புரிதல் (’understanding', ஓர்ப்பு)

179 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Oct 27, 2017, 9:50:07 AM10/27/17
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, panb...@googlegroups.com, tiruva...@googlegroups.com

புரிதல் (’understanding', ஓர்ப்பு)

’ஆசிரியர் புரியும்படி மாணவர்க்குப் பாடம் சொல்கிறார்.’
‘இதைப் புரியாமல் செய்துவிட்டான்’, ... இந்தத் தொடர்களில் புரிதல் = உணர்தல், விளங்குதல், தெரிதல், ஓர்தல் என்ற பொருளில் சாதாரணமாகப் பயன்படுத்துகிறோம். இந்தப் ‘புரிதல், புரிந்துகொள்ளல்’ என்றால் to understand, understanding என்ற பொருள்.
பழைய காலங்களில் செய்தல் என்பதே முதன்மையாக புரிதலுக்கு இருந்தாலும், நினைத்தல், ஆராய்தல் என்ற மனோகாரியங்களும்,
புகழ்தல் என்ற வாய்வாக்குக் காரியமும் இல்லாமல் இல்லை.

(மனத்தில்) விளங்குதல், தெரிதல், உணர்தல், ஓர்தல்.
----------------------------------

மா என்றால் மாவு ‘flour' என்ற பொருள்கொண்ட சொல்லைப் பத்துப்பாட்டில் காண்கிறோம்: கவலைக் கிழங்கின் மா. மா என்பதன் மற்ற பொருள்கள் இன்று வழக்கற்றாலும், மா = மாவு  மாத்திரம் நம்மோடு இருக்கிறது. (இட்லிமா, உப்புமா, அரிசிமா, வடைமாவு, ... முதலில் ‘wet flour', பின்னர் மாகு/மாசு ‘wet flour' ஈரப்பசை இல்லாததற்கும் ஆகிறது. u-m: மாசு, மாவு = தூள் 'dry powder, நூறு/நீறு, சுண்ணம், பொடி. Only in Tamil-Malayalam, dry powder is also called maa(vu), just like puri-tal 'to understand' is only in Tamil amongst Dravidian languages.). அதே போல, புறநானூற்றிலே தான் முதன்முதலாக, புரிதல் = உணர்தல், ஓர்தல் (understanding) என்பதன் தொடக்கம் இருக்கிறது.

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை வெள்ளைக்குடி நாகனார் பாடிய புறப்பாட்டு.
"கேண்மதி - என்னுடையன சில வார்த்தையைக் கேட்பாயாக;
அறம் புரிந்தன்ன செங்கோல் நாட்டத்து முறை வேண்டு பொழுதின் -
அறக் கடவுள் மேவி ஆராய்ந்தாற் போன்ற செங்கோலா னாராயும்
ஆராய்ச்சியையுடைய நீதியைக் கேட்கவேண்டுங் காலத்து;”

இங்கே, அறக்கடவுள் ஓர்ந்து/உணர்ந்து நீதிவழங்கலைப் புரிதல் என்கிறார் வெள்ளைக்குடி நாகனார்.
புரிதல் = to examine/investigate thru' mind. இந்த மனோகார்யத்தின் விளைவுதான்
understanding. அவருக்கு இத்துறையில் நல்ல புரிதல் இருக்கிறது = He has a good
understanding of the subject.

புரிதல் என்னும் மனத்தினால் செய்யும் செயலுக்கு மனம் விரும்புதல் என்ற பொருளும், மனம் வேறுபடுதல் என்ற பொருளும் கலித்தொகையிலே உண்டு.
”11 நல்குநர் புரிந்து நலனுணப் பட்டோ
     ல்குநர் போகிய வூரோ ரன்னர்

எ - து; மனம் விரும்பி யருளின கணவரால் நலத்தை நுகர்ந்து விடப்பட்ட மகளிர் குடியிருப்பார் போகிய பாழூரை ஒப்பர், அந்நிலையை ஓர்ந்துபார்; எ - று.

