திருவள்ளுவர் ஆண்டு

4,455 views
Skip to first unread message

தேமொழி

unread,
Jun 8, 2017, 4:15:34 AM6/8/17
to மின்தமிழ்
http://viduthalai.in/previousyear/home/viduthalai/rationalism/52667-2013-01-12-07-00-02.html

இந்த 60 ஆண்டு  சுழல் முறை யால் தமிழ்மொழி, மரபு, மாண்பு, பண்பு, வாழ்வு முதலியவற்றுக்கு ஏற்பட்டுள்ள அழிவும், இழிவும் எண்ணிப் பார்த்து, சிந்தித்து, உணர்ந்து, தெளிந்த தமிழ்  அறி ஞர்கள், புலவர்கள், சான்றோர்கள் 1921ஆம் ஆண்டு சென்னைப் பச் சையப்பன் கல்லூரியில் தமிழ்க்கடல் மறைமலைஅடிகள் தலைமையில் கூடிய மாநாட்டில் ஆராய்ந்தார்கள். பேராசிரியர் கா. நவச்சிவாயர் அந்த மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.

திருவள்ளுவர் பெயரில் தொடர்  ஆண்டு  பின்பற்றுவது, அதையே தமிழ் ஆண்டு எனக் கொள்வது; திருவள்ளுவர் காலம் கி.மு. 31 தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள் என்று முடிவு செய்தார்கள்.

இந்த முடிவுகள் எந்த அடிப்படையில் எடுக்கப்பட்டன என்று முத்தமிழ்க் காவலர் முனைவர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களை வினவினேன். மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அறிஞர்களின் அறிவு, ஆராய்ச்சி, அனுபவம் ஆகியவையே அடிப்படை என்று குறிப்பிடுங்கள் போதும் என்று விளக்கம் தந்தார்.

இந்த முடிவு செய்தவர்கள் தலைமையான தமிழ் அறிஞர்கள் தமிழ்க்கடல் மறைமலை அடிகள், தமிழ்த் தென்றல் திரு.வி. கலியாணசுந்தரனார், தமிழ்க் காவலர் கா. சுப்பிரமணியப் பிள்ளை, சைவப் பெரியார் சச்சிதானந்தம் பிள்ளை, நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார், நாவலர் சோமசுந்தர பாரதியார், பேராசிரியர் கா. நமச்சிவாயர், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் ஆகியோர் ஆவார்கள்.

1921ஆம் ஆண்டில்  நடந்த மாநாட்டில் எடுத்த முடிவை 18.1.1935ஆம் நாள் திருவள்ளுவர் திருநாள் கழகத்தினர் நடத்திய திருவிழாவில் தலைமை தாங்கிய தமிழ்க் கடல்  மறைமலை அடிகளார் உறுதி செய்து அறிவித்தார். திருவள் ளுவர் ஆண்டு கணக்கிட கிறித்துவ ஆண்டுடன்  31அய்க் கூட்டல் வேண்டும் என்று கூறி, திருவள்ளுவர்  ஆண் டைத் தொடங்கி வைத்தார்.  1935+31 = 1966. அதை அறிஞர் அவை ஏற்றுக் கொண்டது. அன்று தொட்டு அறி ஞர்களால் அவ்வாண்டு நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. (பக்கம் 117 திருவள்ளுவர் நினைவு மலர் 1935)

திருவள்ளுவர் ஆண்டுக்கு முதல் மாதம் தை இறுதி மாதம்  மார்கழி. புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள். ஏழு கிழமைகளில் புதன், சனி தவிர மற்றவை தமிழ். புதன் - அறிவன்; சனி - காரி. ஆங்கில ஆண்டுடன் 31 கூட்டினால் வருவது திருவள்ளுவர் ஆண்டு 2006+31=2037. தமிழ்நாடு அரசு திருவள்ளுவர் ஆண்டு முறையை ஏற்று 1971 முதல் தமிழ்நாடு  அரசு நாட்குறிப்பிலும் 1972 முதல் தமிழ்நாடு அரசிதழி லும்  1981 முதல் தமிழ்நாடு அரசின் அனைத்து அலுவல கங்களிலும் நடைமுறைப்படுத்தி வருகிறது.

தையே முதற்றிங்கள்; தைம் முதலே ஆண்டுமுதல்
பத்தன்று; நூறன்று; பன்னூறன்று
பல்லாயிரத் தாண்டாய்த் தமிழர் வாழ்வில்
புத்தாண்டு தைம்  முதல் நாள் பொங்கல் நன்னாள்.
நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு
அண்டிப் பிழைக்க வந்த ஆரியக் கூட்டம் காட்டியதே
அறிவுக்கு ஒவ்வாத அறுபது ஆண்டு
தரணி ஆண்ட தமிழர்க்கு
தை முதல்  நாளே தமிழ்ப் புத்தாண்டு

- புரட்சி கவிஞர் பாரதிதாசன்

தேமொழி

unread,
Jun 8, 2017, 4:23:32 AM6/8/17
to மின்தமிழ்

தமிழ் ஆண்டு (திருவள்ளுவராண்டு)

http://siragu.com/தமிழ்-ஆண்டு-திருவள்ளுவர/

Jan 1, 2012


காலத்தின் அருமை

நம் வாழ்வில் திரும்பப் பெற முடியாதவை மூன்று. ஒன்று காலம், மற்றவை மானம், உயிர்.

’நாளென ஒன்று போல் காட்டி உயிரீரும்

வாளது உணர்வார்ப் பெறின்’

என்கிற குறள் மூலமும், காலம் அறிதல் என்கிற அதிகாரத்தின் வழியும் காலத்தின் அருமையை வள்ளுவம் உணர்த்துகிறது.

நம் முன்னோர்கள் காலத்தை நொடி, நாழிகை, நாள், கிழமை, திங்கள், ஆண்டு, ஊழி என்று வானியல் முறைப்படி வரையறை செய்துள்ளனர்.

60 நாழிகையை ஒரு நாளாகவும் ஒரு நாளை வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம் என்று 6 சிறு பொழுதுகளாகவும் ஓர் ஆண்டை இளவேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி, பின்பனி என்று 6 பெரும் பொழுதுகளாகவும் பிரித்துள்ளனர். காலத்தைக் கணக்கிடுவதில் இத்துணைக் கவனம் செலுத்திய தமிழர்கள் வாழ்க்கை, வரலாற்று நிகழ்ச்சிகளைப் பொதுவான ஆண்டுக்கணக்கால் குறிப்பிடும் வழக்கத்தைப் பின்பற்றவில்லை என்பது வியப்பாக இருக்கிறது, வருத்தம் தருகிறது.

இன்றைய நிலை

இன்னாளில் வழக்கில் உள்ள ‘பிரபவ முதல் அட்சய’ வரை உள்ள 60 ஆண்டுகளில் ஒன்று கூட தமிழ் இல்லை. அவை பற்சக்கர முறையில் இருப்பதால் 60 ஆண்டுகளுக்கு மேல் உள்ள காலத்தைக் கணக்கிடுவதற்கு உதவியாக இல்லை.  அதற்கு வழங்கும் கதை அறிவு, அறிவியல், தமிழ் மரபு, மாண்பு, பண்பு ஆகியவற்றுக்குப் பொருத்தமாகவும் இல்லை, பல்லாயிரமாண்டுகளாக வாழ்ந்து வரும் தமிழினத்தின் காலத்தை வரையறுக்கவும் முடியவில்லை.

இந்த இழிநிலையைப் போக்கத் தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள், புலவர்கள் 1921ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில்  தமிழ்க்கடல் மறைமலை அடிகள் தலைமையில் கூடிப் பேராசிரியர் கா. நமச்சிவாயம் முன்னிலையில் ஆராய்ந்தார்கள். இக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு முடிவெடுத்தவர்களில் முக்கியமானவர்கள் தமிழ்த் தென்றல் திரு. வி. கல்யாணசுந்தரனார், தமிழ்க்காவலர் கா. சுப்பிரமணியப் பிள்ளை, சைவப்பெரியார் சச்சிதானந்தம் பிள்ளை, நாவலர் ந.மு. வெங்கடசாமி நாட்டார், நாவலர் சோமசுந்தர பாரதியார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் ஆகியோர் ஆவார்கள்.

அவர்கள் எடுத்த முடிவுகள்

திருவள்ளுவர் பெயரில் தொடராண்டு பின்பற்றுவது; அதையே தமிழ் ஆண்டு எனக்கொள்வது; திருவள்ளுவர் ஆண்டின் முதல் திங்கள் தை; இறுதித் திங்கள் மார்கழி; புத்தாண்டுத் துவக்கம் தை முதல் நாள். திருவள்ளுவர் காலம் கி.மு.31. ஆங்கில ஆண்டுடன் 31-ஐக் கூட்டினால் தமிழாண்டு வரும் (2011 + 31 = 2042)  என்று அந்நாளில் முடிவு செய்தனர். கிழமைகளில் புதன், சனி தவிர மற்றவை தமிழ்; புதன் = அறிவன்; சனி = காரி.

தமிழ் நாட்டரசு 1971 முதல் திருவள்ளுவராண்டு முறையை ஏற்று தமிழ் நாட்டரசு நாட்குறிப்பிலும், 1972 முதல் தமிழ் நாட்டு அரசிதழிலும், 1981 முதல் அரசின் அனைத்து அலுவல்களிலும்  நடைமுறைப்படுத்தி வருகிறது.

