரபையுணராதார் திருவெம்பாவை, ஆண்டாளின் திருப்பாவையைப் போல நாயகநாயகி பாவனையில் பாடப்பட்டதெனப் பிழைபடக் கூறுவர்..

தொல்காப்பியம் மெய்ப்பாட்டியலுக்கு உரைவரைந்த பேராசிரியர் கையறவுரைத்தலுக்குப் பின் களவொழுக்கத்துக்கு மெய்ப்பாடு கூறப்படாதென்றார். என்னை காரணமெனின், கையறவுரைத்தல் தோன்றியதற்குப் பின்னர் நிகழ்வன கைக்கிளைக்கும் பெருந்திணைக்கும் மெய்ப்பாடாவதன்றி நற்காமத்துக்காகா என்பது கருத்து.

கையறவுரைத்தல் என்பது சொல்லா மரபினவற்றொடு கெழீஇச் செய்யா மரபிற் றொழிற்படுத் தடக்குதலை எல்லையாகவுடையது.

கையறவுரைத்தலினும் இறப்பத் தோன்றுவன மன்றத்திருந்த சான்றவரறியத் தன் தலைவன் பெயரும் பெற்றியும் கூறி அழுதும் அரற்றியும் பொழுதொடு புலம்பியும் புள்ளொடு சொல்லியும் நிகழும் மெய்ப்பாடாகலான் , அவை நடுவணைந்திணை யெனப்பட்ட நற்காமத்துக்குப் பொருந்தா எனப்பட்டது. பெருந்திணைக்குரிய இம்மெய்ப்பாடுகள் மனத்தவேயன்றி மாற்றத்தானும் பிறர்க்குப் புலனாக வெளிப்பட்டுத் தலைவிக்கு நாணழிவு செய்தலின் பெருந்திணைக் குரியவாயின.

நற்காமத்துக்காகா என விலக்கப்பட்ட இம்மெய்ப்பாடுகள் பத்திஅனுபவத்திற்கும் வெளிப்பாட்டுக்கும் நல்லுத்தியாகப் பத்தி இலக்கியங்களில் பயன்பட்டன. ஆன்மா சீவபோதம் முற்றும் நீங்கித் திருவருளால் சிவபோதமுற்றுச் சிவானந்தத்தில் திளைக்கும் நிலையை இம்மெய்ப்பாடுகள் உணர்த்தின. சிவானுபவநிலையில் மெய்ப்பாடு எப்படியிருக்குமென மணிவாசகப் பெருமான் ஒருபெண்ணின் மீது வைத்துச் செந்தமிழ்ச் சொற்களாகிய தூரிகை கொண்டு ஓருயிரோவியமாகத் தீட்டியருளினார்.

“ஓரொருகா லெம்பெருமா னென்றென்றே நம்பெருமான்

சீரொருகால் வாயோவாள் சித்தங் களிகூர

நீரொருகா லோவா நெடுந்தாரை கண்பனிப்பப்

பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தாள்பணியாள்

பேரரையற் கிங்ஙனே பித்தொருவ ராமாறும்

ஆரொருவ ரிவ்வண்ண மாட்கொள்ளும் வித்தகர்தாள்

வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி

ஏருருவப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்”

(திருவெம்பாவை 15)

அகப்பொருள் இலக்கணப்படி, காதல் வயப்பட்ட தலைவி தலைவன் இருப்பிடம் நோக்கிச் செல்வோமே என நெஞ்சோடு உசாவுவது அகனைந்திணையாகும்; தலைவனைத் தேடி இல்லிகந்து செல்வதும் அவன் காதலுறாதவழித் தன் காதலைத் தானே கூறுதலும் நாணழிவாதலின் பெருந்திணையாய்ப் புறப்படலிற் சேர்க்கப்பட்டுவிடும்.

போரவைக்கோப் பெருநற்கிள்ளி என்பான்மேற் காதல் கொண்ட பெருங்கோழிநாய்கன் மகள் நக்கண்ணையார் பாடிய பாடல்கள் மூன்று புறநானூறில் உள்ளன. (83,84, 85). “ அடியின்கட் புனைந்த செறிந்த வீரக்கழலினையும் மைபோன்ற தாடியினையும் உடைய இலையோன் பொருட்டு எனது வளையல் என்னைக் கைவிடுதலான், யான் யாயை அஞ்சுவேன்; அவன் பகையைக் கொல்லுந் தோளைத் தழுவுதற்கு அவையின்கண் உள்ளாரை நாணுவேன். என்னைப்போல மிக்க நடுக்கமுறுவதாகுக இம்மையலூரே” என்று நக்கணையார் கூறினார்.

யாயில்லையாயின் வளை கழலுவதற்கு அஞ்சவேண்டுவதில்லை;அவையில்லையாயின், முயங்குதற்கு அஞ்ச வேண்டுவதில்லை. என்று தன் ஒருதலைக் காமத்தை வெளிப்படுத்தற்கு அஞ்சிக் கூறிய இக்காதற்பாடலைப் புறத்திணையில் சேர்த்தமைக்குக் காரணம், “ பெருங்கோழிநாய்கன் மகளொருத்தி, ஒத்த அன்பினாற் காமமுறாதவழியும் குணச்சிறப்பின்றித் தானே காமமுற்றுக் கூறியது இதனின் (சுட்டியொருவர்ப் பெயர்கொள்ளாத பாடாண்பாட்டுக் கைக்கிளை, பெண்பாற் கைக்கிளை ) அடக்குக என நச்சினார்க்கினியர் கூறினார்.(தொல்.புறத்.28,29)

பத்தி இலக்கியங்களில், குறிப்பாகத் திருமுறைகளில் இந்தச் சிக்கலுக்கு இடமே இல்லை. தலைவி நிலையில் நின்று திருமுறையாசிரியர் தாம் அனுபவிக்கும், அனுபவிக்க விழையும் சிவானுபவத்தைப் பெண்பாற்கைக்கிளையாகப் பாடுகின்றனர்.

திருவாசகம், திருவம்மானையில்,

“சூடுவேன் பூங்கொன்றை சூடிச் சிவன்றிரடோள்

கூடுவேன் கூடி முயங்கி மயங்கிநின்

றூடுவேன் செவ்வாய்க் குருகுவேன் உள்ளுருகித்

தேடுவேன் தேடிச் சிவன்கழலே சிந்திப்பேன்

வாடுவேன் பேர்த்து மலர்வேன் அனலேந்தி

ஆடுவான் சேவடியே பாடுதுங்காண் அம்மானாய்” (17)

இத்திருப்பாடலில் தலைவி ‘உள்ளுருகித் தேடுவேன்’ என்று கூறினாளே யொழிய இல்லிகந்து தலைவனைத் தேடி அலையவில்லை. ஆதலின் அகனைந்திணையாம். இத்திருப்பாடலில், `சூடுவேன் பூங்கொன்றை` என்றது பிரிவாகிய பாலை,`சூடிச் சிவன்றிரடோள்கூடுவேன்` என்றது, புணர்ச்சியாகிய குறிஞ்சி, `கூடி முயங்கி மயங்கிநின் றூடுவேன்’ என்றது ஊடலாகிய மருதம், `செவ்வாய்க் குருகுவேன்` என்றது பிரிவுக்கு இரங்குதலாகிய நெய்தல், `தேடிச் சிவன்கழலே சிந்திப்பேன்` என்றது ஆற்றி இருத்தலாகிய முல்லை என அகனைந்திணை ஐந்தும் இத்திருப்பாடலில் இருத்தல் அறிந்தின்புறலாம்.

தலைவன் இருப்பிடம் நோக்கித் தலைவி இல்லிகந்து செல்வது நாணழிவாதலின் பெருந்திணையாய்விடும். அப்பரடிகள் இப்பெருந்திணை மெய்ப்பாட்டினை ஏற்றிப் பல திருப்பாடல்களை அருளியுள்ளார். அவற்றுள் ஒன்று பலரும் அறிந்தபாடல்.

“முன்ன மவனுடைய நாமங் கேட்டாள்

மூர்த்தி யவனிருக்கும் வண்ணங் கேட்டாள்

பின்னை யவனுடைய வாரூர் கேட்டாள்

பெயர்த்து மவனுக்கே பிச்சி யானாள்

அன்னையையு மத்தனையு மன்றே நீத்தாள்

அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தை

தன்னை மறந்தாள்தன் னாமங் கெட்டாள்

தலைப்பட்டாள் நங்கை தலைவன் றாளே”

திருவாரூர்ப் பெருமானுடைய திருப்பெயரைக் கேட்டவுடனேயே தன்வசமழிந்து தலைவனைச் சென்று அடைந்த தலையன்புடைய தலைவியின் நிலைமையினைத் தோழி கூறுவதாக அமைந்தது இப்பாடல். எத்துணை அன்பினளாயினும் தானே தன் இல்லத்தினைக் கடந்து செல்லாமை பெண்ணுக்குரிய ஆசாரம் அல்லது ஒழுக்கம் என்பது சங்ககால நியதி.. திருவாரூரன் பெயரினைக் கேட்ட தலைவி தன்னில்லிறந்து சென்று திருவாருரையடைந்த செயல், ‘அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தை’ எனப்பட்டது. நிறை என்பது பெண்மைக்குணம். அது, பெண் தன் மனத்திலிருப்பதைப் பிறர் அறியாது ஒழுகும் ஒழுக்கம். ‘நிறை யெனப்படுவது மறை பிறர் அறியாமை.’ . தன் நாமம் என்றது, நிறை அழியாமல் இருப்பவள் என்னும் பொருளுடையதாகிய கன்னி என்னும் பெயர். `தன் நாமம் கெட்டாள்` என்றது கன்னி என்ற பெயரழிதல்; அதாவது நிறையழிதல். நிறையழிதல் பெருந்திணை. சத்திநிபாதத்து உத்தமர்களது நிலையை இத்துறைப்பாடல் விளக்கியருளியது.

