தோள் என்றால் என்ன?

1,021 views
Skip to first unread message

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Mar 21, 2011, 4:34:53 AM3/21/11
to mintamil
நண்பர்களே,

தோள் என்ற சொல்லுக்கு நாம் இன்று 'புஜம்' என்ற பொருளையே பயன்படுத்தி வருகிறோம்.

ஆனால் சங்க காலத்திலும் சரி, திருக்குறளிலும் சரி, ஏன் கம்ப ராமாயணத்திலும் கூட தோள் என்ற சொல்லுக்கு 'கண் விளிம்பு' அல்லது 'கண்' என்ற பொருட்களையே பயன்படுத்தி உள்ளனர்.

இதைப் பற்றிய எனது ஆய்வுக் கட்டுரை கீழே இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.


படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம்.


அன்புடன்,

தி.பொ.ச.

விஜயராகவன்

unread,
Mar 21, 2011, 5:38:35 AM3/21/11
to மின்தமிழ்
From MTL

தோள்² tōḷ
, n. < தோள்-. Hole, perforation; தொளை. (அக. நி.)

தோள்³ tōḷ
, n. < dōs. [K. M. tōḷ, Tu. tōḷu.] 1. Shoulder; புயம். சிலைநவி
லெறுழ்த்தோ ளோச்சி (பெரும்பாண். 145). 2. Arm; கை. தோளுற் றொர் தெய்வந்
துணையாய் (சீவக. 10).


விஜயராகவன்

N. Ganesan

unread,
Mar 21, 2011, 8:11:26 AM3/21/11
to மின்தமிழ்

On Mar 21, 4:38 am, விஜயராகவன் <viji...@gmail.com> wrote:
> From MTL
>
> தோள்² tōḷ
> , n. < தோள்-. Hole, perforation; தொளை. (அக. நி.)
>

தமிழ்ச் சொற்களில் இரண்டாம் எழுத்து -ள்-, -ண்-, -ட்-
ஒரு தொகுதியாய் வரும். உ-ம்: அள்ளை, அண்டை, அட்டை
எல்லாம் அடுத்து இருப்பது.

அதுபோல், தோள் (தொளை), தோண்டு, தொட்டி, தோட்டம் (பள்ளமான
இடத்தில் நீர் வசதியுடன் உள்ள பயிர்நிலம்), ....

---------

தோள் என்பது திராவிடச் சொல் என வேர்ச்சொல் அகராதி
(பர்ரோ & எமனோ) அறிவிக்கிறது. கைகள் உடலில்
தோண்டிப் பொருந்துமிடம் தோள் என்று பெயர் பெற்றது
என்று கருதுகிறேன்.

நா. கணேசன்

வேந்தன் அரசு

unread,
Mar 21, 2011, 10:15:36 PM3/21/11
to mint...@googlegroups.com


21 மார்ச், 2011 4:34 am அன்று, திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com> எழுதியது:

நண்பர்களே,

தோள் என்ற சொல்லுக்கு நாம் இன்று 'புஜம்' என்ற பொருளையே பயன்படுத்தி வருகிறோம்.

ஆனால் சங்க காலத்திலும் சரி, திருக்குறளிலும் சரி, ஏன் கம்ப ராமாயணத்திலும் கூட தோள் என்ற சொல்லுக்கு 'கண் விளிம்பு' அல்லது 'கண்' என்ற பொருட்களையே பயன்படுத்தி உள்ளனர்.
 
>மேற்கண்ட பாடல்களில் வரும் 'தோள் நெகிழ்தல்' என்பதற்கு 'கண் கலங்குதல்' என்பது பொருளாகும். கண் கலங்கும்போது கண் விளிம்பில் பூசப்பட்ட  மைவரிகள் அழிந்து கெடும். இதைத்தான் 'பெருந்தோள் நெகிழ அவ் வரி வாட' என்று கூறுகிறது நற்றிணையின் 358 ஆம் பாடல்.

 பொருள் பொருந்தவில்லை
 
தோளில் அணியும் அணிகள் ஞெகிழும் என்ற பொருள்தான்.
 
 
 
--
வேந்தன் அரசு
 
எம் சொற்கள் உம்மை புண்படுத்தலாம்
ஆனால் அவை புண்படுத்துவதற்காக சொல்லப்பட்டவை அல்ல

Madhurabharathi

unread,
Mar 22, 2011, 2:08:06 AM3/22/11
to mint...@googlegroups.com
கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி

    - திருக்குறள்
 
தோட்கப்படாத என்றால் துளையிடப்படாத என்று பொருள். “காது நன்றாகத்தான் கேட்கிறது” என்று ஒருவர் சொல்லிக்கொண்டிருந்தாலும் கேள்வியறிவினால் துளைக்கப்படாவிட்டால் அந்தச் செவி கேட்காத செவிதான்.
 
