இந்த மடல் எழுதி சில திங்கள்கள் கடந்துவிட்டது எனோ முடிக்கப்பட்ட மடல்
send என சொடுக்கி னுப்பப்படாமல் இருந்துள்ளது.
இன்றுதான் கவனித்தேன்ஏ
ன் இது அனுப்பாமல் இருக்கின்றது என .
காலம்தாழ்ந்து விடை வைக்கின்றமைக்கு
மன்னிக்க
சரியாகாக் காட்டியுள்ளீர்கள்
இந்த கோயிலின் பழங்காலத்தது கருவறை விமானம் கருங்கல்லால்
ஆகாமல் சிதலமடைந்ததால்
பின்னாளில்
அந்நாளைய (current) புதுமை
பெருமை தாங்கு வகையில் ஆனதான தூங்கானை மாடமாக விமானம்
மட்டும் அமைக்கும் முயல்வு ஆக லாம் இது ஓர் சிறப்பு தனி நிலை எனல் வேண்டும்
அதான்று இது இருநிலை மாடக்கோயில் உச்சியில் இருக்கும் இரண்டாம்
தளம் தான் தூங்கானை ம்,ஆகு ம் என்பதை கவனிக்கவும் பல தூங்கனை
மா டங்கள் போல் அல்லாது அடிமட்டத்திலிருந்தே தூங்கனை வடிவாக
கட்டுமானம் அமையாமல் உள்ளது
இன்று சாதாரண நிலையில் உள்ள ஊர்களில் அரச ஆல மரத்தடியில்
பிள்ளையார் அம்மன் சிலைகளை மேடைமீது அமைத்து வழிபடுவதும் இதுவே
ஊர் மன்றம் எனவும் ஊர்ப்பொதுக்காரியங்கள் பேசுமிடம் ஊர்த்தலைவர்
சந்திக்குமிடம் எனவு ம் உள்ளமை நன்றே அறிவீர்கள் இவ்வகை வழிபாட்டு
இடம் நாகரீகம் மேற்படும்போது அதன் கூரைகள் ஓலைகளாகவும் பின்செங்கல்
லா லும் பின் பொலிவுமிக்க கவின்பெரு கருங்கற்களால் சிற்பங்களுடன்
கூடியதாகவும் கற்றளி எனவும் பரிணமித்தது என்றல் இயல்பான
வரலாற்றுப்பாதை ஆகும் ஆனால் பல்லவர்கள் அமைத்த குடைவரைக்கோயில்கள்
இவ் வகை த்தது ஆகாமால் முத்தும் வழிபாட்டுத்தலமாக் மட்டும் எழுந்தவை ஆகும்
விமானம் எனும் சொல் வானம்/கூரை - தலைக்கு மேலுள்ள
அமைப்பு தொடர்புடையது. விதானம் எனவும் வழங்கும்
விண்ணகர் எனபதும் உண்டு பந்தர்(ல்), காவணம்
எனும் சொற்களும் அப்பொருள் தாங்கும் ஆனால் இ வை
தற்காலிகமானவை சிலநேரங்களில் கொடி பதாகை போன்று
நகரக்கூடியவையாகவும் இருக்கும் (குடைபோல் ) இன்றும் கோயில்
இறைவன் வீதி உலா ஊர்தி/வாகங்களில் சவுடல் விமானம் உண்டு
திருவானைக்கா கோயிலின் வரலாற்றில் சிலந்தியும் யானையும்
போட்டிபோடும் விதானம் மற்றும் அதன் பராமரிப்பு பேசுவது
நினைவு கொள்க
மாலைதாழ் சென்னி வயிரமணித் து¡ணகத்து
நீல விதானத்து நித்திலப்பூம் பந்தர்க்கீழ்
வான்ஊர் மதியம் சகடுஅணைய வானத்து 50
சிலப்பதிகாரம் 1 புகார்க் காண்டம் பதிகம் 1 மங்கல வாழ்த்துப் பாடல்
திருக்கோயி லில்லாத திருவி லூருந்
திருவெண்ணீ றணியாத திருவி லூரும்