சங்கப் புறப்பாடல்களும் திருமுறைகளும்

சங்க இலக்கியங்களில் பத்தியுணர்வைப் பாடு பொருளாகக் கொண்ட ஒரே நூல் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் அருளிய திருமுருகாற்றுப்படை. இது சங்க இலக்கியமாகிய பத்துப்பாட்டில் கடவுள் வாழ்த்துப் போல நூலின் முதலில் அமைந்துள்ளது. திருமுருகாற்றுப்படை பதினொன்றாம் திருமுறையில் திருமுறைப் பாடலாகவும் இடம்பெற்றுள்ள சிறப்பினையுடையது. பரிபாடல் முதலியவற்றில் சிலபாடல்கள் முருகன் திருமால் முதலிய கடவுள்களைப் பற்றியனவென்றாலும் அவை அகப்பொருட் பாடலாகச் சார்த்து வகையில் பாடப்பெற்றனவே யன்றித் தனித்த பத்திப்பாடல்கள் அல்ல.

நக்கீரர் பாடிய பாடல்கள் சங்க இலக்கியத்தில் எட்டுத்தொகையில் அகநானூறில் 15பாடல்களும், குறுந்தொகையில் 8பாடல்களும், நற்றிணையில் 7 பாடல்களும், புறநானூறில் 3 பாடல்களும் பத்துப்பாட்டில் திருமுருகாற்றுப்படையும் நெடுநல்வாடையும் என இரண்டு நூல்களும் உள்ளன . இப்பாடல்களின் பாடுபொருள்களை நுணுகி ஆராய்ந்தால் அகப்பொருளையும் புறப்பொருளையும் பாடிய நக்கீரர் உளம் முருகனைப் பாடுதற்கமைந்த வளர்ச்சி புலப்படும். அகப்பொருளில் முப்பது பாடல்களைப் பாடிய நக்கீரர் புறத்தில் இரண்டே பாடல்களைப் பாடியுள்ளார். அதில் பொருண்மொழிக்காஞ்சி யென்னுந் துறையில் பாடிய பாடல், உலகவாழ்க்கை இத்தகையது எனத் தெளிந்த அனுபவ முதிர்ச்சியில் பாடியது.

“தெண்கடல் வளாகம் பொதுமை யின்றி

வெண்குடை நிழற்றிய ஒருமையோர்க்கும்

நடுநாள் யாமத்தும் பகலுந் துஞ்சான்

கடுமாப் பார்க்குங் கல்லா வொருவற்கும்

உண்பது நாழி யுடுப்பவை யிரண்டே

பிறவு மெல்லா மோரொக் கும்மே”

பத்தியுணர்விற்கு அடைப்படையான மன `வைராக்கியம்` நக்கீரர் பெருமானின் இப்பாடல்வரிகளில் வெளிப்படுகின்றது. “கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார், ஓடும் செம்பொனும் ஒக்கவே நோக்குவா”ருக்கு உரிய ஆன்மிக ஒழுக்கம் இச்சங்கப்பாடலில் வெளியாகும் உணர்ச்சியின் முதிர்ச்சியே.

சங்கப் புறப்பொருள் இலக்கியங்களில் வள்ளல்களையும் அரசர்களையும் அண்டியே பிழைக்கவேண்டிய சமூகமைப்பில் இருந்த புலவர் பாணர் முதலிய இரவலர்கள் புரவலர்களை நாடிச் சென்று பொய்யும் மெய்யும் கூறிப் புகழ்ந்து சலித்த நிலைமையைக் காணுகின்றோம்.

“இரவலர் புரவலர் நீயு மல்லை, புரவலர் இரவலர்க் கில்லையு மல்லர்” (புறம் 163), “முற்றிய திருவின் மூவராயினும் பெட்பின் றீதல் யாம்வேண்டலமே”(205), ‘வரிசைக் கிரங்குமிப் பரிசில் வாழ்க்கை”(206) என்பன போன்ற இரவலர்களின் வாக்குகளில் மனிதர்களைப் புகழ்ந்து பேசி அவர்கள் கொடுக்கும் பொருளில் வாழும் இரவலர் வாழ்க்கை கசந்துபோன மனநிலை தெளிவாகின்றது.

இரந்துவாழும் வாழ்க்கை இனியதாக இல்லமையால் ‘இன்னா தம்மவிவ் வுலகம்” என்ற அறிவும், “இனியகாண்கிதன் இயல்புணர்ந்தோரே” (புறம் 194) என்ற தெளிவும் பிறந்தது. இதன் எதிர்வினைதான் திருமுறைகளில் உள்ள, “நச்சிநீர் பிறன்கடை நடந்துசெல்ல நாளையும், உச்சிவம் மெனும்முரை யுணர்ந்துகேட்ப தன்முனம்”, “சோறு கூறை யின்றியே துவண்டுதூர மாய்நுமக் , கேறு சுற்ற மெள்கவே யிடுக்கணுய்ப்ப தன்முனம்” ஈசனை அடைவீர் என்று அறிவுரை கூறியதும், “பொய்மையாளர்களைப் பாடாமல் எந்தை புகலூர் பாடுமின்” என்று புலவர்களை ஆற்றுப்படுத்தியதும் போன்ற திருப்பாடல்கள்.

மணிவாசகப் பெருமான் திருவெம்பாவையில் பெண்ணொருத்தியின் கூற்றாக “எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்” என வேண்டுகின்றார். எய்த்தல் என்றால்.’இவனுக்கு எத்துணை முறை உதவுதல்’ என்ற மனச்சலிப்புக் கொள்ளல். இதன் உண்மைப் பொருளை உணரவேண்டுமாயின் புறநானூறு 203 செய்யுளைப் பாடிய ஊன்பொதி பசுங்குடையாரின் மனநிலையைப் பெறுதல் வேண்டும்.

அவர் இளஞ்சேட் சென்னியை நோக்கிக்,

”கழிந்த காலம் பெய்தேனெனக் கருதி மழை பெய்யாது மாறினும், முற்காலத்து விளைந்தேனெனக் கருதி நிலம் விளைவை ஒழியினும் எல்லாவுயிர்கட்கும் உயிர்வாழ்க்கையில்லை. அதுபோல இன்னமும் எமக்குப் பரிசில் தாருமென்று சொல்லி எம்போல்வார் இரப்பின் அவர்க்கு முன்னும் பரிசில் கொண்டீரென்று நும்போல்வார் மறுத்தல் இன்னாது.—அதனால் பூண்கடனெந்தைநீ யிரவலர் புரவே” எனப்பாடினார்.

மழையும் நிலமும்போல , சிவனே! நீ மறுக்காது சலித்துக் கொள்ளாது எமக்கருள வேண்டும் என வேண்டும் உணர்ச்சி புறநானூற்றுப் பாடலைப் படியாது அடைய முடியுமோ?

ஆதனுங்கன் என்னும் வள்ளலைக் கள்ளில் ஆத்திரேயன் ( ஆத்திரேயன் என்பது அந்தணர்களின் கோத்திரங்களில் ஒன்று) என்னும் புலவர்,

” ஆதனுங்க! யான் ஒன்றைச் சொல்ல நினைப்பின் நினது புகழல்லது சொல்வது இல்லை; நின்னையுடைய யான் நின்னை மறப்பின், மறக்குங் காலமாவது எதுவெனச் சொல்லக் கேட்பாயாக.என்னுடைய உயிரானது என்னைவிட்டு நீங்குங் காலத்தும் என்னை யான் மறக்குங் காலம் உண்டாயின் அப்பொழுது மறப்பேனல்லது மறவேன்” (புறம் 175)என்று பாடினார். அதாவது அவர் தன்னைத் தான் மறக்குங் காலத்தில்தான் வள்ளலை மறப்பேன்; நினைவுள்ளவரை மறவேன் மறவேன் என்றார்.

இந்த உணர்வைத் திருமுறைகளில் பல இடங்களில் காணலாம். மனிதனை மறவேன் என்று பாடிய புலவரினம் சிவனை மறவேன் எனப்பாடிய மாற்றம் அறியத்தக்கது.

சிவனை நினையாத நாள்,“ஓவுநாள், உணர்வழியுநாள், உயர் பாடைமேல் போகுநாள்” என்று பாடிய நம்பியாரூரர் திருப்பாண்டித்திருப்பதிகம் முழுவதும் இவ்வுணர்ச்சி ததும்பப் பாடியருளியது காண்க. மணிவாசகர், ”வாக்குன் மணி வார்த்தைக்காக்கி” என்றது, ‘ஆதனுங்க ! யானொன்றைச் சொல்ல நினைப்பின் நினது புகழல்லது சொல்லாமையான்’ என்ற சங்கப்பாடல் வரியின் மறு வாசிப்பாக இருத்தலை நோக்குக.

கடலுண்மாய்ந்த இளம்பெருவழுதி, தன்னுடைய, “உண்டா லம்மவிவ் வுலகம்’ எனும் அருமையான பாடலில், “ உண்டா லம்மவிவ் வுலகம் -- -- --தமக்கென முயலா நோன்றாட், பிறர்க்கென முயலுந ருண்மை யானே” என்றார். அத்தகையோரை எம்பிரான் காப்பாற்றுவன் எனத் திருஞானசம்பந்தர், “தாமென்று மனந்தளராத் தகுதியராய், உலகத்துக் காமென்று தவம்புரிவார் தமைக்காக்குங் கருணையினான்” எனப்பாடினார். தம்பொருட்டன்றி பிறர் பொருட்டு வாழுதல் இவ்விருவகை இலக்கியங்களிலும் போற்றப்படுதல் காண்க.

