என்னைக் கவர்ந்த கவிஞர் கண்ணதாசனின் கவிதை வரிகளில் சில....... என்றும் நினைவில் நிற்பவை!
* சுதந்திரம் என்பதாக சொலொன்று கேட்டதுண்டு. இதந்தரும் சுதந்திரத்தை இன்றும் யான் கண்டதில்லை..
* எல்லாம் நானே என்பவர் வாழ்க்கை கல்லாய் , மணலாய்க் கனவாய் அழியும்..
* ஆடை இலாநாள் முதல் அறிவார்ந்த நாள் வரை அநியாயம் வென்றதென்ன...?
* பொய் வாழ்க்கை வாழ்கின்ற போலிகள் வாழ்விலே புகழ்கூட வருகின்றதே..!
* செய்யாத குற்றங்கள் செய்வோருக்கு எந்நாளும் செல்வங்கள்வளர்கின்றதே..!
* இருட்டுக்கு வெளிச்சம் தந்தார்
இழப்புக்கோர் ஈடும் தந்தார்
குருடுக்குக் கண்கள் தந்தார்
குவலயப் பெருமை காத்தார்!
* மெல்லச் சிரித்தாள்.... எனை வெல்லச் சிரித்தாள்!
* காக்கையொன்று வானம்பாடியாவதென்று கருதினால்
மூக்கும் மாறி குரலும் மாறி முகமும் மாற வேண்டுமே..?
* நாளை பெருநன்மை நடக்குமென விதியிருந்தால்
இன்று பொழுதெல்லாம் இடுக்கண்ணே வந்து நிற்கும்.
* நினைவுகளே.. நினைவுகளே நின்றுவிட மேட்டீரோ?
கனவுகளே.. கனவுகளே கரைந்துவிட மாட்டீரோ..?
*
--
மின் செய்தி மாலை படியுங்கள்.
Take life as it comes.
All in the game na !!
Pavala Sankari
Erode.
Tamil Nadu.