மேற்கண்ட விவரங்கள் மறைமலை நகரில் வாழ்ந்து வரும் திரு வ. வேம்பையன் அவர்களின் கட்டுரையிலிருந்து எடுத்தது. கடந்த 30 ஆண்டுகளாக இவர் திருவள்ளுவராண்டைத் தமிழகத்தில் நடைமுறைப்படுத்த கடும் முயற்சி எடுத்துவருகிறார். 1967 இல் ஆட்சிக்கு வந்தபோதோ அல்லது 1971 இல் பெரும் வெற்றி பெற்றபோதோ முழு வீச்சில் அரசு சட்டத்துடன் நடைமுறைப்படுத்தி இருந்தால் கடந்த 40 ஆண்டுகளில் நாம் வெற்றி பெற்றிருப்போம். ஒன்று தமிழாண்டு திருவள்ளுவராண்டு யாராலும் மாற்ற முடியாத படி (எப்படி இன்று ‘தமிழ்நாடு’ என்ற பெயரை யார் ஆட்சிக்கு வந்தாலும் மாற்ற முடியாதோ) வழக்கத்தில் வந்து நிலைத்து இருக்கும்.

என் கருத்து

அறிஞர்களும் சான்றோர்களும் தை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்திருந்தாலும் ஒரு சாரார் இதை மறுத்து வழக்கமான சித்திரை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாகப் பாவித்து வருகிறார்கள். இவர்கள் தமிழ் ஆண்டுகள் என்கிற பெயரில் வழங்கி வரும் வடமொழிப் பெயர்களையும் ஏற்றுக் கொண்டு வருவது வருத்தத்தைத் தருகிறது. தமிழருக்கென ஒரு தொடராண்டு கொண்டுவருவதில் ஒருவருக்கும் மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால் தமிழ் முதல்  திங்கள் ’தை’யா அல்லது ’சித்திரை’யா என்பதுதான் குழப்பம். தமிழ்ப் பேசும் அனைத்து தரப்பினருக்கும் வடமொழிப் பெயரை மாற்றுவதிலும் மாற்றுக் கருத்தேதுமிருக்க வாய்ப்பில்லை.

திருவள்ளுவரின் காலத்தை கி.மு.31 என்று கணித்ததில்தான் குழப்பம் வருகிறது. திருவள்ளுவர் காலம் கி.பி. 4ஆம் நூற்றாண்டிற்கு முன்பு இருந்ததற்கு வாய்ப்பில்லை என்று மேலை நாட்டுத் தமிழறிஞர்கள் நிலை நாட்டுகிறார்கள். அதில் முக்கியமானவர் செக்கோசுலேவியாவில் பிறந்த பெரும் தமிழறிஞர் பேராசிரியர் கமில் சுவலபில் அவர்களாவார். இவர் மொழியின் அடிப்படையில் தமிழ் நூல்களின் காலத்தை ஆய்ந்து திருக்குறள் கி.பி. 4ஆம் நூற்றாண்டிற்குப் பின்புதான் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று ‘The Smile of Murugan on Tamil Literature of South India’ என்கிற நூலில் நிறுவியுள்ளார். அவர் ஏன் அப்படி கூறுகிறார் என்பதை விரிவாகப் பார்ப்போம்.

திருக்குறளின் காலம்

தமிழர்களின் புனித நூலான திருக்குறளின் காலத்தைக் கணிப்பது மிகக்கடினமானதும், சர்ச்சைக்குரியதுமாகும். குறள் சங்கக் காலத்தைச் சேர்ந்தது இல்லை என்பது தமிழாய்ந்த அறிஞர்கள் முடிபு. குறளின் மொழி, முந்தைய நூல்களின் மேற்கோள் காட்டல், வட மொழிச் சொற்களின் பயன்பாடு, சமண மதத்தின் தாக்கம் ஆகியவைகளை வைத்துப் பார்க்கையில் திருக்குறள் சங்கக்காலத்திற்குப் பின்புதான் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று உணரலாம். திருக்குறளின் மொழியையும் இலக்கணத்தையும் பார்க்கையில் அந்நாளில் மொழி வளர்ந்த நிலையை அடைந்திருக்கும் நிலையை அறியலாம். அதனால் அந்நூல் கி.பி.400-கி.பி.500 ஆண்டுகளுக்கிடையில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று தெளியலாம். குறள், திரு. சோமசுந்தர பாரதியார் (திருவள்ளுவர்), திரு இராசமாணிக்கனார் (தமிழ் மொழி வரலாறு) போன்றோர் கூறுவது போல் திருக்குறள் காலம் கி.மு.30-ம் அல்ல. திரு. வையாபுரிப் பிள்ளை (இலக்கிய மணி மாலை) கூறுவது போல் கி.பி.6-ஆம் நூற்றாண்டிற்குப் பிந்தியதும் அல்ல.

சங்க இலக்கியங்களில் இல்லாத புதிய இலக்கண முறைகளை முதன் முதலாகத் திருக்குறளில் காண்கிறோம். பன்மையை இறுதியில் குறிக்கும் ‘கள்’, உயர்திணையையும், அஃறிணையையும் குறிக்கும் பெயர்ச்சொற்கலில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது (263-மற்றையவர்கள், 919-பூரியர்கள்), நிபந்தனை விகுதியான (Conditional Suffix) ‘ஏல்’ (368-உண்டேல், 655-செய்வானேல், 556-இன்றேல்), எதிர்மறை (Negative) உருபு (101,103-செய்யாமல், 1024-சூழாமல்). இது போன்ற புதிய சொற்களின் பயன்பாட்டால் திருக்குறளைச் சங்க இலக்கியங்களுள் ஒன்றாகக் கருத முடியாது.

மேலும் திருக்குறளில் சங்க இலக்கியங்களைக் காட்டிலும் அதிகமான வடமொழிச் சொற்களை காணலாம். சுவலபில் அவர்கள் திருக்குறளில்

102 சொற்கள் வட மொழியிலிருந்து கடன் வாங்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார். அமரர் (121), அமிழ்தம் (11), ஆகுலம் (34), ஆசாரம் (1075), ஆதி (1), ஏமம் (306), கனம் (29), காமன் (1197), சிவிகை (37), தேவர் (1073) போன்ற பல வட மொழிச் சொற்கள் திருக்குறளிலுள்ளன. சுவலபில் எழுதிய ‘The Smile of Murugan on Tamil Literature of South India’ என்கிற புத்தகத்தின் 170,171-ஆம் பக்கங்களில் குறளில் பயன்படுத்தப்பட்டுள்ள அனைத்து வட மொழிச் சொற்களையும் பார்க்கலாம். ’பிறவிப் பெருங்கடல்’ எனும் சொல்லாட்சி வட மொழி நூலான ‘சம்சாரசாகரா’ எனும் நூலிலிருந்து எடுத்தது போலுள்ளது. சில குறள்கள் வடமொழி நூலான  ‘மானவதர்மச்சாத்திரம்’ நூலிலிருந்து முழுமையாக எடுத்துக் கையாண்டது போலுள்ளன. எடுத்துக்காட்டாக,  குறள் 43 — மானவ.III.72, குறள் 54 – மானவ.IX.12, குறள் 58 – மானவ. V.155 (Smile of Murugan, page 171). பெரு அளவிலான வட மொழிச் சொற்களை திருவள்ளுவர் பயன்படுத்தி இருப்பதால் அவர், சங்கக் காலத்திற்குப்பின்புதான் வாழ்ந்திருக்கக்கூடும். எனவே திருக்குறளின் காலம் கி.பி. 400-450 என்று கணிக்கலாம்.

வள்ளுவர் வட மொழிச் சொற்கள் அதிகம் பயன்படுத்தியிருந்தாலும் வட மொழி நூல்களின் சில கருத்துக்களை கையாண்டிருப்பதாலும், அவர் வட மொழி நன்கறிந்தவர் என்பது தெளிவு. சில வட மொழிச் சொல்லாக்கங்களை அவர் பயன்படுத்தியிருந்தாலும் பெரும்பாலான சொற்கள் தூய தமிழ்ச் சொற்களே. அவரது படைப்பில் பெரும்பாலானவை வடமொழி-வடவர் பண்பாட்டிற்கும் முந்திய சங்கத் தமிழரின் பண்பாட்டையேக் காட்டுகின்றன. இன்பம் (அகம்) என்பது தமிழருக்கே உரிய ஒரு இலக்கிய நடை. இதற்கு ’இன்பத்துப் பால்’ என்கிற ஒரு பெரும் பகுதியையே அவர் எழுதியதிலிருந்து அவர் வடவர் பண்பாடும், தமிழர் பண்பாடும் அறிந்த மூதறிஞர் எனலாம்.

மீண்டும் திருவள்ளுவராண்டு விவாதத்திற்கு வருவோம். திருவள்ளுவர் காலத்தைத் தவிர 1921-ல் பச்சையப்பன் கல்லூரியில் மறைமலையடிகள் தலைமையில் தமிழ்ச் சான்றோர்கள் எடுத்த முடிவில் எனக்கு உடன்பாடே. தமிழுக்கென ஒரு தொடராண்டு வேண்டும் என்கிற அப்பெரியோர்கள் கருத்தில் நான் உடன்படுகிறேன். வட மொழிக்கிணையான தமிழுக்குத் தமிழில் பெயரில்லாமல் வட மொழியில் பெயரிட்டு அதுவும் 60 ஆண்டு சுழற்சி முறையில் வழங்கி வருவது தமிழுக்கும் தமிழருக்கும் இழிவு. இதைப் போக்கத் தை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடுவது சிறப்பானதே. திருவள்ளுவரின் காலத்தில் நமக்கு மாற்றுக் கருத்து இருந்தாலும் திருக்குறளுக்கு மதிப்பளித்து திருவள்ளுவர் பெயரில் ஆண்டை நடை முறைப்படுத்துவதும் ஏற்கத்தக்கதே. அப்படி இதில் உடன்பாடு இல்லாவிட்டால் தமிழாண்டு என்று குறிப்பிட்டுத் தொடராண்டை வழங்கலாம்.