அன்புடன்
மதுரபாரதி 
2011/3/21 விஜயராகவன் <vij...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

N. Ganesan

unread,
Mar 22, 2011, 2:47:25 AM3/22/11
to மின்தமிழ்

On Mar 22, 1:08 am, Madhurabharathi <madhurabhar...@gmail.com> wrote:
> *கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால்*
> *தோட்கப் படாத செவி*
> *
> *    - திருக்குறள்


>
> தோட்கப்படாத என்றால் துளையிடப்படாத என்று பொருள். “காது நன்றாகத்தான்
> கேட்கிறது” என்று ஒருவர் சொல்லிக்கொண்டிருந்தாலும் கேள்வியறிவினால்
> துளைக்கப்படாவிட்டால் அந்தச் செவி கேட்காத செவிதான்.
>
> அன்புடன்
> மதுரபாரதி

அறியத் தந்தமைக்கு நன்றி!

அன்புடன்
நா. கணேசன்

> 2011/3/21 விஜயராகவன் <viji...@gmail.com>

> >http://groups.google.com/group/minTamil- Hide quoted text -
>
> - Show quoted text -

devoo

unread,
Mar 22, 2011, 5:05:11 AM3/22/11
to மின்தமிழ்
*தோட்கப் படாத செவி*


நீள்வான் குறளுருவாய் நின்றிரந்து மாவலிமண்,
தாளால் அளவிட்ட தக்கணைக்கு மிக்கானை,
*தோளாத* மாமணியைத் தொண்டர்க் கினியானை,
கேளாச் செவிகள் செவியல்ல கேட்டாமே
-
திருமங்கையாழ்வார்


On Mar 22, 1:08 am, Madhurabharathi <madhurabhar...@gmail.com> wrote:

> *கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால்*
> *தோட்கப் படாத செவி*
> *
> *    - திருக்குறள்


>
> தோட்கப்படாத என்றால் துளையிடப்படாத என்று பொருள். “காது நன்றாகத்தான்
> கேட்கிறது” என்று ஒருவர் சொல்லிக்கொண்டிருந்தாலும் கேள்வியறிவினால்
> துளைக்கப்படாவிட்டால் அந்தச் செவி கேட்காத செவிதான்.
>
> அன்புடன்
> மதுரபாரதி

> 2011/3/21 விஜயராகவன் <viji...@gmail.com>

Hari Krishnan

unread,
Mar 22, 2011, 8:09:07 AM3/22/11
to mint...@googlegroups.com


2011/3/22 Madhurabharathi <madhura...@gmail.com>

    - திருக்குறள்
 
தோட்கப்படாத என்றால் துளையிடப்படாத என்று பொருள். “காது நன்றாகத்தான் கேட்கிறது” என்று ஒருவர் சொல்லிக்கொண்டிருந்தாலும் கேள்வியறிவினால் துளைக்கப்படாவிட்டால் அந்தச் செவி கேட்காத செவிதான்.
 
அன்புடன்
மதுரபாரதி 

ஏன் மேட்ரு,

ஒரு ஜந்தேகம்.  

தோள் கண்டார், தோளே கண்டார்; தொடு கழல் கமலம் அன்ன
தாள் கண்டார், தாளே கண்டார்; தடக் கை கண்டாரும், அஃதே;   
வாள் கொண்ட கண்ணார் யாரே, வடிவினை முடியக் கண்டார்? -
ஊழ் கொண்ட சமயத்து அன்னான் உருவு கண்டாரை ஒத்தார். 

என்ற கம்பராமாயண மேற்கோளில், மூன்றாமடியில், வாள்கொண்ட கண்ணார் அப்படின்னு ஏன் சொன்னான்?  தொடர்ந்து, வாள்கொண்ட தோளார் யாரே வடிவினை முடியக் கண்டார்னு ஏன் சொல்லல?



--
அன்புடன்,
ஹரிகி.

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Mar 22, 2011, 8:09:43 AM3/22/11
to mint...@googlegroups.com
தோள் = கண் விளிம்பு = கண் வலயம் அதாவது கண்ணைச் சுற்றி மையிடப்படும் நீள்வட்டப் பகுதி. இனி, 

தோள்/தொள் ளுதல் = வளைத்தல் என்றும் பொருள் கொள்ளலாம்.