பெருந்தலைச் சாத்தனார் மூவன், பரிசில் நீட்டித்தானை நோக்கி ,”நின் நசைதர வந்துநின் னிசைநுவல் பரிசிலேன், வறுவியன் பெயர்கோ வாண்மேம் படுந, ஈயா யாயினும் இரங்குவே னல்லேன்” எனப் பாடினார். நம்பியாரூரர், நாட்டியத்தான்குடி நம்பியை நோக்கி, “பேணீராகிலும் பெருமையை உணர்வே, பிறவே னாகிலும் மறவேன், காணீ ராகிலும் காண்பனென் மனத்தால்,கருதீ ராகிலும் கருதி, நானே லும்மடி பாடுதல் ஒழியேன், நாட்டியத்தான் குடி நம்பி” எனப் பாடினார். இவ்விரு கூற்றுக்களையும் ஒப்பு நோக்கி மகிழ்க.

ஔவையார் தன்னிடத்து அதியமான், “ பலநாள் பயின்று பலரொடு செல்லினும், தலைநாட் போன்ற விருப்பின” (புறம் 101)னாக இருத்தலைப் பாடியமையைப்போலத் திருஞானசம்பந்தர், குளச்சிறையாரின் பண்பினை, “கணங்களாய் வரினுந் தமியராய் வரினும்,அடியவர் தங்களைக் கண்டால், குணங்கொடு பணியும் குலச்சிறை” எனப்பாடினார். ஐயாறுடை அடிகளும் தமக்கு அவ்வாறே, “சங்கை ஒன்றும் இன்றியே, தலைநாள் கடைநாள் ஒக்கவே” அருளுடையனாய் இருத்தலை நம்பியரூரர் பாடினார்.

ஏணிச்சேரி முடமோசியார் எனும் புலவர் யாவரினும் முன்னே நினைக்கப்படுமவனாகிய ஆய் அண்டிரனைப் பின் நினைத்த குற்றத்தால் தனது உள்ளம் அமிழ்ந்து போவதாக என்றார்.

“முன்னுள்ளு வோனைப் பின்னுள்ளி னேனே

ஆழ்கென் னுள்ளம்” (132)

நம்பியாரூரர் திருவாரூர் இறைவனை முன்பே நினையாத மூடனாகத் தம்மைப் பழித்துக் கொள்ளுகின்றார்.

“வன்னாக நாண்வரைவில் லங்கிகணை அரிபகழி

தன்னாகம் உறவாங்கிப் புரமெரித்த தன்மையனை

முன்னாக நினையாத மூர்க்கனேன்”(51-6)

இவ்வொப்புக்கள் ஒரு சிலவே. விரித்தும் நுணுகியும் காண்போருக்குச் சொல்லிலும் பொருளலும் சங்க இலக்கியத்திற்கும் சைவத் திருமுறைகளுக்கும் ஒரு மரபுத் தொடர்ச்சி யிருத்தல் நன்கு வெளியாகும். இயற்கை வருணனைகளில் ஒப்புமை மிக விரிவானது. அது குறித்து இங்கு பேசப்படவில்லை.

சங்க இலக்கியமும் சைவதத்துவமும்

சங்க இலக்கியங்களில் உலகு ,உயிர், வினை, ஊழ் , இறை முதலிய தத்துவப் பொருள்களின் சிந்தனை வளர்ச்சியே சைவ சித்தாந்தம் என மேம்போக்காகப் படிப்பவர்க்கும் விளங்கும்.

சைவதத்துவத்தில், ‘உலகம்’ கானல் நீர்போல போலித் தோற்றமோ, முயற்கொம்பு போல இல்பொருளோ அன்று. உலகம் தோற்றக் கேடுகள் உள்ள உள்பொருளே. சங்க இலக்கியங்கள் உலகத்தியற்கையினை, “மன்னா வுலகம்”(புறநா 165), “நில்லா வுலகத்து நிலைமை தூக்கி” (பெரும்பாண் 466) எனக் கூறுதல் காண்க. தொல்காப்பியம் புறத்திணையியலும் (23) “பாங்கருஞ் சிறப்பின் பல்லாற்றானும், `நில்லா வுலகம்` புல்லிய நெறித்தே” என்றது. நில்லா உலகம் – நிலைபேறு இல்லாத உலகியற்கை. தெய்வ்ச் சேக்கிழாரும் தொல்காப்பியத்தை ஒட்டி, “ நில்லா வுலகியல்பு கண்டு நிலையா வாழ்க்கை அல்லேன் எனஅறத் துறந்தார்” எனக் கூறினார். (திருநா.புராணம் 37)

மன்னாவுலகத்தில் மன்னுதல் குறித்த சிந்தனை சங்ககாலத்தில் இருந்தது. அது கொடை முதலியவற்றால், தாமாய்ந்தாலும் தம் புகழ்நிறுவதால் அமையும் எனக் கருதப்பட்டது. “மன்னா வுலகத்து மன்னுதல் குறித்தோர் தம்புகழ் நிறீஇத் தாமாய்ந் தனரே” (புறம்62) என்பதால் அது பெறப்படும். நிலையில்லாத உலகத்துச் செய்யப்பட்ட அறம் காரணமாக ஒருவன் எய்திய புகழும் மறையும் என்பது சைவம் கண்ட உண்மை.

“இவ்வுலகத்துப் புகழை விரும்பி அடைந்த ஒருவன், இறந்தபின் இவ்வுடலை விட்டு வேறோர் உடலை அடையும்போது, கழிந்தவுடலின் வந்த புகழ் எடுத்தவுடலில் வந்து பொருந்துமே? அதுவல்லாமல், முற்பிறப்பில் இன்ன புகழையுடையான் இவனென்று பிறராலறிந்து சொல்லத்தான் படுமோ?, அதுவுமல்லாமல் ஒருவன் தான் முற்பிறப்பில் இன்ன புகழையுடையவனாக இருந்தேன் என்று அறியத்தான் இயலுமோ?” எனச் சிவநெறி வினவும்.

வீடு பேறு ஒன்றே நித்தியம். பிறவனைத்தும் அநித்தியம். எனவே நிலையிலாத வுலகத்துப் பிறந்தோர் நிலைத்த முத்தியின்பத்தைப் பெற முயல வேண்டும் எனச் சிவநெறியும் திருமுறைகளும் கூறும். இது தெய்வப்புலவர் திருவள்ளுவரிடமிருந்து பெற்ற உண்மையே.

“கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவார்

மற்றீண்டு வாரா நெறி” (359) என்ற திருக்குறளையும், அதற்குப் பரிமேலழகர் செய்த உரையும் காண்க.

சைவசித்தாந்தம் பதமுத்தி , பரமுத்தி என இருவகை முத்திகளைக் குறித்துப் பேசும். பதமுத்திஎன்பது சுவர்க்கம் முதலிய மேலுலகங்களை அடைந்து அங்குள்ள போகங்களை அனுபவிக்கும் முத்தி. அரி, அயன் முதலியவைகளும் பத முத்தியே. இம்முத்தி நல்வினையாகிய புண்ணியத்தின் பயனாக அடைவது. போகத்தை அனுபவித்து முடிந்தவுடன் புண்ணியமும் தீர்ந்துவிடும். அப்பொழுது அப்பதமுத்தியை அனுபவித்த உயிர் மீண்டும் உலகில் தவஞ்செய் சார்பினில் வந்து தோன்றி மலபரிபாகமும் சத்திநிபாதமும் எய்தி பரமுத்தி எய்தும். பரமுத்தியே மேலான முத்தி. இம்முத்தி அடைந்தோர் மீண்டும் பிறவி எய்துவது இல்லை. பதமுத்தி, பசித்து உண்டு மீண்டும் பசிப்பானை ஒக்கும் எனச் சாத்திரம் பேசும். (சிவஞானபோதம் சூ8 அதி 2)

பதமுத்தி, பரமுத்தி எனும் இருவகை முத்திகளைப் பற்றிச் சைவசித்தாந்தம் கூறுவது சங்கத்தமிழர்களின் தத்துவ உணர்ச்சியின் முதிர்ச்சியே. கோப்பெருஞ்சோழனைப் புல்லாற்றூர் எயிற்றியனார் பாடல் ஒன்றில் (புறம்214) பதமுத்தி, பரமுத்தி இரண்டினையும் பற்றிப் பேசுகின்றார்.

“உயர்ந்த விருப்பத்தையுடைய உயர்ந்தோர்க்குத் தாம் செய்யப்பட்ட நல்வினைக்கூற்றிலே அதனை அனுபவித்தல் உண்டாமாயின் அவர்க்கு இருவினைய்யும் செய்யப்படாத உம்பர் உலகத்தின்கண் இன்பம் அனுபவித்தலும் கூடும்;( “தொய்யா வுலகத்து நுகர்ச்சியுங் கூடும்” நுகர்ச்சிமட்டும் உண்டு. வினை செய்வது இவ்வுலகில் இல்லை)

அவ்வுலகத்தின்கண் நுகர்ச்சியில்லையாயின் , மாறிப் பிறத்தலிலே கூடும் பிறப்பின்கண் இன்மை எய்தவுங் கூடும்.(“தொய்யா வுலகத்து நுகர்ச்சி யில்லெனின், மாறிப் பிறப்பி னின்மையுங் கூடும்”)

மாறிப்பிறவாரென்று சொல்லுவாருளராயின் தமது புகழை நிலைபெறுத்தி வசையில்லாத உடம்பொடு கூடி நின்று (அதாவது, தாம் எடுத்துள்ள இப்பிறப்பிலேயே) இறத்தல் (மீண்டும் பிறக்க ஏதுவாகாமல் இறத்தல்) மிகத்தலையாயது. அதனால் எவ்வாற்றானும் நல்வினை செய்தல் அழகிது.” (“மாறிப் பிறவா ராயினு மிமயத்துக், கோடுயர்ந் தன்ன தம்மிசை நட்டுத், தீதில் யாக்கையொடு மாய்தல்தவத் தலையே”)

இப்பாடலில் மாறிப் பிறவாமையே தலையாய முத்தி என்றும் அதனை எடுத்துள்ள இப்பிறப்பிலேயே அடைவதற்குரியவற்றைச் மேற்கொள்ள வேண்டும் எனும் சங்கநூற் கருத்தைச் சைவம் தன்னுடைய கொள்கையாகக் கொண்டுள்ளது. இச்செய்யுளில் உள்ள “மாறிப் பிறவாராயினும்” எனும் தொடரை இதே பொருளில், சிவஞானபோதம் சூ2மூன்றாம் அதிகரணம் “ இனி, இவ்வான்மாக்கள் மாறிப் பிறந்து வரும் என்றது” என எடுத்தாண்டுள்ளது அறியத்தக்கது.