தையே முதற்றிங்கள்; தைம் முதலே ஆண்டு முதல்

பத்தன்று; நூறன்று; பன்னூ றன்று;

பல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்

புத்தாண்டு, தைம் முதல்நாள், பொங்கல் நன்னாள்

-பாவேந்தர் பாரதிதாசன்.

nkantan r

unread,
Jun 8, 2017, 6:18:33 AM6/8/17
to மின்தமிழ்
தனி இழை துவக்கியது சிறப்பு!  செய்திகளும் தங்கள் கருத்துகளும் அறியப் பெற்றோம்!

reverting to english:
1) the original meet happened and the decision was taken before independence and creation of india after including the tamilnadu (part of erstwhile madras presidency)
2) indian constituion doesnot allow a separate calendar for each state; (it was never thought!>>???)
3) I see from your post that the state of tamilnadu has passed a gazette notification for use of thiruvalluvar year ( i believe they have used the state's right to preserve its tradition and culture? would like to see the notificaiton and under which ministry;)
4) have they defined the length of a year? number of days in each month? do they remain same in each year? how the leap year is covered?
5) when a calendar day starts? midnight, 600 am? or as per sunrise? if show at which lattitude and longitude and which elevation?
6) i undertstand that a 60-year block is used; i dont know for what purpose;  (and what are the names; if புதன் is not tamil and need be translated as  அறிவன், are the year names changed?
(if i say வைகாசி  is coined on vishakh natchatra, there will be a horde here to claim the otherway around; so i am not discussing the names of the months!)
===================================

my opinion: unnecessary and wasteful

regards
rnakntan

தேனீ

unread,
Jun 8, 2017, 11:08:39 PM6/8/17
to மின்தமிழ்
பதிவுக்கு நன்றி தேமொழி.

ஏன் அக்கால தமிழறிஞர் ஓரு தொடர் ஆண்டு முறையைத் தமிழர் பின்பற்ற வேண்டும் என்ற முடிவுக்கு வந்த பின்னனியை அறிந்து எழுதுவதும் நன்றாக இருக்கும்.

அப்பொழுதுதான் திருவள்ளுவர் ஆண்டு ஏற்பட்டதற்கான காரணத்தைப் புரிந்து கொள்ள முடியும்.

காரணமில்லாமல் காரியம் ஏதுமில்லை.

அன்புடன் கமலநாதன்

தேமொழி

unread,
Jun 9, 2017, 12:27:02 AM6/9/17
to மின்தமிழ்


On Thursday, June 8, 2017 at 8:08:39 PM UTC-7, தேனீ wrote:
பதிவுக்கு நன்றி தேமொழி.

ஏன் அக்கால தமிழறிஞர் ஓரு தொடர் ஆண்டு முறையைத் தமிழர் பின்பற்ற வேண்டும் என்ற முடிவுக்கு வந்த பின்னனியை அறிந்து எழுதுவதும் நன்றாக இருக்கும்.


இதுவே நாம் கருத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான கருத்து ஐயா.   மேலும் இது உளவியல் அடிப்படை  கொண்டது.

"1921ஆம் ஆண்டில்  நடந்த மாநாட்டில் எடுத்த முடிவு" எனக் குறிப்பிடுகிறது கட்டுரை.  

அந்த சமயம் பலகலைக்கழகங்களில்  சமஸ்கிரதம் பெற்ற இடம் தமிழுக்குக் கொடுக்கப்படவில்லை. தமிழகக் கல்வி நிலையங்களில் தமிழுக்கு மதிப்பிருக்கவில்லை.  

தமிழ் படித்த பண்டிதர்களின் நிலையை  சமஸ்கிரத வித்துவான்களுடன் ஒப்பிடும்பொழுது  அவர்கள்  இரண்டாம் தர குடிமக்கள் போல கல்வி நிலையங்களில் நடத்தப்பட்டு ஊதியம் அங்கீகாரம் என சரியாக வழங்கப்படாமல் மதிப்புக் குறைவாக நடத்தப்பட்டார்கள்.

இது போல சொந்த நாட்டிலேயே நடத்தப்படுவது தாய்மொழி அவமதிக்கப்படுவது கண்டு பொங்கி  எழுந்தவர்களே நான்காம் மதுரை தமிழ்ச் சங்கம், கரந்தைத் தமிழ்ச் சங்கம், தமிழுக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழகம்  என்றெலாம் துவக்கினார்கள். 

இதுவே மனோன்மணீயம் சுந்தரானார் தமிழ்த்தாய்  வாழ்த்திலும் எதிரொலிக்கிறது.

அக்கால கல்விகற்ற தமிழறிஞர்கள்  தமிழுக்கு ஒரு தொன்ம வரலாறு உண்டு, தமிழுக்கு ஒரு பெருமை உண்டு, அந்நிய மொழிகளிடம் அடிமைப் படுவதில் இருந்து தமிழை விடுவிக்க தனித்தமிழ் போன்ற முயற்சி, தமிழருக்கான ஆண்டு என்ற முறைகளைக் கையில் எடுத்தார்கள்.

தமிழைக் குறைத்து மதிப்பிட்டால் பொறுக்க  முடியாத தமிழ் உணர்வு கொண்டவர்களுக்கு இதில் தங்கள் நிலையை அடையாளம் காணுவது சிரமமல்ல. 

நீங்கள் குறிப்பிடும் தமிழுணர்வு என்பது எனக்குத்  தெளிவாகவே விளக்குகிறது.

மற்றபடி தமிழருக்கு என்று ஒரு ஆண்டு, வள்ளுவராண்டு, தமிழ்ப் புத்தாண்டு தேவையா என்பது முற்றிலும் வேறு கேள்வி.

உலகம் முழுவதும் ஒருங்கே புரிந்து கொள்ள சீராக இயங்க uniform metric measurements அளவைமுறை   இருக்கிறது.   அது போல  நாள் கணக்கிடவும் gregorian calendar இருக்கிறது.  அதனால்  உலக நாடுகளில் இருந்த நாட்கணக்கிடும்  முறையும், அளவை முறைகளையும் கைவிட்டு பொது வழக்கத்திற்கு வந்து விட்டோம்.

இருந்தும்  இன்றும்  அமெரிக்கா பவுண்டு, யார்ட் என்று பழைய அளவை வைத்துக் கொண்டு அடம் பிடிக்கிறது.  யாரால் என்ன செய்ய முடிகிறது?

gregorian calendar இருக்கிறது என்று சீனா தங்கள்  ஆண்டுகள் நாட்கள் எவற்றையாவது கைவிட்டார்களா? 
சீனப் புத்தாண்டை அமெரிக்கா வரை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.   இது போல வேறு நாடுகளிலும் இருக்கிறது. 

நம் நாட்டிலும் மாநிலத்திற்கு மாநிலம் குடீ பாடவா, உகாதி, விஷூ  என்று கொண்டாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.  தமிழர்கள் தங்களுக்கென்று தனிப்பட்ட அடையாளம் ஒன்று வேண்டும் என்று விரும்பிச் செய்யும் பொழுது அதில்  ஏன் சமயவாதிகள் இடையிடுகிறார்கள் என்று எனக்குப் புரிவதில்லை.  எல்லோரும் விதம் விதமாகக் கொண்டாடும் பொழுது நீங்கள் ஒரு பக்கம் கொண்டாடுங்கள் நாங்கள் ஒரு பக்கம் கொண்டாடுகிறோம்.  யாருக்கு என்ன குறைந்து போயிற்று?  

gregorian calendar வந்துவிட்டது தூக்கிப் போடுங்கள் விதம் விதமான புத்தாண்டு கொண்டாட்டங்களையும், சக, சாலிவாகன, விக்கிரம ஆண்டுக் கணக்குகள் வேண்டாம் என ஏன் சொல்ல வேண்டும்.  

Hindu calendars, Vikram calendar, Bengali calendar, Malayalam calendar, Nanakshahi calendar  இத்தனை நாட்காட்டி முறை இந்தியாவில்  இருக்கும் பொழுது தமிழ் மக்களும் தங்களுக்கு என்று ஒன்றை தங்கள் பண்பாட்டின் அறிகுறியாக உருவாக்கி வைத்துக் கொள்வதில் யாருக்குத் தீங்கு ஏற்படுகிறது. இதையெல்லாம் பெங்காலி மலையாளி போன்றவர்களிடம் சொல்ல முடியுமா? இல்லை சீனாவிடம்தான் கேள்வி எழுப்ப முடியுமா?

தமிழர்  தங்களுக்கு என ஒரு  பண்பாட்டு வழக்கம் ஒன்றை  உருவாக்குவதில் என்ன தவறு?

இதில் தலையிட்டு  ஜெயலலிதா அரசு குட்டையைக் குழப்பியதை இப்பொழுது இருக்கும் புதிய அதிமுக  அரசோ, அல்லது அடுத்து ஆட்சியை நடத்தப் போகும் அரசோ சரி செய்தே தீரவேண்டும்.  