12 கூடினர் புரிந்து குணனுணப் பட்டோர்
சூடின ரிட்ட பூவோ ரன்னர்

எ - து; மனம் விரும்பிக் கூடின கணவராற் றங் குணத்தை நுகர்ந்து விடப்பட்ட மகளிர், முடிப்பார் முடித்துப்போகட்ட பூவை ஒப்பர், அந்நிலையை ஓர்ந்துபார்; எ - று.”

“27 புரிந்துநீ எள்ளுங் குயிலையு மவரையும் புலவாதி
நீலித ழுண்கணாய் 3நெறிகூந்தல் பிணிவிட
(2) நாள்வரை நிறுத்துத்தாஞ் சொல்லிய பொய்யன்றி
(3) மாலைதாழ் வியன் மார்பர் துனைதந்தார்
(4) காலுறுழ் கடுந்திண்டேர் கடவினர் விரைந்தே

எ - து: அதுகேட்ட தோழி, என்று, மனம் வேறுபட்டு நீலப்பூப்போலும் ”

”புரிதலென்னுஞ்சொல், மனம் வேறுபடுதலென்னும் பொருளிலும் வருமென்பது (அ) ‘‘புரிந்து’’ கலி. 33 : 27. என்பதனுரையாலும் துணியப்படும். (ஆ) ‘‘நெறியறி செறிகுறி புரிதிரி பறியா வறிவனை (கலி. 39 : 46.) என்புழி, ‘புரி திரிபு’ என்பதற்கு, ‘வேறுபட்டுத் தப்புதல்’ என்று பொருளெழுதியிருப்பதும் இங்கே அறிதற்பாலது.’’
இ. வை. அனந்தராமையர், கலித்தொகை உரையில் நச்சினார்க்கினியரை மேற்கோள் காட்டியுள்ளார். மனோகாரியங்களாகிய விரும்புதலோ, வேறுபடுதலோ “புரிதல்” என்னு வினையால் கலித்தொகையில் பயில்கிறது காண்க.

புரிதல் = சொல்லுதல் என்னும் பொருளில்
-----------------------------

(i) அந்தணாளர் புரியும் அரு மறை (தேவா. 865, 5)

(ii) ’இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு’ (குறள்)
இங்கே, புரிதல் = சொல்லுதல் என்ற வாக் கார்யம்.

(iii) இந்தத் திருப்புகழில், திருக்குறள் போல, புரிதல் = சொல்லுதல் என்ற பொருளும் பொருந்துகிறது.
புகழ் நல(ம்) மெத்தப் புரிந்து = புகழை மிகப் பேசி.

புரிதல் - இடையறாது எப்பொழுதும் நினைத்தல், எண்ணுதல்.
--------------------------------------
(விளக்கம்: பெரியபுராணப் பேருரைகாரர் சிவக்கவிமணி (CKS, கோயம்புத்தூர்))

விரிதரு புலியுரி விரவிய வரையினர்
திரிதரு மெயிலவை புனைகணை யினிலெய்த
எரிதரு சடையின ரிடைமரு தடைவுனல்
புரிதரு மனனவர் புகழ்மிக வுளதே. - தேவாரம்

புரிதரு மனன் = எண்ணுகிற மனம்.
புரிதல் - இடைவிடாது நினைத்தல்

“பொருந்திய காதலிற் புக்குப் போற்றி வணங்கிப் புரிவார்” (பெரிய புராணம்)
புரிவார் - புரிதல் - இடைவிடாது நினைத்தல்; புரிவார் முற்றெச்சம். புரிவாராகி; "புரிந்து கேட்கப்படும்" (பதிகம்). புரிதல் - வலம்வருதல் என்ற குறிப்பும் பட நின்றது.

“புரிந்தவர் - புரிந்த அவர் என்றது புரிந்தவர் என 
நின்றது. புரிதல் - இடைவிடாது நினைத்தல். விரும்புதலுமாம். ”

புரிதல் - இடைவிடாது நினைத்தல். ‘புகழ் புரிந்தார்' என்ற குறளிற் காண்க. 