உயிர்களைச் சங்க இலக்கியம் `மன்னுயிர்`(பதிற்று15,18,20,24, புறநா19) , ‘மன்பதை’(பதிற்று40,42,72,77) எனும் சொற்களால் குறிக்கின்றது. மன்னுயிர் என்றால் நிலையான உயிர்கள் என்பது பொருள். மன் – நிலைபேறு. தெய்வப்புலவர் திருவள்ளுவருக்கும் இதுவே கருத்து. `மன்னுயிர்`குறள்244), ‘மன்னுயிர்க்கு’(குறள்318). ‘உயிர்களெல்லாம் நித்தமாகலின் , மன்னுயிரென்றார்’, என்பது உரைக்குறிப்பு. `மன்னுயிர்ப் பன்மையும் (புறநா19) என்னும் தொடருக்கு ’நிலைபெற்ற உயிரது பன்மையும்’ என்பது பழையவுரை. அதே போன்று, ‘மன்பதை’(புறநா210,356) உயிர்ப்பன்மை என்பது பொருள். எனவே, உயிர்கள் பல என்பதும், அவை அழிவதில்லை என்பது பழந்தமிழர் கொள்கை என்பது பெற்றாம். உயிர்கள், எண்ணரிதாய் , நித்தமாய்” என்று சித்தாந்த சாத்திரம் கூறும்.

நம் இந்திய நாட்டில் தோன்றிய சமயதத்துவங்கள், உலோகாயதம் தவிர, அனைத்தும் வினைகொள்கை அல்லது கருமக்கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ளன. அவற்றுள் சைவம் கூறும் வினைக்கொள்கை பிறவற்றினின்றும் வேறு பட்டது. அவ்வேறுபாட்டிற்குக் காரணம் அது தமிழர் சிந்தையில் முகிழ்த்தது என்பதுதான்.

வினை, விதி, ஊழ், பால் என்னும் சொற்கள் தம்முள் சிறு வேறுபாட்டுடன் ஒரேபொருளைத் தருவன. சங்க இலக்கியங்கள், இவற்றுள், பால் என்ற சொல்லையே பெரிதும் எடுத்து வழங்கும். “பால்தர வந்த பழவிறற் றாயம்” (புறம்75, விதி தரப்பட்டுத் தம்பால் வந்த அரசுரிமை), “நல்லியக் கோடனை உடையை வாழியெற் புணர்ந்த பாலே” (புறம்176, நல்லியக் கோடனைத் துணையாக நீ உடையையாதலான், என்னைப் பொருந்திய விதியே).

”நல்லைமன் றம்ம பாலே மெல்லியற்

றுணைமலர்ப் பிணைய லன்னவிவர்

மணமகிழ் இயற்கை காட்டியோயே” (குறுந்-229 இத்தலைமக்களின் திருமணத்தைக் காட்டிய விதியே நீ நல்லை ).

”ஒன்றே வேறே யென்றிரு பால்வயின்

ஒன்றி யுயர்ந்த பால தாணையின்

ஒத்த கிழவனுங் கிழத்தியுங் காண்ப”(களவியல்-2)

இத்தொல்காப்பிய சூத்திரத்தில் வரும் முதலிலுள்ள ‘பால்,’ இடம் என்று பொருள்படும். ‘பாலதாணை’ என்பதற்குப் ‘பால்வரை தெய்வத்தின்’ ஆணையாலே’ என்பது பொருள். பால்வரை தெய்வமென்பது எல்லார்க்கு மின்பத் துன்பத்திற்குக் காரணமாகிய இருவினையையும் வகுக்கும் தெய்வம் என்பது பொருள். (தொல்.சொ.54.சேனா) அதாவது வினை தானே பலனையூட்டாது. வினை செய்தானையும் வினையையும் வினை செய்தவனையும் அறிந்து அவ்வினைக்கும் மேலாம் தெய்வம் பலனை வகுத்து ஊட்டும் என்பது பண்டைத் தமிழர் கருத்து. தெய்வப் புலவர் திருவள்ளுவரும் “வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி, தொகுத்தாருக்கும் துய்த்த லரிது”(377) என்றார். தெய்வம் வகுத்த வகையானல்லது ஒருவனுக்கு நுகர்தலுண்டாகாது. அத்தெய்வம், ஓருயிர் செய்த வினையின் பயன் பிறிதோருயிரின்கட் செல்லாமல் அவ்வுயிர்க்கே வகுத்தலின், வள்ளுவர் ‘வகுத்தான்’ என்றார். அதனையே தொல்காப்பியர், ‘பால்வரைத் தெய்வம்’ என்றார்.

செந்தமிழ்நாட்டுக்கு வந்தேறிய பிறசமயங்கள் எல்லாம் வினையே பலனைத் தரும் என்ற கருத்துடையனவாக இருக்க, பண்டைத் தமிழர் வினை வகுத்தான் வகுத்த வழியே செய்தானைச் சாரும் என்ற கருத்தினர். இது சைவசித்தாந்தத்தில் வினைக்கோட்பாடும். இதனைத் தெய்வச் சேக்கிழார்,

“செய்வினையுஞ் செய்வானும் அதன்பயனும் கொடுப்பானும்

மெய்வகையால் நான்காகும் விதித்தபொருள் எனக்கொண்டே

இவ்வியல்பு சைவநெறி அல்லவற்றுக் கில்லையென

உய்வகையாற் பொருள்சிவ னென்றருளாலே உணர்ந்தறிந்தார்” (சாக்கிய 5)

என்றருளினார்.

புறநானூற்றில் கவுணியன் பூங்குன்றனார் எனும் புலவர் பெருமான் பாடியதாகவுள்ள “யாது ஊரே யாவருங்கேளிர்” (192) எனும் உலகப் புகழ்பெற்ற பாடலை அனைவரும் அறிவர்.

“யாது மூரே யாவருங் கேளிர்

தீது நன்றும் பிறர்தர வாரா

நோதலுந் தணிதலு மவற்றோ ரன்ன

சாதலும் புதுவ தன்றே வாழ்தல்

இனிதென்று மகிழ்ந்தன்று மிலமே முனிவின்

இன்னா தென்றலு மிலமே

--- --- --- ---

--- --- --- திறவோர்

காட்சியிற் றெளிந்தன மாகலின் மாட்சியிற்

பெரியோரை வியத்தலு மிலமே

சிறியோரை யிகழ்த லதனினு மிலமே”

இப்பாடலில் அமைந்துள்ள உண்மைகள் பிறருக்கெல்லாம் வெறும் சொற்பொருளையே அளிக்கச் சிவநெறிச் சாதகர்களுக்கு அவை சாதனைப் படிகளாக அமைந்துள்ளன;. அனுபவப் பொருளாக உணர்த்துகின்றன

யாருக்கு உண்மையிலேயே “யாதும் ஊரே யாவருங் கேளிர்” எனும் உணர்ச்சியுண்டாதல் கூடும்? அந்தந்த வூர்களிலெல்லாம் எப்பொழுதோ வாழ்ந்து அங்கிருந்த உயிர்களுடன் ஏதோ ஒருவகை உறவு கொண்டிருந்தவர்களுக்கே அவ்வுறவு உணர்ச்சி உண்டாகும். வெறும் வாயளவில் அவ்வுணர்ச்சியுண்டாகாது.

அப்பாடலின் இடையிலுள்ள அடிகளில், பேரியாற்றின் நீரின் வழியேபோம் மிதவை போல, அரிய உயிர் ஊழின்(நியதி) வழியே படும் என்பது கூறப்பட்டது. எனவே சிவநெறி கூறுமாறு வினையின் வழி பிறப்பென்பது பெறப்படும். முதற் பிறப்பிலிருந்து உயிர் முத்தி அடைகின்றவரை எடுக்கின்ற பிறப்புக்கள் எண்ணிக்கையில் அடங்கா. வினைக்கேற்ப, அவ்வுயிர்கள் பெறுகின்ற உடலும் அவை பிறக்கின்ற இடங்களும் அளவிலாதன.

அதனால்தான் மாணிக்கவசகர்,

“புல்லாய்ப் பூடாய்ப் புழுவாய் மரமாகி

பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்

கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்

வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்

செல்லாஅ நின்றவித் தாவர சங்கமத்துள்

எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன்” (சிவபுராணம் 26-31)

என்று பாடினார்.

எல்லாப்பிறப்பும் என்றது எண்பத்து நான்கு இலட்சம் யோனி பேதங்களில் உள்ள ஒவ்வொரு யோனியின் எண்ணற்ற பிரிவுகளிலும். ஆதலின், அதனை யுணர்ந்த அடிகள் “பிறந்திளைத்தேன்”

அடிகள் வருந்துதற்குக் காரணமான இந்த எண்பத்து நான்குநூறாயிரம் யோனி பேதப் பிறப்பும் அவற்றின் பிரிவுகளும் ஓரிடத்தில் ஒருகாலத்தில் ஒருபருவத்தில் தோன்றுவன அல்ல. ஆகவே, நித்தமாய் என்ணிக்கையற்றவையாய் உள்ள உயிர்களில் ஒன்று எண்ணற்ற பிறவி எடுக்கும்போது ஏதோ ஒரு பிறவியில் உலகின் ஏதோ ஒரு இடத்தில் மற்றொரு உயிருடன் ஏதோ ஒருவகையில் உறவு உடையதாகும். அப்படி எண்ணற்ற பிறவி எடுத்து உழல்கையில் ஒவ்வோருயிரும் மற்றொன்றனொடு ஏதோ ஒரு பிறவியில் உறவுடையதாகவே இருக்கும். இவ்வாறு ஒவ்வோ ருயிரும் பிறவுயிரொடு எங்கோ எப்போதோ கொண்டிருந்த உறவின் காரணமாக இன்றும் கேளாகும். ஓருடல் விட்டு மற்றோருடல் எடுக்கையில் முந்தைய உடலில் செய்த செயல்கள் மறந்தொழிவது போல இவ்வுறவும் மறந்து போகின்றது..