தோண்டி = பானை = வளைத்துச் செய்யப்பட்டது.
தோட்டம் = வரப்பு / வேலியால் சூழப்பட்டது.
தொட்டி = வளைத்துச் செய்யப்பட்டது.
தோடு = வளைவான காதணி.

அன்புடன்,

தி.பொ.ச.


2011/3/21 N. Ganesan <naa.g...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
.....................................................................................
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்!
......................................................................................

தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண வாருங்கள்: http://thiruththam.blogspot.com

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Mar 22, 2011, 8:13:58 AM3/22/11
to mint...@googlegroups.com
கம்பன் தோள் என்று ராமனின் கண்களை முதலில் குறிப்பிடுகிறான். பின்னர் வாள் கொண்ட கண்ணார் என்று அவனைக் காணும் பெண்களைக் குறிப்பிடுகிறான். இரண்டையும் வேறுபடுத்திக் காட்டுவதற்காக வேறு வேறு சொற்களைக் கையாண்டிருக்கலாம்.


அன்புடன்,

தி.பொ.ச.

2011/3/22 Hari Krishnan <hari.har...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்

N. Ganesan

unread,
Mar 22, 2011, 7:15:02 PM3/22/11
to மின்தமிழ்

On Mar 22, 7:13 am, திருத்தம் பொன்.சரவணன் <vaend...@gmail.com> wrote:
> கம்பன் தோள் என்று ராமனின் கண்களை முதலில் குறிப்பிடுகிறான்.

தோள் = கண்??

> பின்னர் வாள்
> கொண்ட கண்ணார் என்று அவனைக் காணும் பெண்களைக் குறிப்பிடுகிறான். இரண்டையும்
> வேறுபடுத்திக் காட்டுவதற்காக வேறு வேறு சொற்களைக் கையாண்டிருக்கலாம்.
>
> அன்புடன்,
>
> தி.பொ.ச.
>

> 2011/3/22 Hari Krishnan <hari.harikrish...@gmail.com>
>
>
>
>
>
>
>
>
>
>
>
> > 2011/3/22 Madhurabharathi <madhurabhar...@gmail.com>


>
> >>     - திருக்குறள்
>
> >> தோட்கப்படாத என்றால் துளையிடப்படாத என்று பொருள். “காது நன்றாகத்தான்
> >> கேட்கிறது” என்று ஒருவர் சொல்லிக்கொண்டிருந்தாலும் கேள்வியறிவினால்
> >> துளைக்கப்படாவிட்டால் அந்தச் செவி கேட்காத செவிதான்.
>
> >> அன்புடன்
> >> மதுரபாரதி
>
> > ஏன் மேட்ரு,
>
> > ஒரு ஜந்தேகம்.
>
> > தோள் கண்டார், தோளே கண்டார்; தொடு கழல் கமலம் அன்ன
> > தாள் கண்டார், தாளே கண்டார்; தடக் கை கண்டாரும், அஃதே;

> > வாள் கொண்ட *கண்ணார் *யாரே, வடிவினை முடியக் கண்டார்? -

N. Ganesan

unread,
Mar 22, 2011, 7:31:42 PM3/22/11
to மின்தமிழ்

On Mar 22, 7:09 am, திருத்தம் பொன்.சரவணன் <vaend...@gmail.com> wrote:
> தோள் = கண் விளிம்பு = கண் வலயம் அதாவது கண்ணைச் சுற்றி மையிடப்படும்
> நீள்வட்டப் பகுதி. இனி,
>
> தோள்/தொள் ளுதல் = வளைத்தல் என்றும் பொருள் கொள்ளலாம்.
>
> தோண்டி = பானை = வளைத்துச் செய்யப்பட்டது.
> தோட்டம் = வரப்பு / வேலியால் சூழப்பட்டது.
> தொட்டி = வளைத்துச் செய்யப்பட்டது.

‘தொட்டு அனைத்து ஊறும் மணற் கேணி’
இதிலிருந்து தொட்டி வராதா?

கணேசன்


> தோடு = வளைவான காதணி.
>
> அன்புடன்,
>
> தி.பொ.ச.
>

> 2011/3/21 N. Ganesan <naa.gane...@gmail.com>

Raja sankar

unread,
Mar 22, 2011, 10:31:46 PM3/22/11
to mint...@googlegroups.com
இதிலிருந்து தொட்டி வராதா?

நல்ல கேள்வி.