முறைபுரிந்த முன்னுணர்வு மூளவழத் தொடங்கினார் 
"முறைபுரிந்த முன் உணர்வு - முறை - விதி; முறைப்படி; புரிதல் - இடைவிடாது நினைத்தல்; "புகழ்புரிந்தார் மாட்டு" (குறள்); 1932 பார்க்க; முன் உணர்வு - முன்னை நிலையின் நினைவு; மூள - இங்குவந்து பொருந்த - மிகுந்து தாக்க. "பாலனாயதொண்டு செய்து பண்டுமின்றும்" (பிள். தேவா.) ஈசர் கழல் முறை புரிந்த முன்னுணர்வு மூள - பிள்ளையார் முருகப்பெருமா னவதாரமன்று என்று காட்ட இஃதும் ஒரு நல்ல ஆதரவாம்; "பண்டுதிரு வடிமறவாப் பான்மையோர்" (1953) என்றதும் ஆண்டுரைத்தவையும் பிறவும் காண்க."

திருப்பதிகந் திருக்கடைக்காப் புச்சாத்திச் சிறப்பின்மிகு
விருப்பினா லவர்தமக்கு விருந்தளித்து மேவுநாள்
அருப்புறுமெய்க் காதல்புரி யடியவர்க டம்மோடும்
பொருப்புறுகைச் சிலையார்சேர் பதிபிறவுந் தொழப்போவார்;
அருப்புறு மெய்க்காதல் - புரி - அருப்புறுதல் - அரும்புபோல அவ்வப்போது புதிதின் மலர்தல்: உறு - உவமவுருபு; அரும்பு - அருப்பு - என எதுகை நோக்கி வலிந்து வந்தது. காதல் - அன்பின் செறிந்தவிளைவு; ஈண்டு அதனால் விளையும் செயல்களுக்காயிற்று. புரிதல் - இடைவிடாது நினைத்தலும் சொல்லுதலும் செய்தலுமாம்.
அடியவர்கள் தம்மோடும்- அடியவர் - அயரா அன்புசெய்யும் மெய்ஞ்ஞானிகள் -"அன்பரொடு மரீஇ" (12 சூத் - சிவஞானபோதம்).

இடைக்காலத்திலே, ஓர்ப்பு = understanding என்ற பொருளிலே மிகவும் பயன்பட்டுள்ளது. ஓர்ப்பு < ஓர்தல் என்னும் வினையடியாக. மலையாளத்தில் ஓர்மை என்னும் சொல்லாக இருக்கிறது[1].

ஆனால், 19,20-ஆம் நூற்றாண்டுகளிலே புரிதல், புரிந்துகொள்ளல் என்னும் ஆட்சி பெருகியுள்ளது. இதன் தொடக்கம் புறநானூற்றுப் பாடலில் (வெள்ளைக்குடி நாகனார்), பெரியபுராணம் போன்றவற்றில் இருக்கிறது.

நா. கணேசன்

[1]

“மிகப் பொருத்தமான காலகட்டத்தில் எழுந்த தமிழ்த் தேசியம் குறித்த ஓர்மை, அதே சமத்தில் தோன்றிய திராவிட அரசியலால் சிதைந்து போனதா? வகுப்புவாதம் மற்றும் இனவெறுப்பை முன்னிறுத்தாமல் பண்டைய இலக்கியப் பரிச்சயங்களின் வழியாக வடித்த தமிழ்த் தேசிய நிலைப்பாட்டுடன் தமிழரசுக் கழகம் என்ற கட்சியை வழிநடத்திப் பிறகு அந்நிலைப்பாட்டிலிருந்து விலகிப் போன ம.பொ.சிவஞானம் பற்றி உங்களது கருத்து என்ன?”

”தென்குமரியை மீட்க அங்கு சென்று குரல்கொடுத்த, போராடிய ஒரே தமிழகத் தலைவர் ம.பொ.சி. தமது ‘தமிழன் குரல்’ இதழில் தொடர்ந்து எழுதிவந்தவர் அவர். அவர் நடத்திய இதர இதழ்கள் தமிழ் முரசு, செங்கோல். இந்திய ஒன்றியத்திற்குள் சுதந்திரச் சோஷலிசத் தமிழ்க் குடியரசு அமைய வேண்டும் என்று தொடர்ந்து பேசியும், எழுதியும் வந்தார். தமிழிலக்கிய ஓர்மையின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட தமிழ்த் தேசிய அரசியல் ம.பொ.சி.யுடையது.
[...]
ஆந்திர, கருனாடக, கேரள காங்கிரசுக்கு இருந்த இன ஓர்மை அப்போது தமிழ்நாடு காங்கிரசுக்கு இல்லை. அதனால் தமிழர் இழந்த மண் அதிகம். “