இத் தாவரசங்கமத்துள் எல்லாப் பிறவியும் பிறந்திளைத்த ஞானியராகிய ஆன்மநேயர்கள் இவ்வுண்மையை (கணியன் பூங்குன்றனார் கூறுவதுபோலத் திறவோர் காட்சியின்) உணர்த்தும்போதுதான் நம்மவரால் இந்த கேண்மையை உணர்ந்து கொள்ள முடிகின்றது. பட்டினத்தடிகள் கூறுகின்றார்:

“யானொன் றுணர்த்துவன் எந்தை மேனாள்

அகில லோகமும் அனந்த யோனியும்

நிகிலமுந் தோன்றநீ நினைந்தநாள் தொடங்கி

எனைப்பல யோனியும் நினைப்பரும் பேதத்

தியாரும் யாவையும் எனக்குத் தனித்தனித்

தாய ராகியுந் தந்தைய ராகியும்

வந்தி லாதவர் இல்லை யானவர்

தந்தைய ராகியுந் தாய ராகியும்

வந்திராததும் இல்லை முந்து

பிறவா நிலனும் இல்லை அவ்வயின்

இறவா நிலனும் இல்லை பிறிதில்

என்னைத் தின்னா உயிர்களும் இல்லையானவை

தம்மைத் தினா தொழிந்ததும் இல்லை அனைத்தே

காலமுஞ் சென்றதி யானிதன் மேலினி

இளைக்குமா றிலனே” (திருக்கழுமல மும்மணிக்கோவை-7)

பட்டினத்தடிகளின் இத்திருப்பாடலின் பொருளை உணர்ந்தவருக்குச் சைவர் “யாதுமூரே யாவருங் கேளிர்” எனும் அடிகளுக்குக் கொள்ளும் பொருளுக்கும் பிறர் பொருள் கொள்ளுவதற்கும் உள்ள வேறுபாடு தெற்றென விளங்கும். பிறர் காண்பது உலகியல் ஒற்றுமை; சைவர் விழைவது ஆன்மநேய உறவும் ஒற்றுமையும்..

ஒருவர்க்குத் தீமை நன்மை சுகம் துக்கம்யென்பன அவர் செய்த நல்வினை தீவினைகளுக்கேற்ப சிவன் அறிந்து அருந்துவித்தலால் விளைவதன்றி ஒருவரால் ஒருவருக்கு நன்மையோ கெடுதலோ விளைவித்துவிட முடியாது என்பது சிவநெறி. எனக்குப் பிறர் தீமை செய்தாரென்றும் பிறர்க்கு யான் நன்மை செய்தேனென்றும் எண்ணுவதை ‘மனப்பசை’ என்று ஞானாமிர்தம் கூறும். இந்தமமதையை மனக் ‘கோணல்’ என்று கூறும் சிவஞானசித்தியார்,(10:2) இந்தக் கோணலை ஞானவெரியால் வெதுப்பி நிமிர்த்துச்செவ்வே நின்றிடவேண்டும் என்று சித்தியார் விதிக்கின்றது. “தீதும் நன்றும் பிறர்தர வாரா” என்ற பூங்குன்றனாரின் ஞானமொழி, மனக்கோணலை வெதுப்பி நிமிர்த்தும் ஞானவெரியாகிய இச்சிந்தனைக்கு அடிகோலுகின்றது, நோதலும் பரிதலும் நுண்ணுணர்வின்மையின் விளைவு என்பது சைவம்.

இவ்வாறு அனைத்தும் ஒருநியதியின்படி, (நியதி, ஊழ், வினை, விதி, பால் ஒருபொருட்சொற்கள்) சிவனின் ஆணையால் நடைபெறுகின்றன என்றறிந்த சிவநெறிச்சீலர், கணியன் பூங்குன்றனார் மொழியுமாறு, வாழ்வினை இன்னாதென்று முனிதலும் இலர்; இனிதென்று மகிழ்தலும் இலர்; “நன்றே செய்வாய் பிழைசெய்வாய் , நானோ இதற்கு நாயகமே”(திருவாசகம்,500) என்றிருப்பர். எல்லாம் சிவன் செயலென்று உணர்தலினாலே, சிவஞானிகள், பெரியாரை வியத்தலும், சிறியாரை இகழ்தலும் செய்வதில்லை.

சிவஞானக் களஞ்சியமான கணியன் பூங்குன்றனாரின் இப்பாடலைச் சங்கப்புறப்பாடல் என்று கூறி ஒதுக்கும் அளவுக்குச் சைவர்கள் தமிழறிவு மங்கியவர்கள் அல்லர்.

சைவ ஆதீனங்களிலும் திருமடங்களிலும் சங்கநூற்கள் கற்பிக்கப்படுவதில்லை என ஒரு குறையும் இக்கருத்தரங்கில் கூறப்பட்டது. இக்குற்றச்சாட்டு ஏற்புடையது தானா எனச் சிந்திக்க வேண்டும்.

திருமடங்களும் சைவ ஆதீனங்களும் தமிழ்இலக்கியம் கற்பிக்கும் கல்லூரிகள் அல்ல. தகுதியுடையோருக்கும் விரும்புவோருக்கும் சித்தாந்த சாத்திரக்கல்வி யளித்துச் சிவதன்மத்தில் ஒழுகப் பயிற்றுவிக்கும் கருத்துடன் தோற்றுவிக்கப்பட்டனவாகும். இங்கு பயில்வோர் பெரும்பாலும் திருமடத்திலும் ஆதீனத்திலும் பணிபுரிவோரும் தம்பிரான்களுமேயாவர். தம்பிரான்சுவாமிகள் நைட்டிகப் பிரம்மசாரிகள். காமங்கடிந்த புலனடக்கம் இவர்களுக்கு விதிக்கப்பட்ட இன்றியமையாத ஒழுக்கமாகும்.

“பெண்மை வியவார் பெயரு மெடுத்தோதார் --- -- வீடில் புலப்பகையினார்” எனத் துறவற இலக்கணம் விதிக்க, புலனின்பங்களை வியக்கும் சங்கப் பாடல்களை பாடமாக அவர்களுக்குப் போதிப்பது எவ்வாறு சாத்தியமாகும்?

“வனைந்துவர லிளமுலை ஞெமுங்கப் பல்லூழ்

விளங்குதொடி முன்கை வளைந்துபுறஞ் சுற்ற

நின்மார் படைதலி னினிதாகின்றே” (அகம்58)

“குக்கூ வென்றது கோழி யதனெதிர்

துட்கென் றற்றென் றூஉ நெஞ்சந்

தோடோய் காதலர்ப் பிரிக்கும்

வாள்போல் வைகறை வந்தன்றா லெனவே” (குறுந்-157)

“பெருங்கதவு பொருத யானை மருப்பி

னிரும்புசெய் தொடியி னேர வாகி

மாக்க ணடைய மார்பகம் பொருந்தி

முயங்கல் விடாஅ லிவையென மயங்கி

யானோ மென்னவு மொல்லார் தாமற்

றிவைபா ராட்டிய பருவமு முளவே

யினியே,புதல்வற் றடுத்த பாலொடு தடைஇத்

திதலை யணிந்த கேழ்கிள ரகலம்

வீங்க முயங்கல் யாம்வேண் டினமே

தீம்பால் படுத றாமஞ் சினரே” (அகம் 26)

என இவைபோன்ற செய்யுட்களும், ‘கூறத் தகாத வாய்பாட்டாற்” கூறும் கைக்கிளைப் பாடல்களும்,

“உக்கத்து மேலு நடுவுயர்ந்து வாள்வாய

கொக்குரித் தன்ன கொடுமடாய் நின்னையான்

புக்ககலம் புல்லினெஞ் சூன்றும் புறம்புல்லி

னக்குளுத்துப் புல்லலு மாற்றே னருளீமோ

பக்கத்துப் புல்லச் சிறிது” (கலி-94)

ஏஎ யிஃதொத்த னாணிலன் றன்னொடு

மேவேமென் பாரையு மேவினன் கைப்பற்று

மேவினன் மேவாக் கடையு மவையெல்லா

நீயறிதி யானஃ தறிகல்லேன் பூவமன்ற

மெல்லிணர் செல்லாக் கொடியன்னாய் நின்னையான்

புல்லினி தாகலிற் புல்லினெ னெல்லா

தமக்கினி தென்று வலிதிற் பிறர்க்கின்னா

செய்வது நன்றாமோ மற்று” (கலி-62)

என்பன போன்ற ‘இளமைதீர் திறம்’, ‘காமத்து மிகுதிறம்’, ‘மிக்க காமத்து மிடல்’ ஆகிய பெருந்திணைப் பாடல்களைத் துறவிகளுக்குக் கற்பித்தல் தகவுடைத்தாகுமா?