ராஜசங்கர்



2011/3/23 N. Ganesan <naa.g...@gmail.com>

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Mar 23, 2011, 12:17:03 AM3/23/11
to mint...@googlegroups.com
தொட்டியானது தோண்டிச் செய்யப் படுவதல்ல.
வளைத்துச் செய்யப்படுவது.

கேணி அல்லது பள்ளத்தைத் தான் தோண்டுவார்கள்.

அன்புடன்,

2011/3/23 N. Ganesan <naa.g...@gmail.com>
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Mar 23, 2011, 12:32:13 AM3/23/11
to mint...@googlegroups.com
வளைத்துச் செய்யப்படும் சில பொருட்கள்:

வள்ளம்
வட்டில்
கிண்ணம்
பாண்டம்
குடம்
கடிஞை

அன்புடன்,

தி.பொ.ச


2011/3/23 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>

Madhurabharathi

unread,
Mar 23, 2011, 1:15:28 AM3/23/11
to mint...@googlegroups.com
2011/3/23 N. Ganesan <naa.g...@gmail.com>
 
‘தொட்டு அனைத்து ஊறும் மணற் கேணி’
இதிலிருந்து தொட்டி வராதா?

கணேசன்
 
 
தொடு என்ற சொல்லுக்குத் தோண்டு என்ற பொருள் உண்டு. தொட்டனைத்து என்பது அதனையொட்டிப் பிறந்தது. ‘எவ்வளவு ஆழமாகத் தோண்டுகிறோமோ அவ்வளவு நீர் மணற்கேணியில் ஊறும்’ என்பதாக.
 
துளை என்ற சொல்லின் முன்வடிவம் தொளை என்பதுதான். தோள் (perforate, bore) என்ற வேரிலிருந்து பிறந்தது தொளை (make a hole or bore). தோல் என்ற பெயர்ச் சொல்லிலிருந்து தொலி (தோலை உரி என்ற பொருளில் இன்னமும் நெல்லை மாவட்டத்தில் இவ்வழக்கு உண்டு) என்ற வினைச் சொல் பிறந்தாற்போல.
 
திவசத்தெழு கதிரோன் எனத் தெரிகின்றது ஓர் கணையால்
துவசத்தையும் துணித்தே அவன் மணித்தோளையும் தொளைத்தான்
                             
என்று வரும் நிகும்பலை யாகப் படலப் (124) பாடலின் இறுதிச் சொல்லைத் ‘தொளைத்தான்’ என்றுதான் லெக்ஸிகன் கொடுத்துள்ளது. ஆனால் கம்பன் கழகப் பதிப்பு உட்பட எல்லாப் பதிப்புகளும் ‘துளைத்தான்’ என்றே பதிப்பித்துள்ளன.
 
தொளையுறு புழைவேய் தூங்கிசைக் கானம்
 
என்கிறது கம்பராமாயணம் (காட்சிப்படலம்-417)
 
இந்த இடத்தில் ஓட்டைகளைக் கொண்ட மூங்கில் என்பது பொருளல்ல. மூங்கில் புல்வகைத் தாவரம் என்பதால் அதனுள்ளே வெற்றிடம்தான் காணப்படும். அதைக் குறிப்பது இந்தத் ‘தொளை’. அதாவது tubular.
 
பெரிய ஓட்டையுள்ள காது தொள்ளைக் காது எனப்படும்.
 
'தொளை’ என்பதிலிருந்து பிறப்பது ‘தொள்ளை’. உள்ளே எதுவுமற்ற ஒன்றை (hollow) 'தொள்ளை’ என்று சொல்லலாம். நாம் ஆங்கில மரபையொட்டி உள்ளீடற்ற என்கிறோம். சொல் இருப்பதை அறியாமல் புதிதாகப் புனைந்து பயன்படுத்துகிறோம்.
 
அன்புடன்
மதுரபாரதி

devoo

unread,
Mar 23, 2011, 2:13:35 AM3/23/11
to மின்தமிழ்
>> தொட்டியானது தோண்டிச் செய்யப் படுவதல்ல.
வளைத்துச் செய்யப்படுவது. <<

கல்லைத் தோண்டிச் செய்யப்பட்ட தொட்டி -
http://www.aruvithurachurch.org/history.html

சதுர வடிவில் கல்தொட்டி -
http://www.maheshwaran.net/index.php?option=com_content&view=article&id=648:recent-tanjore-temple-trip&catid=48&Itemid=0#g_648_0

இன்னும் பெரிய கல்தொட்டிகளும் உண்டு

மரத்தில் -

http://www.artisanbarrels.info/engraved+wood+barrel+carving+oak+carved+keg+wine+cask+sculputured+stands+laser+logo+engraving+pyrography+wood+burning+art.html