சமயவாதிகள் தொல்லை செய்வதை நிறுத்திவிட்டு அவர்கள் வழியில் போவதே நல்லது. சமயத் திணிப்பு தேவையில்லை. 

நீங்கள் கூறிய கூறிய கீழ்க்காணும் கருத்துகளில் எனக்கு 100% ஒப்புதல் உண்டு தேனீ ஐயா .  

எப்பொழுது தமிழருக்குத் தாம் ஓர் இனம் என்ற அறிவுத் தெளிவு ஏற்பட்டு அயலார் பிடியிலிருந்து விடுவித்துக் கொண்டனரோ அப்பொழுதிருந்தே தமிழர் தமக்கு ஓரு தொடர் ஆண்டு முறையை ஏற்படுத்திக் கொண்டனர். அதற்கு திருவள்ளுவர் ஆண்டு என்று பெயரிட்டனர். 
தன்னைத் தமிழர் என்று நினைக்காதவர் ஒதுங்கிக் கொள்ளலாம். 

இதுதான் தமிழருக்கும் தமிழராகச் சிந்திக்க முடியாதவருக்கும் உள்ள வேற்றுமை. தமிழர் என்பது உணர்வால் வருவது, அச்சொல்லை ஒர் இயந்திரத்தனமாக உச்சரிப்பதினால் ஏற்படுவது அல்ல.


..... தேமொழி  

Thenee MK

unread,
Jun 9, 2017, 12:32:55 AM6/9/17
to mintamil
இக்கருத்தைத்தான் எதிர் பார்த்தேன் தேமொழி.

பதிவுக்கு நன்றி.

 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/e5spO-rcbgo/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

nkantan r

unread,
Jun 9, 2017, 12:52:10 AM6/9/17
to மின்தமிழ்
dear ms thenmozhi,

celebrating a new year or heralding the completion of a solar/lunar cycle, either as a part of religion or regional celebrations, functions or traditions is a totally a different aspect than a state considering a new official calendar;

i dont mind an individual knowing or even using  vikram samwat or thiruvalluvar aandu in his personal interactions or even with groups of like minded or among who are aware of that;  more fun when we have april 14/15 as tamil new year based on chitra-panguni cycle and jan 14/15 based on thai- maasi cycle!

when in 1921 or thereabouts Maraimalai adigalar (vedaachalam )and others brought this out as part of creating a self awareness and raising the liberation spirit; well if the issue was against other members within tamilnadu, well that calls for rethinking...

like BGT used ganesh festival to raise hindu sentiments to gather and group the locals, it had a purpose; now ganesh festival is a high decibel, sound and water polluting, crass social celebration that is outliving its purpose and metamorphising as a social evil.

regards
rnkantan

Suba

unread,
Jun 10, 2017, 3:04:54 AM6/10/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram
​அன்பு தேமொழி,

அருமையான விவாதக்கருத்து என்றாலும் மிக முக்கியக் கருத்துக்களை முன் வைத்திருக்கும் பதிவு. இதனைச் சற்று செம்மைப் படுத்தி சிறு கட்டுரையாக்கி மின்தமிழ் மேடையில் இனைத்து வைக்கப் பரிந்துரைக்கின்றேன்.

சுபா​

தேமொழி

unread,
Jun 11, 2017, 4:34:39 AM6/11/17
to மின்தமிழ், ksuba...@gmail.com
சரி சுபா, தக்க மாறுதல்கள் செய்து மின்தமிழ்மேடையில் சேர்த்துவிடுகிறேன்.நன்றி. 

.....தேமொழி 

nkantan r

unread,
Jun 11, 2017, 5:59:18 AM6/11/17
to மின்தமிழ்
i am sure you will take efforts to ensure answers regarding the structure of the Thiruvalluvar year; it is one thing for tamil lovers to hypothesize on a year, but totally another thing for a state to introduce a calender;  one has to realise a calender year is a measurment of time and when it is declared officially by a state, it requires well defined structures; to reiterate the following are to be answered when a year is defined:

1) total length of the year; how many days or how many hours;
1a) is it lunar or solar or lunisolar based? in other words does the season and sun's position repeats in a year in the same period of the year?
2) is the time period of a year is permanent or does  it change to cover for fractions in a year (like leap year and leap centum years)?
3) when each day is started; does it follow the 24 hour clock or alternate hour or Nazhikai measurement?
4) is the length of each day is fixed or does it change over seasons?
5) how many months in a year, how many days in a month?

regards
rnkantan
(well, again dont think there is some நையாண்டி; the questions are straight forward)

தேமொழி

unread,
Jun 11, 2017, 6:38:05 AM6/11/17
to மின்தமிழ்
@nkantan r   இதில் சில தகவல் கிடைக்கும்.... 


"தமிழ்ப் புத்தாண்டு" ங்கிற ஒன்னே கிடையாது!:)

Crux of this Post:
1. தமிழ்ப் புத்தாண்டு நாள் = பண்டை இலக்கியங்களில் கிடையாது! Itz a latter day practice!
2. சித்திரை / ருத்ரோத்காரி வரு'ஷ'ம் etc = மதம் மூலமாகவே, "தமிழ்ப்" புத்தாண்டு எனப் பரவியது!
3. தமிழறிஞர்கள் சொல்வது என்ன-ன்னா: தமிழின் அடையாளம் = தமிழ் மூலமா இருக்கட்டும், மதம் மூலமா வேணாம்!

Tamizh aRignars devised a Notation for Tamizh, in this context...
* Year = Use 'வள்ளுவர் ஆண்டு' as Tamizh Numbering Sequence!
* Month = Use 'தை', which is the most famous month in tamizh literature!

This is NOT claimed as vaLLuvar's exact day of birth etc etc; 
Itz only a "notation" for tamizh related standards; 
For General life = Common Era (2012 CE) applies for all, world over!

You can still celebrate ருத்ரோத்காரி வரு'ஷ'ம் & do poojas at home!
But pl DONT brand it as a "Tamizh" Year! 
You are free to call it Hindu New Year, Sanskrit New Year, Nandana Year or whatever! Dot!

.....Now, the full post, with literary evidences & some logical reasoning



பந்தல் வாசகர்களுக்கு இனிய (Sanskrit/ பிராமணப்) புத்தாண்டு வாழ்த்துக்கள்:)

இன்னிக்கி, தமிழின் அடிப்படைக்கே சென்று பாக்கப் போறோம் = எது புத்தாண்டு-ன்னு? போய்ப் பார்த்தா.....
"தமிழ்ப் புத்தாண்டு"-ங்கிற ஒன்னே கிடையாது போல இருக்கே?:) அடி ஆத்தீ....மேல வாசிங்க:)

எது தமிழ்ப் புத்தாண்டு = தையா? சித்திரையா?
ன்னு பல விவாதங்கள்/ சண்டைகள் எழுந்து.....ஓரளவு ஓய்ந்தும் விட்டன! தமிழக அரசியலில் ஜெ.அரசாணைகளும் மாறி விட்டன! ஜெ.வே மாறீட்டார்!

இப்போது மீண்டும் ஜெ - கலைஞர் போர்:)
"சித்திரையில் முத்திரை" -ன்னு ஒரு கட்சி!
"சித்திரையில் நித்திரை"   -ன்னு இன்னொரு கட்சி!
முத்திரையோ, நித்திரையோ....அளப்பறை மட்டும் இருக்கு:)
2007 இல் கலைஞரே..."பரவாயில்லை, தமிழனுக்கு 2 புத்தாண்டுகள் இருந்துட்டுப் போகட்டுமே " ன்னு சொன்னவரு தான்!:)
கழகத் தொலைக்காட்சி - நிகழ்ச்சி வரும்படி - அதை நிறுத்திடுவாங்களா என்ன?:)

தமிழ்....பாவம்! 
= இவங்க போதைக்கு, ஊறுகாயாகப் போய்விட்டது:(

இது ஏதோ கருணாநிதி ஆரம்பித்து வைத்தது -ன்னு சிலர் நினைத்துக் கொண்டு, அதற்காகவே எதிர்க்கிறார்கள், விவரம் புரியாமல்:(

ஆனா,  கருணாநிதிக்கும் முன்னமேயே...
* மென்மையே உருவான திரு.வி.க போன்ற அப்பழுக்கில்லாத் தமிழறிஞர்கள் துவக்கி வைத்தது;
* ஈழத்தில்.....அப்போது புலிகள் கோலோச்சிய யாழ்ப்பாணத்திலே, இது வே.பிரபாகரனால் நடைமுறைக்கு வந்தது தான்!

ஒரு வேளை, அண்ணா முதலமைச்சராய் இருந்த போதே, மதறாஸ்->தமிழ்நாடு பெயர் மாற்றம் போல்,
இந்தப் புத்தாண்டு மாற்றமும் வந்திருந்தால், இன்னிக்கி இம்புட்டு பேச்சு இருந்திருக்காதோ என்னமோ?:)

எது எப்படியோ.....இது karunanidhi formula அல்ல! இது tamizh aRignar formula!

1. இதெல்லாம் அரசாங்கச் சட்டம் போட்டு, மக்களைக் "கொண்டாட" வைக்க முடியாது! இது என்ன ஹர்ஷவர்த்தனர் காலமா?:) 
2. மக்களிடம் - விழிப்புணர்வு மட்டுமே ஏற்படுத்த முடியும்!! - இதை நல்ல தலைவர்களால் / தொடர்ந்த முயற்சிகளால் மட்டுமே ஏற்படுத்த இயலும்.