புறநானூற்றில், புலனழுக்கற்ற அந்தணாளன் கபிலர், நக்கீரர், பரணர், நல்லுருத்திரனார், நல்லந்துவனார் போன்றோர்களின் பாடல்களோடு, சிற்றினம் என ஆன்றோரால் கடியப்பட்டார் சூழலில் அவரோடுகூடி மதுவும் புலாலும் வுண்டு மங்கையருடன் களித்திருக்கும் புரவலர்களைப் போற்றிப் புகழும் பாடல்களும் உள்ளன. ஊரெரியூட்டுதலையும் உயிர்க்கொலையையும், பெண்களின் கண்ணீர்க்கம்பலையையும் வீரம் எனும் பெயரால் நியாயப்படுத்தலை ஆன்மநேயத்தை மக்களிடையே பரப்ப விரும்பும் துறவிகள் எங்ஙனம் ஏற்றுக் கொள்ள முடியும்? சைவப் புலவர்கள் சங்க இலக்கியங்களில் உகந்தனவற்றை ஏற்றுப் போற்றியே வந்துள்ளனர்.

முடிவுரை:

1.அகம் புறம் உணர்விலான் அறிவிலாச்சாவி என்பது சைவத் தமிழறிஞர்கள் கருத்து.

2. சங்க இலக்கியங்களின் மரபுத்தொடர்ச்சியும் வளர்ச்சியுமே திருமுறை இலக்கியம்.

3. சங்க இலக்கியப் பயிற்சியின்றித் திருமுறைகளின் இலக்கியச் சுவையை முழுமையாக அனுபவிக்க இயலாது.

4. சங்க இலக்கியங்களில் பண்டைத் தமிழர்களின் உயிர், உலகு, இறை, வினை பற்றிய கருத்துக்கள் காணப்படுகின்றன. அவற்றின் அறிவு சார்ந்த பரிணாம வளர்ச்சியே சைவசித்தாந்தம்.

5. சங்க இலக்கியங்கள் சைவர்களாலேயே காப்பாற்றப் பட்டன.

6. சங்க இலக்கியங்களின் செல்வாக்கு இடைக்காலத்தில் மங்கியதென்றால், அதற்கு வரலாற்றடிப்படையில் வேறு காரணங்கள் உண்டா என ஆராயப்பட வேண்டும்.

7. சங்க இலக்கியங்களின் செல்வாக்கு இடைக் காலத்தில் மங்கியதற்குச் சைவர்கள்தாம் காரணம் என்று கூறுவது இவ்விருவகை இலக்கியங்களையும் ஆழ்ந்து நோக்காது ஒரு சலசலப்பிற்காகப் போகிற போக்கில் எதையாவது சொல்லிச் செல்லுகின்ற அவசரக் கோலமே யன்றி வேறொன்றுமன்று.




2010/9/26 Raja sankar <errajasa...@gmail.com>



--
செல்வன்

www.holyox.blogspot.com

"அரசாங்கம் ஆக்டோபஸ் போல ஊதி பெருத்திருப்பதுதான் இந்தியாவின் பிரச்சனை.இதுவே ஊழலுக்கும், வாழ்க்கைதரம் குறைவதற்கும் வழிவகுக்கிறது.அரசியல்வாதிகள் ஊதிபெருக்க ஊழல் தேவை.ஊழல் சுதந்திரமாக நடக்க மிகபெரும் அரசும், குழப்பமான விதிமுறைகளும், சிகப்பு நாடாவும் தேவை.இந்த மிகபெரும் சிகப்புநாடாவை கத்திரித்து தம் பைல்களை நகர்த்த பொதுமக்களுக்கு லஞ்சம்,சிபாரிசு எனும் இரு முனைகளை கொண்ட கத்திரிகள் தேவைப்படும் என்ற நிலையை உருவாக்கியதுதான் அரசியலின் வெற்றி, தேசத்தின் தோல்வி"--செல்வன்

Dhivakar

unread,
Sep 27, 2010, 1:02:55 AM9/27/10
to mint...@googlegroups.com
>>சங்ககாலத்தில் இல்லாத சிவன் வழிபாடு சங்க காலத்தில்
தலை தூக்கிப் பின்னர் பெரிதாக வளர்ந்ததில், இத்தகைய நிகழ்ச்சி
ஏற்பட்டிருக்கலாம் என்பது தான்<<

அப்பா இல்லாட்டி என்ன, தந்தை இருக்கிறாரே என்றால், சிவன் இல்லாட்டி என்ன, காமர் இருக்கிறாரேன்னு பதில் சொல்ல வேண்டியதுதான். :)




தென்னாடுடைய சிவன் சார்பா ஹரிகி அவர்களுக்கு చాలசால தாங்ஸ்..

திவாகர்



2010/9/26 Hari Krishnan <hari.har...@gmail.com>


--
அன்புடன்,
ஹரிகி.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com

devoo

unread,
Sep 27, 2010, 1:47:51 AM9/27/10
to மின்தமிழ்
திரு . விக்ரமன் அவர்கள் சங்க இலக்கியத்தில் சிவபெருமான் இருப்பதை
ஒப்புக்கொண்டுதான் தம் கருத்தைக் கூற முற்படுகிறார்; ஆனால் சுடலை மாடன்
வழிபாடு சங்ககாலத்துக்கும் முற்பட்டது என்று தாமாகவே முன்முடிவு
செய்துகொண்டு அதற்கான தரவுகளில் பொருத்தம் தேடுகிறார்.

On Sep 15, 6:49 am, விக்ரமன் <ekams...@gmail.com> wrote -

///////தொல்காப்பியர் காலத்தில் தமிழ்நாட்டில் சிவன் வழிபாடு


இருந்ததற்கான

சான்றுகள் இல்லை. முதன் முதலாகச் சங்க இலக்கியத்தில் தான் சிவனைப்


பற்றிய குறிப்புகளைக் காண்கிறோம் (சிவன் என்ற பெயர் இல்லாவிடினும்).

சங்க இலக்கியங்களில் சிவன் முது முதல்வன், தொல் முது கடவுள் என்று
குறிக்கப்பட்டிருப்பதிலிருந்து சிவன் வழிபாடு மிகப் பழங்
காலத்திலிருந்தே,
தொல்காப்பியர் காலத்திலேயே கூட இருந்திருக்கலாமோ என்று தோன்று கிறது.
தொல்காப்பியர் அதைக் குறிப்பிடாததற்குக் காரணம் என்னவாக இருக்கக்


கூடும்? அது உயர்குடி மக்களாலும், நடுத்தர மக்களாலும் ஏற்றுக்
கொள்ளப்படாமல் கீழ்த்தட்டு மக்களிடம் மட்டுமே இருந்திருக்கலாம். உலகம்
என்பது உயர்ந்தோர் மாட்டே என்ற கொள்கைப்படி, கீழ்த்தட்டு மக்களிடம்
நிலவிய இந்த வழிபாட்டைத் தன் நூலில் சேர்ப்பதற்குத் தகுதியற்றதாகத்

தொல்காப்பியர் கருதியிருக்கலாம். சங்க காலத்தில் இது மேல் தட்டு
மக்களிடமும் பரவி இருக்கலாம் //////


இங்கு ப்ரச்னை வேறு. விக்ரமன் அவர்கள் தொல்காப்பிய ஆதாரம்
தேடுகிறார்.

சுடலை மாடனுக்கு promotion கொடுத்து சிவனாராக ஆக்கினரா, இல்லை சிவ
வழிபாடு சிறு தெய்வ வழிபாட்டோடு ஒன்றித் தன் வடிவம் இழந்தது என்று
சொல்கிறாரா தெரியவில்லை. சங்க இலக்கியச் சான்றை அவர் ஒப்புக்
கொள்வதால் இங்கு அதை விவரிக்கத் தேவையில்லை.


இதுபோன்ற ஆய்வுகளைத் தொடங்க விழையும் நண்பர்கள் முதலில் திரு .
மோகனரங்கன் அவர்கள் எழுதிய கட்டுரையை ஒருமுறை பார்வையிடுவது நல்லது.
நமது குழுமத்தில் முதலில் வெளியான மடலாடல் பின்னர் ’தமிழ் ஹிந்து’
வில் தொகுத்து வழங்கப்பட்டது -

http://www.tamilhindu.com/2009/11/invading-the-sacred-book-review/

தேவ்

On Sep 26, 11:35 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
> *சிவமணம் கமழும் சங்கப்பாடல்கள்:*
>
> *By முனைவர் கோ.ந.முத்துக்குமாரசுவாமி
> *
>
> *http://www.thinnai.com/?module=displaystory&story_id=60804107&format=...
> *


>
> எட்டுத்தொகை நூல்களின் கடவுள் வாழ்த்துப் பாடல்கள் அனைத்தும் சிவபரத்துவத்தை
> விளக்குவனவே. அதனை விளக்கத்தொடங்கினால் அதுவே ஒரு தனிக்கட்டுரையாகும்.
>
> ஐங்குறுநூற்றின் கடவுள் வாழ்த்துப்பாடல், சங்காரகாரணனாகிய சிவபெருமானே மீண்டும்
> புனருற்பவம் செய்யும் முழுமுதற்கடவுள் என்ற உண்மையைச் சாற்றுகின்றது.
> தர்க்கத்தின் அடிப்படையில் சங்கார காரணனே முதல் என்ற உண்மையை முதன் முதலில்
> நிலைநாட்டியவர் சிவஞானபோத ஆசிரியர் மெய்கண்டார் ஆவர். ஆனால் இவருடைய

> திருவவதாரத்திற்குப் பலநூற்றாண்டுகளுக்கு முன்பே ஐங்குறுநூறு, * *
>
> *“நீல மேனி வாலிழைபாகத் *
>
> *தொருவ னிருதா ணிழற்கீழ் *
>
> *மூவகை யுலகு முகிழ்த்தன முறையே” *


>
> என்று எடுத்தியம்பிற்று. இவ்வாறு பாரதம் பாடிய பெருந்தேவனார் கொள்கையை

> மேற்கொண்டதாலல்லவோ, மெய்கண்டதேவர், சிவஞானபோதம் முதற் சூத்திரத்தில்,* *
>
> *“அவனவ ளதுவெனு மவைமூ வினைமையின் *
>
> *தோற்றிய திதியே யொடுங்கிமலத் துளதா *
>
> *மந்த மாதி யென்மனார் புலவர்.” *என்றருளிச் செய்தார்.