பழமைபேசி

unread,
Oct 27, 2017, 12:23:56 PM10/27/17
to மின்தமிழ்
நல்லதுங்ணா...  திப்புசுல்தான் திப்பம்பட்டி மேட்டில் போர் புரிந்தார்... சொக்கநாத மன்னர் ஆட்சி புரிந்தார்...
இப்படியான சொல்லாட்சியில் வரும் புரிதல்??

N. Ganesan

unread,
Oct 27, 2017, 8:34:44 PM10/27/17
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
2017-10-27 9:23 GMT-07:00 பழமைபேசி <pazam...@gmail.com>:
நல்லதுங்ணா...  திப்புசுல்தான் திப்பம்பட்டி மேட்டில் போர் புரிந்தார்... சொக்கநாத மன்னர் ஆட்சி புரிந்தார்...
இப்படியான சொல்லாட்சியில் வரும் புரிதல்??


நீங்கள் சொல்லும் தொடர்களில் புரிதல் = செய்தல்.

புரி- என்ற வினைச்சொல் மனம், வாக்கு, காரியங்கள் மூன்றனுக்கும் வரும். காரியம் = physical act.

புரிதல் = thinking, researching, examining, investigating, understanding என்பன மநோகார்யம். மனத்தால் செய்வது.
அதற்கு உதாரணம், சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் மீது பாடின
புறப்பாட்டிலே வந்துவிடுகிறது. புரிதல் = இடையறாது சிந்தித்தல்/எண்ணுதல்/நினைத்தல்
தேவாரம், பெரியபுராணம் போன்ற பக்தி இலக்கியங்களிலே மிகுதி. இதனைக் காட்டியவர்
கோவை சிவக்கவிமணி அவர்கள்.

சிவக்கவிமணி யார் தெரியுமா? பழைய வக்கீல்தாரர்கள் கோவையிலே இவர்கள் குடும்பம்தான்.
பெரும்புலவர்கள். சாமிநாதபிள்ளை என்பார் போத்தனூரில் கிறித்தவராகி ஹிந்து மதத்தை
இழித்து “பிள்ளை விடுதூது” வெள்ளைக்காரர்கள் பதவி, பணம் போன்ற உதவியால் பாடினார்.
இதை எதிர்த்து பேரூர்ப் பச்சைநாயகி கிள்ளை விடுதூது பாடினார் சிவக்கவிமணியின் தந்தையார்.
பழைய பிரதி என்னிடம் உண்டு. சம்ஸ்கிருதத்திலே இதுபோன்ற Polemics genre இலக்கியங்களைப்
படித்துப் பல நூல்கள் வந்துவிட்டன. ஆனால், தமிழிலே ஒன்றும் வரவில்லை. அதற்கு ஆதாரம்,
யாழ்ப்பாணத்தில் நடந்த கிறிஸ்தவ-சைவ மத பாலிமிக்ஸ் ப்ரபந்தங்கள். தமிழ்நாட்டிலே சென்னை,
கோவை, ... நடந்த இடங்கள். சிகேஎஸ் அவர்கள் தாம் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி-க்காக
வாதாடினவர். அதனால், வ.உ.சி நன்றியறிதலாக முதல் மகனுக்கு சுப்பிரமணியன் என்று பெயர்
வைத்தார்.

சாதாரணமாக, புரிதல் = செய்தல் (Physically) என்று மாத்திரம் சொல்லி, எப்படியோ
புரிதல் = மனத்தால் தெளிதல், ஓர்தல், விளங்கிக்கொள்ளல் வந்துவிட்டது என்பார்கள்.
ஆனால், புறநானூறும், பக்தி இலக்கியங்களும், இன்றைய புரிதல் என்ற சொல்வந்த
ஊற்றுக்கண்ணைக் காட்டிநிற்கின்றன. அதற்காக எழுதினேன்.