பின்பு எதற்கு இந்தக் கட்டுரை? ன்னு கேக்குறீங்களா?
= அதே விழிப்புணர்வுக்குத் தான்!
அரசியலை ஒதுக்கிட்டு, "உண்மை" ஆவல்! பதிவின் நீளம் அதனால் தான்!

சற்று, உன்னிப்பா நோக்குங்க:
* தை என்பவர்கள் = தனித் தமிழ்க் கொள்கை உடையவர்கள் (அ) பகுத்தறிவு இயக்க வழி வந்தவர்கள்!
* சித்திரை என்பவர்கள் = பெரும்பாலும் ஹிந்து மதப் பற்று கொண்டவர்கள் (அ) வடமொழியோடு ’அனுசரித்து’ போகிறவர்கள் (அ) மடாதிபதிகள்

ஆக, 2 கட்சிகள்!
எந்தக் கட்சி சரி? ன்னு புகுந்தால், புலி வாலைப் பிடித்த கதை தான்! முடிவே இல்லை!:)
தங்களுக்குச் சாதகம் இல்லாதவற்றை மறைத்தும்,
தங்களுக்குச் சாதகமானதை "ஆதாரம் போல்" காட்டியும்...
அவர் சொன்னார்/ இவர் சொன்னார் என்று வெட்டிப் பேச்சுக்கள்!

ஆனால்...
தமிழ் இலக்கியம் = அது என்ன சொல்கிறது?
"அடிப்படைக்கே" சென்று பார்த்தால்??? = அதுவே இந்தக் கட்டுரை!




குறிஞ்சிப்பூ

முல்லைப்பூ

*நமக்கு "விருப்பமான உண்மைகள்" என்பது வேறு!
*"உண்மையான உண்மைகள்" என்பது வேறு!
சில நேரம் இரண்டும் ஒன்றுபடலாம்! சில நேரம் மாறுபடலாம்!

ஆனா.....நம் "விருப்பத்துக்கு" மாறாகவே அமைந்தாலும்....
* தமிழ் = தொன்மம்!
* தொன்மத்தில், நம் சுய விருப்பு-வெறுப்புகளை ஏற்றி விடக் கூடாது!
(முன்பு - "யார் தமிழ்க் கடவுள்?" என்று வந்த பதிவும், இந்த எண்ணத்தில் தான்!) 

* இன்று இன்றாக இருக்கட்டும்! 
* தொன்மம் தொன்மமாக இருக்கட்டும்!

அதுக்காக...விருப்பு வெறுப்பே கூடாது-ன்னு சொல்லலை! விருப்பு-வெறுப்பு உள்ளவன் தான் மனிதன்!
அதை நம் சொந்த வாழ்வில் வச்சிக்கணும்! அனைவருக்கும் பொதுவான தமிழில் அல்ல!
(*** இலக்கியத்தில் மட்டுமே கொள்கை, என் சொந்த வாழ்வில் bye bye-ங்கிற "koLgai kundrus" பற்றிப் பேச்சில்லை:))

தமிழைத் தமிழாக அணுகும் முயற்சி
எது தமிழ்ப் புத்தாண்டு = தையா? சித்திரையா? 



முன் குறிப்பு:

1) தமிழறிஞர்கள் பலர் 1935 இல், பச்சையப்பன் கல்லூரியில் (அதன் பின்பு திருச்சியிலும்) ஒருங்கே கூடினார்கள்...
வள்ளுவரின் காலம் பற்றி, ஆய்ந்து அறிவித்தார்கள்!

யார் யார் இந்த முயற்சியில்?
*மறைமலை அடிகள், 
*திரு.வி. க, 
*ந.மு. வேங்கடசாமி நாட்டார், 
*சோம. சுந்தர பாரதியார்,
*முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் மற்றும் பலர்!

ஆனா, அவர்கள் என்னென்ன விவாதித்தார்கள், அந்த ஆய்வுக் குறிப்புக்கள் என்னென்ன? = இன்று வாசிக்கக் கிடைக்கவில்லை!
இறுதி அறிக்கை மட்டுமே கிடைக்கிறது! அது என்ன சொல்கிறது?

* திருவள்ளுவர் பெயரில், நாம் ஒரு தொடர் ஆண்டினைப் பின்பற்றல் நலம்! - அதையே "தமிழ் ஆண்டு" என இனிக் கொள்ள வேண்டும்!
* திருவள்ளுவர் காலம் ~ கி.மு. 31 = எனவே ஆங்கில ஆண்டுடன் 31-ஐக் கூட்டினால் திருவள்ளுவர் ஆண்டு!

நல்லாக் கவனிங்க:
வள்ளுவர் ஆண்டு முறை தான் பேச்சே ஒழிய, சித்திரையா? தையா? -ன்னு பேசினாங்களா? = இல்லை (அ) குறிப்பு கிடைப்பதில்லை!
தரவு: (Scanned Copy) பச்சையப்பன் கல்லூரி அறிக்கை: 1935 செந்தமிழ்ச் செல்வி இதழ் https://goo.gl/ebjTBV
------------

ஆனா, பின்னாளில்... மறைமலை அடிகளின் மாணவரான நாவலர் சோமசுந்தர பாரதியார்,
வள்ளுவர் ஆண்டை உறுதி செய்ததோடு, தை-02 ஆம் நாளை = வள்ளுவர் திருநாள் - எனவும் வகுத்து அளித்தார்!

அதற்குத் தமிழறிஞர்களும் இசைவு தந்தனர்; அதுவே 1971இல் அரசு விழாவாகவும் ஆனது!
தரவு: (Scanned Copies) : நாவலர் சோமசுந்தர பாரதியார் : தை-02 குறிப்பு https://goo.gl/SSy5fV

முது பெரும் தமிழ் அறிஞர்கள், ஏன் இப்படிச் செஞ்சாங்க?
அதைத் தான் இக்கட்டுரையில் காணப் போகிறோம்!
------------

2) பிரபவ-விபவ என்னும் 60 ஆண்டுகள், தமிழ் ஆண்டுகளே அல்ல! அத்தனையும் சம்ஸ்கிருதப் பெயர்கள்!
வராஹமிஹிரர் பயன்படுத்திய சுழற்சி முறை = 60 சம்வத்ஸரங்கள்

அவற்றுக்கு ஆபாசக் கதைகளை, ’புராணம்’ என்ற பெயரில் கோத்துச் சொல்வாரும் உண்டு!
அபிதான சிந்தாமணி (எ) பின்னாள் ’கலைக் களஞ்சியமும்’ இந்தப்பொய்க் கதைகளை உறுதி செய்கிறது!

இந்த Sanskrit/ ஆபாசக் கதைகளால், எல்லாரும் கேக்கறாங்களே?-ன்னு கூச்சப்பட்டாங்களோ என்னவோ
60 சம்ஸ்கிருத வருஷங்களையும்.. "வலிந்து" தமிழில் மொழிபெயர்த்து, முழிபெயர்த்து, திருட்டுத்தனமாப் பரப்பி விட்டிருக்காங்க, அண்மைக் காலங்களில்:)
அடேய்களா, 
*புள்ளை= Sanskrit Parasiteக்குப் பொறந்தது
*Initial= தமிழில் போட்டா, தமிழுக்குப் பிறந்ததா ஆயீருமா?
வெட்கமாய் இல்லை?:(
எந்தவொரு தமிழ் இலக்கியத்திலும், இப்பிடி "முழிபெயர்த்த" பெயர்கள் இருக்காது:) இது திருட்டு வேலை!

ருத்ரோத்காரி, ரக்தாக்ஷி ன்னுல்லாம் பேரு வரும்! = டேய், இதெல்லாம் தமிழா?:))
(ஆமாம்....தமிழே! தோஷம், கோஷம்லாம் = "பரிசுத்தமான" தமிழே-ன்னு பேசும் இணையக் கொத்தனார்-நாத்தனார்கள் நம்மிடையே உண்டு! அவர்கள் பற்றி இங்கு பேச்சில்லை!:)

Please Note:  ஜ-ஷ புகுந்து பரவலாகி விட்டாலும், அவை உயிர்-மெய் எழுத்துக்கள் அல்ல! They are just "add-ons"

=>அவற்றைத் "தமிழ் எழுத்துக்கள்" ன்னு யாரும் சொல்வதில்லை! = அவை "கிரந்த எழுத்துக்கள்"
=> அதே போல்: ருத்ரோத்காரி, ரக்தாக்ஷி = தமிழ் ஆண்டுகள் அல்ல! = அவை ஹிந்து/ சம்ஸ்கிருத ஆண்டுகள்!

இதே 60 பெயர்கள் தான்.. தெலுங்கு/ கன்னடத்திலும்! ஏன்னா, அங்கும் சம்ஸ்கிருதக் கலப்பு!
இந்தச் சம்ஸ்கிருதத் "திணிப்பு" செய்தது யார்? குஜராத்திகளா? பீகாரிகளா? அல்ல! நம்மோடு வாழும் தென்னாட்டுப் பிராமணர்களே!

மதத்தின் துணைகொண்டு, அந்தந்த தென்னக ஊர்களில், அந்தந்த மொழிகளில் Sanskrit Parasite புகுத்தினார்கள்!
குஜராத்தி/ வங்காளிகளைக் கேளுங்கள்; எவனும் இந்த 60 ஆண்டுப் பெயர்களைச் சொல்ல மாட்டான்:)

Hindu Calendar! or Sanskrit Calendar or Brahmin Calendar!
http://en.wikipedia.org/wiki/Hindu_calendar
Salivahana Sagam or Vikarama Sagam...whatever!
= But Dont call them "Tamil Years" | Tamizh is not only Hindu; It is Much More!

