நண்பர்களே..
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் வெள்ளி விழா ஆய்வுக் கருத்தரங்கம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறோம்.
இந்த நிகழ்ச்சி சென்னையில் தமிழ் இணையக் கல்விக் கழக வளாகத்தில் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் நடைபெற உள்ள சிறப்பு நிகழ்வுகள்:
1. தனிநாயகம் அடிகள் பற்றிய குறும்பட வெளியீடு
2. தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகத்தின் ஐந்து ஆய்வு நூல்கள் வெளியீடு
3. அறிஞர் பெருமக்களின் ஆய்வுரைகள்
இந்த நிகழ்ச்சியில் நேரில் கலந்து கொள்ளத் தயாராகுங்கள்☘️🪷
-- முனைவர் க. சுபாஷிணி