நா, கணேசன்
 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Oct 27, 2017, 11:49:25 PM10/27/17
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
இப்பொழுது, புரிதல் = தெரிதல், விளங்குதல், உணர்தல், ஓர்தல், Underdtanding என்று மிகப் பரவலாக வழங்கும் சொல்லுக்கு “ஓர்தல்” என்ற வினைச்சொல்லும், ஓர்ப்பு என்னும் பெயர்ச்சொல்லும் இடைக்காலத்தே பரவலாகப் பயன்பட்டுள்ளன. ஓர்ப்பு என்னும் சொல்லை, ஓர்மை என்றும் பாவிக்கின்றனர். 

’அவன் செய்தியின் கனத்தை ஓர்ந்தான்.” = அவன் செய்திக்கனத்தைப் புரிந்துகொண்டான்/உணர்ந்துகொண்டான்/யோசனைசெய்தான்.

ஓர்ப்பு ‘understanding'
-------------------------
தீர்ப்பாரை யாமினி யெங்ஙனம் நாடுதும் அன்னைமீர்,
ஓர்ப்பாலிவ் வொண்ணுதல் உற்றநன் னோயிது தேறினோம்,
போர்ப்பாகு தான்செய்தன் றைவரை வெல்வித்த, மாயப்போர்த்
தேர்ப்பாக னார்க்கிவள் சிந்தை துழாய்த்திசைக் கின்றதே - நம்மாழ்வார் பாசுரம்

இறையனார் அகப்பொருள் - களவு:

“தலைமகன் குணம் நான்கு

       தமியராதல் என்பது, தம் உணர்வினர் அல்லராதல். தம்
உணர்வினர் அல்லராதல் என்பது என்னோ எனின், தலைமகற்கு அறிவு,
நிறை, ஓர்ப்பு, கடைப்பிடி என்பன குணம்.

   அறிவு என்னோ எனின்,

       ‘எப்பொரு ளெத்தன்மைத் தாயினு மப்பொருள்
        மெய்ப்பொருள் காண்ப தறிவு’ [குறள் - 355]

என்றாராகலின், எப்பொருளாயினும் அப்பொருட்கண் நின்று
அம்மெய்ம்மையை உணர்வது அறிவு.

      நிறை என்பது என்னோ எனின், காப்பன காத்துக் கடிவன கடிந்து
ஒழுகும் ஒழுக்கம்.

      ஓர்ப்பு என்பது ஒரு பொருளை ஆராய்ந்து உணர்தல் என்பது.
கடைப்பிடி என்பது கொண்டபொருள் மறவாமை.

      இந்நான்கையும் தலைமகற்கு வேட்கையான் மீதூரப்பட்டுப், புனல்
ஓடுவழிப்   புற்சாய்ந்தாற்போலச் சாய்ந்து கிடப்பது.

                 தலைமகள் குணம் நான்கு

       இனித் தலைமகட்கு நாண், மடம், அச்சம், பயிர்ப்பு என்பன குணம்;”

ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந் தியார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை. - குறள்

ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு. - குறள்

ஓர்த்தல் - understanding.பரிமேலழகர்: அளவைகளானும் பொருந்துமாற்றானும் தெளிய 
ஆராய்ந்து (குறள் - 357).

மூன்று கடன்கழித்த பார்ப்பானும் ஓர்ந்து
முறைநிலை கோடா அரசுஞ் - சிறைநின்று
அலவலை இல்லாக் குடியும்இம் மூவர்
உலகம் எனப்படு வார். - திரிகடுகம்

ஓர்தல் என்ற சொல்லை இன்றைய “புரிதல்” என்ற பொருளில் திருப்புகழில் உள்ளதாகத் தெரிகிறது.
மதன குரு ஓராத அ(ன்)னையர் கொடு வசை பேச ... காம
வேதனையைப் புரிந்து கொள்ளாத தாய்மார்கள் கொடிய வசை
மொழிகளைப் பேசி நகையாடவும்,
ஓர்தல் = புரிதல் (understanding).