மதம் மதமாக இருக்கட்டும்! 
அதை மொழி அமைப்பில் புகுத்தி, திணிக்க வேண்டாமே!
= இதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது என்றே கருதுகிறேன்!



3) சரிப்பா, பிரபவ/விபவ-ன்னு 60 ஆண்டுப் பெயர்கள் வேணாம்; ஆனா "சித்திரை" தானே புத்தாண்டுப் பிறப்பு?
அதை எதுக்கு தை மாசத்தில் மாத்தி வைக்கணும்? -ன்னு சிலர் "வேறு ரூபத்தில்" கேட்கத் தலைப்படுகிறார்கள்!:)

இவர்களின் வாதம் = சோதிட அடிப்படையில் அமைந்துள்ளது;
மேஷம் (Aries) தான் முதல் ராசி!
சூரியன், மேஷ ராசிக் கட்டத்தில் புகுவது = சித்திரை! எனவே அது தான் புத்தாண்டு-ன்னு இவர்கள் வாதம்!

Okay, Agreed! சித்திரை = மேஷம் புகும் மாதம் தான்!
ஆனால் மேஷம் புகுந்தாத் தான் = "ஆண்டின் துவக்கம்" என்பதற்கு என்ன ஆதாரம்? ன்னு கேட்டா....பதில் இல்லை!:)

ஒரு இனத்தின்/ பண்பாட்டின் ஆண்டுப் பிறப்பு
= ஜோதிட அடிப்படையில் தான் இருக்கணுமா?

பொதுவா, சித்திரை = வசந்த காலம் (இளவேனில்)
"வசந்த காலத்தில்" துவங்குதல் தானே ’மரபு’?-ன்னு நம்பப்படுகிறது, கருதப்படுகிறது, கூறப்படுகிறது..
படுகிறது, படுகிறது-ன்னு இவங்களா அடிச்சி விட ஆரம்பிச்சிருவாங்க!:) ஆனா தரவு? ஆதாரம்??:))

Aries/ மேஷத்தில் தான், உலகெங்கும் புத்தாண்டு துவங்குதா?Aries = கிரேக்கம், இலத்தீன், ஆங்கிலம் -ன்னு பல பண்பாடுகளில் இருக்கே? 
அங்கெல்லாம் Aries/ Mar-Apr தான் புத்தாண்டா? இல்லையே?
Zodiac / ராசிச் சக்கரத்தில் தான் ஒரு புத்தாண்டு துவங்கணும் என்பதற்கு, உலகெங்கும் எந்த ஆதாரமும் இல்லை!


சொல்லப் போனால், Old New Year என்ற ஒன்று உலகெங்கும் உண்டு! அது Jan-14/ தை-01 கூடப் பொருந்திப் போகும்:)
Greece
Rome
Macedonia
Russia
Scottish
Georgia
Bulgaria/ Serbia/ Ukraine
இன்னும் பல Orthodox பண்பாடுகளில்= தை-01 தான்:)))

Orthodox New Year பற்றி மேலும் அறிய= https://en.wikipedia.org/wiki/Old_New_Year
விக்கி தரவு ஆகாது; மேலோட்ட அறிதலே!
அதனால், இங்கு சென்று காண்க= https://goo.gl/OBmUE0 உலகில் இன்றும் கொண்டாடப்படும் Orthodox/ Old New Year; Julian Calendar:)

சம்ஸ்கிருத பாசம் மிக உடைய பிராமணீயர்காள்,
உங்கள் சாலிவாஹன/ விக்ரம சகம் உங்களோடு; வாழ்த்துக்கள்:)
ஆனா, அதை ஒட்டுமொத்த தமிழ் மக்களின் தலையிலும் திணிக்காதீர்கள்!


சரி, சம்ஸ்கிருதம்/ ஜோஸ்யம் = இதெல்லாம் வேணாம்!
நாம, அடிப்படையிலேயே கையை வைப்போம், வாங்க! :))
"புத்தாண்டு நாள்" ங்கிற ஒன்னு..
தமிழ் இலக்கியத்தில் இருக்குதா?-ன்னு பார்ப்போமா?

1. தொல்காப்பியம்:

தொல்காப்பியம் - அதானே முதல் நூல் - அங்கிருந்தே துவங்குவோம்!
** புத்தாண்டு = தொல்காப்பியத்தில் இல்லை!
ஆனால், எதை முதல் பருவமாகத் தொல்காப்பியம் சொல்கிறது?

மாயோன் மேய, காடு உறை உலகமும்,
சேயோன் மேய, மை வரை உலகமும்,
....
காரும் மாலையும் = முல்லை   
குறிஞ்சி = கூதிர், யாமம் என்மனார் புலவர்!

கார் காலம் (மழைக் காலம்) தான், திணைகளுள் முதல் காலமாகக் குறிக்கிறது தொல்காப்பியம்!
* முதல் திணை = முல்லை!
* முதற் காலம் = மழைக் காலம்!

பண்டைத் தமிழகத்தில் "மழை வருதலே"
= முதன்மையாக/ மங்களகரமாகக் கருதப்பட்டதோ என்னவோ?

இது திணை வரிசை மட்டுமே! 
ஆனா, இதான் புத்தாண்டு நாள்-ன்னு வெளிப்படையாக் குறிக்கலை!
ஆனா, இதற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர்... 
கார்காலமே ஆண்டின் துவக்கம்-ன்னு வெளிப்படையாக் காட்டிச் செல்வார்!

(நச்சினார்க்கினியர் உரை:
ஞாயிற்றுக்கு உரிய சிங்க ஓரை (ஆவணி) முதலாக,
தண்மதிக்கு உரிய கற்கடக ஓரை (ஆடி) ஈறாக..
வந்து முடியுந் துணை ஓர் ஆண்டாம்)




உரையாசிரியர், நச்சினார்க்கினியர் சொல்வது போலவே, இன்றும் மலையாளப் புத்தாண்டு அமைந்துள்ளது, அறிவீர்களா?
சிங்க மாதமே (ஆவணி) = மலையாள முதல் மாதம்!
மலையாளப் புத்தாண்டு/ கொல்லம் ஆண்டு= சித்திரை விஷூக் கணி அல்ல! ஆவணிச் சிங்க மாதமே!

*சித்திரை விஷூக் கணி= மற்றுமொரு விழாவே
*ஆவணிச் சிங்க மாதமே= புத்தாண்டு;
*அம் மாதத்தில் வரும் ஓணமே= பெருவிழா; விஷூ அல்ல

முன்பே சொன்னது போல், கார் காலம்= மழை வரும் காலமே, மங்கலம் கருதி.. முதற் காலமாக அமைந்தது! 
மலையாளத்தில் மட்டுமல்ல! நம் ஆதித் தமிழ்த் தொல்காப்பியத்திலேயே!
------------

2. சங்க காலம்: எட்டுத் தொகை/ பத்துப் பாட்டுக்கு வருவோம்!

பல பாடல்கள், "தைஇத் திங்கள்" பற்றிப் பேசுகின்றன!
அதையே பல தமிழ் அன்பர்களும், "தைஇத் திங்கள், தைஇத் திங்கள்" -ன்னு இணையத்தில் ரொம்ப எழுதுறாங்க;

ஆனா அதான் "ஆண்டின் துவக்கம்" -ன்னு சங்கத் தமிழ் சொல்லுதா?
இல்லை!
= தமிழ் என்பதற்காக, நான் Raw Data-வை மறைக்க/ மாற்ற மாட்டேன்:)

நற்றிணை =தைஇத் திங்கள் தண்கயம் படியும்
பெருந்தோள் குறுமகள்

குறுந்தொகை = தைஇத் திங்கள் தண்ணிய தரினும்

புறநானூறு = தைஇத் திங்கள் தண்கயம் போல்
கொளக் கொளக் குறையாக் கூழுடை வியனகர்

ஐங்குறுநூறு = நறுவீ ஐம்பால் மகளிர் ஆடும்
தைஇத் திங்கள் தண்கயம் போல

கலித்தொகை = தையில் நீராடித் தவம் தலைப்படுவாயோ?

ஒரு மாசத்தோட பேரு, இம்புட்டு அதிகமா இலக்கியங்களில் வருவது
= தை மாதம் மட்டுமே!
ஆனா, தை = "ஆண்டின் துவக்கம்" -ன்னு எங்கும் நேரடியாச் சொல்லலை!

தையொரு திங்களும் தரை விளக்கி
ஐயநுண் மணற் கொண்டு தெருவணிந்து 
-ன்னு, அதே சங்கத் தமிழ் மரபில், பின்னாளில் வந்த ஆண்டாளும் பாடுகிறாள்!

தையொரு திங்கள் = சிறப்பான விழா! தமிழில் சிறப்பான மாசம்! அவ்வளவே!
------------

3. அடுத்து... ஜெயலலிதா-வுக்கு அறிக்கை எழுதிக் குடுக்கும் அடிமை "அறிஞர்" முதற்கொண்டு வேறு சிலரும் காட்டுவது:

"ஆடு தலை" = நக்கீரர் எழுதிய நெடுநல்வாடை!