> எலும்பணி, புதுத்திங்கட் கண்ணி, பொற்பூணாம் பாம்பணி, விடையூர்தி,(மார்கழித்) ...
>
> read more »

விக்ரமன்

unread,
Sep 27, 2010, 8:08:03 AM9/27/10
to மின்தமிழ்
என்னுடைய கீழ்க்காட்டப்பட்ட பதிவில் ஒரு பிழை நேர்ந்து விட்டது.
"தொல்காப்பியக் காலத்தில் இல்லாத சிவன் வழிபாடு சங்க காலத்தில் தலை
தூக்கி" என்று இருக்கவேண்டும். தவறுக்கு வருந்துகிறேன்.

> ...
>
> read more »

Dhivakar

unread,
Sep 27, 2010, 8:36:35 AM9/27/10
to mint...@googlegroups.com
"தொல்காப்பியக் காலத்தில் இல்லாத சிவன் வழிபாடு"

புரியவில்லை..

2010/9/27 விக்ரமன் <ekam...@gmail.com>
> ...
>
> read more »

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com

வினோத்-VINOTH

unread,
Sep 27, 2010, 9:28:26 AM9/27/10
to mint...@googlegroups.com
திருமூலர், திருமந்திரத்தின் காலத்தை யாரேனும் சொல்லுங்களேன் தயவு செய்து



--
வினோத் கன்னியாகுமரி
http://tamilnanbargal.com/friends/vinoth


coral shree

unread,
Sep 27, 2010, 9:35:39 AM9/27/10
to mint...@googlegroups.com
அப்பப்பா..........எத்துணைத் தகவல்கள்........நன்றி....நன்றி.......நன்றி.......

2010/9/27 devoo <rde...@gmail.com>

விக்ரமன்

unread,
Sep 28, 2010, 3:43:32 AM9/28/10
to மின்தமிழ்

On Sep 27, 5:36 pm, Dhivakar <venkdhiva...@gmail.com> wrote:
> "தொல்காப்பியக் காலத்தில் இல்லாத சிவன் வழிபாடு"
>
> புரியவில்லை..

தொல்காப்பியத்தில் நால் வகை நிலத்துக்கும் உரிய தெய்வங்கள்
பேசப்படுகின்றன. அவை மாயோன் எனப்படும் திருமால், இந்திரன், வருணன்,
சேயோன் எனப்படும் முருகன். இவை தவிர கொற்றவை பற்றியும்
குறிப்பிடப்படுகிறது. சிவனைப் பற்றிய குறிப்பு இல்லை. எனவே அக்காலத்தில்
சிவன் வழிபாடு இருந்திராது என்பது என் கருத்து.

சிவன் என்ற பெயர் காணப்படாவிடினும் சங்க இலக்கியங்களில் சிவன் தாழ்சடை
பொலிந்த அருந்தவத்தோன் [ புறம் 1], முக்கட் செல்வன் [ புறம் 6 ],
கறைமிடற்று அண்ணல் [புறம் 55], நீலமணிமிடற்று அண்ணல் [புறம் 91 ],
முதுமுதல்வன் [புறம் 166 ], நீலமேனி வாலிழை பாகத்து ஒருவன் [ஐங்குறுநூறு
கடவுள் வாழ்த்து], மழை தலை வைத்தவன் [ஐங்குறுநூறு 207], காய் கடவுள்,
பைங்கட் பார்ப்பான் [பரிபாடல் 5], புங்கம் ஊர்பவன், மறுமிடற்று அண்ணல்,
ஆதிரை முதல்வன் [ பரிபாடல் 8], சலதாரி [ பரிபாடல் 9], முக்கணான்
[கலித்தொகை 2], ஈர்ஞ்சடை அந்தணன் [கலித்தொகை 38], ஆலமர் செல்வன்
[ கலித்தொகை 81], கணிச்சியோன் [கலித்தொகை 103], செவ்வான் அன்னமேனியான்
[அகநானூறு கடவுள் வாழ்த்து] முதலிய பல அடைமொழிகளால் குறிக்கப்படுகிறார்.

விக்ரமன்

unread,
Sep 28, 2010, 3:56:11 AM9/28/10
to மின்தமிழ்
திருமூலர் சங்க காலத்துக்கும் தேவாரக் காலத்துக்கும் இடைப்பட்டவராக
இருக்கக் கூடும். அவருடைய நூலில் இடைச் செருகல்கள் நிறைய இருப்பதாகக்
கூறுகிறார்கள். எனவே கால நிர்ணயம் அரிது. பார்க்க http://en.wikipedia.org/wiki/Thirumoolar

ஆண்டுக்கு ஒரு பாடல் வீதம் இயற்றி 3000 ஆண்டுகள் வாழ்ந்தார் என்ற வழக்கை
ஒப்புக் கொள்பவரிடமிருந்து நான் விடைபெற்றுக் கொள்கிறேன். திருமூலர்
சங்க காலத்துக்குப் பிந்தியவர் என்ற அடிப்படையில் தான் என்னுடைய முழுக்
கட்டுரையும் உள்ளது.

On Sep 27, 6:28 pm, வினோத்-VINOTH <vinoth...@gmail.com> wrote:
> திருமூலர், திருமந்திரத்தின் காலத்தை யாரேனும் சொல்லுங்களேன் தயவு செய்து
>
> --

> *வினோத் கன்னியாகுமரி*
> *http://tamilnanbargal.com/friends/vinoth*<http://tamilnanbargal.com/friends/vinoth>

வினோத்-VINOTH

unread,
Sep 28, 2010, 4:01:59 AM9/28/10
to mint...@googlegroups.com


2010/9/28 விக்ரமன் <ekam...@gmail.com>

திருமூலர் சங்க காலத்துக்கும்  தேவாரக் காலத்துக்கும் இடைப்பட்டவராக
இருக்கக் கூடும். அவருடைய நூலில் இடைச் செருகல்கள் நிறைய இருப்பதாகக்
கூறுகிறார்கள். எனவே கால நிர்ணயம் அரிது. பார்க்க http://en.wikipedia.org/wiki/Thirumoolar

ஆண்டுக்கு ஒரு பாடல் வீதம் இயற்றி 3000 ஆண்டுகள் வாழ்ந்தார் என்ற வழக்கை
ஒப்புக் கொள்பவரிடமிருந்து நான் விடைபெற்றுக் கொள்கிறேன். திருமூலர்
சங்க காலத்துக்குப் பிந்தியவர் என்ற அடிப்படையில் தான் என்னுடைய முழுக்
கட்டுரையும் உள்ளது.

நல்லது.
திருமந்திரத்தில் இடைச்செருகல் உள்ளது. யாரோ சொருகி வி்ட்டார்கள்.. அதனால் திருமூலரை நம்புவது முட்டாள் தனம்

விக்கியை நம்பலாம்.


--
வினோத் கன்னியாகுமரி
http://tamilnanbargal.com/friends/vinoth


Dhivakar

unread,
Sep 28, 2010, 5:13:07 AM9/28/10
to mint...@googlegroups.com
ஐயா,

நான் முன்னமே எடுத்துரைத்தவை இதற்கும் பொருந்தும். தொல்காப்பியர் ஒரு விஷயம் சொல்லவில்லை என்றால் அது இல்லை என்றாகிவிடாது.

தொல்காப்பியம்தான் தமிழரின் சரித்திர ஆதாரம் என்ற பார்வையில் பார்க்கக்கூடாது என்பதைத்தான் தெளிவுபடுத்துகிறேன். ஒரு நிகழ்ச்சி தொல்காப்பியத்தில் குறிப்பிடப்பட்டிருந்தால் ஏற்றுக் கொள்வதும், குறிப்பிடாவிட்டால் அது நடுவில் வந்தது எனச் சொல்வதும் எந்த ஆய்வில் சேர்த்தி?



2010/9/28 விக்ரமன் <ekam...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com

N. Kannan

unread,
Sep 28, 2010, 8:08:25 AM9/28/10
to mint...@googlegroups.com
2010/9/28 விக்ரமன் <ekam...@gmail.com>:

> ஆண்டுக்கு ஒரு பாடல் வீதம் இயற்றி 3000 ஆண்டுகள் வாழ்ந்தார் என்ற வழக்கை
> ஒப்புக் கொள்பவரிடமிருந்து நான் விடைபெற்றுக் கொள்கிறேன். திருமூலர்
> சங்க காலத்துக்குப் பிந்தியவர் என்ற அடிப்படையில் தான் என்னுடைய முழுக்
> கட்டுரையும் உள்ளது.
>

திருமூலர் 10ம் நூற்றாண்டு என்பது திருமந்திரம் ஆய்வுப்பதிப்பு செய்த
டாக்டர் சுப.அண்ணாமலை துணிபு.