"போகியாய் இருந்து யிர்க்குப் போகத்தைப் புரிதல் ஓரார்
 யோகியாய் யோக முத்தி உதவுதல் அதுவும் ஓரார்
 வேகியா னாற்போற் செய்த வினையினை வீட்டல் ஓரார்
 ஊகியா மூட ரெல்லாம் உம்பரின் ஒருவன் என்பர்."
  - சிவஞானசித்தியார், 1. 2 - 22

ஓரார் = உணரார். விளங்கிக்கொள்ளார். = those who do not understand

ஒல்லுமாறு இயலுமேல், உடன்பிறப்பின் பயன் ஓரான்;
கொல்லுமால், அவன் இவனை; குறிக்கோடி, கோடாதாய்! - கம்பர்

அழப்போகான், அஞ்சான், அலறினால் கேளான்,
எழப்போகான் ஈடு அற்றார் என்றும் – தொழப் போகான்,
என்னே இக் காலன்!ஈடு ஓரான், தவம் முயலான்,
கொன்னே யிருத்தல் குறை - ஏலாதி

20-ம் நூற்றாண்டில் முக்கியமான சமூகப் பிரச்சினை பற்றி எழுந்த கவிதையை
மகாகவி ருத்ரமூர்த்தி எழுதினார். இலங்கையில் ஓர்தல், ஓராமை வழக்கில்
உள்ளதைப் புலப்படுத்தும் கவிதை:
”"நில்!" என்றான் ஓரான் 
"நிறுத்து!" என்றான் மற்றோரான். 
"புல்" என்றான் ஓராள் 
"புலை" என்றான் இன்னோராள் 
"சொல்" என்றான் ஓராள் 
"கொளுத்து" என்றான் வேறோராள். 

கல்லொன்று வீழ்ந்து 
கழுத்தொன்று வெட்டுண்டு 
பல்லோடு உதடுபறந்து சிதறுண்டு 
சில்லென்று செந்நீர் தெறிந்து 
நிலம் சிவந்து 
மல் லொன்று நேர்ந்து 
மனிசர் கொலையுண்டார். 

ஊரெல்லாம் கூடி இழுக்க உகந்த தேர் 
வேர் கொண்டதுபோல் வெடுக்கென்று நின்றுவிடப் 
பாரெல்லாம் அன்று படைத்தளித்த அன்னையோ 
உட்கார்ந் திருந்துவிட்டாள் ஊமையாத் தான்பெற்ற 
மக்களுடைய மதத்தினைக் கண்டபடி. 

முந்த நாள் வான முழுநிலவைத் தொட்டுவிட்டு 
வந்தவனின் சுற்றம் 
அதோ மண்ணிற் புரள்கிறது! ”

Memorandum of Understanding - ஓர்மை ஒப்பந்தம், ஓர்ப்பொந்தம்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Oct 28, 2017, 10:48:47 AM10/28/17
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
 Some typos:
<<<
20-ம் நூற்றாண்டில் முக்கியமான சமூகப் பிரச்சினை பற்றி எழுந்த கவிதையை
மகாகவி ருத்ரமூர்த்தி எழுதினார். இலங்கையில் ஓர்தல், ஓராமை வழக்கில்
உள்ளதைப் புலப்படுத்தும் கவிதை:
”"நில்!" என்றான் ஓரான் 
"நிறுத்து!" என்றான் மற்றோரான். 
"புல்" என்றான் ஓராள் 
"புலை" என்றான் இன்னோராள் 
"சொல்" என்றான் ஓராள் 

    கொல் என்றான் ஓராள்

"கொளுத்து" என்றான் வேறோராள். 
>>>

<<<
Memorandum of Understanding - ஓர்மை ஒப்பந்தம், ஓர்ப்பொந்தம்.
>>>

This should be:

Memorandum of Understanding - ஓர்மை ஒப்பந்தம், ஓர்ப்பொப்பந்தம் (ஓர்ப்பு ஒப்பந்தம்).

thx

N. Ganesan

unread,
Oct 28, 2017, 12:00:19 PM10/28/17
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com