ஆடு தலை = ஏதோ ஆட்டுத் தலைக்கறி/ தட்டி உறிஞ்சும் மூளைப் பகுதி-ன்னு நினைச்சிக்காதீக:)) | தலை = தலையாய/ முதன்மையான!
திண் நிலை மருப்பின் "ஆடு தலை" யாக
விண் ஊர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலத்து
.....
ஆடு தலை = மேஷம் தான் முதல்!
நக்கீரரே சொல்லிப்புட்டாரு! 
எல்லாரும் ஜோராக் கைத்தட்டுங்க!:)) Wait Wait Wait.....

மேஷம் முதல்-ன்னு சொல்றாரு! ஆனா எதுக்கு "முதல்"?
* ஆண்டுக்கு முதல்??? = இல்லை!
* ராசி மண்டலத்துக்கு முதல்! = "வீங்கு செலல் மண்டிலத்து"

அடங்கொப்புரானே! இது எனக்கே தெரியுமே! எல்லாப் பத்திரிகை/ ராசி பலன்-லயும் ஆடு தானே மொதல்ல போடுவாய்ங்க!!:) 
இதைப் போயி, நக்கீரர் சொன்னதா ஏத்தி வுட்டு... அடேய்களா!

அடேய், பாட்டு குடுத்தாலே ஆதாரம் ஆயிடாதுடா! மொதல்ல, பாட்டின் பொருள் பொருந்துதா? -ன்னு பாத்துட்டு, அப்பறம் பொய் சொல்லுங்க:)
பாவம் நக்கீரர்! திருவிளையாடல் பொய்ப் புராணம் போல், ஒரு மானமிகு சங்கப் புலவன் மேல் எத்தினி தான் ஏத்தி வுடறது? விவ'ஸ்'தையே இல்லீயா? :)

சித்திரை = இதர "ஆதார"ங்களாக ஜோடிக்கப்படுபவை:

1) சிலப்பதிகாரம் - இந்திர விழா
இது இளவேனில் காலத்தில் நடந்தது; உண்மை தான்; சிலப்பதிகாரமே சொல்லுது!

நடுக்கு இன்றி நிலைஇய நாளங்காடியில்
சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தென,

ஆனா, சித்திரையில், காமவேள் விழா/ காதல் விழா -ன்னு தான் சொல்லுதே தவிர....
"புத்தாண்டு"-ன்னு சொல்லலையே! ஆண்டின் முதல் மாசம்-ன்னும் சொல்லலையே!

ஏதோ, சித்திரை-ன்னு வரும் ரெண்டு வரியைச் சொல்லிட்டா, அப்பாவிப் பொதுமக்கள் பயந்துருவாங்களா?
அப்படியெல்லாம் பயப்பா, சிலம்பின் வரிகள் ஒன்னும் "சகஸ்ரநாம" வரிகள் அல்ல:)

2) பிரபவ-விபவ = 60 ஆண்டுகளின் sanskrit names, சோழர் கல்வெட்டில் பொறிக்கப்பட்டு இருக்குப்பா!

இப்பல்லாம் கல்வெட்டை வச்சி நடக்கும் Comedyக்குப் பஞ்சமே இல்ல:)
23ஆம் புலிகேசி தனக்குத் தானே வெட்டிக்கொண்ட கல்வெட்டு ஞாபகம் வருதா? - வரலாறு முக்கியம் அமைச்சரே!:)

நல்ல தொல்லியல் அறிஞர்கள், ஆய்ந்து சொல்வதே கல்வெட்டு முடிவுகள்! அதுவும், விவாதத்துக்கு உட்பட்டே!
சோழர் கல்வெட்டில் இருந்தாலும், அவை = மிகவும் "பிற்காலம்" தான்! சங்க காலம் அல்ல!

சோழர் கல்வெட்டு பலவும், கிரந்த எழுத்தில் தான் வெட்டப்பட்டு இருக்கு!
ஒடனே, "பாத்தீங்களா? பாத்தீங்களா? அப்பவே எல்லாப் பொது மக்களும் Grantha Alphabet தான் எழுதினாங்க;
அம்மா வை= "சம்மா" -ன்னு எழுதினாங்களா?:) | அ = சd in grantham notation!

பிற்காலச் சோழர் காலத்தில், கலப்புகள் பல நிகழ்ந்து விட்டன!
சோழ அரசாங்கத்தில் வேலை பார்த்த "உயர்சாதிப் பண்டிதாள்", வருஷ - சம்வத்ஸரங்களின் பேரை,
அவா Style-இல், "ஸ்வஸ்திஸ்ரீ" -ன்னு பொறிக்கச் செய்தார்கள்! அவ்வளவே!

3) புட்ப விதி என்னும் நூலில், சித்திரை முதல் மாதம் என்று இருக்கிறது!
பேருலயே தெரியலையா? = பு"ஷ்"ப விதி! :) இதெல்லாம் தரவாகாது!

இதை எழுதியது = கமலை ஞானப் பிரகாச ஸ்வாமிகள்! அதுவும் சுமார் 500 yrs முன்னாடி தான்!
பலருக்கு, இவரு பேரு கூடத் தெரியாது = சைவ சித்தாந்த சந்தானாச்சாரியார், தருமபுர ஆதீனத்தின் குரு!

இவர் சமயம் சார்ந்து சொல்வதே, ஒட்டுமொத்த தமிழினத்தின் "ஆண்டு" ஆகி விடாது!
ஆழ்வார்கள் = கலியுகத்துக்கும் முன்னால்- ன்னு கூடத் தான் சில வைணவ மடங்கள் புராணம் எழுதி வச்சிருக்காய்ங்க?:)

அப்பிடிப் பாத்தா ஆண்டாளுக்கு அப்பறம் தான் வள்ளுவரே வருவாரு:)
நான் ஆண்டாளின் ரசிகன் என்பதற்காக... அது உண்மையாகி விடுமா என்ன?:))
வள்ளுவரே = தலைமகன்; பின்பே = ஆண்டாள்!


முடிப்புரை - Final Inference:

1. தமிழ் இலக்கியங்களில் = இது தான் "புத்தாண்டு"-ன்னு நேரடியாக இல்லை!

* சித்திரை = "மதம்" சார்ந்த படியால்... பய+பக்தியோடு, பரப்பப்பட்டு ஊன்றுகிறது!
* ஆனா, மழை துவங்கும் "கார் காலம்" எனும் ஆவணி (அல்லது) "பனி முடங்கல்" எனும் தை 
= முதன்மைக் காலம்/ சிறப்பு மாதமாகக் கொள்ளும் திணை மரபு, தொல் தமிழில் உள்ளது!

2. பண்டைத் தமிழர்கள் - ஆண்டுக்கென்று எந்தப் பெயரோ/ எண்ணோ வைக்கலை! 
= கண்டிப்பாக பிரபவ-விபவ-ருத்ரோத்காரி ன்னு வைக்கல:)

ஒவ்வொரு ஆண்டுக்கும், தொடர்ச்சியா, எண்ணைக் குறிக்கும் வழக்கம் இருந்ததாத் தெரியலை!
ஒரு பெரிய தலைவரின் பிறப்பை ஒட்டி/ மன்னன் ஆட்சிக் கட்டில் ஏறிய ஆண்டையொட்டி, எண்ணால் குறிக்கும் வழக்கம், பின்பு எழுந்ததே! 

அதுக்காக, தமிழர்களுக்குக் கால அளவே தெரியாது-ன்னு முடிவு கட்டிறாதீங்கோ...
உலகெங்கும், பல பண்பாடுகளில்.. ஆண்டுகளுக்குப் பெயர்கள் இல்லை; எண்ணால் குறிக்கும் வழக்கம், பின்னாள் பழக்கம்!

* Tamil Season Measurements/ பெரும்பொழுது
= கார்காலம், கூதிர்காலம், முன்பனிக் காலம், பின்பனிக் காலம், இளவேனில், முதுவேனில் = 2 months each*6 = 12 months!
* Tamil Daily Measurements/ சிறுபொழுது
= மாலை, யாமம், வைகறை, காலை, பகல், எற்பாடு = 4 hrs each*6 = 24 hours!

*ஆண்டுப் பெயர் தான் தமிழில் இல்லை! 
(கிரேக்கம் / வேறு பல பண்பாடுகளிலும் இப்படியே ஆண்டுப் பெயரில்லை)


3. தமிழ் மரபில் & இலக்கியங்களில், மிகச் சிறப்பாக/ அதிகமாகப் பேசப்படும் மாதம் = தை!
"தைஇத் திங்கள்" பாடல்களைப் பார்த்தோம்; புத்தாண்டு -ன்னு அல்ல! சிறப்பான மாதமாய்!

4. ஒரு ஆண்டு, ஜோதிட அடிப்படையில் தான் துவங்கணும்/ மேஷம் புகும் போதே துவங்கணும் = இதுக்கு ஆதாரங்கள் ஏதும் இல்லை!
எனவே சித்திரையே = தமிழ் ஆண்டின் முதல் நாள் என்பதற்கும் கிஞ்சித்தும் தரவுகள் இல்லை!
------------


5. சரி, பிரபவ-விபவ ன்னு சம்ஸ்கிருதப் பேரு மட்டும் வேணாம்பா; 
ஆனா சித்திரையிலேயே இருந்துட்டுப் போகட்டுமே, என்பவர்களுக்கு...