பருக்கோடிப் பத்திமையாற் பாடா வூரும்
பாங்கினொடு பலதளிக ளில்லா வூரும்
விருப்போடு வெண்சங்க மூதா வூரும்
விதானமும் வெண்கொடியு மில்லா வூரும்
அருப்போடு மலர்பறித்திட் டுண்ணா வூரும்
அவையெல்லாம் ஊரல்ல அடவி காடே 6.95.5
அ ப்பரடிகள் திருத்தாண்டகம்
விதானம் அமைத்த கோயில்கள் இல்லாமல் இருக்கும் ஊர்
ஊரல்ல என்றல் நாகரீகம் முதிராது வாழும் குடிகள் அதாவது
காட்டுவாசிகளாக வாழும் இடமாகும் (அடவி காடு )
வேறு
ASPIDAL என்பது தூங்கானை மட அமைப்பின் ஆங்கில சொல்
வாதபிக்கோயில் ஒருவகையில் இத்தகையதே
இங்கு அடித்தளம் தூங்கானை மாடம் மேலே சதுர அமைப்பு
இப்படி இருந்தால்தான் இது அல்லது சிறிதே மாறினாலும் அதுவாகாது
எனும் கொளகையைக் கடைபிடிப்பது மிகுந்த இடரைத்தரும் எனலாம்
சுற்று தளம் (கோஷ்டம் ) எனக்காட்டினீர் கோஷ்டம் என்றால்நான்குபுற சுவற்றினில் சன்னல் போல் வைக்கும் அமைப்பு
கோஷ்டத்தில்தான் தென்முகன் பிரம்மா/ லிங்கோத்பவர், துர்க்கை
கணபதி எனும் உ ருவங்களை வைப்பர் ஆ னல் புதுமையாக தனித்துவம்
தாங்கி குடந்தை நாகேசுரர் கோயில் கோஷ்டங்களில் சோழமன்னன்
அவர்தம் குடும்பம் /பரம்பரை பெண்கள் உட்பட தந்தை மகன் உருவங்கள்
உள்ளன அதனால் அது ஒரு படைவீடாகுமோ என்று ஐயம் உள்ளது ஆ னால்
கல்வெட்டுகள் அப்படிக்கட்டவில்லை
கீழே உள்ளவை பற்றி
நீங்கள் நன்றாக அறிவீர் சில்பசாத்திரம் தொடர்புடைய சொற்கள்
இரண்டாவது படத்தில் தரும் விளக்கங்கள் ஒரு தனி மனிதர்
இரண்டையும் ஒப்புக்காட்ட வந்த நிலை மட்டுமே ஆகும் முதலில்
உள்ளது கட்டிடம் பின்தான் அதனை ஒப்பு காட்ட வந்தநிலை யில்
ஓர் விளக்கம் எனவே விளக்கம் பின் வந்தது விளக்கத்திலிருந்து
கட்டிடம் அமைக்கப்படவில்லை
'வி'மானம் வானம் ப றத்தல் தொடர்புடையது இதனில் உள்ள
'வி' எனபது வடமொழி முன்னொட்டு (prefix) விதானம் விநாயகன்
விபுலம் விக்கிரமன் விபூதி விமலன் விநாசம் போன்றவை சில
வடமொழியில் சிலபோது வகரம் பகாராக மாறும் வங்காள குடாக்கடல்
BAY OF= BENGAL எழுத்தின் வடிமமும் காண்க மிகசிறிதே திரிந்ததுதான்
மாற்றப்பட்டுள்ளது 'व' 'ब' வயிற்றி நடுவண் ஓர் கிடைக்கோடுமட்டும்
வேறு
பங்களாதேஷ் ஆகாய விமான பணி நிறுவனத்திற்கு பெயர்
அதான்று
ஓர் பலபொருள் அங்காடியில் ஒரே கூரையின் கீழ் கிட்டுவதால் அதற்கு
(காமதேனு சிந்தாமணி போல்) விதான் எனவும் பெயரிட்டுள்ளனர்
நன்றி இணைய பக்கங்கள்