தேவ்

On Mar 22, 11:17 pm, திருத்தம் பொன்.சரவணன் <vaend...@gmail.com> wrote:
> தொட்டியானது தோண்டிச் செய்யப் படுவதல்ல.
> வளைத்துச் செய்யப்படுவது.
>
> கேணி அல்லது பள்ளத்தைத் தான் தோண்டுவார்கள்.
>
> அன்புடன்,
>

> 2011/3/23 N. Ganesan <naa.gane...@gmail.com>

> > > > Visit our website:http://www.tamilheritage.org;youmay like to visit

N. Ganesan

unread,
Mar 23, 2011, 8:27:58 AM3/23/11
to மின்தமிழ்

On Mar 23, 12:15 am, Madhurabharathi <madhurabhar...@gmail.com> wrote:
> > 2011/3/23 N. Ganesan <naa.gane...@gmail.com>


>
> >  ‘தொட்டு அனைத்து ஊறும் மணற் கேணி’
> >> இதிலிருந்து தொட்டி வராதா?
>
> >> கணேசன்
>
> தொடு என்ற சொல்லுக்குத் தோண்டு என்ற பொருள் உண்டு. தொட்டனைத்து என்பது
> அதனையொட்டிப் பிறந்தது. ‘எவ்வளவு ஆழமாகத் தோண்டுகிறோமோ அவ்வளவு நீர்
> மணற்கேணியில் ஊறும்’ என்பதாக.
>
> துளை என்ற சொல்லின் முன்வடிவம் தொளை என்பதுதான். தோள் (perforate, bore) என்ற
> வேரிலிருந்து பிறந்தது தொளை (make a hole or bore). தோல் என்ற பெயர்ச்
> சொல்லிலிருந்து தொலி (தோலை உரி என்ற பொருளில் இன்னமும் நெல்லை மாவட்டத்தில்
> இவ்வழக்கு உண்டு) என்ற வினைச் சொல் பிறந்தாற்போல.
>

> *திவசத்தெழு கதிரோன் எனத் தெரிகின்றது ஓர் கணையால்


> துவசத்தையும் துணித்தே அவன் மணித்தோளையும் தொளைத்தான்

> *


> என்று வரும் நிகும்பலை யாகப் படலப் (124) பாடலின் இறுதிச் சொல்லைத்
> ‘தொளைத்தான்’ என்றுதான் லெக்ஸிகன் கொடுத்துள்ளது. ஆனால் கம்பன் கழகப் பதிப்பு
> உட்பட எல்லாப் பதிப்புகளும் ‘துளைத்தான்’ என்றே பதிப்பித்துள்ளன.
>

இப்போதெல்லாம் எல்லா இடத்திலும் சிவப்பு என்றே
அச்சாகிறது. ஆனால் பிங்கலந்தை நிகண்டில் செவப்பு
என்றே இருக்கிறது. சிவப்பு/செவப்பு (< செம்) , முய்/மொய்,
முசுமுசு/மொசுமொசு போல் துளை/தொளை - இரண்டும் சரியாக
இருக்கிறது. ஒன்றுக்கொன்று மாற்று. ஒன்றை மாத்திரம்
சரியென்று கொள்ள ஏலாது.

வெண்டைக் காய் காய்ந்த பின் உள்ளே தொள்ளையாய்
இருக்கும், விதைகள் சலசலக்கும். வெண்டு என்ற சொல்ல்லும்
இருக்கிறது. வெண்டையின் இன்னொரு வடிவம் விண்டை போலும்.
பஞ்சதந்த்ரம் நூலில் விண்ட (bhiNDa) என்றுள்ளது. அதன் வேர்
தெரியவில்லை என்று எழுதியுள்ளனர். bhiNDa = விண்டை/வெண்டை
தான்.

அன்புடன்,
நா. கணேசன்


> *தொளையுறு புழைவேய் தூங்கிசைக் கானம்*
>  **


>  என்கிறது கம்பராமாயணம் (காட்சிப்படலம்-417)

> **


> இந்த இடத்தில் ஓட்டைகளைக் கொண்ட மூங்கில் என்பது பொருளல்ல. மூங்கில் புல்வகைத்
> தாவரம் என்பதால் அதனுள்ளே வெற்றிடம்தான் காணப்படும். அதைக் குறிப்பது இந்தத்
> ‘தொளை’. அதாவது tubular.
>
>  பெரிய ஓட்டையுள்ள காது தொள்ளைக் காது எனப்படும்.