க.>

விக்ரமன்

unread,
Sep 29, 2010, 2:29:25 AM9/29/10
to மின்தமிழ்
திரு திவாகர்,
நீங்கள் சொல்வதை ஒப்புக் கொள்கிறேன். தொல்காப்பியத்தில்
குறிப்பிடப்படாவிட்டால், அது அக்காலத்தில் இல்லை என்றுஆகிவிடாது.
ஆயினும், பிற தெய்வங்களைக் குறிப்பிட்ட தொல்காப்பியர் பிற்காலத்தில்
பெரும் தெய்வமாக விளங்கிய சிவனைப் பற்றிப் பேசாதது ஏன், கிடைக்கின்ற
சங்க நூல்களிலும், காரைக்கால் அம்மையார் பாடல்களிலும் சிவன் சிவன் என்ற
பெயரால் குறிப்பிடப்படாதது ஏன், தேவாரக் காலத்திலிருந்து சிவன் என்ற
பெயரே பெரு வழக்காக ஆனது ஏன், சோழர் காலக் கல்வெட்டுகளில் பெரும்பாலும்
மகாதேவர் என்ற பெயராலேயே குறிப்பிடப்படுவது ஏன் என்பதைச்
சிந்திக்கும்போது சிவ வழிபாடு படிப்படியாகப் பரிணாம வளர்ச்சி அடைந்ததாகக்
கருத இடமுள்ளது என்று நினைக்கிறேன். மாற்றுக் கருத்துகள் தெரிவித்தால்
ஏற்றுக்கொள்கிறேன்.
விக்ரமன்

வினோத்-VINOTH

unread,
Sep 29, 2010, 2:43:13 AM9/29/10
to mint...@googlegroups.com


2010/9/29 விக்ரமன் <ekam...@gmail.com>
திரு திவாகர்,
ஆயினும், பிற தெய்வங்களைக் குறிப்பிட்ட தொல்காப்பியர் பிற்காலத்தில்
பெரும் தெய்வமாக விளங்கிய சிவனைப் பற்றிப் பேசாதது ஏன்,  கிடைக்கின்ற
சங்க நூல்களிலும், காரைக்கால் அம்மையார் பாடல்களிலும் சிவன் சிவன் என்ற
பெயரால் குறிப்பிடப்படாதது ஏன், தேவாரக் காலத்திலிருந்து சிவன் என்ற
பெயரே பெரு வழக்காக ஆனது ஏன், சோழர் காலக் கல்வெட்டுகளில் பெரும்பாலும்
மகாதேவர் என்ற பெயராலேயே குறிப்பிடப்படுவது ஏன் என்பதைச்
சிந்திக்கும்போது சிவ வழிபாடு படிப்படியாகப் பரிணாம வளர்ச்சி அடைந்ததாகக்
கருத இடமுள்ளது என்று நினைக்கிறேன். மாற்றுக் கருத்துகள் தெரிவித்தால்
ஏற்றுக்கொள்கிறேன்.

ஐயா,

பரிணாம வளர்ச்சி என நீங்கள் கூறுவது அந்த சிவன் என்ற பெயருக்கு பொருத்தமாய் வருகிறது. சிவ வழிபாட்டிற்கு பொருத்தமாய் வரவில்லையே..  தயவு செய்து விளக்கவும்



--

விக்ரமன்

unread,
Sep 30, 2010, 1:19:58 AM9/30/10
to மின்தமிழ்
திரு வினோத்,
வழிபாடு என்ற சொல்லை சிவன் தொடர்பான எல்லாவற்றையும் உள்ளடக்கிய மிக
விரிந்த பொருளில் பயன்படுத்துகிறேன்.
தொல்காப்பியத்தில் சிவனைப் பற்றிக் குறிப்பிடப்படவில்லை என்பதைத் தான்
மீண்டும் பிடித்துத் தொங்க வேண்டி இருக்கிறது.

வேத ஸம்ஹிதைகளிலும், சங்க நூல்களிலும் சிவன் மயான வாசியாகக்
கூறப்படவில்லை. அதை முதலில் கூறுபவர் அம்மையார் தான்.

சஙக நூல்களில் கலித்தொகை, பரிபாடல், திருமுருகாற்றுப்படை இவை காலத்தால்
பிற்பட்டன என்று கூறுகிறார்கள். இவற்றில் தான் முருகன் சிவகுமாரனாகக்
கூறப்படுகிறான். மற்ற சங்க நூல்களில் சிவனுக்கும் முருகனுக்கும் உள்ள
உறவு கூறப்படவில்லை. திருமுருகாற்றுப்படையில் தான் கொறறவை சிறுவனாகவும்
பழையோள் குழவியாகவும் முருகன் கூறப்படுகிறான்.

விநாயகரைச் சிவகுமாரனாகக் கூறும் வழக்கம் தேவாரக் காலத்திலிருந்து தான்
தொடங்குகிறது. மணிவாசகர் கூட சிவனை வேலன் தாதை என்று தான்
குறிப்பிடுகிறார். விநாயகரைப் பற்றி அவர் குறிப்பிடவில்லை. அவர்
காலத்தில் விநாயகர் வழிபாடு பெருமளவில் பரவியிருந்தும் கூட அது
எல்லோராலும் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை எனத் தோன்றுகிறது.

சங்க நூல்களில் திருநீறு பற்றிய குறிப்புகள் இல்லை. அம்மையார் இறைவன்
சுடலை நீற்றைப் பூசிக்கொண்டிருப்பதாகக் கூறுகிறார். ஆனால் இறையன்பர்கள்
திருநீறு பூசும் வழக்கம் தேவாரப் பாடல்களிலிருந்து தான் துவங்குகிறது.

அது போல நமச்சிவாய மந்திரமும் தேவாரக் காலத்திலிருந்து தான்
தொடங்குகிறது.

இந்திந்தக் காலங்களில் இதிது இல்லை என்ற எதிர்மறைகளைக் கொண்டே நான்
வாதிடுவதாக நீங்கள் நினைக்கலாம். எல்லாவற்றையும் மொத்தமாகப் பார்க்கும்
போது இவை சிறுகச் சிறுகத் தான் வளர்ச்சி அடைந்து வந்திருக்கக் கூடும்
என்ற ஐயம் எனக்கு எழுகிறது.

நேற்றைய ஏன் பட்டியலில் இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.தமிழ்நாடு தவிர
இந்தியாவின் பிற இடங்களில் சிவாலயம் என்று குறிப்பிடாமல் மகாதேவர் ஆலயம்
என்றே குறிப்பிடுகிறார்கள். இதற்கும் தென்னாடுடைய சிவன் என்று மணிவாசகர்
கூறியதற்கும் தொடர்பு இருக்குமோ ?
விக்ரமன்
On Sep 29, 11:43 am, வினோத்-VINOTH <vinoth...@gmail.com> wrote:
> 2010/9/29 விக்ரமன் <ekams...@gmail.com>


>
> > திரு திவாகர்,
> > ஆயினும், பிற தெய்வங்களைக் குறிப்பிட்ட தொல்காப்பியர் பிற்காலத்தில்
> > பெரும் தெய்வமாக விளங்கிய சிவனைப் பற்றிப் பேசாதது ஏன்,  கிடைக்கின்ற
> > சங்க நூல்களிலும், காரைக்கால் அம்மையார் பாடல்களிலும் சிவன் சிவன் என்ற
> > பெயரால் குறிப்பிடப்படாதது ஏன், தேவாரக் காலத்திலிருந்து சிவன் என்ற
> > பெயரே பெரு வழக்காக ஆனது ஏன், சோழர் காலக் கல்வெட்டுகளில் பெரும்பாலும்
> > மகாதேவர் என்ற பெயராலேயே குறிப்பிடப்படுவது ஏன் என்பதைச்
> > சிந்திக்கும்போது சிவ வழிபாடு படிப்படியாகப் பரிணாம வளர்ச்சி அடைந்ததாகக்
> > கருத இடமுள்ளது என்று நினைக்கிறேன். மாற்றுக் கருத்துகள் தெரிவித்தால்
> > ஏற்றுக்கொள்கிறேன்.
>
> ஐயா,
>
> பரிணாம வளர்ச்சி என நீங்கள் கூறுவது அந்த சிவன் என்ற பெயருக்கு பொருத்தமாய்
> வருகிறது. சிவ வழிபாட்டிற்கு பொருத்தமாய் வரவில்லையே..  தயவு செய்து விளக்கவும்
>
> --

devoo

unread,
Sep 30, 2010, 4:33:45 AM9/30/10
to மின்தமிழ்
>> திருமூலர் சங்க காலத்துக்குப் பிந்தியவர் <<

>> திருமூலர் சங்க காலத்துக்கும் தேவாரக் காலத்துக்கும் இடைப்பட்டவராக


இருக்கக் கூடும். அவருடைய நூலில் இடைச் செருகல்கள் நிறைய இருப்பதாகக்
கூறுகிறார்கள்<<

>> திருமூலர் 10ம் நூற்றாண்டு என்பது திருமந்திரம் ஆய்வுப்பதிப்பு செய்த டாக்டர் சுப.அண்ணாமலை துணிபு<<


” நந்தி அருள் பெற்ற நாதரை நாடிடின்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மன்று தொழுத பதஞ்சலி வியாக்ரமர்
என்றிவர் என்னோடு எண்மரும் ஆமே”

என்ற திருமந்திரத்தின் அகச்சான்றை எந்த நூற்றாண்டோடு பொருத்துவது ?
இதையும் இடைச்செருகல் என ஒதுக்க வேண்டுமா ?
இடையில் செருகப்பட்ட பாக்களின் பட்டியல் வெளியாகியுள்ளதா ?


தேவ்


On Sep 28, 2:56 am, விக்ரமன் <ekams...@gmail.com> wrote:
> திருமூலர் சங்க காலத்துக்கும்  தேவாரக் காலத்துக்கும் இடைப்பட்டவராக
> இருக்கக் கூடும். அவருடைய நூலில் இடைச் செருகல்கள் நிறைய இருப்பதாகக்

> கூறுகிறார்கள். எனவே கால நிர்ணயம் அரிது. பார்க்கhttp://en.wikipedia.org/wiki/Thirumoolar

N. Kannan

unread,
Oct 1, 2010, 8:54:34 AM10/1/10
to mint...@googlegroups.com
2010/9/30 devoo <rde...@gmail.com>:

> இடையில் செருகப்பட்ட பாக்களின் பட்டியல் வெளியாகியுள்ளதா ?
>
தேவ் சார்:

டாக்டர் சுப.அண்ணாமலையாரின் திருமந்திரம் ஆய்வுப்பதிப்பு உங்களிடம்
இல்லையா? மூன்று தொகுதிகள். நீண்டகால ஆய்விற்குப்பின் இடைச்செறுகல்கள்
தெளிவாக சுட்டப்படுகின்றன.

க.>

Reply all
Reply to author
Forward
0 new messages