ஞானசம்பந்தர் மதுரை பாண்டியன் அரண்மனையிலும், கோவிலிலும் பாடிய சொல்லில் “Understanding" என்பதன் தமிழ்ப் பதத்தைப் பயன்படுத்துகிறார்:

பூமகற்கும் அரிக்கும் ஓர்வு அரு புண்ணியன்(ன்) அடி போற்றிலார்
சாம் அவத்தையினார்கள் போல்-தலையைப் பறித்து, ஒரு பொய்த்தவம்
வேம் அவத்தை செலுத்தி, மெய்ப் பொடி அட்டி, வாய் சகதிக்கு நேர்
ஆம் அவர்க்கு எளியேன் அலேன்-திரு ஆலவாய் அரன் நிற்கவே.   9

ஓர்வு = ஓர்ப்பு = understanding
பூமகற்கும் அரிக்கும் ஓர்வு அரு புண்ணியன்
= Siva, who is hard to understand by Brahma and Vishnu.

எனவே,
Memorandum of Understanding = ஓர்மை ஒப்பந்தம், ஓர்வொப்பந்தம், ஓர்ப்பொப்பந்தம்.

“மிகப் பொருத்தமான காலகட்டத்தில் எழுந்த தமிழ்த் தேசியம் குறித்த ஓர்மை, அதே சமத்தில் தோன்றிய திராவிட அரசியலால் சிதைந்து போனதா? வகுப்புவாதம் மற்றும் இனவெறுப்பை முன்னிறுத்தாமல் பண்டைய இலக்கியப் பரிச்சயங்களின் வழியாக வடித்த தமிழ்த் தேசிய நிலைப்பாட்டுடன் தமிழரசுக் கழகம் என்ற கட்சியை வழிநடத்திப் பிறகு அந்நிலைப்பாட்டிலிருந்து விலகிப் போன ம.பொ.சிவஞானம் பற்றி உங்களது கருத்து என்ன?”

”தென்குமரியை மீட்க அங்கு சென்று குரல்கொடுத்த, போராடிய ஒரே தமிழகத் தலைவர் ம.பொ.சி. தமது ‘தமிழன் குரல்’ இதழில் தொடர்ந்து எழுதிவந்தவர் அவர். அவர் நடத்திய இதர இதழ்கள் தமிழ் முரசு, செங்கோல். இந்திய ஒன்றியத்திற்குள் சுதந்திரச் சோஷலிசத் தமிழ்க் குடியரசு அமைய வேண்டும் என்று தொடர்ந்து பேசியும், எழுதியும் வந்தார். தமிழிலக்கிய ஓர்மையின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட தமிழ்த் தேசிய அரசியல் ம.பொ.சி.யுடையது.
[...]
ஆந்திர, கருனாடக, கேரள காங்கிரசுக்கு இருந்த இன ஓர்மை அப்போது தமிழ்நாடு காங்கிரசுக்கு இல்லை. அதனால் தமிழர் இழந்த மண் அதிகம். “
"கொல்" என்றான் ஓராள் 
"கொளுத்து" என்றான் வேறோராள். 

கல்லொன்று வீழ்ந்து 
கழுத்தொன்று வெட்டுண்டு 
பல்லோடு உதடுபறந்து சிதறுண்டு 
சில்லென்று செந்நீர் தெறிந்து 
நிலம் சிவந்து 
மல் லொன்று நேர்ந்து 
மனிசர் கொலையுண்டார். 

ஊரெல்லாம் கூடி இழுக்க உகந்த தேர் 
வேர் கொண்டதுபோல் வெடுக்கென்று நின்றுவிடப் 
பாரெல்லாம் அன்று படைத்தளித்த அன்னையோ 
உட்கார்ந் திருந்துவிட்டாள் ஊமையாத் தான்பெற்ற 
மக்களுடைய மதத்தினைக் கண்டபடி. 

முந்த நாள் வான முழுநிலவைத் தொட்டுவிட்டு 
வந்தவனின் சுற்றம் 
அதோ மண்ணிற் புரள்கிறது! ”

Memorandum of Understanding - ஓர்மை ஒப்பந்தம், ஓர்ப்பொப்பந்தம்

நா. கணேசன்
Reply all
Reply to author
Forward
0 new messages