> **

N. Ganesan

unread,
Mar 23, 2011, 8:42:22 AM3/23/11
to மின்தமிழ்

On Mar 23, 1:13 am, devoo <rde...@gmail.com> wrote:
>  >> தொட்டியானது தோண்டிச் செய்யப் படுவதல்ல.
>     வளைத்துச் செய்யப்படுவது. <<
>

> கல்லைத் தோண்டிச் செய்யப்பட்ட தொட்டி -http://www.aruvithurachurch.org/history.html
>

ஆம். கொங்குநாட்டில் தோட்டம் (காடு மேடாக இருந்த நிலங்களை
தோண்டி, கல், புதர், சிரை அகழ்ந்து நீக்கி, மண்ணை தோண்டி,
குப்பை மண் இட்டு சமனாக்கி கிணறு தோண்டி விளைநிலம்
ஆக்குதல் - தோட்டம்). அங்கே களம் இருக்கும் (தாம்பு கட்டி,
நெல்லடிக்கும் களம். பதர் போன்றன களைவதால் களம் (< களை-).
தீய சக்திகளை வேலன் பூசாரி வெறியாட்டு ஆடிக் களையும்
இடமும் களம் தான் (சங்க இலக்கியத்தில்). சிந்து சமவெளியில்,
மர உரல்கள் வைத்து தானியம் குற்றுமிடங்களைச்
சுற்றி வட்டமாய் செங்கல் பாவி இருக்குமிடங்கள் ஏராளமாய்
அழகழகாய் கிடைக்கின்றன. ரிக்வேதம் உலூகல (ulU-khala) என்று
சொல்வது இது என்று சில அறிஞர்கள் எழுதியுள்ளனர்.
உரல்-களம் > உரு-களம் > உலூகல என்று எண்ணுகிறேன்.

கொங்கின் தோட்டங்களில் களங்களில் நாய்கள், பூனைகள்
இருக்கும். அவற்றுக்கு ராகி கூழ் போன்ற அம்பிலி காய்ச்சி
ஊற்றுவதற்கு கல்லில் தோண்டிய தொட்டிகள் நிலத்தில்
பதியப்பட்டிருக்கும்..

தோடு - ஒரு அகலமான பொருள் ஒரு சிறிய (புள்ளி அல்லது சற்று
பெரிதாய்) வேறொன்றில் இணைந்தால் (அதாவது, தோண்டப்பட்டு
இணைந்திருந்தால்) தோடு எனப் பெயர் பெறுகிறது.
உ-ம்: பனைமரத்து ஓலை (ஒரு தண்டால் மரத்தில் சேரும்), பூவின் இதழ் (பூ
நடுவே கர்ணிகைப் பொகுட்டில் இணைவது),
காதில் ஓரிடத்தில் இணைந்து பனையோலை (அ) பூவிதழ்
போல வட்டமாய்த் தொங்குவது தோடு (நடராஜர் காதில் இருக்கும்
- பார்வதியின் ’ஸிம்பல்’). இணைந்து தொகுதியாய் இருக்கும்
முரசுகளும் முரசின் தோடு என்கிறது லெக்சிகன்.
தோள் + து = தோடு.

நா. கணேசன்

> சதுர வடிவில் கல்தொட்டி -http://www.maheshwaran.net/index.php?option=com_content&view=article&...


>
> இன்னும் பெரிய கல்தொட்டிகளும் உண்டு
>
> மரத்தில் -
>

> http://www.artisanbarrels.info/engraved+wood+barrel+carving+oak+carve...

> > > > > Visit our website:http://www.tamilheritage.org;youmaylike to visit

Raja sankar

unread,
Mar 23, 2011, 9:56:52 AM3/23/11
to mint...@googlegroups.com
கல்லை தோண்டி செய்யப்படும் தொட்டிகள் நீண்ட காலம் தாங்கும் என்பதால் இது போல் செய்வார்கள். கோயில்களிலும் விளக்கு போல் தூண்களில் தோண்டி வைத்திருப்பார்கள். 

சில சமயம் இந்த கல் தொட்டிகள் உருட்டிசெல்ல வசதியாகவும் செய்யப்படுவதுண்டு. 

சென்னையில் குழி தோண்டுவதை நோண்டுவது என்கிறார்கள். இது எதிலிருந்து வந்தது என யாருக்கேனும் தெரியுமா?