சித்திரை-ன்னாலே....இந்த 60 சம்ஸ்கிருதப் பெயர்கள் வந்து ஒட்டிக் கொள்கின்றன!
*This is Hindu Calendar! = நந்தன, ரக்தாக்ஷி, ருத்ரோத்காரி
*இதே போல் Islamic Calendar கூட உண்டு! = ஜமாதில்-அவ்வல்!
*சமண சமய Calendar உம் உண்டு = சமண சம்வத்சரி!

ஆனா, தமிழ்-இஸ்லாமிய சமூகத்தினர் யாரும்,
* தமிழ் ஆண்டின் முதல் நாளா, ஹிஜ்ரி நாளை வைங்கோ, நாங்களும் தமிழர்கள் தானே? -ன்னு கேக்குறாங்களா?:) இல்லையே?

நாம மட்டும் ஏன், மொழியில் மதத்தைப் புகுத்தி, அடாவடி அடிக்கிறோம்?? :)

இது இன்று நேற்றல்ல! பல காலங்களாய்! 
இல்லீன்னா, சமயம் சாராத சங்கப் பாடல்களுக்கு, கடவுள் வாழ்த்து-ன்னு பின்னாளில் எழுதிச் சொருகி வைப்போமா?:)
டேய் செல்லம்...முருகா, இதெல்லாம் நீ கண்டுக்கவே மாட்டீயாடா?:))

* மொழியில், சமய இலக்கியங்கள் வரட்டும்! ஆனா சமய இலக்கியமே = மொழி -ன்னு "வகுத்து" விடக் கூடாது!
* அதே போல் தான் புத்தாண்டும்! சமய ஆண்டே = மொழி ஆண்டு ன்னு "வகுத்து" விடக் கூடாது!

மதம், மதமாக இருக்கட்டும்! 
மொழி அமைப்பில் திணிக்க வேண்டாம்!

= இதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது -ன்னே கருதுகிறேன்!
------------

6. தமிழறிஞர்கள், மறைமலை அடிகள் தலைமையில் கூடிச் சொன்னது 
= Tamil Year Standardization மட்டுமே; 
= புத்தாண்டு துவங்கும் மாதத்தை அல்ல!

இதில் தையா? சித்திரையா? என்பது பற்றிய முடிவுகள் இல்லை! ஆனால்,
* இந்த 60 ஆண்டு அசிங்கத்தில் இருந்து ஒழியவும்
* தொடர்ச்சியான எண் முறைக்கும் (Continuous Numbering Scheme) வித்திட்டது;

நிச்சயமா.....இது "புதிய" முறை தான்!
ஆனால் நம் தமிழினத் தலைமகன் வள்ளுவரை அடிப்படையாக வைத்து....ஒரு புதிய கணக்கிடும் முறை!

This is only a "notation" for Tamizh related Standards;
But Common Era (2012 CE) applies for all of us!


கிமு/ கிபி அல்ல; அதிலும் மதம் கடந்தாகி விட்டது!
BCE= Before Common Era | CE= Common Era
BC/ AD என்று எழுதாதீர்கள்; BCE/ CE என்றே புழங்கவும்!

7. ஒரே கேள்வி தான் மிச்சம் இருக்கு!
= வெட்டு 1, துண்டு 2 -ன்னு சொல்லு = தையா? சித்திரையா?:)

தை'யே'-ன்னு சொல்லவும் தரவு இல்லை;
சித்திரை'யே'-ன்னு சொல்லவும் தரவு இல்லை! ஆனா...

* சித்திரை = வேண்டாம்!
* சித்திரை-ன்னாலே, மதம் வந்து ஒட்டிக் கொள்ளும்! 60 சம்ஸ்கிருதப் பெயர்கள் வந்து ஒட்டிக் கொள்ளும்!

* தை = தமிழ் இலக்கியங்களில் அதிகமாகப் பேசப்படும் சிறப்பு மாதம்!
* தை -ன்னாலே.... மதம் கலவாமல்.... தமிழ் மட்டும் தனித்துத் தெரியும்! 

தமிழ் குறித்த ஒன்றில், தமிழ் தானே அடையாளம் தெரிய வேண்டும்?
When it comes to "defining a notation" for Tamizh = Let Tamizh be the focal point; NOT religion!
For that......Thai would be the best choice!
* Starting Year = based on Valluvar (Great Tamizh Person) &
* Starting Month = based on Thai (Great Tamizh Month) - gotcha?:)

தை முதலே தமிழ்ப் புத்தாண்டு = இதுவே தமிழுக்கு நலம்!!
இத்துணை நாள், மத மாயை..

இனியாச்சும், மானம் கொள்வோம்!

உங்க ஆத்துல.... பஞ்சாங்கம் வச்சி, வர்ஷ ஆரம்ப பூஜை பண்ணனும்-ன்னா, சித்திரையில் தாராளமாப் பண்ணிக்கோங்கோ!
ஆனா உங்க தனிப்பட்ட அக்ரஹார பூஜையை = "தமிழ்ப்" புத்தாண்டு -ன்னு, தமிழக மக்களுக்கே ஒட்டுமொத்தம் ஆக்காதீக! Please...
------------

8. இல்லவே இல்லை! ஆதாரம் இருக்கோ/ இல்லீயோ....
சித்திரையே = தமிழ் "வருஷப்" பிறப்பு -ன்னு பிடிவாதம் பிடிச்சா?.....

Okay, நானே இறங்கி வரட்டுமா?
சித்திரை-க்கே ஒத்துக்கட்டுமா? .... but two small conditions!

a) "வருஷப்" பிறப்பு -ன்னு சொல்லாதீங்க; ஆண்டுப் பிறப்பு ன்னு சொல்லுங்கோ:))
b) ருத்ரோத்காரி -ன்னு அசிங்கம் புடிச்ச புராணக் கதை |  60 சம்ஸ்கிருதப் பெயர்களை, அறவே நீக்கி விடுங்கள்; 

தினத்தாள், Calendar, Marriage Invitations.. எல்லாக் குறிப்பில் இருந்தும் Sanskrit Parasite நீக்குவீங்களா?

அதெல்லாம் நீக்க மாட்டேன்; அதான் "தமிழ்" வருஷப் பிறப்பு!
சம்ஸ்கிருதம் தான் டா, தமிழ்! -ன்னு நீங்க சொன்னா..
= இதுக்குப் பேரு தான் போங்கு!
= போங்கடா டோய்:))))

9. வரும் Apr-13, 2012 = நந்தன வருஷம்.....

அனைவருக்கும் "ஹிந்துப்" புத்தாண்டு வாழ்த்துக்கள்!
(அ) பிராமணப் புத்தாண்டு வாழ்த்துக்கள்
(அ) Sanskrit Parasite ஆண்டு வாழ்த்துக்கள்
(அ) இனிய நந்தன "வருஷ" வாழ்த்துக்கள்!


உசாத் துணை: (References)


1. தமிழறிஞர், இராம. கி. ஐயா - தமிழர் திருநாள் = http://valavu.blogspot.com/2007/01/blog-post.html
2. சமூக ஆய்வாளர், திரு. எஸ். இராமச்சந்திரன் ஐயா - சித்திரையே புத்தாண்டு = http://www.sishri.org/puthandufull.html

3. சங்க இலக்கிய வரலாறு & தமிழர் மதம் = மொழிஞாயிறு, ஞா. தேவநேயப் பாவாணர்
4. பாட்டும் தொகையும் (பத்துப் பாட்டு - எட்டுத் தொகை உரை) = டாக்டர். உ.வே. சாமிநாத ஐயர்
5. தெய்வங்களும் சமூக மரபுகளும் = பேரா. தொ. பரமசிவன்

6. Jayashree Saranathan (writer at tamilhindu.com) -  (She is a known person to me by way of blogs, but I was "SHOCKED" to see her line //only those who continue to stick to Hinduism can be considered as Tamils//) 
http://jayasreesaranathan.blogspot.com/2011/08/big-thanks-to-ms-jayalalithaa-for.html

Posted by kannabiran, RAVI SHANKAR (KRS)

on 4/11/2012 07:44:00 PM 

nkantan r

unread,
Jun 12, 2017, 7:56:37 AM6/12/17
to மின்தமிழ்

when i read this post first, i thought the issue is now totally off-track (i was talking of a year as a span of time while it appears the issue for others is the first day of the year!) and decided not to post anything further;  but seeing another thread appearing on this, i thought i can make comments on the post; i do understand the post is a rather a forwarded information, probably accepted or reviewed by MS thenmozhi and not her original opinionl

1) i am not a tamil scholar and per se dont want to comment on the interpretations of the various literary proofs. Suffice to say they are interpretations;
2) a circle is endless and has no beginning and no end; you take any point as the start point and go around and come to that;  that is so much for the new year
3) when the writer claims that (probably through ESP) that nakkirar in nedunalvadai mentioned that Mesha is the beginning; the beginning is of  zodiac path and not of new year;  if it is the beginning of the zodiac path and position of sun in the 12-houses are representing  the 12 months, then the year starts when sun starts travelling from the beginning of the zodiac path 
4) coming to tholkoppium and kollam year,  does he mean that the new year should start from aavani? (by the way i never knew kollam aandu is used by all malayalis;  as some one said about panchaanga brahmna, kollam aandu is used by select in Malabar coast; and funnily  there are two versions of this also  (all caused by accomodating lunar months in the solar cycle!); and this kollam new year started in 824 AD  (vide : http://kaialavuman.blogspot.com/2013/09/800x600-normal-0-false-false-false-en.html)
5) as i said before a circle starts and ends on the same point; and one can use thai or chitrai for a start!
Reply all
Reply to author
Forward
0 new messages