ராஜசங்கர்



2011/3/23 N. Ganesan <naa.g...@gmail.com>
கொங்கின் தோட்டங்களில் களங்களில் நாய்கள், பூனைகள்

Raja sankar

unread,
Mar 23, 2011, 9:58:39 AM3/23/11
to mint...@googlegroups.com
கொங்கில் கீழே தோண்டினால் தொட்டி. நிலத்திற்கு மேலே கட்டினால் பண்னை. 

பள்ளம் என்பது வாய்க்கால் போன்று இருப்பது. பெரும்பாலும் உறம்புத்தண்ணீர் அதாவது தேவைப்படாத நீர் வழிந்தோடுவதற்காக இருக்கும் வாய்க்கால். 

ராஜசங்கர்



2011/3/23 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>

devoo

unread,
Mar 23, 2011, 1:27:21 PM3/23/11
to மின்தமிழ்
*உரல்-களம் > உரு-களம் > உலூகல*

ஜூலை 2000 ல் நீங்கள் அகத்தியர் குழுமத்தில்
சொல்லியிருப்பதாகத் தெரிகிறது. யாராவது இதை ஆதரித்தனரா ?

இதைத் தொடர்ந்து மேலும் ஆய்வு நடந்துள்ளதா ?

‘உல்’ ‘உத்’ வேர்களில் இதே வடிவில் இருக்கும் சொற்கள்
பிறந்த களத்துமேடு எது என்பதையும் சொல்ல வேண்டும் இல்லையா ?

உரல் களம் என்ற சொல் உண்மையில் தமிழர் பயன்பாட்டில் இருந்ததா ?

உரு களம் இலக்கியத்தில் எங்காவது இடம் பெற்றுள்ளதா ?

ஒரு காலத்திலும் வழக்கத்தில் இல்லாத சொற்களை உருவாக்கிப் பிற மொழிச்
சொல்லோடு பொருத்துவதை எடிமாலஜி அனுமதிக்கிறதா ?

உழையைப்போல் உலூபி தமிழ்ப் பெண்ணா ? அவ நாகர்கோவில்
பக்கம்னு கூட கத கட்டிரலாம். அது ஒரு ரவுண்டு சுத்தும்


தேவ்

> > > > > > Visit our website:http://www.tamilheritage.org;youmayliketo visit

> ...
>
> read more »

N. Ganesan

unread,
Mar 24, 2011, 7:16:49 AM3/24/11
to மின்தமிழ்

On Mar 23, 12:27 pm, devoo <rde...@gmail.com> wrote:
>                      *உரல்-களம் > உரு-களம் > உலூகல*
>
> ஜூலை 2000 ல் நீங்கள் அகத்தியர் குழுமத்தில்
> சொல்லியிருப்பதாகத் தெரிகிறது. யாராவது இதை ஆதரித்தனரா ?
>
> இதைத் தொடர்ந்து மேலும் ஆய்வு நடந்துள்ளதா ?
>
>  ‘உல்’ ‘உத்’ வேர்களில் இதே வடிவில்  இருக்கும் சொற்கள்
> பிறந்த களத்துமேடு எது என்பதையும் சொல்ல வேண்டும் இல்லையா ?
>

உலூ-கல “உரல்-கல்” என்று வேத நிபுணர்கள் எழுதியுள்ளனர்.

ஆர்க்கியாலஜியில் கிடப்பனவற்றைப் பார்த்தால்,
உரல்-களம் பொருத்தமாயிருக்கிறது.

நா. கணேசன்

வேந்தன் அரசு

unread,
Mar 24, 2011, 7:25:20 AM3/24/11
to mint...@googlegroups.com


24 மார்ச், 2011 7:16 am அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:
அம்மிக்கல், ஆட்டுக்கல், உரல்கல் நு தானே நாம் சொல்லுறோம்
 

N. Ganesan

unread,
Mar 24, 2011, 8:25:12 AM3/24/11
to மின்தமிழ்

On Mar 24, 6:25 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> 24 மார்ச், 2011 7:16 am அன்று, N. Ganesan <naa.gane...@gmail.com> எழுதியது:


>
>
>
>
>
>
>
> > On Mar 23, 12:27 pm, devoo <rde...@gmail.com> wrote:
> > >                      *உரல்-களம் > உரு-களம் > உலூகல*
>
> > > ஜூலை 2000 ல் நீங்கள் அகத்தியர் குழுமத்தில்
> > > சொல்லியிருப்பதாகத் தெரிகிறது. யாராவது இதை ஆதரித்தனரா ?
>
> > > இதைத் தொடர்ந்து மேலும் ஆய்வு நடந்துள்ளதா ?
>
> > >  ‘உல்’ ‘உத்’ வேர்களில் இதே வடிவில்  இருக்கும் சொற்கள்
> > > பிறந்த களத்துமேடு எது என்பதையும் சொல்ல வேண்டும் இல்லையா ?
>
> > உலூ-கல “உரல்-கல்” என்று வேத நிபுணர்கள் எழுதியுள்ளனர்.
>
> > ஆர்க்கியாலஜியில் கிடப்பனவற்றைப் பார்த்தால்,
> > உரல்-களம் பொருத்தமாயிருக்கிறது.
>
> அம்மிக்கல், ஆட்டுக்கல், உரல்கல் நு தானே நாம் சொல்லுறோம்
>


சிந்து சம்வெளியில் இந்தக் கல்கள் கிடைப்பதில்லை.


> --
> வேந்தன் அரசு
>
> எம் சொற்கள் உம்மை புண்படுத்தலாம்

> ஆனால் அவை புண்படுத்துவதற்காக சொல்லப்பட்டவை அல்ல- Hide quoted text -

N. Ganesan

unread,
Mar 24, 2011, 12:38:00 PM3/24/11
to மின்தமிழ்

On Mar 24, 6:25 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:

> 24 மார்ச், 2011 7:16 am அன்று, N. Ganesan <naa.gane...@gmail.com> எழுதியது:


>
> > On Mar 23, 12:27 pm, devoo <rde...@gmail.com> wrote:
> > >                      *உரல்-களம் > உரு-களம் > உலூகல*
>
> > > ஜூலை 2000 ல் நீங்கள் அகத்தியர் குழுமத்தில்
> > > சொல்லியிருப்பதாகத் தெரிகிறது. யாராவது இதை ஆதரித்தனரா ?
>
> > > இதைத் தொடர்ந்து மேலும் ஆய்வு நடந்துள்ளதா ?
>
> > >  ‘உல்’ ‘உத்’ வேர்களில் இதே வடிவில்  இருக்கும் சொற்கள்
> > > பிறந்த களத்துமேடு எது என்பதையும் சொல்ல வேண்டும் இல்லையா ?
>
> > உலூ-கல “உரல்-கல்” என்று வேத நிபுணர்கள் எழுதியுள்ளனர்.
>
> > ஆர்க்கியாலஜியில் கிடப்பனவற்றைப் பார்த்தால்,
> > உரல்-களம் பொருத்தமாயிருக்கிறது.
>
> அம்மிக்கல், ஆட்டுக்கல், உரல்கல் நு தானே நாம் சொல்லுறோம்
>

Exactly. This the question I asked some 15 years ago.

While Vedic experts said, ulU-khala is related with ural-kal,
I pointed out the problem. We do not have ural-"kal" made
of stone 'kal' at all. We find "kaLam" made of nicely laid
out bricks. We find many, many brick platforms in circles
with central pit. Indus archaeologists say the central
pits in circular brick platforms contained wooden mortars.
Wooden materials do not lost for 4000 years in the hot Indus region.

A smaller wooden mortar today:
http://woodenmortarpestle.org/

So, ulu-khala in Rgveda. While I agree that Vedicists
are correct in linking ural with ulu, I think
because of lack of material evidence, khala is "kaLam"
rather tham "kal" (=stone). No "ural-kal" from
Rgvedic days has ever been found in Punjab or Sind or Gujarat.

Best wishes,
N. Ganesan

> --
> வேந்தன் அரசு
>
> எம் சொற்கள் உம்மை புண்படுத்தலாம்

devoo

unread,
Mar 24, 2011, 1:01:11 PM3/24/11
to மின்தமிழ்
Etymologies are exceedingly frequent in the Brahmanas. Moreover, it is
regarded as a special advantage if an etymology is not quite accurate,
for "the gods love that which is hidden." Thus, for instance, the name
of the god Indra is derived from Indh, "to kindle," and it is said:
he is, therefore, actually named Indha, and he is called "Indra" only
because *the gods love what is concealed*. Or the word "ulukhala,"
which means "mortar," is derived from uvu kaat, meaning it shall make
wide, and ulukhala is declared to be a mystical designation for
urukara.

http://www.indianetzone.com/24/brahmanical_sources_ancient_indian_history.htm

பரோக்ஷப்ரியா இவ ஹி தே³வா​:|
The gods love what is concealed
சா²த³யதி இதி ச²ந்த³: |
(தமிழில் மறை; ஆச்சா²த³நம் - மறைத்தல்)


dev

Reply all
Reply to author
Forward
0 new messages